privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்தமிழ் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி!

தமிழ் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி!

-

பொதுவுடைமையைத் தனது பெயரில் தாங்கி, தேசிய இன விடுதலையைத் தனது இலட்சியமாக அறிவித்துக் கொண்ட ஒரு கட்சி குறுகிய இனவெறிக் கட்சியாக, அதுவும் பாசிச இனவெறிக் கட்சியாகவும் இருக்க முடியுமா? முடியும்  என்று திரும்பத் திரும்பக் காட்டி வருகிறது, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி (த.தே.பொ.க.) என்ற பெயரிலுள்ள ஒரு அமைப்பு.

பாட்டாளி வர்க்க அரசியல் சித்தாந்தத்துக்கு மாறாக, எதிராக, இணையாக, தொழிற்சங்கப் பிழைப்புவாதத்தைத் தனது சித்தாந்தமாகக் கொண்டிருந்த நம்பூதிரிபாடின் சீடர்கள் அல்லவா, இவர்கள்! அதனாலேயே தமது தொப்புள் கொடி உறவைக் கைவிட மறுக்கிறார்கள்! தாங்களே அறிவித்துக் கொண்ட இலட்சியத்தையும் கொள்கையையும் மட்டுமல்ல; சொந்த அறிவையும் புதைகுழியில் போட்டுவிட்டு அவற்றுக்கு எதிரான நிலைக்கு வலிந்து வாதம் புரிகிறார்கள்.

“தமிழர் இன எழுச்சி ஏற்படும் போதெல்லாம் தமிழகத்திலுள்ள இடதுசாரி இந்தியத் தேசியவாதிகளும் வலதுசாரி இந்தியத் தேசியவாதிகளும் பீதி அடைகின்றனர். இந்தியத் தேசியத்திற்கும் இந்திய ஒற்றுமைக்கும் இடையூறு ஏற்பட்டு விடுமோ என்று கலவரமடைகின்றனர்; கலங்கித் தவிக்கின்றனர்.”

“இனி முரண்பாட்டையும் இனச் சிக்கலையும் வெறும் வர்க்கச் சிக்கலாகவும் அரசியல் கட்சிகளின் குறைபாடுகளாகவும் திரித்துக் காட்டி இரசவாதம் செய்வார்கள் இந்தியத் தேசிய இடதுசாரிகள்” (த.தே.பொ.கவின் பத்திரிக்கையான  தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், 2012 மார்ச் 1613) என்று குற்றஞ்சாட்டும் மணியரசன் கும்பல் அதற்கு எடுத்துக்காட்டாக, ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகளையும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் இவற்றின் நிலைப்பாடுகளையும் சுட்டுகிறது.

இன முரண்பாட்டையும் இனச் சிக்கலையும் அலசி ஆராய்ந்து கரை கண்ட மேதையாகிய, சிந்தனைச் சிற்பியாகிய மணியரசனே! நேர்மையிருந்தால் இங்கே நாங்கள் எழுப்பும் சில கேள்விகளுக்கு உங்கள் பேராசான் நம்பூதிரிபாடு பாணியில் சுற்றி வளைக்காமல் நேரடியாகப் பதில் சொல்லுங்கள்:

தமிழ் தேசியம்இந்திய தேசியத்துக்கும் அதனால் சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு, மராத்தி, ஒடியா, வங்காளி, காசுமீரி, பஞ்சாபி, அசாமி முதலிய தேசிய இனங்களுக்கும் இடையிலான முரண்பாடுதானே பகை முரண்பாடு?அவ்வாறின்றி இத்தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பகை முரண்பாடுகளா? ஒடுக்கப்படும் இந்த தேசிய இனங்கள் தமது எதிரியாக, பகைச் சக்தியாகக் கொண்டுள்ளது, இந்திய தேசியத்தைத்தானே தவிர தங்களைப் போன்ற நிலையிலுள்ள பிற தேசிய இனங்களை எதிரியாக பகை சக்தியாகக் கொள்ள முடியுமா?

நேரடியாகவே கேட்கிறோம்: தமிழ் தேசிய இனத்துக்கும் இந்திய தேசியத்துக்கும் இடையிலானதுதான் பகை முரண்பாடு; தமிழ் தேசியத்தின் எதிரியாக, பகை சக்தியாக இருப்பது, இந்திய தேசியம்தான்! அண்டை தேசிய இனங்களாக இருக்கும் மலையாள, கன்னட, தெலுங்கு இனங்களோடு ஆற்றுநீர் பகிர்வு, எல்லைப் பிரச்சினை போன்றவைகளில் முரண்பட்டு நிற்பதாலேயே தமிழ் தேசிய இனம் அவற்றை பகை சக்தியாக எதிரி சக்தியாகக் கருத முடியுமா?

இன்னும் நேரடியாக, பகிரங்கமாகவே கேட்கிறோம்: முல்லைப் பெரியாறு  தேவிகுளம், பீர்மேடு பிரச்சினைக்காக  மலையாளியையும்; காவிரி  கோலார் பிரச்சினைகளுக்காக கன்னடனையும்; பாலாறு  சித்தூர் பிரச்சினைகளுக்காக தெலுங்கனையும் தமிழன் எதிரியாகக் கொண்டு பகைநிலை எடுக்க வேண்டுமா? அப்படிச் செய்வதைத் தானே இந்திய தேசியம் விரும்புகிறது. அதுதானே இந்திய தேசியத்துக்குத் துணைபோவது? இதைத் தானே த.தே.பொ.க தலைமையாகிய நீங்கள் செய்கிறீர்கள்?

இந்திய தேசியத்திற்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் தேசிய இனங்களுக்கிடையிலான நதிநீர் மற்றும் எல்லைப் பிரச்சினைகளைப் பகை முரண்பாடுகளாக வளர்த்து மோதவிடுவது தானே இந்திய தேசியத்தை பராமரித்து, பாதுகாப்பது; இதன் மூலம் இந்திய தேசியத்துக்கு எதிரான போராட்டங்களை வலுவிழக்கச் செய்வதுதானே த.தே.பொ.க.வின் வேலையாக இருக்கிறது?

தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைப் பகை  முரண்பாடுகளாக வளர்த்து மோதவிடுவிடும் த.தே.பொ.க.வின் கொள்கையை, வேலையை ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் செய்யவில்லை என்று குத்தாட்டம் போடுகிறது மணியரசன் கும்பல்.

“முல்லைப் பெரியாறு அணைய மீட்க எல்லையை மூடு! பொருளாதாரத் தடைபோடு!” என்ற தலைப்பிலான  ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் 2012 ஜனவரி வெளியீடு குறித்து, “முல்லைப் பெரியாறு உரிமையை மீட்க, கேரளாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும்,கேரளாவுக்குச் செல்லும் 13 பாதைகளை மூடவேண்டும் என்றும், அது கூறுவது சரி. ஆனால் இதே ம.க.இ.க. கேரளாவுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கும் நமது கோரிக்கையை 11.02.2010இல் எதிர்த்து தனது வினவு இணையத் தளத்தில் எழுதியது என்று த.தே.பொ.க. வாதிடுகிறது.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான முரண்பாடு 2012  ஜனவரியில் நிலவிய அளவுக்கு 2010  பிப்ரவரியில் கூர்மையடைந்திருக்கவில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வினவு இணைய தளத்தில் எழுதியதை எடுத்து வைத்துக் கொண்டு மேற்படி கோரிக்கைகளை முன்வைத்த தமிழினவாதிகளின் நிலைப்பாட்டிற்கு எதிராகவும் முன்னுக்குப்பின் முரணாக எழுதுவதாகவும் இப்போதைய ‘தமிழின எழுச்சியை மடைமாற்றுகிறது ம.க.இ.க.’ என்றும் அவதூறு செய்கிறது த.தே.பொ.க.  அப்போதும்கூட கேரளாவுக்கு எதிரான பொருளாதார தடை, முற்றுகை விதிப்பது உடனடி நடவடிக்கையாக இருக்கக்கூடாது கடைசி பட்சமாக நடத்தலாம் என்று தான் வினவு இணையத்தளம் எழுதியிருந்தது.

2012 ஜனவரி வெளியீட்டில் முல்லை பெரியாறு பிரச்சினை கூர்மையடைந்ததற்கான அடிப்படையை விளக்கும் போது தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கத்தின் விளைவாக எழுந்தது என குறிப்பிட்டிருக்கிறோம். இது ஏதோ இனப்பிரச்சினை, வர்க்கப் பிரச்சினையாகவும் இந்திய தேசியத்திற்கு ஆதரவாகவும் மடைமாற்றுவது என்றும் த.தே.பொ.க. வியாக்கியானம் செய்கிறது.

இந்திய தேசியத்தை உருவாக்கிப் பேணி வளர்க்கும் ஆளும் வர்க்கங்களையும் அவர்களின் தனியார்மயம்  தாராளமயமாக்கம்  உலகமயமாக்கத்தையும் ம.க.இ.க. முதலிய புரட்சிகர அமைப்புகள் எதிர்ப்பது, எப்படி த.தே.பொ.க. சொல்வதைப் போல இன உணர்வாளர்களை இந்திய தேசியவாதத்திற்குள் இழுத்துச் செல்வதாகும்?

ஆனால், இந்திய தேசியத்தையும், அதைக் கட்டிக் காக்கும் இந்திய அரசையும் தனது பகைச் சக்தியாக அறிவித்துக் கொண்டுள்ள த.தே.பொ.க. அவற்றுக்கு எதிராக ஒரு புல்லைக் கூட பிடுங்கியதில்லை என்பது இருக்கட்டும்; ம.க.இ.க. முதலிய புரட்சிகர அமைப்புகளைவிட தமிழீழத்தின் உறுதியான, ஆதரவாளராகப் பீற்றிக் கொள்ளும் த.தே.பொ.க.வும் பிற தமிழ் இனவாதிகளும் கூட முள்ளிவாய்க்கால் படுகொலை வரை இந்தியாவை (இந்திய தேசியம், இந்திய அரசு முதலியவற்றை) தமிழீழ விடுதலையின் பகைச் சக்தி என்ற உண்மையைக்  சொல்லத் துணிந்ததுண்டா?

தமிழ் தேசியம்நக்சல்பாரிப் புரட்சிக் கட்சி தோன்றிய காலத்திலிருந்தே இந்திய தேசியத்துக்கு எதிராக தேசிய இனங்களின் விடுதலையை உயர்த்திப் பிடித்து வந்திருக்கிறது. அதனாலேயே தேசிய இனப் பிரச்சினை என்பது இனிமேலும் கிடையாது, முடிவுக்கு வந்துவிட்டது என்று தனது கட்சிப் பேராயத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, நம்பூதிரியின் போலி மார்க்சிஸ்ட் கட்சி. அப்போதும் அந்தக் கட்சியில்தான் இன்றைய த.தே.பொ.க. தலமை குப்பை கொட்டிக் கொண்டிருந்தது. அதன்பிறகு வெவ்வேறு அவதாரமெடுத்து, தனது விரைவான சொந்த வளர்ச்சிக்கான குறுக்குவழி  “அடையாள அரசியல்” என்ற முறையில் த.தே.பொ.க. தலமை தெரிந்தெடுத்துக் கொண்டதுதான், தமிழ்த் தேசிய இனப் பிரச்சினை. மற்றபடி தமிழ்த் தேசிய இனத்தின் மீது அதற்குள்ள பற்றினால் அல்ல.

ஏற்கெனவே இங்கே பல பத்து தமிழ்த் தேசிய இனக் குழுக்கள் உள்ளன; அவை எல்லாவற்றையும் விடத் த.தே.பொ.கட்சித் தலைமை வித்தியாசமானதும் ஆழ்ந்த சிந்தனையும் தமிழ்த் தேசியத்தின் தீவிரப் பற்றும் தெளிவும் கொண்டதாகக் காட்டிக் கொள்கிறது; ஆனால், நடைமுறையில் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகவே த.தே.பொ.கட்சித் தலைமை பலவாறு உளறிக் கொட்டிக் கிளறி மூடுகிறது.

நிலவுடைமை பண்பாட்டையும், பார்ப்பனிய சனாதனத்தைப் புகுத்திய நிலவுடைமை மன்னர்களின் அருமை பெருமைகளை ஏற்றிப் போற்றி பாரம்பரிய உரிமை பாராட்டி தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப்படுத்துகிறது. இந்திய தேசியத்தை  இந்து தேசியத்தை உயர்த்திப் பிடித்த பார்ப்பனிய பாரதியைப் போற்றுகிறது. இராமன் தமிழ்க் கடவுள் என்று சொல்லி இந்துத்துவத்தையும் தமிழ்த் தேசியத்துக்குள் புகுத்துகிறது.

இவ்வாறு உண்மையில் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான இந்துத்துவ  இந்திய தேசியத்தையும் ஏற்றுக் கொண்டுள்ள த.தே.பொ.க. தலைமை, குறுகிய இனவெறி சிவசேனா பாசிசத்தையும் கையிலெடுத்துக் கொண்டுள்ளதில் வியப்பில்லை. பிற மாநிலங்களில் இருந்து பிழைப்புத் தேடித் தமிழகத்தில் குடியேறும் பிற மாநிலத்தவர்கள் அனைவரும் கிரிமினல் குற்றவாளிகள், தமிழர்களுக்கு எதிராக ஆதிக்கம் புரிபவர்கள், அவர்களை  வெளியேற்ற வேண்டும் என்று கூறி  சிவசேனாக்களின் பாசிச  இனவெறி பாணியில் நஞ்சு கக்குகிறது, த.தே.பொ.க. தலைமை.

“கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்முறை எனப் பலக் குற்றச் செயல் தமிழ்நாட்டில் பெருகிவிட்டதற்கு முகாமையான காரணம் வெளிமாநிலத்தவர்களின் மிகை வருகை என்று தமிழகக் காவல்துறை அறிவித்துள்ளது” என்று கூறும் த.தே.பொ.க. தலைமை, தானும் அதை வழிமொழிந்து, “தமிழகத்தில் தமிழர்கள் நடத்தும் கொள்ளை, பாலியல் வன்முறைகளை விட அதிக விகிதத்தில் வெளிமாநிலத்தவர் நடத்தும் கொள்ளை, பாலியல் வன்முறை நிகழ்வுகள் இருக்கின்றன” என்று பச்சையாக கோயாபல்சு புளுகுகளை அள்ளி வீசுகிறது.

குடியேறும் வெளிமாநிலத்தவர் அனைவரும் ஒரே வகையினர் அல்ல. இன்றைய தனியார்மயம், தாராளமயம், உலகமய சூழலில் வாழ்வாதாரங்கள் பிடுங்கப்பட்டு, துரத்தியடிக்கப்படும் உழைப்பாளி மக்கள் பிற மாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்து,  ஓலைக்கொட்டைகளிலும்,  தகரக் கொட்டடிகளிலும் புழுங்கித் தவிக்கின்றனர். தமிழ் ஒப்பந்தக்காரர்களிடம் கொத்தடிமைகளாக அற்பக் கூலிக்கும், சில தமிழ்க் கிரிமினல்களின் கேட்பாரற்ற தாக்குதல், வழிப்பறிக்கும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும் பலியாகிறார்கள்.

தமிழகத்திலுள்ள சுயநிதிக் கல்லூரிகளில் சேர்ந்து சீரழிந்த பண்பாட்டிலும், கிரிமினல் குற்றங்களிலும் ஈடுபடும் வெளிமாநிலத்தவர் வேறொரு பிரிவினர். இவர்கள், தமது சொந்த மாநிலங்களில் குறுக்கு வழியில் செல்வத்தைக் குவிக்கும் குடும்பங்களின் செல்லப்பிள்ளைகள். இந்த வேறுபாட்டை  மூடிமறைக்கிறது, த.தே.பொ.க. தலைமை.

தமிழ்த் தேசத்தில் குடியேறும் வெளிமாநிலத்தவர்கள் எல்லாம் அடகுக்கடை, சினிமா முதலீட்டாளர்கள், தமிழர்கள் மீது ஆதிக்கமும் சுரண்டலும் செய்பவர்கள் மட்டுமல்ல,  கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் என்று பார்ப்பன  பாசிச ஜெயாவும் அதன் போலீசும் கூறுவதை வழிமொழிந்து மணியரசன் கும்பல் குற்றஞ் சுமத்துகிறது. அதனால் வெளிமாநிலத்தவர் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்று போராடவும் செய்கிறது.

வெளி தேசங்களில் குடியேறும் தமிழர்கள் எல்லாம்  உழைக்கும் மக்கள்;  குடியேறும் தமிழர்கள் அம்மாநிலங்களில் ஆதிக்கம் புரிபவர்களோ சுரண்டுபவர்களோ அல்ல என்று புளுகுகிறது, த.தே.பொ.க. தலைமை.

இதுவும் உண்மையல்ல. வெளிமாநிலங்களில் குடியேறும் தமிழர்களிலும் ஒருபிரிவினர் கந்துவட்டி  லேவாதேவியிலும், அம்பானி, டாடா, பிர்லாக்களின் கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிகார வர்க்க முதலாளிகளாகவும், (சசிகலா) நடராசன், தம்பிதுரை, தேவநாதன் போன்ற தமிழர்கள் உ.பி., பீகார், அரியானாவில் சுயநிதிக் கல்லூரிகள் வைத்துக் கொள்ளையடிக்கிறார்கள், குடிபெயரும் தமிழர்கள் மற்றும் புலம் பெயரும் ஈழத்தமிழர்களிலும் ஒரு சிலர் குற்றச் செயல்களில் பிடிபடுகின்றனர். அதற்காக எல்லாத் தமிழர்களையும் வெளியேற்ற வேண்டும் என்பது சரியாகுமா என்று மணியரசன் கும்பல்தான் கூறவேண்டும்.

பாசிசக் கழிசடை அரசியல் மணியரசன்களே! ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பையின் தாராவியில் வாழும் ஐந்து இலட்சம் உழைக்கும் தமிழ் மக்களைத் தாக்கும் சிவசேனா இனவெறியர்களுக்கும், உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து வாழும் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைத் தாக்கும் அந்தந்த நாட்டு நிறவெறி பாசிஸ்டுகளுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு?

பின் குறிப்பு:  மணியரசன் வகையறாக்கள் எமக்கு எதிராகத் தமது அவதூறுகளைத் தொடர்வதற்கு வசதியாக ஒரு தகவல்:  எமது தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நூற்றுக் கணக்கில் ஒரிசா, ஜார்கண்ட், பீகார், சட்டிஸ்கர், வங்காள புலம்பெயர் தொழிலாளர்களை உறுப்பினர்களாக்கி வருகிறது!

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. தேசிய வாதம் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் பல இன வாதம் என்று பல வாறு குழப்பி குளிர் காயநினைக்கிறீர்கள். செத்துப்போன சித்தாந்தங்களை தோண்டி யெடுத்து உயிரூட்டநினைக்கிறீர்கள். உலக அரங்கிலும் சரி இந்தியாவிலும் சரி இதுநடக்காத ஒன்று. தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டாள் தமிழர்கள் ஐம்பது சதத்திக்கும் குறைவுதான். தெலுங்கு, கன்னடம், மல்யாளம், சவுராஷ்ட்டிரம், இந்தி, அரபு, உரூது மற்றும் பிற் மொழி பேசுவோர்கள் தான் அதிகம். அதேநிலை தான் மற்ற மாநிலங்களிலும். முஸ்லீம் மாநிலமான காஷ்மீரில் மட்டும்தான் மதவெறியால் இனவாதம் வெறிபிடித்து ஆடுகிறது. அதுவும் உங்களைப் போன்ற இஸ்லாமிய ஆதரவாலர்களால்தான். மக்கள் அனைவரும் ஜாதி, மதம், இனம், மொழி,நிறம் ம்ற்றும் பிற பேதங்கள் இல்லாமல் வாழ உங்கள் பத்திறிக்கையை பயன் படுத்துங்கள்.

    இலங்கையில் தனி ஈழம் என்ற பெயரில் “பிரபாகரனை” உசுப்பிவிட்டு படுபாதகத்தை செய்தீர்கள். தமிழ்நாட்டில் “உதய குமாரை” உசிப்பிவிட்டு எங்கு போனார் என்ற தகவலேதெரியாமல் போய்விட்டது. பாசீசம், தேசீயம் என்று கூறி மக்களை போராட்டத்தை தூண்டி தோல்வியடைந்து வருகிரீர்கள். மின் தட்டுப்பட்டை வைத்து மக்களை பட்டினி போட வைக்கீறீர்கள்.

    • மிக சிறந்த ஆர் எஸ் எஸ் பேச்சு. தமிழ் தேசியம் வாராது என்று சொல்லும் அதே எழுத்து அடுத்த நொடியில் காச்மீர் மாநிலம் என்று இந்திய ஒருமைபாட்டை சொல்லி அதிலும் இஸ்லாமிய மக்கள் மீதான இன வெறியை இந்திய இராணுவத்தின் மூலம் செய்து ஆனால் அவர்கள் மீது இன வெறி பலிபோட்டு. அதே நேரத்தில் “இந்தியர்கள்” ஆகிய நாங்கள் ” ஜாதி, மதம், இனம், மொழி,நிறம் ம்ற்றும் பிற பேதங்கள் இல்லாமல் வாழ உங்கள் பத்திறிக்கையை பயன் படுத்துங்கள்” என்று ஒரு நச்சு கருத்தை சொல்லி. தமிழ் தேசிய போராளியையும், தமிழ் மக்களுக்காக அனுவுலை எதிறாக போராடிய தோழரையும் கொச்சை படுத்தி இந்திய தேசம் வளர்க்கும் இது போன்ற ஆர் எஸ் எஸ் காரர்களிடத்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    • நட்ராயன், கொஞ்சம் கட்டுரையை முழுக்க படிச்சுட்டு பின்னூட்டம் போடுங்களேன், அப்புறம் உங்க வயசு என்னன்னு தெரிஞ்சுக்கலமா? தினசரி ஷாகா போறீங்களா? எல்லாம் உங்க எதிர்கால அக்கறைக்காக கேட்கிறோம், சொல்லுங்க!

