மோடி அரசாங்கத்திற்கும், பெரிய தொழில்நுட்ப தளங்களுக்கும், முக்கியமாக ‘டிவிட்டர், பேஸ்புக்’ ஆகியவற்றுக்குமிடையே சமீபத்தில் போய்கொண்டிருக்கும் போராட்டத்தில் பெருமளவிலான பாசாங்குத்தனம் இருக்கிறது. சமூக ஊடகங்களின், மதிப்புயர்ந்த சக்தியை தனது உயர்வுக்கும், மோடியின் பிம்பத்தை ஊதி பெருக்கி காட்டவும் பயன்படுத்திக் கொள்வதில், மிகப்பெரிய வெற்றியை பெற்ற அரசியல்குழு ஆளும் பாஜக அரசுதான்.

தனது வெற்றிக்கான அரசியல் பிரச்சாரத்திற்கு மட்டுமல்ல, சிறுபான்மை மக்கள் மீது, அறிவுத்துறையினர் மற்றும் அரசியல்ரீதியான எதிர்கட்சிகள் மீதும் அவதூறுகளை பொழியவும், அவர்களுக்கெதிராக பொய்களை விளம்பரப்படுத்தி விரிவாக கொண்டு செல்வதற்கும், பாஜக-வின் தகவல் தொழில்நுட்பப்பிரிவு இந்த தளங்களில் தான் செயல்படுகிறது என்பதையும் மறக்க வேண்டாம்.

படிக்க :
♦ டிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது ?
மோடியின் டிஜிட்டல் இந்தியா : ஒராண்டில் சூறையாடப்பட வங்கிப் பணம் 41,000 கோடி ரூபாய் !

கடந்த ஆண்டு மோடியின் அரசு இயந்திரம் வெற்றிகரமாக செயல்பட்டது பற்றி குறிப்பாக, முகநூலிலிருந்து விவரங்கள் அளிக்கப்பட்டன. முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக கடுமையான வெறுப்பை கக்கும் பேச்சை கண்டுகொள்ளாமல் இருப்பதன் மூலம் இந்தியாவின் ‘பொது கொள்கை தலைமை அலுவலகங்கள்’ வழியாக அந்த தளங்களுக்கு, பாஜக மோடியை பகைத்துக் கொள்ள வேணடாமெனவும், அந்த கட்சியின் அடியொற்றி அதன் பின்னால் செல்லுமாறும் வற்புறுத்தப்பட்டன.

அந்த தளங்களின் பதிவுகளில் எல்லை மீறி போகுமளவு வெறுப்பை தூண்டும் உள்ளடக்கத்தை சுட்டிக்காட்டி, முகநூலின் சொல்லிக் கொள்ளப்படும் ‘சமூக தரத்தின்’ முழுமையான மீறல்கள் குறித்து புகார்கள் இருந்தன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது டிவிட்டர், முகநூல் மற்றும் வாட்ஸ்-அப்பின் ‘என்க்ரிப்ஷன்’ (encrypted) வடிவத்திலான செய்தி பரிமாறுதல்கள், அவற்றுக்கு எதிராக மோடி அரசின் சமீபத்திய அறிக்கைகள் நியாயமாகவே, “இதெல்லாம் ஏன்?” என்ற கேள்வியை எழுப்புகிறது.

கொஞ்ச காலத்திற்கு முன்பாக, சமூக வலைத்தளங்கள் நமது ஒவ்வொருவரின் தரவுகளை ‘gazillion bytes’ அளவிற்கு சேகரித்து வைத்துக் கொண்டு, நமது பழக்க வழக்கங்கள் மற்றும் தேர்வு செய்யும் வழிமுறைகளை பணமாக்கினர். இதற்காக பெரிய தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்துவதற்கு முயன்றனர்

தனது சொந்த நாட்டு குடிமக்களைக் கண்காணிக்கும் முயற்சிகள், அரசுக்கு எதிரான கருத்துகளை ஒடுக்குவது, அரசியல் எதிர்ப்பை அச்சுறுத்துவது மற்றும் ஒன்றும் அறியாத அப்பாவி பொதுமக்கள் மீது, கட்டுப்பாடற்ற செல்வாக்குப் போர்களை நடத்துவது, போன்றவற்றை எந்த மனவுறுத்தலும் இல்லாமல் தான் நரேந்திர மோடியின் கீழ் உள்ள இந்திய அரசாங்கம் அமல்படுத்துகிறது.

