மோடி அரசின் விவசாயி விரோதப் போக்கை கண்டித்து உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட், அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த 70,000 விவசாயிகள் டிராக்டர்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்களுடன் டெல்லியை நோக்கிச் சென்றனர். கடந்த அக்டோபர் 2, 2018 அன்று டெல்லியின் பல்வேறு நுழைவுச் சாலைகளில் அவர்கள் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மீறி பேரணி நடத்த முயன்ற விவசாயிகள் மீது தடியடி, தண்ணீர் பீரங்கிகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளைக் கொண்டு போலீசு நடத்திய தாக்குதலில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்துள்ளனர்.

விவசாயிகள் சங்கத் தலைவர்களுள் ஒருவரான மகேந்திர சிங்கால் தொடங்கப்பட்ட பாரதிய கிசான் சங்கம் செப்டம்பர் 23-ம் தேதி ஹரித்துவாரில் இருந்து ”விவசாயிகளின் புரட்சிப் பயணத்தை” (Kisan Kranti Yatra) தொடங்கியது. குறைந்தபட்ச ஆதரவு விலை, குறைவான டீசல் விலை மற்றும் மின்சார கட்டணம், நிபந்தனையற்ற கடன் தள்ளுபடி, ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடங்கப்பட்ட இந்த பயணம் டெல்லியின் ’கிசான் காட்’ பகுதியில் கடந்த அக்டோபர் 2 அன்று முடிவடைவதாகத் திட்டமிடப்பட்டது.

படிக்க:
மோடியின் புல்லட் ரயில் திட்டத்திற்கு 1000 விவசாயிகள் எதிர்ப்பு !
ரூபாய் 95 கோடி வீதம் 615 விவசாயிகளுக்கு கொடுத்தாராம் மோடி ! யார் அந்த விவசாயிகள் ?

டெல்லி போலீசு, இந்தப் போராட்டத்திற்கு எவ்வித வாய்ப்பும் வழங்காமல் அதனை முடக்க, டெல்லியின் பல்வேறு இடங்களில் தடையுத்தரவு போட்டிருந்தது. அக்டோபர் 2 அன்று டெல்லிக்குள் நுழைய முடியாதவாறு உத்திரப்பிரதேச எல்லையிலேயே விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். “நாங்கள் நொய்டா வழியாக டெல்லிக்கு செல்ல முயற்சி செய்தோம். ஏனெனில் அந்த வழி ஒன்று தான் திறந்திருப்பதாக ஒருவர் கூறினார். ஆனால் அந்த வழியும் மூடப்பட்டு விட்டது. அதனால் இப்பொழுது இங்கேயே உட்கார்ந்திருக்கிறோம்.” என்று முசாபர்நகர் பயணத்தில் கலந்து கொண்ட பிரதீப் பன்வார் எனும் விவசாயி கூறினார்.

டெல்லியின் பல்வேறு நுழைவுப்பாதைகளில் விவசாயிகள் தடுக்கப்பட்டனர். அங்கு முழக்கமிட்ட விவசாயிகளின் மீது தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைந்து போகச் சொன்னது மத்திய அரசின் அடியாட்படையான டெல்லி போலீசு. கலைந்து செல்ல மறுத்த விவசாயிகள் மீது தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தது போலீசு.

டெல்லி – உ.பி. எல்லையில் பேரணியில் கலந்து கொண்ட விவசாயிகள் இரவு உணவு தயாரிக்கும் பணியில்..
டெல்லிக்குள் நுழையும்  எல்லையில் காவல்துறையினரின் தடுப்பரணை உடைத்துச் செல்ல முயலும் விவசாயிகள்
விவசாயிகளுடன் மோதலில் ஈடுபடும் போலீசு.
போராடும் விவசாயிகளை கலைக்க தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தும் போலீசு.
போராடும் விவசாயிகளை கலைக்க கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசும் போலீசு.
பாரதிய கிசான் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகள் புரட்சி பயணத்தின் ஒரு பகுதியாக டெல்லியை நோக்கி செல்லும் விவசாயிகளின் பேரணி.
டெல்லி – உ.பி. எல்லையில் பாதுகாப்பு அரண்களோடு தாக்குதலுக்குத் தயாராக இருக்கும் போலீசு
விவசாயிகள் பேரணி காசியாபாத்திற்குள் நுழையும் காட்சி.
காசியாபாத்தில் உள்ள ஒரு சாலையை பேரணி கடந்து செல்லும் காட்சி
விவசாயிகள் பேரணி காரணமாக போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை எண் 24-ல் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்

படங்கள் நன்றி: அவுட்லுக், Kisan Kranti Yatra
செய்தி நன்றி: தி வயர்,  ♦ Police Use Lathi Charge, Water Cannons to Stop Over 70,000 Farmers From Entering Delhi

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க