திகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பதில் இந்திய அளவில் தமிழகம் ஒரு முன்னணி மாநிலமாகவே திகழ்கிறது. தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களை இன்று காலையில் ஐதராபாத் போலீசு சுட்டுக் கொன்றது.

முற்போக்காளர்கள், ஜனநாயகவாதிகள் என பலரும் இந்தப் போலி என்கவுண்டரை எதிர்த்து தங்கள் கருத்தை பதிவு செய்திருக்கின்றனர். அவற்றில் சில இதோ…

Mohana Dharshiny

வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணுக்கான நீதி அந்தப் பெண்ணின் சமூக அந்தஸ்தில் தங்கியிருக்கிறது. அதே போலவே குற்றவாளிக்கான தண்டனையும் அவரின் சமூக அந்தஸ்தில் தான் இருக்கிறது. கேட்க நாதியற்ற அப்பாவிகள் எனில் உடனே தண்டனை கிடைத்துவிடும்.

கத்துவா சிறுமி கோயிலில் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட போது , குற்றவாளியைக் காப்பாற்ற போராட்டம் செய்யவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்காக வாதாடிய வக்கீலை மிரட்டவும் செய்தபோது இதே நீதி எங்கே இருந்தது? அரசும் நீதிமன்றமும் வர்க்கச் சார்பற்றது என்பது தான் பெரிய பித்தலாட்டம்.

பிரியங்கா கொலையின் குற்றவாளிகளுக்காக அவர்கள் பெற்றோரே வக்கீல் வைத்து வாதாடப் போவதில்லை என்று கூறி விட்டார்கள். அதற்கான வசதியும் அவர்களிடம் இல்லை. ஆகவே என்கவுண்டர் மூலம் நீதியை நிலைநாட்டி விட்டார்கள்.

இதே துப்பாக்கிகள் தான் தூத்துக்குடியில் தமது வாழ்விற்காக போராடிய மக்களை நோக்கியும் நீண்டது. போலீஸ் துப்பாக்கிகளும் வர்க்க சார்புள்ளது தான்….
மறந்துவிடாதீர்கள்.

Sukirtha Rani

டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட சகோதரியின் உண்மையான பெயரையும் ஐதராபாத்தில் பாலியல் வல்லுறவு செய்து எரிக்கப்பட்ட கால்நடை மருத்துவச் சகோதரியின் உண்மையான பெயரையும் குறிப்பிடாமல் எல்லாரும் கவனமாய்த் தவிர்ப்பதற்கும், பாலியல் வல்லுறவு செய்து தூக்கில் தொங்கவிடப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் ஆண்டி சிறுவள்ளூர் சகோதரியின் உண்மையான பெயரைத் தவிர்க்காமல் வெளிப்படையாக எல்லாரும் குறிப்பிடுவதற்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான்.  – சாதியும் வர்க்கமும்.

படிக்க :
ஹைதராபாத் என்கவுண்டர் : எங்கள் பெயரில் கொட்டடிக் கொலைகள் கூடாது | AIPWA கண்டனம் !
சொராபுதீன் என்கவுண்டர் : 22 பேரும் விடுதலை ! நீதி தேவதைக்கு தூக்கு !

Raja Rajendran

ஐயா திடீர் என்கவுண்டர் (மனிதநேய) ஆதரவாளர்களே….. ஆமாம் அதிகாரவர்க்கமும், போலீசும் சொல்வதுதான் உண்மை, அவர்கள் பிடித்துவிட்டால் அவர்கள்தான் குற்றவாளிகள் எனில்;

1.) சோராபுதீன் என்கவுண்டர் படி அவர்கள் அனைவரும் நாட்டை அழிக்க வந்த தீவிரவாதிகள், இப்படிக்கு குஜராத் காவல்துறை !
2.) சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நாலு மாவோயிஸ்ட்கள் எங்கள் மாநிலத்தை அழிக்க மாபெரும் சதித்திட்டம் தீட்டியவர்கள், இப்படிக்கு கேரளக் காவல்துறை !
3.) 27 தமிழகத் தொழிலாளர்கள் மட்டுமே ஆந்திராவில் செம்மரம் வெட்டி வளத்தைச் சூறையாடுபவர்கள், எனவே அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது சரி, இப்படிக்கு ஆந்திரக் காவல்துறை !
4.) ராம்குமார் கரண்ட் கம்பியை கவ்வி விளையாடித்தான் தற்கொலை செய்துக்கொண்டான் இப்படிக்கு தமிழகக் காவல்துறை !
5.) கலவரம் செய்ய ஆயுதங்கள், கற்களுடன் வந்ததால்தான் தூத்துகுடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் இப்படிக்கு காவல்துறை சொன்னதாய் ரஜினிகாந்த் !
இதையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அறம் போற்றுங்கள். சங்கிகளுடன் கலந்தோமென்று ஆனந்தக் கூத்தாடுங்கள் !!!

