Sunday, July 27, 2025
முகப்பு பதிவு பக்கம் 665

அரசுப் பள்ளிகளுக்கு ஆதரவாய் விருதையில் பிரச்சாரம்

5

அரசு பள்ளிகள் தரமானது என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது,
மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு போகாமல் தடுப்பது,
தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப்பள்ளிகளுக்கு மாணவர்களை கொண்டு வருவது

என்ற நோக்கத்திற்காக மாணவர்கள் கல்வி உரிமைகான பெற்றோர் சங்கம்  சார்பில் பிரச்சார இயக்கம் நடத்தி வருகிறோம்.

“தாய்மொழிக்கல்வி தாய்ப்பால் போன்றது. ஆங்கிலவழி தனியார் கல்வி புட்டிப்பால் போன்றது. கல்வியை காசாக்கும் தனியார் பள்ளிகளை புறக்கணிப்போம்” என பிளக்ஸ் பேனர் அச்சடித்து பிரச்சாரம் செய்து வருகிறோம்.

விருத்தாசலம் தாலுக்காவிற்கு உட்பட்ட கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளில் சில ஊர்களில் பெற்றோர்களை சந்தித்து வகுப்பறையில் கூட்டம் நடத்தினோம். அதில் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வது எதிர் காலத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்த கல்வியில் தனியார்மயத்தை ஒழிக்க உதவும் என நம்புகிறோம்.

1. 2-3-2014 மாலை 5 மணிக்கு விருத்தாசலம் நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் தொட்டிக்குப்பம் என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூட்டம் நடத்தினோம். சுமார் 100 பெண்கள் 50 ஆண்கள் மற்றும் அந்த பள்ளி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில் தலைமை ஆசிரியர் எ. கீதா , சக பள்ளி ஆசிரியர்கள், பஞ்சாயத்து தலைவர் கஸ்தூரி, வார்டு ஊறுப்பினர் மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு. வீரபாண்டியன், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் சார்பில் தலைவர் திரு.வை. வெங்கடேசன், அன்பழகன், பொருளாளர் வீரகாந்தி, குமார், வேலுமணி, பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் அருந்தவம், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அனைவருக்கும் தேநீர் பிஸ்கட் வழங்கப்பட்டது. நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

கூட்டம் நடைபெற இரண்டு நாட்களுக்கு முன்னதாக பெற்றோர் சங்கத்தின் சார்பில் துண்டு பிரசுரம் அச்சடித்து பள்ளி மாணவர்களிடம் கொடுத்து தங்கள் பெற்றோர்களிடம் கொடுத்து கூட்டத்திற்கு அழைத்து வரவேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியரால் வலியுறுத்தப்பட்டது. நமது உறுப்பினர்களும் ஊர் பொது மக்களிடம் சென்று பிரசுரத்தை விநியோகித்து அரசு பள்ளியின் அருமை பற்றியும், தனியார் பள்ளியின் கொடுமை பற்றியும் தெரிந்து கொள்ள வாரீர் என விநியோகித்தோம்.

தாய்மார்களை விழிப்புணர்வு அடைய சிறப்பு கவனம் கொடுத்து அழைத்தோம்.

பிரசுரத்தில் . . .

பெற்றோர்களே தாய்மார்களே

லாபம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் ஆங்கில வழி தனியார் பள்ளிகள் மாணவர்களை பணம் சம்பாதிக்கும் மெசினாக மாற்றுகிறது. அடிமைத்தனத்தை போதிப்பதுடன் நமது பிள்ளைகளை பிராய்லர் கோழிகளாக வளர்க்கிறது.

அரசு பள்ளிகளில் தாய் மொழியில் படித்தவர்களே அறிவாளிகளாகவும், சிந்தனையாளனாகவும், நாட்டுப்பற்று, மொழிப்பற்று உடையவனவாகவும், சிறந்த மனிதனாகவும் வளரமுடியும்.

கல்வி உரிமை பற்றி விழிப்புணர்வு பெற வாரீர்!

என அச்சடித்து விநியோகித்தோம். ஆசிரியர்களும், பெற்றோர்களும் பெரும் வரவேற்பு அளித்தனர்.

ஆரம்ப கல்விக்காக தனியார் பள்ளிகளுக்கு பிள்ளைகள் சென்று விட்டால் அரசு உயர் நிலைப்பள்ளி, நடுநிலை பள்ளி, மேல்நிலை பள்ளிகளில் மாணவர்கள் வரத்து குறைந்து பல பள்ளிகள் மூடும் அபாயம் ஏற்படும். ஆசிரியர்கள் வேறு ஊர்களுக்கு தூக்கி அடிக்கப்படுவதுடன், வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். இச்சூழலில் அரசு தொடக்க பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதன் அவசியத்தை மக்களிடம் சொல்லும்போது புரிந்து கொள்கிறார்கள். ஆங்கில வழி தனியார் மெட்ரிக் பள்ளியின் மீது உள்ள மோகம், மாயை தகர்கிறது. ஆசிரியர்களும் பெற்றோர்களிடம் அரசு பள்ளியின் கல்வி முறை பற்றி, தரம் பற்றி விளக்கமாக எடுத்துரைக்கும் போது பெற்றோர்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது.

கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் வீரபாண்டியன், மாணவர்கள், கிராமத்து ஏழை பெண்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக எளிமையாக பேசினார். தனியார் பள்ளி வாகனங்களை பிள்ளை பிடிக்கும் வேன் என்றார். “என்ன படிக்கிறோம் என்ற அர்த்தம் தெரியாமல் படிக்கிறார்கள், அங்கு ஆசிரியர்களும் மனப்பாடம் செய்ய மட்டுமே சொல்லி கொடுக்கிறார்கள். செரிக்காத உணவு வாந்தி எடுப்பது போல் படித்ததை வாந்தி எடுக்க சொல்லுகிறார்கள். யாருக்கு எப்படி சொல்லி கொடுக்க வேண்டும் என்ற அனுபவ அறிவு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடையாது. அனைத்திற்கும் காசு கேட்பார்கள், அதுதான் தனியார் பள்ளியின் தரம். அரசு பள்ளியில் அனைத்தும் இலவசம். அரசு பள்ளி மாணவனிடம் காசு கொடுத்து தனியாக பொருள் வாங்க அனுப்பினால் சரியாக பயப்படாமல் சென்று காரியத்தை முடித்து விடுவான். ஆங்கிலவழி தனியார் பள்ளி மாணவன் காசை தொலைத்து விடுவான். கீழா நெல்லி வேரை பற்றி படிக்கும் அரசு பள்ளி மாணவன் அதை பயன் படுத்த முனைவான். அதன் பயன் தெரிந்து படிக்கிறான். ஆங்கிலத்தில் படிப்பவன் பொருள் தெரியாமல் படிக்கிறான். சிந்திக்கும் ஆற்றலை மொழி தடுக்கிறது. நாங்கள் எல்லாம் அரசுப் பள்ளியில் தாய் மொழியில் படித்தவர்கள்” என்று ஆதாரமாக விளக்கி பேசினார். மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் தன்னலம் பாராமல் கல்வி உரிமைக்காக தொடர்ந்து போராடி வருவதை வாழ்த்தி ஆதரித்து பேசினார்.

தலைவர் வெங்கடேசன் அவர்கள் பேசும் போது பெற்றோர் சங்கம் கடந்து வந்த பாதையை விளக்கமாக பேசினார். “அரசு பள்ளி நமது பள்ளி தரமான கல்வி நமது பிள்ளைகளுக்கு கிடைக்க நாம் தான் போராட வேண்டும். அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு காரணமான ஆசிரியர்கள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு கைதானோம்” என்பதை குறிப்பிட்டு பேசினார்.  “தனியார் பள்ளிகள் காசை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படுகிறது. வாங்கும் பணத்திற்கு ரசீதுகூட கொடுப்பதில்லை. அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட பலமடங்கு பெற்றோர்களை அச்சுறுத்தி பிள்ளைகளை பணயக்கைதியாக்கி கட்டணக் கொள்ளை அடிப்பதை நாங்கள் தான் போராடி தடுத்து நிறுத்தியிருக்கிறோம். தனியார் பள்ளி தாளாளர்கள் மதிப்பெண் அதிகம் எடுக்க வேண்டும், தங்கள் பள்ளி அடுத்த ஆண்டில் அதிக லாபம் ஈட்ட கட்டணத்தை உயர்த்த வேண்டும். அதற்காக தனியார் பள்ளிகள் மாணவர்களை இரவு பகல் பாராமல் படிக்க சொல்லி துன்புறுத்தியதால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்” என்பதை பத்திரிக்கை ஆதாரங்களை காட்டி பேசினார். “அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறும், உரிய அனுபவம் உள்ளவர்கள். நமது பிள்ளைகள் சரியாக படிக்க வில்லையென்றால் நாம் சென்று ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கலாம். நமக்கு சொந்தமான பள்ளிகளை விட்டு தனியார் பள்ளி மோகத்தில் பெற்றோர்கள் பலியாககூடாது. அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும். அதுதான் சரியானது என தாய்மார்கள் நினைக்க வேண்டும்” என பேசினார்.

ஆசிரியர்கள் பேசும்போது, “தாய்மார்கள் பிள்ளைகளை நன்றாக குளிப்பாட்டி, தலை சீவி குறித்த நேரத்திற்கு அனுப்ப வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு எப்படி மெனக்கிட்றீங்க! இங்க மட்டும் மூக்கில் சளி ஒழுக அப்படியே அனுப்புறீங்க, கையில் ஒரு கர்சிப் கொடுத்து அனுப்ப வேண்டாமா?. பையன் சன்னல் வழியாக புத்தகபையை தூக்கி போட்டுட்டு ஒன்னுக்க விடப்போறேன் என சொல்லி வீட்டுக்கு வந்து விடுகின்றனர். நீங்கதான் கண்டித்து மீண்டும் கொண்டு வந்து விடவேண்டும்” என மாணவர்கள் சேட்டையை பொறுப்புணர்வோடு சுட்டிக் காட்டினார்.

“10,11 மணிக்கு பிள்ளைகள் வந்தால் எப்படி அனைத்து பாடங்களையும் படிக்க முடியும்?. கணவன் மனைவி சண்டை போட்டுக் கொண்டு அம்மா பிள்ளையை கூட்டி கொண்டு போய் விடுகிறார். உங்கள் சண்டையால் பிள்ளைகள் படிப்பு பாழாகிறதே என்ற கவலை வேண்டாமா? ராத்திரி பிள்ளைங்க தூங்கியவுடன் வெளியே போய் உங்க சண்டைய வச்சிக்கங்க. நாங்க சொல்லி கொடுப்பது போல் தனியார் பள்ளிகளில் சொல்லி கொடுக்க முடியாது என்பதை அடித்து சொல்ல முடியும். மாணவர்களின் சிந்தனை திறனை வளர்க்கிறோம். இங்கே கம்பியில் கட்டி தொங்க விடப்பட்டிருக்கும் அனைத்து ஓவியங்களும் உங்கள் பிள்ளைகள் தானாக வரைந்தவை பாருங்கள்” என பெற்ற தாய்மார்களில் ஒருவராக அந்த ஆசிரியர் கொட்டி தீர்த்தார்.

பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டு இனிமேல் சரியாக தங்கள் பிள்ளைகளை அனுப்புவதாக கூறிச் சென்றனர்.

வழக்கறிஞர் ராஜு பேசும்போது,

“அரசு பள்ளிகளை மூடுவதற்காக புற்றீசல்களாய் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. புலிமார்க் சீயக்காய்தூளுக்கும் புலிக்கும் சம்பந்தம் இல்லை. அது போல் அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமை சட்டம் என கொண்டு வந்து தனியார் மெட்ரிக் பள்ளிகளில் எல்.கே.ஜி.யில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு கொண்டு வந்தனர். அங்கு செல்லும் நமது குழந்தைகளை தீண்டப்படாதவர்களாக பள்ளி தாளாளர் நடத்துகிறார்கள். அதற்கான கட்டணத்தை கோடிக்கணக்கில் தனியார் பள்ளிக்கு அரசு வழங்குமாம். அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தாமல் தனியார் பள்ளிகளை வாழ வைப்பதன் நோக்கம், அரசு பள்ளிகளை காலப்போக்கில் இழுத்து மூடவேண்டும் என்ற அரசின் திட்டம் தான் காரணம். இதற்கு அய்யா ஆட்சி, அம்மா ஆட்சி என்பதல்ல. மத்திய மாநில அரசின் தனியார்மயம், தாராளமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைதான் காரணம்.”

“கார் உற்பத்தி செய்தால் வாங்குபவர்கள் குறைவு அனைவரும் பயன்படுத்தும் தண்ணீர், மின்சாரம், மருத்துவம், கல்வி என சேவைத் துறைகளை தனியாருக்கு திறந்து விட்டால் ஆயிரக்கணக்கான கோடிகள் தொடர்ந்து கொள்ளையடிக்க முடியும். அதன் விளைவு தான் இன்று எல்.கே.ஜிக்கு 20,000 ரூபாய் கொடுத்து படிக்க வேண்டிய நிலை, 1 லிட்டர் தண்ணீர் 20 ரூபாய்க்கு வாங்கி குடிக்க வேண்டிய அவலம். ஜூரத்திற்கு கூட 300 ரூபாய் செலவு செய்ய வேண்டும். அரசு அனைவருக்கும் தரமான கல்வியை, மருத்துவத்தை இலவசமாக வழங்கினால், தனியார் மருந்து கம்பெனிகள், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்கள் எப்படி கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்க முடியும். தனியார் பள்ளி இல்லாத அரசியல் வாதிகள் உண்டா? தனியார் கல்லூரிகள் இல்லாத அமைச்சர்கள் உண்டா? அரசு பள்ளிகள் ஏன் புறக்கணிக்கபடுகின்றது என யோசித்து பாருங்கள்.”

“ரசியா, ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற வல்லரசு நாடுகளில் எல்லாம் தாய் மொழியில் தான் படிக்கிறார்கள். ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பார்க்காமல் அரசுதான் அனைவருக்கும் கல்வி கொடுக்கிறது. யார் வேண்டுமானாலும் திறமையாளனாக வரமுடியும். இங்குதான் 5,000 ரூபாய்க்கு ஒரு பள்ளிக்கூடம், 10,000 ரூபாய்க்கு ஒரு பள்ளிக்கூடம், 25,000 ரூபாய்க்கு ஒரு பள்ளிக்கூடம் என மாணவர்களை தனியார் பள்ளிகள் கூறு போட்டு வைக்கிறது. சாதி, மதம் வேறுபாடு இல்லாமல் ஏழை, பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் பண்ணையார் வீட்டு பையனும், கூலி விவசாயி மகனும் ஒரே சீருடையில் ஏற்ற தாழ்வில்லாமல் படிப்பதுதான் நாட்டுக்கு சமுதாய மேன்மைக்கு உகந்தது.”

“பணம் சம்பாதிக்கவே கல்வி, மார்க் எடுப்பதே லட்சியம் அதற்கு எந்த வரை முறையும், நேர்மையும் இல்லாமல் எப்படியாவது மாணவர்களை மார்க் எடுக்க வைக்க வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளிகள் அனைத்து முறைகேடுகளிலும் ஈடுபடுவதுடன் மாணவர்களை கசக்கி பிழிகிறது. அதிக சூட்டில் குடிக்கப்படும் காப்பியின் ருசி தெரியாது. அதுபோல் படிப்பின் பலன், சிந்திக்கும் ஆற்றல் அதனை மொட்டுக்களிலியே முடக்குவதுதான் தனியார் பள்ளி ஆங்கிலவழி கல்வியின் தரம்.”

“பன்னாட்டு கம்பெனிக்கு தேவையான உதிரி பாகங்களாக நமது மாணவர்களை எந்த வித உரிமைகளும் அற்ற கூலி அடிமைகளாக பணியாற்ற பழக்கப்படுத்துவதே தனியார் கல்வியின் சாதனை. வேலை வாய்ப்பு இல்லாமையை ஒழிக்க அரசுதான் அதற்குரிய கொள்கையை வகுக்க வேண்டும். பொறியாளர்களும், ஐ.டி. துறையினரும், மருத்துவர்களும் லட்சக்கணக்கில் வேலையில்லாமல் இருக்கின்றனர். இந்த நிலைக்கு யார் காரணம்?”

“அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டால் தனியார் மருத்துவமனைகள், மருந்து கம்பெனிகள், தனியார் மருத்துவ கல்லூரிகள் கொள்ளையடிக்க முடியாது. அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு மக்கள் போக மாட்டார்கள், வருமானம் பாதிக்கும். நகராட்சி, சுத்தமான தண்ணீர் கொடுத்தால் தனியார் தண்ணீர் கம்பெனி நஷ்டம் அடையும், என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.”

“அரசு பள்ளி நமது பள்ளி, பள்ளி மேலாண்மை குழு மூலமாக பெற்றோர்களே நிர்வகிக்கலாம். ஆசிரியர்கள் பாடம் சொல்லி கொடுப்பதை கண்காணிக்கலாம். பள்ளியின் தரத்தை அடிப்படை வசதிகளை நாமே உயர்த்த முடியும். நமக்கு சொந்தமான வீட்டை விட்டு விட்டு வாடகை வீட்டில் குடியேற நினைப்பது மடைமையில்லையா?.அது நிரந்தரமானதா? என்பதை தாய்மார்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். அரசு பள்ளிகளை பல தலைமுறைகள் பயன்படுத்த, இன்னும் பல ஆசிரியர்கள் இதே பள்ளியில் பணிபுரிய அரசு பள்ளி இருப்பது அவசியம். அதற்கு நமது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும்.”

“ஷு,டை,கலர் யுனிபார்ம்,டாடி,மம்மி என்ற ஆங்கில மோகத்திற்கு அடிமையாகாமல், சொந்தமாக சிந்தித்து செயல்பட வேண்டும். இன்றைக்கு பதவியில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் அரசு பள்ளியில், தாய் மொழியில் படித்தவர்களே. படிப்பு பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல, எதிர்கால சமுதாயம். நேர்மை பண்புகள், ஒழுக்கம் பொறுப்புணர்வு, பெற்றோர்களை பராமரிப்பது, சமூகத்தை நேசிப்பது, இயற்கையை நேசிப்பது, மனிதனின் ஆளுமையை வளர்ப்பது, என அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் இல்லாமல் பணத்துக்காக மட்டுமே வாழ்க்கை, அதற்காக படிப்பு என கல்வியை வியாபாரமாக, மாணவர்களை பண்டமாக மாற்றும் தனியார்மய கல்வியை புறக்கணிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதுதான் சரியான முடிவு.”

கூட்டம் முடிந்தவுடன் வந்திருந்த பெற்றோர்களை சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தனர். ஆசிரியர்களும், ஊர் முக்கியஸ்தர்களும் பெரிதும் வரவேற்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

2. 9-3-2014 அன்று பெரிய வடவாடி, நடுநிலைப்பள்ளியில் மாலை 5-00 மணிக்கு கூட்டம் நடந்தது. மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க தலைவர் திரு.வை.வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். தலைமை ஆசிரியர் திரு.சுப்பிரமணியன், சங்கத்தின் செ.கு.உறுப்பினர் ஓய்வு பெற்ற மாவட்ட பதிவாளர் திரு.அன்பழகன், பஞ்சாயத்து தலைவர் திரு.முருகவேல், வழக்கறிஞர் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் புஷ்பதேவன், பு.மா.இ.மு. கதிர்வேல் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு ஆகியோர் உரையாற்றினர்.

தலைமை ஆசிரியர் பேசும்போது, “என் பிள்ளைகள் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர்கள் இன்று டி.இ.டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். என் உறவினர் பிள்ளைகள் ஆங்கில வழியில் படித்தவர்கள் தோல்வியுற்றனர். நாங்கள் முழு ஈடுபாட்டுடன் மாணவர்களை எங்கள் பிள்ளைகளாக கருதி அவர்களுக்கு எந்த நிர்பந்தமும் இல்லாமல் பாடம் சொல்லி கொடுக்கிறோம். பெற்றோர் பிள்ளை உறவை தாண்டி அதிக பொறுப்புடன் ஆசிரியர்கள் மாணவர்களிடம் பழக வேண்டும். தனியார் கல்வி வெறும் பண உறவாக மாற்றுகிறது. பஞ்சாயத்து தலைவரிடம் மாணவர்களுக்கு மன்ற போட்டி நடத்த வேண்டும், மைக் செட் வேண்டும் என கேட்டோம், பள்ளிக்கு சொந்தமாக மைக் செட் உள்ளது. பெற்றோர்கள் இன்னும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் சிறந்த கல்வியை கொடுப்பதுடன், சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும். ஆசிரியர் செய்ய வேண்டிய பணியை இன்று மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் செய்கிறது. அவர்களை மனமார பாராட்டுகின்றேன். கல்வி உரிமைக்காக மாநாடு நடத்துவதும் போராட்டம் நடத்தி சிறை செல்வதும் நாங்கள் பத்திரிகை வாயிலாக படித்து தெரிந்து வைத்திருக்கிறோம். அவர்களின் இத்தகைய பணியை பாராட்டுவதுடன் ஆசிரியர்களாக நாங்கள் ஆதரவு தருகிறோம்” என பேசினார். 100-க்கும் மேற்பட்ட தாய்மார்கள், மாணவர்கள் இரவு 7 மணிக்கு கூட்டம் முடியும் வரை அமைதியாக இருந்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

3. 15-3-2014 சத்தியவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாலை 4-30 மணிக்கு கூட்டம் நடை பெற்றது.

ஆசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். தலைமை ஆசிரியர் பெரியநாயகி, ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி, மா.க.உ.பெ.ச. செ.க. உறுப்பினர். திரு.அன்பழகன், செல்வக்குமார், தீபக்குமார், குமார், ம.உ.பா.மையத்தின் மாவட்ட தலைவர் திரு. குணசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

100-க்கும் மேற்பட்ட பெற்றோர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர். சில மாணவர்களை ஆசிரியர்கள் ஆங்கிலம் படிக்க வைத்து தனியார் பள்ளி கல்வி முறைக்கு சவால் விட்டனர். “மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்று சிறப்பு பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் எங்கள் சத்தியவாடி பள்ளியை சேர்ந்தவர்கள். விரைவில் இந்த பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த பெற்றோர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். ஊரில் நாள் ஒன்றுக்கு பல தனியார் பள்ளி வேன்கள் வருகின்றன. பிள்ளைகளை மூட்டைகளை திணிப்பது போல் திணித்து மாலை கொண்டு வந்து தள்ளுகின்றனர். பெற்றோர்களும் படிக்க வேண்டும். அரசு பள்ளியில் நாங்கள் சொல்லி கொடுக்கிறோம். சரியில்லையென்றால் எங்களிடம் கேளுங்கள், நன்றாக சொல்லி கொடுத்தால் ஊக்கப்படுத்துங்கள். அரசு அனைத்தும் இலவசமாக கொடுக்கிறது. அதை பயன்படுத்தி கொண்டு உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும்” என ஆசிரியர்களே பேசியது பெற்றோர்களை உற்சாக படுத்தியது.

பெற்றோர் சங்கம் கொடுத்த துண்டறிக்கையை மாணவர்கள் பெற்றோர்களிடம் காட்டி கையொப்பம் பெற்று வரவேண்டும் என ஆசிரியர்கள் சொன்னதும். பெற்றோர்கள் அதிக அளவில் திரண்டனர். நாங்கள் பல முறை பெற்றோர் சங்க கூட்டத்திற்கு கூப்பிடுவோம் ஆர்வம் காட்டாத பெற்றோர்கள் உங்கள் பிரசுரத்தை பார்த்து வந்திருக்கின்றனர். எங்களுக்கும் உற்சாகமாக இருக்கிறது. வெளியூரிலிருந்து வந்திருந்த அனைத்து பெண் ஆசிரியர்களும் கூட்டம் முடியும் வரை இருந்தனர்.

4. 21-3-2014 அன்று சாத்துக்கூடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாலை 4-00 மணிக்கு கூட்டம் நடைபெற்றது. தலைவர் திரு. வெங்கடேசன், தலைமை ஆசிரியர் அல்போன்ஸ், ஆசிரியை மீனாட்சி, ஊராட்சி மன்றத்தலைவர் அமிர்தலிங்கம், பு.மா.இ.மு. தோழர்.கதிர்வேல் ம.உ.பா.மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.ராஜு ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். பெற்றோர்கள் குறிப்பாக பெண்களிடம் சிக்கலான பிரச்சினைக்கு தீர்வு பெற்றது போல் சங்க நிர்வாகிகளிடம் பேசியதுடன் சங்கத்தில் உறுப்பினராக இணைந்தனர். சில இளைஞர்கள் எங்கு கூட்டம் போட்டாலும் எங்களுக்கு தகவல் சொல்லுங்கள் நாங்கள் வருகிறோம் என்றனர்.

5.  28-3-14 அன்று மாலை 4-00 மணிக்கு செம்பளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூட்டம் நடைபெற்றது. தலைவர் திரு.வெங்கடேசன் தலைமை ஏற்க தலைமை ஆசிரியர் திருமதி.வே.வனஜா மற்றும் பிற ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பூமாலை கூட்ட ஏற்பாடுகளை கவனித்தார். எச்.ஆர்.பி.சி.மாவட்ட பொருளாளர். செந்தாமரைக்கந்தன், செயலாளர் வழக்கறிஞர் புஷ்பதேவன், செ.கு.உறுப்பினர். குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரும் திரளாக பெற்றோர்கள் வருகை தந்தது. ஆசிரியர்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தது. “இன்னும் சிறப்பாக நாங்கள் பணியாற்றுகிறோம்” என உறுதி அளித்தனர். தனியார் பள்ளியில் நமது பிள்ளை படிக்க வேண்டும் என்ற ஏக்கம் தவறானது. இங்கு படிப்பதே சரியானது என்ற தெளிவுடன் சென்றனர். மத்திய மாநில அரசுகளின் தனியார்மயகொள்கைதான் இதற்கெல்லாம் காரணம். தரமானது என்று தனியாரை நாம் ஆதரிக்க கூடாது. காசிருந்தால்தான் தனியார் கல்வி கொடுப்பார்கள் இல்லாத ஏழைகளுக்கு எதுவும் கிடைக்காமல் போகும் என்பதை புரிந்து கொண்டனர். சுமார் 35 பேர்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தனர்.

s.kurichi

6. 5-4-14 அன்று மாலை 3-30 மணியளவில், கோமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூட்டம் நடை பெற்றது. மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 32 , இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். நாள் ஒன்றுக்கு 7 தனியார் பள்ளி வேன் ஊருக்குள் வருகிறது என மக்கள் தெரிவித்தனர்.

தலைமை ஆசிரியர் திருமதி.வேல்விழி, விவசாய சங்கத்தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் உரையாற்றினர். தலைவர் திரு. வெங்கடேசன், வழக்கறிஞர் ராஜு, வீரகாந்தி, குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டம் சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது. 25 பெற்றோர்கள் கலந்து கொண்டனர். சில பெரியவர்கள் மேல் சட்டை போடாமல் விவசாய வேலையோடு அப்படியே வந்திருந்தனர். 20 நபர்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தனர்.

தலைமையாசிரியர் பேசும் போது, “இந்த பள்ளி உங்களுடையது. இரவில் குடிப்பது, விடுமுறை நாளில் சீட்டாடுவது என்பதை பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது. நமது வீட்டை விட பள்ளிக்கூடம் புனிதமானது. சாக்கடை நீர் பள்ளி கூடம் பக்கம் வருகிறது. அதை தடுக்க வேண்டும். நாங்கள் மனு மட்டும் தான் கொடுக்க முடியும். பள்ளி நலன்களை, சுகாதாரத்தை பெற்றோர்கள் உதவி செய்தால்தான் செய்ய முடியும்” என்று கூறியதுடன், “தரமான கல்வி என்றால் என்ன” என்பதை விளக்கினார். “அரசு பள்ளி ஆசிரியர்கள் உளவியல் படிக்கிறோம், வருடம் வருடம் மாணவர்களுக்கு எப்படி சிறப்பாக சொல்லி கொடுக்க வேண்டும் என்பதை பயிற்சி எடுத்து வருகிறோம். மிகுந்த அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் சொல்லி கொடுக்கும் இந்த பள்ளியில் சேர்க்காமல் தனியார்பள்ளியில் உங்கள் பிள்ளைகளை சேர்க்கிறீர்கள்” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பெற்றோர்கள் ஆர்வமுடன் கேட்டனர்.

துண்டறிக்கை

பெற்றோர்களே, தாய்மார்களே வணக்கம்.

ஆங்கிலவழியில் படித்தால்தான் அறிவு வளருமா? தனியார் பள்ளி கல்வி தரமானதா?

உங்கள் பிள்ளைகள் சிந்தனையாற்றலுடைய மனிதனாக வேண்டுமா? அல்லது பணம் சம்பாதிக்கும் மெஷினாக வேண்டுமா?

ரூபாய்.30,000 சம்பளத்தில் பயிற்சிபெற்ற அனுபவமுள்ள ஆசிரியர்கள் அரசு பள்ளியில் கற்பிக்கும் கல்வி தரமானதா? அல்லது

லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கல்வியை காசாக்கும் வியாபாரிகள், குறைந்த சம்பளம் கொடுத்து தகுதியற்ற ஆசிரியர்கள் சொல்லி கொடுக்கும் கல்வி தரமானதா?

வல்லரசு நாடுகளிலெல்லாம் தாய்மொழியில் அரசுதான் கல்வி கொடுக்கிறது.

பன்னாட்டு கம்பெனிகளுக்கு கூலி அடிமைகளை உருவாக்குவதே தனியார் பள்ளி ஆங்கில வழி கல்வியின் சாதனை

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், புகழ்பெற்ற மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள்,பொறியாளர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் வியாபாரிகள் பல கட்சிகளில் இருக்கும் அரசியல் தலைவர்கள் அனைவரும் தாய் மொழியில் அரசுப்பள்ளியில் படித்தவர்களே.

பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள்.தரமான கல்வி வழங்குவதை கண்காணிப்பது உங்கள் கடமை.

அரசுப்பள்ளி நமது பள்ளி . அரசு பள்ளி நமது சொத்து.

கலர் யூனிபார்ம், ஷு, டை, வேன் புரியாத ஆங்கிலம் ஆகிய விளம்பரத்தை கண்டு ஏமாறாதீர்கள்

கல்வி உரிமை பற்றி விழிப்புணர்வு பெற அனைவரும் வாரீர்.

இடம் : ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம், கோமங்கலம்.

பெற்றோர் சங்கத்தில் உறுப்பினராக சேருங்கள்.,

மாணவர்கள் கல்வி உரிமைகான பெற்றோர் சங்கம்
பதிவு எண்36/2011
702/5 ஜங்சன் ரோடு, விருத்தாசலம் – 606001
தொடர்புக்கு 93450 67646, 94432 64315

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு

யாருக்கு வேண்டும் தேர்தல்?