“புதிய டிஜிட்டல் ஊடக விதிகள் அமலாக்கம்” என்ற பேரில் இந்திய அரசின் ஒரு கட்சிக்கு ஆதரவான செயல்பாடுகளை உணர்ந்து அதனால் தூண்டப்பட்ட சமூக ஊடக தளங்கள் இப்போது மோடி அரசின் மீது குறை சொல்ல ஆரம்பித்துள்ளன. பாஜக பிரச்சாரகரது, ‘காங்கிரசுக்கு ‘எதிரானது’ என்று சொல்லப்பட்ட’ டுவிட்டுகளை ‘புனையப்பட்ட பொய் தகவல்கள்’ என்ற முத்திரை குத்தியதினால் எரிச்சலூட்டப்பட்ட மோடி அரசு பதில் நடவடிக்கையாக டுவிட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.

வாட்ஸ்-அப் “புதிய விதிகள் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது, தனிமனித பயன்பாட்டாளர் உரிமையை அவமதிப்பது” என்ற முறையீடுகளை முன்வைத்து நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறது..

இந்த புதிய விதிகள் “ஒரு உள்ளூர் அதிகாரியை குறைதீர்க்கும் நடைமுறைகளை மேற்பார்வையிட பணிக்கு அமர்த்த வேண்டும். சட்டப்படியான ஆணை கிடைத்தவுடன் 36 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட உள்ளடகத்தை நீக்கி விட வேண்டும்” என்றெல்லாம் வற்புறுத்துகின்றன. அதோடு “இதற்கெல்லாம் ஒத்துவராத ‘இடைநிலை செயற்பாட்டாளர்கள்’ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற மிரட்டலும் சேர்ந்துள்ளது. இதனுடைய அர்த்தம, அவர்களின் தளத்தில் பயனாளிகளால் பதியப்படும் பொய்யான, வெறுப்பூட்டும் கருத்துகளுக்கு சட்டரீதியாகவே பொறுப்பேற்க வேண்டும், அவர்கள் அடையாளம் காணப்பட்டாலும் அல்லது அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் செய்தாலும்.

உள்ளே மற்றும் தன்னளவில், பெருகிவரும் ஆட்சேபிக்கதக்க உள்ளடக்கத்திற்கான குற்றத்தின் ஒரு பகுதியை கொண்டு செல்ல ஒரு மேடை தேவைப்படுவது சர்ச்சைக்குரியதல்ல. தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் அரசியலின் அனைத்து பகுதிகளையும், அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் கல்வியாளர்களும் மற்றும் பயிற்சியாளர்களும், பல ஆண்டுகளாக ஒரு மேம்படுத்தப்பட்ட கண்டறிதல் வழிமுறைகளுக்காக வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மனித உள்ளடக்க மதிப்பீட்டாளர்கள் மற்றும் மிக வலுவான செயற்கை நுண்ணறிவு / யந்திரவகை கண்டறிதல் திறன்கள் கற்றலின் அதிகரிப்பு ஆகியவை, ஆட்சேபிக்கதக்க உள்ளடக்கம் அதிகமானவுடன் அவற்றை எடுத்து போட்டுவிடும் மற்றும் யார் அவற்றை பதிகிறார்களோ அவர்களை நிறுத்திவிடும்.

இந்த உரையாடல் வேறுபட்ட ஒன்று.

