பொதுவுடைமையைத் தனது பெயரில் தாங்கி, தேசிய இன விடுதலையைத் தனது இலட்சியமாக அறிவித்துக் கொண்ட ஒரு கட்சி குறுகிய இனவெறிக் கட்சியாக, அதுவும் பாசிச இனவெறிக் கட்சியாகவும் இருக்க முடியுமா? முடியும் என்று திரும்பத் திரும்பக் காட்டி வருகிறது, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி (த.தே.பொ.க.) என்ற பெயரிலுள்ள ஒரு அமைப்பு.
பாட்டாளி வர்க்க அரசியல் சித்தாந்தத்துக்கு மாறாக, எதிராக, இணையாக, தொழிற்சங்கப் பிழைப்புவாதத்தைத் தனது சித்தாந்தமாகக் கொண்டிருந்த நம்பூதிரிபாடின் சீடர்கள் அல்லவா, இவர்கள்! அதனாலேயே தமது தொப்புள் கொடி உறவைக் கைவிட மறுக்கிறார்கள்! தாங்களே அறிவித்துக் கொண்ட இலட்சியத்தையும் கொள்கையையும் மட்டுமல்ல; சொந்த அறிவையும் புதைகுழியில் போட்டுவிட்டு அவற்றுக்கு எதிரான நிலைக்கு வலிந்து வாதம் புரிகிறார்கள்.
“தமிழர் இன எழுச்சி ஏற்படும் போதெல்லாம் தமிழகத்திலுள்ள இடதுசாரி இந்தியத் தேசியவாதிகளும் வலதுசாரி இந்தியத் தேசியவாதிகளும் பீதி அடைகின்றனர். இந்தியத் தேசியத்திற்கும் இந்திய ஒற்றுமைக்கும் இடையூறு ஏற்பட்டு விடுமோ என்று கலவரமடைகின்றனர்; கலங்கித் தவிக்கின்றனர்.”
“இனி முரண்பாட்டையும் இனச் சிக்கலையும் வெறும் வர்க்கச் சிக்கலாகவும் அரசியல் கட்சிகளின் குறைபாடுகளாகவும் திரித்துக் காட்டி இரசவாதம் செய்வார்கள் இந்தியத் தேசிய இடதுசாரிகள்” (த.தே.பொ.கவின் பத்திரிக்கையான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், 2012 மார்ச் 1613) என்று குற்றஞ்சாட்டும் மணியரசன் கும்பல் அதற்கு எடுத்துக்காட்டாக, ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகளையும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் இவற்றின் நிலைப்பாடுகளையும் சுட்டுகிறது.
இன முரண்பாட்டையும் இனச் சிக்கலையும் அலசி ஆராய்ந்து கரை கண்ட மேதையாகிய, சிந்தனைச் சிற்பியாகிய மணியரசனே! நேர்மையிருந்தால் இங்கே நாங்கள் எழுப்பும் சில கேள்விகளுக்கு உங்கள் பேராசான் நம்பூதிரிபாடு பாணியில் சுற்றி வளைக்காமல் நேரடியாகப் பதில் சொல்லுங்கள்:
இந்திய தேசியத்துக்கும் அதனால் சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு, மராத்தி, ஒடியா, வங்காளி, காசுமீரி, பஞ்சாபி, அசாமி முதலிய தேசிய இனங்களுக்கும் இடையிலான முரண்பாடுதானே பகை முரண்பாடு?அவ்வாறின்றி இத்தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பகை முரண்பாடுகளா? ஒடுக்கப்படும் இந்த தேசிய இனங்கள் தமது எதிரியாக, பகைச் சக்தியாகக் கொண்டுள்ளது, இந்திய தேசியத்தைத்தானே தவிர தங்களைப் போன்ற நிலையிலுள்ள பிற தேசிய இனங்களை எதிரியாக பகை சக்தியாகக் கொள்ள முடியுமா?
நேரடியாகவே கேட்கிறோம்: தமிழ் தேசிய இனத்துக்கும் இந்திய தேசியத்துக்கும் இடையிலானதுதான் பகை முரண்பாடு; தமிழ் தேசியத்தின் எதிரியாக, பகை சக்தியாக இருப்பது, இந்திய தேசியம்தான்! அண்டை தேசிய இனங்களாக இருக்கும் மலையாள, கன்னட, தெலுங்கு இனங்களோடு ஆற்றுநீர் பகிர்வு, எல்லைப் பிரச்சினை போன்றவைகளில் முரண்பட்டு நிற்பதாலேயே தமிழ் தேசிய இனம் அவற்றை பகை சக்தியாக எதிரி சக்தியாகக் கருத முடியுமா?
இன்னும் நேரடியாக, பகிரங்கமாகவே கேட்கிறோம்: முல்லைப் பெரியாறு தேவிகுளம், பீர்மேடு பிரச்சினைக்காக மலையாளியையும்; காவிரி கோலார் பிரச்சினைகளுக்காக கன்னடனையும்; பாலாறு சித்தூர் பிரச்சினைகளுக்காக தெலுங்கனையும் தமிழன் எதிரியாகக் கொண்டு பகைநிலை எடுக்க வேண்டுமா? அப்படிச் செய்வதைத் தானே இந்திய தேசியம் விரும்புகிறது. அதுதானே இந்திய தேசியத்துக்குத் துணைபோவது? இதைத் தானே த.தே.பொ.க தலைமையாகிய நீங்கள் செய்கிறீர்கள்?
இந்திய தேசியத்திற்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் தேசிய இனங்களுக்கிடையிலான நதிநீர் மற்றும் எல்லைப் பிரச்சினைகளைப் பகை முரண்பாடுகளாக வளர்த்து மோதவிடுவது தானே இந்திய தேசியத்தை பராமரித்து, பாதுகாப்பது; இதன் மூலம் இந்திய தேசியத்துக்கு எதிரான போராட்டங்களை வலுவிழக்கச் செய்வதுதானே த.தே.பொ.க.வின் வேலையாக இருக்கிறது?
தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைப் பகை முரண்பாடுகளாக வளர்த்து மோதவிடுவிடும் த.தே.பொ.க.வின் கொள்கையை, வேலையை ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் செய்யவில்லை என்று குத்தாட்டம் போடுகிறது மணியரசன் கும்பல்.
“முல்லைப் பெரியாறு அணைய மீட்க எல்லையை மூடு! பொருளாதாரத் தடைபோடு!” என்ற தலைப்பிலான ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் 2012 ஜனவரி வெளியீடு குறித்து, “முல்லைப் பெரியாறு உரிமையை மீட்க, கேரளாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும்,கேரளாவுக்குச் செல்லும் 13 பாதைகளை மூடவேண்டும் என்றும், அது கூறுவது சரி. ஆனால் இதே ம.க.இ.க. கேரளாவுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கும் நமது கோரிக்கையை 11.02.2010இல் எதிர்த்து தனது வினவு இணையத் தளத்தில் எழுதியது” என்று த.தே.பொ.க. வாதிடுகிறது.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான முரண்பாடு 2012 ஜனவரியில் நிலவிய அளவுக்கு 2010 பிப்ரவரியில் கூர்மையடைந்திருக்கவில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வினவு இணைய தளத்தில் எழுதியதை எடுத்து வைத்துக் கொண்டு மேற்படி கோரிக்கைகளை முன்வைத்த தமிழினவாதிகளின் நிலைப்பாட்டிற்கு எதிராகவும் முன்னுக்குப்பின் முரணாக எழுதுவதாகவும் இப்போதைய ‘தமிழின எழுச்சியை மடைமாற்றுகிறது ம.க.இ.க.’ என்றும் அவதூறு செய்கிறது த.தே.பொ.க. அப்போதும்கூட கேரளாவுக்கு எதிரான பொருளாதார தடை, முற்றுகை விதிப்பது உடனடி நடவடிக்கையாக இருக்கக்கூடாது கடைசி பட்சமாக நடத்தலாம் என்று தான் வினவு இணையத்தளம் எழுதியிருந்தது.
2012 ஜனவரி வெளியீட்டில் முல்லை பெரியாறு பிரச்சினை கூர்மையடைந்ததற்கான அடிப்படையை விளக்கும் போது தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கத்தின் விளைவாக எழுந்தது என குறிப்பிட்டிருக்கிறோம். இது ஏதோ இனப்பிரச்சினை, வர்க்கப் பிரச்சினையாகவும் இந்திய தேசியத்திற்கு ஆதரவாகவும் மடைமாற்றுவது என்றும் த.தே.பொ.க. வியாக்கியானம் செய்கிறது.
