கனை அழைத்து வருவதற்காக 1400 கி.மீ. டூவீலர் ஓட்டிச்சென்ற ஒரு தாயின் கதையைப் படித்தோம். இது ஊருக்குப் போய் சேர 1,700 கி.மீ. சைக்கிள் மிதித்த ஓர் இளைஞனின் கதை.

ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள Bichitrapur- ஐ சேர்ந்தவர் மகேஷ் ஜெனா. 20 வயதான இந்த இளைஞர், மகாராஷ்டிரா மாநிலம் Sangli Miraj என்ற பகுதியில் உள்ள இரும்பு உருக்கு ஆலையொன்றில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைப் பார்த்து வந்தார்.

மார்ச் 24-ம் தேதி தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது பலரையும் போல், இவரும் நிலைமை சரியாகிவிடும் என்று நினைத்து காத்திருந்தார். ஆனால், அவர் பணிபுரிந்த தொழிற்சாலை மூடப்பட்டது. கையில் பணம் இல்லை. குறைந்தபட்ச தேவைகளுடன் ஒரு மாத வாழ்க்கையை நகர்த்த அவருக்கு 6,000 ரூபாயாவது தேவை. அவரிடம் இருந்ததோ 3,000 ரூபா. ஊரடங்கு எப்போது முடியும் என்று தெரியவில்லை. மறுபடியும் நீட்டிக்கப்படலாம் என்றும் சொல்லப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

காத்திருப்பதில் பொருள் இல்லை என்று நினைத்த மகேஷ், ஏப்ரல் 1-ம் தேதி தன் சைக்கிளில் கிளம்பினார். சராசரியாக ஒரு நாளைக்கு 200 கி.மீ. பயணம். இடையிடையே, தேசிய நெடுஞ்சாலைகளில் ஓட்டுனர்களுக்காக திறக்கப்பட்டுள்ள தாபாவில் உணவு. ஆங்காங்கே உறக்கம். தாபாக்களில் அவர் சந்தித்த சில லாரி டிரைவர்கள், அவர் மீது இரக்கப்பட்டு சைக்கிளுடன் லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். “ஆனால், இடையில் வழிமறித்த காவல்துறையினர் டிரைவர்களிடம் பெர்மிட்டை ரத்து செய்துவிடுவதாக மிரட்டியதால் அவர்கள் இறக்கி விட்டுவிட்டனர்” என்கிறார் மகேஷ்.

நான்கு மாநில எல்லைகளை கடந்து இருக்கும் தன் ஊருக்கு சைக்கிளில் கிளம்பிவிட்டாலும் இந்த இளைஞருக்கு எப்படி செல்வது என வழி தெரியாது. இருப்பினும், ரயில் நிலையங்களின் பெயர்களை நினைவில் வைத்து, அதைக்கொண்டு விசாரித்து சென்றுள்ளார்.

படிக்க:
கோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா ?
♦ கொரொனா நிவாரணப் பொருட்கள் : ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி மற்ற கட்சிகளுக்கு தடையா ?

மகாராஷ்டிராவில் கிளம்பி… சோலாப்பூரில் இருந்து ஹைதராபாத், விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டணம்… இவ்வாறு… நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் என்ற அளவில் நான்கு நாட்கள் பயணத்துக்குப் பிறகு ஒடிசா எல்லைக்குள் நுழைந்தார். அதன்பிறகு வீட்டுக்கு போன் செய்யலாம் என்றால் சார்ஜ் இல்லை. யாரோ ஒருவரிடம் போனை வாங்கி வீட்டுக்குப் போன் செய்து வந்துகொண்டிருப்பதைச் சொன்னார். வீட்டினர், மிகுந்த அச்சத்துடன் காத்திருந்தனர்.

ஏப்ரல் 7-ம் தேதி, வெற்றிகரமாக தன் சொந்த ஊருக்குச் சென்றார். ஆனால், ஊர் வாயிலிலேயே மக்கள் அவரை தடுத்து நிறுத்தி உரிய பரிசோதனைக்குப் பிறகே ஊருக்குள் விட முடியும் என்று சொல்லி, மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இப்போது அந்த இளைஞர் Bichitrapur-ல் உள்ள பள்ளிக்கூடத்தில் 10 நாட்கள் தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ளார்.

நன்றி : ஃபேஸ்புக்கில் பாரதி தம்பி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க