தூத்துக்குடி மாவட்டம், பண்டாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசம்மாள் (வயது 50) அவர்கள் அக்-22, அன்று மாலை புற்றுநோயால் மரணமடைந்தார். ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஒன்றுதான் பண்டாரம்பட்டி. இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பலரும் புற்றுநோய், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், கர்ப்பப்பை பிரச்சினை என பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இக்கிராம மக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தச் சூழலில்தான் கடந்த ஓராண்டாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த கணேசம்மாள் அவர்கள் மரணமடைந்துள்ளார்.

இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவர் பெயர் ராமர். நோயின் கடுமையால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 23, 2018 அன்று வினவு செய்தியாளர்களுக்கு அவருடைய குடும்பத்தினர் பேட்டியளித்துள்ளனர்.

அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

படிக்க:
ஸ்டெர்லைட்டை மூடு ! பற்றி எரிகிறது தூத்துக்குடி ! போராட்ட பதிவுகள் !
ஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் !
தூத்துக்குடி : புதைந்தது உடலல்ல விதையான வீரமடா | ம.க.இ.க. பாடல்

இவண் – ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு.