பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் காக்கைகளின் சத்தம் அதிகம் கேட்கிறது. மோடி பதவியேற்ற பிறகு தமிழக தொலைக்காட்சிகளின் விவாதங்கள், நேர்காணல்கள், அன்றாட செய்தி அறிக்கைகளின் காரணமாக பாஜக ‘மாபெரும்’ கட்சியாக ‘உருவெடுத்து’ விட்டது. கவுன்சிலர் தேர்தலில் கூட வெல்ல முடியாத கட்சி என தமிழக மீம்கள் அணியில் பெயரெடுத்த பாஜகவிற்கு தமிழக ஊடகங்கள் பெரும் பலம். இந்தக் காலத்தில் “என்ன நான் சொல்றது எச் ராஜா” தேசியக் கட்சியின் செயலாளர் என்று தமிழக ஊடகங்களால் பயந்து மதிக்கப்படும் ஆளாகி விட்டார்.
மறுபுறம் எச்ச, **** என்று யூடியூப் ஊடகங்களில் முன்னணி ரேட்டிங்கையும் அவர் பெறுகிறார். நடிகர் சிம்பு போன்றவர்கள் கூட என்ன ராசா என்று கேட்குமளவு யதார்த்தமிருந்தாலும், செய்தி சானல்களின் சித்தரிப்பு வேறு. இன்னும் தமிழிசை துவங்கி எஸ்.வி.சேகர் வரை மாபெரும் தலைவர்களாக மீடியாக உபயத்தால் மாற்றப்பட்டனர்.
இப்படியாக யதார்த்தத்தில் பாஜக தலைவர்கள் நடிகர் மயில்சாமி பேசினால் வரும் கூட்டத்தை விஞ்ச முடியாத நிலையிருக்கிறது. ஆனால் ஊடகங்களில் நேர் மாறான நிலை. தமிழக ஊடக முதலாளிகள் பார்ப்பனிய தாசர்கள் என்ற விதத்திலும், சிலர் ஊழல் முதலாளிகள் என்ற தகுதியிலும் பாஜகவின் புகழ் பாடுகிறார்கள். ஆகவே காக்கைகளின் இன்றைய ரேங்கிக் குறித்து நாம் அவ்வப்போது சர்வேக்கள் நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
பாஜக – மோடிக்கு பயப்படுவதில் நம்பர் 1 தமிழ் தொலைக்காட்சி எது ?
தந்தி டிவி
புதிய தலைமுறை
நியூஸ் 7 தமிழ்
நியூஸ் 18 தமிழ்நாடு
நியூஸ் ஜே
பாலிமர் நியூஸ்
(நிறைய பேரை தெரிவு செய்ய வேண்டிய குழப்பம் இருக்கிறதா? போனால் போகட்டும் இரண்டு பதில்களை தெரிவு செய்யலாம். சத்தியம், காவேரி போன்றவை அதிகம் பிரபலமில்லை என்பதாலும், கலைஞர், சன் டிவி, போன்றவை பாஜகவிற்கு எதிர்க்கட்சி வரிசையில் இருப்பதாலும் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.)
டிவிட்டரில் வாக்களிக்க :
பாஜக – மோடிக்கு பயப்படுவதில் நம்பர் 1 தமிழ் தொலைக்காட்சி எது ?
— வினவு (@vinavu) December 27, 2018
யூ-டியூபில் வக்களிக்க :
பாஜக – மோடிக்கு பயப்படுவதில் நம்பர் 1 தமிழ் தொலைக்காட்சி எது ?
தந்தி டிவி மோடிக்கு பயப்பட வில்லை. அதன் இயல்பான குணமே மோடிக்கு ஆதரவு கொடுப்பதுதான்.
NOTA
தமிழகத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பிஜேபி வலுப்பெற வேண்டும்… அதற்கு மீடியா ஆதரவு கொடுப்பதில் தவறில்லை.
பிஜேபி தனித்து நின்று கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறது.
ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம்;
ஊர துண்டாடுனா பிஜேபிக்கு கொண்டாட்டம்.
துண்டாடப்பட்ட சமூகங்கள் ஒண்ணாகும்போது
ஆப்பசைச்ச குரங்குக்கு வாலுதான் மாட்டினிச்சு; இந்த
பஜ்ரங் ஜனதா பார்ட்டிக்கு கழுத்து மாட்டும்.
இது கன்யா குமரிக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பொருந்தும்