அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர் சங்கத்தலைவர் அரங்கநாதனை  பார்ப்பனர்கள் மிரட்டல் !

பத்திரிக்கை செய்தி

நாள்: 26.07.2020

கருவறையில், தமிழ் நுழைந்தாலும், தமிழன் நுழைந்தாலும், பெண்கள் நுழைந்தாலும் தீட்டாகிவிடும் என பாரப்பனர்கள் இன்றுவரை நம்மை தடுத்து வருகிறார்கள்.

ரத்தம் சிந்தி தமிழர்கள் கட்டி அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில்
சாதி வேறுபாடின்றி தகுந்த பயிற்சி முடித்த அனைவரும் அர்ச்சகராகலாம் என கோரினால் பார்ப்பனர்கள் ஆத்திரம் அடைகிறார்கள்.

அனைத்து சாதியினரும் அரசு அலுவலகங்களில் பணிசெய்வது போன்று ஏன் கோவில்களில் பணி செய்ய முடியாது?  பார்ப்பான் பிறப்பால் உயர்ந்தவன், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற சாதி இழிவை எப்படி ஏற்க முடியும்.?

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மூடப்பட்ட அனைத்துசாதி அர்ச்சகர் பயிற்சி பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் !

பெரிய கோவில்களிலும் பயிற்சி முடித்த மாணவர்களை பணியமர்த்த வேண்டும். என முகநூலில் வாட்ஸ அப் என சமூக ஊடங்கங்களில்  நாங்கள்  தொடர்ந்து  பிரச்சாரம் செய்வதை  பொறுக்க முடியாத சிலர் போனில்  என்னை மிரட்டுகிறார்கள். கடந்த காலத்தில் ஆட்களை வைத்துத் தாக்கினார்கள்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஜுலை 24-ம் தேதி காலையில் 9597187410 என்ற எண்ணிலிருந்து தமிழ்நாடு அந்தணர் சங்கத்தில்  இருந்து மாநிலத் தலைவர் பேசுவதாக ஒருவர் பேசினார்.  பிறகு ஒரு மணிநேரம் கழித்து பிராமணர் சங்கத்தில் இருந்து பேசுவதாக 7548815221 என்ற எண்ணிலிருந்து வேறு ஒருவர் பேசினார்.  பெயர் சொல்லவில்லை. “நீங்கள் ஆகம கோவில்களில் அர்ச்சகராக வரமுடியாது. ஆகமம் இல்லாத கோவில்களில் போகலாம். நீங்கள் என்ன செய்தாலும் நீங்க  ஒரு மயிறும் புடுங்க முடியாது. ஒழுங்கா இருந்துக்கோ”.என மிரட்டினார்.

படிக்க:
மதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடியுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா ?
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணை : நடப்பது என்ன ?

நேரடியாக பார்ப்பனர்களோ அல்லது அவர்கள் தூண்டுதலில் மற்றவர்கள் மிரட்டுவது, தாக்குதலில் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல. திருவண்ணாமலை அர்ச்சகர் பாடசாலையில் நாங்கள் படித்துக்கொண்டிருந்த பொழுது எங்களுக்கு ஆகமம் கற்றுக்கொடுத்த ஆசிரியரை தாக்கினார்கள். அர்ச்சகர் மாணவர்கள் சங்கம் வைத்து செயல்படுவதற்கு எதிராக என்னிடம் பேரம் பேசினார்கள் ஒத்து கொள்ளவில்லை என்பதால் தாக்கினார்கள்.

“கவனமாக அர்ச்சனை செய்யுங்கள்” என சொன்னதற்காக பெண் பக்தரை சிதம்பரம் தீட்சிதர் கன்னத்தில் அறைந்தான். தேவாரம்பாட சென்ற சிவனடியார் ஆறுமுகசாமியை  தாக்கினார்கள். இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கைகாக அர்ச்சக மாணவர்களின் பிரதிநிதியாக  பத்திரிக்கை,  தொலைகாட்சிகளில் பேசி வருகிறேன். ஆகையால் பார்ப்பனர்களால் எனக்கும் ஏதாவது நடக்கலாம்.

எனவே தமிழக மக்களின் கவனத்திற்கும், தமிழக அரசின் கவனத்திற்கும் பார்ப்பனர்களின் மிரட்டலை கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதற்காகவே  இந்த பத்திரிக்கை செய்தியை வெளியிடுகிறோம்.

போலிசில் அளிக்கப்பட்ட புகார் மனு :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

வா.ரங்கநாதன், 
தலைவர்
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் –  தமிழ்நாடு
தொடர்புக்கு : 90474 00485


இவற்றையும் பாருங்கள்…

கண்கலங்கி நிற்கும் 204 அர்ச்சக மாணவர்கள்… கவனிக்குமா தமிழக அரசு | Samayam Tamil News

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க