தனியார் மயமாகும் இந்திய இராணுவத் தளவாடங்கள் | ராகுல் வர்மன் – தமிழில் : திலகன்

ண்டை நாடுகளுடன் பெரிதாகப் போர் என்று எதுவும் நடைபெறாத போதிலும் இராணுவத்துக்கு என்று மைய அரசு ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்டத்தில் பெரும்தொகை ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் மைய அரசின் இச்செயலை கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் விவாதத்தை ஏற்படுத்தும் நூல்கள் வெளிவர வேண்டிய தேவை உள்ளது.

ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் “தேசப்” பாதுகாப்புக்கு ஒதுக்கீடு என்று இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு உயர்ந்து கொண்டே செல்லும் போது கல்வி, மருத்துவம், உணவு ஆகியவற்றுக்கான மானியம் குறைந்து கொண்டே உள்ளது.

மேலும் இந்திய கார்ப்பரேட் கொள்ளையர்களில் ஒருவரான விஜயமல்லையா ரூ. 9000 கோடிகள் கடன் பெற்று வங்கிப் பணத்தை (மக்களின் பணத்தை) சுருட்டிக் கொண்டு நாட்டைவிட்டே தப்பியபோது, இங்குள்ள முப்படைகளால் என்ன பயன் விளைந்தது ?

விவசாயம் நலிவடைந்து வாங்கிய கடனைக் கட்ட வழி தெரியாமல் இலட்சக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வரும் இந்நாட்டில்தான் இவ்வாறான நிலை! பெருமுதலாளிகள் திரும்ப செலுத்தாதக் கடன் தொகை ரூ.4 லட்சம் கோடிகளை எட்டி விட்டதால் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ஆட்டங் கண்டு வருகின்றன.

இது மட்டுமின்றி நாள்தோறும் ரூ.240 கோடிகள் கறுப்புப் பணமாகவே நாட்டை விட்டு வெளியேறிச் செல்கிறதாம்! கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள் இலட்சக்கணக்கான டன் இரும்புக் கனிமத்தை வெட்டி கப்பலில் ஏற்றினார்கள் என்றால், இங்குள்ள பி.ஆர்.பி. -யோ ஒரு இலட்சம் கோடிகள் வரை கிரானைட்டை வெட்டிக் கடத்தியுள்ளார். ஆனால் இவற்றை எல்லாம் தடுக்கும் திறனற்ற முப்படைகளையும் வைத்துள்ள இந்நாட்டின் ஆட்சியாளர்கள்தான் ஆளே வசிக்க முடியாத சியாச்சின் பனிப்பகுதியைக் காப்பாற்ற பல ஆயிரம் கோடிகளை விரயம் செய்வதோடு அப்பாவி இராணுவ வீரர்களையும் பாரத மாதாவுக்கு பலிகடா வாக்குகிறார்கள்… (நூலின் பதிப்புரையிலிருந்து)

இவ்வாறு நிகழ்காலத்தில் நாட்டுக்காக – நாட்டு மக்கள் நலனுக்காக, தேசப்பாதுகாப்புக்காக, இராணுவத்துக்காக, வேலை வாய்ப்புக்காக என்று சொல்லி புனிதமான ஒளிவட்டம் போட்டுக் காட்டப்படும் பாதுகாப்புத்துறைத் தொடர்பான ஆட்சியாளர்களின் திட்டங்களைப் பற்றி மக்களிடம் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது அனைத்து முற்போக்கு, இடதுசாரி அமைப்புகள் முன்பு மாபெரும் சவாலாக உள்ளது. ஒருவேளை அவை இவ்வாறான நிகழ்வுகளைக் கண்டும் காணாமலும் இருந்து விடுகின்றன என்றால் மைய அரசாங்கத்துக்கு மறைமுகமாக ஆதரவு வழங்குவதுபோல ஆகிவிடும்.

படிக்க:
தோழர் சீனிவாசராவ் சிலையை உடைத்த தேர்தல் அதிகாரிகள் !
மே தின சிறப்புக் கதை : சிலந்தியும் ஈயும் !

இந்நிலையில் மும்பையில் இயங்கி வரும் அரசியல் பொருளாதார ஆய்வு மையம் (Research Unit For Political Economy) என்ற நிறுவனமானது நமது இக்கவலையைப் போக்கும் வகையில் ‘இந்தியப் பொருளாதாரத்தின் அம்சங்கள்’ (Aspect of India’s Economy) என்ற தமது ஆய்வு இதழில் பேராசிரியர் ராகுல் வர்மன் அவர்களின் இக்கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதன் மொழியாக்கமாகவே இந்நூல். (நூலின் பதிப்புரையிலிருந்து)

***

ந்தியாவின் ஆயுதத் தளவாடத் தொழில் பற்றி ஒரு கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறோம். ஆயுத உற்பத்தியில் அந்நிய முதலீட்டை, “பாதுகாப்புத் துறைக்காக இந்தியாவில் தயாரிப்போம்” என்ற திட்டத்தை மோடியின் அரசாங்கம் அறிவித்தது. திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதத்தை இந்தியாவிலேயே உற்பத்திச் செய்ய வேண்டும் என்று கூட அது அதிகாரபூர்வமாகக் கூறியுள்ளது. இறக்குமதிகளின் இடத்துக்குப் பதிலாக இது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் என்று ஊகிக்கிறது.

