“வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா…வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்கிறேன்” – கடந்த சித்ரா பவுர்ணமி தினத்தன்று மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க விழாவில் அப்பட்டமான சாதிவெறியைத் தூண்டும் வகையில் பேசிய வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் பேச்சு இப்போது செயல் வடிவம் பெற்று வருகிறது. வன்னிய சாதிவெறியின் கோரத் தாண்டவத்துக்கு தருமபுரி மாவட்டம் நாய்க்கன் கொட்டாய் பகுதியை அடுத்த நத்தம் காலனி, கொண்டாம்பட்டி மற்றும் அண்ணா நகரைச் சேர்ந்த சுமார் 300 ஆதிதிராவிடர் வீடுகள் பற்றியெறிந்து சாம்பலாகியுள்ளது.

நாய்க்கன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் திவ்யாவுக்கும் நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோவின் மகன் இளவரசனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. நாகராஜன் வன்னிய சாதியைச் சேர்ந்தவர். இளங்கோ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். நாய்க்கன் கொட்டாய் பகுதியே வன்னிய சாதியினர் பெரும்பான்மையாக உள்ள பகுதி என்பதாலும் அதிலும் சமீப ஆண்டுகளாய் இவர்களிடையே சாதிவெறி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாலும் தாங்கள் பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ முடியாது என்று திவ்யாவும் இளவரசனும் அஞ்சினார்கள்.

கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி இவர்கள் வீட்டை விட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் நடந்த உடனேயே வன்னியர்கள் தரப்பிலிருந்து மிரட்டல்களைச் சந்திக்கத் துவங்கிய புதுமணத் தம்பதிகள், தங்கள் பாதுகாப்புக்கு காவல் துறையை நாடினார்கள்.

தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு சேலம் சரக டி.ஐ.ஜி சஞ்சய் குமாரையும் தர்மபுரி எஸ்.பி அஸ்ரா கர்க்கையும் சந்தித்து முறையிடுகிறார்கள்.

இதற்கிடையே திவ்யாவைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கோரி வன்னியர்கள் தரப்பிலிருந்து தொடர்ச்சியாக நத்தம் காலனி மக்களுக்கும் இளவரசனின் உறவினர்களுக்கும் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. நவம்பர் 5ம் தேதி திவ்யாவின் பெற்றோர் தங்கள் சாதியைச் சேர்ந்த சுமார் 500 பேர்களுடன் நத்தம் காலனிக்கு வெளியே திரண்டு பஞ்சாயத்து பேச வருமாறு இளங்கோவின் உறவினர்களை அழைத்துள்ளனர். இந்த கூட்டத்திற்கு நத்தம் காலனியில் இருந்து சுமார் பத்து பேர் சென்றுள்ளனர்.

வன்னியர்கள் தரப்பிலிருந்து வந்திருந்த 500 பேர்களுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றியப் பொருளாளர் மதியழகன் தலைமை தாங்கி வந்துள்ளார். நத்தம் காலனியில் இருந்து வந்தவர்களை நேரடியாக மிரட்டும் மதியழகன், “நாம பார்த்து வைப்பது தான் சட்டம். மரியாதையாக பெண்ணை ஒப்படைத்து விடுங்கள்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். பெண்ணை ஒப்படைப்பதற்கு நவம்பர் 7ம் தேதி வரை கெடு விதிக்கிறார். உரிய கெடுவுக்குள் பெண்ணை ஒப்படைக்காவிட்டால் என்னவேண்டுமானாலும் நடக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்.

சாதிவெறி தலைக்கேறிய நிலையில் மிக அதிகளவில் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து அஞ்சிய நத்தம் காலனியைச் சேர்ந்தவர்கள், அந்த நேரத்தில் உடனடியாக தப்பிக்க எண்ணி அதற்கு ஒப்புக் கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பான கட்டைப் பஞ்சாயத்து கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்திலும் நடந்துள்ளது. அங்கே தொடர்ந்து சென்று வந்த திவ்யாவின் தந்தை நாகராஜனை அங்கேயிருந்த வன்னிய சாதியைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர், “பெண்ணை கீழ்சாதிக்காரனோடு அனுப்பி வைத்த பொட்டைப் பயல்” என்பது போல கேலி பேசி வெறியேற்றியிருக்கிறார்.

நவம்பர் 5ம் தேதி பா.ம.க மதியழகன் முன்னிலையில் நடந்த கட்டைப்பஞ்சாயத்தில் பெண்ணை ஒப்புவிப்பதாக நத்தம் காலனியைச் சேர்ந்த ஒருசாரார் ஏற்றுக் கொண்டு வந்திருந்தாலும், ஊருக்குத் திரும்பியதும் மற்றவர்கள் வேறு விதமாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். திருமணம் முடிந்து சுமார் 20 நாட்களுக்கும் மேலாக திவ்யா இளவரசனுடன் வாழ்ந்துள்ளார். இந்த நிலையில் வலுக்கட்டாயமாக பெண்ணைத் திருப்பி அனுப்பினால், அங்கே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அஞ்சிய இளவரசனின் உறவினர்கள், நவம்பர் 7ம் தேதியன்று அவரை ஒப்படைக்க மறுத்துள்ளனர்.

பெண் திரும்பி வராத நிலையில் நாகராஜனின் உறவினர்களும் அவரைக் கேலி பேசி வெறுப்பேற்றிய நிலையில்  அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இதிலும் அவர் விஷம் அருந்தினார் என்றும் அவரது நெருங்கிய உறவினர்களே அவருக்கு விஷத்தைப் புகட்டினர் என்றும் இருவேறு விதமாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த ஊரைச் சேர்ந்தவர்களே சொல்கிறார்கள்.

நாகராஜன் இறந்து போன நிலையில், அக்கம் பக்கம் ஊர்களைச் சேர்ந்த வன்னிய சாதியினர் சுமார் 2000 பேர் திரட்டப்படுகிறார்கள். நாகராஜனின் சடலைத்தை எடுத்துக் கொண்டு செல்லங்கொட்டாயிலிருந்து நத்தம் காலனி வழியே தருமபுரி – திருப்பத்தூர் நெடுஞ்சாலைக்கு ஊர்வலமாய்க் கிளம்புகிறார்கள். வரும் வழியிலேயே மூன்று குழுக்களாய் பிரிந்து கொள்ளும் இந்த கும்பல், நத்தம் காலனி, அண்ணா நகர் மற்றும் கொண்டம்பட்டி கிராமங்களுக்குள் புகுந்து விடுகிறார்கள். இம்மூன்று பகுதிகளும் ஆதிதிராவிடர்கள் அடர்த்தியாய் வாழும் பகுதிகள்.

கையில் கிடைத்த கடப்பாரை, கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டைகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளுடன் கிளம்பிய இந்த கும்பல், கண்ணில் பட்டவற்றையெல்லாம் அடித்து நொறுக்கிறது. அந்த சமயத்தில் நத்தம் காலனியைச் சேர்ந்த ஆண்கள் கூலி வேலைகளுக்காக வெளியூர் சென்றிருந்தனர். சுமார் 40 பெண்களும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுமே காலனியில் இருந்துள்ளனர்.

கொலைவெறியில் உள்ளே நுழையும் கும்பலைக் கண்டதும் சிதறி ஓடும் பெண்கள் ஊருக்கு வெளியேயும் வயல்களுக்குள்ளும் புகுந்து மறைந்து கொள்கிறார்கள். பெயின்ட் அடிக்கப் பயன்படும் கருவியில் (Painting Gun) பெட்ரோலை  நிரப்பி எடுத்து வந்த கும்பல் அதை குடிசைகளின் மேலும் வீடுகளின் மேலும் பீய்ச்சி அடித்தும் பெட்ரோல் குண்டுகளை எரிந்தும் வீடுகளைக் கொளுத்தியிருக்கிறார்கள்.

நத்தம் காலனியில் மட்டும் சுமார் 150 வீடுகள் எரிந்து சாம்பலாகியிருக்கிறது. சுமார் 60 இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. வாடகைக்கு ஓட்டிப் பிழைத்து வந்த டாடா ஏஸ் வாகனங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா நகரில் சுமார் 50 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளது. இங்கே சுமார் 48 கேஸ் சிலிண்டர்களைத் திருடிச் சென்றுள்ளனர். கொண்டாம்பட்டியில் 90 வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது.

வன்னிய சாதிவெறி தலைக்கேறிய கலவரக்காரர்களால் விளைவிக்கப்பட்ட பொருளாதார சேதத்தின் மதிப்பு மட்டும் சுமார் 6 கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள் மக்கள். இதில் கோயில் நகைகள் மட்டும் சுமார் 3.5 கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். தாக்குதல் நடத்திய கும்பலை பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மதியழகன், சிவா, பச்சியப்பன், மகாலிங்கம், லலிதா மாது, ராஜேந்திரன் மற்றும் P.K சின்னச்சாமி ஆகியோர் திட்டமிட்டு வழிநடத்தியிருக்கிறார்கள். ஒரு படையெடுப்பைப் போல் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பங்கேற்ற வன்முறைக் கும்பலில் பெரும்பாலும் வெளியூர்களைச் சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர்.

நத்தம் காலனியிலும் கொட்டாம் பட்டியிலும் மாலை நான்கு மணிக்குத் துவங்கி இரவு ஒன்பது மணி வரை வெறியாட்டம் போட்டிருக்கிறார்கள். அண்ணா நகரில் இரவு 11 மணி வரை தொடர்ந்து வீடுகளை எரிப்பதும், பொருட்களைக் கொள்ளையடிப்பதும் தொடர்ந்து நடந்துள்ளது.

ஒரு பக்கம் மூன்று குழுக்களாகப் பிரிந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் போதே, இன்னொரு குழு ரம்பத்தால் மரங்களை அறுத்து தருமபுரி திருப்பத்தூர் சாலையில் தடுப்பரண்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். காவல் துறையும் தீயணைப்புத் துறையும் நெருங்க விடாமல் செய்ததுடன் உள்ளே நுழைய முயன்ற காவல்துறை வாகனங்களை கற்களை எறிந்து தாக்கியிருக்கிறார்கள்.

சென்றாண்டு பரமக்குடியில் தலித்துகளிடம் துப்பாக்கியால் பேசி வீரம் காட்டிய போலீசு,  இங்கு வன்னிய ஆதிக்க சாதியினரின் முன் பணிந்து போயிருக்கிறார்கள். இத்தனைக்கும் சம்பவம் நடக்கும் பகுதியிலிருந்து கிருஷ்ணாபுரம் காவல் நிலையம் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் தான் அமைந்துள்ளது.

தற்போது கலவர பூமியாக காட்சியளிக்கும் செல்லங்கொட்டாய் நத்தம் காலனி பகுதியில் சாதி ரீதியிலான வேறுபாடுகள் இருந்தாலும் இப்போது நடந்துள்ளதைப் போன்ற வெறித்தனமான தாக்குதல்கள் இதற்கு முன்பு நடந்ததில்லை. தாக்குதல் சம்பவத்தை அடுத்து நாங்கள் அங்கே சென்றிருந்த போது நத்தம் காலனியைச் சேர்ந்த ஒரு முதிய பெண்மணி, “ நக்சலைட்டு கட்சி வலுவிழந்து போனது தான் எங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது” என்று கண்ணீரோடு தெரிவிக்கிறார்.

எண்பதுகளில் வன்னிய சாதி அடையாளத்தோடு துவங்கப்பட்ட ராமதாஸின் பா.ம.க, தொண்ணூறுகளிலிருந்தே ‘பாட்டாளி’ முகமூடியோடு  பச்சோந்தித்தனமாக பல்வேறு தேர்தல் கூட்டணிகளின் மூலம் பதவி சுகத்தை அனுபவிக்கிறது. ராமதாஸின் பிழைப்ப்புவாதமும் சந்தர்பவாதமும் சாதாரண மக்களின் முன் போதிய அளவுக்கு அம்பலமான நிலையில் இரண்டாயிரங்களின் மத்தியிலிருந்து மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து அரசியல் அரங்கில் தனிமைப்படுகிறார்.

வேல் முருகன் போன்ற அவரது முன்னாள் கூட்டாளிகளே தனி கடை போட்டு பிழைப்புக்குப் போட்டியாக உருவெடுக்கிறார்கள். கரைந்து கொண்டிருக்கும் தனது அரசியல் செல்வாக்கை மீண்டும் மீட்டெடுப்பதற்காக தற்போது மீண்டும் வன்னிய சாதிவெறியை  கையிலெடுத்திருக்கும் ராமதாஸ், தற்போது வன்னியர்களிடையே சாதிவெறியைத் தூண்டி விட்டு மக்களிடையே பிளவுண்டாக்கி ரத்தம் குடிக்கும் வெறியோடு வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் சாதிப் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரி வந்திருந்த ராமதாஸ், இந்த வகையில் தனது கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து கட்சி அமைப்பை வலுப்படுத்த திட்டமிட்டுக் கொடுத்துள்ளார். இந்நிலையில் தான் குருவின் சாதிவெறிப் பேச்சு மகாபலிபுரத்தில் அரங்கேறுகிறது. சாதிக்காக என்ன செய்தாலும் தங்களைக் காப்பாற்ற ஒரு அமைப்பு இருக்கிறது என்கிற நம்பிக்கையை சாதிவெறியேறிய லும்பன் கூட்டத்துக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தான் இந்தக் கலவரம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

தருமபுரிக் கலவரத்தைத் தொடர்ந்து 96 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களுக்காக பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர்கள் தற்போது களமிறங்கியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை ரிமாண்டு செய்யக் கூடாது என்பதற்காக எஸ்.பி அஸ்ரா கர்க் மற்றும் தலைமை மேஜிஸ்டிரேட் வரை சென்று வாதாடியுள்ளனர்.

அரசியல் அரங்கில் சாதிவெறி மீண்டும் அரங்கேறி உள்ளூர் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு துடிக்கிறது. நவீன தொழில் நுட்ப புரட்சியின் காலம் என போற்றப்படும் இந்நிகழ்காலத்தில்தான் சாதிவெறியும் முடிந்த மட்டும் ஒருங்கிணைத்துக் கொண்டு வன்முறையில் குதிக்கிறது. இதை இணையம் தொட்டு நாய்க்கன் கொட்டாய் வரை காணலாம். இதனால் தலித் மக்களின் வாழ்வுரிமை பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுகிறது. பல வருடங்கள் உழைத்து சேர்த்த வீடும், பொருட்களும் நாயக்கன்கொட்டாய் மற்றும் ஏனைய பகுதிகளில் சூறையாடப்பட்டன. இப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியில் வளர்வதும் வன்னிய சாதிவெறியர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இந்த ஆபத்திலிருந்து தலித் மக்களைக் காப்பாற்றுவதாய் கூறிக் கொள்ளும் தலித் கட்சிகளும் இப்போது ஆகச் சீரழிவான நிலைக்கு இறங்கிச் சென்ற பின், அந்த மக்கள் இன்று பாதுகாப்பற்று தனித்து விடப்பட்டுள்ளனர். ஆதிக்க சாதிவெறி என்பது அந்த சாதியில் இருக்கும் சாதாரண உழைக்கும் மக்களுக்கே  எதிரானது என்பதை அவர்களது சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்து கொள்வதோடு தம்மைப் போன்றே இழப்பதற்கு ஏதுமற்ற உழைக்கும் மக்களான தலித்துகளோடு கரம் கோர்ப்பதன் மூலம் தான் ராமதாஸ் தலைமைதாங்கும் வன்னிய சாதிவெறியை அகற்ற முடியும். இவ்வாறு வர்க்கமாக அணிதிரள்வதன் மூலம் தான் பொருளாதார விடுதலையை மட்டுமல்ல, சாதி ஒழிப்பையும் சாத்தியமாக்க முடியும்.

____________________________________________

– வினவு செய்தியாளர்கள்
_________________________________________

200 மறுமொழிகள்

  1. இந்தக்கலவரம் பற்றி “மனித உரிமை ஆர்வலர்” ப்பையா என்ன சொல்வார்னு சொல்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்……

  2. அதான் உதைப்பானுங்கனு தெரியுதுல்ல… அப்புறம் என்னத்துக்கு அவன் வீட்டு பொண்ணு பிக் அப் பண்ணனும்.. இப்படி மிதிபடனும்??? சோத்துக்கு வழி இல்லாதவனுக்கு என்ன எழவுக்கு லவ்வு, கல்யானம் எல்லாம்…..

    • பேருக்கு ஏற்றார் போல் சரியாக பேசுகிறார் இந்தியன். இந்திய தேசியம் பேசும் அனைத்து அரசியல்வாதிகளும், இன்ன பிற அறிவாளிகளும்(?) தாயைக் கூட்டிக் கொடுப்பதற்கு நிகரான செயலான, இந்நாட்டு வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் செயலைச் செய்கிறார்கள்.

      • நொந்தியன் பெயரில் எழுதும் சூராதிசூரர் சூத்தக்கத்தரி பேரர் பொதுவில் இதேபோல் பேச தயாரா….

        • காதலை கரெக்ட் செய்வது என்று ஆபாசமாக பேசும் இந்தியனை நான் பொறுக்கி என்று சொன்னால் வினவு மறுக்குமா? எனது கமெண்டை தூக்கிவிடுமா?

    • பொது அறிவிப்பு:
      இந்தியன் என்ற பெயரைக் கொண்ட மேற்கண்ட சாதி வெறியனை தோழர்கள், சாதி வெறியை எதிப்பவர்கள் யார் எங்கு கண்டாலும் அடித்துத் துவைத்து விட்டு
      ” அதான் இப்படி பேசினா அடிப்பாங்கனு தெரியுதில்ல, அப்பறம் ஏன் இப்படி என்று கூறி விடலாம் பேசுற? கூட்டிக் கொடுக்கும் இந்திய தேசியத்தை ஆதரிக்கும் வெகட்கங்கெட்ட உனக்கு இந்த சாதித் திமிருக்கு மட்டும் கொறைச்சல் இல்லை ”
      என்று கூறிவிடலாம்.

    • இந்தியன் எப்போதும் வினவிலேயே குடியிருக்காரே! மொதல், ரெண்டாவது பின்னூட்டமாவே பல பதிவுகள்ல போட்டுடறாரு. புடிக்காத இடத்துல உட்கார்ந்துக்கிட்டு இப்படி கழிஞ்சு வச்சிக்கிட்டே இருக்கலாமா? டிசென்ரிக்கு நல்ல்ல மாத்திரையா வாங்கிப் போடறது…?