6

ந்திய ஜனநாயகம் என்றழைக்கப்படும் இந்த அரசமைப்பு, உண்மையில் தரகு முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ சர்வாதிகாரம் என்றும், இதனை அகற்றிவிட்டு அதனிடத்தில் ஒரு புதிய ஜனநாயக அரசமைப்பை நிறுவ வேண்டும் என்றும் நாம் கூறிவருகிறோம். பெரும்பான்மையான மக்கள் இத்தகையதொரு அரசியல் மாற்று குறித்து புரிந்திருக்கவில்லை என்ற போதிலும், நிலவுகின்ற இந்த அரசமைப்பின் மீது தமது சொந்த அனுபவங்களின் வழியாகவே நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். இந்தத் தேர்தல் அரசியலில் மக்கள் காட்டும் ஈடுபாடு என்பது, இந்த அரசமைப்பின் மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கான சான்று அல்ல. மாறாக, கிரிக்கெட் ஆட்டத்தில் ரசிகன் காட்டும் ஈடுபாட்டுக்கும் மக்களின் தேர்தல் ஈடுபாட்டுக்கும் அதிக வேறுபாடில்லை என்பதே உண்மை.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்இந்த அரசமைப்பு தோல்வியடைந்து விட்டது. மன்மோகன் தலைமையிலான காங்கிரசு அரசு தோற்றுவிட்டது என்ற எதிர்க்கட்சிகளின் கூற்றும் இதுவும் ஒன்றல்ல; காங்கிரசு, பா.ஜ.க. உள்ளிட்ட எல்லா ஓட்டுக்கட்சிகளின் அரசாங்கங்களும், நிர்வாகம், போலீசு, இராணுவம், நீதித்துறை அடங்கிய அரசு எந்திரமும் உள்ளடங்கிய இந்த அரசமைப்பு தோற்று விட்டது என்று நாம் கூறுகிறோம். இதனை மக்கள் புரிந்திருக்கிறார்களோ இல்லையோ, ஆளும் வர்க்கம் புரிந்திருக்கிறது. தாங்கள் வரையறுத்த சட்டங்கள், தாங்களே கூறி வந்த புனித அரசியல் மரபுகள், நெறிகள் ஆகியவற்றைத் தங்களது வழித்தோன்றல்களே மீறுவதையும், காலில் போட்டு மிதிப்பதையும் மறுக்கவோ, மறைக்கவோ, நியாயப்படுத்தவோ முடியாமல் ஆளும் வர்க்கம் தடுமாறுகிறது. இவற்றைச் சீர் திருத்துவதற்காக இயற்றப்பட்ட சட்டங்கள் தோல்வியைத் தழுவுகின்றன.

செயலிழந்துவரும் அரசு, அதிகரித்து வரும் சட்டமீறல்கள், கொள்கைகளின் இடத்தில் கவர்ச்சித் திட்டங்கள், அரசியல் கிரிமினல்மயமாதல், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல், போலீசு அராஜகங்கள், நீதித்துறை ஊழல்கள், அதிகரித்து வரும் விதவிதமான கிரிமினல் குற்றங்கள், சமூகப் பாதுகாப்பின்மை… என்று மொத்த அரசமைப்பும், சமூகமும் பாரதூரமான நெருக்கடியில் சிக்கி நொறுங்கிச் சரிந்து வருகின்றது என்பதையும், பலவிதமான முயற்சிகளுக்குப் பின்னரும் அதனை முட்டுக்கொடுத்து நிறுத்த முடியவில்லை என்பதையும் சொல்லி ஆளும் வர்க்க அறிவுத்துறையினரே புலம்புகின்றனர். மொத்தத்தில் ஆள்வதற்கான தகுதியை இழந்து விட்டது இந்திய ஆளும் வர்க்கம்.

எனினும், ஆளப்படும் வர்க்கமாகிய உழைக்கும் வர்க்கம் ஒரு மாற்று அரசியல் சக்தியாக எழுந்து ஆளும் வர்க்கத்தை வீழ்த்துவதற்குத் தயாராக இல்லை என்ற ஒரேயொரு காரணத்தி னால், சவக்குழிக்கு சென்றிருக்க வேண்டிய இந்த அரசமைப்பு, நாற்காலியில் அமர்த்தப்பட்ட பிணத்தைப் போலத் தொடர்ந்து அரியணையில் நீடிக்கிறது. ஜனநாயகம் என்று அழைக்கப்படும் இந்த அரசமைப்புதான் இதுகாறும் மனிதகுலம் கண்டறிந்த உன்னதமென்றும், இதை விஞ்சிய வேறு அரசியல், சமூக அமைப்பு சாத்தியமில்லையென்பதால், எவ்வாறேனும் இதனைப் பிழைக்க வைப்பதைத் தவிர வேறு வழியில்லையென்றும் ஆளும் வர்க்க அறிவுத்துறையினர் இதற்குத் தத்துவ விளக்கம் சொல்கிறார்கள். இந்த அரசமைப்பின் தோல்வியை ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழல் நிலவுவதால், அதற்கான பழி முழுவதையும் அரசியல் கட்சிகள் என்ற சோளக் கொல்லை பொம்மைகள் மீது போட்டு, அக்கட்சிகளின் சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், ஊழல் போன்றவைதான் இன்று நாம் காணும் அனைத்துச் சீரழிவுகளுக்கும் காரணம் என்று சாதிக்கிறார்கள்.

பொதுச்சொத்து கொள்ளை

இதன் மூலம் இரண்டு நோக்கங்களை ஆளும் வர்க்கம் நிறைவேற்றிக் கொள்கிற து. முதலாவதாக, காங்கிரசு, பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க., ஆம் ஆத்மி போன்ற எந்தக் கட்சியின் அரசாங்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஆளும் வர்க்க நலனைப் பாதுகாக்கும்படி வடிவமைக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்ற – அதிகாரவர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறை, ஊடகங்கள், சமூகப் பண்பாட்டு நிறுவனங்கள் ஆகியவை அடங்கிய அரசமைப்பையும், அதன் தோல்வியையும் தந்திரமாக மக்களின் கண்களிலிருந்து மறைக்கிறது.

இரண்டாவதாக, சீரழிவுக்குக் காரணம் கட்சிகள்தான் என்ற பொதுக்கருத்தைப் பயன்படுத்தி மோடி, கேஜ்ரிவால் போன்ற மாற்றுகளைக் காட்டி, மோடியின் துணிச்சலும் நிர்வாகத் திறனும், கேஜ்ரிவால் போன்றோரின் நேர்மையும் இந்த நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றிவிடும் என்ற மாயையை மீண்டும் மீண்டும் பரப்புகிறது. எனவே, இந்த மாயைகளிலிருந்து மக்களை விடுவிப்பதே நம் முதற்பணியாக இருக்கிறது.

ஆளும் வர்க்கம் தோல்வியடைந்து விட்டது என்று நாம் கூறுவதன் பொருள், உழைக்கும் வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கம் அதனைத் தோற்கடித்து விட்டது என்பதல்ல. மாறாக, சுரண்டுவதற்கும் ஆள்வதற்கும் உகந்த வகையில் ஆளும் வர்க்கம் தானே வடிவமைத்திருக்கும் அரசமைப்பு, அனைவருக்கும் பொதுவானவை என்றும் நாட்டு மக்கள் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டியவை என்றும் அது வலியுறுத்தும் சட்டங்கள், மரபுகள் ஆகியவற்றைக் கால்தூசாகக் கருதி ஆளும் வர்க்கத்தினரே அவற்றை மீறுகின்றனர், மதிப்பிழக்கச் செய்கின்றனர் என்கிறோம். இந்த அரசமைப்பு காலாவதியாகி விட்டதைத் தங்களுடைய நடவடிக்கைகள் மூலம் அவர்களே நிரூபிக்கின்றனர் என்றும் கூறுகிறோம்.

இந்த அரசமைப்பு என்னதான் கெட்டுச் சீரழிந்தாலும், ஆளும் வர்க்கம் தனது தோல்வியை ஒப்புக் கொள்ள மறுக்கிறது. 1991-ல் மன்மோகன்-நரசிம்மராவ் கூட்டணி புதிய பொருளாதாரக் கொள்கைகளை அதிகாரபூர்வமாக அமல்படுத்தத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை, ஊழல்கள் என்ற பெயரால் அழைக்கப்படும் அலைக்கற்றை, நிலக்கரி, ஆதர்ஷ், காமன் வெல்த், எல்.ஐ.சி. உள்ளிட்ட பல்வேறு கொள்ளைகளில் இந்த நாடு பறிகொடுத்திருக்கும் செல்வத்தின் மதிப்பு ரூ.73 இலட்சம் கோடி என்கிறது ஒரு புள்ளி விவரம்.

இந்தக் கொள்ளை என்பது நெறி பிறழ்ந்த சில கள்வர்களால் நடத்தப்பட்ட சங்கிலிப் பறிப்போ, வழிப்பறியோ அல்ல. பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகள், ஐ.ஏ.எஸ். முதல் வி.ஏ.ஓ. வரையிலான அதிகார வர்க்கம், அமைச்சரவை, போலீசு – இராணுவ அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள், உயர் நீதிமன்ற – உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஊடகத்துறையினர், கிரிமினல் மஃபியா கும்பல்கள் அடங்கிய வலைப்பின்னல் இக்கொள்ளைகள் அனைத்திலும் சம்பந்தப்பட்டிருக்கிறது.

மோடி - அம்பானி

எனினும் ராஜா, லாலு, கல்மாடி போன்ற சில அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் மட்டுமே குற்றவாளிகளாக காட்டுவதன் மூலம் மொத்த அமைப்பும் சீர்கெட்டு விடவில்லையென்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில குற்றவாளிகள் மட்டுமே இருப்பதாகவும் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. கண்டிப்பான நீதித்துறையும் நேர்மையான புலனாய்வு அதிகாரிகளும் விழிப்புணர்வு கொண்ட பத்திரிகைகளும் நாட்டு நலனில் அக்கறை கொண்ட அரசியல்வாதிகளும் இருந்தால் இத்தகைய பேர்வழிகளைக் களையெடுத்து அமைப்பைச் சீர்திருத்திவிட முடியும் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர் ஆளும் வர்க்க அறிவுத்துறையினர். ஆனால், களைகள் அங்கொன்றும் இங்கொன்றும் இல்லை. அவைதான் அரசாங்கம், அதிகாரவர்க்கம், போலீசு, நீதித்துறை, ஊடகங்கள் உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன; அவைதான் ஆட்சி செலுத்துகின்றன என்பதே உண்மை.

மன்மோகன் அமைச்சரவையை எடுத்துக் கொள்வோம். அமைச்சரவையைத் தீர்மானிப்பதில் தொடங்கி அணுசக்தி ஒப்பந்தத்துக்கு பா.ஜ.க. வைச் சரிக்கட்டுவது வரை அனைத்திலும் அமெரிக்க அரசு நேரடிப் பங்காற்றியிருப்பதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது. தரகு முதலாளிகளின் விருப்பப்படிதான் அமைச்சர்கள் நியமனம் நடந்தது என்பதை ராடியா டேப்புகள் வெளிக்கொணர்ந்தன. நிலக்கரி ஊழல் வழக்கில் பிர்லாவின் பெயர் சேர்க்கப்பட்டவுடனே ஆனந்த் சர்மாவும், சச்சின் பைலட்டும் கொதித்தெழுந்து மத்திய புலனாய்வுக் குழுவைக் கண்டித்தனர். கோதாவரி எரிவாயு விலை நிர்ணய விவகாரத்தில் காங்கிரசும் பா.ஜ.க.வும் போட்டி போட்டுக் கொண்டு அம்பானிக்கு வக்காலத்து வாங்கின. சுரங்க முதலாளிகளைத் தொல்லைக்குள்ளாக்குவதாக சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும் அதன் சட்டங்களையும் மன்மோகன் சிங் பகிரங்கமாகச் சாடினார்.

இங்ஙனம் மக்கள் பிரதிநிதிகள் என்ற பொறுப்புணர்ச்சியே இல்லாமல், கார்ப்பரேட் முதலாளிகளின் தரகர்களாகவும், லாபியிஸ்டுகளாகவும் அமைச்சர்கள் கூச்சமேயில்லாமல் நடந்து கொள்கிறார்களே, இது விதிவிலக்கான நிகழ்வா என்றால், இல்லை. சமூகத்திற்கு மேலே நிற்கும் அதிகாரமாகவும் எல்லா வர்க்கங்களுக்கும் பொதுவான நாட்டாமையாகவும் தோற்றம் காட்டிக் கொண்டிருந்த அரசு, மறுகாலனியாக்க கொள்கைகள் அமலாகத் தொடங்கிய காலம் முதல், முதலாளி வர்க்கத்தின் முகவராக வெளிப்படையாகவே தன்னை இனம் காட்டிக் கொள்ளத் தொடங்கி விட்டது. மக்களிடம் நியாயவுரிமை பெறுவதைக் காட்டிலும், மூலதனத்தை ஈர்ப்பதும் பன்னாட்டு முதலாளிகளிடம் நற்பெயர் ஈட்டுவதுமே அரசுகளின் நோக்கமாகி விட்டது.

எந்த மக்களின் பெயரால் ஆள்வதற்கான நியாயவுரிமையை அரசாங்கம் பெறுகிறதோ, அந்த விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், பழங்குடி மக்கள், தொழிலாளிகள் போன்ற அடிப்படை உழைக்கும் மக்களின் தொழிலையும் வாழ்க்கையையும் மேம்படுத்துவதற்கான திட்டங்களை காங்கிரசு, பா.ஜ.க., அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட எந்த அரசாங்கமும் வகுப்பதில்லை. மாறாக, கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் கொள்ளை இலாபத்தை நோக்கமாகக் கொண்டு தீட்டப்படும் ஆறுவழிச் சாலைகள் முதல் மீதேன் வரையிலான திட்டங்களுக்காக மக்களுடைய வாழ்வாதாரங்களைப் பறித்துக் கொடுப்பதுதான் செயல்படும் அரசு என்பதற்கான அங்க இலட்சணமாகியிருக்கிறது.

நாடாளுமன்றம் - ஊழல்எனவே ஆலைகள், சுரங்க நிறுவனங்கள், கல்விக் கொள்ளையர்கள், தண்ணீர் வியாபாரிகள், ரியல் எஸ்டேட் மஃபியாக்களுக்கு நிலம், காடு, மலை, நீர்நிலைகள் உள்ளிட்ட பொதுச் சொத்துகளை மக்களிடம் நைச்சியமாகப் பேசிக் கவர்ந்து கொடுப்பதும், எதிர்த்துப் போராடினால் மிரட்டி வெளியேற்றுவதுமே, தலைமைச் செயலர் முதல் வி.ஏ.ஓ.க்கள் வரையிலான அதிகார வர்க்கமும், போலீசும் ஆற்றிவரும் வளர்ச்சிப் பணியாகவும், சட்டம் ஒழுங்குப் பராமரிப்பாகவும் இருந்து வருகிறது. இவர்கள் அனைவரும் தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை அமலாக்குபவர்களாக மட்டுமின்றி, அதன் மூலம் பல வழிகளில் ஆதாயமடைகின்ற பங்குதாரர்களாகவும் இருக்கின்றனர். ஜனநாயகத்தின் இதர தூண்களான நீதித்துறையும் ஊடகங்களும்கூட இதற்கு விதிவிலக்கல்ல.

தனியார்மயம்-தாராளமயம் என்பது வெறும் பொருளாதாரக் கொள்கை மட்டுமல்ல; அது கட்டற்ற முதலாளித்துவச் சூறையாடலுக்கு உகந்த அரசியல், சித்தாந்தச் சூழலை சமூகத்தில் உருவாக்குவது மட்டுமின்றி, நீதித்துறையின் வன்முறை உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏற்ப நிலவுகின்ற இந்த அரசமைப்பை வளைத்து மாற்றியமைக்கிறது. இதன் காரணமாக சட்டமீறல்கள் சகஜமாகின்றன. எந்தச் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்று மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்களோ, அந்தச் சட்டங்களை முதலீட்டுக்கான இடை யூறுகள் (bottlenecks) என்று முதலாளிகள் நிராகரிக்கிறார்கள். உடனே அந்த இடையூறுகள் சட்டவிரோதமான முறையில் அதிகாரவர்க்கத்தால் அகற்றப்படுகின்றன; பின்னர் மேற்படி சட்டவிரோத நடவடிக்கை அரசால் சட்டபூர்வமாக்கப்படுகின்றன. சென்னை தியாகராயநகரில் அங்கீகாரமின்றி பலமாடிக் கடைகள் கட்டப்பட்டதும், சட்டவிரோதமான அக்கட்டிடங்கள் அவசரச் சட்டங்கள் மூலம் சட்டபூர்வமாக்கப்பட்டதும் விதிவிலக்கான நிகழ்வு அல்ல; சட்டவிரோத கனிமவளக் கொள்ளை முதல் வரி ஏய்ப்புகள் வரையிலான எல்லா விசயங்களிலும் நடந்து வருவது இது தான்.

ஏற்கெனவே ரேசன் அட்டை, சாதிச்சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, மின்னிணைப்பு முதலான மக்களின் சட்டபூர்வமான உரிமைகளுக்கே விலை நிர்ணயம் செய்து வசூலித்துக் கொண்டிருக்கும் அதிகாரவர்க்கத்தின் இலஞ்சப் பசிக்கு தனியார்மயக் கொள்கை புதிய வேட்டைக்காடுகளைத் திறந்துவிட்டிருக்கிறது என்பதே உண்மை.

அரசியல்வாதிகளின் ஊழலை விட மிகப்பெரியது அதிகாரவர்க்கத்தின் ஊழல். ஏனென்றால், இவர்கள் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்ல என்று முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிசனர் விட்டல் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறை உள்ளிட்ட அரசு எந்திரம் ஆளும் வர்க்கச் சேவைக்காகவே வடிவமைக்கப்பட்டது. அவர்களுக்கு மட்டுமே கடமைப்பட்டது. மறுகாலனியாக்கக் கொள்கைகள் அதிகார வர்க்கத்தின் இந்த முதலாளித்துவ விசுவாசத்துக்கு மேலும் வெறியூட்டியிருக்கின்றன. தனியார்மயக் கொள்கையின் சித்தாந்தத் தாக்கமோ, இந்த அரசமைப்பின் சீர்குலைவை மேலும் துரிதப்படுத்தி அதனைத் தார்மீக ரீதியில் மதிப்பிழக்கச் செய்திருக்கிறது; அதன் தோல்வியைப் பட்டவர்த்தனமாக்கியி ருக்கிறது.

அனைத்தும் தழுவிய சீரழிவுதலைமை விஜிலென்ஸ் கமிசனர் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றத்தினை, நீதிபதிகள் நியமனத்திலேயே அப்படிப்பட்ட அளவுகோலைப் பயன்படுத்த முடிவதில்லையே மைலார்டு எனக்கூறி எள்ளி நகையாடினார் சொலிசிட்டர் ஜெனரல் வாகனவதி. அலகாபாத் நீதிமன்றத்தில் தந்தைகள் நீதிபதியாக அமர்ந்திருக்க, தனயர்கள் வக்கீல்களாக இருந்து வழக்கு நடத்திப் பணத்தைக் குவிக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் 8 பேர் ஊழல் பேர்வழிகள் என்று குற்றம் சாட்டுகிறார் வழக்குரைஞர் சாந்தி பூஷண். தலைமறைவுக் குற்றவாளி என்று பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு நபர் இந்தூர் நகரின் செசன்சு நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். டில்லி பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகளுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கிறது நீதிமன்றம்; ஆனால் அலைக்கற்றை தீர்ப்பு புகழ் நீதிபதி கங்குலி, தன் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு உறுதியான பின்னரும், மனித உரிமைக் கமிசன் பதவியிலிருந்து விலக மறுக்கிறார். தன் மீதான ஊழல் வழக்கை 20 ஆண்டுகள் இழுத்தடித்த ஜெயலலிதா வுக்கு, அவர் விரும்பும் அரசு வக்கீலையும் நீதிபதியையும் அமர்த்தித் தரவேண்டும் என்று கூசாமல் தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம். அதேநேரம், பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்குக் குரல் கொடுத்த மருத்துவர் பினாயக் சென் தேசத்துரோக குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறார்.

போலீசின் யோக்கியதையைப் பற்றியோ சொல்லத் தேவையில்லை. வழிப்பறி, வல்லுறவு, சிட்பண்டு மோசடி, ஆள் மாறாட்டம், கொலை, போலி மோதல் கொலை, கூலிக்குக் கொலை என்று கிரிமினல் குற்ற நடவடிக்கைகளின் எல்லைகளை விரிவுபடுத்துகிறது போலீசு. பாலியல் வல்லுறவுக் குற்றவழக்கில் கைது செய்யப்பட வேண்டிய மதுகர் டான்டன் என்ற ராஜஸ்தான் டி.ஐ.ஜி. 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமறைவாக இருக்கிறார். தலைமறைவாக இருக்கும் ஏ.கே.ஜெயின் என்ற கூடுதல் டி.ஜி.பி.யை பிடித்துத் தருபவர்களுக்கு பத்து லட்சம் சன்மானம் அறிவித்திருக்கிறது சி.பி.ஐ.

பங்குச் சந்தையைக் கண்காணிப்பதற்கான செபி மீது சி.பி.ஐ. விசாரணை, தலைமை விஜிலென்சு கமிசனர் மீது சி.பி.ஐ விசாரண, ஐ.பி. மீது சி.பி.ஐ. விசாரணை என எல்லாக் கண்காணிப்பு அமைப்புகளும் சி.பி.ஐ. விசாரணை வளையத்துக்குள் வந்து கொண்டிருக்க, சி.பி.ஐ. அதிகாரிகளின் முறைகேடுகளை விசாரிப்பது யார்? என்பது விடையில்லாக் கேள்வியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

இந்திய அதிகார வர்க்கம்தான் ஆசியாவிலேயே மிக மோசமான அதிகாரவர்க்கம் (அதாவது வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைக் காட்டிலும் மோசமானது) என்று பொலிடிகல் அண்டு எகனாமிக் ரிஸ்க் கன்சல்டன்சி என்ற நிறுவனம் சமீபத்தில் மதிப்பிட்டிருக்கிறது. இப்படி அதிகாரவர்க்கத்தின் பெருமை சந்தி சிரித்து விட்ட போதிலும், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வதற்கு அனுமதி மறுப்பதன் மூலம் அவர்களுடைய கற்பைக் காப்பாற்றி வருகிறது மத்திய அரசு. அலைக்கற்றை, ஆதர்ஷ், நிலக்கரி வயல் உள்ளிட்ட ஊழல் வழக்குகளில் அந்தந்தத் துறை அதிகாரிகள் தவிர்க்கவியலாமல் சிக்கியிருப்பதால், அவர்கள் குற்றங்களின் பிதாமகனான பிரதமரையும் கூண்டிலேற்றுமாறு கோருகிறார்கள். பிரதமரும் கூண்டிலேற்றப்பட வேண்டியவரே என்று தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை வழிமொழிவதால், பிரதமர் நாற்காலியின் கவுரவம் பல்லிளிக்கிறது.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும் கருத்துரிமையின் காவலன் என்றும் சிலாகிக்கப்படும் ஊடகத்துறையோ கார்ப்பரேட் முதலாளிகளின் கூலிப்படையாக அம்பலமாகி நிற்கிறது. பத்திரிகையாளர்கள் அதிகாரத் தாழ்வாரங்களில் அரசியல் தரகர்களாக வலம் வந்து பிடிபடுகிறார்கள். 2009 தேர்தலின்போது ஒரு முறைகேடாக அம்பலப்படுத்தப்பட்ட காசுக்கு செய்தி (paid news) என்ற கயமைத்தனம், தற்போது பத்திரிகை உலகின் தொழில் தருமமாக அங்கீகாரம் பெற்று விட்டது.

சீரழிவிலிருந்து இந்தத் துறை தப்பி விட்டது என்று விரல் நீட்ட முடியாவண்ணம் சமூகத்தின் எல்லாக் கணுக்களிலிருந்தும் சீழ் வடிகிறது. நல்லொழுக்கத்தின் வழிகாட்டிகளாக அறியப்படும் மதகுருமார்கள் வக்கிரங்களுக்கு வழிகாட்டுகிறார்கள். உயிர் காக்கும் மருத்துவர்கள் எனப்படுவோர் உறுப்புகளைத் திருடும் கொலைகாரர்களாகப் பிடிபடுகிறார்கள். கல்வி நிறுவனங்கள் கொள்ளைக் கூடங்களாகத்தான் இருக்கும் என்பது சமூகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டு, அவை அரசு அங்கீகாரம் பெற்ற கொள்ளைக்கூடங்களாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே பெற்றோரின் கோரிக்கையாக எஞ்சியிருக்கிறது. ஜனநாயகத்தின் எதிரியான சாதி, ஜனநாயக உரிமையின் பெயரால் புதுப்பிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கிறது.

மறுகாலனியாக்கப் பண்பாட்டு வளர்ச்சியின் வேகம் பெண்களைச் சூறையாடுகிறது. தலைநகர் டில்லியில் பணியாற்றும் பெண்கள் வேறு பாதுகாப்பான நகரத்துக்குத் தப்பியோடத் தவிக்கிறார்கள். சூறையாடப்பட்ட விவசாயிகள் கிராமப் புறங்களிலிருந்து தப்பிவந்து நகர்ப்புறக் கொத்தடிமைகளாக உழல்கிறார்கள். தப்பிக்க முடியாதவர்கள் அங்கேயே தற்கொலை செய்து கொள்கிறார்கள். சூறையாடப்பட்ட இயற்கை, மனிதர்களை மட்டுமின்றி விலங்குகளையும் வாழ்விடத்தை விட்டு விரட்டுகிறது. தண்ணீர்ப் பஞ்சமோ வரவிருக்கும் பேரழிவுக்குக் கட்டியம் கூறுகிறது. மணற்கொள்ளை, வனக்கொள்ளை, தண்ணீர்க் கொள்ளைகளைத் தடுக்கும் சமூக உணர்வுள்ள குடி மக்கள், அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்புடன் மஃபியா கும்பல்களால் வேட்டையாடிக் கொல்லப்படுகிறர்கள்.

அரசியல், சமூக, பண்பாட்டு நிறுவனங்கள் அனைத்தும் தமக்குரிய நெறிகளைக் காலில் போட்டு மிதித்து வரும் சூழலில், தமக்குரிய நெறிகளைப் பற்றியொழுகும் நிறுவனங் களாகச் சூதாட்ட விடுதிகள் மட்டுமே இந்த நாட்டில் எஞ்சியிருக்கின்றன. அரசமைப்பின் எல்லா உறுப்புகளும் நொறுங்கிச் சரிந்து வரும் நிலையில், மக்கள் மீது ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான அரசின் குண்டாந்தடி மட்டும் தனது கொள்கையில் சற்றும் வளைந்து கொடுக்காமல் நிற்கிறது.

வளர்ச்சியின் பலிபீடத்தில் தமது வாழ்விடங்களையும், நீர்நிலைகளையும், விளைநிலங்களையும், வாழ்வுரிமையையும் காவு கொடுக்கச் சம்மதிக்காத மக்கள் நாடெங்கும் எதிர்த்துப் போராடுகிறார்கள். ஓட்டுக்கட்சிகள் அனைத்தையும் ஒதுக்கி நிறுத்தியிருக்கும் இந்தப் போராட்டங்களை நிறுவனமயப்படுத்துவதற்கும், நீர்த்துப் போக வைப்பதற்குமான வழிமுறைகளை ஆளும் வர்க்கம் தொடர்ந்து யோசிக்கிறது.

தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கம் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் பெரும் பிளவையும், அதிருப்தியையும் சரிக்கட்டி, ஆளும் வர்க்கத்துக்கும் ஆளப்படும் வர்க்கங்களுக்கும் இடையிலான முரண்பாட்டை அமைதிப்படுத்தவும், மதிப்பிழந்து தோற்றுப்போன இந்த அரசமைப்பைச் சீர்திருத்த முடியும் என்று நம்பிக்கையூட்டி, மக்கள் மத்தியில் இந்த அரசமைப்பின் நியாயவுரிமையைப் புதுப்பிக்கவும், ஏகாதிபத்தியத் தொண்டு நிறுவனங்களால் வழிநடத்தப்படும் ஆம் ஆத்மி கட்சி அரசியல் களத்தில் இறக்கப்பட்டிருக்கிறது.

மறுகாலனியாக்க கொள்கைகளின் வேகமான அமலாக்கத்திற்காகப் பொறுமையிழந்து துடித்துக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தரகு முதலாளிகளின் பிரதிநிதியான நரேந்திர மோடி, வளர்ச்சி மற்றும் சிறந்த அரசாளுமையின் சின்னமாக ஆளும் வர்க்கத்தால் முன்நிறுத்தப்படுகிறார். ஜனநாயக வடிவிலான அரசமைப்பைப் பயன்படுத்தியே பாசிசத்தை நிலைநாட்டும் கலையை குஜராத்தில் சோதித்துப் பார்த்திருக்கும் மோடி, அதனை இந்தியா முழுமைக்கும் பிரயோகிக்கும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்.

தோல்வியுற்று நொறுங்கிச் சரிந்து கொண்டிருக்கும் இந்த அரசியல் சமூக அமைப்போ, தனது இறுதிச் சடங்குகளை நடத்தி வைக்க வேண்டிய புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

– சூரியன்
___________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2014
___________________________________

முசாஃபர் நகரில் மோடி – ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மை முகம்

3

“இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டிய நேரம் வந்திருக்கிறது. அதை செய்து முடிப்பதற்கான தலைவர் மோடிதான்”.

முசாஃபர் நகரில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம்
முசாஃபர் நகரில் மோடிக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம்

“இன்றைய நிலைமையில் இந்துக்கள் எப்படி எல்லாம் சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்று பாருங்கள். நாம ஏதாவது செய்யணும். இந்துக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மோடியை ஜெயிக்க வைக்க வேண்டும். பா.ஜ.கவுக்கு ஓட்டு போட்டு மோடியை பிரதமர் ஆக்க வேண்டும்”

“ராமர் கோயில் பிரச்சனையை நாங்கள் மறந்து விடவில்லை. இந்த நாட்டில் ஒரு தேசியவாத அரசு வரும் போது ராமர் கோயில் கட்டப்படும். ராமர் கோயில் மட்டுமில்லை, காசி விஸ்வநாதர் கோயில், மதுரா மூன்று இடங்களிலும் கோயில்கள் கட்டப்படும். இது எல்லாம் எங்கள் திட்டத்தில் இருக்கின்றன. ஆனால் இப்போதைக்கு ஒரு தேசிய வாத அரசாங்கத்தை ஏற்படுத்துவதுதான் நோக்கம்”

“முஸ்லீம்கள் பகுதிகளில் நாங்க பிரச்சாரம் செய்ய மாட்டோம். அவங்க எப்பவுமே பாஜகவை தோற்கடிக்கும் வேட்பாளருக்குத்தான் வாக்களிப்பாங்க. அவங்க பகுதிக்குள் எங்களை அனுமதிப்பதேயில்லை”

உத்தர பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம் குறித்து என்.டி.டி.வி தொலைக்காட்சியின் சீனிவாசன் ஜெயின் தயாரித்த நிகழ்ச்சியில் மோடியின் பா.ஜ.க சார்பாக களம் இறங்கியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள் சொல்லும் சில கருத்துக்கள்தான் இவை.

“வளர்ச்சி நாயகன் மோடி, 10 ஆண்டுகளாக மதக் கலவரமே இல்லாமல் ஆட்சி செய்து வரும் முன்னோடி மாநிலம் குஜராத்” என்றெல்லாம் நாட்டின் பிற பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறது பா.ஜ.க; அயோத்தியில் ராமர் கோயில், பொது சிவில் சட்டம், அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ ஒழித்தல் போன்ற மதவாத நோக்கங்களை பா.ஜ.க மறந்து விட்டதாக அதனுடன் சந்தர்ப்பவாத கூட்டணி வைத்திருக்கும் வை.கோ., சந்திரபாபு நாயுடு, ராம் விலாஸ் பாஸ்வான் போன்றவர்கள் மக்களை நம்ப வைக்க முயற்சிக்கின்றனர். ‘சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் அணைத்துச் செல்வதுதான் மோடியின் கொள்கை; இந்துக்கள், முஸ்லீம்கள் என்று பார்க்காமல் 6 கோடி குஜராத்திகளுக்கும் சேவை செய்பவர் மோடி’ என்று பா.ஜ.கவுக்கு ஆதரவாக ஊடகங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன.

