டெல்லி வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்து 5.11.2019 அன்று கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களை தாக்கிய அரசின் அடியாளான காவல்துறையை கண்டித்து, கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில், வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக போலீஸாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் நேற்று முன்தினம் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்தது. இதன் விளைவாக வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டனர்.

காயமடைந்த வழக்கறிஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பி. கார்கையும் நியமித்தது. 6 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று (05.11.2019) வேலைநிறுத்தம் செய்யப்போவதாக டெல்லி உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன் தெரிவித்தது. இந்நிலையில் நாடு முழுவதிலும் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

படிக்க :
♦ கீழடி அகழாய்வும் அதன் முக்கியத்துவமும் – CCCE அரங்கக்கூட்ட செய்தி – படங்கள்
♦ திருவள்ளுவரை அவமதித்த கா(வி)லி கும்பலை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

இதன் ஒரு பகுதியாக கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகம் முன்பு தங்களது கண்டனக் குரல்களை எழுப்பினர். மேலும் “காவல்துறையினரால் படுகாயமடைந்த வழக்கறிஞர்களுக்கு உரிய நிதி உதவியையும், இந்த சலசலப்புக்கு காரணமாக இருந்த காவல்துறையினரை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை ( protection of advocates act ) அமல்படுத்த வேண்டும்.” என்று மாணவர்கள் தங்களது போராட்டத்தின் வாயிலாக கூறினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதுபோன்ற சம்பவம் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது. இதில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தின் உள்ளே திட்டமிட்டு தாக்கப்பட்டனர். பல விசாரணை கமிஷன்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால் காவல்துறைக்கு எதிராக எந்த ஒரு வழக்கும் பெரும்பாலும் பதிவு செய்யப்படுவதில்லை. விசாரணைக் கமிஷன்கள் மூலமாக எந்த ஒரு தீர்வையும் அடைய முடியாது. இதுபோல சம்பவம் தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கும். இதற்கான ஒரேவழி மாணவர்கள், மக்கள், மற்றும் பல தரப்பினர் காவல்துறையின் அராஜகத்துக்கு எதிராக, அவர்களின் காட்டுமிராண்டி தனத்திற்கு எதிராக போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
கோவை மாவட்டம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க