    • anbulla nanba indiannu peru vechurukeenga .annaa unga comment muzhuvathum pirivinai than theriyuthu. oru pennum oru aanum manam ottrumai pettru kaathalikiraargal. idhu thavaralla anaal idhai saathi endra peyaril ethirthaal adhu thaan thavaru.

    • முத்துராமலிங்கம் காலத்துல மாதிரியே திமிறோடு பேசும் நொந்தியனே…ஆதிக்கசாதிவெறியர்களின் அக்கிரமங்களை அம்பலப்படுத்த மட்டுமே இப்பதிவு… எல்லா நேரமும் உங்களுக்கு மட்டும் அருவா வெட்டாது…. சமீபத்தில் மதுரைப்பக்கம் போய்ப்பார்… நீங்கள் கொடுத்ததற்கெல்லாம் திருப்பி வாங்க வேண்டிய நாள் தொலைவில் இல்லை.

      • ஹாஹாஹா…மதுரைல நடந்தது ஆயுதம் இல்லாத அப்பாவிகள் மீது நடந்த அப்பட்டமான அரசியல் தாக்குதல்…இதுல பெருமை வேறயா?அந்த ஒரு சம்பவத்துக்கு பிறகு மதுரை,ராமநாதபுரத்தில் என்ன எதிர்விளைவுன்னு கொஞ்சம் விசாரிச்சு பாரு…

        • நீங்கள் இதுவரை நடத்திய சாதிவெறிபிடித்த தாக்குதல்களும், படுகொலைகளும் சமமாக ஆயுதபாணியாக்கப்பட்ட மக்களோடுதானா……மேலவளவிலும், இன்னபிற இடங்களிலும் இதுதான் நடந்ததா…? நீங்கள் சொல்லும் எதிர்விளைவும் எந்த முரையில் நடத்தினீர்கள்…வீரனாயிருந்தால் வேனிலிருந்து ஓடாமலிருக்கவேண்டியதுதானா…பத்திரிக்கையாளர்களிடம் நீலிக்கண்ணீர் வடித்தது ஏன்… போய் நரைக்கிணறு பகுதியில் உங்கள் சாதியினரிடமே இப்படி பேசினால் அடிப்பார்கள்…..

  3. சிறீரங்கத்தில் ‘பிராமனர்’ என்று ஓட்டல் பெயர் இருந்த்ததால் சீறி எழுந்த ‘திராவிட’ சிங்கங்கள் எங்கப்பா தர்மபுரியில் காணோம்??

    எப்போ தலித்களுக்கு விடிவுகாலம் வருமோ…..
    தலித் சகோதரர்களே – விழியுங்கள்…நீங்கள் எண்ணிக்கையில் மிகுதி…யோசித்தி வாக்களியுங்கள்…உங்கள் பலத்தைப்புரிந்து கொள்ளுங்கள்…

    • திராவிடர் கழக சிங்கங்கள் , அன்று ஜெயாவின் பங்களாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இன்று கருணா வின் பங்களாவில் அதே வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

      தலித் மக்கள் இன்னும் ஓட்டுப் போட வேண்டுமா ?.. தலித்களின் காவலன் திருமாவுக்கு போட்ட ஓட்டுக்கள் எல்லாம் எங்கே புடுங்கிக் கொண்டிருக்கின்றன?.. தைலாபுரத்திலா ? கிருஸ்ணசாமிக்கு போட்ட ஓட்டுக்கள் எல்லாம் எங்கே கழட்டிக் கொண்டிருக்கின்றன ? போயஸ் தோட்டத்திலா ?.. வலது இடது கம்யூனிஸ்ட்டுகளுக்கு போட்ட ஓட்டுக்கள் போய்ஸ் தோட்டத்து கக்கூசில் கரசேவை செய்து கொண்டிருகின்றன.

      இன்னும் இந்த ஓட்டுப் பொறுக்கிகளை நம்ப வேண்டுமா ?.. ஒடுக்கப் பட்டோரின் விடுதலை என்பது வர்க்கமாக ஒன்றினஒயும் போது தான். அது மக்கள் அதிகாரம் ஆட்சிக்கு வரும் நாளில் தான் சாத்தியம்.

      • அரும்பு ! அனாதையா இப்படி புழம்பி புழம்பியே திரியும்படி ஆகும்…திருமா பேச்சியை கேட்டுத்தானே உள்ளுர்க்காரனை வம்புக்கு இழுத்த இப்போ எங்க அரசியல் வாதிகள் எல்லாம்..ஊரு பிரிஞ்சா அட்கு இரண்டு அரசியல்வாட்கிக்கு கொண்டாட்டம்!!! இப்ப வன்னியர் பொன்னுமேல அன்பு செலுத்துவதற்கு பதிலாக..வன்னியர் இருக்கும் ஊர்மேல அன்பு செலுத்து..

        • பொறுக்கித்தனமான சாதிவெறிபிடித்த பதில்….யாரும் திருமா சொல்லி காதலிக்கவில்லை.. அதுசரி வன்னியர் ஊர்மேல அன்பு செலுத்துவதென்றால் நீங்கள் கூறியபடி அடிமை வேலை செய்ய வேன்டும்…த்தூ வெதமில்லாமல் படித்துவிட்டார்கள்,,…

          • கருப்பன் அவர்களே….
            நீங்கள் தியாகுவின் பதிலில் சாதி வன்மம் இருபது தெரிந்தும் அமைதியாய் இருப்பது ஏனோ? தியாகு அவர்கள் விப்ரோவில் பணி புரிகிராராம்…இத்தகைய ஒருவர் எப்படி ஒரு சக பணியாளரிடம் சாதியற்ற வழியில் பணி புரிவார் என்று கேள்வி எழுப்பி,விரிவாக விளக்கி, அதில் இவர் இதுவரை பொது தளங்களிலும், முக நூலிலும் எழுதிய பதிவுகளை இணைத்து அந்த கம்பெனியின் ஹெச் ஆருக்கு ஒரு மெயில் அனுப்புங்களேன்….!!! தியாகு தான் ஆண்ட பரம்பரையாச்சே….. மீண்டும் மன்னர் பணி செய்யட்டும்….விப்ரோவில் வேலை எதுக்கு….?

            • ஆண்ட பர்ர்ர்ம்ரை எப்டி விப்ரோல டூட்டி பாக்குது…..வேணாம் விப்ரொவும் தேவர்தான் ராஜராஜனின் 47வது பொண்டாட்டியோட மச்சானின் மகள் வயிதது வாரிசும்பார்…எனக்கேன் வம்பு…..எல்லாம் முத்துராமலிங்கத்துக்கே வெளிச்சம்….முருகா…

  4. தற்குறிகளே, கிணற்றுத் தவளைகளே. காதல் திருமணம் என்பது யார் சொல்லியும் வருவதில்லை. அது சமூக வளர்ச்சியின் விதி. எல்லா நாட்டிலும் எல்லா பழைய சமூகத்திலும் பெண்ணை பெற்றோர்கள் பார்த்துத்தான் திருமணம் செய்துவைத்தார்கள். ஆனால் அந்த சமூக வளர்ந்த போது அங்கு தேர்ந்தெடுக்கும் ஜனநாயகமும் வளர்ந்தது. அது சமூகத்தின் வளர்ச்சியோடு ஏற்படுகின்ற கலாச்சார மாற்றம். இங்கு இந்தியாவில் சமூகம் வளரவில்லை அதனால் இது வளரவிலை. அதே போல் சுயலாபத்திற்காக வளர்க்கவும் விடவில்லை. இங்கு சில பேர் சொல்வது போல் அனைத்து மக்களையும் சொல்லவில்லை. ஆனால் அங்குள்ள சில ஆளும் வர்க்கங்கள் தன் நலனிற்காக அதே சாதியினை சார்ந்த மக்களை தங்களுக்கு இரையாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அனைத்து உழைக்கும் மக்களுக்கும் சாதியினை ஒழிப்பதுதான் எதிர்கால வாழ்க்கைக்கு தேவை என்பதை புரியவைக்க வேண்டும். இங்கு பலப்பேர் சொல்வது போல் ஏன் கட்சியை கோர்த்துவிடுகிறீர்கள் என்று ஆதங்கப்படுகிறார்கள். இந்தக் கட்சிகள் தானே மாநாடு போட்டு கலப்புத் திருமணம் செய்தால் கலவர பூமியாக்குவேன் என்று தீர்மானம் போட்டவர்கள். உண்மையில் அப்படி இல்லை என்றால் கலப்புத் திருமணம் என்பது சரியானது, ஜனநாயகப் பூர்வமானது என்று அறிக்கை விடச் சொல்லுங்கள். இந்த சம்பவத்தை கண்டிக்கச் சொல்லுங்கள். இது கட்சியின் வேலை இல்லை அந்த பகுதியில் இருக்கும் ஒரு கும்பலின் சதிக்கு அதே சாதியினை சார்ந்த மக்களை பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கலாம். இல்லையென்றால் அது கட்சியின் திட்டமாகவே செயல்படுத்துவதாகவே நினைக்க முடியும். அப்படிப்பட்ட கட்சிகளை தடை செய்ய கோருவதுதான் இன்றைய ஜனநாயகத்தை விரும்பும் மக்கள் செய்யவேண்டியது. இதில் ஓட்டுக்காக மற்ற சாதிக்கட்சியும் இந்த சாதி ஒழிப்பினை தடுத்தி நிறுத்திவிட்டார்கள். அவர்களும் நீங்கெளெல்லாம் குறிப்பிடும் அதை விட கீழான மக்களை திருமணம் செய்யும் போது அவர்களை அடக்கினார்கள் என்பது நன்கு தெரியும். அதனால்தான் சாதி அமைப்புகளை கட்டிக்காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிற அனைத்து சாதி சங்கங்களையும் தடை செய்ய வேண்டும். அதை உடனடியாக கலைக்கக் கோரவேண்டும். இவர்கள் எல்லாம் அவர்களின் ஓட்டு வங்கி அதன் மூலமாக கோடிகோடியாக பணம் சம்பாதிக்க அதே சாதி மக்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதை தடுத்து உழைக்கும் மக்களை அனைவரும் ஒன்று திரளவேண்டும். இந்த சமூகத்தின் சனியனான சாதியினை அகற்ற ஒரு மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள வேண்டும். ஆனால் கலப்புத் திருமணங்களை தூண்டுவது அந்தக் கட்சிகள் அல்ல. இந்த சமூகத்தின் இயல்பான வளர்ச்சி. மிகச் சரியான ஜனநாயகப் பாதை, இதை ஏற்கவேண்டும். அதை விடுத்து தடுத்தால் நமக்குள் ஒருத்தரை ஒருத்தர் அழித்துக்கொண்டு இந்த சமூகத்தினையே சுடுகாடாக மாற்றிக்கொண்டிருக்கிறோம் என்று பொருள். அதை தான் இன்று நடந்துகொண்டிருக்கும் சம்பவங்கள் காட்டுகிறது.-

    • vinoth does an upper caste girl have anything special apart from a dalit girl?.if you you prove such a thing even scientists and thinkers all over the world will be backing you.definitely your educational qualification wont be over 10th std.and if it is it should be a world wonder(may be wrong if you have copied or chased your paper for marks).this is not the right place for people like you.

      • அதாவது அறிவுடைநம்பி அவர்களே, அவர்கள் குழந்தையை உருவாக்குவதும் வாய் வழியாகத் தான், குழந்தையைப் பெறுவதும் வாய்வழியாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

          • சாதிவெறியர்கள் தங்கள் சாதி பெண்களிடம் இல்லாத எதை தேடி தாழ்த்தப்பட்ட சாதி பெண்களை வல்லுறவுக்கு உள்ளாக்கும்போது கண்டார்கள்…..போன்ற ஆட்களை செருப்பால் அடிக்க வேண்டும்.

      • திரு.அறிவுடைநம்பி,
        வினோத் மெத்தப் படித்தவராக இருப்பினும் நான் வியப்படைய மாட்டேன். ஜாதி வெறி படிப்பறிவில்லாதவர்களிடம் மட்டுமே உள்ளது என்ற நிலை ஒரு கனவு அல்லது ஆசையே அன்றி உண்மை நிலை இல்லை. நாடு கடந்து, உயர்ந்த கல்வி கற்று, நல்ல பதவியிலிருக்கும் இந்தியர்களிடமும் இந்த ஜாதி துவேஷத்தைக் காணமுடியும். என்னைப் பொறுத்தவரை பிராமணர்களை விட மற்ற ஆதிக்க ஜாதிகளிடமே இந்த வெறி அதிகமாக உள்ளது. ஆனால் இந்த ஜாதியில் உள்ள படித்தவர்களும், நமது பகுத்தறிவுவாதிகளும் ஏதோ இந்த வெறி பிராமணர்களிடம் மட்டுமே இருப்பது போன்ற ஒரு மாயையை பரப்பி பாதுகாத்து வருகின்றனர். பிராமணாள் கபே, ஸ்ப்ளெண்டர் ஐயர் போன்ற உப்பு சப்பில்லாத விஷயங்களுக்கு ஆவேசத்துடன் போராடும் பெரியார் வாரிசுகள் மேற்கூறப்பட்ட அட்டூழியத்திற்கோ, பரமக்குடியில் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் தலித்துகளுக்கு எதிரான கொலைவெறி தாக்குதல்களுக்கோ ஒரு துரும்பைக்கூட அசைக்கக் காணோம். கீழ் வெண்மணி படுகொலை, உத்தபுரம் சுவர், கீரிப்பட்டி பஞ்சாயத்து எல்லாம் ஜாதி இந்துக்களின் கேவலமான ஜாதி உணர்வுகளின் வெளிப்பாடுகள் (பெரியாரும் கீழ் வெண்மணி படுகொலையை கண்டுகொள்ளவில்லை. தலைவர் எவ்வழியோ தொண்டர்கள் அவ்வழி). பிராமணர்கள் இத்தகைய வன்முறைகளில் ஈடுபட்டதாக எனக்கு நினைவில்லை. ஜாதி இந்துக்களே, பெரியார் தாசர்களே உங்களுக்கு நினைவிருந்தால் சொல்லுஙளேன்!!

        சுரேஷ்

        • பெரியாரை குறை சொல்வதால் இந்தப்பிரச்சினை முடிந்துவிடாது. கீழவெண்மனி தி. கவின் கையில் இருந்த சாதீயப் போராட்டம் கம்.யூக்களால் அன்றய அடாவடி அரசியலுக்குப் பயன்படுத்தப் பட்டது. ஆனால் அன்று ஏற்பட்ட தி.மு.க.ஆட்சிமாற்றத்தை ஏற்க முடியாத சிலர் பிரச்சையை பெரிதாக்கியுள்ளார்கல். உழைக்கும் மக்களுக்கு என்றும் பெரியார் தொண்டர்கள் ஆதரவாகத்தான் உள்ளனர். சாதி வெறி தலைக்கேரியுள்ள இந்தச்சூழலுக்கு மாற்று பெரியார் பிரச்சாரம் தேவை என்பதை மற்ந்து வாதாடுவது தவறு. பார்ப்பனர் அராசகம் செய்யவில்லை என்பது தவறு.அவர்களுக்காக கோயில் நிலங்களை அனுபவிக்கும் பிற்பட்டோர் இதனை செய்ய பயன்படுத்தப்படும் நிலைதான் இது. அரசாங்கத்தை நெருக்க தலித் அமைப்புகள் என்ன செய்கிறன என்பதுபற்றிச் சிந்தியுங்கள்.பெரியார் தோழர்கல் தொடர்ந்து செய்வார்கல். அதில் பிராமணாள் பெயர் அழிப்பும் இதனை முன்வைத்துத்தான் என உணரவெண்டும். இப்போது பார்ப்பனர்களும் வீருகொள்கிறார்கள். மற்ற சாதி வெரியர்களும் கிளம்புகிறார்கள்.இப்போது ஓட்டுப் பொருக்கும் காரியத்திற்கு சாதி வேகமாகப் பய்ன்படுகிறது.

          • //அதில் பிராமணாள் பெயர் அழிப்பும் இதனை முன்வைத்துத்தான் என உணரவெண்டும்//
            அப்போ நாயுடு,நாடார், கவுண்டர், செட்டி என்று பெயரிடப்பட்டிருக்கும்நிறுவனங்களில் ஏன் ‘திராவிடர்’ கை வைப்பதில்லை?
            ஒ..உங்கள் உறவினரா??
            இந்த டகால்டி வேலை எல்லாம் இங்க காட்டாதீங்க சாமி….
            அதை எல்லாம் விடுங்கள்…தருமபுரி / தென் தமிழகம் – அங்கெல்லாம் தலித்கள் ஒடுக்கப்படும் போது ‘திராவிடர்’ கை என்ன செய்கிறது??

          • //// கீழவெண்மனி தி. கவின் கையில் இருந்த சாதீயப் போராட்டம் கம்.யூக்களால் அன்றய அடாவடி அரசியலுக்குப் பயன்படுத்தப் பட்டது. /////

            இதை அந்தப் பகுதி மக்கள் யாருக்கு இன்றும் மரியாதை தருகிறார்கள் என்பதை வைத்து முடிவு செய்யலாம் .. உழைக்கும் வர்க்கத்தின் நியாயமான போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் கேவலமான பழக்கத்தை போயஸ் தோட்டத்து முன்னாள் காவல் வீரமணியிடம் இருந்து கற்றுக் கொண்டீரோ ?..

      • according your commend, with our commend
        we should paste our degree certificates and mark list and its geniuses certificate given by the state board and the university ……then only you believe our degree …am i right Mr. Graduate (state first)

  5. ‎”வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா…” – பதினெட்டு ‘பொட்டி’ ராசா, காடு வெட்டி குரு.

    அப்போ, வன்னிய இன ஆண்கள் கலப்புத் திருமணம் செய்துக்கிட்டா, ‘நறுக்கிடலாமா…?’

  6. தன் சாதிக்கு இவ்வளவு வோட்டு உள்ளதென்று பேரம் பேசி சீட்டு கேட்கும் ஒரு சாதி கட்சி தலைவன் தன் சாதியினரிடையே தன்னுடைய தலைமையை தக்க வைக்க அப்பப்போ இப்படி கலவரங்களை தூண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.அவனுடைய சொல்லை கேட்டு அடிதடி வெட்டுகுத்து என்று இறங்க ஆள் இல்லை என்றால் அவன் ஆட்டம் க்ளோஸ்.சாதி பார்க்காமல் எல்லோரும் காதலித்தால் அப்புறம் சாதியில்லாமல் போன பின் அவன் எப்படி அரசியல் நடத்துவான்.அதனால் தான் எல்லா ஊரிலும் ஆதிக்க சாதியினர் சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராய் இப்போது அளவுக்கு அதிகமாய் பொங்குகிறார்கள். ஒவ்வொரு தலைவனையும் அவனவன் அறிவையும் திறமையையும் கொள்கையையும் பார்த்துதான் ஆட்கள் சேர வேண்டும் சாதியை வைத்து கூட்டம் சேர்க்கும் பொறுக்கிகளை களை எடுக்க வேண்டும் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் அவனுடைய அல்லக்கைகளே இது போன்ற கலவரங்களுக்கு பின்னே இருக்கிறார்கள்.

  7. தமிழகத்தைச்சேர்ந்த போலி சமத்துவவாதிகளின் சாயம் இப்பின்னூட்டங்களில் வெளுக்கிறது…
    இதே ‘பார்ப்பனம்’ என்று தலைப்பிருந்தால் போதும் எல்லா தமிழக போலி சமத்துவவாதிகளும் கிளம்பிடுவானுங்க…

    டேய் சமத்துவ வாதிகளா…தருமபுரி அப்பாவிகளை காப்பாற்ற பயமா?

    • //டேய் சமத்துவ வாதிகளா…தருமபுரி அப்பாவிகளை காப்பாற்ற பயமா?//

      மதுரையில் மறந்திருந்து பெட்ரோல் குண்டு வீசி அப்பவிகளை காயமாகினார்களே அதுபேர் என்ன..?
      நீ பாதிக்கப்பட்டா அப்பாவியா??? உனக்கு மட்டும் உயிரு மத்தவனுக்கு மயிரா..?

  8. love makes life beautiful…! but how its happen , wat does the police do’s…….. poor police…. its all because of politics….!

      • திருமா எங்கே போயிருக்கார் ?..

        திருமா: இன்னுமாடா ஜனங்க நம்ம நம்புது…
        வி.சி: அதவிடுங்க பாஸ் அது அவுங்க தல எழுத்து..

    • LOVE MAKES LIFE BEAUTIFUL.. I ACCEPT WHAT U SAY..BUT WHICH LOVE MAKES BEAUTIFUL ?
      HUSBAND AND WIFE LOVE…? MOTHER AND SON …? OR MY HOUSE BOY AND YOUR HOUSE GIRL OF 16 YEARS…? CAN YOU ACCEPT IT..?

  9. No other so called progressive newspaper other than so called Brahmin newspaper gave wide coverage to the Dharmapuri Arson. It was rather disappointing to note that so called progressive newspaper did not give factual report. it is for the Dalit to understand their real oppressors.

    • It is time for youngsters like Ilavarasan to show their courage and development in higher studies and hardwork. They should never go behind the so called upper caste girls. What is missing in our girls. Our ladies are so lovable, adjustable and hardworking. So try to give good life to them instead of going behind the other case people. They are no way superior. Ignore them.

      • அது எப்படி ..எங்க சாதியிலே செய்தா சாதிக்கல்வரமே வராதே……
        என்னால பத்து பேரு மண்டை உடையாதே…. இது எல்லாம் ஒரு சமூக புரட்சிம்மா….

  10. “அவரைக் கேலி பேசி வெறுப்பேற்றிய நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது”.

    இன்றைய சமூகச் சூழலில் காதல் கலப்புத் திருமணங்கள் அதிகமாக நடக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக நகர்ப்புறங்களில் படித்துவிட்டு வேலைக்குச் செல்பவர்களிடம் கலப்புத் திருமணங்கள் அதிகரித்துள்ளன. அங்கெல்லாம் பெரும்பாலும் கலவரங்கள் நடப்பதில்லை. பிடிக்கவில்லை என்றால் ஒதுக்கி விட்டுவிடுவார்கள். அங்கே இந்த உசுப்பி விடுதல்கள் அவ்வளவாக எடுபடுவதில்லை. ஆனால் சாதி வெறியர்கள் அதிலும் குறிப்பாக அரசியல் கட்சியின் பின்புலத்தோடு இருக்கின்ற சிலர் இப்படி உசுப்பி விட்டு ஒரு கலவரத்தை உண்டுபண்ணி அதன் பிறகு தன் சாதிக்காரர்களை தன்பக்கம் வைத்துக்கொள்வதோடு இதையே ஏணியாப் பயன்படுத்தி பதவிகளை அனுபவிப்பதும் பணம் சம்பாதிப்பதும் ஒரு வாடிக்கையாக நடந்து வருகிறது. அப்படிப்பட்ட கேடிகளை தனிமைப்படுத்துவதன் மூலம் சாதிக்கலவரங்களை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும்.

    தாழ்த்தப்பட்டவர்கள் ஏமாளிகள் என்பதால் இப்படித் தாக்குகிறார்கள். திருப்பித்தாக்குகிற வலிமையை தலித் அரசியலால் வழங்க முடியாது என்பதுதான் நாயக்கன் கொட்டாய சம்பவம் உணர்த்துகிறது.

    சாதிய உணர்வே-பற்றே பிறகு சாதி வெறியாக மாறுகிறது. சாதிய உணர்வும் சாதியப்பற்றும் ஒருவனிடம் இருக்குமேயானால் அவனிடம் சாதி வெறி வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

    சமூகத்தை மாற்றுகின்ற போராட்டத்தில் குறிப்பாக புதிய ஜனநாயக புரட்சிக்காகப் போராடும் பொதுவுடமைப் புரட்சியாளர்கள் தலைமையில் ஈடுபட்டால் மட்டுமே சாதியப்பற்றை விட்டொழிக்க முடியும். இது நடைமுறை அனுபவமுமாகும்.

  11. இரு சமூகத்தினரிடையே மோதல் என்றுதான் எல்லா பத்திரிகையிலும் போட்டான்.இது எவ்வளவு பெரிய மோசடி? எங்கடா மோதல் ……வன்னிய சாதி வெறியில் தலித்கள் வீடு எரிப்புன்னு போட தைரியம் இல்லாத எதுக்குடா பத்திரிக்கை நடத்துறீங்க.இதுவே தலித்கள் தாக்கி இருந்தால்,வன்னியர் வீடுகள் சூறை தலித்கள் கொலைவெறி ஆட்டம் என்று தானே எழுதி இருப்பீர்கள்.வினவின் தலைப்பை போல் எல்லா பத்திரிக்கையும் போட்டால் தான் அதுக்காவது பயப்படுவான்.

    • யாரு அவனா பயப்படுவான்? அவன் பெருமை இல்ல படுவான். வெட்கம் இல்லாத ஜென்மங்கள் அவமானத்துக்கு பயப்படாது

    • //இதுவே தலித்கள் தாக்கி இருந்தால்,வன்னியர் வீடுகள் சூறை தலித்கள் கொலைவெறி ஆட்டம் என்று தானே எழுதி இருப்பீர்கள்//

      மதுரையில் தலித்கள் பெட்ரோல் குண்டு வீசுனபோது..”தேவர் இளைஞர்கள் பலி தலித்கள் கொலைவெறி ஆட்டமுனா எழுதினா..? — நீங்க எங்க செவ்வாய் கிரகத்துல இருந்தா வர்ரீங்க..????

      • மேலவளவு பற்றி என்றாவது குறைந்தபட்சம் எண்ணிப்பார்த்ததுண்டா தியாகு… இன்றும் கூட தேவர் இன மக்களின் உண்மையான துயரங்கள் பற்றி நீங்கள் பேசியதில்லை…உங்களுக்கு தெரிந்ததெல்லாம் சாதிவெறி மட்டுமே…. அது சரி தேவர் குருபூசைக்கு செல்லும் உங்களின் அடிப்பொடிகளின் வஜனம் என்னனு சொல்ல முடியுமா…. பாரதிகண்ணம்மா படத்திற்கு நீங்கள் வைத்த போஸ்டடில் என்ன்னனு சொல்லுங்களேன்…வினைக்கும் எதிர்வினைக்கும் வித்தியாசம் தெரியுமா…..

  12. see if bhramins or devar or vanniyar’s don’t allow you to stay in their area, you don’t allow them to stay in your area.you have reservations in every department. Make use of them. if they dont allow their childrens marry your son or daughter, then you dont allow your’s to marry their son or daughter. Dont try to marry our caste people. I think you have a lot girls and boys in your caste. Marry them and have a lot of children. make your caste proud by developing yourself. But dont come in our castes. If you ask why, i dont have any answer.

    • சரி.. அப்புறம் என்ன ———-ற்காக தலித் பகுதிகளில் so called upper caste ஆட்கள் ஓட்டு கேட்டு வருகிறார்கள்? நீங்கள் சொல்வது பிற்போக்குத்தனமாக இருக்கிறது என்பதை உங்களால் உணரமுடியவில்லையா? அல்லது வசவுகளுடன் கூடிய காரசாரமான பதிலை எதிர்பார்த்து.. அது கிடைத்தவுடன் அகமகிழக்கூடிய ஒருவகை சாடிஸ்டா நீங்கள்? ஹ்ம்ம்.. ஆச்சரியமாய் இருக்கிறது!

    • Are you nuts Vinoth? These blogs are not for jokers . These are places where crucial social issues are discussed. You can go to other blogs where cricket, Iswaryaa’s daughter or some other actress are discussed. Please dont come here and bluff!!

      Suresh.

    • an absolute cracky fello, a self-proclaimed idiot and shabby-minded malicious voice of the vanniyans. u don’t call Dalits to clean the upper caste area. its a challenged for u Mr. genious sikamani vinoth, u remove ur shit or eat it every day! prove ur bondage and affection towards ur caste. and of course, u can save ur caste’s both girls and shit away from Dalit polution.

    • Mr. vinoth u are clueless about life man. Parents do not have any right to oppose an adult’s choice of his/her spouse. There is no question of “ALLOWING”. i understand why we are not a civilized society yet, becoz we have — like u……

      • Parents have every right to have reasonable expectations,Indian government gives no social security or unemployment allowance to uneducated,unemployed youth,it is all about the parents and how they value the kids.

        If kids think they have the right to screw with their parents they can do so but the same thing will happen to them.

  13. //“வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா…வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்கிறேன்” – கடந்த சித்ரா பவுர்ணமி தினத்தன்று மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க விழாவில் அப்பட்டமான சாதிவெறியைத் தூண்டும் வகையில் பேசிய வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் பேச்சு இப்போது செயல் வடிவம் பெற்று வருகிறது. //

    இதுபோன்ற பேச்சுக்களுக்கெல்லாம் இந்தியாவின் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயாதா என்று இந்தியன், வினோத் போன்றோர் விளக்கினால் நல்லது.

    • வினோத், இந்தியனுக்கு சிக்னல் கிடைக்கல…போன் சார்ஜ் இல்லையாம்……ப்பையா ஊரிலியே இல்லையாம்…..

  14. ட்லவலியும் வயித்து வலியும் தனக்கு வந்தாதான் தெரியும்….
    தலித் தலித் என் சொல்லும் நீங்க எங்க அருந்ததியர் வீட்டுல உள்ள பொண்ண
    காதலிக்க தயங்க்ரீங்களே அது எப்படி…..
    அப்படி கல்யாண்ம் பன்னினா என்னா செய்வீங்க……….?

    • இந்த ஈர வெங்காயமெல்லம் எங்களுக்கும் தெரியும்….அருந்ததியர் பெண்னை காதலிக்கும்போது இந்தப்பிரச்சினை வந்தால் பேசு, இப்போ என்ன பிரச்சினை…..உனக்கு சாதி வெறி இருக்கா இல்லையா என்பதுதான்….

  15. அணையும் நெருப்பில் LPG வைத்து ஊதுபவர்களே (இந்தியன்,சதீஷ்,இன்ன பிற) நீங்கள் மயிலடுதுரையாக இருந்தாலும் சரி அல்லது மாம்பலம் ஸ்ப்ளண்டர் ஆக இருதாளும் சரி களி நிச்சயம்.

  16. முதலில் வன்முறைக்கு அனுதாபங்கள். வன்முறை நடாத்தியோருக்குக் கண்டனங்கள்.

    இப்போது நிகழ்ச்சிக்கு வருவோம்.

    இளவரசனுக்கும், திவ்யாவுக்கும் சட்டப்படி மணவயதில்லை. திவ்யா ஓடி வந்திருந்தாலும் இளவரசனோடு இருந்தபடியால், இளவரசன் ஒரு மண வயது வராத பெண்ணை இழுத்து வந்ததற்காக கைது செய்யப்படவேண்டும். பெண் அவள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இப்படிச்செய்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது.

    செய்தித்தாள்கள் அடிப்படையில் வயதையறிந்து சொன்னேன். வினவு அறியலாம்.
    எப்படி இத்திருமணம் பதிவு செய்யப்பட்டது? இல்லை கோயிலில் என்றால் அதன் அர்ச்சகர் கைது செய்யப்பட வேண்டும்.

    இளவரசன் காதலிக்கலாம். ஆனால் பெண்ணை வைத்துக் காப்பாற்ற முடியாதா? ஏன் தன் பெற்றோரிடம் வரவேண்டும்? இம்மணம் பெண்ணின் பெற்றோரால் ஏற்றுக்கொள்ளப்படாது; இரு ஜாதிக்குமிடையே கலவரம் வரும் என்று தெரிந்தும் ஏன் தன் சேரிக்குள்ளேயே ஒழிந்து கிடக்கவேண்டும்? போலீசில் போய் புகார் கொடுத்த இளவரசனும் திவ்யாவும் ஏன் போலீசிடமே வழி கேட்கக் கூடாது? அப்படியே கலவரம் வந்தால் அதன் பின்னர், அது போலீசுக்கும் வன்னியருக்கு மட்டுமே வருமல்லவா? ஆக, இளவரசன் ஒரு கோழை மட்டுமன்று; ஒரு முட்டாள்; அது மட்டுமன்று: இக்கலவரத்துக்கு மூலகாரணமே அவன்தான்.

    ஒரு பெண்ணை ஒருவன் காதலிக்கிறான்; அப்பெண் வீட்டாருக்குச் சம்மதமில்லை. இவன் அப்பெண்ணைத் தன் வீட்டுக்குக் கொண்டுவந்து விடுகிறான்.

    இக்கட்டத்தில், அவன் பெற்றோர் என்ன செய்யவேண்டும்? இப்படித் தன்பெற்றோருக்குத் தெரியாமல் வந்த பெண்ணை தக்க அறிவுரை சொல்லி அவள் வீட்டுக்குக் கொண்டுவிட வேண்டும் இளவரசனின் பெற்றோர். இல்லையென்றால் அவளின் தகப்பனுக்குச் சொல்லி அவளை ஒப்படைக்கவேண்டும்.

    இது காதல். நாங்கள் எங்கும் போக மாட்டோம் என்று சொன்னால், பெற்றோர் அவர்களை எங்கள் வீட்டில் இருக்காமல் வேறெங்காவது போயிருங்கள். மணமுடித்தவன்தான் பெண்ணைக் காப்பாற்ற வேண்டும்! பெற்றோர் காப்பாற்றுவார்கள் என்றால் இவனுக்கு எதற்கு மணம் ?

    இளவரசன்+திவ்யா+போலீசு VS வன்னியர்கள் கூட்டம். என்பதுவே போட்டியின் ஃபார்முலா.

    இங்கே எப்படிச் சாதி வந்தது வினவு?

    திவ்யாவின் பெற்றோர் மறுத்தது சரி. தன் பெண் ஒரு நிலையான வேலையில் இருந்து தன் பெண்ணைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையுள்ள பெற்றோர் முதலில் வலைவிரித்திருக்கிறான். இளவரசன் ஒரு எம் என் சியில் மாதம் 2 லட்சம் சம்பளம் பெறுபவனாகவோ, அல்லது ஆந்திரா கேடர் ஐ ஏ எஸ் அதிகாரியாகவோ இருந்திருந்தால், எந்த வன்னியருக்கும் ஜாதி வெறி வந்திருக்காது. தன் வயத்துக்கே வழியில்லாத பயலுக்கா பெண்ணைக்கொடுப்பார்?

    Vinavu has never examined, or is willing to examine (?) the root causes of caste clashes in TN. In Ramnad district or in such vanniar places. Vinavu writes to sensationlise only. It may think such sensational pieces will lure more readers. It is like showing Namita’s contours to sell cinema or magazine. A magazine called Timepass is using her picture currently. See their wall posters everywhere.

    If u care to examine, we can directly face one factor emerging prominently. There may be other factors. Where there is lack of employment opportunities for youth, and growing poverty and the younger generations are not doing well and the parents or the earlier generation feel helpless, the ppl involved go for substitutes to gratify their egos. One of the substitutes is caste pride. Because it comes cheap. You need not pay anything. It is imaginary. Like feeling that your stomach is filled on just imagining a sumptuous dinner is spread before you.
    The youths or men who went to Thevar gurupuja is a classic study of this example. All of them are from the lowest income group like coollies, head load workers, having petty jobs like attenders in hotels etc. To talk about Thevar and imagining them as their icon and feeling greater than others in muscle power, and imagining that once they ruled TN – all of them give them some imaginary satisfaction. Like a woman who spends a lot of talcom power on her body whose stomach gets rarely filled.

    It is therefore socio economic issue, Vinavu. Not caste. W/o knowing the disease, you cant find a cure.

    • அம்மா தாயே …. காவியா,

      சமூக பொருளாதார பிரச்சனையை (socio ecconomic issue)வினவு சாதிய பிரச்சனையாக பார்க்கிறது என்று எழுதிருக்கீங்கோ!… அதுக்கு முன்னாடி நறியா இங்கிலிபீஷ் ல எழுதிருக்கீங்கோ!!..
      சந்தோசம்.

      ஒரு சின்ன கேள்வி,

      கோவத்துல ஆளக் கொல்லனும்னா அந்த பையனையோ அல்லது அந்த பொண்ணையோ இல்ல அவன் அப்பன் ஆத்தாளையோ கொன்னிருக்கலாம் அந்த காட்டு மிராண்டி நாய்கள் கூட்டம். ஆனால் அனைத்து தலித் மக்களின் குடியிருப்பை மட்டும் குறி வைத்து அழித்திருப்பதன காரணம் என்ன ?..

      உதிரிகள், சமுதாயத்தின் வேலையில்லா திண்டாட்டக் காரணத்தால் தான் கொலை செய்கிறார்கள், கொள்ளை அடிக்கிறார்கள் என்பது பற்றி எழுதிய தாங்கள் அவர்கள் குறிப்பாக தலித்துகளைக் குறி வைத்து தாக்கியதன் பின்னணி என்னவாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்.?..

      இங்கே இணையத்தில் சாதி வெறி பொங்க மறுமொழி கொடுக்கும் படித்த காலிகள் எல்லாம் வயிற்றுக்கு சோறு இல்லாமலா சாதிய கூச்சல் இடுகிறார்கள் ?.

