privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்அரவிந்தன் நீலகண்டனுடன் ஒரு தலித் இளைஞர் - நேருக்கு நேர்

அரவிந்தன் நீலகண்டனுடன் ஒரு தலித் இளைஞர் – நேருக்கு நேர்

-

வினவு அண்ணனுக்கு

வணக்கம்,

என்னோட பெயர் மனோஜ் குமார், நெல்லை மாவட்டம் வள்ளியூர் பக்கத்துல ஒரு கிராமத்த சேந்தவன். மெக்கானிக்கல் டிப்ளமா முடிச்சிட்டு இப்ப சென்னையில தங்கி வேலை தேடறேன்.

இந்த லெட்டரை ஏன் எழுதறேன்னு எனக்கே தெரியல, உங்கள்ட்ட சொல்லனும்னு தோணிச்சி. எழுதுறேன்.

வருசநாடு, கொடியங்குளம், தருமபுரி .. மாதிரி எங்க ஊர்ல பெரிய கலவரங்கள் நடக்கலேன்னாலும், எங்க ஊருல ஜாதி பாகுபாடு உண்டு. எங்க ஊருனு இல்ல,  எங்க மாவட்டமுமே அப்படிதான். தூத்துக்குடியில்  நான் பாலிடெக்னிக் படிக்கும் போது அங்க இருந்த மாணவர்கள் எல்லாருமே ஜாதி செட்டா குரூப் குரூப்பாத் தான் இருப்போம். சினிமா நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கது மாதிரி ராக்கெட் ராஜா, சுபாஷ் பண்ணையார், பசுபதி பாண்டியன் இவங்களுக்கும் ரசிகர்கள் இருக்காங்க. “நாடு பாதி நாடார் பாதி”, “எக்குலமும் வாழனும் முக்குலம் தான் ஆளனும்”னு மாணவர்கள் நிறைய பஞ்ச் டயலாக்கு வெச்சுருக்காங்க. பள்ளிக்கூட சுவர்லயும் பாக்கலாம்.

வன்னியர் சாதி கடை
வன்னியர் சாதிக் கடை

நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேந்தவன். என் தாத்தாவோட பழைய காலம் மாறி இல்லைன்னாலும் நானும் ஜாதி பாகுபாட்டை அனுபவிச்சிருக்கிறேன். பள்ளி, ஊரு, கோவிலு எல்லா இடத்திலும் ஜாதி பாகுபாடு இருக்கிறது. முன்னெல்லாம் எங்க ஊரு பெரிய வீட்டுக்காரங்க எல்லாரையும் அடிப்பாங்களாம். அதை வாங்கிகிட்டு பேசாம அவங்க கிட்ட வேலை பாக்கனுமாம். கோவில் சப்பரம் வரும் தெருவில் செருப்பு போட்டு நடக்க கூடாதாம். இப்பல்லாம் அப்படியில்ல. இருந்தாலும் முழுசா போகலை.

என் வகுப்பு மாணவர்கள் என் கண்ணு முன்னாடியே பறப்பய, சேரி, சக்கிலின்னு அவங்களுக்குள்ள திட்டுறதுக்கு சகசமா பயன்படுத்துவாங்க.

ஜாதின்னு ஒண்ணு இல்லாம இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்னு பல தடவை கற்பனை செஞ்சு பார்த்திருக்கிறேன். கடவுள் ஏன் இப்படி படைச்சாருன்னு தெரியவில்லை. ஜாதியினால் எவ்வளவு பிரச்சனை. தர்மபுரியில் எங்க சமுதாயத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காக எத்தனை பேரு வீடுகள கொளுத்துனாங்க. தினமும் எங்கையாவது ஒரு மூலையில் யாராவது ஒரு தாழ்த்தப்பட்டவர் ஜாதி கொடுமையால பாதிக்கப்பட்டுகொண்டு தான் இருக்கிறார்கள்.

தர்மபுரி பிரச்சனை நடந்த போது எனக்கு பல நாள் தூக்கமே வரவில்லை.  நாம் அங்கு போய் நம்ம மக்களுக்கு எதாவது உதவலாம்னு நினைச்சாலும் எப்படி போவது எங்கு தங்குவது ஒன்றும் தெரியாத்தால் எதையும் செய்ய முடியவில்லை. எங்கள் ஊர் வி சி கட்சிகார்களிடம் கேட்டுபார்த்தேன். தலைவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று கூறினார்கள்.

தர்மபுரியில் கலப்பு திருமணம் செஞ்சுவச்சதப் பத்தின உங்க கட்டுரைய பாத்தேன். ரொம்ப சந்தோசமாக இருந்தது. நீங்க செய்தது மிகப்பெரிய பணி. எந்த ஊருல கலப்பு திருமணம் செய்ஞ்சால் கொலை செய்வேன்னு சொன்னார்களோ அந்த ஊரிலேயே கலப்பு திருமணம் செய்துவைத்திருக்கிறீர்கள். மனம் நிறைந்து உங்களை  வாழ்த்துகிறேன்.

நித்தியானந்தா 2009 கண்காட்சியில்
2009-ம ஆண்டு முதல் இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சியின் துவக்க விழாவில் கர்ம யோகி நித்தியானந்தா

இதே சமயத்தில் உங்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். நீங்க இந்து மதத்தை எதிர்த்து  எழுதும் போது பலமுறை திட்டியிருக்கிறேன். சில கமெண்டுகளும் கோபத்துல போட்டுள்ளேன். நான் படிச்சது இந்து பள்ளிகூடம். எனக்கு சாமி நம்பிக்கையும், தேசபக்தியும் அதிகம். அந்த பள்ளிகூடத்துல ஜாதி வித்தியாசம் இல்லாம எல்லாரும் பாரதமாதா புதல்வர்கள்ன்னு சொல்லுவாங்க அது எனக்கு பிடிக்கும்.  அதனால, ஆர்.எஸ்.எஸ் மாதிரியான இந்து இயக்கங்கள் தான் நம் நாட்டிற்கு தேவைன்னு நினைச்சேன். சென்னை வந்ததுக்கு பின்னாடிதான் உங்க தளத்தை படிக்க ஆரம்பிச்சேன். உங்க கட்டுரைங்கள்ள இந்து மதத்த திட்டுற கட்டுரைகள் எனக்கு பிடிக்காது. சாதிப் பிரச்சினை சம்பந்தமா எங்க மக்கள ஆதரிச்சு நீங்க எழுதுறது எனக்கு பிடிக்கும்.

இப்போது வேலை தேடி சென்னை வந்து,  எங்க ஊரு நண்பர்கள் கூட தங்கி இருக்கேன். சென்னை வந்த பிறகுதான் பல விசயங்கள் தெரிய வருது. ஊர் அண்ணன்கள் சிலர் அவங்க வீட்டுக்கு கூட தெரியாம  புத்த மதத்துக்கு மாறியிருக்காங்க. அவங்க நிறைய சொல்லுவாங்க. அம்பேத்கர் இந்து மதம் மோசம்னு சொன்னதா சொல்லுவாங்க. அவங்க தான் உங்க வெப்சைட்டை குடுத்து படிக்க சொன்னாங்க.

நான் அவுங்க கிட்ட விவேகானந்தர் சாதி இல்லைனு சொல்லியிருக்கார் என்று பேசுவேன். இந்திய வல்லரசா வரணுமுனா மோடி தான் பிரதமரா வரணும்னு வாதாடுவேன்.

இருந்தாலும், அவங்க கேக்குற கேள்விங்களுக்கும் உங்க சைட்ல நீங்க எழுதற வாதங்களுக்கும் என்னால பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் நமக்குத்தான் விசயம் தெரியலியே தவிர, நிச்சயமா இதுக்கெல்லாம் சரியான பதில் இருக்கும்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு.

போன வாரம் திருவான்மியூரில இந்து ஆன்மீக சேவை கண்காட்சி  ஒன்று நடந்தது. உங்களுக்கு பதிலடி கொடுக்க ஏதும் புக் கிடைக்குமான்னுதான் கண்காட்சியை பார்க்கவே நான் போனேன்.  அங்க  நீங்களும், ரூம் நண்பர்களும் சொல்றதுதான் உண்மைங்கிறத நேரிலேயே பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.

ரெட்டி இளைஞர் சங்கக் கடை
ரெட்டி இளைஞர் சங்கக் கடை

கண்காட்சிக்கு உள்ளே போனால் 2வது ஸ்டாலே வீர வன்னியர் ஸ்டால் என்று போட்டிருந்தார்கள். வன்னியர் தான் அரச பரம்பரை ன்னு சொல்லி அது சம்பந்தமான் புத்தகங்கள், வீடியொ எல்லாம் வைத்திருந்தார்கள். நாங்கள் தான் அரச பரம்பரை என்று அவங்க சொல்லும் போதே மத்தவங்க எல்லாம் அவங்களுக்கு அடிமையாக இருந்தாங்கன்னு தானே சொல்ல வாராங்க. அதை பாத்ததும் எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. நாம எல்லாரும் இந்துக்கள் என்று உண்மையில் நினைத்திருந்தால் இப்படி ஒரு ஸ்டாலை போட்டிருப்பார்களா? தர்மபுரியில் இப்படி ஒரு மோசமான சம்பவம் நடந்து முடிந்து ஜாதி வெறி பரவிவரும் நிலையில் இந்து இயக்கம் நடத்தும் ஒரு கண்காட்சியில் சாதிவெறியை எப்படி அனுமதிச்சாங்கன்னு கோவம் வந்துச்சு.

கொஞ்சம் தள்ளி போனால் அகமுடையார் ஸ்டால், விஸ்வகர்மா ஸ்டாலுனு ஜாதிக்கு ஒரு ஸ்டால் வைத்திருந்தார்கள்.  ஜாதியும் இந்து மதமும் வேறு வேறு கிடையாது. ஜாதிதான் இந்துமதம் என்று ரூம் நண்பர் அடிக்கடி சொல்வார். அப்படி கிடையாது, இந்து மதத்தில் ஜாதி இல்லை. இடையில் வந்தவர்கள் தான் உருவாக்கி இருக்காங்க. இந்து இயக்கங்களும் ஜாதி இல்லைன்னுதான் பேசுறாங்கன்னு அவங்களோட சண்டைபோட்டிருக்கிறேன். இப்படி அது எல்லாம் பொய்யாகும்னு நான் நினைக்கவேயில்லை.

இந்து இயக்கங்கள் ஜாதியை  ஆதரிக்கிறத நேரிலேயே பார்த்த பிறகு  நான் இந்து இயக்ககங்களுக்கு ஆதரவா இருந்ததை நெனச்சி அவமானமா இருந்தது.

கண்காட்சி ஸ்டால்களை சில பெண்கள் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தங்க. அவங்ககிட்ட பேசிப் பார்த்தேன். அவங்களும் எல்லாரும் தாழ்த்தப்பட்ட சாதிதான்னு தெரிஞ்சது. கண்காட்சியின் மற்ற வேலைகளை இந்து இயக்க தொண்டர்கள் செய்து கொண்டிருந்தாங்க. ஆனால் சுத்தம் செய்யும் வேலைக்கு மட்டும் தாழ்த்தப்பட்ட மக்களை பயன்படுத்துறாங்கன்னு பாத்தபோது ஆத்திரமா வந்தது.

அரவிந்தன் நீலகண்டன்
அம்பேத்கர் படம் வைத்த கடையில் அரவிந்தன் நீலகண்டன்

நான் உங்களையும், ரூம் நண்பர்களையும் மூக்குடைக்க வேண்டும் என்றுதான் கண்காட்சிக்கு போனேன். ஆனால் நானே மூக்குடைபட்டு போனேன்.

அப்போ எந்த ஜாதியின் பேரும் இல்லாமல் அம்பேத்கர் படம் வைத்திருந்த ஒரு ஸ்டாலைப் பார்த்தேன்.  மனதுக்கு ஆறுதலா இருந்தது. நான் மூக்குடைபட்டதை யாரிடமும் கூறக்கூடாது என்று தான் கோவமாக நினைத்தேன். ஆனால் அங்கிருந்த அம்பேத்கர் படங்களும், ஸ்டால் நிர்வாகி அரவிந்தன் நீலகண்டன் என்பவர் பழகிய விதம் காரணமாக, என்னையறியாமல் அவரிடம் என் ஆதங்கத்தை கொட்டி பேசினேன். நாமெல்லாம் இந்துக்களாக, இந்தியர்களாக இருக்கும் போது சாதி பெருமை பேசுபவர்களை அழைத்து ஸ்டால் போட்டிருக்காங்க, சுத்தம் செய்யும் பணிக்கு இந்து இயக்க வாலண்டியர்கள் இல்லையா? என்று கேட்டேன்.  அதற்கு அவர் கூறிய பதில் தான் எனக்கு இன்னும் அதிர்ச்சியளித்தது. அவருடைய நிலைமை என்னைவிட பரிதாபமாக இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன்.

அவர் அம்பேத்கர் படத்தை ஸ்டாலில் போடுவதாக சொன்னாராம். கண்காட்சி நடத்துறவங்க  வேணுமினே ஒதுக்குபுறமா, ஒரு மறைவான இடத்தை கொடுத்து இங்கு போடுங்கள் என்று சொல்லிவிட்டார்களாம்.  அவரது மற்றொரு ஸ்டாலுக்கு பான்பராக் பாக்கெட் சைசில் சின்ன இடம்தான் தருவோம்னு சொல்லி இடம் ஒதுக்கிட்டாங்கன்னார். சென்னையை சேர்ந்த பிராமணர்கள் தான் இந்தக் கண்காட்சிய நடத்துறாங்கன்னு அவர் சொன்னார். பாத்தீங்கன்னா அவரும் சாதாரண ஆளு கிடையாது, பல புத்தகங்களை எழுதுன எழுத்தாளர்.  (எனக்கும் சில புத்தகங்களை அன்பளிப்பா கொடுத்தார்). அவருக்கே இந்த நிலைன்னா வேற எதைப்பத்தி பேசி என்ன ஆகப் போகுது?

அந்த ஸ்டாலில் அம்பேத்கர் பொன்மொழிகளை எழுதி வைத்திருந்தார்கள்.   “ சம்ஸ்கிருதத்தை தேசிய மொழியாக்கணும். பாகிஸ்தான் முசூலீம்கள் கிட்ட இருந்து இந்துக்களை பாதுகாக்க மகர் ரெஜிமென்டை ஏற்படுத்தணும்” இது மாதிரி நான் இதுவரைக்கும் கேள்விப்படாத அம்பேத்கர் பொன்மொழிகளை காட்சிக்கு வைத்திருந்தார்கள். இதெல்லாம் சொன்னால் ரூம் நண்பர்கள் ஒத்துக்கமாட்டார்களேன்னு அவரிடம் “இது அம்பேத்கரின் எழுத்துக்களில் எந்த தொகுதியில் வருது” என்று கேட்டேன். அதுக்கு அவர் “இந்த பொன்மொழிகள் தொகுதியில் இல்லை, அம்பேத்கார் பத்தி வேறு எழுத்தாளர் எழுதினதில் இருந்து போட்டிருக்கோம்”னு சொன்னார். இந்த புக்கை வைத்துதான் அம்பேத்கர் தொகுதிகளை வெளியிட்டிருக்காங்கன்னும் சொன்னார். அதனால அம்பேத்கர் தொகுதியிலும் இது இருக்கும் ஆனா எந்த தொகுதினுதான் ஞாபகமில்லைன்னு சொன்னார். ஒரு சின்ன புக்குல இருந்து இவ்வளவு தொகுதிங்க எப்படி வந்திச்சின்னு எனக்கு ஆச்சரியம். அந்த சாரோ எந்த தொகுதின்னு இமெயிலில் அனுப்புறேன்னு சொன்னார். மெயில் வந்தவுடன் உங்களுக்கு வெவரத்தை அனுப்புகிறேன்.

யாதவ மகாசபை
“வீரமணி யாதவ சாதிக்காரர் ” என்று சொல்லும் அரவிந்தன் நீலகண்டனின் ஆன்மீக கண்காட்சியில் உள்ள ஒரு ‘இந்து’ ஸ்டால்!

அப்புறம் அவருகிட்ட ஜாதி சங்க ஸ்டால் பத்தி கேட்டேன். தப்புதான்னு வருத்தப்பட்டாரு. கையோட வெங்கடேசன்னு ஒரு ஆர்.எஸ்.எஸ் சாருகிட்ட அழைச்சுகிட்டுப் போனார். இவரு கேக்குற கேள்விங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் என்ன பதில் சொல்றீங்கன்னு அவர் கிட்டே கேட்டார்.  அவருகிட்டயும் “நாம இந்துவா இருக்கும்போது இப்பிடி ஜாதி சங்கங்களை அனுமதிக்கிறது தப்புதானே, கூட்டி பெருக்கும் வேலைங்களுக்கு மட்டும் உங்ககிட்ட வாலன்டியருங்க இல்லையா”ன்னு கேட்டேன்.

அவரோ “நாங்கள் தேவேந்திர குல வேளாலர்களுக்கும் இடம் கொடுத்திருக்கிறோமேன்னு சொல்லி இன்னொரு குண்ட தூக்கி போட்டார். ஜாதி சங்கங்களை அனுமதிக்கிறது தப்புன்னு சொல்வாருன்னு பாத்தா, “வேணும்னா பறையன்னு சொல்லி நீயும் ஒரு ஸ்டால் போட்டுக்கோ” ன்னு சொல்றாமாரி இருந்தது அவருடைய பதில்.

இதை தவறுன்னு இவங்க கருதலயேன்னு வருத்தமாவும், கோபமாவும் இருந்தது. இவ்வளவு நாள் என்ன இந்துவா நினைச்சதுக்கு இது ரொம்பவே அதிர்ச்சியா இருந்தது. நீ இந்து இல்லை பறையன், அதை ஏத்துக் கொண்டு நீயும் ஸ்டால் போட்டுக் கொள்ளலாம்ங்கிற மாறி இருந்துச்சு அவரது பதில். கூனி குறுகி போனேன். அடுத்து என்ன பேசுவதுன்னு எனக்கு தெரியல. நாம் இத்தனை நாள் நண்பர்களாக நினைச்சவங்க நம்மை எட்டி உதைப்பது போல இருந்தது.

இல்லை சார், நாம இந்துக்களா இருக்கும் போது ஏன் ஜாதி பெயரை பயன்படுத்தனும்? நீங்க அம்பேத்கர் பெயரை போட்டு பறையருன்னு போட்டாலும் அது தப்புதானேன்னு வாதிட்டேன். இதுக்கு வெங்கடேசன் சாரு ஒன்னும் பதில் சொல்லல. நான் தெளிவா பேசுறதா அரவிந்தன் சார்தான் சொன்னார். கூட்டுறதுக்கு கான்ட்ராக்டு விட்டதால ஒன்னும் செய்ய முடியலேன்னு வெங்கடேசன் சாரு சொன்னாரு. எனக்கு அந்த பதிலிலும் திருப்தி இல்லை.

ரூம் நண்பர்களும் வினவும் சொல்றது மாதிரி  இந்து மதமே இப்படித்தானா? இல்லை இந்து இயக்கங்கள் தான்  இப்படியா? எனக்குள்ள பல கேள்விகள் தோணிச்சு.

மாட்டிறைச்சி
தலித்துகளின் மாட்டிறைச்சிக்கு அரவிந்தன் நீலகண்டனின் ஆசீர்வாதங்கள்

அரவிந்தன் சாரை தவிர அங்கு எனக்கு ஆறுதலா யாரும் இல்லை. ரூம் நண்பர்கள் புத்த மதத்திற்கு மாறுமாறு கூறியது சரின்னுதான் பட்டது. முதல்ல அரவிந்தன் சாரை பாத்த போது அம்பேத்கர் மதம் மாறியது பத்தி கேட்டேன். அதுக்கு அவரு அம்பேத்கர் வேறு அந்நிய மதத்துக்கு மாறலை. புத்தமத மாற்றம் என்பது ஒரு ரூமிலிருது இன்னொரு ரூமுக்கு மாறுவது. ஆனா வீடு ஒன்னுதான். இப்படித்தான் அம்பேத்கர் கூட சொல்லியிருக்காருனு சொன்னார்.

அது இப்ப ஞாபகத்துக்கு வந்து அவருகிட்டயே கேட்டேன். “இப்ப நீங்க புத்த மதத்துக்கு மாறுவது சரியான தீர்வல்ல”ன்னு அவர் கூறினார். ஏன் இப்ப மாறி பேசுறாருன்னு எனக்கு குழப்பம் வந்தது.

உடனே சார் ஒரு பேப்பரை எடுத்து ஒரு மேப் வரைஞ்சு காமிச்சார். அதுல கட்டம் கட்டமா போட்டு இது எஸ்சி அதுக்கு மேல எம்பிசி பிறகு பிசி, எப்சின்னு  போட்டு சைடுல முஸ்லீம்னு போட்டு இவங்க எல்லாரும் தாழ்த்தப்பட்டவர்கள தாக்குறாங்கன்னு சொன்னாரு. தாழ்த்தப்பட்ட மக்களை தாக்குறதுக்கு ஜாதி இந்துக்களை தூண்டுறது மேல இருக்குற பிராமணர்கள் மாதிரியான எஃப்சின்னு விளக்குனார். இதை வாய்ப்பா பயன்படுத்தி எஸ்சி மக்களுக்கு எதிரா முஸ்லீம்கள் செயல்படுறாங்கன்னும் சொன்னார்.

அதுக்கு நான் சொன்னேன், சார், முஸ்லீமகள் நம்ம மக்களுக்கு எதிராக  இருக்கிறதா தெரியல. முஸ்லீம்கள் நம்மள எங்கயும் அடிக்கல. ஜாதி இந்துக்கள்னு சொல்றவங்க தான் தர்மபுரி மாறி பல இடங்கள்ள அடிக்கிறாங்க. முஸ்லிம் மதத்துக்கு மாறிய என் நண்பனைப் பற்றி சொல்லி வேணுண்ணா அவன்கிட்ட பேசுறீங்களான்னு கேட்டேன். அவன அவங்க மதத்துக்காரங்க சமமா மதிக்கிறாங்க. மசூதியில எல்லா இடத்துக்கும் அவன் போக முடியுது.

அதே நேரத்தில நான் காதலிக்கிற பி.சி சாதி பெண்ணை கலியாணம் செய்வதில் எனக்கு நிறைய கஷ்டங்கள் இருப்பதை சொல்லி முசுலீம் ஆட்களிடம் அப்படி இல்லையேன்னு கேட்டேன்.

இத அமைதியா கேட்ட அரவிந்தன் சார், டெல்லி ஜும்மா பள்ளிவாசலிலும், மெக்கா, மெதினாவிலயும் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவங்க தான் இமாம் ஆக முடியும். அங்கேயும் சாதி இருக்குன்னு விளக்கினார்.

பா.ராகவன்
சுசீந்திரம் ஸ்தாணுமாலையன் கோவில் தேர் வடக்கயிறு பூணூலை அணிந்த அசல் ஹிந்து பா ராகவன், அரவிந்தன் நீலகண்டனின் ஆழி பெரிது நூலை வெளியிடுகிறார்.

நான் சொன்னேன்,  “நான் சென்னையத் தாண்டி டெல்லி, மெக்காவுக்கெல்லாம் போறதுக்கு சான்சே இல்ல. அந்த இடங்கள்ள எப்படி இருந்தாலும் எனக்கு கவலையில்ல. எங்க ஊரு பள்ளிவாசல்ல என்ன மதிச்சா அது போதும். எங்க ஊரு பக்கத்துல இருக்கும் ஆத்தங்கரை தர்கா பள்ளிவாசலுக்கு யாரு போனாலும் நல்லாவே மதிப்பாங்க. அந்த மதிப்பு வள்ளியூர் முருகன் கோவில்ல கூட கெடைக்காது சார்” ன்னு சொன்னேன்.

அதே நேரத்தில, நம்ம பண்பாட்ட விட்டு கொடுக்காம நான் புத்த மதத்துக்குத்தான் மாறப் போறேன்னு சொன்னேன். அதுக்கு அரவிந்தன் சாரு, “தாழ்த்தப்பட்ட மக்கள் புத்த மதத்துக்கு மாறி என்ன பயன்? இடைநிலை ஜாதிங்களும் உங்களோட மாறுனாத்தான் ஜாதிப்பாகுபாடு இருக்காது. அப்படி மாறதா இருந்தாலும் காசுக்கு ஆசைப்பட்டு முஸ்லீம், கிறிஸ்டீனுக்குத்தான் மாறுவாங்க. புத்தமதத்துக்கு யாரும் மாறமாட்டாங்க”ன்னு பேசுனார்.

இதக் கேட்டதும் எனக்கு சுரீர்னு கோவம் வந்துச்சு. சில வருசங்களுக்கு முன்னடி என்னோட சித்தப்பா கிரிஸ்டியனாக மாறினார். அவரு பேரு முதல்ல ஈஸ்வரன் இப்போது யோவானாகியிருக்கார். சார் நீங்க சொல்றது எங்களை கொச்சைப்படுத்துற மாறி இருக்கிறது என்று சொல்லி என் சித்தப்பா கதையை சொன்னேன். அவருதான் எங்கள் குடும்பத்துல முதல்ல படிச்சு ஆளானவரு. அரசு வேலையில் இருக்கிறார். நாங்க எவ்வளவு தான் சொல்லியும் எங்க ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்க மாட்டேன் என்று பிடிவாதமா இருக்காரு. ஏன்னா அவர் வந்தா இங்க யாரும் மதிக்க மாட்டார்கள். அவர் சொல்றது உண்மைதான். ஒரு பியூன் கூட மதிக்கமாட்டார். இதுக்குத்தான் சாதியை மறைச்சு  வெளியூருல வேலைசெய்கிறார்னு சொன்னேன்.  மேற்கொண்டு அரவிந்தன் சாரு ஒன்னும் சொல்லல.

அதற்கப்பறம் பெரியார் பத்தி பேசுனோம்.

அம்பேத்கர் படத்தை நீங்க போட்டிருக்கீங்க. உண்மைக்குமே சந்தோசமா இருக்கு. ஆனா அம்பேத்கரை நம்மளவிட பெரியார் இயக்கங்களும், வினவு தளம், கீற்றுல தான் அதிகமாக போடுறாங்கன்னு கேட்டேன்.

அதெல்லாம் ஏமாத்துற வேலை. ஈ.வெ.ரா -வை பெரியார்னு அழைக்கிறதும், பாபாசாகேப் அம்பேத்கரை வெறுமனே அம்பேத்கர்னு அழைப்பதும் திராவிட இயக்கங்கள் திட்டமிட்டுத்தான் செய்யுராங்க. நம்மளயும் ஏமாத்துராங்க. அதனால் ஈ.வெ,ரா ன்னு மட்டும் சொல்லுங்க என்றார். கீழ்வெண்மணியில் நம்மாள்களை கொன்ற போது பெரியார் அதை கண்டிக்கல தெரியுமான்னு சொல்லி ஈ.வெ.ரா தாழ்த்தப்பட்டவங்களுக்கு எதிரானவர்னு பேசினார்.

சாதிகளின் சங்கமம்
சாதிகளின் சங்கமம் இந்து ஆன்மீகம்

“பெரியாரையும் அம்பேத்கரையும் இணைச்சி பேசுறதே முதலில் தப்பு. நீங்க அம்பேத்கரையும், காஞ்சி சங்கராச்சாரியாரையும் சேத்து பேச முடியுமா? சங்கராச்சாரியார் ஒரு முட்டாள். அம்பேத்கர்தான் அறிவாளி. பல பட்டங்கள் பெற்றவர். இவங்களை இணை வெச்சி பேசமுடியுமா? அதுமாறி தான் ஈ.வெ.ராவும் அம்பேத்கரும். இவங்க ரெண்டுபேரையும் இணைச்சி பேசுறதே தப்பு”

“வீரமணி யாதவ சாதிக்காரர் பெரியார் திடலில் யாதவர்களுக்கு தான் முன்னுரிமை தெரியுமா? வினவு ஆசிரியர்குழுவில் எத்தனை தலித்துங்க இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? அதை நடத்தற மாதையன் ஒரு ஐயர்னு உங்களுக்குத் தெரியுமா”ன்னு கேட்டார்.

“எனக்கு அதெல்லாம் தெரியாது சார். ஆனால் நம்மாள்களை போல அவுங்க ஜாதி பெருமையை வெளிப்படையா இங்க மாறி ஸ்டால் போட்டு சொல்லலியே”ன்னு சொன்னேன்.

“நாம என்ன தான் தி.க வை திட்டினாலும் கோவில் நுழைவு, அனைத்து சாதி அர்ச்சகர் என எல்லாத்துக்கும் திராவிட கட்சிங்கதான் முன்னணியில் இருக்கிறார்கள். கருணாநிதி தான் சட்டம் கொண்டுவந்தாரு”ன்னு சொன்னேன். உடனே அரவிந்தன் சார் குறுக்க பேசினார்.

“நம் வரலாறே நமக்கு தெரியவில்லை. இவங்கதான் எல்லாம் செஞ்சாங்கன்னா எம்.சி.ராஜா யாரு?, சகஜானந்தா யாரு? குஜராத்துல மோடிஜி அமைதியா பெரிய கோவிலுங்கள்ள கூட எல்லா ஜாதிக்காரங்களையும் அர்ச்சகரராக்கிட்டார் தெரியுமா” ன்னார்.

சகஜானந்தா யார்னு எனக்கு தெரியல. அவரிடம் கேட்டேன். தில்லை சிதம்பரம் கோவிலில் மடம் கட்டி அனைவருக்கும் கல்வி கொடுத்தவராம் அவரு தில்லைன்னு சொன்னதும் அங்கு கூட மனித உரிமை மையம்தான் கோவிலுக்குள்ள தமிழுக்காக போராடுனாங்கன்னு சொன்னேன்.

பிறகு மீண்டும் மத மாறுவது பத்தி பேசினோம்.

“நம் முன்னோர்கள் கஷ்டப்பட்டு கோவிலை கட்டினார்கள். அதை எளிதாக அடுத்தவர்கள் கையில் விட்டுவிட்டு போகலாமா. உள்ளிருந்து கொண்டே போராட வேண்டும். இந்த கண்காட்சியில் அனைவரும் பாத்து பயப்படும் ஸ்டால் எது தெரியுமா இந்த ஸ்டால் தான். ஏன்னா நான் சாதியில்லைன்னு சொல்கிறேன். அதுவும் அவங்க விரும்பும் சாவர்க்கர் போன்ற இந்து இயக்க தலைவர்கள் சொன்னதை வைத்து சொல்றேன். ஈ.வெ.ரா மாதிரி வேறு யாரும் சொன்னதா சொன்னா அவங்க கவலைப்படமாட்டாங்க. உங்க சாவர்க்கர்தான்பா சொல்லியிருக்காருன்னு எடுத்து சொல்றேன்” என்றார்.

இந்திய வரலாற்று கழக தலைவர்
பண்டைய சாதிமுறை சரியாகத்தான் இயங்கியது – இந்திய வரலாற்று கழக தலைவர்
“ஆனா, துரதிர்ஷ்டவசமாக சூத்திரர்களும் தலித்துகளும் மார்க்சிய வரலாற்றை படிக்க ஆரம்பித்தனர்”

சில நிமிடங்கள் என்னை புத்தகம் படிக்க சொல்லிட்டு வெளியே போனார். திரும்பி வந்து “ நான் ஆர்.எஸ்.எஸ் காரங்கட்ட சொல்லிவிட்டேன். நீங்க கொங்கு கவுண்டர்களையும் வன்னியர்களையும் இந்து இயக்கத்துக்குள் கொண்டுவருகிறேன் என்ற பெயரில் பல தலித்துகளை வெளியே தள்ளிகொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லிட்டு வந்தேன்” என்றார். அவருக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவருங்க கிட்ட நெருக்கமான பழக்கம் இருக்கும் போல.

நாங்க பேசிக்கொண்டிருந்தபோது ஒரு பெரியவர் வந்தார். தஞ்சாவூர் இல்லேன்னா கும்பகோணத்துக்காரர்னு நினைக்கிறேன் அவர மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர்னு அறிமுகம் செஞ்சார். அந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் நான் வேண்டாம்னு சொல்லியும் எனக்கு ரசனா ஜூஸ் வாங்கி கொடுத்தார்.  “அம்பேத்கர் மேற்கோள்களை தமிழில் மொழிபெயர்த்து அதை விளக்குவதற்கு ஆட்களும் தருவதாகவும் அதை பள்ளிக்கூடங்களில் காட்சிக்கு வைக்க உதவி வேண்டும்”னும் அந்த ஆர்.எஸ்.எஸ் தலைவரிடம் கேட்டுக்கொண்டார் அரவிந்தன் சார்.

பள்ளி மாணவர்களிடம் பேசும் அரவிந்தன் நீலகண்டன்

சிந்து நதி பாகிஸ்தானிடம் பறிபோனதற்கு இந்து வீரர்கள் வாங்கிய லஞ்சமே காரணமாம்!

வினவு அவர்களுக்கு,

இந்த கண்காட்சிக்கு ஏன்டா போனோம்னு ஆகிவிட்டது. போகாமல் இருந்திருந்தால் இந்து மதமும் இயக்கங்களும் சரியானவை என்று  கற்பனையிலாவது நிம்மதியா இருந்திருப்பேன். போனபிறகு ஜீரணிக்கவே முடியலை.

என்னை போல இன்னும் பல தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் இந்து இயக்கங்களை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். நான் பேசிய ஸ்டால் நிர்வாகி அரவிந்தன் நீலகண்டன் சார் கூட, அம்பேத்கருக்கு ஓரமாக இடம் ஒதுக்குவோம், பான்பராக் பாக்கெட் அளவு இடம் ஒதுக்குவோம்னு  சொன்ன பின்பும் அவங்களை எதுக்கு நம்புறாருன்னு எனக்கே தெரியல.

“நம் சகோதரன் மனநோயால் பாதிக்கப்பட்டால் அப்படி விட்டுவிடுவோமா, அதனால் இடைநிலை ஜாதியினரை மாத்தணும். அதுக்கு மதத்தை கைவிடக் கூடாதுங்கிறது” தான் அவரோட கருத்து.

அவங்களை மாத்தி நமக்கு என்ன ஆகப்போகுது?  நமக்கு வேண்டியது தன்மானம். அது மதம் மாறினால்  கிடைக்கும்னா ஏன் மாறக்கூடாதுங்கிறது என்கருத்து.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் உள்ள ஒருத்தர் தலித் சேம்பர் காமர்ஸ் ஆரம்பிச்சிருக்காருன்னும், அதுல தலித்துக்கள் பொருளாதார வலிமை உள்ளவங்களாகி அதுக்கு பின்னாடே நாமே இது மாதிறி பல கண்காட்சிகங்கள நடத்தலாம்னு அரவிந்தன் சார் சொன்னார்.

திரும்பும் போது “ஒரு இந்துவா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேக்கிறேன். நீங்க சொன்ன விசயங்கள் செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு” என்று அரவிந்தன் சார் வருத்தப்பட்டு சொன்னார்.

“உங்களுக்கே பான்பராக் பாக்கெட் அளவுக்கு தான் இடம் கொடுக்குறாங்க. பேசாம நீங்களும் என்னோடு மதம் மாறுங்க”ன்னு நான் சொன்னேன். அவர் மறுத்துட்டார். அரவிந்தன் சார் மாதிரி உள்ளவங்க எல்லாம் தெரிஞ்சிருந்தும் ஏன் மறுக்கிறாங்கன்னு தெரியல.

அங்கிருந்து வந்தததுக்கு பிறகு எனக்கு குழப்பமாவே இருக்கு. நீங்க இந்து மதத்தை திட்டறீங்க. ஆனால் தருமபுரியிலேயே கலப்பு திருமணம் செஞ்சு வக்கிறீங்க. ஒரு வகையில இதுதான் இந்து ஒற்றுமையை உண்டாக்குற காரியம். ஆனால், இந்து ஒற்றுமைன்னு பேசுறவங்க சாதிக்கு ஒரு ஸ்டால் போடுறாங்க. சாதியை மறந்து ஒன்றுபட வைக்கிற உங்களைத் திட்டுறாங்க.

ஒரே குழப்பமா இருக்கு. இதை உங்களிடம் பகிர  வேண்டும் போல தோன்றியது. அதுக்குத்தான் இந்த நீண்ட லெட்டரை இமெயில்ல அனுப்புறேன்.

இப்படிக்கு
மனோஜ்குமார்

buffalo-lion

பின்குறிப்பு:

கடந்த திங்கட்கிழமை இந்த இளைஞர் தொலைபேசியில் எம்மைத் தொடர்பு கொண்டு மேற்கண்ட விசயங்களை சுருக்கமாக கூறினார். அவரது ஆன்மீகக் கண்காட்சி அனுபவத்தை முழுமையாக எழுதித்தருமாறு கோரினோம். அவரும் நான்கைந்து நாட்களுக்கு பிறகு எழுதி அனுப்பியிருக்கிறார். தன்னை அழுத்திக் கொண்டிருக்கும் அதிகார மட்டங்களை ஒரு மனிதன் புரிந்து கொள்வதும் கேள்வி கேட்பதும் எப்படி எதார்த்தமாக நடக்கிறது என்பதற்கு இந்த இளைஞனின் அனுபவம் ஒரு சான்று. இதுவே இந்தக் கடிதத்தின் வலிமை.

அவரது கடிதத்தில் குறிப்பிட்ட பிரச்சினைகள், பொருள் குறித்து பொருத்தமான பழைய கட்டுரைகளுக்கான இணைப்பை சேர்த்திருக்கிறோம். ஆர்.எஸ்.எஸ் பற்றிய வினவின் கருத்து வாசகர்களுக்குத் தெரிந்ததுதான். இந்த கண்காட்சி குறித்து தனியே எழுதுகிறோம்.

மனோஜ்குமாரின் அனுபவம் குறித்த வாசகர்களின் கருத்து என்ன? மேற்படி கண்காட்சிக்கு யாராவது சென்றீர்களா, உங்கள் அனுபவம் என்ன? எழுதுங்கள்.

–    வினவு

  1. Enna oru abhathamaa irukku……..indha kaalathula yedhu jaadhi….we are brahmins…TNla engala harassnaa pandrel…..naanga vera state countrynu settle aagi yedho kaalatha ottindu irukom…indha maadiri oru graamamum ennaku therunju illa…idhu elaam hallucination, exaggerated obsessive thinking….yedho karpanai novel padichaa maadiri irukku

  2. அம்பேத்கர் அவர் கைப்பட பல ஆயிரம் பக்கங்கள் எழுதி இருக்கிறார்.இந்திய சமுதாயத்தை பாதிக்கும் பல விஷயங்களை பற்றி ஆராய்ந்து அவர் எழுதி உள்ளதை படித்த எவருக்கும் தனஞ்சய் கீர் எழுதிய ,அவர் சொன்னதாக தனஞ்சய் கீர் புத்தகத்தை வைத்து ஹிந்டுத்வர்கள் பரப்பும் பொய்களை எண்ணினால் மிகுந்த வருத்தமும் கோவமும் வரும்.
    ஹிந்து மதத்தை ஆராய்ந்து அதன் குறைகளை விமர்சித்தவர்களில் ,கிழித்து நார் நாராக தொங்க போட்டவர்களின் வரிசையில் எளிதாக முதல் இடத்தை பிடிப்பவர் அம்பேத்கர். ,அதனோடு அதை விட மற்ற எல்லா மதங்களும் சிறந்தவை யென்று கைப்பட எழுதி வெளியிட்டவர்

  3. ஹிந்து மதத்தை,சாஸ்திரங்களை,அதன் நம்பிக்கைகளை,பிராமணர்களை இதை விட அதிகமாக திட்டியவர்கள் ஒருவரையாவது காட்டுங்களேன்

    There may be castes among Sikhs and Mohammedans but the Sikhs and the Mohammedans will not outcast a Sikh or a Mohammedan if he broke his caste. Indeed, the very idea of excommunication is foreign to the Sikhs and the Mohammedans. But with the Hindus the case is http://www.ambedkar.org/ambcd/02.Annihilation%20of%20Caste.htm

    People sometimes ask the idle question, why the Pope does not introduce this or that reform? The true answer is that a revolutionist is not the kind of man who becomes a Pope and that a man who becomes a Pope has no wish to be a revolutionist.” I think, these remarks apply equally to the Brahmins of India and one can say with equal truth that if a man who becomes a Pope has no wish to become a revolutionary, a man who is born a Brahmin has much less desire to become a revolutionary. Indeed, to expect a Brahmin to be a revolutionary in matters of social reform is as idle as to expect the British Parliament, as was said by Leslie Stephen, to pass an Act requiring all blue-eyed babies to be murdered.

    caste among the non-Hindus has no religious consecration; but among the Hindus most decidedly it has. Among the Non-Hindus, caste is only a practice, not a sacred institution. They did not originate it. With them it is only a survival. They do not regard caste as a religious dogma. Religion compels the Hindus to treat isolation and segregation of castes as a virtue. Religion does not compel the Non-Hindus to take the same attitude towards caste. If Hindus wish to break caste, their religion will come in their way. But it will not be so in the case of Non-Hindus.

    The real remedy is to destroy the belief in the sanctity of the Shastras. How do you expect to succeed, if you allow the Shastras to continue to mould the beliefs and opinions of the people ? Not to question the authority of the Shastras , to permit the people to believe in their sanctity and their sanctions and to blame them and to criticise them for their acts as being irrational and inhuman is a incongruous way of carrying on social reform. Reformers working for the removal of untouchability including Mahatma Gandhi, do not seem to realize that the acts of the people are merely the results of their beliefs inculcated upon their minds by the Shastras and that people will not change their conduct until they cease to believe in the sanctity of the Shastras on which their conduct is founded. No wonder that such efforts have not produced any results. You also seem to be erring in the same way as the reformers working in the cause of removing untouchability. To agitate for and to organise inter-caste dinners and inter-caste marriages is like forced feeding brought about by artificial means. Make every man and woman free from the thraldom of the Shastras , cleanse their minds of the pernicious notions founded on the Shastras, and he or she will inter-dine and inter-marry, without your telling him or her to do so.

    Caste is no doubt primarily the breath of the Hindus. But the Hindus have fouled the air all over and everybody is infected, Sikh, Muslim and Christian. You, therefore, deserve the support of all those who are suffering from this infection, Sikh, Muslim and Christian. Yours is more difficult than the other national cause, namely Swaraj. In the fight for Swaraj you fight with the whole nation on your side. In this, you have to fight against the whole nation and that too, your own. But it is more important than Swaraj.

  4. ஒரு குருப்பிட்டவர்கள் தான் டெல்லி மற்றும் மக்கா மஸ்ஜிதில் இமாம் ஆக முடியும் என்பது தவறான கருத்து. தகுதி உள்ள முஸ்லிம் யாராக இருந்தாலும் இமாம் ஆகலாம்.

    • மக்கா இமாமாக வர எந்த முஸ்லிமுக்கும் தகுதி உள்ளதா ?
      ஹஹஹஹாஹ் ஹஹஹஹாஹ் ஹஹஹ

      மக்கா இமாமாக சவூதி அராபியாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் வரமுடியும் . இது கூட தெரியாமல் இஸ்லாமில் irukkinreerkale

      • எதையுமே தெரிந்து சொல்லுங்கள். குரானை அழகிய முறையில் ஓதத் தெரிந்த எவருமே இமாமாக வரலாம்.

  5. I have not visited this exibition.But read about it in Dinamani.One day,108 girls wearing Pattu pavadai and sattai were worshipped by the organizers.Another day,it seems there was a seminar on “Contribution of casteism in economic development”.In that seminar,Gurumoorthi,the Chief Organizer of this exibition spoke about the contribution made by family business of big industrialists and how Ruiyas,Mittals,Ambanis,Adanis etc,by keeping their caste honour “also”contribute to the growth of economy. His argument was that only casteism lead to economic development.On the same day when 108 young girls were worshipped,I read a news in the same Dinamani.The body of a 16 year old girl was found near MGR Thittu in Cuddalore District.When the police tried to find out the identity of this dead girl,they came to know that 475 girls are not attending various schools in that district from the date of reopening of schools in June,2014..The District administration has instructed the concerned Headmasters to find out the whereabouts of these absenting girls,find out the reasons for their absence and bring them back to schools.I was perplexed when I read these two news items.Last year,Kavignar Pralayan staged his new drama,”Vanji Kottam”.In that drama,the foster mother of Kannagi will lament about the misery of Kannagi,when Kovalan left her for Maadhavi and subsequently when he was murdered in Madurai.In nutshel Pralayan would tell how Kannagi’s misery was not understood by others as a woman and how they made her as” Karpu Theivam”.

  6. Can you appeal to reason and ask the Hindus to discard Caste as being contrary to reason ? That raises the question : Is a Hindu free to follow his reason? Manu has laid down three sanctions to which every Hindu must conform in the matter of his behaviour vedah smritih sadacharah uvasy cha priyamatmanah Here there is no place for reason to play its part. A Hindu must follow either Veda, Smriti or Sadachar. He cannot follow anything else. In the first place how are the texts of the Vedas and Smritis to be interpreted whenever any doubt arises regarding their meaning ? On this important question the view of Manu is quite definite. He says :

    yovamanyet te moole hetushrashraya dwizah
    sa sadhubhirbahishkaryo nashtiko vedandikah
    According to this rule, rationalism as a canon of interpreting the Vedas and Smritis, is absolutely condemned. It is regarded to be as wicked as atheism and the punishment provided for it is ex-communication. Thus, where a matter is covered by the Veda or the Smriti, a Hindu cannot resort to rational thinking.

    Religion must mainly be a matter of principles only. It cannot be a matter of rules. The moment it degenerates into rules it ceases to be Religion, as it kills responsibility which is the essence of a truly religious act. What is this Hindu Religion ? Is it a set of principles or is it a code of rules ? Now the Hindu Religion, as contained in the Vedas and the Smritis, is nothing but a mass of sacrificial, social, political and sanitary rules and regulations, all mixed up. What is called Religion by the Hindus is nothing but a multitude of commands and prohibitions. Religion, in the sense of spiritual principles, truly universal, applicable to all races, to all countries, to all times, is not to be found in them, and if it is, it does not form the governing part of a Hindu’s life. That for a Hindu, Dharma means commands and prohibitions is clear from the way the word Dharma is used in Vedas and the Sinritis and understood by the commentators. The word Dharma as used in the Vedas in most cases means religious ordinances or rites. Even Jaimini in his Purva-Mimansa defines Dharma as “a desirable goal or result that is indicated by injunctive (Vedic) passages “. To put it in plain language, what the Hindus call Religion is really Law or at best legalized class-ethics. Frankly, I refuse to cull this code of ordinances, as Religion. The first evil of such a code of ordinances, misrepresented to the people as Religion, is that it tends to deprive moral life of freedom and spontaneity and to reduce it (for the conscientious at any rate) to a more or less anxious and servile conformity to externally imposed rules.

    All this becomes possible among the Hindus because for a priest it is enough to be born in a priestly caste. The whole thing is abominable and is due to the fact that the priestly class among Hindus is subject neither to law nor to morality. It recognizes no duties. It knows only of rights and privileges. It is a pest which divinity seems to have let loose on the masses for their mental and moral degradation. The priestly class must be brought under control by some such legislation as I have outlined above. It will prevent it from doing mischief and from misguiding people. It will democratise it by throwing it open to every one. It will certainly help to kill the Brahminism and will also help to kill Caste, which is nothing but Brahminism incarnate. Brahminism is the poison which has spoiled Hinduism. You will succeed in saving Hinduism if you will kill Brahminism

  7. கடைசியில் ஆனந்த விகடன் கூட அக்சயா Trust பற்றியும் ஐயரின் திருவிளையாடல்களையும் பற்றி எழுதி விட்டது, ஆனால் வினவு இன்னும் அதைப்பற்றி மூச்சுக் கூட விடவில்லையே, ஏன்?

  8. அன்புள்ள சகோதரர் ‘மனோஜ் குமார்’ அவர்களுக்கு,

    வினவு-வசை தளத்தில் தங்கள் முழுக் கட்டுரையையும் கண்டேன்.

    1. இந்த கண்காட்சியை நடத்துகிறவர்களின் கருத்தியல் இந்துத்துவ கருத்தியல் அல்ல. பல புகைப்படங்களை காட்டியிருக்கும் நீங்கள் சாதியத்துக்கு எதிராக எங்கள் ஸ்டாலில் இருந்த புகைப்படங்களை குறித்து கூறியிருக்கலாம். அதை இந்து ஆன்மிக கண்காட்சி அமைப்பினர் அனுமதித்தையும் கூறியிருக்கலாம். இங்குதான் உள்ளே இருந்து போராட மாற்றத்தை உருவாக்க இடம் நமக்கு இருக்கிறது என்று உங்களிடம் கூறினேன். இங்குதான் சுதந்திரம் இருக்கிறது என்று நான் கூறினேன். ஆம் அம்பேத்கர் கண்காட்சிக்கு கொடுக்கப்பட்ட இடம் மிகவும் கடைசியில் அமைந்தது என்பது உண்மைதான். தமிழ்ஹிந்துவுக்கு அளிக்கப்பட்டதும் சிறிய ஸ்டால் என்பதும் உண்மைதான். ஆனால் இதே ஸ்டாலில் பாலின சிறுபான்மையினர் குறித்த நூல் வெளியிட இதே இந்து ஆன்மிக கண்காட்சி நடத்துகிறவர்கள் அனுமதி வழங்கினர். அதை அந்த நூலில் ஆசிரியர் உங்களுக்கு விரிவாக விளக்கினார். ஏனோ அதை குறித்து எழுத மறந்துவிட்டீர்கள். எந்த இயக்கத்திலும் உள்-பிரச்சனைகள் இருப்பது இயற்கை. ஆனால் சாதியத்தை எதிர்க்கும் குரல்களை இயக்கத்துக்குள் சாதிய ஆதரவாளர்களால் கூட புறக்கணிக்க முடியாது என்பதுதான் உண்மை. இன்னும் சொன்னால் தமிழ்ஹிந்து ஸ்டாலில் நீங்கள் வந்த போது சாதிய மறுப்பு திருமணங்களுக்கு ஆதரவாக ஊக்குவிக்கும் விதத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறிய வார்த்தைகள் பெரிய தட்டியாக வைக்கப்படிட்ருந்ததை நீங்கள் பார்த்திருக்கலாம். அதை எடுக்கவோ அல்லது மாற்றவோ எங்களிடம் எவரும் கூறவில்லை. நாங்கள் ஏன் இந்துவாக நீடிக்கிறோம் என்கிற கேள்விக்கான பதில் அதுதான். இங்கு சுதந்திரம் இருக்கிறது போராடுவதற்கான வெளி இருக்கிறது. இஸ்லாமிலோ கிறிஸ்தவத்திலோ அல்லது மார்க்ஸியம் போன்ற மதங்களிலோ அது இல்லை.

    2. டாக்டர் அம்பேத்கர் குறித்து நாங்கள் வைத்திருந்த ஒவ்வொரு மேற்கோளுக்கும் உரிய ரெஃபெரன்ஸ்கள் இருக்கின்றன. மேலும் தனஞ்ஜெய்கீரின் நூல் சிறியதும் அல்ல அது மட்டுமே (அதில் அவரது பரிநிர்வாணம் தவிர) பாபா சாகேப் உயிருடன் இருந்த போது அவரிடம் காட்டப்பட்டு அவரது அங்கீகாரம் பெறப்பட்ட நூல். பாபா சாகேப் சமஸ்கிருதம் பாரதத்தின் தேசிய மொழியாக இருக்க வேண்டுமென கூறியதற்கு அன்றைஅய் செய்திதாள்களின் ஆதாரத்தையே அளித்திருந்தோம். அதை உங்களிடம் சுட்டிக்காட்டியதையும் வசதியாக மறந்துவிட்டீர்கள்.

