2018-ம் ஆண்டின் சிறப்பு விருதுகளை தெரிவு செய்யும் முகமாக நடத்தப்படும் கருத்துக் கணிப்பில் இது கடைசி. அர்னாப் கோஸ்வாமிக்கு அறிமுகம் தேவையில்லை. சங்கிகளுக்கு சவுண்டு கொடுப்பதிலும், சங்கிகளை அம்பலப்படுத்துபவர்களை சதித் திட்டங்களைத் தீட்டி தேச விரோதிகளாக சித்தரிப்பதிலும் அர்னாப்புக்கு நிகர் கோஸ்வாமிதான்.

தமிழகத்தில் சந்தேகமில்லாமல் இந்த திருப்பணியை ரங்கராஜ் பாண்டேதான் செய்து வருகிறார். தந்தி டிவியிலிருந்து விலகிய பிறகு தற்போது பாண்டே மார்க்கெட்டிங் வேலைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. கடைசியாக அவர் பச்சையாகவே பாஜக-வை ஆதரித்துப் பேசியது வரை அனைவரும் அறிந்த ஒன்றுதான். பாண்டே தனி டிவி ஆரம்பிப்பாரா, ரஜினி டிவி பொறுப்பேற்பாரா, இல்லை பாஜகவின் தமிழ் டிவி நடத்துவாரா ? அனைத்தும் வரும் தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே பாஜக முடிவு செய்து விட்டது. இதற்கு மேலாக மேலவை எம்பி போன்றவையும் கூட டீலாக பேசப்பட்டிருக்கலாம்.

எனினும் பாண்டே பரந்துபட்ட மக்கள் திரளிடம் செய்யும் காவிக் கதை செய்திகளை இலக்கியம், நாளிதழ், பத்திரிகை என பல ஊடக வடிவங்களில் செய்யும் முக்கியமானவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் பாண்டே அளவுக்கு பிரபலம் ஆகவில்லை என்றாலும் பாண்டே செய்யும் வேலையை தத்தமது துறைகளில் திறம்படச் செய்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

தினமணி வைத்தியநாதன், அனைவருக்கும் சீனியர். ஆண்டாள் பிரச்சினையில் அவர் அவாளிடம் காலில் விழுந்தது முதல் தினமணி தலையங்க கட்டுரைகள் வரை பாஜகவின் அவாள் அணி போற்றும் நம்பர் ஒன் மூத்த பத்திரிகையாளர்.

புதிய தலைமுறை மாலனும் மூத்த பத்திரிகையாளர்தான். பத்திரிகை, டிவி விவாதங்கள், பேஸ்புக்கில் விவாதிப்பது மூலம் கமலாலயம் கவனிக்கும் நிலைக்கு வந்தவர். பாண்டே பொய்யை ஓங்கிச் சொல்வார். வைத்தியநாதன் அதை ஒழுக்கமாக மொழிபெயர்ப்பார். மாலன் அதை புள்ளி விவரங்களுடன் உண்மையாக மாற்றிச் சொல்வார். சரி இவர்களோடு ஜெயமோகன் என்ன சொல்வார்?

படிக்க:
♦ பாஜக-வின் கொள்கை பரப்பும் நம்பர் 1 நடுநிலை தமிழ் நாளிதழ் எது ? கருத்துக் கணிப்பு
♦ மோடிக்கு ஜால்ரா போடும் தொலைக்காட்சிகளில் நம்பர் 1 எது ? கருத்துக் கணிப்பு

ஜெயமோகனைப் பொறுத்த வரை மேற்கண்ட நால்வரின் திறமைகளையும் இணைத்து பிணைத்து நுட்பமாகவும், நூதனமாகவும், நூலாகவும் காவிகளுக்கு பரிந்துரை செய்வார். அடுத்த முறை அன்னாருக்கு சாகித்ய அகாடமி நிச்சயம் என்பதாலும், இயல்பிலேயே இந்துத்துவத்தின் பண்பாட்டை பாரதப் பண்பாடு என உள்ளார்ந்து ஏற்றிருப்பதாலும் ஜெயமோகன் இலக்கிய உலகில் பாஜக-வின் பிராண்டு அம்பாசிடராக செயல்படுகிறார். இங்கே பாண்டே போல நேரடியாக இருக்க வேண்டியதில்லை. இந்து முன்னணி சொல்லும் இந்துமதம் வேறு என்று ஆரம்பித்து இந்து மதத்தை உயர்த்தி அதுதான் ஆர்.எஸ்.எஸ் சொல்லும் இந்துமதம் என்று முடிப்பார்.

இறுதியாக இவர்களோடு இணைகிறார் தி இந்து தமிழ் பத்திரிகையின் பத்திரிகையாளர் சமஸ் அவர்கள். சமஸுக்கு தினமணி வைத்தியநாதன் குரு. தி இந்து தமிழ் பதிப்பு ஆரம்பித்த முதல் நாளிலேயே ஜெயமோகனை நடுப்பக்கத்தில் எழுத வைத்தார். மோடி பதவியேற்ற பிறகு ஏகப்பட்ட கட்டுரைகள் மோடியை நேரடியாக ஆதரித்தும், மறைமுகமாக நியாயப்படுத்தியும் எழுதியிருக்கிறார். என்ன, மேற்கண்ட கோஸ்வாமிகளை விட கூடுதலான ஒரு பண்பு சமஸிடம் இருக்கிறது எனலாம். மோடியை ஆதரித்தாலும் மோடிக்கு என சில அட்வைசுகள் சொல்லித்தான் சமஸ் எழுதுவார்.

கேள்வி:

தமிழகத்தின் அர்னாப் கோஸ்வாமி யார் ?

♥ ரங்கராஜ் பாண்டே
♥ புதியதலைமுறை மாலன்
♥ பத்திரிகையாளர் சமஸ்
♥ தினமணி வைத்தியநாதன்
♥ எழுத்தாளர் ஜெயமோகன்

(அனைவரும் கண்ணை மூடிக் கொண்டு பாண்டேவை தெரிவு செய்வீர்கள். மற்றவர்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதற்காக மூன்று தெரிவுகள் எடுக்கலாம்)

நாளை வெற்றி பெற்றவர்கள், விருது பெறுபவர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

டிவிட்டரில் வாக்களிக்க :

யூ-டியூபில் வாக்களிக்க :

https://www.youtube.com/user/vinavu/community

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க