      இந்து மதத்தின் சனாதன தர்மத்தில் படித்தவன் என்ன படிக்காதவன் என்ன ?.. அம்மதத்தை ஏற்றுக் கொண்டவன் அனைவரும் சாதி வெறியன் தான். என்ன வெறியின் அளவிலும் வெளிப்பாட்டிலும் தான் வேறுபாடு.

    • good kavya… superp

      //திவ்யாவின் பெற்றோர் மறுத்தது சரி. தன் பெண் ஒரு நிலையான வேலையில் இருந்து தன் பெண்ணைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையுள்ள பெற்றோர் முதலில் வலைவிரித்திருக்கிறான். இளவரசன் ஒரு எம் என் சியில் மாதம் 2 லட்சம் சம்பளம் பெறுபவனாகவோ, அல்லது ஆந்திரா கேடர் ஐ ஏ எஸ் அதிகாரியாகவோ இருந்திருந்தால், எந்த வன்னியருக்கும் ஜாதி வெறி வந்திருக்காது. தன் வயத்துக்கே வழியில்லாத பயலுக்கா பெண்ணைக்கொடுப்பார்//

    • //கோயிலில் என்றால் அதன் அர்ச்சகர் கைது செய்யப்பட வேண்டும்.//

      சராயத்துக்கு ஊறுகாய் மாதிரி ..தலித்துக்கு பார்ப்பனீயம்…அவுகல பேசாம இவுகளுக்கு எந்த கருத்தும் சொல்ல முடியாது.

    • நானும் வந்ததிலிருந்து பாக்குரேன்..நீ எப்ப பார்த்தாலும் அதிர்ச்சியாவே கேள்வி கேக்குற..???

      இவன் வந்தானா…அவன் வந்தானா..? என கேட்டுக்கிட்டு
      இங்கு என்ன கேள்வி பதில் நிகழச்சியா நடக்குது..?
      குச்சி மிட்டாய் குருவி ரோட்டி சாப்பிட்டுவிட்டு சும்மா படுத்து தூங்கு!!!புரியுதா..?

    • So also the other boys of other castes. The reason is that a bride is not just a bride; but a carrier of a culture. Dalit culture is not possible to cohabit with for others. Only a dalit can marry a dalit and with her, or him, the culture.

      But Vinoth, your own caste comes closely to dalit. I have seen the residential area of vanniyars in northern TN. The culture they follow is nothing to speak of: it is ugly. Therefore, the same logic applies. No one in his senses will marry a vanniyar girl.

      If at all a vanniar is urban and has changed his culture taking from others, a better culture will emerge and his girls are better: in behaviour and accomplishments. Ditto for Dalits too. There it is possible to marry these two caste girls.

      We are not talking about cities; but villages, for e.g. the one where the riots occured. There, both Vanniar and Dalits are not people one likes to associate with.
      Having said all, one point need to be noted; and ignored by you; or not occured to you. Namely, romance and love. A young girl whoever she is, and a young boy whoever he is, when they come in close proxmity, they will fall in love, in most cases. Neruppum Panchum.
      In that case, the vanniar will fall for dalit girl; or a dalit boy will fall for a vanniar boy.

      ALL IS FAIR IN LOVE AND WAR.

      • The word ugly in my message may be deleted. The following may be added therein.

        The culture they (vanniars) follow is closely aligned with dalits’ No big difference. If one finds it difficult to live w/in the culture of dalits, one finds the same difficulty to live w/in the culture of Vanniars. Look at the faces of girls of both castes: they look similar. So also boys. No wonder, Ilavarasan and Divya liked each others :=))))))))))

      • //////but a carrier of a culture. Dalit culture is not possible to cohabit with for others. Only a dalit can marry a dalit and with her, or him, the culture./////

        ஓ .. தலித் எல்லாம் வலது கையில் அள்ளி வாயில் போட்டு சாப்புடுவாங்க ஆசன வாய் வழியா வெளிய போவாங்க… நீங்கள்லாம் இடது கையில அள்ளி ஆசன வாய் வழியா சாப்புட்டு வாய் வழியா வெளிய போவீகளோ … இது நமக்கு இவ்வளவு நாள் தெரியாம போச்சே ..

        அப்படி என்ன தலித்துகளின் கலாச்சாரத்தில் அசிங்கத்தை கண்டாய் ஜெயா பூதத்தின் தங்கையே ?.. இரண்டை எடுத்துக் கூறேன். அப்படியே உன் சாதியின் பெயரையும் கூறு. உன் சாதியின் யோக்கியதையையும், உன் கலாச்சாரத்தின் யோக்கியதையையும் பற்றி நாம் பேசலாம்.
        ஒவ்வொரு ஆதிக்க சாதிக்குப் பின்னரும் ஒரு கேவலமான வரலாறே இருக்கிறது. அவசியம் ஏற்படும் போது சொல்கிறேன்.
        மனிதனின் சமூகப் பாத்திரமே அவனை மதிக்கத் தக்கவனாகவும் வெறுக்கத் தக்கதாகவும் சமூகத்தில் இடம்பெறச் செய்கிறது. அதில் அறிவியல் வளர்ந்த காலத்திலும் தமது சாதியை உயர்த்தி திமிர்த்தனம் பேசும் அயோக்கியர்களின் பாத்திரம் என்றும் அருவெறுக்கத்தக்கதே .. அவ்வகையில் இங்கே தம்மை பிறப்பால் ஆதிக்க சாதி என்றும் பெரிய கலாச்சாரம் என்றும் பேசும் உயிரினங்களை எல்லாம் புழுவினும் கீழாகவே மதிக்கத் தோன்றுகிறது. எவ்வளவு முயற்சித்தும் சபை நாகரீகத்திற்கு கூட மரியாதையாக பேசத் தோன்றவில்லை.

        • //ஓ .. தலித் எல்லாம் வலது கையில் அள்ளி வாயில் போட்டு சாப்புடுவாங்க ஆசன வாய் வழியா வெளிய போவாங்க… நீங்கள்லாம் இடது கையில அள்ளி ஆசன வாய் வழியா சாப்புட்டு வாய் வழியா வெளிய போவீகளோ … இது நமக்கு இவ்வளவு நாள் தெரியாம போச்சே ..//

          பீட்சா படம் பத்துவாட்டி பாத்த மாதிரி இருக்கு…பேய் படம் எடுக்குறவங்க எல்லாம் இங்க கருத்து பதியிறாங்களோ..????

    • vinoth yenila nee yenga irukka. yeni ucchila irrukkiya. vanniyan coming under MBC. MOST BACKWARD COMMUNITY. Idula dalit girls pathi pesa unakku onnume illa. yeniya bathiramaga pudichikko.

  17. இந்த கடுரையில் வினவின் ஜாதி வெறிதான் தெளிவாக தெரிகிறது.
    இது நடுநிலையான கட்டுரை இல்லை.

  18. 21 – ஆம் பின்னூட்டம் நான் இடவில்லை. அய்யா Tamil நீங்கள் பெயரை மாற்றிக்கொள்ளாவிட்டால் எனக்கு சிக்கல். ஏன் இப்படி அக்கப்போர் செய்கிறீர்கள்?

  19. vinavu just want to hide their face by using the word communism. vinavu dont mix communism and caste problem. if you want to come out of your caste identity go and use some other technique. vinavu tell what is your problem. caste or capitalism? anyways you are not going to won both battles. see one day all upper caste people like bhramins, devar’s, vanniyar’s, kownder’s, settiyar’s will join in one hand against dalit people.

    • /////upper caste people like bhramins, devar’s, vanniyar’s, kownder’s, settiyar’s will join in one hand against dalit people./////

      ஓ .. எல்லாரும் ஒன்னா சேந்து மாத்தி மாத்தி கழுவி விட்டுக்குவானுங்களா செப்டிக் டேங்கை ?.. சீக்கிரமா சேரச் சொல்லுங்க பாஸ் … எங்க வீட்டுலயும் ஒரு செப்டிக் டேன்க் இருக்கு. சரி பாஸ் .. நீங்க சொன்ன ஆதிக்க சாதி லிஸ்ட்ல எந்த சாதிக்காரன் நல்லா கழுவுவான் ?.. அவன பாத்து அனுப்புங்க பாஸ்… நீங்களே வந்தாலும் சரி ..

      • வட மாவட்டங்கள தலித்காங்க எவ்ளோ அட்டகாசம் பண்றாங்க தெரியுமா…..

        ரோடு ல தனிய போறவங்க கிட்ட அடிச்சி பிடுங்குறது….

        பொண்ணுங்களுக்கு செக்ஸ் டோர்சேர் பண்றது…..

        மிரட்டி பணம் வாங்குறது…தரலான அடிகிறது…..

        கூடிய சீக்கிரம்…..இதுக்கு ஒரு முடிவு வரும்……

        மத்த ஜதிகரங்க தான் அடிமையா இருகாங்க…..

        பெரும்பாலான தலித் களோட ஆடகசம் தாங்க முடியல…….

        தமிழ்நாடு புல்லா ஒரு கலவரம் வந்ததன் செறிய இருக்கும்…….

        மத ஜாதி காரங்க இப்டி….அநியாயம் அக்கிரமம்..பண்றது இல…

        எவ்ளோ நாள் ஆடுரனுன்களோ ஆட்டும்…

        கூடிய சீக்கிரம் அழிவு நிச்சயம்…..

        அவ்ளோ பவம் பன்றனுங்க

  20. இதில் சாதிப் பிரச்சினையை விட விடலை பருவத்தினரின் காதல் பிரச்சினையே தெரிகிறது .
    ஏனெனில் சிறு பருவத்தினரின் இந்த செய்கைகள் எல்லா சாதியிலும், சாதியின் உட்பிரிவுககளிலும் காண கிடக்கின்றது
    அதனால் இதை சாதிப் பிரச்சினையாக சுருக்காமல் ஒரு சமுதாய பிரச்சினையாக மட்டுமே அணுக வேண்டும் .
    மற்றபடி குடிசைகளை எரித்தது மிகவும் வேதனையான செயலாகும்.

    • பசும நேசன்..

      சமூகப் பிரச்சனையா எப்போ பாக்கலாம்னா, வன்னியர் வீட்டையும் சேத்து எரிச்சா பாக்கலாம் ..

      தலித் வீடுகளை மட்டும் எரிக்கும் போது உங்களுக்கு அது மட்டும் சாதிப் பிரச்சனியா தெரிய மாட்டேங்குது ?..

      பரமக்குடியில நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு , உங்க கண்ணுக்கு மட்டும் சட்டம் ஒழுங்கு பிரச்சனியா தெரியுது?.. அந்த சாதியின் மீதான தாக்குதலா தெரிய மாட்டேங்கிதே ?..

      • அரும்பு
        மன்னிக்கவும் . நேரம் இல்லாததால் என்னால் மறுவுரை இட முடியவில்லை .
        கண்டிப்பாக இது ஒரு ஆதிக்க சாதியின் வெறிசெயலே .அதை மறுக்க முடியாது .
        ஆனால் இதை ஒரு சமூகவியல் மற்றும் பாலியியல் பிரச்சினையாகவும் அணுக வேண்டும் என்றே நான் கருதுகிறேன.
        அந்த விடலை வயது திருமணம் எந்த விதத்திலும் நியாயமானது அல்ல. ஏனெனில் அவர்களிடம் ஒரு குறுகுறுப்பு மட்டுமே இருக்க முடியும்.
        அது மட்டுமே உண்மையான காதலுக்கு கருதுகோள் ஆகாது .
        இங்கே நாம் இரு வகை பிரச்சினையை சந்திக்கின்றோம் . ஒன்று சாதி பிரச்சினை மற்றது இனகவர்ச்சியால் வரும் பிஞ்சு காதல்.
        ஒன்றை நோக்கும் வேளையில் மற்றொன்றையும் விமர்சிப்பதே சரியான பார்வையாகும்
        இந்த மாதிரியான திருமணம் உயர்சாதி என்று இருமாந்திருக்கும் சூத்ரியர்க்ளுக்குள்ளும் நடந்தாலும் விமர்சிக்க வேண்டும் .
        .நன்றி

        • பசுமை நேசன்,
          இங்கே அவர்கள் திருமணம் மீதான விவாதம் நடக்கவில்லை. அப்படி ஒரு விவாதம் நடந்திருந்தால் அது குறித்து விமர்சனமாகப் பார்க்கலாம். இங்கே விவாதம் நடந்த ஆதிக்க சாதி வன்முறை பற்றியது. பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றியது. அங்கே நடைபெற்ற வன்முறை வெறியாட்டம் சிறிய வயதில் திருமணம் செய்து விட்டனர் என்பதற்காக வரவில்லை. மாறாக சாதி வெறியின் காரணத்தினால் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட வன்முறையே!

          இப்படி சமுதாயத்தில் ஒரு இனத்தை மற்றொரு இனம் ஒடுக்குவதைக் கண்டிப்பதற்கு முன்னால் உங்கள் கண்களுக்கு சிறு வயது திருமணம் மட்டுமே தெரிவது தான் ஆச்சரியமானதாக உள்ளது..

          • அரும்பு
            தங்கள் கூறியது முற்றிலும் உண்மையே.
            கட்டுரையின் மையகருத்தில் இருந்து என்னுடைய பின்னூட்டங்கள் விலகி இருப்பதை நான் உணர்கிறேன்
            திருத்தியமைக்கு நன்றி
            வன்னியர்களின் சாதிவெறிக்கு என் கடுமையான கண்டனங்கள்.
            பசுமை நேசன்.

            • அரும்பு
              நான் அவர்கள் திருமணம் மீதான விவாதத்தில் இறங்கியது ஏனெனில் , இங்கு பலர் இச்சாதி வெறியை கண்டிக்கும் ஊடாக அவ்விடலைத் திருமணத்தை ஆதரிக்கிறார்கள். அதை தான் நான் கண்டித்திருக்கின்றேன். இந்த கட்டுரை பேசும் மையக் கருத்தில் இருந்து எடுத்த வரிகள் கீழே ,

              —நாய்க்கன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் திவ்யாவுக்கும் நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோவின் மகன் இளவரசனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது–

              கட்டுரையின் நோக்கம் சாதி பிரச்சினை என்றால் இந்த 2 வரிகளும் படிப்பவர்களை இது புரட்சிகரமான காதல் என்றே கருத இடம் கொடுக்கும் .
              அனால் உண்மையில் இது ஒரு விடலை பருவத்து குறுகுறுப்பான உணர்ச்சியின் வடிகாலே.
              ஆதலால் தான் அதை விமர்சித்தேன் மற்றபடி இந்த கட்டுரையின் மைய கருத்து சரியானதே .

  21. இந்த உலகதில் மிகப்பெரிய ஏமாட்ரு வாதிகல் நம் தமிழ்நாட்டின் திராவிடர் கழகதினர்கல்.இவர்கலை நம்பினால் தலித் எல்லாம் சாக வேன்டியதுதான்.இவர்கலுடய சாதி ஒலிப்பு,னாத்திகம் எல்லாம் பிரமினர்கலிடம் மட்டும்தான்.வன்னியர்,தேவர் இவர்கலிடம் செல்லது.இந்த தி.க கட்சி காரர்கல் ஆம்பலயா இருந்தா சேலம்,தருமபுரி,கடலுர்,விலுப்புரம் இன்னும் உல்ல வட மாவட்டதில் சென்ட்ரு வன்னியருக்கு எதிராக கிராமங்கலுக்கு சென்ட்ரு பெசிவிட்டு வெலியெஅ வரமுடியாது.இதுதான் உன்மை.இது உஙலுக்கும் தெரியும்.முடிந்தால் தருமபுரி போயி பாருஙக.கம்யூனிச்டுக்கும் இதே நிலமைதான்.இஙக கமென்ட் பன்னி ஒரு பலனும் இல்ல.அவங்க உங்க பொன்னுங்கல கல்யானம் பன்னுரது இல்ல நீங்க ஏன் அவுங்க பொன்னு மேல ஆசை படுரீங்க.இந்த விசயதுல வன்னியர்,தேவர்,கொங்கு,னாடார் எல்லாம் ஒன்னா ஆயிட்டாங்க.அப்புரம் அலுது பலன் இல்ல

    • ஓ.. வெட்டிடுவானுங்களா ?.. பயமா இருக்கு சுரேசு !! ..

      சரி, எங்க ஏரியாவுக்கு (காசி மேடு) வர சொல்றியா வன்னியன், தேவரு, கொங்கு,நாடாரு, இன்னும் வேற ஏதாச்சும் ———— பசங்க இருந்தாலும் வந்து பேச சொல்லிப் பாரேன் ..

      இப்போ இங்க ப்ரெச்சன இன்னானா…. உள்ள போயி பேசுனா வெளிய வர முடியுமா முடியாதாங்குறது இல்ல..

      அங்க நடந்தது சரியா தப்பான்னு தான் ப்ரெச்சன.. புரியுதா கண்ணு ..
      /////////////அவங்க உங்க பொன்னுங்கல கல்யானம் பன்னுரது இல்ல நீங்க ஏன் அவுங்க பொன்னு மேல ஆசை படுரீங்க/////////////////////////////

      காதலிச்ச அந்த பையன் என்ன உன் பொண்ணு/ தங்கச்சியோட காதலப் பத்தி பேசுனானா ?.. அப்புறம் என்ன —————க்கு அவன் யாரக் காதலிக்கனும் காதலிக்கக் கூடாதுன்னு நீ மட்டும் சொல்லுற நைனா ?

      • சரியா சொன்னீங்க. அந்த பெண்ணுக்கு சம்பந்தம் இல்லாத இதுங்க எல்லாம், அவ என்ன செய்யனும்னு முடிவு பண்ணுதுங்க. இந்த எல்லாம் தூக்கி போட்டு மிதிச்சா சரியாயிடும்.

  22. அருள் கிரீன் அவர்களின் பின்வரும் பதிவில் நான் இட்ட பின்னூட்டம் வெளியிடப்படவில்லை.
    http://arulgreen.blogspot.com/2012/11/UPR-SriLanka-Geneva.html
    ————————–
    அன்புள்ள அருள்,
    சர்வதேச விவகாரங்களில் தங்களை அற்புதமாய் வழிநடத்தும் ராமதாஸ் அவர்கள் உள்ளூரில் சாதிவெறியைக் கட்டவிழ்த்து விடுவது ஏன் என்பதற்கு ஒரு பதிவு வெளியிட்டால் நன்றாக இருக்கும். மேலும் விவரங்களுக்கு,
    https://www.vinavu.com/2012/11/10/dharmapuri-vanniyar-pmk-atrocity/
    வன்னிய சாதிவெறி குறித்தான தங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.. தாங்கள் அந்த வன்னியக் கட்சியின் உறுப்பினர் என்ற வகையில்.

    • ரிஷி..!!