    3. இறுதியாக, இந்த கண்காட்சியை நடத்துகிறவர்களின் சாதி-ஆதரவு நிலைபாட்டுடன் நான் கடுமையாக முரண் படுகிறேன். அதை அவர்களும் அறிவார்கள். இருந்த போதிலும் நாங்கள் இந்த ஸ்டாலை நடத்துவதற்கு இடம் தந்திருக்கிறார்கள். பாலின சிறுபான்மையினர் குறித்த நூலை வெளியிடுவதற்கும் இந்த கண்காட்சியிலேயே இடம் தந்திருக்கிறார்கள். அத்துடன் எங்கள் நூல் வெளியீட்டுக்கும் அனுமதியும் ஆதரவும் அளித்திருக்கிறார்கள். இந்த ஜனநாயகத்தன்மையே இந்து மதத்தின் உயிர்மூச்சு. சாதிய எதிர்ப்பாளர்களும் இந்துத்துவர்களுமாகிய நாங்கள் ஏன் இந்துக்களாக இருக்கிறோம் என்பதற்கு இந்த ஜனநாயகத்தன்மையே காரணம். ஒரு ஸ்டாலினிய இணையத்தளத்தை ஆதரிப்பவர்களுக்கு இது புரியாததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

    அன்புடன்

    அநீ (தாங்கள் அளித்த மின்னஞ்சலான தவறானது அதற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் மீண்டு வந்துவிட்டது.)

    • அரவிந்தன் நீலகண்டன்,

      பார்பனியத்தில் மூழ்கி திளைக்கும்

      மனு தர்ம ஹிந்து மதம் வெட்கி தலைகுனியுமா

      ஆசான் அம்பேதகாரின் பார்பனிய எதிர்ப்பை கண்டு ?

      பார்ப்பானுக்கு கொடிகட்ட,பார்பன கொலை வெறிக்கு

      கட்டை தூக்க வேறு இடம் பாருமையா !

      எம் தளித்தியர் வரமாட்டார் உம்மோடு

      RSS கொலை வெறிக்கு கட்டை தூக்க வேறு ஆள்

      பாருமையா மேற்கு மாம்பல அயோத்தி மண்டபத்தில் !

      • இப்படி எழுதி அவரை விரட்டிவிடாதீர்கள். அவர் முகநூலில் விவாதிக்கமுடியாது. சுவர் எழுப்பியிருக்கிறார். தமிழ்ஹிந்து.காமிலும் முடியாது. இங்கு வந்திருக்கிறார். அவரிடம் சில கேள்விகளை எழுப்பி அவர் மனசாட்சியைத்தட்டிப்பார்ப்போம். எனவே கண்ணியமாக எழுதவும்.

        • காவ்யா,

          நம் கருத்துக்களை எதீர் கொள்ள இயலாமல்

          அஞ்சி ஓடுவது சிங்கம் என்றாலும் ,புலி என்றாலும் ,

          ஏன் அரவிந்தன் நீலகண்டன் என்றாலும்

          அதற்கு ஒரே பெயர் கோழை என்பது மட்டும் தானே ?

          ஆமாம் காவ்யா எம் கருதத்தில்

          என்ன கண்ணிய மீறலை கண்டீர்!

          RSSன் குடி போதை ,உருட்டை கட்டை,ரவுடி தன

          பிள்ளையார் புதைப்பு,கடல் நீர் கரைப்பு ஊர்வலங்களை கண்டது

          இல்லையா நீங்கள் ?

          • இங்கு அரவிந்தன் நீலகண்டன் என்ற தனிநபர் பேசுவதாக எடுத்துக்கொள்ளவும். அவர் சங்கப்பரிவார் ஆளாக இருந்தாலும், அவர் விருந்தாளியாக வினவுக்கு வந்திருக்கிறார். மற்றபடி அவர் அவரின் கூட்டத்தில்தான் இருப்பார். அங்கு அக்கூட்டத்தைச் சாராதவரிடம் பேசமாட்டார். எனவே வாராது வந்த மாமணிபோல வந்திருக்கும் அரவிந்தனைப் பேசவிட்டு, பின்னர் கேள்விகள் கேட்டு அவரின் இரட்டை வேடத்தை களைவதற்கு முயலுங்கள் என்கிறேன். பலர் செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவரை ஓடும்படி எழுதாதீர்கள். விருந்தோம்பல் தமிழர் பண்பாடு.

            • காவ்யா,

              யாருக்கு வரவேற்ப்பு, எப்படி கொடுக்க வேண்டும் என்பது தெரியும். ஹிந்து பாசிச முக மூடீயை கிழீத்து எறிந்து கொண்டு வினவில் அம்பலபட்டு ‘வி ஹெச் பி வேறு. ஆர் எஸ் எஸ் வேறு’ என்று கதைப்பவர்[காவ்யா] எல்லாம் அறிவுரை கூற தேவை இல்லை.

    • //இங்கு சுதந்திரம் இருக்கிறது போராடுவதற்கான வெளி இருக்கிறது. இஸ்லாமிலோ கிறிஸ்தவத்திலோ அல்லது மார்க்ஸியம் போன்ற மதங்களிலோ அது இல்லை.//

      இஸ்லாமிலோ கிறிஸ்தவத்திலோ அல்லது மார்க்ஸியம் போன்ற மதங்களிலோ சாதிக் கொடுமைகளை இந்து மதம் அளவுக்கு தீவிரமாக இல்லாததால் எதிர்த்து போராட வேண்டிய தேவையும் குறைவே.

      //இந்த ஜனநாயகத்தன்மையே இந்து மதத்தின் உயிர்மூச்சு. //

      இன்றய தேர்தல் அரசியல் அமைப்புக்கு ஒட்டுப் போட பெரும் கூட்டம் தேவை. இல்லா விட்டால் கனிசமான டிந்தியர்களை வைதிக இந்து மதம் இந்துக்களே அல்ல என்று விலக்கி விடும்.

    • அரவிந்தன் நீலகண்டன்,

      உங்கள் மனு தர்ம ,பார்பனிய பாசீச ஹிந்து மதம் கூறுவது படி …..

      முகத்தில் பிறந்தவன் பிராமணன்,

      தோளில் பிறந்தவன் சத்திரியன்,

      தொடையில் பிறந்தவன் வைசியன்

      காலில் பிறந்தவன் சூத்திரன்

      ஏனில் ,பஞ்சமர்களுக்கு[தளித்தியர்களுக்கு] எங்கே இடம் ? இது தான் ஹிந்து மத சனநாயகமா அரவிந்தன் நீலகண்டன்?பஞ்சமர்களுக்கு[தளித்தியர்களுக்கு] ஹிந்து மத, மனு தர்மம் இருதியில் கூட இடம் கொடுக்காத போது பஞ்சமர்களுக்கு[தளித்தியர்களுக்கு] ஏது ஜனநாயகம் உங்கள் ஹிந்து மதத்தில் ?

      //இந்த ஜனநாயகத்தன்மையே இந்து மதத்தின் உயிர்மூச்சு. சாதிய எதிர்ப்பாளர்களும் இந்துத்துவர்களுமாகிய நாங்கள் ஏன் இந்துக்களாக இருக்கிறோம் என்பதற்கு இந்த ஜனநாயகத்தன்மையே காரணம்.//

    • இன்று தலித் மக்களை வேறு வழியில்லாமல் ‘அரவணைத்துக் கொள்ளும்’ இந்துத்துவவாதிகள், முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தலித் மக்கள் இந்துக்களாக கருதப்படாமல் விட்ட போது அதனை ஏன் எதிர்க்கவில்லை. பிரிக்கப்படாத இந்தியாவில் முஸ்லிம் மக்கள் எண்ணிக்கையில் விஞ்சும் சூழல் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிந்த பிறகல்லவா தலித்கள் இந்து மதத்தில் இணைக்கப்பட்டார்கள். இங்கு தலித்களை ஏற்க இந்துதுத்துவ உள்ளங்களிடம் வினை புரிந்தது ஜனநாயக உணர்வா? அல்லது முஸ்லிம்களை அடக்க நினைக்கும் மத வெறியா? சமபந்தி, மற்றும் கலப்பு மணம் ஆகியவை கோரக்கூடாது போன்ற நிபந்தனைகள் அன்று விதிக்கப்பட்டதல்லவா இன்று வரை இளவரசன் போன்ற சகோதரர்களின் உயிரை குடித்து வருகிறது.

      ஆதியில் பவுத்தர்களாக இருந்தவர்கள் தான் தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டார்கள் என்று அம்பேத்கர் கூறியது குறித்து அம்பேத்கர் படம் போடும் இந்துத்துவவாதிகளின் கருத்து என்ன? இந்து மதத்தின் ஜனநாயகம் குறித்து வகுப்பெடுக்கும் நீங்கள் புத்த விகாரைகள் ஏன் அழிக்கப்பட்டு இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டன? நாகர்கோவிலில் இருக்கும் நாகராஜா கோவில் சமண கோவில் என்பதும், நாகராஜா மற்றும் நாகராணி ஆகியவை மட்டுமே வழிபடப்பட்டு வந்ததும் பிறகு அவை சிதைக்கப்பட்டு நாகராஜா திருமால் ஆனதும் எவ்வாறு? இது தான் இந்து மதத்தில் நீங்கள் விதந்தோதும் ஜனநாயக நடவடிக்கைகள் துலங்கும் லட்சணமா?

      தலித்களை அன்று இந்து மதத்தில் அரவணைத்தது, அம்பேத்கர் மீது உங்களைப் போன்றவர்கள் பாசம் பொழிவது, பாலின சிறுபான்மையினர் பற்றிய நூலை வானதி சீனிவாசன் வெளியிடுவது யாவும் இந்து மதம் மாறி வருவதற்கான அடையாளங்கள் அல்ல. இந்துத்துவவாதிகள் தனது கொலை முகத்தை மறைத்து தமது இருப்புக்கு ஆதாரமான இந்து மதத்தை காலத்திற்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் பிரயத்தனங்களும், தகிடுதித்தங்களுமே ஆகும். மனோஜ்குமார் போன்று எம் மக்கள் ஒட்டுமொத்தமாக விழித்துக் கொள்ளும் நாள் அன்று உங்களை போன்ற சொற்புரட்டர்களுக்கு இந்துத்துவக் காரியாலயத்தில் வேலை இருக்காது, அரவிந்தன் நீலகண்டன்.

      Tail Piece: மனோஜ்குமார் கண்காட்சியில் பார்க்க தவறியவற்றிற்காக விசனப்படும் நீங்கள், அவர் குறிப்பாக சுட்டிக்காட்டியவற்றின் மீது உங்கள் விடைகள் என்ன? இந்து மதம் குறித்து அம்பேத்கர் அறுதியிட்டு கூறியனவற்றுக்கு மாறான திடுக்கிடும் உண்மைகளை வெளியிடும் நீங்கள் அவற்றிற்கு ரெஃப்பரன்ஸ் இருக்கிறது என்று தப்பிக்கிறீர்கள். அம்பேத்கரின், பெரியாரின் வாரிசுகளான நாங்கள் கேட்பது, உங்கள் கூற்றுகளுக்கு ஆதாரம் கொடுங்கள் என்பது தான். ஒரு எழுத்தாளரான தங்களுக்கு ஒரு ஆளுமை பற்றிய முற்றிலும் மாறுபட்ட தகவல்களை பொது அவையில் வைக்கும் போது அதற்கு முறையான ஆதாரத்தை கொடுக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச நேர்மையை கூட உங்களால் கடைபிடிக்க இயலாதது வருத்தமளிக்கிறது. ஒரு எழுத்தாளன் என்பவன் இந்துவாக இருக்க முடியாது என்று எழுத்தாளர் பிரபஞ்சன் ஒரு முறை குறிப்பிட்டது தான் உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்களை கடக்கும் ஒவ்வொருமுறையும் நினைவுக்கு வருவது.

    • அரவிந்தன் நீலகண்டன் இன்னொரு அர்ஜீன் சப்பத்தோ!பார்ப்பனியம் பாதாளம் வரை பாயும் என்பது இதுதானோ!

  9. அரவிந்த நீலகண்டரே,
    //இன்னும் சொன்னால் தமிழ்ஹிந்து ஸ்டாலில் நீங்கள் வந்த போது சாதிய மறுப்பு திருமணங்களுக்கு ஆதரவாக ஊக்குவிக்கும் விதத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறிய வார்த்தைகள் பெரிய தட்டியாக வைக்கப்படிட்ருந்ததை நீங்கள் பார்த்திருக்கலாம்.//
    தட்டி ஒட்டியதெல்லாம் சரிதான், இதுவரைக்கும் எத்தனை சாதி மறுப்பு திருமணங்கள்/மறுமணங்கள் செய்து வைத்துள்ளீர்?

    //இங்கு சுதந்திரம் இருக்கிறது போராடுவதற்கான வெளி இருக்கிறது//
    என்ன சுதந்திரம்,உயிர் வாழும் சுதந்திரமா? கேவலமா இல்லை உங்களுக்கு இப்படி பேச? மனுசன நாலு வண்ணமா பிரிச்சு அடிமைகள் போல நடத்திட்டு இப்போ சுதந்திரத்த பத்தி பேச வந்துட்டாரு.

    //பாபா சாகேப் சமஸ்கிருதம் பாரதத்தின் தேசிய மொழியாக இருக்க வேண்டுமென கூறியதற்கு அன்றைஅய் செய்திதாள்களின் ஆதாரத்தையே அளித்திருந்தோம். அதை உங்களிடம் சுட்டிக்காட்டியதையும் வசதியாக மறந்துவிட்டீர்கள்.//
    அது சரி, பாபா சாகேப் உங்க ஹிந்து மத்த அக்கு வேற ஆணி வேற கிழிச்சு தொங்க உட்டாரே அத வசதியா மறந்திட்டு , அவர உங்க பொந்துக்குள்ள இழுத்து போட்டுடீங்களே!! அது சரி அவரு தான் ஏதோ தெரியாம சொல்லிட்டரு. உங்களுக்கு வேண்டாம் அறிவு, ஒரு செத்த எலி சாரி மொழி எப்படியா தேசிய பாசை ஆகும்.

    //ஜனநாயகத்தன்மையே இந்து மதத்தின் உயிர்மூச்சு.//
    சாதி/வருணாசிர படிநிலை எனும் ஜனநாயக மறுப்பு தான் ஹிந்து மதத்தின் வேறாகும். அதை புடிங்கிட்டா எல்லாம் சரியாகிடும்.

    • அம்பேத்கர் சொன்னதற்கு ஒரு உட்கிடைக்கை உண்டு. அதை அரவிந்தன் அறிந்திருந்தால் அம்பேத்கரை தூக்கிப்பிடிப்பதை விட்டுவிட்டு தூக்கியெறிந்து விடுவார்.

      சமஸ்கிருதம் (வடமொழி – தமிழ் இலக்கியத்தின்படி) ஒரு பாரம்பரியம், ஆழ்ந்த இலக்கணம் மற்றும் சிறப்பான பண்டை இலக்கியத்தைத் தன்னகத்தே கொண்டது. தமிழுக்கு என்ன தொன்மையே அது வடமொழிக்கும் உண்டு. ஹிந்திக்கு கிடையாது. ஹிந்தி தென்னிந்திய மொழிகள், மற்றும் வடமொழிக்கருகில் வரமுடியாது. எனவே ஹிந்தி திணிப்பை எதிர்த்து, வடமொழியை ஏற்கலாம். மேலும், வடமொழி அனைத்து மொழிகளிலும் உள்ளுழைந்திருக்கிறது.

      அம்பேத்கர் சொன்ன கரணியம் வேறு: அது மதம் சாதி தொடர்புடையது. பார்ப்பனர்கள் வைதீக மதத்தை உருவாக்கி அதை வடமொழியில் வகுத்து அம்மொழிக்கும் அதனால் தெய்வத்தனமை வைத்துக்கொண்டு அம்மொழியை பிறமக்கள் படிக்க்விடாமல் ஆதிக்கம் செலுத்தி, சமூகத்திலும் ஆதிக்கம் செய்து பன்னெடுங்காலமாக இப்பித்தலாட்டத்தைச் செய்துவந்தார்கள்.

      இந்துமத்ததின் ஆணிவேறான இம்மொழியை பரவலாக்கிவிட்டால் பார்ப்பனரின் ஆதிக்கத்தை பிறமக்கள் புரிவார்கள். மேலும் இம்மொழியில் பார்ப்பனர்கள் எழுதிவைத்தது என்ன எங்கெங்கெல்லாம் நம்மை இழிவுபடுத்தினார்கள் இறைவன் பெயரால் என்று வெட்ட வெளிச்சமாகும். தாத்தாச்சாரியார் பண்ணினார். வடமொழி தெரியின் எல்லாரும் பண்ணலாம்.

      ஆக, பார்ப்பன ஆதிக்கத்தை உடைக்க, இந்துமதத்தை வேரறுத்தால் முடியும் எனபது ராம்சாமியாரின் முடிவு. அம்பேத்கரின் முடிவு வடமொழியை வெளியே இழுத்துப்போட்டு எல்லோரும் எடுத்துக்கொள்க எனபது.

      கேரள நம்பூதிரிகளின் கொட்டத்தை அடக்க நாராயண குருவும் அதைத்தான் செய்தார். அவர் வடமொழியை நன்கு கறகவேண்டும். நம் கோயில்களை நாமே கட்டிக்கொண்டு பார்ப்பன பூஜாரிகளை ஒதுக்குத்தள்ளிவிட்டு நாமே நம் கோயில்களில் எல்லாம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று சொல்லி நெய்யாட்டின்கரையில் ஒரு சிவன் கோயிலைக்கட்டி நம்பூதிரிகளை அடக்கினார்.

      முள்ளை முள்ளால் எடுக்க வேண்டுமென்பார்கள். இந்துமதத்தையும் அதன் மொழியையும் வைத்தே பார்ப்ப்னர்களை அடக்கவேண்டுமென்பதே அம்பேத்கரின் வடமொழி பயில்க என்பதன் சூட்சுமம்.

    • //சாதி/வருணாசிர படிநிலை எனும் ஜனநாயக மறுப்பு தான் ஹிந்து மதத்தின் வேறாகும். அதை புடிங்கிட்டா எல்லாம் சரியாகிடும்.//

      தர்மபுரியிலே ஒரு பறையர் இளைஞன் ஒரு வன்னியப்பெண்ணைக்காதலித்தால் மணம் செய்து கொள்ள முடியுமா?

      கண்ட தேவியின் சப்பரத்தின் வடத்தைப் பள்ளர்கள் இழுக்க முடியுமா?

      உத்தபுரத்தில் முத்தாலம்மனை பறைச்சேரி மக்கள் கும்பிடமுடியுமா?

      இப்படி கேள்விகள் ஏராளம்.

      வருணாஷ்ரத்தில் தலித்துகள் கீழ் வைக்கப்பட்டார்கள். அத்தியரியை உடைத்திழுத்து எரித்துவிட்டால், வன்னியரும், நாடாரும், பார்ப்பனர்களும், பிள்ளைகளும், முதலிகளும், செட்டியார்களும் – தங்கள் வீட்டுப்பெண் பிள்ளை ஒரு தலித்துப்பையனை ல்வ பண்ணினால் கட்டிவைப்பாரா?

      பதில் சொல்லுங்கோ சுவாமி.

      Never. The roots for discrimination of dalits in TN today lie outside Hindu religion. Hence, Tamil brahmins are not in the cast of this social drama. The players are others and the script and directions are by non-brahmins and non-religious.

  10. அருமையான கட்டுரை.
    பார்ப்பனியத்தை ஒழிக்காமல் இந்து மதத்தில் எந்த திருத்தத்தையும் கொண்டுவர முடியாது.
    சாதி கட்டமைப்பையும் ஒழிக்க முடியாது.
    சாதியின் அஸ்திவாரமான பார்ப்பனியத்தை வேரோடு பிடுங்கி எறிவோம்.
    அதே வேளையில் கிளைகளாக பரவிக் கொண்டிருக்கும் இதர சாதிகளையும் ஒழிப்போம்.

    • ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இவ்வோஜனை சரியாக இருந்திருக்கலாம் தம்புடு. இன்று இல்லை. காரணம்: ஜாதிகளும் ஜாதீயமும் இன்று பார்ப்பனர்களின் வருணாஷிரத்தை அடிப்படையாகக் கொண்டு இல்லை. பார்ப்பனீயம் என்பது பார்ப்ப்னர்களாலேயே டைல்யூட் பண்ணப்பட்டுவிட்டது. அதாவது அதன் பண்டைக்கால கொடுங்கரங்கள் செயலிலந்துவிட்டன.

      இன்றைய ஜாதீயம், திருவான்மியூர் ஆன்மிக காட்சியில் பிறஜாதியினரால் கொண்டாடப்படுவதே. அதன் பெயர் இடைஜாதீயம்.

      இதை வேரறுக்க எவராலுமே முடியாது. தமிழகம் பார்ப்பனரல்லாத ஜாதீயினரால் நாசமாக்கப்பட்டுவருகிறது.

      இன்றைக்கு பார்ப்பனீயம்தான் எல்லாவற்றுக்கும் காரணம் எனபது, குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டுவிட்டு அப்பாவியைப்பிடித்து தூக்கில் போடுவதற்கு ஒப்பாம். வினவு குழுமத்தாரின் பொழுதுபோக்கது. நமக்கு வேண்டாம்.

      • காவ்யா,

        [1]பார்பனியம் கல் போல இன்று இருக்கமாக உள்ளதா இல்லை டைல்யூட் ஆகிவிட்டதா என்பது அறிய வாருங்கள் சிதம்பரம் நடராசன் கோவிளுக்கு! BJP சுப்ரமணிய சாமியீன் வழிகாட்டுதலில் தீச்சதர்கள் உச்சநீதி மன்றத்தில் ஆடிய பொய் ஆட்டதையும் அவதனிப்பு செய்து விட்டு கூருங்கள் பார்பனியம் கல் போல இன்றும் இருக்கமாக உள்ளதா இல்லை டைல்யூட் ஆகிவிட்டதா என்று ?

        [2]இன்றைய ஜாதீயம், திருவான்மியூர் ஆன்மிக காட்சியில் பிறஜாதியினரால் கொண்டாடப்படுவதே. அதன் பெயர் இடைஜாதீயம் என்னும் போது அதை ஒருங்கினைத்து நடத்திய மேல் சாதீயம் யாரை சார்ந்தது . சமுகத்தீன் பிற்போக்கு தனமான சாதியத்துக்கு ஸ்டால் அமைத்து கொடுத்து அவர்களை வழி நடத்தீய விழா ஏற்பாடு குழு[Function organizing committee] தலைகள் யார் ? பார்பனியம் தானே ?

        [3]பார்பன ஹிந்து மத பாசிசத்துடன் தம்மை இணைத்துகொண்ட அரவிந்தன் மனதில் சிறு துளி ஈரம் தளித்தியர் மக்கள் மீது இருக்க வாய்ப்பு உண்டு. மனோஜ் உடன் அவர் பேசியது, Rss காரருடன் அவர் வாதாடியது , வினவில் விளக்கம் கொடுத்தது மூலம் அதனை அறிய முடிகின்றது. ஆனால் நீங்கள் கூறும்….

        “ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இவ்வோஜனை சரியாக இருந்திருக்கலாம் தம்புடு. இன்று இல்லை. காரணம்: ஜாதிகளும் ஜாதீயமும் இன்று பார்ப்பனர்களின் வருணாஷிரத்தை அடிப்படையாகக் கொண்டு இல்லை. பார்ப்பனீயம் என்பது பார்ப்ப்னர்களாலேயே டைல்யூட் பண்ணப்பட்டுவிட்டது. அதாவது அதன் பண்டைக்கால கொடுங்கரங்கள் செயலிலந்துவிட்டன.”

        இந்த கருத்து பார்பனியம் உங்கள் மனதுல் ஆழ ஊடுருவி உள்ளது என்பதை தான் காட்டுகின்றது. அதை தான் advanced version of Hindu Manu Darmaa Thinking என்று கூறுகின்றேன்

        //பார்ப்பனீயம் என்பது பார்ப்ப்னர்களாலேயே டைல்யூட் பண்ணப்பட்டுவிட்டது. அதாவது அதன் பண்டைக்கால கொடுங்கரங்கள் செயலிலந்துவிட்டன.//

  11. //இந்து ஆன்மீக சேவை கண்காட்சி // அரவிந்த் சார் இதுக்கு என்ன அர்த்தம் சார். ஜனநாயகம்னு அர்த்தமா?

  12. மேலும் பாபா சாகேப் அம்பேத்கர் ஸ்டாலுக்கு கொடுக்கப்பட்ட இடம் குறித்தும் ஒரு விளக்கம் அளிக்க வேண்டும். அந்த ஸ்டாலும் பாபாசாகேப் அம்பேத்கர் கண்காட்சியும் கண்காட்சிக்கு இடையில் உருவாக்கப்பட்டவை. அதாவது 8 ஆம் தியதி கண்காட்சி ஆரம்பித்தது. 11 ஆம் தியதி அந்த போதிசத்வ அம்பேத்கர் கண்காட்சியை நாங்கள் வடிவமைத்தோம். அதற்கு அனுமதி கேட்டோம். கிடைத்தது. ஆகவே அது E-17 எனும் ஸ்டால் ஒதுக்கப்பட்டது. அது அந்த குறிப்பிட்ட வரிசையில் இறுதியாக இருந்தது. அதனை மாற்றி முதல் பகுதியில் முன்னணியாக அந்த ஸ்டாலை அமைக்கவும் ஒரு முயற்சி அமைப்பாளர்களால் பின்னர் எடுக்கப்பட்டது. இதே சகோதரர் அன்று மாலை என்னிடம் கேட்டிருந்தால் கூட இதை அவரிடம் சொல்லியிருப்பேன். இந்து இயக்கங்களுக்குள் ஆக்கபூர்வமான மனமாற்றங்கள் எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரம் இது. என்னுடைய அலைபேசி எண்ணையும் அவரிடம் நான் கொடுத்திருந்தேன். அதே ஸ்டாலில்தான் என்னுடைய புத்தக வெளியீட்டு விழாவும் நடைபெற்றது என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.

    • அரவிந்தன் நீலகண்டன்,

      மனு தர்மம் , அதன் மீது கட்டமைக்க பட்டு உள்ள பார்பனிய ஹிந்து மதம் ,அதை சார்ந்த ஹிந்து RSS ,VHP போன்ற இயக்கங்கள் ,அவற்றின் மதத்தீன் பெயரால் மக்களை கொல்லும் பாசிச மக்கள் விரோத தன்மை இவை அனைத்தையும் முற்றும் உணர்ந்த அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் இன்னும் தொடர்ந்து அவ்வியக்க சார்பு உடன் இருப்பதற்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் கடுமையான கண்டனங்கள்

      //இந்து இயக்கங்களுக்குள் ஆக்கபூர்வமான மனமாற்றங்கள் எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரம் இது. //

      • சரவணன்!

        குழப்பாதீர்கள். வி ஹெச் பி வேறு. ஆர் எஸ் எஸ் வேறு. முன்னது இந்துமதத்துக்காகவே; பின்னது இந்தியர்கள அனைவருக்குமே. முன்னதுதான் மனுதர்மத்தை விடாப்பிடியாக வைத்திருக்கிறது. பின்னது மனுதர்மத்துக்கு எதிரானது அனைவரும் சமம் என்பது

        • காவ்யாவின் முக மூடீயை அவரே கிழீத்து எறிந்து கொள்கின்றார். வினவு வாசகர்கள் விவரமானவர்கள் என்பதால் நான் மேலும் விளக்க போவது இல்லை !

          // வி ஹெச் பி வேறு. ஆர் எஸ் எஸ் வேறு. முன்னது இந்துமதத்துக்காகவே; பின்னது இந்தியர்கள அனைவருக்குமே.//

          • வினவு வாசகர்கள் விவரமானவர்கள் என்பதால் நானும் விளக்கத்தேவையில்லை 🙂

            • காவ்யா,

              வினவு வாசகர்கள் விவரமானவர்கள் என்பதால் சங்கப்பரிவார் அங்கங்களான RSS,VHP பற்றி வீளக்க தேவை இல்லை என்றாலும், ஒரு இடத்தில் மனோஜ்குமாருரிடம்[feedback 29] ஒட்டு மொத்தமாக RSS,VHP இரண்டையும் சங்கப்பரிவார் என்று அழைக்கும் காவ்யா அவர்கள் என்னிடம் வாதாடும் போது ‘வி ஹெச் பி வேறு. ஆர் எஸ் எஸ் வேறு’ [feedback 12.1.1] என்று கூறி முரண்படுவது ஏனோ ?

    • ஆழி பெரிது என்பதுதான் அந்நூல். அவ்வெளியீட்டு எவரெவரால் நடாத்தப்பட்டது என்று பார்த்தால் அரவிந்தன் பார்ப்பனர்கள் கூட்டத்தை வைத்துத்தான் பிழைப்பு நடாத்துகிறாரெனத் தெரியும். சமத்துவம் என்றெல்லாம் சொல்லும் அரவிந்தன், ஏன் தன் நூல் வெளியீட்டை கீழ்ஜாதியினரை வைத்து நடாத்தவில்லை? அவர்களுக்குத்தகுதியில்லையா? பா ராகவன்களுக்கும் பத்ரி சேஷாத்ரிகளுக்கும் ஹரன்பிரசன்னாக்களுக்கு ஹரிஹரனகளுக்கும் மட்டும்தான் தகுதியா? வினவு படம் போட்டுக்காட்டியிருக்கிறதே! Birds of same feather flock together. பிள்ளைகளும் தேவர்களும் நாடார்களும் பார்ப்ப்னர்களும் கைகோர்த்துவிட்டால் அரவிந்தன் நூலகள் பிச்சுகிட்டுப் போகும் எனப்து அவர் எண்ணம்.

      இளையராஜாவுக்கு பார்ப்ப்னர்கள் வேண்டும். அரவிந்தனுக்கும் வேண்டும். ஆனால் இளையாராஜா சமத்துவம் என்று பேசவில்லை ! அரவிந்தன் ஒரு இருகரையாளர்.

  13. படிக்கும் போதே நெஞ்சை உறுத்துகிறது. இந்து என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டிய கடிதம்.

    மனோஜ்குமார், இந்தியாவில் தான் இந்துமதம் இப்படி சாதியடிப்படையில் பிளவு பட்டுக்கிடக்கிறது. இந்தியாவுக்கு வெளியே இந்த நிலை இல்லை. தமிழ்நாட்டு மக்களின் சாதிப்பிரச்சனைகளும், பிளவுகளும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளும், யார் ஆண்டான், யார் அடிமை என்ற போட்டியும், மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் என்ற ஆணவமும் இந்துமதம் என்ற முகமூடியைப் போட்டுக் கொண்டு பேயாட்டம் போடுகிறது.

    ஆர் எஸ் எஸ் மக்களை ஒன்றிணைக்கும் இயக்கம் அல்ல, அது மதவெறி பிடித்த Divisive அமைப்பு, அதற்கு சாதியொழிப்பில் எல்லாம் அக்கறை கிடையாது. அவர்கள் மனுதர்மத்தை அப்படியே ஏற்பவர்கள், அவர்களின் நோக்கமெல்லாம் சாதியமைப்பை அப்படியே ஏற்றுக் கொண்டு, இந்துக்கள் ஒன்றுபட்டு, தமிழ்க் கிறித்தவ்ரக்ளையும் முஸ்லீம்களையும் எதிர்க்க வேண்டும் என்பது தான். அவர்களுக்கு தமிழர்களிலோ தமிழில் எல்லாம் அக்கறை கிடையாது. உதாரணமாக, இலங்கையில் தமிழர்களையும், இந்து மதத்தையும் அழிக்கும் பெளத்தர்கள் அவர்களின் நண்பர்கள், ஏனென்றால் பெளத்தம் இந்துமதத்தின் அங்கமென அவர்கள் கருதுகிறார்கள்.ஆனால் தமிழையும், தமிழ்மண்ணையும் காக்க தமதுயிரை நீத்த தமிழ்க் கிறித்தவர்கள் அவர்களின் எதிரிகள். அதனால் தமிழுணர்வுள்ள இந்து தமிழர்கள் பார்ப்பனீயத்தையும், சாதீயத்தையும் ஆதரிக்கும் ஆர் எஸ் எஸ் போன்ற இந்தியாவின் இந்துத்துவா இயக்கங்களையும் ஆதரிக்கக் கூடாது. முதலில் தமிழர்களின் சைவ- வைணவ மதங்கள் தமிழாக்கப்பட வேண்டுமே தவிர தமிழர்கள் மனுவாதி, இந்து இயக்கங்களுக்கு ஆதரவளிக்கவோ அவர்களுடன் இணையவோ அல்லது அவர்களின் நிகழ்ச்சிகளில் பங்குபற்றவோ கூடாது.

    • நம் தம்பி மனோஜ் அவர்களுக்கு இவ் விடயத்தில் உணர்வு பூர்வமாக ஆதரவு அளிக்கும் வியாசனுக்கு என் மனமார்ந்த நன்றி.வியாசன் ,நான் முழுமையாக உங்கள் கருத்துக்களை ஏற்கின்றேன்.

  14. மனோஜ் அவர்களுக்கு ,

    கேள்வி ஒன்று ) மதம் மாறலாமா வேண்டாமா ?
    மதம் மாறுவது எனபது பிரச்சினை அல்ல . உரிமைகளை பெறுவதுதான் பிரச்சினை .
    இசுலாத்திற்கு மாறிய நண்பன் எல்லா மசூதிக்கும் சென்று வருகிறான் என்றீர்கள் . அவர் மனிவியோடு செல்ல முடியுமா ? அப்படி என்றால் அது ஐம்பது சதவீத தீர்வுதான் . உங்கள் மனிவிக்கும் கோவில் செல்லும் உரிமை வேண்டாமா ?

    ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதம் மாறுவது எனபது ஒரு அதிகார மையத்தில் இருந்து இன்னொரு அதிகார மையத்தை, சடங்குகளை தேர்ந்தெடுப்பது ..

    எங்கேயோ அரபு தேசத்தில் அவங்க சாதி பார்க்குறாங்க , ஈராக்கில் அடித்து கொன்னுகிறாங்க , அதனால் எனக்கு என்ன வந்தது என்று அடுத்த சிந்தனை வந்தது உங்களிடம் .

    எங்கேயோ கிராமத்துல சாதி பாக்குறாங்க நமக்கு என்ன என்று சிந்தனையின் வேறுவடிவம் . நான் இந்து ஆனால் சாதி பார்ப்பதை தட்டி கேட்கவில்லை ஏனென்றால் எனக்கு என்ன பிரச்சினையும் இல்லை என்பதுவும் , நான் இசுலாமியனாக இருப்பேன் எங்கோ இசுல்லத்தின் பெயரால் நடக்கும் அடக்குமுறையை பற்றி நான் கவலை பட மாட்டேன் என்பதுவும் ஒன்றுதான்.

    அடுத்து கிருத்துவ மதம் சம உரிமைகளை தருவதாக ஒரு மாய தோற்றம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கருப்பு இன மக்களுக்கு ஒரு கோவில் , வெள்ளையர் இன மக்களுக்கு ஒரு கோவில் என்பதுதான் அவர்களுடைய வழி.

    நூலகத்திற்கு சென்று புத்தகம் கேட்டதற்கே போலீசை அழைத்து கூப்பாடு போட்ட சுட்டி ஒன்றை தருகிறேன்.
    http://io9.com/5981089/a-sweet-animated-tale-of-challenger-astronaut-ronald-mcnairs-early-experience-standing-up-to-racism

    தங்கள் கடவுள் சரி என்று நினைகிறார்கள் அதை மற்றவர்கள் ஏற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் அதற்காக தட்டி கொடுகிறார்கள் .

    மதம் என்னும் அடிப்படையில் அன்பை அடிப்படையாக கொண்ட ஒரு மதமே இவ்வாறுதான் இயங்குகின்றது

    எரிகிற கொள்ளியில் எந்த கொல்லி நல்லது என்று கேட்டால் எதுவுமே இல்லை என்பதுதான் பதில் . ஆனாலும் நான் உங்களை போன்று சாதி கொடுமையை அனுபவித்தவன் அல்ல .உங்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் என்றால் மாறலாம் .

    மதம் மாறலாமா வேண்டாமா என்கின்ற கேள்வியை விட , கடவுள் தேவையா என்று சிந்தித்தால் நல பயக்கும் .

    இந்து மதம் நிரூபிக்க புத்தகம் தேடிய உங்களுக்கு கடவுள் இருக்கிறாரா என்கிற சிந்தனையை தூண்டும் அறிவியல் புத்தகத்திற்கான சுட்டி

    http://www.flipkart.com/anaithaiyum-kuritha-surukkamana-varalaru-tamil/p/itmdnxtcyxek4dhh?pid=9789382826286&otracker=from-search&srno=t_1&query=anaithaiyum+kuritha+surukkamaana+&ref=cc7855d2-2a98-4621-b311-67060efba67d

    Question 2) why Hinduism still continues with caste?
    Will answer when I get time.

    • //அடுத்து கிருத்துவ மதம் சம உரிமைகளை தருவதாக ஒரு மாய தோற்றம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கருப்பு இன மக்களுக்கு ஒரு கோவில் , வெள்ளையர் இன மக்களுக்கு ஒரு கோவில் என்பதுதான் அவர்களுடைய வழி. //

      Sir, can you quote a verse from New Testament that talks about racism? How can you tell that Christian religion is racist as some people in Christianity follow racism? To support your view, you have posted a video of a Black man racially abused in America. Does this happen because the Americans followed Christian religion correctly? Christian religion is misused by movements like KKK and others to abuse Blacks. But the same Christian religion was used to fight for the liberation of Blacks during civil war.

      But on the other hand, the women supression you mentioned and castism are sanctioned by the religious text themselves in Islam and Hinduism respectively!

      Also you have every right to point out castism in Tamil Nadu Churches. I myself will not suggest people converting to Christian faith for the sole purpose to get liberated from caste, until Church takes serious mesures to ensure equality.Though I feel, if more people like Manoj come to Christian faith, we can easily fight the castists. Because, when we fight caste, we will be the one quoting Bible verses. But when a Hindu fights against caste, it is the castists who will be quoting the verses from scriptures.

      • //How can you tell that Christian religion is racist as some people in Christianity follow racism?//

        “என்னோட மதம் நல்ல மதம் சார் . சும்மா டக்கரா இருக்கும் சார் ,ஆனா பாருங்க மக்கள் தான் அதா சரியா புருஞ்சுக்கமாட்டேன்குறாங்க சார் .

        அல்லாரும் புருஞ்சு நடந்தா பாலாரும் தேனாறும் ஓடும் சார் ”

        இப்படி எல்லோரும் சொல்வதைத்தான் நீங்களும் சொலி இருகிறீர்கள் . எங்கே நீங்களும் இந்து மதத்தில் கவுண்டர் ,தேவர் வன்னியர் எல்லாம் எங்கே சொல்லி இருக்கிறது என்று காட்டுங்கள் பார்க்கலாம் என்று விவாதம் புரியலாம்.

        தன்னை பிடித்த அழுக்கு போக கிருத்துவத்துக்கு வரலாமா என்று அவர் கேட்டால் , வாங்க இங்கயும் சுத்தம் பண்ண ஆள் வேண்டும் என்கிறீர்கள்!

        ஒரு வேளை அவர் இந்து மதத்தில் இருந்து போராடி தூய்மை படுத்தினால் நிறைய பேருக்கு விடுதலை கிடைக்கும் . ஆனாலும் உங்களுக்கு உங்கள் மதத்தை தூய்மை செய்து நிறைய பேரை மதமாற்றம் செய்ய வேண்டும் என்கின்ற விருப்பம் தான் தெரிகிறது.

        • Again, why you try to equate all religions as same. I have challenged you to quote a verse in The New Testament about racism. I also mentioned that I can quote castist verses from Hindu sciptures and sexist verses from Koran. If I am here to cheat, I should have lied that there is no caste in Christianity. But I acknowledge the truth and want to take corrective action. My motive is not to increase the head count of Christians. I will be more than happy if those castists, dowry getters and others who took in irrational vestiges of their old religions quit Christianity (that will be more than 80% loss).

          My point to Manoj was, study the Christian religion. And see what it is for. And if you feel that religion is correct, join us to implement it correctly. What will happen if we implement Hinduism correctly? Do we need to share the fate of Sambuka or do we need to get tortured/killed as suggested by Manu? Can Manoj enter the inner room of temple, let alone becoming a priest.

          My open challenge. I can show you inter-caste marriages, anti-caste demonstrations etc initated by Chruch. Can you show me such initiatives by others?

          • I asked you where is Kavundar, thevar, vanniyar and its hierarchy is mentioned in Hinduism.

            What makes hindus mandatory to follow manu’s script? is he a prophet?

            After creating b1b1e , Xian King asked all other versions to be burned all over the world and they made sure it was implemented.

            If they were all good and preaches love, why burn them? Why did they go for witch hunt?
            Why did they block the science innovations?

            // Can Manoj enter the inner room of temple, let alone becoming a priest.//

            And you are saying, he can build a temple for himself and can be a priest. Wonderful solution

            // I can show you inter-caste marriages, anti-caste demonstrations etc initated by Chruch. Can you show me such initiatives by others?//

            So Manoj has to join your religion and join these rallies ? Again wonderful solution.

        • //What makes hindus mandatory to follow manu’s script? is he a prophet?//

          Ask this to RSS/Hindu Munnani

          //After creating b1b1e , Xian King asked all other versions to be burned all over the world and they made sure it was implemented.//

          Point 1: When I said Bible is word for word infaliable? I myself have stated in various comments that I don’t hold the traditional view on Bible.
          Point 2: Which king? Where you got this point? From Da Vinci Code? Please check any other reliable source. Before Constantine himself Bible was translated to numberous other languages. Also we can reconstruct almost all of the Bible from quotes of Bible verses in other writings. There is no major change in over all stories and concepts. Again, I am not talking that Bible is preserved word for word. But I think (from my learning) that Bible is not that much different than it was once written. Even without Bible, we can trace the teachings and beliefs of early Christians through other writings. There contradictions are there regarding deity of Christ, Trinity, wine etc. But other aspects of life remained almost universal.

          //Why did they go for witch hunt?//

          Catholic Church did that to create mayhem among people. Again, New Testament is against capital punishment. But Catholic Church even killed people for translating Bible in to local languages. But since those times, Catholics evolved out of their darkness. They apologized (though I believe words are not enough). Is that the case with other religions? They still justify it.

          //Why did they block the science innovations?//

          You asked Manoj to buy one book right? A Short History of Nearly Everything. Have you read it? How many of the scientists mentioned in that book were Christians, particularly priests or others in Chruch positions? If the Church was outright anti-science, they Christendom should have been the last to come out to the modern world. But ironically they lead the entire world. Again, I attribute this not to Catholic Church or divine power. The Galileo affair is something that is partly due to individual feuds. But, yes, it is true that Catholic Church sometimes took ugly stances to prevent scientific truths reaching people.

          //And you are saying, he can build a temple for himself and can be a priest. Wonderful solution//

          Who said? Anyone with qualification can become a pastor in our Church (CSI). The Church I go every week has a Dalit Pastor. bit old link, still http://www.csimadrasdiocese.org/dalits.php

          //So Manoj has to join your religion and join these rallies ? Again wonderful solution.//

          Ram, don’t pretend that you fail to see the difference. Having rights according to the religion and getting prevented in getting it and fighitng against it is far better than having no rights according to religion and getting harrassed by others who use the religion as excuse.

          • // did that to create mayhem among people.Catholics evolved out of their darkness.//

            உன்னோட மதம் கரீக்டா இருந்தா கதொளிக்கர்கள் ஏன் அதை தப்பா புரிஞ்சுகிட்டு தப்பு பண்றாங்க ? அப்புறம் எப்படி எவால்வ் ஆகறாங்க ? அரவியல்னால் எவால்வ் ஆனாங்களா இல்ல ஜெனிசிஸ் படுச்சு ஆனாங்களா ? உன்னோட மதத்தில் இருந்து மாறாமல் எவால்வ் ஆக முட்யும்னா ஏன் இந்து மதத்திலும் அது நடக்காது ?

            // How many of the scientists mentioned in that book were Christians//
            அடப்பாவி, அறிவியல் வளராம ஐரோப்பா இருண்ட காலமா இருந்தது கிருத்துவ மதம் வளர ஆரம்பித்த போதுதான் . மத போதை தெளிந்து அறநூறு வருடங்களுக்கு பிறகு திரும்பி பார்த்தால் அறிவியல் வளர்ச்சி அரபாஇயர்கல் கையில் இருந்தது . பிறகு மீண்டும் கிரேக்கர்கள் எழுதிய கணித புத்தகம் பிலாசபி எல்லாம் படித்த பின்னர்தான் அறிவியல் வளர்ந்தது . ஆனால் அந்த இடைப்பட்ட காலத்தில் மதம் வளர்ந்து இருந்ததால் அவர்கள் கிருத்துவர்களாக இருந்தார்கள். மற்றபடி கிருத்துவர்கள் ஆனதால்தான் கண்டுபிடித்தார்கள் என்று நினைப்பது முட்டாள்தனம் ஆகும். சொல்லபோனால் கிருத்துவர்களாக இருந்ததால் உண்மையை கூற முடியாமல் பயந்து வாழ வேண்டிய நிலைக்கு ஆளானார்கள் . இன்னும் சிலர் சாகும் வயது வரை காலம் தாழ்த்தி சொன்னார்கள் . ஒரு வேலை இந்துக்களாக இருந்து இருந்தால் இந்த பயம் வேண்டி இருந்து இருக்காது .

            சீனிவாசன் ராமானுஜன் அவருடைய குல தெய்வம்தான் கணக்கு சொல்லி அருள்வதாக சொல்லிவிட்டதால் , அந்த கடவுள் இருப்பது உண்மையாகிவிடுமா ?

            //nyone with qualification can become a pastor //
            பேப்பர்ல இனிப்பு என்று எழதி சுவைத்தால் இனிக்காது . தலித்களுக்கு என்று தனி சர்ச் என்பதுதான் நடைமுறை உண்மை

            // getting harrassed by others who use the religion as excuse.//
            மதைதை காரணம் காட்டி சாதி ஒடுக்குமுறை இந்துக்கள் செய்கிறார்கள் என்கிறாய் . அப்படி என்றால் உனது மதத்துக்கு வந்த பிறகு எதை காரணம் காட்டி செய்கிறார்கள் ? உனது மதத்துக்கு வந்த உடனே சமதர்மம் நிலைத்து இருக்க வேண்டாமா ? கறுப்பர்களுக்கு அமெரிக்காவில் எப்போது வோட்டு உரிமை வழங்கப்பட்டது ? தென்னாப்பிர்க்காவில் எப்போது சம உரிமை வழங்கப்பட்டது ? அவர்கள் என்ன இந்து மத்ததை காரணம் காட்டிய ஒடுக்குமுறை செய்தார்கள் ?

            நம்மோட மதம் நல்லா இருக்கு என்று மூளை சலவை செய்யப்பட்ட ஒருவர்தான் நீங்கள். என்ன மதத்துடைய கோர் வேல்யூசை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நீங்கள் நினைப்பது போலதான் அற எஸ் எஸ் உம நினைகிறது.

            மத பாசம் உண்மையை வேறுவிதமாக பார்க்க வைக்கும் . சஹீருக்கு அவர் மத கோட்பாடுகள் லாஜிக் ஆக தெரிகிறது . அதே போல தான் நீங்களும் . அவர் உங்கள் பிரதிபலிப்பு.

            //fighitng against it is far better//

            உன்னோட லாஜிக் படி பார்த்தால்கூட ,சாதி பாகுபாடு காட்டும் மதத்தைவிட , பெண்களை பாவிகளாக சித்தரிக்கும் கிருத்துவ மதத்தை விட, ஆணும் பெண்ணும் சமம் என்னும் மார்க்சிய சிதாந்ததிர்காக போராடுவது இன்னும் ஒரு படி மேல் அல்லவா ?

            • Raman good… keep it up

              //உன்னோட லாஜிக் படி பார்த்தால்கூட ,சாதி பாகுபாடு காட்டும் மதத்தைவிட , பெண்களை பாவிகளாக சித்தரிக்கும் கிருத்துவ மதத்தை விட, ஆணும் பெண்ணும் சமம் என்னும் மார்க்சிய சிதாந்ததிர்காக போராடுவது இன்னும் ஒரு படி மேல் அல்லவா ?//

    • (அவர் மனிவியோடு செல்ல முடியுமா ? அப்படி என்றால் அது ஐம்பது சதவீத தீர்வுதான் . உங்கள் மனிவிக்கும் கோவில் செல்லும் உரிமை வேண்டாமா ?)
      அய்யா ராசா, இஸ்லாத்தில் பெண்கள் பள்ளிவாசலில் சென்று வணங்க கூடாது என்று எந்தவொரு இஸ்லாமிய சட்டமும் இல்லை . ஆனால் பெண்கள் வீட்டில் தொழுவதே சிறந்தது என்பதால் அதனை தெரிந்துக்கொல்கிரார்கள். அவ்வளவுதான்.

      • //ஆனால் பெண்கள் வீட்டில் தொழுவதே சிறந்தது //

        குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை எனபது தான் இது 🙂

        • எதுக்கு தேவையில்லாமல் குப்புற விழுகிரீர்கள். தொழும் இடங்களில் ஆண்,பெண் கலப்பு கூடாது. இதுநல்ல விஷயம் தானே?

        • குப்பற விழுந்தது தாங்கள் தான் ஏனனில், நான் தெளிவாக சொல்லி உள்ளேன் இஸ்லாத்தில் பெண்கள் பள்ளிவாசலில் வந்து தொழுவதற்கு தடை இல்லை என்று , ஆனால் இல்லாத தடையை இருப்பதாக தாங்கள்தான் பொய் பிரச்சாரம் செய்தீர்கள் இப்போது அது இல்லை என்று ஆனா உடன் , தன கருத்தில் உண்மை இல்லாததை நினைத்து வெட்க்கி தலை குனியவேண்டியதும் தாங்கள் தான்.

          • ரபீக் அண்ணன் கூட பேசி ஒரு முடிவுக்கு வாங்கோ. மீசையில, மன்னிக்கவும் தாடியில இருக்கிற மண்ணை நானே தொடச்சு விடுறேன் 🙂

            • நாங்கள் இருவரும் சரியான கருத்தை கூறி விழாமல் தான் இருக்கோம்.ந்ங்கள் தான் கீழே விழுந்தது கூட தெரியாமல் சமாளிக்கிறீர்கள். இதுல சிண்டு முடிப்பு வேறு..

              • //தொழும் இடங்களில் ஆண்,பெண் கலப்பு கூடாது. இதுநல்ல விஷயம் தானே?//

                Narrated Abdullah ibn Abbas: Ikrimah reported on the authority of Ibn Abbas, saying: I think the Messenger of Allah (peace be upon him) said: “When one of you prays without a sutrah, a dog, an ass, a pig, a Jew, a Magian, and a woman cut off his prayer, but it will suffice if they pass in front of him at a distance of over a stone’s throw.” (Abu Dawud, Hadith 703. Albani classified it as Da’if)

                Abu Huraira reported: The Messenger of Allah (May peace be upon him) said: “A woman, an ass and a dog disrupt the prayer, but something like the back of a saddle guards against that.” (Muslim, Hadith 790)

                Is the same applies for men crossing during prayer?

                Why a woman’s witness is considered half that of a man?

                Why men are allowed to marry upto 4 wives, women only one man?

                Why 72 virgins are given for men in heaven? What will happen to women? Will they watch their husband, brothers, sons and father enjoying 72 virgins in heaven?

                Why menstruating women are considered unclean? What is wrong if they touch religious books or do prayer?

                • //Is the same applies for men crossing during prayer?\\ are u thinking that men and women has a same mentality and nature.I believe that even women’s sweet voice will also distract the person. be loyal to yourself and provide the reply.

                  //Why a woman’s witness is considered half that of a man?\\ Normally woman were very soft by there nature.So, it will affect the authentication of the witness. If the person asked a women a in assaulting manner , she may get afraid easily and withdraw her witness.I am saying about the majority and there may be some exceptional. Please don’t take this as under estimating the woman but we are saying the woman’s nature, that’s it.

