யத்த ஆடைத் துறையில் 20 ஆண்டுகளாக மஞ்சுளா பணிபுரிந்து வருகிறார். துணிகளைப் பிரித்துக் கொடுப்பது, சில பகுதிகளை தைத்துக் கொடுப்பதாக தொடங்கியது அவரது வேலை. இன்று பெங்களூருவில் பீன்யா தொழிற்பேட்டையில் தரம் சரிபார்ப்பவராக பணியாற்றுகிறார்.

ரூ. 8,300 ஊதியத்தை கொண்டு என்னால் வாடகையும் கொடுக்க முடியவில்லை அன்றாட வாழ்க்கை தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியவில்லை என்கிறார் அவர். குறைந்தபட்சமாக ரூ. 11,000 ரூபாய் எனக்கு கொடுக்க வேண்டும். ஆனால் என்னுடைய ஊதியத்தை அவர்கள் உயர்த்தவில்லை என்று அவர் கூறுகிறார்.

உலகத் தொழிலாளர் நாளான மே 1 அன்று மஞ்சுளாவைப் போன்ற ஆயத்த ஆடைத்தொழிலாளர்கள், அரசாங்கத்தின் செயலின்மையை அம்பலப்படுத்தவும் குறைந்த அளவு ஊதியத்தை வழங்க கோரியும் பேரணி – பொது கூட்டத்தை நடத்தினர்.

அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த அளவு ஊதியமாக ரூ. 11,587 வழங்குமாறு மாநில அரசாங்கத்தின் வரைவு அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. இதை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஆயத்த ஆடை தொழிலாளர் சங்கமும் இந்திய தொழிலாளர் சங்கமும் (Hind Mazdoor Sabha) ஆயத்த ஆடை தொழிலாளர் பேரணியை நடத்தினர். மேலும் இந்த அடிப்படையில் 2018 – 19 ஆண்டிற்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்தியா முழுவதும் உள்ள ஆஷா – கிராமப்புற மருத்துவ பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் என அனைவருக்கும் குறைந்த அளவு ஊதியமாக ரூ. 18,000 அளிக்க வேண்டும் என்பதே கர்நாடகா அரசாங்கத்திடம் அவர்களது நீண்ட கால கோரிக்கை.

20 ஆலைகளிலிருந்து 1000 தொழிலாளர்களாவது பேரணியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக ஆயத்த ஆடை தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.சரோஜா கூறினார். பீன்யா தொழிற்பேட்டை, கனகபுரா மற்றும் மைசூரிலிருந்தும் கூட அவர்கள் வருகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

நிறுவனங்களின் எதிர்வினை :

கர்நாடகாவின் குறைந்த அளவு ஊதிய வழங்கல் சட்டத்தின்படி ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையாவது ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு முறை கர்நாடக அரசு ஊதிய உயர்வை வெளியிட்ட போதும் அது தங்களுக்கு உகந்ததல்ல என்று முதலாளிகள் எதிர்ப்பதால் அரசாங்கம் பின்வாங்கி விடுகிறது.

ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்த கோரி ஆயத்த ஆடை தொழிலாளர்கள் நீதிமன்றங்களுக்கும் நடந்திருக்கின்றனர். பெங்களூருவில் குறைந்தது 1,200 ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களானது இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலும் பணிபுரிவது பெண்கள் தான். அவர்களில் 70 விழுக்காட்டிற்கும் மேல் திறன் குறைந்த தொழிலாளர்களாக உள்ளனர்.

படிக்க:
பெண் தொழிலாளிகளின் மே தினம் 2016 – படங்கள் !
♦ அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கிய போராட்டங்கள்

திறன் உள்ள தொழிலாளர்களுக்கு ரூ.14,000மும், திறன் குறைந்த தொழிலாளர்களுக்கு ரூ. 11,500  சொச்சமும் குறைந்த அளவு ஊதியமாக வழங்க 2018, பிப்ரவரி மாதத்தில் தொழிலாளர் ஆணையம் வரைவு அறிக்கையை வெளியிட்டது.

எங்களுக்கு அது காட்டுப்படியாகாது என்று மீண்டுமொருமுறை நிறுவனங்கள் கூறிவிட்டதால் இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று சரோஜா கூறினார்.

வேறு முயற்சி :

விரைவிலேயே தொழிலாளர் ஆணையமும் தன்னுடைய அறிவிப்பை திரும்ப பெற்றுக்கொண்டது. வரைவு அறிவிப்பை வெளியிட்டு பங்குதாரர்களிடம் கருத்து கேட்பதற்கு பதிலாக அரசாங்கமே புதிய குழுவை உருவாக்கி குறைந்த அளவு ஊதிய சட்டத்தின் வேறொரு பிரிவின் கீழ் ஊதிய உயர்வு பற்றி தனக்கு அறிவுறுத்தலாம் என்று அது பல்டி அடித்தது.

