மிழகம் முழுவதும் 2020 புத்தாண்டு தொடக்கத்தை போராட்ட தினமாக மாற்றி மக்கள் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். போராட்டத்தோடு பிறந்திருக்கும் இந்தப் புத்தாண்டு, மோடி ஆட்சியிலிருக்கும் சூழலில் போராட்டங்கள் நிறைந்ததாகத்தான் நீடிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் நம் ஒவ்வொரு போராட்டமும் பார்ப்பன பாசிசக் கும்பலின் தூக்கத்திலும் அசுர சொப்பனமாக வந்து அவர்களை அச்சுறுத்த வேண்டும்.

புத்தாண்டு பிறந்த சமயத்தில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்ட நிகழ்வுகளின் தொகுப்பு உங்கள் பார்வைக்காக..

***

சென்னை :

சென்னை பனகல் மாளிகை அருகில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் CAA – NPR – NRC எதிர்ப்பு நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கெடுத்தனர். மேலும் போராட்டத்தில் இசுலாமியர்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

திருச்சி :

திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே, மக்கள் அதிகாரம் மற்றும் இதர தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த தோழர்க்ள் மற்றும் திரளான பொதுமக்கள் ஒன்றுகூடி நள்ளிரவில் CAA – NPR – NRC ஆகியவற்றிற்கு எதிராக முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

***

கோவை :

கோவையில் அவினாசி சாலையில் புத்தாண்டு தினத்தை ஒட்டி, வீதியில் NO CAA , NO NRC, NO NPR ஆகிய வாசகங்கள் எழுதப்பட்டு, அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொது மக்களுடன் இணைந்து பதாகைகளோடு 2020 புத்தாண்டு CAA, NRC, NPR ஆகியவற்றிற்கு எதிரான போராட்டமாகத் தொடங்கியது.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

***

தருமபுரி :

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் CAA, NPR, NRC ஆகியவற்றை எதிர்த்து நள்ளிரவு புத்தாண்டு போராட்டம் !

புத்தாண்டு தினத்தில் மது போதையிலும், குத்தாட்டத்திலும் திளைப்பதைவிட்டு போராட்டமாக மாற்று! என்ற வகையில் CAA, NRC, NPR -க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மக்கள் அதிகாரம், DYFI , இஸ்லாமிய முற்போக்கு இளைஞர்கள் இணைந்து தருமபுரி மாவட்டம் பென்னாகரம் நகரத்தில் நள்ளிரவு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

CAA – NRC – NPR – எதிர்ப்பு கேக்

விண்ணதிரும் முழக்கத்தோடு தொடங்கியது மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு. போராட்டத்தை தொடங்கும் விதமாக தயாரிக்கப்பட்ட கேக்கை மோசின் கான் வெட்டி தலைமை தாங்கினார். இதனை தொடர்ந்து DYFI மாவட்ட செயலாளர் தோழர் எழில், மக்கள் அதிகாரம் மண்டல பொருளாளர் தோழர் கோபிநாத் ஆகியோர் கண்டன உறையாற்றினர். அதுமட்டுமல்லாது தெருக்களில் கோலம் போட வைப்பது, ரோட்டில் எழுதுவது என்ற வகையில் இந்த போராட்டம் பரவலாக மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது.

படிக்க:
மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா
♦ எந்த இந்தியாவிற்காக நாம் போராடுகிறோம் ?

இதனை தொடர்ந்து நகரத்தில் போடப்பட்ட முழக்கத்தினை கேட்டு உளவு துறை போலீசும், நகர போலீசாரும் வந்து கூட்டத்தை போட்டோ எடுத்து கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர். இதற்கு சிறிதளவும் அச்சப்படாத இளைஞர் கூட்டம் வந்த போலீசாருக்கு கேக்கை ஊட்டினர்.

போராட்டம் கேக் வடிவிலும் வரும் என்பதை எதிரிகளுக்கு புரிய வைத்தனர். RSS – BJP இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என உறுதியேற்று நள்ளிரவு ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
பென்னாகரம் வட்டம்.
தொடர்புக்கு : 97901 38614.

***

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் NAA,NPR, NRC எதிர்த்து நிற்கும் மாணவர்கள் !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
தருமபுரி.
6384569228.

 

***

கடலூர் :

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில், CAA – NRC – NPR இவற்றுக்கு எதிப்பு தெரிவித்து நள்ளிரவு புத்தாண்டு போராட்டங்கள் நடைபெற்றன.

இதன் ஒரு பகுதியாக CAA – NRC – NPR எதிர்ப்பு முழக்கங்கள் வீதிகளில், வீட்டு வாயில்களில் என கோலங்களில் எழுதப்பட்டன. அதுமட்டுமில்லாது இளைஞர்கள் கேக் வெட்டி முழக்கங்களை எழுப்பினர்.

கடலூர் பூவனூர் கிராமத்தில் நள்ளிரவு புத்தாண்டு போராட்டம் !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மோடி அரசு கொண்டு வந்த CAA, NRC, NPR சட்டங்களை எதிர்த்து கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் கிராமத்தில் நடந்த  நள்ளிரவு புத்தாண்டு போராட்டம் !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

படிக்க:
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – டிசம்பர் 2019 | டவுண்லோடு
♦ சபரிமலைத் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தின் கபடத்தனமும்

***

விருத்தாச்சலம் :

விருத்தாச்சலம் பகுதியில் மக்கள் அதிக்கரம் தோழர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் தங்கள் குடும்பத்துடன் CAA – NRC – NPR எதிர்ப்பு நள்ளிரவு புத்தாண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

விழுப்புரம் :

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள துறவி கிராமத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் CAA – NRC – NPR எதிர்ப்பு நள்ளிரவு புத்தாண்டு போராட்டம் !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

புதுச்சேரி :

தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR), குடியுரிமை திருத்த சட்டம் (CAA) ஆகியவற்றை எதிர்த்து, மக்கள் அதிகாரம் தோழர்கள் புதுச்சேரி கடற்கரையில் நடத்திய போராட்டம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

திருப்பூர் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தொகுப்பு :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க