                  //Why men are allowed to marry up to 4 wives, women only one man?\\

                  Men are allowed to marry and it is not compulsory to marry 4 wives and he should consider those 4 wives in equal.
                  why is not a woman allowed to marry more than one husband? Firstly you should realise, that man is more sexual than the woman. Point number 2… Biologically, a man can perform his duty as a husband, even after he has more than one wife… which a woman, if she has more than one husband, she will not be able to perform her duty, as a wife, enough and satisfactorily. Medical Science tells us that… ‘The lady… during her menstrual period, undergoes certain behavioral and psychological changes… in which she is mentally disturbed and therefore… the majority of the quar­rels, the majority of the quarrels that takes place… during the menstrual period. Accord­ing to a report of the criminal record of the women in USA, most of the ladies that committed the crime, was during the menstrual period. Therefore for a wife, if she has more than one husband, to mentally adjust will be more difficult. Medical science also tells us… ‘If a lady has more than one husband, she has chances of acquiring sexually transmitted diseases, as well as venereal diseases – and she can transmit it back to the husband… which is not the case if a husband, has more than one wife. And suppose, a man who has more than one wife, if he marries and if he has children, the identification of both the parents is possible – The father can be identified, and as well as the mother can be identified. In the other case, if a wife has more than one husband, you will only identify the mother, not the father. Islam gives utmost importance, to identification of the parents. And Psychologists tell us that… ‘If a child cannot identify his parents, he undergoes mental trauma’. No wonder the children of prostitutes, they have a very bad childhood. And if the child goes for admission in the school, and if he is asked… ‘What is the name of the father?’… You will have to give 2 names – and you know what the child is called. There are several reasons why Polyandry is not allowed. And for counter argument, if you tell me, that I will give you several rea­sons why Polygeny is allowed. For example, if a person does… if a couple does not have an issue, and if they marry – a man is allowed to take more than one wife. If suppose, the husband is sterile, can not the wife take more than one husband? No – because no doctor can give you the guarantee, that the husband is 100%
                  sterile. Even if you do ‘Vasectomy’, even if you do ‘Nasbandi’… no doctor can tell you, that the child cannot be a father – so still again the identity, the identification of that child, is yet in doubt. In the other case, suppose the husband, he undergoes an accident or he becomes very severely ill – can not the wife take another husband? Let us analyse… suppose the husband, if he undergoes an accident, or if he is severely ill… he cannot perform his duties very well. Firstly, of the financial aspects – he will not be able to look after the family, the children and the wife – and secondly, he may not be able to satisfy the wife. Regarding this first criteria where he cannot satisfy the children and the wife, Islam has an option. Islam allows such people to take Zakat – those people who cannot make both the ends meet, they can take Zakat. And the 2nd aspect… Medical Science tells us that… ‘A wife requires less conditions to be satisfied, as compared to a husband’. But still… if the wife still wants to… still if she is not satisfied, she has all the reasons to take ‘Kulah’ from the husband, and marry another husband. Here a wife taking ‘Kulah’, is much more preferred – because here, when the wife is getting divorced, she is healthy. In the other case, if she is disabled… if she is handicapped – if she is divorced, who will marry her?
                  WILL BE BACK TO ANSWER LITTLE BIT BUSY….

                  • இவ்வளவு தரம் தாழ்ந்து எழுத முடியுமா என்று நினைக்கும் அளவுக்கு உங்கள் பதில் உள்ளது,

                    There is no need for me to reply anything for you. Any one who is not brainwahsed by religion can find your answer itself as a proof for the quality of a religion.

                    Dear Vinavu, if possible, please ask Manoj to read Zahir’s comment and let us know what he thinks about such views on women.

                    • Okay no issue , let the persons who read may judge the standard of yours and mine.
                      I don’t have much time to give brief explanations so i have given some and if u really want to know the facts please search it in google and get it, and if you are asking all this for criticism , then not only my answer , even the Jesus comes and tells also u will not accept the reality.

                      adding some more points for your understandings or the persons who really wants to understand.

                      1. Two female witnesses not always considered equal to one male
                      witness
                      There are no less than three verses in the Qur’an which speak about witnesses
                      without specifying man or woman.

                      http://www.islam-watch.org/peace4ever/Islam-Treat-Women-Equals-rebuttal-zakir-naik.htm

    • Ram, I myself being a convert was attracted due to simplicity of Christian religion. No mandatory prayers. No restriction on which direction to face while eating or defeacating. No food restrictions. No prayers in unknown languages. No need for pilgrimage (yes, I know some trourist/travels pastors. But hey, the Chruch near to my home is enough if I want to go!) No restictions like jathagam, numerology etc. I can marry a person if we both consent without worrying about dosham or dosai. I can name my child as per my wish instead of looking for the starting letter. There is no caste in theory. I am planning to implement this (trying to get such caste certificate). So now, I am in a religion that truly fits me. I can seek refuge when I need it, else it can rest in shelves.

      For Manoj, I had not suggested any conversion. I only said it is easier to fight caste in Christianity. I also clearly mentioned that there is castism in Tamil Nadu. But that is a vestige of the converts not what they learnt through Bible.

      • @HisFeet,

        Just i have given the answer for your questions up to my knowledge . and if you feel that it is not appropriate, it’s up to u. One more point, in Islam there is no brainwash process as you people do in Christianity.

        So , totally u r focusing on freedom , if it is so , u can be a atheist. I don’t know y u have converted to Christianity. who said there is ” No food restrictions” read your bible . in bible it is mentioned that alcohol prohibited.
        The Bible prohibits the consumption of alcohol in the following verses:

        a. “Wine is a mocker, strong drink is raging; and whosoever is
        deceived thereby is not wise.” [Proverbs 20:1]

        b. “And be not drunk with wine.” [Ephesians 5:18]

        2. Pork prohibited in the Bible
        The Christian is likely to be convinced by his religious scriptures. The Bible
        prohibits the consumption of pork, in the book of Leviticus
        “And the swine, though he divide the hoof, and be cloven footed, yet he cheweth
        not the cud; he is unclean to you”.

        “Of their flesh shall ye not eat, and their carcass shall ye not touch,
        they are unclean to you.” [Leviticus 11:7-8]

        Pork is also prohibited in the Bible in the book of Deuteronomy
        “And the swine, because it divideth the hoof, yet cheweth not the cud,
        it is unclean unto you. Ye shall not eat of their flesh, nor touch their
        dead carcass.” [Deuteronomy 14:8]

        A similar prohibition is repeated in the Bible in the book of Isaiah chapter 65 verse 2-5.

        Please don’t try to brainwash the people by saying there is no restriction in Christianity. i have given some quotations from bible on food prohibition.

        • before asking questions in others religions please have some knowledge in your own religion. As Muslim we people believe in all prophets from aadam (alai) to Mohammed Nabi (sal) and also we believe in thowrah revealed for Moses,zaboor revealed for David , injeel revealed for jesus and the final testament furkaan revealed for Mohammed (PBUH). and we people are very clear in worshiping in one God as all religious scriptures says. we don’t believe in trinity and we don’t believe that ones sin can be cleaned by punishing the innocent. As Bible bench teaches Jesus was killed and crossed for the world humans sins. உலக மக்களின் பாவத்திட்க்காக் தேவன் தன்னை உப்புக்கொடுத்து விட்டார் , சிலுவையில் அறையப்பட்டார். என்றல்லாம் சொல்லப்படும் விஷயங்கள் தங்களுக்கு ஏற்புடையதாக இருக்க முடிகிறதா? பாவம் செய்தவன் தானே தண்டனை அனுபவித்தல் வேண்டும் , தேவன் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும். இன்னும் ஆதம்(அலை) விஷயத்தில் அவர் தடைசையப்பட்ட ஒரு பழத்தை சாப்பிட்டதன் விளைவால் தான் அனைவருக்கும் தொண்டையில் (Adam ‘s apple ) என்ற பகுதி தோன்றியதாக உங்களின் வேதாகமம் தான் சொல்கிறது . ஆதம் ஒருவர் செய்த தவறுக்கு முழு மனித சமுதாயமும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று ஒரு இடத்திலும் , முழு மனித சமுதாயத்தின் பாவத்திற்க்கு பகரமாக தேவனே தண்டனையை ஏற்றுக்கொண்டார் என்று மற்றொரு இடத்திலும் சொல்லப்படுவதின் நோக்கம் என்ன. மொத்தத்தில் தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பதில்லை என்று கூருவதுதான் கிருத்துவமா? இன்னும் நிறைய முரண்பாடுகளை என்னால் பைபிள் லில்லிருந்து காட்ட முடியும் ஆனால் நேரமின்மை காரனத்தால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

          • உப்புக்கொடுத்து விட்டார்* ஒப்புக்கொடுத்துவிட்டார். sorry for the spelling mistake.

      • @HisFeet

        நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல இன்னும் எத்தனை நாட்கள் ஆகும். இன்னும் நிறைய கேள்விகள் இருப்பில் உள்ளன .. கொஞ்சம் தயவுகூர்ந்து தங்களின் பதில்களை சீக்கிரமாக பதிவு செய்தால் நானும் கிறித்துவத்தை பற்றி அறிந்துக்கொள்ள எதுவாக இருக்கும்.

  15. சாதி இரண்டொழிய வெரு இல்லை சாட்ருஙால்நீதி வழுவானெரிமுரையின் மேதினியில் இட்டார் பெரியொர் இடாதார் இழிகுலட்தொர் பட்டாஙில் உல்ல படி

    • முரளி!

      பண்டைப்பாடல்களை நம்பாதீர்கள். அக்காலத்தில் உஜ்ஜவிருத்தி உண்டு. அதாவது பிராமணர்களுக்குத்தானம் செய்யவேண்டுமெனபது மதத்தின் தெய்வக்கட்டளை. அத்தானம் இடுவோரை வாழவைக்கும்; அவர்கள் உயர்ந்தோராவார்கள். இதனால் மக்களுக்கு இப்படிப்பட்ட போதனை தரப்பட்டது.

      உஜ்ஜவிருத்தி பிராமணாளுக்கு இட்டோர் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர் என வாசிக்கவும்.

  16. மேலும் பாபா சாகேப் அம்பேத்கர் ஸ்டாலுக்கு கொடுக்கப்பட்ட இடம் குறித்தும் ஒரு விளக்கம் அளிக்க வேண்டும். அந்த ஸ்டாலும் பாபாசாகேப் அம்பேத்கர் கண்காட்சியும் கண்காட்சிக்கு இடையில் உருவாக்கப்பட்டவை. அதாவது 8 ஆம் தியதி கண்காட்சி ஆரம்பித்தது. 11 ஆம் தியதி அந்த போதிசத்வ அம்பேத்கர் கண்காட்சியை நாங்கள் வடிவமைத்தோம். அதற்கு அனுமதி கேட்டோம். கிடைத்தது. ஆகவே அது E-17 எனும் ஸ்டால் ஒதுக்கப்பட்டது. அது அந்த குறிப்பிட்ட வரிசையில் இறுதியாக இருந்தது. அதனை மாற்றி முதல் பகுதியில் முன்னணியாக அந்த ஸ்டாலை அமைக்கவும் ஒரு முயற்சி அமைப்பாளர்களால் பின்னர் எடுக்கப்பட்டது. இதே சகோதரர் அன்று மாலை என்னிடம் கேட்டிருந்தால் கூட இதை அவரிடம் சொல்லியிருப்பேன். இந்து இயக்கங்களுக்குள் ஆக்கபூர்வமான மனமாற்றங்கள் எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரம் இது. என்னுடைய அலைபேசி எண்ணையும் அவரிடம் நான் கொடுத்திருந்தேன்.

    • அரவிந்தன் நீலகண்டன் நீர் நீண்ட மவுனம் சாதிப்பது ஏன் ? [OR] மோடி மயக்கம் ஏன்?

      [1]ஆசான் அம்பேத்கர் அவர்களுக்கு இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சியின் இடம் அளிக்கபட்டது பற்றி பேசும் நீர் ஆசான் பார்பனிய ஹிந்து மதம் பற்றி கூறி உள்ள எதீர் கருத்துக்களை பற்றி ஏதும் கூறாமல் மவுனம் சாதிப்பது ஏன் ?

      [2]உம் மோடி ஆண்ட குஜராத் மாநிலத்தில் அரசு உயர் அதிகாரிகளிடத்திலும் வேற்றுமை ஏற்படுத்தி தளித்தியர் சமுக உயர் அதிகாரிகளை தனி குடிஇருப்புகளில் குடிஅமர்தீய மோடி பற்றி ஏது கூறாமல் பல ஆண்டுகளாக நீண்ட மவுனம் சாதிப்பது ஏன் ?

      [3] தளித்தியர் சமுக துப்புரவு தொழிலாளர்கள் அவர்கள் செய்யும் தொழிலாள் புன்னியம் அடைகின்றார்கள் என்ற மோடியீன் கருத்துக்கு நீர் கண்டனம் தெரிவிக்காது பல ஆண்டுகளாக நீண்ட மவுனம் சாதிப்பது ஏன் ?

  17. இந்து மதத்தில் (முகப்பிலேயே பெரிய பெரிய ஸ்டால்கள் போட்டு பெருமை பேசிக்கொள்ளும் அளவுக்கு)ஆதிக்க சாதியுணர்வு இருக்கிறது .. அதை எதிர்த்துப் போராடுவதற்கான (கடைசியில் ஓராமாக சின்னதாக ஸ்டால் போட்டு)வெளியும் இருக்கிறது… இது தான் நாங்கள் வேதங்களையும் உபநிஷத்துக்களையும் படித்து அறிந்து வாழ்ந்து உணர்ந்து அறிந்த ஜனநாயகம்…

    சாதியை அடியோடு வெறுக்கும் பெரியாரிய மார்க்சிய ஸ்டாலினிய இணையதளத்துக்கு இது தெரிய வாய்ப்பில்லை!!

    கோயம்புத்தூரில் பூணூல் போட்டுக் கொண்டால் இந்த வித்தையெல்லாம் உங்களுக்கும் கற்றுத் தரப்படும்!! ஓம் சாந்தி! ஓம்!!

  18. Aravindan,
    i agree with you. caste is the biggest garbage in our religion. If we can throw this out, our religion will looks better than any other religion. i would like to remind the writer of this article, nadar ‘was’ lower cast in those days. Even their woman can’t wear any cloth above hip. They can’t enter into temple. Now everything changed with their own effort. Even vanniars says nadar is higher caste without knowing the past. Everything can be changed but financial position will play crucial role.

    As tiruvalluvar said, “porul” is the strongest weapon to break the nose of an enemy.

  19. The Indian caste system can be understood this way. There are four basic castes in what is called Varnashrama Dharma. One is the Shudras, who do menial jobs; Vaishyas, who trade and do business; Kshatriyas, who protect and administer the community or the country; and the Brahmana, who handles the education and the spiritual process of that society.
    http://blog.ishafoundation.org/lifestyle/why-we-do-what-we-do-the-caste-system/ (ஜக்கி வாசுதேவின் ஈஷா தளத்தில் இருந்து )

  20. அரவிந்தன் நீலக்கண்டன் மிக சிறந்த சமுக எழுத்தாளர்களில் ஒருவர்.. இங்கு அவர் எங்குமே சாதியை ஆதரித்து பேசவில்லை, எங்கும் பேசியதும் இல்லை.அவருடைய கொள்கைகளில், கருத்துகளில் நமக்கு உடன்பாடு இல்லை என்பதற்காக அவரிடம் கண்ணிய குறைவாக பேசுவதை தவிர்த்து, தங்களின் சந்தேகங்களை நாகரிகமான முறையில் பண்புடன் வினவலாமே.

    • அவர் ஒரு எழுத்தாளர். ஆனால் சமூக எழுத்தாளரன்று. தம் ஆராய்ச்சிகளைத் தொகுத்து நூல்களாக எழுதிவெளியிடுவார். அந்நூல்கள் அவர் சார்ந்த இந்துத்த்வத்தை மட்டுமே பற்றிபேசும்.

    • அரவிந்தன் நீலக்கண்டன், Rebecca Mary, காவ்யா

      [1]துப்பாக்கி/வீச்சருவால் தூக்காமல் ,வெறும் பேனாவை/விசை பலகையை பயன் படுத்தி மத வெறி கிளப்பும் இவர்[அரவிந்தன் நீலக்கண்டன்] போன்றவர்கள் இடம் மனு தர்ம ஹிந்து மதம் மீது கேள்வி கேட்பதே கண்ணிய குறை என்று கூறுபவர்கள்[Rebecca Mary,காவ்யா] அவர் எழுதீய சிறுபாண்மையினர் மீது வண்மம் கக்கும் மக்கள் விரோத ,எழுத்துகளுக்கு பொறுப்பு ஏற்க/ மன்னிப்பு கேட்க தயாரா ?

      [2]மாற்று மதத்தவர் மீது “மானுடத்தன்மை இழந்த மதவெறி மிருகங்கள்.” “மடத்தனமான மானுடத்தன்மையற்ற மதவெறியை உரிமைகளை நசுக்கி மதம் வளர்க்கும் மதமும் ஒரு மதமா?” என்று அறம் சார் நெறி உடன் எக்கி எக்கி குதிக்கும் இவர் , தன் பார்பன மனு தர்ம பாசிச ஹிந்து மத சாதி வெறியை அரவணைத்து செல்வது ஏன் ?

  21. //இது தான் நாங்கள் வேதங்களையும் உபநிஷத்துக்களையும் படித்து அறிந்து வாழ்ந்து உணர்ந்து அறிந்த ஜனநாயகம்…//

    இதுதான் அரவிந்தனின் ஒரே காரணம் இந்துவாக இருக்க.

    அதாவது, ஒரு தெருவில் சாக்கடைத் துர் நாற்றம் தொடர்ந்து வீசுகிறது. அதை அத்தெருக்காரர்களே நித்தம் நித்தம் உருவாக்கி மறையாமல் காத்துக்கொள்கிறார்கள். அத்தெருவில் ஒரேஒரு வீட்டுக்காரர் மட்டும் அது சரியன்று என்று நித்தம் நித்தம் அடித்துக்கொள்கிறார். ஆனால் அச்சாக்கடையைச் சீர்பண்ண அவராலும் முடியவில்லை. காரணம்: ஆயிரம் பேர் சரியென்று செய்யும் ஒரு செயலை ஒரு தனிமனிதன் எதிர்க்க முடியாது. எதிர்த்தால் அவன் உயிருக்கு பழிதான். எனவே அவனால் அலற்றிக் கொள்ளத்தான் முடியும்.

    ஆக, மனோஜ்குமாருக்கு அரவிந்தன் கொடுக்கும் யோஜனை இதுவே – “வாரும் சாக்கடைக்கு. அச்சாக்கடைத் துர்நாற்றத்தை சுவாசித்துக்கொண்டே அலற்றிக்கொள்ளலாம். துர்நாற்றம் போகாது. ஆனால் அலற்றிக்கொள்வதை யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள். இப்படிப்பட்ட சுதந்திரம் உமக்கு இசுலாத்திலும் கிருத்துவத்திலும் கிடையாது ஓய்!”

    தம்பி அரவிந்தனின் சிந்தனையை நான் பாராட்டுவதில்லை. அவ்ரேஜ் எனபது அவர் சொல்லும் மேற்கூறிய காரணமே விளக்கும். மனோஜ்குமாருக்கு இந்துமத்த்திலேயே இருக்க வேறுபல நல்ல காரணங்கள் இருக்கின்றன. அவை அரவிந்தனின் சிந்தனையில் எட்டவில்லை.

    • காவ்யா,

      அரவிந்தனை விட சிறிது மேம்பட்ட பாசிச மனு தர்ம ஹிந்து மத பதிப்பாக [advanced version ] நீங்கள் செயல் படுவது புரியாமல் இல்லை. அரவிந்தனின் சிந்தனை திறனை விட சற்று உயர்ந்த ஆனால் சற்றும் விலகாத போக்கு தான் உங்கள் எழுத்துகளில் வெளிபடுகின்றது. இன் நீலையீல் அரவிந்தனிடம் சில கேள்விகளை எழுப்பி அவர் மனசாட்சியைத்தட்டிப்பார்ப்போம் என்று வேறு உண்மைக்கு மாறாக அரைகூவல் விடுக்கின்றீர்கள்.அரவிந்தன் திரு அம்பேத்கார் அவர்களீன் பெயரை பயன் படுத்தி தளித்தியர் மக்களை கவர முனையும் போது நீங்கள் அரவிந்தன் கருத்துக்கு வினவில் வந்து வீளக்க உரை எழுதி கொண்டு உள்ளீர்கள்.

      இது உங்கள் மனசாட்சியைத்தட்டிப்பார்க்க வேண்டிய தருணம் என்பதை கீழ் கண்ட கேள்விகள் மூலம் நிருபிக்க போகின்றேன்

      [1] அரவிந்தனின் எக் கருத்துகளில் இருந்து நீங்கள் முற்றீலும் வேறுபட்டு நிற்கின்றீர்கள் ?

      [2]அரவிந்தனின் எக் கருத்துகளில் இருந்து நீங்கள் பகுதி அளவுக்கு வேறுபட்டு நிற்கின்றீர்கள் ?

      [3]அரவிந்தனின் எக் கருத்துகளில் இருந்து நீங்கள் முழு அளவுக்கு ஒன்றுபட்டு நிற்கின்றீர்கள் ?

      உங்கள் பதிலில் பொம்மை எல்லாம் போட்டு தப்பிக்காமல் நேர்மையாக பதில் சொல்ல முயலுங்கள்

      //தம்பி அரவிந்தனின் சிந்தனையை நான் பாராட்டுவதில்லை. அவ்ரேஜ் எனபது அவர் சொல்லும் மேற்கூறிய காரணமே விளக்கும். மனோஜ்குமாருக்கு இந்துமத்த்திலேயே இருக்க வேறுபல நல்ல காரணங்கள் இருக்கின்றன. அவை அரவிந்தனின் சிந்தனையில் எட்டவில்லை.//

  22. இந்து மதத்தில் இருக்கும் சாதிய பாகுபாடுகளை முன் வைத்திருக்கிறார் தலித் வாலிபர். அவருடைய கருத்துக்களுக்கு யாரும் இங்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. சில விசயங்களை அவர் சொல்லாமல் விட்டிருக்கிறார் என்கிற செய்தியை அரவிந்தன் நீலகண்டன் முன் வைத்திருக்கிறார். அவரும் அங்கு நிலவும் சாதிய பாகுபாடுகளை காலப்போக்கில் மாற்ற முடியும் என்கிறார். அதற்கான வெளி இருப்பதாகச் சொல்கிறார். அதுதான் உண்மை.
    இக்கரைக்கு அக்கறை பச்சை என்பதுபோல் கிறித்தவமும் இஸ்லாமும் சாதிக்குள் இல்லை என நீங்கள் நினைக்கலாம். எத்தனை தலித் பாதிரியார்கள் அல்லது கன்னியாஸ்திரிகள் ஆயராகவும் ஆர்ச் பிஷப்பாகவும் இருக்கிறார்கள் என கணக்கு எடுத்துப் பார்த்தால் எவரும் தென்பட மாட்டார்கள். தலித் பாதிரியார்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து பத்திரிகைகளில் கூட செய்திகள் வந்திருக்கிறது. கிறித்தவ நாடார் ஒருவர் கிறித்தவ பரவரை காதலித்தால் கிறித்தவ நாடார் வீட்டிலிருந்தோ அல்லது கிறித்தவ பரவர் வீட்டிலிருந்தோ எதிர்ப்பு வருவது வழக்கம். இக்கட்டுரையை எழுதியவர் பின்தங்கிய சமூகத்தை சார்ந்த ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். அதற்கு எதிர்ப்பு வரும். இஸ்லாமில் தௌகித் பிரிவை சார்ந்தவனுக்கு ஜாக் அமைப்பை சார்ந்த முஸ்லிம்கள் பெண் தர மாட்டார்கள். பிரச்சனைதான் நடக்கும்.
    இஸ்லாமிற்க்குள் சாதிகள் இல்லை என்றாலும் பிளவுகள் அதிகமாக உண்டு. நான் கிறிஸ்தவராக பிறந்து இஸ்லாமில் இணைந்தவன். சேலம் தௌகித் கல்லூரியில் கல்வி பயின்று ஒவ்வொரு ஊரிலும் உள்ள தௌஹித் பள்ளிவாசல்களில் பயான் செய்தேன். அதனால் வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்கள், வேறு பள்ளிவாசல்களைச் சார்ந்தவர்கள் என்னிடம் பேசமாட்டார்கள். பள்ளி வாசல்களில் இஸ்லாமைக் குறித்துப் போதித்த என்னை முஸ்லிம்கள் அவர்கள் வீட்டில் அன்னியனாகத்தான் பார்த்தார்கள். அவர்கள் வீட்டுப் பெண்கள் என்னிடம் பேச மாட்டார்கள். ஏனெனில் நான் இஸ்லாமியராக மாறினாலும் நான் அவர்கள் பார்வை மற்றும் இறைவசனங்களின்படி அந்நியன். அதே வீட்டிலுள்ள பெண், ஒரு முன்பின் அறியாத ஒரு ஆட்டோவில் ஏறி அவனோடு பேசிக் கொண்டு செல்கிறாள். அதே வீட்டிலுள்ள அவள் மகள் ஆண் பெண் இணைந்து படிக்கும் கல்லூரியில் கல்வி பயில்கிறாள். ஆண்களோடு தேநீர் அருந்துகிறாள். கிருத்தவத்தை விட்டு இஸ்லாமிற்கு வருபவர்கள் கிறித்தவ உறவுகளை இழக்கிறார்கள். இஸ்லாம் புதிதாக வந்தவரை அந்நியப்படுத்துகிறது.ஆனால் என் மனைவியுடன் பிறப்பிலே இஸ்லாமியராக உள்ள ஒருவன் மகிழ்வாக பேசுவான். அவன் மனைவி பிள்ளைகளை எங்களுக்கு அறிமுகப்படுத்த மாட்டார். இதுதான் இஸ்லாம்.
    இந்து மதம்தான் இப்படி என சொல்லிக்கொண்டு மதம் மாறினால் ஒரு பிரயோசனமும் இல்லை. இந்து மதத்தை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; எழுதலாம். இந்து மதம் உங்களை மதத்தை விட்டு நீக்காது. இஸ்லாமும் கிறித்தவமும் அப்படியல்ல. மதத்தை விட்டு மட்டுமல்ல ஊரை விட்டும் நீக்கும். அதனால், சாதியை அகற்ற போராடுங்கள். சாதி ஒருநாள் அகலும். இஸ்லாமையும் கிறித்தவத்தையும் மாற்றி அமைக்க நீங்கள் போராட முடியாது. அது உடனடியாக உங்களை மதத்தை விட்டு நீக்கும். சிந்தியுங்கள்.

    • //ஹிந்து மதம் உங்களை நீக்காது; பிறமதங்கள் நீக்கும்//

      அதற்கு காரணம் தெரிந்தவொன்றுதான். ஹிந்துமதத்துக்கென்று தனித்தலைவர் இல்லை. தனிநூல் இல்லை. தனிமடம் இல்லை; தனிக்கொள்கை இல்லை என்றடுக்கிக்கொண்டே போகலாம். இங்கே திண்ணையில் வெளியான என் கட்டுரையைப்படிக்கவும்.

      தடியெடுத்தவனெல்லாம் தண்டல் காரன் என்று கூட சொல்லமுடியாது. ஏனெனில் தடியெடுக்க அவசியமே இல்லை. ஏனோ தானோ எனபதுதான் இந்துமதம். எவருமே இந்து. இந்துக்கடவுள்களை திட்டினாலும், இந்துவைத் திருடன் என்று சொன்னாலும் எவருமே இந்து. கருநாநிதியும் கனிமொழியும் இராமசாமியாரும் எல்லாருமே இந்துதான்.

      தற்காலத்தில்தான் மிரட்டல்விடும் கலாச்சாரத்தை சங்க்ப்பரிவார் ஆட்களில் சிலர் செய்யத்தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் அதை எவருமே சட்டை செய்வதில்லை. அதாவது இந்துக்களின் ஏகோபித்த ஆதரவு அதற்கு கிடையாது.

      ஆக, அவரவர் தம்தம் வழியில் செல்லலாம். பிறர் வழியை விரும்பினால் எடுத்துக்கொள்ளலாம். அல்லது வெகுதூரத்துக்கப்பால் செல்லலாம். இதைத்தான் ஜனநாயம் என்கிறார் அரவிந்தன். இதற்காக இந்துவாக இருங்கள் என்கிறார்.

      இப்படிப்பட்டது மதமில்லை. இது ஓர் இவ்வுலக வாழ்க்கை மட்டுமே. பொதுவாக இந்துக்களில் 90 விழுக்காட்டுக்கு மேல் இப்படித்தான் இருக்கிறார்கள். எல்லாரும் 80 வயதுக்கு மேல் ஆன பிறகுதான் காலச்சேபம் கேட்பார்கள். அதுவரைக்கும் சோற்றாலடித்த பிண்டங்கள்தான்.

      எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் முதலில் தெரியவேண்டியது: எதற்காக ஒருவனுக்கு மதம் என்ற கேள்விக்கு விடை. இவர் எதற்காக இசுலாத்தைத் தழுவினார்? மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டுமென்பதற்காகவா? அடுத்தவன் மனைவி தன்னிடம் பேச அவன் விட வேண்டுமென்பதற்காக?

      ஆம் அப்படித்தான் என்றால் எந்த மதமுமே உங்களுக்கில்லை. இந்து மதமும் இல்லை. ஐயராத்து பெண்ணிடம் பேசமுடியாது தலித்து., அவள் அம்பியிடம்தான் பேசுவாள். உடனே அய்யய்யோ இந்துவாக இருந்தும் பிரயோசனம் இல்லையே; அவள் பேசமாட்டேங்கிறாளே என ஓடிவந்து கிருத்துவத்தில் சேர்ந்தால் – பிள்ளை வீட்டுப்பெண் பேச விட மாட்டார்கள். (நாகர்கோயில் பிள்ளைகள் அனேகம் கிருத்துவர்கள்).

      தமிழ்ச்செல்வன்: இறையருளையும் இறைவனை நினைத்து இவ்வுலகத்தில் ஒழக்க வாழ்க்கை வாழ்பவனும் மதத்தை தன் ஆன்மீகத்துக்குதான் பயனபடுத்துவான். மரியாதை கிடைக்குமா? பி சி பெண்ணை லவ் பண்ணமுடியுமா? என்றெல்லாம் மதத்தை நாடமாடமாட்டான்.

      ஒரு மதம் தன் ஆன்மீகவளர்ச்சிக்கு உதவுமா; அப்படி உதவ அதனிடம் என்ன இருக்கிறது என்று தெரிந்து தேர்ந்தெடுக்கவேண்டும். அவரவர் விருப்பப்படி. இங்கு ஜனநாயகம் இருக்கிறது இங்கு வந்து சேருங்கள் என்பது வியாபாரம். நாத்திகர்களுக்கு ஆன்மிகம் கிடையாது. அவர்களுக்குப் புரியவும் செய்யாது.

      • //பொதுவாக இந்துக்களில் 90 விழுக்காட்டுக்கு மேல் இப்படித்தான் இருக்கிறார்கள். எல்லாரும் 80 வயதுக்கு மேல் ஆன பிறகுதான் காலச்சேபம் கேட்பார்கள்.//
        இது சரிதான். ஆனால் எல்லோரும் சிறு வயதில் இருந்தே கோவிலுக்கு செல்வார்கள் கடவுளிடமும் சாமியாரிடமும் தங்கள் வாழ்க்கை பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வேண்டிக் கொள்ளவும், வெற்றி, செல்வம், செல்வாக்கு பெற வேன்டுதல் நடத்தவும்.
        //ஒரு மதம் தன் ஆன்மீகவளர்ச்சிக்கு உதவுமா; அப்படி உதவ அதனிடம் என்ன இருக்கிறது என்று தெரிந்து தேர்ந்தெடுக்கவேண்டும்//
        ஆன்மிக வளர்ச்சிக்கு மதம் யாருக்கும் தேவை இல்லை. நீங்களே கூறுவது போல 80 வயதுக்கு மேலதான் ஆன்மிக சிந்தனை நிறய பேருக்கு தோன்ரும்.

        இங்கு பிரச்சணையே சமூக வாழ்க்கையில் சாதியின் தாக்கும் அதற்கு துனைபோகும் இந்து மதம் பற்றிய்தான்.

        • கிரிஷ் Be alert ,

          காவ்யா அவர்கள் அரவிந்தன் பதில் அளிக்க வேண்டிய கேள்விகளுக்கு எல்லாம் இவரே பதில் கூறி பல்வேறு வகைகளில் இப் பிரச்சனையை திசை திருப்பி அரவிந்தனுக்கு சாதகமான சூழலை இந்த விவாதத்தில் ஏற்படுத்த முனைகின்றார்.ஒரு விதத்தில் இது அரவிந்தனுக்கும் இங்கு அவரிடம் கேள்வி கேட்கும் வினவு வாசகர்களுக்கும் இடையே பஞ்சாயத்து செய்யும் முயற்சி.

        • பிரச்னை அதுதான் இல்லையென்று சொல்லவில்லை. அதே நேரத்தில் அவர், தான் பிறந்த மதம் சரியில்லை என்கிறார். அதுதான் அவர் விவாதப்பொருள். ஏன் சரியில்லையென்றால், மானம், மரியாதை, கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு, தலித்துகளின் மீது பிற ஜாதியினரின் தீண்டாமை, மற்றும் வெறுப்பு – இவற்றைக் காட்டுகிறார். இவை ஓரளவு பிறமதங்களிலும் உண்டு. அவர் அங்கே போனாலும் அவருக்கு தான் விரும்பியவை கிடைக்கா. திருப்தி உண்டாகப்போவதில்லை.

          இந்துமதம் ஒன்றே ஒன்றாக இல்லை. அது நூற்றுக்கும் மேலான பிரிவுகளை உடையது. தீண்டாமையும் இவர் சொல்லும் பல இடர்களும் இல்லாப்பிரிவுகள் பல உள்ளன‌. சிலை வணக்கமில்லாப்பிரிவும் (எ.கா:ஆர்ய சமாஜ்), ஜாதிகள் இல்லாப்பிரிவும் (எ.கா: ஹரே ராமா ஹரே கிருஷ்ணா; பிரமகுமாரிகள்; இராமானுஜரின் வைணவம்) உள. அப்பிரிவுகளுள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். அப்படியே ஒன்றுமே வேண்டாமென்றால் தனி வழி போகலாம். கோயிலே வேண்டாம்; பூசை புனஸ்காரங்கள் வேண்டா என்றாலும் வழியுண்டு. நம் சித்தர்கள் அப்படித்தான் வாழ்ந்தார்கள். அவர்கள் மாபெரும் இந்துக்கள் எனப்போற்றப்படுகிறார்கள்.

          இதைத்தான் அரவிந்தன் காட்டிஜன்நாயகம் என்றிருக்க வேண்டும். மாறாக, அம்பேத்கர் ஜாதிகள் இருக்கக்கூடாதென்றார். மற்ற இந்துக்கள் ஜாதிகள் இருக்கவேண்டும்; தீண்டாமை வேண்டுமென்கிறார்கள். இரண்டும் இங்கே உண்டு; இதுதான் ஜன்நாயகம் என்று இவருக்கு சொல்லி இந்துவாக இருங்கள் என்கிறார். இது தவறான வழி.

          என் ஒரே பாயிண்ட்: மதம் வழியாக சமூக வாழ்க்கை எல்லாமதங்களும் தருகின்றன. பிறம்தங்கள் அவ்வாழ்க்கையைக் கட்டாயமாக்குகின்றன. எ.கா. பெண்களின் பர்தா, ஆண்களுக்கு தாடி குல்லா, என்று. ஆனால் இந்துமதம் அச் சமூக வாழ்க்கையைக் கட்டாயப்படுத்தவில்லை. எனவே கிரிஷ், சமூக வாழ்க்கையை மதத்தின் வழியாக எடுத்தால் இடர் தலித்துகளுக்கு என்றால், அப்படி எடுக்காதீர்கள் என்கிறேன். இந்துமதம்தான் எப்படியும் எடுக்கலாம் மேலும் அப்படி வகை வகையான வாழ்க்கைமுறையும் இந்துப்பிரிவுகள் வழங்குகின்றன என்னும்போது தலித்துகளுக்கு என்ன பிரச்சினை? ஆன்மிகம் வேண்டாம்; வெறும் வாழ்க்கை முறை மட்டும் போதும் மதத்திலிருந்து என்றால், அதற்கும்தான் இந்துமதத்தின் வழியிருக்கும்போது என்ன பிரச்சினை?

          • //ஆன்மிகம் வேண்டாம்; வெறும் வாழ்க்கை முறை மட்டும் போதும் மதத்திலிருந்து என்றால், அதற்கும்தான் இந்துமதத்தின் வழியிருக்கும்போது என்ன பிரச்சினை?//

            //ஆனால் இந்துமதம் அச் சமூக வாழ்க்கையைக் கட்டாயப்படுத்தவில்லை. //

            சமூக வாழ்க்கைக்கு எந்த கட்டுபாடுகளையும் விதிக்காது. எப்படியும் வாழ அனுமதிக்கும் எனும் போது, ஆன்மிக தேவை இல்லதோர் எதற்காக இந்து என்ற லேபிலுடன் இருக்க வேண்டும்?

            கல்வி, வேலை வாய்ப்பு, சமூகத்தில் மற்ற உயர் ஆதிக்க சாதியினரிடமிருன்ந்து சிறிதேனும் பாதுகாப்பு கிடைக்கும் போது அவர்கள் மதம் மாறுவதில் என்ன தவறு?

    • இஸ்லாத்தில் மாறினதாக சொன்னீர்கள் ஆனால் இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் தெரியாமலா மாறினீர்கள், இதில் ஊர் தோறும் சொற்பொழிவு ஆற்றியதாக சொல்கிறீர்களே, இஸ்லாத்தை பற்றியே தெரியாமல் எப்படி சொட்போளிவுகள் ஆற்றினீர்கள்.
      இஸ்லாமிய பெண்களை அந்நிய ஆண்களின் பார்வையில் இருந்து ஒதுக்கித்தான் வைப்பார்கள் அதற்குத்தான் பர்தா, புர்க்கா எல்லாம். இது புதியதாக இஸ்லாத்திற்க்கு மாறியவரிடம் இருந்து மட்டும் மறைத்துவைப்பதல்ல இதன் நோக்கம். கல்யாணம் ஆகாமல் மற்ற ஆனகளுடன் எவ்வித தொடர்பிலும் இருக்கக்கூடாது என்பதே ஆகும், இதில் சொந்த அத்தை மகனும் அடங்குவான்.

  23. மனோஜ்குமாருடன் அரவிந்தன் நீலகண்டன் நிகழ்த்திய உரையாடல் முழுவதிலும் தான் ஒரு தலித் என்கிற தொனியிலேயே பேசியிருக்கிறார். ஆனால் அரவிந்தன் நீலகண்டன் ஒரு தலித் இல்லை என்று நினைக்கிறேன். வீரமணி யாதவர், மருதையன் ஐயர் என்றெல்லாம் குறிப்பிட்டு விமர்சிக்கும் அரவிந்தன், தான் தலித்தா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும். அவர் தலித் அல்லாதவர் என்றால் அப்படி ஒரு பொய்யான அடையாளத்தோடு பேசியதற்காக நேர்மையுடன் மன்னிப்புக் கேட்க வேண்டும். பெரியார் மீதும் மார்க்சிய கட்சிகள் மீதும் தலித் அரசியல் என்ற பெயரில் சுமத்தப்படும் அவதூறுகள் எப்படி இந்துத்துவவாதிகளுக்குப் பயன்படுகிறது என்பதற்கான உதாரணம்தான் அரவிந்தன் நீலகண்டனின் பேச்சு.

    அரவிந்தன் நீலகண்டன் உங்களிடம் சில எளிய கேள்விகள்….

    * சாதி மறுப்புத் திருமணங்களை ஆர்.எஸ்.எஸ்ஸும் ஆதரிப்பதாகச் சொல்கிறீர்கள்.அப்படியானால் தமிழகம் முழுக்க சாதிமறுப்புத் திருமண இயக்கத்தை ஆர்.எஸ்.எஸ். தொடங்கலாமே?

    * சாதி மறுப்புத் திருமணங்களை எதிர்க்கும் ராமதாஸ், கொங்கு வேளாளர் பேரவை மணிகண்டன் போன்றவர்களை எதிர்த்து ஒரு சின்ன அறிக்கை, பொதுக்கூட்டமாவது ஆர்.எஸ்.எஸ். போட்டதுண்டா?

    * செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடித்தபோது காக்கி டவுசர்களோடு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வந்தார்களே, தர்மபுரி சம்பவத்தின்போது இந்த டவுசர்களைக் காணமுடியவில்லையே ஏன்?

    * நீங்களெல்லாம் இந்துத்துவத்தை எதிர்த்த சாதிமறுப்பாளர்கள் என்றே வைத்துக்கொள்வோம். ஏன் உங்கள் தலைமையில் தமிழகம் முழுவதும் இரட்டை டம்ளர் உடைப்புப் போராட்டத்தைத் தொடங்கக்கூடாது?

    * ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு சாதி கிடையாது என்றால் அது தமிழ்நாட்டில் எத்தனை தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களை நடத்தியிருக்கிறது?

    * இந்து ஆன்மீகக் கண்காட்சியை நடத்தியவர்களுக்கு இந்துத்துவ அரசியல் கிடையாது என்கிறீர்கள். இந்த கண்காட்சியை ஒருங்கிணைத்த குருமூர்த்தி யார்? அவரும் ஸ்டாலினிஸ்டா?

    • //அரவிந்தன், தான் தலித்தா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்//

      He is a Nagarkoil Pillai.

      • நாமென்று பேசியது தவறில்லை. ஒரு நலிந்தோரிடம் உரையாடும்போது அவரோடு அவரின் உணர்வுகளில் தன்னையும் இணைத்துப்ப்பேசுவதாக அமையும். இஃது ஒரு நயத்தக்க நாகரிகம். உயர்பண்பு. He just cast away his caste and identified with his subject as a dalit. I

        have seen many such persons, even among Brahmins, who identify more with lower caste than with their own caste. An excellent example is Mrs Ambedkar, a saraswat Brahmin woman, who began to love Ambedkar when she was his nurse in the hospital only after listening to his struggle for the dignity of dalits and the discrimination he suffered as a mehar. She resolved then that she would identify with dalits and become part of the struggle. Only on that assurance, he married her.

        Aravindan should marry a dalit woman so that he can serve better the cause of his organisation along with his wife. to bring equality in Hindu religion.

    • //அரவிந்தன் நீலகண்டன் உங்களிடம் சில எளிய கேள்விகள்….

      * சாதி மறுப்புத் திருமணங்களை ஆர்.எஸ்.எஸ்ஸும் ஆதரிப்பதாகச் சொல்கிறீர்கள்.அப்படியானால் தமிழகம் முழுக்க சாதிமறுப்புத் திருமண இயக்கத்தை ஆர்.எஸ்.எஸ். தொடங்கலாமே?

      * சாதி மறுப்புத் திருமணங்களை எதிர்க்கும் ராமதாஸ், கொங்கு வேளாளர் பேரவை மணிகண்டன் போன்றவர்களை எதிர்த்து ஒரு சின்ன அறிக்கை, பொதுக்கூட்டமாவது ஆர்.எஸ்.எஸ். போட்டதுண்டா?

      * செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடித்தபோது காக்கி டவுசர்களோடு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வந்தார்களே, தர்மபுரி சம்பவத்தின்போது இந்த டவுசர்களைக் காணமுடியவில்லையே ஏன்?

      * நீங்களெல்லாம் இந்துத்துவத்தை எதிர்த்த சாதிமறுப்பாளர்கள் என்றே வைத்துக்கொள்வோம். ஏன் உங்கள் தலைமையில் தமிழகம் முழுவதும் இரட்டை டம்ளர் உடைப்புப் போராட்டத்தைத் தொடங்கக்கூடாது?

      * ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு சாதி கிடையாது என்றால் அது தமிழ்நாட்டில் எத்தனை தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களை நடத்தியிருக்கிறது?

      * இந்து ஆன்மீகக் கண்காட்சியை நடத்தியவர்களுக்கு இந்துத்துவ அரசியல் கிடையாது என்கிறீர்கள். இந்த கண்காட்சியை ஒருங்கிணைத்த குருமூர்த்தி யார்? அவரும் ஸ்டாலினிஸ்டா?//

      மனுசி கேட்ட கேள்விக்கு நீலகண்டனின் சார்பாக கலமாடும் எலுத்தாலர் சோ தமிழ் செல்வனும் பட்கில் சொல்லலாம்.

      • சாதிமறுப்பிலும், கலப்புத்திருமணங்களிலும் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் நீங்கள் கூறுவது போன்று “சாதிமறுப்புத் திருமண இயக்கம்” என்பது அடிப்படையில் முட்டாள்தனமானது. திருமணம் என்பது வயதிற்குவந்த இருவர் தமது விருப்பின்படி இணைந்துகொள்வதேயன்றி ஏதோவொரு “இயக்கம்” அல்லது போராட்டத்திற்காக செய்துகொள்ளும் ஒன்றல்ல. முதலில் அடிப்படை விடையங்களில் தெளிவு பெறுங்கள்.

        • சாதிக்கொரு மேட்ரிமோனியல்கள் எந்த வகை? இளவரசனும் திவ்யாவும் காதலித்து தானே மணம் செய்தார்கள். உங்கள் புளுத்துப்போன சமூகம் வாழவிட்டதா? அதே சமூகம் பிரம்ம முஹூர்த்தம் குறித்து முன் பின் பார்த்துப்பழகாத மணமக்களுக்கு சாந்தி முஹூர்த்தம் நடத்துகிறதே அது எந்த வகை?

          உங்களது மறுமொழி வெறும் வெற்றுப் பாசாங்கு இனியன். சாதிமறுப்பு திருமணங்களிலும் புரட்சிகர திருமணங்களிலும் மட்டும் தான் மணமக்கள் விருப்பின் படி சுயமரியாதையோடு வாழ்வில் இணைகிறார்கள். வேறு எங்கும் இந்த சாத்தியம் கிடையாது.

          அதே சமயம் சாதி பார்த்து காதலிக்கிறவர்களும் இந்த சமூகத்தில் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் சுட்டிக்காட்டுகிற விருப்பின் அடிப்படையில் இணைகிறார்கள் என்பதற்கு என்ன அர்த்தம்?

          • //சாதிக்கொரு மேட்ரிமோனியல்கள் எந்த வகை? //
            தவறுதான். அவற்றிற்கெதிராக போராடுங்கள், பிரச்சாரம் செய்வோம். போட்டியாக “சாதி மறுப்போர்”க்குரிய சேவை என்று வேண்டுமானால் ஆரம்பிக்கலாம். ஏற்கனவே அவ்வாறான வசதிகள் உண்டு.

            //இளவரசனும் திவ்யாவும் காதலித்து தானே மணம் செய்தார்கள். உங்கள் புளுத்துப்போன சமூகம் வாழவிட்டதா? அதே சமூகம் பிரம்ம முஹூர்த்தம் குறித்து முன் பின் பார்த்துப்பழகாத மணமக்களுக்கு சாந்தி முஹூர்த்தம் நடத்துகிறதே அது எந்த வகை?//
            இதுவெல்லாம் தவறு என்றுதான் நானும் சொல்கிறேன். சாதிமறுத்து திருமணம் செய்பவர்களுக்கு ஆதரவளிப்போம், அவர்களுக்கு இடர்செய்வோருக்கு எதிராக போராடுவோம். அப்படியே மதங்கள் கடந்து திருமணம் செய்பவர்களுக்கும் ஆதரவளிப்போம்.

            //உங்களது மறுமொழி வெறும் வெற்றுப் பாசாங்கு இனியன். சாதிமறுப்பு திருமணங்களிலும் புரட்சிகர திருமணங்களிலும் மட்டும் தான் மணமக்கள் விருப்பின் படி சுயமரியாதையோடு வாழ்வில் இணைகிறார்கள். வேறு எங்கும் இந்த சாத்தியம் கிடையாது.//
            அதேசமயம் மேலே உள்ள உங்கள் கூற்று முழுமுட்டாள்தனமானது. திருமணம் என்பதன் அர்த்தம் தெரியாதோரின் உளறல். வேறுவிதத்தில் பார்த்தால் சாதிகளின் இருப்பை நீங்களும் ஊக்குவிக்கிறீர்கள். சாதிபார்ப்போர் மணமகனின் சாதியும் மணமகளின் சாதியும் ஒன்றா என்று பார்க்கிறார்கள், நீங்களோ சாதிகள் வேறா என்று பார்க்கிறீர்கள். வித்தியாசம் அவ்வளவே!.

            //அதே சமயம் சாதி பார்த்து காதலிக்கிறவர்களும் இந்த சமூகத்தில் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் சுட்டிக்காட்டுகிற விருப்பின் அடிப்படையில் இணைகிறார்கள் என்பதற்கு என்ன அர்த்தம்?//
            காதலிப்பவனிடம் போய் நீ இந்தப்பெண்ணைக் காதலிக்காதே என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை. வேண்டுமென்றால் அந்தப்பெண் அவனை நிராகரிக்கலாம். அவ்வளவே!. உங்களுக்கோ எனக்கோ அதில் கூறுவதற்கு எதுவுமில்லை.

  24. Mr Aravindhan
    Accross India More than 10000 persons have died in caste related murders and atrocities within the hindu religion. that is 95% victims are lower caste victims murdered ,assaulted by upper caste.More assets of the lower caste has been burned down. (scorched earth policy)
    Every day there is a rape of young hindu women (mostly lower caste)

    Every day we see some sought of physical,mental attacks on the lower caste .
    some observations by me.
    I never came across any hindu outfit fighting against caste atrocities,
    I never came across any hindu outfits fighting against rape and sexual assault.
    I never came accross any hindu outfits fighting for self respect .

    Fight against alchohol, fight for self respect, fight for eelam tamils, fight for hindu intercaste marriage,fight for equal respect for all caste within hindu religion and most importantly fighting for social JUSTICE AND upliftment for ALL THE PEOPLE was being done by periyar , left wing and democratic forces only.

    Regards
    GV

  25. இந்து மதத்தில் ஜாதி இல்லை. இடையில் வந்தவர்கள் தான் உருவாக்கி இருக்காங்க

    ஆனால்(சில) இந்துக்கள் இதை விளங்காமல் ஜாதியில் மூழ்கியுள்ளனர். மற்ற சமூகங்களிலும் இப்படி இருக்கலாம்… ஆனால் இந்துக்களிடையே தான் ஜாதித்துவம் மிகுந்து காணப்படுகிறது

    எந்த மதத்திலும் சரி… மதம் போதிப்பதும், மக்கள் நடைமுறையும் சற்று மாறுபடுவது தான் இந்த காலத்தில் எதார்த்தம் என்று ஆகிவிட்டது….

  26. சாதி ஒழிப்பு குறித்து இவர்கள் அச்சப்படுவதற்கு ஒரே ஒரு காரணந்தான் உள்ளது. அது பூணூல் அந்துபோகுமே என்பது.மனிதர்கள் அனைவரும் சமமானவர்களா? இல்லையா? என்கிற கேள்விக்கு அவர்கள் முதலில் பதில் சொல்லட்டும்.

  27. இந்துத்துவ காலிகளின் சாதி ஆதரவு நிலைப்பாட்டுடன் கடுமையாக முரண்படுவதாக சொல்கிற அநீ, அனைத்து சாதி ஸ்டால்களையும் நடத்த அனுமதித்திருப்பதையும் பல்வேறு புத்தகங்கள் வெளியிடுவதையும் இந்துத்துவத்தின் ஜனநாயக மூச்சு என்கிறார். இத்தகைய ஜனநாயக மூச்சு ஈக்கும் பீக்குமே உண்டு.

    அநீ தப்பிக்கிற இடமே பிற மதங்கள் மட்டும் என்ன சும்மாவா என்பது? அனைத்து மதங்களும் மக்களைச்சுரண்டுகின்றன என்பதை மக்கள் புரிந்துகொள்கிற பொழுது இதுபோன்ற கண்காட்சிகள் ஒருவரை இந்துவாகவும், கிறித்தவனாகவும், இசுலாமியனாகவும் வெறியேற்றி பழக்குகிறது என்றால் நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது அநீ மட்டுமல்ல களவாணி; பிஜேவும் தான். கத்தோலிக்க திருச்சபையும் தான்.

