டீசல் விலை உயர்வு மற்றும் அதன் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலையுயரவைக் கண்டித்து 75,000 மஞ்சள் ஆடை போராட்டக்காரர்கள் பிரான்சு நாட்டின் தலைநகரில் நடத்தி வரும் போராட்டம் அந்நாட்டு அரசை நிலைகுலைய வைத்துள்ளது.
வீர தீரமான போராட்டங்களுக்குப் பெயர்பெற்ற பிரான்சு நாட்டில், கடந்த சில நாட்களாக மஞ்சள் ஆடை போராட்டக் குழுவினரின் தொடர் போராட்டங்கள், முதலாளித்துவ ஆதரவு அரசை நடத்திவரும் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
படிக்க:
♦ பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து பிரான்ஸ் மக்கள் போராட்டம்
♦ பெட்ரோல் விலை உயர்வு : இனியும் பொறுக்க முடியாது !
முழுமையாக ஒருங்கிணைக்கப்படாத, தலைமையே இல்லாத, தன்னெழுச்சியாக உருவான இந்தப் போராட்டக் குழுவைக் கண்டு அஞ்சும் பிரான்சு அரசு, தற்செயலாக நடைபெற்ற வன்முறைகளைப் பெரிதுபடுத்தி அவதூறு பரப்பும் வேலையை மட்டுமே இப்போது செய்து வருகிறது. இவர்களை ஒருங்கிணைப்பதில் சமூக வலைத்தளங்களே முக்கிய பங்காற்றி வருகின்றன. தலைநகர் பாரீசில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் போராட்டக்காரர்கள் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

பிரான்சு நாட்டின் மேற்குப்பகுதியான பிரிட்டானியாவிலிருந்து பாரீசு நகரம் நோக்கி வந்திருக்கும் மஞ்சள் ஆடைப் போராட்டக்காரரான பியரே கூறுகையில் ’ நாங்கள் அமைதியான வழிகளில் போராடுவதையே விரும்புகிறோம்; டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்ற ஒன்று மட்டுமே மஞ்சள் ஆடை போராட்டக்குழுவின் கோரிக்கை. பணக்காரர்களின் நண்பனாகச் செயல்பட்டு வரும் மேக்ரோன் பதவி விலகும் வரை எங்கள் போராட்டத்தைத் தொடருவோம்’ என்கிறார்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்ட சோபி கூறுகையில், ”அமைதியாக நடந்து கொண்டிருந்த இந்தப் போராட்டத்தை தீவிர வலதுசாரிகள் புகுந்து வன்முறையைப் புகுத்திவிட்டனர்” என்றார்.
இந்தப்போராட்டம் தொடர்பாக இதுவரை 270 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 17 போலீசார் உட்பட 110 பேர் காயமடைந்துள்ளனர்.
பிரான்சில் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் ஆட்சியாளர்களுக்கு எதிரான இந்த மக்கள் எழுச்சியை ஆதரிப்போம்.
படங்கள்:















தமிழாக்கம் :
நன்றி: அல்ஜசீரா