உள்நாட்டு உற்பத்திக்காக என்று உரிமைப் பாராட்டுவது. மோசடியானது என்பது இக்கட்டுரைகளில் வாதிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ஆயுதத் தளவாட உற்பத்தியாளர்கள் தமது சொந்த நாடுகளுடன் நெருக்கமாகவும், மூலஉத்தி ரீதியாகவும் முறைப்படுத்தப்பட்டுள்ளனர். தமது அறிவை பேராசைத்தனத்துடன் காத்து வருகிறார்கள். இதனால் ஒரு சுதந்திரமான உள்நாட்டுத் தொழில் மற்றும் உள்நாட்டுத் தொழில்நுட்ப அடித்தளமின்றி சுதேசி மயப்படுத்துவது நடைபெறாது. முன்பு பொதுத்துறை இராணுவ நிறுவனங்கள் உள்நாட்டு இளைய பங்காளிகளாக அந்நிய நிறுவனங்களுக்கு இருந்ததென்றால் தற்போது அந்தப் பாத்திரத்தைத் தனியார்துறை நிறுவனங்கள் வகிக்கும் என்பதுதான் “பாதுகாப்புத் துறைக்காக இந்தியாவில் தயாரிப்போம்” என்பதன் மெய்யான முக்கியத்துவமாக உள்ளது.

இதன் காரணமாகத்தான் இந்தியப் பெருந்தொழிலதிபர்கள் துள்ளிக் குதிக்கிறார்கள். இந்தியத் தனியார்துறை கூட்டாளிகள் தொழில்நுட்ப அறிவுப் பரிமாற்றத்தைக் கோரி அழுத்தம் தராமல் ஓர் இலாபப் பங்கோடு (ஒரு சிறுவீத அளவாக இருந்தாலும்) மகிழ்வார்கள் என்பதால் அந்நிய நிறுவனங்களும் கூட இத்திட்டத்தை வரவேற்கின்றன. இதுதான் இந்தியப் பெருந்தொழில் நிறுவனங்களின் தன்மையாக உள்ளது. ஏற்கெனவே மிகவும் கீழ்மட்டத்தில் இருக்கும் சுதேசியமயத்தை இன்னும் குறைப்ப தைத்தான் “இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்” இவ்வாறு முன்னறிவிக்கிறது.

மார்ச் மாதத்தில் இந்தக் கட்டுரை இணையத்தில் வெளியான உடனே, அந்த மதிப்பீடு உறுதி செய்யப்பட்டது. முன்னதாக, இந்திய அரசாங்கமானது போட்டி ஏலம் மற்றும் பேரத்தின் ஒரு நெடிய நிகழ்வுப் போக்குக்குப் பின்னர் பிரெஞ்சு நிறுவனமான டசால்டின் ரஃபேல் போர் விமானத்துக்கு தனது நடுத்தர பன்முக போர் விமானத்துக்காக (Medium Multi Role Combat Aouraft – MMRCA) ஒரு மாபெரும் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் வழங்கக் கேட்கப்பட்டுள்ள மொத்த 126 விமானங்களில் 108 தயாரிக்கப்பட வேண்டும் என்று முன்வரை செய்யப்பட்டுள்ளது. 2012 -ஆம் ஆண்டில் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்ட நிலையில் அதை நிறைவேற்றாமல் டசால்ட் இழுத்தடித்தது. இந்திய விமானப் படையில் உள்ள போர் விமானப் படையின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையிலும் கூட இவ்வாறு அந்த டசால்ட் நிறுவனம் ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் இழுத்தடித்து வந்தது.

படிக்க:
ரஃபேல் ஊழல் நூல் பறிமுதல் : மோடிக்கு ஆதரவாக தேர்தல் கமிசனின் நடவடிக்கை !
♦ இராணுவத் தளவாட தொழிற்சாலையில் இருப்பது தேசபக்தியா, ஊழலா ?

2015 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மோடி தனது பாரீசு பயணத்தின் போது முந்தைய ஒப்பந்தத்தை ஒதுக்கிவிட்டு, 36 ரஃபேல் போர் விமானங்களை அளிப்பதற்காக அரசாங்கங்களுக் கிடையில் ஓர் உடன்படிக்கையைப் புதியதாக செய்து கொள்கிறார். அவற்றை பிரான்ஸ் நாட்டிலேயே தயாரிப்பதாக உடன்படிக்கை செய்து கொள்ளப்படுகிறது. இப்புதிய உடன்படிக்கையின் விதிமுறைகள் முற்றிலும் திரைமறைவிலேயே உள்ளன.

விதிமுறைகளை இனிமேல் தான் பேசிக் கொள்ள வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சரான பரிக்கர் போகிற போக்கில் அள்ளிவிட்டார். ரஃபேல் விமானங்கள் ஒருவேளை இந்தியாவில் தான் தயாரிக்கப்பட வேண்டு மெனில், HAL தவிர்த்து ஓர் இந்தியக் கூட்டாளியைப் பரிசளிப்போம் என்றும் கூட அவர் சொன்னார். அம்பானி சகோதரர்களுள் எவரோ ஒருவர் இதில் ஈடுபடுத்தப்படலாம் என்று அறிகுறிகள் தெரிகின்றன. (நூலின் ஆசிரியர் உரையிலிருந்து)

நூல்: தனியார் மயமாகும் இந்திய இராணுவத் தளவாடங்கள்
ஆசிரியர்: ராகுல் வர்மன்
தமிழில்: திலகன்

வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்,
எண் : 5/ 1 ஏ, இரண்டாவது தெரு,நடேசன் நகர்,
இராமாபுரம், சென்னை – 600 089.
கைபேசி: 98417 75112.

பக்கங்கள்: 88
விலை: ரூ 60.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

கீழைக்காற்று விற்பனையகத்தின் புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

இணையத்தில் வாங்க: Marina Books 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க