    • “தேசிய வாதம் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் பல இன வாதம் என்று பல வாறு குழப்பி குளிர் காயநினைக்கிறீர்கள். செத்துப்போன சித்தாந்தங்களை தோண்டி யெடுத்து உயிரூட்டநினைக்கிறீர்கள். உலக அரங்கிலும் சரி இந்தியாவிலும் சரி இதுநடக்காத ஒன்று.”

      படிக்காமலேயே பதில் போடவேண்டுமென்று ஏன் “அறிவாளித்தனமாக” நினைத்து போடுவதை நிறுத்தி தொலைங்கப்பா…..

      • இன்னும் என்னென்ன சுக்குசுக்காக நாட்டை, மக்களைப் பிரிக்கும் வேறு என்னென்ன “வாதங்கள்” இருக்கின்றன என்பதை எனக்கும் தெரியப்படுத்தவும். நான் அவற்றில் சாத்தியமான ஒரு வாதத்தைப் பிடித்துக் கொண்டு பிழைக்கும் வழி பண்ணிக் கொள்ளுகிறேன். எனக்கு கொஞ்சம் எழுத்து, பேச்சுத் திறமை இருப்பதைப் பயன்படுத்தி எர்த் வாதமாயினும்ஒரு விளாசு விளாசி, புகழ், பணம்,
        பதவி, முதலியன தேடிக்கொள்கிறைன். சொத்துக் குவிப்பு
        வழக்குகளையவழக்குகளை, வருமான வரி ஏய்த்தல் வழக்குகளை வராமலேயே பார்த்துக்கொள்ளும் திறமையையம் ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்ளுகிறேன். சரி, கட்சிக்கு ஒரு நல்ல பெயரையும் தெரியப்படுத்தவும். கழகம் என்று முடிந்தால் அந்த பெயருக்கு அதிருஷ்டம் அதிகம் என்கிறார்கஎன்பது உலகோர் அறிந்ததே. கமறட்சிப் பெயரின் மற்ற சொற்களை அனுப்பவும்.

  2. தனி தமிழ் தேசியம் தேவை தான் அதற்காக போராட வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை. போராட்டம் எந்த பாதையானலும் சரி அதை செம்மையாக ஒத்த கருத்துடன் துனிந்து போராட வேண்டும்.

    தமிழ் தேசியத்துக்கு எதிரிகள் அப்பாவி அன்டை மாநிலத்தில் இருந்து பிழைப்புக்காக வந்த பாமர மக்கள் இல்லை. இந்திய அரசாங்கத்தில் வீட்றிர்கும் அதிகார வர்க்கமும் இந்திய தேசத்து ஒருமை பாட்டுக்காக கொடி பிடிக்கும் ஆர் எஸ் எஸ் டிரவுசர் பாண்டிகளும், முதலாலிகளான பனியாக்களும், மேனன்களும்,நாயர்களும்,ரெட்டிகளும் தான்.

    உண்மையான வீரம் இருந்தால் முதலாலிகளான அப்போலோ ரெட்டியையும், நகை கடை தெலுங்கு செட்டிகளையும், டிவிஎஸ் குழும பார்ப்பனர்களையும், சினிமா ரஜினிகாந்தயும், இந்திய தேசத்து தமிழ் காதலன் கமல், புரட்ச்சி கலைஞர் விசய காந்த்தையும் அடித்து அனுப்ப வேண்டியது தானே. மாட்டார்கள் அவர்களை தொட்டால் இவர்கள் டிரவுசர் கிழிந்து விடும் என்று தெரியும்.

    இவர்கள் வீரம் இல்லாம் டீ கடை நாயர்களிடத்தும், கட்டிட தொழில் பிகாரியிடமும், லாரி சிங்கிடமும் தான்

    வீரத்தை காட்ட வேண்டும் என்று முற்பட்டால் முதலில் இராமேச்வரம், மண்டபம் பகுதிகளில் அடிமைகளாக அடைக்க பட்டுள்ள ஈழ தமிழர்களை முதலில் விடுதலை பேர போராடுவோம்.

    அப்படி தாக்க முற்படும் தமிழ் இன “போராளிகள்” முதலில் தனி தமிழ் தேசியத்துக்கு என்ன அடிப்படை போராட்டத்தை நடத்தினார்கள். கட்டாய தாய் மொழி வழி கல்விக்காக போராடினார்களா? இல்லை தமிழர்களின் மரபு போற்றும் வாழ்கை நெறிகளை தங்கள் வாரிசுகளுக்கு கற்று கொடுத்தார்களா? சமத்துவம் பேசும் இவர்களை போன்ற சிகாமணிகள் இன்னும் தங்கள் குழந்தைகளின் பெயர்களுக்கு முன்னால் “இனிசியல்”களில் இன்னும் அவர்கள் பெயர்களில் இருக்கும் முதல் எழுத்துகளை மட்டும் இட்டுக் கொண்டு பெண் சமுதாயத்தின் உரிமை பற்றி மேடையில் முலங்குவார்கள். இந்த சின்ன காரியத்தில் கூட உரிமை கொடுப்பது இல்லை.

    இவர்கள் தமிழ் தேசியத்தையும் பொதுவுடமை பேசவும் கடை விரித்து விடுவார்கள். தமிழனின் உணர்ச்சியை ஒரு வியாபார யுக்கிதியை கையால்வது போல் செய்து அரசியல் பிலைக்கும் இது போன்ற முட்டால்களை பொது புத்தி அறிவு கொண்டு பார்காமல் பகுத்தறிவு கொண்டு ஒடுக்க வேண்டும். தமிழனின் உணர்ச்சிகள் அவ்வலவு கிலே பொய்விட்டதா?

    அய்யா தமிழ் தேசியம் தேவை தான் முதலில் அதை உங்கள் விடுகளில் இருந்து முதலாகட்டும். இனத்தை மீட்டு எடுக்க வேண்டும் என்றால் முதலில் மண்ணை மீட்டு எடுக்க வேண்டும். அதற்கு முதலில் “இந்தியா”விடம் போராடுங்கள். பின்பு தமிழ் தேசம் தமிழர்களுக்கு தான் என்று சொல்லலாம்.

    • இவர்கள் வீரம் இல்லாம் டீ கடை நாயர்களிடத்தும், கட்டிட தொழில் பிகாரியிடமும், லாரி சிங்கிடமும் தான்///
      .
      .
      அப்போ ஜோஸ் ஆளுக்காசு ,ஜோய் ஆளுக்காசு,மலப்புரம் சாரி மனப்புரம்,முத்தூடு பினான்சு அடித்து நொறுக்கினால் நீங்கள் வரவேற்க தயார் என்று மறைமுகமாக சொல்றீனகளா?

      • ராஜன் எனது கருத்து அது கிடையாது, தனி தமிழ் தேசியம் தான் எனது கருத்தும் அதற்கு வேண்டியது மண் உரிமையை மீட்டு எடுப்பது முதலில் அதை செய்ய வேண்டும் அதை யாரிடம் இருந்து பெறுவீர்கள்?.

        //அப்போ ஜோஸ் ஆளுக்காசு ,ஜோய் ஆளுக்காசு,மலப்புரம் சாரி மனப்புரம்,முத்தூடு பினான்சு அடித்து நொறுக்கினால் நீங்கள் வரவேற்க தயார் என்று மறைமுகமாக சொல்றீனகளா?//

        நேராகவே சொல்கிறேன் அந்த முதலாலிகளை அடியுங்கள் அவன் தொழிலாளியை அல்ல. அந்த முதலாலியை உள்ளவிட காரணமாக இருந்த இந்தியன் என்னும் பட்டத்தை ஒழியிங்கள். தமிழ் நாடு இந்தியாவின் ஒரு அங்கம் என்பதால் தான் மற்ற மாநிலத்தார்கள் எலிதில் வரயிலகிறது இதுவே நாம் ஒரு தனி நாடாக இருந்தால் அவர்கள் வர வேண்டுமா வேண்டாம் என்று முடிவு எடுக்கும் நிலையில் நாம் இருப்போம். அதற்கு தேவை மண்ணுரிமை தோழர் அதை முதலில் மிட்டு எடுக்க வேண்டும்.

      • ஒருவன் “தமிழன்” அல்லது “தமிழன் அல்ல” என்பதை எப்படி கண்டுபிடிப்பது? ஜாதியை வைத்தா அல்லது அவர்கள் பேசும் மொழியை வைத்தா? ஜாதியை வைத்துத்தான் என்றால் ஜாதியை ஒழிக்கக்கூடாதா? அப்படியே இருக்க வேண்டுமா? வைகோ, விஜயகாந்த், கருணாநிதி போன்றவர்கள் தமிழர்கள் இல்லையா!! மற்ற மாநிலங்களில் எல்லாம் தமிழர்கள் முதல்வர்களாவது இல்லை. ஜாதியை வைத்துத்தானே இதைப் பார்க்கிறீர்கள். பலநூற்ராண்டுகலாக தமிழகத்தில் ஒன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும் சகோதர மக்களுக்குள் பகமையை உண்டுபண்ணுகிறீர்கள். இதனால் அழிவது தமிழன்தான். தமிழ் தேசீயம் ஒரு பைத்தியகாரனின் கற்பனை சொல்!!!!!!!!!!

        • தமிழ்நாட்டில் பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்து இந்த மண்ணோடு ஒன்றி போனவர்கள். இந்த தமிழ் மண்ணை விட்டால் வேறு போக்கிடம் இல்லாதவர்கள். இந்த மண்ணைத்தவிர வேறு மண்ணுக்கு விசுவாசம் பாராட்டத்தெரியாதவர்கள். இந்த மண்ணுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதனால் பாதிப்படையும் முதல் மக்கள். தமிழ்நாட்டை (இதன் மொழி, பண்பாடு, மக்கள், தொழில் வளர்ச்சி, கல்வி முன்னேற்றம், வாழ்க்கைத்தரம், சுகாதாரம் ஆகியன) பற்றி யாராவது தவறாக பேசினால் அல்லது எள்ளி நகையாடினால் அவமானப்படும் மக்கள். இவர்கள் தான் தமிழர்கள்.

          • இதே தகுதி பிற தேசிய இனங்களுக்கு இருக்கக் கூடாதா? அப்படி இருக்கும்போது அதை ஏற்க உங்களை எது தடுக்கிறது? தேசிய இன கலப்புக்கு என்ன காரணம் என ஆராய்ந்து அந்தப் பொது எதிரிக்கு எதிராக ஒன்றிணைவதுதான் உண்மையான தேசிய உணர்வு.

            • இந்த அடிப்படை நியாய எதார்த்தத்திலிருந்து திசை விலகியதால்தான் மணியரசன் வகையறாக்கள் இனவெறி பாசிஸ்டுகளாக சீரழிந்து போனார்கள.

      • மனப்புரம் மற்றும் முத்தூட்டும் மொழி மாறி தமிழர்கலாகிவிட்டால் அதனை ஏற்றுக்கொல்கிரீர்கலா? வெளிநாட்டிலிருந்து இரக்குமதிசெய்யப்பட்ட கிருத்துவம் மற்றும் முஸ்லீம் மதங்கலுக்கு மாறும்போது ஒரேநாட்டில் ஒருவர் ஏன் மொழி மாரக்கூடாது. “யாதவர்கள்” அனைத்து மானிலங்களிலும் இருக்கிரார்கள். வசதி படைத்தவர்கள் பெண் கொடுத்து கட்டிக்கொள்கிறார்கள். முலாயம்சிங் யாதவ், முலாயம்சிங் யாதவ் மற்றும் பலர் எந்த மொழிக்கு சொந்தக்காரர்கள். மலை பகுதிகளில் இருக்கும் கிருத்த்வ பள்ளிகலில் தமிழில் பேசினாள் தண்டம் விதிக்கிறார்கள்.அதெ போல் முஸ்லீம் பள்ளீகளில் அரபு மட்டுமெ சொல்லி தருகிரார்கள். இதனை உங்களால் தடுக்கமுடியுமா?

        • U said correctly sir, People are converting from our religion to ISLAM, CHRISTIANITY, HINDUISM(Which needs SANSKRIT, RAM etc) we have to remove all the above religions we have to go back to our religion (MURUGAN, KOTAVAI, MAYAN, THIRUMAL etc and all temples shud use only TAMIL )…… Speaking or learning of ENGLISH, ARABIC , SANSKRIT shud be banned..

          //கிருத்த்வ பள்ளிகலில் தமிழில் பேசினாள் தண்டம் விதிக்கிறார்கள்.//
          Yes such schools have to be banned including HINDU VIDYALAYA, ADARSH VIDYA KENDRA etc.. These people are also doing the same.. Also they are teaching SANSKRIT SLOGAS which does not belong to our land it came from central asia..

          We need people like u sir…

        • மொழி மாறுவது அறிவியலுக்கு… நீங்கள் பேசும் மர்ச்சியதிற்கு எதிரானது…பிறப்பின் அடிபடையில் வருவதே தேசிய இனம்… இதையே புரியாமல் என்ன புரட்சி செய்து விட முடியும்…?கிறித்துவம், முஸ்லிம், பிற மொழியினரை ஆதரிக்க வேண்டும் என்பதே உங்கள் கொள்கை எனத் தெரிகிறது…அப்புறம் எதற்கு தமிழ், தமிழர் என்று பேசுகிறீர்கள்….?

      • “ஜோய் ஆளுக்காசு,மலப்புரம் சாரி மனப்புரம்,முத்தூடு பினான்சு அடித்து நொறுக்கினால் நீங்கள் வரவேற்க தயார் என்று மறைமுகமாக சொல்றீனகளா?”

        தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுதே….

    • மாவோ என்னா சொன்னாரு?:நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எதிரி முடிவு செய்கிறான் என்றார் .இங்குள்ள சிறுபான்மை மொழியினர்(அதான் தெலுகு,கன்னடம் மலையாளம் )தமிழக பள்ளிகலில அவர்கள் தாய் மொழியை படிக்க வசதி உள்ளது!இதே போல வேறு மாநிலங்களில் ஒன்றிரண்டு பள்ளிகளை தவிர தங்கள் தாய்மொழியான தமிழ் மொழியை படிக்க அந்தந்த மாநிலங்கள் என்ன நடவடிக்கை எடுத்தன?அவர்கள் எண்கள் மொழியை படிக்க அனுமதிக்க மாட்டார்கள் ஆனால் நாங்கள் இங்கு அனுமதிக்கிறோம்!அவர்கள் தண்ணி உட மாட்டேன் என்று சொல்லும்போது நாங்கள் கரண்டு உட மாட்டோம் என்று சொல்வது எந்த வகையில் தவறு?மாவோ கொள்ளுகை இதில் சரியாக வருகிறதா இல்லையா?இல்லை காந்திய வழியில் எவன் என்ன கொடுமை செய்தாலும் பொத்திகினு போக சொல்றீங்களா?

      இங்கு சர்வக்ஞர் சிலை பாதுகாப்போடு இருக்கு ஆனா கருநாடகாவில் திருவள்ளுவர் சிலையின் நிலை என்ன?சரி சிலை அரசியல் வேண்டாம்!
      இங்கு ஒருவர் “தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டாள் தமிழர்கள் ஐம்பது சதத்திக்கும் குறைவுதான். தெலுங்கு, கன்னடம், மல்யாளம், சவுராஷ்ட்டிரம், இந்தி, அரபு, உரூது மற்றும் பிற் மொழி பேசுவோர்கள் தான் அதிகம். அதேநிலை தான் மற்ற மாநிலங்களிலும்” என்கிறார்.
      சரி அய்யா மற்ற மாநிலங்களில் ஒரு மாநிலத்திலாவது தமிழன் முதல்வராக இருக்கிறாரா?இல்லையே!அவர்கள் தங்கள் மாநிலகாரர்களையே தேர்ந்தெடுக்கின்றனர்.அதை மாற்ற வினவு முயற்சிக்கலாமே!உமா பாரதியை உ.பி இல் நிறுத்திய பாஜாக கதையை தான் நீங்க தொழிலாளர் சிகப்பு சட்டை கவர போட்டு பேசுகிறீர்கள்!

      • குப்பன் ஒரு விடயத்தை மட்டும் நன்றாக புறிந்து கொள்ளுங்கள். நான் திவிர தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் ஒரு நலன் விரும்பியே! ஆனால் மண்ணுரிமையை மீட்டு எடுக்காமல் தமிழ் தேசியம் எடுபடாது.

        நீங்கள் சொல்லும்: //இங்குள்ள சிறுபான்மை மொழியினர்(அதான் தெலுகு,கன்னடம் மலையாளம் )தமிழக பள்ளிகலில அவர்கள் தாய் மொழியை படிக்க வசதி உள்ளது!இதே போல வேறு மாநிலங்களில் ஒன்றிரண்டு பள்ளிகளை தவிர தங்கள் தாய்மொழியான தமிழ் மொழியை படிக்க அந்தந்த மாநிலங்கள் என்ன நடவடிக்கை எடுத்தன?அவர்கள் எண்கள் மொழியை படிக்க அனுமதிக்க மாட்டார்கள் ஆனால் நாங்கள் இங்கு அனுமதிக்கிறோம்!அவர்கள் தண்ணி உட மாட்டேன் என்று சொல்லும்போது நாங்கள் கரண்டு உட மாட்டோம் என்று சொல்வது எந்த வகையில் தவறு?//

        இந்த வாக்கியத்தில் தமிழ் தேசியம் இருக்கிறதா இல்லை இந்தியாவின் தமிழ் தேசியம் இருக்கிறதா?

        தமிழ் நாடு இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கும் வரை தண்ணீர்க்கும், மின்சாரத்துக்கும், மொழிக்கும் சண்டையிட்டு கொண்டுதான் இருப்பீர்கள். தயவு செய்து இந்திய தமிழனாக தமிழ் தேசியத்தை பார்க்காதீர்கள்.

        தமிழ் நாடு ஒரு தனி நாடாக இருக்கும் பட்ச்சத்தில் தண்ணீர் நமக்கு சுலபமாக கிட்டும். சர்வதேச நதி நீர் சட்டம் இதற்கு வழிவகுத்து தரும். நெய்வேலி அனல் மின் மின்சாரம் நம்க்கே யாருக்கும் பகிற்ந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை.

        நமது மொழியின் சிறப்பு நமது மக்களுக்கு தெறியுமா? மண்னின் மைந்தர்களுக்கு அவர்களின் மொழியின் சிறப்பு தெறியாமல் போவதற்கு இந்திய தேசம் போன்ற ஒரு தேசியவாதம் மிக பெரிய காரணம்.

        சரி தமிழன ஆகிய நீங்கள் ஃ என்னும் தமிழ் எழுத்தின் சிறப்பை சொல்லுங்கள் பார்ப்போம்?

        //இங்கு சர்வக்ஞர் சிலை பாதுகாப்போடு இருக்கு ஆனா கருநாடகாவில் திருவள்ளுவர் சிலையின் நிலை என்ன?சரி சிலை அரசியல் வேண்டாம்//

        தயவு செய்து தனி தமிழ் தேசியத்தின் விவாதத்தை அரசியல் கட்சி தலைவர்கள் சிலை விவகாரம் போல் என்னாதீர்கள். தனி தமிழ் தேசியம் திருவள்ளுர் சிலையில் இருக்கிறதா இல்லை அவர் இயற்றிய திருக்குறளின் பெறுமை போற்றுவதில் இருக்கிறதா?

        மீண்டும் மீண்டும் சொல்கிறேன் தமிழ் நாட்டை இந்தியாவின் ஒரு அங்கமாக பார்ப்பதால் தான் அவன் என் மொழி தலவன் சிலையை அவமானப்டுத்தினான் நான் அப்படி செய்யவில்லையே என்று அனுதாபம் கொறுவது.

        //சரி அய்யா மற்ற மாநிலங்களில் ஒரு மாநிலத்திலாவது தமிழன் முதல்வராக இருக்கிறாரா?இல்லையே!அவர்கள் தங்கள் மாநிலகாரர்களையே தேர்ந்தெடுக்கின்றனர்.//

        தமிழகத்தின் வரலாற்றை எடுத்து பாருங்கள் கடந்த 1000 ஆண்டுகளாக தமிழகத்தை தமிழன் ஆண்டது கிடையாது! இக்காலத்தில் அதற்கு பெறிதும் காரணம் திராவிட அரசியல், தமிழனை திராவிடனாக்கி, தமிழனின் பெறுமையை மறைத்து வந்தேரிகள் ஆண்டத்துக்கு காரணமும் அதான். தனி தமிழ் நாடு காண்போம் என்று சொல்லி ஆட்ச்சியை பிடித்த திராவிட கழகம், அதை விடுத்தது. இதற்கு காரணம் இந்திய மாயை.

        முதலில் மண்ணை மீட்டு எடுங்கள் அனைத்தும் தானே சரியாகும்.

        //அதை மாற்ற வினவு முயற்சிக்கலாமே!உமா பாரதியை உ.பி இல் நிறுத்திய பாஜாக கதையை தான் நீங்க தொழிலாளர் சிகப்பு சட்டை கவர போட்டு பேசுகிறீர்கள்!//

        இந்தியாவில் ஜார்ஜ் புஸ் வந்து தேர்தலில் போட்டியிட்டாலும் அவனுக்கு ஓட்டு போட்டு மகிழும் மக்கள் இவர்கள். காரணம் போலி இந்திய தேசிய வாதம். ஈழத்தில் அமைதி படைகளை அனுப்பி அட்டுளியம் செய்த ராசிவ் காந்தியை உன்னத தலைவனாக எற்ற தமிழர்கள் நம் இந்திய தமிழ் தேசியவாதிகள். நாலை சோனியா காந்தி சென்னையில் இருந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் என்றால் வேட்டி மடித்து கட்டி வேலை செய்யும் கூட்டம் இது. இந்திய தேசத்தால் தமிழ் உணர்வை மறந்த முடர்கள்.

        மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் மண்ணை மீட்டு எடுக்காமல் தேசியம் பேசுவது முடத்தனம்.

      • தமிழன் என்றால் யார் என்பதற்கு விளக்கம் சொல்லுங்கள். ஜாதி அடிப்படையா அல்லது பேசும் மொழி அடிப்படியா அல்லது பண்பாடு காலாச்சாரம் அடிப்படையா? ஜாதியை ஒழித்துவிட்டால் தமிழன் யார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது. மொழி தான் அடிப்படை என்றால் வைகோ, கருணாநிதி, விஜயகாந்த மற்றும் பலரும் தமிழர் தானே. அவர்களை ஏன்நிந்திக்க வேன்டும். பண்பாடு காலாச்சாரம் என்றால் இங்குள்ள முஸ்லீம்களும் , கிருத்துவர்களும் தமிழர்கள் அல்லவே.

        • தமிழ் பேசுவதால் ஒருவன் தமிழனாக முடியாது. தமிழனுக்கு ஜாதி, மதம் பேதம் கிடையாது. பிறப்பாளும், மரபாளும் தமிழை தாய் மொழியாக கொண்ட அனைவரும் தமிழர்களே!. தெலுங்கு தாய் மொழியாக கொண்டு தமிழில் அரசியல் பிழைக்கும் யாரையும் தமிழர்கள் என்று ஒப்பு கொள்ள இயலாது! தமிழை இலித்து சமகிரதத்தை போற்றும் பார்பனர்களும் இதில் அடங்குவர்.

          //பண்பாடு காலாச்சாரம் என்றால் இங்குள்ள முஸ்லீம்களும் , கிருத்துவர்களும் தமிழர்கள் அல்லவே.//

          இதில் பார்பனர்கள் விட்டதின் நோக்கம் என்னவோ? அப்படி பார்த்தால் இந்துகளும் தான்?

          தமிழன் என்பவன் தாய் மொழியால் இனைக்க பட்டு, தமிழ் பண்பாடும் கலாச்சாரத்தையும் ஏற்று தனது பிற வழி தவறி சென்று கொண்டு இருக்கும் தமிழ் இன சகோதரர்களை தமிழ் பண்பாடு கலாசாரத்திற்கு மிட்டு கொண்டு இருப்பவனே தமிழன். தமிழனுக்கு மதமும் கிடையாது சாதியும் கிடையாது. தமிழை தாய் மொழியாக கொண்டாயாவரும் தமிழர்களே!

          • —->தமிழ் பேசுவதால் ஒருவன் தமிழனாக முடியாது. தமிழனுக்கு ஜாதி, மதம பேதம் கிடையாது. பிறப்பாலும், மரபாலும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் தமிழர்களே!. தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட, தமிழ் தேசிய‌ அரசியலை முன்வைத்துப் பிழைக்கும் யாரையும் தமிழர்கள் என்று ஒப்புக்கொள்ள இயலாது! தமிழை இழித்து சமஸ்கிருதத்தைப் போற்றும் பார்ப்பனர்களும் இதில் அடங்குவர்.

            //பண்பாடு காலாச்சாரம் என்றால் இங்குள்ள முஸ்லீம்களும் , கிருத்துவர்களும் தமிழர்கள் அல்லவே.//

            இதில் பார்ப்பனர்கள் பெயர் விடுபட்டத‌ன் நோக்கம் என்னவோ? அப்படிப் பார்த்தால் இந்துக்களும் தான் தமிழர்கள் அல்லவே?
            தாய் மொழியால் இணைக்கப்பட்டு, தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் ஏற்று, வழி தவறிச் சென்று கொண்டு இருக்கும் தனது பிற தமிழ் இனச் சகோதரர்களை தமிழ் பண்பாடு, கலாசாரத்திற்கு இட்டுச் சென்று கொண்டு இருப்பவனே தமிழன். தமிழனுக்கு மதமும் கிடையாது, சாதியும் கிடையாது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட யாவரும் தமிழர்களே!
            <—–செந்தமிழன் தயவு செய்து மேலே இருப்பதுதான் நீங்கள் சொல்ல வந்ததா ?

          • //தமிழ் பேசுவதால் ஒருவன் தமிழனாக முடியாது. தமிழனுக்கு ஜாதி, மதம் பேதம் கிடையாது// முரண்பாடுடைய வாக்கியம்
            ஜாதி என்ற ஒன்று இருந்தால் தானே அவனை தமிழன் என்று அடையாலம் கானமுடியும். பலநூறு ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் தமிழையே தாய் மொழியாக பேசிவரும் இத்ர ஜாதியினர் தமிழர்கள் இல்லையா? தமிழ் மட்டுமெ பல ஆயிரம் ஆண்டுகளாக பேசிவரும் பிராமனர்கள் தமிழ்ர்கள் இல்லயா? தமிழில் பற்ப்பல இலக்கியங்கலை இயற்றிய பிராமினர்கலும் தமிழர்கள் இல்லையா. ” தமிழ் காட்டு மிரான்டி பாஷை” “தமிழை படிப்பவன் உருப்படமாட்டான்” என்று கூரிய பெரியாரை வைத்து கொண்டாடுகிரீர்கலே அவர் எந்த வகையில் தமிழன்.

            • //ஜாதி என்ற ஒன்று இருந்தால் தானே அவனை தமிழன் என்று அடையாலம் கானமுடியும்.//

              சாதியில் எங்களை தேடாதீர்கள். ஒரு சீனா நாட்டவரை எந்த சாதி கொண்டு அவன் சீனாகாரன் என்று முடிவு செய்கீன்றீர்கள்?

              //பலநூறு ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் தமிழையே தாய் மொழியாக பேசிவரும் இத்ர ஜாதியினர் தமிழர்கள் இல்லையா? //

              பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் நாங்கள் செய்து வந்த தொழில்களின் அடிப்படையில் பார்ப்பனியர்களால் உன்டாக்க பட்ட வர்னசாரத்தின் விலைவாக வந்த சாதி என்னும் நச்சில் தமிழனை தேடாதீர்கள். எங்கள் தாய் மொழியாம் தமிழ் மொழி எங்களை தமிழர்களாக அடையாலம் காட்டும்.

              //தமிழ் மட்டுமெ பல ஆயிரம் ஆண்டுகளாக பேசிவரும் பிராமனர்கள் தமிழ்ர்கள் இல்லயா?//

              தமிழ் பேசுவதால் ஒருவன் தமிழனாக முடியாது. வந்தேரிகள் யாரும் தமிழர்களாக முடியாது.

              //தமிழில் பற்ப்பல இலக்கியங்கலை இயற்றிய பிராமினர்கலும் தமிழர்கள் இல்லையா. //

              ஒரு நாட்டிற்கு தஞ்சம் பிழைக்க வந்து அந்த நாட்டின் மொழியை கற்று கொண்டு பாருங்கள் நாங்களும் உங்கள் மொழியிலே உரையாடுகிறோம், எழுதுகிறோம், படிகிறோம் என்று சொல்லி அந்த ம்ண்னின் மைந்தர்களாக முடியாது.

              மேலும் எங்கள் மொழியிலே எங்களை பற்றி அவதுராக எழுதி அதை இலக்கியம் என்று சொன்னால் எப்படி? பார்ப்பனர்கள் அவர்கள் பொய்மையை எங்கள் மொழியில் இயற்றியதால் நாங்கள் அவர்களை தமிழர்களாக எற்று கொள்ள முடியாது.

              // தமிழ் காட்டு மிரான்டி பாஷை” “தமிழை படிப்பவன் உருப்படமாட்டான்” என்று கூரிய பெரியாரை வைத்து கொண்டாடுகிரீர்கலே அவர் எந்த வகையில் தமிழன்.//

              பெரியாரின சமுக சீர்திருத்தங்களை ஏற்பவர்கள் நாங்கள் அதை மனதார ஒப்பு கொள்கிறோம் அதற்கு நாங்கள் கடன் பெற்றுள்ளோம்.

              ஆனால் அதற்காக பெரியாரை தமிழனாக எற்க முடியாது. தமிழ் பேசுவாதால் ஒருவன் தமிழனாக முடியாது இது பெரியாருக்கும் பொறுந்தும் காஞ்சி செய்யேந்தரருக்கும் பொறுந்தும்.

              • //தமிழ் பேசுவாதால் ஒருவன் தமிழனாக முடியாது இது பெரியாருக்கும் பொறுந்தும் காஞ்சி செய்யேந்தரருக்கும் பொறுந்தும்//

                இது இங்கெ இருக்க நிறைய பேருக்கு புரியல நண்பா.

                • இந்த விளக்கம், தேசிய இனங்கள் பற்றிய மார்க்சீய வரையறையுடனும், கொள்கைகளுடனும் முரண்படும். மார்க்சீயவாதியான செந்தமிழன் இதுபோன்ற தமிழ் தேசியவாதம் பேசுவது இரண்டிலும் சேராத குழப்பமான கொள்கையால்..

                  • அம்பி முதலில் தேசியத்தின் விளக்கத்தை சொல்லுங்கள் பிறகு மார்க்சீயத்துடன் ஒன்றி இருக்கிறதா மாறுபட்டுள்ளதா என்று விவாதம் செய்வோம்.

              • தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”பிறபடுத்தப்பட்டவர் , மிகவும் பிற்படுத்தப்பட்டவர் , தாழ்த்தப்பட்டவர் ,மற்றும் மலைவாழ் மக்கள் என்று கூறியுள்ளது. இதன்படி ஜாதிகள் தமிழர்களில் இல்லை என்பது ஒரு வடிகட்டின மோசடி!! தமிழர்களில் ஜாதிகள் இல்லையென்றால் இந்த இட ஒதுக்கீடு எதற்கு. பிர்ப்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தமக்களின் வாழ்க்கைதரம் உயருவதருக்குத்தான் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுகீடு ஜாதி அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் பயனடைந்து வருகிறார்கள். தமிழருக்கு ஜாதி இல்லை என்று கூறி இந்த ஒதுக்கீட்டால் பயன் பெரும் மக்களை ஒழித்துக்கட்டிவிடாதீர்கள். ஒதுகீடு இல்லாவிட்டால் “முதலியார், பிள்ளைமார், செட்டியார் மற்றும் பிற ஜாதிக்ளுடன் பறையர் , சக்கிலியர் போன்றவர்கள் போட்டிபோடவேண்டிவரும். இதில் எப்படி தாழ்த்த்தப்பட்டவர்களால் இட ஒதுகீடு பெற முடியும்.

          • /////தமிழனுக்கு ஜாதி, மதம் பேதம் கிடையாது. பிறப்பாளும், மரபாளும் தமிழை தாய் மொழியாக கொண்ட அனைவரும் தமிழர்களே////// தமிழர்களிடையே ஏராளமான ஜாதிகள் உள்ளன!! ஜாதிகள் இல்லை என்று கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். தமிழ அரசு வெளியிட்டுள்ள “பிற்படுத்தப்பட்டவர் , மிக்கவும்பிற்படுத்தப்பட்டவர் ,தாழ்த்தப்பட்டவர்” என்று பல பிரிவுகள் உள்ளன. ஜாதில்லைஎன்றால் இந்தபட்டியல் எல்லாம் எதற்கு. இடஒதுக்கிட்டை ரத்து செய்து விடலாமே? தமிழர்களிடம்தான் ஜாதி இல்லையே.!! பிராமணர்கள் மட்டுமே இந்த பட்டியலில் வருவதில்லை.!! அவர்கள்தான் ஒரிஜனல் தமிழர்கள்!!!! முதளியார்களும், பிள்ளைமார்களும் செட்டியார்களும் போட்டிஇடும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் “பறையர் சக்கிலியர் மற்றும் பல தலித் களால் மோத முடியுமா? “செந்தமிழன்” தமிழர்களையும் தமிழ் நாட்டைப்பர்ரியும் எதுமும் தெரியாமல் விளையாட்டு காட்டி மக்களை ஏமார்ரநினைக்கிறார்.! மக்கள் ஏமாறக்கூடாது!!!!!!!! .

        • தெலுங்கர் ஒருவர் வந்துவிட்டால் அதுவரை நம்மிடம் தமிழிலில் உரையாடிக்கொண்டிருந்த தெலுங்கர் சட்டென்று அவரிடம் தெலுங்கில் மாட்லாடுவார் பாருங்கள். அனுபவித்திருக்கிறீர்களா? மலையாளிகள் இங்கு வந்து பலவருடங்கள் ஆகி இருந்தாலும் வந்துச்சு, போனுச்சு, சொன்னுச்சு என்று அஃறினையில் உரையாடுகிறார்கள். ஒரு சில ஜாதிக்காரர்கள் தங்களுக்கு என்று ஒரு ட்ரேட் மார்க் தமிழ் ஸ்லாங் வைத்திருக்கிறார்கள். தினசரி பத்திரிகை ஒன்று தனக்கென்று ஒரு தனித்தமிழில் செய்தி வெளியிட்டுக் கொண்டாடி மகிழ்கிறது. சிலருக்கு “மாமா வந்திருந்தாங்க” என்று சொல்வதை விட “ஃபாதர் இன் லா வந்திருந்தார்” என்று சொல்வது கொஞ்சம் பெருமையாக இருக்கிறது இல்லை?..
          தமிழைத் தமிழாக பேச, எழுத, கேட்க முற்படுபவர்கள் மட்டுமே தமிழர்களாக உணரப்பட வேண்டும்.

          • \\தெலுங்கர் ஒருவர் வந்துவிட்டால் அதுவரை நம்மிடம் தமிழிலில் உரையாடிக்கொண்டிருந்த தெலுங்கர் சட்டென்று அவரிடம் தெலுங்கில் மாட்லாடுவார் பாருங்கள். \\
            மும்பையில் உள்ள ஒரு தமிழர் வட இந்திய நண்பர்களுடன் இந்தியில் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு தமிழ் நண்பரை சந்தித்தால் எந்த மொழியில் பேசுவார்?
            \\ட்ரேட் மார்க் தமிழ் ஸ்லாங் வைத்திருக்கிறார்கள்\\
            தமிழகத்தில் பேசப்படுவது ஒரிஜினல் தமிழா.. ஈழத்து தமிழ் ஒரிஜினலா ?

            \\தமிழைத் தமிழாக பேச, எழுத, கேட்க முற்படுபவர்கள் மட்டுமே தமிழர்களாக உணரப்பட வேண்டும்\\
            மொழி என்பது மனித உயிரினங்கள் கருத்து பரிமாற்றத்துக்கு உதவும் ஒரு சாதனம்… ஒருவர் கூற விழைகின்ற கருத்தை சரியாக புரியும்படி கூறினாரா என்று தான் பார்க்கவேண்டும்… அதில் மொழிப்புலமை இருக்கிறதா என்று ஆய்வது அனாவசியம்… சுத்தமான தமிழில் பேச வேண்டும் என்று கூறி சங்க இலக்கிய தமிழை கருத்து பரிமாற்றத்தின் போது உபயோகிப்பவன் தான் உண்மையான தமிழன் என்று நினைப்பீர்களேயானால் இன்றைய உலகத்தில் சல்லடை போட்டு சலித்தால் கூட ஒரு தமிழ்க்குடிமகன் உங்களுக்கு சிக்க மாட்டார்…

            நீங்க எப்படி பஸ்சில ஏறி, சீட் புடிச்சு, கண்டக்டர் கிட்ட டோல் கேட் ஒரு டிக்கெட் மீதி பிப்டி பைசா காய்ன் வாங்குவீர்களா… அல்லது
            பேருந்தில் புகுந்து, இருக்கை கைப்பற்றி அமர்ந்து , நடத்துனரிடம் உரையாடி சுங்க சாவடி வரை ஒரு பயண சீட்டு பெற்று… மீதி எட்டணா நாணயம் வாங்குவீர்களா..

            • தவறு என்னுடையதுதான். தமிழை நன்கறிந்த தெலுங்கர் என்று எழுதி இருக்கவேண்டும். தெலுங்கை மட்டுமே அறிந்தவரிடம் தமிழிலில் தான் உரையாடவேண்டும் என்று யாரும் விரும்ப மாட்டார்கள். //மும்பையில் உள்ள ஒரு தமிழர் வட இந்திய நண்பர்களுடன் இந்தியில் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு தமிழ் நண்பரை சந்தித்தால் எந்த மொழியில் பேசுவார்?// நிச்சயம் ஹிந்தியில் தான் பேசவேண்டும்-அந்த தமிழ் நண்பர் ஹிந்தி அறிந்திருக்கும் பட்சத்தில்.. //தமிழகத்தில் பேசப்படுவது ஒரிஜினல் தமிழா.. ஈழத்து தமிழ் ஒரிஜினலா ?// நாங்கள் பேசுவதுதான் உண்மையான தமிழ் என்று யாரும் சொல்லவில்லை. போதுமானவரை அன்னிய மொழிக்கலப்பின்றி பேசினால் போதுமானது. //மொழி என்பது மனித உயிரினங்கள் கருத்து பரிமாற்றத்துக்கு உதவும் ஒரு சாதனம்… ஒருவர் கூற விழைகின்ற கருத்தை சரியாக புரியும்படி கூறினாரா என்று தான் பார்க்கவேண்டும்…// உண்மை. //சுத்தமான தமிழில் பேச வேண்டும் என்று கூறி சங்க இலக்கிய தமிழை கருத்து பரிமாற்றத்தின் போது உபயோகிப்பவன் தான் உண்மையான தமிழன் என்று நினைப்பீர்களேயானால்..// இல்லை.. அப்படி நினைக்கவில்லை. ஆனால் தமிழைத் தமிழாகப் பேச, எழுத, கேட்க நீங்கள் சங்கத்தமிழை அறிந்திருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. பஸ்சில ஏறி, சீட் புடிச்சு, கண்டக்டர் கிட்ட டோல் கேட் ஒரு டிக்கெட் மீதி பிப்டி பைசா காய்ன் வாங்காவிட்டாலும் பஸ்சில ஏறி, சீட் புடிச்சு , கண்டக்டரிடம் ‘சுங்கச்சாவடிக்கு ஒரு சீட்டு கொடுங்க’ என்று கேட்டு மீதி ஐம்பது காசை வாங்கலாம்.. மனமிருந்தால்..

    • ஜோஸ் ஆளுக்காசை கல்லால் அடித்து உடைத்தார்களே?நீங்க பாக்கலயா?ஓகோ நீங்கதான் டிவி பாக்க மாட்டீகளே!ஏன்னா டிவி ஒரு பன்னாட்டு தயாரிப்பு.மற்றும் கேபிள் ,நீங்கள் மறுக்கும் அரசு நடத்துவது. டிஷ டிவி பன்னாட்டு கம்பெனிகள் நடத்துவது ஆக பாவம் நீங்க டிவியே பாக்க முடியாது போல!ஆனால் பன்னாட்டு தயாரிப்பான கம்ப்யூட்டரை மட்டும் ஏன் பயன்படுத்துரீன்களோ தெரியல!

    • ம்ம்ம் ஆமாம் பாசு ! இந்த சீமான் பாருங்க ! ஈழப் பிரச்சினையிலநல்லா போராடுனாப்புடி, தமிழர் போராட்டமுன்னாநல்லா குரல் கொடுக்குறாப்புடி ! ஆனா அதேநேரத்துல சுத்த தமிழ்ல தான் எல்லா சினிமாவுலயும் பேசுறாப்புடி ! இது எல்லாம் செயற்கையா இவர்களே உருவாக்குற ஒண்ணு.நடைமுறை பேச்சு வேற எழுத்து மொழி வேற, அத புரிஞ்சுக்காம சும்மா சுத்த தமிழ்ல பேசி எளிய மக்களின் தமிழ் மக்களின் பிரச்சினைஐ பேசாம இவர்களா கற்பனை படுத்திக்கிறா சில விழயங்கள பேசுறாங்க ! இந்தியாவின் உள்துறை அமைச்சர் பதவில உக்காந்துகிட்டு ஒன்ண்ணுமே தெரியாத அப்பாவி பன்னாடை பரதேசி சிதம்பரம் தான் இந்தநாட்டின் இன மொழி, பண்பாட்டு ,நிலம் சார் ஈர்ப்பு , மக்களின் மண்ணின் மிதான உரிமை இவெற்றுக்கெல்லாம் குழி பறிக்கிரான். அவன் யாரு ஒரு தமிழன் தானே ! கட்ட பொம்மன காட்டி குடுத்தட்கு கன்னடனோ, தெலுங்கனோ, மலயாளியோ கிடியாது ! தமிழ் எட்டப்பன் தான். அப்போ பிரச்சினை எது ஆளும் வர்க்கம், அதற்கு துணை போகும் எட்டப்பர் பரம்பரை , விசிஎறியப்படும் துண்டுகளுக்கு மக்களை காட்டிக் கொடுக்கும் கூட்டிக் கொடுக்கும் எதிரிகள் தான். அவர்களில் இன மொழி சாதி மத வேறுபாடு கிடையாட்கு .

    • அடித்து விரட்டுவது எல்லாம் உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள்தான் செய்யவேண்டும். யாரோ செய்தால் அதன் பயனை நீங்கள் அடைய நினைக்கக்கூடாது! நீங்களும் உங்கள் இயக்கமும் செய்துகாடடவேண்டும். அதுதான் நல்லது!!!!! உடனடியாக தமிழர் அல்லாதவர்களை விரட்டுங்கள்!!!!!!!! வாழ்த்துக்கள்!!!!!