Villavan Ramadoss

எப்படியோ பணம் இல்லாதவன் குற்றம் செய்தாலாவது உடனடி நியாயம் கிடைக்குது இல்ல, அதை நினைத்து சந்தோஷப்படலாமே?

பணக்காரன் எங்க பொண்ணுங்களை ரேப் பண்ணினா பரவாயில்லைன்னு அதுக்கு இன்னொரு அர்த்தம் வருமே, அதுக்கு எப்படிங்க சந்தோஷப்பட முடியுது உங்களால??

Rajan Radhamanalan

பொள்ளாச்சி ரேப்பிஸ்டுகளுக்கு என்னாச்சு., ஆசிரம சாமியார்களுக்கு என்னாச்சு வகையறா கேள்விகள் எழுகின்றன. வாஸ்தவம் தான். இந்த நாட்ல இப்பிடி வர்க்கத்துக்கு ஒரு நியாயம், சாதிக்கு ஒரு தர்மம்னு இருக்கறதும்; இந்த பேதத்த பொது சமூகம் கமுக்கமா மென்னு முழுங்கி கடந்து போறதும் தான் உண்மைல சகிக்க முடியாத அயோக்கியத்தனங்கள்.

இதோட எதிர்விளைவா ஒடுக்கப்படுற வர்க்கத்துலருந்து எழுந்து வர்ற கிரிமினல்கள் கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாத வகைல தகவமைஞ்சு வருவாங்க. அப்ப மட்டும் லபோதிபோனு கதறிப் பிரயோசனம் இல்லை. இப்பிடியே போச்சுனா இந்த சமூகத்தோட ஒரு மிகப்பெரிய மக்கள் திரள் பவாரியா கொள்ளைக் கூட்டம் மாதிரிதான் ஆகப்போகுது.

ஆனா இதுல பெரிய வருத்தமே., இந்த வழக்குல டிரையல் நடத்தி வேற யாருக்கும் தொடர்பில்லை., இவனுக மட்டும் தான் செஞ்சுருக்கானுக உறுதியான பின்னாடி கொல்றதுதான் கொஞ்சமாவது அர்த்தமுள்ளதுனு கூட புரியாத அளவுக்கு சனம் மக்குக் கூட்டமா இருக்கறதுதான்.

அவனவன் சூத்துல சூடு படாத வரைக்கும் இந்த இன்ஸ்டண்ட் ஜஸ்டிஸ் பார்க்க மசாலா படம் மாதிரி ஜாலியாதான் இருக்கும். எஞ்சாய் பண்ணுங்க!

Villavan Ramadoss

டேய், போலீசுக்கு பூ தூவி வரவேற்கிற புண்ணியவானுங்களா..

இதே துணிச்சல்ல ரேப் பண்ணப்பட்டு கொல்லப்பட்ட தலித், முஸ்லீம் இல்லை வேற ஏழை பொண்ணுங்களுக்கும் இதே மாதிரி நீதி வேண்டும்ன்னு ஸ்டேஷன் பக்கம் போயிராதீங்க. நேரம் நல்லா இருந்தா மேட்டுப்பாளையம் ட்ரீட்மெண்ட் கிடைக்கும் இல்லைன்னா தூத்துக்குடி ட்ரீட்மெண்ட்தான்.

அன்சாரி முஹம்மது

மத்திய காங்கிரஸ் ஆட்சிலேயே அந்த ரெண்டு குஜராத்தி தீவிரவாதிகளையும் என்கௌண்டர் பண்ணியிருந்தா இந்த நாட்டையும் காப்பாத்தி இருக்கலாம்!

