ரசியல் சட்டப் பிரிவு 19 வழங்கும் கருத்துரிமையைப் பாதுகாக்க வேண்டிய நீதிமன்றங்கள், போலீசின் அதிகாரம் குடிமக்களின் கருத்துரிமையை காட்டிலும் மேலானது என்ற கோணத்தில்தான் சமீபகாலமாகத் தீர்ப்புகளை வழங்குகின்றன.

ஹைட்ரோ கார்பன் போன்ற வளர்ச்சித் திட்டங்களை ஆதரித்துக் கருத்து தெரிவிப்பதோடு நில்லாமல், அதனை எதிர்த்துக் கருத்து தெரிவிப்போரை நாட்டின் முன்னேற்றத்துக்கு எதிரானவர்களாகவும் சித்தரித்து சில நீதிபதிகள் கருத்து கூறுகின்றனர். ஒரு மாற்றுக் கருத்து என்ற முறையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கருத்துரிமையைக்கூட நிராகரிக்கின்றனர். தூத்துக்குடி தியாகிகள் நினைவஞ்சலிக் கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்ததை அப்படியே வழிமொழிகின்றனர்.

h-raja-on-periyarபழனி கோயிலில் மோப்ப நாய் பாதுகாப்பு எனச் சமீபத்தில் வந்த செய்தியை விமர்சனம் செய்து பகுத்தறிவாளரான ஒரு பெண் தனது முகநூலில் எழுதியதைத் தொடர்ந்து, அவருக்குத் தொலைபேசியில் கொலை மிரட்டல்கள் வருகின்றன. அவர் மீது இந்து முன்னணியினர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் வழக்குப் பதிவு செய்தது. அவர் முன் பிணை மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த திண்டுக்கல் அமர்வு நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட 66-ஏ பிரிவில் போலீசார் அந்த வழக்கைப் பதிவு செய்திருப்பதே செல்லாது என்று வழக்கறிஞர் கூறியதைக் கணக்கில் கொள்ளவே இல்லை. மாறாக, அந்தப் பெண் முப்பது நாட்களுக்கு பழனி கோயில் வாசலைக் கூட்டிச் சுத்தம் செய்வதாக இருந்தால், முன்பிணை வழங்குவதாகக் கூறியிருக்கிறார்.

முன்பிணைக்கான நிபந்தனையையே தண்டனையாக மாற்றும் இந்த அணுகுமுறையே சட்டவிரோதமானது என்பது ஒருபுறமிருக்க, இந்த நிபந்தனை மதச்சார்பின்மைக்கு எதிரானது எனக் கூறி அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் நிபந்தனையை ஏற்க மறுத்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

உயர் நீதிமன்ற நீதிபதியும் இல்லாத குற்றப் பிரிவில் வழக்கு தொடுத்த போலீசைக் கண்டிக்கவில்லை. மாறாக, பிணைக்கான நிபந்தனையையே தண்டனையாக மாற்றும் அதே கண்ணோட்டத்தில், பழனி மலை மேல் இருக்கும் காவல் நிலையத்தில் அன்றாடம் சென்று கையெழுத்திட்டால் முன்பிணை தருவதாகக் கூறியிருக்கிறார். பெரியாரை எதிர்த்த காரணத்துக்காக எச்.ராஜாவை என்ன பாடு படுத்தினீர்கள் என்றும் வெளிப்படையாகவே நீதிமன்றத்தில் பேசியிருக்கிறார்.

படிக்க:
காஷ்மீர் துண்டாடப்பட்ட நாளின் முதல் பலி – 17 வயது சிறுவன் !
♦ போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம் !

எச். ராஜாவுக்கு ஒரு மாத காலத்திற்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தால்தான் முன்பிணை தருவோம் என்று கூறினால், அது எப்படித் தவறாகுமோ, அப்படித்தான் நீங்கள் ஒரு பகுத்தறிவாளருக்கு விதிக்கும் நிபந்தனையும் தவறானது, அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக்கூடியது என்று வழக்கறிஞர் வாதிட்டதைத் தொடர்ந்து, அந்த நிபந்தனையை நீதிமன்றம் கைவிட்டு இருக்கிறது.

தமிழகத்தில் காவல்துறை மட்டுமின்றி, நீதித்துறையும் மென்மேலும் இந்துத்துவ சார்பாகவும் புதிய தாராளவாத பேரழிவுத் திட்டங்களுக்குச் சார்பாகவும் இவற்றை எதிர்த்துப் போராடுகிற மக்கள் இயக்கங்களுக்கு எதிராகவும் பேசி வருவதை நாம் காண்கிறோம். இந்த நடவடிக்கைகள் தமிழகத்தில் பாரதிய ஜனதாவைக் காலூன்ற வைப்பதற்கான முயற்சியுடன் நேரடியாகத் தொடர்புள்ளவை. இது நீதித்துறையில் தோன்றி வரும் ஒரு புதிய இயல்பு நிலை.

வடமாநிலங்களில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடைபெறுகின்ற கும்பல் தாக்குதல்கள் மற்றும் பசுக் குண்டர்களின் கொலைகள் எங்ஙனம் ஒரு புதிய இயல்பு நிலையாக மாற்றப்பட்டிருக்கின்றனவோ, அது போலத் தமிழகத்தில் இந்தப் புதிய இயல்புநிலை உருவாக்கப்படுகிறது.

இது குறித்து வழக்கறிஞர்கள், அறிவுத்துறையினர் மத்தியில் அதிருப்தியும் குமுறலும் இருந்த போதிலும், இதனை எதிர்த்து நிற்காமல், போராடிக் களைத்தவர்களைப் போல பலர் மவுனம் சாதிக்கின்றனர். பாசிசம் இந்த மவுனத்தின் மீதுதான் மெல்ல ஊர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

– புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க