தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 02
நிலைத்த வாழ்க்கை காரணமாக உற்பத்திச் சக்திகள் வளர்ந்திருக்க வேண்டும். ஆடு மாடுகளுக்குத் தீனியும், தங்களுக்கு உணவும் பெறுவதற்கு முல்லை நில மக்களிலே ஒரு பகுதியார் ஆற்றங்கரைகளிலே குடியேறி நன்செய்ப் பயிர் செய்யக் கற்றுக் கொண்டார்கள். குளங்கள் தோண்டப்பட்டன. ஆறுகளை மறித்து அணைகள் கட்டப்பட்டன. அகன்ற நிலப்பரப்புக்கள் சாகுபடிக்கு வந்தன. இப்புதிய வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் சிறிதளவு உணவுக்குப் போக தானியம் மிஞ்சியது. மேலும் நீண்ட வாய்க்கால்களைத் தோண்டினார்கள். மடைகளை அமைத்தார்கள். மேலும் விளைச்சல் பெருகியது. உழவுக்கு வேண்டிய கருவிகள் செய்யவும், ஆடு மாடுகளைப் பாதுகாக்கவும், ஆடை நெய்யவும், தோலிலே ஏற்றங்களுக்கு வேண்டிய பைகள் செய்யவும், விளைந்த நெல்லைப் பாதுகாக்கக் கட்டடங்கள் எழுப்பவும் தனித்தனிப் பிரிவினர் தோன்றினர். இவ்வாறு சிக்கலான வேலைப் பிரிவினை எழுந்தது. இவற்றை மேற்பார்க்க சிறுசிறு பிரதேசங்களில் குறுநில மன்னர்கள் தோன்றினர். பெரிய ஆறுகளின் நீரை முழுதும் பரந்த அளவு நிலத்தில் பாய்ச்சி விவசாயம் செய்யவும் பல பகுதியினரையும், ஒருங்கு விவசாயத் தொழிலிலே ஈடுபடுத்தவும் மத்திய ஆட்சி தேவையாயிற்று. பரந்த நிலப்பரப்பின் தலைவர்களாக இருந்தவர்கள் முடியுடை மன்னர்களானார்கள். எந்தப் பகுதியில் விளைச்சல் அதிகம் கண்டு தானியம் மிஞ்சியதோ அப்பகுதி வலிமையுடையதாயிற்று.
பக்கத்திலுள்ள வளர்ச்சியடையாத பகுதிகளைப் போரின் மூலம் தன் ஆட்சிக்குக் கீழ் கொணர்ந்தது. இவ்வாறு நூற்றுக்கணக்கான குறுநில மன்னர்கள் சேர, சோழ, பாண்டியரது ஆட்சிக்குட்பட்டனர். தனித்தனியாக வாழ்ந்த மலை நாட்டினரும், காட்டுச் சாதியினரும் பயிர் செய்து உற்பத்திச் சக்திகளை வளர்த்துவிட்ட மருத நிலத்தவருடைய ஆதிக்கத்திற்குட்பட்டனர். இவர்களிடையே பல போராட்டங்கள் நிகழ்ந்தன, பாரி, பேகன் போன்ற மலைநாட்டு குறுநில மன்னர்கள் முடியுடை மன்னர் மூவரால் தோற்கடிக்கப்பட்டனர். வாழ்க்கை முறை மாறிற்று. சமூக அமைப்பும் மாறிற்று. இம்மாறுதல்கள் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்திருக்க வேண்டும். பயிர்த்தொழிலை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பைப் பற்றிய செய்திகள் மருத நிலத்தைப் பற்றிய செய்யுட்களிலே காணப்படுகின்றன. முன்னிருந்த இரண்டு சமூக அமைப்புகளைவிட இச்சமூக அமைப்பில் மனிதன் வளமாக வாழ்ந்த காரணத்தாலும், மிகுந்த ஓய்வு கிடைத்ததின் காரணமாகவும் கலைகள் வளர்ந்தன. கோயில்கள் தோன்றின. சிற்பங்கள் எழுந்தன. நீண்ட காவியங்கள் தோன்றின.