ஆனால், உத்தர பிரதேச மாநிலத்தில் தெருத் தெருவாக பா.ஜ.கவின் மதவெறி பிரச்சாரம் பகிரங்கமாக நடத்தப்பட்டு வருகிறது.

சீனிவாசன் ஜெயின்
சீனிவாசன் ஜெயின்

கடந்த ஆண்டு மேற்கு உ.பியின் முசாஃபர் நகர் மாவட்டத்தில் ‘முஸ்லீம்கள் லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்துப் பெண்களை மயக்கி திருமணம் செய்து கொள்கிறார்கள்’ என்று பிரச்சாரம் செய்து ஜாட் ஆதிக்க சாதியினரை திரட்டி முஸ்லீம்களுக்கு எதிராக கலவரங்களை நடத்தின சங்க பரிவார அமைப்புகள். ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்கள் அவர்களது கிராமங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அகதிகளாக திறந்த வெளி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

முசாஃபர் நகர் பகுதியில் 18 சர்க்கரை ஆலைகள் இருக்கின்றன. இந்திய அளவில் கரும்பு விவசாய உற்பத்தி நன்றாக நடக்கும் பகுதிகளில் முசாஃபர் நகரும் ஒன்று. ஜாட் சாதியினர் பெரும்பாலும் விவசாயிகளாக இருக்கின்றனர். இந்த பகுதியினரின் சாதி வெறியைத் தூண்டி விட்டு தேர்தலில் ஆதாயம் காண முயற்சிக்கும் பா.ஜ.க, முசாஃபர் நகர் தொகுதியில் ஜாட் சாதி பிரமுகர் சஞ்சீவ் பாலியானை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது.

முசாஃபர் நகரின் பட்டேல் நகர் பகுதியில் காலையில் ஷாகா முடித்து விட்டு தமது காக்கி டவுசர்களைக் கூட மாற்றாமல் “பாரேத் மாதா கீ ஜெய்” என்ற முழக்கத்துடன் பா.ஜ.கவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின்றனர் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள். வழக்கமாக ‘ஆர்.எஸ்.எஸ் வேறு, பா.ஜ.க வேறு, இரண்டுக்கும் சித்தாந்த தொடர்பு இருந்தாலும் இயக்க ரீதியான தலையீடு தொடர்பு இல்லை, பாஜகவை ஆர்.எஸ்.எஸ் இயக்குவதில்லை, ஆர்.எஸ்.எஸ் அரசியலில் ஈடுபடுவதில்லை’ என்றெல்லாம் பசப்பும் சங்க பரிவாரம் இங்கு தன் முகமூடிகளை கழற்றி வீசி விட்டு நரேந்திர மோடிக்கும் பாஜக வேட்பாளருக்கும் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்து வருகிறது.

“தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்சின் முக்கியமான பங்களிப்பு அதன் அடிமட்ட சுவயம் சேவக்குகள் கட்டமைப்பை பா.ஜ.கவின் தேர்தல் நிர்வாகப் பணிகளுக்காக களம் இறக்கி விட்டிருப்பதுதான்” என்கிறார் ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ். 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு பிராந்த் (வட்டார) பொறுப்பாளர், அவர்களுக்குக் கீழே ஒவ்வொரு மக்களவை தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர், அந்தத் தொகுதியில் அடங்கிய ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர். அவருக்குக் கீழ் 10 வாக்குச் சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளர் என ஆர்.எஸ்.எஸ் சுவயம் சேவக்குகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்சில் இத்தனை சுவயம் சேவக்குகளா என்று யாராவது ஆச்சரியப்பட்டால், ஒரு நபர் தன் வாழ்நாளில் ஒரு முறை ஆர்.எஸ்.எஸ் ஷாகாவை எட்டிப் பார்த்திருந்தாலே அவர் சுவயம் சேவக் தகுதியை பெற்று விடுகிறார். மேலும் ஷாகாவிற்கு டிமிக்கி கொடுக்கும் முன்னாள் சுவயம் சேவக்குகள் கூட தேர்தல் அரசியலின் ஆதாயங்களை பெறுவதற்கு படை திரண்டு வருவார்கள் என்பதால் இந்த திட்டம் அசாத்தியமானதல்ல.

"ஆர்.எஸ்.எஸ்சில் இத்தனை சுவயம் சேவக்குகளா?"
“ஆர்.எஸ்.எஸ்சில் இத்தனை சுவயம் சேவக்குகளா?”

பா.ஜ.கவின் சிந்தனையாளர் சுதீந்த்ர குல்கர்னி, “பா.ஜ.கவில் மத்தியிலிருந்து கீழ் மட்டங்கள் வரை ஒரு தலைமுறை மாற்றம் நிகழும் போது ஆர்.எஸ்.எஸ் தனது அழுத்தமான முத்திரையை பதிக்க விரும்புகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபடுவது ஒரு ஆண்டுக்கு முன்பிருந்தே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது” என்கிறார்.

உட்கட்சி அமைப்பில் ஜனநாயகத்தின் வாசனை கூட இல்லாத ஆர்.எஸ்.எஸ்., பெண்களை தனது இயக்கத்தில் இன்று வரை சேர்க்கக் கூடாது என்று விதி வைத்திருக்கும் இவர்கள் இந்த தேர்தல் அரசியலில் என்ன ஜனநாயகத்தை பிரச்சாரம் செய்வார்கள்? வேறு என்ன, இந்துமதவெறி, அகண்ட பாரதக் கனவு, சிறுபான்மையினர் வெறுப்பு, கம்யூனிச கடுப்பு, தேசிய இன ஒழிப்பு, பாலின ஒடுக்குமுறை, சாதி ரீதியான துவேசம், மாட்டுக்கறி புனிதம், மதமாற்றத் தடை சட்டம்…..இவைதான் இவர்களது முக்கிய பிரச்சாரங்கள்.

முசாஃபர் நகரில் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் இயக்கத்தை ஆர்.எஸ்.எஸ் நடத்தியிருக்கிறது. “உங்கள் மொபைல் எண்ணை கொடுத்து விட்டால் ஒரு குறுஞ்செய்தி வரும். அதைத் தொடர்ந்து நீங்கள் இப்போது ஒரு மோடி ஆதரவாளர் என்று மோடியின் குரலில் ஒரு அழைப்பு வரும்.” என்கிறார் ஒரு  ஆர்.எஸ்.எஸ் தொண்டர்.

இந்த அடிமட்ட பிரச்சாரத்தை ஒருங்கிணைப்பதற்கு ஆர்.எஸ்.எஸ்-சும் மோடி பிரச்சாரக் குழுவும் இணைந்து bharatvijay.com என்ற இணைய தளத்தை உருவாக்கியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்-சின் கோரிக்கைப் படி மும்பையைச் சேர்ந்த நெட்கோர் சொல்யூசன்ஸ் என்ற மென்பொருள் நிறுவன உரிமையாளர் ராஜேஷ் ஜெயின் இந்த தளத்தை வடிவமைத்திருக்கிறார். 200 ஊழியர்களை கொண்ட அவரது நிறுவனம் பல ஆண்டுகளாகவே மோடியின் இணைய பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. அவர்கள் நாடெங்கிலும் உள்ள 400 தொகுதிகளில் கடந்த நான்கு மக்களவை தேர்தல்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை திரட்டி களத்தில் வேலை செய்யும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு உதவியாக இருக்கும்படி தயாரித்துள்ளனர்.

ஆர்.எஸ்.தொண்டர்கள் தமது கடவுச்சொல்லை பயன்படுத்தி கிராம மட்டம் வரையிலான வாக்காளர் பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக எந்த கிராமத்தில் வெற்றி நிச்சயம், எந்த கிராமத்தில் வெற்றி இன்னும் உறுதியாகவில்லை, எந்த கிராமத்தில் வாய்ப்பு இல்லை என்று பார்த்துக் கொள்ள முடியும்.

“ஒரு தொகுதியை பற்றி புரிந்து கொள்ள எங்களுக்கு இது உதவுகிறது” என்கிறார் ராம் மாதவ். “மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) தரவுகளிலிருந்து ஒரு வாக்குச் சாவடியில் எத்தனை இளைஞர்கள், எத்தனை வயதானவர்கள், எத்தனை பெண்கள், எத்தனை ஆண்கள், எத்தனை தாழ்த்தப்பட்ட சாதியினர், எத்தனை பழங்குடியினர் உள்ளனர் என்று தெரிந்து கொள்கிறோம்” என்கிறார் அவர்.

ராம் மாதவ்
“மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) தரவுகளிலிருந்து ஒரு வாக்குச் சாவடியில் எத்தனை இளைஞர்கள், எத்தனை வயதானவர்கள், எத்தனை பெண்கள், எத்தனை ஆண்கள், எத்தனை தாழ்த்தப்பட்ட சாதியினர், எத்தனை பழங்குடியினர் உள்ளனர் என்று தெரிந்து கொள்கிறோம்”

ஆனால், ஆர்.எஸ்.எஸ் இத்தகைய புள்ளிவிபரங்களை தேர்தல் திட்டமிடலுக்கு பயன்படுத்துகிறதோ இல்லையோ வேறு எதற்கு பயன்படுத்தும் என்பது குஜராத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. குஜராத்தில் 2002-ம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிராக நடத்திய இனப்படுகொலைக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் பல பத்தாண்டுகளாக வேலை செய்து முசுலீம்கள் மக்கள் தொகை, முசுலீம்கள் செய்து வந்த வியாபாரம் போன்ற விவரங்களைத் திரட்டி முன் தயாரிப்பு செய்திருப்பதை, வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் மூலம் பழங்குடியினரிடையே ஊடுருவி அவர்களிடையே மதவெறி நஞ்சூட்டி முசுலீம் சமுதாயத்திற்கு எதிராய் அணி திரட்டியதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இந்நிலையில், ஆதார் போன்ற திட்டங்களின் மூலம் குடிமக்கள் பற்றிய அடிப்படை விபரங்கள் அனைத்தும் இத்தகைய பாசிஸ்டுகளின் கையில் கிடைக்கும் போது அவற்றை தமது பாசிச பயங்கரவாத செயல்களை திட்டமிட்டு நடத்த பயன்படுத்திக் கொள்வார்கள் என்பது நிச்சயம்.

“முசாஃபர் நகரில் இந்துக்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டன. பல முறை சண்டை போட (கலவரங்கள் நடத்த) வேண்டியிருந்தது. மத்திய மாநில அரசுகள் ஒரு தரப்பாக நடந்து கொண்டன. அதனால இந்துக்கள் அனைவரும் கோபமாக உள்ளனர். ஒவ்வொரு இந்துவும், இந்து குடும்பமும் மோடி தலைமையிலான ஆட்சி அமைவதற்காக தமது குரலை எழுப்பி வருகின்றது.” என்கிறார் முசாஃபர் நகரின் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் மகேஸ்வரி.

ஆதிக்க சாதி அடையாளம் மற்றும் ஆதிக்கத்தை முசுலீம் எதிர்ப்பாக மாற்றி முசாஃபர் நகரில் கலவரத்தை நடத்தின சங்க பரிவார அமைப்புகள். பா.ம.க. ராமதாசு நாடகக் காதல் என்ற கதையை ஊதிப்பெருக்கி தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக ஆதிக்க சாதிவெறியைத் தூண்டிவிட்டதைப் போல, லவ் ஜிகாத் என்பதை ஊதிப் பெருக்கி, அதன் மூலம் தன் கள்ளப் பிள்ளை பா.ஜ.க.வுக்கு ஜாட் சாதி ஓட்டுக்களைக் கவர திட்டமிட்டது ஆர்.எஸ்.எஸ்.

இந்த மதவெறியூட்டப்பட்ட சாதிவெறி கும்பல்களால் துரத்தியடிக்கப்பட்ட 50,000 முஸ்லீம்கள் கடும் குளிர் காலத்தில் திறந்த வெளி முகாம்களில் வைத்து சாகடித்தன மத்திய மாநில அரசுகள். அவர்களை கிராமங்களுக்கு திரும்பி வர அனுமதிக்க மாட்டோம் என்று கொக்கரித்த ஜாட் சாதி அமைப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விஸ்வ இந்து பரிசத்தைச் சேர்ந்த விஜய் சவுத்ரி “நாங்க சனாதன தருமத்தின்படி ஓம்கார், விஷ்ணு, பிரம்மா, மகேஷ் என்று பல கடவுள்களை வழிபடுகிறோம். எந்த மனிதனையும் கடவுளாக கருத முடியாது என்றாலும், நாங்கள் விக்கிரகங்களை கடவுள் என்று நம்பி வழிபடுவது போல மோடியின் பிம்பம் எங்கள் பிரச்சாரத்தில் உதவியாக இருக்கிறது” என்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் தலித் கொள்கை
சில தலித் மக்களும் ஆர்.எஸ்.எஸ்சின் பிரச்சாரத்துக்கு பலியாகி விடலாம்.

தமிழ்நாட்டில் வன்னிய சாதி வெறியைத் தூண்டி மக்களை பிளந்து போடும் பா.ம.கவைப் போலவே, முசாஃபர் நகரில் ஜாட் சாதி வெறியைத் தூண்டி அரசியல் செய்கிறது பா.ஜ.க. சென்ற ஆண்டு நடந்த கலவரத்தின்பொழுது, “நரேந்திர மோடி ஒருவரால்தான் முசுலீம்களுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க முடியும்” எனத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக இப்போது மோடி குறித்த பிம்பத்தை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்தி வருகிறது.

ஆனால், பல கோடி ரூபாய் செலவு செய்து நடத்தப்பட்ட பிரச்சாரங்கள் மூலமாகவும், ஊடகங்களாலும் ஊதிப் பெருக்கப்பட்ட மோடியின் பிம்பத்துக்கேற்ப உள்ளூர் அரசியலில்  தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல், உ.பியிலும் பா.ஜ.கவுக்கு பிடி இல்லை.  “பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக்” என்ற இந்த நிலைமையை மனதில் வைத்து தமிழ்நாட்டில் இல.கணேசன் பிரச்சாரம் செய்வது போலவே “இது நாடாளுமன்றத்துக்கான தேர்தல், மோடியை பிரதமராக்குவதற்கான தேர்தல். மாநில அரசியலை மனதில் வைத்துக் கொண்டு சமாஜ்வாதி கட்சி அல்லது பகுஜன் சமாஜ் கட்சி போன்ற மாநில கட்சிகளுக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள்” என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

மேலும், முசாஃபர் நகரின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50% முஸ்லீம்களும், தலித்துகளும் உள்ளனர். 40% முஸ்லீம்களுக்கு எதிராக இந்துக்களை ஒன்று திரட்ட பிரச்சாரம் செய்து வரும் ஆர்.எஸ்.எஸ், தலித் வாக்குகளை பெறுவதற்கு முயற்சி செய்கிறது. மோடி மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்யும் போது “மாநிலத்தில் மம்தா, மத்தியில் மோடி” என்று நைஸ் செய்தது போல தலித் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றனர் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள்.

பார்ப்பன சமூக அமைப்பில் “சமத்துவம் (சமதா) இருக்க முடியாது ஆனால், அனைத்து சாதி மக்களும் சகோதர உணர்வுடன் வாழ முயற்சிக்கிறோம்” என்கிறார் 92 வயதான ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் எம்.ஜி வைத்யா. இதுதான் ஆர்.எஸ்.எஸ்சின் தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்பான கொள்கை என்பதை புரிந்து கொள்ளாத சில தலித் மக்களும் ஆர்.எஸ்.எஸ்சின் பிரச்சாரத்துக்கு பலியாகி விடலாம்.

பா.ஜ.க பலவீனமாக இருக்கும் கிராமப்புறங்களில் மதவாத பிரச்சாரத்தை நடத்துவதற்கு விஸ்வ இந்து பரிசத் ஹரித்வாரிலிருந்தும் மீரட்டிலிருந்தும் பண்டாரம், பரதேசிகளை இறக்குமதி செய்திருக்கிறது. “இந்து சமூகத்தை பாதுகாக்கவும், நாட்டை முன்னேற்றவும், இந்துக்கள் அனைவரும் பா.ஜ.கவுக்கு தவறாமல் வாக்களிக்க வேண்டும்” என்று அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். முதலாளிகள் கூட்டங்களில் “ஏற்றுமதி வளரணும், இறக்குமதி குறையணும்…” என்று மோடி பேசுவதற்கு மாறாக இந்த பண்டாரம், பரதேசிகளின் இறக்குமதி அதிகரித்திருக்கிறது.

அனைத்து மதத்தவரையும் அணைத்துச் செல்வதுதான் எங்கள் கொள்கை என்று மோசடி செய்யும் பா.ஜ.க முசாபர் நகரில் உள்ள 40% முஸ்லீம்கள் பகுதியில் பிரச்சாரம் செய்வதில்லை என்பதோடு எட்டிக் கூட பார்க்காமல் ஒதுக்கி வைத்து விட்டது.

“நாட்டை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்து விடுவிக்கத்தான் பா.ஜ.க.வை ஆதரிக்கிறோம்” என்கிறார் ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ். “பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி,  ஊழல் ஒழிப்பு, இவற்றுடன் சாதி, வட்டாரம், மதம், சிறுபான்மை, பெரும்பான்மை இவற்றின் பெயரில் சமூக நல்லிணக்கும் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்” என்கிறார் அவர். அவரைப் பொறுத்த வரையில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து உழைக்கும் மக்கள் போராடுவதும், இந்துத்துவா வெறியர்களின் அடக்குமுறையை எதிர்த்து சிறுபான்மை மதத்தினர் போராடுவதும்தான் சமூக அமைதியை பாதிக்கும் விஷயங்கள். கூடவே, மோடி பாணி வளர்ச்சியில் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு நிலங்களை தாரை வார்ப்பதை எதிர்த்து விவசாயிகள் போராடுவதையும், கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக தமது உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடுவதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பாபா ராம்தேவ்
மோடியின் பெயரை சொல்லாமலேயே அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செயகிறாராம் பாபா ராம்தேவ்.

பா.ஜ.க இடத்துக்கு ஏற்றபடி தனது பிரச்சார உத்திகளை மாற்றிக் கொள்கிறது. உதாரணமாக டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்சின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியால் ஆரம்பிக்கப்பட்ட இந்தியா வோட் 272 என்ற குழு இளைஞர்களை ஈர்ப்பதற்காக தெருமுனை பாட்டுக் கச்சேரி நடத்துகிறது. இங்கே அல்ட்ரா மாடர்னாக தங்களது பிரச்சாரத்தை காட்டிக் கொள்வார்கள். அதையும் மீறி குடுமி வெளியே தெரியுமென்பது வேறு விசயம்.

பாபா ராம்தேவின் பக்தர்களையும் கவர் செய்திருக்கிறது மோடி பிரச்சாரக் குழு. யோகா மூலம் இந்தியர்களை ஆரோக்கியமாக்குவதற்கு 75% நேரம் செலவழிப்பதாகவும், இந்தியர்கள் பணக்காரர்கள் ஆவதற்கு மோடி பிரதமர் ஆக வேண்டும் என்றும் கூறுகிறார் ராம்தேவ். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மோடியின் பெயரை  சொல்லாமலேயே அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செயகிறாராம்.

‘ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க என்னும் ஆள் தின்னும் புலி தனது கோடுகளை அழித்து விட்டு சைவப் புலியாகி விட்டது’ என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வரும் அதன் கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க, தே.மு.தி.க, தமிழருவி மணியன் மற்றும் இணையத்தில் கொடி பிடிக்கும் பத்ரி வகையறாக்கள், உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க வெளிப்படுத்தும் அதன உண்மை முகம் தொடர்பாக எப்படி சப்பைகட்டு கட்டுவார்கள் ?

– பண்பரசு

மேலும் படிக்க

போங்கடா… நீங்களும் உங்க ஜனநாயகமும் !

16

தேர்தல் புறக்கணிப்பு

மறுகாலனியாக்கத்துக்கான போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்!
உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கான புதிய ஜனநாயக அரசமைப்பைக் கட்டியெழுப்புவோம்!
கொலைகார மோடி தலைமையிலான பார்ப்பன பாசிச பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பலை விரட்டியடிப்போம்!

  • காசிருந்தால்தான் கல்வி!
    காசிருந்தால்தான் மருத்துவம்!
    காசுக்குத்தான் தண்ணீர்!
    காசுக்குத்தான்சாலை!
    காசுக்குத்தான் கக்கூசு!
  • எல்லாவற்றையும்
    காசாக்குவது அரசின் உரிமையாம்!
    இதை ஒப்புக்கொண்டு
    ஓட்டுப்போடுவது மக்களின் கடமையாம்!
    போங்கடா… நீங்களும்
    உங்க ஜனநாயகமும்!
  • சைகோ, டூப்டன், சாதிதாசு
    மூணும் பஸ் ஸ்டாண்டு கக்கூசு!
    கொள்கையெல்லாம் தமாசு
    மூணும் மோடிக்கு பெர்முடாசு!
  • ஜெயாவும் கருணாநிதியும் வர்றாங்க
    சொம்பெடுத்து உள்ளே வை!
    காவிவெறியர்களும் சாதிவெறியர்களும் வர்றாங்க
    கம்பெடுத்து வெளியில் வை!
  • பெரியார் மண்ணை மோடிக்குக் கூட்டிக் கொடுக்கும் எட்டப்பனே வைகோ!
  • போயசு தோட்டத்தில் புல் பிடுங்கிய போலி கம்யூனிஸ்டுகளே!
    நீங்கள் தேர்தலில் நிற்பது எதைப் பிடுங்க?
  • உலகவங்கி, உலக வர்த்தகக் கழகம், ஐ.எம்.எஃப். போடும்
    உத்தரவுக்கு நாய் ஆடினால் என்ன, நரி ஆடினால் என்ன?
    இதற்குத் தேர்தல் ஒரு கேடா?
  • கோக், பெப்சி, பா.ம.க, மிராண்டா…
    காங்கிரசு, பி.ஜே.பி, ம.தி.மு.க, லிம்கா…
    தி.மு.க, அ.தி.மு.க, தெலுங்குதேசம், ஃபாண்டா…
    எல்லாமே ஏகாதிபத்திய பிராண்டுதான்டா!
  • அரசு கொள்கை முடிவின்படி சட்டபூர்வமாகவே
    கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு வழிவகுப்பதுதான்
    தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம்!
    இதற்குப் பாதை வகுத்துக் கொடுக்கும்
    அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு வீசப்படும்
    எலும்புத்துண்டே இலஞ்சஊழல்!
    தனியார்மயத்தையும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தையும்
    ஒழிக்காமல் ஊழல் ஒழிப்பு என்று பேசுவது பித்தலாட்டம்!
  • கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான
    தேர்தலைப் புறக்கணிப்போம்!
  • புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
  • நிலம், தண்ணீர், வேலை வேண்டும்!
    கல்வி, மருத்துவம், சாலை வேண்டும்!
    போராட்டம் வேண்டும்…புரட்சி வேண்டும்!
    ஓட்டுப் போடாதே! புரட்சிசெய்!
  • கோடீசுவரர்கள், கிரிமினல்களின் கூடாரமாய் நாடாளுமன்றம்!
    பன்னாட்டுக் கம்பெனிகளின் பகற்கொள்ளைக்கு கங்காணிகளாய்
    கலெக்டர்கள், அதிகாரிகள்!
    நீதிக்கு விலைபேசும் நீதிபதிகள்!
    நாலும் உதிர்த்துவிட்ட ஊடக விலைமாந்தர்கள்!
    வல்லுறவு – கொலை -வழிப்பறிக்கு வழிகாட்டியாய் போலீசு!
    அரசும் சமூகமும் அழுகி நாறுது!
    அதுக்கு அத்தர் பூசத்தான் தேர்தல் வருகுது!
    போலி ஜனநாயகத்தை அடித்து நொறுக்கு!
    புதிய ஜனநாயகத்தைக் கட்டி எழுப்பு!
  • பன்னாட்டுக் கம்பெனிகள், அம்பானி – டாடா போன்ற
    தரகு அதிகார வர்க்க முதலாளிகளின்
    சொத்துக்களைப் பறிமுதல் செய்து
    அரசுடைமையாக்குவோம்!
  • பகற்கொள்ளையடித்த
    ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் சொத்துக்களைப்
    பறித்தெடுத்து அரசுடைமையாக்குவோம்!
  • கல்வி, மருத்துவம், தண்ணீர், போக்குவரத்து, தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட
    அனைத்து சேவைத்துறைகளிலும்
    தனியார்மயத்தை ஒழித்து பொது உடைமையாக்குவோம்!
  • வளர்ச்சி எனும் பெயரில்
    நீர், நிலம், காற்று உள்ளிட்ட
    சுற்றுச்சூழலைச் சூறையாடி நஞ்சாக்கும்
    முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டுவோம்!
  • தரகு அதிகாரவர்க்க முதலாளிகள், நிலமுதலைகள்,
    கல்வி,  மருத்துவ, ரியல் எஸ்டேட், தண்ணீர்க் கொள்ளையர் கூட்டத்தின்
    சொத்துரிமை, வாக்குரிமையைப் பறிப்போம்!
  • உழைப்போர்க்கு மட்டுமே வாக்குரிமை வழங்கும்
    மக்கள் அதிகாரத்தைப் படைப்போம்!
  • அதிகாரவர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறைகளின்
    அதிகாரத்தைப் பறித்தெடுப்போம்!
  • தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளின் அதிகாரத்தின் கீழ்
    அவர்களைக் கொண்டு வருவோம்!
  • சட்டம் இயற்றவும் அதனை அமல்படுத்தவும் அதிகாரம்
    தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளுக்கே!
    தவறிழைக்கும் மக்கள் பிரதிநிதிகளின் பதவியைப் பறிக்கவும்,
    தண்டிக்கவும்  அதிகாரம் வாக்களித்த மக்களுக்கே!

இவண்

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
தமிழ்நாடு

தொடர்புக்கு

அ.முகுந்தன்,
110, இரண்டாம்தளம்,
மாநகராட்சி வணிக வளாகம்,
63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600024.

அலைபேசி: 94448 34519

ஓட்டுப் போட்ட அப்பன் காலி, நீ போட்டா வம்சமே காலி

4

வா தல ! புறக்கணி தேர்தல!

நாம ரூட் அடிச்சா
தப்பாம் தல!
இவங்க ஓட்டடிக்கத்தான் –
தேர்தலே!

போராடும் மாணவர்கள்
போராடும் மாணவர்கள் (கோப்புப் படம்)

செட்டு சேர்ந்து
வெட்டு குத்து
நம்மில் சிலர் தப்புதான்,
செட்டு செட்டா
ரவுடி வர்றான்
கேட்டா நாடாளுமன்ற தேர்தலாம்!

கம்பிக்கு பின்னால
இருக்குறவனெல்லாம்
எம்.பி. எம்பி குதிக்குறான்,
தம்பி எனக்கொரு ஓட்டுண்ணு
நம்மையும்
ரவுடி லிஸ்ட்டுல சேர்க்குறான்.

புட் போர்டு
நீயும் நானும் அடிச்சா தப்பு,
அதையே
அம்மா வண்டியில அடிச்சா
பாதுகாப்பு!

படிக்கிற வயசுல
அரசியல் கூடாதுன்னு
நம்பள,
அமைப்பா சேரவிடாமல்
தடுக்குறான்,
இளைஞர்கள் ஓட்டு
எங்க கட்சிக்கேன்னு
எல்லா மொக்கையும்
பேஃஸ்புக்குல சொடுக்குறான்!

போராடும் மாணவர்கள்
போராடும் மாணவர்கள் (கோப்புப் படம்)

லட்சம் லட்சமா
பணத்தை வாங்கிட்டுத்தான்
கல்லூரி சீட்டே
கொடுக்குறான்,
இவன் லட்சியமே
இளைஞர்களை வாழ வைப்பதுன்னு
மச்சான்!
என்னமா ஊத்துறான்!

கல்லூரி விடுதிக்கு
ஒரு கக்கூசு கேட்டா
‘மாமாவ’ விட்டு அடிக்கிறான்,
நாம ஓட்டு போட்டா
நாட்டையே வல்லரசாக்குவேன்னு
மைக்கு வழியா
கழியுறான்!

பஸ் பாஸ் இல்லை
கல்ச்சுரல்ஸ் இல்லை
பட்டியில் ஆடாய்
அடைக்கிறான்,
இதுக்கு எந்தக் கட்சியும்
எட்டிப் பார்க்கல
இப்ப ஓட்டுக்கு வந்து
அரிக்கிறான்!

கல்வி, வேலைவாய்ப்பில்
இடஒதுக்கீட்டை எதிர்க்கிறான்,
இந்து, இந்துன்னு
ஒண்ணாயிருக்கும் மாணவர்கிட்ட
பார்ப்பன வெறியை பரப்புறான்!

நம்ம இளவரசன் – திவ்யா
காதலிச்சா
சாதியைச் சொல்லி எரிக்கிறான்!

இந்த கேடிங்க எல்லாம்
ஒண்ணா சேர்ந்து
மோடி வளர்ச்சியின் நாயகன்னு
மூலைக்கு மூலை திரியுறான்,
மச்சான்! உஷாரு
கூட்டத்தில் பாக்கெட் அடிக்கிறான்!

போராடும் மாணவர்கள்
போராடும் மாணவர்கள் (கோப்புப் படம்)

கேம்பஸ் இண்டர்வியூன்னு
அடிமாட்டு விலைக்கு
மாணவர்களை
மாட்டுச்சந்தையா மடக்குறான்,

ஃபோர்டும், ஹீண்டாயும்
போட்டு பிழியுறான்,
உரிமை கேட்டு
சங்கம் வைத்தால்
உள்ளூர் கட்சிக்கும்பலும்
சேர்ந்து தடுக்குறான்,
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புன்னு
நம்ம தோலை உரிக்கவே
தேர்தல் நாளை பாக்குறான்!

இந்தியாவை முன்னேற்றுவோம்னு
இளைஞர்கள்கிட்ட,
ஓட்டை கேக்குறான்,
எவன் வந்தாலும்
அமெரிக்காவுக்கு வேலை பார்க்க
ஐ.டி. அவுட் சோர்சிங்னு
நம்பள ராக்கோழியா அறுக்குறான்,

படிக்காதவன் பெட்டிக்கடை வச்சா
அதிலும்
பன்னாட்டு கம்பெனியை விட்டு
கருக்குறான்!

ஓட்டு வாங்குனவன்
உலகப் பணக்காரன் லிஸ்டில்,
ஓட்டு போட்டவன்
உள்ளூர் கடன்காரன் லிஸ்டில்,
இந்த ஓட்ட தூக்கி
போடு மச்சான் வேஸ்ட்டில்!

போராடும் மாணவர்கள்
போராடும் மாணவர்கள் (கோப்புப் படம்)

தல!
நாம பழைய கடனை
அடைக்க முடியாமல்
பரிதவிக்கிறோம் ரோட்டில்,
நம்பள
புதிய தலைமுறை வாக்காளரா
புடிச்சுப்போட
பொறி வைக்கிறான் ஓட்டில்,

என்னதான் நடக்குது நாட்டில்?

விவசாயமின்றி விரட்டப்படும் இளைஞன்
திருப்பூர் எக்ஸ்போர்ட்டில் கிழியுறான்,

சிறுதொழில், நெசவின்றி
விரட்டப்படும் இளைஞன்
போய் கல் குவாரியில் உடைகிறான்,

வைகை மண்ணை இழந்த இளைஞன்
போய் ஆந்திரா முறுக்கில் நெளிகிறான்,
வாலிபத்தை இழந்த இளைஞன்
போய் மலேசியாவில் ஒழிகிறான்,

வடக்கிருந்து வரும்
இளைஞனின் ரத்தம்
மேம்பாலம், கட்டிட பூச்சில்
உறையுது!