அதன் பின்னர் ஆயத்த ஆடை நிறுவனங்கள் , அரசு தரப்பு மற்றும் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் தரப்பு பிரதிநிதிகளைக் கொண்ட முத்தரப்பு குழு ஒன்றை அமைக்க அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது என்று தொழிலாளர் ஆணையத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆனால் அரசாங்கத்தால் ஒரு ஆண்டாக எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை என்று ஆயத்த ஆடை தொழிலாளர் சங்கம் குறிப்பிட்டிருக்கிறது. கடந்த ஆண்டு மே மாத சட்ட மன்ற தேர்தலைத் தொடர்ந்து தற்போதைய நாடாளுமன்ற தேர்தல் என்று குழு கூட்டத்தை நடத்தாமல் அரசாங்கம் சாக்குபோக்கு சொல்லிக்கொண்டிருக்கிறது என்று சரோஜா கூறினார்.

ரூ. 8,000-லிருந்து 11,000 ரூபாயாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று வரைவு அறிக்கை வெளிவந்த பின் 2018-19-ம் ஆண்டிற்கான ஊதிய உயர்வு நிலுவைத்தொகை 1,800 கோடி ரூபாய்க்கும் மேலிருப்பதாக தொழிலாளர் சங்கம் கணக்கிடுகிறது.

மே தினப் பேரணியில் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளை கண்டிக்கும் தொழிலாளர்கள்.

அதே நேரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மட்டுமே தொழிலாளர்களுக்கு ஒரே நம்பிக்கையாய் உள்ளது. அரசாங்கத்தின் குறைந்த அளவு ஊதிய உயர்வு வரைவு அறிக்கையை 34 துறைகளுக்கு உறுதி செய்து தீர்ப்பளித்த நீதிமன்றம் 8 வாரங்களுக்குள் 6 விழுக்காடு ஆண்டு வட்டியுடன் நிறுவனங்கள் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று கூறியது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு இப்பொழுதான் வந்திருக்கிறது. சரியான முடிவு எடுப்பது குறித்து பேசி வருகிறோம் என்று தொழிலாளர் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

(நடைமுறையில்) ரூ.18,000 ஊதிய உயர்வை அடைவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதை சரோஜாவும் ஏற்றுக்கொள்கிறார். அரசாங்கம் தருவதாக ஒப்புக்கொண்ட ரூ. 11,500-ஐ ரூபாயையே அவர்களால் கொடுக்க முடியவில்லை என்றால் ரூ. 18,00 ருபாய் கொடுப்பதற்கு வாய்ப்புகள் குறைவு தான் என்று அவர் கூறினார். ஆனால் திறன் உள்ள தொழிலாளர்களுக்கு ரூ. 14,000 கொடுப்பதை அவர்கள் நடைமுறைப்படுத்தினால் ரூ. 18,000-ஐ  நடைமுறைப்படுத்துவதை நோக்கிய முதல் படியாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.

படிக்க:
மோடி அரசுக்கு செருப்படி – பெங்களூரு தொழிலாளிகள் போர் !
♦ தோழர் சீனிவாசராவ் சிலையை உடைத்த தேர்தல் அதிகாரிகள் !

இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் முதலாளிகளின் மனம் வாடும். தொழிலாளர்கள் பாடுபட்டு சேர்த்த சேம நிதியை பண முதலைகள் சூறையாட மோடி கொண்டு வந்த திட்டத்தை முறியடித்ததும் இதே பெங்களூரு ஆயத்த ஆடை தொழிலாளர்களின் போர்குணமிக்க போராட்டம் தான்.

ஒவ்வொரு முறையும் தொழிலாளர்கள் ஒன்றுட்டு கோரிக்கைக்கு போராட முன்வரும் போதும் அரசாங்கமும் நீதிமன்றங்களும் ஏதாச்சும் செய்வது போல பாவ்லா செய்து போராட்டங்களை நீர்த்து போக செய்கின்றன. சரியான தலைமையும், தோழமையும் இல்லாத போராட்டங்கள் ஒன்று வன்முறைக்குள்ளாகும் அல்லது நீர்த்து போகும். ஆயத்த ஆடை தொழிலாளர்களின் போராட்டத்தில் கருத்திலும் காலத்திலும் பங்கு பெறுவோம்.


கட்டுரையாளர்: நயன்தாரா நாராயணன்
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : ஸ்க்ரால்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க