இந்தச் சமூகத்தில் தமிழ் மக்கள் உற்பத்தி சக்திகளுக்கும், தங்களுக்குமுள்ள உறவு காரணமாக இரு பிரிவாகப் பிரிந்தனர். ஒன்று ‘நிலக்கிழார்’ அல்லது நிலவுடைமையாளர். மற்றொரு பிரிவினர் அவற்றில் உழைத்துப் பிழைக்கும் உழவர்கள். இச்சமூகத்தில் வர்க்கப் பிரிவினையும், முரண்பாடும் தோன்றிவிட்டன. அது எவ்வாறு தோன்றிற்று, எப்படி வளர்ச்சியுற்றது என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். தங்களுடைய வாழ்க்கை நிலைமையில் தோன்றிய மகிழ்ச்சிகரமான, மாறுதலைச் சுட்டிக்காட்டும் முறையில் மருத நிலத்தவர் இந்திரனைத் தங்கள் தெய்வமாகக் கொண்டனர். இந்திரன் சுக வாழ்வின் பிரதிநிதி.
தமிழ்நாடு முப்பெரும் பிரிவுகளாக இணைக்கப்பட்ட காலத்தில் வாணிபமும் தலை தூக்கத் தொடங்கியது. சிறுசிறு கிராமங்களில் கைத்தொழில் செய்து கிராமத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டும் முடியரசு தோன்றியபின் போதாது. ஆகவே தொழில் பிரிவு தோன்றி, தனித்தனியாக தொழில் செய்து தங்கள் செய்பொருட்களை நெல்லுக்குப் பரிவர்த்தனை செய்து கொண்ட முறை நிலைகுலைந்தது. பொன்னும் பொற்காசுகளும் பரிவர்த்தனைக்குப் பொதுப் பொருளாயின. பொருள்களைத் தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் ‘வணிகச் சாத்துக்கள்’ என்ற வணிகர் கூட்டம் தோன்றியது. இவர்கள் பொருள்களை உற்பத்தி செய்வதில்லை. ஆனால் ஒரு பகுதியில் இருந்து மற்றோர் பகுதிக்குக் காளைகள் மீதும், சகடங்கள் மீதும், பொருள்களை ஏற்றிச் சென்று விற்பர். உள்நாட்டு வாணிபம் பெருக மன்னர்கள் சாலைகள் அமைத்தனர்.
இந்தச் சமூகத்தில் தமிழ் மக்கள் உற்பத்தி சக்திகளுக்கும், தங்களுக்குமுள்ள உறவு காரணமாக இரு பிரிவாகப் பிரிந்தனர். ஒன்று ‘நிலக்கிழார்’ அல்லது நிலவுடைமையாளர். மற்றொரு பிரிவினர் அவற்றில் உழைத்துப் பிழைக்கும் உழவர்கள். இச்சமூகத்தில் வர்க்கப் பிரிவினையும், முரண்பாடும் தோன்றிவிட்டன. அது எவ்வாறு தோன்றிற்று, எப்படி வளர்ச்சியுற்றது என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.
