க்களினம் சம்பந்தமான ஆராய்ச்சிக்குப் பயன்படும் இந்நூல் அரை நூற்றாண்டுக்கு முன் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நூல்களைத் தழுவிச் சுருக்கி எழுதப்பட்டதாகும். தென்னிந்திய மக்கள் எல்லோருக்கும் பொதுவான சில பழக்க வழக்கங்கள் உள்ளன. அவ்வகை வழக்கங்களை விரித்துக்கூறாது ஒவ்வொரு கூட்டத்தினரிடையும் சிறப்பாகக் காணப்படுகின்றவற்றை விரித்துக் கூறியுள்ளோம். மேல்நாட்டுக்கல்வி, நாகரிகம் என்பவற்றின் நுழைவால் விரைந்து மறைந்து கொண்டுவரும் தென்னாட்டு மக்களின் பழைய பழக்க வழக்கங்களை அறிந்து கொள்வதற்கு இந்நூல் வாய்ப்பளிக்கும். அரை நூற்றாண்டுக்குள் இந்நூலிற் கூறப்பட்டுள்ள பழக்கவழக்கங்கள் பல மறைந்துவிட்டன; சில மறைந்துகொண்டு வருகின்றன. (நூலாசிரியரின் குறிப்பிலிருந்து)

ஹெக்கல் படைப்பின் வரலாறு என்னும் நூலில் இப்பூமியின் தரை, நீர்ப்பரப்புக்கள் தொடர்ந்து மாற்றமடைந்து வந்த தன்மைகளை ஆராய்ந்து கூறியுள்ளார். அவர் கூற்று வருமாறு; ”இந்துமாக்கடல் முன் ஒரு பூகண்டமாகவிருந்தது. அது சந்தாத்தீவுகள் முதல் (ஆசியாவின் தென்கரை வழியாக) ஆப்பிரிக்காவின் கிழக்குக்கரை வரையில் பரந்திருந்தது. முற்காலத்தில் மக்களின் பிறப்பிடமாக விளங்கிய இத்தரைக்கு இஸ்கிளாத்தர் இலெமூரியா எனப் பெயரிட்டுள்ளார். இப்பெயர் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த குரங்கு போன்ற மக்கள் காரணமாக இடப்பட்டது. இலெமூர் என்பதற்கு தேவாங்கு என்பது பொருள். இலெமூரியா, மக்களுக்குப் பிறப்பிடமாகவுள்ளது என்னும் பெருமையுடையது. மலாய்த் தீவுக்கூட்டங்கள் முற்காலத்தில் இரு பிரிவுகளாகவிருந்தனவென்று வலேசு என்னும் இயற்கை வரலாற்றியலார் ஆராய்ந்து கூறியுள்ளார்.”

மலாய்த் தீவிலும் தென்னிந்தியாவிலும் வாழும் மக்கள் சிலரின் பழக்க வழக்கங்கள் ஒரே வகையாகவுள்ளன. போர்ணியோத் தீவில் வாழும் (இ)டைக்கர் மரமேறும் வகையும் தென்னிந்தியாவில் ஆனைமலையில் வாழும் காடர் மரமேறும் வகையும் ஒரேவகையாகவுள்ளன. காடரும் திருவிதாங்கூர் மலை வேடரும் தமது முன்பற்களை உடைத்து அல்லது அராவிக் கூராக்கிக்கொள்வர். ஆண்கள் பதினெட்டு வயதடையும் போதும் பெண்கள் பத்து வயதடையும்போது இவ்வாறு செய்து கொள்கிறார்கள். மலாயாவில் யக்குன் என்னும் மக்கள் இவ்வாறு செய்து கொள்கின்றார்கள்.

… இந்தியாவில் மிகப் பழங்காலத்தில் மூன்று இன மக்கள் வாழ்ந்தார்கள். (1) மத்தியதரை மக்கள். இவர்களே திராவிட இனத்தவர் எனப்படுவோர். (2) நிகரிட்டோ மக்கள் (3) ஆதி ஆஸ்திரேலோயிட்டு மக்கள் நிகிரிட்டோ வகை. தென்னிந்திய மலைச் சாதியினராகிய இருளர், காடர்களிடையே காணப்படுகின்றது. ஆதி ஆஸ்திரேலோயிட்டு வகை முண்டா, சாந்தால், கொல் முதலிய மொழியகளைப் பேசும் மக்களிடையே காணப்படுகின்றது. இம்மக்கள் ஆரியரின் வருகைக்குமுன் வடமேற்குத் திசையினின்று வந்தவர்களாகலாமென்று ஆராய்ச்சியாளர் கூறுவர். இவ்வினத்தினரையே மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் கொல்லாரியர் எனக் கூறியுள்ளார்கள். ஆதி ஆஸ்திரேலோயிட்டு இனத்தவர்களே மலாய்த் தீவுகள், பர்மா, சயாம் முதலிய நாடுகளின் ஆதி மக்களாவர். இவர்கள் எப்படி இந்தியாவை அடைந்தார்கள் என்று கூற முடியவில்லை. ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் நில இணைப்பு இருந்த காலத்தில் இவர்கள் இந்தியாவை அடைந்திருக்கலாமெனச் சிலர் கூறுவர். இந்திய மக்கள் (People of India) என்னும் நூல் எழுதிய ஹெர்பெட் இரிஸ்லி இந்தியாவில் தொடக்கத்தில் திராவிட மக்கள் வாழ்ந்தார்கள் என்றும், பின்பு பல்வேறு இனத்தவர்கள் இம்மக்களோடு வந்து கலந்தார்கள் என்றும் கொண்டு இந்திய இனத்தவர்களை, சித்திய திராவிடர், ஆரிய திராவிடர், மல்கோலிய திராவிடர், திராவிடர் முதலிய பிரிவுகளாகப் பிரித்தார்.

