ங்கில நாட்டு மார்க்சிய சிந்தனையாளர்களுள் திரு எமிலி பேர்ன்ஸ் தலைசிறந்தவராவார். “மார்க்சியம் என்றால் என்ன?’, ‘பணம்’ ஆகிய நூல்களை எழுதி மார்க்சிய இலக்கியத்திற்குச் சிறப்பைத் தேடித்தந்துள்ளார். மார்க்சிய அரசியல் பொருளாதாரத் தத்துவத்தை எல்லாரும் புரிந்து தெளிவு பெறவேண்டும் என்ற நோக்குடன் ‘பணம்’ (Money) எனும் இந்நூலை அவர் எழுதியுள்ளார்.

‘பணம்’ என்றால் என்ன? சமுதாய வளர்ச்சிக் கட்டத்தில் பணம் ஆற்றி வரும் பங்கு என்ன? பணம் எப்படித் தோன்றியது? ஏன் தோன்றியது? நோட்டுகள் அச்சிடப்பட்டுப் புழக்கத்தில் விட்டதன் காரணம் என்ன? ஆகிய பிரச்சினைகளை ஆசிரியர் இந்நூலில் சுவைபட விளக்கியுள்ளார்.

சமுதாயத்தில் பணத்திற்கு மதிப்பு எதனால் ஏற்படுகிறது? எல்லாப் பண்டங்களுடைய மதிப்பை நிர்ணயிக்கும், சமுதாயக் கடமையை நிறைவேற்றக்கூடிய ஒரு பண்டமாகப் பணம் விளங்கி வருவது ஏன்? மதிப்பின் அளவுகோலாகவும், புழக்கத்தில் விடக்கூடியச் சாதனமாகவும், சேமிப்பின் கருவியாகவும், கொள்வன – கொடுப்பனவற்றின் சாதனமாகவும், சர்வ வியாபக (Universal) பணமாகவும் அது விளங்கி, முதலாளித்துவச் சமுதாயத்திற்குத் தொண்டாற்றிக் கொண்டு இருக்கிறது.

இவ்வாறு, உலகளாவியப் பணமாக விளங்கும் இப்பணத்தைப் பற்றிய வரலாற்று உண்மைகளையும் வருங்காலத்தில் இப்பணம் நிரந்தரமாக நிலைக்குமா? அல்லது மறைந்து போகுமா? என்ற பிரச்சினைகளையும் ஆசிரியர் இந்நூலில் நன்கு ஆய்வு செய்துள்ளார். (நூலின் பதிப்புரையிலிருந்து)

… ஆதிகால மக்கள் தங்களுடைய தேவைபோக மிஞ்சிய தங்களது உற்பத்திப் பொருட்களை, உழைப்பு நேரத்தை அளவையாகக் கொண்டு தங்களுக்கிடையே பரிவர்த்தனை செய்து வந்தனர். இந்நிலைமையில் மக்களிடையே மிஞ்சிய பொருட்களை சேகரித்து மக்களுக்கே பரிவர்த்தனை செய்ய ஒரு கூட்டம் உருவாயிற்று. அதுதான் வியாபாரிகள். இப்போது உலோகங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அவற்றில் அதிகப்படியான வேலை நேரத்தை எடுத்துக்கொள்ளக்கூடியதும் அதிக அளவில் கிடைக்காததுமான தங்கமும் வெள்ளியும் அக்காரணங்களினாலேயே, பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்குமான பரிவர்த்தனை பொருளாக இருந்தன. இந்த உலோகங்களின் எடையினை அளவையாகக் கொண்டுதான் மக்களுக்குத் தேவையான பொருட்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டன.

இந்தமுறை, செயல்பாட்டுக்கு வந்த ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட எடையுள்ள உலோகத்துண்டுகளுக்கு ராஜாங்க முத்திரை இடப்படுகின்றன; இதன் மூலம், எடை அடிப்படையில் பொருட்களை பரிவர்த்தனை செய்வதற்கு ஆதாரமாக இருந்த தங்கமும் வெள்ளியும் நாணயமாகப் பரிணமித்தன.