    இவர்கள் அரசைச் சார்ந்துவாழ்கிற ஒட்டுண்ணிகள். சந்தனம் மணக்கிறது என்று பார்ப்பதை விட அது பிறதாவரங்களின் சத்துக்களை உறிஞ்சித்தான் வாழ்கிறது என்பதை ஓரறிவு ஜீவனே உணர்த்துகிற பொழுது ஆறறிவு ஜந்துக்கள் மதங்களை வைத்து பிழைப்பு நடத்துவதை அனுமதிக்கலாமா?

    சிறுபெண்களுக்கு கன்னிகாபூஜை நடத்திவிட்டு, பாலியல் சிறுபான்மையினர் புத்தகத்தை வெளியிட அனுமதித்தாம் இந்துத்துவ இயக்கம். ஒரு பக்கம் பெண்களை பாலியல் பண்டமாக பார்க்கிற இந்துமதம் மறுபக்கம் பாலியல் சிறுபான்மையினருக்கு புத்தகம் வெளியிட அனுமதிக்கிறது என்றால் அகம் பிரம்மாஸ்மி என்று சும்மாவா சொல்கிறார்கள்?

    விசயன் பிருகத கள்ளனாக வாழ்ந்தான் என்று சொல்கிற பாரதம் தான் திரவுபதி துகிலுரியப்பட்டதை வேடிக்கை பார்த்ததோடு மட்டுமில்லாமல் யதுவம்ச பெண்களை சீண்டல் செய்த கிருஷ்ணனை வைத்தே திரவுபதிக்கு ஆடைகொடுத்து காப்பாற்றி ஹிந்து தர்மத்தை நிலைநாட்டியது என்றால் இவர்கள் சுட்டிக்காட்டுகிற இந்துதுவ ஜனநாயகத்தின் யோக்கியதை தான் என்ன?

    இதையே கலாச்சாரமாக சுதா ரகுநாதன் போன்ற இஷை கலைஞர்கள் கண்ணன் தீராத விளையாட்டு பிள்ளை என்று பாடாத ராகங்களில்லை; தட்டாத அரங்குகளில்லை என்கிற பொழுது திருவான்மியூர் ஹிந்து ஆன்மிக கண்காட்சி எம்மாத்திரம்!!!

    மக்களை மழுங்கடிப்பதற்கு தான் இங்கு எத்தனை மதங்கள்? ஒருவன் புதிய ஏற்பாடு கொடுக்கிறான். ஒருவன் மதராசாக்களில் தவ்ஹீத் கொள்கை கற்றுக்கொடுக்கிறான். இவர்களெல்லாம் கூட்டணிவைத்துச் சுரண்டுவதை மனோஜ் போன்றவர்கள் மேலும் பரிசிலீக்க வேண்டும். புரட்சிகர அரசியலில் தன்னைப் புடம்போடுவதன் மூலமாகத்தான் இவர்களது பிழைப்பை துடைத்தெறிய முடியும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று.

  28. மனோஜ்குமாருக்கு நான் சொல்வது இதுதான்.

    இந்துமதத்தைப்பற்றியறிய இந்த சங்கப்பரிவார் ஆசாமிகள் பக்கமே போவாதீர். அதாவது அரவிந்தன் நீலகண்டனைப்போன்றவர்கள்.

    இந்து ஆன்மிகப்பெரியோர்கள் பலரிடம் பேசியே தெரிந்து கொள்ளுங்கள். அவர்களைக்காணபது அரிது. ஆனால் முயற்சி திருவினையாக்கும். போலிகளிடம் மாட்டிக்கொள்ளாதீர்கள்.

    மரியாதை, ஜாதி, கலப்புத்திருமணத்துக்கு உதவி: வன்னியர், தேவர் பிராமணாள் எல்லாம் நம்மை விட உயர்வாக நினைத்துக்கொள்கிறார்களே; – இந்த நினைப்புக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை. எனவே இவற்றைத் தூக்கியெறிந்து விடுங்கள்.

    கண்டிப்பாக பார்ப்பனர்களே வேண்டாம். அவர்களில் சான்றோருண்டு. ஆனால் அவர்கள் தங்களைக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். நாம்தான் தேடவேண்டும். தற்சமயம் அவர்கள் வேண்டவே வேண்டாம் உங்களுக்கு. ஏனெனில் அவர்கள் தப்பித்தவறி ஏதாவது சொல்லிவிட்டால் நீங்கள் நொந்து விடுவீர்கள். மறந்து போய் நானும் கீழ்ஜாதியினர் என்றெழதியிருக்கிறேன் பார்த்தீர்களா?

    என் வழி தனி வழி என்றார் நாராயண குரு. அதாவது பார்ப்பனரிடம் செல்லா இந்துமதம். நீங்களே அதை ஆராய்ந்து அவர் செய்தது போல தனிநபராக இந்துவாக இருங்கள்.

    உண்மையிலேயே இந்துவாக இருப்பின் உங்களுக்கு ஆன்மிக நன்மை கிடைக்கும். உண்மையான இந்துவுக்கு அவன் மதம் ஆன்மிகத்துக்கு மட்டுமே ஒழிய அரசியல் பண்ண அன்று.

    ஒருவேளை இந்துவாக அம்மதத்தின் கொள்கைகளைத் தெரியவந்து பிடிக்காவிட்டால் இந்துவிலேயே பலபிரிவுகள் உண்டு. தேடுங்கள். அவற்றுள் ஒன்று கண்டிப்பாக ஒத்துவரும் எனக்கு வந்தது போல. தமிழ்நாட்டில் அந்த ஆன்மிகத்திருவிழா இந்த ஆன்மிகத்திருவிழா என்றெல்லாம் நடாத்துவார்கள் போகாதீர்கள். அவர்கள் அரசியல்வாதிகள்தான் மதம் என்ற போர்வையில். நீங்கள் சென்றது வினவு காட்டியதைப்போல ஜாதியரசியல் அரங்கு.

    இசுலாம் கிருத்துவத்தையும் நான் இகழவில்லை. ஆனால், கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைய வேண்டுமா என்பதுதான் என் கேள்வி.

    • காவ்யா,

      அரவிந்தன் நீலகண்டன் கூறும் ஹிந்து மதத்தில் சனநாயகம் உண்டு என்ற விடயத்துக்கும் எனவே ஹிந்து மதத்தை விட்டு வெளியேறாதீர் என்ற கூற்றுக்கும் , காவ்யா அவர்கள் கூறும் ஒருவேளை இந்துவாக அம்மதத்தின் கொள்கைகளைத் தெரியவந்து பிடிக்காவிட்டால் இந்துவிலேயே பலபிரிவுகள் உண்டு. தேடுங்கள் கூற்றுக்கும் என்ன வேறுபாடு என்பதை காவ்யா அவர்கள் தான் விளக்க வேண்டும்.

      • க்ரிஷுக்கு எழுதிய பதிலை படிக்கவும்.

        கோயில் திருவிழாவில் தலித்துகள் சப்பரத்தின் வடத்தைப்பிடிக்கக்கூடாதென்றால், உத்தபுரத்தில் முத்தாலம்மனை வணங்க்கூடாதென்றால் – தலித்துகள் ஏன் அங்கு செல்கிறார்? அரசாங்கம் நடாத்தும் கோயில்களிலா தடுத்தார்கள்? அரசாங்கமா அவர் ஊர்க்கோயிலில் சப்பர ஊர்வலம் நடாத்தியது?

        உயர் ஜாதி இந்துக்கள் நீ தீணடத்தகாதவன் என்றால் என்ன பிரச்சினை? அவனை நீ தீண்டத்தகாதவன் என்று இவர் சொல்லிவாழலாமே?

        நீ ஏன் பார்ப்பானிடம் போகிறாய்? அவன் எழுதிய மதத்தில் (வைதீக மதம்) நீ தீண்டத்தகாதவன் என்றிருந்தால், அம்மதத்தை நீ கட்டாயமாக ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று அவர்கள் சொன்னார்களா? அவர்கள் கட்டிவைத்த மீனாட்சி கோயிலுக்குள் போக வேண்டுமென ஏன் அடம் பிடிக்கிறாய்? அவர்கள்தான் உன்னை மதிக்கவில்லையே?

        உன் கோயிலுக்கு போ: உன் சப்பரத்தை இழு; உன் முத்தாலம்மனை வண்ங்கு. இந்து மத்ததில் சாமி அவர்கள் கோயிலுள்தான் இருப்பேன் எனச்சொல்லவே இல்லை. உன்னிடமும் இருப்பேன் என்பதுதான்.

        எனவே தலித்துகள் மேலேதான் தவறு. வன்னியரும் நாடாரும் தேவரும் பார்ப்பனரும் பிள்ளைகளும் இராமதாசும் அன்புமணியும் ஜாதிகளைப்போற்றட்டும். அவர்கள் விருப்பம்.

        நம் விருப்பம்: ஜாதிகள் இல்லை. அவர்களிடம் நாம் போகத்தேவையில்லை. அவர்கள் நம்மிடம் வரத்தேவையில்லை. இதுதான் இராமசாமியார் சொன்ன மானம்.

        மானத்தோடு வாழப்பழகிக்கொள்ளுங்கள் மனோஜ் குமார்? ஏன் பி சி பெண் ஏன் தலித்துப்பெண் இல்லை?

        • காவ்யா,

          [1]“மானத்தோடு வாழப்பழகிக்கொள்ளுங்கள் மனோஜ் குமார்? ஏன் பி சி பெண் ஏன் தலித்துப்பெண் இல்லை?” [29.1.1] என்று கேட்கும் காவ்யா அவர்கள், இதே திருமாண விடயத்தில் அரவிந்தன் நீலகண்டனுக்கு கூறுவது என்ன ? “Aravindan should marry a dalit woman so that he can serve better the cause of his organisation along with his wife. to bring equality in Hindu religion”[ 23.1.1]

          அரவிந்தன் நீலகண்டனுக்கு தளித்தியர் சமூகத்தில் பெண் எடுக்க வாய்ப்பு கொடுக்கும் காவ்யா அவர்களீன் சிந்தனை மனோஜ் குமார் என்று வரும் போது தடுமாறி தடம் புரண்டு தளித்தியர் சமூகத்து பெண்னையே திருமணம் செய்து கொள் என்று கூறுவது மனு தர்ம அடிபடையில் தளித்தியர் சமூகத்தை இழீவு செய்யும் செயல் இன்றி வேறு என்ன ? மேலும் இது பெண்களை சாதி சார்ந்து இழீவு செய்யும் செயல் என்பது ஏன் காவ்யா அவர்களுக்கு புரியவில்லை?

          [2]அடுத்தவர் கூறிய கருத்துகளை மேற்கோள்[quote] செய்து கொடுக்க வேண்டும் என்ற எளிய இலக்கணம் கூட தெரியாமல் பெரியார் கருத்துகளை தன் சொந்த கருத்துகளுடன் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி[superimpose] செய்து கலவை ஆக்கி ஒருமையில் பேசும் போக்கு விவாதத்துக்கு ஏற்பு உடையதா என்பதை காவ்யா அவர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அரவிந்தன் நீலகண்டனுக்கு திரு அம்பேத்கார் அவர்களீன் கருத்துக்கள் ஊறுகாய் ஆக பயன் படுவது போல காவ்யா அவர்களுக்கு பெரியார் கருத்துக்கள் ஊறுகாய் ஆக பயன்படுவது தான் இன்று பார்பனிய முரண்

        • Hi Kavya,

          //அவர்கள் கட்டிவைத்த *** கோயிலுக்குள் போக வேண்டுமென ஏன் அடம் பிடிக்கிறாய்?//

          It is not ‘they’ who built those buildings. The Dalits have directly participated in the construction of any building and still do. They have also participated by producing food in the fields that is used to give wages for the artisans employed in the construction of those structures. The lands were usurped from them and they were made to work in them for subsistent wages. If at all there is a group who have the highest claim on those buildings, it is Dalits. So you need to review your position.

    • ஏ எப்பா , இந்த காவியா பெரிய தில்லாலங்கடியா இருக்கும் போல.இதுக்கு காக்கி டவுசருங்களே மேலு, கொழப்பாம நேரடியா பேசுவானுங்க.

  29. வட இந்தியாவில் விஜய் கட்டியார்; தென்னிந்தியாவில் அரவிந்த் நீலகண்டன். இருவருமே அம்பேத்கரை தான் விற்கவிரும்புகிற இந்துத்துவ வெறிக்கு தொட்டும் நக்கும் ஊறுகாயாக பயன்படுத்துகின்றனர். இந்துத்துவ வியாதிகள் அம்பேத்கரை இப்படிப் பயன்படுத்துவதற்கு எது மூலம்?

    இன்றைய தலித் இயக்கங்களே அம்பேத்கரை ஆன்ந்த் டெல்டும்டே சுட்டிக்காட்டுவதைப்போல ஒர் ஆபத்தற்ற புகைப்படமாக பார்க்கின்றனர். சாதியை ஒழிப்பது எப்படி என்று அம்பேத்கரின் புத்தகத்தை தமிழ் மொழியில் வெளியிட்ட தலித் முரசு இதையே ஒரு ஆயுதமாக ஏந்திப்போராடுங்கள் என்று சொல்லிவிட்டு இன்றைக்கு மவுனியாக இருந்தால் ஆர் எஸ் எஸ் அம்பேத்கரை பகடையாக பயன்படுத்துவதற்கு இவர்களும் ஒரு காரணம் என்று ஏன் சொல்லக் கூடாது?

    தலித் அறிவுத்துறையினர் அல்லும் பகலும் ஆராய்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை ஆவணப்படுத்தினாலும் தன் போராட்டக்களத்தை விவாத அரங்குகளாக, வலைத்தளங்களாக, நூல் பிரதிகளாக, ஆய்வுக் கட்டுரைகளாக மட்டும் சுருக்கிக் கொண்டால் அது பிழைப்புவாத அரசியலாக முடிவதும் ஆர் எஸ் எஸ் அம்பேத்கருக்கு ஸ்டால் ஒதுக்கி பிராச்சாரம் செய்வதும் ஒன்றை ஒன்றை இட்டு நிரப்புவதற்கு வாய்ப்பாக அமைகின்றன.

    தலித் அரசியல் கட்சிகள் மாறி மாறி கூட்டணி வைத்து ஒடுக்கப்பட்ட மக்களை வெறும் ஓட்டுப்போடும் உயிரிகளாக தன் சொந்த மக்களை காட்டிக்கொடுப்பவர்களாக இருக்கும் பொழுது இது போன்ற இந்துத்துவ இயக்கங்களுக்கு உரமாக திருமாவும் கி.சாமி போன்றவர்கள் தானே இருக்கின்றனர்?

    இன்றைக்கு மனோஜ் நடைமுறை யதார்தத்தில் இந்து மதம் சாதியால் உயிர் பிழைக்கிறது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறார். அதே சமயம் மதவெறிகளின் நீட்சிகள் வேர் விட்டு வளர்வதற்கு பிழைப்புவாத அரசியல்வாதிகளின் சந்தர்ப்ப வாதமும் தலித் இயக்கங்களின் அடையாள அரசியலும் கள்ள மவுனமும் தலித் அறிவுத்துறையினரின் போராடத் தயங்குகிற குணமும் ஒரு காரணம். இதை முறியடிக்காத போது ஆன்மீக காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக அரசின் ஆசியோடு இன்னும் மக்களை ஒட்ட சுரண்டவே செய்யும். அரவிந்த் நீலகண்டன் போன்றவர்களின் பிழைப்புவாத கண்ணி இவ்விதம் தான் கொழுக்கவைக்கப் பயன்படுகின்றன. அது ஒடுக்கப்பட்டவர்களின் நிணம் என்று சொன்னால் மிகையல்ல.

  30. அன்புள்ள சகோதரர் மனோஜ் குமார்!

    உங்களின் ஆதங்கத்தை படித்தேன். ஒரு சக மனிதனாக உங்கள் துக்கத்தில் பங்கு கொள்கிறேன். இதற்கு நிரந்தர விடிவு நீங்கள் இஸ்லாத்தை ஏற்பது ஒன்றுதான். பலருக்கு கசப்பாக இருந்தாலும் உண்மை இதுதான். வேறு மார்க்கம் தற் காலத்தில் இந்தியாவில் இல்லை. சில தவறுகள் முஸ்லிம்களிடத்தில் இருக்கலாம். ஆனால் இஸ்லாத்தில் இல்லை. இதனை ஏற்கெனவே மதம் மாறி இன்று முழு முஸ்லிம்களாக மாறி விட்ட உங்கள் சகோதரர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

    தற்போது இஸ்லாத்தை ஏற்றுள்ள யுவன் சங்கர் ராஜாவின் தளத்தில் சென்று அவருள் ஏற்பட்டுள்ள மாற்றத்தை காணுங்கள். உங்களின் வாழ்வு சிறக்க, தன் மானத்தோடு ஒரு வாழ்வு முறை கிடைக்க எனது பிரார்த்தனைகள்.

    • இதைத் தான் “தவித்த முயல் அடிக்கும்’ தந்திரோபாயம் என்பார்கள் இலங்கையில். 🙂

      //இதற்கு நிரந்தர விடிவு நீங்கள் இஸ்லாத்தை ஏற்பது ஒன்றுதான்//

    • சுவனப்பிரியன்!

      இசுலாம் என்றால் ஏக இறைவன் தத்துவம் மட்டுமன்று; மெக்காவைப்பார்த்து தினமும் செய்யும் தொழுகை மட்டுமன்று; ரமலான் மாத விரதமட்டுமன்று. இசுலாம் என்றால் வாழ்க்கை முறை: சட்ட திட்டங்கள்; சொல்லியவற்றை கடைபிடித்தே ஆக வேண்டும். ஒருவன் இசுலாமியான தினத்திலிருந்து அங்கு இங்கு நகர‌ முடியாது.

      ஒரு காலத்தில் தமிழகத்தில் திருவல்லிக்கேணி போன்ற ஆர்த்தோடக்ஸ் ஏரியாக்களிலும் உருது பேசும் இசுலாமியர்களிடையும்தான், பர்தாவைக்காணலாம். இன்று பட்டி தொட்டியெல்லாம். காரணம் ஆர்தோடாக்ஸ் இசுலாம் திணிக்கப்படுகிறது.

      அதற்கு காரணம்: இசுலாமில் ஆர்த்தோடாக்ஸ் – நான் ஆர்தோடாக்ஸ் என இருபிரிவுகள் இல. ஒரே பிரிவு: ஆர்தோடாக்ஸ். தமிழ் முசுலீம்களிடையே சன்னி-ஷியா சண்டையில்லை.

      இப்படிப்பட்ட மதத்தில் ஒருவன் சேருமுன், தனக்கு ஒத்துவருமா என்றுதான் பார்க்கவேண்டும். தலித்துகளுக்கு மானம் மரியாதை வேண்டுமென்றால், இசுலாத்துக்கும் போகலாம்; இந்துப்பிரிவுகளில் பலவற்றில் ஒன்றில் சேரலாம். தீண்டாமை இங்கில்லை.

      அவரவர் பெர்சனாலிட்டியைப்பொறுத்த‌தே மதம். ஆன்மிக உணர்வு மென்மேலும் பெருகி –

      வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே

      என்ற நினைப்பில் வாழ ஆசைப்பட்டால், இந்து மதமே சரி. Choose a religion that suits your lifestyle, spiritual aspirations (if any). Hindu religion gives you both: i.e. if you want to live this material life to the core having God only lightly; or if you want to live deeply spiritually. Islam does not offer this choice. It is like getting caught in a trap for ever. The way of life shown for Xians is alien to us. It is Jewish. In Islam, it is Arabish. You will feel like a fish out of water. We are not just born in a place; but breathes its smell and air life long. Hence, religion and we need to have same roots.

    • சுவனப்பிரியன்,

      மானுடம் என்ன மதங்களால்

      பிரிக்க பட்ட

      குரங்கு கை அப்பமா ?

      காசாவில் அடித்துகொள்ளும்

      இரு மதங்களும் ஆதியில் ஒரே இனம்

      சார் மானுடம் தானே ?

      இந்திய வறுமைக்கு மத மாற்றம் தீர்வா ?

      இல்லை

      வர்க்க முரணை தீர்ப்பது தீர்வா ?

      வேறு வேறு மத “அபினை” குடித்தாலும்

      மத வெறி அடிபடைவாதத்தில்

      சுவனப்பிரியனும் அரவிந்தன் நீலகண்டனும்

      அண்ணன் தம்பி தானே ?

      //சில தவறுகள் முஸ்லிம்களிடத்தில் இருக்கலாம். ஆனால் இஸ்லாத்தில் இல்லை. இதனை ஏற்கெனவே மதம் மாறி இன்று முழு முஸ்லிம்களாக மாறி விட்ட உங்கள் சகோதரர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். //

    • Islam gives Dalits (who are 16% of population) will get equal treatment. But women (who are 50%) will be discriminated.

      1. Does Islam give equal property rights for women?
      2. Does Islam allow women to marry 4 men like it allows a man?
      3. Can women have “right hand posseses” (sexual slaves) like Islam allows for men?
      4. Is women’s witness considered equal to men’s witness?
      5. In heaven there are 72 virgins for men. What about women?
      6. An Islamic prayer is anulled if a woman crosses during prayer. Will it be the same is a man crosses a woman?
      7. Why a menstruating women not allowed to touch Koran? What is wrong in it?

      • You ask person of any religion about the issues in their religion, most of the people will accept there are issues with their religions, except majority of the Muslims. It is pity that Muslims are not ready to accept that at least some of their outdated/ridiculous religious concepts as wrong.
        In this 21st century, there is no other religion that comes near to Islam when killings in the name of religions are considered.

    • சுவனப்பிரியரே,
      சாதி பாசிசத்தை தாண்டி , அதைவிட ஆபத்தான மத பாசிசத்துக்கு போக சொல்கிறீர்களா ?
      இஸ்லாத்தில் உள்ள தவறுகளை காட்டினால்தான் கல்லுலிமங்கணைப் போல் இருப்பீர்களே.
      ஒரு சின்ன கேள்வி, இஸ்லாம் முஸ்லிம்களிடம் முஸ்லிம் அல்லாதோரை ( காபிர் ) எப்படி நடத்த சொல்கிரதோ அப்படியே முஸ்லிம் அல்லாதோர் முஸ்லிம்களை நடத்தலாமா ?

      முக்கியமாக யூதர்களை இஸ்லாம் எப்படி நடத்த சொல்கிறதோ, அப்படியே முஸ்லிம்களை யூதர்கள் நடத்தலாமா ?

      நீதி நீதி என்று குதிப்பீர்களே, உங்களது நீதியின் லட்சணத்தை எல்லோரும் தெரிந்துக் கொள்ளட்டும்.

    • இறைவனுக்கு இணை வைப்பதை இசுலாம் கொந்தளிப்பாக கருதுகிற பொழுது யுவன் சங்கர் ராஜா போன்ற பிராண்ட் அம்பாசிடர்கள் சொல்லித்தான் மாஷா அல்லாவிற்கு அர்த்தம் தெரிய முடியுமென்றால் அல்லாவை விட யுவனே மகிமை நிறைந்தவனாக இருக்கிறான் என்று சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

      யுவன் சங்கர் ராஜா சொல்லித்தான் இசுலாமின் பெருமை தெரிய வேண்டியருக்கிறது என்றால் ஏகத்துவம் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாக மாறிப்போனதை மனோஜ்ஜால் கண்டுகொள்ள முடியாதா என்ன? அல்லது சுவனப்பிரியன் இதை மறைக்கிறாரா?

    • ஜனாப். சுவனப்பிரியன்,

      இந்தியாவில் முஸ்லீம்கள் மத்தியிலும் சாதிப்பாகுபாடுகள் உண்டு. கீழேயுள்ள காணொளி (22:00 தொடக்கம்) தலித் முஸ்லீம்களின் பரிதாப நிலையைத் தெளிவாகக் காட்டுகிறது. இந்தியாவில் சாதிப்பாகுபாடு என்பது இந்துக்களிடம் மட்டுமுள்ள பிரச்சனை அல்ல, கிறித்தவர்கள் முஸ்லீம்கள் அனைவர் மத்தியிலும் காணப்படுகிறது என்பதை “Untouchability & Casteism (Castes) Still EXISTS even Today in India- 2013” என்ற விவரணப்படத்தில் காணலாம்.

    • வினவு தளம் ஜாதி, மதம் தாண்டி ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடும்போது அதை நீங்க dawah பணிக்கு உபயோகபடுத்த வேண்டாம். யுவன்சங்கர் ராஜாக்கு இஸ்லாம் புடிச்சு இருந்தா மாறிட்டு போகட்டும் அது அவர் தனிமனித விருப்பம் அதை வைத்து நீங்க விளம்பரம் படுத்தவேணாம்.

    • வினவிலும் மதப்பிரச்சாரம் ஆரம்பித்து விட்டார்களா!!

      சுவனப்பிரியன், பிரச்சார நெடி மிகவும் தூக்கலாக இருக்கிறது.
      கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள்.

      ஒரு குறிப்பிட்ட மதத்தை தழுவினால் மட்டும் நிரந்தர விடிவு கிடைக்குமா, வாழ்வு சிறக்குமா?
      நாம் நல்ல மனிதராக இருந்தாலே போதும். மனிதர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் மதங்கள் தேவையில்லை என்பது எனது கருத்து.

      மதங்களை மறப்போம், மனிதத்தை வளர்ப்போம்.

  31. [[[இத அமைதியா கேட்ட அரவிந்தன் சார், டெல்லி ஜும்மா பள்ளிவாசலிலும், மெக்கா, மெதினாவிலயும் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவங்க தான் இமாம் ஆக முடியும். அங்கேயும் சாதி இருக்குன்னு விளக்கினார்.]]] =அநீ

    இதுக்கு என்னாங்க ஆதாரம்?

  32. இந்த கடிதப் பகிர்வுக்கு திரு. மனோஜுக்கும், வினவுக்கும் மிக்க நன்றி.

    நானும் இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டவன் தான். ஆனால், அதன் சாதிப் பாகுபாடுகளை வெறுக்கிறேன். என்றாவது ஒரு நாள், இந்து மதம், அதன் சாதிப் பாகுபாடுகளை அழித்துவிட்டு மாறி விடும் என்று கற்பனை செய்திருந்தேன். ஆனால் அதை இந்துதுவ இயக்கங்கள் நடக்க விடமாட்டார்கள் போல. சாதி தான் இந்து மதம் என்று இந்துதுவ இயக்கங்கள் கூறினால் அந்த மதம் அழிந்து போவதில் எனக்கு வருத்தம் இல்லை.

    மக்கள் மதம் மாறுவது சுயமரியாதைக்காக என்பது தான் உண்மை. அதைப் பணத்திற்காக என்று இந்துதுவ இயக்கங்கள் கூறி இன்னும் சாதி கொள்கைகளை தூக்கி பிடித்தால், அதுவே இந்து மதத்தின் அழிவுக்கு இட்டு செல்லும்.

    மேலும், பெரியாரின் சாதி மறுப்புக் கொள்கையால் சாதியை ஒழிப்பதில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கும் போது (மற்ற மாநிலத்தை விட), மீண்டும் இங்கே, சாதிக் கட்சிகளும், இந்துதுவ இயக்கங்களும் சாதிக் கொள்கைகளை வெளிப்படையாக பிரச்சாரம் செய்வது ஆபத்தான போக்கை காட்டுகிறது.

    இதனை உறுதியாக எதிர்த்தாக வேண்டும்.

  33. அரசு மற்றும் தனியார் துறையிலும் வேலை / பொறுப்பு அடிப்படையில் உயர் பதவியும், சிறப்பு சலுகைகளும் உண்டு. அங்கு சமத்துவம் பேச முடியுமா?

    சமத்துவம் பேசும் இயக்கங்களிலும், குரல் வளம் உள்ளவர் வானொலிக்கும், சற்று பிரபலமானவர் தொலைக்காட்சிக்கும் பேட்டி கொடுப்பார். இரண்டும் இல்லாத தோழர் தெருவில் போஸ்டர் ஒட்டும் பணியை பெறுவார். அங்கு சமத்துவம் பேச முடியுமா?

    சமத்துவம் பேசும் மனிதருக்கும் பிறக்கும் போது இரண்டு கைகள் உண்டு. ஒன்றை சாப்பிடவும் மற்றொன்றை கழுவுவத்ற்க்கும் உபயோகிப்பவர், மாற்றி செய்வரா? அங்கு சமத்துவம் பேச முடியுமா?

    தன் சொந்த உடலில் சமத்துவம் காணமுடியாதவன், உலகில் சமத்துவம் பற்றி பேச முடியுமா? ஆண்டவன் படைத்த உலகில் ஆயிரம் வித்தியாசங்கள் உண்டு. அதை பெரிதுபடுத்தாமல் இணக்கமாக வாழவேண்டும்.

    • கோபாலகிரி சுவாமி!

      தங்கள் கருத்துக்களை முன் வைத்ததது நிரம்பவும் மகிழ்ச்சி.

      மனோஜ் குமார் போன்ற தலித்துக்களால் மதத்தில்தான் கேட்கப்படுகிறது எனபதை உணருங்கள். கல்வியறியில்லா நாட்கூலி செய்யும் தலித்து தொழிலாளி அவன் வேலை செய்யும் நிறுவனத்தலைவருக்கு நிகராக தன்னை நடாத்துங்கள் என்று கேட்கமாட்டான். அவனுக்குத் தெரியும் தான் அவரைப்போல கறகவில்லை எனவே இவ்வேலையைச்செய்கிறேன் என்று.

      இந்து மதத்தில் சமத்துவம் மறுக்கப்படுவது தலித்துக்க்ளுக்கு. காரணம் பிறப்பினாலேயே ஒருவன் தலித்து; இன்னொருவன் பிராமணன். எனவே தலித்து கோயிலுள் நுழையும்போது அக்கோயில் புனிதம் கெட்டுவிடுகிறது. பிராமணனால் அஃது கூடுகிறது. அதைப்போலவே நம் வீட்டுனுள் அவன் நுழைய நாம் விடுவதில்லை. அவன் எவ்வளவுதான் தூய உடைகளை உடுத்தி எவ்வளவுதான் நற்பண்புகளைக்கொண்டிருந்தாலும் அவன் பிறப்பே அவனை கீழ்ஜாதியாக்கி மதத்திலிருந்து விலக்கிவைத்து விடுகிறது.

      புராணங்கள் மட்டுமல்ல, எழுதப்பட்ட மஹான்களில் வாழ்க்கையிலும் இத்தீண்டாமையைப் பார்க்கிறோம். படித்துப்பாருங்கள். ஒரு தலித்து ஆழ்வாரேயாயினும் அவனை பிராமணர் ஏற்க மாட்டார் என்பது திருமழிசையாழ்வார் திவ்யசரிதத்திலிருந்து அறியலாம்.

      காமதேனுவே ஆனாலும் பசுத்தன்மை போகாது என்பதுதான் வடகலை வைணவத்தின் கொள்கை. அதன்படி, பிறப்புதான் நிர்ணயம் பண்ணுகிறது.

      ஜகஜீவன்ராம் காசிப்பலகலைக்க‌ழக விழாவுக்கு வந்து போனபின் மாணவர்கள் சுத்திப்பரிகார பூஜை பண்ணியது பிரசித்தமான நிகழ்வு. அப்போது அவர் இந்தியாவின் இராணுவ மந்திரி.

      நீங்கள் குறிப்பிடுவது சமூகத்தின் நிலவும் சமத்துவமின்மை. சமூகத்தின் ஒருவன் உயர்ந்தவன் ஆவது: அவனிடமிருக்கும் செல்வத்தால், அச்செல்வத்தால் அவன் அடையும் பதவியால், அல்லது அவன் பெற்ற கல்விச்செல்வத்தால். இவற்றால் அவன் உயர்கிறான். அவன் கேட்காமலே சமூகம் அவனுக்கு உயரிய அந்தஸ்தை கொடுத்துவிடுகிறது. அவன் தலித்தாக இருந்தாலும் பிராமணனாக இருந்தாலும், பணம், பதவி, கல்வி, ஞானம் இவையே ஏற்றதாழ்வை நிர்ணயிக்கின்றன. இருப்பினும், மதத்தால் மனத்தைக்கெடுத்த இந்துக்கள் தலித்து எவ்வளவுதான் கல்விமானாக இருந்தாலும் அவனைத் தீண்டாமைக்கொடுமைக்காளாக்கிய வரலாறு அம்பேத்கர் வாழ்க்கையிலிருந்து அறியலாம். தற்சமயம் அது குறைவு.

      உங்களை எவருமே சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை சரிபண்ணச் சொல்லவில்லை. உங்கள் மதத்தில் சொன்ன காமதேனுவேயானாலும் பசுத்தன்மை போகாது என்ற பொய்யைச் சொல்லாதீர்கள். சொன்னால் உம்மதம் இக்காலத்தில் நீர்த்துவிடும். அல்லது தலித்துகள் வெளியேறிவிடுவர். அவர்கள் போனால் நல்லதுதானே என்றால் சரி. நமது மதம் புனிதமடைகிறது. மனோஜ் குமாரு இங்கே வராதே. வெளியே போப்பா 🙂

  34. //இதுக்கு என்னாங்க ஆதாரம்?//

    அண்ணா,

    ஆதாரம் அவர்களது அதிகாரபூர்வ தளத்திலேயே இருக்கிறது. வேதங்களை தந்த ரிஷிகளின் வம்சாவளிகள் நமது நாட்டில் பார்ப்பனர்கள் என்று அழைக்கப்படுவது போல, குரான் என்ற அரபு வேதத்தை தந்த முஹமது நபி வம்சாவளி சையது என்ற முசுலீம் பார்ப்பன சாதியாக இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான முசுலீம் இறைநேசர்கள் இந்த சாதியை சேர்ந்தவர்களே.

    இந்த தளத்தில் மேல் ஜாதியை சேர்ந்த ஒருவரே தில்லியின் ஜூம்மா மசூதி இமாமாக வேண்டும் என்று (வந்தேறி)முகலாய மன்னன் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து பார்ப்பன ஷாஹி இமாமின் மூதாதையர் வந்தேறினர் என்ற விபரத்தை காணலாம்:

    “Therefore, Emperor Shahjahan wrote to the Shah of Bukhara to send for the exalted post of the Imamat of Jama Masjid a man noble by birth, descendant of the Holy Prophet from both of his parents, with high learning and high qualities, i.e., inwardly and outwardly an outstanding figure of the time.”

    http://www.jmuf.org/about_jamia.htm

    • All brahmins are not descendants of rishis,they rather come from people who learnt from the rishis.

      Thats the meaning of gotra but Muslim syeds claim lineage from prophet mohammad and they are considered above all other muslims.

    • ​​

      அண்ணன் ‘அரவிந்தன் நீலகண்டனின் அல்லக்கை’​ தம்பி Maran அவர்களே,

      உங்களுக்கு எதுக்கு இந்த பதில் சொல்லும் வெட்டி பொல்லாப்பு அப்பு?

      ஷாஜஹான் ஒரு கூமுட்டை.
      அந்த ஆளு ஓழுங்கான முஸ்லிமே இல்லை.
      அவன் சொன்னது செஞ்சது பெரும்பாலும் ஏறுக்கு மாறான தவறுகள்.
      அவன் ஒன்னும் இஸ்லாமின் அத்தாரிட்டி இல்லை.
      அவனது சட்டங்கள் ஒன்னும் இஸ்லாமிய சட்டங்கள் ஆகாது. அறியவும்.
      அவனுக்கு வால் பிடிக்க வேண்டாம்.

      மேலும், நீங்க தந்த சுட்டியில், அறிவும் படிப்பும் உள்ள அறிஞர் வேண்டும்ன்னு சாஜகான் கேட்கிறான். இது சரி. ஆனால், நபியின் வாரிசாக இருந்தால் நல்லதுன்னும் கேட்கிறான். இது இஸ்லாத்தில் தேவை அற்றது.

      நபியின் வாரிசாக ஒரு பாமர படிக்காத முட்டாப்பயல் எவனாச்சும் அங்கெ இருந்து இருந்தால் அவன் டெல்லிக்கு அனுப்பப்பட்டு இருந்திருக்கவே மாட்டான். சாஜகான் அவனை திருப்ப அனுப்பி இருந்திருப்பான். ஆக, இங்கே இமாம் ஆவுறதுக்கு முக்கியம் கல்வி. வாரிசு அல்ல.

      இன்றைய இமாமுக்கு வாரிசு இல்லாமல் போனாலோ அல்லது புகாரியின் மகன் படிக்காத முட்டாளோவோ இருந்தாலோ அல்லது கேடு கேட்ட குடிகாரனாக இருந்தாலோ, மக்கள் விரட்டி அடித்து விடுவார்கள் என்பதையும் அறியவும். இமாமாக முடியாது என்பதையும் அறியவும்.

      மேலும், டெல்லி ஜும்மா மஸ்ஜிதில் இமாமின் வாரிசுதான் இமாம் ஆகலாம் என்பதும் இஸ்லாத்துக்கு எதிரானது. ஷரியத் கோர்ட்டில் யாராவது வழக்கு போட்டால் புகாரியின் வே ட்டி கிழிஞ்சிடும்.

      அடுத்து,

      முக்கியமாக, ஆனானப்பட்ட மக்காவிலுள்ள மஸ்ஜித்திலும், நபியே கைப்பட கட்டிய மதினாவில் உள்ள மஸ்ஜித்திலும் நபியின் வாரிசுகளுக்கு இமாமாக ஆகமுடியாமல் பெப்பே காட்டப்பட்டுவிட்டது. அப்படி வாரிசுகளுக்கு பெப்பே காட்ட சொன்னதே நபி தான். இதுதான் இஸ்லாம். நபியின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு எவனும் பந்தா விட முடியாது இஸ்லாத்தில். அறியவும்.

      மீண்டும் சொல்றேன். ஷாஜகான் ஒரு கூமுட்டை. அவன் செஞ்சது ஏகப்பட்டது இஸ்லாத்தில் இல்லாதது. சொல்லாதது. எதிரானது.

      அப்புறம்,

      மக்கா பத்தியும் சப்பை கட்டி இருக்கார் உங்க பாஸ் அர நீல கண்டன்.
      அதுக்கு உங்களின் அர வேக்காட்டு ஆதாரத்த காணோம் தந்தால் அதில் தொடரலாம்.

      குறிப்பு >>>
      முந்திய கமெண்டில் கொஞ்சம் காணோம். வினவு காரவுக வெட்டி விட்டாக. இதில் என்ன எல்லாம் கொத்துகறி போட போறாகளோ. கமென்ட் முழுசா வருமான்னு தெரியலை.

      ​​

      • //மேலும், டெல்லி ஜும்மா மஸ்ஜிதில் இமாமின் வாரிசுதான் இமாம் ஆகலாம் என்பதும் இஸ்லாத்துக்கு எதிரானது. ஷரியத் கோர்ட்டில் யாராவது வழக்கு போட்டால் புகாரியின் வேட்டி கிழிஞ்சிடும்.//

        அப்படியானால் ஏன் யாரும் இன்னும் வழக்குப் போடவில்லை. இந்த அநீதிக்கெதிராக நீங்களாவது ஷரியத் கோர்ட்டில் வழக்குப் போட்டு, ஒரு நல்ல கல்விமானும் மார்க்க அறிஞனுமாகிய ஒரு தாழ்த்தப்பட்ட அல்லது சாதராண குடும்பத்தைச் சேர்ந்த இந்திய முஸ்லீமை டில்லி ஜும்மா மஸ்ஜிதுக்கு இமாமாக்கி, இஸ்லாத்தில் பிறப்பினால், உயர்வு தாழ்வு கிடையாது என்று நிரூபிக்கலாமே?

        • அதைத்தான் உலகில் உள்ள மீதி எல்லா பள்ளிவாசல்களும் நிரூபித்து கொண்டு இருக்கின்றனவே. டெல்லி ஜூம்மா மஸ்ஜித்தில் தான் நிரூபிக்கணும் என்று சட்டம் இல்லையே. ஏன், இவ்வளவு அக்கறையா விசனப்பட்டு மெனக்கெடும் நீங்க வழக்கு போட்டால் என்ன உங்க குடியா முழுகிரும் தோழர் வியாசண்?

          • டில்லி ஜும்மா மஸ்ஜிதைப் பற்றித் தான் இங்கு பேசிக்கொண்டிருக்கிறோம். அங்கு தான் ஷாஜகானால் நியமிக்கபப்ட்ட முகம்மது நபிகளின் பரம்பரையினர் இன்றும் இமாமாக இருந்து வருகிறார்கள். அதனால் இஸ்லாத்தில் அப்படியான சலுகைகளும், உயர்வு தாழ்வுகளும் இல்லை என்று நீங்கள் பீற்றிக் கொள்ள விரும்பினால், நீங்கள் ஷரியா நீதிமன்றத்துக்குப் போய், இஸ்லாமிய சட்டத்தின் பாரபட்சமற்ற தன்மையை நிரூபிக்க வேண்டுமே தவிர, வேறு பள்ளிவாசல்களில் எல்லோரும் இமாமாகிறார்கள் என்பது வெறும் சப்பைக்கட்டு தானே தவிர, நியாயமான வாதமல்ல.நான் ஒரு முஸ்லீமாக இருந்தால் நிச்சயமாக வழக்குப் போட்டிருப்பேன். ஆனால் நான் ஒரு முஸ்லீம் அல்ல.. Thank heaven for that. 🙂

            • தோழர் வியாசன்,

              1. குரான் நல்ல முறையில் ஓத தெரிந்த மற்றும் தொழுகை இன் சட்டங்கள் தெரிந்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் தொழுகை நடத்துவதற்கு எந்தவொரு ஆட்சேபனையும் இஸ்லாத்தில் கிடையாது என்பதை முதலில் கருத்தில் கொள்க.
              2. குளம் கோத்திரம் பரம்பரையை வைத்து இஸ்லாத்தில் எப்படி உயர்வு இல்லையோ அதொபோன்றே தாழ்வும் இல்லை . எனவே தற்போது தொழுகைக்கு தலைமை தாங்குபவர் குரான் நல்ல முறையில் ஓத தெரிந்த மற்றும் தொழுகை இன் சட்டங்கள் தெரிந்தவராக இருக்கும் பட்சத்தில் அவரை எந்த ரீதியில் தொழுகை நடத்துவதிலிருந்து தடுக்க முடியும்.
              //குரான் நல்ல முறையில் ஓத தெரிந்த மற்றும் தொழுகை இன் சட்டங்கள் தெரிந்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் தொழுகை நடத்துவதற்கு எந்தவொரு ஆட்சேபனையும் இஸ்லாத்தில் கிடையாது// இந்த தன்மைகளை பெற்ற யாராக இருந்தாலும் என்னும் போது, மேற்குறிப்பிட்ட தகுதிகள் உடைய எவரையும் தொழவைக்க செய்யலாம் என்னும்போது இவரும்தானே தானே அந்த கூட்டட்தில் அடங்குவார். தொழுகையை தலைமை தாங்குவதற்கு அவரது குளம் கோத்திரம் வம்சாவளி ஒரு தகுதி இல்லை என்னும்போது அவரை தொழவைக்க கூடாது என்பதற்கும் அதனை ஒருதகுதியாக கொள்ள முடியாதே?

              உதாரனத்திற்க்கு.. ஒருவர் மருத்துவம் படித்து மருத்துவராக உள்ளார் என்று வைத்துக்கொள்வோம் , இன்னும் அவர்களின் பரம்பரையில் உள்ளவர்களான அவருடைய தகப்பன் பாட்டனார், பூட்டனார் போன்றோரும் மருத்துவர் என்று கொள்க. தற்போது ஏற்கனவே உங்களின் வம்சாவழியில் அனைவரும் மருத்துவத்தை படித்து மருத்துவராகவே இருந்துள்ளனர் , எனவே நீங்கள் மருத்துவராக் செயல்படக்கூடாது என்று கூரும் வாதத்தில் எப்படி நியாயத்தை கற்பிக்க முடியாதோ அதுபோன்றே இதிலும் நியாயம் கற்பிக்க முடியாது. எவர் ஒருவர் மருத்துவத்தை படித்துல்லாரோ , தேர்ச்சி பெற்றுள்ளாரோ அவர் மருத்துவராக திகழலாம். அதுபோன்றே எவர் ஒருவர் தொழுகை நடத்துவதற்கான தகுதிகளை பெற்றுள்ளாரோ அவர் தொழுகைக்கு தலைமை தாங்கலாம்.

            • //நான் ஒரு முஸ்லீமாக இருந்தால் நிச்சயமாக வழக்குப் போட்டிருப்பேன். ஆனால் நான் ஒரு முஸ்லீம் அல்ல.. Thank heaven for that. \\
              Alhamdulillay, as we are being Muslims , we use our intelligence before going to court. So, we have safeguarded our time , money and court’s time.

  35. சா(தீய) கட்டுமானங்களின் மீது நின்று கொண்டு இருக்கும் குட்டிச்சுவர் தான் இந்து மதம் என அழைக்கப்படும் பார்ப்பன மதம்.சாதீய கட்டுமானங்கள் சரிந்து விழுந்தால் இந்துமதமும் விழுந்து நொறுங்கிப் போகும்.அதனால் தான் ஆர்.எஸ்.எஸ்,இந்து முண்ணனி பார்ப்பன கும்பல் சாதீயத்தை அரவணைத்துக் கொண்டு போலி சமத்துவம் பேசி மக்களை ஏமாற்றி வருகிறது.கர சேவைக்கு செங்கல்,கடப்பாறை தூக்குவதற்கும்,தீவட்டி பிடிக்கவும்,தேர்மீது அமர்ந்துள்ள தடித்த பிராமணனை எலும்பும் தோலுமாய் இருக்கும் நீ தோளில் சுமக்கவும் கடவுளால் படைக்கப்பட்ட இந்து. புள்ளி விவரங்களில் மட்டும் நீ இந்துவாய் எண்ணிக்கைக்கு மட்டுமே கணக்கில் கொள்ளப்படுவாய்.மற்றபடி அரசு வேதாகம பாடசாலையில் முறையாக வேதம் கற்றிருந்தாலும் உனக்கு அர்ச்சகர் பணி கிடையாது.ஏன் கோவிலில் லட்டு பிடிக்க கூட அருகதை இல்லை என விரட்டப்படுவாய்.எனவே இந்துவாய் இருந்து இழிவை சுமக்காதே.மனிதனாய் வாழ்வோம்,மனிதநேயம் காப்போம்.

  36. இந்து மதத்தில் உள்ள குறைபாடுகள் பற்றிப் பேசுவதை விடுத்து இந்துக்கள் மத்தியிலுள்ள குறைபாடுகள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்.
    இந்து மதம் தவறானதா?
    முதலில் இந்து மதம் ஒருங்கிணைக்கப்பட்ட மதம் அல்ல. வேறு வேறு மதங்கள் அந்நியர் ஆட்சிக்காலத்தில் இந்து மதமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால் அதனிடையே முரண்பாடுகள் தாராளமாக உண்டு. நான்கு வர்ணங்கள் பற்றிப் பேசும் நூல்களும் உண்டு. புலையனின் தானத்தை ஏற்றுக்கொள்ளும் படைப்புகளும் உண்டு. பண்டைய தமிழ்நாட்டு மதங்களில் சாதி இருக்கவில்லை. அவையும் இன்று இந்து மதங்களினுள் வந்திருக்கிறது. அந்த வழக்கங்கள் நூல் வடிவில் இருக்கிறதா என்று தெரியவில்லை.
    எனவே மதம் எதற்காக என்பதில் தொடங்கி அந்த நோக்கத்தை இந்து மதத்தின் மூலம் அடைய முடியுமா என்று ஆராய்வது பயனுள்ளது.
    மற்றப்படி சாதி அமைப்பு முறை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலோ அதனை முன்னிறுத்தும் அமைப்புகள் இனம் காணப்பட்டு வெளிவேஷம் கலைக்கப்பட்டு நிராகரிக்கப்பட வேண்டும் என்பதிலோ மாற்றுக்கருத்து இல்லை.

  37. ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி ஏன் எதற்காக என்று முன்னுரை தருகிறார்கள் விளம்பரத்தில் இப்படி:

    //வெவ்வேறு இயக்கங்கள், பல்வேறு சித்தர்கள், பலதரப்பட்ட சேவகர்கள், பல்வகையான அணுகுமுறைகள்

    எனினும் ஒரே சிந்தனை அதுவே தர்மம், ஒரே செயல் அதுவே சேவை.

    பல்வேறு இந்து அமைப்புக்களின் சேவையை எடுத்துக்காட்டவும்,
    சேவையின் மூலமாக இறைவனை அடையமுடியும் (ரிக் வேதம்)
    என்ற இந்து தர்மத்தின் மேன்மையான தத்துவத்தை விளக்குவதற்காக சிறப்பு அமைப்பு.//

    பல்வேறு இந்து அமைப்புகளின் சேவையை வினவு போட்டிருந்த படத்தின் மூலம் தெரியலாம்.

    அமைப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

  38. அரவிந்தன்நீலகண்டன் அண்ணா சாதி பெருமை பேசுகிறவர்களை வைத்து சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்துவிட முடியுமா சாதி இருக்கட்டும் தீண்டாமையை ஒழித்து விடலாம் என்று காந்தியின் சொன்னாராம் அது போல பேசுரிங்களே மேலும் இந்து மதம் சாதிய பெருமை பேசுவதை ஆதரிக்கிறதே அது எப்பிடினா, தன் சாதியை உய்ர்த்தி பேசுகிற ஒருவன் மற்ற சாதியை இழிவாக நினைப்பது இயற்க்கைதானே வேண்டுமானால் பறையர்களுக்கு ஒரு ஸ்டால் ஒதுக்கி விடுவோம் தேவந்திரகளுக்கு ஸ்டால் ஒதுக்கிய்து போல என்னே அறிவு உங்களுடையது சாதியை ஒழிக்காமல் சாதிய ஏற்றதாழ்வுகளை எப்பிடி அண்ணா ஒழிக்க முடியும் மலம் இருக்கட்டும் நாற்றத்தை மட்டும் போக்கி விடுவோம் எஙிறீர்களே அனாலும் சாதி ஒழிப்பிற்க்கான ஆக்க பூர்வமான் கொள்கைகள் உங்களிடம் இல்லை என்று ஒப்புக்கொண்டிருக்கிறீர்……

    • p.joseph,

      [1]பாசிச பார்பனியம் பேண்ட சாதி என்ற மலம் உற்பத்தி செய்யும் தூர் நாற்றத்தை ஹிந்து மத ஆன்மிகம்,வேதம், ஹிந்து பண்பாடு, என்ற பலான பலான வாசனை திரவியங்கள் [perfumes] அடித்து மறைத்து கொள்வது தான் இந்த RSS BJP VHP [சங்க பரிவார் ] களீன் வேலை.

      //உங்களுடையது சாதியை ஒழிக்காமல் சாதிய ஏற்றதாழ்வுகளை எப்பிடி அண்ணா ஒழிக்க முடியும் மலம் இருக்கட்டும் நாற்றத்தை மட்டும் போக்கி விடுவோம் எஙிறீர்களே அனாலும் சாதி ஒழிப்பிற்க்கான ஆக்க பூர்வமான் கொள்கைகள் உங்களிடம் இல்லை என்று ஒப்புக்கொண்டிருக்கிறீர்……//

  39. அரவிந்தன் நீலகண்டனுடன் ஒரு தலித் இளைஞர் – நேருக்கு நேர்
    மதம் மறுவது ஒரு திர்வாகாது. ஆனைத்து மதங்களிளும் இது போன்ற சம்பவம் உள்ளது.

  40. இங்கு பதிந்த பலரின் கருத்துக்களும் இஸ்லாத்துக்கு செல்வதை விட நாத்திகனாக இருந்து விடு என்பதுதான். அதற்கு காரணமாகவும் இஸ்லாத்தின் பெயரால் நடைபெறும் வன்முறைகளை காரணமாக்குகிறார்கள். நாத்திகம் பேசுபவர்களில் தீவிரவாதம் இல்லையா? சில நாட்களுக்கு முன் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தை காவு கொண்டது நாத்திகம் பேசும் ரஷ்யா அல்லவா? உலகின் பல போர்களுக்கு காரணமே நாத்திகர்கள் அங்கு மூக்கை நுழைப்பதுதான். எனவே தீவிரவாதம் என்பது எல்லா இயக்கத்திலும் உள்ள ஒன்றே. இதற்கு இஸ்லாம் மட்டும் விதி விலக்கல்ல.