இவ்வணிகச் சாத்தினர் பல பொருட்களை நாடெங்கும் பரப்பினர். ஆடைகள், அணிகலன்கள், தானிய வகைகள், மிளகு, பாக்கு, வாசனைத் திரவியங்கள் ஆகிய பொருட்களைத் தமிழ்நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றோர் பகுதிக்குக் கொண்டு சென்று விற்றனர். இவர்களுள் ஒரு பகுதியினர் பெரும் பொருள் திரட்டினர். அவர்கள் சமூகநிலை உயர்ந்தது: மூலப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிலங்கள் குறுநில மன்னர்களின் உடைமையாக இருந்தன. செய்பொருட்களை ஆக்குபவர்கள் தொழிலாளிகள். அவர்களை ஓரிடத்தில் சேகரித்து அவர்கள் செய்து தரும் பொருட்களுக்கு விலை கொடுத்து வணிகர்கள் வாங்கினார்கள். ஆக, நிலத்தொடர்பு இல்லாத இரு வர்க்கங்கள் இப்பொழுது தோன்றத் தொடங்கின. வணிகர்களது செல்வாக்கு ஓங்க ஓங்க அவர்கள் மூலப்பொருள் உற்பத்திக்குச் சாதனமான நிலத்தின் சொந்தக்காரர்களது ஆதிக்கத்துக்கு எதிர்ப்புக் காட்ட வேண்டியதாயிற்று. அவர்களது நிலவுடைமையைப் பாதுகாக்கும் திட்டத்தையும் கொள்கையையும் காக்க வேண்டி வந்தது. அதற்காகக் கைத்தொழில் செய்யும் தொழிலாளரையும், விவசாயிகளையும் தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ள முயன்றார்கள். இவ்வணிகர்கள் பெருங்குடி வணிகர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களுடைய ஆதிக்கம் ஓங்கியிருந்த காலத்தைச் சிலப்பதிகாரம் சித்தரிக்கிறது. சமணமும், பௌத்தமும் இவர்கள் ஆதரித்த மதங்கள். அவை சமூக அடிமைத்தனத்தைத் தாக்குகின்றன. புத்த மதத்தையும் இவர்கள் ஆதரித்தார்கள். இவர்கள் காலத்தில் பெரு நகரங்கள் தோன்றின.
படிக்க:
♦ ரஜினி : கிறுக்கா … காரியக் கிறுக்கா ?
♦ அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா ? மாநில உரிமை பறிப்பா ? | EBook Download
நகரங்கள் கைத்தொழில் உற்பத்திக் கேந்திரங்களாக இருந்தன. நகரங்களின் உள்ளமைப்பையும், வாணிப வளத்தையும், வாழ்வோர் நிலையையும் சிலப்பதிகாரம் வர்ணிக்கிறது. சேர, சோழ, பாண்டிய ராசதானி நகரங்களை அது வர்ணிக்கிறது. அப்பொழுது பெருங்குடி வணிகர்களுடைய செல்வாக்கு உச்ச நிலையிலிருந்தது என்பதையும், சுட்டிக் காட்டுகிறது. இது தவிர அயல்நாடுகளோடு மரக்கலங்கள் மூலம் வாணிபத் தொடர்பிருந்தமைக்கும், அதன் மூலம் பெருங்குடி வணிகர்கள் ‘பெரு நிதியம்’ திரட்டினார்கள் என்பதற்கும் சான்றுகளுள்ளன. இவர்களுடைய வளர்ச்சிக் காலத்திலேதான் கடற்கரையில் மீன் பிடித்தும், உப்புக் காய்ச்சியும் பிழைத்து வந்த பரதவரும், உமணரும், சங்கு குளித்தல், முத்துக் குளித்தல் போன்ற தொழில்களைக் கற்றிருக்க வேண்டும். அயல் நாட்டு வாணிபத்துக்காக, புகார், கொற்கை, தொண்டி, முசிறி போன்ற துறைமுகங்கள் தோன்றின. அங்கே யவனர் கலங்கள் வந்து தங்கிச் சென்றன. துறைமுகச் சாவடிகளில் பொதிகள் அடுக்கப்பட்டுச் சுங்கம் வசூலித்ததற்கு அடையாளமாக மன்னனது முத்திரை பதிக்கப்பட்டன. இச்செய்தியைப் ‘பட்டினப் பாலை’ கூறுகிறது.
