டுக்கப்பட்டோரின் உரிமைகளை பாதுகாப்பதற்காக வாழ்நாள் முழுவதும் போராடி, மாவோயிஸ்ட் என முத்திரை குத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு பிணை மறுக்கப்பட்ட ஒரு வயதான மனிதரைப் பற்றி ஜமீலா இப்ராஹீம் ஒவ்வொரு நாளும் கவலைப்படுகிறார்.

அந்த மனிதர் 84 வயதான ஸ்டான் சுவாமி அல்ல. கேரளத்தில் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளிக்காக போராடியவர். அவருக்காக கவலை கொள்கிறார் ஜமீலா.

எல்கார் பரிஷத் வழக்கில் பிணைக்காக காத்திருந்து ஜூலை 5-ம் தேதி தேசிய புலனாய்வு முகமையின் காவலில் இறந்த ராஞ்சியைச் சேர்ந்த பாதிரியாரும் பழங்குடி உரிமை செயல்பாட்டாளருமான ஸ்டான் ஸ்வாமி குறித்து, 63 வயதான ஜமீலாவுக்கு குறைவாகவே தெரிந்திருக்கிறது. ஆனால், எதிர்க்குரலை முடக்குவதற்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது பற்றி தனக்கு அனைத்தும் தெரியும் என அவர் கூறுகிறார்.

ஜமீலாவின் கணவரும் தேயிலை தொழிலாளர் தலைவருமான என்.கே. இப்ராஹிம் 67 வயதானவர். 2015 –ம் ஆண்டு ஜூலை மாதம் ஊபாவின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பிணை இல்லாமல் கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

படிக்க :
♦ ஊபா (UAPA) : செயற்பாட்டாளர்களை செயலிழக்க செய்வதற்கு தான் || அருந்ததி ராய்
♦ ஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் !

செயல்பாட்டாளர் ஸ்டானின் தடுப்புக் காவலை பகிரங்கமாக கண்டித்த சிபிஎம் முதலமைச்சர் பினராயி விஜயனின் கேரள அரசு, இப்ராஹிமுக்கு எதிரான வழக்கை என்.ஐ.ஏ-விடம் ஒப்படைத்தது முரணாக உள்ளது என்கிறார் அவரது மகன் நவ்ஃபால்.

என்.கே. இப்ராஹிமுக்கு சிறையில் இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு தப்பித்தாக அவரது குடும்பத்தினரும் சிறை அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர். மேலும் கடுமையான சர்க்கரை நோய் காரணமாக, ஈறுவலி நோயால் அவதியுற்று அவர் பற்கள் அனைத்தையும் இழந்துள்ளார்.

அவரால் மென்று உண்ண முடியாது என்பதால் சிறையில் அளிக்கும் சப்பாத்தியை தண்ணீரில் ஊறவைத்து, விழுங்குகிறார். சர்க்கரை நோய்க்காக ஒரு நாளைக்கு 22 மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்” என்கிறார் ஜமீலா.

வயநாடு மாவட்டத்தில் உள்ள நெடும்காரனா கிராமத்தில் உள்ள வீட்டிலிருந்து 187 கி.மீ. தொலைவில் திரிசூர் மாவட்டத்தில் உள்ள வியூர் மத்திய சிறையில், ஜமீலாவும் நவ்ஃபாலும் வாரம் இருமுறை இப்ராஹிமை சந்திக்கிறார்கள்.

ஏப்ரல் 24, 2014 அன்று நெடும்காரனாவிலிருந்து 47 கி.மீ தொலைவில் வயநாட்டில் உள்ள வெல்லமுண்டா அருகே ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் வீட்டிற்குள் புகுந்து, மாவோயிஸ்டுகள் எனக் கூறப்படும் ஒரு குழுவுடன், காவலரின் பைக்கை எரித்த குற்றச்சாட்டில், ஜூலை 14, 2015 அன்று இப்ராஹிம் கைது செய்யப்பட்டார்.

கே.என்.இப்ராஹிம்

இப்ராஹிம் ஒரு மாவோயிஸ்ட் கூரியர் (தகவல் அளிப்பவர்) எனவும், இந்திய பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)-ன் தென்னிந்திய தலைவர் ரூபேஷ், அவரது மனைவி ஷைனா மற்றும் அவர்களது தோழர்கள் அனுப், ஜெயன்னா, கன்யா மற்றும் சுந்தரி உட்பட ஏழு பேருடன் ஆயுதமேந்திய தாக்குதலில் பங்கேற்றதாகவும் 67 வயது இப்ராஹிம் மீது குற்றம் சாட்டுகிறது போலீசு.

சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நாளில், வெல்லமுண்டாவிலிருந்து 64 கி.மீ தொலைவில் உள்ள தனது சொந்த ஊரான நெடம்பாலாவில் இப்ராஹிம் இருந்ததாக ஜமீலா கூறுகிறார். அதுவரை அவர் எந்தவொரு கிரிமினல் வழக்கையும் எதிர்கொள்ளவில்லை எனவும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் இட்டுக் கட்டப்பட்டவை எனவும், அவருக்கு ஒருபோதும் மாவோயிச தொடர்புகள் இல்லை எனவும் அவர் கூறுகிறார்.