தங்க.செங்கதிர் செங்கதிர்

போலி மோதல் கொலையை முன்னின்று நடத்திய போலீசு அதிகாரி.

காவல்துறையினரின் போலி மோதல் கொலையை ஆதரிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணராமல், சிலர் ஆகா…ஓகோ…என காவல்துறையினரின் இந்த மோசமான செயலை சிலாகித்துப் பேசுகிறார்கள். நிகழ்விடத்தில் சிலர் மலர்தூவி காவல்துறையினரை கொண்டாடியிருக்கிறார்கள்.!

ஒவ்வொரு போலி மோதல் கொலைகளின் போதும் காவல்துறையினர் சொல்லும் கதை வசனங்கள் இராஜேஸ்குமாரின் திகில் நாவலையே மிஞ்சுபவை.!

இப்போது அந்த நால்வருக்கு எதிராக நீண்ட காவல்துறையினரின் துப்பாக்கிகள் நாளை மனித உரிமை போராடும் போராளிகளுக்கு எதிராக நீளாது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அப்போதும் எதிர் முகாம் அரசியலில் நிற்கும் மனிதகுல விரோதிகள் அதை ஆதரித்து நிற்பார்கள்.

ஒருநாள் அவர்களுக்கு எதிராகவும் அத்துப்பாக்கிகள் சுழலும்.!
நீதிமன்ற அமைப்பைக் கேள்விக்குள்ளாக்கும் காவல்துறையினரின் இச்செயல் வரவேற்கத்தக்கது அல்ல

Vijayabaskar S

கூட்டு வன்புணர்வு போன்ற கொடிய குற்றங்கள் நடக்கும்போது
அந்தக் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையினர் சட்டத்திற்குப் புறம்பாக, அராஜகமாக, நீதிமன்றத்திற்கு வெளியே, ஜனநாயகம் மாண்புகளுக்கு அப்பாற்பட்டு, குற்ற விசாரணைகளுக்கு அப்பாற்பட்டு, “என்கவுண்டர் என்ற பெயரில் கொலை” செய்யும்போது அந்தக் கொலையை வரவேற்கும் அதே நபர்கள் தான் இஸ்லாமிய நாடுகளில் குற்றவாளிகளுக்கு பொது இடத்தில் தரப்படும் தண்டனைகளை காட்டுமிராண்டித்தனம், அராஜகம், ‘இஸ்லாமியர்களே இப்படித்தான்” என்று சொல்லுவார்கள்.

இஸ்லாமிய நாடுகளின் சட்டத்தை கண்டிப்பவர்களின் காதல் ஜனநாயகத்தின் மீதானது அல்ல. மாறாக அது இஸ்லாமிய வெறுப்பின் அடிப்படையில் வந்தது.

பொது இடத்தில் குற்றவாளிகளை தண்டிக்கும் இஸ்லாமிய நாடுகளை கண்டிக்கும் நபர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் எனில்
இந்தியா போன்ற நாடுகளில் நடக்கும் என்கவுண்டர் கொலைகளையும் கண்டிக்கவேண்டும். இரண்டிற்கும் பாரிய வேறுபாடு இல்லை.

ஆனால் இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் கொலைத்தண்டனையை கண்டிப்பவர்கள் இந்தியாவில் நடக்கும் என்கவுண்டர் கொலையை கண்டிப்பதில்லை. இந்த முரண் ஜனநாயக அடிப்படையில் வந்ததல்ல. இஸ்லாமிய வெறுப்பின் அடிப்படையில் வருகிறது.

இதற்கு தமிழக அல்லது இந்திய உதாரணம் இன்னொன்று தருகிறேன். இப்படி இப்படியான அராஜக என்கவுன்டர் கொலைகளை ஆதரிப்பவர்கள் தலித் மக்கள் மீது வன்முறை செலுத்தப்படும் போது, அந்தக் குற்றவாளிகளை இப்படி தண்டிக்கவேண்டும் என்று ஒருபோதும் சொல்வதில்லை. நம் கண்முன்னே சில நாட்களுக்கு முன்னர் 17 உயிர்கள் ஒரே இடத்தில் கொல்லப்பட்டுள்ளன.