இந்திய தேசியத்தை உருவாக்கிப் பேணி வளர்க்கும் ஆளும் வர்க்கங்களையும் அவர்களின் தனியார்மயம் தாராளமயமாக்கம் உலகமயமாக்கத்தையும் ம.க.இ.க. முதலிய புரட்சிகர அமைப்புகள் எதிர்ப்பது, எப்படி த.தே.பொ.க. சொல்வதைப் போல இன உணர்வாளர்களை இந்திய தேசியவாதத்திற்குள் இழுத்துச் செல்வதாகும்?
ஆனால், இந்திய தேசியத்தையும், அதைக் கட்டிக் காக்கும் இந்திய அரசையும் தனது பகைச் சக்தியாக அறிவித்துக் கொண்டுள்ள த.தே.பொ.க. அவற்றுக்கு எதிராக ஒரு புல்லைக் கூட பிடுங்கியதில்லை என்பது இருக்கட்டும்; ம.க.இ.க. முதலிய புரட்சிகர அமைப்புகளைவிட தமிழீழத்தின் உறுதியான, ஆதரவாளராகப் பீற்றிக் கொள்ளும் த.தே.பொ.க.வும் பிற தமிழ் இனவாதிகளும் கூட முள்ளிவாய்க்கால் படுகொலை வரை இந்தியாவை (இந்திய தேசியம், இந்திய அரசு முதலியவற்றை) தமிழீழ விடுதலையின் பகைச் சக்தி என்ற உண்மையைக் சொல்லத் துணிந்ததுண்டா?
நக்சல்பாரிப் புரட்சிக் கட்சி தோன்றிய காலத்திலிருந்தே இந்திய தேசியத்துக்கு எதிராக தேசிய இனங்களின் விடுதலையை உயர்த்திப் பிடித்து வந்திருக்கிறது. அதனாலேயே தேசிய இனப் பிரச்சினை என்பது இனிமேலும் கிடையாது, முடிவுக்கு வந்துவிட்டது என்று தனது கட்சிப் பேராயத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, நம்பூதிரியின் போலி மார்க்சிஸ்ட் கட்சி. அப்போதும் அந்தக் கட்சியில்தான் இன்றைய த.தே.பொ.க. தலமை குப்பை கொட்டிக் கொண்டிருந்தது. அதன்பிறகு வெவ்வேறு அவதாரமெடுத்து, தனது விரைவான சொந்த வளர்ச்சிக்கான குறுக்குவழி “அடையாள அரசியல்” என்ற முறையில் த.தே.பொ.க. தலமை தெரிந்தெடுத்துக் கொண்டதுதான், தமிழ்த் தேசிய இனப் பிரச்சினை. மற்றபடி தமிழ்த் தேசிய இனத்தின் மீது அதற்குள்ள பற்றினால் அல்ல.
ஏற்கெனவே இங்கே பல பத்து தமிழ்த் தேசிய இனக் குழுக்கள் உள்ளன; அவை எல்லாவற்றையும் விடத் த.தே.பொ.கட்சித் தலைமை வித்தியாசமானதும் ஆழ்ந்த சிந்தனையும் தமிழ்த் தேசியத்தின் தீவிரப் பற்றும் தெளிவும் கொண்டதாகக் காட்டிக் கொள்கிறது; ஆனால், நடைமுறையில் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகவே த.தே.பொ.கட்சித் தலைமை பலவாறு உளறிக் கொட்டிக் கிளறி மூடுகிறது.
நிலவுடைமை பண்பாட்டையும், பார்ப்பனிய சனாதனத்தைப் புகுத்திய நிலவுடைமை மன்னர்களின் அருமை பெருமைகளை ஏற்றிப் போற்றி பாரம்பரிய உரிமை பாராட்டி தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப்படுத்துகிறது. இந்திய தேசியத்தை இந்து தேசியத்தை உயர்த்திப் பிடித்த பார்ப்பனிய பாரதியைப் போற்றுகிறது. இராமன் தமிழ்க் கடவுள் என்று சொல்லி இந்துத்துவத்தையும் தமிழ்த் தேசியத்துக்குள் புகுத்துகிறது.
இவ்வாறு உண்மையில் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான இந்துத்துவ இந்திய தேசியத்தையும் ஏற்றுக் கொண்டுள்ள த.தே.பொ.க. தலைமை, குறுகிய இனவெறி சிவசேனா பாசிசத்தையும் கையிலெடுத்துக் கொண்டுள்ளதில் வியப்பில்லை. பிற மாநிலங்களில் இருந்து பிழைப்புத் தேடித் தமிழகத்தில் குடியேறும் பிற மாநிலத்தவர்கள் அனைவரும் கிரிமினல் குற்றவாளிகள், தமிழர்களுக்கு எதிராக ஆதிக்கம் புரிபவர்கள், அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறி சிவசேனாக்களின் பாசிச இனவெறி பாணியில் நஞ்சு கக்குகிறது, த.தே.பொ.க. தலைமை.
“கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்முறை எனப் பலக் குற்றச் செயல் தமிழ்நாட்டில் பெருகிவிட்டதற்கு முகாமையான காரணம் வெளிமாநிலத்தவர்களின் மிகை வருகை என்று தமிழகக் காவல்துறை அறிவித்துள்ளது” என்று கூறும் த.தே.பொ.க. தலைமை, தானும் அதை வழிமொழிந்து, “தமிழகத்தில் தமிழர்கள் நடத்தும் கொள்ளை, பாலியல் வன்முறைகளை விட அதிக விகிதத்தில் வெளிமாநிலத்தவர் நடத்தும் கொள்ளை, பாலியல் வன்முறை நிகழ்வுகள் இருக்கின்றன” என்று பச்சையாக கோயாபல்சு புளுகுகளை அள்ளி வீசுகிறது.
குடியேறும் வெளிமாநிலத்தவர் அனைவரும் ஒரே வகையினர் அல்ல. இன்றைய தனியார்மயம், தாராளமயம், உலகமய சூழலில் வாழ்வாதாரங்கள் பிடுங்கப்பட்டு, துரத்தியடிக்கப்படும் உழைப்பாளி மக்கள் பிற மாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்து, ஓலைக்கொட்டைகளிலும், தகரக் கொட்டடிகளிலும் புழுங்கித் தவிக்கின்றனர். தமிழ் ஒப்பந்தக்காரர்களிடம் கொத்தடிமைகளாக அற்பக் கூலிக்கும், சில தமிழ்க் கிரிமினல்களின் கேட்பாரற்ற தாக்குதல், வழிப்பறிக்கும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும் பலியாகிறார்கள்.
தமிழகத்திலுள்ள சுயநிதிக் கல்லூரிகளில் சேர்ந்து சீரழிந்த பண்பாட்டிலும், கிரிமினல் குற்றங்களிலும் ஈடுபடும் வெளிமாநிலத்தவர் வேறொரு பிரிவினர். இவர்கள், தமது சொந்த மாநிலங்களில் குறுக்கு வழியில் செல்வத்தைக் குவிக்கும் குடும்பங்களின் செல்லப்பிள்ளைகள். இந்த வேறுபாட்டை மூடிமறைக்கிறது, த.தே.பொ.க. தலைமை.
தமிழ்த் தேசத்தில் குடியேறும் வெளிமாநிலத்தவர்கள் எல்லாம் அடகுக்கடை, சினிமா முதலீட்டாளர்கள், தமிழர்கள் மீது ஆதிக்கமும் சுரண்டலும் செய்பவர்கள் மட்டுமல்ல, கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் என்று பார்ப்பன பாசிச ஜெயாவும் அதன் போலீசும் கூறுவதை வழிமொழிந்து மணியரசன் கும்பல் குற்றஞ் சுமத்துகிறது. அதனால் வெளிமாநிலத்தவர் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்று போராடவும் செய்கிறது.
வெளி தேசங்களில் குடியேறும் தமிழர்கள் எல்லாம் உழைக்கும் மக்கள்; குடியேறும் தமிழர்கள் அம்மாநிலங்களில் ஆதிக்கம் புரிபவர்களோ சுரண்டுபவர்களோ அல்ல என்று புளுகுகிறது, த.தே.பொ.க. தலைமை.
இதுவும் உண்மையல்ல. வெளிமாநிலங்களில் குடியேறும் தமிழர்களிலும் ஒருபிரிவினர் கந்துவட்டி லேவாதேவியிலும், அம்பானி, டாடா, பிர்லாக்களின் கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிகார வர்க்க முதலாளிகளாகவும், (சசிகலா) நடராசன், தம்பிதுரை, தேவநாதன் போன்ற தமிழர்கள் உ.பி., பீகார், அரியானாவில் சுயநிதிக் கல்லூரிகள் வைத்துக் கொள்ளையடிக்கிறார்கள், குடிபெயரும் தமிழர்கள் மற்றும் புலம் பெயரும் ஈழத்தமிழர்களிலும் ஒரு சிலர் குற்றச் செயல்களில் பிடிபடுகின்றனர். அதற்காக எல்லாத் தமிழர்களையும் வெளியேற்ற வேண்டும் என்பது சரியாகுமா என்று மணியரசன் கும்பல்தான் கூறவேண்டும்.