நாடு முழுக்க நாடோடியாகி
இளைஞனின் கண்களில்
இந்தியா இருண்டு மறையுது!

பீட்சா, பர்கர்
எவனோ திங்க
நம்ம தலைங்க உயிர்
பாஸ்ட்புட் பைக்கில் பறக்குது,

கூரியர், மார்க்கெட்டிங்,
பெட்ரோல் பங்க், கூலிக்கு லோடு தூக்கி
நம்ம
‘கேரியரே’ நிச்சயமில்லாமல் தவிக்குது!

பிடிச்ச லவ்வரு
பிடிச்ச வேலை
பிடிச்ச சம்பளம்
உரிய மரியாதை
இப்படி எதுவுமே கிடைக்காமல்
வாழ்க்கையே தெருவில் கிடக்குது!

ஒரு வாக்கை மட்டும்
போடுவது கடமையின்னு
தேர்தல் வந்து மடக்குது!

வாக்களிப்பு எந்திரம்
புறக்கணி தேர்தல! அப்புறம் மொத்த பொத்தானும் உன் காலுல!

போட்ட ஓட்டுக்கு
நம்ப அப்பன் காலி,
இனியும் போட்டோம்னா
நம்ப வம்சமே காலி!

ஓட்டுப் போட்டாலே
ஒட்டிக் கொள்ளும்
எய்ட்ஸ் ஜனநாயகத்துக்கு
நாமளா ஆளு?

என்ன இருந்தாலும்
அந்தப் பொத்தானை
ஒரே ஒரு முறை
அழுத்திப் பார்க்க ஆசையாயிருந்தால்,
வா தல!
புறக்கணி தேர்தல!
அப்புறம்
மொத்த பொத்தானும் உன் காலுல!

– துரை.சண்முகம்

சிதம்பரத்தில் தேர்வு எழுத அனுமதி மறுப்பு – போராட்டத்தால் முறியடிப்பு

3

kamaraj-school-protest-2சிதம்பரம் காமராஜ் மெட்ரிக்பள்ளி தாளாளரின் நடவடிக்கை காவல் துறையின் அடக்குமுறையை காட்டிலும் கொடூரமானது என்பதை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்து. தனியார் பள்ளி முதலாளிகள் தங்கள் லாபத்திற்காக எதையும் செய்வார்கள் என்பதற்கு சிறு உதாரணம்தான் காமராஜ் பள்ளி. கல்வி சேவை என்பதெல்லாம் டாஸ்மாக் சரக்குக்கு கொடுக்கும் இலவச ஊறுகாய் போன்றது.

8-4-14 அன்று நடந்த பொதுத் தேர்வில் சுமார் 650 மாணவர்களை தேர்வு எழுதாமல் தடுத்ததுடன் விளையாட்டு அரங்கில் அவர்களை தனியே அமர வைத்துள்ளனர். காரணம் என்ன? இவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக கட்டவில்லை என்பதுதான். இதற்காக நாம் கடந்த இரு வருடங்களாக போராடி வருகிறோம். பல்வேறு பெற்றோர்களும் இப்போராட்டத்தை ஆதரிப்பதால் இந்த தனியார் பள்ளி கொலை வெறியில் உள்ளது. தாளாளர் லட்சுமிகாந்தன், முதல்வர் சக்தி மேடம் ஆகியோர் “உயர்த்தப்பட்ட கூடுதல் கட்டணம் செலுத்தவில்லை எனவே அனுமதிக்க முடியாது” என திட்டவட்டமாக பெற்றோர்களிடம் தெரிவித்தனர். தனியே அமர வைக்கப்பட்ட மாணவர்களை சந்திக்கவும் அனுமதிக்கவில்லை.

200-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் தலைமையில் பள்ளி வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். காலை 10-மணிக்கு தொடங்கி போராட்டம் இரவு 9-00 மணிக்கு முடிந்தது. பெற்றோர்கள் இட்ட முழக்கம் பொது மக்களையும் ஏனைய பெற்றோர்களை திரும்பி பார்க்க வைத்தது.

பள்ளிக்கு இரவு வந்த மாவட்ட முதன்மை கல்விதுறை அதிகாரி பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பிறகு ”இன்று நடந்த தேர்வை மீண்டும் நடத்த வேண்டும். இன்று மாணவர்கள் பொது தேர்வு எழுத விட மறுத்ததற்கு பள்ளி நிர்வாகம் உரிய விளக்கத்தை 24 மணி நேரத்திற்குள் மெட்ரிக் இயக்கநருக்கு தெரிவிக்க வேணடும்” என அங்கேயே பள்ளி நிர்வாகத்திடம் உத்திரவை வழங்கியதுடன் நமது சங்கத்தினருக்கும் நகல் வழங்கினார். அதன்பிறகுதான் பள்ளியிலிருந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

பள்ளியில் போராட்டம் தொடங்கியவுடன் சிதம்பரம் காவல் ஆய்வாளர் முருகானந்தம் காவலர்களுடன் வந்தார். போராட்டம் நடத்திய பெற்றோர்களை பள்ளி வளாகத்திலிருந்து போக சொன்னார். “8-ம் வகுப்பு வரை அனைவரையும் கட்டாயம் பாஸ் போட்டு விடுவார்கள் கவலை வேண்டாம் குழந்தைகளை அழைத்து வீட்டுக்கு போங்கள்” என அறிவுரை சொன்னார். காவல் துறை அதிகாரி இவ்வளவு கேனத்தனமாக பேசுகிறாரே என்று பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள் ஏளனமாக பார்த்தனர்.

டி.எஸ்.பி.ராஜாராம் வந்தார். “பெற்றோர்கள் அனைவரும் கலைந்து செல்லுங்கள், நான் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமளவிற்கு தாளாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கிறேன்” என பேசினார். மேலும், “பள்ளி தாளாளர் கூடுதல் கட்டணம் வசூலிக்க நீதியரசர் சிங்காரவேலு கட்டண கமிட்டியிடம் உத்திரவு பெற்றுள்ளார். நீங்கள் பள்ளி வளாகத்திலிருந்து கலைந்து செல்லுங்கள், துணை ஆட்சியர் அவர்களிடம் சென்று முறையிடுங்கள்” என நயவஞ்சகமாக அறிவுரை சொன்னார். பெற்றோர்கள், “எங்கள் வழக்கறிஞர் சொல்லாமல் நாங்கள் கலைய மாட்டோம்,எங்களை வேண்டுமானால் கைது செய்து கொள்ளுங்கள்” என பதிலளித்தனர்.

kamaraj-school-protest-1மனித உரிமை பாதுகாப்பு மைய மா.துணை செயலாளர் வழக்கறிஞர் செந்தில் காவல் துறையினரிடம் பேசினார்.  “நீங்கள் எப்படி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வீர்கள்? உங்கள் அதிகாரம் என்ன என்று உங்களுக்கும் எங்களுக்கும் நன்றாக தெரியும். சட்டம் ஒழுங்கு ஏற்படாமல் தடுப்பதே உங்கள் வேலை.பெற்றோர்கள் கல்வி துறை அதிகாரிகள் வந்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை இங்கிருந்து கலைய மாட்டார்கள். மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுத்தது சரிதான் என கல்வி துறையினர் எழுதி கொடுக்கட்டும். நாங்கள் செல்கிறோம். அதுவரை காவல் துறை பாதுகாப்பு கொடுத்தால் மட்டும் போதுமானது. பெற்றோர்களை தாக்கியதற்கு தாளாளர் மீது நடவடிக்கை எடுக்காத நீங்களா இதற்கு நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள். தாளாளர் லட்சுமி காந்தன் உங்களை எல்லாம் மதிக்க மாட்டார்” என பேசினார். காவல் துறை அதிகாரிகள், “பழைய பிரச்சினை பற்றி பேசவேண்டாம். இன்றைய பிரச்சினை பற்றி மட்டும் பேசுங்கள்” என பதில் கூறிய திருப்தியில் அமைதியாக சென்றனர்.

தாசில்தார் வந்தார். டி.இ.ஓ வந்தார். பள்ளி நிர்வாகத்திடம் பேசினார்கள். துணை ஆட்சியர் அரவிந்தன் போனில் பேசினார். பள்ளி தாளாளர், “எனக்கு சிங்காரவேலு கமிட்டி பணம் கூட வாங்கி கொள்ளலாம் என உத்திரவு கொடுத்துள்ளது. பணம் கட்டாத யாரையும் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது” என அனைவருக்கும் ஒரே பதிலை சொன்னார்.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்சங்கம், “தீர்வு ஏற்படும் வரை பள்ளி வளாகத்திலிருந்து வெளியேற முடியாது” என தெரிவித்து உறுதியாக இருந்தனர். வேறு வழியில்லாமல் கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.இ.ஓ.மற்றம் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அவர்களை மாலையில் அனுப்பி வைத்தார். கல்வி துறை அதிகாரிகள் பெற்றோர்களிடம், பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்து உண்மையை உறுதிசெய்து உத்திரவு வழங்கினர்.

இந்த போராட்டத்தில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் முஜுபூர் ரகமான், பொருளாளர் சீனிவாசன் ஆகியோரும்  ரவிசந்திரன், ராம்குமார்,  பேராசிரியர்.இளங்கோ, வேல்முருகன், நடராசன், ஜோதி, சோழன், அன்வர்தீன், ரகீம் பாய், உட்பட நூற்றுக்கணக்கான  பெற்றோர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். லலிதா,ரூபா,மசூதா   மற்றும்  இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

காமராஜ் பள்ளியின் கட்டண முறையின் பின்னணியை புரிந்து கொள்வதற்கு சில குறிப்புகளை தருகிறோம். ஸ்மார்ட் கிளாஸ் என்ற பெயரில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட பெற்றோர்களிடம் பல மடங்கு வசூலித்த காமராஜ் பள்ளி நிர்வாகம் 2013-2014 ஆண்டுக்கான கல்வி கட்டணம் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டதுடன் பெற்றோர்கள் டி.டியாக அல்லது காசோலையாக அல்லது பணமாக எப்படி கொடுத்தாலும் வாங்கி கொள்கிறோம் என அறிவித்தது. இந்த நிலைக்கு காமராஜ் பள்ளி தாளாளர் வருவதற்கு மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் உறுதியான போராட்டம்தான் காரணம்.

ஆனால் பள்ளி தாளாளர் கூடுதல் கட்டணத்தையே அரசு கட்டணமாக வாங்கி கொண்டு வந்து விட்டார். இந்த கல்வி ஆண்டின் இறுதியில் ஜனவரி மாதம் பள்ளி தாளாளர் லட்சுமி காந்தன் பெற்றோர்களுக்கு அறிவிப்பு அனுப்பினார். “நீதியரசர் சிங்காரவேலு அவர்களிடம் கல்வி கட்டணம் போதவில்லை என்று முறையீடு செய்து அதில் 100 சதவீதம் உயர்த்தி கொடுத்துள்ளார். எனவே பெற்றோர்கள் உடனே பாக்கி தொகையை கட்டவேண்டும் இல்லை என்றால் மாணவர்கள் பெயரை வருகை பதிவேட்டிலிருந்து நீக்கிவிடுவேன்” என எச்சரிக்கை நோட்டிஸ் அனுப்பினார். உயர்த்தப்பட்ட கட்டண உத்திரவை அறிவிப்பு பலகையில் போடவில்லை. பெற்றோர்களுக்கும் காட்டவில்லை. “உயர்நீதிமன்ற உத்திரவின்படி 15 சதவீதம் உயர்த்தி வாங்கிய பிறகு மீண்டும் இவ்வளவு உயர்வாக கல்வி கட்டணத்தை செலுத்த முடியாது. கட்டண நிர்ணயத்தில் முறைகேடு நடந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பள்ளி பெற்றோர்களின் கருத்தை அறிந்து நியாயமான அளவில் நிர்ணயிக்க படவேண்டும். 100 சதவீத கல்வி கட்டண உயர்வை ஏற்கமுடியாது” என பெற்றோர்கள் மறுத்தனர்.

“நேர்மையான திறமையான கல்வி துறை அதிகாரிகளை வைத்து விசாரணை நடத்திய பிறகே நாங்கள் உயர்த்தபட்ட கட்டணத்தை ஏற்பதா? என்பதை முடிவு செய்ய முடியும்” என பெற்றோர்கள் அனைத்து கல்வித் துறை அதிகாரிகளுக்கும் புகார்மனு அனுப்பியுள்ளனர். வழக்கம் போல் கல்வித் துறை எருமைமாட்டு மேல் தண்ணி தெளிச்சது போல் அமைதியாக இருக்கும், இருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளோம். புகார் மனு, வழக்கு, அதிகாரிகள் நடவடிக்கை வேண்டுமென்றால் பெற்றோர்கள் சமரசமின்றி கல்வி தனியார்மயத்திற்கு எதிராக போராடினால் மட்டுமே வெற்றிபெற முடியும். கல்விக் கட்டணம் குறைப்பு என சலுகை கேட்டு போராடினால் பெற்றோர்கள் அவமானபட வேண்டும் என்பதுதான் அனுபவம், வரலாறு.

தலைமை கல்வி அலுவலர் உத்தரவு
முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஏப்ரல் 10-ம் தேதி விசாரணைக்கு வந்தது. கமிட்டி உத்தரவு இல்லாமல் கட்டண நிர்ணயத்தை கேள்விகேட்க முடியாது என்றும் வழக்கை தள்ளுப்படி செய்யப் போவதாகவும் கூறியபோது,

  • கமிட்டி பெற்றோர் மாணவா் சங்கத்தை கலந்தாலோசிக்காமல் கட்டணம் நிர்ணயித்ததால் அதன் உத்தரவு நகல் எங்களுக்கு கிடைக்க வில்லை என்றும்,
  • 650 மாணவர்கள் தெருவில் நிற்கிறார்கள், இடைக்காலமாக தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும்,
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21-ன் கீழ் 14 வயது வரை கல்வி அளிப்பது அரசின் கடமை என்றும்
  • மேலும் கல்வி உரிமைச் சட்டம் பிரிவு 16 எக்காரணம் கொண்டும் 14 வயது வரை பள்ளியில் இருந்து நீக்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளதை எடுத்துக்கூறியும்,
  • அரசியலமைப்புச் சட்டத்தையும், கல்விக்கான சிறப்புச் சட்டத்தையும் நீதிமன்றமே அமுல்படுத்த தயாராக இல்லாத நீதிமன்றம் எதற்காக இருக்கிறது

என்று கேள்வி எழுப்பிய பிறகு வாய்மொழியாக முதன்மை கல்வி அலுவலா் உத்தரவை உடனடியாக நடைமுறை படுத்த உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம்
சிதம்பரம்.

வளர்ச்சியை கொண்டு வருவோம், அனைவருக்கும் கல்வியை கொடுப்போம் என அனைத்து ஓட்டுக் கட்சிகளும் வாய் கிழிய இந்த தேர்தல் பரப்புரையில் கத்தி வருகின்றன. ஆனால் இந்த வளர்ச்சி முதலாளிகளுக்கானது, கல்வி காசு உள்ளவனுக்கு மட்டுமே என்பதை இந்த பள்ளி நிரூபித்துள்ளது. ஆனால் மக்கள் போராட்டமே தீர்வு,தேர்தல் அரசியல் அல்ல என்பதை இந்த போராட்டம் நிரூபித்துள்ளது. கல்வி உரிமை வேண்டுவோர் போராட வேண்டிய பாதை இதுதான்.

– வினவு

ஒரு வரிச் செய்திகளில் பாஜக தேர்தல் அறிக்கை

50

செய்தி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் அரசியலமைப்பு சட்ட வரையறைக்கு உள்பட்டு ராமர் கோயில் கட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நீதி: அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பதை மறுத்தால் வரலாற்றுத் துறை ஒழிக்கப்படுவது வரலாறாயிருக்கும். பாபர் மசூதியை இடிப்பதற்கு சட்டபூர்வமாகவே அனுமதிக்கவில்லை என்பதாலேயே அரசு நிர்வாகம் கரசேவகர்களால் முடக்கப்பட்டது. இதற்கு மேல் ராமர் கோவில் கட்டுவதை மறுத்து விடுவதற்கு அரசியலமைப்பு சட்டம் என்ன அடிமுட்டாளா? ஓம் கடப்பாறை கரசேவை ஷாந்தி!
_________

பா.ஜ.க தேர்தல் அறிக்கைசெய்தி: அரசியலமைப்பு சட்டத்தின் 44-வது பிரிவில், பொது சிவில் சட்டம் அரசின் முக்கியக் கொள்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் பாஜக ஆட்சிக்கு வந்ததும், பொது சிவில் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதி: அப்போது பொதுசிவில் சட்டப்படி அக்ரகாரங்களில் மட்டுமே அரசு அலுவலகங்கள் இருக்கும். வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டு வருண தர்ம ஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்படும். கிறித்தவ சீரழிவான விவாகரத்து ஒழிக்கப்பட்டு, கல்லானாலும் கணவன், ஃபுல்லானாலும் புருஷன் எனும் இல்லற நீதி வல்லறமாக நிலை நிறுத்தப்படும். பெண்களுக்கு சம சொத்துரிமை எனும் இசுலாமிய சீரழிவு அகற்றப்பட்டு பாரதப் பண்பாட்டின் படி அடுப்பங்கரையிலேயே மாதர் தம் வாழ்க்கை முடிய வேண்டும் என்பது நிலைநாட்டப்படும். ஓம் முசல்மான் – கிறித்தவ – ஒழிப்பு ஷாந்தி!
________

செய்தி: ராமர் சேது பாலம் நமது நாட்டின் கலாசார பாரம்பரிய சின்னமாகும். மேலும் தோரியம் அதிக அளவு கிடைக்கும் பகுதியாக அப்பகுதி திகழ்கிறது. இவற்றை கருத்தில் கொண்டு  சேது சமுத்திர திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்.

நீதி: தசரதனது அறுபதினாயிரம் மனைவியர் வாழ்ந்த வடக்கு உபி மாநிலத்தில் மக்களை வெளியேற்றி, கிருஷ்ணன் கோபியர் உடைகளை ஒளித்த நதியில் நீரெடுக்கும் விவசாயிகளை தடை செய்து, பீமன் புசித்த காய், கனி, கிழங்குகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டு, இந்திரன் கள்ள உறவு கொண்ட ரிஷி பத்தினிகள் வசித்த காடுகளில் இருக்கும் விலங்குகளை கொன்று, புராணங்களில் வரும் அனைத்து பாரம்பரிய சின்னங்களும் எச்சரிக்கையாக பாதுகாக்கப்படும். ஓம் புண்ணிய ஷேத்ர மாத்ரு பூமி ஷாந்தி!
_________

செய்தி: ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்துள்ள அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை நீக்குவது குறித்து அனைத்து தரப்பினருடன் ஆலோசனை நடத்தப்படும். காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட்டுகள் முழு மரியாதை மற்றும் பாதுகாப்புடன் அவர்களின் பூர்விக இடத்தில் குடியமர்த்தப்படுவார்கள்.

நீதி: ஆர்.எஸ்.எஸ் குடும்பத்தின் அனைத்து பரிவாரங்களோடும் கலந்து பேசி, காஷ்மீர் விடுதலைக் கட்சிகளை இராணுவத்தின் துணை கொண்டு ஒடுக்கி ஜனநாயக முறைப்படி 370-வது பிரிவை ரத்து செய்வோம். பண்டிட்டுகள் கௌரவத்துடன் குடியேற்றப்படும் நாளில் ‘காணாமல் போன’ காஷ்மீர் மக்களின் பட்டியல்கள், புகார்கள், விசாரணைகள் அடங்கிய ஆவணங்கள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டு, காஷ்மீரில் அமைதி நிலைநாட்டப்படும். ஓம் காஷ்மீர் ஸ்வாஹா!
________

செய்தி: 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில், நாடு நிர்வாகச் சீர்கேடுகளாலும், ஊழல்களாலும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வேலையின்மை அதிகரித்து விட்டது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த நிலை மாற்றியமைக்கப்படும்.

நீதி: அந்த நிலை மாற்றம் இப்படித்தான். நாங்கள் ஆட்சிக்கு வரும் போது ஊழல்கள், நிர்வாக சீர்கேடுகள் வெளியே தெரியாத வண்ணம் இரகசியம் பேணப்பட்டு, ஊடகங்களும் கவனிக்கப்பட்டு ‘வளர்ச்சியை’ உறுதி செய்வோம். வேலையின்மையை போக்காவிட்டாலும் வேலையற்ற இளைஞர்களை அமைதிப்படுத்தும் வண்ணம் ஒவ்வொரு நகரத்திலும் கதாகலேட்சேபம், உபந்நியாசம், ஆன்மீக உரைகள், முதலியவை ஜக்கி, நித்தி, ஆஸ்ரம் பாபு, ஜயேந்திரர், மதுரை ஆதீனம், ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர் முதலான ஆன்றோர்களை கொண்டு நடத்தப்படும். ஓம் ஸ்வாமிஜி காயகல்பம் ஷாந்தி!
___________

மோடி - ஆர்.எஸ்.எஸ்
“தேர்தல் வந்தாச்சு.. வழக்கம் போல இத எடுத்துக் கிட்டுப் போய் வேலைய காட்டு”

செய்தி: நாட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்கப்படும். நிர்வாகம், காவல்துறை, தேர்தல் துறைகளில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.

நீதி: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் தேவர்களுக்கு அம்மா வழியில் கட்டற்ற அதிகாரம் வழங்கப்படுவதன் மூலம் மூலதன கோமான்களுக்கு சுபீட்சத்தையும், புகார் கொடுத்தாலே பரலோகம் எனும் சாஸ்வத யதார்த்தம் மூலமாக நாட்டு மக்கள் குறைபட்டுக் கொள்ளாத சூழலையும் உருவாக்கி ந(வ)ல்லாட்சி வழங்குவோம். ஓம் கடாயுதம் ஷாந்தி!
________

செய்தி: வெளிநாட்டு முதலீடுகள் வரவேற்கப்படும். அதேசமயம் சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு தடை விதிக்கப்படும்.

நீதி: பாரத மாதாவை பிளாட்டு போட்டும், ரூட்டு போட்டும் சம்ஹாரம் செய்ய அந்நிய முதலீடுகள் வரவேற்கப்படும். சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு தடை என்பது மறைமுக அன்னிய முதலீட்டுக்கு அனுமதி என்று புரிந்து கொள்க. ஓம் அமெரிக்க பகவான் ஷாந்தி.
_________

செய்தி: வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக சிறப்பு நடவடிக்கைக் குழு ஏற்படுத்தப்படும்.

நீதி: வெளிநாட்டு இந்தியர்களின் கருப்பு பணத்தை யாராவது அனாமதேயங்கள் அடித்துக் கொண்டு போவதை தடுக்கும் வண்ணம், எவரும் அறியாத படி பாதுகாப்பாக வேறு இடங்களில் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். இதற்கான லட்சுமி கடாட்ச நடவடிக்கை குழு, நிதீன் கட்காரிஜி, எடியூரப்பாஜி, ரெட்டி சகோதரர்கள்ஜி பங்கேற்புடன் அமைக்கப்படும். ஓம் ஸ்விஸ் வங்கி நமஹா!
_________

செய்தி: பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்தியாவசியப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கு தனி நிதியம் ஏற்படுத்தப்படும்.

நீதி: பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வங்கி மற்றும் இதர அரசு வங்கிகளில் மாதந்தோறும் லட்சுமி கடாட்ச நிதி ஸ்தல ஜீவாமிருத யாகம் தலா ஐந்து கோடி செலவில் நடத்தப்படும். விலைவாசியைக் கட்டுப்படுத்த அன்னதானம், துணிதானம், காய்தானம், அரிசி தானம், கோதுமை தானம், பருப்பு தானம், எண்ணெய் தானம் செய்ய கார்ப்பரேட் நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்படும். அதற்கான செலவை அரசே கொடுக்கும். ஓம் மக்கள் காசில் பிச்சா தர்மம் ஸ்வாஹா!
_________

செய்தி: வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்தியா – வங்கதேசம், இந்தியா – மியான்மர் எல்லைப் பகுதிகளில் கிடப்பில் போடப்பட்டுள்ள தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் நிறைவேற்றி முடிக்கப்படும்.

நீதி: வடகிழக்கு மாநிலங்கள் பாதுகாப்புடன் வளர இப்போது இருக்கும் இராணுவப் படைகள் இருமடங்காக்கப்படும். இராணுவச் சட்டங்களின் விதிமுறைகள் மூன்று மடங்காக அதிகரிக்கப்படும். தடுப்பு வேலிக்கு தரமான கம்பிகள் வாங்குவதற்கான தர கட்டுப்பாடு நான்கு மடங்கு அதிகரிக்கப்படும். ஓம் நார்த் ஈஸ்ட் குளோஸ் பண்ணு ஷாந்தி!
_________

செய்தி: பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இணையதளம் மூலம் நிர்வாக நடவடிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் வரி விதிப்பில் எளிய முறையை பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் ஊழலுக்கு முடிவு கட்டப்படும்.

நீதி: விழிப்புணர்வு – லஞ்சம் கொடுத்தும் வேலை நடக்கவில்லையா என்ற எச்சரிக்கை, இணைய தள நிர்வாக நடவடிக்கை – லஞ்சத்திற்கு பேரம் பேசாமல் ஒரே ரேட்டில் நெட்டில் மாற்றிக் கொள்ளும் வசதி, வரி விதிப்பில் எளிய முறை – காசு இல்லாதவனுக்கு அதிக வரி, இருக்கிறவனுக்கு கம்மி வரி போட்டால் பணக்காரர்கள் தலையை பிய்த்துக் கொண்டு வரி ஏய்ப்பில் ஈடுபடாமலும், ஏழைகள் தலையெழுத்தே என நொந்து கொண்டு வரி கட்டியும் வருவார்கள் – ஓம் கரப்ஷன் கன்வர்ஷன் ஷாந்தி!
__________

பார்ப்பன பாசிஸ்ட் மோடி
பார்ப்பன பாசிஸ்ட் மோடி

செய்தி: அண்டை நாடுகளுடனான நட்புறவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதுடன், அதேசமயம் அச்சுறுத்தும் வகையில் அந்நாடுகளின் நடவடிக்கைகள் இருந்தால், அதற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதி: முதலாளிகளின் நலனை முன்னிட்டு அண்டை நாடுகளோடு நடக்கும் ஏற்றுமதி இறக்குமதியில் நட்புறவு இருக்கும். கட்சி நலனை முன்னிட்டு அண்டை நாடுகளோடு சிண்டு முடியும் நோக்கத்தில் அறிக்கைகளில் மட்டும் ஆவேசம் காட்டப்படும். போர் வந்தால் பாகிஸ்தான் அணுகுண்டு வீசும் என்பதால், மோடியின் அமைச்சரவை மட்டும் அமெரிக்காவிற்கு தப்பி செல்ல கடலுக்கடியில் புல்லட்டின் சுரங்க ரயில் பாதை அமைக்கப்படும். ஓம் தேசபக்தாய சவடால் ஷாந்தி!
________

செய்தி: தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் கூட்டணி அரசால் ரத்து செய்யப்பட்ட தீவிரவாதத்துக்கு எதிரான சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். தீவிரவாதம் தொடர்பான வழக்குகள் மீது நேர்மையான மற்றும் துரிதமான விசாரணை நடத்தப்படும். அரசியல் தலையீடு இன்றி புலனாய்வு அமைப்புகள் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நீதி: அசீமானந்தா மூலம் தியாகத்துடன் ஆர்.எஸ்.எஸ் செய்து வந்த பணிகள் இனி தேவையில்லை என்பதை அரசு மேற்கொள்ளும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் நிரூபிக்கும். பொடா, தடாவை விஞ்சும் கடுமையான சட்டங்கள் சடுதியில் வரும். அதன்படி குல்லா, தாடி, கைலிகள் கூட தீவிரவாதிகளை கொல்வதற்கு போதுமான ஆதரங்களாக இருக்கும். அமீத் ஷா தலைமையில் தீவிரவாதம் தொடர்பான வழக்குகள் நடக்கும் என்பதால் ஹமாம் நேர்மையை விஞ்சும் அமீத் நேர்மையோடு அரிசி, கோதுமை தலையீடு எதுவும் இருக்காது. ஓம் சிறுபான்மை இனி இல்லை ஸ்வாஹா!
__________

செய்தி: நாட்டின் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி அமைப்பான டி.ஆர்.டி.ஒ. வலுப்படுத்தப்படுவதுடன், பாதுகாப்புத் துறைகளில் குறிப்பிட்ட சில தயாரிப்புகளில் தனியார் மற்றும் நேரடி அன்னிய முதலீடுகள் ஊக்குவிக்கப்படும்.

நீதி: பயில்வான்தான் பஞ்சாயத்து பண்ண முடியும் எனும் ஆர்எஸ்எஸ் நிறுவனம் ஹெட்கேவாரின் பொன்மொழிப்படி பாதுகாப்புத்துறை ஆராய்ச்சிக்கு வரம்பில்லாத நிதி ஒதுக்கப்படும். அந்த நிதி மூலம் பாரத மாதாவை பாதுகாக்கும் பணியினை அமெரிக்க விமானங்களும், ரசிய கப்பல்களும், பிரான்ஸ் துப்பாக்கிகளும், இங்கிலாந்து ஹெலிகாப்டர்களும், இசுரேல் ரேடார்களும் இங்கே தயாரிக்கப்பட அனுமதிக்கப்படும். ஓம் சுதேசி ரக்ஷா விதேசி கரக்ஷா ஷாந்தி!
__________

செய்தி: சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். பொதுமக்களின் பங்களிப்புடன் நாட்டில் உள்ள நதிகளை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், விவசாயப் பகுதிகளுக்கும் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர முன்னுரிமை அளிக்கப்படும்.

நீதி: ஆகாய கங்கை, அண்டர் கிரவுண்ட் சரஸ்வதி போன்ற இகலோக கண்களுக்கு தெரியாத நதிகள் ஓடும் நாட்டில், இருக்கும் நதிகளை மானசீகமாக இணைத்து “ஏகாத்மதா ஸ்தோத்திரம்” பாடுவது மூலம் திட்டம் நிறைவேற்றப்படும். கங்கையில் வீசப்படும் நீத்தார் உடல்களை தின்று சீரணிக்க முதலைகள் தருமாறு முதலாளிகளிடமும், கும்பமேளாவில் அழுக்குடன் வரும் நாகா ஸ்வாமிகளை வாசனை சோப்பு போட்டு குளிக்க வைக்க சோப்பு கம்பெனிகளிடமும், உதவி கோரப்படும். கிராமங்களில் மழை பெய்ய, குளம் நிரம்ப வாயு பகவான் கோவில் அமைத்து வாரந்தோறும் மழை வேண்டி சிவரஞ்சனி ராகம் இசைத்து வேண்டப்படும். ஓம் கங்கா ஸ்னாநம் நாத்தம் போக ஷாந்தி!
_________

செய்தி: அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும். தேசிய சுகாதார காப்பீட்டு திட்டம் உள்பட புதிய தேசிய சுகாதாரக் கொள்கை உருவாக்கப்படும். மருத்துவமனைகள் நவீனபடுத்தப்படும்.

நீதி: புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடக்கும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பு போராட்டம் நாடெங்கும் ஏபிவிபியால் கொண்டு செல்லப்பட்டு இந்துக்களிடையே இருக்கும் ஷாதிய பிரிவினை வாதம் குறைக்கப்படும். காப்பீட்டு திட்டம் மூலம் கார்ப்பரேட் பகவான்களை கவனிக்கும் கொள்கை உருவாக்கப்படும். ஓம் சமூகநீதி லேது ஷாந்தி!
_________

செய்தி: தேசிய கல்வி திட்டம் செயல்படுத்தப்படும். யுஜிஸி அமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்டு, உயர்கல்வி ஆணையமாக மாற்றப்படும்.