அந்தக் கொலையாளியை, அந்தக் கொலைக்கு காரணமானவனை என்கவுண்டர் செய்ய வேண்டும் என எவரும் சொல்வதில்லை. இந்த முரணும் ஜனநாயகத்தின் அடிப்படையில் வருவதல்ல. மாறாக தலித் மக்களின் மீதான காழ்ப்புணர்வில் வருகிறது.

சு.விஜயபாஸ்கர்.

Saravanakarthikeyan Chinnadurai

என்கவுண்டர் என்பது அரச பயங்கரவாதம். மக்கள் ஆதரவு இருப்பதாலேயே அரச பயங்கரவாதம் நியாயம் ஆகிடாது. அரசுக்குத் தேவை ஒரு தீர்வு அல்லது ஒரு பிம்பம்; அதற்காக என்கவுண்டர்கள் நிகழ்த்தும். நாம் case by case தேர்ந்தெடுத்து அதை ஆதரித்தும் எதிர்த்தும் கொண்டிருக்க முடியாது. அதுதான் இதில் இருக்கும் ஆகப்பெரிய சிக்கல்.

இன்று தெலுங்கானா அரசுக்குத் தேவை வருங்காலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட குற்றம் செய்வோரிடையே பயத்தை ஏற்படுத்துவது, சட்டத்தைக் கையிலெடுத்தேனும் இது உடனடி நீதிபரிபாலனம் செய்யும் அரசு என்ற பிம்பம் ஏற்படுத்துவது. அதனால் இந்த என்கவுண்டர். தமிழக அரசுக்குச் சென்ற ஆண்டு தேவைப்பட்டது போராட்டம் செய்வோரிடையே பயத்தை விதைப்பது, செல்வாக்கு மிகுந்த ஒரு கார்ப்பரேட்டுக்கு ஆதரவாய்ச் செயல்படுவது. அதனால் தூத்துக்குடியில் சுட்டார்கள். அது சரியா? ஹைதராபாத்தை ஆதரித்து விட்டு தூத்துக்குடியை எப்படித் தடுப்பீர்கள்? துப்பாக்கி யாரைச் சுட்டாலும் சுடும் என்பது தான் இதில் சோகமான யதார்த்தம். அதனால் துப்பாக்கியை மொத்தமாய்ப் பொத்தி வைப்பதே வழி.

நீதி விசாரணை என்பதன் முக்கியத்துவம் என்ன என்பதை உணராத ஒரு மொண்ணைச் சமூகம் உருவாகுமளவு அரசும், நீதித்துறையும் இங்கே கேடுகெட்டதனமாய் நீதி விசாரணைகள் நடத்தி வந்திருப்பதும் மிகத் தெளிவாய்த் தெரிகிறது.

படிக்க :
♦ அஸ்ஸாம் போலி மோதல் கொலை : இராணுவத்தை விசாரிக்கக் கூடாதாம் !
♦ தோழர் பத்மாவை போலி மோதலில் கொல்ல முயற்சியா ? PRPC கண்டனம்

Arivazhagan Kaivalyam

தெலுங்கானா மருத்துவர் படுகொலையில் தொடர்புடையதாக சொல்லப்படும் 4 பேரையும் அரச படுகொலை செய்தாகி விட்டது. தெலுங்கானா காவல்துறைக்கு சமூக இணைய ஊடகங்களில் துவங்கி காட்சி ஊடகங்கள் வரை விழா எடுக்கும் படலம் துவங்கி விட்டது.

சரி, இந்த நால்வரில் ஒருவன் அப்பாவி இளைஞன், வழக்கமாக நமது இந்தியக் காவல்துறை நடைமுறையான பொய் வழக்கில் அகப்பட்டவன், வழக்கமான கனவுகளோடு வாழ்க்கையை எதிர்கொண்ட ஒரு எளிய குடும்பத்தின் பிரதிநிதி என்று வைத்துக் கொள்வோம். அவனது குரலும், அந்தக் குடும்பத்தின் கண்ணீரும் நமது கும்பல் மனநிலையில் உரைக்காது.

இந்தியாவில் காவல்துறைக்கென்று தனியாக ஒரு குற்றப் பின்புலம் இருக்கிறது. வலியவன் அல்லது அதிகார வல்லமை கொண்டவனுக்கு ஒரு நீதி, எளிய குரலற்றவர்களுக்கு ஒரு நீதி என்று அது தேசமெங்கும் நிரவிக் கிடக்கிறது.