தவறான காலம் :

அரசின் ஆக்கிரமிக்கும் குணம் வந்த நேரம் மோசமானதாக இருக்க முடியாது. நமக்கு ஞாபகமிருக்கும், கடந்த ஜனவரி 6 அன்று, அதிபர் பைடன் தேர்தல் வெற்றியை ஆட்சேபித்து, அமெரிக்க தலைநகரை முற்றுகையிட்டு, கலகம் செய்ததற்காக, முன்னால் அமெரிக்க அதிபர் டொனாலட் டரம்ப் கணக்கை, தனது தளத்திலிருந்து நீக்கம் செய்தது, இதே டுவிட்டர்தான். சி.பி.ஐ மற்றும் டெல்லி போலீசு காலியான இருட்டாக இருந்த டெல்லி அலுவலகங்களில் திடீர் தாக்குதலாக போய் இறங்கியதன் மூலம் டுவிட்டரை எதிர்கொள்ள இந்திய அரசு முடிவு எடுத்த போதுதான் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தடுப்பூசிகளுக்காக பேச்சுவார்த்தை நடத்த வாஷிங்டனை அடைந்திருந்தார். அதேசமயம், கோவிடால் பாதிக்கப்பட்ட இந்திய மக்கள், பைடனின் அமெரிக்காவில், தேவையில்லாத தலைப்பு செய்திகளை கொண்டு வந்தார்கள்.

கலந்துரையாடலின் ஒருபகுதியாக இந்தியாவில் அதிகரித்து வரும் “மதவெறி வன்முறை மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு கவலையளிப்பதாக இருப்பது பற்றிய” கேள்விகளை அமைச்சர் கேட்க வேண்டியிருந்தது.

”ஐரோப்பிய யூனியனின் உலகளாவிய தரவுகள் பாதுகாப்பு பகுதி”-யின் பால்நின்று கொண்டு எல்லா முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களும் -தனிப்பட்ட பயனாளர்களின் ஏராளமான தரவுகளை தொகுத்து வைத்திருந்தாலும் -உள்ளூர இருக்கும் ஆபத்துகளை எதிர்கொண்டு பயனாளர்களின் ரகசிய உரிமையை பாதுகாப்பதில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.-நிதி சம்பந்தமான தரவுகள் கசிவது குழந்தை கடத்தல் மற்றும் அரசின் கண்காணிப்பு ஆகியவை அவற்றில் அதிகம்.

டுவிட்டர் தனது அலுவலகங்களில் நடத்தப்பட்ட தேடுதல் சம்பந்தமாக “கருத்தை வெளிப்படுத்தும் உரிமைக்கு, உள்ளூர இருக்கும் பயமுறுத்தல் பற்றிய தனது கவலையை வெளிப்படுத்தியதன் மூலமும், தேவைக்கேற்றப்படி “புனையப்பட்ட பொதுத்தகவல்” “சரிபார்க்கப்படாத” அல்லது “அபாயகரமான உள்ளடக்கம்” ஆகியவற்றை எடுத்து விடுவதற்கான உறுதிமொழி மூலமும்” பதிலளித்ததில் வியப்பொன்றுமில்லை.

இந்த நாடகம் தன்னை வெளிபடுத்திக் கொண்ட போது, ‘நமது எல்லா தரவுகளையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும்’ கூகுளின் தலைவர் சுந்தர் பிச்சை ஒவ்வொருவரையும் காப்பாற்றும் பொருட்டு வந்தார். இண்டர்நெட் சுதந்திரம் ‘நிறுவப்பட்டதன்’ தன்மையை, அடிகோடிட்டு, அவர் சொன்னது” கூகுள் எப்போதும் போல ‘உறுதியாக ஆக்கப்பூர்வமாக’ அரசுடன் ஒத்துழைப்பு கொடுத்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளது” என்றார். ஆனால், ‘நிறுவனம் வெளிப்படைத் தன்மையின் அவசியத்தோடு பிணைக்கப்பட்டுள்ளது’ என்றும் கூறினார்.

