மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட தர்ணா போரட்டத்தில் திருச்சி பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு பங்கேற்பு !

டந்த டிசம்பர் 8, மதியம் 1 மணி அளவில் திருச்சி BHEL ஆலை வாயிலில் CITU, NDLF, LLF, DTS/AITUC, INTUC, BCEU, DR.AWU, DK, MLF ஆகிய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தொழிலாளர்கள் போரட்டத்தில் பெண்கள், சிறுவர்கள், தொழிலாளர்கள் என 300 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தை சிஐடியு தோழர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். விவசாயிகளுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் தீங்கு விளைவிக்க கூடிய விவசாய சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், மோடி அரசை கண்டித்தும் எழுச்சிகரமான கண்டன முழக்கங்கள் எழுப்பபட்டன. அதனை தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிற்சங்க தலைவர்கள் மோடி அரசையை கண்டித்தும், வேளாண் சட்டத்தில் உள்ள பிரச்சனைகளை விளக்கியும் உரையாற்றினார்கள்.

படிக்க :
♦ வேளாண் சட்டத் திருத்தம் : சந்தை ஒரு பிணம் தின்னும் கழுகு !
♦ பிகார் : வேளாண் மசோதாவுக்கு ரத்த சாட்சியாக நிற்கும் விவசாயிகள் !

அதில் பு.ஜ.தொ.மு சார்பாக தோழர் உத்திராபதி, பொதுச்செயலாளர் (BPWU) பேசுகையில் “தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கையை பின்பற்றத் தொடங்கிய நாள் முதலே தொழிலாளர் விரோத, மக்கள் விரோத சட்டங்களை இந்த அரசு அமுல்படுத்தி வருகிறது. குறிப்பாக மோடி தலைமையிலான அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குகிறேன் என்று கூறிவிட்டு குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட உத்தரவாத படுத்தாமல், அதற்கு மாறாக விவசாயிகளுக்கு எதிராக சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.

கார்ப்பரேட்டுகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு சாதாரண மக்களிடமிருந்து வரிப்பணத்தை புடுங்கி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை அளிப்பதாகவே மோடி அரசின் செயல்பாடுகள் உள்ளன. இதைப்பற்றி சிந்திக்க விடாமல், சாதி – மதக் கலவரங்கள், ராமர் கோயில் கட்டுவது, இந்திய-சீனப் போர் பிரச்சனையை கிளறிவிட்டு மக்களை பிளவுபடுத்துவது என கார்ப்பரேட் – காவி சித்தாந்தத்தை வேகமாக அமுல்படுத்தி வருகின்றனர். எனவே நாம் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த தொடர்ச்சியாகப் போராட வேண்டும்” என்று கூறி தனது கண்டன உரையை நிறைவு செய்தார்.

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக தோழர்களும் கலந்து கொண்டனர்.

தகவல்
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
திருச்சி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க