இந்தப் படுகொலைக்குப் பின்னால் ஒரு பெரிய கும்பல் இருக்கலாம். ஒரு Criminal Network இந்த நிகழ்வின் பின்புலத்தில் காவல்துறையின் ஆசிகளோடு இயங்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்தப் பின்புலத்தைக் காப்பாற்றும் முயற்சியாகக் கூட இந்த அரச படுகொலை அவசர அவசரமாக நிகழ்த்தப்பட்டிருக்கலாம்.

அந்த மருத்துவரின் கண்கள் என் குழந்தையின் கண்களைப் போல அன்பு தோய்ந்த அற்புதமான கண்கள். உடலைத் தாண்டி அந்தக் கண்களில் மிதக்கும் கனவுகளை மனித உயிர்களின் பரிதவிப்புகளை என்னால் உங்களை விட அதிகமாக உணர முடியும். அந்தக் குழந்தையின் மரணத்துக்கு நீதி வேண்டும். ஆனால் அந்த நீதி வெறும் உணர்ச்சிக் குவியல்களால் நிரப்பப்பட்ட வழக்கமான “அரசபடுகொலை” நீதியல்ல.

நீதி என்பது தண்டனை அல்ல, நீதி என்பது ஒரு சமூகம் தனது நாகரீகத்தை நோக்கிய பயணத்தை நிகழ்த்தும் பாதை. அந்தப் பாதையில் தான் நமது குழந்தைகள் நடக்கப் போகிறார்கள். நாம் ஆபத்தான பாதைகளை உணர்வின் முள் வேலிகளால் தற்காலிகமாக அடைத்து விட்டு நீதி வழங்கி விட்டதாக வெற்றுக் கூச்சல் இடுகிறோம்.

Arul Ezhilan

சமூகத்தில் அடவடியாக நடந்து கொள்வதையும், பெண்களை அடிப்பது உதைப்பது, காதலிக்கச் சொல்லி நிர்பந்திப்பது, தனக்கு கிடைக்கா விட்டால் ஆசிட் ஊத்தி சிதைப்பது என ஆண் சமூக விரோதியாக வாழ்வதை ஆண்மை என்கிறது இந்திய குடும்ப அமைப்பு. அடங்கிச் செல்வதையும் பெண் என்றால் கட்டுப்பெட்டியாக சுருங்கி அடங்கி வாழ வேண்டும் என்பதை பெண்மை என்கிறது இந்திய சமூக, சாதி, குடும்ப அமைப்பு யாரோசில கிரிமினல்களை சாகச பாணியில் கொன்று விட்டு குடும்பம் என்னும் அயோக்கியத்தனமான ஜனநாயகமற்ற நிறுவனம் தன்னை புனிதமாக்கிக் கொள்கிறது.

Sugumaran Govindarasu

ஐதராபாத்தில் போலி மோதலில் நால்வர் கொல்லப்பட்டது சட்டவிரோதம். தேசிய மனித உரிமைகள் ஆணையப் பரிந்துரைப்படி போலீசார் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302 கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தண்டனை வழங்கும் அதிகாரம் போலீசுக்குக் கிடையாது.

Vathsala Nagendran

பூக்காரி,வேலக்காரி,மீன்காரி எனும் இந்தியா என்கவுண்டரைக் கொண்டாடுகிறது !
பூக்காரம்மா,வேலக்காரம்மா, மீன்காரம்மாக்களுக்கான இந்தியா அரியலூர் நந்தினி/ஆசிஃபாக்களுக்கான நியாயம் தேடி குறைந்தபட்சம் மாவுக்கட்டோ, கரண்ட் வயர்ல கடிபடுறதோ கூட நடக்காம தான் கெடக்குது !

Veldurai Rajkumar

கொலைகளை கொண்டாடும் இச்சமூக உளவியலை எண்ணி சற்று அச்சமாக இருக்கிறது.

Villavan Ramadoss

அப்போ செத்தவனோட ஜாதிதான் தண்டனையை தீர்மானிக்குதுன்னு சொல்றேளா?

இல்ல கொன்னவனோட ஜாதியும் சேர்ந்தே தீர்மானிக்குதுன்னு சொல்றேன்.