  3. //அப்படி தாக்க முற்படும் தமிழ் இன “போராளிகள்” முதலில் தனி தமிழ் தேசியத்துக்கு என்ன அடிப்படை போராட்டத்தை நடத்தினார்கள். கட்டாய தாய் மொழி வழி கல்விக்காக போராடினார்களா? இல்லை தமிழர்களின் மரபு போற்றும் வாழ்கை நெறிகளை தங்கள் வாரிசுகளுக்கு கற்று கொடுத்தார்களா? ச// மெட்ரிகுலேசன் பள்ளி விளம்பரங்களை தமது புத்தகங்களில் வெளியிட்டவர்கள்தான் மேற்படி மணியரசன் வகையாறாக்கள்.

  4. அய்யா தாங்கள் என்ன வாதத்தை பின்பற்றலாம் என்று சொல்கிறீர்கள்?சர்வதேசியவாதமா?
    அதை பேசுவதில் உடன்படுவதில் எங்களுக்கு சிறு தயக்கமும் இல்லை!ஆனால் நாட்டை சீர்படுத்தும் முன் வீட்டை சீர்படுத்து என்பது போல சர்வதேசியம் பேசுவதற்குமுன் இங்கு தேசியம் என்ன நிலைமையில் இருக்கிறது என்பதையும் தவிர்த்துவிட்டு பேசுவது பகுத்தறிவு ஆகாது(இந்த வார்த்தை ஒரு கருப்புக்கு மட்டும் சொந்தமில்லை.கவனிக்க).
    எனது பக்கத்து வீட்டு காரர்களிடம் நான் சண்டை போட்டு கொண்டே தேசியம் பேசுவது கேலிகூத்து!அதே போல தான் பக்கத்து மாநிலங்கள் தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிராக செயல்படும்போது அதை முதலில் சீர்படுத்த வழி காண வேண்டுமே ஒழிய நீ தண்ணீர் உட்டா என்ன உடாட்டி என்ன?நாங்கள் சர்வதேசியம் பேசுவோம் என பேசுவது எந்த நியாயமோ தெரியவில்லை!இரு நாட்டுக்கு இடையே ஆன தண்ணீர் பிரச்சனைகளை பார்ப்பதற்கு முன் இரு மாநிலங்களுக்கு இடையே ஆன நதி நீர் பிரச்சனநிகளை பார்க்க வேண்டாமா?
    ஐநூறு தமிழக மீனவர்கள் சிங்கள இன வெறி கும்பலால் சுட்டு கொள்ள பட்டுள்ளனர்!மேலும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் அடுகாயம் அடைந்தனர்!வலையை அறுத்தது படகை உடைத்தது என அது பல லட்சம் இழப்பு!இதை கண்டு கொள்ளத மத்திய அரசு இருக்கையில் என் தமிழன் எப்படி சர்வதேசியம் பேசுவான் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
    இந்திய மீனவன் பாகிஸ்தானில் அகப்பட்டு கொண்டால் கூட அவர்கள் கைது மட்டுமே செய்யபடுகிரார்கள்!ஆனால் இங்கு நடப்பது?மரணம் அல்லவா?சே பற்றி பேசலாம் தான்!முதலில் எண்கள் மக்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க பட வேண்டும்!அப்புறம் நாங்களும் சே,மாவோ,ஸ்டாலின் போன்றோர் பற்றி பேச முயற்சிக்கிறோம்!

    • தமிழ் தேசியத்திற்கு முதன்மை எதிரி இந்தியாவா, இல்லை அண்டை மாநிலங்களில் வாழும் தேசிய மக்களா?

      • அண்டை மாநில உரிமைகளுக்கு செவி சாய்க்கும் அளவுக்கு இந்திய அரசு தமிழர்களின் உரிமைக்கு செவி சாய்க்கிறதா?மேனன் ஆசாமிகளே தொடர்ந்து பிரதம அலுவலக பணிகளில் இருந்துகொண்டு தமிழனுக்கு எதிராக வேட்டு வைப்பதை என்னவென்று சொல்ல போகிறீர்கள்?இல்லை அப்படி எதுவும் நடக்கவே இல்லை என காங்கிரசு அரசு பாணியில் மழுப்ப போகிறீர்களா?

        • இந்தியாவில் தமிழர்களைத் தவிர மற்ற தேசிய இன மக்களை இந்தியா தேனும் பாலும் ஓடவைத்து சீராட்டுகிறது என்று நீங்கள் சொல்வது உண்மையா? இவ்வளவு அப்பாவியா நீங்கள்? மேனனோ ப.சிதம்பரமோ மலையாள, தமிழ் மக்கள் மட்டுமல்ல முழு இந்தியாவில் வாழும் மக்களின் நலனுக்காக செயல்படவில்லை. அவர்கள் இந்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காக செயல்படுகிறார்கள். நம்மாளு பிரதமர், முதலமைச்சர், கலெக்ட்ராகா ஆனால் எல்லாம் சரியாகிவிடும் என்ற மொக்கை விசயத்தை இன்னும் எத்தனை நாள்தான் நம்புவீர்கள்?

          • The Israel should be more careful to protect their people from the Islamic terrorists. The Islamic terrorists are threatening the world community as a whole. The Iran is also a dangerous to Israel. The whole Israel region should have full alert and if necessary atomic power can also be used.

            It is shameful to India that a family is occupying the whole India. She may contest in the PM post which is dommy now. Hello!! Priyanka you are coming from a world Millionaires family. Your mother and brother have deposited large corruptive amount in the foreign countries. Please contest for PM post and earn more!!!!!!

      • சொல்ல போனால் இந்தியா,அண்டை மாநிலங்களும் இருவர்களும் வேறுபாடு ஒன்றும் இல்லை.ஆகையால் இருவரையும் வேளியாட்றுவதே சரி.

      • தமிழ் தேசியத்திற்கு முதல் எதிரி “தமிழ் தேசிய ஆதரவாளர்கள்தான்” இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு மொழியை வைத்துக்கொண்டு தேசியத்தை உருவாக்க நிநைப்பது பத்தாம்பசிளித்தனம். அவ்வப்போது பல ஜாதிகள் மோதிக்கொகிற்றன? இதற்க்கு என்ன தீர்வு கண்டுள்ளார்கள். எங்கெல்லாம் போராட்டங்களும் தீவிரவாதமும் பயங்கரவாதமும் நடக்கிறதோ அதற்கெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தருவது எந்த வகையில் நியாயம்!! காவேயில் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் தமிழ் தேசியம் உருவானால் உடனே உலக நியதிப்படி தண்ணீர் வந்து விடுமாம்! என்னபித்றரல! மக்கல்கள் எல்லாம் அறிவாளிகள் உங்களோடு செர்த்துப்பார்க்கும்போது!! பாண்டியநாடு உருவானால் மிகவும் நன்றாக இருக்கும்!!! பாண்டிய நாடு வாழ்க!!!!!!!!!!!!

        • //காவேயில் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் தமிழ் தேசியம் உருவானால் உடனே உலக நியதிப்படி தண்ணீர் வந்து விடுமாம்! என்னபித்றரல!//

          செந்தமிழர்கள் எல்லாம் அப்படித்தான்… :)))

        • //காவேயில் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் தமிழ் தேசியம் உருவானால் உடனே உலக நியதிப்படி தண்ணீர் வந்து விடுமாம்! என்னபித்றரல!//

          இந்த நட்டுராயன் ஜாடிக்கு ஏத்த சீனு மூடி.
          \\செந்தமிழர்கள் எல்லாம் அப்படித்தான்… //

          \\ பாண்டியநாடு உருவானால் மிகவும் நன்றாக இருக்கும்!!! பாண்டிய நாடு வாழ்க!!!!!!!!!!!!//

          .உண்மையிலேயே இப்படி ஓர் அறிவாளியா.ஏனுங்க பாண்டிய நாடு உருவானா காவேரில தண்ணீர் வருங்களா

          • நம்ம பம்ம்பு அவரோட மங்குன மங்குனி மண்டைய use பண்ண ஆரம்பிசுட்டறு. நற்றயன் எதுக்கு காவேரிய பத்தி பேச போறாரு, நீங்க தான் தனி தமிழ்நாடு வந்த எல்லாமே தான நடக்கும்ன்னு சொல்றீங்க, அவுற ஏன் சொல்றாரு.

  5. வினவுக்கு ஏன் இப்படி ……..

    //அண்டை தேசிய இனங்களாக இருக்கும் மலையாள, கன்னட, தெலுங்கு இனங்களோடு ஆற்றுநீர் பகிர்வு, எல்லைப் பிரச்சினை போன்றவைகளில் முரண்பட்டு நிற்பதாலேயே தமிழ் தேசிய இனம் அவற்றை பகை சக்தியாக எதிரி சக்தியாகக் கருத முடியுமா?//

    நிச்சயமாக….. ஒரு மனிதனின் அடிப்படை உரிமையான தண்ணீரை ஒருவன் தர மறுக்கும் போது நிச்சயம் அவன் மனித குலத்தின் எதிரியாகவே கருதப்படுவான்.. அந்த வகையில் இங்கிருந்து காய் கரி பழங்கள் மாட்டிறைச்சி ஆகியவைகளை பெற்று கொண்டு தமிழனுக்கு தண்ணீர் தர மறுக்கும் நன்றி கேட்ட மலையாள ஞமலிகலை எதிரியாக கருதுவதில் தவறே இல்லை …. உடனே இது அரசியல்வாதிகள் செய்யும் சூழ்ச்சி தான் பாட்டாளி மலையாள கன்னட வர்க்கம் அப்பாவிகள் என்று வினவு எப்போதும் போல் சப்பை கட்டு கட்டி விட வேணாம். தைரியமும் திறமையும் இருந்தால் ஒரு மலையாள நாயர் கடைக்கு சென்று தமிழன் என்ற அடையாளம் தெரியாமல் முல்லை பெரியாறு விஷயத்தை மலையாளத்தில் பேசி பாருங்கள் அப்போது தெரியும் மலையாள பாட்டாளி வர்க்கம் என்ன நினைக்கிறது என்று.

    அதே போல் நாளுக்கு நாள் வடமாநிலதவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போவது இங்கு இருக்கும் தமிழ் மக்களின் வாழ்வாதாரதிர்க்கு மிகவும் கேடு செய்யும் ஒன்று… அதற்காக அவர்களை இங்கு வரவேண்டாம் என்று யாரும் கூறவில்லை வந்து வேலையை முடித்து விட்டு கூலியை பெற்று கொண்டு அவர்களின் மாநிலங்களுக்கு திரும்ப செல்வதே உத்தமமான ஒன்று . அவர்களுக்கு தமிழ்நாட்டில் தங்க வசதி ஏற்படுத்தி கொடுத்துகொண்டே இருந்தால் அதிவிரைவில் தமிழ்நாட்டில் தமிழர்கள் சிறுபான்மை ஆகிபோவர்கள். இலங்கையில் நடந்தது தமிழகத்தில் நடக்கும் என்பதை நினைவில் வைத்துகொள்ளவும்

    • “எங்களுக்கு எதிரி இந்திய அரசு அல்ல, அண்டை மாநிலங்களில் வாழும் மற்ற தேசிய இன மக்கள்தான் ” என்று சொல்வது மூலம் நீங்கள் இந்திய தேசியத்தை ஆதரிக்கிறீர்கள். ஏனெனில் இப்படி தேசிய இன மக்களுக்கிடையே முரண்பாடை தோற்று வித்து குளிர்காய்வதன் ஆதாயம் இந்திய ஆளும் வர்க்கங்களுக்குத்தான். அதைத்தான் கட்டுரை குறிப்பாக விளக்குகிறது. ஆக தமிழ் தேசியம் என்று பேசி இப்படி இந்தியாவின் அடியாட்படையாக மாறுவது குறித்து உங்களுக்கு தெரியவில்லை என்றால் என்ன செய்வது?

    • //அவர்களுக்கு தமிழ்நாட்டில் தங்க வசதி ஏற்படுத்தி கொடுத்துகொண்டே இருந்தால் அதிவிரைவில் தமிழ்நாட்டில் தமிழர்கள் சிறுபான்மை ஆகிபோவர்கள்//

      இதையே தான் ராஜபக்சே சொல்றான். அவனை என்ன சொல்லுறது! எங்க ஊர்ல இருந்து 2 கிலோ மீட்டரு தள்ளி ஏரியில ஈழ மக்கள் குடிசை போட்டு ரொம்பநாளா தங்கி இருக்குராங்க ! அவங்கள்ள ஒருநண்பர் இங்கியே டிப்ளமோ படிச்சிநல்ல வேலைக்கும் போறாப்புடி ! அதுக்கு எங்க ஊருல இருக்குற என்நண்பன் ஒருத்தன் சொன்னான் இங்கெ பாருடா பாவம்னு இவனுங்கள தங்க வுட்டா இங்கிய்யே படிச்சி இங்கியே சொந்த்மா வீடு என்ன பைக்கு என்ன்? திமிரு என்ன ? இப்பிடி தான் அவன் பேசுறான். அதுக்கு அவன் கூட சண்டை போட்டு அவங்க மனநிலைய விளக்கி என்நண்பனுக்கு புரிய வைக்குறட்குக்குள்ள போது போதுனு ஆயிடுச்சு! இருந்தாலும் அவன் அவங்களைநமநாட்டுல பொழக்க வந்துநமக்கு முன்னாடியேநல்லா வாழுறான்னு ஒரு பொரறாமை இருக்க தான் செய்யுட்கு. இதே மனநிலை தான உங்கள் வார்த்தையும் !

  6. //இங்குள்ள சிறுபான்மை மொழியினர்(அதான் தெலுகு,கன்னடம் மலையாளம் )தமிழக பள்ளிகலில அவர்கள் தாய் மொழியை படிக்க வசதி உள்ளது// இதைப் படித்தவுடன் மேற்படி பின்னுட்டமிட்டவரை நினைத்து வருத்தமுற்றேன். இங்குள்ள பெரும்பான்மைத் தமிழர்களே தமிழ் படிப்பதில்ல்லை. தமிழ் வாசிக்கத் தெரிந்த குழந்தைகளை இன்று விரல்விட்டு எண்ணிவிடலாம். தமிழ் தேசியம் ‘மட்டும்’ பேசு ‘மட்டும்’ செய்பவர்களெல்லாம் இது போன்ற தமிழ் சார்ந்த விசயங்களில் ஒரு குண்டூசியைக் கூட அள்ளிப் போட்டதில்லை.

    • இப்படி பட்ட மன நிலைக்கு காரணம் திராவிட அரசியலே!Hindi never English ever என்று சொன்ன திராவிட அறிவுஜீவிகள் தமிழுக்கு எந்த இடம்னு சொல்லவே இல்லை!எழுபதுகளில் களின்ஜர் அவர்கள் மொதல்வரா இருந்தப்போ அவர் தமிழுக்கு வைத்த வேட்டு கான்வெண்டு பள்ளிகளை தொறந்து உட்டு “தமிழ் வழியில் படிப்பவன் கேனையன் இன்குலீசில் படிப்பவனே அறிவு ஜீவி”(தமது பிள்ளைகளையும் கான்வென்டில் சேர்த்து “நல்லதொரு” உதாரணமாக திகழ்ந்தார் களின்ஜர்) என்ற மொக்கையான ஒரு பொதுப்புத்தியை உண்டாக்கினார்கள்.
      *********************************************************
      மேலும் இன்று வரை தமிழ் நாட்டில் ஒருவன் தமிழே படிக்காமல் உயர்கல்வி வரை சென்று விட முடியும்!இது வேறு மாநிலங்களில் இல்லை!இதற்கு காரணம் திராவிட அரசியல்!
      (எம்ஜி ஆர்; ஜெயா இதற்கு விதிவிலக்கல்ல.!அவர்கள் களின்ஜர் தூவிய காட்டு செடியை நன்கு தண்ணீர் விட்டு வளருமாறு பார்த்து கொண்டனர்!விளைவு?
      தாய் மொழி தமிழில் பேசினாலே கேவலம் அவன் படிக்காதவன்!கக்கூசு போனாலும் இன்குலீசு கக்கூசில் போறவனே புத்திசாலி என்னும் கேடுகெட்ட எண்ணம இப்போது விருட்சம் போல வளர்ந்து நிற்கிறது!பிற மாநில மக்கள் தங்கள் தாய் மொழியை படிக்கிறார்கள்!தமிழன் அளவுக்கு தனது தாய் மொழியை புறக்கநித்தவன் எவனும் இல்லை!இதற்கு ஒரே காரணம் குப்பை திராவிட அரசியல்!
      ********************************
      மேலும் இப்போதுள்ள தலைமுறைக்கு மொழியும் முக்கியமில்லை!கொள்கையும் இல்லை!தேசியமும் இல்லை!சர்வதேசியமும் இல்லை!தறிகெட்டு அலைகின்றனர்(இதை வினவு ஒப்பு கொள்வார் என நம்புகிறேன்!அவர்களுக்கு ஒரே குறிக்கோள்!பணம் பணம் பணம்!எவன் எக்கேடு கேட்டா என்ன?நான் வாழனும்!இது வேறு ஒரு தலைப்புக்கு(“காற்பறேட்டு அடிமை இளம் தலைமுறையின் காற்பறேட்டு மனநிலை” என்ற தலைப்பு) இட்டு செல்லும் என்பதால் இதை இங்கு முடிக்கிறேன்!

      • தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் இல்லாமல் ‘தமிழ்’க் கட்சிகள் இருந்திருந்தாலும் நிலைமை இப்போது போலத்தான் இருக்கும். உலகமயச் சூழலில் பன்னாட்டு நிறுவன வேட்டைக்காடாக மாறிவிட்ட இந்தியாவில் சர்வதேச சந்தைக்கு பொருத்தமாக சுரண்டும் விதத்தில் தேவையான பண்பாடு, கல்வி, வாழ்க்கைதான் இருக்கும். தமிழ் காணாமல் போன பின்னணி நீங்கள் நினைப்பது போல வெறும் ‘கலைஞர்’ சார்ந்த விடயம் அல்ல. அவரும் அவர் கட்சியும் நீங்கள் குறிப்பிட்டது போல கான்வென்டு கல்வியை கொண்டு வந்தது உண்மையே. ஆனால் கல்வியில் தனியார் மயம் தீப்பிடித்த பரவிய நாட்களில்தான் இது பரந்து பட்ட மக்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. கல்வியில் தனியார் மயம் ஏன் வந்தது? என்ற கேள்விக்கு சரியான விடை கண்டீர்கள் என்றால் தமிழகத்தில் ஏன் தமிழ் இல்லை என்ற கேள்விக்கு பதில் தெரியும்.

      • இப்போ இருக்குற தலைமுறை நல்லா படிச்சிநல்லா சம்பாதிக்கிற வேலைக்கு போகணும். அதுக்கு என்ன தேவை ! ஆங்கிலம். அதை ஒட்டியே அவர்களின் வாசிப்பு பழக்கமும் ஆங்கிலநாவல்களை தேடி படிப்பதாக உள்ளது. அதன் மூலம் தனது ஆங்கில புலமையை வளர்க்துக் கொள்வட்கு. இன்னிலைக்கு காரணம் யாரு !

  7. இந்திய தேசியம் என்பது எந்த மொழி பேசினாலும் இந்தியர்கள் என்று ஒற்றுமையாக இருங்கள் என்பதுதானே அர்த்தம்? அது ஏன் அடுத்தடுத்த மாநிலங்கள் ஒருவரை ஒருவர் வெறுப்பதை ஊக்குவிக்கும்? எப்பாடு பட்டாவது ஒற்றுமையாக வாழ்வதைதானே வலியுறுத்தும்?தமிழன் ஆதியிலேயே திராவிடநாடு ஹிந்தி வேண்டாம் கடவுள் இல்லை சாதி இல்லை என்று தனித்தன்மையுடன் இருந்தது அண்டை மாநிலத்தார்க்கு பிடிக்கவில்லை என்பதே காரணம் என்று நினைக்கிறேன்.

  8. சிந்தித்து பார்க்க வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. தமிழ் தேசியம் பேசும் கட்சிகளிடையே இருக்கும் மிகப்பெரிய முரண், அந்த முரண்பாடு தான் இந்திய தேசியவாதிகள் தமிழ் தேசியவாதிகள் மற்றும் ஆங்கிலேயர்களிடையே இருக்கும் ஒற்றுமை.(பிரித்தாளுதல்)

  9. பிரவம் இடைத்தேர்தலில் ஒற்றை சீட்டில் மெஜாரிட்டி ஊசலாட காங்கிரசும் காம்ரேடுகளும் அந்த சீட்டை கைபற்ற செய்த கொரலி வித்தைதான் இந்த முல்லை பெரியாறு பிரச்சனை!அங்கிருந்து தமிழர்கள் அடித்து விரட்ட பட்டனரே!அது பாசிசம் இல்லையா?எங்களை சுற்றியும் சுயநல கழுகுகள் வட்டமிடும்போது நாங்கள் மட்டும் சமாதான புறாவா இருந்தா பிரயாணி ஆக வேண்டியதுதான்!சுத்தியலை எடுத்துகொண்டு அணையை உடைக்க செல்வது,போலியாக அணை உடைந்தார்போல கிராபிக்ஸ் செய்து சிடி வெளியிட்டு பீதியை கிளப்பி குளிர் காய்வது ஒரு வெளிநாட்டு கேரளகாரனை விட்டு ஒரு படம் எடுக்க சொல்லி அதை இங்கு ரிலீஸ் செய்ய நிர்பந்திப்பது இதெல்லாம் என்ன தோழரே?