“மேலும், இதனுடைய வெளிப்படைத் தன்மையான அறிக்கைகளில், அரசின் வேண்டுதல்களோடு இது இணக்கமாக போகும், எந்த சந்தர்ப்பத்தையும் முன்னிலைபடுத்த, ஒரு தொழில்நுட்பதளம் இந்தியாவின் பல்வேறு வேண்டுதல்களை இப்படிப்பட்ட வெளிப்படையான அறிக்கைகளாக வெளியிட்டால், இந்திய அரசு, உலகளாவிய அளவில் எப்படி பார்க்கபடும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் !” என்றார்.

ஒருவேளை உலகளவில் மறைந்திருக்கும், மிக மோசமான பத்திரிக்கைகளின் முகத்தில், இந்த கேள்வி சொந்த நாட்டிலும் தாக்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தகவல் தொழில்நுட்ப அமைச்சர், சமாதானமான தொனியை எடுத்துக் கொண்டார். “புதிய விதிகளுடன் இணக்கமில்லாமல் டுவிட்டர் நிறுவனம் இந்தியாவின் நீதித்துறையை குறைவாக மதிப்பிட்டுள்ளது” மற்றும் “பேச்சு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாக அது கூறியிருப்பது அடிப்படையில்லாதது தவறானது மற்றும் இந்தியாவை பற்றி அவதூறு செய்யும் முயற்சி” என்று தெரிவித்தார் அல்லது ‘நீதித்துறை வேண்டுதலின்படி பயனாளர்களின் தகவல்களை 36 மணி நேரத்துக்குள் தர வேண்டுமென அறிவுறுத்தலுக்கு வாட்ஸ்-அப் இணக்கமாகியது’ குறித்து வற்புறுத்திய போது பிரசாத் குரலில் நுணுக்கமான மாற்றத்தை கொண்டு வர வேண்டியிருந்தது அதாவது “தான் சாதாரண பயனாளர்களுக்கு என்க்ரிப்ஷன் (Encrypted) நீக்கச் சொல்லி அறிவுறுத்தவில்லை” என்று விளக்கம் கொடுத்து தனது வாதத்தை தானே மாற்றினார். (அது யாராக இருந்தாலும்)

தவறாகி போனது திட்டம்

அது எப்படி இருந்த போதும் அரசு தன்னை தானே ஒரு மூலையில் ஆதரிப்பதாக தெரிகிறது. ஆனால், தன் மீதான விமர்சனங்களை ஆன்லைனில் பொடிபொடியாக்க முயற்சிக்கும் போது ஒரு பெரிய நிறுவனத்தை எதிர்கொண்டது “பாஜக மெல்லுவதை விட அதிகமாக கடித்திருக்கலாம்”. பாஜக-வின் அரசியல் முத்திரை என்பது ஆன்லைன் இருப்பு மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்திக் கொள்வது மற்றும் துஷ்பிரயோகம் செய்வது ஆகியவற்றுடன் உள்ளார்ந்த முறையில் இயற்கையாக தொடர்புடையது. பிரதமர் நரேந்திர மோடி தனது பார்வையாளர்களான 70 மில்லியன் (ஏழு கோடி) பின்தொடர்பவர்களை இழக்க விரும்புவாரா? தனது சொந்த வாட்ஸ்-அப் பல்கலை வழியாக இவர்களின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ‘தவறான வழியில் செலுத்துவதற்காகவே‘ செய்திகளை எவ்வாறு பரப்பும்?

பிரதமர் மோடியின் செயல்முறை எப்போதுமே சமூக தளங்களை ‘திருப்பம் ஏற்படுத்தும் தனது விளக்கங்களை உருவமைக்க பயன்படுத்துவது’ என்பதுதான். ஆனால், சமீப-கடந்த காலங்களில் சில சந்தர்ப்பங்கள் இருந்தன. உதாரணத்திற்கு கடந்த ஆண்டு தொடங்கிய விவசாயிகளின் போராட்டம் இந்த ஆண்டு கோவிட்-19 இரண்டாவது அலையை எதிர்கொண்ட மோசமான தயாரிப்புகள் மற்றும் குளறுபடியான நிர்வாக குற்றங்கள். அதே சமூக தளங்கள் திரும்ப வந்து மோடி பாஜக அரசை மிகக் கடுமையாக கடித்து குதறின. பிரதமர் மோடி தனது தலைமைக்கான மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டிருந்த நேரத்தில் பெரிய தொழில்நுட்ப சமூக ஊடகங்கள் அதோடு ஆன்லைன் செய்தி ஊடகங்கள் ஆகியவற்றை கட்டுபடுத்தும் புதிய விதிகளை பற்றிய விவாதம் எல்லாம் ஒரு சேர வந்தன.

