“மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ”, என்கிற முழக்கத்தை முன்வைத்து 25.7.2019 மாலை 5.30 மணிக்கு மதுரையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஒருங்கிணைத்து அரங்க கூட்டம் நடைபெறுகிறது. அனைவரும் வருக..!

மதுரையில் அரங்கக் கூட்டம்

நாள் : 25 ஜூலை, 2019 வியாழக்கிழமை
நேரம் : மாலை 5.30 மணி
இடம் : இராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி (பி.டி.ஆர் தேனீர் கடை அருகில்), மதுரை

தலைமை :

தோழர் சினேகா, பு.மா.இ.மு., மதுரை

உரைகள் :

திரு சிவா, ஆசிரியர், மதுரை.

திரு சரவணன், ஆசிரியர், மதுரை,

பேராசிரியர் அ. சீனிவாசன், மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.

தோழர் த. கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு., தமிழ்நாடு.

நன்றியுரை :

தோழர் ஆனந்த், பு.மா.இ.மு., மதுரை.

மோடி அரசு திணிக்கும் தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு இயக்கத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்….!

*****

‘தேசிய கல்விக் கொள்கையை’ இது நம் நாட்டின் பெரும்பான்மை மாணவர்களுக்கான கல்விக் கொள்கையல்ல, ஒட்டுமொத்த கல்வித்துறையையும் கார்ப்பரேட்டுகள் சூறையாட வழி வகுக்கும் நாசகாரக் கொள்கை.

அன்று இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழக மாணவர்கள் கட்டியமைத்த போராட்டம்தான் இந்தி ஆதிக்கத்தை ஒழித்தது.

இன்று, கார்ப்பரேட்டுகள், காவிகளின் நலனுக்காக மோடி அரசு திணிக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக வலுவான போராட்டத்தை கட்டியமைப்போம். வரைவு அறிக்கையை மொத்தமாக நிராகரிப்போம். எந்த வடிவத்தில் வந்தாலும் மோதி வீழ்த்துவோம். இதற்கு தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் ஓர் அமைப்பாகத் திரள்வோம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அன்பார்ந்த மாணவர்களே, ஆசிரியர்களே !

3, 5, 8 ஆம் வகுப்புகளுக்கும் தேசிய அளவிலான பொதுத் தேர்வாம்! இது ஏழை, கிராமப்புற மாணவர்களை வடிகட்டும் சதித்திட்டம்!

3 – வது முதலே தச்சு வேலை, தோட்ட வேலை, கட்டிட வேலை, பானை செய்தல் போன்ற தொழில்கள் ஒரு படிப்பாக கற்றுத்தரப்படுமாம்! காசு இல்லாதவனுக்கு கல்வி எதற்கு என்கிறார் மோடி!

ஆரம்பக் கல்வி முதலே மும்மொழி திட்டம் கட் டாயமாம்! தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தேசிய இனங்களின் மொழியை ஒழித்துக்கட்ட இந்தி – சமஸ்கிருதம் திணிப்பு!

முன்பருவக் கல்வி முதல் (அங்கன்வாடி) மாணவர்களுக்கு பஞ்சதந்திரக் கதைகள், ஜாதகக் கதைகள், கீதா உபதேசம் ஆகியவற்றைக் கற்றுத்தர வேண்டுமாம்! இது அறிவியலுக்கு புறம்பாக, பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் மூடத்தனம்!

பள்ளிகளில் நீதி நெறி ஒழுக்கத்தை கற்றுத் தர உள்ளூர் கல்விப் பயிற்சியாளர்கள், மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டுமாம்! பள்ளிக்கூடங்களை ஆர்.எஸ்.எஸ் ஆக்கிரமிப்பதற்கான திட்டம்!

தேசிய அளவில் ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு – இது மாநிலங்களின் கல்வி உரிமைக்கு வைக்கும் வேட்டு!

யூ.ஜி.சி, எம்.சி.ஐ போன்ற உயர்க் கல்வி நிறுவனங்களை கலைத்துவிட்டு, உயர் கல்வி ஆணையம், ஆராய்ச்சி கல்விக்கான அறக்கட்டளை, உயர்க்கல்வி நிதிக்கான குழு ஆகியவை கள் உருவாக்கப்படுமாம். ஒட்டுமொத்த உயர்க் கல்வியையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் மெகா திட்டம்!

மருத்துவ கல்விக்கு மட்டுமல்ல, கலை அறிவியல் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வாம்! ஏழைகளுக்கு இனி உயர்க் கல்வி இல்லை – இது மோடி அரசு உருவாக்கும் புதிய மனுநீதி!

‘இந்தியாவில் படியுங்கள்’ மோடி அரசின் புதிய திட்டம். ஆனால் ஏழைகள் படிக்கக் கூடாது இது தான் சர்வதேச முதலாளிகளின் சட்டம்.

மூக்ஸ் போன்ற ஆன்லைன் படிப்புகள், வெளி நாட்டு பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டு மாணவர்களுக்கு தாராள அனுமதி! அரசு கல்லூரி, பல்கலைக்கழகங்கள் தனியார்மயம். சொந்த நாட்டு மாணவர்களின் கல்வி கற்கும் உரிமைப் பறிப்பு.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் தன்னாட்சியாம்! இட ஒதுக்கீடு – சமூக நீதி பறிப்பு, மாணவர் சங்கம் ஆசிரியர் சங்கங்கள் அமைக்கத் தடை!

ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு நிரந்தர வேலை, சம்பளம், ஓய்வூதியம் என்பதெல்லாம் இனி இல்லை. அனைவரும் தற்காலிக ஊழியர்கள். திறமை அடிப்படையில் வேலை நீட்டிப்பு, சம்பளம்.

இதுதான் மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை – 2019.

தகவல் :
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
மதுரை, தொடர்புக்கு : 82200 60452.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க