… ”தென்னிந்திய குலங்களும் குடிகளும்” என்னும் இந்நூல் இந்திய மக்கட் கூட்டத்தினரின் பழக்க வழக்கங்களை பிற மக்கட் கூட்டத்தினரின் பழக்க வழக்கங்களோடு ஒப்பிட்டு நோக்கி இன ஒற்றுமை வேற்றுமை காண்பதற்கு உதவியளிக்கும். (நூலிலிருந்து பக்.9-11)

படிக்க:
தமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி
கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் !

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்; வட இந்தியக் குலங்களும் குடிகளும்; இலங்கைத் தமிழர் பழக்கவழக்கங்கள், திருமணம், மரணம், புத்தளம் கரையார், அணிவகை, ஆடவர் அணிபவை, பெண்களணிகள், இலங்கைத் தமிழரிடையே காணப்படும் சாதிகள், மாட்டுக்குறிசுடும் அடையாளங்கள், சாதிகளின் பட்டப்பெயர்… ஆகிய உட்தலைப்புகளில் விவரிக்கிறார்.

அம்பட்டன்: தமிழ்நாட்டில் அம்பட்டப் பெண்கள் மருத்துவச்சி வேலை பார்ப்பர். செகந்நாத ஆலயத்தில் அம்பட்டர் சமைக்கும் உணவுக்குத் தீட்டு இல்லை. அக்கோயிலில் பூசை செய்யும் பூசாரி அம்பட்டன். அவன் சமைத்துக் கடவுளுக்குப் படைத்த உணவைப் பிராமணரும் அமுது கொள்வர்… அம்பட்டரின் சாதித்தலைவன் பெரியதனக்காரன் எனப்படுவான். மயிர்வினை செய்தல், வைத்தியம் பார்த்தல், வாத்தியமொலித்தல் என்னும் மூன்று தொழில்கள் அம்பட்டருக்குரியன. பண்டிதன், பரியாரி, குடிமகன், நாசுவன், மயிர்வினைஞன் என்பன அம்பட்டனைக் குறிக்க வழங்கும் பெயர்கள்.

நன்றி: பிபிசி

ஆண்டி : ஆண்டிகள் தமிழ் வகுப்பைச் சேர்ந்த பிச்சைக்காரர். இவர்கள் பண்டாரங்களிலும் தாழ்ந்தோர். கோயில்களிலும் மடங்களிலும் வேலை செய்வோர் முறையே கோவிலாண்டிகள் மட ஆண்டிகள் எனப்படுவர்… ஆண்டிகளுள் கோமண ஆண்டி, இலிங்கதாரி, முடவாண்டி, பஞ்சத்துக்காண்டி எனப் பல பிரிவுகளுண்டு. இப்பிரிவுகள் பஞ்சத்துக்காண்டி, பரம்பரை ஆண்டி என்னும் இரு பிரிவுகளிலடங்கும்…

ஈழவர் : ஈழவர், தீயர் என்போர் மலையாளர் கொச்சி என்னும் இடங்களிற் காணப்படுகின்றனர். மத்திய தீருவிதாங்கூரின் தென்புறங்களில் இவர்கள் ஈழவர் என்றும், வட, விதாங்கூர்ச் சனத்தொகையில் 17 சதத்தினர் இவர்களாவர். யாழ்ப்பாணம், ஈழம் என்னும் பெயர் பெற்றிருந்ததெனத் தெரிகிறது. ஈழவர் அங்கிருந்து வந்தார்கள் எனக் கருதப்படுகின்றனர். சேரவர் என்பது சேவுகர் என்பதன் திரிபு. மலையாளத்தில் வழங்கும் கப்பற் பாட்டுகளில் சேவுகர் என்னும் பெயர் காணப்படுகின்றது. தென் திருவிதாங்கூரில் வாழும் ஈழவர் முதலியார் எனப்படுவர். புலையர் அவர்களை மூத்த தம்பிரான் என அழைப்பர்…

குறும்பர் : ஆட்டைக் குறிக்கும் குறு என்னும் கன்னடச் சொல்லிலிருந்து இப்பெயர் உண்டானதென்று கருத இடமுண்டு. குறு என்பது கொறி (ஆடு) என்னுஞ்சொல்லின் திரிபு. இவர்களின் தலைமைக்காரன் கொடு எனப்படுவான்… (நூலிலிருந்து)

நூல் : தென்னிந்திய குலங்களும் குடிகளும்
ஆசிரியர் : ந.சி. கந்தையா பிள்ளை

வெளியீடு : சந்தியா பதிப்பகம்,
புதிய எண் : 77, 53-வது தெரு, 9-வது அவென்யூ,
அசோக் நகர், சென்னை – 600 083.
தொலைபேசி எண்: 044 – 2489 6979.
மின்னஞ்சல் : sandhyapathippagam@gmail.com

பக்கங்கள்: 136
விலை: ரூ 100.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

இணையத்தில் வாங்க : sandhya publications | noolulagam | commonfolks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க