      ஏன் அருள கிள்ளிவிட்டு வினவுக்கு ஓடி வந்துடிங்க…
      இனி பெரும் படையுடன் அவர்கள் வருவார்கள்…அடுத்த பதிவு வரவரைக்கும் இதுல..பொழுதுப்போக்க எதும் உத்தேசமா….?

  23. இங்கு பின்னூட்டம் இட்ட பலர் பார்ப்பனர்களை பாதுகாப்பதிலேயே குறியாக
    உள்ளனர் என்பது மிக தெளிவாக தெரிகிறது.அப்படி பின்னூட்டம் இட்டவர்கள்
    அனைவரும் அம்பிகளே என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை.ஆனால்
    நோய் நாடி,நோய் முதல் நாடி என்பதை நாம் மறக்க கூடாது.இவை அத்தனைக்கும்
    மூல காரணம் பார்ப்பானின் மனு ஸ்மிருதியே.இல்லையென்றால் வன்னியனுக்கு
    தலித் தன்னை விட தாழ்ந்தவன் என்ற எண்ணம் வர வாய்ப்பே இல்லை.
    மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமம் என்று பார்பனர்கள் வாயாலே
    சொல்ல வைக்க வேண்டும்.ஆனால் அப்படி சொன்னாலும் கூட இந்த சாதிவெறி
    நாய்களின் காதுகளில் ஏறுமா என்று தெரியவில்லை
    அந்த அளவுக்கு சாதிவெறி புரையோடி போய் விட்டது.

    • மனு ஸ்மிருதி மூலக்காரணம் என்று தெரிந்தாயிற்று…
      இப்போ தீர்வு என்ன? மனு / பார்ப்பான் என்று சொல்லி சும்மா சும்மா தலித்களை ஒடுக்கவிடலாமா ஆதிக்க சாதி வெறியர்களை?
      இன்றைய தேதியில் பார்ப்பான் ‘அனைவரும் சமம்’ என்றால் எல்லா பயல்களும் கேப்பார்களா?
      கனவு காணாதீர்….
      பார்ப்பனர் மேல் பழி போட்டு தப்பிக்கும் ‘திராவிட’ பிரசாரம் போல் இருக்கிறது உங்கள் பின்னூட்டம்…

  24. நாமெல்லோரும் ஹிந்துக்கள் என்று அனைத்து சாதியினரையும் உசுப்பி விடும்
    ஹிந்து முன்னணி மற்றும் RSS வகையறாக்கள் எங்கே போனார்கள்?
    மேல வளவு,கண்டதேவி ,பரமக்குடி இப்போது தர்மபுரி என்ன ஆனது
    இவர்கள் தேசபக்தி & ஹிந்துபக்தி.செருப்பால் அடிப்பார்கள் வன்னியர்கள்
    தலித்துகளும் வன்னியர்களும் சமம் தானென்றால்.
    குமிழி ஒருநாள் வெடித்தே தீர வேண்டும்

    • ஆர் யெஸ் யெஸ் கதை ஊருக்கே தெரியும்…
      அவர்கள் சமத்துவம் / சாதி எதிர்ப்பு இவற்றிற்க்கெல்லாம் போராடுவதாகக்கூறிகொள்பவர் யார்?
      இவ்வாறு கூறி ஓட்டுப்பொறுக்கியவர் யார்? ‘திராவிட’ அமைப்புகள்…
      இதனால் ‘திராவிட’ அமைப்புகள் என்ன செய்வார்கள் என்பது அவர்களின் உண்மை நிறத்தைக்காட்டும்…
      ஆனால்…ஆர் யெஸ் யெஸ் / மடங்கள் இங்கு எதுவும் செய்யமாட்டார்கள் என்பது ஊருக்கே தெரியும்…அவர்கள் காவி சாயம் வெளுத்து ரொம்பநாளாயிற்று…
      இங்கு ‘திராவிட’ ‘கறுப்பு’ சாயம் வெளுத்துள்ளதை சுட்டிக்காட்டுகின்றோம் அவ்வளவு தான்…

      • நானறிந்தவரை தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்க்கு அவ்வளவு மதிப்பொன்றும் கிடையாது. ஆனால் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் கலாசாரம்தான் மூலை முடுக்கெங்கிலும் ஊடுருவி இருக்கிறது. திராவிட அமைப்பினர் காசுக்காக எதையும் செய்யும் பச்சோந்தித்தனத்தை அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து கொண்டுள்ளனர். எத்தனை எதிரிகளுடனும் மோதிவிடலாம். ஆனால் திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் துரோகிகள் வகையறா. ஓட்டுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள். மனுஸ்மிருதி புண்ணாக்கெல்லாம் காலத்துக்கு ஒவ்வாத கருத்துகள். நடைமுறையில் மனுஸ்மிருதி இல்லை.. திராவிடப் பதர்களின் ஆட்சிதான் ஓங்கியிருக்கிறது.

  25. அங்க நடந்தது சரியா தப்பான்னு தான் ப்ரெச்சன.. புரியுதா கண்ணு ..
    /////////////அவங்க உங்க பொன்னுங்கல கல்யானம் பன்னுரது இல்ல நீங்க ஏன் அவுங்க பொன்னு மேல ஆசை படுரீங்க/////////////////////////////

    who is have love with dalit girls?. guys will never feel love with dalit girls.

    காதலிச்ச அந்த பையன் என்ன உன் பொண்ணு/ தங்கச்சியோட காதலப் பத்தி பேசுனானா ?.. அப்புறம் என்ன —————க்கு அவன் யாரக் காதலிக்கனும் காதலிக்கக் கூடாதுன்னு நீ மட்டும் சொல்லுற நைனா ?

    see if that guy fall love in his own caste girl, then no one will oppose him. if he loves any girls other than his caste, then all those who belong those caste’s has the rights to oppose him as they are same caste like the way you are supporting the dalit caste.

    எங்க ஏரியாவுக்கு (காசி மேடு) வர சொல்றியா வன்னியன், தேவரு, கொங்கு,நாடாரு, இன்னும் வேற ஏதாச்சும் ———— பசங்க இருந்தாலும் வந்து பேச சொல்லிப் பாரேன் ..

    do u have any military or weapons of mass destructions or what? dont even think about dominating other caste’s by force. kasimadu or any other area it will be burnt down like the way it is happening all over tamil nadu

    • இந்த கதையை எந்த புத்தகத்தில் படித்தேன் என்று நினைவில் இல்லை. (குறைந்தது 20 வருடங்களாவது இருக்கும். குமுதம் அல்லது குங்குமமாக இருக்கும் என நினைக்கிறேன்.)
      ஒரு அயல்கிரகவாசியின் முன் நம் பூலோக வாசிகளான ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபட்டார்கள். இதை அந்த அயல்கிரகவாசி வேடிக்கை பார்த்தபடி இருந்தது. உறவின் முடிவில் ஆணும் பெண்ணும் வேகமாக இயங்கினார்கள். உறவு முடிந்ததும் அயல்கிரகவாசி அந்த ஆணையும் பெண்ணையும் பார்த்து, “எப்போது குழந்தை பிறக்கும்?”, என்று கேட்கிறது. அதற்கு நம் பூலோகவாசிகள், “அதற்கு இன்னும் பத்து மாதங்கள் ஆகும்”, என்று பதில் சொன்னார்கள். அதற்கு அயல்கிரகவாசி, “10 மாதம் கழித்து பிறக்கப்போகும் குழந்தைக்காகவா கடைசியில் இத்தனை அவசரமாக், வேகமாக இயங்கினீர்கள்?”, என்று கேட்டது.

      ஆக உயர் ஜாதிக்காரனோ தாழ் ஜாதிக்காரனோ யார், யாரை மணந்தாலும் இப்படித் தான் இருக்க முடியும். (வினோத் இதில் ஏதும் கருத்து வேறுபாடு இருக்காது என நினைக்கிறேன். இருந்தால் சொல்லுங்கள்)

    • பீதிய கிளப்புறியே கண்ணு வினோத்து!…

      /////see if that guy fall love in his own caste girl, then no one will oppose him. if he loves any girls other than his caste, then all those who belong those caste’s has the rights to oppose him as they are same caste like the way you are supporting the dalit caste.////////

      இப்பிடித்தான் கண்ணு பல பேரு காமெடி பண்ணிட்டு திரியுறீங்க … ஒருத்தன் யாரக் காதலிக்கனும் காதலிக்கக் கூடாதுன்னு நீ யாரு வெண்ணை முடிவெடுக்க ?.. அவனவனுக்குத் தெரியும் . நீ தினமும் ரோஸ் கலர் ஜட்டி தான் போடணும்னு நான் சொல்றேன் கண்ணு .. கேப்பியா … டிசைன் டிசைனா வேற வேற கலர்ல வாங்கி போடுவேல .. இப்போ ஒரு ஆதிக்க சாதி பொண்ண ஒரு தலித் பையனுக்கு புடிச்சிருக்குன்னு வை.. அந்த பொண்ணுக்கும் அந்த பையன புடிச்சிருக்குன்னு வை. கல்யாணம் பண்ணிட்டு போகட்டுமே .. உனக்கு என்ன பிரச்சனை ?.. உனக்கு பொண்ணு கெடைக்கும்னு உன் மேல நம்பிக்கை இருக்குல்ல ?.

      ஒரு வேளை ஆதிக்க சாதிக் கார ஆம்பிளைகளுக்கு தனக்கு தன் சொந்த சாதிக்குள்ள பொண்ணு கெடச்சிடாம போயிடுமோன்னு பயம் வந்திடுச்சுன்னு நினைக்கிறென். அது தான் இப்படி சவுண்டு கட்டுறானுங்க போல .. அப்படி எல்லாம் பண்ணக் கூடாது தம்பி. போட்டினா போட்டில நின்னு ஜெயி. அந்த பொண்ணுக்கு உன்ன புடிக்கிற மாதிரி நடந்துக்கோ.. நீ ஆதிக்க சாதி திமிறுல ஊருல மேஞ்சிட்டு திரிஞ்சினா அந்த பொண்ணுக்கு ஒழுக்கமான தலித் பையனைப் பாக்கும் போது காதல் வரத்தான் செய்யும். கல்யாணம் பண்ணத்தான் செய்வாங்க.. நீ இன்னைக்கு கூட்டமா போயி ஊரையே காலி பண்ணிருக்கலாம்.
      ////any other area it will be burnt down like the way it is happening all over tamil nadu ///

      மக்கள் அதிகாரம் அரியணையில் ஏறும் போது ஆதிக்க சாதித் திமிர்த்தனங்கள் எல்லாம் வேரோடு வெட்டி எறியப்படும் அன்று நீங்கள் எரித்த குடிசைகளுக்கும் மாய்த்த உயிர்களுக்கும் கணக்கு தீர்க்கப்படும்.

  26. I read one newspaper,,,, Sub Insepecter of that police station, he relative to boy family….

    He is not take any action for compliant from girl side…… Why don’t put that message….

  27. இன்று உடனடியாக் உள்ள பிரச்சினை ஓட்டுக் கட்சிகள் சாதி வெறியோடு திரட்ட ஆரம்பித்துவிட்டது. அதை தடுக்க வேண்டும். கலப்பு மணங்களையே எதிர்த்து வீழ்த்துவது என்று கொக்கரிக்கிறார்கள். ஆனால் பெரியார் அம்பேத்கார் படங்களை போட்டுக்கொள்கிறார்கள். அதை எதிர்த்துப் போராட வேண்டும். இல்லையென்றால் நாம் இது குறித்து சுதந்திரமாக விவாதிப்பது கூட இயலாமல் போய்விடும். உடனடியாக சாதி அடிப்படையிலான கட்சியினை வழிமொழிப்வர்களை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். ஒன்று திரளவேண்டும். அனைவரும் உழைக்கும் எளிய மக்களை பிளவுப்படுத்துவதை எதிர்த்துப் போராடவேண்டும். இதற்கு என்ன செய்வது என்று உடனடியாக சிந்திப்போம். எரிகிற கொள்ளியைப் பிடுங்க வேண்டும். உடனடியாக தர்மபுரி பகுதியில் அனைவரும் ஒன்று திரண்டு சாதி வெறியினை தூண்டுபவர்களை எதிர்த்து எச்சரிக்கை செய்யவேண்டும். அந்த கட்சிகளை எல்லாம் தடை செய்ய கோர வேண்டும். உடனடியாக திரளுங்கள் அவசர வேண்டுகோள்!

  28. முதல் உயிர் பிறப்பில் சாதி,மதம் இல்லை,
    செய்யும் தொழில் (அ) தனி மனித ஆதிக்கத்தால் உருவானாது.

    வலி என்பது அனைத்து உயிர்களுக்கும் ஒன்றுதான்.

  29. சிவா அதிமுகா கவின்சிலர் வேட்பாளர்
    பச்சியப்பன் திமுக கவுன்சிலர்

  30. தருமபுரி சம்பவத்தில் சம்பந்தபடாத காவல் துறை பொய்யாக வழக்கில் சேர்த்துள்ள பாமக மாவட்ட விவசாய அணி தலைவர் சின்னுசாமியின் தகப்பனார் காளியப்பா கவுண்டர் இன்று மதியம் மணிக்கு காலமானார். கிராமத்தில் குழி வெட்ட இறுதி காரியம் செய்ய கிராமத்தில் ஆண்கள் ஒருவர் கூட இல்லை நான்கு மகன்கள் இருந்தும் வன்னிய தந்தையின் நிலையினை பாரீர்

    • நல்வினை, இது அவர்கள் செய்த காரியத்திற்கான “எதிர்வினை” என்று எடுத்துக் கொள்ளலாமா?

      • ஆம். நான் தான் தவறுதலாக சொல்லிவிட்டேன். அவர்கள் விதைத்ததற்கு சரியான அறுவடையை, பலனை இப்போது பெற்றிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

    • 290 வீடுகளை கொளுத்திவிட்டு உள்ளே போனவர்கள் கொள்ளி போட ஆள் இல்லாததை சொல்லி இரக்கம் தேடுவது நகைப்பாக இருக்கிறது.

      • பொம்பளைங்க எப்படி இறுதிக்காரியம் பண்ணலாம்னு சொல்லி பொணத்த நாறவிடவேன்டியதுதானே…..

  31. Hey Vinod,
    read your comments, really interesting, so do you belong to a particular caste, and being proud to promote it as a great qualification. Can you answer one simple question, how do you know that you belong to a particular community, just because your parents belong to the same caste?!? If so, do you know the grand parents and their caste of your parents, and their ancestral history? How much sure that they belonged to the same caste as you promote some caste as yours?

  32. முதலில் யாருமே இல்ல்லாத ஊருக்குள் சென்று தங்களது மாபெரும் வீரத்தை வெளி படுத்திய வன்னியர் குல ரவுடிகள், .
    பரமக்குடியில் கல் எடுத்து வீசினார்கள் என்ற பொய் குற்ற திற்கே துப்பாகியால் சுட்டு 5 பேரை கொன்ற தமிழ்நாட்டு காவல்துறை .
    தர்மபுரியில் என்ன செய்து கொண்டு இருந்தது . வன்னிய சாதி வெறியர்களுக்கு நாங்கள் சொல்லி கொள்வது ஒன்று மட்டும் தான் ….
    சரியாக முடியாத வரை எதுவும் முடிந்ததாக சரித்திரம் இல்லை …..

  33. தர்மபுரியில்… சாதி வெறியை எதிர்த்து கிளர்ந்தெழுவோம்!

    « காதல் செய்வதும் கலப்பு மணம் புரிவதும் ஜனநாயக உரிமை!

    « தாழ்த்தப்பட்டோர் மீது சாதி வெறியர்கள் தொடுக்கும் வன்கொடுமைகளை முறியடிக்க அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு போராடுவோம்!

    « நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தையும் சாதியத்தையும் ஒழிக்க மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
    10 minutes ago · Like

    தாழ்த்தபட்ட மக்கள் மீது தாக்குதல் தொடுத்து கட்சியை வளர்க்க நினைத்தால் தர்மபுரி மண்ணில் கால் வைக்க முடியாது .தோழர் பாலன் விட்டு சென்ற பணியை நாங்கள் தொடர்கிறோம் ………….சாதி வெறியர்களை விரட்டி அடிப்போம் !அனைத்து சாதி உழைக்கும் மக்களையும் அணி திரட்டி பதிலடி கொடுப்போம் !

  34. ஒரு லிபிய பெண்ணை காதலித்து திருமணம் செய்ய ஒரு நண்பர் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார் அவர் தலித் என்று தெரிந்தால் அவர்கள் ஏதாவது செய்வார்களா?அதாவது நம் நாட்டின் மீது போர் தொடுப்பார்களா?பாதுகாப்புக்கு நாம் என்ன செய்ய வேண்டும் யாராவது தெரியப்படுத்துங்கள்.மிகவும் அவசரம்.

  35. இந்த வினவு அனேகமா வி.சி ஆதரவு என்ரு நினைக்கிரேன்.தருமபுரி சம்பவத்திர்க்கு எதிராக அனைது சாதி மக்கலையும் ஒன்ட்ரு திரட்டுவொம்னு ஒருவர் சொல்லி இருக்கிரார்.சிரிப்பாக உல்லது.ஆசாரி,செட்டியார்,ஐயர்,பில்லை,போன்ட்ர மக்கல் இப்போ என்ன சொல்லுராங்க தெரியுமா.னல்ல காரியம் செஞ்ஜிங்க படையாட்சி எங்கலாலதான் செய்யமுடியில நீங்கலாவது இதுக்கு ஒரு முடிவு கட்டுங்க என்ரு சொல்கிரார்கல்.இது பொய் இல்ல உன்மை.அந்தலவிர்க்கு இருக்கு உங்கலோட ஒலுக்கம்.முதலில் நீ ஒலுக்கத்தை கட்ருக்கொல்லுங்கல்.சமுதாயம் உங்கலை சமமா மதிக்கும்.அதை விட்டுட்டு வன்னியர் பொன்னை கல்யானம் செய்வதால் உங்கல் தரம் உயர்ந்து விடாது.உங்கலுக்கு ஒரு சரித்திரம் சொல்லுரன் கெலுங்க.50 வருடத்திர்க்கு முன்னாடி நாடார் சமுதாயம் எப்படீருந்தது தெரியுமா.அவர்கலை பார்த்தாலே தீட்டு என்ட்ரு சொன்னார்கல்.ஆனால் இன்ட்ரு நிலமை என்ன.உஙலைப்போல் இல்ல அவர்கல் செய்தது.அவர்கல் தங்கல் ஒலுக்கத்தை ,உலைப்பை மட்ரவர்கலுக்கு காட்டினார்கல்.னீங்கலும் முயர்சி பன்னுங்க.