Anas Sulthana

ரோஜா பூ தூவி போலீசை வரவேற்கும் உள்ளூர் மக்கள்.

இன்ஸ்டன்டா ஒரு குற்றத்திற்கு மரணம் தண்டனை தரணும்னா இங்கு யாரும் உயிரோடவே இருக்க முடியாது.
என்கவுண்டர் ஒருபோதும் இங்கு குற்றத்தை குறைத்ததாக வரலாறு இல்லை..

பாலியல் கல்வி, ஆண்-பெண் சமத்துவம், ஆணாதிக்கம் மனோபாவத்தை உடைப்பது போன்ற சமூக தேவையை பற்றி விவாதிக்க ஆரம்பியுங்கள். அதைவிட்டு நாலு பேரை கொன்றால் இனி பாலியல் வன்க்கொடுமையே நடக்காது பயப்படுவார்கள் என்று போலி பிம்பத்தை உருவாக்க வேண்டாம்..

அதுமட்டும் அல்ல… இது எளியவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற இன்ஸ்டன்ட் நீதி.. இது வலிமைமிக்க பொள்ளாச்சி கயவான்களுக்கு பொருந்தாது என்பத்தையும் யோசியுங்கள்..

Durai Arun

‘பெண் மருத்துவர் கொலை: குற்றவாளிகள் என்கவுன்ட்டர்!’ – தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

ஆம், இப்படித்தான் இவர்களை கொல்ல வேண்டும் இது தானே சரியான தீர்ப்பு என்று எல்லோரும் நினைக்க தோன்றுகிறது. ஆனால் அதே சமயம் இந்த சட்ட முறை, நீதித்துறை மூலமாக உரிய தண்டனை குற்றவாளிக்கு கிடைக்காது என்ற மன நிலையை உருவாக்கியது எவ்வளவு பெரிய தவறு. சரி ஹைதராபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டது போல பொள்ளாச்சி கூட்டு பாலியல் குற்றவாளிகள் கொலை செய்யப்படுவார்களா ???

உன்னாவில் 23 வயது இளம்பெண்- பிஜேபி எம்.எல்.ஏ மற்றும் குற்றவாளிகளால் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார் . அந்த எம்.எல்.ஏ வும் மற்றும் இதர குற்றவாளிகள் எப்போது சுட்டுக்கொல்லப்படுவார்கள்?????

நிர்பயா வழக்கு தொடர்புடையவர்கள் ஏன் என்கவுண்டர் செய்யப்படவில்லை ?? நாணல் போல வளைவது தான் சட்டமா ???

மனிதி தெரசா

இதெல்லாம் கொண்டாடிக்கிட்டு திரியனுமா ? இதான் கேள்வி.. உண்மையாலும் ரேப் பன்னா கூட தீர்ப்பு இவ்வளவு சீக்கிரம் கொடுக்குற அளவுக்கு இந்த நாட்டுக்கு அதிகாரம் இருக்கா.! அந்த ரேப் பண்ண பொண்ணோட குடும்பம் நொந்து போகாம இந்த நாட்டு சட்டம் எந்த ரேப் கேசுக்கு தீர்ப்பு கொடுத்துருக்கு..

சுட்டு கொல்லப்பட்ட அத்தனை பேரும் ஒருவேளை சம்பந்தபடுத்தி கொல்லப்பட்ட மனிதர்களா இருக்கலாம்.. இந்த மாதிரியான என்கவுண்டர் கண்டிப்பாக இவ்வளவு சீக்கிரம் செய்யகூடிய ஒன்னு இல்ல.. நியாயம் இருந்தா சட்டம் சமமா தீர்ப்பு வழங்கட்டும்..

அதான் நீதீமன்றம் என்னத்துக்கு இருக்கு.. இவங்க இஷ்ட மயிருக்கு ஹீரோயிசம் காட்டுறதுக்கா.. இதெல்லாம் கொலைங்க.. இத போய் கொண்டாடிக்கிட்டு இருக்குறதே தப்பு.!

எல்லாருக்கும் சட்டம் சமமா இருந்தா இத சட்டம் பண்ணாது.. இந்த என்கவுண்டர் எல்லாம் உண்மையாக மனித உரிமை மீறலே.. அதும் அந்த பொண்ணு கொல்லப்பட்ட இடத்திலே கொன்னுருகாங்க..இது என்ன படமா..ஹீரோயிசம் காட்ட..! முறைப்படி தானே தண்டனை கொடுத்துருக்கனும்..