பாசிசக் கழிசடை அரசியல் மணியரசன்களே! ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பையின் தாராவியில் வாழும் ஐந்து இலட்சம் உழைக்கும் தமிழ் மக்களைத் தாக்கும் சிவசேனா இனவெறியர்களுக்கும், உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து வாழும் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைத் தாக்கும் அந்தந்த நாட்டு நிறவெறி பாசிஸ்டுகளுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு?
பின் குறிப்பு: மணியரசன் வகையறாக்கள் எமக்கு எதிராகத் தமது அவதூறுகளைத் தொடர்வதற்கு வசதியாக ஒரு தகவல்: எமது தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நூற்றுக் கணக்கில் ஒரிசா, ஜார்கண்ட், பீகார், சட்டிஸ்கர், வங்காள புலம்பெயர் தொழிலாளர்களை உறுப்பினர்களாக்கி வருகிறது!
______________________________________________________
– புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012
______________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்
- தெற்கே வாருங்கள், இளைஞர்களே, ஆனால் இங்கே டிராகன்கள் காத்திருக்கிறது!
- வாடகைதாரர் விவரம் சேகரிக்கும் போலீசுக்கு முதல் கட்ட ஆப்பு – HRPC வழக்கில் தீர்ப்பு !!
- என்கவுண்டர்: துப்பாக்கி குற்றத்தை உருவாக்குவதுமில்லை – ஒழிப்பதுமில்லை!
தேசிய வாதம் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் பல இன வாதம் என்று பல வாறு குழப்பி குளிர் காயநினைக்கிறீர்கள். செத்துப்போன சித்தாந்தங்களை தோண்டி யெடுத்து உயிரூட்டநினைக்கிறீர்கள். உலக அரங்கிலும் சரி இந்தியாவிலும் சரி இதுநடக்காத ஒன்று. தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டாள் தமிழர்கள் ஐம்பது சதத்திக்கும் குறைவுதான். தெலுங்கு, கன்னடம், மல்யாளம், சவுராஷ்ட்டிரம், இந்தி, அரபு, உரூது மற்றும் பிற் மொழி பேசுவோர்கள் தான் அதிகம். அதேநிலை தான் மற்ற மாநிலங்களிலும். முஸ்லீம் மாநிலமான காஷ்மீரில் மட்டும்தான் மதவெறியால் இனவாதம் வெறிபிடித்து ஆடுகிறது. அதுவும் உங்களைப் போன்ற இஸ்லாமிய ஆதரவாலர்களால்தான். மக்கள் அனைவரும் ஜாதி, மதம், இனம், மொழி,நிறம் ம்ற்றும் பிற பேதங்கள் இல்லாமல் வாழ உங்கள் பத்திறிக்கையை பயன் படுத்துங்கள்.
இலங்கையில் தனி ஈழம் என்ற பெயரில் “பிரபாகரனை” உசுப்பிவிட்டு படுபாதகத்தை செய்தீர்கள். தமிழ்நாட்டில் “உதய குமாரை” உசிப்பிவிட்டு எங்கு போனார் என்ற தகவலேதெரியாமல் போய்விட்டது. பாசீசம், தேசீயம் என்று கூறி மக்களை போராட்டத்தை தூண்டி தோல்வியடைந்து வருகிரீர்கள். மின் தட்டுப்பட்டை வைத்து மக்களை பட்டினி போட வைக்கீறீர்கள்.
மிக சிறந்த ஆர் எஸ் எஸ் பேச்சு. தமிழ் தேசியம் வாராது என்று சொல்லும் அதே எழுத்து அடுத்த நொடியில் காச்மீர் மாநிலம் என்று இந்திய ஒருமைபாட்டை சொல்லி அதிலும் இஸ்லாமிய மக்கள் மீதான இன வெறியை இந்திய இராணுவத்தின் மூலம் செய்து ஆனால் அவர்கள் மீது இன வெறி பலிபோட்டு. அதே நேரத்தில் “இந்தியர்கள்” ஆகிய நாங்கள் ” ஜாதி, மதம், இனம், மொழி,நிறம் ம்ற்றும் பிற பேதங்கள் இல்லாமல் வாழ உங்கள் பத்திறிக்கையை பயன் படுத்துங்கள்” என்று ஒரு நச்சு கருத்தை சொல்லி. தமிழ் தேசிய போராளியையும், தமிழ் மக்களுக்காக அனுவுலை எதிறாக போராடிய தோழரையும் கொச்சை படுத்தி இந்திய தேசம் வளர்க்கும் இது போன்ற ஆர் எஸ் எஸ் காரர்களிடத்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நட்ராயன், கொஞ்சம் கட்டுரையை முழுக்க படிச்சுட்டு பின்னூட்டம் போடுங்களேன், அப்புறம் உங்க வயசு என்னன்னு தெரிஞ்சுக்கலமா? தினசரி ஷாகா போறீங்களா? எல்லாம் உங்க எதிர்கால அக்கறைக்காக கேட்கிறோம், சொல்லுங்க!
“தேசிய வாதம் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் பல இன வாதம் என்று பல வாறு குழப்பி குளிர் காயநினைக்கிறீர்கள். செத்துப்போன சித்தாந்தங்களை தோண்டி யெடுத்து உயிரூட்டநினைக்கிறீர்கள். உலக அரங்கிலும் சரி இந்தியாவிலும் சரி இதுநடக்காத ஒன்று.”
படிக்காமலேயே பதில் போடவேண்டுமென்று ஏன் “அறிவாளித்தனமாக” நினைத்து போடுவதை நிறுத்தி தொலைங்கப்பா…..
இன்னும் என்னென்ன சுக்குசுக்காக நாட்டை, மக்களைப் பிரிக்கும் வேறு என்னென்ன “வாதங்கள்” இருக்கின்றன என்பதை எனக்கும் தெரியப்படுத்தவும். நான் அவற்றில் சாத்தியமான ஒரு வாதத்தைப் பிடித்துக் கொண்டு பிழைக்கும் வழி பண்ணிக் கொள்ளுகிறேன். எனக்கு கொஞ்சம் எழுத்து, பேச்சுத் திறமை இருப்பதைப் பயன்படுத்தி எர்த் வாதமாயினும்ஒரு விளாசு விளாசி, புகழ், பணம்,
பதவி, முதலியன தேடிக்கொள்கிறைன். சொத்துக் குவிப்பு
வழக்குகளையவழக்குகளை, வருமான வரி ஏய்த்தல் வழக்குகளை வராமலேயே பார்த்துக்கொள்ளும் திறமையையம் ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்ளுகிறேன். சரி, கட்சிக்கு ஒரு நல்ல பெயரையும் தெரியப்படுத்தவும். கழகம் என்று முடிந்தால் அந்த பெயருக்கு அதிருஷ்டம் அதிகம் என்கிறார்கஎன்பது உலகோர் அறிந்ததே. கமறட்சிப் பெயரின் மற்ற சொற்களை அனுப்பவும்.
தனி தமிழ் தேசியம் தேவை தான் அதற்காக போராட வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை. போராட்டம் எந்த பாதையானலும் சரி அதை செம்மையாக ஒத்த கருத்துடன் துனிந்து போராட வேண்டும்.
தமிழ் தேசியத்துக்கு எதிரிகள் அப்பாவி அன்டை மாநிலத்தில் இருந்து பிழைப்புக்காக வந்த பாமர மக்கள் இல்லை. இந்திய அரசாங்கத்தில் வீட்றிர்கும் அதிகார வர்க்கமும் இந்திய தேசத்து ஒருமை பாட்டுக்காக கொடி பிடிக்கும் ஆர் எஸ் எஸ் டிரவுசர் பாண்டிகளும், முதலாலிகளான பனியாக்களும், மேனன்களும்,நாயர்களும்,ரெட்டிகளும் தான்.
உண்மையான வீரம் இருந்தால் முதலாலிகளான அப்போலோ ரெட்டியையும், நகை கடை தெலுங்கு செட்டிகளையும், டிவிஎஸ் குழும பார்ப்பனர்களையும், சினிமா ரஜினிகாந்தயும், இந்திய தேசத்து தமிழ் காதலன் கமல், புரட்ச்சி கலைஞர் விசய காந்த்தையும் அடித்து அனுப்ப வேண்டியது தானே. மாட்டார்கள் அவர்களை தொட்டால் இவர்கள் டிரவுசர் கிழிந்து விடும் என்று தெரியும்.