  10. பெரியார் என்ன சொன்னார் ? தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்றார். தமிழை படித்தால் எவனும் உருப்புடமாட்டான் என்றார். இப்போது அவரைத்தான் தலைவராக ஏற்று கட்சி நடத்திக்கொண்டு உள்ளார்கள்.தமிழை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டு உள்ளார்கள். ஆங்கில மொழி வளியாக பாடம் படிக்க தமிழ் நாட்டு மக்கள் தங்களது குழந்தைகளை தயார்ப்படுத்துகிரார்கள். தேசியம் பேசும் இவர்கள் இந்த மக்களிடம் சென்று தமிழை படிக்க அறிவுரை சொல்லவேண்டும். தமிழ் நாட்டில் பல கிருஸ்துவ பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும் . பள்ளிக்குள் தமிழ் வார்த்தை பயன்படுத்தினால் அடுத்தநாள் பிணையம் கட்டவேண்டும். கொடைகானல், ஊட்டி, ஏற்காடு, மதுரை ,சென்னை மற்றும் பல ஊர்களில் உள்ள கிறிஸ்த்துவ பள்ளிகளை கண்காணியுங்கள். உண்மை தெரியும். இவர்கள் முன்னாள் தமிழுக்காக போராட்டம் நடத்த முடியுமா?

    • //தமிழ் நாட்டில் பல கிருஸ்துவ பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும் . பள்ளிக்குள் தமிழ் வார்த்தை பயன்படுத்தினால் அடுத்தநாள் பிணையம் கட்டவேண்டும்.//

      கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நிறுவனமான ‘விவேகானந்த கேந்திரம்’ நடத்துகிற பள்ளியில் தமிழில் பேசினால் தண்டனை உண்டு.

      எனவே தமிழ் ஆடுகள் நனைவது குறித்து மத ஓநாய் புலம்பியது போதும்.

      • பிரச்சினை எது ஆளும் வர்க்கம், அதற்கு துணை போகும் எட்டப்பர் பரம்பரை , விசிஎறியப்படும் துண்டுகளுக்கு மக்களை காட்டிக் கொடுக்கும் கூட்டிக் கொடுக்கும் எதிரிகள் தான். அவர்களில் இன மொழி சாதி மத வேறுபாடு கிடையாட்கு .நம்மை ஆளும் வர்க்கம், தொழில் என்ன எல்லாம் அமெரிக்க ஐறொப்பியநாடுகள் ! அவனுக்கு அடிமை வேலை செய்யறது தான் இன்னக்கி காசு கொழிக்கும் அனைத்து தொழில்களும் அதற்கு வேலையாள்கள் ஆங்கிலம் தெரிய வேணும். மொதல்ல அதை மாத்துனா எல்லாம் மாறிடும். 1991 க்கு பிறகு தான் ஆங்கில மோகம் அதிகம் ஆனது அதுக்கு முன்னாடி இந்தி மோகம்.

      • ///தமிழ் ஆடுகள் நனைவது குறித்து மத ஓநாய் புலம்பியது போதும்////
        உங்களைநீங்கலே விமர்சனம் செய்துல்லீர்கள்!நன்றி!நீங்கள் கூறிய கருத்துக்களின் உண்மையை கண்டரிந்து “வினவு”க்கு அனுப்புங்கள்! தமிழ் தேசீயத்தை உருவாக்கட்டும்!!!!!!!

      • ******* தமிழ் நாட்டில் பல கிருஸ்துவ பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும் . பள்ளிக்குள் தமிழ் வார்த்தை பயன்படுத்தினால் அடுத்தநாள் பிணையம் கட்டவேண்டும். கொடைகானல், ஊட்டி, ஏற்காடு, மதுரை ,சென்னை மற்றும் பல ஊர்களில் உள்ள கிறிஸ்த்துவ பள்ளிகளை கண்காணியுங்கள்********* இதற்க்கு பதில் கூறுவதற்கு பதில் திசை திருப்பும் பதிலை கொடுத்துள்ளார். பரிதாபம்!!! இவர் கூறியது சரியாக இருந்தால் இவைகள் அனைத்திற்கும் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை கூரியிருக்கவேண்டும்.

  11. ‘ஆங்கிலம் தாய்மொழியாக கொண்டவர்களை விட,வேறு மொழியை தாய்மொழியாக கொண்ட- ஆங்கிலம் பேசுவோர்களின் எண்ணிக்கை உலகில் மிக அதிகமாகி உள்ளது; ஆங்கிலேயரின் வாழ்க்கைதரம் குறையவில்லை. தமிழகத்தில்,அதே நிலை தமிழ் மொழிக்கும் உருவாகியுள்ளது. ஆனால் தமிழரின் வாழ்க்கைத் தரம் பரிதாபமாக உள்ளது; பிற மொழிகளை தாய்மொழியாக கொண்ட, தமிழகத்தில் வாழும் மக்களின் வளர்ச்சி பிரம்மாண்டமாக உள்ளது. இந்நிலை இந்திய ஒருமைப்பாட்டுக்கு/நமக்கு நல்லதல்ல. ஆகவே திறமையான தமிழ் வழிகாட்டிகள் தமிழகத்திற்கு உடனடியாகத் தேவை.”

    தமிழர்கள் நம்முடன் வாழும் அணைத்து மொழி பேசுபவர்களையும் நல்லபடியாக தான் பார்க்கிறோம். இல்லாவிடில் 234 எம்.எல்.ஏ. மற்றும் மந்திரிகளில் 20% அண்டைமாநில மொழியை பேசுபவர்கள் சென்ற முறை பதவி வகித்திருக்க முடியுமா? அண்டைமாநிலங்களில் நம்மால் இப்படி நினைத்து பார்க்க முடியுமா? “யாதும் ஊரே யாவரும் கேளீர்”- என்று வாழ்ந்த தமிழர்கள் தமிழகத்தில் மைனாரிட்டி தகுதியில் வரும் நாள் துலைவில் இல்லை.

    தமிழன் நெல்லுக்காக இரைத்த நீர் எத்தனை சதவிகிதம் தமிழனை சேர்க்கிறது என்று கேட்ட ஒரே தலைவன் மருத்துவர் ராமதாஸ் மட்டுமே?? என்ன செய்வது – ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று புரிய மறுக்கிறார்களே??? கணக்கெடுக்க தயாரா திராவிடம் பேசுவோர்??? சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம். வாழ்க வாடிய பயிரைக் கண்டு மனம் வாடிய, வள்ளலார் பிறந்த தமிழ் நாடு.

    காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு “- நம் வீட்டுக்குழந்தையை விட பக்கத்துக்கு குழந்தை அழகாக இருந்தால், பக்கத்து வீட்டு குழந்தையையா கொஞ்சுகிறோம்?

    முதல் தலை முறை பட்டதாரிகள் அதிகம் கொண்ட பெரிய மாநிலம் தமிழகம். தமிழன் முன்னேறுவது சிலருக்கு பொறுக்கவில்லை/ பிடிக்கவில்லை. உதவி செய்வதாக நினைத்து கெடுத்து விடாதீர்கள் – அது தமிழருக்கு நன்மை பயக்காது.காரணம் கற்றறிந்தோர் அறிவர்.தமிழா! இனஉணர்வு கொள்!தமிழா! இனஉணர்வு கொள்!

    ஹி..ஹி..ஹி.. தமிழாவது கத்திரிக்காவாவது ? ராஜா காது! கழுதை காது!!- ரொம்ப நல்லாயிருக்கு இல்லே???

  12. “தமிழ் அதிகாரப்பூர்வமாகவே சாகும் போலிருக்கிறதே!”-M Senthil

    “தன்மதிப்பு தெரியாமல் வாழ்கிறான் தமிழன்: குமரி அனந்தன்”

    ஹி.. ஹி..ஹி- “அண்டை மாநில மொழி பேசும், தமிழ்நாட்டில் வாழும்
    மக்கள் தமிழ் கற்ற பின் தான் தமிழகம் வந்தார்களா”???

    “தமிழ் நாட்டில் பிழைக்கும்/உழைக்கும்/ஆளும் மார்வாரி/ வட இந்திய மக்கள்/ அண்டை மாநில மக்கள்- தமிழ் கற்ற பின் தான் தமிழகம் வந்தார்களா??? ஹி.. ஹி..ஹி இப்பவே நம்மை நாமே ஆள அடித்துக் கொண்டுள்ளோம்??? மீதி இருப்பவர்களையும் அனுப்பிவிட்டால் கிழிஞ்சுடும் சோழ/பாண்டிய புரங்கள் ???-

  13. வாழ்க- யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று வாழ்ந்து கெட்ட தமிழகம்”

    “1979 எம்.ஜி.ஆர் – அச்சுதமேனன் ஒப்பந்தத்துக்கு முன்பு வரை 48 அடி நீர் தமிழகம் வசம் இருந்தது. அது மூன்றில் ஒரு பங்காக்கப்பட்டது. அணைப் பாதுகாப்பு, தமிழக காவல் துறையிடமிருந்து கேரள காவல் துறைக்குப் பிடுங்கித் தரப்பட்டது. ஆனால் கேரள போலீசுக்கான சம்பளத்தை, தமிழகமே தருகிறது. அணையில் படகு விடும் உரிமை தமிழகத்திடமிருந்து பறி போனது. மீன் பிடிக்கும் உரிமையும் போயிற்று. அணை வரையிலான சாலையும் தமிழக அரசிடமிருந்து பிடுங்கப்பட்டது. அணை தமிழகத்துக்குச் சொந்தமென்றாலும் அணைக்குச் செல்ல, பொறியாளர்கள் உட்பட எல்லாரும் கேரள அரசின் அனுமதி பெற வேண்டும். இவையெதுவும் 1979க்கு முன்னர் இல்லாதவை. கடைசியாக இப்போது அணையையே பறிக்க விரும்புகிறது. அணையின் பாதுகாப்பு மட்டும்தான் அசல் கவலையென்றால் புது அணையை தமிழகமே கட்டட்டுமென்றல்லவா சொல்ல வேண்டும்? தான் கட்டித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவதாக ஏன் சொல்ல வேண்டும்?”

    இது தான் நம் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். மலையாளிகளுக்கு பெற்றுத் தந்த மண்ணின் பாச உணர்வு; அதன் பரிசாக மலையாள சகோதரர்கள் நமக்கு காட்டும் விசுவாசம் / நம்பிக்கைத் துரோகம். …. தூ….????

    தமிழா மண்ணின் மீதும் உனது மக்கள் மீதும் ஞாய உணர்வு கொள்!

    • எம்.ஜி .ஆரை பற்றி ஒன்றும் சொல்லாதீர்கள். அவர் யாருக்கும் கெடுதல் செய்யநினைத்ததில்லை. மலையாளிகளுக்கு என்று தனிப்பட்ட முறையில் எதுவும் செய்யவில்லை. அவர் ஒரு தமிழர். தமிழர்கள் மீது பாசம கொண்ட தமிழர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்களேன். நான் கூறுவது அரசியல் மற்றும் சமூக அமைப்பில். ஜாதி மதம் இனம் மொழி நிறம் ஆகியவற்றால் பதிக்க்ப்படாமால் தமிழருக்கா உழைக்கவேண்டும். “பெட்ரோ டாலர்”, “அமெரிக்க டாலருக்கு” அலைபவர்களை ஏற்றுக்கொள்ளமுடியாது.

  14. இந்திய தேசியம் என்பது பரப்பான பனியா முதலாளிகளின் உருவாக்கம் என்றாலும், இன்றளவில் அது பல்வேறு தேசிய இனங்களின் தொழிலாளர் வர்க்கமும் ஏற்றுக் கொண்ட கோட்பாடகவே இருக்கிறது. இந்திய தேசியத்தில் இருந்து விடு பட வேண்டும் என்ற வேட்கை எல்லா மொழி வழி தேசிய தொழிலாளர்களிடம் இருக்கிறது என்று கூறி விட முடியாது.

    தத்தம் மொழி, அடையாளங்கள் பற்றிய பெருமிதம் ஓரளவே அவர்களிடம் இருக்கிறது. அது எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை இந்திய பெரு முதாலாளி வர்க்கம் மிக நுட்பமாக வரையறுக்கிறது. இதற்க்கு சிறந்த எடுத்துக் காட்டு கர்நாடகா. ராஜ உட்யோட்சவ என்று ஒரு வருடத்தில் ஒரு நாள் அரசு கட்டிடங்களில் கூட கன்னடகர்லின் சிவப்பு மஞ்சள் கொடி பறக்கும். மற்ற எல்லா நாட்களிலும் கூட துணை கொடிக் கம்பத்தில் பள்ளி வளாகங்களில் பறக்கும். ஆட்டோக்கள், கடைகளை பற்றி சொல்லத் தேவையே இல்லை. அனால் இவர்களிடம் “கன்னட தேசியம்” என்ற கண்ணோட்டம் இல்லை என்றே கூறலாம். கன்னட தேசியத்தின் ஊடகே “இந்து தேசியம் (அ) ஹிந்துத்வா ” மனப் பான்மையே வளர்த்தெடுக்கப் படுகிறது என்பது இங்கு நோக்கத் தக்கது.

    இத்தகையச் சூழலில் இந்திய தேசியத்தில் இருந்து விடு பட நினைக்கும் ஒரு தேசிய இனம், உழைக்கும் வர்கத்தின் வழி காட்டலின் பெயரில் அந்த இலக்கை அடைய நினைக்கும் ஒரு தேசிய இனம் (ஆண்ட பரம்பரையை நம்பி அல்ல), எதிர் கொள்வது இந்திய பெரு முதலாளி வர்கத்தை மட்டும் அல்ல. இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்ட பிற மொழி பேசும் தொழிலாளர் வர்கத்தையும் தான். !!! அப்படி பட்ட சூழ்நிலையில் விடு பட நினைக்கும் தேசிய இனம் செய்ய வேண்டியவை எவை? எல்லா தேசிய இனங்களுக்கும் விடுதலை உணர்வு வரும் வரை காத்திருப்பதா? அல்ல அவர்களை எதிர்த்தும் தன் போராட்டத்தை தொடர்வதா?

    தமிழ் தேசியத்தை பொறுத்த வரை, மொழி, மதம் சாதி இந்த பாகு பாட்டு உணர்வில்லாமல் மனிதனாக வாழ நினைக்கும் ஒவோருவரையும் அரவனைத்து செல்ல நினைக்கும் திராவிட கோட்பாடு ஒன்றே உண்மையான விடுதலையை இந்த மக்களுக்கு தேடி தரும்.

  15. வடமாநிலத்தவர்கள் மீதான தாக்குதல்களை கடுமையாக கண்டிக்கின்றன ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பார்ப்பன கும்பல்!

    http://www.dancewithshadows.com/politics/rss-bjp-take-on-shiva-sena-mns-mumbai-for-maharashtrians-agenda/
    http://www.ndtv.com/article/india/will-protect-north-indians-in-maharashtra-rss-15599

  16. சமூகத்தில் பல்வேறு காலகட்டங்களில் சில சாரார்கள் ஒடுக்கப்படுகிறார்கள்….
    காலாகாலாமாக ஒடுக்கப்பட்ட தலித்களே தற்போது தான் கொஞ்ஜமேனும் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள்….

    இந்நிலையில் வினவின் இந்தக்கண்ணோட்டம் நியோ தலித்கள் உருவாகாமல் காக்கும்…

    வினவிற்க்கு +1…

  17. அறிவு ஆங்கிலத்தில் படைக்கப்படும் வரை ஆங்கிலத்தை சீனன் முதல் ஆப்பிரிக்கன் வரை யாரும் உதாசீனம் செய்யக்கூடாது. ஒரேஒரு வால்யும் என்சய்க்லோபீடியாவை தமிழில் மொழி பெயர்க்க உங்களுக்கு குறைந்தது இரண்டு வருடங்கள் பிடிக்கும். இது போக தினமும் ஆங்கிலத்தில் வெளியாகும் அறிவு சார் தகவல்களை யாரை வைத்து மொழிமாற்றம் செய்து தமிழனுக்குத் தருவீர்கள்? தமிழ் வெல்லட்டும். ஆனால் தமிழ் நாட்டில் ஆங்கிலம் வளரட்டும்.

  18. //
    எமது தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நூற்றுக் கணக்கில் ஒரிசா, ஜார்கண்ட், பீகார், சட்டிஸ்கர், வங்காள புலம்பெயர் தொழிலாளர்களை உறுப்பினர்களாக்கி வருகிறது!
    //

    வாழ்த்துக்கள் தோழர்களே. தொடரட்டும் நற்பணி. ஒடுக்கப்படும் தொழிலாளர்கள் எங்கிருந்தாலும் ஒரு அமைப்புசார் போராட்டக்குழுவின் கீழ் ஒன்றுகூடினால் தங்கள் உரிமைக்கும் ஒற்றுமைக்குமாக போராடுவார்கள். உள்நாட்டு அகதிகளாக இந்த பகுதிக்கு புலம்பெயர்ந்து வந்து ஒடுக்கப்படும் வட இந்திய தொழிலாளர்கள் பாற்படுகிறது எம் மனம். அவர்களை இன்னும் வலுவாக ஒன்றுகூட்டுங்கள். அவர்களும் நம் வர்கத்தவர்களே என்று இங்குள்ளவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.

  19. //ஏற்கெனவே இங்கே பல பத்து தமிழ்த் தேசிய இனக் குழுக்கள் உள்ளன; அவை எல்லாவற்றையும் விடத் த.தே.பொ.கட்சித் தலைமை வித்தியாசமானதும் ஆழ்ந்த சிந்தனையும் தமிழ்த் தேசியத்தின் தீவிரப் பற்றும் தெளிவும் கொண்டதாகக் காட்டிக் கொள்கிறது; ஆனால், நடைமுறையில் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகவே த.தே.பொ.கட்சித் தலைமை பலவாறு உளறிக் கொட்டிக் கிளறி மூடுகிறது.//
    உண்மை. இங்கே இவர்களின் நடைமுறை உதாரணம் ‘’தமிழ் நாட்டில் தொழில் வணிகம் தொடங்கும் அயல் இனத்தார் தங்கள் நிறுவனத்தில் 33% மூலதனப் பங்காளிகளாக தமிழர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்‘’ என இதற்குமுன் பிரச்சார இயக்கம் எடுத்து முழங்கினர் த.தே.பொ.க-வினர். அதாவது அயல் இனத்தை சேர்ந்த முதலாளிகள் இவர்கள் பாணியில் சொல்லப்போனால் ஏகாதிபத்திய அந்நியர்கள் 67% மூலதனத்தை வைத்துக் கொண்டு தமிழ் தேசத்தில் தொழில் தொடங்கி சுரண்ட அனுமதிக்கலாம் என்பதுதானே இதன் அர்த்தம்.
    //நிலவுடைமை பண்பாட்டையும், பார்ப்பனிய சனாதனத்தைப் புகுத்திய நிலவுடைமை மன்னர்களின் அருமை பெருமைகளை ஏற்றிப் போற்றி பாரம்பரிய உரிமை பாராட்டி தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப்படுத்துகிறது.//
    ஒருபடி மேலேசென்று பச்சையாக, நிலப்பிரபுத்துவ கொடுமையை தனது ஊரில் கடைப்பிடித்தவரும், வெண்மணி கொடுங்கோல் மிருகமான கோபலகிருஷ்ண நாயுடுவுக்கு வரவேற்பு கொடுத்து விருந்து வைத்து உபசரித்தவரும், தனது அறக்கட்டளையில் தீண்டாமையை கடைப்பிடித்தவருமான மூப்பனாருக்கு புகழஞ்சலி செலுத்தி பெருமை பாராட்டி தங்களையே இழிவுப்படுத்திக் கொண்டது த.தே.பொ.க தலைமை.
    இந்திய அரசியல் புரட்சித்திட்டத்தைக் கொண்டிருப்பதாலே மகஇக-வினரை இந்திய தேசியவாதிகள் என்றும் பார்ப்பண சக்திகள் எனவும் சாமியாடும் இவர்கள் உண்மையிலே பார்ப்பன பாசிச பாஜக கும்பலுடன் கூடிக் குலாவிய மதிமுக, பாமக, திமுக போன்ற கட்சிகளை அவ்வாறு விளிப்பதில்லை. காங்கிரஸ்,திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஓட்டுக்கேட்ட பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன் போன்றவர்களை இந்திய தேசியவாதிகள் என்று ஓலமிடவுமில்லை. என்னே, இவர்களது தமிழ் தேசிய அரசியல்!

  20. //பின் குறிப்பு: மணியரசன் வகையறாக்கள் எமக்கு எதிராகத் தமது அவதூறுகளைத் தொடர்வதற்கு வசதியாக ஒரு தகவல்: எமது தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நூற்றுக் கணக்கில் ஒரிசா, ஜார்கண்ட், பீகார், சட்டிஸ்கர், வங்காள புலம்பெயர் தொழிலாளர்களை உறுப்பினர்களாக்கி வருகிறது!//
    தோழர் லெனினின் கீழ்க்கண்ட மேற்கோளைப் புரிந்துக்கொள்ள முயற்சிக்கும்படி த.தே.பொ.க-வின் அணியினரை கேட்டுக்கொள்கிறேன்.
    “தேசிய இனம் என்கிற கோட்பாடு முதலாளித்துவ சமுதாயத்தில் வரலாற்று வழியில் தவிர்க்கமுடியாதது. இந்த சமுதாயத்தை கணக்கிலெடுத்துக்கொண்டு மார்க்சியமானது தேசிய இயக்கங்கள் வரலாற்று வழியில் நியாயமுடையவை என்பதை முழு அளவிற்கு அங்கீகரிக்கிறது. ஆனால் இந்த அங்கீகாரம் தேசியவாதத்திற்கான ஆதரவு விளக்கமாக ஆகிவிடாதிருக்கும் பொருட்டு, இந்த இயக்கங்களில் முற்போக்கான அம்சமாய் இருப்பதற்கு மட்டுமானதாய் இந்த அங்கீகாரம் கண்டிப்பான முறையில் கட்டுப்படுத்தப்படவேண்டும்.”-(லெனின், தேசிய இன பிரச்சினை பற்றிய விமர்சன குறிப்புகள், பக்கம்-31)

    • செந்தமிழரே,

      மேலே லெனின் என்ன சொல்றாருன்னு கொஞ்சம் விளக்குக..