நீதி: ஜோசியம், ஜாதகம், நாடி-சோடி-பறவை-எண்-ஜோசியம் முதலான அறிவியல் துறைகள், புராணங்கள் அனைத்தையும் கொண்ட வரலாறு, இந்து மன்னர்களின் பொற்காலம், முசுலீம் மன்னர்களின் இருண்ட காலம், தேவபாஷையின் கீர்த்தி, அனைத்தும் கொண்ட புதிய கல்வித் திட்டம் உருவாக்கப்படும். பாரிவேந்தர் பச்சமுத்துஜி, நீதிவேந்தர் ஏசி சண்முகம்  மேற்பார்வையில் உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்படும். குருகுலங்கள் மீண்டும் கொண்டுவரப்படும். ஓம் கல்வியைக் கொல் ஷாந்தி!
_________

செய்தி: கிராம சபைகள் வலுப்படுத்தப்படும். அதற்கான கொள்கை பொது மக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்படும்.

நீதி: நாடெங்கும் கப் பஞ்சாயத்து கட்டாயமாக்கப்பட்டு, உயர்சாதி மக்களின் கருணையுடன், அரிஜன மக்கள் பணிவுடன் கிராம சபைகள் வலுப்படுத்தப்படும். ஓம் சூத்திர பஞ்சமன் பஞ்சர் ஷாந்தி!
________

செய்தி: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டின் வளர்ச்சியில் சிறுபான்மையினர் உள்பட அனைத்து சமுகத்தினருக்கும் சமவாய்ப்பு அளிக்கப்படும். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறுபான்மையினருக்கு எந்த வேறுபாடுமின்றி வாய்ப்புகள் வழங்கப்படும். முஸ்லிம்களின் பாடசாலைகளாக திகழும் மதரஸாக்கள், கணக்கு மற்றும் அறிவியல் ஆசிரியர்களை கொண்டதாக நவீனப்படுத்தப்படும்.

நீதி: நாட்டின் வளர்ச்சிக்காக சிறைகளில் அதிகம் இருந்து சிறுபான்மை மக்கள் பங்களிப்பு செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். சமவாய்ப்பு என்று சொல்வதால் இட ஒதுக்கீட்டு கேட்டு வரும் இசுலாமிய வாய்கள் பூட்டப்படும். மதரஸாக்கள் தீவிரவாதத்தின் ஊற்றாக இருப்பதால் கல்வியிலும் கண்காணிப்பிலும் தீவிர நடவடிக்கை எடுப்போம். ஓம் முசல்மான் முடக்கிப் போடு ஸ்வாஹா!
_________

செய்தி: நாட்டிற்கு தற்போது ஏற்பட்டுள்ள சவால்களை கருத்தில் கொண்டு, அணுக் கொள்கை திருத்தி அமைக்கப்படும். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாட்டின் பாதுகாப்புக்கு எழும் அச்சுறுத்தல்கள் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது.

நீதி: போர் வந்தால் பாரதமே முதலில் அணுகுண்டு போடும் நாடாக இருக்கும் என்பதை கொள்கையாக அறிவிப்போம். இரண்டாவதாக பாகிஸ்தான் போடுவதற்கு முன் மோடி அமைச்சரவை கடலடி புல்லட்டின் சுரங்க பாதை மூலம் அமெரிக்கா சென்று விடும். ஓம் எல்லாம் ஷாவுங்கடா ஷாந்தி!
________

செய்தி: மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, பாஜகவின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் அக்கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான குழுவினர் ஈடுபட்டிருந்தனர். அந்த அறிக்கையை, மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற திங்கள்கிழமையன்று, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் தில்லியில் வெளியிட்டனர்.

நீதி: முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பேயே அறிக்கை விட்டிருந்தால் கூட்டணிக்கு வரும் கூமுட்டைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டு சிக்கல் வந்திருக்கும். தற்போது கூட்டணிக்கும் பிரச்சினை இல்லை. இந்துமதவெறி பாசிசத்தின் திட்டத்திற்கும் மட்டறுத்தல் இல்லை. ஓம் சாணக்கிய சாதுர்யம் நமஹா!

______________________________

சுருங்கக் கூறின் பாஜக தேர்தல் அறிக்கை பச்சையான பார்ப்பனிய பாசிசத் திட்டத்தை பகிரங்கமாக அறிவிக்கிறது. பன்னாட்டு இந்நாட்டு முதலாளிகளுக்கு நாட்டின் வளங்களையும், தொழிலையும் விரைந்து கொடுப்பது, அதிகார வர்க்கத்தின் காட்டுதர்பாரை சட்டபூர்வமாகவே நிறுவுவது, பிரச்சினைக்குரிய இடங்களில் இராணுவம்- போலீசின் ஆட்சியை ஊக்குவிப்பது, தீவிரவாதத்தின் பெயரில் சிறுபான்மை மக்களை மட்டுமல்ல புரட்சிகர – ஜனநாயக சக்திகளையம், தேசிய இன போராட்டங்களையும் ஒடுக்குவது,  ராமர் கோவிலை கட்டும் வாக்குறுதி, 370ரத்து, ராமர் பாலம் அங்கீகரிப்பு மூலம் இந்து வாக்கு வங்கியை குறிவைப்பது, கூடவே மதக்கலவரம் நடக்காமலேயே பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலைநாட்டுவது, கொடிய அடக்குமுறை சட்டங்களை கொண்டு வருவது என்று பாசிசத்தை முன்வைக்கிறது காவி பயங்கரவாதக் கும்பலின் தேர்தல் அறிக்கை. பார்ப்பன பாசிசத்தை வேரறுக்க, அதன் பாதந்தாங்கிகளை அம்பலப்படுத்த நாமும் தயாராவோம்.

காங்கிரசும் பா.ஜ.க.வும் ஒண்ணு ! வாக்காளர் வாயில மண்ணு !!

2

காங்கிரசின் ஆதரவோடு தில்லியில் அமைந்த ஆம்-ஆத்மி அரசு பதவி விலகிய பின், காங்கிரசும், பா.ஜ.க.வும் ஆட்சியமைக்க உரிமை கோர மறுத்துவிட்ட நிலையில் உச்ச நீதி மன்ற நீதிபதி ஒருவர், “காங்கிரசும் பா.ஜ.க.வும் கூட்டாகச் சேர்ந்துகொண்டு ஆட்சியைக் கவிழ்க்க முடியுமென்றால், இருவரும் ஏன் கூட்டுச் சேர்ந்து ஓர் அரசை அமைக்க முடியாது?” என்றொரு கேள்வியை எழுப்பினார். இக்கேள்வி வெளிப்பார்வைக்கு விசித்திரமானதாக, வியப்பை ஏற்படுத்துவதாகத் தோன்றினாலும், அதனுள்ளே உண்மை பொதிந்தேயிருக்கிறது. கூட்டுச் சேர இயலாத அளவிற்கு அவ்விரு கட்சிகளின் கொள்கை, நடைமுறைகளில் வேறுபாடு உள்ளதா என்ற கோணத்திலிருந்து இந்தக் கேள்வியைப் பரிசீலித்தால், அவ்விரு கட்சிகளும் இயற்கையான கூட்டாளிகள்தான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

ஜஸ்வந்த் சிங்-ஸ்ட்ரோப் டால்போட்
அணு ஆயுத பரிசோதனைத் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் (வலது); அமெரிக்காவின் வெளியுறவுத் துணை அமைச்சர் ஸ்ட்ரோப் டால்போட் (கோப்புப் படம்)

பொருளாதாரச் சீர்திருத்தம்; அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்டு நாடுகளுடனான உறவு; உள்நாட்டில் தீவிரவாதத்தையும், மதவாதத்தையும் அணுகும்முறை; மத்திய – மாநில அரசுகளுக்கிடையேயான உறவு; ஈழப் பிரச்சினை; காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை; தமிழக மீனவர் பிரச்சினை – என எந்தவொரு பிரச்சினையை எடுத்துக்கொண்டாலும், அதில் இவ்விரு கட்சிகளின் நிலைப்பாடு, அணுகுமுறை, நடைமுறை ஆகியவற்றில் கடுகளவுகூட வேறுபாடு இருப்பதைக் காணமுடியாது.

1990-களின் தொடக்கத்தில் காங்கிரசு கட்சி தனியார்மயம்-தாராளமயத்தை வரித்துக்கொண்டு நடைமுறைப்படுத்த தொடங்கியபொழுது, “தனது கட்சியின் கொள்கையை காங்கிரசு திருடிக் கொண்டுவிட்டதாக”ப் புலம்பியது, பா.ஜ.க. அந்தச் சமயத்தில் லேவா தேவிக்காரர்கள், வியாபாரிகள், பதவி பறிக்கப்பட்ட சமஸ்தான ராஜாக்கள் ஆகியோரின் கட்சியாக அறியப்பட்டிருந்த பா.ஜ.க.விடமிருந்து இதனைத் தவிர வேறு புலம்பல் வந்திருக்க முடியாது. எனினும், 1990-களில் ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்தோடு சுதேசி சவடால் அடித்துவந்த அக்கட்சி, 1998-ல் ஆட்சியில் அமர்ந்தவுடன் தனியார்மயம்-தாராளமயத்தை காங்கிரசைவிட மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தியது. தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு காங்கிரசின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் காரணம் என மேடைதோறும் முழங்கி வருகிறாரே மோடி, அவரிடமும் மருந்துக்குக்கூட வேறு மாற்றுப் பொருளாதாரக் கொள்கை கிடையாது.

காங்கிரசு அரசு படுத்துக்கிட்டு போத்திக்கலாம் என்றால், மோடி போத்திக்கிட்டு படுத்துக்கலாம் என்கிறார். இதுதான் இவர்களுக்கிடையேயான கொள்கை வேறுபாடு! “தனியார் மயத்தை இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்தினால் நாட்டை வல்லரசாக்கிவிடலாம்” என்ற பழைய பாட்டைத்தான் புது மெட்டு போட்டுப் பாடி வருகிறார், மோடி. காங்கிரசை ஊழல் மலிந்த அரசு எனக் குற்றஞ்சுமத்தி வரும் அவர், மன்மோகன் சிங் அரசால் முகேஷ் அம்பானிக்குக் குத்தகைக்கு விடப்பட்ட கே.ஜி. எண்ணெய் வயல் ஊழல் குறித்துப் பேச மறுக்கிறார். காங்கிரசோ குஜராத்தில் மோடி அரசால் அடானி குழுமத்திற்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கும் சட்டவிரோத சலுகைகள் குறித்துப் பேச மறுக்கிறது. காங்கிரசிற்கும் பா.ஜ.க.விற்கும் இடையேயுள்ள பிணைப்பு இது தான். இவ்விரு கட்சிகளிடையே பொருளாதாரக் கொள்கையில் இப்படிபட்ட ஒற்றுமை காணப்படுவது மட்டுமின்றி, அதனை நடைமுறைப்படுத்துவதில்கூட இவை “தூக்கிடவிடப்பா, ஏத்திவிடப்பா” என்ற பாணியில் இரட்டைக் குழல் துப்பாக்கி போலவே செயல்பட்டு வருகின்றன.

தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதையும் அதனை நிர்வகிக்கும் பொறுப்பைத் தனியார்மயமாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட புதிய ஓய்வூதிய நிதி மசோதாவை கடந்த மார்ச் 2011-ல் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்குக் கொண்டு வந்தது, காங்கிரசு அரசு. அன்று அவைக்கு வந்திருந்த 159 உறுப்பினர்களுள் பெரும்பாலோர் பா.ஜ.க. மற்றும் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள். எனினும், அம்மசோதா பா.ஜ.க. உறுப்பினர்களின் ஆதரவோடு, 115 உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று நிறை வேற்றப்பட்டது.

இம்மசோதா நிறைவேற்றப்பட்டதில் இன்னொரு சுவாரசியமும் உண்டு. இம்மசோதா மன்மோகன் சிங் அரசால் தயாரிக்கப்பட்டதல்ல. அதற்கு முன்பு வாஜ்பாயி தலைமையில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தயாரித்த சரக்கு இது. அம்மசோதா காங்கிரசு கூட்டணி ஆட்சியில், எதிர்க்கட்சியான பா.ஜ.க.வின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தனியார்மயம் என்ற சரடு ‘எதிரெதிர்’ கட்சிகளான காங்கிரசையும் பா.ஜ.க.வையும் ஒன்றாகக் கட்டிப் போட்டிருப் பதற்கு இன்னும் பல உதாரணங்கள் உள்ளன.

பிரணாப் முகர்ஜி - கண்டலீசா ரைஸ்
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அறிவிக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி (இடது), அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டலீசா ரைஸ். (கோப்புப்படம்).

சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அந்நிய மூலதனத்தை அனுமதிக்கும் காங்கிரசு அரசின் முடிவை பா.ஜ.க. எதிர்த்து வருகிறது. ஆனால், அக்கட்சி இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கத்தின் கீழ் 2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டபொழுது, தனது தேர்தல் அறிக்கையில் கார்ப்பரேட் முதலாளிகளை மகிழ்விக்கும் நோக்கத்தோடு சில்லறை வர்த்தகத் தில் அந்நிய முதலீடை அனுமதிக்கத் தமது கட்சி நடவடிக்கை எடுக்கும் என அறிவித்திருந்தது. இது மட்டுமல்ல, வாஜ்பாயி ஆட்சியில்தான் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடை அனுமதிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, அன்று வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறன் மூலம் விவாதத்திற்குக் கொண்டு வரப்பட்டது. எனவே, பா.ஜ.க. தொடங்கி வைத்ததை காங்கிரசு முடித்து வைத்திருக்கிறது என்றுதான் இதனைக் கூறமுடியும்.

இப்படி பா.ஜ.க. கூட்டணி அரசு தொடங்கி வைத்ததை அதனை அடுத்துவந்த காங்கிரசு அரசு முடித்து வைத்ததற்கு இன்னொரு உதாரணம் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் போக்ரான்-2 அணுகுண்டு சோதனை நடத்திய கைே யாடு ஐ.நா. மன்றத்திற்கு உரையாற்றச் சென்ற பிரதமர் வாஜ்பாயி, “இனி இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தாது” எனத் தன்னிச்சையாக அறிவித்தார். இதனையடுத்துதான் அணுசக்தி தொடர்பாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கு இடையே இரகசியப் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. இந்த இரகசியப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்பந்த வடிவம் கொடுத்ததோடு, அதனைத் தனது பதவியையே பணயம் வைத்து நிறைவேற்றினார், மன்மோகன் சிங்.

இது போன்று, காங்கிரசு தொடங்கி வைத்ததை பா.ஜ.க. தீவிரமாக நடைமுறைப்படுத்தியதற்கும் அநேக உதாரணங்கள் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் கொள்கை நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. 1998-ல் பதவிக்கு வந்த வாஜ்பாயி அரசும் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இக்கொள்கையை அச்சுப் பிசகாமல் நடைமுறைப்படுத்தியதோடு, இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் விற்கும் முடிவையும் எடுத்தது. மேலும், அரசு நிறுவனங்களைத் தனியாருக்கு விற் பதற்காகவே ஒரு தனி அமைச்சகத்தையே உருவாக்கிச் சாதனையும் படைத்தது.

நிலக்கரிச் சுரங்கங்களை ஏல முறைகூட இல்லாமல், தன் விருப்பப்படித் தரகு முதலாளிகளுக்கு வாரி வழங்கும் கொள்கையை மன்மோகன் சிங் அரசு மட்டுமல்ல, அதற்கு முன்பிருந்த வாஜ்பாயி அரசும் செயல்படுத்தியது. தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி 39 சுரங்க வயல்களை விதிமுறைகளை மீறி ஒதுக்கீடு செய்திருப்பதாகக் குற்றஞ்சுமத்தியிருக்கிறது, சி.பி.ஐ.

தொலைபேசித் துறையில் நுழைந்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியத் தரகு முதலாளிகளும் தமது வருமானத்தில் ஒரு பகுதியை அரசுக்குக் கட்டணமாகச் செலுத்திவந்த நிலையில், வாஜ்பாயி அரசு அதனைக் கைவிட்டுத் தனியார் நிறுவனங்கள் அதிரடி இலாபம் அடையும் வண்ணம் புதிய தொலைதொடர்புக் கொள்கையை அறிவித்தது. அதற்குப் பின் வந்த காங்கிரசு அரசும் அதே கொள்கையைக் கடைப்பிடித்தது மட்டுமல்ல, 2ஜி அலைக்கற்றை ஊழலுக்கு பா.ஜ.க. கூட்டணி ஆட்சி உருவாக்கிய கொள்கைதான் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

மன்மோகன் சிங் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றைகள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்ட கொள்ளை நடந்தது என்றால், பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் மாடர்ன் பிரட், பால்கோ, வீ.எஸ்.என்.எல். உள்ளிட்டு இலாபத்தில் இயங்கிவந்த பல பொதுத்துறை நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டன. காங்கிரசு கூட்டணி ஆட்சிக்கு நிலக்கரிச் சுரங்க ஊழல் என்றால், பா.ஜ.க.விற்கு கர்நாடகா மாநிலத்தில் பெல்லாரி சகோதரர்கள் நடத்திய இரும்புக் கனிம ஊழல். ஊழல் குற்றச்சாட்டுக்களில் இரண்டு கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக இருப்பதை எடுத்துக் காட்டும் உதாரணங்கள் இவை.

காங்கிரசின் மதச்சார்பின்மை, இந்துயிசம் என்பது ஈரத்துணியைப் போட்டு சிறு பான்மை மக்களின் கழுத்தறுப்பதுதான் என்பதை அயோத்தி விவகாரம், மும்பய் கலவரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நிரூபித்திருக்கின்றன. ராஜீவ் காந்தி தீவிரவாதிகளை ஒடுக்குவது என்ற பெயரில் தடா சட்டத்தைக் கொண்டு வந்தாரென்றால், பா.ஜ.க. பொடா சட்டத்தைக் கொண்டு வந்த து. இந்த இரண்டு சட்டங்களுமே அப்பாவி முசுலீம்கள் மீதும், புரட்சிகர ஜனநாயக சக்திகள் மீதும் தான் ஏவிவிடப்பட்டன. இதன் காரணமாகவே இந்த இரண்டு சட்டங்களையும் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஆளுங்கும்பலுக்கு ஏற்பட்டது. அதேசமயம், காங்கிரசும், பா.ஜ.க.வும் தாங்கள் ஆளும் மாநிலங்களில் இப்பாசிச சட்டங்களை வேறு பெயர்களில் உருவாக்கி, சிறுபான்மையினருக்கு எதிராக ஏவிவிடுவதில் ஒரேமாதிரியாக நடந்து வருகின்றன.

இந்தியா அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்

காஷ்மீரிலும் வடகிழக்கிந்திய மாநிலங்களிலும் நடைபெற்றுவரும் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை இராணுவத்தையும் பாசிச கருப்புச் சட்டங்களையும் ஏவி ஒடுக்கு வது; ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற மறுப்பது; இந்து தேசியவெறிையத் தூண்டிவிடுவதற்காகவே பாக்.எதிர்ப்பு, சீன எதிர்ப்பு அரசியலைக் கிளறிவிடுவது; முசுலீம் தீவிரவாதமும் மாவோயிஸ்ட் பயங்கரவாதமும்தான் நாட்டை அச்சுறுத்தி வரும் அபாயங்களாக ஊதிப் பெருக்கி பயங்கரவாதப் பீதியூட்டுவது; ஒருபுறம் வல்லரசு, வளர்ச்சி என்ற மயக்கு வார்த்தைகளை முன்வைத்து அமெரிக்காவின் காலை நக்குவதை நியாயப்படுத்துவது; இன்னொருபுறம் தேவயானி விவகாரம் போன்றவற்றை முன்வைத்து அமெரிக்க எதிர்ப்புச் சவடால் அடிப்பது ஆகியவற்றிலெல்லாம் காங்கிரசும் பா.ஜ.க.வும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாகவே செயல்பட்டு வருகின்றன.

விடுதலைப் புலிகளின் முற்றுகையில் சிக்கிக் கொண்ட சிங்களப் படையினரைக் காப்பாற்ற வாஜ்பாயி அரசு இலங்கை அரசிற்கு செய்த உதவிகளே, ஈழப் பிரச்சினையில் பா.ஜ.க. இன்னொரு காங்கிரசு என்பதை எடுத்துக் காட்டுவதற்குப் போதுமானது. மோடி பிரதமரானால் ஈழத் தமிழர்களுக்கு விடிவு கிட்டும் என வை.கோ. சவடால் அடித்துவரும் அதேசமயத்தில், பா.ஜ.க.வோ ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வைத் தேட வேண்டும் என காங்கிரசின் குரலை எதிரொலிக்கிறது.

இவையும், இவை போன்று இங்கு சொல்லாமல் விடுபட்டுள்ள ஒற்றுமைகளையும் வைத்துப் பார்க்கும்பொழுது, பா.ஜ.க.வும் காங்கிரசும் சேர்ந்து ஆட்சி அமைக்கலாமே என உச்சநீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டது விசித்திரமானதாகத் தோன்றாது. பா.ஜ.க.வைச் சேர்ந்த சத்ருகன் சின்ஹாவும் அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனில் கடந்த ஆண்டு நடந்த கூட்டமொன்றில், “காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்புத்துறை, பொருளாதார சீர்திருத்தம் போன்றவற்றில் ஒரே கொள்கைதான். இரு கட்சிகளும் பொதுவேலைத் திட்டம் ஒன்றைவைத்துக் கூட்டு அரசாங்கம் அமைக்க வேண்டும். கூட்டணி அரசுகளில் சிறிய, மாநிலக் கட்சிகளின் மிரட்டல் போக்குகளுக்கு முடிவு கட்ட வேண்டும்” எனப் பேசியிருக்கிறார். நாடாளுமன்ற நெருக்கடிகள் முற்றும் வேகத்தைப் பார்க்கும்பொழுது, இவர்களின் ஆசை நிறைவேறும் வாய்ப்பிருப்பதை மறுத்து விடவும் முடியாது தானே!

– அழகு
___________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2014
___________________________________

‘தி இந்து’க்கள் கேட்கிறார்கள், “எதுவெல்லாம் தேசத்துரோகம்?”

5

ங்கிலேயக் காலனிய ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராகத் துரோகம் செய்வதாகக் குற்றஞ்சாட்டி, விடுதலைப் போராளிகளைத் தண்டிக்க 1860-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டதுதான் 124-ஏ தேசதுரோகச் சட்டம். 154 ஆண்டுகளுக்குப் பிறகும் அதை ஏவி, அரசு எதிர்ப்புப் போராளிகளை மட்டுமல்ல, அப்பாவி மக்களையும் காராகிருகத்தில் தள்ளப் பயன்படுத்தி வருகிறது, “சுதந்திர இந்தியஅரசு”.

“பிரிவினைவாத, தீவிரவாத, பயங்கரவாதப் பீதியூட்டி, தேசிய வெறியைக் கிளப்பி ஆதாயம் அடைவதே பார்ப்பன பாசிச அரசியல் தந்திரமாகவுள்ளது” என்பதை நீண்ட காலமாகக் கண்டு வருகிறோம். அந்த வகையில் பார்ப்பன பாசிசத்தின் தயார்நிலை சட்ட ஆயுதமாக உள்ளது, இந்த 124-ஏ தேசத்துரோகச் சட்டம். இதற்கு உச்சபட்ச சான்றானதொரு காரியத்தை உ.பி.யின் மீரட் நகரில் அவர்கள் செய்துள்ளார்கள்.

மாணவர்கள் தாக்குதல்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கு முன்னரே, ராஜஸ்தானிலுள்ள மேவார் பல்கலைக் கழகத்தில் பயிலும் காஷ்மீரி மாணவர்களைத் தாக்கும் இந்து மாணவர்கள்.

ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்தன. அவற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியொன்றின் போது சிறப்பாக விளையாடிய பாகிஸ்தானின் சாகித் அஃப்ரிதியைப் பாராட்டி ஆரவாரம் செய்துவிட்டார்கள், உ.பி.யின் மீரட் நகரிலுள்ள தனியாருக்குச் சொந்தமான சுவாமி விவேகானந்தா சுபார்தி பல்கலைக் கழகத்தில் பயிலும் ஜம்மு-காஷ்மீர் மாணவர்கள் சிலர். இந்தக் “குற்றத்துக்காக” அவர்கள் மீது பல்கலைக் கழகப் பதிவாளர் புகார் கொடுக்கவே, 124-ஏ தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கும் போட்டுள்ளனர்.

இதனால் வகுப்புக் கலவரம் வெடித்துவிடும் என்றஞ்சியதாகப் புளுகும் பல்கலைக் கழக நிர்வாகம், அதனால் மாணவர்களை ஜம்மு-காஷ்மீருக்கே திருப்பியனுப்பி விட்டதாகச் சொல்கிறது. ஜம்மு-காஷ்மீர் முதல்வரின் முறையீடு காரணமாக, தேர்தல் நேரத்தில் “இசுலாமிய எதிர்ப்பு பழி” வந்துவிடும் என்றஞ்சிய சமாஜவாதி அரசு 124-ஏ தேசத்துரோக குற்றப்பிரிவை மட்டும் விலக்கிக் கொண்டது. 153-ஏ பிரிவின் கீழ் வெவ்வேறு இன மக்களிடையே பகைமையைத் தூண்டுவதாக வழக்கு, 427 பிரிவின் கீழ் சீர்குலைவு ஏற்படுத்துவாக வழக்கு ஆகியவை இன்னமும் விலக்கிக் கொள்ளப்படவில்லை.

மீரட் சம்பவம் பற்றி அதிச்சியடைந்தாற்போன்று தலையங்கம் தீட்டியுள்ள “தி இந்து” நாளேடு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. “இதற்கான அடிப்படை வெறுமனே சட்ட அறியாமையும் யதேச்சதிகாரமும் மட்டும் என்று சொல்லிவிட முடியுமா? சமீபத்தில் ஜம்முவில் தங்கியிருந்த ஜம்மு-காஷ்மீர் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் அணியினரின் அறை நள்ளிரவில் சோதனையிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். இப்போது காஷ்மீர் மாணவர்கள் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு. காஷ்மீரிகள் மனத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்தியப் பொதுசமூகத்திலிருந்து மேலும் மேலும் ஏன் அவர்களை நாம் வெளியே தள்ளுகிறோம்?” இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் “தி இந்து”க்கள் மட்டுமல்ல, காஷ்மீரிகளும் அறியாததல்ல!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆசியக் கிரிக்கெட் போட்டி துவங்கும் முன்னரே, ராஜஸ்தானிலுள்ள மேவார் பல்கலைக் கழகத்தில் 12 காஷ்மீரி மாணவர்கள் இந்து மாணவர்களால் ஒரு காரணமுமின்றித் தாக்கப்பட்டிருக்கின்றனர்.

சட்ட நியாயப்படி இல்லாவிட்டாலும், “இந்தியப் பொதுசமூகத்தின்” மனச்சாட்சியைத் திருப்திப்படுத்துவதாகச் சொல்லித்தான் காஷ்மீரி அப்சல் குருவை கோழைத்தனமாகவும், வக்கிரமாகவும், சட்ட விரோதமாகவும் தாய்க்கும் மனைவிக்கும் தெரிவிக்காமல் தூக்கிலிட்டு கொலைசெய்து, அவரது பிள்ளைக்கும் உடலைக் காட்டாமல் இரகசியமாக சிறைவளாகத்திலேயே புதைத்தார்கள். எல்லாம் முடிந்த பிறகு, இந்திய அரசு நடந்து கொண்டது சட்டம், நியாயப்படியானதா, இல்லையா என்று ‘அக்கிரகாரத் திண்ணை’யில் உட்கார்ந்து அலசினார்கள்.

“இந்தியாவில் ஆட்சியாளர்கள் கையில் சட்டங்கள் எப்படி விளையாட்டுப் பொம்மைகள் போலக் கையாளப்படுகின்றன என்பதற்கு உச்சபட்ச உதாரணமாகியிருக்கிறது மீரட் சம்பவம்” என்று அங்கலாய்க்கிறது, “தி இந்து”. இது ஏதோ இந்தியாவில் சட்டங்கள் கேடாகப் பயன்படுத்தப் படுவதற்கு எதிரான “அவா”க்களின் ஆட்சேபனை என்று எண்ணிவிட வேண்டாம்.

124-ஏ மட்டுமல்ல, அப்சா, தடா, பொடா, மிசா, மினி மிசா, அந்தந்த மாநில தடுப்புக் காவல் சட்டங்கள் என்று எவ்வளவோ சட்டங்களை சிறுவர்கள், பெண்கள், முதியோர்கள் மீது அற்பக் காரணங்கள் கூறி இப்படித்தான் பலமுறை ஏவிவிடப்படுகின்றன. தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் மகாராஷ்டிரா, குஜராத் உழைப்பாளர்கள் மீதும், “எங்கள் ஊரில் அணு உலைவேண்டாம்” என்று போராடும் கூடங்குளம் மக்கள் மீதும், “எங்கள் காடுகளின் கனிம வளங்களைச் சூறையாடாதீர்கள் – எங்கள் வாழ்வுரிமைகளைப் பறிக்காதீர்கள்” என்று மறிக்கும் சோடாநாகபுரி மலைவாழ் பழங்குடி மக்கள் மீதும் இந்தத் தேசத்துரோகச் சட்டத்தைக் காட்டி இந்திய ஆயுதப் படைகளின் கொலைகாரத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

சுபார்தி பல்கலை மாணவர்கள்
ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில், சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் ஆட்டக்காரரை பாராட்டிய குற்றத்திற்காக பொய்வழக்கு சோடிக்கப்பட்டு உ.பி.யின் மீரட் நகரிலுள்ள விவேகானந்தா சுபார்தி பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீரி மாணவர்கள்.

காஷ்மீரையும் வடகிழக்கு இந்திய மாநிலங்களையும் இந்தியாவில் இருத்திக் கொள்வதற்காகவும் அம்மக்களின் உரிமைப் போராட்டங்களை ஒடுக்கி வைப்பதற்கும் இந்திய ஆட்சியாளர்களின் தயார்நிலை ஆயுதந்தான் தேசத்துரோகத் தடுப்புச் சட்டம் என்ற பாசிச அரசியல். ஆனால், இந்திய ஆட்சியாளர்களின் இந்த வகையான தேசத் துரோகத் தடுப்புகளைக் கண்டுகொள்ளாத “தி இந்து”க்கள் கிரிக்கெட் விவகாரத்தில் ரசிகர்களின் நாடு கடந்த ஜனநாயக உரிமைக்காகக் கோஷம்போடக் கிளம்பிவிட்டார்களே, ஏன்? கிரிக்கெட் தங்களின் ஆங்கிலேயப் பிரபுக்குல விளையாட்டு என்பதாலா? அல்லது இப்போதும் கோடிகோடியாகக் கொட்டும் உலகமகா சூதாட்டம், ஆகவே அதை அரசியலுக்கு அப்பால் வைக்கவேண்டும் என்பதாலா? இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போது “தேசத்துரோகம்”, “தேசபக்தி”, “நாட்டுப்பற்று” ஆகிய சொல்லாடல்கள் நாடுகளின், தேசங்களின் என்ற எல்லைகளைக் கடந்த உலகமய அரசியல் என்றாகி விட்டது என்பதாலா?

இந்திய ஆளும் தரகு முதலாளிகள் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் ஏராளமான வியாபார, தொழில் ஒப்பந்தங்களும் உறவுகளும் கொண்டுள்ளனர். அந்நாடுகளுடன் பல்வேறு வகையில் அரசியல், பொருளாதார, பண்பாட்டு, சமூக உறவுகளை வளர்த்து வருகின்றனர். ஆனால், அதேசமயம் இந்திய அரசும் அரசியல்வாதிகளும் அரசியல் ஆதாயம் கருதியே அந்நாடுகள் மீது பகைமை உணர்வு பாராட்டும்படியான பொதுக்கருத்தை இந்தியச் சமூகத்தாரிடையே நிரந்தரமாகப் பராமரித்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் எதிராக நிரந்தரமானதொரு ஆத்திரமும் வெறியும் தொடர்ந்து ஊடகங்களால் கிளறிவிடப்படுகிறது.