    ஆனால் வாழ்வியல் முறை என்று சீர் தூக்கி பார்க்கும் பொது மற்ற இசங்களை விட இஸ்லாம் ஒரு படி மேல் என்பது எனது எண்ணம்.

    • உங்கள் மதநம்பிக்கையும் அதையொட்டி எடுக்கப்படும் முடிவுகளும் எவ்வளவு அபத்தம் ஆபாயகரமானது என்பது உங்கள் பின்னோட்டமே வெளிச்சம் போட்டு காட்டுகிறதே!

      மலேசியவிமானத்தை காவு கொண்டது நாத்திகம் பேசும் ரஷ்யா என்பது யார் உங்களுக்கு சொல்லித் தந்த பாடம்?.அமெரிக்க-ஐரோப்பியயூனியன் முதாலித்துவ பத்திரிக்கைகளா?

      இங்கும் இன்னெருயுலகம் இருக்கிறது என்பதை கவனத்தில் எடுங்கள்.வாழ்வியலுக்கு பொருந்த கூடிய உண்மைகள் அங்கிருந்துதான் வெளிவருகின்றன.

      யார் உங்களுக்கு ரஷ்யாநாடு நாத்திகநாடு என்று சொல்லித் தந்தார்கள்?.அப்படியொரு காலம் இருந்தது தான்.அது நடந்து முடிந்து இருபத்தைந்து வருடங்கள் கழிந்து விட்டது.இன்றைக்கு பழைய இறந்த மதங்கள் பூசாரிகள் எல்லாம் உயிர் பெற்று திரும்பு வந்துவிட்டார்கள் பாட்டாளிகளின் இரத்தம் குடிப்பதற்கு.

      மதநம்பிக்கையை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள் அரசியலுடன் முடிச்சுப் போடாதீர்கள்.

      குண்டடிபட்டாலும் “அல்லாவோ அக்பர்” மைதானத்தில் “கோல்” இறக்கினாலும் “அல்லவோ அக்பர்” என்றால்…உங்கள் வாழ்வியல் நடைமுறை இஸ்லாம் உழைப்பாளிகளும் பொருந்தி வரமாட்டாது என்பதே பொருள்.

    • சுவனபிரியரே,

      நான் கேட்டதற்கு பதிலை கானோம் ?

      //ஒரு சின்ன கேள்வி, இஸ்லாம் முஸ்லிம்களிடம் முஸ்லிம் அல்லாதோரை ( காபிர் ) எப்படி நடத்த சொல்கிரதோ அப்படியே முஸ்லிம் அல்லாதோர் முஸ்லிம்களை நடத்தலாமா ?

      முக்கியமாக யூதர்களை இஸ்லாம் எப்படி நடத்த சொல்கிறதோ, அப்படியே முஸ்லிம்களை யூதர்கள் நடத்தலாமா ?//

    • //அதற்கு காரணமாகவும் இஸ்லாத்தின் பெயரால் நடைபெறும் வன்முறைகளை காரணமாக்குகிறார்கள். // அய்யா சுவனப்பிரியன் இது மிஸ்டர் அரவிந்த் வாண்டடா வந்திருக்கிற பதிவு. நீங்களே ஏன் கிராஸ்ல வந்கு மாட்டிக்கிறீங்க? உங்களுக்குன்னு ஸ்பெஸ்ல் பதிவுகள் இருக்கே?அவர் ஏற்கனவே அமுக்கமா எஸ்கேப் ஆன மாட்கிரி இருக்கு.

    • விவாதம் செய்வதில் வியாசனின் கால் தூசுக்கு கூட ஈடு ஆக மாட்டீர் சுவனப்பிரியன்,

      [1]வீழ்த்தபட்ட விமானம் வீழந்தது உக்ரைன் எல்லைகுள். உள் நாட்டு பிரச்சனை,போர் நடக்கும் உக்ரைன் வழி தடத்தில் விமானத்தை செலுத்த அனுமதி அளித்த மலேசிய அரசு எவ்வளவு பெரிய முட்டாள் தனத்தை செய்து உள்ளது என்பதை உணர உங்களால் முடியாமைக்கு காரணம் என்னவோ ?

      [2]மேலும் ருஷ்ய நாடு என்ன நாத்திக நாடா ? அது கிருஸ்துவ நாடு தானே ?கம்யுனிஸ்டுகள் ஆட்சி இழந்து 23 ஆண்டுகள் ஆயிற்ரே !

      [3]`ஈராக் போர் , லிபியா போர் என்று , எல்லாவற்றுக்கும் நாத்திகம் தான் காரணமா ? US twin tower அய் உடைத்தது நாத்திகமா ? பின்லேடன் அவர்களை வளர்த்து விட்டு பின் வாங்கிகட்டி கொண்டது யார் நாத்திகமா இல்லை USA வா ?

      [4] உங்களை பற்றி பயங்கர பில்ட் அப் இணைய தளங்களில்… ஆனா விவாதத்தில் வாதம் செய்வதில் வியாசனின் கால் தூசுக்கு கூட ஈடு ஆக மாட்டீர் சுவனப்பிரியன்

      //சில நாட்களுக்கு முன் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தை காவு கொண்டது நாத்திகம் பேசும் ரஷ்யா அல்லவா? உலகின் பல போர்களுக்கு காரணமே நாத்திகர்கள் அங்கு மூக்கை நுழைப்பதுதான். எனவே தீவிரவாதம் என்பது எல்லா இயக்கத்திலும் உள்ள ஒன்றே. இதற்கு இஸ்லாம் மட்டும் விதி விலக்கல்ல. //

  41. தென்னிந்திய ஜிகாத் – தொடரும் பயங்கரம் (http://www.tamilhindu.com/2014/07/southindianjihad/) என்ற தலைப்பில் அரவிந்தன் நீலகண்டன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். முழுக்க முழுக்க முஸ்லீம்கள் மீதான காழ்ப்புணர்வோடு எழுதப்பட்டுள்ளது.

  42. இந்தியாவில் சாதிப்பிரச்சனை இந்துக்களின் மத்தியில் காணப்படும் பிரச்சனை அல்ல. சிலர் தமது இந்துமதக் காழ்ப்புணர்வை வெளிப்படுத்த இந்த விடயத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்தியாவில் எல்லா மதத்தினர் மத்தியிலும் சாதிப்பாகுபாடுகள் காணப்படுகின்றன. வேறு பல மதங்களிலிருந்து பல நல்ல கருத்துக்களையும், போதனைகளையும் உள்வாங்கி உருவாகிய பிற்கால மதமாகிய சீக்கிய மதத்தினர் கூட, இந்தியாவில் சாதிப்பாகுபாடுகளும், சாதிக் கொடுமைகளும் காணப்படுகின்றன. அத்துடன் கிறித்தவம், இஸ்லாம் மற்றும் இலங்கையில் பெளத்தர்கள் மத்தியிலும் மோசமான சாதிப்பாகுபாடுகள் காணப்படுகின்றன. இந்தியாவில் பெளத்தம், கிறித்தவம், இஸ்லாம், சீக்கியம் போன்ற மதங்களுக்கு மதம் மாறிய தலித்துக்கள் இன்றும் தலித்துக்கள் தானே தவிர அவர்களின் சாதி அவர்களை விட்டுப் போய் விடவில்லை, (மேலேயுள்ள காணொளியில் ஆதாரங்களுண்டு) அதனால் இந்தியாவில் சாதிப்பிரச்சனை என்பது வெறுமனே இந்து மதத்தின் பிரச்சனை அல்ல. அது இந்திய மக்களின் சமூகப் பிரச்சனை. ஆனால் சிலர் இந்துமதத்தை தாக்குவதில் மட்டுமே குறியாக உள்ளனர், ஆனால் ஏனைய மதங்களில் காணப்படும் சாதிப்பிரச்சனைகளை அப்படியே அடக்கி வாசிக்கிறார்கள். அது உண்மையான, வெளிப்படையான, கருத்தாடல் அல்ல. சிலர் இது தான் சாட்டென்று, “ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்பது போல தமது மதங்களுக்கு ஆள்பிடிக்கும் கங்காணி வேலையும் பார்க்கிறார்கள். 🙂

    என்னுடைய கருத்து என்னவென்றால், சாதிப்பிரச்சனைக்காக தமிழர்களின் முன்னோர்கள் கட்டிக்க காத்த சிவனிய-மாலிய நெறிகளை விட்டு ஓடுவது இதற்கு உண்மையான தீர்வல்ல. அப்படி ஓடினாலும் சாதி ஒழியப் போவதில்லை என்பதை நாம் நடைமுறையில் காண்கிறோம். அதனால்:
    1. முதலில் நாங்கள்- தமிழர்கள் இந்துக்கள் என்று எம்மை அழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் உண்மையில் இந்துக்கள் அல்ல. எமது முன்னோர்கள் சிவனிய அல்லது திருமாலிய நெறியினர். உதாரணமாக இலங்கைத் தமிழர்கள் தம்மை இந்துக்கள் என அழைப்பதில்லை. அது எங்களின் வழக்கமல்ல. (இந்துக்கள் என்பது 100-150 வருடங்களுக்குள் ஏற்பட்ட மாற்றம் தான். Hindu Mahasabai, Hindu college etc.) அதிலும் இணையத் தளங்களில் தான் ஈழத்தமிழர்கள் இந்துக்கள் என்ற சொல்லை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள் தவிர, பேச்சு வழக்கில் நாங்கள் சைவ சமயத்தவர் (அதில் திருமாலியமும் அடக்கம்) என்று தான் குறிப்பிடுவார்கள்.

    2. உண்மையான தமிழ்ச்சைவத்தில் சாதிப்பாகுபாடு கிடையாது, அப்படி பாகுபாடு காட்டுவதும் பாவம் என்பதற்கு அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறே சான்றாகும். அவர்களில் பறையரும், புலையரும், ஆண்டானும் அடிமையும், பார்ப்பனரும், வேளாளரும், வணிகரும், அரசரும், பெண்களும் எல்லோரும் அடங்குவர். சிவனுக்கு முன்னால் அவர்கள் எல்லோரும் சமமானவர்கள். அவர்களுக்கு ஏற்றத்தாழ்வு காண்பிப்பது சிவநிந்தனை என்பதை அறிவுறுத்தத் தான் கோயில்களின் அறுபத்துமூன்று நாயன்மார்களின் சிலைகளும் ஒரே பீடத்தில் வைக்கப்படுகின்றன.

    3. சாதிப்பாகுபாட்டின் அடிப்படை பொருளாதாரமும் நிலமும் தான். நிலவுடமைக்கார்கள் தமது திமிரையும், ஆணவத்தையும் தான் கோயில் திருவிழாக்களில் சாதிவடிவில் வெளிப்படுத்துகிறார்கள். அதனால் அப்படியான் சாதிப்பாகுபாடு காட்டும் கோயில்களின் திருவிழாக்களை, தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்ல, சாதியொழிப்பை விரும்பும் எல்லாத் தமிழர்களும் ஒதுக்க வேண்டும், அத்தகைய விழாக்களுக்கு போவதைத் தவிர்க்க வேண்டும்,

    4. இலங்கையில் வேதங்களுக்கு இணையாக அதை விட உயர்வாகத் தான் தமிழ்த் தேவாரங்கள் மதிக்கப்படுகின்றன. அது தான் ஈழத்தமிழ்ச் சைவத்தின் அடிப்படையாகும். அந்த நிலை தமிழ்நாட்டில் ஏற்பட வேண்டும்.

    “When it comes to religion – Hinduism – the religion of most Tamils, there has been a conscious effort ever since the time of Arumuga Navalar (1822 – 1879) to uphold Saivite traditions that highlight non-Brahminic Saiva Sitthanda approaches, in preference to the Brahminic Vedanta traditions. Even today, the Sri Lankan Tamil Hindus want to call their religion Saivism, and not Hinduism.” – Prof. Karthigesu Sivathamby-(The Making of a Sri Lankan Tamil)

    5. இலங்கையில் போன்று மதக்கல்வி ஒவ்வொரு மத மாணவர்களுக்கும் கட்டாய பாடாமாக்கப்பட்டு, தமிழ்ச்சைவத்தின் வரலாற்றில் சமத்துவத்தையும், சாதிப்பாகுபாடு காட்டுவது தமிழர்களின் சைவத்துக்கு எதிரானது என்பதையும் தமிழ் மாணவர்களுக்கு (தமிழர்கள் பெரும்பான்மையினர் சைவ-வைணவ மதத்தினர்) கற்பிக்கப்பட வேண்டும்.

    6. ஆனானப்பட்ட யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலரின் உயிலிலும், யாழ்ப்பாணத்தார் சிதம்பரத்து எழுதிய சொத்துக்களிலும் “சிவமதத்தைச் சேர்ந்த” இன்னாரின்னார் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர இந்துமதம் என்றல்ல. ஆறுமுகநாவலரே இந்து என்ற சொல்லை விட சைவம் என்ற சொல்லைத் தான் தன்னை அடையாளப்படுத்த பயன்படுத்தியுள்ளார்.

    7. இந்து மதம் என்ற வட இந்தியர்களினதும், பார்ப்பனர்களினதும் ஒரு குடையின் கீழ் இல்லாமல் தமிழ்ச்சைவத்தை வேறுபடுத்தி அதை வளர்த்து ஊக்குவிக்க வேண்டும். தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்தும் பார்ப்பனர்கள் தமிழ்ச் சைவத்தில் தம்மையும் தயக்கமின்றி இணைத்துக் கொள்வர். தாம் தமிழர்கள் அல்ல, அல்லது தமிழர்களை விட உயர்வானவர்கள் என நினைத்துக் கொள்ளும் சமக்கிருத, மனுவாதிகள் தமிழை எதிர்ப்பார்கள். அதனால் அவர்களின் விருப்பு, வெறுப்புகளைப் பற்றி தமிழர்கள் கவலைப்படத் தேவையில்லை.

    8. பார்ப்பனர்களின் கரங்களிலிருந்தும், ஆதிக்க சாதிகளின் கரங்களிலிருந்தும், (அவர்களின் முழு ஆளுமைக்குக் கீழுள்ள கோயில்களை) எமது முன்னோர்களின் கோயில்கள் மீட்கப்பட வேண்டும்.

    9. தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் அனைத்தும அரசுடைமையாக்கப்பட்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். (இதற்கு தமிழுணர்வுள்ள, தமிழ்த்தேசியத்தில் நம்பிக்கையுள்ள உண்மையான தமிழர்கள் தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்)

    10. தமிழுக்கு கோயில்களில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டால், சமக்கிருதவாதிகளின் கொட்டம் அடங்கி விடும். தமிழுக்குத் தமிழ்நாட்டில் முன்னுரிமை கொடுக்கப்பட்ட பின்னர், எந்த மொழி இரண்டாம் இடத்தில் இருந்தாலும் அதைப்பற்றி தமிழர்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

    • இருந்தாலும் வியாசனுக்கு தமிழ் சைவம் குறித்து இந்தளவுக்கு பயபீதி கூடாது. இங்கும் அவர் தன் மதத்திற்கு ஆள்பிடிக்கும் கங்காணி வேலையே பார்க்கிறார். ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று வியாசன் சொல்வது இவருக்கு எத்துணைப் பொருத்தம்?

      இராமுடன் தமிழ் சைவம் குறித்த விவாதம் முடிந்தவிடவில்லை. வினவு வியாசரை அங்குதள்ளி விடவும். இவர் மிகவும் அரண்ட நிலையில் இருப்பதாக எமக்குப் படுகிறது. இந்த வாதத்தை இங்கு தொடங்கினால் மீண்டும் பதிவை விட்டு விலக நேரிடும். ஆக வியாசருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிற விழைகிறேன். இந்த மறுமொழியைப் படித்துவிட்டு உருக்குலைந்த இராக்கில் உள்நாட்டுபோர் ஏன் என்ற பதிவிற்கு (அங்கேயும் பதிவை விட்டு விலகியாயிற்று) வந்து தங்கள் பொழிப்புரைகளைத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்பொழுது உங்கள் அவதூறுகளுக்கு சுருக்கமான பார்வை.

      1. எமது முன்னோர்கள் சிவனிய திருமாலிய நெறியினர் என்று கதறுபவர்கள் ஆதிக்கசாதி வேளாளர்களே. வேதத்தை புறக்கணித்து நீலகேசியை (சைவ நூல்) ஆதாரமாகக் கொண்டு தங்களை உயர்வானவர்களாகக் கருதி பிற சாதிகளை வரையறுத்து சூத்திரர்களை வரையறுத்தவர்களில் சைவர்களும் அடக்கம். வருண சிந்தாமணி இதற்கு ஆதாரம்.
      2. மறைமலை அடிகள் முதற்கொண்டு பல்வேறு முதலியார்கள் தான் சைவம் தமிழர்களின் மதம் என்று கதை கட்டியவர்கள். சமணம் தமிழர்களின் வாழ்வியல் நெறியாக இருந்ததையும் திட்டமிட்டு புறக்கணித்தவர்கள் சைவர்களே. இவர்கள் அடிப்படையில் சாதியைக் கைவிடவில்லை.

      3. வேதங்களுக்கு உயர்வாக தமிழ் தேவாரம் மதிக்கப்படுகின்றன. ஒரு வகை பார்ப்பான் இன்னொரு வகை பார்ப்பானாக இருந்தான் என்பதுதான் பொருள். தேவராத்தின் மூன்று பகுதி லகுலீசர் கொண்டுவந்த பாசுபதத்தின் ஒரு பிரிவாண காரோணத்தைப் பற்றி பாடுகிறது. காரோணம் குஜராத்தில் லகுலீசர் பிறந்த ஊராகும். தங்கள் சைவ நெறிக்கு அந்தப் பெயரையே வைக்கிறார்கள் என்றால் தமிழ் சைவர்கள் எந்தளவுக்கு பார்ப்பனர்களாக இருந்தார்கள் என்பது தெளிவு.

      4. ஈழத் தமிழ்சைவத்தின் அடிப்படை சாதியே. ஆறுமக நாவலர் அப்பட்டமான சாதியாளராகவே இருந்தார் என்பதை அவர் எழுதிய குறிப்புகளைக் கொண்டே விளங்க இயலும். கதிர்காமன் கோயிலில் சாதிப்பாகுபாடுகள் பற்றி குறிப்பிட்ட பொழுது வியாசன் அது முன்னொரு காலத்தில் என்றும் தற்பொழுது இல்லையென்றும் கதைவிட்டவர்.

      5. தமிழர்களாக அடையாளப்படுத்தும் சைவர்கள் தான் தன்னை பார்ப்பனர்களாக மாற்றிக்கொண்டனர். வேளாளர்கள் தான் சிவகோத்திர பார்ப்பனர்களாக தமிழ்நாட்டில் மாறியது என்ற உண்மை வியாசருக்குத் தெரியாதுபோலும். வடஇந்திய பார்ப்பனர்கள் தமிழ் பார்ப்பனர்களை இழிவாக பார்ப்பதற்கும் இது ஒரு காரணம். ஏனெனில் தென்னிந்திய பார்ப்பனர் மட்டுமே கருமை நிறம் கொண்டவர்கள் என்ற ஏளனம் இன்னும் அவர்களிடத்தில் உண்டு. பார்ப்பனர் சிவப்பாக தானே இருப்பார்?????

      6. மற்றபடி 8,9,10வது பாயிண்டுகள் இந்துதேசியத்தின் ஒரு பகுதியே. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது வெறும் உதட்டளவில் வியாசர் வைக்கிற பாசாங்கு. ஆதிக்க சாதிகள் பார்ப்பனீயத்தை உள்வாங்கிக்கொண்டு இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் என்பதே உண்மை.

      • //இந்த மறுமொழியைப் படித்துவிட்டு உருக்குலைந்த இராக்கில் உள்நாட்டுபோர் ஏன் என்ற பதிவிற்கு (அங்கேயும் பதிவை விட்டு விலகியாயிற்று) வந்து தங்கள் பொழிப்புரைகளைத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.//

        உங்களிடமிருந்து என்னுடைய பதில்களுக்கு பல நாட்களாக எந்தவிதப் பேச்சு மூச்சையும் காணாதபடியால் தான் நான் அந்தப் பதிவின் பக்கமே போகவில்லை.உங்களின் பதில்களுக்கு நாள் கணக்கில் காத்திருக்குமளவுக்கு அல்லது என்னுடைய கருத்துக்குச் சம்பந்தமில்லாத உங்களின் உளறல்களுக்கெல்லாம் காத்திருந்து பதிலெழுதுமளவுக்கு நான் ஒன்றும் வேலையில்லாமல் இல்லை. 🙂

  43. //இருந்தாலும் வியாசனுக்கு தமிழ் சைவம் குறித்து இந்தளவுக்கு பயபீதி கூடாது. இங்கும் அவர் தன் மதத்திற்கு ஆள்பிடிக்கும் கங்காணி வேலையே பார்க்கிறார்.//

    சிவனை வழிபடும் தமிழ்ச் சைவர்களை ஒன்றுபடுமாறு கேட்பது, ஆள்பிடிக்கும் வேலையாக தென்றலுக்கு தெரியும் போது, இவருடைய ஏனைய உளறல்களுக்குப் பதிலெழுதுவதே வீண் வேலை. இவர் கூட சைவத்துக்கெதிராக பிரச்சாரம் செய்து, மற்ற மதத்துக்கு ஆள்பிடிக்கும் கங்காணி தான் என்பதை இவரது சம்பந்தமில்லாத வார்த்தைப் பிரயோகங்களையும், தேவையில்லாத உதாரணங்களையும், எப்படியாவது தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரித்து, அவர்களை இணையத்தளத்தில் கூட ஒன்றுபடாமல் செய்யும் குள்ளநரித்தனத்தையும் இவரது பதில்களை படித்தவர்களுக்குப் புரியும். அதனால் இவர் யாருக்கு கங்காணி வேலை செய்கிறார் என்பதை ஊகித்துக் கொள்ளவது கடினமானதொன்றல்ல. எந்தப் புற்றில் எந்தப் பாம்பிருக்கிறதோ, யார் கண்டது. 🙂

  44. //கதிர்காமன் கோயிலில் சாதிப்பாகுபாடுகள் பற்றி குறிப்பிட்ட பொழுது வியாசன் அது முன்னொரு காலத்தில் என்றும் தற்பொழுது இல்லையென்றும் கதைவிட்டவர்.///

    தென்றல் என்பவருக்கு உண்மையிலேயே அறளை பெயர்ந்து விட்டது, அதனால் தான் இப்படி சம்பந்தமேயில்லாமல், யாரோ கூறுவதையெல்லாம் நான் கூறியதாக கூறுகிறார். இவர் இப்படி சம்பந்தமேயில்லாமல் முன்பும் உளறியிருக்கிறார், அதைச் சுட்டிக்காட்டினாலும் தனது தவறை ஒப்புக் கொள்ள மாட்டார். இலங்கையில் கதிர்காமன் கோயில் என்ற ஒன்றும் கிடையாது, பெயர் கூட சரியாகத் தெரியாது, ஆனால் இலங்கையைப் பற்றி மட்டுமல்ல, எல்லா விடயத்திலும் எல்லாம் தெரிந்தவர் மாதிரிக் காட்டிக் கொள்ளும் அதிகப்பிரசங்கித் தனத்துக்கு மட்டும் குறைச்சலில்லை.

    நான் தென்றலுடன் கதிர்காமத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை. அதை விட உலகப்புகழ் பெற்ற கதிர்காமத்தில் பார்ப்பனர்களும் இல்லை, சாதிப்பாகுபாடும் கிடையாது. இக்காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் கதிர்காமத்தில் சாதிப்பாகுபாடும் இல்லை, வேத பாராயணங்களும், சம்ஸ்கிருத மந்திரங்களும், பூசை, புனஸ்காரங்கள் எதுவுமே கிடையாது. வள்ளியம்மனின் பரம்பரையில் வந்ததாகக் கருதப்படும் வேடர்கள் தான் அங்கு தமது வாயைத் துணியால் கட்டிக் கொண்டு பூசை செய்கிறார்கள். அப்படி பார்ப்பனீயமும், சாதியையும் சடங்குகளுமற்ற எத்தனையோ கோயில்கள் ஈழத்தில் உண்டு, அவை எல்லாமே ஈழத்தில் தமிழ்ச்சைவத்தின் அங்கம் தான். அந்தக் கோயில்களில் எல்லாம் சாதிப்பாகுபாடு கிடையாது, எல்லாச் சாதியினரும் சமத்துவமாகத் தான் முருகனுக்குப் பூசை செய்கின்றனர், முருகனை வழிபடுகின்றனர். தமிழ்நாட்டில் சாதிச் சாக்கடையில் ஊறித் திளைத்த தென்றல் போன்றவர்களுக்கு நான் கூறும் தமிழ்ச்சைவத்தைப் புரிந்து கொள்வது கடினமாகத் தானிருக்கும், அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது? 🙂

    • என்ன வியாசர்? அதுக்குள்ள மறந்துட்டீக,

      கீழ்க்கண்ட பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்ட லிங்குகள்
      https://www.vinavu.com/2014/06/10/remembering-robert-caldwell/#comment-140785

      சாதியத்தை காப்பாற்றும் யாழ்ப்பாணக் கோயில்கள்
      http://kalaiy.blogspot.com/2011/08/blog-post_19.html
      இலங்கை அரசியலில் “வெள்ளாள-கொவிகம” ஆதிக்கம்
      http://kalaiy.blogspot.com/2010/12/blog-post_04.html
      சைவ- வேளாள அடிப்படைவாதி நாவலரை கௌரவிக்கும் சிங்களப் பேரினவாதம்
      http://kalaiy.blogspot.com/2014/04/blog-post_29.html
      இலங்கை இனத்துவ அரசியலின் தொடக்கங்கள்
      http://kalaiy.blogspot.com/2009/05/blog-post_03.html

      வியாசர் அளித்த பதில்: “யாழ்ப்பாணத்தில் நடந்த சாதிக்கொடுமைகள் என இவர் ஊதிப்பெருக்கும் எந்த சம்பவமும் அண்மையில் நடந்தவை அல்ல. எல்லாமே குறைந்தது முப்பது தொடக்கம் நாற்பது வருடங்களுக்கு முந்தியவை. இலங்கையிலுள்ள “சாதிக்கொடுமைகள்” எதையுமே தமிழ்நாட்டில் நடைபெறும் சாதிக் கொடுமைகளுடன் ஒப்பிட முடியாது அபப்டி ஒப்பிடுவதும் வெறும் அபத்தம். தமிழ்நாட்டில் இன்றும் பல கிராமங்களில் செருப்பு போட்டு நடந்தாலே மலம் தீற்றுவார்களாம் ஆதிக்க சாதியினர்.”

      • கலை என்றவரின் உளறல்கள் தான் உங்களுக்கு ஆதாரம். அவற்றை நான் வாசிக்கவுமில்லை. கணக்கிலெடுக்கவுமில்லை. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு சம்பந்தமில்லாமல் எதையும் கூறுவது தான் உங்களின் வேலை என்பது எல்லோருக்கும் தெரியும். நீங்கள் குறிப்பிட்ட பதிவில் நான் கதிர்காமத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அதைப் பற்றிப் பேசவில்லை. என்னுடைய பதிலும் கூட கதிர்காமத்தில் நடக்கும் சாதிப்பாகுபாடுகளைப் பற்றியதல்ல, ஏனென்றால் கதிர்காமத்தில் எந்த சாதிப்பாகுபாடும் நடப்பதில்லை. நான் அப்பொழுது கூறியது மட்டுமல்ல இப்பொழுதும் கூறுவது என்னவென்றால் யாழ்ப்பாணத்தில் சாதிக்கொடுமைகள் முப்பது, நாற்பது அல்லது அறுபது வருடங்களுக்கு முற்பட்டவை. அவற்றை, இக்காலத்திலும் செருப்பணிந்த குற்றத்துக்காக மலம் தீற்றும் தமிழ்நாட்டில், இன்றைக்கும் இரட்டைக்குவளை முறை நடைமுறையில் உள்ள தமிழ்நாட்டில், ஒருவனுடன் ஓடிப் போய்க் குடும்பம் நடத்திய பெண்ணைப் பிரிந்து, அவளது கணவனைச் சாகடிக்கும் தமிழ்நாட்டில் உள்ள எவனுமே குறிப்பிட்டால் அவன் ஒரு விவஸ்தை கெட்டவன் என்பத்து தான் எனது கருத்தாகும். ஏனென்றால் தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது ஈழத்தமிழர்களின் மத்தியில் சாதிப்பாகுபாடு இல்லையென்றே கூறலாம் அதிலும் தீண்டாமை என்பது கிடையவே கிடையாது.

    • யாழ்பான கோவில்களில் 1968 ஆம் ஆண்டு அடித்து நொறுக்கபட்ட சைவ வெள்ளாள சாதி வெறி பாகம் I

      1968 ஆலைய பிரவேச இயக்க யாழ்பான செய்திகள் [

      14-4-68

      கந்தசுவாமி கோவில் தேர் எரிந்து சாம்பல்……..

      15-4-68
      ஆலைய பிரவேசகாரர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்ற போது பெருங்கலவரம். துப்பாக்கி குண்டுகளுக்கு இலக்கான ஐயாண் ண்ன் , மாயாண்டி மரணம். ஏறி குண்டு தாக்குதலுக்கு முத்து, சின்னாச்சி என்ற இரு பெண்கள் பலி

      16-4-68

      ஆலைய பிரவேச இயக்கத்தில் ஈடுபட்டு வைத்தீய சாலையீல் அனுமதீக்கபட்டவ்ர்களில் சிலரின் நிலை கவலை கிடம். குமாரவேலம்,கிருஷ்ணன்,சினப்பன் மூவருக்கு அவசர சீகிச்சை. மொத்தம் 28 பேர் படுகாயம்

      25-4-68

      வட பகுதி எங்கும் ஒரே நாளில் 15 கோவில்களில் ஆலைய பிரவேசம். 5 கோவில்களில் எதீர்ப்பு இல்லை . ஆலைய பிரவேசம் முடிந்ததும் 10 கோவில்கள் இழுத்து மூடபட்டதன.

      con …

    • யாழ்பான கோவில்களில் 1968,1969 ஆம் ஆண்டு அடித்து நொறுக்கபட்ட சைவ வெள்ளாள சாதி வெறி பாகம் II

      1968 1969 ஆம் ஆண்டு ஆலைய பிரவேச இயக்க யாழ்பான செய்திகள்

      24-7-68

      பொதுக்கிணற்றில் தண்ணிர் எடுத்த பஞ்சமர் மேல் கடுந்தாக்கு. தீவுப்பகுதியில் இரண்டு கிராமங்களில் பதட்ட நிலை

      3-9-68

      பலஆலையங்களில் வருடாந்திர உற்சவங்கள் ஓத்திவைப்பு. கோவில்களை திறக்கும் படி கோரிக்கை. கோவில் தர்மகர்த்தாக்கள் மெளனம்.

      23-9-68

      ஆலைய தர்மகர்த்தாக்கள் மாநாடு நடத்த ஆலோசனை. சைவ சித்தாந்தம் அழிக்க படுவதை நிறுத்த அரசிடம் கோரிக்கை

      3-4-69

      கந்தன் கருணை நாடகத்தை எதிர்த்து அற நியைய பாதுகாப்பு சபை தீர்மானம். ஆலைய பிரவேசத்துக்கு போராடுபவர்களுக்கு தனது வேலாயுத்தத்தை கொடுத்து போராட தூண்டுவதாக கந்தன் மேலேயே குற்றசாட்டு!

      Con….

    • யாழ்பான கோவில்களில் 1968,1969 ஆம் ஆண்டு அடித்து நொறுக்கபட்ட சைவ வெள்ளாள சாதி வெறி பாகம் III

      1968 1969 ஆம் ஆண்டு ஆலைய பிரவேச இயக்க யாழ்பான செய்திகள்

      8-4-69

      கந்தன் கருணை நாடக ஆசிரியர் ரகுநாதன் மேல் நட்டஈடு கோர கந்தபூராணசபை முயற்சி.[ஆலைய பிரவேசத்துக்கு போராடுபவர்களுக்கு தனது வேலாயுத்தத்தை கொடுத்து போராட தூண்டுவதாக கந்தனை காட்சி படுத்தியாமைக்காக ]

      5-5-69

      ஆலையத்துள் பிரவேசீக்க சென்றவர்களுக்கு தீப்பந்தத்தால் சூடு. சூட்டு காயத்துடன் கந்தையா என்பவர் கோவில் மூலதானம் வரை ஓடல்

      15-5-69

      தென் இலங்கையீல் பல பகுதிகளில் வட பகுதி சாதி கொடுமைகளை கண்டித்து கூட்டங்கள். பாராளமன்றம் சென்ற தமிழ் தலைவர்களை நோக்கி கூச்சல்

      con…

      • இப்பொழுது 2014 ம் ஆண்டு நடக்கிறது. அதிலிருந்து 1968-1969 ஐக் கழித்து இவையெல்லாம் நடந்து எத்தனை ஆண்டுகள் என்பதை அறிந்து கொள்ளத் தெரியாமல் அண்ணன் சரவணன் இருப்பாரென்று நான் நம்பவில்லை. தமிழ்நாட்டைப் போலல்லாமல் இலங்கையில் சாதிக்கெதிரான போராட்டங்கள் நாற்பதாண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு. சாதிப்பாகுபாடும், தீண்டாமையும் (தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது) இல்லை என்று கூறுமளவுக்கு ஈழத்தமிழர்கள் அதில் வெற்றியும் கண்டு விட்டார்கள் ஈழத்தமிழர்கள். என்னைப் போன்ற ஈழத்தமிழர்களுக்கு தீண்டாமை என்றால் என்னவென்றே தெரியாது என்பது தான் உண்மை. அதைப் பாரட்ட வேண்டுமே தவிர இப்படி நாற்பதுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு ஈழத்தில் நடந்த சம்பவங்களைச் சொல்லி அழுவதால் தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை தீராது.

        இலங்கையில் ஆலயப்பிரவேசம், சமபந்தி போசனம், சத்தியாக்கிரகம் போன்ற சாதியொழிப்பு போராட்டங்களை நடத்தியவர்கள், ஈழத்தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியைச் சேர்ந்த வெள்ளாளத் தலைவர்கள் தானே தவிர தமிழ்நாட்டைப் போல் தாழ்த்தப்பட்ட சாதித் தமிழர்களின் தலைவர்கள் அல்ல. தமிழர்கள் சாதியை மறந்து ஒன்றுபட்டால் தான், மற்றவர்கள் (சிங்களவர்கள்) எங்களைப் பிரித்தாள முடியாது என்ற உண்மையை ஈழத்தமிழர்கள் எப்பொழுதோ புரிந்து கொண்டு விட்டார்கள். தமிழ்நாட்டிலும் தமிழரல்லாதவர்கள் தமிழர்களைப் பிரித்து ஆண்டு கொண்டு, தமிழ்நாட்டின் அரசியலையும், பொருளாதாரத்தையும் அவர்களின் கைகளில் வைத்திருந்தாலும் கூட, திராவிட மாயையும், பெரியாரிசமும், தமிழரல்லாதாரின் பரப்புரைகளும், பம்மாத்துகளும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் கண்களை மறைப்பதால் சாதியை மறந்து தமிழர்களாக ஒன்றுபட வேண்டிய தேவையை தமிழ்நாட்டுத் தமிழர்கள் உணர்கிறார்களில்லை. அதனால் தான் தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை தீராமல் தொடர்கிறது.

        ஈழத்தில் எவ்வாறு தமிழரசுக் கட்சி சாதியொழிப்பு போராட்டங்களை முன்னெடுத்ததோ அவ்வாறே தமிழ்நாட்டின் பெரிய கட்சிகளாகிய திமுகவும், அதிமுகவும், சேர்ந்து சாதியொழிப்பு போராட்டங்களை முன்னின்று நடத்தினாலே தவிர தீண்டாமை ஒழியாது. ஆனால் தமிழரல்லாதாரின் வாக்குகளை இழக்க அவர்கள் தயாராகவில்லை. அதனால் தமிழ்நாட்டில் சாதியடிப்படையில் தமிழர்கள் தொடர்ந்து அடித்துக் கொண்டு சாவார்கள். இதற்கு ஒரே தீர்வு தமிழர்களின் நலன்களில் அக்கறையுள்ள, தமிழ்த்தேசியத்தில் நம்பிக்கை கொண்ட தமிழுணர்வுள்ளவர்களின் கைகளைத் தமிழ்நாட்டின் ஆட்சியும் பொருளாதாரமும் சென்றடைய வேண்டும்.

        • வியாசன்,

          சாதிப்பாகுபாடும், தீண்டாமையும் (தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது) இல்லை என்று கூறுமளவுக்கு ஈழத்தமிழர்கள் அதில் வெற்றியும் கண்டு விட்டார்கள் ஈழத்தமிழர்கள். என்னைப் போன்ற ஈழத்தமிழர்களுக்கு தீண்டாமை என்றால் என்னவென்றே தெரியாது என்று கூறும் வியாசன் ….

          [1]நாட்டார் தெய்வங்களுக்கு கெடா வெட்டி ,பொங்கல் வைத்து வழி படுவது தமிழ் மக்கள் பண்பாடு. அதை தமிழ் நாட்டில் பார்பன ஹிந்து மதத்துக்கு ஆதரவாக சங்கராசாரி, ஜெ தடை செய்ய முனைந்தது போலவே , யாழ்பான கெடா வெட்டுகளை நீர் எதிர்ப்பது ஏன் ? வெட்டும் கெடாகளை மண்ணில் போட்டு புதைத்து வீண் செய்யவா போகீன்றோம் ? உண்ண தானே போகீன்றேம் !இலங்கையில் கெடா வெட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு வரும் ? உம் போன்ற யாழ்பான சைவ வெள்ளாள சாதி வெறியர்களுக்கு தானே வரும் !

          ஆதாரம்:
          யாழ்ப்பாணத் தமிழர்களின் காட்டுமிராண்டித்தனம்?
          http://viyaasan.blogspot.in/2014/05/blog-post_18.html

          [2]மேலும் சிறுதினை மலரொடு,மறி அறுத்து” உண்டு வாழ்ந்த திருமுருகாற்றுப்படை அசைவ முருகன் பார்பனர்களால்/சைவ வெள்ளாலார்களால் குட முழுக்கு சிகிச்சை மூலம் சைவனாக மாற்றப்பட்ட கதை தெரியுமா வியாசன் ?

          http://vansunsen.blogspot.in/2014/01/murugan-is-nonvigitarian.html

          • //இலங்கையில் கெடா வெட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு வரும் ? உம் போன்ற யாழ்பான சைவ வெள்ளாள சாதி வெறியர்களுக்கு தானே வரும் !//

            சரவணரின் இந்த முத்துக்களை இப்போது தான் பார்த்தேன். இலங்கையில் தாழ்த்தப்பட்டட்ட சாதியினர் மட்டும் வைரவர் (வீரபத்திரர்), காளி கோயில்களில் கடா வெட்டுவதில்லை. அவர்களுடன் சேர்ந்து வெள்ளாளர்களும் தான் வெட்டுகின்றனர். ஈழத்தமிழர்கள் மத்தியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பரவலாகக் காணப்படும் வைரவர் வழிபாட்டுக்கு வரலாற்றுக் காரணங்கள் உண்டு.

            தமிழ்நாட்டைப் போல் சைவம் என்றால் மரக்கறி உணவு மட்டும் உண்பவர்கள் என்ற கருத்து இலங்கையில் கிடையாது. முழு மாட்டை மூன்று நாளில் தின்று முடித்து விடக் கூடிய ஈழத்தமிழன் கூட தன்னை சைவம் என்று தான் அடையாளப்படுத்துவார். அதன் கருத்து அவர் மரக்கறி உணவை மட்டும் உண்ணுகிறவர் என்றல்ல, மாறாக, அவர் அல்லது அவரது முன்னோர்கள் சிவபெருமானை முழுமுதல் கடவுளாக வழிபடுகிறவர்கள், திருநீற்றை முக்குறியாக அணிகிறவர்கள் என்பது மட்டும் தான். தமிழ்நாட்டுச் சைவ வெள்ளாளர்கள் போலல்லாது, பெரும்பாலான “யாழ்ப்பாண சைவ வெள்ளாள சாதி வெறியர்களுக்கு” மீன், இறைச்சி இல்லாது விட்டால் சோறு இறங்காது என்பது சரவணருக்குத் தெரியாது அதனால் தான் இவ்வளவு குழப்பமும். 🙂

            தமிழ்நாட்டைப் போல் ஈழத்தில் உணவுப்பழக்க வழக்கம் ஒருவரின் சாதியைத் தீர்மானிப்பதில்லை. அதனால் கோயில்களில் கடா வெட்டுவதைத் தடுக்க வேண்டுமென்கிற, என்னைப் போன்றவர்கள் தமது சாதித் திமிரைக் காட்டுகிறார்கள் அல்லது பார்ப்பனீயத்தைப் புகுத்துகிறார்கள் அல்லது பார்ப்பனீயத்தை ஆதரிக்கின்றார்கள் என்ற வாதம், ஈழத்தமிழர் விடயத்தில் சரி வராது. பல ஈழத்தமிழர்கள் கூட நல்லூர் முருகனின் திருவிழாக் காலத்திலும் வாரத்தில் குறிப்பிட்ட சில நாட்களைத் தவிர ஏனைய நாட்களில் மீன், இறைச்சி வகைகளைத் தான் உண்ணுகிறார்கள்.

            அதனால் நான் கடா வெட்டுவதைத் தடை செய்ய வேண்டுமென்பதை, தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டுக் குழம்பிப் போய் விட்டார் அண்ணன் சரவணன். நான் கடா வெட்டுவதைத் தடை செய்யச் சொல்வதன் காரணம், மதமல்ல, கோயில்களில் மிருகவதை செய்யப்படுவதைப் பார்க்கச் சகிக்க முடியவில்லை. அன்பேயுருவான கடவுள் என்று கூறிவிட்டு, அந்தக் கடவுள் தனக்கு முன்னால் மிருகங்கள் கொடூரமாகக் கொல்லப்படுவதை விரும்புகிறார் என்பது முட்டாள்தனம். அதைத் தான் தடை செய்ய வேண்டுமேன்கிறேனே தவிர, எவரும் தனிப்பட்ட முறையில் மிருகங்களைக் கொன்று தின்பதை நான் எதிர்க்கவில்லை.

        • வியாசன்,

          எத்துனை ஆண்டுகள் ஆனாலும் வரலாறு வரலாறு தான். மற்ற அனைத்து விடயத்திலும் வரலாற்றை நோண்டி நோண்டி நூல் எடுத்து பேசும் வியாசனுக்கு ஈழத்தில் தலித்தியர் மக்கள் ஆலயம் நுழைய யாழ் வெள்ளாள சைவ வெறியர்கலுடன் போராடிய வரலாற்றை நான் கூறும் போது அதை காண முடியாமல்,ஏற்க முடியாமல் அலறி ஓடுவது ஏன் ?

        • வியாசன்,

          எல்லைப்போராட்ட வீரர் ,சிலம்புச் செல்வர் ம.பொ.சி யில் இருந்து , சீமான் வரை அனைத்து போலி தமிழ்த்தேசிய வாதிகளும் கடைசியில் சென்று சேரும் இடம் ஹிந்து தமிழ் தேசியம் தான். ம.பொ.சி பார்பன சங்கராசாரி இடம் மண்டி இட்ட கதை தெரியுமா வியாசன் ? சீமான் பார்பன ஜெ இடம் பணிந்த கதை சொல்லவா வியாசன் ? இங்கும் உங்களை போன்றே தமிழ் தேசிய போலிகளாகவே இருப்பதன் மர்மம் என்ன வியாசன் ?

          குறிப்பு :

          ம.பொ.சி: “நான் இறந்தவுடன் என்னுடைய சமாதியில், ‘நான் ஒரு இந்து’ என்று எழுதவேண்டும்.”

          நடிகவேள் M.R.ராதா: ”நான் எழுதுகிறேன், நீ சீக்கிரம் சாவு.”

          நன்றி: தமிழச்சி

          //இதற்கு ஒரே தீர்வு தமிழர்களின் நலன்களில் அக்கறையுள்ள, தமிழ்த்தேசியத்தில் நம்பிக்கை கொண்ட தமிழுணர்வுள்ளவர்களின் கைகளைத் தமிழ்நாட்டின் ஆட்சியும் பொருளாதாரமும் சென்றடைய வேண்டும்.//

        • வியாசன் கீழ் கண்ட வெள்ளாள பாசத்தைச் சொல்வதற்கு எத்துணை மாதங்கள் எடுத்திருக்கிறார்? இதற்கு மேற்பூச்சாக “டமீல் தேஷியம்” வேறு;

          அவர் சொன்ன வரிகளை அவருக்கே டெடிகேட் செய்வோம்; “இலங்கையில் ஆலயப்பிரவேசம், சமபந்தி போசனம், சத்தியாக்கிரகம் போன்ற சாதியொழிப்பு போராட்டங்களை நடத்தியவர்கள், ஈழத்தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியைச் சேர்ந்த வெள்ளாளத் தலைவர்கள் தானே தவிர தமிழ்நாட்டைப் போல் தாழ்த்தப்பட்ட சாதித் தமிழர்களின் தலைவர்கள் அல்ல.”

          புல்லரிக்கிறது. தமிழ் நாட்டிலும் சரி இலங்கையிலும் சரி சுயசாதி வெறியே தமிழ் தேசியமாக வெளிப்படுகிறது என்பதற்கு இதைவிட வேறுசான்று என்ன வேண்டும்?

          • தென்றல் ,

            [1] 1968ல் யாழ்பான பஞ்சமர் மக்கள் போராடிய பின்பும் திருந்தா சைவ வெள்ளாள சாதி வெறியர்கள் இவர்கள் !

            [2] மேலும் இதுங்கலாகவா[சைவ வெறியார்களா] சாதி வெறியில் இருந்து தீருந்தினார்கள் ? 1969ல் சிங்கலவன் ஸ்ரீலங்கன் பார்லிமென்டில் வெள்ளாள தமிழ் M.P களை நோக்கி வடக்கு[யாழ்பான ] சாதி வெறி பற்றி கேள்வி கேட்டு மானத்தை வாங்கிய பின்பு தானே சாதி வெறியில் இருந்து திருந்தீயது போல சமபந்தி போசனம், சத்தியாக்கிரகம் எல்லாம் செய்து இப்ப இந்த சைவ வெள்ளாள சாதி வெறியர்கள் நடிக்கீன்றார்கள்

            [3]இன வெறி சிங்கலவன் சொல்லி இந்த சாதி வெறி சைவ வெள்ளாள சாதி வெறியர்கள் திருந்தீயது போல நடிப்பதை விட வேறு மானக்கேடு தமிழனுக்கு வேறு என்ன இருக்க முடியும்?

            Note:

            15-5-69

            தென் இலங்கையீல் பல பகுதிகளில் வட பகுதி சாதி கொடுமைகளை கண்டித்து கூட்டங்கள். பாராளமன்றம் சென்ற தமிழ் தலைவர்களை நோக்கி கூச்சல்

            //தமிழ் நாட்டிலும் சரி இலங்கையிலும் சரி சுயசாதி வெறியே தமிழ் தேசியமாக வெளிப்படுகிறது என்பதற்கு இதைவிட வேறுசான்று என்ன வேண்டும்?//

          • தென்றல்,

            இது வியாசனின் போலி தமிழ் தேசியத்தை எள்ளி நகைக்க பயன் படுத்த பட்ட வார்த்தைகள் எனினும் , தேசிய இனங்களை சிறுமைபடுத்துவது போல் உள்ளது. கம்யூனிஸ்ட்டுகள் முதன்மை நோக்கம் சம தர்ம உலகை படைப்பது தான் என்றாலும், அது தேசிய இன உரிமைகளை அது உள் அடங்கியது தானே ? கம்யூனிஸ்ட்டுகள் எழுச்சி பெறாத காஷ்மீர், குர்தீஸ்தான், ஈழம் போன்ற நிலபரப்பில் வாழும் மக்கள் பேரினத்தால் அடக்க படும்போது அவர்கள் தேசீய இன விடுதலைக்காக ஜனநாயக சக்திகளுடன் இணைந்து போராடுவதை கம்யூனிஸ்ட்டுகலாகிய நாம் வரவேற்க்க தானே வேண்டும்.?

            இனி வியாசன், சீமான், ம.பொ.சி போன்றவர்களை குறிக்க “போலி தமிழ் தேசியவாதிகள்” என்ற பதத்தை பயன் படுத்தலாமே ?

            மனிதர்களுக்கு சாத்தியப்படும் அனைத்து விடுதலைகளையும் ,சாத்தியமான நேரத்தில் பெற்று தர முயல்வது தானே உண்மையையான நடை முறை சார்ந்த மார்சியம்-லெனினீயம் ஆக இருக்க முடியும். ?

            I am expecting your replay

            //“டமீல் தேஷியம்” //

            • அன்புள்ள சரவணன் அவர்களுக்கு,

              டமில் தேஷியம் என்பதை எள்ளி நகையாடுவதற்காக கூறவில்லை. “தேஷியம்” பார்ப்பன மதவெறியையும் “டமில்” மொழியை தன் பிழைப்புவாதத்திற்கு பயன்படுத்துகிற சந்தர்ப்பவாதத்தையும் குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.

              என்னுடைய பார்வையில் போலி தமிழ் தேசியவாதி, நிஜ தமிழ் தேசியவாதி என்று தனித்து இல்லை. இனவெறியும், தங்களது தனித்த பொருளாதார நலன்களும் உள்ள குறுங்குழுக்களே (சிவசேனா, சீமான், மணியரசன் போன்றோர்) தேசியவாதி அவதாரமெடுத்து நிற்கின்றனர். இதில் மணியரசன் தமிழ் தேசியப் பொதுவுடமை என்ற பெயரில் பிறமாநில உழைக்கும் மக்களுக்கு எதிராக ரேசன் கார்டு கொடுக்கக்கூடாது என்று போராடினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அரிசி, பருப்பு வாங்குகிற பீகார், ஆந்திர உழைக்கும் மக்கள் விரோதிகள்; ஆனால் பெப்சி கோககோலா, பல நகைக்கடை முதலாளிகள் தமிழ் பொருளாதாரத்தை உயர்த்துபவர்கள். இவர்களின் தேசிய யோக்கியதை எடுத்த எடுப்பிலேயே கிழிந்து தொங்குகிறது இல்லையா?

              நீங்கள் சொல்வதைப்போல குர்தீஷ், ஈழம், காஷ்மீர், மணிப்பூர், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களுமே பல்வேறு தேசிய இனங்களாகும். அவர்களின் சுயநிர்ணய உரிமையை கம்யுனிசத்தால் மட்டுமே வெல்ல முடியும். சோசலிசப் புரட்சி தவிர சுயநிர்ணய உரிமையை பெற்றெடுக்க வேறுவழியில்லை. ஒரு கட்டத்தில் உள்நாடு உற்பத்தி என்ற ஒன்றை வைத்து முதலாளித்துவம் தேசியத்தை வளர்த்தது. ஆனால் வெகு சீக்கிரமே அதன் முகம் இலாப வெறியாக வெளிறியது. இன்றைக்கு ஏகாதிபத்தியம் (அழுகிநாறும் முதலாளித்துவம்) கோலோச்சுகிற காலத்தில் பல்வேறு தேசிய இனங்கள் கடுமையாக ஒடுக்கப்படுகின்றன. எந்த நாட்டு தேசிய இனமும் மதிக்கப்படுவதில்லை. கலை, கலாச்சாரம் வெகுவாக ஒடுக்கப்படுகின்றன.