    • சுரேஷ் உண்மையிலேயே உங்களுக்கு சாதி பற்றிருந்தால் இந்த நல்ல காரியத்தில் ஈடுபட்டவர்கள் நாங்கள்தான் என்று வெளிப்படையாக பெயர் முகவரியுடன் அறிவிக்கும் தைரியமிருக்கிறதா…? விழுப்புரம் கண்ணகியின் பெற்றோர் தங்கள் மகள் தற்கொலை செய்தாள் என்று ஏன் புளுக வேண்டும்…எங்கள் சாதிக்காக நாங்கள் சாகடித்தோம் என்று சொல்ல வேண்டியதுதானே…. உங்கள் டாக்டர்ர்ர்ர்ர் ஏன் அம்பேத்கர் படத்தை பயன்படுத்துகிறார் ஏன் படையாட்சியின் சித்தப்பா என்பதாலா…? தைரியமிருப்பின் எங்கள் சாதிக்காரன் மட்டும் ஓட்டு போட்டால்போதும் என்று அறிவிக்கத்தயாரா…..? முதலில் ஒழுங்காக தமிழில் எழுதுங்கள்…உங்கள் எழுத்தும் உங்களைப்போலவே பீ நாற்றம் எடுக்கிறது….

      • நாடாரைப்பற்றி விளெக்கெண்ணை மாதிரி பேசும் சுரேஷ், சிவகாசி கலவரம், தோல் சீலைப்போராட்டம் பற்றி குறைந்தபட்சம் கேள்வியாவது பட்டதுண்டா…? இவ்வளவு வக்கனையாக பேசும் உன் சாதியை திரட்டி நாங்கள் செய்தது சரிதான் என்று வெளிப்படையாக அறிவிக்கச்சொல் பார்க்கலாம்…..பொறுக்கித்திங்க மட்டும்தான் உங்களுக்கு சாதி என்பது வன்னிய சாதி மக்களுக்குத் தெரிய வரும்போது உன்னைப்போன்றவர்க்கெல்லாம் பீ அபிஷேகம்தான்……

  36. இந்த மாதிரி நிரய பேர் வன்னியரை பத்தி திட்டுங்கல்,கெட்ட வார்த்தையுல திட்டுங்க அப்பவாவது ரோசம் வந்து திராவிட கட்சிக்கு கொடி தூக்கரத நிருத்திட்டு,ஒன்னு சேரரானானு பார்ப்பொம்.அதே மாதிரி நீங்கலும் எல்லாம் வி.சி.க வில் சேருங்க.கலைஞருக்கு கால் பிடிக்காதிங்க.இனி திராவிட கட்சிகலுடன் கூட்டனி இல்லை.பெரியார்,அன்னா இவுங்க எல்லாம் பார்ப்பனனை அலித்து முதலியார்,பில்லை,னாயர்,னாயுடு இவர்கலை வாழவைக்க முயர்சி செய்தனர்.அதில் வெட்ரியும் பெட்ரனர்.வன்னியர்-ஆதி திராவிடர்,தேவர்-தேவேந்திரர் ஒட்ருமைக்கோ முன்னேட்ரத்திர்க்கோ ஒன்னுமே செய்யல.மாராக நம்மை பயன்படுதிக்கொன்டனர்.ரமசாமி நாயக்கர்,அன்னாதுரை முதலியார் இந்த ரென்டுபெரும் நம்ம குடிய கெடுதவனுங்க.இந்த நாலு சாதிக்காரனும்தான் கொடி பிடிக்க,போச்டர் ஒட்ட முன்னாடி போவான்.அதனால இனி நீங்கல் தி.மு.க,அ.தி.மு.க,ம.தி.மு.க,தே.மு.தி.க இந்த கட்சிக்கு பின்னால போகாம வி.சி.க வை பலப்படுதுங்க.அப்புரம் ஒரு தேதி வைத்து ஒரு பெரிய மைதானத்துல நீஙலும் ,னாங்கலும் யுத்தம் செய்யலாம்.எங்கலுக்கும் சன்டை பொட்டு ரொம்ப .நால் ஆகுது

    • இங்கே சுரேஷ் என்ற பெயரில் மற்றுமொரு நபர் (என்னுடைய மறுமொழிகள் 6.1.2 மற்றும் 14.2 மட்டுமே) சற்று மரியாதை குறைந்த, பிழை நிறைந்த பின்னூட்டங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார் (அறியாமலா அல்லது உள்நோக்குடனா என்று தெரியவில்லை). மட்டுறுத்துவோர் இதனைக் கவனித்து அடைமொழி சேர்த்தால் நன்றாக இருக்கும்.

      @அரும்பு: உங்கள் மறுமொழிகளில் உள்ள ஆவேசம் நியாயமானது. வினோத் என்ற உயர்குலச்(?) செம்மலுக்கு தேவையில்லாத முக்கியத்துவம் கொடுக்கிறோம் என நினைக்கிறேன். நேர்மையான வாதங்களுக்கு பதில் அளிப்பது மிக முக்கியம். மற்றபடி உளறல்களைக் கண்டுகொள்ளாமல் விடுவதே மேல்.

      சுரேஷ்

  37. I agree to suresh point – if you improve your economic status, automatically social status will improve. Ofcourse, there is no second thought about this ‘brutal’ attack – it should be stopped, but how? believing again in Police, Govt? How long? Try to give them back for other reasons in which they stop you improving your ‘economic’ status.

    • பொருளாதாரம் உயர்ந்தால் எல்லாம் மறைந்து விடும் என்பது நடைமுறையில் நிதர்சனமான உண்மையாகுமா என்பதை அப்படி உயர்ந்த ஒருவர் சொல்வதைக் கேளுங்கள்.

      The untouchable millionaire
      Cash-Rich outcasts still wary of new-found social status

      Agra: As far back as he can remember, people told Hari Kishan Pippal that he was unclean, with a filthiness that had tainted his family for centuries. Teachers forced him to sit apart from other students. Employers sometimes didn’t bother to pay him.

      Pippal is a dalit, a member of the outcast community known as untouchables. Born at the bottom of Hinduism’s complex social ladder, that meant he could not eat with people from higher casts or drink from their wells. He was not supposed to aspire to a life beyond that of his father, an illiterate cobbler. Years later, he still won’t repeat the slurs that people called him.
      Now, though, people call him something else.
      They call him rich.
      Pippal owns a hospital, a shoe factory, a car dealership and a publishing company. He owns six cars. He lives in a maze of linked apartments in a quiet if dusty neighbourhood of high walls and wrought-iron gates.

      In so many ways, Pippal has proven himself a success. He is rich.
      Yet he believes that he remains, very often, a figure of quiet contempt.

      “These people are very bloody clever,” Pippal said of the high-caste businessmen with whom he deals. “When there are profits to be made, then everything (about his caste) is OK.”

      “But in their mind, they’re thinking: ‘He is a dalit.’”.

  38. ”காதல் கசப்பு அல்ல… சாதி வெறுப்பு!”

    தர்மபுரி ரியாக்ஷன்

    FROM JUNIOR VIKATAN

    ஒரு ஜோடியின் காதலைப் பிரிப்பதற்காக மூன்று ஊர்களைக் கொளுத்திய கொடுமை தர்மபுரி மாவட்டத்தில் நடந்தது. ‘காதல் தீயில் கருகிய கிராமங்கள்’ என்ற தலைப்பில் கடந்த இதழில் முழுமையாக எழுதி இருந்தோம். தலித் அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகிய அனைவரது கவனமும் அந்த இடத்தை நோக்கி குவிந்துள்ளது. ‘தர்மபுரி நத்தம் காலனியில் நடந்த வன்முறை, திட்டமிட்டு நடத்தப்பட்ட சாதிய அடக்குமுறை. எந்த சிகிச்சைகளாலும் சீர்செய்ய முடியாத அளவுக்கு, அந்தக் கிராம மக்களின் மனங்களை நசுக்கிப் போட்டுள்ளது வன்முறைக் கும்பல்’ என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘இளம் சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை’ மாநில துணைச்செயலாளர் நந்தன். அவரைச் சந்தித்து நடந்த விஷயங்கள் குறித்துக் கேட்டோம்.

    ”காதல் திருமணம்தான் பிரச்னை என்றால் அது இரண்டு குடும்பங்களுக்கு இடையிலானது. ஒரு பேச்சுக்காக வைத்துக்கொண்டாலும், அந்தக் குடும்பத்தின் மீது மட்டும் கோபத்தைக் காட்டி இருந்தால்கூட ஏதோ நியாயம் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், ஊரையே எரிக்கத் தூண்டியது திட்டமிட்ட சாதிய ஒடுக்குமுறைதான். சம்பவம் நடக்கும்போது ஊருக்குள் வெளியாட்கள், போலீஸ், அரசு அதிகாரிகள் போன்றோர் விரைந்து வந்துவிடக் கூடாது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் வழிநெடுக பெரிய மரங்களை வெட்டிச் சாய்த்தது. மெஷின் மூலம் மரங்களை வெட்டிச் சாய்ப்பது, திட்டமிடாமலும், அதற்கான கருவிகளைத் தயார் நிலையில் வைக்காமலும் சாத்தியமாகாது. அதேபோன்று பேரல் பேரலாக மண்ணெண்ணெய், பெட்ரோல், தின்னர் ஆகிய பொருட்களை இரண்டு நாட்களாகவே சேகரித்து வந்திருக்கிறார்கள். அவற்றைச் சின்னச் சின்ன பாட்டில்களில் அடைத்தும் வைத்துள்ளனர். அந்த பாட்டில்களின் மூடியில் துளைபோட்டு எரிபொருளை பீய்ச்சி அடிக்கும்வகையில் தயார் செய்து இருக்கிறார்கள். ஆவேசத்தின் காரணமாக நடந்த தாக்குதலாக இருந்தால், இவற்றை எல்லாம் எப்படி தயார் செய்திருக்க முடியும்? நிச்சயமாக சாதிய ஒடுக்கு முறையைத் தவிர வேறு எதுவும் இல்லை. மீண்டும், தலித்துகளை அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். மற் றவர்களைப் போல் நாங்களும் வாழ நினைப்பது ஒரு தவறா? இன்று பல ஊர்களில் விவசாயம் திண்டாடுவதன் பின்னணி என்ன தெரியுமா? காலம் காலமாக விவசாயக் கூலிகளாக உழைத்த எங்கள் சமூக ஆட்கள் மாற்றுப் பொருளாதார வாய்ப்புகளைத் தேடிப் போய்விட்டனர். அதனால், ஆட்கள் கிடைக்கவில்லை. சாதி இந்துக்களால் எங்கள் ஆட்களைப் போன்று கடுமையாக உழைக்க முடியாத காரணத்தால்தான், விவசாயம் முடங்கிக் கிடக்கிறது. எங்கள் சமூகத்தினர் புதிய வாய்ப்புகளைத் தேடிப்போனது, பொருளாதாரத்தில் முன்னேறுவது, நல்ல வீடு, வாகனங்கள் வாங் குவதுபோன்ற அனைத்தும் அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. சுமார் 40 ஆண்டு கால உழைப்பில் கட்டிய வீடு, பொருட்களை சேதப்படுத்தி விட்டனர். இத்தனை நாள் சேகரித்த பணம், நகைகளைத் திருடி விட்டனர். பழைய தெம்போடு அந்த மக்கள் எழுந்து நடமாடவே பல மாதங்கள் பிடிக்கும். இந்தச் சூழலில் பழைய பொருளாதார நிறைவோடு நிமிர்ந்து நிற்க இன்னும் ஒரு தலைமுறை போராட வேண்டும். எங்கள் மக்களின் பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் சிதைத்து முடக்குவதே அவர்களின் திட்டம் என்பது தெளிவாகத் தெரிகிறது.”

    ”சாதிய ஒடுக்குமுறை எண்ணம்தான் வன்முறை​யின் பின்னணி என்பதை உறுதியாகச் சொல்​கிறீர்களா?”

    ”உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுவிட்டால் சட்டத்​தின் பிடியில் வலுவாக சிக்க நேரிடும் என்பதைத் தெரிந்துகொண்டு, ஓர் எல்லையை வரையறுத்துக் கொண்டு, இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். ஒருவரின் சாவு ஏற்படுத்திய உணர்வு வேகத்தில் நடக்கும் பெரும் கலவரத்தை ஓர் உயிர்ச் சேதம்கூட இல்லாமல் மிகநேர்த்தியாக நடத்த முடியுமா? மன தளவில் எங்கள் மக்களைக் குன்றிப்போக வைத்து, பய உணர்வை ஏற்படுத்தி, காலம் முழுக்க அதிகாரம் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். இது சாதிய ஒடுக்குமுறைதான்.”

    ”சம்பவத்தின் பின்னணியில் யாரும் செயல்பட்​டதாக நினைக்கிறீர்களா?”

    ”கட்சிப் பாகுபாட்டை கடந்து ‘வன்னியர்’ என்ற ரீதியில் அந்தப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து செய்துள்ளனர். அனைவரையும் வழி நடத்தியது உள்ளூர் பா.ம.க-வினர்தான். இவர்களைக் கடந்து வேறு ஏதேனும் பெரிய சக்திகூட அவர்களின் வெறி யாட்டத்தை ஆசீர்வதித்து அனுப்பி இருக்கலாம். குறிப்பாக, சாதி மறுப்பு திருமணத்துக்கு எதிரான, காடுவெட்டி குருவின் பேச்சு இந்த வன்முறைக்கு இன்னொரு முக்கியக் காரணம்.”

    ”சில தலித் இளைஞர்கள் காதலை கருவியாகப் பயன்படுத்தி பணம் பறித்ததும் இந்த வன்முறைக்கு முக்கியக் காரணம் என்கிறார்களே?”

    ”இது அப்பட்டமான பொய். தலித்கள் அனைத்து சாதியினருக்கும் எதிரானவர்கள் என சித்திரித்து சமூக தளத்தில் நாங்கள் இயங்க முடியாதபடி செய்யப்படும் சதி. சில நேரங்களில் அரசு வேலை வாய்ப்புகளை மனதில் வைத்து சொந்த விருப்பத்தின் பெயரில் கலப்புத் திருமணங்கள் நடக்கின்றன. அதுபோக இயல்பான ஈர்ப்போடு பெரும்பாலான காதல் திருமணங்கள் நடக்கின்றன. காதல் திருமணம் நடக்கும் நேரங்களில், சாதி இந்துப் பெண்களின் பெற்றோர் பணத்தைக் காட்டி காதலை விலை பேசுகிறார்கள். எந்த தலித் இளைஞனும் தன்னை நம்பிவந்த பெண்ணைக் கைவிட்டது இல்லை. பெண் வீட்டில் பணம் பறித்ததும் இல்லை. மாறாக தலித் இளம்பெண்களை சீரழித்துப் பணம் கொடுத்துக் கைகழுவிய இதர சாதி இளைஞர்கள் பற்றிய பல தகவல்கள் என் கையில் இருக்கின்றன”

    ”இவற்றை சரிசெய்ய என்னதான் வழி?”

    ”சாதிகளைக் கடந்து, தமிழன் என்ற உணர்வோடு சமூகத்தில் அனைவரும் இயங்குவது மட்டுமே இதற்குத் தீர்வு. சூதுவாது இல்லாத உண்மையான நல்லிணக்க உணர்வை மீட்டு எடுக்காதவரை எங்கள் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு கிடையாது. அதை சாத்தியமாக்க முடியாது என்றால், பாதுகாப்பு கருதி அரசே ஒவ்வொரு தலித் வீட்டுக்கும் ஆயுதங்களைக் தந்து விடட்டும்.”

    – எஸ்.ராஜாசெல்லம்

    • நிச்சயமாக இது சாதி வெறி தான். காதல் கசப்பு அல்ல..
      அவர்களுக்குத் தேவை சூறையாடுவதற்கு ஒரு பொறி தான். இந்த காதல் நிகழ்வு இல்லையென்றாலும் வேறு வகையில் இந்த வன்முறையை நிறைவேற்றியிருப்பார்கள்.

      The stories spill from India’s Newspapers: “The 14-year-old dalit strangled because he shared his first name with a higher-caste boy”, “the 70-year-old man and his disabled daughter burned alive after a dalit-owned dog barked at higher-caste neighbours”, “the man run over at a gas station because he refused to give up his place in line to a high-caste customer”, etc., etc.,.

  39. நாயுடுக்களில் முதலியார்களில் பிராமணர்களில் யாதவர்களில் எத்தனையோ பெண்களை தலித் இளைஞர்கள் பல ஊர்களில் திருமணம் செய்து சிறப்பான முறையில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்,அதுவும் இரு வீட்டார் சம்மதத்துடன்.திருமணத்திற்கு மட்டும் பெரும்பாலும் வரமாட்டார்கள்.ஆனால் பெண்ணின் விருப்பத்திற்கு மிகவும் சரியான மரியாதை கொடுக்கின்றனர், இது வரலாற்று உண்மை ஆனால் வன்னியர் தேவர் மற்றும் கொங்கு வேளாளர் மட்டுமே இதை ஒரு மானப்ரச்னையாகவும் அவமானமாகவும் எடுத்துக்கொண்டு இது போன்ற காட்டுமிராண்டி செயல்களில் ஈடுபடுகின்றனர்.காரணம் தெரிந்ததே.கொஞ்சம் சமூக பொருளாதார மற்றும் கல்வியில் வளர்ந்திருக்கும் தலித் பகுதிகளுக்கு சென்று பாருங்கள் அவர்கள் கலாசாரம் பிரமிக்க வைக்கும் அதுவே மாற்று சமுதாய பெண்களை ஈர்க்கிறது என்று கருதலாம்.

    • //நாயுடுக்களில் முதலியார்களில் பிராமணர்களில் யாதவர்களில் எத்தனையோ பெண்களை தலித் இளைஞர்கள் பல ஊர்களில் திருமணம் செய்து சிறப்பான முறையில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்//

      எங்கே செவ்வாய் கிரகத்திலேயா..??? இருப்பா நான் பூமியில் இருக்கேன் வந்து பாக்குறேன்.!

      • கிராமத்திலிருந்து கொஞ்சம் வெளியே போய் சிறு மற்றும் பெருநகரங்களுக்கு வந்து பாருங்கள் ரொம்ப நிறைய பார்க்கலாம் நிச்சயம் நீ தமிழகத்தில் இல்லை என்று நினைக்கிறேன்.

        • தியாகு தேவர் சாதியில் சாதிமறுப்பு திருமணம் புரிந்தவர்கள் லிஸ்ட் கூட இருக்கு….. அதுக்கு உன்னைப்போன்றவர்கள் உசிலம்பட்டியைதாண்டி வரவேண்டும்….. என்ன செய்வது எம்.ஜி.ஆர். செத்துட்டார்னா அடிக்க வரும் அறிவாளிகளிடம் என்ன பேசி என்ன பயன்.