இந்திய அரசும் ஆளும் வர்க்கங்களும் அரசியல்வாதிகளும்”தேசபக்தி”, “நாட்டுப்பற்று” ஆகியவற்றுக்கான உள்ளடக்கத்தையும் பொருளையும் ஆன்மாவையும் உருவியெடுத்து விட்டார்கள். அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கும் பன்னாட்டு ஏகபோகத் தொழில் நிறுவனங்களுக்கும் நாட்டையே கூறுபோட்டு விற்கும், நாட்டு மக்களைப் புதைகுழியில் தள்ளும் பல துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். இறால் பண்ணைகளை அமைத்து, மீத்தேன் வாயுவை உறிஞ்சி, உயிரி விதைகளையும் இரசாயனங்களையும் புகுத்தி நமது வளம்மிக்க வயல்வெளிகளைப் பொட்டல் காடுகளாக்குகிறார்கள். காடு-மலைகளைப் புரட்டிப்போட்டு, கனிம வளங்களைச் சூறையாடிக் கற்குவியல்களாக்குகிறார்கள். அணுஉலைகள், நச்சு ஆலைகளை இறக்குமதி செய்கிறார்கள். பெரும் பெரும் பெட்டகங்களில் அணுக்கழிவுகள், இரசாயன, மருத்துவக் கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டுகிறார்கள். பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகளின் கொள்ளைக்காக புதுப்புது கண்டுபிடிப்புகளை மருத்துவ ஆய்வுகள் என்ற பெயரில் சிறு பச்சிளங் குழந்தைகள் முதல் நமது மக்கள் மீது சோதனைகள் நடத்திப் படுகொலைகள் புரிகிறார்கள். மொத்தத்தில், இப்படிப் பலவாறும் நமது நாட்டையே மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக மாற்றும் தேசத்துரோகஞ் செய்கிறார்கள்.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு இந்திய அரசும் ஆளும் வர்க்கங்களும் அரசியல்வாதிகளும் “தேசபக்தி”, “நாட்டுப்பற்று” என்பதையெல்லாம் இந்தியாவின் கிரிக்கெட் வெற்றியைப் போற்றுவது, இந்து மதச் சின்னங்களின் புனித்தைப் பேணுவது, அமெரிக்காவில் அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள், “தேவயானி”கள் மீதான நிர்வாணச் சோதனைகளைத் தடுப்பது போன்ற அடையாளப் பிரச்சனைகளாக்கி விட்டார்கள். ஆகவே, இதை “இந்து தேசபக்தி” “இந்துஸ்தானிய நாட்டுப்பற்று” என்றுதான் சொல்ல வேண்டும்.

இனி, உண்மையான தேசபக்தர்களாகிய நாம் இப்போதுசெய்யவேண்டியது, வெறும் அடையாளப் பிரச்சனையாக்கப்பட்டுள்ள தேசபக்திக்கு மாற்றாக, எதிராகத் “தேசத்துரோகம்”தான்! இதிலும் நமக்கு முன்னோடிகள் இருக்கிறார்கள்.

1954-ம் ஆண்டு மே 29 அன்று, உத்திரப்பிரதேசத்திலுள்ள ஒரு குக்கிரமத்தின் சுமார் 200 விவசாயிகளிடையே பேசினார் ராம் நந்தன். அதன் சாரம் இதுதான். “தாய்மார்களும் சகோதரிகளும் தாங்கள் வாழ்க்கை நடத்தும் பொருட்டு தங்கள் மானத்தையே விற்க வேண்டியிருக்கிறது. உழைக்கும் மக்கள் பிச்சையெடுக்க வேண்டியுள்ளது. விவசாயிகளும் கூலித் தொழிலாளர்களும் சோறில்லாமல் பட்டினி கிடக்கிறார்கள். காங்கிரசு ஆட்சியில் ஆயிரக்கணக்கான சீதைகள் கடத்தப்படுகிறார்கள்; உணவுக்கும் உடுப்புக்கும் வேண்டி பெண்கள் விபச்சாரிகளாகிறார்கள். பிறப்புக்கும் இறப்புக்கும் வரிகள் விதிக்கப்படுகின்றன. விவசாயிகளின், கூலித் தொழிலாளர்களின் ரத்தம் அந்நிய முதலாளிகளிகள் மூலம் உறிஞ்சப்படுகிறது. உ.பி. தொழிலாளர்கள் தாங்களே அமைப்பாகத் திரண்டுள்ளார்கள். இனி அவர்கள் தங்கள் மீது அனுதாபப்படுமாறு கெஞ்ச மாட்டார்கள். மாறாக, கம்புகளைக் கையிலெடுப்பார்கள்; அமைச்சகத்தைச் சூழ்ந்துகொண்டு தமது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், அது தூக்கியெறியப்படும் என்று எச்சரிப்பார்கள்.”

“விவசாயிகளும் கூலித் தொழிலாளர்களும் நாட்டை ஆளவேண்டும் என்று விரும்பினால், ஒவ்வொரு இளைஞரும் வாள்களையும் துப்பாக்கிகளையும், குண்டாந்தடிகளையும் எரிசாராயப் பாட்டில்களையும் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு போரில்லாமல் இந்த அரசு சரணடையாது. குண்டாந்தடிகளைப் பயன்படுத் தாமல் தூக்கியெறியப்பட்டதில்லை. விவசாயிகளும் கூலித் தொழிலாளர்களும் சங்கங்கள் அமைத்து இராணுவத்தைக் கட்டியெழுப்பவேண்டும்.”

“சீனத்து அரசைப் போன்றதொரு அரசைப் பெறவெண்டுமானால், தன்னார்வத் தொண்டர்களின் படையொன்றைக் கட்டியெழுப்பி, துப்பாக்கிகளையும் கைத்துப்பாக்கிகளையும் பயன்படுத்துவதற்கு அவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். தைமூர்லுங், ஔரங்கசீப், சேர்ஷா மற்றும் பிற கொடுங்கோலர்கள் நமது நாட்டைப் பிளக்கவில்லை; நேருதான் துரோகியாகி நாட்டை இரண்டாகப் பிளந்தார்.”

இப்படிப் பேசியதற்காக ராம் நந்தன் மீது உ.பி. அரசு 124-ஏ சட்டத்தின் கீழ் தேசத் துரோகக் குற்றஞ்சாட்டியது. கீழமை நீதிமன்றம் அவருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்தது. அவருடன் சேர்த்துக் குற்றஞ்சாட்டப்பட்ட இசக் இலாமியையும் பரஸ்நாத் திரிபாதியையும் விடுவித்தது. இவர்களையும் தண்டிக்கச் சொல்லி உ.பி. அரசும், தன்னை விடுவிக்கச் சொல்லி ராம் நந்தனும் மேல்முறையீடு செய்தனர். அலகாபாத் உயர்நீதி மன்றம் மூவரையும் விடுதலை செய்தது.

தேசத்துரோகக் குற்ற வழக்குகளில் நியாயப்படியோ, சட்டப்படியோ வாதாடுவதற்கான அடிப்படை ஆதாரங்கள் எதையும் மக்கள் எதிரிகளால் உண்மையில் முன்வைக்கவே முடியாது. இது பல வழக்குகளில் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு விட்டது. என்றாலும் அரசியல் பழிவாங்குவதற்காகவே தேசத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்ட பினாயக் சென், நாராயண் சன்யால் போன்ற சிலர், பாசிச “நீதியரசர்”களுடன் கூட்டுச்சதி செய்து தண்டிக்கப்படுகிறார்கள். மற்றபடி தேசத்துரோகப் பொய்வழக்குப் போடப்படும் நூற்றுகணக்கானவர்கள் குற்றப் பத்திரிக்கைகள்கூடத் தாக்கல் செய்யப்படாமல், விசாரணையின்றி, கேள்வி முறையின்றி பல ஆண்டுகளாகச் சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.

– ஆர்.கே.
___________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2014
___________________________________

சுயமரியாதை வேண்டுமா பெண்ணே ? ஓட்டு போடாதே !

8

த்துக் கூலிக்கு பெண்களை அழைத்து வந்து, பொட்டல் வெயிலில் வாட்டி வதக்கி அம்மா தனது அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஹெலிகாப்டரில் பறக்கிறார்.

தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காக பெண்களை கூட்டிக்கொண்டு தெருத்தெருவாய் டூ வீலரில் கிளம்பி விட்டார், கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்.

சுமங்கலித் திட்டம்
இளம் பெண்கள் கொத்தடிமையாக வேலை செய்ய சுமங்கலித் திட்டம்.
  • கோவை மாவட்டத்தின் பஞ்சாலைகளிலும், சிறு தொழில்களிலும் வரம்புமீறி சுரண்டலுக்கு உள்ளாகும் உழைக்கும் பெண்களை என்ன பிரச்சனை? என்று பத்தடி எழுந்து வந்து எட்டிப் பார்க்காத இந்த அம்மணி, பெண்களின் எந்த உரிமைகள் எப்படி போனால் என்ன ஓட்டுரிமைதான் ரொம்ப முக்கியம் என்று பெண்களையே விழிப்புணர்வு விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார். என்ன ஒரு கடமை உணர்வு?!
  • கோவை, திருப்பூர் பகுதிகளில் ஏற்றுமதி ஆயத்த ஆடை நிறுவனங்களில் கொத்தடிமைகளாக வேலைசெய்ய, தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து இளம் பெண்களை முப்பதாயிரம், நாற்பதாயிரத்துக்கு விலைபேசி “சுமங்கலித் திட்டம்” என்ற பெயரில் சிறைபிடித்து அடைத்து வைத்து ரத்தம் குடிக்கும் கொடுமைகளுக்கு எதிராக தனது வண்டியை ஸ்டார்ட் செய்யாத இந்த கலெக்டர் அம்மாதான் தேர்தல் கவுன்ட் டவுனுக்கு போஸ் கொடுக்கிறார்!

வேலைநேரம், வேலைநிரந்தரம், அரசாலேயே நிரணயிக்கப்பட்ட அடிப்படைச் சம்பளம், இ.எஸ்.ஐ, என உழைக்கும் பெண்களுக்கான எந்த உரிமைக்காகவும் தெருவில் இறங்காத இந்த அதிகாரவர்க்கம், நமது ஓட்டுரிமைக்காக நாயாய் தெருவில் சுற்ற வேண்டிய அவசியம் என்ன?

முக்கியமாக, இந்த தேர்தல் போதை இறங்கி, மக்கள் சுயநினைவுக்கு வந்து சிந்திக்க ஆரம்பித்து விட்டால்? ஓட்டு போட்டு, போட்டு என்னத்தக் கண்டோம் என்று ‘ரூட்டு’ மாறிவிட்டால்? என்ற தொலைநோக்கிலான, சிந்தனை தான்! மக்களின் மீதான தங்களது அதிகாரத்தை மறுபடியும், மறுபடியும் நிறுவிக் கொள்ளத்தான் தாய்குலத்தை தேடி எல்லா அதிகாரவர்க்க பேய்க்குலமும், நமது உச்சி முடியை பிடித்து ஓட்டு போட தெருவில் இறங்கி ஆளைத்தூக்குகிறது.

பாலியல்-வன்முறை

  • பஸ்ஸில் தொடங்கி பணியிடம் வரை பெண்களுக்கு பாலியல் தொந்திரவு!
  • வேலைக்குப் போகும் பெண்கள் அவர்கள் நடவாளோ, ஐ.டி. ஆளோ பத்திரமாக வீடு வந்துசேர உத்திரவாதமில்லை!
  •  நகரத்து கம்பெனிகளில் ஒண்ணுக்குப் போகவும் ஒரு டோக்கன், ரெண்டுக்கு போக இன்னொரு டோக்கன் என்று அடக்குமுறை….

இப்படி, பொதுவான விசயங்களிலேயே பெண்களின் பாதுகாப்புக்கும், அடிப்படையான உயிர்வாழும் உரிமைக்கே உத்திரவாதம் இல்லாத இந்த ‘ஓட்டுரிமை’ யோடு, ஆணவம் பிடித்த அதிகாரவர்க்கத்தையும் பெண்கள் சேர்த்து புறக்கணிப்பதுதான் சரி!

அடித்தட்டு உழைக்கும் பெண்கள் அன்றாடம் தெருவில் இறங்கி போராடி குடிகெடுக்கும் டாஸ்மாக்கை மூடச்சொல்கிறார்கள், பெண்களின் போராட்ட உணர்வை மதித்து சாராயக்கடைக்கு பூட்டு போடாத இந்த கும்பலுக்கு நாம் ஓட்டு போடவேண்டுமாம்!

பெண்களிடம் ஓட்டு வாங்குவதற்காக நான் வந்தால் மதுவை ஒழிப்பேன்! என்று சவடால் அடிக்கும் எல்லா கட்சிகளுமே தண்ணி பார்டிகள் தான்!

காலிக்குடங்களோடு எங்களை தெருவுக்கு தெரு அலைய விட்டு விட்டு வாக்கு பெட்டியை தூக்கி வந்து ஓட்டாய் கேட்கிறாய் என்று ஆளும் வர்க்க கும்பலைப் பார்த்து காறித்துப்ப வேண்டும்! இத்தனை முறை உனக்கு ஓட்டுப் போட்டு எனக்கு ஒரு குடம் தண்ணீருக்கு வழி உண்டா? குழாயடிச் சண்டையில் நம்மை தள்ளிய கும்பலை தேர்தல் புறக்கணிப்புச் சண்டையில் திட்டி விரட்டவேண்டும்.

போலி ஜனநாயகத்தின் வண்ட வாளத்தை தண்டவாளத்தில் ஏற்ற வேண்டும்!

வருசம் 365 நாள் வேலைக்கும் மூடு விழா நடத்தி விட்டு யாருக்கு வேண்டும் உன் நூறு நாள் வேலைத்திட்டம்?

  • விவசாயம், அதை ஒட்டிய கால் நடை வளர்ப்பு, கறவைமாடுகள், சிறு தொழில்கள் என பெண்களின் சிறுவாட்டு காசுக்கும், சுயமரியாதை உணர்ச்சிக்கும் அடிப்படையாக இருந்த சுய தொழில்களும் அழிந்து சூன்யமாகி விட்டது. உன் சுயஉதவிக் குழுவின் கடன் தான் பெண்களின் முன்னேற்றமா? முதலில் எங்க சுயதொழில்களை வாழவிடு! என்று வாக்குரிமை பேசும் அதிகார வர்க்கத்திடம் வாழ்வுரிமை கேட்டு, மூஞ்சியில் மொத்த வேண்டும் பெண்கள்!
  • கூலிக்கு பெண்களின் கிட்னிகள், க ரு முட்டை முதலான அங்கங்களை திருடிவிட்டு , தாலிக்குத் தங்கம் திட்டமாம்!
  • குடும்பத்தின் கருவான தொழிலையே கலைத்து விட்டு கர்ப்பிணிக்கு உதவித்தொகையாம்!
  • பெண்களின் நலவாழ்வுக்கான அனைத்தையும் பிடுங்கி தனியார் முதலாளிகளின் கையில் தந்து காசாக்கிவிட்டு, போடுங்கம்மா ஓட்டு! என்பவனை தெருவில் நாலு போட வேண்டியதுதான்!

ஓட்டுப்போடுவது குடும்பக்கடமை என்பது போல பெண்களிடம் நச்சரிக்கும் இந்தத் தேர்தலால் பெண்களுக்கு கிடைத்த பயன்கள் என்ன ?

இருபத்திநாலாயிரம் கோடி வரிபாக்கி வைத்திருக்கிறாயே, அதை கட்டுடா என்றவுடன், இவர்கள் அழைத்து வந்த நோக்கியா இருபதாயிரம் தொழிலாளர்களை (நோக்கியா மற்றும் அதன் துணைத் தொழில் நிறுவனங்கள்), பெண்களையும் வேலையிலிருந்து விரட்டி, தெருவில் நிறுத்தி விடுவேன் என்று மிரட்டுகிறான்!

நோக்கியா
நோக்கியா பயங்கரவாதத்தில் சிக்கிய பெண் தொழிலாளர்கள்.

பல நூறு பெண்களுக்கும் நேர்முக, மறைமுக வேலைவாய்ப்பு என்றும், வளர்ச்சித் திட்டம் என்றும் நோக்கியாவை கொண்டு வந்தது நான்தான், நான்தான் என்று போட்டிபோட்டு பெருமைக்கு சொந்தம் கொண்டாடிய கட்சிகளும், அதிகாரிகளும், இப்போது எங்கே? வரிபாக்கியை முதலாளியிடமிருந்து வசூலிக்க வக்குண்டா உன் தேர்தலுக்கு? வஞ்சிக்கப்படும் தொழிலாளிப் பெண்களின் துயர் துடைக்க உதவுமா? ஓட்டு சீட்டு ஜனநாயகம்?

ஓட்டுக்கு காசு வாங்காதீர்கள், ஓட்டு ஜனநாயக் கடமை என்று எங்களிடம் வந்து உபதேசிக்கும் நாய்களா? நோக்கியாவிடம் நீங்கள் வாங்கிய காசு எவ்வளவு? அதே நோக்கியாவின் துணை நிறுவனம் பாக்ஸ்கானில் அம்பிகா என்ற தொழிலாளி, கட்டிங் மிஷினில் மாட்டிக் கொண்டபோது, மிஷினை உடைத்தால் பொருள் நஷ்டம், என்று அந்தப் பெண்ணை தெரிந்தே துடிக்க துடிக்க கழுத்தை வெட்டிய பன்னாட்டு முதலாளிகளுக்கு காவலிருக்கும் ஏவல் நாய்களுக்கு ஏன் பெண்கள் ஓட்டு போட வேண்டும்! நம்மைப் போலவே கனவுகளுடன் வாழ்ந்த அம்பிகாவைக் கொன்ற கொலைகார ஜனநாயகத்துக்கா ஓட்டு? இந்தப்போலி ஜனநாயகத்தை பெண்களின் கைகளாலேயே, அடக்கம் செய்வதுதான் அம்பிகாவுக்கு நாம் செய்யும் நேர்மையான அஞ்சலி!

ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியது நம் கடமை அல்லவா? என்று பொறுப்பாக வந்து நம்மிடம் ஓட்டு கேட்கும் இந்த அரசு, அரசியல்கட்சிகள், அதிகாரவர்க்க சிலந்திக்கூட்டம், என்றைக்காவது பெண்களை காப்பாற்றும் பொறுப்பை நிறைவேற்றியதுண்டா?

  • சென்னை ஐ.டி. கம்பெனியில் பணிமுடிந்து திரும்பிய பெண் உமாமகேஸ்வரி பாலியல் வல்லுறவு வன்முறையால் படுகொலை செய்யப்பட்டார். பணியிடம் உள்ள இடத்திற்கான பாதுகாப்பை கூட உத்திரவாதம் செய்வது என் வேலையல்ல, என்று திமிராக நடந்துகொண்டான் டாடா கம்பெனி! பெண்கள் இரவு ஷிப்ட்டுகளில் பணிக்கு அமர்த்தப்படக் கூடாது, அமர்த்தினால் உரிய பாதுகாப்புகள் செய்யப்படவேண்டும் என்று சட்டமிருந்தாலும், அது பன்னாட்டு மூலதனத்துக்கும், ஐ.டி. போன்ற நாட்டை முன்னேற்ற வந்த ‘கம்பெனிகளும் பொருந்தாது, எங்களை கட்டுபடுத்த முடியாது என்கிறார்கள் திமிராக’! உள்ளே வந்தால் நான் பெண் ஊழியரின் உழைப்பை சுரண்டுவேன்,  வெளியே போனால் வேறு ஒருவன் பாலியல் ரீதியாக சுரண்டுவான், நான் கண்டு கொள்ளமாட்டேன், பெண்ணின் பாதுகாப்புக்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது? என்ற சமூக விரோத முதலாளிகளை வாழவைக்கும் இந்த குரூர ஜனநாயகத்துக்கு ஓட்டு ஒரு கேடா?
  • அமைப்பு சாரா வேலை என்ற பெயரில் கட்டிட வேலை, வீட்டு பணிப்பெண்கள், உணவு விடுதிகள், பெட்ரோல் பங்குகள், என பார்க்கும் இடமெங்கும் பெண்களின் கைத்தோல் குறைந்த கூலியிலும், அதிக பணி நேரத்திலும் உறிக்கப்படுகிறது, இதில் இந்த தேர்தல் மாற்றத்தைக் கொண்டு வருமா?
  • நூல் பிரித்து, நூல் பிரித்து பிள்ளைகளுக்கு பால் கொடுப்பதையே மறந்துபோன நெசவாளிப் பெண்ணை விலைவாசி உயர்வால் கடும் உழைப்புக்குள்ளாக்கும் கொடூரமான வாழ்க்கையை இந்த நாடாளுமன்றத் தேர்தல் மாற்றிவிடுமா?
  • கடல் சார்ந்த வளத்தை மீனவப் பெண்களின் கைகளிலிருந்து தட்டிப்பறிக்கும் தனியார்மய கார்ப்பரேட், கும்பலை இந்த தேர்தல் வந்து விரட்டிடுமா?
  • ஆபாசக் கலாச்சாரத்தை பரப்பி, இணையம், செல்போன், பத்திரிகைகள், டி.வி.சீரியல்கள், என பெண்களை இழிவுபடுத்தி காசு பார்க்கும் முதலாளிகளை உங்கள் ஓட்டால் தண்டிக்க முடியுமா?
  • சமூகத்தையே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நரகமாக்கி, மதவெறித் தாக்குதலில் பெண்களை முதல் பலியாக்கி பாலியல் வல்லுறவு செய்யும் காலிகளை, இந்த பாராளுமன்றத்தால் தண்டிக்க முடியுமா? பாராளுமன்றத்திலேயே செல்லில் ஆபாச படம் பார்க்கும் எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க த் தூ ஓட்டு ஒரு கேடா?

    பெண்கள் வாக்களித்தல்
    ஈவு இரக்கமின்றி பெண்களைச் சிதைக்கும் முதலாளிகளின் சுரண்டலுக்காக நம்மை துரத்தி வந்து கையை பிடித்து இழுக்கும் இந்த தேர்தலும் ஒரு ஈவ் டீசிங்தான்!
  • ஒவ்வொரு ஆதிக்கசாதி வெறியர்களும், சாதி மறுக்கும் காதலர்களை பிரித்து கொன்று, பெண்களை கூட்டு வன்புணர்ச்சி செய்வது வரை கட்டை பஞ்சாயத்து அராஜகம் செய்கிறார்கள். இந்த சமூக அநீதிகளை தேர்தல் பாதை தடுத்திடுமா?

பட்டவர்த்தனமாக பெண்கள் மீது கொடுமை இழைப்பதையே அடிப்படையாகக் கொண்டுள்ள ஆணாதிக்க, சாதி, மதவெறி அரசமைப்பிற்கான இந்த தேர்தலைப் புறக்கணிப்பதே சரி!

உரிமைகளை கேட்டு பெண்கள் சாலைக்கு வந்து போராடினால், போலீசை விட்டு அடித்து விரட்டும் அதிகாரவர்க்கம், ஓட்டுக்கு மட்டும் கொஞ்சம் வந்துட்டு போ? என்பது எவ்வளவு கொழுப்பு?

ஈவு இரக்கமின்றி பெண்களைச் சிதைக்கும் முதலாளிகளின் சுரண்டலுக்காக நம்மை துரத்தி வந்து கையை பிடித்து இழுக்கும் இந்த தேர்தலும் ஒரு ஈவ் டீசிங்தான்!

பெண்ணே போடாதே ஓட்டு! இனி புரட்சிதான் உன் ரூட்டு!

– துரை.சண்முகம்

உக்ரைன்: அமெரிக்க பேராசையில் விழுந்த மண் !

3

தேசிய சுயநிர்ணய உரிமையுடன் கூடிய பல தேசிய இனங்களின் குடியரசுகளை உள்ளடக்கிய ஒரு மாபெரும் சோவியத் சோசலிச ஒன்றிய நாடு லெனின் தலைமையில் சென்ற நூற்றாண்டில் உருவானது. 120-க்கும் மேற்பட்ட மொழி, இன, தேசிய இனச் சிறுபான்மை மக்களனைவரையும் சரியான அரசியல், பொருளாதார, சமூக ஜனநாயகக் கொள்கைகளினால் அரவணைத்துக் காத்தது, ஸ்டாலின் தலைமையிலான அன்றைய சோவியத் சோசலிச ஒன்றியம். இரண்டாம் உலகப் போரின்போது இத்தாலிய பாசிச மற்றும் ஜெர்மனியின் நாஜிச ஆக்கிரமிப்பின் கீழ் ஒடுக்கப்பட்ட பல்வேறு கிழக்கு ஐரோப்பிய தேசிய இனத்தவர்கள் செஞ்சேனையில் இணைந்து, பாசிச எதிர்ப்புப் போரில் வென்று விடுதலையடைந்த பிறகு, சோவியத் ஒன்றியத்தை முன்மாதிரியாகக் கொண்டு பல தேசிய இனங்களைக் கொண்ட மக்கள் ஜனநாயக அரசுகள் இந்நாடுகளில் உருவாகின. தேசிய சுயநிர்ணய உரிமையுடன் கூடிய குடியரசுகளை அமைத்துக் கொண்டு, அவை சோசலிசப் பாதையில் முன்னேறின.

உக்ரைன் - ஈரோ மைதானம்
பிப்ரவரி 22 அன்று ஆட்சிக் கவிழ்ப்பைச் சாதித்த வெற்றியை நாஜிசக் கொடியுடன் கொண்டாடும் “ஈரோ மைதானம்” இயக்கத்தின் வலதுசாரி தீவிரவாதிகளும் புதிய நாஜிகளும்.

ஸ்டாலினது சர்வாதிகார அரசினால் பல சிறிய தேசிய இனங்கள் வலுக்கட்டாயமாக சோவியத் ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டதாக மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் பித்தலாட்டப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டன. சோவியத் ஒன்றியத்தையும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் பலவீனப்படுத்தும் முயற்சியின் ஒரு அங்கமாகவே, இந்நாடுகளின் கம்யூனிச அரசுகளை ஒழித்து ஜனநாயக அரசுகளை நிறுவினால்தான் இத்தேசிய இனங்கள் விடுதலையையும் சமத்துவத்தையும் அடைய முடியுமென்று புளுகி, இனவெறிக்குத் தூபம் போட்டு பல சதிகளை அரங்கேற்றின.

சோசலிசக் கட்டுமானத்தின் கீழ் கணிசமான அளவுக்கு முன்னேறி, தேசிய இனங்களிடையே சமத்துவமும் ஒன்றுகலத்தல்களும் ஏற்பட்டிருந்த நிலையில், ஒரே அரசின் கீழிருந்த சோவியத் ஒன்றியம் 15 தனித்தனிக் குடியரசுகளாகப் பிளவுபட்டுப் போயின. தேசிய இனங்களிடையே நிலவிய நல்லிணக்கம் சிதைக்கப்பட்டு, மக்களின் சமூகப் பாதுகாப்பு நொறுக்கப்பட்டு, இனவெறியும் மதவெறியும் கட்டவிழ்த்து விடப்பட்டன. சில அதிரடி ஆட்சிக் கவிழ்ப்புகளும் தேசிய இனங்களிடையே போர்களும் வெடித்து, இனவெறிப் படுகொலைகளும் கிரிமினல் போர்க்குற்றங்களும் நடந்தன. முன்னாள் யுகோஸ்லாவியாவில் தேசிய இனப்போர்கள் நடந்து, அந்நாடு ஆறு குடியரசுகளாகவும் இரண்டு சுயாட்சிப் பகுதிகளாகவும் துண்டாடப்பட்டதை நாம் பார்த்தோம்.

அவற்றில் சில நாடுகளை, தனது மறைமுகக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து இயக்கி வருகிறது, அமெரிக்கா. மத்திய ஆசியாவில் எரிவாயு வளம் கண்டறியப்பட்ட பிறகு, உஸ்பெகிஸ்தானிலும் தாஜிகிஸ்தானிலும் இராணுவத் தளங்களை அமைத்துள்ளது. இதன் மூலம் மத்திய ஆசியாவின் எரிவாயு வளத்தைச் சுற்றி வளைத்துச் சூறையாடவும் மேற்கு ஆசியாவில் அதற்காக நடத்திவரும் ஆதிக்கப் போருக்கு அவற்றை ஏவுதளமாகக் கொள்ளவும் அமெரிக்கா முயலுகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளோடு உக்ரைனையும் நேட்டோவிலும் ஐரோப்பிய யூனியனிலும் இணைத்து, அவற்றை ஐரோப்பாவின் புறக்காவல் அரணாக மாற்றித் தனது ஆதிக்கத்தின் கீழ் நிரந்தரமாக வைப்பதுதான் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் நோக்கமாக உள்ளது. இதன்படியே, உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்திலும் நோட்டோவிலும் இணைப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் இராணுவக் கூட்டமைப்பான நேட்டோவிலும் ஐரோப்பிய யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய முன்னாள் கம்யூனிச நாடுகள் ஒவ்வொன்றாகச் சேர்ந்து வருகின்றன. இதன் மூலம் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்துள்ள குடியரசுகளும் கிழக்கு ஐரோப்பிய முன்னாள் கம்யூனிச நாடுகளும் தமது பொருளாதார நெருக்கடிகளைத் தீர்த்து, விரைவான முன்னேற்றத்தை அடைய முடியும் என்ற மாயை மேற்கத்திய ஏகாதிபத்தியங்களால் ஊட்டப்படுகின்றது. இது, அந்நாடுகளில் தோன்றியுள்ள கிரிமினல் குற்றக் கும்பலைச் சேர்ந்த, ஒட்டுண்ணி ஏகபோக முதலாளிகளாலும், அவர்களின் மதவெறி, இனவெறிக் கட்சிகளாலும் நடுத்தர, மேட்டுக்குடிவர்க்க புதிய தாராளவாதக் கொள்கையாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பரப்பப்படுகிறது.

இனவெறியாட்டம்
தேசியவெறி இனவெறியூட்டி லெனின் சிலையையும் பாசிச எதிர்ப்புச் சின்னங்களையும் உடைத்து நாசமாக்கிய புதிய நாஜிகளின் பயங்கரவாத வெறியாட்டம்.

மேற்கத்திய பாணி முதலாளித்துவத்தை நிறுவுவதில் வெற்றி பெற்ற போதிலும், இந்நாடுகளில் ஏகாதிபத்தியவாதிகள் ஜனநாயகத்தையோ, பொருளாதார முன்னேற்றத்தையோ சாதிக்க முடியவில்லை. அந்நாடுகளின் உழைக்கும் மக்கள் விலையேற்றம், வேலையின்மை, வறுமையில் வதைபடுகின்றனர். இந்நெருக்கடிகளும் பிரச்சினைகளும் தீர்க்கப்படாத அதேசமயம், உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கும் அமெரிக்கா, புதிய பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் தோற்றுவித்து வருகிறது.