இவர்கள் வீரம் இல்லாம் டீ கடை நாயர்களிடத்தும், கட்டிட தொழில் பிகாரியிடமும், லாரி சிங்கிடமும் தான்
வீரத்தை காட்ட வேண்டும் என்று முற்பட்டால் முதலில் இராமேச்வரம், மண்டபம் பகுதிகளில் அடிமைகளாக அடைக்க பட்டுள்ள ஈழ தமிழர்களை முதலில் விடுதலை பேர போராடுவோம்.
அப்படி தாக்க முற்படும் தமிழ் இன “போராளிகள்” முதலில் தனி தமிழ் தேசியத்துக்கு என்ன அடிப்படை போராட்டத்தை நடத்தினார்கள். கட்டாய தாய் மொழி வழி கல்விக்காக போராடினார்களா? இல்லை தமிழர்களின் மரபு போற்றும் வாழ்கை நெறிகளை தங்கள் வாரிசுகளுக்கு கற்று கொடுத்தார்களா? சமத்துவம் பேசும் இவர்களை போன்ற சிகாமணிகள் இன்னும் தங்கள் குழந்தைகளின் பெயர்களுக்கு முன்னால் “இனிசியல்”களில் இன்னும் அவர்கள் பெயர்களில் இருக்கும் முதல் எழுத்துகளை மட்டும் இட்டுக் கொண்டு பெண் சமுதாயத்தின் உரிமை பற்றி மேடையில் முலங்குவார்கள். இந்த சின்ன காரியத்தில் கூட உரிமை கொடுப்பது இல்லை.
இவர்கள் தமிழ் தேசியத்தையும் பொதுவுடமை பேசவும் கடை விரித்து விடுவார்கள். தமிழனின் உணர்ச்சியை ஒரு வியாபார யுக்கிதியை கையால்வது போல் செய்து அரசியல் பிலைக்கும் இது போன்ற முட்டால்களை பொது புத்தி அறிவு கொண்டு பார்காமல் பகுத்தறிவு கொண்டு ஒடுக்க வேண்டும். தமிழனின் உணர்ச்சிகள் அவ்வலவு கிலே பொய்விட்டதா?
அய்யா தமிழ் தேசியம் தேவை தான் முதலில் அதை உங்கள் விடுகளில் இருந்து முதலாகட்டும். இனத்தை மீட்டு எடுக்க வேண்டும் என்றால் முதலில் மண்ணை மீட்டு எடுக்க வேண்டும். அதற்கு முதலில் “இந்தியா”விடம் போராடுங்கள். பின்பு தமிழ் தேசம் தமிழர்களுக்கு தான் என்று சொல்லலாம்.
இவர்கள் வீரம் இல்லாம் டீ கடை நாயர்களிடத்தும், கட்டிட தொழில் பிகாரியிடமும், லாரி சிங்கிடமும் தான்///
.
.
அப்போ ஜோஸ் ஆளுக்காசு ,ஜோய் ஆளுக்காசு,மலப்புரம் சாரி மனப்புரம்,முத்தூடு பினான்சு அடித்து நொறுக்கினால் நீங்கள் வரவேற்க தயார் என்று மறைமுகமாக சொல்றீனகளா?
ராஜன் எனது கருத்து அது கிடையாது, தனி தமிழ் தேசியம் தான் எனது கருத்தும் அதற்கு வேண்டியது மண் உரிமையை மீட்டு எடுப்பது முதலில் அதை செய்ய வேண்டும் அதை யாரிடம் இருந்து பெறுவீர்கள்?.
//அப்போ ஜோஸ் ஆளுக்காசு ,ஜோய் ஆளுக்காசு,மலப்புரம் சாரி மனப்புரம்,முத்தூடு பினான்சு அடித்து நொறுக்கினால் நீங்கள் வரவேற்க தயார் என்று மறைமுகமாக சொல்றீனகளா?//
நேராகவே சொல்கிறேன் அந்த முதலாலிகளை அடியுங்கள் அவன் தொழிலாளியை அல்ல. அந்த முதலாலியை உள்ளவிட காரணமாக இருந்த இந்தியன் என்னும் பட்டத்தை ஒழியிங்கள். தமிழ் நாடு இந்தியாவின் ஒரு அங்கம் என்பதால் தான் மற்ற மாநிலத்தார்கள் எலிதில் வரயிலகிறது இதுவே நாம் ஒரு தனி நாடாக இருந்தால் அவர்கள் வர வேண்டுமா வேண்டாம் என்று முடிவு எடுக்கும் நிலையில் நாம் இருப்போம். அதற்கு தேவை மண்ணுரிமை தோழர் அதை முதலில் மிட்டு எடுக்க வேண்டும்.
ஒருவன் “தமிழன்” அல்லது “தமிழன் அல்ல” என்பதை எப்படி கண்டுபிடிப்பது? ஜாதியை வைத்தா அல்லது அவர்கள் பேசும் மொழியை வைத்தா? ஜாதியை வைத்துத்தான் என்றால் ஜாதியை ஒழிக்கக்கூடாதா? அப்படியே இருக்க வேண்டுமா? வைகோ, விஜயகாந்த், கருணாநிதி போன்றவர்கள் தமிழர்கள் இல்லையா!! மற்ற மாநிலங்களில் எல்லாம் தமிழர்கள் முதல்வர்களாவது இல்லை. ஜாதியை வைத்துத்தானே இதைப் பார்க்கிறீர்கள். பலநூற்ராண்டுகலாக தமிழகத்தில் ஒன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும் சகோதர மக்களுக்குள் பகமையை உண்டுபண்ணுகிறீர்கள். இதனால் அழிவது தமிழன்தான். தமிழ் தேசீயம் ஒரு பைத்தியகாரனின் கற்பனை சொல்!!!!!!!!!!
மிக அருமையான விளக்கம் நாட்ராயன்…
தமிழ்நாட்டில் பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்து இந்த மண்ணோடு ஒன்றி போனவர்கள். இந்த தமிழ் மண்ணை விட்டால் வேறு போக்கிடம் இல்லாதவர்கள். இந்த மண்ணைத்தவிர வேறு மண்ணுக்கு விசுவாசம் பாராட்டத்தெரியாதவர்கள். இந்த மண்ணுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதனால் பாதிப்படையும் முதல் மக்கள். தமிழ்நாட்டை (இதன் மொழி, பண்பாடு, மக்கள், தொழில் வளர்ச்சி, கல்வி முன்னேற்றம், வாழ்க்கைத்தரம், சுகாதாரம் ஆகியன) பற்றி யாராவது தவறாக பேசினால் அல்லது எள்ளி நகையாடினால் அவமானப்படும் மக்கள். இவர்கள் தான் தமிழர்கள்.
இதே தகுதி பிற தேசிய இனங்களுக்கு இருக்கக் கூடாதா? அப்படி இருக்கும்போது அதை ஏற்க உங்களை எது தடுக்கிறது? தேசிய இன கலப்புக்கு என்ன காரணம் என ஆராய்ந்து அந்தப் பொது எதிரிக்கு எதிராக ஒன்றிணைவதுதான் உண்மையான தேசிய உணர்வு.
இந்த அடிப்படை நியாய எதார்த்தத்திலிருந்து திசை விலகியதால்தான் மணியரசன் வகையறாக்கள் இனவெறி பாசிஸ்டுகளாக சீரழிந்து போனார்கள.
மனப்புரம் மற்றும் முத்தூட்டும் மொழி மாறி தமிழர்கலாகிவிட்டால் அதனை ஏற்றுக்கொல்கிரீர்கலா? வெளிநாட்டிலிருந்து இரக்குமதிசெய்யப்பட்ட கிருத்துவம் மற்றும் முஸ்லீம் மதங்கலுக்கு மாறும்போது ஒரேநாட்டில் ஒருவர் ஏன் மொழி மாரக்கூடாது. “யாதவர்கள்” அனைத்து மானிலங்களிலும் இருக்கிரார்கள். வசதி படைத்தவர்கள் பெண் கொடுத்து கட்டிக்கொள்கிறார்கள். முலாயம்சிங் யாதவ், முலாயம்சிங் யாதவ் மற்றும் பலர் எந்த மொழிக்கு சொந்தக்காரர்கள். மலை பகுதிகளில் இருக்கும் கிருத்த்வ பள்ளிகலில் தமிழில் பேசினாள் தண்டம் விதிக்கிறார்கள்.அதெ போல் முஸ்லீம் பள்ளீகளில் அரபு மட்டுமெ சொல்லி தருகிரார்கள். இதனை உங்களால் தடுக்கமுடியுமா?
U said correctly sir, People are converting from our religion to ISLAM, CHRISTIANITY, HINDUISM(Which needs SANSKRIT, RAM etc) we have to remove all the above religions we have to go back to our religion (MURUGAN, KOTAVAI, MAYAN, THIRUMAL etc and all temples shud use only TAMIL )…… Speaking or learning of ENGLISH, ARABIC , SANSKRIT shud be banned..
//கிருத்த்வ பள்ளிகலில் தமிழில் பேசினாள் தண்டம் விதிக்கிறார்கள்.//
Yes such schools have to be banned including HINDU VIDYALAYA, ADARSH VIDYA KENDRA etc.. These people are also doing the same.. Also they are teaching SANSKRIT SLOGAS which does not belong to our land it came from central asia..
We need people like u sir…
Well said Mr.Natrayan
மொழி மாறுவது அறிவியலுக்கு… நீங்கள் பேசும் மர்ச்சியதிற்கு எதிரானது…பிறப்பின் அடிபடையில் வருவதே தேசிய இனம்… இதையே புரியாமல் என்ன புரட்சி செய்து விட முடியும்…?கிறித்துவம், முஸ்லிம், பிற மொழியினரை ஆதரிக்க வேண்டும் என்பதே உங்கள் கொள்கை எனத் தெரிகிறது…அப்புறம் எதற்கு தமிழ், தமிழர் என்று பேசுகிறீர்கள்….?
“ஜோய் ஆளுக்காசு,மலப்புரம் சாரி மனப்புரம்,முத்தூடு பினான்சு அடித்து நொறுக்கினால் நீங்கள் வரவேற்க தயார் என்று மறைமுகமாக சொல்றீனகளா?”
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுதே….
மாவோ என்னா சொன்னாரு?:நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எதிரி முடிவு செய்கிறான் என்றார் .இங்குள்ள சிறுபான்மை மொழியினர்(அதான் தெலுகு,கன்னடம் மலையாளம் )தமிழக பள்ளிகலில அவர்கள் தாய் மொழியை படிக்க வசதி உள்ளது!இதே போல வேறு மாநிலங்களில் ஒன்றிரண்டு பள்ளிகளை தவிர தங்கள் தாய்மொழியான தமிழ் மொழியை படிக்க அந்தந்த மாநிலங்கள் என்ன நடவடிக்கை எடுத்தன?அவர்கள் எண்கள் மொழியை படிக்க அனுமதிக்க மாட்டார்கள் ஆனால் நாங்கள் இங்கு அனுமதிக்கிறோம்!அவர்கள் தண்ணி உட மாட்டேன் என்று சொல்லும்போது நாங்கள் கரண்டு உட மாட்டோம் என்று சொல்வது எந்த வகையில் தவறு?மாவோ கொள்ளுகை இதில் சரியாக வருகிறதா இல்லையா?இல்லை காந்திய வழியில் எவன் என்ன கொடுமை செய்தாலும் பொத்திகினு போக சொல்றீங்களா?
இங்கு சர்வக்ஞர் சிலை பாதுகாப்போடு இருக்கு ஆனா கருநாடகாவில் திருவள்ளுவர் சிலையின் நிலை என்ன?சரி சிலை அரசியல் வேண்டாம்!
இங்கு ஒருவர் “தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டாள் தமிழர்கள் ஐம்பது சதத்திக்கும் குறைவுதான். தெலுங்கு, கன்னடம், மல்யாளம், சவுராஷ்ட்டிரம், இந்தி, அரபு, உரூது மற்றும் பிற் மொழி பேசுவோர்கள் தான் அதிகம். அதேநிலை தான் மற்ற மாநிலங்களிலும்” என்கிறார்.
சரி அய்யா மற்ற மாநிலங்களில் ஒரு மாநிலத்திலாவது தமிழன் முதல்வராக இருக்கிறாரா?இல்லையே!அவர்கள் தங்கள் மாநிலகாரர்களையே தேர்ந்தெடுக்கின்றனர்.அதை மாற்ற வினவு முயற்சிக்கலாமே!உமா பாரதியை உ.பி இல் நிறுத்திய பாஜாக கதையை தான் நீங்க தொழிலாளர் சிகப்பு சட்டை கவர போட்டு பேசுகிறீர்கள்!
குப்பன் ஒரு விடயத்தை மட்டும் நன்றாக புறிந்து கொள்ளுங்கள். நான் திவிர தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் ஒரு நலன் விரும்பியே! ஆனால் மண்ணுரிமையை மீட்டு எடுக்காமல் தமிழ் தேசியம் எடுபடாது.
நீங்கள் சொல்லும்: //இங்குள்ள சிறுபான்மை மொழியினர்(அதான் தெலுகு,கன்னடம் மலையாளம் )தமிழக பள்ளிகலில அவர்கள் தாய் மொழியை படிக்க வசதி உள்ளது!இதே போல வேறு மாநிலங்களில் ஒன்றிரண்டு பள்ளிகளை தவிர தங்கள் தாய்மொழியான தமிழ் மொழியை படிக்க அந்தந்த மாநிலங்கள் என்ன நடவடிக்கை எடுத்தன?அவர்கள் எண்கள் மொழியை படிக்க அனுமதிக்க மாட்டார்கள் ஆனால் நாங்கள் இங்கு அனுமதிக்கிறோம்!அவர்கள் தண்ணி உட மாட்டேன் என்று சொல்லும்போது நாங்கள் கரண்டு உட மாட்டோம் என்று சொல்வது எந்த வகையில் தவறு?//
இந்த வாக்கியத்தில் தமிழ் தேசியம் இருக்கிறதா இல்லை இந்தியாவின் தமிழ் தேசியம் இருக்கிறதா?
தமிழ் நாடு இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கும் வரை தண்ணீர்க்கும், மின்சாரத்துக்கும், மொழிக்கும் சண்டையிட்டு கொண்டுதான் இருப்பீர்கள். தயவு செய்து இந்திய தமிழனாக தமிழ் தேசியத்தை பார்க்காதீர்கள்.
தமிழ் நாடு ஒரு தனி நாடாக இருக்கும் பட்ச்சத்தில் தண்ணீர் நமக்கு சுலபமாக கிட்டும். சர்வதேச நதி நீர் சட்டம் இதற்கு வழிவகுத்து தரும். நெய்வேலி அனல் மின் மின்சாரம் நம்க்கே யாருக்கும் பகிற்ந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை.
நமது மொழியின் சிறப்பு நமது மக்களுக்கு தெறியுமா? மண்னின் மைந்தர்களுக்கு அவர்களின் மொழியின் சிறப்பு தெறியாமல் போவதற்கு இந்திய தேசம் போன்ற ஒரு தேசியவாதம் மிக பெரிய காரணம்.
சரி தமிழன ஆகிய நீங்கள் ஃ என்னும் தமிழ் எழுத்தின் சிறப்பை சொல்லுங்கள் பார்ப்போம்?
//இங்கு சர்வக்ஞர் சிலை பாதுகாப்போடு இருக்கு ஆனா கருநாடகாவில் திருவள்ளுவர் சிலையின் நிலை என்ன?சரி சிலை அரசியல் வேண்டாம்//
தயவு செய்து தனி தமிழ் தேசியத்தின் விவாதத்தை அரசியல் கட்சி தலைவர்கள் சிலை விவகாரம் போல் என்னாதீர்கள். தனி தமிழ் தேசியம் திருவள்ளுர் சிலையில் இருக்கிறதா இல்லை அவர் இயற்றிய திருக்குறளின் பெறுமை போற்றுவதில் இருக்கிறதா?
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் தமிழ் நாட்டை இந்தியாவின் ஒரு அங்கமாக பார்ப்பதால் தான் அவன் என் மொழி தலவன் சிலையை அவமானப்டுத்தினான் நான் அப்படி செய்யவில்லையே என்று அனுதாபம் கொறுவது.
//சரி அய்யா மற்ற மாநிலங்களில் ஒரு மாநிலத்திலாவது தமிழன் முதல்வராக இருக்கிறாரா?இல்லையே!அவர்கள் தங்கள் மாநிலகாரர்களையே தேர்ந்தெடுக்கின்றனர்.//
தமிழகத்தின் வரலாற்றை எடுத்து பாருங்கள் கடந்த 1000 ஆண்டுகளாக தமிழகத்தை தமிழன் ஆண்டது கிடையாது! இக்காலத்தில் அதற்கு பெறிதும் காரணம் திராவிட அரசியல், தமிழனை திராவிடனாக்கி, தமிழனின் பெறுமையை மறைத்து வந்தேரிகள் ஆண்டத்துக்கு காரணமும் அதான். தனி தமிழ் நாடு காண்போம் என்று சொல்லி ஆட்ச்சியை பிடித்த திராவிட கழகம், அதை விடுத்தது. இதற்கு காரணம் இந்திய மாயை.
முதலில் மண்ணை மீட்டு எடுங்கள் அனைத்தும் தானே சரியாகும்.