              ஈழம் என்று எடுத்துக்கொண்டாலும் ஈழத் தமிழர்கள் என்ற ஒற்றைத் தேசிய இனத்தில் பட்டிக்குள் அடைக்க இயலாது. அங்கேயும் பல்வேறு தேசிய இனங்கள் உண்டு. மலையகத் தமிழர்கள், இசுலாமியர்கள், ஈழத்தமிழர்கள் தேசிய இனங்களாக பிரிந்துபோகும் உரிமையோடுகூடிய சுயநிர்ணய உரிமையே தீர்வாகும் என்பது என் புரிதல். இதற்கு சோசலிசப் புரட்சிதான் தேவை. உழைப்பவர்கள் தங்களை தாங்களே ஆண்டு கொள்ள வேண்டும் என்ற இலட்சியத்தை சுருக்கி எங்களுக்கு கீழ் வாழுங்கள் என்று சொல்பவர்களே தேசியவாதிகளாக அவதாரமெடுத்தனர். இதனாலேயே புலிகளும் பல்வேறு தவறுகளை இழைத்தனர். அதில் உழைக்கும் மக்களின் அதிகாரத்தை ஆணையிலே வைக்காமல் ஆயுதத்தை ஆணையிலே வைத்தார்கள். இதே தவறு இன்றைக்கு ஹமாஸ் இயக்கத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எப்படி சிங்களமும் இந்திய அரசும் போர்க்குற்றவாளிகளோ அதே போல் இசுரேலும் சவுதியும் போர்க்குற்றவாளிகள். முள்ளிவாய்க்காலாக பாலஸ்தீன் இன்று இருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் புன்னகையோடு வலம்வருகிறது.

              ஆக தேசியம் பேசுகிறவர்களின் கொள்கைகளை நாம் பரிசிலீக்க வேண்டும். அதில் பெரும்பாலும் ஹமாஸ், புலிகள் போன்ற இயக்கங்கள் சாகசவாதத்தாலும் வெறும் ஆயுதமேந்திய போரட்டத்தாலும் பெரும் தோல்வியையே தழுவி நிற்கின்றன.

              இரண்டாவது தேசியம் பேசுகிற வகையறாக்கள் மத சாதிவெறியர்கள், இந்துத்துவ காலிகள், வஹாபிச போக்கிரிகள், நாஜிகள், பாசிஸ்டுகள் போன்றோர். சோசலிச ரஷ்யாவை பிளவுபடுத்துவதற்கு ஏகாதிபத்திய கைகூலிகளாக பயன்படுத்தப்பட்ட ஆயுதமே இனதேசியவாதிகள் [4] என்றால் இந்தப் பிரச்சனையை எதன் கண் அணுக வேண்டும் என்று உங்களுக்கு பிடிபடும் இல்லையா?

              தேசியம் குறித்து கீழ்கண்ட புத்தகங்களை வாசிக்கலாம் (கீழைக்காற்று வெளியீட்டகம்).
              1. ஈழம்-தேவை ஒரு நேர்மையான மீளாய்வு,
              2. ஈழம்-நேர்மையான சந்தர்ப்பவாதமும் நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்
              3. வர்க்கப் பார்வையை மறுக்கும் தமிழ் தேசியர்களுக்கு மறுப்புரை
              4. கம்யுனிசம் தோற்றதாம்! முதலாளித்துவம் வென்றதா? (ஏகாதிபத்தியம் எவ்வாறு தேசிய இனச்சண்டைகளை வலுவாக்கியது என்ற பார்வை இதில் கிடைக்கும்)

              இதற்கு முன் தோழர்களை நேரில் சந்தித்து முழுவதும் உரையாடுங்கள். இது சற்று விரிவாக விவாதிக்க வேண்டிய விடயமாகும்.

              • திரு தென்றல்,

                //டமில் தேஷியம் என்பதை எள்ளி நகையாடுவதற்காக கூறவில்லை. “தேஷியம்” பார்ப்பன மதவெறியையும் “டமில்” மொழியை தன் பிழைப்புவாதத்திற்கு பயன்படுத்துகிற சந்தர்ப்பவாதத்தையும் குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. //

                [1]வியாசனிடம் இருந்து நீங்கள் கற்ற சமாளிப்பு தனம் இது. நீங்கள் எழுத போகும் அகராதியில் தான் “டமீல் தேஷியம்” என்ற பதத்துக்கு இத்தகைய வீளக்கத்தை சேர்க்க வேண்டும்.!தோழர் கலாஷ்நிகோவ் போன்று நாம் அனைவருமே எளிமையாகவும், அதே சமயம் பொருள் செரிந்த முறையிலும் நாமும் எழுத முயல வேண்டும் என்பது வினவு வாசகர்களுக்கு நான் கோரும் வேண்டுகோள்.

                //என்னுடைய பார்வையில் போலி தமிழ் தேசியவாதி, நிஜ தமிழ் தேசியவாதி என்று தனித்து இல்லை. இனவெறியும், தங்களது தனித்த பொருளாதார நலன்களும் உள்ள குறுங்குழுக்களே (சிவசேனா, சீமான், மணியரசன் போன்றோர்) தேசியவாதி அவதாரமெடுத்து நிற்கின்றனர்.//

                [2]தேசிய வாதத்துக்கான உங்கள் விளக்கம் முழுமையானது அல்ல. “போலி தமிழ் தேசிய பீழைப்புவாதிகளை” மட்டும் நிங்கள் விமர்சனம் செய்வதன் மூலம் தேசியவாதத்தீன் உண்மையான பக்கத்தை வினவு வாசகர்களுக்கு மறைக்கின்றீர்கள். ஈழத்தில் தந்தை செல்வா[இலங்கைக்குள் உள் தமிழ் மாநிலம்] ,திரு பிரபாகரன்[சுதந்திர தமிழ் ஈழம்],தமிழ் நாட்டில் தந்தைபெரியார்[திராவிட நாடு] ஆகியோரின் தேசியத்துக்கான முன்முயற்சிகள், அதற்க்கான தேவைகள் உங்களால் விமர்சனம் செய்ய படாமல் மறக்க படுகின்றது.

                //நீங்கள் சொல்வதைப்போல குர்தீஷ், ஈழம், காஷ்மீர், மணிப்பூர், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களுமே பல்வேறு தேசிய இனங்களாகும். அவர்களின் சுயநிர்ணய உரிமையை கம்யுனிசத்தால் மட்டுமே வெல்ல முடியும். சோசலிசப் புரட்சி தவிர சுயநிர்ணய உரிமையை பெற்றெடுக்க வேறுவழியில்லை. //

                [3]”கம்யூனிஸ்ட்டுகள் எழுச்சி பெறாத”[note this] காஷ்மீர், குர்தீஸ்தான், ஈழம் போன்ற நிலபரப்பில் வாழும் மக்கள் பேரினத்தால் அடக்க படும்போது அவர்கள் தேசீய இன விடுதலைக்காக ஜனநாயக சக்திகளுடன் இணைந்து போராடுவதை கம்யூனிஸ்ட்டுகலாகிய நாம் வரவேற்க்க தானே வேண்டும்.?இவ் விடயத்தில் நீங்கள் ம க இ க வின் கொள்கையில் இருந்து வேறுபடுகீன்றீர்கள் தென்றல். ம க இ க தோழர்களுடன் பேசிப்பாருங்கள், உங்கள் முரண்பாடுகள் வெளிப்படும்.

                //ஈழம் என்று எடுத்துக்கொண்டாலும் ஈழத் தமிழர்கள் என்ற ஒற்றைத் தேசிய இனத்தில் பட்டிக்குள் அடைக்க இயலாது. அங்கேயும் பல்வேறு தேசிய இனங்கள் உண்டு. மலையகத் தமிழர்கள், இசுலாமியர்கள், ஈழத்தமிழர்கள் தேசிய இனங்களாக பிரிந்துபோகும் உரிமையோடுகூடிய சுயநிர்ணய உரிமையே தீர்வாகும் என்பது என் புரிதல்//

                [4]மலையகத் தமிழர்களை ஈழத்துல் கொண்டு வருவது உங்கள் தவறான புரீதல்.ஈழ வரைபடத்தில் கிழக்கிலும் ,வடக்கிலும் வாழும் பூர்வீக தமிழர் மற்றும் தமிழ் பேசும் இஸ்லாமியதமிழர் மட்டுமே ஈழம் என்ற வரையரைக்குள் வருவார்கள். மலையகத் தமிழர்கள் வாழும் நிலபரப்பு ஈழத்து நிலபரப்பில் இருந்து விடுபட்டு உள்ளது என்பதை வரைபடத்தில் காண்க.

                continue…..

              • திரு தென்றல்,

                //ஆக தேசியம் பேசுகிறவர்களின் கொள்கைகளை நாம் பரிசிலீக்க வேண்டும். அதில் பெரும்பாலும் ஹமாஸ், புலிகள் போன்ற இயக்கங்கள் சாகசவாதத்தாலும் வெறும் ஆயுதமேந்திய போரட்டத்தாலும் பெரும் தோல்வியையே தழுவி நிற்கின்றன.

                இரண்டாவது தேசியம் பேசுகிற வகையறாக்கள் மத சாதிவெறியர்கள், இந்துத்துவ காலிகள், வஹாபிச போக்கிரிகள், நாஜிகள், பாசிஸ்டுகள் போன்றோர். சோசலிச ரஷ்யாவை பிளவுபடுத்துவதற்கு ஏகாதிபத்திய கைகூலிகளாக பயன்படுத்தப்பட்ட ஆயுதமே இனதேசியவாதிகள் [4] என்றால் இந்தப் பிரச்சனையை எதன் கண் அணுக வேண்டும் என்று உங்களுக்கு பிடிபடும் இல்லையா? //

                நீங்கள் இது வரை பார்த்தது தேசிய இன போராட்டஇங்களீன் தவறுகளை தான்.அரசியலை முதன்மை படுத்தாத ஆயுத போராட்டம் அதன் போக்கிலேயே தோல்வி அடையும் என்பதை ம க இ க தோழர்கள் பு ஜா ,வினவு கட்டுரைகளில் பல முறை சுட்டி காட்டி உள்ளார்கள். 2006 ஆம் ஆண்டு தொடங்கிய ஈழ பேராழீவு போர் , இருதி நிலையில் மட்டுமே [2009 January முதல்] தமிழகம் , UK ,Canadian என்று உலகம் முழுவதும் அரசியல் தளத்தில் எதிரொலித்தது. அது வரை தன் தன் சொந்த வேலைகளை மட்டுமே செய்து கொண்டது இருந்த நம் சமுகம் ,2009 January க்கு பின் உரக்கத்தில் இருந்து எழுந்தது அரசியல் தளத்தில் குரல் கொடுத்தது எதற்க்காக ? மே 2009 ஆண்டு முற்றீலும் அழீக்கபட போகும் ஈழ போருக்கு பாடை கட்டி சுடுகாடு அனுப்பவா ?

                காசா முனை ,பாலஸ்தினம் என்று வரும் போது உலக சமுகம் காட்டும் மனித உரிமைக்கான முன் முயற்சிகள் ,ஈழம் என்று வரும் போது பாரா முகமாக இருந்ததை காண தவறிவீட்டீர்கள்.

                எமக்கு வலி என்றால் ஈழத்து வலி வேறு காசா வின் மீதான பாசிச தாக்குதல் வலி வேறு அல்ல தென்றல்.

                con…….

              • திரு தென்றல்,

                கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் “மேலும்”,”கீழும்” நடந்த இரு வகையான போராட்டங்களை அவதானியுங்கள். நேப்பாலத்தின் பல ஆயிரம் இளம் தோழர்களால் உயிர் கொடுத்து கட்டமைக்கபட்ட வர்க்க போராட்டம், அதன் தலைமையால் எகாதிபத்தியத்துக்கு “கூட்டி கொடுக்க பட்ட” மாமா வேலை நிகழ்வுகளையும், தலைமையால் ஆயுத போராட்ட அணிகள் கலைக்க பட்ட _____ தனத்தையும், ஈழத்து இருதி நாட்ட்களுடன் ஒப்பீட்டு பாருங்கள். எது சரி ? இருதீ வரை போர் செய்து உயிர் துறப்பதா ? அல்லது எதிரி இடம் மண்டி இட்டு அவன் கால் shoe க்களை நக்கி நேப்பாள வர்க்க போராட்டத்தை சிரழிந்த தலைமை போல , __________ தேர்தல் அரசியலில் இறங்கீ மக்கள் செல்வாக்கு இழந்து அற்பனாக வாழ்வதா ?

                Thendral pls refer :

                http://vansunsen.blogspot.in/2014/02/conflits-with-in-mkek-critics-about.html

                http://vansunsen.blogspot.in/2014/02/nepal-maoist-surrender-agreement-ucpn.html

                http://vansunsen.blogspot.in/2014/02/nepal-maoist-surrender-agreement-part-2.html

                • இது தான் உங்கள் சுயமுகம். நீங்கள் மட்டுமில்லை தான் சார்ந்து இருக்க விரும்புகிற அரசியலுக்கு மார்க்சியம், கம்யுனிசம், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற பல வார்த்தைகளை அலங்கரித்துவிட்டு அண்ணன் பிராபகரன் என்பார்கள் பலபேர். நீங்களாவது பராவயில்லை. கலாச்சாரப் புரட்சி சர்வாதிகாரம் என்று சொல்பவர்கள் எத்துணை கம்யுனிஸ்டுகளை கொன்றழித்தார்கள் தெரியுமா என்று கதறுவார்கள். கூரிய விமர்சனத்தை கம்யுனிஸ்டுகளுக்கு வைத்துவிட்டு, அமெரிக்க ஜனநாயகம் ஆகா ஒகோ என்று சொல்வதைப்போல தந்தை செல்வநாயகம், அண்ணன் பிராபகரன் என்று போரிலே உயிர் துறந்தார்கள் என்று வியந்து ஓதுகிறீர்கள்.

                  இது இரட்டை வேடமாகும். என் பார்வையில் ஈழத்திற்கு விமர்சனம் வைத்திருப்பதைப்போன்று பாராளுமன்ற ஜனநாயகத்தில் சீரழிபவர்களை அடையாளங்கண்டு நேபாள் சூழ்நிலையை ஒட்டி பல கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. ஒரு பக்கம் பாராளுமன்ற ஜனநாயகத்தில் சீரழிந்தவர்கள் மாமா வேலை என்று சொல்கிற நீங்கள் செல்வநாயகம் போன்றவர்கள் அதே பாராளுமன்ற ஜனநாயகத்தில் சுயஆட்சியை தேடுகிற பொழுது தந்தை என்று சொல்கிறீர்கள்.

                  நேபாளை சூழ் கொண்ட தரகுமுதலாளித்துவம், ஏகாதிபத்திய நலன்கள், ரா போன்ற உளவுபிரிவுகளின் இந்திய உள்ளடி வேலைகள் இலங்கைக்கும் பொருந்தும் என்கிற பொழுது அங்கே பிராபகரன் போன்றோர் பாசிச நடவடிக்கைகளில் சீரழிந்ததை மறைத்துவிட்டு போரிலே இறந்தது தியாகம் என்று நிலீக்கண்ணீர் வடிக்கீறிர்கள்.

                  மறுபக்கம் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைக்கு வருந்துவதாக சொல்லும் தாங்கள் மலையகத் தமிழ்ர்கள் என்று வரும் பொழுது மட்டும் ஈழத் தமிழர் குழுக்கள் போடுகிற பிச்சையை வாங்கிக்கொள்ளவேண்டும் என்று அடம்பிடிக்கீறிர்கள்.

                  இவ்விதம் உங்களது எண்ணம் வெளிப்படுவது எனக்கு விருப்பமல்ல. ஆனால் சரவணன் என்பவர் இப்படித்தான் இருக்கிறார்.

                  • நண்பர்களே, இந்த விவாதம் கட்டுரையின் மையப் பொருளைத் தாண்டி ஈழம் குறித்து சென்றுவிட்டது. பொதுவில் விவாதம் நடக்க வேண்டுமென்று விரும்புவதாலேயே இப்படி விலகிச் சென்றாலும் மட்டறுக்காமல் வெளியிட்டு வந்தோம். எனினும் இனி அப்படி விலகி விவாதிக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறோம். ஈழம் குறித்த விவாதங்களை அதோடு தொடர்புடைய கட்டுரைகளில் விவாதிக்கலாம்.இனி கட்டுரை பொருள் குறித்தே விவாதிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி

              • தென்றல்,

                //என்னுடைய பார்வையில் போலி தமிழ் தேசியவாதி, நிஜ தமிழ் தேசியவாதி என்று தனித்து இல்லை. //

                Prayer ::

                மாங்காட்டு மாரியம்மா , நான் 108 விளக்கு ஏத்துறேன் ; சாப்பாடு போடுறேன்.இந்த புள்ளை தென்றலுக்கு நல்ல புத்திய கொடு ;தென்றல் போலி தமிழ் தேசியவாதி, நிஜ தமிழ் தேசியவாதி என்று தனித்து இல்லை என்று உளருவதை எல்லாம் பார்த்து கொண்டு கல்லாகவே இருக்கீய; நீ இருப்பது நிசம் என்றால் நாளைகுள் இந்த புள்ளை தென்றலுக்கு தெளிந்த புத்திய கொடு சாமி மாங்காட்டு மாரியம்மா…….

          • தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட தலைவர்களும் அந்தந்த சாதி மக்களும் மட்டும் தமக்கென ஒவ்வொரு கட்சியை ஏற்படுத்திக் கொண்டு, ஒவ்வொரு மூலையில் நின்று கூக்குரல் போட்டுக் கொண்டு, ஆளுக்கொரு திசையில் இழுப்பதால் தான் தமிழ்நாட்டில் சாதியொழிப்பு சாத்தியமாகவில்லை என்பது எனது கருத்தாகும்.

            பெரும்பான்மைத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற, பெரும்பான்மைத் தமிழ்நாட்டு மக்களின் குரலாக விளங்கும் பெரிய கட்சிகள் சாதியொழிப்பை முன்னெடுக்காத படியால் தான் இந்த 21ம் நூற்றாண்டிலும் சாதிபற்றிய விழிப்புண்ர்வில்லாமல் தமிழ்நாட்டில் தீண்டாமை காணப்படுகிறது. அதற்கு ஒரே வழி ஈழத்தில் நடந்தது போன்று பெரும்பான்மைத் தமிழர்களின் தலைவர்கள் சாதியொழிப்பு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் தான் ஈழத்தில் தந்தை செல்வா போன்ற வெள்ளாளத் தலைவர்கள் ஆலயப்பிரவேசம், சமபந்தி போசனம், சத்தியாக்கிரகம் போன்ற சாதியொழிப்பு போராட்டங்களை நடத்தியதைக் கூறினேன். வழக்கம் போல் அதைத் திரித்து எனது “வெள்ளாள பாசத்தைக்” கண்டு பிடித்து விட்டாராம் தென்றல்.

            விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை கூட அவர்களின் பரம்பரைக் கோயிலில் ஆலயப்பிரவேசத்து எதிர்த்தார் என்ற உண்மை பலருக்கும் தெரியாது. அவருடன் கூடத் தான் தமிழரசுக் கட்சியினர்(பெரும்பான்மைக் கட்சி) ஆலயப்பிரவேசம் பற்றி சவால் விட்டனர். அவர் வெள்ளாளர் அல்ல. ஆனால் ஈழத்தமிழர்களின் வரலாற்றிலேயே சாதியொழிப்பை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி, தமிழர்கள் மத்தியில் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்கமுடியுமெனக் காட்டியவர், அவர்களை விடத் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆலயப்பிரவேசத்தை மறுத்தவரின் மகன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். அதனால் முன்னோர்கள் சாதிமான்களாக இருந்தார்கள் என்பதால் அவர்களின் பரம்பரையினர் எல்லாம் சாதிவெறி பிடித்தவர்களாக இருப்பதில்லை, தமிழ்நாட்டில் எப்படியோ எனக்குத் தெரியாது. நானறிந்த வரையில் ஈழத்தமிழர்கள் அந்த நிலையில் இல்லை.

            ‘புலிகள் தலைவர் பிரபாகரன் உண்மையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரா?’

            http://viyaasan.blogspot.ca/2013/06/blog-post_10.html

            • போராடி உயிர் கொடுத்து ஆலைய பிரவேச உரிமையை பெற்றது யாழ் பஞ்சமர் மக்கள். ஆனால் வியாசன் பாராட்டுவது சைவ வெள்ளாள சாதி வெறியர்களை.

        • வியாசன்,

          வியாசன் வாயில் இருந்து வருவது பொய் மட்டும் அல்ல. சைவ வெள்ளாள சாதி வெறியர்களீன் வக்கிர மூளையில் இருந்து வரும் புழு புளுத்த விசம் கூடிய நாற்றமும் தான் . போராடி உயிர் கொடுத்து ஆலைய பிரவேச உரிமையை பெற்றது யாழ் பஞ்சமர் மக்கள். ஆனால் வியாசன் பாராட்டுவது சைவ வெள்ளாள சாதி வெறியர்களை.

          ///இலங்கையில் ஆலயப்பிரவேசம், சமபந்தி போசனம், சத்தியாக்கிரகம் போன்ற சாதியொழிப்பு போராட்டங்களை நடத்தியவர்கள், ஈழத்தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியைச் சேர்ந்த வெள்ளாளத் தலைவர்கள் தானே தவிர தமிழ்நாட்டைப் போல் தாழ்த்தப்பட்ட சாதித் தமிழர்களின் தலைவர்கள் அல்ல.///

          • அண்ணன் சரவணனுக்குக் கள்ளம் இல்லாத மனசு. சரியாப் பதினாறுவயதினிலே படத்தில வாற கமலகாசன் மாதிரி. அவர் என்னைப் புகழும் போதும் என்னைவிட ஆளில்லை என்று கூறுமளவுக்குப் புகழுவார், ஆனால் ஒரு மூட் வந்தால், பொய்யன், புளுகன், சாதி வெறியன் என்றெல்லாம் கூடக் கூறுவார். அதனால் எனக்கு அவர் மீது கோபம் வருவதுமில்லை, அவரது அன்புக்கு எல்லையே கிடையாது. 🙂

            இலங்கையில் பஞ்சமர்களின் போராட்டங்களுக்கு பெரும்பான்மை ஈழத்தமிழர்களின் தலைவர்கள் ஆதரவளித்தது மட்டுமல்ல, அவர்களுடன் இணைந்து கொண்டு, தலைமை தாங்கியும் போராட்டங்களையும், விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர். அதனால் தான் தமிழ்நாட்டை விட மோசமான சாதிப்பாகுபாடு காணப்பட்ட யாழ்ப்பாணத்தில் இன்று தீண்டாமை என்பது கிடையவே கிடையாது. அது மட்டுமல்ல, தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது சாதிப்பாகுபாடு கிடையாது என்று கூறக் கூடிய நிலையுமுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெறும் சாதிக் கொடுமைகள் இலங்கையில் நடைபெறுவதில்லை. அண்ணன் சரவணன் வினவில் அப்பாவித் தனமாக யாழ்ப்பாண வெள்ளாளர்களைத் தூற்றுவதை விட்டு, தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மலம் தீற்றும் கிராமங்களில் போய், ஆதிக்கசாதியினரைப் பார்த்துக், கொஞ்சம் தூரத்தில் நின்று கத்தினாலாவது நாலு பேப்பரில் வரும், அதனால் சாதிப்பிரச்சனைக்கு விளம்பரமும் கிடைக்கும்

        • வியாசனின் கோடி கோடி சதம் முழுப்பொய்கள். தமிழ்நாட்டில்தான் திராவிட இயக்க செல்வாக்கில் பார்ப்பன எதிர்ப்பு,சாதி எதிர்ப்பு போராட்டங்கள், நாத்திக இயக்கம்,பெண்ணுரிமை அனைத்தும் நடந்திருக்கு. இலங்கையில் உள்ள யாழ் வேளாள தமிழ் தேசிய தலைவர்கள், கட்சிகள் எல்லாம் திராவிட இயக்கத்தின் கால் தூசுக்கு கூட அருகதை அற்ற பிற்போக்கு கூட்டம். பிறகு இலங்கையில் சாதி, தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள் நடத்துனது கம்யூனிஸ்டுங்கதான். இதை தமிழ் தேசிய தலைவர்கள், வேளாள வெறியருங்க நடத்துனாங்கன்னு சொல்றது பொய்யே ஆத்திரப்படும் கேவலமான மகா திருட்டு மோசடி பொய்.
          தோழர் கலையரசனின் வரிகளிலிருந்து…..

          //இது தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சமல்ல. “தமிழீழப் போராட்டம் காரணமாக சாதி ஒழிந்து விட்டது”, என்று கூறிக் கொள்ளும் ஈழத் தமிழர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. அதனை மறுப்பவர்கள், ஒன்றில் கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்களாக இருப்பார்கள், அல்லது சாதிய கட்டுமானத்தை பாதுகாப்பவர்களாக இருப்பார்கள்.(வியாசன் மாதிரி)

          ஈழத்தில் சாதியத்தை ஒழித்ததில் புலிகளின் பங்களிப்பை மறுக்க முடியுமா?

          சாதியக் கட்டமைப்பின் அடக்குமுறை வடிவமான தீண்டாமை ஒழிப்பையே, பலரும் சாதிய ஒழிப்பு என்று தவறாக புரிந்து கொள்கின்றனர். புலிகள் தோன்றுவதற்கு முன்னரே, கம்யூனிஸ்டுகளின் போராட்டத்தால், சாதித் தீண்டாமை ஒழிந்து விட்டது. அறுபதுகளில் சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சி, சிறுபான்மைத் தமிழர் மகாசபை போன்றன, இரட்டைக் குவளை முறையை எதிர்த்தும், கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தியும் தீண்டாமையை பெருமளவு ஒழித்து விட்டனர். சில இடங்களில் அது ஆயுத மோதலாகவும் பரிணமித்தது. இவை எல்லாம் புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு முன்பு நடந்தவை. //

          • தோழர் கலையரசன் தொடர்ச்சி

            //
            எமது ஊரின் கோயில்களை உயர்சாதியினர் சொந்தம் கொண்டாடியததற்கு பின்புலத்தில் முக்கியமான பொருளாதாரக் காரணி ஒன்றிருந்தது. வறண்ட பிரதேசமான யாழ் குடாநாட்டில், குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. நிலத்தடியில் ஓடும் நல்ல தண்ணீர், கோயில் கட்டப்பட்டுள்ள இடங்களில் தான் காணப்படுகின்றது. கோயிலில் மட்டுமல்ல, கோயிலை சுற்றி அமைந்துள்ள சில உயர்சாதி வெள்ளாளரின் குடியிருப்புகளிலும் நன்னீர்க் கிணறுகள் உள்ளன. மற்ற இடங்களில் கிணறு எவ்வளவு ஆழத்திற்கு தோண்டினாலும், குடிக்க முடியாத உப்புத் தண்ணீர் தான் கிடைக்கும். அந்த வீடுகளில் குடியிருக்கும் துரதிர்ஷ்டசாலிகள், “பொது இடமான” கோயில் கிணற்றுக்கு சென்று குடிநீர் அள்ளி வருவது வழக்கம். இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகின்றது. உயர்சாதி வெள்ளாளர்களுக்கு மட்டும் கோயில் கிணற்றில் தாமாகவே தண்ணீர் அல்ல உரிமையுண்டு. தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அந்த உரிமை கிடையாது. யாராவது ஒரு வெள்ளாளர் தண்ணீர் அள்ளி அவர்களின் குடங்களில் ஊற்ற வேண்டும். அப்போது வாளியும், கையும் குடத்தில் படாதவாறு எட்டத்தில் நின்று தண்ணீர் ஊற்றுவார்கள். தாழ்த்தப்பட்டோர் போகும் நேரத்தில், அந்த இடத்தில் வெள்ளாளர் யாராவது காணப்படா விட்டால், காத்திருக்க வேண்டுமே தவிர, தாமாகவே தண்ணீர் அள்ளி ஊற்றிக் கொள்ள முடியாது. காலங்காலமாக தொடர்ந்த மரபு, 1982 ம் ஆண்டு உடைக்கப்பட்டது.

            ஆமாம், யாழ் மாவட்டத்தில் ஈழப்போராட்டம் தீவிரமடைந்திருந்த எண்பதுகளிலும் தீண்டாமை தொடர்ந்தது. தமிழீழ விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த இயக்கங்கள், பொலிஸ் நிலையங்களை தாக்கி, காவலர்களை கொன்று, ஆயுதங்களை அபகரித்து சென்றார்கள். துணிச்சலுடன் வங்கிகளை கொள்ளையடித்தார்கள். சமூகவிரோதிகளுக்கு மரணதண்டனை வழங்கினார்கள். ஆனால்…. ஆனால்…தீண்டாமைக் கொடுமையை எதிர்க்கவில்லை. இதுவரை எந்தவொரு சாதிவெறியன் கூட “மரண தண்டனை” விதிக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள், தமக்குத் தெரிந்த வழிகளில் அவற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தார்கள். இயக்கங்களிடம் உதவி கேட்டால், “சிங்கள பேரினவாதத்தை எதிர்க்கும் பாரிய பொறுப்பு இருப்பதால், சாதிப்பிரச்சினையை கவனிக்க நேரமில்லை.” என்றார்கள். “தமிழீழம் கிடைத்தால் போதும், சாதி தானாகவே மறைந்து விடும்.” என்று சிலர் சித்தாந்த விளக்கம் அளித்தார்கள். தமிழ் தேசியக் கட்சிகள் மட்டுமல்ல, ஆயுதபாணி இயக்கங்களும் ஆதிக்க சாதியினரை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஒரு சில அரசுசாரா அமைப்புகள் மட்டுமே, தலித் விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்றன.

            கோயிலில் குடிநீர்த் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் வேலையில் சிலர் இறங்கினார்கள். திடீரென ஒரு நாள், ஊர்க் கட்டுப்பாட்டை மீறிய தாழ்த்தப்பட்ட இளைஞர்கள், கோயில் கிணற்றில் தாமாகவே தண்ணீர் அள்ளிச் சென்றனர். ஊருக்குள் இந்தச் செய்தி பரவியதால், சமூகத்தில் பதற்றம் நிலவியது. உயர்சாதியினர் கோயில் கிணற்றை பகிஷ்கரிக்கும் போராட்டத்தில் இறங்கினார்கள். கோயிலுக்கு அருகில் இருந்த “வெள்ளாளக் கிணறுகளில்” தண்ணீர் அள்ளினார்கள். இதனால், கோயில் கிணறு தாழ்த்தப்பட்டோர் வசம் சென்று விட்டது. “தலித் மக்கள் ஆக்கிரமித்த” கோயில் கிணற்றினுள், சாதிவெறியர்கள் உமி கொட்டி, நீரை மாசு படுத்தினார்கள். நஞ்சூட்டப் பட்டிருக்கலாம் என்றும் வதந்தி பரவியது. இதற்கெல்லாம் அஞ்சாத தாழ்த்தப்பட்ட மக்கள், தாமாகவே கிணற்றை சுத்தப் படுத்தும் வேலையில் இறங்கினார்கள். கிணற்றை தூர் வாரி, நீரிறைத்து பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றினார்கள். அதற்குப் பிறகும் இரண்டொரு தடவை நீரை மாசுபடுத்தும் ஈனச்செயலில் இறங்கிய உயர்சாதியினர், பின்னர் தாமாகவே விட்டுக் கொடுத்தனர். தற்போது அந்தக் கோயில் கிணறு, நிரந்தரமாக தாழ்த்தப்பட்ட மக்களின் சொத்தாகி விட்டது.

            தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் குடிநீர்ப் போராட்டத்திற்கு, எந்தவொரு தமிழ் தேசிய அரசியல் கட்சியோ, அல்லது இயக்கமோ ஆதரவு வழங்கவில்லை. இடதுசாரிக் கட்சிகளிலும், மனித உரிமை நிறுவனங்களிலும் அங்கம் வகித்த ஆர்வலர்கள் போராட்டக் காலத்தில் முன் நின்றார்கள். அன்றைய காலங்களில், அரசு சாராத அல்லது கட்சி சாராத நிறுவனங்கள் மிகக் குறைவு. “சிறுபான்மைத் தமிழர் மகாசபை” தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருந்தது. சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களை குறிக்கும் “சிறுபான்மைத் தமிழர்” என்று பெயரிடப்பட்ட அமைப்பில், தாராளமயத்தை ஆதரிக்கும் பலர் அங்கம் வகித்தனர். “அறவழிப் போராட்டக் குழு” என்றொரு மனித உரிமை நிறுவனமும் அப்போது தான் ஸ்தாபிக்கப் பட்டிருந்தது. சர்வதேச மட்டத்தில், “சர்வதேச மன்னிப்புச் சபையுடன்” நெருங்கிய உறவைப் பேணியது. இத்தகைய அமைப்புகள், அன்று யாழ் மாவட்டம் முழுவதும் நடந்த தலித் விடுதலைப் போராட்டத்தை, வெறும் மனித உரிமைப் பிரச்சினையாக கருதித் தான் ஆதவளித்தன. சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இருந்துள்ளனர். மேலும் எழுபதுகளில் “ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயுதப்போராட்டம்” நடத்திய சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியும் அரசியல் குறிக்கோளுடன் இயங்கி வந்துள்ளது. //

            • தோழர் கலையரசன் தொடர்ச்சி…

              //யாழ்ப்பாண சாதிய சமூகத்தின் சமநிலையில் மாற்றம் வரலாம் என்ற அச்சம், உயர்சாதியினர் மத்தியில் நிலவுகின்றது. இன்றைக்கும், யாழ்ப்பாணத்தில் ஆதிக்க சாதியாக இருப்பது தாமே என்பதை நிறுவ பெரும் பிரயத்தனப் படுகின்றனர். போரினால் கவனிக்கப்படாது விடப்பட்ட கோயில்களை புனரமைப்பதும், கோலாகலமாக திருவிழாக்கள் நடத்துவதும் அத்தகைய மனோபாவத்தில் இருந்தே எழுகின்றது. கிராமங்களில் இருக்கும் சிறு கோயில்கள் கூட, வெளிநாட்டுப் பணத்தில் பெரிதாக கட்டப்பட்டு வருகின்றன. இடிபாடுகளுடன் சிதைவடைந்த கோயில்கள் கூட திருத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கின்றது. (அதே நேரம், பொது மக்களின் இடிந்த வீடுகள் கவனிப்பாரற்று கிடக்கின்றன.) கோயில்களை புனரமைக்கவும், திருவிழா செலவுகளுக்கும் நிதி சேகரிக்கும் படலம், வெளிநாடுகளில் முடுக்கி விடப்படுகின்றது. குறிப்பாக ஒரே ஊர்க்காரர்கள், ஒரே சாதிக்காரர்கள் வாழும் இடங்களில் அத்தகைய நிதி சேகரிப்புகள் மும்முரமாக நடந்து வருகின்றன. நிதி கோரும் போது, அவர்கள் தமது பங்கை செலுத்த வேண்டும் என நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். //

              • சமுத்திரன் என்பவர் கட்டுரையிலிருந்து….

                //யாழ்ப்பாணத்தில் சாதியத்திற்கெதிரான போராட்டங்களின் வரலாற்றுப் பின்னணியைத் தெளிவாக்கி 1960களில் இடம்பெற்ற வெகுஜனப் போராட்டத்தின் முக்கியத்துவம் பற்றி ஆயப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் சமூகங்களில் யாழ்ப்பாணத்திலேயே சாதியமைப்பு மிகவும் இறுக்கமான நிறுவன மயமாக்கலைக் கொண்டிருந்தது. சைவவேளாள உயர் வர்க்கத்தினால் பிராமணிய மயப்படுத்தப்பட்ட யாழ் சமூக அமைப்பில் தீண்டாமையும் சாதிக் கொடுமைகளும் சைவ வேளாளியக் கருத்தியலினாலும் பல்வேறு சடங்குகளினாலும் நியாயப் படுத்தப் பட்டன. இத்தகைய ஒரு சமூக அமைப்பில் சாதியத்திற்கெதிரான போராட்டங்களின்றித் தாழ்த்தப்பட்போர் தமது சுதந்திரத்தை மனித கவுரவத்தைப் பெற முடியாதென்பது அடிப்படை உண்மை. கிறிஸ்துவ பாடசாலைகளின் வருகை யாழ் சமூகத்தில் சாதியத்தை கேள்விக்குள்ளாக்கி எதிர்புக்களைத் தெரிவிக்கும் சமூக இடைவெளிகளை உருவாக்கவதற்கு உதவியது.

                கிறிஸ்துவ மதமாற்ற நிறுவனத்தினர் தமிழ்ச்சமூக அமைப்பின் அடிப்படைகளையோ, ஆதிக்க சக்திகளையோ நேரடியாகத் தாக்காது தமது செயற்பாடுகளை நடத்தியபோதும், கிறிஸ்துவ பாடசாலைகளும் மதமாற்றமும் ஒருசில தாழ்த்தப்பட்ட சாதியினரின் கல்விக்கும் சமூக நகர்ச்சிக்கும் உதவின. இந்தத் தனிநபர்கள் சாதியத்திற்கெதிராகக் குரல் கொடுத்தனர். நடைமுறைரீதியான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். இந்தப்போக்கு சென்ற நூற்றாண்டின் முதலாவது தசாப்தத்திலேயே துளிர் விடத் தொடங்கியது. இந்தப் போக்கு தொடர்ந்த வேளை 1920களில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் உதயமாகியது. இது காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தினாலும், முற்போக்குச் சிந்தனைகளாலும் ஆகர்சிக்கப்பட்ட இந்த இயக்கம் பிரிட்டிஷ் காலனித்துவத்திடமிருந்து பூரண சுதந்திரத்தை வேண்டி நின்ற அதேவேளை, யாழ் தமிழ் சமூகத்தின் சாதி அமைப்பினையும் எதிர்த்துச் செயற்பட்டது.

                இதைத் தொடர்ந்து 1935இல் உருவான இடதுசாரிக் கட்சியான சமசமாஜக் கட்சியினர் யாழ்ப்பாணத்தில் சாதிய எதிர்ப்பினைத் தொடர்ந்தனர். இடதுசாரிய அரசியலின் வருகை சாதி அமைப்புப் பற்றிய அறிவுரீதியான விமர்சனப் போக்கினையும் வளர்க்க உதவியது. இதே காலகட்டத்தில் சர்வஜன வாக்குரிமையின் வருகை தமிழ் அரசியலில் யாழ் சமூகத்தின் ஏறக்குறைய முப்பது வீதத்தினராய் இருந்த தாழ்த்தப்பட்டோரின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. 1920களில் யாழ் இளைஞர் காங்கிரசினால் நடைமுறைப் படுத்தப்பட்ட சமபந்தி போசனம் காலப்போக்கில் பாராளுமன்ற அரசியல்வாதிகளால் வாக்குகள் பெறும் ஒரு பிரச்சாரக் கருவியாக்கப் பட்டதையும் காண்கிறோம்.

                ஆயினும் இந்த வலதுசாரி அரசியல் வாதிகளும் அவர்களின் கட்சிகளும் (தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி) சைவ வேளாளியத்தின் அமைப்பு ரீதியான, கருத்தியல் ரீதியான மேலாதிக்கத்தை விமர்சிக்கவோ, எதிர்க்கவோ முன்வரவில்லை. அப்படிச் செய்வது அவர்களின் வர்க்க நலன்களுக்கு வரோதமானது என்பதை அவர்கள் அறியாமலில்லை.//

                • டானியல் கட்டுரையில் இருந்து…

                  //தாழ்த்தப்பட்ட மக்களின் குரலின்கீழ் பல சாதியினரையும், பல மதத்தினரையும் பெருவாரியாகக் கலந்துகொள்ள வைத்த அனுபவத்திலிருந்துதான் ”தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்” பிறப்பிக்கப் பட்டதாகும். பல பிற்போக்காளர்களாலும், தமிழர் அரசியல் இயக்கங்களாலும் ஒருமுகமாக இந்த எழுச்சி எதிர்க்கப்பட்டபோது பெருஞ்சாதித் தமிழர் வழி வந்த திரு.என்.சண்முகதாசன் அவர்களால் தலைமை தாங்கப்பட்ட இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த எழுச்சியை ஏற்று ஒத்துழைப்புத் தர முன் வந்ததோடல்லாமல் ஆக்கபூர்வமான காரியங்களில் நேரடியான ஒத்துழைப்பையும் நல்கியது. இந்தச் செயற்பாடு அதுவரை திறக்கப்படாது யாழ்நகர் எங்குமிருந்த தேனீர்க் கடைகளையும், யாழ் நகருக்கப்பால் கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களின் தேனீர்க் கடைகளையும் திறப்பதற்கு வாய்ப்பளித்தது. மகாசபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்களில் இருந்துதான் பொதுவான ஒரு அரசியல் உணர்வையும், சமூக மாற்றத்திற்கான செயற்பாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் பங்கையும், ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியெங்கும் பரப்ப முடிந்தது.//

                  • ஈழத்து எழுத்தாளர் என்.கே.ரகுதாநன்.

                    //நான் பிறந்து வளர்ந்தது எனது சமூகத்தைச் சேர்ந்த பதினெட்டு இருபது குடிமனைகளையுடைய ஒரு சிறிய கிராமம். வராத்துப்பளை என்பது அதற்குப் பெயர். ஐந்து வயதில் அருகில் உள்ள ஒரு மிஸன் பாடசாலையில் படித்தேன். எமக்கு அயற்கிராமமான கற்கோவளம் என்ற மீன் பிடித்தொழிலாளர்கள் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்த – படித்து ஆசிரியர்களானவர்கள் அங்கு படிப்பித்தமையாலும், அந்தச் சமூகத்து மாணவர்களுடன் எனது சாதி மாணவரும், அடுத்த கிராமமான பறைய சாதி மாணவரும் அங்கு படித்தமையினால், அங்கு எது வித பிரச்சினையுமில்லை.

                    ஐந்தாம் வகுப்பு முடிந்ததும் சற்றுத்தொலைவிலுள்ள வேளாளரின் நிர்வாகத்திலுள்ள சிவப்பிரகாச வித்தியா சாலை எனப்படும் சைவப் பாட சாலையில் சேர்ந்து அங்கு கல்வி கற்றேன். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை என்ற படியால், அங்கு படிப்பித்த ஆசிரியர்கள் சாதிப் பாகுபாடு காட்டாவிட்டாலும் ஒரு சில மாணவர்களால் பெரும் கொடுமைகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. அங்கு முதன் முதல் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மாணவன் நான்தான். அனைத்து – மாணவர்களுக்கும் கடைசியில் எனக்குத் தனிவாங்கு மேசை. கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடிக்க முடியாது. மற்றவர்கள் அள்ளி ஊற்ற கை ஏந்திக் குடிக்க வேண்டியதுதான். பல துன்பங்களைச் சுமந்து கொண்டு எஸ்.எஸ்.சி. வகுப்பு வரைக்கும் போய் அவ் வகுப்பில் படித்தபோது, ஒரு மாணவனால் நான் மிகவும் அக்கிரமங்களுக்குள்ளாகினேன். பாடசாலைத் தோட்டத்து வேலியை, ஒருநாள் கூலியாட்கள் அடைத்து முடிந்ததும் மாணவராகிய நாங்கள் அந்த வேலிக்கரையைச் சுத்தப்படுத்தப் போனோம்.//

                    • ஈழத்து எழுத்தாளர் என்.கே.ரகுதாநன்.
                      //
                      கேள்வி: சாதி ஒடுக்கு முறையை அப்போதிருந்த தமிழ்த் தேசியவாதிகளான தமிழரசுக் கட்சியினர் எப்படி அணுகினர்?

                      பதில்: தமிழரசுக் கட்சியினர் சாதியடுக்குமுறைக் கெதிராக கடுகளவு பணியாற்றியதுமில்லை. பாரம்பரியமான பிற்போக்கு வாதக் கருத்துக்களின் அடிப்படையிலேயே தமது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பாராளுமன்றத் தேர்தல்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து, வேளையிலேயே சாதி முறைக்கெதிராகப் பாடுபட்டு வந்த, சகலராலும் அன்பாக ஜெயம் என்று அழைக்கப்பட்ட சி. தர்மகுல சிங்கம் முதலாவது பாராளுமன்றத் தேர்தலிலும் (சமசமாஜக் கட்சியின் ஆதரவுடன்) தொடர்ந்து பொன் கந்தையா கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் போட்டியிட்டதால் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் இந்த அபேட்சகர்களுக்கே தமது வாக்குகளைச் செலுத்தினார்கள். அதேவேளை, வதிரியைச் சேர்ந்த பள்ளர் சமூகத்தவர்கள் மிதவாதப் போக்கில் தமது வாக்குகளை தமிழரசுக் கட்சியினருக்கு அளித்தார்கள். அதற்கொரு அடிப்படைக் காரணம் இருந்தது. அவர்கள் மற்றைய எளிய சாதியினரைப் போல வேளாண் சமூகத்தவர்களுக்கு அடிமை வேலை செய்யாமல் சொந்த ஊரிலும் இலங்கை முழுவதுமுள்ள பட்டினங்களிலும் சாப்பாத்துத் தொழில் செய்து வியாபாரம் செய்வதால் மேல் சாதியினரின் நேரடி ஒடுக்கு முறைகளுக்காளாவதில்லை. அதனால் அவர்கள் தமிழரசுக் கட்சிக்கே தமது வாக்குகளை அளித்தனர். இரண்டாவது பாராளுமன்றத்தேர்தலில் வதிரியைச் சேர்ந்த இராசலிங்கம் என்பவர் போட்டியிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை.

                      கேள்வி: சாதி ஒடுக்கு முறையை இடதுசாரிகள் எவ்விதம் அணுகினார்கள்?

                      பதில்: சாதிய ஒடுக்குமுறை _ இடது சாரிகளின் அணுகு முறை. இடதுசாரிக்கட்சிகள் உழைக்கும் மக்களின் வியர்வையிலிருந்து தொடங்கப்பட்டவை. நிற, இன, மொழி, வர்க்க வேறுபாடுகளை அழிப்பதற்கே அவை ஆரம்பிக்கப்பட்டவை யாதலால், மக்கள் நலனே அவற்றின் இலட்சியமாகும்.//

                    • ஈழத்து எழுத்தாளர் என்.கே.ரகுதாநன்.

                      //எம்.சி. சுப்பிரமணியம் வாலிபப் பிராயத்திலிருந்தே சிறுபான்மைத் தமிழர்களின் விடுதலைக்காகப்பாடுபட்டவர். அவர், கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகப்பாடுபட்டு வந்ததனால் சிறுபான்மைத் தமிழர்களுக்கு உயர்சாதி வேளாளரினால் இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு எதிராகப் போராடிவந்தார். இதனிமித்தம் ஆலயப்பிரவேசம் தேனீர்க் கடைப்பிரவேசம் சைவபாடசாலைகளில் எளியஞ் சாதி மாணவர்க்கான அனுமதி இப்படியான தொடர்ப்பாடுகளில் ஈடுப்பட்டார். அவருடைய முயற்சியால் பல ஆலயங்கள் திறந்து விடப்பட்டன. தேனீர்க் கடைகளில் பாகுபாடு நிறுத்தப்பட்டது. பாடசாலைகளிலும் எமது மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலைமையில் தான் மாவிட்டபுர போராட்டம் நடைபெற்றது. அக்காலத்தில் இலங்கையை ஸ்ரீமாவோ அம்மையார் ஆட்சிபுரிந்தார். அம்மையாருக்கு கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக்கட்சி போன்ற இடதுசாரிக் கட்சிகள் பக்க பலமாயிருந்தன. கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுதலின் பேரில், எம்.சி. சுப்பிரமணியம் பாராளுமன்றத்தில் நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டு பணியாற்றிக் கொண்டிருந்தார்.

                      கொட்டா றோட்டிலிருந்து இயங்கி வந்த கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கொள்கை வேறுபாட்டினால் பிளவு ஏற்பட்டு தோழர். நா. சண்முகதாசன் தலைமையில் ஒரு பகுதியினர் பிரிந்து தீவிர வாதப் போக்கைக் கடைப்பிடித்து இயங்கினர். ரஷ்யாவை ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் குருச்சேவ் திரிபு வாதப்போக்கில் இயங்கிவர, சீனாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி சீனத்தலைவர் மாஓசே – துங்கினால் புரட்சிகரப்பாதையில் இயங்கத் தொடங்கியது. இந்த நிலைப்பாடு உலகம் முழுவதுமுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் தலைத்தூக்கத் தொடங்கியது. இலங்கையிலும் இந்தப் பிளவு நிலை ஏற்பட்டது. யாழ்ப் பாணத்தில் சாதிக்கொடுமைகளினால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அனைவரும் அணிதிரண்டு கோயில் போராட்டங்களில் ஈடுபட்டனர். மாவிட்டபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தை அமைதிப்பாதையில் மேற்கொண்டனர். அதனால் ஆலய வாசலில் அமர்ந்து சாத்வீகப் போராட்டத்தை நடத்தினர்.//

                    • எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் இது நடந்தது என்பதை அவரும் குறிப்பிடவில்லை, நீங்களும் குறிப்பிடவில்லை. 🙂

                  • மீண்டும் ஒருவர் டானியலின் நாவல்களை வரலாற்று ஆதாரமாகக் கொள்ளத் தொடங்கி விட்டார் போலிருக்கிறது. தமிழ்நாட்டில் நாறிக் கொண்டிருக்கும் சாதிச் சாக்கடையை மறந்து விட்டு, தமிழ்நாட்டில் நடைபெறும் சாதிக்கொடுமைகளைத் தடுக்க வக்கில்லாத தமது கையாலாகாத்தனத்தை மறைப்பதற்காக, ஈழத்தமிழர்களிடம் இல்லையென்றே சொல்லுமளவுக்கு உக்கிப் போன சாதிக்குப்பையை கிண்டிக் கிளறி மணந்து பார்க்க விரும்பும், தமிழ்நாட்டு சாதியொழிப்பு வீரர்கள் கையில் எடுப்பதெல்லாம் டானியலின் நாவல்கள் என்னும் பைபிளைத் தான். 🙂

                    • VIYASAN,

                      உலாகமே உம் வெள்ளாள சாதி வெறியை கண்டு உணர்ந்தது டானியலின் பஞ்சமர் நாவல் மூலமாக தான். பஞ்சமர் மக்களீன் ஆலய பிரவேச போராட்டத்தைமுறையாக ஆவானபடுத்தியது பஞ்சமர் நாவல் என்னும் போது, அவர்கள் அதையே அவர்களீன் விடுதலைக்கான பைபிளாக கொள்ளட்டுமே!

    • வியாசன் , ஏறிகணைகளால் தாக்க படுவதும் , புல்டோசரால் இடிக்கபடுவதும் காசா முனை என்றாலும் , முள்ளிவாய்க்கால் முனை என்றாலும் எதிர்த்து குரல் கொடுப்பவன் மட்டுமே மனித உரிமையாளன். ஒரு பக்க சார்பு என்பது தன் இன தற்கொலைக்கு சமமான ஒன்று என்பதை உணருங்கள்

      • திரு.வெற்றிவேல்

        இலங்கையில் சாதியொழிப்பில் தமிழரசுக் கட்சியினதும், தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் பங்களிப்பை நானும் ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன். நானும் படித்தவற்றைத் தான் இங்கு எழுதுகிறேன். ஆரம்பகாலத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பை யாரும் மறுக்கவில்லை, ஆனால் எம்.சி. சுப்பிரமணியம் சிங்களவர்களிடம் சிறுபான்மைத் தமிழர்களின் நலன்களை அடகு வைத்து விட்டார் என்று வெளிநாட்டில் வசிக்கும் அவரது சமகாலத்தவர் கூறியதை நான் கேட்டிருக்கிறேன். ஈழத்து எழுத்தாளர் என்.கே.ரகுநாதன் வேண்டுமென்றே தமிழரசுக் கட்சியின் பங்களிப்பை அடக்கி வாசித்திருக்கிறார் போலத் தான் எனக்குத் தெரிகிறது. அவருக்கு என்ன காழ்ப்புணர்வோ யார் கண்டது, எழுத்தாளர்கள் என்று கூறிக் கொள்ளும் ஒவ்வொருவரும் அவரவர்க்கென தனிப்பட்ட வேலைத்திட்டத்தைக் (Agenda) கொண்டிருக்கிறார்கள். இதைப்பற்றி மேலும் அறிந்து கொண்டு, உங்களுக்குப் பதிலை விரைவில் இங்கு அல்லது எனது வலைப்பதிவில் எழுதுகிறேன். நன்றி.