#ஜனநாயகம் தழைந்தோங்கட்டும்
என்கவுண்டர்கள் ஒழிக்கப்பட வேண்டும்..

Jawahar Dra

என்கௌண்டரில் பெண் மருத்துவரை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிக் கொலை செய்து எரித்த நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்:- செய்தி

இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே! ஆனால் சட்டப்படி. இந்த என்கௌண்டரை ஆதரிப்போருக்கு சில கேள்விகள்.

சிறுமிகளின் பாலியல் கொடுமைகளை நீலப்படமாக பார்ப்போர் எத்தனை பேர் தெரியுமா? இப்படிப்பட்டவர்கள் நம் சமூகத்தில் எத்தனை இடத்தில் இருக்கின்றனர்? இவர்களுக்கும் இந்த நால்வருக்கும் என்ன வித்தியாசம்?

நித்தியானந்தா பெண் குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது என்பதற்கு மத பாதுகாப்பா? அப்படியானால் இனிமேல் நோய்க் கிருமியை ஒழிக்காமல் நோயாளிகளைக் கொன்றுவிடலாம் அல்லவா? பெண் குழந்தைகளுக்கு Good touch, Bad touch சொல்லித்தரச் சொல்லும் நாம் ஏன் இன்னும் ஆண் குழந்தைகளிடம் பெண், ஆண் சமத்துவம் சொல்லிக் கொடுக்கத் தயாரில்லை?

ஏன் சில இடங்கள் Don’t touch இடங்கள் என்பதை சொல்வதே இல்லையே? சரி இனி கோர்ட் எதற்கு? வக்கில் எதற்கு? நீதிபதி எதற்கு? உன் மதம் பெண்ணை எவ்வளவு கேவலமாக ஒரு பண்டமாக வைத்துள்ளதே? பெண் – ஆணின் பாலியல் விருப்பத்திற்கு இணங்கியாக வேண்டும் என்றுதானே சொல்கின்றன????

இக்குற்றங்கள் மட்டுமல்ல எந்தக் குற்றம் இருக்க கூடாது என்றால் சமூக மாற்றம்தான் தேவை..

படிக்க:
♦ நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிட மாட்டாராம் ! இதுல என்ன பெருமை … எருமை ?
♦ கறி சாப்பிடாதே ! கோவை மாணவர்களிடம் சங்கிகள் விசமப் பிரச்சாரம் !

Muthukumar Jayaraman

கேள்வி: ‘உங்கள் வீட்டு பெண்ணுக்கு இது போன்று நடந்தால் இந்த என்கவுன்டரை எதிர்ப்பீர்களா?’

பதில்: ‘உங்கள் வீட்டு ஆண் ஒரு வேளை பொய்யாக குற்றம்சாட்டப்பட்டு இது போன்று விசாரணை இல்லாமல் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டால் இப்படித்தான் ஆர்ப்பரிப்பீர்களா?’

விசாரணை கைதிகளாக பல ஆண்டுகள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு பின்பு நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்ட சம்பவங்கள் இந்த நாட்டில் எண்ணற்றவை.

Rajkumar Sellampillai

தெலங்கானாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி எரித்துக்கொல்லப்பட்ட மருத்துவர் பிரியங்கா கொலையில் குற்றவாளிகள் அதே இடத்தில் வைத்து சுட்டு கொல்லப்பட்ட செய்தி பரவலாக பாராட்டைப் பெற்றுவருகிறது.

நிதானமான சிந்தனைகள் வருவதற்கு முன் நமக்கும் இது ஒருவிதமான ஆறுதலையும் பழிவாங்கிய உணர்வையும் ஏற்படுத்துகிறது.
‘என் மகளின் ஆன்மா சாந்தி அடையும் ‘என்று மகளை பறிகொடுத்த தந்தை கூறுவதை அதே உணர்வுடன் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இது சரியான முறையான தீர்வு அல்ல. ஏனெனில்

  1. இந்த மாதிரியான குற்றங்களில் குற்றவாளிகளின் பின்னணியைப் பொறுத்துதான் என்கவுண்டர்கள் நடக்கின்றன.
  2. கைது செய்யப்பட்டவர்கள் இப்படி கொல்லப்படும்போது உண்மையான குற்றவாளிகள் இவர்கள்தானா ? அல்லது இவர்கள் மட்டும்தானா ? என்ற உண்மைகள் வெளிவருவதில்லை.
  3. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்கவுண்டர்களால் தீர்க்கப்பட முடியாதது.