நமது பிரதமரின் இமேஜில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதும் அவரது தலைப்பு செய்தி மேலாளர்கள் எல்லாம் சுனாமி போன்று அடித்து வரும் வெளிநாட்டு மற்றும் இந்திய கெட்ட ஊடகங்களை சமாளிப்பதே பெரும் போராட்டமாகிவிட்டது என்பதும் ஊரறிந்த ரகசியமாகிவிட்டது. அதற்கான பதில் என்ற வகையில் மோடி அரசு தன்னை தாக்கியதில் மிக கடினமானதாகிய ‘பேச்சு சுதந்திரம்’ என்ற ஆயுதத்தின் பின்னால் சென்றது. சமூக ஊடகங்கள் மட்டுமல்ல சுயாதீன உள்நாட்டு டிஜிட்டல் செய்தி நிறுவனங்கள் அந்த வரிசையில் இருந்தன.

அதனால் முக்கியமான அமெரிக்க சமூக ஊடக நிறுவனங்களுடன் குறைந்த அளவு வெடிபொருளுடன் சண்டையில் ஈடுபட்டாலும் “ஆன்லைன் செய்தி உள்ளடக்கத்தை அதன் வெளியீட்டாளரின் அனுமதியின்றி அகற்றக் கூடிய எல்லையற்ற அதிகாரத்தை அரசுக்கு தரும்” புதிய அத்துமீறும் ஊடக விதிகளுக்கு உள்நாட்டு டிஜிட்டல் செய்தி ஊடகங்களிடமிருந்து இணக்கத்தை எதிர்பார்ப்பதாக ‘யாரை பயமுறுத்தி பணிய செய்துவிட முடியும்’ என்று அது நினைத்ததோ அவர்களுக்கு இந்த வாரம் ஒரு பொது அறிவிப்பு வழங்கி தனது கோபத்தை அவர்கள் மீது திருப்பியது.

சட்ட வல்லுநர்கள் ஒரே குரலில் சொல்வதெல்லாம் இத்தகைய ஆன்லைன் டிஜிட்டல் ஊடக புதியவிதிகள் “இந்தியாவின் பேச்சு சுதந்திர சட்ட விஞ்ஞானத்தின் தலையில் குட்டு வைத்துள்ளது” என்பதைதான். “டிஜிட்டல் ஊடகங்களின் அமைப்பு” ‘இந்த விதிகள் அரசியலமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 இரண்டையும் மீறுவதாக’ நீதிமன்றத்தில் சட்டரீதியாக ஆட்சேபித்து வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கெல்லாம் தாய் விதி இதுதான். இதன் கீழிருந்த இந்த விதிகள்தான் சமூக தளங்கள் OTTs மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகங்களுக்கென தனியாக கொண்டுவரப்பட்டன.

“டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்களின் சங்கம்” (இந்தியா டுடே மலையாளம் மனோரமா டைம்ஸ் ஆப் இந்தியா டைனிக் பாஸ்கர் மற்றும் NDTV ஆகியவற்றை உள்ளடக்கியது) தகவல் ஒளிபரப்பு அமைச்சருக்கு முறையீடு செய்துள்ளனர். “இப்போது இருக்கின்ற சட்டபூர்வமான மற்றும் சுயஒழுங்கமைப்பு அமைப்புகள் பிரஸ் கவுன்சில் தேசிய ஒளிபரப்பு தர நிர்ணய ஆணையம் ஆகியவை இருக்கும் போது இத்தகைய புதிய விதிகள் தேவையில்லை” என சுட்டிக்காட்டியுள்ளனர். ‘டிஜிட்டல் செய்தி நிறுவனங்களால் தொடுக்கப்பட்ட இந்த நாட்டின் உயர்நீதிமன்றங்களில் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருக்க்க் கூடிய வழக்குகளையும்’ அமைச்சருக்கு நினைவுபடுத்தினர். புதிய விதிகளை அமல்படுத்த முயற்சிக்கும் முன் இந்த வழக்குகளின் முடிவுக்காக காத்திருக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

புதிய டிஜிட்டல் விதிகளை ஆட்சேபித்து ‘சட்ட மற்றும் அரசியலமைப்பு ரீதியான வழக்குகள்’ கேரளா மற்றும் டெல்லி உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. கேரள உயர்நீதிமன்றம் மனுதாரரை (லைவ் லா) குறிவைத்து நிர்ப்பந்தம் கொடுக்கக்கூடிய எந்தவித நடவடிக்கைக்கும் எதிராக எச்சரித்துள்ளது. தி க்யுன்ட் திவயர் மற்றும் நியூஸ் மினிட் (The Quint, The Wire and The News Minute) ஆகியவை இரண்டு தனிதனியான சட்ட ஆட்சேபங்களை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன. இப்படிப்பட்ட தகவல்கள் மோடி அரசின் காதுகளுக்குள் நுழையாமல் போனதற்கு நமது மோடி அரசாங்கம் பெரிய தொழில்நுட்ப மற்றும் உள்நாட்டு செய்தி டிஜிட்டல் ஊடகங்களுடன் மோதல் பாதையை தேர்ந்தெடுத்திருப்பதையே காட்டுகிறது.

உண்மையில் மோடி அரசின் மௌனம் அதன் அகம்பாவத்தின் அடையாளம் தான். நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் சட்டமுறையீடுகளை குறித்த கடிதத்திற்கு அவர்கள் எந்த மறுமொழியும் கொடுக்காதது மட்டுமல்ல ‘அத்துமீறும் டிஜிட்டல் ஊடக விதிகளை பதினைந்து நாட்களுக்குள் அமல்படுத்த போவதாக’ குறிப்பிட்டு ஒரு அடி முன்னால் சென்றுள்ளது. “பயமுறுத்தி பணியவைப்பது கட்டாயப்படுத்துவது” போன்ற வழிமுறைகள் மோடி அரசின் இமேஜ் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்து வைக்க உதவும் என்று அனுமானித்துள்ளதையே இது காட்டுகிறது.

படிக்க :
♦ ஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை !
♦ அச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது ?

இது பலன்கள் குறிப்பிடுவது. இந்த விதிகளினால் பாதிக்கப்படபோவோரிடம் குறைந்த பட்சம் ஆலோசனைக் கூட செய்யாமல் கடந்த காலத்தில் எந்த அரசும் இந்தளவு ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதாக தெரியவில்லை. அப்புறம் எப்படி இந்த அரசு பேச்சு சுதந்திரம் அல்லது ஜனநாயக ரீதியாக செயல்படுவது ஆகியவற்றின் உறுதிப்பாட்டிற்கு கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் உரிமை கொண்டாட முடியும்?. மிக நீண்ட வரிசையில் இருக்கும் கேள்விகள் புதிய டிஜிட்டல் விதிகளை கட்டாயமாக திணிக்க முயற்சிப்பதால் மோடி அரசால் பதிலளிக்க முடியாது இந்த ஒன்றுக்கு பதலளிக்க திறனில்லாதது தான் மிக அதிகமாக சொல்லிக் கொண்டிருக்கும்.


கட்டுரையாளர் : M.K.வேணு, மாயா மிர்ச்சந்தானி
தமிழாக்கம் : மணிவேல்

செய்தி ஆதாரம் : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க