  45. தென்றலுக்குப் பதிலெழுதுவது வீண் வேலையாக இருந்தாலும் கூட, இவரது பதில்கள் எல்லாமே வெறும் வேற்று வேட்டுக்கள் தான் என்பதைக் காட்டுவது எனக்குப் பெரிய விடயமல்ல.

    1. //எமது முன்னோர்கள் சிவனிய திருமாலிய நெறியினர் என்று கதறுபவர்கள் ஆதிக்கசாதி வேளாளர்களே. ///

    இதற்கு நான் எத்தனையோ முறை பதிலளித்து விட்டேன். ஆதிக்க சாதி வெள்ளாளர்கள் மட்டும் சிவனையும், திருமாலையும் வணங்கவில்லை. தென்றல் விரும்புவது போல் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் எல்லாம் இன்னும் சிவனியத்தையும் திருமாலியத்தையும் விட்டு ஓடிவிடவில்லை. அறுபத்து மூனர் நாயன்மார்களிலும் ஆழ்வார்களிலும் அத்தனை தமிழ்ச் சாதிகளும் , பிரிவினரும் இருப்பதே தமிழர்கள் அனைவரினதும் முன்னோர்கள் சிவனிய திருமாலிய நேரிடினர் என்பது ஒரு குழந்தைக்குக் கூடப் புரியும் ஆனால் பாவம், தென்றலுக்குப் புரியவில்லை.

    2. //வேதத்தை புறக்கணித்து நீலகேசியை (சைவ நூல்) ஆதாரமாகக் கொண்டு தங்களை உயர்வானவர்களாகக் கருதி பிற சாதிகளை வரையறுத்து சூத்திரர்களை வரையறுத்தவர்களில் சைவர்களும் அடக்கம். வருண சிந்தாமணி இதற்கு ஆதாரம்.//

    பிறசாதிகளை சூத்திரர்களாக வரையயருத்த் வெள்ளாளர்கள் அவர்களையும் சூத்திரர்களாக வரையறுத்துக் கொண்டார்கள் போலிருக்கிறது. ஏனென்றால் இன்றும் வெள்ளாளர்கள் கூட சூத்திரர்கள் தான். அதனால் உங்களின் வரலாற்றுக் கதை (இதையும் தொ. பரமசிவன் கூறினாரா?) இக்காலத்துக்கு ஒவ்வாதது.

    3. // மறைமலை அடிகள் முதற்கொண்டு பல்வேறு முதலியார்கள் தான் சைவம் தமிழர்களின் மதம் என்று கதை கட்டியவர்கள். //

    என்ன தான் எல்லாம் தெரிந்தவர் என்று நீங்கள் காட்டிக் கொண்டாலும், இன்றும் பெரும்பான்மைத் தமிழர்களின் மதம் சைவம் தான், அதனால் யார் விரும்பினாலும் விரும்பாது விட்டாலும், சைவம் தமிழர்களின் மதம் தான் என்பது உங்களுக்குத் தெரியவில்லை. இதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத ஒருவருடன் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று தான் கவலையாக இருக்கிறது.

    4. //சமணம் தமிழர்களின் வாழ்வியல் நெறியாக இருந்ததையும் திட்டமிட்டு புறக்கணித்தவர்கள் சைவர்களே. இவர்கள் அடிப்படையில் சாதியைக் கைவிடவில்லை.//

    எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பாக சமணம் தமிழர்களின் வாழ்வியல் நெறியாக இருந்தது, அதே போல் அரேபியர்களும், இந்தோனேசியர்களும், ஐரோப்பியர்கள் கூட விக்கிரகங்கக்ளையும் கல்லையும் வழிபட்டார்கள், அதனால் அவர்களைப் பார்த்து இஸலாமும், கிறித்தவமும் அவர்களின் வாழ்வியல் நெறியல்ல என்றும் அவர்கள் மீண்டும் பழைய நெறிக்கு திரும்ப வேண்டுமென்றும், அவர்கள் அதைத் திட்டமிட்டு புறக்கணித்து விட்டார்கள் என்றும் தென்றல் கூறத் துணிய மாட்டார். சமணம் போய் சைவம் வந்து, அது இன்றும் நிலைத்து நிற்கிறது. அதனால் சைவம் தான் தமிழரக்ளின் மதம், சமணத்தைப் பற்றிய கதைகள் எல்லாம் வெறும் வரலாறு மட்டும் தான்.

    5. //வேதங்களுக்கு உயர்வாக தமிழ் தேவாரம் மதிக்கப்படுகின்றன. //

    தேவாரங்களை வேதங்களுக்கு உயர்வாக மதிப்பதன் காரணம் அது தமிழில் இருப்பது தான். அது பாசுபதத்தைப் பேசினால் என்ன, காரோணத்தைப் பாடினால் என்ன, சிவனைத் தான் போற்றுகிறது. சிவ வழிபாட்டின் வேர்கள் தமிழர்களிடம் தான் இருந்தது என்பதை, உங்களின் ஆசான் தொ. பரமசிவனே ஒத்துக் கொள்கிறார். அதனால் தமிழர்களிடமிருந்து உருவாகிய சிவ வழிப்பாட்டை, அந்தச் செம்மையேயாய சிவனைத் தமிழில் பாடுகின்றன தேவாரங்கள். அதனால் நாங்கள் அவற்றை சமக்கிருத வேதங்களை வித உயர்வாக மதிக்கின்றோம்.

    6. //ஈழத் தமிழ்சைவத்தின் அடிப்படை சாதியே. ஆறுமக நாவலர் அப்பட்டமான சாதியாளராகவே இருந்தார் என்பதை அவர் எழுதிய குறிப்புகளைக் கொண்டே விளங்க இயலும். //

    ஈழத் தமிழ்ச் சைவம் ஆறுமுகநாவலருக்கு ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முற்பட்டது. அதனால் ஆறுமுகநாவலர் சாதியாளராக இருந்ததற்கும் ஈழத் தமிழ்ச் சைவத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
    7. //கதிர்காமன் கோயிலில் சாதிப்பாகுபாடுகள் பற்றி குறிப்பிட்ட பொழுது வியாசன் அது முன்னொரு காலத்தில் என்றும் தற்பொழுது இல்லையென்றும் கதைவிட்டவர்.//

    இந்த உளறலுக்கு முன்பே பதிலளித்து விட்டேன்.

    8. //தமிழர்களாக அடையாளப்படுத்தும் சைவர்கள் தான் தன்னை பார்ப்பனர்களாக மாற்றிக்கொண்டனர். வேளாளர்கள் தான் சிவகோத்திர பார்ப்பனர்களாக தமிழ்நாட்டில் மாறியது என்ற உண்மை வியாசருக்குத் தெரியாதுபோலும். //

    பெரும்பாலான தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் திராவிடச் சூத்திரர்கள் தான் என்பது எனக்கும் தெரியும். ஈழத்திலும் இரண்டு தலைமுறைக்கு முன்னால் வெள்ளாளர்களாக இருந்தவர்கள் இன்று பார்ப்பனர்களாகியுள்ளனர். அதனால் தான் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்தும் பார்ப்பனர்களும் தமிழர்கள் தான் என்கிறேன் நான்.

    9. //அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது வெறும் உதட்டளவில் வியாசர் வைக்கிற பாசாங்கு.//

    ஏன் ஐயர் மட்டும் பூசை செய்கிறார் மற்றவர்கள் ஏன் பூசை செய்யக் கூடாது என்ற கேள்வியை நான் சின்னஞ்சிறு சிறுவனாக இருக்கும் போதே கேட்டதாக எங்களின் வீட்டில் இப்பொழுதும் கூறுவார்கள் இந்தக் கருத்தை மாணவனாக இருக்கும் போது நானே எழுதிப் பேச்சுப் போட்டிகளில் பேசியிருக்கிறேன். இதற்கு முன்பாக பல இணையத்தளங்களிலும், எனது வலைப்பதிவுகளிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்ற கருத்தை ஆதரித்து எழுதியிருக்கிறேன் அது ஒருநாள் நிச்சயமாக நிறைவேறும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு,

    • ஒப்புதல் வாக்குமூலம் இவ்வளவு தெளிவாக என்றைக்கும் இருந்ததில்லை. பார்ப்பனியத்தை தமிழில் பாடினால் அது தமிழன் கலாச்சாரம் அல்ல; தரகன் கலாச்சாரம்!! (துரை சண்முகம் வேட்டிக்கு பயன்படுத்திய வரிகளை பாசுபதத்திற்கு பயன்படுத்திக்கொண்டேன்).

      விசம் தின்ற பெருச்சாளி அம்பலத்திற்கு மூச்சு வாங்க இப்படித்தான் வெளியே வரவேண்டும்.
      வியாசப் பெருமானுக்கு தெரியாத ஒன்று, இங்கு உழைக்கும் மக்களின் வழிபாடு மயிரளவிற்கும் மதிக்கப்பட்டதில்லை. மதமே இங்கு உழைப்பைச் சுரண்டத்தான். அதிலென்ன சைவம், கிறித்தவம், இசுலாம் என்று தனித்தனியாக.

      மதச் சடங்குகளை விட்டொழிக்க முடியும் என்கிற பொழுது என்ன முடிக்காக (Hair) பழைய வழிபாட்டிற்கு திரும்ப வேண்டும்? கல்ச்சர் என்று மக்களைச் சுரண்டுகிற களவாணிகளுக்கு புதிய கலாச்சாரம் தான் தேவை. அது மதங்களுக்கு அப்பாற்பட்டது.

      உண்மையிலேயே வியாசனுக்கும் அரவிந்த நீலகண்டனுக்கும் என்ன வித்தியாசம்? இருவருமே ஒன்றை மாற்றி மாற்றி தானே சொல்கிறார்கள். ஒருவர் இந்துமதத்திற்குள்ளேயே இருந்து தீர்வு காண்போம் என்கிறார். இவர் இந்து மதம் அல்ல; சைவம் என்ற சரக்கு இருக்கிறது. கொஞ்சம் நுகர்ந்துபாருங்கள் என்கிறார். சுவனப்பிரியனுக்கு யுவன் சங்கர்ராஜா; வியாசபெருமானுக்கு பசுபதி! ஆள் மாறினால் அசிங்கம் மாறுமா?

      • தோழர் தென்றல் வினவு தொழிலாளவர்க்கத்தில் இருந்து மிக குறைந்த அறிவாளிகளையே பெற்றெடுத்திருக்கிறது.அது தாங்களும் ஒருவராக இருப்பதில் பெருமைப் படலாம்.

        இந்த வர்க்கசமுதாயத்தில் தமிழனுக்கு தெலங்குகாரனுக்கு கர்நாடககாரனுக்கு கேரளகாரனுக்கு நீதி கேட்டால் நாம் எப்படி அதற்கு பரிகாரம் தேட முடியும்..?

        வியாசனுடன் தாங்கள் நடத்தும் விவாதம் என்றுமே முற்றுப் பெறாது.இது இந்த றூற்றண்டில் கருத்தியலுக்கான போர்ரும் அல்ல.
        தேசியத்தை தங்க வைக்கிற ஒரு யுத்தியே!

        முதாலிளித்தவத்திற்கும் பாட்டாளிகளுக்கும் உள்ள உறவு முறையை முடிந்த அளவுக்கு வெளிக் கொண்டுவர முயற்சிக்கவும்.இது உங்களால் முடியும் என்றே நம்புகிறேன்.

        தனிநபர் தாக்குதல்களை தவிர்கவும். மதம்.. பொங்காத பானைக்கு திரும்பவும் உலை மூட்டுவது ஏனோ?.

        • அன்புள்ள மாவோ அவர்களுக்கு,

          மதம் பொங்காத பானை என்று கருத முடியுமா என்று தெரியவில்லை. பார்த்தால் என் தரப்பில் கற்பனையான முடிவுகளைத் தான் வைக்கமுடிகிறது. ஆனால் இரண்டு விசயங்களைத் நம்மால் கறாராக கண்டுகொள்ள முடியும் என்று நம்புகிறேன். எந்த நாட்டு பாட்டாளிவர்க்கத்திற்கும் இரண்டு கடப்பாடுகள் உண்டு. அவை தன்னிலை வர்க்கமாகவும் தனக்கான வர்க்கமாகவும் புடம்போட்டுக் கொள்வது. தன்னிலை வர்க்கம் என்பதில் பல்வேறு சமூக குழுக்கள் சுரண்டலை அனுபவிப்பதில் பாட்டாளிகளை (உற்பத்தி சாதனங்களை உடமையாக கொண்டிருக்கவில்லை) ஒத்திருக்கின்றன. ஆனால் தனக்கான வர்க்கமாக மாறுவதில் அதாவது பாட்டாளிகள் ஒன்று சேர்ந்து போராடுவதில் பல்வேறு மாயவித்தைக் கணைகளை உடைத்தெறிவதில் சமரசமற்ற போராட்டங்கள் தேவைப்படுகின்றன.

          மதம் இதில் முதலாளிகளுக்கு பினாமியாக வருகின்றன. இன்றைக்கு மதங்கள் உலகநிதியத்தைவிட அதிகமாக ‘இயங்காத மூலதனத்தை’ வைத்திருக்கின்றன. சுரண்டலின் உச்சம் இது. ஐந்தாயிரம் கோடி சொத்து வைத்திருக்கிற மதுரை ஆதினத்திற்கு சிவபெருமான் கனவில் வருவது தற்செயலான நிகழ்வல்ல. அல்லது காஞ்சி சங்கராச்சாரி நடத்தும் நேத்ராலாயா டிரஸ்டிற்கு ஜிஆர்டி தங்க முதலாளி தனிப்பட்டு ஒருகோடி நன் கொடை கொடுத்தார். இப்படிச் சொல்வதன் பொருள் ஆதின சொத்துக்கள் எல்லாம் பார்ப்பன மடங்களின் சொத்துகளுக்கு முன் வெறும் தூசாகும். பத்மநாபனின் கணக்குகள் பார்ப்பனீயத்தின் பெயரால் இன்னும் தணிக்கை செய்யப்படாமல் இருக்கின்றன. மல்லையா பொதுமக்களின் பணத்தை சூதாடிவிட்டு திருப்பதி உண்டியலை நிரப்புவதன் கள்ளக்கூட்டினை பக்தன் தெரிந்துகொள்ள வேண்டும். வஹாபிசத்தின் ஸ்பான்சரில் உள்ள பிசுபிசுப்பு அரேபியா என்பதை வழுக்கிக்காட்டுகின்றன.

          ஆனால் இதையெல்லாம் தாண்டி பின்னூட்டமிடுகிற நமக்கு எந்த விசயங்களும் பிடிபட்டதாக தெரியவில்லை. இன்றைக்கு வியாசருக்கு சைவம் என்பது மேல்தட்டு வர்க்க பொழுதுபோக்கு. திருமயிலை வெங்கடேசன் அவர்களால் பலநேரங்களில் தவறு என்று சுட்டிக்காட்ட முடிகிறது. ஆனால் பாசுரம் பாடி நடையை கட்டுகிறார். இதுவரைக்கு பத்துக்கும் மேற்பட்ட செய்யுள்களை பாடியாயிற்று!!! என் பார்வையில் சைவத்தை விமர்சிக்கையில் மதம்-அரசின் கள்ளக்கூட்டினை சரியாக எடுத்துவைக்க முடியவில்லை. வர்க்கப்பார்வையை முன்வைக்கிற தாங்கள் பார்ப்பனீயத்தை விமர்சிப்பதில்லை என்ற ஒரு தன்மையும் நிலவுகிறது. இன்றைக்கு இசுலாமியத்தை சரியாக சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். குண்டுபோட்டாலும் அல்லாகு அக்பர்; கோல் போட்டாலும் அல்லாகு அக்பர் என்பது சரியான வார்த்தைகள். இறைநம்பிக்கையாளரின் அவலநிலையை சரியான சாட்டையால் விளாசின இவ்வார்த்தைகள். ஆனால் பார்ப்பனீயம் என்று வருகிற பொழுது சுணக்கம் இருக்கிறது. அதைப் பற்றி நாம் விவாதிக்க வேண்டும்.

          துஷ்டன் சங்கராச்சாரியை அம்பலப்படுத்திய ஆடிட்டர் வரதராஜனை எந்தப் பார்ப்பனரும் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் காஞ்சி இங்கு தலைமை பீடத்தின் அதிகாரமையமாக வீற்றிருக்கிறது. பார்ப்பனீயம் நமது சமூகத்தின் ஆன்மாவாக வீற்றிருக்கிறது. பெரியாரை கண்டு அலர்ஜியாக கருதும் பார்ப்பனர்களுக்கு தத்தோச்சாரியாரும் இனிக்கவிலை “பட்டபகல்ல அதுவும் பந்தலுக்குள்ளே மணமகள் கிட்ட அருந்ததி நட்சத்திரத்தை பார்த்தியான்னு கேட்கிறான் பார்ப்பான். அதுக்கு அவளையும் ஆமாம்னு சொல்லச்சொல்றான்” என்று பேசியதை திராவிட இயக்கங்கள் பிரச்சாத்திற்கு எடுத்துச் சென்றன. எங்கேயும் எதிலேயும் பூணுலை விட்டுக்கொடுக்காதவர்கள் தத்தோச்சாரியாவை எவ்விதம் கண்டுகொண்டன? டி. எம். கிருஷ்ணா விமர்சனக் கணைகளை தொடுத்த பொழுது பார்ப்பனீயத்தின் வேர்களின் ஆழ அகலம் உங்களுக்கு பிடிபட்டிருக்குமில்லையா? ஒடுக்கப்பட்ட மக்களில் பள்ளர்களுக்கும் பறையர்களுக்கும் கொள்வினை கொடுப்பினை கிடையாது என்றால் தன்னிலை வர்க்கமாக இணைவதில் தாங்கள் முன்வைக்கக்கூடிய கருத்துக்கள் என்ன? மக்களை பிரித்தாள்வதில் பல அடையாள அரசியல்கள் தலித்தியம் உட்பட கோலோச்சுகிறது எனில் அதற்கு அர்த்தபுஷ்டி கொடுக்க மதங்களில் பார்ப்பனீயம், வஹாபிசம் என்று வரிசை கட்டி நிற்கின்றன.

          சைவம், பார்ப்பனீயம், வஹாபிசம் என்று நாம் விமர்சிக்காவிட்டால் அது கொண்டுபோய் நிறுத்துகிற முட்டுச்சந்து என்ன? இதையல்லாம் செய்யாத சிபியை சிபிஎம் கட்சிகள் எடுத்தவுடன் மூலதனத்தை கற்றுக்கொடுக்க கிளாஸ் எடுக்கின்றன. போராடுகிற குணத்தை தங்களது சிந்தையில் இருந்து அகற்றியவர்கள் மார்க்சியத்திற்குள் இன்று கணிசமாக இருக்கின்றனர்.
          தன்னிலை வர்க்கமாக புடம்போடுவதில் மதங்களின் கள்ளக்கூட்டு அம்பலப்படுத்துவதில் ஈவு இரக்கமற்ற போராட்டங்களை கருத்திலும் களத்திலும் எடுப்பதே தீர்வாக இருக்கமுடியும் என்று நான் கருதுகிறேன். தங்கள் பார்வை என்ன?

          • தோழர் தென்றல்!

            தங்களுக்கான பதில் காலதாமதம் ஆகியதற்காக மன்னிக்கவும். ஏற்கனவே ஒரு இடத்தில் வினவிடமே கேள்வி கேட்டுள்ளேன். இதுவரைக்கும் பதில் இல்லை.

            நீங்கள் ஆத்திரப்படுவது பார்ப்பணிய இலக்கியங்களிலா? பார்பணிய சமூகத்திடமா? என்பது பற்றி. இதுவரைக்கும் மவுனமே பதிலாக இருக்கிறது.வினவு வேறு அதில் கட்டுரை வரைபவர்கள் வேறு என்பதையும் அறிவேன். ஆகையினால் அதை ஒருபக்கத்தில் தற்போதைக்கு மெளனமாக நிறுத்தி வைப்போம்.

            மனிதன் தன்னைத்தானே உணர்ந்து கொள்வதும் தனது எதிரியை முதல் அறிந்து கொள்வதும் தான் முதல் அறிவு என கருதுகிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது இந்தியாவின் ஜனபெருக்கமோ பல்வேறுபட்ட சமூக அமைப்புகளோ அல்ல.ஆகவே இங்கு பிராமணியத்தில் குற்றம் சாட்டுவதில் எந்த வித பொருளும் இல்லை.

            அப்படி குற்றம் சாட்டுபவர்கள் அற்ப அற்பஉலகஅறிவு சீர்திருத்துவ கருத்துக்களுடன் அறிமுகமான ஈ.ரா.வே அம்பேத்கர் போன்றவர்களின் வாரிசுகளே. இவர்களுக்ளுக்கு கணத்துதீர்த்து தூசிய துடைத்தெறியாவிட்டால் இந்தியாவில் ஒரு மாற்றத்தையோ புரட்சியோ எதிர் கொள்ள முடியாது. தயாரிக்கவும் முடியாது.

            ஆகவே..பிராமணிய எதிர்ப்பு என்பது ஒரு சமூகவெறி.நாஜிகளின் யூத எதிர்ப்புக்கு நிகரானது. இது இறுதியில் பாசிஸத்திற்கே இட்டு செல்லும்.

            உலகத்தில் மதங்கள் வகிக்கும் பாத்திரம் இரண்டாம் தரமானவை.மதங்கள் மக்களை சுரண்டுபவை அல்ல. சிந்தனையை அழுக்காக்குபவை. இதுவே வேறு பாடு.

            இன்று தான் தோற்றிவித்த பூதத்தை அடக்கியாள முடியாத நிலையிலே முதாலித்துவத்தை காண்கிறோம்.இது தனது அடியாள்களுக்கு என்.சி.யோ மூலமாக உதவிகளையும் அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறது.இதுவும் முதாலித்துவத்தின் இறுதி ஆசைகள் போலும்.

            நீ ஒரு புரட்சியாளனாக இருந்தால் மாக்ஸியவிதிகளை கற்றுக் கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது.இந்தியாவின் வெற்றி இந்தியாவில் உள்ளக்கடப்படவில்லை.அது சர்வதேசிய தொழிலாள வர்க்க ஒற்றுமையிலும் ஏகாதிபத்திய-முதாலித்துவ எதிர்பு உணர்வுகளை பாட்டாளிகளுக்கு முக்கியமாக தொழிலாள வர்க்கத்திற்கு உணர்த்துவதிலேயே தங்கியிருக்கிருக்கிறது.

            படு பிற்போக்கான கொள்கையுடை பிராமணிய எதிர்ப்பில் அல்ல.

          • தோழர் தென்றல்,

            இன்னுமா mr .mao அவர்களை நம்பறீங்க. அவரு சொல்றதுல உள்ள உள்முரண்பாட்டப் பாருங்க…..

            //மனிதன் தன்னைத்தானே உணர்ந்து கொள்வதும் தனது எதிரியை முதல் அறிந்து கொள்வதும் தான் முதல் அறிவு என கருதுகிறேன்.///

            மனிதன் தன்னைத் தானே தனியே உணர்ந்து என்றைக்கு கச்சேரி கட்டறது உலகப் புரட்சி செய்வது. இங்கேயே அவன் தன்னை பார்ப்பனன் என்றும் பறையன் என்று தானே உணர செய்கிறார்கள் . தன்னை சரியாக புரிந்து தனக்கான வர்க்கமாக உருவாகவே பார்ப்னனியம் தடையாக இருக்குன்னு சொன்னா இவரு உலகப் புரட்சியப் பத்தி பேசுறாரு.இதுல வேற வினவு இவருக கேட்ட உலகமாக்கேள்விக்கு பதில் சொல்லலையாம். வியாசன் போன்றவர்களை விட இவர் மிகவும் ஆபத்தானவர்.

            நன்றி.

            • தோழர் சிவப்பு,

              அதற்கு பிற்பாடான பல பதிவுகளில் முரண்பட்டு, மாவோ தற்பொழுது விவாதங்களில் கலந்துகொள்வதில்லை. ஏறக்குறைய “தந்தை பெரியாரை கைது செய்த தமிழக போலீசு !” என்ற பதிவில் பெரியாரை திட்டி எழுதியதுதான் மாவோவின் கடைசி பகுதி என்று கருதுகிறேன். அதற்கு நான் அளித்த மறுமொழிக்கும் அவர் பதில் சொல்லவில்லை. அதன் சுட்டி இங்கே; https://www.vinavu.com/2014/09/15/rsyf-students-periyar-goes-to-city-colleges/#comment-190814

              • அதனால் தான் தோழரே அவரிடம் விவாதிப்பதில் பயனில்லை என்கிறேன். அவரைப் பொறுத்தவரை கம்யுனிசம் என்பது அவருக்கு தேவைப்படும் முற்போக்கு முகமூடி.

                • மதம் மொழி சாதி ஆகிய சண்டைகள் நேரத்தை வீணாகி , வர்க்க சமன்பாடு இன்னும் இலக்கை அடைய தடையானவை என்று நினைக்கிறார் . அதில் தவறு இல்லை .

                  நீங்கள் அந்த நிலையை அடைய இன்னும் சில காலம் பிடிக்கும்

        • தென்றல்,

          உங்கள் ராஜாகுரு mao அவர்களீன் ஆலோசனையை கேட்டு நடந்து கொள்ளுங்கள் ! 🙂

    • முன்ன திருச்சிகாரன்- _______ என்கிற பெயரில் ______ இணையத்துல சுத்திக்கிட்டு இருந்துச்சு , வியாசன் வந்த பிறகு அத காணும். ஒரு வேல, நம்ம தேவை இனி இல்லானு முடிவு பண்ணி ஓடிட்டு போல… எதையாவது இவங்களே உளரிட்டு கூட ஒரு பொம்மை போட்டுக்கிட்டு தான சிரிச்சிப்பாங்க…

  46. caste discrimination is prevalent in christianity. In Coimbatore Nadars only attend Christchurch and Parayars attend service at Immanuel church. Tirupur Paul church is divided on caste basis. Nadars driven out the Parayars from the Paul church and they have formed a new church . The coimbatore Bishop approved it. If these casteist go to heaven, they ask separate place according to their caste.

  47. 1. இந்தியவரலாற்றில் மனுஸ்மிருதியின் இடம் பற்றிய நவீன ஆய்வுகளைச் செய்தவர்கள் மதவாதிகளோ அல்லது சாதியவாதிகளோ அல்ல. மாறாக அவர்கள் மனுஸ்மிருதியே இந்திய மரபின் சாரம் என்றுதான் வாதிட்டார்கள். அதற்கு மாற்றான கருத்துக்களைச் சொன்னவர் முதலில் விவேகானந்தர். பின்னர் இடதுசாரி வரலாற்றாசிரியர்கள்.

    2. அவ்வாறு இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் சொல்வதற்கான காரணம் சமூகவியல் சார்ந்து அவர்கள் வரலாற்றை ஆராய்ந்ததுதான். இந்தியாவின் சமூகவியல் சித்திரத்தில் மனுஸ்மிருதியின் இடம் என்பது மிகமிகக் குறைவு. இந்திய சாதிகளில் மனுஸ்மிருதியால் கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் மிகக்குறைவானவர்கள் மட்டுமே என்பது நம்மைச்சுற்றி நோக்கினாலே தெரியவரக்கூடியதுதான்

    3. இந்தியாவில் மனுஸ்மிருதிதவிர பல ஸ்மிருதிகள் இருந்துள்ளன. நாரத ஸ்மிருதி, யம ஸ்மிருதி, யாக்ஞவால்கிய ஸ்மிருதி முதலியவை. இவை தவிர சங்கரஸ்மிருதி உட்பட பல பிராந்திய ஸ்மிருதிகளும் உள்ளன. சாதி ,ஆசாரங்கள் உட்பட அனைத்திலும் இவை ஒன்றுக்கொன்று மாறுபட்ட கோணங்களை முன்வைக்கின்றன. இவை பல தளங்களில் ஒரேசமயம் நடைமுறையில் இருந்தன.

    3 பி.வி.காணே என்ற ஆய்வாளர் இந்திய தர்ம சாஸ்திரங்களை விரிவாக ஆராய்ந்து எழுதியபின்னர்தான் மனுஸ்மிருதி போன்றவற்றை ஒற்றைப்படையாக பார்க்கும் பார்வை இல்லாமலானது. ஸ்மிருதிகள் கீழிருப்பவர்களைச் சுரண்டும்பொருட்டு மேலிருந்து உருவாக்கி வன்முறை மூலம் திணிக்கப்பட்டவை என்ற பார்வை மாறியது. அவை சமூகத்தின் வளர்ச்சிப்போக்கில் சமூக அமைப்புகளை உறுதியாக நிறுவும்பொருட்டு உருவாக்கப்பட்ட ஏற்பாடுகள் மட்டுமே. தேவைக்கேற்ப அவை மாறிக்கொண்டே இருந்திருக்கின்றன. தர்மசாஸ்திரங்களை ஒரு பெரிய தொடர் இயக்கமாக, ஒரு பரிணாமமாக பார்க்கும் பார்வை உருவானது. மனுஸ்மிருதியை மட்டுமே மையமாக ஆக்கும்பார்வையும் மறைந்தது

    4. பி.வி.காணே ஆய்வுக்கழகத்தில் ஆய்வுசெய்தவர் மார்க்ஸியநோக்குள்ள வரலாற்றாய்வாளரான டி.டி.கோசாம்பி. அவராலும் அவர் வழிவந்தவர்களாலும்தான் இந்திய வரலாறு புதியமுறையில் ஆராயப்பட்டது. இந்தியவின் சமூக அமைப்பு சிலரால் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது என்ற குறுகிய அசட்டுப்பார்வைக்குப் பதிலாக அது உற்பத்தி வினியோகசக்திகளின் பரிணாமம் மூலம் உருவாகி வந்தது என்ற கோணம் முன்வைக்கப்பட்டது. தர்மசாஸ்திரங்கள் அந்தப்பரிணாமத்தின் ஒரு பகுதிகளாக அணுகப்பட்டன

    5.இந்திய வரலாற்றில் ஸ்மிருதிகள் ஆளும்வர்க்கத்தால் தங்கள் ஆதிக்கத்துக்காக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டன என்பது உண்மை. அவர்கள் சமூகத்தை கட்டமைத்து ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்த அவற்றை ஆயுதமாக்கினர். கூடவே ஆதிக்கம் மாறுபடும்போது ஸ்மிருதிகள் சர்வசாதாரணமாக மாற்றவும்பட்டன.

    6.இந்திய வரலாற்றை ஒருபோதும் ஸ்மிருதிகள் சொல்லும் நால்வருண அடிப்படையைக்கொண்டு புரிந்துகொள்ளமுடியாது. அந்த முயற்சி ஆரம்பகால பிரிட்டிஷ்ஆதிக்கவாதிகளால் முயற்சிசெய்யப்பட்டது. அவர்கள் இந்தியாவின் பிரபுகுலமாக பிராமணர்களை எண்ணினர். அவர்களிடமிருந்து ஒரு நீதி-நிர்வாக முறையை உருவாக்க முயன்றனர். ஆதிக்கபிராமணர்களில் ஒருசாரார் மனுஸ்மிருதியை முதன்மையாக குறிப்பிட்டபோது அதை ஏற்றுக்கொண்டனர். அதை அடிப்படையாகக் கொண்டு இந்திய சமூகத்தையும் சாதிமுறையையும் புரிந்துகொள்ள முயன்றனர். அந்தமுறை இந்தியசமூகத்தை புரிந்துகொள்ள சற்றும் உதவாது என ஐயம்திரிபற நிரூபிக்கப்பட்டுவிட்டது

    7.இந்திய நிலத்தில் எந்தக்காலத்திலும் மனுஸ்மிருதி அல்லது இன்னொரு ஸ்மிருதி முற்றாதிக்கத்துடன் விளங்கியதில்லை. நால்வருணமுறை இறுக்கமாக நிலவியதுமில்லை. ஸ்மிருதிகள் சொல்லும் நால்வருணத்தில் இரண்டாம்படிநிலையில் இருப்பது சத்ரிய வருணம். ஆனால் உண்மையில் அப்படி ஒரு வருணமே இந்தியாவில் இருந்ததில்லை. மகாபாரதகாலம் முதல் எந்தச் சாதி நிலத்தைக் கைப்பற்றி அதிகாரத்தை உருவாக்கிக் கொள்கிறதோ அது வைதிகச்சடங்குகள் செய்து தன்னை சத்ரிய சாதி என அறிவித்துக்கொள்கிறது. யாதவர்கள், மௌரியர்கள் , மராட்டியர்கள், நாயக்கர்கள் என எத்தனையோ சூத்திர சாதிகள் பின்னர் சத்ரியர்களாக ஆகியிருக்கிறார்கள்

    8. வர்ணப்பாகுபாட்டின் உச்சத்தில் நிற்கும் சாதியான பிராமணர் கூட ஒரு தொகுப்புச்சாதியே. பலநூறாண்டுகளாக பூசாரித்தொழில் செய்பவர்கள் மெல்லமெல்ல பிராமணர்களாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள். இதை கோசாம்பி ஹிரண்யகர்ப்பம் என்ற சடங்கைக்கொண்டு விரிவாக நிரூபிக்கிறார்

    9. இந்தியாவில் இன்றும் சாதிப்படிநிலைகளில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அரசியலதிகாரம் நிலத்தின்மீதான ஆதிக்கம் ஆகியவற்றைக் கொண்டே சாதிப்படிநிலை தீர்மானிக்கப்படுகிறது. இந்த பரிணாமத்தை பொருளியல்ரீதியாகவே விளக்கமுடியும். ஸ்மிருதிகளைக்கொண்டு அல்ல

    10. நிலப்பிரபுத்துவ அமைப்பு என்பது எங்கும் இன, இனக்குழு, குல அடிப்படையில்தான் செயல்படும். அது பிறப்பு அடையாளம் சார்ந்தது. ஆகவெ உலகில் எங்கும் நிலப்பிரபுத்துவ சமூகம் பிறப்புசார்ந்த பேதங்களின் மீதே இயங்கமுடியும். உலகில் பிறப்புசார்ந்த பேதங்கள் இல்லாத சமூகமே இல்லை. தீண்டாமை உட்பட எல்லா வழக்கங்களும் ஐரோப்பா, சீனா உட்பட உலகமெங்கும் இருந்துள்ளன. பல இடங்களில் நீடிக்கின்றன. அதற்கான கொள்கைகள் ஆங்காங்கே உருவாகி வந்திருக்கும். இந்தியாவில் அது சாதிமுறையாக இருந்தது. இன்றும் ஆப்ரிக்கா போன்ற நாடுகளின் குலக்குழு அமைப்புகள் சாதிமுறைக்குச் சமானமானவையாக உள்ளன.

  48. இந்தியசிந்தனையில் வர்ணம் சார்ந்த ஒரு பிரிவினை தொல்பழங்காலம் முதல் காணப்படுகிறது. வர்ணத்திலிருந்து சாதிமுறை உருவானது என்பது ஆரம்பம் முதலே இந்தியவியலாளர்களான ஆய்வாளர்கள் அடைந்த தவறான புரிதல். அவர்கள் ஆராய ஆரம்பித்தபோது இரண்டும் ஒன்றாகக் கலந்து பிரிக்கமுடியாதவையாகவே இருந்தன என்பதுதான் காரணம்.

    வர்ணப்பிரிவினை என்பது ஒரு கொள்கையடிப்படையிலான பகுப்பு. வர்ணம் என்ற சொல்லுக்கு நிறம் என்று பொருள். தொடக்கத்தில் அந்த நேர்ப்பொருளிலேயே இந்தப் பகுப்பு ஆரம்பித்திருக்கலாம். பின்னர் அது shades என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவதற்கு நிகரான பொருளிலேயே கையாளப்பட்டுள்ளது. ஒருபோதும் நேரடியாகத் தோல்நிறத்தை அது சுட்டவில்லை.

    வர்ணப்பகுப்பு இயற்கையின் இயல்பு மனித இயல்பு பற்றிய ஒரு கொள்கையின் விரிவாக்கம். இயற்கையானது நேர்சக்தி, எதிர்சக்தி, சமநிலைச்சக்தி என்ற மூன்று விசைகளால் ஆனது எனப் புரிந்துகொண்டதிலிருந்து உருவானது அந்தக்கொள்கை. நேர்ச்சக்தி என்பது மனிதர்களின் இயற்கையில் வெளிப்படுவதை ரஜோகுணம் என்றார்கள். எதிர்சக்தி தமோகுணம். சமநிலைச்சக்தி சத்வகுணம். இப்படி மனிதர்களில் வெளிப்படும் மூன்றுகுணங்களின் அடிப்படையில் நால்வர்ணம் வகுக்கப்பட்டது. தமோகுணம் கொண்டவர்கள் சூத்திரர்கள். ரஜோகுணம் கொண்டவர்கள் சத்ரியர்கள். தமோகுணமும் ரஜோகுணமும் கலந்தவர்கள் வைசியர். சத்வகுணம் கொண்டவர்கள் பிராமணர்கள் என்று பிரிக்கப்பட்டது.

    குணங்களின் அடிப்படையில் பிரிக்கப்படும் நால்வருணம் என்ற அமைப்பு இந்தியசிந்தனைமுறையில் ஒரு நிரந்தரமான சட்டகமாகவே இருந்துள்ளது. மனிதர்களை மட்டுமல்ல மிருகங்களையும் தாவரங்களையும்கூட அப்படிப் பிரித்துப்பார்த்திருக்கிறார்கள். பிங்களசந்தஸ் சாஸ்திரம் போன்றவற்றில் அப்படிப்பட்ட விரிவான பிரிவினைகளைக் காணலாம். இது ஒரு புராதனமான மரபு. இயற்கையை அறியவும் பயன்படுத்திக்கொள்ளவும் அன்றிருந்தோர் கையாண்ட ஒரு முறை, அவ்வளவுதான்

    இது ஒரு தத்துவார்த்தமான பகுப்பாக இருந்ததே ஒழிய எங்கும் எப்போதும் இதனடிப்படையில் சமூகம் நிரந்தரமாகப் பிரிக்கப்படவில்லை. அது நடைமுறைச்சாத்தியமும் இல்லை. உதாரணமாக சத்ரியர் என்ற சாதியே இந்தியாவில் இல்லை. சூத்திரர் என்ற சாதியில் எவர் மண்ணைவெல்ல முடிகிறதோ அவர்களே ஆட்சியாளர்களாக ஆனார்கள். மகாபாரதத்தின் சத்ரிய வம்சம் பெரும்பாலும் சூத்ரசாதியிடமிருந்தே உதயமாகிறது. தன்னை சத்ரியனல்ல என்று சொல்லி அவமதிக்கும் சிசுபாலனைக் கொல்வதற்குமுன் கிருஷ்ணன் அதைச் சொல்கிறான், மண்ணாள்பவனே சத்ரியன் என்று.

    வர்ணப் பிரிவினையின் அடிப்படையில் நூல்களில் இவர்களுக்கான தொழில்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இதுவும் கொள்கையடிப்படையில்தான், நடைமுறையில் அல்ல. உதாரணமாக இந்தியவரலாற்றில் ஒருதருணத்திலும் பிராமணச் சாதியினர் பிராமணர்களுக்கு என வர்ணாசிரமம் ஒதுக்கிய பணிகளை மட்டும் செய்ததில்லை. மகாபாரத காலம் முதலே அவர்கள் போர்செய்திருக்கிறார்கள்.நாடாண்டிருக்கிறார்கள். மிகச்சமீபகாலத்தில் நாயக்கர் ஆட்சியின்போதுகூட நியோகிபிராமணர்களே போர்த்தளபதிகளாக இருந்திருக்கிறார்கள்.ஆக இந்த வர்ணாசிரமப் பிரிவினையும் அதன் அடிப்படையிலான கடமைகளும் நெறிகளும் எல்லாமே ஒருவகையான கொள்கைகளே ஒழிய யதார்த்தங்கள் அல்ல.

    சாதி என்பது முற்றிலும் வேறான ஒன்று. அது இந்தியாவின் ஆயிரக்கணக்கான பழங்குடிக்குலங்கள் நிலப்பிரபுத்துவ அடுக்குக்குள் கொண்டுவரப்பட்டபோது உருவான அதிகார அடுக்கின் விளைவாகப் பிறந்துவந்தது. நிலத்தைவென்று அதிகாரத்தை அடைந்த குலங்கள் மேல்சாதியாகவும் அவர்களால் ஆதிக்கம் செய்யப்பட்டவை கீழ்சாதிகளாகவும் உருவாயின. மிகமெல்ல பலநூற்றாண்டுகளாக நிகழ்ந்துவந்த இந்த செயல்பாடு இன்றும் தொடர்கிறது. சென்ற நூறுவருடங்களுக்குள் பல பழங்குடிக்குலங்கள் சாதிய அடுக்குக்குள் வந்திருப்பதைக் காணலாம்.

    ஆகவே சாதிப்படிநிலை என்பது நிலையானது அல்ல. நிலத்தைவெல்லும்சாதி அப்படிநிலையில் மேலே செல்வதும் நிலத்தை இழக்கும் சாதி கீழே வருவதும் சாதாரணம். பல அடித்தள சாதிகள் பேரரசுகளை உருவாக்கி ஆளும்வர்க்கமாக மாறி நூற்றாண்டுகளாக ஆட்சிசெய்திருக்கின்றன.

    இப்படிச் சொல்லலாம். சாதி கீழிருந்து உருவாகி வந்தது. வர்ணாசிரமம் மேலிருந்து உருவாக்கப்பட்டது. சாதிகளை மேலிருந்து புரிந்துகொள்ளவும் வகுக்கவும் முற்பட்டவர்கள் அவற்றை வர்ணாசிரமத்தின் சட்டகத்திற்குள் அடைக்க முயன்றார்கள். அது ஒரு அதிகாரச்செயல்பாடு. சமூகத்தைப் பிரித்து அடுக்கி ஒவ்வொருவருக்கும் அதிகார அமைப்பில் ஓர் இடத்தை வகுத்தளிக்கும் முயற்சி

    அதன்விளைவாகப் பூசாரிக்குலங்கள் எல்லாமே பிராமணர் என்ற வர்ணத்துக்குள் சென்றனர். இந்தியாவில் பிராமணர் என்ற அடையாளத்துக்குள் முற்றிலும் வேறுபட்ட பல்வேறு சாதிகள் இருப்பது இதனால்தான். இந்த நிகழ்வை சமீபகால உதாரணமாகப்பார்க்கவேண்டுமென்றால் வீரசைவ மரபில் வீரசைவ பூசைக்காக பசவரால் உருவாக்கப்பட்ட பிரிவினர் சில தலைமுறைக்குள் வீரசைவ பிராமணர்களாக மாறியதைச் சுட்டிக்காட்டலாம். வணிகம் செய்த சாதிகள் வைசிய வர்ணத்துக்குள் செலுத்தப்பட்டன. நாடாண்ட சாதிகள் ஷத்ரியர்களாக அடையாளம்காணப்பட்டன. உதாரணமாக, மாடுமேய்க்கும் யாதவர்கள் பேரரசை உருவாக்கியபோது ஷத்ரியர்களாக ஆனார்கள்.இவ்வாறுதான் சாதியும் வர்ணமும் ஒன்றாகக் கலந்துகுழம்ப ஆரம்பித்தன.

    ஆனால் இவ்வாறு வர்ணத்தின் சட்டகத்திற்குள் சாதிகளை அடைக்கும்போக்கு ஒருபோதும் முழுமையாக நிகழ்ந்ததில்லை. சாதிகள் மாறிக்கொண்டே இருந்தன. ஒருசாதி, தான்செய்யும் தொழிலோ தன்னுடைய அதிகாரமோ மேம்படும்போது வர்ணாசிரம அமைப்பில் மேம்பட்ட இடத்தைக்கோரியது. அதை மெதுவாகப் போராடி அடையவும்செய்தது. ஷத்ரிய வைசிய அடையாளங்களுக்காக சூத்திரர் என வகுக்கப்பட்ட சாதிகள் போராடுவதை இன்றும்கூடக் காணலாம்.

      • மனிதன் ஜெயமோகனின் வலை தளத்தில் இருந்து நகலெடுத்து இருக்கிரார்.அவரெ ஒரு சுய இன்ப வாதி (ஆன்மீகவாதி)

    • மனிதன் அவர்களே, உங்களது பின்னூட்டங்களிலிருந்து தாங்கள் வலியுறுத்த விரும்புவது என்ன?
      என் தரப்பு பிராதுகளை அடுக்கிவிடுகிறேன்.

      பழைய ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம் பழம் என்ற கதையாக இந்துத்துவத்தை எப்படியும் விற்றுவிடலாம் என்றே போக்கே இருக்கிறது.

      ஸ்மிருதிகள் இந்துத்துவத்திற்கு பெரிய இடைஞ்சலாக இருப்பதை தேள் கொட்டிய திருடனாக பல ஹிந்துத்துவ மானினிகள் குமைச்சலோடு கருதிய காலம் இப்பொழுது ஏற்பட்டதல்ல.

      ஸ்மிருதிகளுக்கு உண்டான எதிர்ப்பியக்கம் நடுரோட்டில் இந்துத்துவத்தின் ஆன்மாவை பீயாக பிதுக்கிய பிறகும் கூட இந்தத்துவ வியாதிகளின் நெஞ்சு வெந்துவிடவில்லை. ஆனால் இன்றைக்கு மக்கள் ஒட்டச் சுரண்டப்பட்டபின்னரும் இந்துத்துவ இயக்கங்களுக்கு ஸ்மிருதி தாண்டிய வியாக்கானங்களும் பொருளாதார ஆய்வுகளும் தேவைப்படுகின்றன. எப்படியும் தன்னை தக்காட்ட வேண்டுமென்றால் அம்பேத்கர் முதற்கொண்டு இந்துத்துவ வெறியர்களுக்கு தேவைப்படுகிறது.

      இவ்வளவு பாயிண்டாக பேசுகிற மனிதனைவிட அநீ ஒரேபோடாக போடுவார்; மனுஸ்மிருதி புஸ்யமித்ரர் காலத்திற்கு பிறகு வருவதால் அதை இந்துத்துவத்திற்கு ஒரு பொருட்டாக கருத முடியாது. ஆனால் புருச சூக்தம் சரி என்று காந்தியில் இருந்து பிரம்ம ஆர்ய சமாஜம் வரை நால்வர்ணமே ராம ராஜ்யம் என்று கதறியதை அம்பேத்கர் அவிழ்த்துக்காட்டினார்.

      காந்தியமே நால்வர்ணமே தான். நால்வர்ணம் தன் இந்தியாவை பிறநாடுகளைக் காட்டிலும் நிலைத்தன்மையுடன் வைத்திருக்கிறது என்று அவர் கழிந்த கழிவுகளை இன்றைக்கு குருமூர்த்தி வாயார உட்கொண்டு சாதிப் பொருளாதாரத்தைப் பற்றி பேசுகிற அளவிற்கு சமூகத்தில் புற்றுநோய் பரவியிருக்கிறது.

      வேதங்களையே வியாக்கனாமக் கொண்டு சாதிகளை தூக்கிப்பிடித்த சமூக குழுக்கள் மனு சொல்லாமல் தலையாட்டிவிடவில்லை. புரோணோக்தா முறைப்படித்தான் சூத்திரன் வாழ வேண்டும் என்பதற்கு கோர்ட் வழக்கே நடைபெற்று இருக்கிறது. சூத்திரர்கள் புராணங்களை கரைத்துக்குடித்தும் வேதங்களின் படி விஸ்வகுல பிராமணர்களே தலைசிறந்தவர்கள் என்ற வாதத்தை மனு சொல்லிக்கொடுத்த பாதையிலேயே சென்று தங்களை மனுவாக காட்டிக்கொண்டு பார்ப்பனர்களை முறியடித்த கதையும் உண்டு. ஆளாளுக்கு வேதம் மூல ஆதாரமாக இருந்தது என்றால் வேதங்களை சட்டப்புத்தகமாக கட்டற்ற கலைக்களஞ்சியமாக (!!!) பார்க்கிற பழக்கம் மனுவிலிருந்துதானே தொடங்கியிருக்கவேண்டும். ஆரம்பமே அலைக்கழிப்பாக இருக்கிற பொழுது இந்துத்துவத்திற்கு உதவி புரிந்த மனுவை இந்துத்துவ மானினிகள் கழற்றிவிடுவது துரோகம் அன்றோ?

      இன்றைய நிலையிலும் 2014இலும் கூட சூத்திரனுக்கு தன் உறவினர்களுக்கு ஈமச் சடங்கு செய்யும் உரிமை கூட கிடையாது என்பதுதான் நிதர்சனம். எப்படியென்பதை பார்ப்போம். இன்றைக்கு ஆதிக்க சாதிகளில் கிழவன் உயிரோடு இருந்து கிழவி இறந்துவிட்டால் ஸ்ரீ தேவி எடுப்பார்கள். அப்படி ஸ்ரீ தேவி எடுக்கிற பொழுது சூத்திரர்கள் பூணுலை அணிந்துகொண்டுதான் நெல்லை எடுத்துக்கொண்டு பிணத்தைச் சுற்றவேண்டும். இதை பார்ப்பான் கவனிப்பதில்லை. ஏனெனில் இழவுவீடு தீட்டு. பார்ப்பான் வராமலேயே எந்த சூத்திர சாதிகளும் பூணுல் அணிந்துதான் ஸ்ரீ தேவி அல்லது நெய்பந்தம் எடுக்க முடியுமென்றால் இதுயாருடைய கைங்கர்யம்? இது யாருக்கான சமூகம்? இந்து மதத்தில் இருக்கிற ஜனநாயகம் தான் என்ன?

    • // வர்ணப்பகுப்பு இயற்கையின் இயல்பு மனித இயல்பு பற்றிய ஒரு கொள்கையின் விரிவாக்கம். //

      // இது ஒரு தத்துவார்த்தமான பகுப்பாக இருந்ததே ஒழிய எங்கும் எப்போதும் இதனடிப்படையில் சமூகம் நிரந்தரமாகப் பிரிக்கப்படவில்லை //

      அப்படியா? வர்ணம் என்பது வெறும் கொள்கை சார்ந்த தத்துவார்த்த பகுப்பு மட்டும்தானா? நடைமுறையில் இல்லையா?

      மனு ஸ்ம்ரிதி அத்தியாயம் இரண்டில் இருந்து சில பகுதிகள் கீழே. ஒரு குழந்தைக்கு பெயர் எப்படி அமைய வேண்டும், எந்த வயதில் வேத கல்வி தொடங்கும் சடங்கு (உபநயனம்) செய்ய வேண்டும், பூணூல் எத்தகு நூலால் அமையவேண்டும், இடுப்பில் கட்டும் மிஞ்சி (அரைஞாண்கயிறு) எந்த பொருளால் அமைய வேண்டும், பிரமச்சாரியாக விரதம் பூண்ட குழந்தை கையில் பிடிக்கும் தண்டம் எந்த மரத்தின் கிளையால் அமைய வேண்டும் என விளக்குகிறது. இவை எல்லாம் பொதுவாக இல்லாமல் வர்ணரீதியில் குறிப்பிடுவதை காண்கிறோம். சடங்குகள் நிச்சயம் நடைமுறை சார்ந்தனவே அன்றி வெறும் கொள்கைப் பூர்வமானவை அல்ல.

      வர்ணம் என்பது தொழில் அடிப்படையில் ஆனது என்றும், ஒருவர் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் ஒரு கருத்து கூறப்படுகிறது. இங்கே உபநயன சடங்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள், வர்ண ரீதியாக ஒரு குழந்தையை முன்வைத்து செய்யப்படுகின்றன. குழந்தை எப்படி தான் எந்த வருணத்தை சார வேண்டும் என தானே முடிவு செய்யும்?

      எனவே, வர்ணப் பாகுபாடு நடைமுறையில் இருந்தது என்றும், அது பிறப்பால் அமைந்தது என்றும் முடிவு செய்ய வேண்டி வருகிறது.

      இந்த மனுஸ்ம்ரிதி கூறும் சடங்குகள் இன்றும் நடைமுறையில் உள்ளன. இப்போதும் உபநயன சடங்கின் பொது பிராமண சிறுவன் மிஞ்சி அணிந்து, பலாச (அரச) மர தண்டம் ஏந்தும் வழக்கம் உள்ளது.

