ஸ்டான் சுவாமியின் கொலை : UAPA இதற்காகத்தான் சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது
– அருந்ததி ராய்

(செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமியின் கொட்டடிக் கொலை குறித்து எழுத்தாளர் அருந்ததி ராய் வெளியிட்டுள்ள அறிக்கை)

இந்தியாவின் வெளியேற்றப்பட்ட மக்களுக்காக பல தசாப்தங்களை கழித்த 84 வயதான அருட்தந்தை ஸ்டான் சுவாமி என்ற பாதிரியாரின் காவல் கொட்டடி கொலை, நமது ஜனநாயகத்தின் காட்சி சாளரத்தில் நிகழ்ந்தது.

நமது நீதித்துறை, காவல்துறை, உளவுத்துறை மற்றும் சிறை அமைப்பு ஆகியவையே இதற்கு பொறுப்பு. நம் வெகுமக்கள் ஊடகங்களும் கூட. அவர்கள் அனைவரும் இந்த வழக்கைப் பற்றியும், அவரது உடல்நிலை மோசமடைந்து வருவது பற்றியும் அறிந்திருந்தனர். மேலும், அவர் நிலை மோசமடைவது தொடர்ந்தது.

படிக்க :
♦ நடப்பதோ தேசிய பேரழிவு ; தீர்ப்பை வரலாறு எழுதும் || அருந்ததி ராய்
♦ அருந்ததிராய் நூல் நீக்கம் : கருத்துக்களைக் கண்டு அஞ்சும் சங்க பரிவாரம் !

பீமா கொரேகான் சதி என அரசால் அழைக்கப்படும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 16 பேரில் ஒருவரான இந்த மென்மையான, பலவீனமான, ஆனால் மிகப்பெரிய மனிதர் இறந்திருக்கிறார். வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட புலனாய்வு செய்தியில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரான ரோனா வில்சனின் கணினியில் முகமைகள் சொல்லும் சதித்திட்டத்துக்காக கதை திட்டமிட்டு, சொருகப்பட்டது தடயவியல் பகுப்பாய்வு மூலம் வெளிக்கொண்டுவரப்பட்டது. அந்த செய்தி இந்திய வெகுமக்கள் ஊடகங்களாலும் நீதிமன்றங்களாலும் புதைக்கப்பட்டது.

செவ்வாய் அன்று (6.7.21), அருட்தந்தை ஸ்டானின் மரணத்திற்கு ஒரு நாள் கழித்து, வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியான செய்தி இரண்டாவது இணை குற்றம் சாட்டப்பட்ட சுரேந்திர காட்லிங்கின் கணினியிலும் ஆதாரங்கள் சொருகப்பட்டதை தெரிவிக்கிறது.

ஆனால், நம்மிடம் ஒரு சட்டம் உள்ளது, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், இது குற்றம் சாட்டப்பட்டவர்களை – இந்தியாவின் சிறந்த வழக்கறிஞர்கள், அறிவுஜீவிகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் – கிட்டத்தட்ட காலவரையின்றி, அவர்கள் உடல்நலக்குறைவால் இறக்கும் வரை அல்லது அவர்களின் வாழ்க்கை அழிக்கப்படும் வரை தொடர்ந்து சிறையில் அடைக்க நம் அரசாங்கத்தை அது அனுமதிக்கிறது.

உபா தவறாகப் பயன்படுத்தப்படவில்லை. அச்சட்டம் இதற்காகத்தான் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அருட்தந்தை ஸ்டான் சுவாமியின் மெதுவான கொலை, நம்மை ஜனநாயகம் என அழைத்துக் கொள்ள அனுமதிக்கும் அனைத்தையும் மெதுவாகக் கொலை செய்வதன் நுண்ணிய மாதிரியாகும். நாம் பிசாசுகளால் ஆளப்படுகிறோம். அவர்கள் இந்த நிலத்தை சாபத்துக்கு உள்ளாக்கியுள்ளனர்.


அனிதா
செய்தி ஆதாரம் : Scroll