முதலாளித்துவம் மீட்கப்பட்ட ரஷ்யா, சீனா உட்பட முன்னாள் சோசசலிச நாடுகளின் சமூகத்தைப் பற்றிய, குறிப்பாக அந்நாடுகளின் ஆளும் வர்க்கங்களைப் பற்றிய தெளிவான சித்திரத்தை இன்றைய உலகின் படிப்பாளி வர்க்கத்தினரேகூட பெற்றிருக்கவில்லை என்றுதான் கருதவேண்டும். கிரமமான முதலாளித்துவ வளர்ச்சியினூடாகவோ, மேலைக்காலனிய, ஏகாதிபத்தியங்களால் புகுத்தப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியினூடாகவோ அல்லது அதற்கு முந்தைய சமூகத்தைச் சேர்ந்ததாகவோ தோன்றிய ஆளும் வர்க்கங்களை முதலாளித்துவம் மீட்கப்பட்ட முன்னாள் சோசாசலிச நாடுகள் பெற்றிருக்கவில்லை. அந்நாடுகளில் தற்போது நடக்கும் கொந்தளிப்புகளுக்கு இது முக்கியக் காரணியாக அமைந்துள்ளது.

அந்நாடுகளின் கம்யூனிசக் கட்சிகளிலும் அரசிலும், குறிப்பாக – இராணுவம், போலீசு, உளவுத்துறை, நீதித்துறை ஆகியவற்றில் உயர்பதவிகளில் ஒளிந்து கொண்டிருந்தனர், முதலாளித்துவப் பாதையாளர்களான அதிகார வர்க்க பாசிசக் குற்றக் கும்பல் (fascist oligarchies) தலைவர்கள். இவர்கள் முன்னாள் சோசலிச நாடுகளில் ஆட்சியிலிருந்த கம்யூனிசக் கட்சியில் திரிபுவாதத் தலைமையைக் கைப்பற்றிய பிறகு, அதற்கும் முதலாளித்துவம் முழுமையாக மீட்கப்படுவதற்கும் இடையிலான காலத்தில் அரசு ஆலைகளிலேயே இரகசிய உற்பத்தி, சந்தைப்படுத்துதல்கள் மூலமும், முதலாளிய, ஏகாதிபத்திய நாடுகளுடன் துரோகத்தனமான கள்ளப் பொருளாதார உறவுகள், இலஞ்சம், அதிகாரமுறைகேடுகள் மூலமாகவும் அந்நிய வங்கிகளில் கள்ளப் பணத்தையும் சொத்துகளையும் குவித்து வைத்திருந்தார்கள். (சோசலிச நாடுகளில் இம்மாதிரியான சக்திகளுக்கு எதிராக வர்க்கப் போராட்டங்களை – மாபெரும் கலாச்சாரப் புரட்சிகளை – நடத்தி வீழ்த்துவதன் மூலம்தான் முதலாளியப் பாதையாளர்களை முறியடிக்க முடியும்.)

அடுத்தடுத்த ஆட்சிக் குடைக்கவிழ்ப்புகள் மூலம் முதலாளித்துவத்தை மீட்ட பிறகு அரசுச் சொத்துகளைக் கைப்பற்றிக்கொண்டனர், இந்த அதிகார வர்க்க பாசிசக் குற்றக் கும்பல் (fascist oligarchies) தலைவர்கள். இந்த ஒட்டுண்ணி ஏகபோக முதலாளிகள் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு புதிய ஆளும் வர்க்கமாகினர். அதேசமயம், இவர்கள் ஒற்றைக் குழுவாக ஒரே தலைமையின் கீழ் உருத்திரண்டு விடவில்லை. இவர்கள் வெவ்வேறு கும்பல்களாக அமைந்து அதிகாரத்தை ஏகபோகமாகக் கைப்பற்றிக் கொள்வதற்கான, வேட்டையில் கிடைத்த இரையைப் பங்குபோட்டுக்கொள்வதற்கான தீராத நாய்ச் சண்டைகளில் ஈடுபடுகின்றனர்.

சோவியத் ஒன்றியத்தில் இருந்து தனியே பிரிந்து போன, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலான உக்ரைன் வரலாற்றில் ஒட்டுண்ணி ஏகபோக முதலாளிகள் மற்றும் பாசிசக் குற்றக்கும்பல்கள் (fascist oligarchies) அடங்கிய ஆளும் வர்க்கத்தினரிடையே சட்டபூர்வமாகவும் நாடாளுமன்ற முறைகளிலும் சட்டவிரோத முறைகளிலும் மோதல்களும் ஆட்சிக்கவிழ்ப்புகளும் நடந்தன. அந்தவாறான போக்கில் ஆட்சிக்கு வந்த உக்ரைனின் ரஷ்ய ஆதரவு அதிபரான விக்டர் யானுகோவிச் தன் நாடு ஐரோப்பிய யூனியனோடு நடத்தி வந்த பேச்சு வார்த்தையை கடந்த நவம்பரில் முறித்துக் கொண்டு, சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தார். ஏனெனில், அது ஏகாதிபத்திய எடுபிடியான ஐ.எம்.எஃப்.-பின் சிக்கன சீரமைப்பு, கட்டண உயர்வு முதலிய நிபந்தனைகளை உள்ளடக்கியிருந்தது; இவற்றின் விளைவாக உள்நாட்டில் சமூகக்கொந்தளிப்பு ஏற்படும் என்று அரசு அஞ்சியது.

ஆனால், ரஷ்ய ஆதரவு உக்ரைன் அதிபரான விக்டர் யானுகோவிச் கும்பலே உக்ரைன் மக்கள் வெறுக்கும் இலஞ்சம்-ஊழல் அதிகாரமுறைகேடுகளில் மூழ்கித் திளைக்கும் ஒட்டுண்ணி ஏகபோக முதலாளிகள் மற்றும் பாசிசக் குற்றக் கும்பல்கள் (fascist oligarches) அடங்கிய ஆளும் வர்க்கக் கும்பலில் ஒன்றுதான். இதனால், ஐரோப்பிய யூனியனுடனான ஒப்பந்த முறிவைக் காரணம் காட்டி விக்டர் யானுகோவிச் கும்பலின் அரசுக்கு எதிராக “யூரோ மைதானம்” என்ற இயக்கம் பெரிய அளவு வெடித்தது. வலதுசாரி பிற்போக்கு மற்றும் புதிய நாஜிகள் அதில் பெருமளவு பங்கேற்றறுத் தலைமை தாங்கின. அமெரிக்கா மற்றும் பிற மேலை நாடுகளின் எடுபிடிகளான “அரசுசாரா தொண்டு நிறுவனங்கள்” அதை வழிநடத்தின. ஒட்டுண்ணி ஏகபோக முதலாளிகளுக்குச் சொந்தமான ஊடகங்கள் அவசியமான பிரச்சார பின்புலத்தைக் கொடுத்தன. இலஞ்சம்-ஊழல் அதிகாரமுறைகேடுகளால் சீரழிந்த ஆளும் கும்பலுக்கும் அரசுக்கும் எதிரான எழுச்சியாக அது சித்தரிக்கப்பட்டது.

யானுகோவிச் - புடின்
ஆட்சிக் கவிழ்ப்பிற்கு முன், டிசம்பர் 2013-ல் ரசியா தலைமையிலான சுங்க ஒன்றியத்தில் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உக்ரைன் அதிபர் விக்டர் யனுகோவிச்சுடன் (இடது) ரசிய அதிபர் புடின் (வலது)

2004-ம் ஆண்டு உக்ரைனில் நடந்த அதிபர் தேர்தலில் முதலில் விக்டர் யானுகோவிச் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது தேர்தல் மோசடி என்று எதிர்த்துப் போட்டியிட்ட யூஷெசன்கோ தலைமையிலான கும்பல் “ஆரஞ்ச் புரட்சி” என்ற “எழுச்சியை”க் கட்டவிழ்த்து விட்டது. “கலகங்களும், கொந்தளிப்புகளும்” வெடித்தன. உக்ரைன் உச்சநீதிமன்றம் தலையிட்டு, யூஷெசன்கோவை அதிபராக்கியது. பின்னர் அந்நாட்டுத் தேர்தல் கமிசன் நடத்திய விசாரணையில் தேர்தல் மோசடி எதுவும் நடக்கவில்லையெனக் கூறி விக்டர் யானுகோவிச் அதிபரானார். அந்த ஆரஞ்சு புரட்சியை நடத்திய “ஆரஞ்ச் குடும்பம்”தான் இந்த “யூரோ மைதானம்” இயக்கத்தின் முதுகெலும்பாக உள்ளது. வலது தீவிரவதிகளும் புதிய நாஜிகளும் தலைமையேற்கும் “யூரோ மைதானம்” இயக்கத்தினர் ஜனநாயம் மற்றும் தேசியத் தீவிரவாத வெறியைக் கிளப்பி வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். இனவெறி பாசிச கும்பல் கட்டவிழ்த்துவிட்ட பயங்கரவாத வெறியாட்டங்களில் லெனின் சிலையும் பாசிச எதிர்ப்புச் சின்னங்களும் பொதுச்சொத்துக்களும் நாசமாக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு, பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 21 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மேற்பார்வையில், யானுகோவிச் அரசுக்கும் மேற்கத்திய ஏகாதிபத்திய விசுவாசிகளான போராட்டக்காரர்களுக்குமிடையே ஒரு சமரச ஒப்பந்தம் போடப்பட்ட போதிலும், பிப்ரவரி 22-ம் தேதியன்றே ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்துவிட்டு, எதிர்த்தரப்பான பாசிசக் கும்பல்கள் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் ஆதரவுடன் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தின. அதிபர் விக்டர் யானுகோவிச் நாட்டைவிட்டுத் தப்பியோடியதும், பெருமுதலாளிகள், ஊழல் பெருச்சாளிகள், நவீன நாஜிகள் உள்ளிட்ட பல்வேறு கும்பல்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

ரஷ்ய வல்லரசின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது எண்ணெய் மற்றும் எரிவாயு வளம். ரஷ்யாவிலிருந்து இறக்குமதியாகும் எரிவாயுவையே மேற்கு ஐரோப்பிய நாடுகள் பெரிதும் சார்ந்துள்ளன. ரஷ்யாவிலிருந்து அதிக அழுத்தம் கொண்ட குழாய்களின் மூலம் மேற்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவுக்குச் செல்லும் ஐந்து பெரும் எரிவாயுக் குழாய்கள் பெலாரஸ், உக்ரைன் முதலான முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளின் வழியாகவே செல்கின்றன. ரஷ்யாவின் எரிவாயு விநியோகத்தைக் கட்டுப்படுத்தவும், உக்ரைன் மீண்டும் ரஷ்யச் செல்வாக்கின் கீழ் போய்விடாமல் தடுக்கவும் உக்ரைனில் அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ படைகள் குவிக்கப்பட்டன. ரஷ்யாவோ உக்ரைனில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பையும் அமெரிக்க ஆதரவு பிற்போக்கு அரசு அமைக்கப்பட்டுள்ளதையும் எதிர்த்து, உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே கருங்கடல் பகுதியில் தனது படைகளைக் குவித்து எச்சரித்தது. இதைத் தொடர்ந்து உக்ரைனின் தென்கிழக்கிலுள்ள சுயாட்சிப் பிரதேசமான கிரிமியாவில், ரஷ்யாவுடன் இணைவதற்கான தீர்மானத்தை கிரிமியாவின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியும் இதற்கான கருத்துக் கணிப்புத் தேர்தலையும் நடத்தியும், கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டுள்ளது.

யூகோஸ்லாவியாவில் தேசிய உரிமையை ஆதரித்துப் போர் புரிந்த அமெரிக்கா, இப்போது கிரிமியா ரஷ்யாவுடன் இணைந்ததை எதிர்க்கின்றது. ரஷ்யாவை ஆக்கிரமிப்பாளனாகவும், போர்ப் பதற்றத்தைத் தோற்றுவித்து அமைதியையும் ஜனநாயகத்தையும் சீர்குலைப்பதாகவும் கூச்சலிடுகின்றது. மறுபுறம், ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்துவதோடு, தொழில் வளர்ச்சியடைந்த பெரும் பணக்கார நாடுகளின் கூட்டமைப்பான ஜி-8 லிருந்து தற்காலிகமாக ரஷ்யாவை நீக்கிவிட்டது.

ஆனால், ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடை விதித்தால், அதற்குப் பதிலடியாக ரஷ்யா தனது எரிவாயுவை விலையேற்றம் செய்தாலோ அல்லது எரிவாயுவை விநியாகிக்க மறுத்தாலோ, அது ஐரோப்பிய கண்டத்தில் மிகப்பெரிய நெருக்கடியாக மாறிவிடும். மேலும் சீமென்ஸ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஜெர்மன் நிறுவனங்கள் ரஷ்யாவில் பல்லாயிரம் கோடி டாலரில் முதலீடு செய்துள்ள நிலையில், ஜெர்மனி பெரும் பாதிப்புக்குள்ளாகும். இதனால் உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளான ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் திணறுகின்றன.

அன்று இந்த ஏகாதிபத்தியவாதிகள், கம்யூனிசத்தால்தான் பிரச்சினை, மேற்கத்திய பாணி ஜனநாயகம்தான் இதற்கு ஒரே தீர்வு என்றார்கள். சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்ததும் கம்யூனிசம் தோற்றுவிட்டது, முதலாளித்துவம் வெற்றியைச் சாதித்துவிட்டது என்றார்கள். இனி போர் அபாயமே இருக்காது, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதிலும் வளர்ச்சியைச் சாதிப்பதிலும் உலகம் தனது கவனத்தைச் செலுத்தும் என்றார்கள். ஆனால் நடப்பதென்ன? மேற்கத்திய பாணி முதலாளித்துவ ஜனநாயகத்தை நிறுவிய பின்னரும்கூட, முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் நெருக்கடிகளும் பிரச்சினைகளும் தொடர்கின்றன. வாய் கொள்ளாத அளவுக்கு, பெரிய துண்டைக் கவ்விக் கொண்டு மெல்லவும்முடியாமல் விழுங்கவும் முடியாமல் விழிக்கின்றன, ஏகாதிபத்தியங்கள்.

– மாணிக்கவாசகம்
___________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2014
___________________________________

போலி கம்யூனிஸ்டுகள்: பாசிச ஜெயாவின் அடிமைகள் !

8

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தன்னிச்சையாக அறிவித்து ஜெயலலிதா எட்டி உதைத்த போதிலும், எவ்வித எதிர்வினையுமின்றி அவரின் காலை நக்கிக் கொண்டு விசுவாசத்தைக் காட்டுகிறார்கள் இடது, வலது போலி கம்யூனிஸ்டுகள். ஜெயலலிதாவின் அவமதிப்புகளை இப்போலி கம்யூனிஸ்டுகள் அ.தி.மு.க. அடிமைகளைப் போல இயல்பாக எடுத்துக் கொள்ளுமளவுக்குப் பக்குவமும் பெற்றுவிட்டார்கள்.

கூட்டணி முறிவு
ஜெயலலிதா எட்டி உதைத்ததால் கூட்டணி முறிந்த சோகக் கதையை விளக்கும் இடது, வலது போலி கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள்.

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலக்கப்பட்ட பின்னர் ஏன் தி.மு.க. கூட்டணி யில் சேரவில்லை என்ற கேள்விக்கு, “ஒருவரால் நெருக்கடிக்கு உள்ளாகிவிட்ட நிலையில் அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக மற்றொருவரிடம் கைகோர்ப்பது சரியல்ல” என்று தத்துவார்த்த விளக்கமளிக்கிறார் வலது கம்யூனிஸ்டு துணைச் செயலாளரான மகேந்திரன். “இந்தத் தேர்தலில் மட்டும்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை” என்று மிகவும் கவனமாகக் கருத்து கூறுகிறார் அக்கட்சியின் செயலாளரான தா.பாண்டியன்.

இது அரசியல் நாகரிமல்ல; ஜெயலலிதாவை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள்; கம்யூனிஸ்டுகளை அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற்ற கார்ப்பரேட் சதி நடந்துள்ளது – என்றெல்லாம் போலி கம்யூனிஸ்டு தலைவர்கள் பதிலளிக்கிறார்களே தவிர, இடதுசாரி கட்சிகளைப் புறக்கணித்துவிட்டு தேசிய அளவிலோ, மாநில அளவிலோ ஒரு சரியான மாற்றை யாராலும் உருவாக்கிட முடியாது என்று புலம்புகிறார்களே தவிர, கழிவறைக்குள் கதவை அடைத்துக் கொண்டுகூட அம்மாவுக்கு எதிராக வாய் திறக்க அவர்கள் துணியவில்லை.

பா.ஜ.க.வை எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேசாமல் தேர்தல் பிரச்சாரத்தை ஜெயலலிதா நடத்தக் கிளம்பிவிட்ட நிலையில், வேறு வழியின்றி இவ்விரு கட்சிகள் மட்டும் கூட்டணி கட்டிக் கொண்டு தலா 9 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இருப்பினும், காங்கிரசு மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடித்தால், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா உள்ளிட்டு நிதிஷ்குமார், நவீன் பட்நாயக் ஆகியோர் தலைமையிலான மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி சேர்வதற்கு சி.பி.எம். கட்சி தயாராக இருப்பதாகவும், அரசியலில் நிரந்தர மான கடுமையான கொள்கைகள் இருக்க முடியாது என்றும் கூறி சந்தர்ப்பவாதத்தில் புதிய சிகரத்தை எட்டுகிறார், சி.பி.எம். கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சீத்தாராம் எச்சூரி.

பாபர் மசூதி இடிப்பை வெளிப்படையாக ஆதரித்தும், மதமாற்றத் தடைச்சட்டம் – கிடாவெட்டுத் தடைச் சட்டங்களைப் போட்டும், பாசிச கொலைகாரன் மோடியைத் தனது அருமை நண்பராக அறிவித்தும் தனது பார்ப்பன பாசிசத்தை வெளிக்காட்டிக் கொண்ட போதிலும் ஜெயலலிதாவை இந்து மதவெறி எதிர்ப்பாளராகவும் காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் எதிரான தேசிய மாற்று சக்தியாகவும் காட்ட வேண்டுமென்பது இடது-வலது போலி கம்யூனிஸ்டுகளின் இலட்சியம். காங்கிரசையும் பா.ஜ.க.வையும் எதிர்ப்பதுதான் நோக்கமென்றால், ஆம் ஆத்மி கட்சியையோ அல்லது தி.மு.க.வையோ அவர்கள் ஆதரிக்கலாம். ஆனால், காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்த தி.மு.க.வை ஆதரிக்க முடியாது என்றும், 2-ஜி ஊழலை எதிர்த்துப் பேசி விட்டு தி.மு.க.வுடன் கூட்டணி சேர முடியாது என்றும் இப்போலி கம்யூனிஸ்டுகள் நியாயவாதம் பேசுகின்றனர். ஊழலை எதிர்ப்பதுதான் நோக்கமென்றால், அம்மாவின் ஊழல் – கொள்ளையை எதில் சேர்ப்பது? ஜெயா -சசி கும்பலின் சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரில் 18 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருவதும், அன்று 66 கோடி ரூபாயாக இருந்த இந்த ஊழல் இன்று ஏறத்தாழ ரூ. 4000 கோடியாக மதிப்பு அதிகரித்திருப்பதும் இப்போலி கம்யூனிஸ்டுகளின் கண்களுக்குத் தெரியாமல் போனதன் மர்மம் என்ன?

ஜெயாவுக்கு பல்லக்குகடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலிலிருந்தே இப்போலி கம்யூனிஸ்டுகள் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த நிலையில், 2011 சட்டமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதா தன்னிச்சையாக அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து இப்போலிகளை அவமதித்த போதிலும், கெஞ்சிக் கூத்தாடி சீட்டுகளைப் பெற்று கூட்டணியில் ஒட்டிக் கொண்டனர். அதன் பிறகு நடந்த மாநிலங்களவைத் தேர்தலின்போது, தங்களது வேட்பாளருக்கு ஜெயலலிதாவிடம் ஆதரவு கோரிய வலது கம்யூனிஸ்டுத் தலைவர்களை அவமானப்படுத்திவிட்டு, ஒரு இடத்தை இப்போலிகளுக்கு ஜெயலலிதா விட்டெறிந்தார்.

இவ்வளவு கேவலமான நிலைக்குப் போய் போலி கம்யூனிஸ்டுகள் பார்ப்பன பாசிச ஜெயலலிதாவுக்குப் பல்லக்குத் தூக்குவதற்கான காரணம், இக்கட்சிகள் தமது வர்க்க அடித்தளத்தை இழந்து பிழைப்புவாதப் புதைசேற்றில் விழுந்து கிடப்பதுதான். புரட்சிகர அரசியலையும் சித்தாந்தத்தையும் கைவிட்டு நாடாளுமன்ற – சட்டமன்ற சாக்கடையில் விழுந்து புரள்வதற்குத் தீர்மானித்த காலத்திலிருந்தே இந்தப் பிழைப்புவாத நோய் அவர்களைப் பற்றிக் கொண்டு விட்டது. பின்னர் படிப்படியாக அது முற்றத் தொடங்கி, வரலாற்றைப் படைக்கும் உந்துசக்திகளான உழைக்கும் மக்கள் மீது நம்பிக்கை வைக்காமல், வர்க்கப் போராட்டத்தையே கைகழுவிட்டு ஓட்டுக்கும் சீட்டுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களின் காலை நக்கி ஆதாயமடைவதே அவர்களது இலட்சியமாகிப் போனது.

தலையிலிருந்துதான் மீன் அழுகத் தொடங்குவதைப் போல, இக்கட்சிகளின் தலைமையைக் கவ்விய பிழைப்புவாத நோய் இன்று அதன் அடிமட்டம்வரை வேர்விட்டுள்ளது. இப்போலி கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான அரசுத்துறையிலுள்ள தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர்களின் இலஞ்ச – ஊழல்களைக் கண்டு கொள்ளாததோடு, டிரான்ஸ்பர் வாங்கிக் கொடுப்பது, லோன் சொசைட்டியில் விரைவாகக் கடன் பெறுவதற்கு ஏற்பாடு செய்வது முதலான தரகு வேலையைத்தான் செய்கின்றன. தனியார் நிறுவனங்களிலோ, முதலாளிகளுக்கு விசுவாசமாக இயங்கும் ஒரு நிறுவனப் பிரிவு போலவே இத்தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன. முதலாளிகளிடம் நன்கொடை வாங்கினாலும், கம்யூனிச இலட்சியத்தைக் கைவிட்டுவிடவில்லை என்று நியாயவாதம் பேசிக் கொண்டு தேர்தல் செலவுகளுக்கும், தொழிற்சங்க மாநாடுகளுக்கும் கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பி.யிடம் நன்கொடை பெறுமளவுக்கு பிழைப்புவாதத்தையே புதிய ஒழுக்கமாக இப்போலி கம்யூனிஸ்டுகள் வளர்த்துள்ளனர்.

கம்யூனிஸ்டுகளுக்கே உரித்தான உறுதிப்பாடு, நல்லொழுக்கம், போர்க்குணம், அர்ப்பணிப்பு முதலானவையெல்லாம் காலாவதியாகி, தளி ராமச்சந்திரனைப் போன்ற பொதுச் சொத்தை சூறையாடும் ரவுடிகளும், திருப்பூர் கோவிந்தசாமி போன்ற கைதேர்ந்த தரகர்களும், பிழைப்புவாதிகளுமே முக்கிய பிரமுகர்களாகும் அளவுக்கு இக்கட்சிகள் சீரழிந்து போயுள்ளன. இப்போலி கம்யூனிஸ்டு கட்சிகளுக்குள் இன்னும் ஏராளமான கோவிந்தசாமிகளும் ராமச்சந்திரன்களும் உள்ளனர். அவர்களை எதிர்த்து யாரும் இதுவரை கேள்வி கேட்கவில்லை. அப்படிக் கேட்டால் யாருக்கு எவ்வளவு பங்கு கொடுக்கப்பட்டது என்ற ரகசியம் வெளியே வந்து கட்சியே கலகலத்துவிடும். ஜெயலலிதாவின் தயவில் தா.பாண்டியன் மாநிலங்களவை உறுப்பினராக முயற்சித்த கதையும், அழகப்பா பல்கலைக் கழகத்துக்கு தனது மகன் டேவிட் ஜவகரை துணைவேந்தராக்க ஜெயாவிடம் சிபாரிசு செய்யக் கோரிய கதையும் வெளிவந்து நாறிய போதிலும், அக்கட்சியின் தலைவர்களும் ஊழியர்களும் வாய் திறக்க மறுக்கிறார்கள். ஏனென்றால், தா.பா. வைக் கேள்வி கேட்டால் அவர் பலரது டவுசரைக் கழற்றிவிடுவார். நான் உன் ஊழலைக் கண்டுகொள்ள மாட்டேன், நீயும் என் ஊழலைக் கண்டுகொள்ளக் கூடாது என்ற எழுதப்படாத ஒப்பந்தம்தான் இக்கட்சிகளில் நிலவும் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடாகிவிட்டது.

இத்தகைய சீரழிவினால்தான், பாசிச ஜெயலலிதாவின் அவமதிப்புகளுக்குப் பின் னரும் இப்போலி கம்யூனிஸ்டு தலைவர்களும் பிரமுகர்களும் சொரணையற்றுக் கிடக்கிறார்கள். அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று பிழைப்புவாதத்தில் புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறார்கள். இப்பிழைப்புவாத பித்தலாட்டக் கொள்கைகளுக்கேற்ப, இனி இவர்கள் அம்மாவின் ஆசியுடன் தமது கட்சிகளுக்கு நல்லதொரு பெயரைச் சூட்டிக் கொண்டால் பொருத்தமாக இருக்கும்.

– தனபால்
___________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2014
___________________________________

சீமானின் மம்மி பஜனை – சீசன் 2

28

ஜெயலலிதாவுக்கு பிரதமர் ஆசை வந்து பின்னர் கால நிலை காரணமாக சாத்தியமில்லை என்று பதுங்கினாலும், அம்மாவின் பக்கவாத்திய கோஷ்டிகள் ஆளாளுக்கு நம்மை குரூரமாக இசைத்து வதைப்பதை தொடர்ந்து செய்கிறார்கள். இது வழக்கமான பக்கவாத்திய குரூப் என்றாலும் தற்போது வெடிச் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. என்னதான் மோடியின் “பி” அணியாக இருந்தாலும் பிரதமர் பதவி மேல் மம்மிக்கும் ஆசை இருப்பதால் யாரை முதன்மையாக ஆதரிப்பது என்று பக்கவாத்திய கூட்டத்தில் நடுநாயகமாக வீற்றிருக்கும் மயிலை பார்த்தசாரதிகள் கூட சற்று குழம்பிப் போயிருக்கிறார்கள்.

சீமான்
அம்மாவின் அதர்மம் வீழும் போது தர்மத்தை வீழ்த்தி அதர்மத்தை மீண்டும் நிறுத்த சிங்கத் தமிழன் ஒருவன் புலிப்பாய்ச்சலில் எலிப் பாடலை பாடிக் கொண்டு வருகிறான்.

அதில் தினமலர், விகடன் ஆகியவை பா.ஜ.க ஆசியுடன் மோடிக்காக மம்மியை செல்லமாக கோபித்துக் கொள்ளும் அளவுக்கு ‘தைரியத்தை’ வரவழைத்திருக்கிறார்கள். ஜூவி திருமாவேலனுக்கு ஜெயாவின் ஈழ எதிர்ப்பு திடீரென ஞாபகம் வருகிறது. ஜெ வின் சாணக்கிய குரு துக்ளக் சோ கூட மோடி பிரதமர் ஆக முடியா விட்டால், ஜெவுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்கிறார். இது தனக்கு வரவேண்டிய ஓட்டை பிரிக்கும் அபாயமாக ஜெவும் உணராமலில்லை. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை மனதில் கொண்டு ஜெயலலிதா மோடியை எதிர்த்து பேசவும் முடியாது. அப்படியானால் ஜெயாவுக்காக விசுவாசத்துடன் மோடியை செல்லமாக கோபித்துக் கொள்ள யாருமே இல்லையா?

ஏன் இல்லை?

இதோ அம்மாவின் அதர்மம் வீழும் போது தர்மத்தை வீழ்த்தி அதர்மத்தை மீண்டும் நிறுத்த சிங்கத் தமிழன் ஒருவன் புலிப்பாய்ச்சலில் எலிப் பாடலை பாடிக் கொண்டு வருகிறான்.

சென்னையில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுவில் பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளை எதிர்த்தும் ஜெயலலிதாவை ஆதரித்தும் பிரச்சாரம் செய்வதென்று முடிவெடுத்து கிளம்பியிருக்கிறார் அண்ணன் செந்தமிழன் சீமான். இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று ஈழ விடுதலைக்கு புதுப்பாதை காட்டி கடந்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் மம்மியின் வெற்றிக்கு பாடுபட்டிருந்தாலும் இந்த தேர்தலில் கடந்த வாரம் வரை அமைதியாகவே இருந்து வந்தார். ஆனால் அது புயலுக்கு முந்தைய அமைதி என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

பண்ருட்டி வேல்முருகன் போன்றவர்களோடு லெட்டர் பேட் டம்மி கட்சிகளை எல்லாம் நேரில் வரவழைத்து சந்தித்த போதிலும், ஜெ.  பிரதமரானால் ஆதரிப்போம் என்று போகுமிடங்களிலெல்லாம் வலிய போய் பேட்டி கொடுத்த புறநானூற்று தமிழனுக்கு, மம்மியிடமிருந்து எந்த அழைப்பும் இல்லை. “இதனால் மனமொடிந்து தேர்தலை புறக்கணித்து விட்டால் என்ன செய்வது, பிறகு கேப்டனின் காமெடி & ஆக்சன், வை.கோ சென்டிமென்ட், நடிகைகளின் கவர்ச்சி,  துணை நடிகர்களின் குத்தாட்டங்கள் போன்றவற்றோடு சீமானின் சவால் விட்டு ஆவேசம் காட்டும் சீன் படத்தில் இல்லை என்றால் நவரசங்களில் ஒன்று குறைந்து விடுமே” என்ற ரசிகர்களின் பரிதவிப்பை புரிந்து கொண்டு இறுதியாக சிங்கம் மன்னிக்கவும், புலி களமிறங்கி விட்டது.

ஜெயலலிதா ஆதரவு
ஜெயலலிதாவை ஆதரிப்பது என்ற பிறவிப் பெருங்கடன்.

ஜெயலலிதாவை ஆதரிப்பது என்ற தங்கள் பிறவிப் பெருங்கடனை செய்வதற்கு பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்திருப்பதாக சொல்கிறார்கள் அண்ணனின் தம்பிமார்கள். வாரே வாவ், “நாம் தமிழர்” கட்சியில் பொதுக்குழு ஒன்று இருக்கிறது என்பதைத் தவிர இந்த செய்தியில் முக்கியத்துவம் ஏதும் இல்லை. ஏனெனில் அதில் என்ன முடிவு செய்வார்கள் என்பதை எதிர் வீட்டில் பால்வாடிக்கு போகும் ரமேஷிடம் கேட்டால் கூட சொல்லுவான்.

வழமை போல ஜெயலலிதாவை ஆதரிப்பது என்று முடிவெடுத்ததை விட, அதற்கு சந்தர்ப்பவாதம் எனும் ஏ கே 47 துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொண்டே சீமான் கூறும் காரணங்கள்தான் ‘கிலி’ ஏற்படுத்துகின்றன. நேற்று வரை “மோடி மண்ணையும் மக்களையும் நேசிக்கின்ற மகத்தான தலைவன், குஜராத் மக்களுக்கு உண்மையாக உழைக்கின்ற தலைவன்“ என்றும்,கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இன்னும் ஒருபடி மேலே போய் மோடி “குஜராத்தின் கடனை எல்லாம் அடைத்து உலகவங்கிகளில் குஜராத்தின் பெயரில் 1500 கோடி ரூபாயை டெபாசிட் செய்திருப்பதாகவும், குஜராத்தை உலகத்தின் இரண்டாவது மாநிலமாக மாற்றி இருப்பதாகவும் (முதல் மாநிலம் அம்மாவின் தமிழ்நாடா, இல்லை மாவீரன் பிரபாகரனின் ஈழமா, சீமான் அவர்களே?)” தமிழக தெருக்களிலும், வாரமிருமுறை பத்திரிகைகளிலும் இதுவரை சுப்ரபாதம் போல பூஜித்து வந்தார் சீமான். அல்லது சீமான் பச்சைத் தமிழர் என்பதால் சூலமங்கலம் சிஸ்டர்ஸ் கீச்சும் சஷ்டி கவசம் என்பதாகவும் சொல்லலாம்.

