ன்னியாகுமரி மாவட்டம் கட்டிமாங்கோடு அருகே காட்டுவிளை கிராமத்தில் புதிதாக திறந்துள்ள டாஸ்மாக் கடையை மூடுமாறு கூறி காட்டுவிளை கிராம மக்கள்  நேற்று (02-11-18) காலை முதல் முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.

ஓர் ஆண்டுக்கு முன்பு இதே இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.  கடை திறக்கப்பட்ட அன்றே காட்டுவிளை கிராம மக்கள் சுற்று வட்டார கிராம மக்களுடன் இணைந்து கடையை முற்றுகையிட்டு விடிய விடிய போராடி கடையை விரட்டியடித்தனர்.

தற்போது மீண்டும் அதே உணர்வுடன் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இரண்டாவது நாளாக தொடர்கிறது, மக்களின் போராட்டம்.

பேச்சுவார்த்தைக்கு வந்த தாசில்தார், ‘’கடையை சீல் வைக்கின்றோம்’’ என்று கூறியுள்ளார். ‘’ஏன் சீல் வைக்க வேண்டும்?  கடையை காலி செய்து எடுத்து செல்லுங்கள்’’ என்று மக்கள் அவரை திருப்பியனுப்பினர். பின்னர், மாவட்ட ஆட்சியரிடம் பேசுவதற்கென்று மக்களில் சிலரை அழைத்து சென்றனர். ‘’கடையை காலி செய்து எடுத்து சென்றால்தான் போராட்டத்தை கைவிடுவோம்’’ என்று ஆட்சியரிடமும் உறுதியாக தெரிவித்துவிட்டனர்.

தற்போது, டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்ட உடனே, முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்கு ஆயத்தமாகினர் மக்கள். இதற்கு முன்னர் இதே டாஸ்மாக் கடை முதல்முறையாக திறக்கப்பட்ட அன்றே முற்றுகை போராட்டம் நடத்தியதன் காரணமாகத்தான் கடையை மூடினர். இந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே மக்கள் போராடத்தயராயினர். ஆனால், சில உள்ளூர் பாரதிய ஜனதா கட்சி  கட்சி தலைவர்களின் நிர்பந்தம் காரணமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர். வழக்கம் போல கோரிக்கையை பரிசீலிக்கிறோம் என்று சமாதானம் சொல்லி அனுப்பிய மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சியர் நடவடிக்கைக்கு எடுக்கும் வரையில் காத்திருக்க கோரினர் பா.ஜ.க. நிர்வாகிகள்.

‘’கடையை முற்றுகையிடாமல் கடையை மூட மாட்டார்கள்,முற்றுகையிட்டு நாமே மூடுவோம்’’ என்று அதிகாரத்தை செலுத்தி வருகின்றனர் காட்டுவிளை மக்கள்.

படிக்க:
சிறப்புக் கட்டுரை : அம்மாவின் ஆட்சியில் கொழிக்கும் டாஸ்மாக் – மணற்கொள்ளை !
என் ஊரு நெல்லை ! ஆனா எனக்கு சொதி குழம்பு தெரியாது !

மக்கள் முற்றுகை போராட்டம் நடத்துவதை அறிந்த பா.ஜ.க. வினர் உட்பட பல்வேறு அரசியல்கட்சியினரும் களத்திற்கு வந்து மக்கள் போராட்டத்தை ஆதரித்து பேசிவருகின்றனர். குளச்சல் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வும் வந்து ஆதரித்து பேசியுள்ளார். மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட செய்தி அறிந்தது முதல் தற்போது வரை போராட்டக்களத்தில் காட்டுவிளை மக்களுடன் உள்ளனர்.

தகவல்:

கன்னியாகுமரி மாவட்டம்.