  21. மலையாள தேசியம் தமிழ் தேசியத்தை தாக்கும் போது திருப்பி அடிப்பது தான் சரி. அப்போது தான் இந்திய தேசியம் என்னும் பொய்மைக்குள் இருக்கும் முரண்பாடுகள் வெளியே தெரியும். கடந்த ஐம்பது ஆண்டு காலமாக இந்திய தேசியவாதிகளும் திராவிட தேசியவாதிகளும் தமிழ் மக்களை சூறையாடினார்கள். இப்போது பொதுவுடைமைவாதிகளின் முறை. இந்த உலகில் உழைப்புக்கோ அல்லது திறமைக்கோ ஏற்ற பலன் யாருக்கும் எங்கும் கிடைப்பதில்லை.எல்லாவற்றையும் தீர்மானிப்பது அதிகாரம் தான். தனி மனிதனோ அல்லது ஒரு இனமோ எந்த அளவுக்கு மற்றவர்களை விட அதிகாரம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் அல்லது அதிகாரத்துக்கு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பது தான் அவர்களுக்கு கிடைக்கும் பலனையும் முன்னேற்றத்தையும் தீர்மானிக்கிறது. இந்த உண்மை யூதர்களுக்கும் பார்ப்பனருக்கும் மலையாளிகளுக்கும் தெரியும். தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் முட்டாள்களுக்கு தெரியாது. ஆகவே உலகளவில் மிகப்பெரிய பதவிகளை தமிழர்கள் பிடிக்கவேன்டும். அல்லது ஏதாவது ஒரு வகையில் அதிகார மையங்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். தமிழினம் உய்ய இது தான் வழி.

    • சிம்பிள் வழிதாங்க இதுக்கு இருக்கு. புரட்சித்தலைவி பாதத்தை சரணடைவதுதான் தமிழ்தேசியவாதிகளுக்கு கதிமோட்சம். இதுக்குத்தான் இவ்வளவு பில்டப்பா. முடியல‌

      • மணி,நான் சொல்ல வந்தது வேறு.நக்கல் அடிக்க வேண்டாம்.நீங்கள் சொல்வதை எடுத்துக்கொண்டாலும் ஜெயலலிதாவை சுற்றி எத்தனை மலையாளிகள் அதிகாரிகள் வடிவில் இருக்கிறார்கள் தெரியுமா? அப்புறம் இந்த மலையாள மந்திரவாதிகள், ஜோசியர்கள் போன்றோர். இப்போது இந்த அம்மா அந்த அம்மாவை மீண்டும் கூட சேர்த்துக்கொண்டதால் அம்பிகளுக்கும் அவாள் பத்திரிக்கைகளுக்கும் எவ்வளவு எரிச்சல் தெரியுமா? எல்லாம் அதிகாரம் படுத்தும் பாடு. எம்.ஜி.ஆர் என்னும் மலையாளி தமிழக முதலமைச்சர் என்னும் அதிகாரத்தில் இருந்தார்.அவர் கூடவே தலைமை செயலாளர் பதவி முதல் மற்ற பதவிகள் வரை மலையாளிகள் இருந்தார்கள். முல்லைப்பெரியாறு சம்பந்தமான பேச்சுவார்த்தை திருவனந்தபுரத்தில் மலையாளத்தில் நடந்தது.அணை சம்பந்தமான பல அதிகாரங்கள் தமிழகத்தின் கையிலிருந்து பறி போனது. இப்போது தென்மாவட்ட அறிவாளிகள் தடி, துடைப்பம் ஆகியவற்றுடன் கேரள எல்லைக்கு போய் அவர்கலை மிரட்டுகிறார்கள். மெத்த படித்து பல அதிகார மையங்களில் வளைய வரும் சேட்டன்களா இதற்கு பயப்பட போகிறார்கள்? எப்படி நமக்கு ஆப்பு அடிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

    • //மலையாள தேசியம் தமிழ் தேசியத்தை தாக்கும் போது திருப்பி அடிப்பது தான் சரி.// எங்கே எப்போது அடித்தது?

      • அதி மேதாவி அசுரனுக்கு,

        அது எப்போதும் அடித்துக்கொண்டே தான் இருக்கிறது. உச்ச கட்டமாக முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் நடந்தது. மலையாள தேசியம் தமிழர்களை எஸ்டேட்களில் கூலி வேலை செய்யும் எளிய மக்கள் என்று நினைக்கவில்லை. பெண்கள் என்று நினைக்கவில்லை. அவர்கள் தாக்கப்பட்டார்கள். சபரிமலைக்கு போன தமிழர்களை ஏழை, பணக்காரன் என்று வேறுபாடு பார்க்காமல் மலையாள தேசியம் தாக்கியது. அவர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழகத்தில் அதுவும் சென்னையில் இருந்து போன ஒருவரை தமிழர் என்னும் ஒரே காரணத்தால் அவமானப்படுத்தி சுடுநீர் ஊற்றி படுகொலை செய்தது. தி.மு.க கும்பலை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ வின் பெட்ரோல் பங்கும் தப்பவில்லை. பல தமிழ் வணிகர்களின் கடைகள் நொறுக்கப்பட்டன. தென்னகத்து முஜிபுர் ரகமான், மஞ்சள் துண்டு மைனரின் குடும்பமே (அஞ்சாநெஞ்சன்) உட்பட கலங்கி போய்விட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதுவும் எப்படி. தனக்குள் காங்கிரஸ் என்றோ கம்யூனிஸ்ட் என்றோ கட்சி பேதமில்லாமல் ஒன்றுசேர்ந்து கொண்டு தாக்கியது. போதுமா?

      • //முல்லைப்பெரியாறு சம்பந்தமான பேச்சுவார்த்தை திருவனந்தபுரத்தில் மலையாளத்தில் நடந்தது.அணை சம்பந்தமான பல அதிகாரங்கள் தமிழகத்தின் கையிலிருந்து பறி போனது. // அய்யா பெரியசாமி அவர்களே. நான் கேட்டது மேலே உள்ள உங்களது பதிலிலிருந்து. எம் ஜி ஆர் மலையாளி சரி, செயலலிதா எந்த இனம்? கருணாநிதி எந்த இனம்? பா. சிதம்பரம் எந்த இனம்? தினமலம் உள்ளிட்ட பத்திரிகைகள் எந்த இனம்? இவர்களெல்லாம் உதவி செய்யாமல் இத்தனை அயோக்கியத்தனம் முல்லைப் பெரியாறில் நடக்கிறது? இதில் மலையாளி மட்டுமா கை நனைக்கிறான்? தண்ணீர் தனியார்மயம், சுற்றுலா சுரண்டல் என தமிழ், மலையாளி என அனைத்து தேசிய இன முதலாளியும்தான் அரசியல் செய்கிறான். இதை தமிழ் தேசியவியாதிகள் பேசுவதில்லையே ஏன்? இதனைச் சுட்டிக் காட்டும் போதெல்லம் அங்கே பார் மலையாள இனவெறி என்று மடை மாற்றி துரோகம் செய்கிறார்களேஏன்? மலையாள இனவெறி ஆதிக்கம் செய்கிறது என்பது தமிழ் தேசியவியாதிகளின் கையாலாகதத்தனத்துக்கு ஒரு சாக்கு. உன்னத்தையும் செய்ய வக்கற்ற வாய்ப் பேச்சு வீரர்களை இழிவாய்த்தான் அவன் பார்ப்பான். 144 அடி உயர்த்தலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை முல்லைப் பெரியாறில் அமல்படுத்த வக்கற்று சவடால் பேசும் தமிழ் தேசியவியாதிகள் மற்றும் ஒ. பன்னீர்செல்வம் போன்ற தமிழர்களும், கேரள முதலாளி-அதிகாரவர்க்க-அரசியல் கும்பலும்தான் தமிழ் உழைக்கும் மக்களின், இங்கு விளையும் பொருளை நம்பி வாழும் கேரள உழைக்கும் மக்களின் எதிரிகள். இதை வெளிப்படையாக பேச தேவையான எந்த அறிவுமற்று பார்ப்பன பூசாரி போல ‘மலையாள இனவெறி’ என்று மட்டும் கூச்சலிடுகிறது தேசியவியாதி கும்பல்.

    • உங்களை போன்ற பத்திரிக்கைகளை நடத்துபவர்களின் செய்திகளை படித்தால் கொஞ்சம் இருக்கும் அறிவும் மறந்துவிடும். தரமான் பத்திரிக்கைகளை படிக்க வேண்டும். பார்ப்பனர்களின் பத்திரிக்கைகளை படிக்கக்கூடாது என்பீர்கள். “பார்ப்பனர் பார்ப்பனர்” என்று உளறிக்கொண்டே பத்திரிகை நடத்தினால் தமிழன் எப்படி அதிகார மையங்களுக்கு போக முடியும் . உலகச் செய்திகள் அனைத்தையும் படித்தால்தானே தமிழினம் உய்ய வழி பிறக்கும். யூதர்கள் போல் உலகில் சிறந்த அறிவாலிகளோ நாட்டுப்பற்று உள்ளவர்களோ இல்லை. அறிவியல் ரீதியாக பற்பல புதுமைகள் வைத்துள்ளார்கள். அவர்கள் மூலமாக நாம் பல வழிகளில் சுயசார்பு அடையலாம். பாழாப்போன “ஓட்டு வங்கி” அரசியலுக்காக நமது நாட்டு அரசியல் வாதிகள் முஸ்லீம்களின் காலில் விழுந்து கிடக்கிறார்கள். இதுகூட உங்களுக்கு தெரியாதா என்ன? அச்சம் தவிப்பீர்! ஆண்மை கொள்வீர்!!!

  22. //இராமன் தமிழ்க் கடவுள் என்று சொல்லி இந்துத்துவத்தையும் தமிழ்த் தேசியத்துக்குள் புகுத்துகிறது.//
    பெரியார் ராமன் பொம்மையை செருப்பால் அடித்தாரே! அப்படியென்றால் பெரியரைப் பற்றி மணியரசன்களின் கொள்கை தான் என்ன?

  23. தமிழர்களின் வாழ்வியல் முன்னேற்றத்துக்கு ஆங்கிலம் மிகவும் இன்றிமையாதது. மலையாளிகளுக்கும் உயர்சாதி வட இந்தியருக்கும் பார்ப்பனருக்கும் இருக்கும் ஆங்கில அறிவு தமிழர்களுக்கு நிச்சயம் இல்லை. முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தேசிய மற்றும் சர்வதேசிய ஊடகங்களில் தமிழகத்தின் நிலைக்கு எதிராக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரமும் அதை மேற்கொண்டவர்களுமே இதற்கு சான்று. நமது தரப்பில் பதிலடி கொடுக்க யாருமே இல்லை. நிறைய ஆங்கில வழி பள்ளிகளை திறப்பதால் நம் பிள்ளைகளுக்கு ஆங்கில புலமை வந்து விடாது. தரம் வேண்டும், எதிலும். திராவிட இயக்கத்தினர் என்னும் அரைவேக்காடுகளினால், சுயநலவாதிகளால் நம் பள்ளி மற்றும் கல்லூரி கல்வியின் தரம் பாதாளைத்திலே இருக்கிறது.

    • //முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தேசிய மற்றும் சர்வதேசிய ஊடகங்களில் தமிழகத்தின் நிலைக்கு எதிராக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரமும் அதை மேற்கொண்டவர்களுமே இதற்கு சான்று. நமது தரப்பில் பதிலடி கொடுக்க யாருமே இல்லை. // அய்யா பெரியசாமி அவர்களே ஏன் அகில இந்திய அளவுக்கு, லோக்கல் தமிழ்நாட்டில் தமிழ் தேசியம் பேசியவர்கள் என்ன கிழித்தீர்கள்? முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழனுக்கு துரோகம் செய்தவர்களின் நோக்கம் தண்ணீர் வியாபாரம், சுற்றுலா விபச்சாரம். இதில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழி ஆளும் கும்பலும் உண்டு. இவர்களை அம்பலப்படுத்தாமல் வெறும் மலையாள வெறி மட்டும்தான் முல்லை பெரியாறு பிரச்சினைக்கு காரணம் என்று திசை திருப்பி தமிழனுக்கு துரோகம் செய்தவர்கள் யார்? தமிழ் தேசியவாத செக்குமாட்டு கும்பல்தானே அது? கூரை ஏறி முதலில் கோழி பிடியுங்கள் அப்புறமா ஆங்கிலம் கற்று அகில இந்திய வைகுந்தத்தை கைப்பற்றுவதைப் பற்றி பேசுங்கள்

      • தமிழ் தேசியம் பேசுபவர்களின் கையில் அதிகாரம் கிடையாது. அவர்கள் இதுவரை பொதுவுடைமைவாதிகளை போல் அதிகாரத்தை ருசித்ததும் இல்லை. எந்த அதிகாரத்துக்கும் நெருக்கமாகவும் இல்லை.

        “முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழனுக்கு துரோகம் செய்தவர்களின் நோக்கம் தண்ணீர் வியாபாரம், சுற்றுலா விபச்சாரம். இதில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழி ஆளும் கும்பலும் உண்டு.”

        இருக்கலாம். அதற்கு தங்கள் மாநிலத்துக்கு வருமானத்தை வழங்கும் சபரிமலை பக்தர்களை அதுவும் இந்த பிரச்சினைக்கு சற்றும் சம்பந்தமே இல்லாதவர்களை தாக்குவதற்கு என்ன இருக்கிறது? பாண்டிகள் அதுவும் பறப்பாண்டிகள்

      • எனக்கு தெரிந்து கேரளத்தில் இருக்கும் ஒரு கட்டடத்தின் காவலாளிக்கு கூட தமிழர்கள் மீது காழ்ப்புணர்ச்சி இருக்கிறது.

        • //எனக்கு தெரிந்து கேரளத்தில் இருக்கும் ஒரு கட்டடத்தின் காவலாளிக்கு கூட தமிழர்கள் மீது காழ்ப்புணர்ச்சி இருக்கிறது.//எனக்குத் தெரிந்து ஆதிக்க சாதி அடிமடையர்கள் அத்தனை பேருக்கும், தமிழ் தேசிய முதலாளித்துவ பொறுக்கிகள் அத்தனை பேருக்கும் தமிழ் உழைக்கும் மக்களைப் பற்றி இழிவான பார்வையும், காழ்ப்புணர்ச்சியும் உள்ளது.

    • //தமிழர்களின் வாழ்வியல் முன்னேற்றத்துக்கு ஆங்கிலம் மிகவும் இன்றிமையாதது. // அப்போ தமிழ்? அது மணியரசன் கும்பலோட பிம்பிலிக்கி அரசியலுக்கான ஊறூகாய். இதைத்தான் மேற்படி கருத்தின் மூலம் சொல்ல வருகிறார் பிக்காட் (அதாங்க பெரியசாமி)

  24. இந்திய அரசியல் சட்டப்படி மற்ற மாநிலத்தவர் நம் தமிழ் மண்ணில் குடியேறி வேரூன்றி வளர்வதை நம்மால் எதிர்க்க முடியாது. ஆனால் மறைமுகமாக தடுக்க முடியும். குறிப்பாக வட இந்திய உழைக்கும் வர்க்கம் என்று சொல்லப்படும் தொழிலாளர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது தான் நல்லது. இவர்களை இங்கு துரத்தியடித்து வேரூன்ற செய்வதன் மூலம் வட இந்தியாவின் உயர் குடியினர் நம் தமிழ் மண்ணை எதிர்காலத்தில் எளிதாக தம் அரசியல், பொருளாதார மற்றும் மொழி, மத வெறி பிடிக்குள் கொண்டு வந்து விடுவார்கள். அவர்களின் தந்திரமும் அது தான். நமக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச நிம்மதியும் போய்விடும். அசாம்,மராட்டியம் ஆகிய மாநிலங்களில் அது தான் நடக்கிறது. இங்குள்ள அம்பிகளும் அதை தான் எதிர்பார்க்கிறார்கள். ஆகவே பொதுவுடைமைவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் ஆட்கள் தமிழக தொழிலாளர்களை கவனிப்பதோடு நின்று கொண்டால் அனைவருக்கும் நல்லது.

    • //குறிப்பாக வட இந்திய உழைக்கும் வர்க்கம் என்று சொல்லப்படும் தொழிலாளர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது தான் நல்லது. இவர்களை இங்கு துரத்தியடித்து வேரூன்ற செய்வதன் மூலம் வட இந்தியாவின் உயர் குடியினர் நம் தமிழ் மண்ணை எதிர்காலத்தில் எளிதாக தம் அரசியல், பொருளாதார மற்றும் மொழி, மத வெறி பிடிக்குள் கொண்டு வந்து விடுவார்கள்.// அதாவதுங்க இவர் என்ன சொல்றாருன்னா நோக்கியா, குண்டாயி மாதிரி நம்ம உய்ய வைக்கும் தெய்வங்களான முதலாளிகள் மற்றும் அவர்கள் தொடுக்கும் கலாச்சார, மொழி, அரசியல் தாக்குதல் நம்ம கவலையில்லை. அதவிடுங்க வடநாட்டு முதலாளியான டொகோமா, ரிலையன்ஸ் கூட தமிழன உய்ய வைக்கும் பிக்காட்தான்னு சொல்றாரு. தமிழனுக்கு எதிரி சேட்டன் கடை டீயிலும், வடநாட்டு கூலித் தொழிலாளி பேண்ட ஈயிலும்தானிருக்குன்னு சொல்றாரு. இத சொல்றதுக்கு நெளிஞ்ச சொம்ப நேர் படுத்தற தொழில் செய்யலாம் பெரியசாமி அண்ணாச்சி…

  25. இந்திய தேசியம் இல்லை என்றால் தமிழ் தேசியமும் இல்லை என்றுதான் கூறவேன்டும்.நாங்கள் பாண்டியநாட்டை செர்ந்தவர்கள். பாண்டிய தேசியமே எங்களது உண்மையான தேசியம். மற்ற தேசியங்களான சேரன், சோழன், கொங்கு பல்லவம் மற்றும் பிற தெசிய யினங்கள் தமிழகத்தில் உள்ளன. அவைகளை ஒரு பொருட்டாகநினைக்க வில்லை. எங்களுக்கு பாண்டிய தேசியநாட்டை கொடுத்தால் போதும்!!

    • யார் இந்த நட்டுராயன்.இந்த மாதிரி ஒரு அறிவாளிய இது வரைக்கும் யாரும் பாத்துருக்க முடியாது.ஆஹா,எவ்வளவு அருமையா அறிவா பேசுறாரு.

      • \\பாண்டிய தேசியமே எங்களது உண்மையான தேசியம். மற்ற தேசியங்களான சேரன், சோழன், கொங்கு பல்லவம் மற்றும் பிற தெசிய யினங்கள் தமிழகத்தில் உள்ளன. அவைகளை ஒரு பொருட்டாகநினைக்க வில்லை.\\

        Nothing wrong with Natrayan’s question.. Don’t criticize.. Try to answer

        • முதல்ல அவர தேசியத்தின் அர்த்தம் என்ன என்று தெறியுமானு கேளுங்க. நாங்க தமிழ் தேசியத்துக்கு போராடினா அதிலும் கெடுகெட்ட ஆர் எஸ் எஸ் புத்திய கொண்டு வந்து புகுத்துரது. தேசியத்தின் அர்த்தமே தெறியாதவருகிட்ட விவாதிக்கிறது ஒரு முட்டால் தனம்.

          • //தமிழ் தேசியத்துக்கு போராடினா// முதல்ல தமிழ் தேசியம்னா என்னப்பா? தமிழ்நாட்ட பன்னாட்டு கம்பனி கையில கொடுப்பதா? உங்க பொருளாதார கொள்கை என்ன அத சொல்லுங்க மொதல்ல. முதலீட்டில் 37% தமிழர்களுக்கு(அதாவது தமிழ் முதலாளிகளுக்கு) பங்கு கொடுத்தால் 100% தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் சுரண்டலாம் என்று அனுமதி கொடுத்து கோரிக்கை வைத்தவர்தானே மணியரசன்? இந்த பித்தலாட்ட முதலாளித்துவ பினாமிக்கு தமிழ் தேசியம் ஒரு முகமூடி.