இவ்வாறு பெருங்குடி வணிகரின் செல்வாக்கு உயர்ந்தோங்கிய காலத்தில் அரசியல் வாழ்விலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். சோழ நாட்டின் வளப்பம் காரணமாக அங்குதான் பெருங்குடி வணிகர் வர்க்கமும் வளர்ந்து வாணிபத்தைப் பெருக்கியது. வாணிபத்துக்குச் சந்தையாக தமிழ்நாடு முழுதும் இருக்க வேண்டும் என்பது அவர்களது நலனுக்கு உகந்ததாக இருந்தது. ஆகையால் அவர்கள் தமிழ்நாட்டின் முப்பெரும் பிரிவுகளிலும் தங்குதடையற்ற வியாபாரம் பெருக விரும்பினர். அதற்குத் தகுந்த சித்தாந்தத்தையும் உருவாக்கினர். மூன்று பிரிவுகளும், ஒன்றென்னும் எண்ணத்தை வளர்த்தனர். மூன்று மன்னர்களும் போராடாமல் வாழவேண்டுமென விரும்பினர். தமிழ் மன்னர் மூவரும் போராடாமல் வாழ்ந்தால் தங்கள் வாணிபம் பெருகுமல்லவா? ஆகவே சமாதானம் தமிழரின் பொதுவான கலை பண்பாட்டு ஒருமை இவற்றை அவர்கள் வலியுறுத்தினர். சேர வம்சத்தினராயினும், இளங்கோவடிகள் தன் கால சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்டவராதலால் சிலப்பதிகாரத்தில் இக்கொள்கைகளை வெளிப்படையாகவும், உட்பொருளாகவும் கூறுகிறார். தமது வாழ்த்துக் காதையில் சேர, சோழ, பாண்டிய நாட்டின் தலைநகரங்களுக்கும் மன்னருக்கும் வாழ்த்துக் கூறுகிறார். இது தமிழ் நாட்டின் ஒருமையை வலியுறுத்துவதற்காகவே.
‘வாழியரோ வாழி
வருபுனல் நீர் வையை
சூழு மதுரையார் கோமான்
தன் தொல்குலமே‘
‘வாழியரோ வாழி
வருபுனல் நீர்த் தன் பொருதை
சூழ்தரும் வஞ்சியர் கோமான்
தன் தொல்குலமே‘
‘காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும்
பூவிரி கூந்தல் புகார்‘
இம்முறையில் பொருளாதார வாழ்வையும் வர்க்க முரண்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழ் நாட்டு மக்களின் வரலாறு முழுதும் எழுதப்பட வேண்டும். இவ்வரலாற்றைத் தனியொருவர் எழுதுவது இயலாது. நூற்றுக்கணக்கான வரலாற்று வல்லுநர்கள். தமிழ் அறிஞர்கள், மார்க்ஸீயவாதிகளின் கூட்டு முயற்சியால் இவ்வரலாறு உருவாக வேண்டும். முதன் முதலில் பல கருத்து வேற்றுமைகள் தோன்றுவது இயற்கையே; பல கருத்து மோதல்களின் விளைவாக உண்மை வெளிப்படும். பண்டைத் தமிழர் சரித்திரத்தை ஆரம்ப முதல் மத்திய காலம் வரைக்கும் ஆராய்ந்து எழுதுவதற்குப் பரவலான சான்றுகள் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கிடக்கின்றன. அவற்றைச் சேகரித்துச் சமூக வளர்ச்சி தொழில் கண்ணோட்டத்தில் ஒரு வரலாறு உருவாக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட தமிழர் வரலாறு நமக்கு அவசியம் தேவை.
(தொடரும்)
« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வில்லவர் மற்றும் பாணர்
____________________________________
பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.
கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.
வில்லவர் குலங்கள்
1. வில்லவர்
2. மலையர்
3. வானவர்
வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்
4. மீனவர்
பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு
1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.
2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.
3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.
4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.
பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.
பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.
வில்லவர் பட்டங்கள்
______________________________________
வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.
பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.
1. சேர வம்சம்.