//அதை மாற்ற வினவு முயற்சிக்கலாமே!உமா பாரதியை உ.பி இல் நிறுத்திய பாஜாக கதையை தான் நீங்க தொழிலாளர் சிகப்பு சட்டை கவர போட்டு பேசுகிறீர்கள்!//
இந்தியாவில் ஜார்ஜ் புஸ் வந்து தேர்தலில் போட்டியிட்டாலும் அவனுக்கு ஓட்டு போட்டு மகிழும் மக்கள் இவர்கள். காரணம் போலி இந்திய தேசிய வாதம். ஈழத்தில் அமைதி படைகளை அனுப்பி அட்டுளியம் செய்த ராசிவ் காந்தியை உன்னத தலைவனாக எற்ற தமிழர்கள் நம் இந்திய தமிழ் தேசியவாதிகள். நாலை சோனியா காந்தி சென்னையில் இருந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் என்றால் வேட்டி மடித்து கட்டி வேலை செய்யும் கூட்டம் இது. இந்திய தேசத்தால் தமிழ் உணர்வை மறந்த முடர்கள்.
மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் மண்ணை மீட்டு எடுக்காமல் தேசியம் பேசுவது முடத்தனம்.
தமிழன் என்றால் யார் என்பதற்கு விளக்கம் சொல்லுங்கள். ஜாதி அடிப்படையா அல்லது பேசும் மொழி அடிப்படியா அல்லது பண்பாடு காலாச்சாரம் அடிப்படையா? ஜாதியை ஒழித்துவிட்டால் தமிழன் யார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது. மொழி தான் அடிப்படை என்றால் வைகோ, கருணாநிதி, விஜயகாந்த மற்றும் பலரும் தமிழர் தானே. அவர்களை ஏன்நிந்திக்க வேன்டும். பண்பாடு காலாச்சாரம் என்றால் இங்குள்ள முஸ்லீம்களும் , கிருத்துவர்களும் தமிழர்கள் அல்லவே.
தமிழ் பேசுவதால் ஒருவன் தமிழனாக முடியாது. தமிழனுக்கு ஜாதி, மதம் பேதம் கிடையாது. பிறப்பாளும், மரபாளும் தமிழை தாய் மொழியாக கொண்ட அனைவரும் தமிழர்களே!. தெலுங்கு தாய் மொழியாக கொண்டு தமிழில் அரசியல் பிழைக்கும் யாரையும் தமிழர்கள் என்று ஒப்பு கொள்ள இயலாது! தமிழை இலித்து சமகிரதத்தை போற்றும் பார்பனர்களும் இதில் அடங்குவர்.
//பண்பாடு காலாச்சாரம் என்றால் இங்குள்ள முஸ்லீம்களும் , கிருத்துவர்களும் தமிழர்கள் அல்லவே.//
இதில் பார்பனர்கள் விட்டதின் நோக்கம் என்னவோ? அப்படி பார்த்தால் இந்துகளும் தான்?
தமிழன் என்பவன் தாய் மொழியால் இனைக்க பட்டு, தமிழ் பண்பாடும் கலாச்சாரத்தையும் ஏற்று தனது பிற வழி தவறி சென்று கொண்டு இருக்கும் தமிழ் இன சகோதரர்களை தமிழ் பண்பாடு கலாசாரத்திற்கு மிட்டு கொண்டு இருப்பவனே தமிழன். தமிழனுக்கு மதமும் கிடையாது சாதியும் கிடையாது. தமிழை தாய் மொழியாக கொண்டாயாவரும் தமிழர்களே!
—->தமிழ் பேசுவதால் ஒருவன் தமிழனாக முடியாது. தமிழனுக்கு ஜாதி, மதம பேதம் கிடையாது. பிறப்பாலும், மரபாலும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் தமிழர்களே!. தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட, தமிழ் தேசிய அரசியலை முன்வைத்துப் பிழைக்கும் யாரையும் தமிழர்கள் என்று ஒப்புக்கொள்ள இயலாது! தமிழை இழித்து சமஸ்கிருதத்தைப் போற்றும் பார்ப்பனர்களும் இதில் அடங்குவர்.
//பண்பாடு காலாச்சாரம் என்றால் இங்குள்ள முஸ்லீம்களும் , கிருத்துவர்களும் தமிழர்கள் அல்லவே.//
இதில் பார்ப்பனர்கள் பெயர் விடுபட்டதன் நோக்கம் என்னவோ? அப்படிப் பார்த்தால் இந்துக்களும் தான் தமிழர்கள் அல்லவே?
தாய் மொழியால் இணைக்கப்பட்டு, தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் ஏற்று, வழி தவறிச் சென்று கொண்டு இருக்கும் தனது பிற தமிழ் இனச் சகோதரர்களை தமிழ் பண்பாடு, கலாசாரத்திற்கு இட்டுச் சென்று கொண்டு இருப்பவனே தமிழன். தமிழனுக்கு மதமும் கிடையாது, சாதியும் கிடையாது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட யாவரும் தமிழர்களே!
<—–செந்தமிழன் தயவு செய்து மேலே இருப்பதுதான் நீங்கள் சொல்ல வந்ததா ?
ஆமாம்.
//தமிழ் பேசுவதால் ஒருவன் தமிழனாக முடியாது. தமிழனுக்கு ஜாதி, மதம் பேதம் கிடையாது// முரண்பாடுடைய வாக்கியம்
ஜாதி என்ற ஒன்று இருந்தால் தானே அவனை தமிழன் என்று அடையாலம் கானமுடியும். பலநூறு ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் தமிழையே தாய் மொழியாக பேசிவரும் இத்ர ஜாதியினர் தமிழர்கள் இல்லையா? தமிழ் மட்டுமெ பல ஆயிரம் ஆண்டுகளாக பேசிவரும் பிராமனர்கள் தமிழ்ர்கள் இல்லயா? தமிழில் பற்ப்பல இலக்கியங்கலை இயற்றிய பிராமினர்கலும் தமிழர்கள் இல்லையா. ” தமிழ் காட்டு மிரான்டி பாஷை” “தமிழை படிப்பவன் உருப்படமாட்டான்” என்று கூரிய பெரியாரை வைத்து கொண்டாடுகிரீர்கலே அவர் எந்த வகையில் தமிழன்.
//ஜாதி என்ற ஒன்று இருந்தால் தானே அவனை தமிழன் என்று அடையாலம் கானமுடியும்.//
சாதியில் எங்களை தேடாதீர்கள். ஒரு சீனா நாட்டவரை எந்த சாதி கொண்டு அவன் சீனாகாரன் என்று முடிவு செய்கீன்றீர்கள்?
//பலநூறு ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் தமிழையே தாய் மொழியாக பேசிவரும் இத்ர ஜாதியினர் தமிழர்கள் இல்லையா? //
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் நாங்கள் செய்து வந்த தொழில்களின் அடிப்படையில் பார்ப்பனியர்களால் உன்டாக்க பட்ட வர்னசாரத்தின் விலைவாக வந்த சாதி என்னும் நச்சில் தமிழனை தேடாதீர்கள். எங்கள் தாய் மொழியாம் தமிழ் மொழி எங்களை தமிழர்களாக அடையாலம் காட்டும்.
//தமிழ் மட்டுமெ பல ஆயிரம் ஆண்டுகளாக பேசிவரும் பிராமனர்கள் தமிழ்ர்கள் இல்லயா?//
தமிழ் பேசுவதால் ஒருவன் தமிழனாக முடியாது. வந்தேரிகள் யாரும் தமிழர்களாக முடியாது.
//தமிழில் பற்ப்பல இலக்கியங்கலை இயற்றிய பிராமினர்கலும் தமிழர்கள் இல்லையா. //
ஒரு நாட்டிற்கு தஞ்சம் பிழைக்க வந்து அந்த நாட்டின் மொழியை கற்று கொண்டு பாருங்கள் நாங்களும் உங்கள் மொழியிலே உரையாடுகிறோம், எழுதுகிறோம், படிகிறோம் என்று சொல்லி அந்த ம்ண்னின் மைந்தர்களாக முடியாது.
மேலும் எங்கள் மொழியிலே எங்களை பற்றி அவதுராக எழுதி அதை இலக்கியம் என்று சொன்னால் எப்படி? பார்ப்பனர்கள் அவர்கள் பொய்மையை எங்கள் மொழியில் இயற்றியதால் நாங்கள் அவர்களை தமிழர்களாக எற்று கொள்ள முடியாது.
// தமிழ் காட்டு மிரான்டி பாஷை” “தமிழை படிப்பவன் உருப்படமாட்டான்” என்று கூரிய பெரியாரை வைத்து கொண்டாடுகிரீர்கலே அவர் எந்த வகையில் தமிழன்.//
பெரியாரின சமுக சீர்திருத்தங்களை ஏற்பவர்கள் நாங்கள் அதை மனதார ஒப்பு கொள்கிறோம் அதற்கு நாங்கள் கடன் பெற்றுள்ளோம்.