      ——————————————-

      http://www.sacred-texts.com/hin/manu.htm
      (அத்தியாயம் இரண்டு).
      31. Let (the first part of) a Brahmana’s name (denote something) auspicious, a Kshatriya’s be connected with power, and a Vaisya’s with wealth, but a Sudra’s (express something) contemptible.

      32. (The second part of) a Brahmana’s (name) shall be (a word) implying happiness, of a Kshatriya’s (a word) implying protection, of a Vaisya’s (a term) expressive of thriving, and of a Sudra’s (an expression) denoting service.

      33. The names of women should be easy to pronounce, not imply anything dreadful, possess a plain meaning, be pleasing and auspicious, end in long vowels, and contain a word of benediction.

      34. In the fourth month the Nishkramana (the first leaving of the house) of the child should be performed, in the sixth month the Annaprasana (first feeding with rice), and optionally (any other) auspicious ceremony required by (the custom of) the family.

      35. According to the teaching of the revealed texts, the Kudakarman (tonsure) must be performed, for the sake of spiritual merit, by all twice-born men in the first or third year.

      36. In the eighth year after conception, one should perform the initiation (upanayana) of a Brahmana, in the eleventh after conception (that) of a Kshatriya, but in the twelfth that of a Vaisya.

      37. (The initiation) of a Brahmana who desires proficiency in sacred learning should take place in the fifth (year after conception), (that) of a Kshatriya who wishes to become powerful in the sixth, (and that) of a Vaisya who longs for (success in his) business in the eighth.

      38. The (time for the) Savitri (initiation) of a Brahmana does not pass until the completion of the sixteenth year (after conception), of a Kshatriya until the completion of the twenty-second, and of a Vaisya until the completion of the twenty-fourth.

      39. After those (periods men of) these three (castes) who have not received the sacrament at the proper time, become Vratyas (outcasts), excluded from the Savitri (initiation) and despised by the Aryans.

      40. With such men, if they have not been purified according to the rule, let no Brahmana ever, even in times of distress, form a connexion either through the Veda or by marriage.

      41. Let students, according to the order (of their castes), wear (as upper dresses) the skins of black antelopes, spotted deer, and he-goats, and (lower garments) made of hemp, flax or wool.

      42. The girdle of a Brahmana shall consist of a of a triple cord of Munga grass, smooth and soft; (that) of a Kshatriya, of a bowstring, made of Murva fibres; (that) of a Vaisya, of hempen threads.

      43. If Munga grass (and so forth) be not procurable, (the girdles) may be made of Kusa, Asmantaka, and Balbaga (fibres), with a single threefold knot, or with three or five (knots according to the custom of the family).

      44. The sacrificial string of a Brahmana shall be made of cotton, (shall be) twisted to the right, (and consist) of three threads, that of a Kshatriya of hempen threads, (and) that of a Vaisya of woollen threads.

      45. A Brahmana shall (carry), according to the sacred law, a staff of Bilva or Palasa; a Kshatriya, of Vata or Khadira; (and) a Vaisya, of Pilu or Udumbara.

      46. The staff of a Brahmana shall be made of such length as to reach the end of his hair; that of a Kshatriya, to reach his forehead;

      (and) that of a Vaisya, to reach (the tip of his) nose.

      47. Let all the staves be straight, without a blemish, handsome to look at, not likely to terrify men, with their bark perfect, unhurt by fire.

      48. Having taken a staff according to his choice, having worshipped the sun and walked round the fire, turning his right hand towards it, (the student) should beg alms according to the prescribed rule.

      • Which are all the kingdoms enforced Manu’s rule like Sharia rule and how long it was in effect?

        We all have read about “Manu needhi Cholan”. Was that a real character or the wish of a common man came out as a story ?

    • Hi Manidhan,

      // வர்ணம் என்ற சொல்லுக்கு நிறம் என்று பொருள். *** ஒருபோதும் நேரடியாகத் தோல்நிறத்தை அது சுட்டவில்லை.//

      தொடக்கத்தில் ஆரியர்கள் தங்கள் பூர்வீக இடத்தில் இருந்தபோது அவர்களுக்குள் தோல்நிறத்தில் வேறுபாடு இருக்க வில்லை. தொழிலில் மட்டுமே வேறுபாடு இருந்திருக்கிறது.
      பிறகு அவர்கள் தஸ்யுக்களின் நிலங்களை ஆக்ரமித்தவுடன், புதிய சமூகத்தில் முதலில் ஆரிய நிறம், தஸ்யு நிறம் என்ற இரண்டு தோல்நிறங்களையுடைய மக்கள் இருந்தார்கள் என்பதும், அவர்களுக்கிடையேயான கலப்பினால் இடைப்பட்ட நிறம் கொண்ட மக்கள் உருவானார்கள் என்பதும், இது படிப்படியாக பல நூறு shades உடைய மக்கள் உருவானார்கள் என்பதும் தெளிவு.

      Continued…

    • Hi Manidhan,

      //***மனிதர்களில் வெளிப்படும் மூன்றுகுணங்களின் அடிப்படையில் நால்வர்ணம் வகுக்கப்பட்டது.***//

      மூன்றுகுணங்களின் அடிப்படையில் மூன்று வகை மனிதர்கள் இருக்கலாம். எப்படி நான்கு வகை? இரு குணங்களின் கலப்பினால் நான்காவது வகை சாத்தியமாகும் போது மற்ற கலப்புக்கள் சாத்தியமாகாதா. குறைந்தது ஒன்பது வகையேனும் சாத்தியமாகிறதே. ஏன் நான்கோடு நிறுத்திக் கொண்டான்கள்?

      இந்த மோசடிக் கருத்துத்தான் கீதையிலும் இருக்கிறது. அதற்கு அண்ணல் அம்பேத்கர் தந்த நெத்தியடி பதில் கீழே.

      “Similarly childish is the defence of the Bhagvat Gita of the dogma of chaturvarnya. Krishna defends it on the basis of the Guna theory of the Sankhya. But Krishna does not seem to have realized what a fool he has made of himself. In the chaturvarnya there are four Varnas. But the gunas according to the Sankhyas are only three. How can a system of four varnas be defended on the basis of a philosophy which does not recognise more than three varnas? The whole attempt of the Bhagvat Gita to offer a philosophic defence of the dogmas of counterrevolution is childish—and does not deserve a moment’s serious thought. None-the-less there is not the slightest doubt that without the help of the Bhagvat Gita the counter-revolution would have died out, out of sheer stupidity of its dogmas.”

      Dr. Babasaheb Ambedkar: Writings and Speeches, Vol. 3

      Revolution and Counter-Revolution in Ancient India

      CHAPTER 9: Essays on the Bhagwat Gita : Philosophic Defence of Counter-Revolution: Krishna and His Gita

      http://www.ambedkar.org/ambcd/19C.Revolution%20and%20Counter%20Rev.%20in%20Ancient%20India%20PARTIII.htm#a9

      Continued…

  49. வினவு அண்ணனுக்கும், மனோஜ் குமார்க்கும், ஒரு அன்பான வேண்டுகோள். யாரும் யாரையும் கட்டாயப்படுத்தி எந்த வேலையையும் செய்ய வைக்க இயலாது. தனிப்பட்ட மனிதராக நீங்கள் உங்கள் சமுதாயத்திற்கு நல்ல காரியங்களினை செய்யவும்.

  50. http://en.wikipedia.org/wiki/Haplogroup#mediaviewer/File:World_Map_of_Y-DNA_Haplogroups.png

    World Map of Y-Chromosome Haplogroups – Dominant Haplogroups in Pre-Colonial Populations with Possible Migrations Routes Notes: The Y-DNA haplogroup(s) with the highest % in that area (or is notable) Population/language/region name in which the haplogroup is the majority or the genetic marker of movement Migration routes are drawn according to Coastal Migration model (initially coastal route, then follow major rivers) Y-chromosome Adam set near Cameroon according to the existence of basal A00 and A0 A few populations with no data available (extinct) are marked “?”

  51. நியாயம்..? கேள்..!

    சா(ச‌)தியின் வரலாறு..!
    பல நூரு வருடங்கலுக்கு முன்னால்… மன்னர் ஆட்சி, ஜமிந்தார், நிலக்கிழார்கல் என பன்முக ஆட்சி நடந்த காலம். மக்கள் மன்னனையும், மன்னன் மக்களையும் நம்பியே வாழ்ந்திருந்த காலம்.. தற்பொழுது இருக்கும் முப்படை, காவல் துறை, ஏவல் துறை, மந்திரிகள் சபை.. என அப்பொழுதும் இருந்தது.. ஆனால் வேருவிதமாக.. ஆண்டி ஆண்டியாகவும்.. அடிமை அடிமையாகவும் வாழ நேரிட்டது.. அதுமட்டும் இல்லாது.. தகப்பன் தொழிலை அவன் வாரிசே செய்ய வேண்டும் என்ரொரு பழ்க்கமும் கடைப்பிடிக்கப்பட்டது… இது என்னவே எதார்த்தமாக தான் இருந்தது. மக்களும் ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என் எண்ணி சீரும் சிறப்புமாக செய்தான் தத் தம் கடமையை, கொள்கைப்படி அப்பனுக்குப்பின் பிள்ளைக்கு என வழ்ங்கப்பட்டது. ஆரம்பம்மானது ‘சதி’.. ஆம்! எப்படி உயரிய இடத்தில் இருந்தவன் அதாவது அரசவையில் பணி புரிபவன் நான் தான் சிறந்தவன் என… சிலகாகிதம் அடைந்தான்.. உயர்ந்த சாதி எனவும் அடையாளப் படுத்தியும் கொண்டான் மக்களுக்கு சேவை செய்பவர்கள்.. குறைத்தும் ‘கீழ் சாதி’ என் முத்திரையும் குத்தப்பட்டது. ‘இது எங்க கம்பெனி முத்திரை’ என்பது போல் மனதில் வடு உருவாகிற்று.. [இன்னும் இந்திய அரசியலில் அரசர் ஆட்சி [குடும்ப அரசியல்] அரங்கேரிக் கொண்டுதான் உள்ளது. பல பல, புது புது.. சட்டம்.. என்ன பலன்… சா(ச‌)தி மட்டும் மானிடர்கலுக்கு பேரிடராய்த்தான் உள்ளது… அன்ரு விதை விதைக்கப்பட்டது… இன்றோ.. விசாலமாய்.. பல கிளைகல் விட்து.. பல விழுதுகலையும் விட்டு இன்ரும் செழிப்பாகத்தான் உள்ளது… மனிதனே… மானிடனே… நீ என்ன மிருகமா.. சிந்தி..

  52. நிச்சயமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் சாதி ஒழிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். பல சங்க தோழர்கள் கலப்பு மணம் புரிந்திருப்பதை நான் அறிவேன். அவ்வளவு ஏன் அநீ கூட கலப்பு மணம் புரிந்தவர் என்றே கருதுகிறேன். என் தந்தை பார்பனர் தாய் வன்னியர். நானே கலப்பினத்தின் வாரிசுதான்.

  53. “If we want to qualify ourselves to win, we have to eradicate the evils in society and purify it. Among the Tamils, there are untouchables. They think they are oppressed by others. Ethically speaking, if we do harm to others, someone will do the same to us. If Tamils want to attain liberation, they must give the same to those who are deprived of their rights in our society”.

    தந்தை செல்வா – தமிழரசுக்கட்சி மாநாடு 1957

    • எனவே இன்று முதல் வியாச வேளாள வெறி சக்கரவரத்தி ராஜபக்சே காலை கழுவிவிடும் வேலையை கீழ்க்கண்ட சமத்துவ பிரகடன அடிப்படையில் ஏற்றுக் கொள்வார் பராக் பராக் பராக்…..
      HE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA
      CHAPTER III – FUNDAMENTAL RIGHTS

      Freedom of thought, conscience and religion.

      10. Every person is entitled to freedom of thought, conscience and religion, including the freedom to have or to adopt a religion or belief of his choice.

      Freedom from torture.

      11. No person shall be subjected to torture or to cruel, inhuman or degrading treatment or punishment.

      Right to equality.

      12. (1) All persons are equal before the law and are entitled to the equal protection of the law.

      (2) No citizen shall be discriminated against on the grounds of race, religion, language, caste, sex, political opinion, place of birth or any such grounds:

      Provided that it shall be lawful to require a person to acquire within a reasonable time sufficient knowledge of any language as a qualification for any employment or office in the Public, Judicial or Local Government Service or in the service of any public corporation, where such knowledge is reasonably necessary for the discharge of the duties of such employment or office:

      Provided further that it shall be lawful to require a person to have sufficient knowledge of any language as a qualification for any such employment of office where no function of that employment or office can be discharged otherwise than with a knowledge of that language.

      (3) No person shall, on the grounds of race, religion, language, caste, sex or any one such grounds, be subject to any disability, liability, restriction or condition with regard to access to shops, public restaurants, hotels, places of public entertainment and places of public worship of his own religion.

      (4) Nothing in this Article shall prevent special provision being made, by law, subordinate legislation or executive action, for the advancement of women, children or disabled persons.

      • ஒரு விவரம் தெரியாத காப்பி பேஸ்ட் லூசைப் பற்றித் தெரியாமல் மரியாதையாகப் பதிலளித்ததற்கு வருந்துகிறேன். 🙂

        • 'ஏகப்பட்ட' வெவரம் தெரிஞ்ச கிரிமினல் அறிஞனின் காப்பி பேஸ்ட் ஃபிராடை சந்தி சிரிக்க செய்ஞ்சமைக்கு என்ஜாய் பண்ணுகிறேன். 🙂

        • Viyasan blames himself for doing this copy post for his own comment 57 as follows:

          “ஒரு விவரம் தெரியாத காப்பி பேஸ்ட் லூசைப் பற்றித் தெரியாமல் மரியாதையாகப் பதிலளித்ததற்கு வருந்துகிறேன்”. 🙂

  54. //ஈழம் என்று எடுத்துக்கொண்டாலும் ஈழத் தமிழர்கள் என்ற ஒற்றைத் தேசிய இனத்தில் பட்டிக்குள் அடைக்க இயலாது. //

    ஈழத்தமிழர்கள் தேசிய இனமேன்பது பெரும்பான்மைச் சிங்கள மக்களாலும் சிங்கள இடது சாரிகளாலும் மட்டுமல்ல, உலகின் பல அரசியலமைப்பு வல்லுனர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம். ஆனால் இடதுசாரி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் தென்றல் மட்டும் என்னவோ எல்லாம் உளறுகிறார்.

    An extensive aggregate of persons, so closely associated with each other by common descent, language, or history, as to form a distinct race or people, usually organized as a separate political state and occupying a definite territory.”

    “ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனம், வடக்கு கிழக்கு அவர்களது தாயகம், ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு, இறுதிப் போர் என்று சொல்லி நடத்தப்பட்டது ஒரு இனப்படுகொலை இதற்கு இந்திய நடுவண் அரசும் உடந்தை”

    விக்கிரமபாகு கருணாரத்தின, சிங்க்ள இடது சாரித் தலைவர்

    Stressing the need for a sovereign state of Tamil Eelam, Prof. Sison said that Eezham Tamils have their own language, history, culture, clear homeland and its aspiration for national and social liberation from a chauvinistic state that deprives them and attacks their right to national self-determination. “The Eezham people have a very direct obligation of fighting for their own sovereignty against a state that presumes to have a unitary power over them.”

    Jose Maria Sison – Marxist-Leninist, the Communist Party of the Philippines (CPP)

    //அங்கேயும் பல்வேறு தேசிய இனங்கள் உண்டு. மலையகத் தமிழர்கள், இசுலாமியர்கள், ஈழத்தமிழர்கள் தேசிய இனங்களாக பிரிந்துபோகும் உரிமையோடுகூடிய சுயநிர்ணய உரிமையே தீர்வாகும் என்பது என் புரிதல்///

    உங்களின் புரிதல் இருக்கட்டும் ஆனால் இலங்கையில் வாழும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களும், மலையகத்தமிழர்களும் சுயநிர்ணய உரிமையுள்ள தேசிய இனங்கள் அல்ல. மலையகத் தமிழர்களுக்கென வரையறுக்கப்பட்ட, பாரம்பரிய உரிமையுள்ள நிலப்பரப்பு இலங்கையில் கிடையாது. அவர்களுக்கென தனிப்பட்ட வரலாறு இலங்கையில் இல்லை. அவர்கள் ஈழத்தமிழர்களுடன் இணைந்து இன மொழி, கலாச்சார அடிப்படையில் தம்மைத் தமிழ்த் தேசிய இனமாக அழைக்கலாமே தவிர, தனியாக அவர்கள் சுயநிர்ணய உரிமையுள்ள தேசிய இனமல்ல.

    இலங்கை முஸ்லீம்களும் சுயநிர்ணய உரிமையுள்ள தேசிய இனமல்ல தேசிய சிறுபான்மைக் குழு அல்லது மதச்சிறுபான்மையினர். மத அடிப்படையில் எந்த மதக்குழுவையும் தேசிய இனம் என அழைப்பதில்லை இலங்கை முஸ்லீம்களின் தாய்மொழி தமிழ். அத்துடன் அவர்களுக்கென்று வரையறுக்கப்பட்ட, பாரம்பரிய நிலப்பரப்பு இலங்கையில் கிடையாது. இன்றும் பெரும்பான்மை இலங்கை முஸ்லீம்கள் தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் பரவலாக வாழ்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் ஒரு சில கிராமங்களில் மட்டும் அவர்கள் பெரும்பான்மையினர். சிங்களவர்களும் தமிழர்களும் சேர்ந்தால் அங்கும் அவர்கள் சிறுபான்மையினராகி விடுவார்கள். வரலாற்றின் அடிப்படையிலும் இலங்கையில் முஸ்லீம்கள் தமக்கென தனியான அரசைக் கொண்டிருக்கவில்லை. அதனால் இலங்கை முஸ்லீம்களைத் தேசிய இனம் என்பது தென்றலின் வெறும் கற்பனை. இலங்கையில் வாழும் பல மதக்குழுக்களில் முஸ்லீம்களும் ஒரு குழுவினர் அவ்வளவு தான்.

    இலங்கையில் சிங்களவர், தமிழர் என இரண்டு சுயநிர்ணய தேசிய இனங்கள் மட்டுமே உள்ளனர். ஏனையோர் சிறுபான்மை இன, மதக் குழுவினர்.

    • வியாசரே, உமது பாசிச புரட்டல்கள் குமட்டலாக இருக்கின்றன. ஈழத்தமிழர்கள் தேசிய இனமா என்பது இங்கு கேள்வியே அல்ல. ஈழத்தமிழர்கள் தேசிய இனம் தான் . இங்கு விவாதம் அனைவரையும் ஈழத்தமிழர்கள் என்ற ஒரே தேசிய இன பட்டிக்குள் அடைக்க இயலுமா என்பது. திருப்பிப் படித்தீர் என்றால் உமது கோமாளித்தனம் புலப்படும். தேங்காய் இருக்கிறது என்ற பணக்கார இடியட்களின் பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.

      சிறுபான்மையினர் என்று தப்பித்து ஓடாதீர். சிங்களவனும் ஈழத்தமிழன் உட்பட அனைவரையும் பார்த்து அதைத்தான் சொல்கிறான். என் தரப்பில் நான் தவறவிட்ட பதம் சிறுபான்மை தேசிய இனங்கள். மலையகத்தமிழர்களும், முசுலீம்களும் சிறுபான்மை தேசிய இனங்களாகவே வரையறுக்கப்படுகின்றனர். இப்பொழுது விக்கிரமபாகு கருணாரத்ன சிறுபான்மை தேசிய இனங்களைப் பற்றி பேசியிருக்கிறாரா? என்பதைப் பற்றிச் சொல்லவும்.

      “மலையகத் தமிழர்களுக்கென வரையறுக்கப்பட்ட, பாரம்பரிய உரிமையுள்ள நிலப்பரப்பு இலங்கையில் கிடையாது. அவர்களுக்கென தனிப்பட்ட வரலாறு இலங்கையில் இல்லை.” என்பது உமது சாதிவெறியின் நீட்சியே.

      ஈழம் தேவை ஒரு நேர்மையான மீளாய்வு-பக்கம்-13லிருந்து 18முடிய படித்துவிட்டு (தரவிறக்கி வாசிக்கவும்), அது சரியா தவறா என்ற உமது விமர்சன பார்வையை நேர்மையிருந்தால் முன்வைக்கவும்.

      முசுலீம்கள் என்று வரும்பொழுது மட்டும் தேசிய சிறுபான்மையினர் என்று அடக்கிவாசித்துவிட்டு முடிக்கும்போது மதச் சிறுபான்மையினர் என்று முடிப்பது என்ன காரணம்?

      • தென்றல்,

        மலையகத் தமிழர்களை ஈழத்துல் கொண்டு வருவது உங்கள் தவறான புரீதல்.ஈழ வரைபடத்தில் கிழக்கிலும் ,வடக்கிலும் வாழும் பூர்வீக தமிழர் மற்றும் தமிழ் பேசும் இஸ்லாமியதமிழர் மட்டுமே ஈழம் என்ற வரையரைக்குள் வருவார்கள். மலையகத் தமிழர்கள் வாழும் நிலபரப்பு ஈழத்து நிலபரப்பில் இருந்து விடுபட்டு உள்ளது என்பதை வரைபடத்தில் காண்க.

        Viyasan Said :இலங்கை முஸ்லீம்களும் சுயநிர்ணய உரிமையுள்ள தேசிய இனமல்ல தேசிய சிறுபான்மைக் குழு அல்லது மதச்சிறுபான்மையினர். மத அடிப்படையில் எந்த மதக்குழுவையும் தேசிய இனம் என அழைப்பதில்லை “—-இலங்கை முஸ்லீம்களின் தாய்மொழி தமிழ்—–“. அத்துடன் அவர்களுக்கென்று வரையறுக்கப்பட்ட, பாரம்பரிய நிலப்பரப்பு இலங்கையில் கிடையாது.

        What is wrong in Viyasan statement ? Yes Srilankan Muslims are definitely belongs to Tamil Race. What is the problem for you to accepting this concept Thendral?

        //வியாசரே, உமது பாசிச புரட்டல்கள் குமட்டலாக இருக்கின்றன. ஈழத்தமிழர்கள் தேசிய இனமா என்பது இங்கு கேள்வியே அல்ல. ஈழத்தமிழர்கள் தேசிய இனம் தான் . இங்கு விவாதம் அனைவரையும் ஈழத்தமிழர்கள் என்ற ஒரே தேசிய இன பட்டிக்குள் அடைக்க இயலுமா என்பது. திருப்பிப் படித்தீர் என்றால் உமது கோமாளித்தனம் புலப்படும். தேங்காய் இருக்கிறது என்ற பணக்கார இடியட்களின் பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.//

        • இதுவும் உங்கள் தவறுதான். வட கிழக்கிலே வாழும் மலையகத் தமிழர்களை அறியாதவராக இருப்பது எந்த விதத்தில் நியாயம்? வாசிக்க வேண்டுமென்ற எண்ணம் சிறிதும் இல்லையா?

          இதுதவிர 3இலட்சம் மலையகத் தமிழர்கள் அக்காலத்திலேயே நாடற்றவர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர். அதாவது இலங்கையின் மத்தியப்பகுதியோ, வடக்கு கிழக்கு அல்லாமல், இந்திய பிரஜையாகவோ அல்லாமல் வைக்கப்பட்டிருந்தமைக்கு யார் பொறுப்பேற்றுக்கொண்டது? (According to Country Reports on Human Rights Practices for 2005, “in the past, approximately 300 thousand [plantation Tamils] did not qualify for citizenship in any country and faced discrimination” (US 8 Mar. 2006, Sec. 5) ஆதாரம்: Sri Lanka: Plantation Tamils; their number, location, relations with Sri Lankan Tamils, legal status and treatment by members of the government security forces and police (2004-2006) )? ஈழத் தமிழர் ஈழத் தமிழர் என்று வாய் கிழிய கத்தினால் போதுமா?

          \\Yes Srilankan Muslims are definitely belongs to Tamil Race.\\

          இசுலாமியர்கள் சிறுபான்மை தேசிய இனமாக வருவதில் ஒன்றுபட்ட ஈழத்தில் அவர்களுக்குண்டான உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை இதுபோன்ற அழிச்சாட்டியங்கள் குறுந்தேசிய இனவாதத்தால் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன.

          சிறுபான்மை தேசிய இனம் குறித்த கீழ்கண்ட விளக்கத்தைக் கொஞ்சம் கவனியுங்கள். ஈழம் தேவை ஒரு நேர்மையான மீளாய்வு-பக்கம் 13-15;

          “ஒரு தேசிய சிறுபான்மை இனமாக மலையகத் தமிழர்களும், தேசிய இனமாக ஈழத்தமிழர்களும் இருக்கிறார்கள். எஞ்சி இருக்கக்கூடிய இலங்கையில் சிங்களவர்கள் ஒரு இனமாக, பேரினமாக, பெரும்பான்மை மக்களாக தென் இலங்கையிலும், மத்திய இலங்கையிலும், கிழக்கிலும் இருக்கிறார்கள். ஆனால் கிழக்கில் பெரும்பான்மை மக்கள் ஈழத் தமிழர்கள், கிட்டத்தட்ட 30 முதல் 40 சதவீதம் வரை ஈழத் தமிழர்கள் இருந்தனர். மீதி மொரிசியஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவை அடுத்துள்ள மடகாஸ்கர் தீவுகளிலிருந்தும் குடியேறிய முஸ்லீம்கள். அவர்கள் மூர் என்ற பூர்வகுடி இனத்தைச் சேர்ந்தவர்கள். இன்றைக்கு பெரும்பாலும், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கணிசமான அளவு வாழ்கிறார்கள். அவர்களும், மலையகத் தமிழர்களைப்போல ஒரு தேசிய சிறுபான்மை இனத்தவர்கள். அவர்கள் பிற்காலத்தில் சிங்களம், தமிழ் கற்றுக்கொண்டார்கள். இலங்கைக்கு இன்னும் தெற்கே இருக்கக் கூடிய மாலத் தீவில் முஸ்லீம்கள் குடியேறி பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். மாலத்தீவுகளில் மட்டுமல்ல இலங்கைக்கு இன்னும் தெற்கே, இந்துமாக் கடலில் உள்ள தீவுகளில் இருக்கக்கூடிய முஸ்லீம்கள், இவர்களெல்லாம் ஒரே பூர்வகுடி இனத்தைச் சேர்ந்தவர்கள்.

          தமிழ் மொழியை வளர்ப்பதில் தமிழ் நாட்டிலே எவ்வளவோ முஸ்லீம்கள் பங்காற்றியிருக்கிறார்கள். அதே போல, கிழக்கு இலங்கையின் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் இருக்கக் கூடிய முஸ்லீம்கள் தமிழை வளர்ப்பதிலும், தமிழ் இலக்கியத்தை வளர்ப்பதிலும், தமிழ் பண்பாட்டை வளர்ப்பதிலுல் மிகப் பெரிய பாரிய பங்கு செலுத்தியிருக்கிறார்கள். அவர்கள் இன்னும் பரவி வடக்கு-மேற்குப் பகுதியில் உள்ள யாழ் மற்றும் மன்னார் பிரதேசங்களிலே கூட குடியேறியுள்ளனர். இலங்கையில் வாழும் முஸ்லீம்கள் சிறுபான்மை தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள். இலங்கையில் உள்ள தேசிய இனங்களைப் பற்றிச் சொன்னால் சிங்களப் பேரினம் ஓரினம், அடுத்து சிறுபான்மையாக இருக்கக்கூடிய ஈழத் தமிழர்கள் ஒரு இனமாக இருக்கிறார்கள். இவர்கள் தவிர முஸ்லீம் தேசிய சிறுபான்மையினர், அதே போல மலையகத் தமிழர்கள்.

          ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கக் கூடிய தமிழர்களில் பலரும் இலங்கை என்பது இரண்டு தேசிய இனங்களை மட்டுமே கொண்டிருக்கிறது-ஒன்று சிங்களப் பேரினம், இன்னொன்று ஈழத் தமிழினம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர மீதம் இருக்கிற இரண்டு சிறுபான்மை இனங்களைப் பற்றி பலருக்கும் தெரியாது. இந்த இரண்டு தேசிய சிறுபான்மை இனங்களைப் பற்றியும் நாம் பேச வேண்டியதற்கான காரணம் என்னவென்றால் தமிழீழம் என்பது மலையகத்தையும் சேர்த்தது என்று விடுதலைப்புலிகள் கூறுகிறார்கள். மலையகத் தமிழர்களும், மலையகமும் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டியதுதான் என்று அவர்கள் வரையறுத்துள்ளனர். அதாவது, மலையகத்தில் தோட்டத் தொழிலில் இருக்கக்கூடிய, பூர்விகமாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள், நம்முடைய வார்த்தைகளில் சொல்லப்போனால் சிறுபான்மை தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் கூட. ஈழத் தமிழர்கள் எனும் தேசிய இனத்திற்குக் கீழே இருக்க வேண்டியவர்கள் என்ற கண்ணோட்டத்தில் சொல்கிறார்கள்.

          தனி ஈழம் என்று சொன்னால், விடுதலைப் புலிகளினுடைய கண்ணோட்டத்தில் மலையகத் தமிழர்களும் சேர்ந்துதான். அவர்கள் வெளியிட்டிருக்கும் வரைபடத்தில் தமிழீழம் மலையகத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆனால் உண்மையில் 1815-க்கு பிறகு ஆங்கிலேயர்களால் குடியமர்த்தப்பட்ட, தமிழ் நாட்டை பூர்விகமாக கொண்ட தமிழர்கள் தனி இனத்தவர், தேசிய சிறுபான்மை இனத்தவர்கள்.

          இந்த உண்மைகளை எல்லாம் விட்டு தொப்புள் கொடி உறவு, தமிழர்கள் எல்லாம் ஓரினம், உலகம் முழுவதும் வாழக்கூடிய பத்துகோடித் தமிழர்களும் ஓரினம், அனைவருக்கும் பிரபாகரன்தான் தலைவர் என்று பேசுவதெல்லாம் ஒரு அறிவியல் பூர்வமான கண்ணோட்டம் அல்ல.

          அமெரிக்காவின் அதிபராக இருக்கும் பாரக் ஒபாமா, ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்கர். அவரது தந்தை கென்யா நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர். அமெரிக்காவில் குடியேறி பரம்பரையாக வாழ்ந்தவர். அவரது மகன் பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றிருக்கிறார். அவரை இன்னமும் ஆப்பிரிக்கர் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அப்படி சொல்லித்தான் வெள்ளை இனத்தவர்கள் அவரை இழிவுபடுத்துகிறார்கள். “கறுப்பர்கள் அனைவரும் தனி இனம், அவர்களது பூர்விகம் அமெரிக்கா கிடையாது, வெள்ளை இனம் மட்டுமே அமெரிக்காவிற்கு உரிமை கோர முடியும்” என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் அறிவியல் பூர்வமான கண்ணோட்டப்படி உலகத் தமிழர்களெல்லாம் பல்வேறு காரணங்களால் பல்வேறு நாடுகளில் குடியமர்ந்த மக்கள், குடியமர்ந்து அந்த நாட்டினுடைய பண்பாடு, அந்த நாட்டினுடைய மொழி, பண்பாடு, அரசியல், பொருளாதாரம் இவற்றுடன் ஒன்று கலந்து, ஒரு கணிசமான காலம் வாழ்ந்த பிறகு, அந்த நாட்டினுடைய இனத்தைச் சேர்ந்தவர்களாக உருமாறி விடுகிறார்கள்.

          அதுபோல மலையகத் தமிழர்களும், தேசிய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கென்று தனிச் சிறப்பான சில உரிமைகள், பண்பாடுகள், பொருளாதார அமைப்பு ஆகியன இருக்கின்றன. அந்தப் பண்பாடு பற்றியோ, அவர்களுடைய உரிமைகள் பற்றியோ கவலைப்படாமல் தமிழர்கள் அனைவரும் ஒரே இனம் என்று சொல்வது சரியல்ல. பொதுவாக மக்களின் ஆதரவை திரட்டுவதற்காக தமிழர்கள் அனைவரும் ஒரே இனம், ஈழத் தமிழர்களும் நாமும் ஒரே இனம், பத்து கோடித் தமிழர்களும் ஒன்று தான், அனைவருக்கும் தலைவர் பிராபகரன், இல்லையென்றால் வீரமணி, இல்லையென்றால் கருணாநிதி என்பது அறிவியல் பூர்வமான கண்ணோட்டம் இல்லை. இவற்றையெல்லாம் ஈழத் தமிழர்களுக்குத் தர வேண்டிய ஆதரவை மறுப்பதற்காக நாம் கூறவில்லை. ஈழத் தமிழர்களுக்கும், நமக்கும் என்ன உறவு என்பதைச் சரியான வரையறைக்குக் கொண்டு வருவதற்காகச் சொல்கிறோம்.”

      • தென்றல்,

        [1]வர்க்க அடீபடையீல் உழைக்கும் மக்கள் மதம் கடந்து ஐக்கியம் ஆக சாத்தீயம் உள்ள போது ஈழத்தில் பூர்வீக தமிழர்களும் , பூர்வீக இஸ்லாமிய தமிழர்களும் ,மொழி, இனம் அடிப்படையீல் ஒன்று பட்டு நிற்க அதிக சாத்தீயம் உள்ளது என்பதை நீங்கள் உணராத காரணம் என்ன ?
        //ஈழம் என்று எடுத்துக்கொண்டாலும் ஈழத் தமிழர்கள் என்ற ஒற்றைத் தேசிய இனத்தில் பட்டிக்குள் அடைக்க இயலாது. //

        [2]உங்கள் உளரல்களுக்கு ஒரு அளவே இல்லையா தென்றல் ? மத அடிப்படையீலா தேசிய இன போராட்டங்கள் உலகில் நடக்கின்றன? இசுலாமியர்களை தனி இனமாக பிரிக்கும் “உள் அடி வேலை தனம்” உங்களுக்கு எதற்கு தென்றல் ? தமிழ் மொழி பேசும் இலங்கை இஸ்லாமியர்கள் ஈழத்துடனும் ,சிங்களம் பேசும் இசுலாமியர்கள் ஸ்ரீலங்கா உடனும் சேர போவது தானே எதார்த்தம் ?

        //அங்கேயும் பல்வேறு தேசிய இனங்கள் உண்டு. மலையகத் தமிழர்கள், இசுலாமியர்கள், ஈழத்தமிழர்கள் தேசிய இனங்களாக பிரிந்துபோகும் உரிமையோடுகூடிய சுயநிர்ணய உரிமையே தீர்வாகும் என்பது என் புரிதல்///

        • தனக்குத் தெரிந்ததே ஞானம் என்று சொல்வதில் பிரோயசனமில்லை. நான் சுட்டிக்காட்டிய நான்கு புத்தகங்களும் இணையத்திலேயே வாசிக்கக் கிடைக்கின்றன. ஒன்று ஊன்றி வாசித்து தங்கள் பார்வையை வைக்க வேண்டும். இதுதவிர எதிர்கொள்வோம் என்ற தலைப்பில் மொத்தம் எட்டு கட்டுரைகள் வினவில் வந்திருக்கின்றன. அதையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். ஒன்றுமே செய்யமாட்டேன்; நான் சொல்வதுதான் சரி என்பது உமது கதநாயக வழிபாட்டின் ஒரு பகுதியே.

          ஒடுக்கப்பட்டவர்களுக்கு வாய் கிழிய பேசிவிட்டு மலையகத் தமிழர்களின் தேசிய இனம்சார் உரிமைகளை மறுக்கிற ஈழ அரசியல் கட்சிகளை தூக்கி வைத்து கொஞ்சுவது உமது இரட்டை வேசமின்றி வேறல்ல.

          மலையகத் தமிழர்கள் நாயாய் உழைத்துவிட்டு சிங்கள இனவாதிகள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிய துரோகத்தில் ஈழப் போராளி குழுக்களின் நிலைப்பாடு என்னவென்று சொல்லமுடியுமா? அவர்களும் நிலம் பொருளாதராம், கலாச்சாரம் சார்ந்த பண்பாடு உண்டு என்று எந்த ஈழ குறுங்குழுக்களாவது ஏற்றுக்கொண்டார்களா? அல்லது உம்மால் கண்டுகொள்ள முடியவில்லையா?

          இசுலாமியர்களும் சிறுபான்மை தேசிய இனமே. ஒன்றுபட்ட ஈழத்தில் அனைத்து தேசிய இனங்களின் உரிமைகளும் பண்பாடுகளும் உறுதிப்படுத்தப்படாவிட்டால் சிங்களவன் முன்வைக்கிற இனவாதத்திற்கும் ஈழத் தமிழர்கள் வைக்கிற இனவாதத்திற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

          உமக்கு தேசிய இனங்களைப் பற்றி தெரியாவிட்டால் சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமைகள் என்னவென்று புரியாவிட்டால் ஈழம் தேவை ஒரு நேர்மையான மீளாய்வு என்ற வெளியீட்டில் 12-18 வரையிலான பகுதிகளை வாசிக்கவும். வறட்டுவாதமாக விவாதிப்பதைத் தவிர்க்கவும்.

      • //முசுலீம்கள் என்று வரும்பொழுது மட்டும் தேசிய சிறுபான்மையினர் என்று அடக்கிவாசித்துவிட்டு முடிக்கும்போது மதச் சிறுபான்மையினர் என்று முடிப்பது என்ன காரணம்?///

        இது கூடவா தெரியவில்லை. அவர்களின் மொழி தமிழ். வரலாற்று ரீதியாகப் பார்த்தாலும் அறுதிப் பெரும்பான்மையினர் தமிழர்/திராவிடக் கலப்பினம். வஹாபிகள் அவர்களை இப்பொழுது அரபுமயமாக்கிக் கொண்டு வந்தாலும் கூட அவர்களின் கலாச்சார பழக்க, வழககங்களின் அடிப்படையும் தமிழ் தான், அவர்களின் மதம் மட்டும் தான் முஸ்லீம்களைத் தமிழர்களிடமிருந்து பிரிக்கிறது. மத அடிப்படையில் “தேசிய சிறுபான்மையினங்களை” வரையறுப்பதில்லை. அப்படிச் செய்தால், இலங்கையில் முஸ்லீம் தேசிய சிறுபான்மையினர்,சைவத் தேசிய சிறுபான்மையினர், வைணவத் தேசியச் சிறுபான்மையினர், தேரவாத தேசிய சிறுபான்மையினர், மகாயான தேசிய சிறுபான்மையினர், கத்தோலிக்கக் தேசிய சிறுபான்மையினர், மெதடிஸ்ட் தேசிய சிறுபான்மையினர், பெந்தெகொஸ்ட் தேசிய சிறுபான்மையினர் என மத அடிப்படையில் பல சிறுபான்மையினரைக் குறிப்பிட வேண்டும். அவர்களுக்கெல்லாம் சுயநிர்ணய உரிமையும் அளித்தால், இலங்கையில் எத்தனை நாடுகள் உருவாகும் என்று கணக்குப் போட்டுப் பாருமையா. அதனால் தான் இலங்கை முஸ்லீம்களை மதச்சிறுபான்மையினர் என்று குறிப்பிட்டேன்.

        • வியாசன்,

          மத அடிப்படையில் ஈழ தமிழர்களை பிரித்து வைக்க முயன்ற தென்றல் அவர்களீன் “உள் அடி வேலை தனத்தை” தன் வாதாத்தால் முறியடித்த வியாசன் அவர்கலுக்கு நன்றி..

        • இதுவும் உமது புரட்டல். மதச் சிறுபான்மையினர் என்பதன் அடிப்படையில் சிறுபான்மை தேசிய இனம் வரையறுக்கப்படுவதில்லை. ஆர் எஸ் எஸ் கைக்கூலிகள் காஷ்மீர் மக்களின் தனித்த உரிமைகளை மதச் சிறுபான்மையினர் என்று ஒடுக்குவதைப் போன்றது தான் உமது வாதம்.
          ஈழம் என்ற ஒன்ற ஒரு நாட்டைத் தவிர எத்துணை நாடுகள் இருக்க முடியும் என்ற உமது கேள்விக்கு நீரும் போராளிக் குழுக்களும் தான் பதில் சொல்ல வேண்டும்

          ஏனெனில்

          நாங்களெல்லாம் ஆண்ட பரம்பரை என்று மேட்டுக்குடி சிந்தாந்தம் பேசியவர்களும்

          பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை கணிசமாகக் கொண்ட EPRLF போன்ற இயக்கங்களின் குழுக்களை துரோகிகளாக அழித்தொழித்தவர்களும்

          ஈழ முசுலீம்கள் நமக்குப் பகைவர்கள் என்று சொன்னவர்களும் புலிகள் தான். அவர்கள் வைத்த தேசியம் தான் ஆகக் கடுமையான குறுந்தேசிய இனவாதம்.

          ஈழம் என்று சொல்கிற பொழுது அதில் சிறுபான்மை தேசிய இனங்களின் நலன்களும் உரிமைகளும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி ஒன்று ஈழப்போராளி குழுக்களுக்கிடையே இருந்ததா?

          தமிழரசுக்கட்சி முன்வைத்த தன்னாட்சியிலே மலையகத்தமிழர்கள் கிடையாது.

          பிறகு ஈழம் என்று வாய்ஜாலம் விடுவது எதற்காக? யாரையும் ஆட்டைக்கு சேர்த்துக்கொள்ள விருப்பமில்லை. அப்படி எனில் நீர் பேசுகிற தேசியத்திற்கும் சிங்களவன் பேசுகிற தேசியத்திற்கும் என்ன வித்தியாசம்?

  55. //“மலையகத் தமிழர்களுக்கென வரையறுக்கப்பட்ட, பாரம்பரிய உரிமையுள்ள நிலப்பரப்பு இலங்கையில் கிடையாது. அவர்களுக்கென தனிப்பட்ட வரலாறு இலங்கையில் இல்லை.” என்பது உமது சாதிவெறியின் நீட்சியே.///

    உண்மையைக் கூற நான் ஒருபோதும் தயங்குவதில்லை. மலையகத் தமிழர்களின் தலைவர்கள் தான் பெரும்பணக்கார்களே தவிர, உண்மையில் இன்றும் தோட்டங்களில் வாழும் பெரும்பாலான மலையகத் தமிழர்களுக்கு அவர்கள் காலம் காலமாக வாழும் அந்த லயன் வீடுகள் கூட அவர்களுக்குச் சொந்தமானதல்ல. இந்த லட்சணத்தில் அவர்களுக்கென வரையறுக்கப்பட்ட, பாரம்பரிய உரிமையுள்ள நிலப்பரப்பு இலங்கையில் உண்டு, அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமையுண்டு என்றெல்லாம் இணையத்தளங்களில் வாதடலாம், கட்டுரைகள் எழுதலாம் ஆனால் நடைமுறையில் சாத்தியமாகாது. மலையகத தமிழர்கள் வடக்கு கிழக்கிலுள்ள காணிகளில் குடியேற்றப்பட்ட வேண்டும். அது தான் அவர்களின் நிலப் பிரச்சனையைத் தீர்க்கும்.

    //இங்கு விவாதம் அனைவரையும் ஈழத்தமிழர்கள் என்ற ஒரே தேசிய இன பட்டிக்குள் அடைக்க இயலுமா என்பது///

    நிச்சயமாக அடைக்க இயலும். ஏனென்றால் இபொழுது இந்திய வம்சாவளி/இலங்கைத் தமிழர் என்று பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடுவதில்லை. ஏனென்றால் “நாடற்றவர்கள்” என்ற நிலையில் யாரும் இலங்கையில் இல்லை. இலங்கையில் பிறந்தவர்கள் அனைவரும் இலங்கையர்கள் மட்டுமே. அதனால் இலங்கையர்களாகிய தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரையும் (முஸ்லீம்கள் உட்பட) ஈழத்தமிழர்கள் என்ற தேசிய இனப்பட்டிக்குள் அடைக்க முடியும். ஆனால் அதை இலங்கையின் தொப்பி பிரட்டி முஸ்லீம்களும், சுயநலவாதம் பிடித்த அவர்களின் தலைவர்களும் எதிர்ப்பார்கள்.

    மலையகத் தமிழர்களை ஈழத்தமிழர்கள் என்ற பட்டிக்குள் அடைப்பதை பெரும்பான்மை மலையகத்தமிழர்கள் எதிர்க்க மாட்டார்கள், அதை வரவேற்பார்கள். இந்தியவம்சாவளி என்ற அந்த அடிமை(கூலி) விலங்கின் அடையாளத்தை அகற்ற அவர்கள் விரும்புகிறார்கள் . உதாரணமாக, தான் வடக்கு கிழக்கில் குடியேறிய மலையகத் தமிழர்களின் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர் தம்மை இந்தியவம்சாவளி என்று குறிப்பிடுவதில்லை, அவர்களின் தமிழ்ப்பேச்சு வழக்கிலும் தமிழ்நாட்டுச் சாயல் இல்லை. ஆனால் தமிழர்களின் எண்ணிக்கை வலுவைக் குறைத்து, அவர்களைப் பிரித்தாள நினைக்கும் சிங்களவர்கள் மலையகத் தமிழர்களை ஈழத் தமிழர் என்ற இனப்பட்டிக்குள் அடைப்பதை விரும்ப மாட்டார்கள். ஈழத் தமிழர்கள் என்பது வடக்கு கிழக்கில் வாழும் பூர்வீக தமிழர்களைக் குறித்தாலும், ஈழம் என்பது முழு இலங்கையையும் தான் குறிக்கும் (உண்மையில் தமிழீழம் என்பது தான் வடக்கு கிழக்கைக் குறிக்கும்). அதனால் ஈழத்தமிழர்கள் என்ற தேசிய இனப்பட்டிக்குள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவரையும் இணைக்கலாம்.

    • நீண்ட ஆனால் மிக தெளீவான விளக்கத்துக்கு நன்றி வியாசன்

      It is a really excellent explanation. Till today I use the word “Eelam” wrongly for indicating North and East place of Tamil speaking people. Now I understood Eelam demotes word Srilanka in Tamil language. More over by your explanation I understood that Tamil Eelam means Tamil speaking people land in Srilanka[EElam].Good. keeep it up. My hate off for you!

    • மலையகத் தமிழர்களை ஈழத் தமிழர்கள் என்ற பட்டிக்குள் அடைக்கலாம் என்பது உமது வாதம். ஆனால் வரலாறு அதுவல்ல. ஈழப் போராளி குழுக்கள் ஆரம்பத்திலிருந்தே மலையகத் தமிழர்களின் நலன்களை பிரதிபலிக்கவில்லை. செல்வநாயகம் அவர்களே ஈழத்தமிழர்களின் நலன்களைத் தான் பிரதிபலித்தாரே தவிர மலையகத்தமிழர்களின் நலன் களை அல்ல. 1815இல் குடியேறுகிற மலையகத் தமிழர்கள் இலங்கை நாட்டு பொருளாதாரத்திற்கு கணிசமான அளவு உழைத்து ஓய்ந்திருக்கின்றனர். அவர்கள் உழைப்பை எல்லாம் உறிஞ்சி கொழுத்த இலங்கைப் பேரினவாதம் அவர்களில் கணிசமான ஒரு பகுதியினரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிய பொழுது ஈழப்போராளிக்குழுக்களின் நிலைப்பாடு என்னவாக இருந்தது? தப்பித்து ஓடாமல் தாங்களும் முடிந்தால் சரவணனும் பதில் சொல்லவும்.

      அப்பொழுது மெளனியாக இருந்துவிட்டு மலையகத் தமிழர்கள் ஈழத் தமிழர்கள் என்ற தேசிய இனத்திற்குள் இப்பொழுது வருவார்கள் என்று கதைகட்டுவது எதற்காக? தமிழரசுக்கட்சியே என்றைக்கும் மலையகத் தமிழர்களின் நலன்களைப் பிரதிபலித்தில்லை. இலங்கைபேரினவாதமும் ஈழத்தமிழர்களின் இனவாதமும் மலையகத் தமிழர்களுக்கு இலங்கையில் அடிமை என்ற பட்டத்தையும் இந்தியாவில் அகதி என்ற பட்டத்தையும் தான் வழங்கியது. இதுதான் வரலாற்று உண்மை.

      இதில் தொண்டைமான் போன்றவர்கள் இலங்கை அரசிடம் மலையகத்தமிழர்களை அடமானம் வைத்து மக்களை ஒட்டச் சுரண்டினர் என்பது தான் வரலாறு. இலங்கை பேரினவாதி என்ற பொது எதிரியை இவ்விதம் ஒன்றுபட்டு அழிக்க முடியாமைக்குகாரணம் ஈழத் தமிழ் போராளிக்குழுக்களின் குறுங்குழு இனவாதமே காரணம்.

      தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்களை ஒரே தேசிய இனத்திற்குள் அடைப்பது உமது அறிவின்மையை என்றால் எனக்கு பிரச்சனையல்ல. தேசிய இனம் என்பதன் அடிப்படையில் மலையகத்தமிழர்களின் கலை கலாச்சாரம், பண்பாடு, வாழிடம், பொருளாதாரம் அனைத்தும் ஈழத் தமிழர்களோடு ஒன்றுபடுத்தி பார்க்க இயலாது. ஒரு சிறுபான்மை தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை இவ்விதம் நசுக்குவது பாசிசமன்றி வேறல்ல. புலிகள் பிற்காலத்தில் இவ்விதம் தான் பாசிஸ்டுகளாக மாறினார்கள்.

  56. Dear vinavu,

    வினவின் விருப்பப்படி நானும் ஈழம் சார் விவாதத்தை இங்கு நிறுத்தி கொள்கின்றேன். அது சமயம் தென்றல் அவர்களீன் கேள்வீகளுக்கு நான் பதில் செல்லாமல் ஓடி ஒளீய கூடாது என்பதால் என் blogல் பதில் அளித்து உள்ளேன். எனவே வினவு இந்த பீனுட்டதை அவசியம் வெளியீட வேண்டும்.
    நன்றி.

    Note:
    I spend lot of time to make replay to thendral.
    The answers,replays are consolidated and available in my name web link here.

  57. you try to sound smart in NNarative, but as usual bringing half truth stupidity..Hinduism is not responsible for caste atrocities, in these times caste differences are dwindling,,, haven’t you heard Brahmin and SC inter caste marriage, no issues of intercaste marriage if both are in equal status.. Saying hinduism created caste system is ________ of whoever questions it… Hinduism is a scientific way of life.. No untouchables, no low or high caste arya samaj started in 1875 voice for elimination of caste in hinudism… Why do not you try something better to break ______into indian walls.

  58. அரவிந்தன் நீலகண்டன் இந்தக் கட்டுரைக்கு எதிர்வினை புரிந்திருக்கிறார். கட்டுரை எழுதிய மனோஜ் குமார் முன்வைத்த எந்தக் குற்றச் சாட்டையும் அவர் மறுக்கவில்லை.

    இதிலிருந்து, இந்து ஆன்மீகக் கண்காட்சி என்பது பார்ப்பனர்களால் நடத்தப்படுகிறது என்பது, ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அங்கு மதிப்பு என்பது, தலித்துகளுக்கு இடம் இல்லை என்பது, சாதீயவாதத்துக்கு எதிரான அரவிந்தன் நீலகண்டனை இந்து அமைப்புகள் கொடுமைப்படுத்துகிறார்கள் என்பது அனைத்தும் உண்மை என்பது தெளிவாகி இருக்கின்றன.

    இப்படிப்பட்ட பார்ப்பனீயக் கொடுமைகளை தாங்கிக் கொண்டு பார்ப்பனரல்லாத அரவிந்தன் நீலகண்டன் அவர் நம்பும் கொள்கைக்காக உழைத்து வருகிறார். இன்னும் எத்தனை நாட்கள் அவர் இந்தப் பார்ப்பன பாசிச கும்பல்களுக்காக உழைத்து ஏமாறப் போகிறார் ?

    இந்த இந்துத்துவக் கும்பல்களை விட்டு வெளியேறி, அவர் நவ்யான பௌத்தராக மதம் மாறவேண்டும். அம்பேத்கார் சொன்ன வழியில் இந்துமதத்தை அழித்து சமத்துவ சமூகத்தை உருவாக்க வேண்டும்.

Leave a Reply to selva mani பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க