          • பாண்டிய நாட்டை 18 சமஸ்த்தானக்களாக பிரித்து ஒவ்வொரு சமஸ்த்தானத்திற்கும் ஒரு ஜமீந்தார் நியமிக்கப்படுவார். அவர் பாண்டியனாட்டில் உள்ள அவரது சமஸ்த்தானத்தை சுதந்திரமாக வளர்த்துக்காட்டுவார். முழு உரிமையும் வழங்கப்படும். பாண்டிய நாட்டை யாராலும் வெற்றிகொள்ளமுடியாத அளவிற்கு வளர்த்துக் காட்டுவோம். எங்கள் பாண்டிய நாட்டு மக்கள் பொன்னாட்டுமக்கள்!! போர் என்றல் புலி குணம் பொங்கும் இன்ப காதலென்றால் பூ மனம் பொங்கி எழுந்து உலகிற்கே ஒரே இனம் என்ற சரித்திரம் கண்டவர்கள் நாங்கள்!!! எங்களை தீண்ட நினைத்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும். மொழியை வைத்து யாரும் தேசியம் அமைப்பதில்லை. இடத்தின் பண்பாடு கலாச்சாரத்தை வைத்துத்தான் நாடும் மக்களும் தேசியமும் உருவாகிறது. மொழி என்பது மனிதன் சிந்திப்பதர்ககாகவும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்காகவும் உள்ள வாகனம்தான். மருத்துவர் ஐயா.ராமதாஸ் அவர்கள் ஏற்கனேவே வன்னிய நாடு அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சில இடங்களில் “வன்னியநாடு” உங்களை வரவேற்கிறது என்ற விளம்பரங்களும் காணப்படுகிறது. இதிலிருந்து ஜாதிதான் தேசியத்தை நிர்ணயக்கிறது என்று மருத்துவர் ஐயா தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். எங்களைப்பொறுத்தவரை முழு பாண்டிய நாட்டின் நிலத்தையும் எங்கள் பாண்டிய மக்களிடையத்தாக்கி இங்குள்ள அனைத்து மக்களையும் ஜாதி வேறுபாடின்றி அரவணைத்து செல்வோம். வாழ்க பாண்டிய நாடு!!!!!!!!

  26. தேசிய இன விடுதலை என்பது வேறு, இனவாதக் கண்ணோட்டம் என்பது வேறு. முன்னது எதிரியை துல்லியமாக வரையறுத்துக்கொண்டு (பார்ப்பனிய, ஆளும் வர்க்கங்களை உள்ளடக்கிய இந்திய தேசியம் மற்றும் அதன் போலி ஜனநாயகம்) அவற்றை வீழ்த்தும் வண்ணம் அனைத்து ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களையும் அணிதிரட்டி போராடுவதை முன்னெடுப்பதாகும். பின்னது எதிரியை (நிலவும் இந்திய தேசிய கட்டமைப்பை பாதுகாத்துக்கொண்டே)கேள்விக்குள்ளாக்காமல் ஒடுக்கப்பட்ட தேசிய இனமக்களையே எதிரியாக சித்தரித்து மோதவிடுவதுதான். இது இனவாதத்திற்கே உரிய குணாம்சம். இதைத்தான் தமிழை மூலதமாகக் கொண்டு பிழைப்பு நடத்தும் மணியரசன் கும்பல் செய்து கொண்டிருக்கிறார்கள். மார்க்சிய விதிப்படி சமூக இயக்கத்தின் உந்துசக்திகளான உழைக்கும் மக்கள் இனத்தால் மோதிக்கொள்ள முடியுமா? சமூகத்தின் கீழ்கட்டுமானமான ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களுக்குள்ளே மோதிக்கொள்ள முடியுமா? முடியும் என்கிறார் இன வெறி மணியரசன்.

  27. வினவு தோழரே நீங்கள் கோயமுத்தூரில் வாழ்ந்து பாருங்கள் வேட்று மாநிலத்தவரின் ஆக்கிரமிப்பு பற்றி புரியும் குறிப்பாக மலையாள வந்தேறிகள் எப்படி இருக்கிறார்கள் தமிழன் எப்படி இருக்கிறான் எட்று புரியும் மணியரசன் தோழர் சொல்லுவது புரியும் தயவு செய்து தமிழனை பற்றி கவலை கொள்ளுங்கள் வந்தேறிகள் எல்லாமே தமிழனுக்கு எதிராகவே செயல்படுகிறார்கள்

    • //வினவு தோழரே நீங்கள் கோயமுத்தூரில் வாழ்ந்து பாருங்கள் வேட்று மாநிலத்தவரின் ஆக்கிரமிப்பு பற்றி புரியும் குறிப்பாக மலையாள வந்தேறிகள் எப்படி இருக்கிறார்கள் // அதே கோயமுத்தூரில் கவுண்ட சாதி வெறியர்களின் ஆதிக்கம், ஆக்கிரமிப்புதான் எங்கும் நிரம்பிக் கிடக்கிறது. கவுண்ட குண்டேறிகளின் சாதி வெறிக்கு ததேபோக சாமரம் வீசத்தானே மலையாள வந்தேறி என்று பித்தலாட்டம் ஆடுகிறது?

  28. கோவையில் மட்டும் அல்ல. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இதே நிலை தான். புதுவையில் இந்தி மற்றும் பெங்காளிகளின் ஆதிக்கம் உயர்மட்டங்களில் ரொம்ப ஓவர். தமிழர்கள் எப்போதுமே “Labour Class People” தான். கூலிக்கார பசங்க. அந்தக்காலத்தில் இங்கிருந்து இலங்கை, மலேசியா, மொரீசியஸ், தெனாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கூலி வேலை செய்ய அடிமைகளாக போனார்கள். இப்போது தகவல் தொழில்நுட்ப துறை கூலிகளாக உள்ளார்கள். நிறைய பேர் படித்துள்ளார்கள். எல்லோரும் செல்போன் வைத்திருக்கிறார்கள். பலர் கார் வைத்திருக்கிறார்கள். சிலர் நேர்த்தியான வீடுகளை கட்டியுள்ளார்கள். அவ்வளவு தான். மும்பை தாராவி சேரியில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். மலேசியாவில் கோலாலம்பூர் விமானநிலையத்தில் பெரும்பாலான கக்கூசுகளை நடத்தி பராமரிப்பவர்கள் தமிழர்கள் தான்.இலங்கையில் தோட்ட வேலை செய்வது படிப்பறிவு இல்லாத மொடாக்குடி தமிழர்கள். தில்லியில் வீட்டு வேலை செய்வது தமிழ்ப்பெண்கள். எல்லாம் “Unskilled Labour” . ஆகவே வினவு அவர்களே! முதலில் நம் மக்களை கவனியுங்கள். மற்றதெல்லாம் அப்புறம். “Labour Class People”

    • //ஆகவே வினவு அவர்களே! முதலில் நம் மக்களை கவனியுங்கள். மற்றதெல்லாம் அப்புறம். “Labour Class People”// பேருல தமிழ்தேசியம் வைச்சிருக்கிற யோக்கியசிகாமணிகள் மேற்படி பீ அள்ளுதல் முதல் உடல் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் பெரும்பான்மை தமிழர்களை கவனிக்க மறந்தது ஏன்? அங்கே பார் என்று அந்த பக்கம் கை காட்டி உள்ளூர் முதலாளிகளின் சுரண்டலை மூடி மறைக்கும் வேலையைத்தான் தமிழ் தேசியவியாதிகள் செய்கிறார்கள்? இதற்குத்தானே மேற்படி முதலாளிகளின் ரத்தக் காசை எச்சில் ஒழுக நக்கித் தின்கிறார்கள்? முதல்ல தமிழனுக்கு நீங்க ஏதாவது செஞ்சிருக்கீங்களான்னு சொல்லுங்க பெரியசாமி சார்.

      • உள்ளூர் முதலாளிகளின் சுரண்டலை யார் மூடி மறைத்தார்கள்? உங்களை யாராவது போராட வேண்டாம் என்று சொன்னார்களா?. அதைத்தான் முன்னாடியே சொன்னோம். உங்கள் வேலையை உள்ளூர் தொழிலாளர்களை கவனிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என்று. மிகப்பெரிய வன்முறை அறங்கேறி உள்ளது. ஐந்து மாவட்டங்களின் வாழ்வாதாரம் தமிழ்நாடு, தமிழர் என்னும் காரணத்தால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அதை சுட்டிக்காட்டினால் அது தப்பா? தமிழ் தேசியவாதிகளை பழிப்பதற்கு முன் மலையாள இன வெறியை பழியுங்கள். சரியா?

        • //உங்களை யாராவது போராட வேண்டாம் என்று சொன்னார்களா?. அதைத்தான் முன்னாடியே சொன்னோம். உங்கள் வேலையை உள்ளூர் தொழிலாளர்களை கவனிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என்று. // பெரியசாமிஎன்ன சொல்றாருன்னாக்க உள்ளூர் முதலாளிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உள்ளூர் தொழிலாளிகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார். அப்போ உள்ளூர் தொழிலாளி தமிழன் இல்லையா? விசயம் என்னவென்றால், தமிழ் தேசியவியாதிகள் என்போர் முதலாளித்துவத்தின் கோமனம்தான் என்பதைத்தான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இப்படி வார்த்தைகளை கடித்து துப்பி சொல்கிறார் தேசியவியாதி பெரியசாமி…..

  29. கேரளத்தில் ரயில்களிலும் மற்ற பொது இடங்களிலும் பிச்சை எடுப்பவர்கள், எஸ்டேட்களில் கூலி வேலை செய்பவர்கள், வீடு வீடாக போய் கக்கூசு கழுகுபவர்கள், அங்கு பொது இடங்களில் மலஜலம் கழிப்பவர்கள் யாவரும் தமிழர்களே. இது சாதாரண மலையாளியின் மனதில் தமிழர்கள் மீது அருவருப்பை ஏற்படுத்துகிறது. மேலும் கேரளத்துக்கு தமிழகம் வழியாக செல்லும் ரயிலில் போகும்போது இரு பக்கங்களிலும் தெரியும் வறட்சி,நாற்றம் எடுக்கும் தேங்கிய சாக்கடை,நாலாந்தர சினிமாவையும் அதே தர நடிகர்களையும் ஆராதிக்கும் நமது மட்டமான கலா ரசனை, லுங்கியை அன்டர்வேரும் தொடையும் தெரியும் படி தூக்கிக்கட்டிக்கொண்டு பொது இடங்களில் அடாவடித்தனம் பேசுவது, அகில உலகமே சந்தி சிரிக்கும் படி மெகா ஊழல்களை செய்யும் நமது அரசியல் கலாச்சாரம் ஆகியன கேரள அறிவுஜீவிகளை தமிழர்கள் மீது மட்டமான எண்ணம் கொள்ளச்செய்கின்றன. இதையெல்லாம் சரிசெய்வதற்கு பொதுவுடமைவாதிகள் முன்வரவேன்டும்.

    • //கேரளத்தில் ரயில்களிலும் மற்ற பொது இடங்களிலும் பிச்சை எடுப்பவர்கள், எஸ்டேட்களில் கூலி வேலை செய்பவர்கள், வீடு வீடாக போய் கக்கூசு கழுகுபவர்கள், அங்கு பொது இடங்களில் மலஜலம் கழிப்பவர்கள் யாவரும் தமிழர்களே.// தமிழ்நாட்டுல ததேபோக தொண்டர்கள்தான் இந்த வேலையை செய்கிறார்களா என்ன? மொதல்ல உன் வீட்டுல நீ செய்யிற சாதிய அயோக்கியத்தனத்த பேசு. அள்ளுற பீயில தமிழன் பீ என்றால் மணக்கும், கேரள பீ என்றால் நாற்றம் பிடுங்கும் என்ற் உள்ளதா என்ன?

    • நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் இதற்கு இன வெறி தீர்வாகாது. ஏனெனில் இனவெறி பிரச்சினைக்கான மூலத்தை கணக்கிலெடுக்காது.

  30. வினவு அவர்களே, ஒரு சந்தேகம்! உங்களுடைய பொதுவுடைமை சித்தாந்தம் மற்றும் அறிவுரை எல்லாம் தமிழ் பேசும் மக்களுக்கு மட்டும் தானா? “தமிழர்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தண்ணீரைத்தான் குடித்து வருகிறார்கள். அதை நாம் அனுமதிக்க கூடாது” என்று உலகறிந்த பொதுவுடைமைவாதி, கேரள எதிர்க்கட்சி தலைவர் அச்சு மாமன் கூறுகிறார். அவருக்கென்ன அறிவுரை. அப்புறம். சீனா, கியூபா ஆகியன பொதுவுடைமை நாடுகள் தானே! ஆகையால் “இந்தியா போன்ற நாடுகளில் இருந்து ஏழை தொழிலாளர்கள் உலகின் எந்த பகுதிக்கும் போகலாம். அது தான் பொதுவுடைமை சித்தாந்தம். ஆகையால் உங்கள் நாடுகளை திறந்து விடுங்கள்.” என்று அவர்களிடம் கூற முடியுமா? அவர்கள் ஒப்புக்கொள்வார்களா?. இல்லை உங்கள் பொதுவுடைமை சித்தாந்தம் தமிழகம் மாதிரி இளித்தவாய் மாநிலங்களுக்கு தானா? மாநிலத்துக்கு ஒரு நீதி,நாட்டுக்கு ஒரு நீதி, மாவட்டத்துக்கு ஒரு நீதி, வட்டத்துக்கு ஒரு நீதி. இது தான் பொதுவுடைமை சித்தாந்தமா?

    • \\உலகறிந்த பொதுவுடைமைவாதி, கேரள எதிர்க்கட்சி தலைவர் அச்சு மாமன், சீனா, கியூபா ஆகியன பொதுவுடைமை நாடுகள் தானே!
      உங்கள் நாடுகளை திறந்து விடுங்கள்.” என்று அவர்களிடம் கூற முடியுமா? அவர்கள் ஒப்புக்கொள்வார்களா\\

      ஐயோ தப்பான கேள்வி… ISI கம்யனிஸ்ட்களுக்கு எரிச்சல் வந்துடும்… ரெடி மேட் பதில் பேஸ்ட் பண்ணி எரிச்சலை தனிச்சிப்பாங்க…

      “சீனா-வின் கம்யுனிசம் போலி… கியூபா முதலாளிகளோடு சமரசம் செய்து கொண்டது…அச்சு மாமா மட்டுமல்ல, எங்களை தவிர இந்தியாவில் அனைத்து வலது, இடது, ஓர, கார்னர், மூளை, முடுக்கு, தெருக்கோடி கம்யுனிஸ்ட்கள் எல்லாம் இன்னும் ISI தரச்சான்று வாங்காத போலி கம்யுனிஸ்ட்கள்… ” – இதுதான் அந்த ரெடி மேட் பதில்.(ரொம்ப காலத்துக்கு முன்னாடி கூட்டத்துலே பேசி முடிவு பண்ணியது ?)

      ரெண்டு லிங்க் கூட இவுங்களே அடிச்சு வைச்சுக்கிட்டு இங்கன பேஸ்ட் பண்ணி நம்மளை படிக்க சொல்லுவாங்க.. ஆதாரத்தோடு விளக்குராங்கலாம் 🙂

    • மணியரசன் கட்சி பேருல உள்ள பொதுவுடமைக்கு என்ன அர்த்தம்னு பெரியசாமி சொல்வாரா?

  31. //பொதுவுடைமைவாதி, கேரள எதிர்க்கட்சி தலைவர் அச்சு மாமன் கூறுகிறார். // ஏங்க மணியரசன் கட்சி பேருலேயே பொதுவுடமை இருக்கும் போது சிபி எம் பேருல பொதுவுடமை இருக்கக் கூடாதா என்ன? பெரியசாமி அண்ணாச்சி என்ன சொல்றாருன்னா தமிழ் தேசியவாதின்னா அவன் கட்சி பேருல தமிழ் தேசியம் இருக்கனும். பொதுவுடமைவாதின்னா அவன் கட்சி பேருல பொதுவுடமை இருக்கனும். இதுதான் ஒரே தகுதின்னு சொல்றாரு. வெளங்கிரும். அச்சுக்கு அறிவுரை சொல்றது இருக்கட்டும். உங்ககிட்ட சில கிளாரிபிகேசன்ஸ் இருக்கு(உங்களுக்குத்தான் ஆங்கிலம் பிடிக்குமே). மலையாள இனவெறி சரியா தவறா?

  32. தமிழ் தேசியம் பேசுபவர்களின் கையில் அதிகாரம் கிடையாது. அவர்கள் இதுவரை பொதுவுடைமைவாதிகளை போல் அதிகாரத்தை ருசித்ததும் இல்லை. எந்த அதிகாரத்துக்கும் நெருக்கமாகவும் இல்லை.

    “முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழனுக்கு துரோகம் செய்தவர்களின் நோக்கம் தண்ணீர் வியாபாரம், சுற்றுலா விபச்சாரம். இதில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழி ஆளும் கும்பலும் உண்டு.”

    இருக்கலாம். அதற்கு தங்கள் மாநிலத்துக்கு வருமானத்தை வழங்கும் சபரிமலை பக்தர்களை அதுவும் இந்த பிரச்சினைக்கு சற்றும் சம்பந்தமே இல்லாதவர்களை தாக்குவதற்கு என்ன இருக்கிறது? பாண்டிகள் அதுவும் பறப்பாண்டிகள் என்னும் காரணம் தானே.

    நல்லதோ, கெட்டதோ, எந்த ஒரு விஷயமும் ஒரு சிலர் தான் தங்கள் நோக்கத்துக்காக தொடங்குவார்கள். லெனின் உள்ளிட்ட சில ஆயிரம் பேர் சேர்ந்து செய்த புரட்சியை ஒட்டு மொத்த சோவியத் யூனியனின் மக்களின் புரட்சியாக சித்தரிக்கவில்லையா?.

    • பெரியசாமி அவர்களே, என்னதான் சொல்ல வருகிறீர்கள்? உழைக்கும் மக்கள் இனத்தின் பெயரால் ஒருவருக்குள் ஒருவர் அடித்துக்கொள்வதை ஆதரிக்க முடியுமா? அப்படி அடித்துக்கொள்ளுவதால் ஆதாயம் அடையும் பொது எதிரியின் பக்கம் நாம் ஒன்றிணைவது எப்போது?

    • //முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழனுக்கு துரோகம் செய்தவர்களின் நோக்கம் தண்ணீர் வியாபாரம், சுற்றுலா விபச்சாரம். இதில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழி ஆளும் கும்பலும் உண்டு.”

      இருக்கலாம். அதற்கு தங்கள் மாநிலத்துக்கு வருமானத்தை வழங்கும் சபரிமலை பக்தர்களை அதுவும் இந்த பிரச்சினைக்கு சற்றும் சம்பந்தமே இல்லாதவர்களை தாக்குவதற்கு என்ன இருக்கிறது? பாண்டிகள் அதுவும் பறப்பாண்டிகள் என்னும் காரணம் தானே.// அண்ணன் பெரியசாமியின் சரக்கு தீர்ந்துவிட்டது. தமிழ்தேசியவியாதிகள் உள்ளூர் முதலாளிகளின் சுரண்டலை கவனிப்பதில்லையே, தமிழ் உழைக்கும் மக்களுக்கு என்ன் செய்தீர்கள் என்று கேட்டால் அதற்கு முல்லைப் பெரியாறு, ஐந்து மாவட்டம் என்று முழக்கமிட்டார் பெரியசாமி.

      முல்லைப் பெரியாறிலும் துரோகியை,எதிரியை மறைத்து காப்பாற்றிவிட்டு வெறும் மலையாள இனவெறியை மட்டும் முன்னிறுத்தி முல்லைப் பெரியாறை காவு கொடுக்கிறீர்களே என்றால் உடனே சரணம் ஐயப்பா, பறப் பாண்டி என்கிறார். ஆஹ தமிழனின் எந்த பிரச்சினைக்கும் நேர்மையாக பதில் சொல்ல வக்கற்று சம்ஸ்கிருந்த மந்திர உச்சாடனம் போல இனவெறி கூச்சல் ஒன்றே போதும் என்று நம்பும் கிணற்றுத் தவளைகள்தான் இவைகள். அய்யா அதனால்தான் சொல்கிறோம், கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாத வாய்ச்சவடால் தமிழ்தேசியவியாதிகள் தமிழனுக்கு உபகாரம் செய்யாவிடிலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யாது ஒழிந்து போய்விடுங்கள் என்று. இதில் அண்ணாரது பொதுவுடமை பற்றிய விளக்கம்தான் டாப் கிளாஸ் காமடி.. என்னத்தா சொல்ல… சரி அவரது சிற்றறிவுக்கு பொருத்தமாக எளியதொரு கேள்வி கேட்டிருந்தேன் அதை மீண்டும் முன் வைக்கிறேன் மலையாள இனவெறி சரியா தவறா?

    • //தமிழ் தேசியம் பேசுபவர்களின் கையில் அதிகாரம் கிடையாது.// அதிகாரம் இருந்து என்னத்த கிழிச்சுறப் போறீங்க? உங்க பொருளாதாரக் கொள்கை என்னன்னு முதல்ல சொல்லுங்க.

  33. உள்ளூர் முதலாளிகளிடம் தமிழ்தேசியவாதிகள் காசு வாங்கியிருந்தால் பின் ஏன் வெளிமாநில தொழிலாளர்களை எதிர்க்க வேண்டும்?. அவர்களால் குறைந்த கூலி, அதிக சுரண்டல் என முதலாளிக்கே லாபம். உனக்கு இது ஏன் புரியவில்லை அசுரன். எவ்வளவு ரேட் பேசினார்கள்?

  34. தமிழனை எப்படி அடையாலம் காண்பது? ஜாதியை வைத்தா, தமிழை பேசுபவர்களை வைத்தா, அல்லது பண்பாடு கலாச்சாரத்தை வைத்தா வழிபாட்டை வைத்தா (தமிழர்களின் கடவுள்-முருகன்). இதற்கு இதுவரை யாரும் பதில் சொல்லாமல் குழப்பிக்கொண்டு இருக்கிரீர்கலே? எந்தெந்த ஜாதிகள் தமிழ் ஜாதி, எவை தமிழ் ஜாதி அல்லாதவைகள். குழப்பாமல் பட்டியலிடுங்கள்!!!!!! தமிழ்நாட்டில் தமிழர் அல்லதவர்களை தெரிந்து கொள்ளலாம்.