ஆனால் அதற்காக பெரியாரை தமிழனாக எற்க முடியாது. தமிழ் பேசுவாதால் ஒருவன் தமிழனாக முடியாது இது பெரியாருக்கும் பொறுந்தும் காஞ்சி செய்யேந்தரருக்கும் பொறுந்தும்.
//தமிழ் பேசுவாதால் ஒருவன் தமிழனாக முடியாது இது பெரியாருக்கும் பொறுந்தும் காஞ்சி செய்யேந்தரருக்கும் பொறுந்தும்//
இது இங்கெ இருக்க நிறைய பேருக்கு புரியல நண்பா.
இந்த விளக்கம், தேசிய இனங்கள் பற்றிய மார்க்சீய வரையறையுடனும், கொள்கைகளுடனும் முரண்படும். மார்க்சீயவாதியான செந்தமிழன் இதுபோன்ற தமிழ் தேசியவாதம் பேசுவது இரண்டிலும் சேராத குழப்பமான கொள்கையால்..
அம்பி முதலில் தேசியத்தின் விளக்கத்தை சொல்லுங்கள் பிறகு மார்க்சீயத்துடன் ஒன்றி இருக்கிறதா மாறுபட்டுள்ளதா என்று விவாதம் செய்வோம்.
தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”பிறபடுத்தப்பட்டவர் , மிகவும் பிற்படுத்தப்பட்டவர் , தாழ்த்தப்பட்டவர் ,மற்றும் மலைவாழ் மக்கள் என்று கூறியுள்ளது. இதன்படி ஜாதிகள் தமிழர்களில் இல்லை என்பது ஒரு வடிகட்டின மோசடி!! தமிழர்களில் ஜாதிகள் இல்லையென்றால் இந்த இட ஒதுக்கீடு எதற்கு. பிர்ப்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தமக்களின் வாழ்க்கைதரம் உயருவதருக்குத்தான் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுகீடு ஜாதி அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் பயனடைந்து வருகிறார்கள். தமிழருக்கு ஜாதி இல்லை என்று கூறி இந்த ஒதுக்கீட்டால் பயன் பெரும் மக்களை ஒழித்துக்கட்டிவிடாதீர்கள். ஒதுகீடு இல்லாவிட்டால் “முதலியார், பிள்ளைமார், செட்டியார் மற்றும் பிற ஜாதிக்ளுடன் பறையர் , சக்கிலியர் போன்றவர்கள் போட்டிபோடவேண்டிவரும். இதில் எப்படி தாழ்த்த்தப்பட்டவர்களால் இட ஒதுகீடு பெற முடியும்.
/////தமிழனுக்கு ஜாதி, மதம் பேதம் கிடையாது. பிறப்பாளும், மரபாளும் தமிழை தாய் மொழியாக கொண்ட அனைவரும் தமிழர்களே////// தமிழர்களிடையே ஏராளமான ஜாதிகள் உள்ளன!! ஜாதிகள் இல்லை என்று கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். தமிழ அரசு வெளியிட்டுள்ள “பிற்படுத்தப்பட்டவர் , மிக்கவும்பிற்படுத்தப்பட்டவர் ,தாழ்த்தப்பட்டவர்” என்று பல பிரிவுகள் உள்ளன. ஜாதில்லைஎன்றால் இந்தபட்டியல் எல்லாம் எதற்கு. இடஒதுக்கிட்டை ரத்து செய்து விடலாமே? தமிழர்களிடம்தான் ஜாதி இல்லையே.!! பிராமணர்கள் மட்டுமே இந்த பட்டியலில் வருவதில்லை.!! அவர்கள்தான் ஒரிஜனல் தமிழர்கள்!!!! முதளியார்களும், பிள்ளைமார்களும் செட்டியார்களும் போட்டிஇடும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் “பறையர் சக்கிலியர் மற்றும் பல தலித் களால் மோத முடியுமா? “செந்தமிழன்” தமிழர்களையும் தமிழ் நாட்டைப்பர்ரியும் எதுமும் தெரியாமல் விளையாட்டு காட்டி மக்களை ஏமார்ரநினைக்கிறார்.! மக்கள் ஏமாறக்கூடாது!!!!!!!! .
தெலுங்கர் ஒருவர் வந்துவிட்டால் அதுவரை நம்மிடம் தமிழிலில் உரையாடிக்கொண்டிருந்த தெலுங்கர் சட்டென்று அவரிடம் தெலுங்கில் மாட்லாடுவார் பாருங்கள். அனுபவித்திருக்கிறீர்களா? மலையாளிகள் இங்கு வந்து பலவருடங்கள் ஆகி இருந்தாலும் வந்துச்சு, போனுச்சு, சொன்னுச்சு என்று அஃறினையில் உரையாடுகிறார்கள். ஒரு சில ஜாதிக்காரர்கள் தங்களுக்கு என்று ஒரு ட்ரேட் மார்க் தமிழ் ஸ்லாங் வைத்திருக்கிறார்கள். தினசரி பத்திரிகை ஒன்று தனக்கென்று ஒரு தனித்தமிழில் செய்தி வெளியிட்டுக் கொண்டாடி மகிழ்கிறது. சிலருக்கு “மாமா வந்திருந்தாங்க” என்று சொல்வதை விட “ஃபாதர் இன் லா வந்திருந்தார்” என்று சொல்வது கொஞ்சம் பெருமையாக இருக்கிறது இல்லை?..
தமிழைத் தமிழாக பேச, எழுத, கேட்க முற்படுபவர்கள் மட்டுமே தமிழர்களாக உணரப்பட வேண்டும்.
\\தெலுங்கர் ஒருவர் வந்துவிட்டால் அதுவரை நம்மிடம் தமிழிலில் உரையாடிக்கொண்டிருந்த தெலுங்கர் சட்டென்று அவரிடம் தெலுங்கில் மாட்லாடுவார் பாருங்கள். \\
மும்பையில் உள்ள ஒரு தமிழர் வட இந்திய நண்பர்களுடன் இந்தியில் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு தமிழ் நண்பரை சந்தித்தால் எந்த மொழியில் பேசுவார்?
\\ட்ரேட் மார்க் தமிழ் ஸ்லாங் வைத்திருக்கிறார்கள்\\
தமிழகத்தில் பேசப்படுவது ஒரிஜினல் தமிழா.. ஈழத்து தமிழ் ஒரிஜினலா ?
\\தமிழைத் தமிழாக பேச, எழுத, கேட்க முற்படுபவர்கள் மட்டுமே தமிழர்களாக உணரப்பட வேண்டும்\\
மொழி என்பது மனித உயிரினங்கள் கருத்து பரிமாற்றத்துக்கு உதவும் ஒரு சாதனம்… ஒருவர் கூற விழைகின்ற கருத்தை சரியாக புரியும்படி கூறினாரா என்று தான் பார்க்கவேண்டும்… அதில் மொழிப்புலமை இருக்கிறதா என்று ஆய்வது அனாவசியம்… சுத்தமான தமிழில் பேச வேண்டும் என்று கூறி சங்க இலக்கிய தமிழை கருத்து பரிமாற்றத்தின் போது உபயோகிப்பவன் தான் உண்மையான தமிழன் என்று நினைப்பீர்களேயானால் இன்றைய உலகத்தில் சல்லடை போட்டு சலித்தால் கூட ஒரு தமிழ்க்குடிமகன் உங்களுக்கு சிக்க மாட்டார்…
நீங்க எப்படி பஸ்சில ஏறி, சீட் புடிச்சு, கண்டக்டர் கிட்ட டோல் கேட் ஒரு டிக்கெட் மீதி பிப்டி பைசா காய்ன் வாங்குவீர்களா… அல்லது
பேருந்தில் புகுந்து, இருக்கை கைப்பற்றி அமர்ந்து , நடத்துனரிடம் உரையாடி சுங்க சாவடி வரை ஒரு பயண சீட்டு பெற்று… மீதி எட்டணா நாணயம் வாங்குவீர்களா..