          • ஆதிக்க சாதி மனப்பான்மை கொண்டவனுக்கு அடிமைப் புத்தியும் இருக்கும். இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஏனென்றால் சாதியத்தை ஏற்றுக் கொள்வதென்பது பார்ப்பனப் படிநிலையை ஏற்றுக் கொள்வதாகும். தனக்குக் கீழே ஒருத்தன், தனக்கு மேலே ஒருத்தன். ஒரே நேரத்தில் பார்ப்பன அடிமையாகவும், தாழ்த்தப் பட்ட மக்களை ஆதிக்கம் செய்யும் சாதி வெறியர்களாகவுமே இருந்து பழக்கப்பட்டுப் போன தியாகு போன்றவர்களுக்கு சாதி மறுப்புத் திருமணம் பற்றியெல்லாம் எப்படித்தெரியும்?

  40. அட அறிவு ஜீவிங்க்லா நத்தம் மட்டுமல்ல சுற்றி இருக்கும் கிராமங்கலில் போய் பேசுங்க, விசாரிணுங்க, ஆய்வு பன்னுங்க அறிக்கை விடுறது, பேசுறதுல்லாம் அப்புறம் வச்சுக்குவோம்.

    நல்லகன்னு, பெரிய அறிவு ஜீவி, சிதம்பரம் எம் எல் ஏ கம்யூனிஸ்ட் காட்டுமிராண்டி அடிப்படை அறிவு வேனாம் ஒரு பிரச்சினையில் கருத்து, அல்லது ஏதாவது சொல்லனும்னா எல்லாத்தரப்பையும் தீர விசாரிச்சு அலசி மற்றவர்கள் சொல்வத ஒரு மாணவனைப்போல பொறுமையா கேட்டு சொல்லனும்.

    தமிழ்நாட்டில் ஏன் தருமபுரியில் சாதி மாறி காதல் திருமனம் யாரும் செய்யவே இல்லையா எல்லாரையும் எல்லா வீட்டையும் எரிச்சிட்டாங்கலா

    முட்டாள் தனமா பிதற்றாதிங்க

    25 வருடங்களுக்கு முன்னால் நக்சல்பாரிகளின் தாய் வீடாக இருந்த பகுதி நத்தம் கிராமம் இருக்கும் நாயக்கன்கொட்டாய் பகுதி தோழர் பாலன் நினைவு தூன் இருக்கும் இடமும் அங்குதான், சுற்று வட்டாரப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தியதும், அதிகமானோர் நக்சல் தோழர்களாக இருந்தததும் நாயக்கன்கொட்டாய் பகுதிததான், அப்படி இருந்த முற்போக்கான கிராமங்கள், முற்போக்கு வாதிகள் எல்லாம் இருக்கும் இந்த பகுதியில் இன்றைக்கும் காவல் துறையின் தனி கண்கானிப்பில் நத்தம் கிராமத்தில் இருப்போர் ஒரு சிலரை வேவு பார்த்துக்கொண்டிருக்கிறது அனைவருக்கும் தெரியும் அப்படிப்பட்ட பகுதியில் நீங்கள் உளருவதைப்போல திட்டமிட்டு தாக்குதல் எதற்காக நடந்தது

    இப்படி ஒரு தாக்குதல் நடத்த வேண்டிய தேவை என்ன நாகராசன் அப்படி என்ன பெரிய ஜமீனா? அவரும் ஒரு காலத்தில் தோழராக இருந்தவர் என்று கூறப்படும் நிலையில் ஏன்? ஏதற்காக இந்த மோதல்? ( இந்த பிரச்சினையின் நீதிமன்ற விவகாரங்களை கவனிப்பதும், முன்னெடுத்து செல்வதும் இந்திய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் உயர் நீதி மன்ற வழக்குறைஞர்கள்)

    அது மட்டுமல்ல அந்த பகுதியில் பாமக விட அதிமுக, திமுக, மதிமுக, அதிகம் அபப்படி இருக்கும் போது ஏன் இப்படி உங்களுக்கு இந்த கொல வெறி

    சுறுக்கமாக சொல்ல வேண்டுமெனில் இந்த திருமனம் ஒரு பொறி

    அப்படியானல் நிஜமான பொறி என்ன

    இது தமிழகம் முழுவதும் மற்ற சாதி மக்களின் மத்தியில் உள்ள குமுறல்

    இது போன்ற மேதல்கள் நடக்கக்கூடாது என்பதுதான் நாம் அனைவரின் என்னமும் கூட

    என்ன செய்ய வேண்டும்

    சாதி பெயரை சொல்லி அடுத்தவனை மிரட்டுவது பயமுரத்துவது, பொய்ப்புகார் கொடுப்பது

    அடுத்தவன் சொத்தை பிடித்துக்கொள்வது

    காவல் நிலையங்களில் முன்னாள் காவல் இருந்து நான் பைசல் (பிரச்சினையை முடித்து ) செய்து தருகிறேன் என்று அலைவது

    நிலப்பிரச்சினையா நான் வருகிறேன் என்று சம்மன் இல்லாமல் ஆஜராவது,

    சிறுபான்மையாக குடி யிருப்போரை பாகிஸ்தானில் வாழும் இந்துக்களை நடத்துவதைப்போல இவர்களை நடத்துவது

    நிகழ்சி நடக்கும் போது காவல் துறை, அரசுத்துறை அதிகாரிகளை காதில் கேட்க முடியாத வாறு திட்டுதல், சண்டைக்கு இழுக்கறது

    அரசு பணியில் இருந்து கொண்டு சாதி வெறியோடு அனுகுவது மற்ற சாதிக்காரர்களுக்கு எதிரான செயல்பாடுகளில் பகிரங்கமாக ஈடுபடுவது

    ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு மற்ற சாதி மாணவிகளை காதல் செய்ய தூண்டுவது, சொல்லிக் கொடுப்பது

    இன்னும் நிறை சொல்லலாம்

    முடிந்தால் அரியகுளம், சீராம்பட்டி, வாணியம்பாடியான் கொட்டாய், கொனம்பட்டி, இரக்கிரியான் கொட்டாய், பழையூர், காமராஜ் நகர், செங்கல்மேடு,லலிதானூர், புளியம்பட்டி, மக்களிடம் என்னதான்னு கொஞ்சம் கெட்கனுமா வேண்டாமா

    இந்த கிராமங்களில் எல்லாம் வன்னியர் சங்க த்தை தவிர வேறு எதுவுமே இல்லியா

    எதுக்குங்கடா உங்களுக்கு இப்படி ஒரு வெறி வன்னியர் மேல

    • சரவணன்! உங்கள் பதிவில் நிறைய உண்மைகள் ஒழிந்துக்கொண்டிருக்கின்றன…

      ஒரு சீர்திருத்தவாதி தன் பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ பள்ளர்,பறையர்,சக்கீலியருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டியதுதானே..

      இதை கேட்டால் என் மகனோ அல்லது மகளோ விருப்பபட்டால் செய்துக்கொள்ளலாம் ஆனால் நான் வற்புறுத்த இயலாது சீர்திருத்தவாதி சொல்லுவார்…சொல்லிக்கொண்டே நகர்வார்.

      சாதி பேசுபவன் இவந்தான் சாதி வெறி பிடிச்சி பைத்தியமானவனும் இவந்தான்..ஆனா மேட்டுகுடிகளை சாதி வெறியர்கள் என சொல்லிதிரிபவனும் இவந்தான்..

      • தனது வன்னியர் சாதிவெறிக்கு சரவணன் எப்படி எல்லாம் முலாம் பூசிகிறார்…என்ன செய்வது இருந்தும் சாதிவெறி டாலடிக்கிறதே…..

      • ஒரு சீர்திருத்தவாதி தன் பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ பள்ளர்,பறையர்,சக்கீலியருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டியதுதானே../////// அவங்களாம் இவங்கள விட கீழ் சாத்தியம் .

  41. ஒப்பாரி வைக்காதீகள். இங்கு அனைத்து சாதி வெறியையும் எதிர்த்துதான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் தென் மாவட்ட சாதிக்கலவரம் பற்றிய கட்டுரையைப் படிக்க வில்லையோ?
    காடு வெட்டி குரு, கலப்புத் திருமணம் செய்பவர்களையெல்லாம் வெட்டுங்கடா என்று சொல்லவில்லையா? அவர்கள் என்ன சாந்த சொரூபிகளா?

    கொளத்தூர்: வன்னிய சாதி வெறி ! நேரடி ரிப்போர்ட் !!
    https://www.vinavu.com/2010/05/11/kolathur-dalith/

  42. குரு அண்ணன் சொன்னது பேசினது அத நல்லா காது கொடுத்து நல்லா கேளுங்க அது அப்புறம் பேசலாம்

    நத்தம் கிராமத்தில் நடந்தது காதல் திருமனத்தால் மட்டும் தான் காரணமா நீங்கள் யார் யாரை பார்த்தீர்கள், எத்தனை பேரிடம் நேரடியாக விசாரித்தீர்கள்,

    முட்டாள் தனமான எழுத்துக்கள், பேச்சுக்கள் வேண்டாம் வாருங்கள் சம்பந்தப்பட்வர்களிடம் நேரடியாக ஒரு 20 கிராமங்களுக்கு சென்று வாருங்கள்

    அப்புறம் கொட்டுங்கள் உங்கள் பழைய குப்பைகளை

    • சரி சரவணன் நீங்க சொல்லுங்க உங்க நொண்ணன் அப்படி என்ன பேசினார்னு…..நத்தம் கிராமத்தில் நடந்தது காதல் திருமணத்தை காரணமாக வைத்து நடத்தப்பட்ட ஒடுக்குமுறை, இல்லையென்றால் என்னவென்று நீங்கள் சொல்லுங்க, திரைக்கதையை கேட்போம்……

  43. //வன்னிய சாதியைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர், “பெண்ணை கீழ்சாதிக்காரனோடு அனுப்பி வைத்த பொட்டைப் பயல்” என்பது போல கேலி பேசி வெறியேற்றியிருக்கிறார்.//

    அப்படி என்றால், வன்னிய சாதி மேல் சாதியா!! எப்போதிருந்து பா?

  44. எப்ப உங்கல் வீட்டை கொலுத்தனமோ அப்ப இருந்து நாங்க மேல் சாதிதான் பா

  45. Story of Bats!
    Once Animals(FC) and Birds(SC) went on war with each other. When Animals looked strong,
    bats(BC) told the animals since they have tooth they ought to be considered animals and enjoyed the victory and ruled the birds.
    When Birds looked strong bats told the birds since they have wings they ought to be considered birds and enjoyed the victory and ruled the animals.

    I took the above quotes from reservationfraud.blogspot.com

    No matter what, these people who burned the poor peoples houses are eligible for reservation on account of caste discrimination.

  46. தர்மபுரி கலவரத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் சாதி ஒழிப்பு போராளிகளே ,,,தமிழக அரசே ,,,மத்திய அரசே ,,,மனித உரிமை ஆர்வலர்களே …..வரிந்து கட்டி கொண்டு வன்னியர்களுக்கு எதிராக அறிக்கை விட்ட கருணாநிதியே ,,,,தமிழக முதல்வரே உங்களுக்கு ஒரு கலவரத்தை நியாபகம் ஊட்டுகிறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    நான்கு மாதத்திற்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம் தழுதாளி குப்பம் என்ற மீனவ கிராமதில் நடந்த சாதி கலவரம் உங்களுக்கு தெரிந்தும் தெரியாத போல் நடித்தீர்கள் அன்று மட்டும் உங்கள் சாதி ஒழிப்பு கொள்கையை டாஸ்மார்க் கடையில் அடகு வைத்து விட்டிர்களா= ???????இதை ஏன் கேட்கிறேன் என்றால் அன்று கலவரம் நடந்த போது பாதிக்க பட்டது வன்னியர் என்பதால் நீங்கள் கண்டு கொள்ளவே இல்லை !!!அப்பா எங்கே சென்றது உங்கள் சாதி ஒழிப்பு கொள்கை ?????இது கருணாநிதிக்கு தெரியாதா????இப்போது மட்டும் வரிந்து கட்டி கொண்டு வன்னியர்கள் சாதிவெறியர்கள் ,,,அவர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வக்கனையா அறிக்கை விட்ட கருணாவே ,,,அப்போது நீ எங்கே சென்றாய் ,,,,அப்போது உனக்கு அறிக்கை விட முடியவில்லை காரணம் பாதிக்க பட்டவன் வன்னியர் என்பதாலா ???????

    தழுதாளி கிராமத்தில் இருந்து வன்னியர்களை ,மீனவ செட்டியார்கள் விரட்டி நான்கு மாதம் ஆகி விட்டது …..வன்னியர்கள் அங்கு இழந்தது என்வென்று தெர்யுமா 56 அதி நவீன எந்திர படகுகள் அவற்றின் இன்றைய மதிப்பு சுமார் இரண்டு கோடிகள் ..இது மட்டும் அல்லாமல் அவர்களின் 156 வீடுகள் ,,,வீட்டு உபயோக பொருள்கள் ,,,,இவற்றின் மாதிப்பு சுமார் இரண்டு கோடிகள் ……மீன் பிடி வலைகள் சுமார் 40 லட்சங்கள்

    இதை விட பெரிய கொடுமை வன்னியர் மாணவ மாணவிகளின் இந்த ஆண்டு படிப்பை இழந்து விட்டனர் ….இவர்களின் குடும்ப அடையாள அட்டை ,,,போன்ற வற்றை கலவரத்தில் இழந்து நான்கு மாதங்களாக அகதிகளாக திரிந்தனர் வன்னியர்கள் ………………..சாதி நாயம் கேட்கும் சாதி ஒழப்பு போராளிகளே அப்போது எங்கு சென்றிர்கள் ….உங்களின் மனைவிகளின் சேலையில் ஒளிந்து கொண்டு இருந்திர்களா ??

    தற்பொழுது வன்னியர்களை வக்கனையா கைது செய்யும் காவல் துறை எங்கே சென்றது ???????
    தற்போது தர்மபுரி கலவரத்தில் வீடு இழந்தவர்களுக்கு 50000 ரூபாய் பணமும் ..புதிதாக வீடு கட்டி தரப்படும் என்று அறிக்கை வெளி இட்டுள்ள முதல்வர் அவர்கள்
    வன்னியர்கள் பாதிக்க பட்ட போது ஒரு கிள்ளு கீரையை கூட கில்லி போடா வில்லை //////////////பாதிக்க பட்டவன் வன்னியர் என்பதால் !!!!!
    இதை விட கொடுமை என்வென்றால் நன்கு முறை மாவட்ட ஆட்சியர் ,,,,வருவாய் துறை அதிகாரிகள் போன்றோர்களை அந்த கிராமத்திற்கு அழைத்து சென்றார் பா ம க மாநில துணை பொது செயலாளர் பொன் .கங்காதரன் அவர்கள் ////
    அப்போது அவரிடம் sp ,,,கலெக்டர் போன்றவர்கள் என்ன சொன்னார்கள் என்றால் வன்னியர்களும் ,,,செட்டியார்களும் அடித்து கொண்டதால் நாங்கள் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என்று !!!!!!!!நிவாரணம் வழங்க முடியாது என்று இதுதான் நீதியா ??????அப்போது செவி சாய்க்காத தமிழக அரசு தர்மபுரியில் வரிந்து கட்டி கொண்டு வேலை செய்கிறது !!!!!!!!!!!!!!!!!!!!!!
    தலித்துகளுக்கு நீதி வன்னியர்களுக்கு அநீதி!!!!!!!!!!!!!!!!!வெல்லட்டும் தமிழக அரசு வன்னியர் விரோத கொள்கை ……….தர் பொழுதுதான் வன்னியர்கள் அந்த கிராமதில் மீண்டும் குடி அமர்த்த பட்டு உள்ளனர் ///////////////////////////////////////////////////////////////////////////இந்த சம்பவம் தொடர்பாக நிவாரணம் வழங்க கோரி பா ம க உயர் நீதி மன்றதில் வழக்கு தொடர்ந்து உள்ளது …………………………………………………………………………இப்போது தர்மபுரி கலவரத்தில் முனைப்பு காட்டி செயல் படும் தமிழக அரசும் …..அரசியல் கட்சிகளும் எங்கே சென்றது ////////குறிப்பாக சாதி ஒழிப்பு பேசும் அறிவு ஜீவிகள் எங்கே சென்றனர் //////////???????????????????????????????????/ இந்த வன்னியர் விரோத போக்கு தொடர்ந்தாள் தமிழகதில் மீண்டும் வன்னியர் புரட்சி வெடிக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் !!!!!!!!!!!!!!!

    • So .. finally what are you trying to say ?..

      ////இந்த வன்னியர் விரோத போக்கு தொடர்ந்தாள் தமிழகதில் மீண்டும் வன்னியர் புரட்சி வெடிக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் !!!!!!!!!!!!!!!/////

      As usual are you going to cut the trees and put them across the road?

    • ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா… தேர்தல்ல முதல்ல் உங்காளுங்கள டெபாசிட் வாங்க சொல்லுங்க… அப்புறம் பார்க்கலாம்……

  47. அனைத்து ஆதிக்க சாதிகளும் தத்தமது சாதியை பதற்ற நிலையில் வைத்திருக்க விரும்புகின்றன. சாதியின் இறுக்கத்திற்கு எந்த பிரச்சினை கைக்கொடுக்குமோ அதனை வைத்து விளையாடுகின்றனர். சாதிய திருவுருக்களின் விழாக்கள், கலப்பு காதல்கள், சாதியை இழிவுபடுத்தியதாக ஓலம் –இவை குறித்த உணர்வு மிக எளிதாக மக்களிடம் பற்றி எரிகின்றன. தேவர் சாதிவெறி, வன்னியர் சாதிவெறி வரிசையில் ஏதேனும் தமக்கும் வாய்க்காதா என்று நாடார் சாதியினர் ஏங்கி, இப்போது சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் தம்மை இழிவுபடுத்தியுள்ளதாக தொடர் போராட்டங்கள் அறிவுத்துள்ளதை ‘தினத்தந்தியில்’ பார்க்க முடிகிறது. அம்மக்களை பிளவுபடுத்தி வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் ஐ எதிர்க்கவோ, சிறுவணிகத்தில் நுழையும் அந்நிய மூலதனத்தை எதிர்க்கவோ துப்பு கெட்ட கரிக்கோல்ராஜ், சரத்குமார் போன்ற சாதிய அவதாரங்கள் ஒன்றுமில்லாத விஷயங்களுக்காக வேட்டியை மடித்து கட்டுவது அவக்கேடு.