2. சோழ வம்சம்
3. பாண்டியன் வம்சம்
அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.
முக்கியத்துவத்தின் ஒழுங்கு
1. சேர இராச்சியம்
வில்லவர்
மலையர்
வானவர்
இயக்கர்
2. பாண்டியன் பேரரசு
வில்லவர்
மீனவர்
வானவர்
மலையர்
3. சோழப் பேரரசு
வானவர்
வில்லவர்
மலையர்
பாணா மற்றும் மீனா
_____________________________________
வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.
பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா – மீனா ஆட்சியாளர் ஆவார்.
பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.
அசாம்
சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.
இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.
மஹாபலி
பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.
வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.
ஓணம் பண்டிகை
ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.
பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.
சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)
பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.
இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.
ஹிரண்யகர்பா சடங்கு
வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.
வில்லவர் மற்றும் பாணர்
நாகர்களுக்கு எதிராக போர்
__________________________________________
கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.
நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு
நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
1. வருணகுலத்தோர் (கரவே)
2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
3. கவுரவகுலத்தோர் (கரையர்)
4. பரதவர்
5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)
இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
கர்நாடகாவின் பாணர்களின் பகை
_________________________________________
பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.
கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.
கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.
வில்லவர்களின் முடிவு
1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.
கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
__________________________________________
கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன
1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.
கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.
ஆந்திரபிரதேச பாணர்கள்
ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்
1. பாண இராச்சியம்
2. விஜயநகர இராச்சியம்.
பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.
பாண வம்சத்தின் கொடிகள்
_________________________________________
முற்காலம்
1. இரட்டை மீன்
2. வில்-அம்பு
பிற்காலம்
1. காளைக்கொடி
2. வானரக்கொடி
3. சங்கு
4. சக்கரம்
5. கழுகு
திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண – கலிங்க வாணாதிராயர் ஆவர்.
வில்லவர் மற்றும் பாணர்
வட இந்திய பாண குலங்கள்
வட இந்திய பாணர்களுக்கு பாண, வட பலிஜா, அக்னி, வன்னி, திர்கலா போன்ற பட்டங்கள் இருந்தன. வட இந்திய பாணர்கள் ஜாட்கள், ராஜபுத்திரர்கள் போன்ற பல்வேறு சமூகங்களுடன் இணைக்கப்பட்டனர். சில பாணர்கள் ராஜபுத்திரர்களுக்கும் ஆரிய ஆட்சியாளர்களுக்கும் அடிபணிந்தனர். சில பாணர்கள் வில் மற்றும் அம்பு தயாரிப்பதை தங்கள் தொழிலாக ஏற்றுக்கொண்டனர்.
பல்லவ பாணர்
பல்லவ மன்னர்கள் பண்டைய உத்தர பாஞ்சால நாட்டிலிருந்து (உத்தரபிரதேசம் மற்றும் நேபால்) ஆந்திராவுக்கு கிமு 200 இல் குடிபெயர்ந்தனர். உத்தர பாஞ்சால நாட்டின் தலைநகரம் அஹிச்சத்திரம் ஆகும். பல்லவ மன்னர்கள் பாரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்த பிராமணர்கள் மற்றும் அஸ்வத்தாமாவின் வழித்தோன்றல்கள் ஆவர், ஆனால் பார்த்தியன் வம்சத்துடன் கலந்தவர்கள். பல்லவ மன்னர்களுடன், காடுகளை வெட்டுவதைத் தொழிலாகக் கொண்டிருந்த பாணர்களின் ஒரு இராணுவம், பாஞ்சால நாட்டிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தது. பாஞ்சால நாட்டிலிருந்து வந்த பிராகிருத மொழி பேசும் பாணர் குலங்களுக்கு வன்னி, திகலா (திர்கலா) மற்றும் வட பலிஜா என்ற பட்டங்கள் இருந்தன. கி.பி 275 இல் பல்லவர் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர்.. பல்லவக் கொடிகளில் பாண குலத்தின் காளை சின்னம் இருந்தது. பல்லவர் தலைநகரான மகாபலிபுரம் பாண வம்சத்தின் மூதாதையர், மகாபலி மன்னரின் பெயரால் அழைக்கப்பட்டது.