தவறு என்னுடையதுதான். தமிழை நன்கறிந்த தெலுங்கர் என்று எழுதி இருக்கவேண்டும். தெலுங்கை மட்டுமே அறிந்தவரிடம் தமிழிலில் தான் உரையாடவேண்டும் என்று யாரும் விரும்ப மாட்டார்கள். //மும்பையில் உள்ள ஒரு தமிழர் வட இந்திய நண்பர்களுடன் இந்தியில் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு தமிழ் நண்பரை சந்தித்தால் எந்த மொழியில் பேசுவார்?// நிச்சயம் ஹிந்தியில் தான் பேசவேண்டும்-அந்த தமிழ் நண்பர் ஹிந்தி அறிந்திருக்கும் பட்சத்தில்.. //தமிழகத்தில் பேசப்படுவது ஒரிஜினல் தமிழா.. ஈழத்து தமிழ் ஒரிஜினலா ?// நாங்கள் பேசுவதுதான் உண்மையான தமிழ் என்று யாரும் சொல்லவில்லை. போதுமானவரை அன்னிய மொழிக்கலப்பின்றி பேசினால் போதுமானது. //மொழி என்பது மனித உயிரினங்கள் கருத்து பரிமாற்றத்துக்கு உதவும் ஒரு சாதனம்… ஒருவர் கூற விழைகின்ற கருத்தை சரியாக புரியும்படி கூறினாரா என்று தான் பார்க்கவேண்டும்…// உண்மை. //சுத்தமான தமிழில் பேச வேண்டும் என்று கூறி சங்க இலக்கிய தமிழை கருத்து பரிமாற்றத்தின் போது உபயோகிப்பவன் தான் உண்மையான தமிழன் என்று நினைப்பீர்களேயானால்..// இல்லை.. அப்படி நினைக்கவில்லை. ஆனால் தமிழைத் தமிழாகப் பேச, எழுத, கேட்க நீங்கள் சங்கத்தமிழை அறிந்திருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. பஸ்சில ஏறி, சீட் புடிச்சு, கண்டக்டர் கிட்ட டோல் கேட் ஒரு டிக்கெட் மீதி பிப்டி பைசா காய்ன் வாங்காவிட்டாலும் பஸ்சில ஏறி, சீட் புடிச்சு , கண்டக்டரிடம் ‘சுங்கச்சாவடிக்கு ஒரு சீட்டு கொடுங்க’ என்று கேட்டு மீதி ஐம்பது காசை வாங்கலாம்.. மனமிருந்தால்..
இந்துக்கள் கூட என்று சேர்த்து சொல்லுங்கள் பாஸ்…
அரிமையான் விளக்கம் குப்பன் அவர்களே.
ஜோஸ் ஆளுக்காசை கல்லால் அடித்து உடைத்தார்களே?நீங்க பாக்கலயா?ஓகோ நீங்கதான் டிவி பாக்க மாட்டீகளே!ஏன்னா டிவி ஒரு பன்னாட்டு தயாரிப்பு.மற்றும் கேபிள் ,நீங்கள் மறுக்கும் அரசு நடத்துவது. டிஷ டிவி பன்னாட்டு கம்பெனிகள் நடத்துவது ஆக பாவம் நீங்க டிவியே பாக்க முடியாது போல!ஆனால் பன்னாட்டு தயாரிப்பான கம்ப்யூட்டரை மட்டும் ஏன் பயன்படுத்துரீன்களோ தெரியல!
இந்த கேள்வி யாரை நோக்கி?
ம்ம்ம் ஆமாம் பாசு ! இந்த சீமான் பாருங்க ! ஈழப் பிரச்சினையிலநல்லா போராடுனாப்புடி, தமிழர் போராட்டமுன்னாநல்லா குரல் கொடுக்குறாப்புடி ! ஆனா அதேநேரத்துல சுத்த தமிழ்ல தான் எல்லா சினிமாவுலயும் பேசுறாப்புடி ! இது எல்லாம் செயற்கையா இவர்களே உருவாக்குற ஒண்ணு.நடைமுறை பேச்சு வேற எழுத்து மொழி வேற, அத புரிஞ்சுக்காம சும்மா சுத்த தமிழ்ல பேசி எளிய மக்களின் தமிழ் மக்களின் பிரச்சினைஐ பேசாம இவர்களா கற்பனை படுத்திக்கிறா சில விழயங்கள பேசுறாங்க ! இந்தியாவின் உள்துறை அமைச்சர் பதவில உக்காந்துகிட்டு ஒன்ண்ணுமே தெரியாத அப்பாவி பன்னாடை பரதேசி சிதம்பரம் தான் இந்தநாட்டின் இன மொழி, பண்பாட்டு ,நிலம் சார் ஈர்ப்பு , மக்களின் மண்ணின் மிதான உரிமை இவெற்றுக்கெல்லாம் குழி பறிக்கிரான். அவன் யாரு ஒரு தமிழன் தானே ! கட்ட பொம்மன காட்டி குடுத்தட்கு கன்னடனோ, தெலுங்கனோ, மலயாளியோ கிடியாது ! தமிழ் எட்டப்பன் தான். அப்போ பிரச்சினை எது ஆளும் வர்க்கம், அதற்கு துணை போகும் எட்டப்பர் பரம்பரை , விசிஎறியப்படும் துண்டுகளுக்கு மக்களை காட்டிக் கொடுக்கும் கூட்டிக் கொடுக்கும் எதிரிகள் தான். அவர்களில் இன மொழி சாதி மத வேறுபாடு கிடையாட்கு .
அடித்து விரட்டுவது எல்லாம் உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள்தான் செய்யவேண்டும். யாரோ செய்தால் அதன் பயனை நீங்கள் அடைய நினைக்கக்கூடாது! நீங்களும் உங்கள் இயக்கமும் செய்துகாடடவேண்டும். அதுதான் நல்லது!!!!! உடனடியாக தமிழர் அல்லாதவர்களை விரட்டுங்கள்!!!!!!!! வாழ்த்துக்கள்!!!!!
//அப்படி தாக்க முற்படும் தமிழ் இன “போராளிகள்” முதலில் தனி தமிழ் தேசியத்துக்கு என்ன அடிப்படை போராட்டத்தை நடத்தினார்கள். கட்டாய தாய் மொழி வழி கல்விக்காக போராடினார்களா? இல்லை தமிழர்களின் மரபு போற்றும் வாழ்கை நெறிகளை தங்கள் வாரிசுகளுக்கு கற்று கொடுத்தார்களா? ச// மெட்ரிகுலேசன் பள்ளி விளம்பரங்களை தமது புத்தகங்களில் வெளியிட்டவர்கள்தான் மேற்படி மணியரசன் வகையாறாக்கள்.
அய்யா தாங்கள் என்ன வாதத்தை பின்பற்றலாம் என்று சொல்கிறீர்கள்?சர்வதேசியவாதமா?
அதை பேசுவதில் உடன்படுவதில் எங்களுக்கு சிறு தயக்கமும் இல்லை!ஆனால் நாட்டை சீர்படுத்தும் முன் வீட்டை சீர்படுத்து என்பது போல சர்வதேசியம் பேசுவதற்குமுன் இங்கு தேசியம் என்ன நிலைமையில் இருக்கிறது என்பதையும் தவிர்த்துவிட்டு பேசுவது பகுத்தறிவு ஆகாது(இந்த வார்த்தை ஒரு கருப்புக்கு மட்டும் சொந்தமில்லை.கவனிக்க).
எனது பக்கத்து வீட்டு காரர்களிடம் நான் சண்டை போட்டு கொண்டே தேசியம் பேசுவது கேலிகூத்து!அதே போல தான் பக்கத்து மாநிலங்கள் தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிராக செயல்படும்போது அதை முதலில் சீர்படுத்த வழி காண வேண்டுமே ஒழிய நீ தண்ணீர் உட்டா என்ன உடாட்டி என்ன?நாங்கள் சர்வதேசியம் பேசுவோம் என பேசுவது எந்த நியாயமோ தெரியவில்லை!இரு நாட்டுக்கு இடையே ஆன தண்ணீர் பிரச்சனைகளை பார்ப்பதற்கு முன் இரு மாநிலங்களுக்கு இடையே ஆன நதி நீர் பிரச்சனநிகளை பார்க்க வேண்டாமா?
ஐநூறு தமிழக மீனவர்கள் சிங்கள இன வெறி கும்பலால் சுட்டு கொள்ள பட்டுள்ளனர்!மேலும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் அடுகாயம் அடைந்தனர்!வலையை அறுத்தது படகை உடைத்தது என அது பல லட்சம் இழப்பு!இதை கண்டு கொள்ளத மத்திய அரசு இருக்கையில் என் தமிழன் எப்படி சர்வதேசியம் பேசுவான் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
இந்திய மீனவன் பாகிஸ்தானில் அகப்பட்டு கொண்டால் கூட அவர்கள் கைது மட்டுமே செய்யபடுகிரார்கள்!ஆனால் இங்கு நடப்பது?மரணம் அல்லவா?சே பற்றி பேசலாம் தான்!முதலில் எண்கள் மக்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க பட வேண்டும்!அப்புறம் நாங்களும் சே,மாவோ,ஸ்டாலின் போன்றோர் பற்றி பேச முயற்சிக்கிறோம்!
தமிழ் தேசியத்திற்கு முதன்மை எதிரி இந்தியாவா, இல்லை அண்டை மாநிலங்களில் வாழும் தேசிய மக்களா?