இத்தனையும் நாணயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட உலோகங்களையும் பரிவர்த்தனைக்கான பொருட்களையும் உற்பத்தி செய்வதற்கு ஆகும் உழைப்பு நேரத்தை அளவையாகக் கொண்டுதான் நிகழ்ந்தன என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அதிகமான உழைப்பு நேரத்தைக் கொண்ட உலோகங்களினால் ஆன நாணயங்கள் வங்கிகளில் போட்டு வைக்கப்படும் போது கொடுக்கப்படும் ரசீதுகள் அப்போது வங்கி நோட்டுகள் எனப்பட்டன. இந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சியாக உலோக நாணயங்கள் பணமாக அதாவது கரன்சி நோட்டுகளாகப் பரிணமித்தன.

ஐரோப்பிய நாடுகளைக் குறிப்பாக ஆங்கில நாடான பிரிட்டனையும் அந்நாட்டின் கரன்சி நோட்டு பவுனையும் மையமாகக்கொண்டு பணத்தின் பரிணாமத்தை இந்நூலில் ஆசிரியர், வரலாற்று உண்மைகளை ஆதாரமாகக் கொண்டு ஆழ்ந்த ஆய்வு செய்து விவரித்துள்ளார்.

காலப்போக்கில் நிகழ்ந்த பொருளாதார நிகழ்வுகளால் உருவான பணம், ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும் உலகப் பொருளாதாரமும் ஏற்றம் காண்பதற்கு எப்படியெல்லாம் செயல்பட்டது என்பதையும் முதலாளித்துவ சமுதாயத்தில் வர்த்தகச் சூதாட்டம், பங்குச் சந்தைச் சூதாட்டம் போன்றவற்றில் பணம் நடத்தும் கைங்கரியங்களையும் விளக்கியுள்ளார். தேவை மற்றும் விநியோகத்தின் ஏற்ற இறக்கத்தில் பணத்தின் பங்கு, உலோக நாணயம், கரன்சி நோட்டுகளாகப் பரிணமித்த பின்பு ஏற்பட்ட விளைவுகள், சர்வதேச வர்த்தகம், அதில் அந்தந்த நாடுகளின் பணங்களுக்கிடையேயான பரிவர்த்தனை, வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகளில் பணத்தின் சுழற்சி, பணவீக்கம் மற்றும் பணப்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பணச் செயல்பாடுகளையும் எளிமையாக அதே நேரத்தில் ஆழமாக நூலாசிரியர் எடுத்துரைத்துள்ளார். தொழிலாளி பெறும் கூலிக்கான வேலை நேரத்தை விட கூடுதலாக உழைப்பதன் மூலம் கிடைக்கும் உபரிமதிப்பைக் கொண்டு முதலாளி தனது மூலதனத்தை பெருக்கிக்கொள்வதையும் எளிமைப்படுத்திக் கூறியுள்ளார்.

இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் தங்கம், வெள்ளி, செப்பு, பித்தளை ஆகிய உலோக நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன என்பதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உலோக நாணயங்கள் நிரூபித்துள்ளன. அதுமட்டுமின்றி, தமிழகத்தின் பட்டு, வாசனைப் பொருட்கள் கிரேக்கம், ரோம் ஆகிய நாடுகளில் விற்று அங்கிருந்து கொண்டு வரப்பட்ட அந்நாடுகளின் தங்க நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

படிக்க:
நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் வாட்சப் வதந்திகள் !
பாஜக-வுக்கு ரஃபேல் ஊழல் என்றால் அதிமுக-வுக்கு வைர ஊழல்

பிரிட்டிஷ் காலனி ஆட்சி காலத்தில்தான் இந்தியாவில் கரன்சி நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன, இன்று கறுப்புப் பணம், கள்ளப் பணம், லஞ்சப் பணம் போன்ற ஊரறிந்த ரகசிய வேடங்களைத் தரிக்கும் இந்தப் பணத்தின் அனுபவத்தால் உருவான “பணம் பாதாளம் வரை பாயும்”, “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே” போன்ற புதுமொழிகள் முதலாளித்துவ முறையின் ஈவிரக்கமற்ற தன்மைகளை அம்பலப் படுத்துகின்றன.

எனவே, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் உருவான பணம் என்ற முறை கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் என்பதையும் நூலின் கடைசிப் பகுதியில் ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்… (நூலின் இரண்டாம் பதிப்புக்கான பதிப்புரையிலிருந்து)

நூல்:பணம்
ஆசிரியர்: எமிலி பேர்ன்ஸ்
தமிழில்: வெ.ராமசாமி

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி: 044 – 2635 9906 / 2625 1968

பக்கங்கள்: 132
விலை: ரூ 60.00 (இரண்டாம் பதிப்பு)

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: noolulagam | panuval | commonfolks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க