PP Letter headபத்திரிக்கை செய்தி

12.05.2020

விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை ! காவல்துறையின் தோல்வியே காரணம் !

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் சிறுமி ஜெயஸ்ரீ அவ்வூரிலுள்ள அதிமுக கிளை நிர்வாகிகளான கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகியோரால் சித்திரவதை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகிய இருவரும் இப்பகுதியில் தொடர்ந்து ரவுடித்தனம் செய்து வருவதும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருவதும் அனைவரும் அறிந்த உண்மை தான்.

குறிப்பாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி ஜெயஸ்ரீயின் சித்தப்பாவை மரத்தில் கட்டி வைத்து சித்திரவதை செய்திருக்கிறார்கள். இவ்வழக்கில் போலீசு குற்றவாளிகளுக்கு சாதகமாக இருந்து மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த போதும் ஆளுங்கட்சியின் அரவணைப்பும் அதிகார பலமும் இந்த இருவரையும் இப்பொழுது ஒரு சிறுமியை எரித்துக் கொல்லும் அளவுக்கு துணிய வைத்திருக்கிறது.

படிக்க:
♦ கார்ப்பரேட் கடன் : தள்ளுபடியா தள்ளி வைப்பா ?
♦ பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !

சிறுமியை எரித்த அன்று இரவு கலிய பெருமாளின் மகன் போலீசிடம் எங்கள் மீது புகார் கொடுத்தால் வீட்டையே எரித்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளான்.

இது ஏதோ ஒரு சம்பவம் மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சியினர் மக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பதும் அதிகார பலத்தில் திரிவதும் அதனால் பல குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அவர்களை கண்டுகொள்ளாமலும் கூட்டாளியாக போலீஸ் இருப்பதும் நடந்தேறி வருகிறது.

சிறுமியை கொலை செய்த முருகன் மற்றும் கலியபெருமாள், ஆகிய இருவருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். கலிய பெருமாளின் மகனும் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டும்.

அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் இதுவரை செய்து வந்த குற்றச்செயல்களுக்கு ஆதரவாக இருந்து வந்த தொடர்புடைய அனைத்து போலீஸ்காரர்கள் மீதும் விசாரணை நடத்தி அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தங்கள்
மருது
செய்தித்தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.