பாணா வம்சம் மற்றும் மீனா வம்சம்
வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர் மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.
மீனா வம்சம்
___________________________________
ராஜஸ்தானின் மீனா குலங்கள் பில் குலங்களுடன் கலந்து பில்-மீனா வம்சங்களை உருவாக்கின. மீனா வம்சம் ராஜஸ்தானை கிமு 1030 வரை ஆட்சி செய்தது. ஆலன் சிங் சான்ட மீனா கடைசி சிறந்த ஆட்சியாளராக இருந்தார்.
சத்தீஸ்கர் பாண இராச்சியம்
பல்லவர்கள் ஒரு பாண இராச்சியத்தை கி.பி 731 இல் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் உள்ள தெற்கு கோசல இராச்சியத்தில் நிறுவினர். பாலி தலைநகரமாக ஆண்ட விக்ரமாதித்யா ஜெயமேரு கடைசி மன்னர்.
திக்கம்கரின் பாண்டிய வம்சம்
பாண்டியா பட்டமுள்ள பாணர் குண்டேஷ்வர் தலைநகராக வைத்து மத்தியப்பிரதேசத்தை ஆட்சி புரிந்தனர்.
பாண வர்த்தகர்கள்
இடைக்காலத்தில் பாணர்கள் தங்களை ஒரு வெற்றிகரமான வணிக சமூகமாக மாற்றிக் கொண்டனர். பலிஜாக்கள் அஞ்சு வண்ணம் மற்றும் மணிகிராம் போன்ற பல்வேறு வர்த்தக குழுக்களை உருவாக்கி வர்த்தகத்தை கட்டுப்படுத்தினர். இந்த வர்த்தகர்-போர்வீரர்கள் பலிஜா நாயக்கர்கள்(வளஞ்சியர்கள்) ஆவர்.
பலிஜாக்கள் ஆந்திரப்பிரதேசத்தின் பாண இராச்சியத்தைச் சேர்ந்தவர்கள் (வடுக நாடு).
பலிஜா வர்த்தக குழுக்கள் ஜெர்மன் ஹான்ஸியாடிக் லீக்கை நெருக்கமாக ஒத்திருந்தனர்.
முடிவுரை
____________________________________________
இதனால் பாண்டியர்கள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளவர்கள் இல்லை. மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பாண்டியர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. சில பாண்டியர்கள் பாண்டவர்களை ஆதரித்தனர், மற்றவர்கள் கவுரவரை ஆதரித்தனர். பாணப்பாண்டியர்கள் இந்தியா முழுவதையும் ஆட்சி செய்தனர். சில பாணர்கள் பாண்டிய பட்டத்தை பயன்படுத்தினர். மற்றவர்கள் பாண்டியன் பட்டத்தை பயன்படுத்தவில்லை.
பாணர் கலவையுடன் பல்வேறு ராஜ்யங்கள் தோன்றின.
சாகர் மற்றும் ஹூணர் போன்ற காட்டுமிராண்டித்தனமான வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் படையெடுப்புகளுக்குப் பிறகு பல வட இந்திய பாண ராஜ்யங்களும் வீழ்ச்சியடைந்தன.
________________________________________________
வில்லவர் மலையர் வானவர் சங்ககால நாணயம்.
வில்-அம்பு மலை மற்றும் மரம் சின்னம்
https://3.bp.blogspot.com/-Q5Ebqb5XTE4/W1LYuq2vnrI/AAAAAAAAEH4/1b-_GJRcWWoS9FdoOaLnvyUiGU3_BJJSQCLcBGAs/s1600/new.png
.