இதேபோல உத்தரப் பிரதேசத்தில் உனாவ் மாவட்டத்தில் பாலியல்வன்கொடுமை செய்யப்பட்ட பெண் ஒருவர் தொடர்ந்து வழக்குநடத்திக் கொண்டிருந்தார் . அப்பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் வைத்து அடித்து கொல்லப்பட்டார் . இன்னொரு பெண் வழக்கு நடத்துவதற்காக நீதிமன்றம் செல்லும் வழியில் வழிமறித்து எரிக்கப்பட்டுள்ளார். 90 சதவீத தீக்காயங்களோடு அவர் இப்போது டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த வழக்குகளில் மட்டுமா
தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூட யாரும் என்கவுண்டர் செய்யப்படவில்லை.

எனவே இந்தக் கொடுமைகளுக்குத் தீர்வு சட்டத்தை சரியாக , விரைவாக , சமமாக ,முறையாக , குறித்த கால வரையறைக்குள் முடிக்க வேண்டும் . அதிகபட்ச தண்டனையை ஒரேமாதிரி அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதுதான்.

அதைவிட முக்கியமானது அவன் ஆம்பளைங்க .. அவன் அப்படித்தான் இருப்பான் என்று பேசுகிற மூளைகளுக்கு முதலில் மருத்துவம் செய்ய வேண்டும் .
– வழக்கறிஞர் அருள்மொழி,
திராவிடர் கழகம்.

Asif Meeran

பொதுப்புத்தி எப்போதும் உடனடி நீதியையே வேண்டுகிறது. வன்புணர்வு செய்தவனை விசாரணையின்றி நடுவீதியில் சுட்டுக் கொல்வதை ஆரவாரமாக வரவேற்குமளவுக்கு நம் தேசத்தின் நீதித்துறையும் காவல் துறையும் செயலற்றுப் போயிருக்கின்றன என்பதே உண்மை.

உடனடித் தீர்வுகளின் மேல் நம்பிக்கை வைக்குமளவுக்கு நம்மைத் தள்ளியிருப்பது வரம் போலத் தோன்றினாலும் அது மிகப் பெரும் சாபம். காவல் துறையின் கையில் விசாரணையின்றி சட்டத்தை ஒப்படைப்பது போன்ற பெருங்கொடுமை வேறில்லை.

சட்டம் கடுமையாக்கப்பட்டு நீதி வழங்கல் விரைவாக்கப்படாதவரை காவல் துறை விசாரணையின்றி சுட்டுக் கொல்வதை ஆரவாரம் செய்து வரவேற்கும் கூட்டதோடு கோவிந்தா போடும் அசட்டு மனநிலையே எஞ்சும்.

இதையெல்லாம் யோசிக்கும்போதும் கூடவே எப்போதும் அறிவுசார்ந்து மட்டுமே எப்போதும் இயங்க முடியாது என்பதும் புலனாகிறது.

Prince Ennares Periyar

மக்கள் வன்முறையை விரும்புகிறார்கள். எனவே தான் பாலியல் வன்கொடுமைக்குத் தீர்வாக குற்றவாளிகளை தூக்கிலிடவோ, கூட்டாக அடித்துக் கொலை செய்யவோ, குறியறுக்கவோ, கொலை செய்யவோ பரிந்துரைத்தால் அந்த யோசனையை மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் பெண்களுக்கான சம உரிமைக்கும், ஆணாதிக்கம் – பெண் வெறுப்புக்கெதிராகவும், பெண்கள் ஒடுக்கப்படுதலை ஒழிக்கவும் ஆண்களுக்கு விழிப்புணர்வூட்ட நினைத்தால் மக்கள் அதை விரும்புவதில்லை.
– தஸ்லிமா நஸ்ரின்


முகநூல் தொகுப்பு : வினவு செய்திப் பிரிவு