அப்பேற்பட்ட மோடி ரசிகர், மோடியை இஸ்லாமியர்களை கொன்ற கொலைகாரன் என்றும் ராஜபக்சேவுக்கும் மோடிக்கும் வித்தியாசமில்லை என்றெல்லாம் தற்போது கண்டுபிடித்திருக்கிறார். இதில் எதைக் கண்டுபிடித்தார், எதை கண்டு விட்டார், எதை கண்டு ஒளித்தார், எதை கண்டு ஓடினார் என்பதெல்லாம் இரகசியங்கள்.

இருப்பினும் சீமான் தன் நிலைப்பாட்டை ஏன் இன்று மாற்றி பேசுகிறார் என்பதை ஏதோ கொஞ்சம் பரீசீலிக்க வேண்டி இருக்கிறது.  சீமானின் பார்வையில் நேற்று வரை மக்களை நேசிக்கும் மகத்தான தலைவனாக இருந்த மோடி இன்று இனப்படு கொலையாளனாக சுருங்கிப் போக காரணம் என்ன? ஒரு வேளை சீமான் கோமாவிலிருந்து நேற்றுதான் முழித்துக்கொண்டாரா, இல்லை ம.க.இ.க உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் மோடியை திரைகிழித்தபிறகு சீமானின் அறிவுக்கண் திறந்து விட்டதா? எது எப்படியோ முன்பு தமிழக மக்களுக்கு கூறிய இந்தக் கருத்துகளுக்காக அவர் மன்னிப்பு ஏதும் கேட்கவில்லை. இல்லை புரட்சித் தமிழனுக்கு மட்டுமல்ல, மண்டியிடாத தமிழனுக்கும் தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்புதானா, தெரியவில்லை.

சீமான் - ஜெயலலிதா
பிரதமர் பதவிக்கு அம்மா என்ற தலைப்பில் சீமான்.

தான் மோடியை ஆதரித்து பேசியது, பத்திரிகைகளிலும், யூடியூபிலும் பதிவாகி இருக்கும்போது, அது குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் இன்று இப்படி மாற்றி பேசுகிறோமே என்பது குறித்து சீமான் கவலைப்படவில்லை. அது போன மாசம் இது இந்த மாசம் என்பதை தவிர வேறு விளக்கம் இருப்பது போலவும் தெரியவில்லை. வீழ்ந்துவிடாத வீரம் இருப்பதாலேயே சீமானுக்குள் ஒரு காய்ந்து போன கைப்புள்ளை இல்லாமல் இல்லை.

உண்மை என்னவெனில் பொதுவாக பட்டிமன்ற பேச்சாளர்களுக்கு ஒரு பண்பு இருக்கிறது. அதாவது அவர்களுக்கு கொடுக்கப்படும் தலைப்புகளை அவர்கள் நியாயப்படுத்தி வாதிட வேண்டும். எதிர் எதிர் தலைப்பு கொடுத்தாலும் இரண்டையும் இருவேறு சந்தர்ப்பங்களில் நியாயப்படுத்தி நிரூபிப்பது தான் அவர்களது பேச்சு திறமையாக பார்க்கப்படுகிறது. மற்றபடி ஒரு விசயம் சரியானது என்பதால் அதை தான் ஆதரிப்பேன் என்றெல்லாம் பிழைக்கத் தெரியாமல் சொல்வதில்லை. இப்பேற்பட்ட வாதிடும் திறம் தமிழ் புலவர் வரலாற்றில் மாபெரும் அறமாக வாழையடி வாழையாக நீடிப்பதால் அண்ணன் சீமான் இதை வரித்துக் கொண்டு மோட்டு வளையைப் பார்த்தவாறே வார்த்தைகளில் சம்மர் சால்ட் போடுவது இயல்பானதே.

அப்படி சீமானுக்கு தற்போது கொடுப்பட்டிருக்கும் தலைப்பு “பிரதமர் பதவியில் அம்மா” என்பதால், தனது அணியை நியாயப்படுத்தி பேசுவதற்காகவும், எதிர் அணியை எதிர்க்கவும் அவர் காரணங்களை தேடுகிறார். அதனால்தான் நேற்றுவரை ஆதரித்து வந்த கருத்தை பட்டி மன்ற பாணியில் மாற்றிக் கொள்கிறார். “போன முறை ஜெயாவும் பிரதமர் போட்டியில் இல்லை மோடியும் இல்லை, இப்பொழுது  இருக்கிறார்கள். அதனால் கடந்த காலங்களில் மோடியை ஏன் ஆதரித்தீர்கள், இப்பொழுது ஏன் எதிர்க்கிறீர்கள்” என்ற கேள்வியே நியாயமில்லை என்று சீமானின் முறுக்கிய கையை முகமது அலியின் நாக் அவுட் குத்து கை போல நம்பும் தம்பிமார்கள் விளக்கமளிக்கக் கூடும். அண்ணனே அண்ணாந்து பார்த்து காலத்தை ஓட்டும் போது தம்பிகள் நாக் அவுட்டுக்கும், வித் அவுட்டுக்கும் வேறுபாடு அறியாத அப்ரண்டிசுகள் என்பது பெரிய குற்றமல்ல.

சரி கடைசியாக சரியான நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டாரே பிறகு என்னய்யா பிரச்சனை, ஏதோ எழுதிய பாட்டுக்கு எதாவது போட்டு குடுத்து அனுப்ப வேண்டியதுதானே என்ற தருமியின் கேள்வி எழலாம். இந்த கோரிக்கையை கருணையுடன் பரிசீலிக்கும் அதே நேரத்தில் அடுத்த பட்டிமன்றத்திலும் இதே தலைப்பு கொடுப்பார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை அல்லவா? எனவே இப்போது பேசுவது எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பது தான் அதற்கான எதிர் கேள்வி. இதை செந்நிறக் கண்களுடன் சீமானே தெளிவுபடுத்தியிருக்கிறார்.

சீமான்
“ஜெயலலிதா வெற்றி பெற்று பா.ஜ,க வுடன் கூட்டணி சேரவாய்ப்பு இருப்பதை தெரிந்து கொண்டிருப்பதாகவும், அப்படி நடந்தால் ஜெயாவை எதிர்ப்போம்”

நாம் தமிழரின் பொதுக்குழுவில் பேசிய சீமான், மோடி மேல் தற்போது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் நாளை அவர் மேல் நம்பிக்கை வந்தால் அடுத்த தேர்தலில் அவரை ஆதரித்துவிட்டு போகலாம், அதில் தங்களுக்கு பிரச்சனை இல்லை என்றும் தன் பட்டிமன்ற தர்பார் அறத்தை விட்டுக் கொடுக்காமல் சகஜமாக பேசுகிறார். மேலும் ஜெயலலிதா வெற்றி பெற்று பா.ஜ,க வுடன் கூட்டணி சேரவாய்ப்பு இருப்பதை தெரிந்து கொண்டிருப்பதாகவும், அப்படி நடந்தால் ஜெயாவை எதிர்ப்போம் என்றும் கூறுகிறார். இப்படி முன் கூட்டியே தெரிந்து கொண்டு பின்தேதியிட்ட தவறுக்காக முன் தேதியிட்ட ஆதரிப்பு ஏன் என்றால், வாழ்வை விடவா நாளும் கோளும் கொள்கையும் முக்கியம் என்று தேதிகளின் சதுரங்க ஆட்டத்தை நியாயப்படுத்தி முழங்குகிறார் சீமான்.

முக்கியமாக தமிழரின் எதிர்கால அரசியலுக்காக(?) அதிமுகவை ஆதரிப்பதாகவும் கூறுகிறார். யார் அந்த தமிழர்கள்? அவர்களது எதிர்கால அரசியல் என்ன? அதற்காக ஏன் இன்று அம்மா திமுகவை ஆதரிக்க வேண்டும்? இது கையறு நிலையா, கொள்கையறு கொலையா, சுள்ளென்ற வெயிலின் வினையா ஒரு எழவும் புரியவில்லை. உங்களுக்கு?

இருப்பினும் கேள்விகளை கறாராக கேட்காமல் இருக்கும் பட்சத்தில் சீமான் ஏனோ தானோவென்று கூறிய முத்துக்களை எடுத்து கோர்த்து ஒரு சில பதில்களை கட்டிக் கொள்ளலாம். அது உங்களது சாமர்த்தியத்தை பொறுத்தது. ஜெயலலிதாவை ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கு சீமான் பதிலளிக்காமல் இல்லை. பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, வி.சி, பா.ம.க, ம.தி.மு.க, ம.ம.க உள்ளிட்டவை தமிழின ஆதரவு கட்சிகள் தான் என்றாலும் தவறான கூட்டணியில் இருப்பதால் அவர்களை ஆதரிக்க முடியாது. அதே சமயத்தில் அவர்களை எதிர்ப்பதில்லை. அடுத்து தனியாக நிற்கும் கம்யூனிஸ்டு கட்சிகள் இந்தியாவை பொறுத்தவரை நல்லவர்கள், நேச சக்திகள் தான் என்றாலும் அவர்கள் தோற்றுப் போக கூடியவர்கள் என்பதால் ஆதரிக்க முடியாது. இறுதியில் வெற்றி பெறும் வலுவுள்ள கட்சியாக அதிமுக இருப்பதால் அவர்களை வைத்துதான் தாங்கள் எதிரிகளாக கொண்டுள்ள கட்சிகளை வீழ்த்த முடியும், ஆகவே அதிமுக-வை ஆதரிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ணை சுழட்டுதே………

திமுக அணி, பா.ஜ.க அணி இரண்டும் தமிழின எதிர்ப்பு கூட்டணி. அதனால் தமிழின ஆதரவு அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்பதே இவரது வாதம். அதை நேரடியாக கூறினால் தொண்டையில் நோய்த் தொற்று பற்றிக் கொள்ளும், எனவே  இப்படி உலகம் சுற்றி வந்து குல்பி ஐஸ் போல பேசுகிறார். சரி அவர் கூற்றுப்படியே எடுத்துக் கொள்வோம். திமுகவும் பாஜகவும் அயோக்கியர்கள் எனில் அவர்களுடன் சேர்ந்திருக்கும் கட்சிகளும் அயோக்கியர்களாகத்தானே இருக்க முடியும். பிறகு என்ன, ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்று நடனமாட வேண்டும்? எப்போதும் எந்த நேரத்திலும் சந்தர்ப்பவாத நிலைப்பாடு ஒன்று கம்பீரமாக தன்னை முன்வைக்க முடியாது.

சீமான் - வைகோ
தமிழார்வலர் வைகோ தவறான கூட்டணியில் – சீமான்.

மதிமுக, விசி, பாமக போன்ற தமிழார்வலக் கட்சிகள் தவறான கூட்டணியில் இருப்பதால் ஆதரிக்க முடியாது என்று கூறிவிட்டு தவறான (பாஜக) கூட்டணிக்குத்தான் செல்வார் என்று தாங்களே தொலை நோக்கோடு கருதும் ஜெயாவுக்கு ஓட்டு போட சொல்கிறார் சீமான். கொள்கை என்னவென்று கேட்டாலும் பிரச்சினை, கூட்டணி என்ன, ஆதரவு ஏன், அக்கப்போர் எதனால் என்று மடக்கினாலும் பிரச்சினை. இந்த நிலை நீடித்தால் சீமானை விமரிசிப்பது மிகவும் கடினமென்ற நிலை தோன்றிவிடும்.

கம்யூனிஸ்டுகள் நல்லவர்கள்தானாம், ஆனால் தோற்று போவர்கள் என்பதால் ஆதரிக்கவில்லையாம். தோற்கும் குதிரையில் பந்தயம் கட்ட  தயாரில்லை என்பதில் என்ன கொள்கை வெங்காயம் இருக்கிறது? இதையே ஈழத்திற்கு விரித்தால் ராஜபக்சேவின் பலத்திற்காக பிரபாகரனையல்லவா அண்ணன் சீமான் தூக்கி எறிந்திருக்க வேண்டும்? இவர்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதற்கான அளவுகோல் நல்லவர்களா என்பதை வைத்தல்ல, வெற்றி பெறுபவர்கள் என்பதை வைத்துதான். இதையெல்லாம் கூச்சப்பட்டுக் குப்புறப்படுத்துக் கொண்டே பேசப்படும் தத்துவ மொழிகளாக இல்லாமல் வெளியே பகிரங்கமாக வீரத்துடன் ஒலிப்பது முக்கியம். அந்த வீரத்தில் விவேகம் இல்லை விவேக்கின் நகைச்சுவை மட்டும் தானே  இருக்கிறது என்று கேட்டால் நீங்கள் சிரிப்பதில் டியூப்லைட்டோடு போட்டி போடக்கூடியவர்கள்.

இதில் கவனிக்கத்தக்க மற்றொரு அம்சமாக பாரி வேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியை தமிழின ஆதரவு கட்சியாக சீமானும் தம்பிகளும் தேர்ந்த ஆய்வறிஞர்கள் போல வரையறுத்திருக்கிறார்களாம். தமிழகத்தில் மாணவர்களை சுரண்டி கொழுத்திருக்கும் பச்சமுத்துவின் எஸ்.ஆர்.எம் குழுமம் இலங்கையிலும் கடைவிரிக்க முயற்சித்து வந்தது கல் தோன்றா மண் தோன்றா அந்தக் கால வரலாறு அல்ல. அகில இந்திய அளவில் மட்டுமல்லாமல் இலங்கை வரையிலும் தன் தொழிலை விரித்து, அதை பாதுகாப்பதற்காக கட்சி தொடங்கி, பீகார் மாநில தேர்தலில் கூட போட்டியிடும் பச்சமுத்துவை தமிழின ஆதரவாளராக சீமான் முடிவு செய்யும் போது, வைகுண்டராசனை ஏன் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியாக கொண்டாடக் கூடாது?

ஒருவேளை அன்று கடாரம், கலிங்கம், ஈழம் என்று நாடுகளை வென்று செல்வங்களை கொள்ளை கொண்டு வந்து கோவில் கட்டிய பழந்தமிழ்வேந்தர்களின் பராக்கிரமத்தை, இன்று இந்தியா, இலங்கை உள்ளிட்ட பலநாட்டு பெற்றோர்களை சுரண்டி செல்வத்தை கொள்ளை கொண்டு வரும் பாரிவேந்தரின் உருவத்தில் சீமான் தரிசிக்கிறார் போலும். பாரிவேந்தரும், வைகுண்டராசனும் தட்சணை வைப்பதிலும், வைத்து விட்டு புலிகளை பூனைக்குட்டிகள் போல நக்கவைப்பதிலும் வல்லவர்கள். அப்பேற்பட்ட பச்சமுத்து அறியாத்தனமாக தவறான கூட்டணியில் இருக்கிறார் என்று அறிஞர் சீமான் செப்பும் போது சிப்பை அடக்க முடியவில்லை, அதுதான் பிரச்சனை.

நாம்தமிழர்
நாம்தமிழர் அறிவார்ந்தவர்களின் கூட்டம்.

மற்றபடி பச்சமுத்துவின் கல்விக் கொள்ளையெல்லாம் வடக்கத்தியானை வென்றெடுத்த தமிழனது வீரமாக சீமானுக்குள் இறங்கியிருக்கலாம். டாஸ்மாக் போதையை விட ‘தமிழ்’ போதையின் மயக்கம் சொல்லிலும், சொதப்புவதிலும் சாதனை படைக்கக் கூடியது. புதிய தலைமுறை தொலைக்காட்சி, எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம் என வேந்தரின் பாதையில் தான் தமிழன் தொலைக்காட்சி, தமிழன் சுயநிதி பொறியியல் கல்லூரி என்று அண்ணனின் தம்பிகளும் பயணிக்கிறார்கள், அந்த வகையில் சீமானது தம்பிகளுக்கு பாரிவேந்தர்தான் பலவகைகளில் இலட்சிய புருஷர்.

இந்த லட்சிய பயணத்தில் நிற்காமல் செல்லும் போதே, நாம் தமிழர் கட்சியின் கல்வி கொள்கை முதலிய கொள்கைகளை அறிவார்ந்த பெருமக்களை கொண்டு வகுக்கப் போவதாக அண்ணன் பொதுக்குழுவில் பெருமை பொங்க அறிவித்தார். ஏற்கனவே அப்படி சிக்கன் 65 போல தயாரிக்கப்பட்ட நாம் தமிழரின் கொள்கை முகநூலில் சூடாக டன் கணக்கில் ஆர்டர் செய்யப்பட்டு ருசிக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்க. கல்வி கொள்கையும் அது போல வேணு பிரியாணியின் ஒரு நாள் விற்பனையை முறியடிக்கும் வேகத்தில் முகநூலில் தின்று தீர்க்கப்படும் என்று நம்புவோமாக.

முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்புக்கு காரணம் ‘ரா’ தான் என்றும், 1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சரான உடன், 73-ம் ஆண்டின் இறுதியிலேயே இறந்துபோய் விட்ட பெரியார் சக்கர நாற்காலியில் வந்து எம்.ஜி.ஆருக்கு பாராட்டு கூட்டம் நடத்தினார் என்றும், காசிஆனந்தன் டபுள்ஸ் ஓட்ட பின்னால் அமர்ந்திருக்கும் பாலுமகேந்திரா சிங்களர் மீது கையெறி குண்டுகளை வீசியபடி வருவார் என்று ஆசிய நாடுகளில் விற்பனைக்கு கிடைக்கும் கோபால் பல்பொடியை விஞ்சிய வண்ணம், உலகமெங்கும் நாம் தமிழர் சீமானின் உளறல்கள் கிராக்கியின்றி உடனுக்குடன் கிடைத்து வருகிறது.

அப்படி ஆக்ஸ்போர்டு, ஹார்வேடு போன்ற வெள்ளையர்களின் வரலாற்று ஆய்வுகளை ஒன்றுமில்லையென ஆக்கி வரும் வண்ணம் பல்வேறு அரிய தகவல்களை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு சீமான் வழங்கிவரும் பின்னணியில் இந்த அறிவார்ந்த பெருமக்கள் யார், அவர்கள் எப்படி இருப்பார்கள் என்ற ஆவல் தோன்றாமல் இல்லை. இத்தகைய அறிவு வதவதவென்று தத்துவங்களையும், தரிசனங்களையும், தவிப்புகளையும், தேடல்களையும் பெற்றுத் தள்ளுவதற்கு எந்த ஊரில் உள்ள சிட்டுக்குருவி லேகியத்தை பயன்படுத்துகிறது என்பது மட்டும் தெரிந்தால் முழு தமிழகமும், தமிழ் மக்களும் அண்ணன் கட்சி அறிஞர்கள் போல மாறுவது உறுதி.

சீமான்
2016-ல் ஆட்சியை பிடித்து முதலமைச்சராக அமர ஐடியா

நாம் தமிழரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டும் ஜெயாவை ஆதரிக்கும் இந்த முடிவை எடுத்திருப்பதாக பேசியிருக்கிறார் சீமான். 2016-ல் ஆட்சியை பிடித்து அவர் முதலமைச்சராக அமர, அண்ணனுக்கு ‘அறிவார்ந்த பெருமக்கள்’ கொடுத்திருக்கும் ஐடியாவாகவும் இது இருக்கக்கூடும்.

என்ன தான் கராத்தே மாஸ்டராக இருந்தாலும் ஒரு சமயத்தில் ஒரு எதிரியை தான் வீழ்த்த முடியும் என்பதால் விஜயகாந்த், பா.ஜ.க போன்றவர்களை எழுந்திருக்க முடியாமல் வீழ்த்துவதற்கு ஜெயாவை பயன்படுத்த போகிறாராம் அண்ணன். வழக்கமாக ஆண்டைகள்தான் அடியாட்களை ஏவுவார்கள். ஆனால் ஒரு அடிமையே ஆண்டையை அதாவது அம்மாவை கையாள் போல பயன்படுத்துகிறார் என்றால் அதை விவேகமென்று பார்க்காமல் தப்பி ஓடும் மான் கராத்தே மாஸ்டர் போல பார்ப்பது பாரிய பிழை.

வேறு கட்சிகளை என்ன செய்வதாக உத்தேசம் என்றால், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அண்ணனை எதிரியாக கருதினாலும் இது போன்ற அல்லு சில்லு கட்சிகளை அவர் எதிரியாக கருதவில்லையாம். அதன் பின்னர் இந்த மே மாதம் முதல் ஒரு ஆண்டுக்கு புலிப்பாய்ச்சல் என்ற வேலைத்திட்டத்தை வைத்து ஒரு ஆண்டு வேலை செய்யவிருக்கிறாராம். பின்னர் 2016 தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு முதல்வராக போகிறாராம். பின்னர் பிரதமர், அடுத்து அமெரிக்க ஜனாதிபதி, அப்பால் ஐநா செயலர், பிறகு பிரபஞ்ச பொறுப்பாளர், அண்டத்தின் ஆண்டவர் என ஏணிகளில் ஏறி மண் முதல் விண் வரை பல்வேறு பதவிகளை பிடிக்க அண்ணன் அட்டகாசமான திட்டங்களை வைத்திருக்கிறார். இந்த மெயின் திட்டத்தில் தம்பிகள் பலரும் துணைத்திட்டங்களை அதாவது வார்டு, எம் எல் ஏ, எம்பி, ஐநாவில் கொடி ஏற்றும் வேலை என்று வைத்திருக்கிறார்கள். ஆகவே அண்ணனும், தம்பிகளும் ஒருவரை ஒருவர் இந்த கனவுத் தூக்கத்தில் இருந்து எழுப்புவது சாத்தியமில்லை. அதையும் மீறி எழுப்ப வேண்டும் என்ற கருணை உங்களை தொந்தரவு செய்தால் இன்செப்ஷன் படக்கதை போல கனவுக்குள் ஊடுருவித்தான் மீட்க முடியும்.

யாராவது அண்ணனை தூக்கத்தில் இருந்து எழுப்பிவிட்டால் தேவலை.

இடிந்தகரை போராட்டத் தலைமைக்கு தான் பல மணி நேரம் அரசியல் பாடம் எடுத்ததாக கூறிக்கொள்ளும் அண்ணனுக்கு அரசியல் பாடம் எடுத்த மாமேதை யார், அல்வாக்கே அல்வா கொடுத்த ஆயிரம் வாலா – அறிவுவாலா யார் என்று தெரியாமல் மண்டையே வெடித்துவிடும் போல இருக்கிறது.

திராவிட இயக்கம், திமுக, போலிக் கம்யூனிஸ்டுகள் போன்றவர்களெல்லாம் பல்லாண்டுகளாக ஓடிப் பெற்ற சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், கவர்ச்சி அரசியல், சவடால் பேச்சு, இன்ன பிற அணியலங்காரங்களை, அண்ணன் மட்டும் தோன்றிய ஓரிரு ஆண்டுகளில் ஒளி வேகத்தில் பெற்று விட்டார் என்பது மலைக்க வைக்கிறது. தேர்தல் அரசியலும், தமிழினவாதமும் போட்டி போட்டுக் கொண்டு நாம் தமிழர் பார்ட்டியை பஞ்சராக்கி வருகிறது.  காற்றுப் போன இந்த பலூனை கோபுரத்தில் கட்ட நினைக்கும் தம்பிகள் பின்னொரு நாளில் அவர்களது முயற்சி எள்ளி நகையாடப்படும் என்பதறிந்து மனம் திருந்தி வந்தால் ஆறுதலும், தேறுதலும், விடுதலையும் சொல்லித் தர நாங்கள் இருக்கிறோம். முடிவு செய்யுங்கள்!

–    ரவி

அதிகாரத் திமிரில் தேர்தல் கமிசன் நடத்தும் கோமாளிக் கூத்து !

4

ள்ளூர் திருவிழாக்களின் போது, காப்பு கட்டப்பட்ட பின்னர் எல்லோரும் சுத்தபத்தமாக இருக்க வேண்டுமென்று போடப்படும் கட்டுப்பாடுகள் கேலிக்கூத்தாக முடிவதைப் போலவே, ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் அதிகாரிகள் விதிக்கும் கட்டுப்பாடுகளும் கெடுபிடிகளும் கோமாளிக் கூத்தாகிப் போகின்றன.

தேர்தல் கமிஷன்
இந்திய தேர்தல் கமிசன்

வீடியோ கண்காணிப்புக் குழுக்கள், பறக்கும் படைகள் – எனத் தேர்தல் அதிகாரிகள் ஆரவாரம் செய்தாலும், வாகனச் சோதனைகள் நடத்தி கெடுபிடிகளைத் தீவிரமாக்கினாலும் இதுவரை எந்த ஓட்டுக்கட்சி அரசியல்வாதியோ, அவர்களது பணமோ சிக்கவில்லை. மாறாக, சேலம் மாவட்டம் குப்பனூர் சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்த ரூ.35 இலட்சத்தில் 8.25 இலட்சத்தை போலீசாரே சுருட்டிக் கொண்ட விவகாரம் வெளிவந்து நாறியது. இலஞ்ச ஊழலில் ஊறித் திளைக்கும் இத்தகைய அதிகார வர்க்கத்தையும் போலீசையும் கொண்டுதான், தம்மை மேலான அதிகாரமாகக் காட்டிக் கொள்ளும் தேர்தல் அதிகாரிகள் பணப் பட்டுவாடாவைத் தடுக்கப் போவதாகச் சதிராடுகிறார்கள்.

ஏற்காடு இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் செல்லாக்காசாகிப் போனதையும், மாநிலத் தேர்தல் ஆணையர் பிரவீண் குமாரும் தேர்தல் அதிகாரிகளும் ஆளும் கட்சியின் கைப்பாவையாக இயங்கியதையும் நாடறியும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஜெயலலிதாவின் விசுவாசியான தமிழக போலீசுத்துறையின் சட்டம்-ஒழுங்கு பிரிவு டி.ஜி.பி. ராமானுஜம், பதவியிலிருந்து ஓவு பெற்ற பின்னரும் அப்பதவியில் தொடரும் நிலையில், அவர் தலைமையிலான போலீசைக் கொண்டு தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை நேர்மையாக நடத்த வாய்ப்பேயில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் பிரம்மாவிடம் தி.மு.க. மனு கொடுத்துள்ள போதிலும் இது வரை நடவடிக்கை ஏதுமில்லை.

தேர்தல் சட்ட விதிமுறைகளின்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் ஒரு தொகுதியில்கூட போட்டியிட முடியாத நிலையில், டான்சி ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா, 2001-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இவ்வுண்மையை மறைத்து நான்கு தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். ஜெயாவின் மனுக்கள் தேர்தல் அதிகாரிகளால் தள்ளுபடி செய்யப்பட்டன. எனினும், இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, அவ்வாறு தாக்கல் செய்ய வில்லை எனப் பொய்யான வாக்குறுதி அளித்து மேலும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட மனு செய்த குற்றத்திற்காக அவர் மீது குற்றவழக்கு தொடரக்கோரி மத்திய தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் கொடுத்து, வழக்கு தொடுத்துள்ள போதிலும் இன்றுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமைச்சர்கள் உள்ளிட்டு ஓட்டுக்குப் பணம் கொடுத்தோர் மீது ஒப்புக்காக வழக்கு பதிவானாலும், தேர்தல் முடிந்த பின்னர் அவை அப்படியே கிடப்பில் போடப்படுகின்றன. இதற்காக யாரும் தண்டிக்கப்படுவதோ, பதவி பறிக்கப்படுவதோ நடப்பதில்லை. இப்படி தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் கழிப்பறைக் காகிதமாகிவிட்ட நிலையில், ஏதோ சாதிக்கப் போவதாகக் காட்டிக் கொள்ளும் நோக்கத்துடன், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமிழக வாக்காளர்களுக்கு விநியோகிக்க ரூ. 5 ஆயிரம் கோடி பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கப்பல்கள் மூலம் கடத்தி வருவதாக தேர்தல் ஆணையருக்கு இரகசியத் தகவல் வந்துள்ளதாகக் கூறி, தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த கப்பல்களில் தொடர்ந்து 3 நாட்களுக்குத் தேடுதல் வேட்டை எனும் கோமாளிக் கூத்தை அடிமுட்டாள்தனத்துடன் அரங்கேற்றி தேர்தல் அதிகாரிகள் பரபரப்பூட்டினர்.

ஓட்டுக்கட்சிகளுக்கிடையே கொள்கை வேறுபாடுகள் இல்லாமல் போய்விட்டதாலும், வாக்களிப்பதைத் தவிர வேறு பங்கேற்பு ஏதுமின்றி அரசியலிலிருந்தே படிப்படியாக மக்கள் விலக்கப்பட்டு வருவதாலும், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதும் ஓட்டுக்கட்சிகள் மீதும் அதிருப்தியும் நம்பிக்கையின்மையும் மக்களிடம் பரவி வருகிறது. இந்த அதிருப்திக்கு வடிகால் வெட்டி, நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தின் மீதும் இன்றைய அரசியலமைப்பு முறை மீதும் நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தேர்தல் ஆணையம் இத்தகைய சூரத்தனங்களுடன் சாமியாடிக் கொண்டிருக்கிறது. அதற்கு உடுக்கையடித்துக் கொண்டிருக்கின்றன ஆளும் வர்க்க ஊடகங்கள்.

– தலையங்கம்
___________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2014
___________________________________

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

1

puthiya-jananayagam-april-2014

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. மறுகாலனியாக்கம் – ஆணாதிக்கம் வீழ்த்துவோம் ! பெண் விடுதலையைச் சாதிப்போம்!!

2. தேர்தல் கமிசனின் கெடுபிடிகள் : அதிகாரத் திமிரில் நடக்கும் கோமாளிக் கூத்து!

3. யாருக்கு வேண்டும் தேர்தல்?

4. தேர்தல் : கார்ப்பரேட் முதலாளிகள் நடத்தும் சூதாட்டம்! – உங்கள் ஓட்டு! அவர்கள் சீட்டு !!

5. காங்கிரசு – பா.ஜ.க : நீயும் நானும் ஒண்ணு ! வாக்காளர் வாயில மண்ணு!!

6. பிரபஞ்சப் பெருங்கடமை முடித்து, ஓட்டுப் பொறுக்கப் புறப்பட்டார் உதயகுமாரன்!

7. போலி கம்யூனிஸ்டுகள் : பாசிச ஜெயலலிதாவின் பிழைப்புவாத அடிமைகள்!

8. ஊடக விலை மாந்தர்கள்!

9. ஏழைகள் என்றால் அத்தனை இளப்பமா? – உசிலை ஸ்டேட் வங்கியின் அடாவடித்தனத்திற்கெதிராக வி.வி.மு.வின் ஆர்ப்பாட்டம்

10. உக்ரைன் : அமெரிக்காவின் மேலாதிக்கப் பேராசையில் விழுந்த மண்!

11. ‘தி இந்து’க்கள் கேட்கிறார்கள், “எதுவெல்லாம் தேசதுரோகம்?”

12. நெய்வேலி : தொழிலாளியைக் கொலை செய்து தொழிலைப் பாதுகாக்கும் படை!

13. மர்மக் காய்ச்சலும் இல்லை, மண்ணாங்கட்டியும் இல்லை!

14. இயற்கை மனித-குலத்தின் முதல் எதிரி முதலாளித்துவ பயங்கரவாதமே!

15. நீலநரியின் சாயம் வெளுத்தது!

16. ஏழு தொழிலாளர் படுகொலை: முதலாளித்துவ பயங்கரவாதத்தின் பேயாட்டம்!

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு சுமார் 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.