    • ஜாதி கலப்பு, இன கலப்பு உள்ளவர்கள் தமிழர்களா அல்லது இதற்கும் செந்தமிழன் எதாவது விளக்கம் வைத்து இருப்பார்

      • குனா அவர்கள் எழுதிய மண்னுரிமை முதல் மற்றும் இரண்டாம் பாகம் வாங்கி படியுங்கள் அதில் விவரித்துள்ளார். கிடைக்கும் இடம் தமிழம்மா பதிப்பகம், 100 அடி சாலை, லீக் கிளப் பின்புரம், கோயம்பேடு, சென்னை.

        பார்ப்பனர்கள் மற்றும் வந்தேறிகள் யாரும் தமிழர்கள் இல்லை என்பதை மிக நுட்பமான ஆய்வுக்கு பிறகு வடித்துள்ளார். தாய் தமிழினை தாய் மொழியாக கொண்டவர்களே தமிழர்கள் என்று பல முறை சொல்லியாகிவிட்டது.

        தமிழனுக்கு சாதி கிடையாது என்று சொன்னால் இங்கு ஏனோ சிலர் அதை ஏற்பதில்லை.

        வேண்டுமானால் எனது ஆய்வின் ஒரு அங்கத்தை சொல்கிறேன். சிந்து நாகரிகத்தில் தமிழர்கள் இக்காலத்தில் இருக்கும் பண்பாடுப் போல் வீட்டின் முன் கோலம் இடுவது வளக்கம் அவ்வாறு காலை மற்றும் மாலை பொழுதில் கோலம் இடுவதற்கு காரணம் அவர்கள் வசிக்கும் ஊரினுல் புதியவர்கள் யாராயினும் வேலை நிமித்தமாக வரும் பச்சத்தில், வருபவர்கள் அந்த தொழிலில் இடுபட்டுள்ளவர்களை எலிதில் கண்டரிய வீட்டின் முன் கோலம் இடுவது வளக்கம். உதரணம் சொல்ல வேண்டும் என்றால், ஒரு மருத்துவரின் இல்லத்தை கண்டரிய அவர் வீட்டின் முன் இடபட்டிற்கும் கோலம் அது ஒரு மருத்துவரின் வீடு என்று அறிய உதவி செய்துவிடும்.

        பிற் காலத்தில் ஆரிய வருகைக்குப் பிறகு சாதி வழி நாகரிகம் தொற்றுவித்த பிறகு செய்யும் தொழிலின் அடிபடையில் மக்கள் அடிமையாக்கப் பட்டார்கள். அந்த கோலம் பின்பு பரினாம வளர்ச்சி பெற்று ஒரு சாதியின் திருமணத்தில் மாங்கல்லியமாக மாறியது, அதுவே இக்காலம் வரை ஒவ்வொறு சாதிக் என்று தாலி செய்யும் முறை வளக்கத்தில் உள்ளது.

        ஆகையால் சாதி என்னும் நச்சு தமிழனுக்கு கிடையாது, சாதியில் தமிழனை தேடுவது மூடத்தனம்.

        • “தமிழனுக்கு சாதி கிடையாது என்று சொன்னால் இங்கு ஏனோ சிலர் அதை ஏற்பதில்லை.”

          சாதி இல்லாத தமிழனே இல்லாதே போது நீங்க மட்டும் எப்படி சாதியில் தமிழனை தேடாதேன்னு சொல்றீங்க?

          தவிர, பல பார்ப்பனர்களுக்கு தமிழ்தான் தாய்மொழி. வேறெந்த மொழியும் தெரியாது. இருந்தாலும் அவங்களெல்லாம் ஒருபோதும் தமிழர்கள் ஆகா முடியதுன்னுதானே சொல்லப்போறீங்க!

          • இவர்கள் பார்ப்பனர்கள் என்று எப்படி காண்டுபிடிப்பது ? ஜாதி என்ற ஒன்று இருப்பதால்தானே கண்டுபிடிக்க முடிகிறது. தமிழ்நாட்டில்தான் ஜாதியே இல்லை எங்கிறார்களே!!

        • ////// சாதி என்னும் நச்சு தமிழனுக்கு கிடையாது, சாதியில் தமிழனை தேடுவது மூடத்தனம்.//////// அநேகமாக இவர் தமிழ் நாட்டிலேய இருப்பது இல்லை போல் தெரிகிறது. ஜாதி இல்லாத தமிழன் இங்கு இல்லை. பர்ப்பனான் பார்ப்பனன என்று எதேர்க்கிடுத்தாலும் கூறிக்கொண்டு அனைவரையும் ஏமாற்றிவருகிறிகள்.மற்ற ஜாதியினரை சாதிபெயரை சொல்லி திட்ட மாட்டார். ஏனெனில் அவர்கள் அனைவரும் ஒன்று கூடி ” நல்லபடியாக ” கவனித்து விடுவார்கள். அந்த அச்சம் இவர்களை தொற்றிக்கொண்டு உள்ளது. பார்ப்பன ஜாதியுனரை தவற மற்றவர்களை ஜாதியை சொல்லாமல் “ஆதிக்க ஜாதியினர்” “மேல் ஜாதியினர்” என்றுதான் குறிப்பிடுவார்கள். என்ன பயம் பாருங்ககள்!!!!

          • அதானே ஒன்னு நேருக்கு நேர் நீன்று வாதிட வக்கு இல்லை என்றால் அடுத்தவனை உசுப்பேத்தி நடக்குமானு பாக்குரது தான் பார்ப்பனிய பாறிவாச்சே. உங்க பொய் பித்தலாட்டத்தை தான் நாங்க டார் டாரா கிழித்து விட்டோமே.

            தமிழகத்தில் சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் பார்ப்பனியர்களை ஒழிக்க வேண்டும். சாதியை உண்டாக்கிய வேரை வெட்டினால் தான் அந்த நச்சு மரம் மேலும் வளராமல் இருக்கும்.

            சாதியின் பெயரால் வெறியாட்டம் போடும் யாராக இருந்தாலும் நாங்கள் விமர்ச்சனம் செய்ய தயங்கியது இல்லை. அதற்கு வினவிலே பல உதாரணங்கள் உள்ளன. அது நால உங்க பார்ப்பனிய சகுனி மூலைய்ல்லாம் இங்க பேசி பல்பு வாங்கதீங்க.

            உங்களுக்கு எங்கள் மேல் பயம் வந்த தால் தான் இந்த மாதிரி உலரல்கள் எல்லாம். அதுனால உங்க போலி வீரத்தை எல்லாம் இங்க பேசாதீங்க.

  35. //ஜாதி கலப்பு, இன கலப்பு உள்ளவர்கள் தமிழர்களா அல்லது இதற்கும் செந்தமிழன் எதாவது விளக்கம் வைத்து இருப்பார்// அவுங்களே கன்பூஸ் ஆயிட்டாங்க நீங்க வேற இப்படி கேள்வி கேட்டா என்ன செய்வாங்க…. இவிங்க விளக்கப்படி ஒவ்வொன்னா நீக்கினம்னா கடசீல தமிழ் தேசியவியாதி கும்பல்ல ஒரு பத்து பேரு மட்டும் தமிழன் பட்டியல் மிஞ்சி இருப்பாங்க….

    • நீங்கள் மணியரசன் வகையரா என்று நினைக்கிறேன் முதலில் எனது பின்னொட்டம் எதை நோக்கி என்று புரிந்த பிறகு எழுதவும்.

  36. தற்போது உள்ள ஜாதி அமைப்புப்படி யார் தமிழர்கள்? தமிழர்களுக்கு ஜாதி இல்லை என்பதுநல்லதுதான். ஆனால் தமிழ்னாட்டில் தமிழர்கலிடையே ஜாதி இல்லை என்று கூறி எங்களை எல்லாம் ஒன்றும் தெரியாத மிருகங்கள் ஆக்குகிறீர்கலே என்றுதான் வேதனையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ளவர்களில் தமிழ்வளி வந்தவர்கள் யார் தமிழ் வளி வராதவர்கள் யார்? அடையாலம் காட்டுங்கள். நான் பச்சையாகவே கேட்கிறேன் சொல்லுங்கள். தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மட்டுமே பேசிக் கொண்டு இருக்கும் நாயுடு, செட்டி, ரெட்டி, சக்கிலியர் ,நாயர், காப்பிலிய ஒக்கலிக்க கவுன்டர், ஐயர், அய்யங்கார் மற்றும் பிற ஜாதியினர் தமிழ் இனத்தில் சேர்த்துல்லீர்கலா இல்லையா? தமிழர்களுக்கு ஜாதி இல்லை யென்று கூறி எங்களை ஏமாற்றாதீர்கள். ஜாதி என்ற ஒன்று இலலாவிட்டால் தமிழ் மட்டும் பேசி வரும் பார்ப்பனர்களை எப்படி அடையாலம் கண்டு ஒதுக்குவீர்கள்.நீங்கள் நடந்து செல்லும்போது இவர்கள் தமிழர்கள் இவர்கள் தமிழர் அல்லாதவர்கள் என்று கண்டுபிடிக்க முடியுமா? வெள்ளையர்களையும் கருப்பர்களையும் ஒரு சில வெளிநாட்டவரை வேண்டுமானால் கண்டு பிடிக்கலாம். தமிழ்நாட்டில் தமிழ் பேசிக்கொண்டு இருப்பர்களை தமிழன், மலையாளி, தெலுங்கன், சவுராஷ்ட்ரா, இந்தி, உருது, அரபு, ஒடிசா என்று அடையாலம் காண முடியாது. ஒரு வேளை உங்களுக்கு “தெய்வீக சக்தி” இருந்தால் கண்டுபிடிக்கலாம்.

  37. //mandhiravaathiApril 11, 2012 at 2:10 pm
    https://www.vinavu.com/2012/04/07/ramajayam/#comments
    பிராமண பெண்களை மணந்தால் உயர் ஜாதி அந்தஸ்து கிடைக்கும்னு உங்களுக்கு யாரு சொன்னாங்க? அந்த மணமகனின் ஜாதியில் வேண்டுமானால் அவருடைய அந்தஸ்து உயரலாம். “தலித்தை மணந்த பிராமணப்பெண்ணும் தலித்தே” என்று நீதி மன்றமே தீர்ப்பு வழங்கிவிட்டது. Since our society is patriarchal, it’s the father’s caste that matters.//

    //mandhiravaathiApril 11, 2012 at 2:22 pm 31.2
    You just proved what I said. MS is a classic case of co-opting by Brahmins. All the shrungara rasa in her music was removed and replaced with bhakti rasa. The Brahmins were so awed by her talent and couldn’t believe that a non-Brahmin was so much better than all of them, so they went ahead and did the next best thing: convert her into a proper maami. Most people tend to forget that nothing much is known about her brother or sister. The media and the music mafia ensured that MS remains a Brahmin icon, despite not being born one.//

    // mandhiravaadhiApril 9, 2012 at 3:43 pm 35.1.1.1

    “தமிழனுக்கு சாதி கிடையாது என்று சொன்னால் இங்கு ஏனோ சிலர் அதை ஏற்பதில்லை.”

    சாதி இல்லாத தமிழனே இல்லாதே போது நீங்க மட்டும் எப்படி சாதியில் தமிழனை தேடாதேன்னு சொல்றீங்க?

    தவிர, பல பார்ப்பனர்களுக்கு தமிழ்தான் தாய்மொழி. வேறெந்த மொழியும் தெரியாது. இருந்தாலும் அவங்களெல்லாம் ஒருபோதும் தமிழர்கள் ஆகா முடியதுன்னுதானே சொல்லப்போறீங்க!//

    ஹி..ஹி..ஹி..சும்மாவா சொன்னார் பெரியார்???

    காந்தியாருக்கு அவமானம்!

    இந்தத் திலகர் இறந்தபோது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காந்தி யார் சென்றார். திலகரின் பாடையைத் தூக்குவதற்காக காந்தியார் சென்ற போது, அங்கிருந்த பார்ப்பனர்கள் நீ வைசியன், இந்தப் பாடையைத் தூக்கக் கூடாது என்று கூறி காந்தியாரைப் பிடித்துத் தள்ளினார்கள் என்றால் அதன் தன்மை என்ன?

    மகாத்மா என்று போற்றப்பட்ட காந்தியார் அவர்களுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களின் நிலை என்ன?

    //The Brahmins were so awed by her talent and couldn’t believe that a non-Brahmin was so much better than all of them, so they went ahead and did the next best thing: convert her into a proper maami.-//

    ஹி..ஹி..ஹி..அங்கொரு பேச்சு..இங்கொரு பேச்சு.சும்மாவா சொன்னார் பெரியார்???

  38. ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உன்மையாக்க முயற்சிக்காதீர்கள் !!!!!!!! கோயபல்ஸ் தியரி!!!

  39. ஏய் எல்லாரும் வந்து ஸ்டேஷன்ல கையெழுத்துப் போட்டுட்டு போங்க.

    நீ யாருடா கோமாளி?

    நானும் ரவுடி தான்.

    நீ ரவுடின்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?

    ஈக்குவலா பேசறேன் இல்லே?

    எங்கம்மா சத்தியமா நானும் ரவுடி தாங்க.

    உன்னை இந்த ஏரியாவிலே பார்த்ததில்லையே?

    நான் இந்த ஏரியாவிலே ரவுடின்னு பார்ம் ஆயிட்டேன்ல. சரி ஏறித் தொல.

    நான் ஜெயிலுக்கு போறேன்.நான் ஜெயிலுக்கு போறேன்.

    நல்லா பாத்துகுங்க நான் ஜெயிலுக்கு போறேன்.//”நல்ல வடிவேலு காமெடி”.

    வீட்டிலும், வெளியிலும், கனவிலும் நனவிலும், எம்மொழியை பேசுகிறார்களோ
    அம்மொழியைச் சேர்த்தவர்களே அவர்கள்- என்று சொல்லித் தெரிய வேண்டுமோ???

    ஹி..ஹி..ஹி இங்கிலீஷ் பேசறவன் எல்லாம் இங்கிலீஷ்காரன்.பிரெஞ்சு பேசறவன் எல்லாம் பிரெஞ்சுகாரன்.

  40. மொழி என்பது ஒருவருக்கு ஒருவர் தஙலின் எண்ணங்கலை மற்றவர்கலுக்கு கொடுக்கும் வாகனம். ஒருவர் கருத்தை ஒருவர் அரிந்து கொல்லுவதற்காக மொழி பயன்படுகிரது. மொழி தெசியமாகாது! ஒருவேலை ராம்தாஸ் ஐயா சொல்லுவதுபொல் வன்னியம் சேசியமாகளாம். அதவது ஜாதியே தேசியமாகிரது.
    ஆங்கிலம் மட்டிமே சொல்லிதரும் கிருத்த்வ பள்ளிகலுக்கும் அரபு, உருது மட்டுமெ சொல்லிக்கொடுக்கப்ப்டும் பள்ளிகலுக்கு என்ன செய்யலாம். அவார்கலை எதிர்த்து போராட்டம்நடத்தினால்நன்ட்ராக இருக்கும்.

    • //மொழி என்பது ஒருவருக்கு ஒருவர் தஙலின் எண்ணங்கலை மற்றவர்கலுக்கு கொடுக்கும் வாகனம். ஒருவர் கருத்தை ஒருவர் அரிந்து கொல்லுவதற்காக மொழி பயன்படுகிரது. மொழி தெசியமாகாது! .// அறிவுக் கொழுந்துயா நீ… இன்னும் இது மாதிரி நிறைய நீங்களே சிந்தித்து எழுத வேனுமாய் கேட்டுக் கொள்கிறேன். எதையும் படிக்கக் கூடாது, ஒன் அண்டு ஒன்லி உங்க சொந்த மூளையிலிருந்து சிதறி வெடிக்கும் சிந்தனை சிற்பங்களின் மூலம் மட்டுமே எங்கள் அறிவுக் கண்ண தொறக்கனும் சாமி…

  41. //On Why Tamil is a Classical Language:

    University of California, Berkeley, holds a ‘Tamil’ Conference annually. Its Chair in Tamil Studies, Prof. George L. Hart, writes, “To qualify as a classical tradition, a language must fit several criteria: it should be ancient, it should be an independent tradition that arose mostly on its own and not as an offshoot of another tradition, and it must have a large and extremely rich body of ancient literature. Unlike the other modern languages of India, Tamil meets each of these requirements. It is extremely old (as old as Latin and older than Arabic); it arose as an entirely independent tradition, with almost no influence from Sanskrit or other languages; and its ancient literature is indescribably vast and rich.”//

    ஹி..ஹி..ஹி.. அப்பா, அம்மா என்று சொன்னால் என்ன? டாடி, மம்மினு சொன்னால் என்ன?(எஸ்.வீ.சேகர்- மாஜி எம்.எல்.ஏ).- தமிழாவது கத்திரிக்காயாவது.
    ராஜா காது கழுதை காது.

  42. இன்றைய செய்தியை படித்துப்பாருங்கள்! ஆப்கனில் பலபல குண்டுகள் வெடித்து ஏரளமான மக்கள் கொல்லப்பட்டனர். அங்கும் மொழிசார்ந்த தேசியம்தான் இருக்கிறது. ஒற்றுமை இல்லையே. “தலிபான்கள்” தான் இந்த படுகொலையை செய்துள்ளார்கள். அதே நேரத்தில் பாகிஸ்தானில் சிறை ஓடைக்கப்பட்டு ஏராளமான கைதிகள் தப்பி ஓடிவிட்டார்கள். இஸ்லாமிய நாடுகள் முழுவதும் கலவரமாக பூமியாக காட்சியளிக்கிறது. ஒரே மதம் ஒரே மொழி ஒரே கடவுள் என்று கொண்டாடும் இவர்களால் மக்கள் படும் அவதி சொல்லன்னா!!! நீங்களும் மொழியை வைத்து நாடகம் நடத்தப் பார்க்கிறீர்கள். மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மதம் மாறுவதுபோல் பிற மொழி பேசுகிறவர்களை மொழி மாற்றம் செய்து தமிலர்கலாக்கிகொள்ளவேண்டும்!!! தலிபான் மற்றும் சிமி போன்ற உங்கள் ‘புதிய ஜனநாயகம்’ அதாவது புதிய இஸ்லாமியம் பாத்திரிக்கையுள் ஆதரவு தரக்கூடாது. பெட்ரோ டாலருக்காக மயங்கக் கூடாது.

    • பாவம் ! உங்களைப் பார்த்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது! எனக்கு தெரியாத வார்த்தையை உபயோகித்து விளம்பரம் செய்து கொள்ளுகிறீர்கள். உங்களின் விளம்பர உக்க்தி வாழ்க!!!!

  43. உங்களின் பின்னுட்டத்தில் கூட “தலிபான்கள்” “சிமி” “பாபுலர் பிரான்டாப் இந்திய” இன்னும் பற்பல நெடி வீசுகிறது. இதநைக்கொண்டு இந்திய மக்கள் மத்தியில் விசத்தை பரப்பிவருகிரீர்கள்!!! இந்த விஷ்செடி வளர்ந்து வருகிறது. உங்களைப் போன்றவர்கள் உரம்போட்டு வளர்த்து வருகிறீர்கள்.

  44. அமெரிக்காகாரன் ஷாருக்கானை உள்ள விடாததும், இந்த மீக்குறு நில தேசிய மனநிலையாளர்கள் நாட்டராயன் போன்ற தேசப்பற்று மிக்கவர்களை ஆர்எஸ்எஸ் காரன் என்று சொல்லுவதும் ஒண்ணுதான்…

    அமெரிக்கனுக்காவது கான் வகையாறாக்களின் அச்சுறுத்தல் இருக்கிறது என்ற காரணத்தில் ஒரு நியாயம் இருக்கிறது… இந்த மீக்குறுநிலதேசியபுரட்சிகுழுவுக்கு ஆர்எஸ்எஸ்-சினால் என்ன அச்சுறுத்தல் என்பது தான் விளங்கவில்லை..

    இவர்களை பொருத்தமட்டில் ஆர்எஸ்எஸ், பாஜக, காங்கிரஸ் எல்லாமே மீக்குறுநிலதனிமனிததேசியத்தை எக்காலமும் ஏற்காதவை…
    பாருங்களேன், இன்னும் கொஞ்ச காலங்களில் உங்களை காங்கிரஸ் காரன் என்று கூட திட்டுவார்கள்… 🙂

  45. இன்னும் என்னென்ன சுக்குசுக்காக நாட்டை, மக்களைப் பிரிக்கும் வேறு என்னென்ன “வாதங்கள்” இருக்கின்றன என்பதை எனக்கும் தெரியப்படுத்தவும். நான் அவற்றில் சாத்தியமான ஒரு வாதத்தைப் பிடித்துக் கொண்டு பிழைக்கும் வழி பண்ணிக் கொள்ளுகிறேன். எனக்கு கொஞ்சம் எழுத்து, பேச்சுத் திறமை இருப்பதைப் பயன்படுத்தி எர்த் வாதமாயினும்ஒரு விளாசு விளாசி, புகழ், பணம்,
    பதவி, முதலியன தேடிக்கொள்கிறைன். சொத்துக் குவிப்பு
    வழக்குகளையவழக்குகளை, வருமான வரி ஏய்த்தல் வழக்குகளை வராமலேயே பார்த்துக்கொள்ளும் திறமையையம் ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்ளுகிறேன். சரி, கட்சிக்கு ஒரு நல்ல பெயரையும் தெரியப்படுத்தவும். கழகம் என்று முடிந்தால் அந்த பெயருக்கு அதிருஷ்டம் அதிகம் என்கிறார்கஎன்பது உலகோர் அறிந்ததே. கமறட்சிப் பெயரின் மற்ற சொற்களை அனுப்பவும்.

Leave a Reply to இரா.மணிகண்டன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க