    கடந்த ஞாயிறன்று ‘தி ஹிந்துவில்’ ஒரு செய்தியாளர் தருமபுரியில் நக்சல் இயக்கங்களின் வீழ்ச்சி எப்படி தலித் மக்களை சாதி வெறியர்களிடம் மண்டியிட செய்துள்ளது என்பதை ஒரு பெரியவரின் அனுபவ கண்ணோட்டத்தோடு, தமது கருத்தாகவும் ஒரு குறிப்பை எழுதியுள்ளார். நக்சல் அமைப்புகள் அப்பகுதியில் ஒடுக்கப்பட்ட இந்த கால இடைவெளியில் அங்கு செல்வாக்கு பெற்றவை தலித் இயக்கங்கள். இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள தலித் அறிவு ஜீவிகளும், தலித் இயக்கங்களும் முன்வர வேண்டும். தம்மிடம் உள்ள கம்யூனிச காய்ச்சலுக்கு ஏதேனும் அடிப்படை இருக்கிறதா? என்பதை நேர்மையாக பரிசீலிக்கட்டும்.

    • இரு தரப்பு தலைமைகளும் பொறுக்கி தின்ன இதுதானே வழி…..கம்யூனிசம் பேசி பொறுக்க முடியாதே….

  48. மக்கள் அதிகாரம் அரியணையில் ஏறும் போது ஆதிக்க சாதித் திமிர்த்தனங்கள் எல்லாம் வேரோடு வெட்டி எறியப்படும் அன்று நீங்கள் எரித்த குடிசைகளுக்கும் மாய்த்த உயிர்களுக்கும் கணக்கு தீர்க்கப்படும்

    arumbu,

    please tell me when you will catch power .. any date .. can u give me any approximate date.

    you are telling that when people raise to power, then all caste problem are gone right..see people including those who love caste and religion also. ok. common arumbu wake up

  49. கீழ் சாதி வெறியர்கள் தொடர்ந்து செய்த சூழ்ச்சியால் பல மேல் சாதி பெண்கள் வாழ்க்கை இழந்து நிற்கிறார்கள் . இதை மனசில் வைத்து நடத்த பட்ட தாக்குதலால் பல மேல் சாதி மக்கள் பெருமூச்சி விட்டுரிக்கிரார்கள் இனி எவனும் கலப்பு திருமணம் என்று தங்கள் பெண்களை குறி வைக்க மாட்டான் என்று …. இங்கே நடுநிலை பேசுபவன் யார் எனபது அனைவருக்கும் தெரியும். இந்த தாக்குதல் மன வருத்தத்தை தந்தாலும் , மறுபக்கம் இந்த தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும் .இனி எவனும் அடுத்தவன் வீட்டு பெண்ணை பார்க்க மாட்டான் ” சாதி மறுப்பு திருமணம் என்று “…

    • கார்த்திக் வாதததிற்கு நீங்கள் சொல்வது உண்மையென்று வைத்துக்கொள்வோம் அப்படி பாதிக்கப்பட்டவர்கள் பெயரை வெளியிடுங்கள்….அவ்வாறு உங்கள் வாழ்க்கையை கெடுத்தவர்கள் இன்னார்தான் என்று அறிவித்து அவர்கள்மேல் “உங்கள் கருத்துப்படி தண்டனை கொடுங்கள்”…. அடக்குமுறை செய்ய எல்லா அரசு நிறுவனங்களும் உங்கள் கைகளில் வைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட அப்பாவிகளைப்போல் எப்படி நடிக்க முடிகிறது. உங்கள் சாதிக்குள்ளும் இப்படி ” ஏமாற்றியவர்களை” நிறைய கொளுத்தியுள்ளீர்களோ……இந்த பம்மாத்துக்கு ஆமா நான் வன்னிய சாதி வெறியந்தான் என்ற சுரெஷ் எவ்வளவோ தேவலாம்…..

  50. இது போன்ற வெறியாட்டங்களை ஏன் இந்து பயங்கரவாதம் என்று குறிப்பிடக் கூடாது?

    • மிகவும் சரியே நால்வர்ணத்துக்குள் வராத,இந்து கோயில்களுக்குள் அனுமதிக்கப்படாத பஞ்சமர்களை அவர்கள் அனுமதியின்றி ஹிந்து வளையத்திற்குள் அடைத்து,இதுநாள் வரை அவர்களுக்கு எதிராய் நடக்கும் வன்கொடுமை செயல்களை நியாயமாக இந்து பயங்கரவாதம் என்றுதான் குறிப்பிடவேண்டும்.இதற்க்கு எதிர்வாதமே இருக்கமுடியாது.

  51. அபு,உலக தீவிரவாதத்தின் ஒட்டு மொத்த குத்தகைகாரரே நீங்கல்தான்,எங்க சன்டை நாங்க பாத்துக்குவம்.னீங்க போயி உங்க வேலய பாருங்க

    • என்ன ?.. இந்து மத தீவிரவாதத்திற்கும் மேற்பட்டு பெரிய தீவிரவாதம் உள்ளதா?. கொஞ்சம் சொல்லுங்கோ …

  52. அது ஏன் எப்பொதுமே உங்கள் கூற்றின் படி பெண் தலித் அல்லாத சாதியாகவும் ஆண் தலித் சாதியாகவும் இருப்பது ஏன்? மற்றும் இங்கு வன்னியர்கள் எடுப்பார் கைப்பிள்ளை போல அந்தந்த கட்சியில் பிரிந்திருப்பதினால் தான் இந்த பிரச்சினை. இவர்கள் ஒன்றாக ஒரே கட்சியாக இருந்தால் அப்போது தெரிந்திருக்கும்.

  53. இது வேதனை குரிய நிகழ்ச்சி தான் இனி இவ்வாறு நடை பெறா வாது இருக்க அரசியல் வாதிகள் தங்களை அர்ப்பளித்து கொள்ள வேண்டும்

  54. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய மனுதர்மர் ஒன்றும் முட்டாள் இல்லை…. வேண்டுமானால் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப நட்பில் வேண்டுமானால் ஜாதி பார்க்க வேண்டாம் … ஆனால் திருமணம் என்று வரும்போது நிச்சயம் இனம் சாதி என்பது அவசியமே ஒரு சைவ வேளாளர் வீட்டு பிள்ளைகளோ அல்லது ஒரு பிராமண வீட்டு பிள்ளைகளோ ஒரு தலித்தை மணந்து கொள்வது ஒருகாலும் சகிக்க முடியாத விஷயமே… நேரில் பார்த்தால் தான் இதை சொல்கிறேன்.. vinavu இணைய தளம் தயவு செய்து என் மறுமொழிகளை வெளியிட வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன்.. நன்றி

    • ஆரிய புத்திரரே!

      அப்படி சகிக்க முடியாத அளவுக்கு பிராமண சாதிப் பெண்களும் ஆண்களும் சீல் வடிந்து புழுத்துப் போய் திரிகின்றனரா ?..

      அப்புடி இன்னாத்த நேர்ல பாத்தீங்கோ ?..

    • தலித மக்களின் சேவகம் புடிக்கும், அவர்கள் வீட்டு பெண்களை பெண்டாளுவது சரி ஆனால் கல்யாணம் மட்டும் கசக்கும்….. இப்படி பேசும் நீ முடிவெட்டவும், சாக்கடை அள்ளவும், பொணம் எரிக்கவும் உன் சாதிக்காரனையே வைத்துக்கொள்ள வேண்டியதுதானே அதற்கு மட்டும் நாங்களா? உன்னையெல்லாம்….

    • எப்படி தம்பி வெக்கமில்லாம இப்படியெல்லாம் பதியுறீங்க / பதில் சொல்றீங்க ?..

      சீக்கிறம் ஐயா கிட்ட பெர்முசன் கேட்டுட்டு பதில் எழுதுங்க.

  55. கருப்பன்

    அவர்களின் சேவகம் பிடிக்கும் என்பதற்காக வீட்டுக்குள் அனுமதித்து குத்து விளக்கு ஏற்ற அனுமதிக்க முடியுமா… வேலை முடிந்தவுடன் அவர்களின் கூலியை குடுத்து அனுப்ப வேண்டியது தான்… அதற்காக அவர்களை நடுவீட்டில் விருந்து வைத்து அழகு பார்க்க முடியாது…..

    அரும்பு…..

    இயல்பாகவே தாழ்த்தப்பட்டவர்களிடம் ஒரு அசுயை இருக்க தான் i செய்கிறது .. அதை அவர்களின் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை கூர்ந்து கவனித்தால் தெரியும்… அடிப்படை சுத்தம் நாகரீகம் அவர்களுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை…

    • //இயல்பாகவே தாழ்த்தப்பட்டவர்களிடம் ஒரு அசுயை இருக்க தான் இ செய்கிறது .. // அப்படியா … உயர் சாதியினர் அமெரிக்காவோ, ஐரோப்பாவோ சென்றால் அவர்கள் உங்களை ஆராத்தி எடுத்து வரவேற்று உங்களோடு உட்கார்ந்து உலாவுகிறார்களாமே?

      • அவர்களை பெண்டாளும்போது அசூசையாக தெரியவில்லையா…? உங்கள் ஏரியா கழிவுகள நீங்களே சுத்தம் செய்யுங்கள்…வெக்கமில்லாமல் அவர்கள் சேவகம் பிடிக்கும் என்று எச்சில் ஒழுக சொல்லவதற்கு பதில் …..

    • 1936 ஏப் 1 அன்று ஜெய்ப்பூர் சமஸ்தானத்தில் தலித் மக்களது மணவிழா நடக்கிறது. அதில் நெய் பரிமாறினார்கள் என்பதற்காக எல்லா உணவையும் கொட்டிக் கவிழ்த்து மணவிழாவை நடத்த விடாமல் தடுத்தார்கள் ஆதிக்க சாதிகள் – அம்பேத்கர் தொகுதி 1

  56. ஆரிய புத்திரன் – உங்கள் மன அழுக்கை, வெறுப்பை வெளிப்படுத்தியதற்கு நன்றி.வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்ய வாய்ப்புகள் நிறைந்த கருத்தைச் சொல்லி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள். இந்த ஆதிக்க சாதிவெறி மனோபாவமே கலவரத்திற்கு காரணம் என்பதை வினவு கட்டுரை வாயிலாக உண்மையைச் சொல்லி இருக்கிறது. நீங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்.

  57. தோழர்களே நான் தென் மாவட்டத்தை சேர்ந்த தெலுங்கு பேசும் சமுதயத்தி சேர்ந்த பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவன் நான் சென்னையில் நல்ல வேலையில் இருக்கிறேன். நான் கல்லூரி படிப்பு முடியும் வரை என்னையும் அறியாமல் சாதி பற்றில் மூழ்கியிருந்தேன். நான் காதலித்து கல்யாணம் செய்தது ஒரு அருந்ததியார் இனப்பெண்ணை முதலில் எதிர்ப்பு இருந்தாலும் வீட்டின் சம்மதத்தோடு சென்னையில் சிம்பலாக திருமணம் செய்தேன். என் மனைவியின் நல்ல குணங்களால் என் வீட்டாருக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர்கள் வீட்டுக்கு போகாமல் இருந்த என் அப்பா இப்ப செல்ல ஆரம்பித்து விட்டார். இரு குடும்பங்கள் இணைந்தது. எங்கள் ஊரில் கூட என் சாதியை சேர்ந்தவர்கள் என் மனைவியை அன்போடு நடத்துகிறார்கள். கண்டிப்பாக கலப்பு திருமணத்தை ஆதரியுங்கள் அப்போதுதான் சாதி ஏற்ற தாழ்வுகள் ஒழியும். நல்ல சமுதாயம் மலரும். உயர் சாதி என்று சொல்ல கூடியவர்கள் தான் மனம் திருந்தி கலப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும்.செய்தேன். என் மனைவியின் நல்ல குணங்களால் என் வீட்டாருக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர்கள் வீட்டுக்கு போகாமல் இருந்த என் அப்பா இப்ப செல்ல ஆரம்பித்து விட்டார். இரு குடும்பங்கள் இணைந்தது. எங்கள் ஊரில் கூட என் சாதியை சேர்ந்தவர்கள் என் மனைவியை அன்போடு நடத்துகிறார்கள். கண்டிப்பாக கலப்பு திருமணத்தை ஆதரியுங்கள் அப்போதுதான் சாதி ஏற்ற தாழ்வுகள் ஒழியும். நல்ல சமுதாயம் மலரும். உயர் சாதி என்று சொல்ல கூடியவர்கள் தான் மனம் திருந்தி கலப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும்.செய்தேன். என் மனைவியின் நல்ல குணங்களால் என் வீட்டாருக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர்கள் வீட்டுக்கு போகாமல் இருந்த என் அப்பா இப்ப செல்ல ஆரம்பித்து விட்டார். இரு குடும்பங்கள் இணைந்தது. எங்கள் ஊரில் கூட என் சாதியை சேர்ந்தவர்கள் என் மனைவியை அன்போடு நடத்துகிறார்கள். கண்டிப்பாக கலப்பு திருமணத்தை ஆதரியுங்கள் அப்போதுதான் சாதி ஏற்ற தாழ்வுகள் ஒழியும். நல்ல சமுதாயம் மலரும். உயர் சாதி என்று சொல்ல கூடியவர்கள் தான் மனம் திருந்தி கலப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும்.செய்தேன். என் மனைவியின் நல்ல குணங்களால் என் வீட்டாருக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர்கள் வீட்டுக்கு போகாமல் இருந்த என் அப்பா இப்ப செல்ல ஆரம்பித்து விட்டார். இரு குடும்பங்கள் இணைந்தது. எங்கள் ஊரில் கூட என் சாதியை சேர்ந்தவர்கள் என் மனைவியை அன்போடு நடத்துகிறார்கள். கண்டிப்பாக கலப்பு திருமணத்தை ஆதரியுங்கள் அப்போதுதான் சாதி ஏற்ற தாழ்வுகள் ஒழியும். நல்ல சமுதாயம் மலரும். உயர் சாதி என்று சொல்ல கூடியவர்கள் தான் மனம் திருந்தி கலப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும்.செய்தேன். என் மனைவியின் நல்ல குணங்களால் என் வீட்டாருக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர்கள் வீட்டுக்கு போகாமல் இருந்த என் அப்பா இப்ப செல்ல ஆரம்பித்து விட்டார். இரு குடும்பங்கள் இணைந்தது. எங்கள் ஊரில் கூட என் சாதியை சேர்ந்தவர்கள் என் மனைவியை அன்போடு நடத்துகிறார்கள். கண்டிப்பாக கலப்பு திருமணத்தை ஆதரியுங்கள் அப்போதுதான் சாதி ஏற்ற தாழ்வுகள் ஒழியும். நல்ல சமுதாயம் மலரும். உயர் சாதி என்று சொல்ல கூடியவர்கள் தான் மனம் திருந்தி கலப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும்.செய்தேன். என் மனைவியின் நல்ல குணங்களால் என் வீட்டாருக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர்கள் வீட்டுக்கு போகாமல் இருந்த என் அப்பா இப்ப செல்ல ஆரம்பித்து விட்டார். இரு குடும்பங்கள் இணைந்தது. எங்கள் ஊரில் கூட என் சாதியை சேர்ந்தவர்கள் என் மனைவியை அன்போடு நடத்துகிறார்கள். கண்டிப்பாக கலப்பு திருமணத்தை ஆதரியுங்கள் அப்போதுதான் சாதி ஏற்ற தாழ்வுகள் ஒழியும். நல்ல சமுதாயம் மலரும். உயர் சாதி என்று சொல்ல கூடியவர்கள் தான் மனம் திருந்தி கலப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும்.

  58. ராமதாசை எண்பதுகளில் இருந்து பார்த்து வருகிறேன். முப்பது வருடங்களாக ராமதாசின் கட்சி சாரா சங்க கூட்டங்களை கண்டுள்ளேன். இங்கு PMK மீதும் வன்னியர் மீதும் சுமத்தப்படும் குற்றசாட்டுகளுக்கு பதில் சரியாக சொல்லபடவில்லை. அதனால் நான் களத்தில்
    குற்றசாட்டு ஒன்று: சாதி வைத்து அரசியல் செய்யும் சதிகாரன் ராமதாஸ்
    விளக்கம்: தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் (புதிய கட்சி தே.மு.தி.க உட்பட) சட்டமன்ற வேட்பாளர்களை எப்படி தேர்வு செய்கிறது. நல்லவர் .. ஒழுக்கமானவர் .. பொருள் ஆசை இல்லாதவர் .. என்றா ? இல்லை அனைத்தும் சாதியை பார்த்துதான் . பட்டியலை காண்க ..
    1. வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்கள் – பெரும்பாலும் வன்னியர் , சில இடங்களில் முதலியார் , ரெட்டியார் மற்றும் நாய்டு
    2. கொங்கு மாவட்டங்கள் – பெரும்பாலும் வெள்ளாள கவுண்டர் மற்றும் நாய்டு , சில இடங்களில் முதலியார் மற்றும் வன்னியர்
    3. தெற்கு மாவட்டங்கள் – பெரும்பாலும் முக்குலதார் மற்றும் நாடார்கள், சில இடங்களில் கோனார்கள்

    ஜெ வுக்கு கலைனருக்கு செல்வாக்கு என்றால் ஒரு முக்குலதாரை கொங்கு மாவட்டத்தில் நிறுத்தி வெற்றி காட்டடுமே . சாதியை ஒழிகட்டுமே !.

    எந்த கட்சி அமைச்சரவையில் (காமராசர் மற்றும் எம்.ஜி.ஆர் உட்பட) தலித்து களுக்கு அதிக இடம் கொடுத்து சாதி ஏற்ற தாழ்வை ஒழித்து கட்டியது ? அனைத்து கட்சிகளும் பசுந்தோல் போர்த்தி கொண்டு செய்யும் வேலையை ராமதாஸ் வெளிபடையாக செய்வதால் பிரச்னை ஒன்றும் இல்லை.

    விளக்கம் விரியும்

  59. பதில்லுக்கு என்ன பன்னுனேக. என்ன பன்ன? இந்த மாதிரி நெட், புக் ல போடுக நம் ஜாதி முன்னெரும்!

  60. படிப்பு மட்டுமே மக்கள் அனைவரையும் ஒன்று படுத்தும் எனவே நமது மக்களை நன்றாக படிக்க வைத்தால் இந்த கேடு கேட்ட ஜாதி வெறியர்களிடம் இருந்து நம் திருந்துவர்

Leave a Reply to பசுமை நேசன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க