இந்த வழக்கில் புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகள் அனைவரும் வெள்ளமுண்டா காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்ட போலீசு அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு தேயிலை நிறுவனத்தின் சதி என ஜமீலா குற்றம்சாட்டுகிறார். கடந்த பத்தாண்டுகளாக அந்த நிறுவனத்தில் அவரும் இப்ராஹிமும் பணிபுரிந்ததாகவும் ஓய்வுபெறும் வயதான 65 வயதை எட்டுவதற்கு முன், மோசமான நிதி நிலைமையை காரணம் காட்டி, நிறுவனம் தங்களை பணிநீக்கம் செய்ததாகவும் கூறுகிறார்.

அவர் பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிய இப்ராஹிமை மாவோயிஸ்ட் தலைவர்கள் ரூபேஷ், ஷைனா மற்றும் அனுப் ஆகியோருக்கு நெருக்கமான ஒரு மாவோயிஸ்ட் என போலீசாரிடம் அந்த நிறுவனம் இட்டுக்கட்டியதாகவும் ஜமீலா கூறுகிறார் .

என் கணவர் வயநாட்டில் உள்ள தோட்டத் தொழிலாளர்களிடையே பிரபலமான தலைவராக இருந்தார். 1990-களில் விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் மோசமான விளைச்சலைக் காரணம் காட்டி நிறுவனம் தொழிலாளர்களை தன்னிச்சையாக பணிநீக்கம் செய்தபோது நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்களில் முன்னணியில் இருந்தார். இந்தப் போராட்டங்களால் எரிச்சலுற்ற நிறுவனம் அவரை இலக்காகக் கொண்டது”

இப்ராஹிம் மற்றும் மற்றவர்கள் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒன்று, பாயோலியில் மாவோயிஸ்டுகளுக்காக இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கு. மற்றொன்று, வெல்லமுண்டா சோதனை தொடர்பாக, கலகம் செய்தல், அனுமதியின்றி நுழைதல், குற்றவியல் மிரட்டல் மற்றும் பயங்கரவாதம் போன்ற குற்றங்களுக்காக போடப்பட்ட வழக்கு.

படிக்க :
♦ கேரளம் : மாவோயிச நூல்கள் வைத்திருந்ததாக சி.பி.எம். மாணவர்கள் உபா சட்டத்தில் கைது !
♦ மாவோயிஸ்டுகள் என்றாலே சுட்டுக் கொல்வதா ? PRPC கண்டனம்

கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரு அமர்வு நீதிமன்றம் இந்த ஆண்டு தொடக்கத்தில் முதல் வழக்கில் இப்ராஹிம் மற்றும் அவரது சக குற்றவாளிகளை விடுவித்தது. இரண்டாவது வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என யாருக்கும் தெரியாது.

வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் முதல் வழக்கின் விசாரணையின் போது, உடல்நிலை சரியில்லாததால் இப்ராஹிம் மயங்கிவிழுந்தார்” என்கிறார் மனித உரிமை செயல்பாட்டாளரான சி.பி. ரஷீத்.

பிணை மற்றும் பரோலுக்காக இப்ராஹிமின் கோரிக்கைகள் உள்ளூர் நீதிமன்றங்களால் இதுவரை ஆறு முறை நிராகரிக்கப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இப்ராஹீமின் மூன்று பற்கள் விழுந்த நிலையில், பல் மருத்துவர் மற்றும் நீரிழிவு மருத்துவரின் ஆலோசனையின் கீழ் ஆறு மாதங்களுக்கு முன்பு மீதமுள்ள பற்கள் அகற்றப்பட்டதாகவும் இதனால் உணவு உட்கொள்வது பாதிக்கப்பட்டு கடந்த மாதம் மட்டும் 8 கிலோ எடை குறைந்துள்ளதாக அவருடைய குடும்பம் கூறுகிறது.

பினராயி அரசாங்கத்தின் பங்கு

இப்ராஹிமின் குடும்பம் கேரள அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளது. திங்களன்று, முதலமைச்சர் பினராயி விஜயன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் ஸ்டான் சுவாமி சிறையில் நடத்தப்பட்ட விதம் குறித்து கவலை தெரிவித்திருந்தார். கடந்த ஆறு ஆண்டுகளாக பிணை அல்லது விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள என் தந்தைக்கு முதலமைச்சர் ஏன் நீதியை உறுதிசெய்யவில்லை என இப்போது நான் சிந்திக்கிறேன். அதுவும் போதுமான சாட்சிகளோ, உறுதியான ஆதாரங்களோ இல்லாத வழக்கில். குறைந்தபட்சம் முதலமைச்சர் என் தந்தைக்கு போதுமான மருத்துவ உதவியை செய்யவும் கடமைப்பட்டிருக்கிறார். இதுவரை அவர் மீது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லை”

குற்றம்சாட்டப்பட்ட மற்ற ஏழு பேரில் 6 பேருக்கும் பிணை மறுக்கப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் அனைவரும் 50 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரிகிறது. கோயம்புத்தூர் சிறையில் நான்கு ஆண்டுகள் கழித்து ஷைனா மட்டும் பிணை பெற்றார். ரூபேஷ் (44) மற்றும் அனூப் ஆகியோர் கோவையில் சிறையில் உள்ளனர். மீதமுள்ளவர்கள் மைசூர் மற்றும் பெங்களூரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பயோலி மற்றும் வெள்ளமுண்டா வழக்குகளில் குற்றம் சாட்டப்படுவதற்கு முன்னர் ஏழு பேரும் வேறு பல வழக்குகளில் கைது செய்யப்பட்டனர்.

கொலை அல்லது பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனை பெற்ற 200 க்கும் அதிகமான சிறைக் கைதிகள் கடந்த ஆண்டு முதல் வியூர் மத்திய சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டதாக திருச்சூரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

pinarayi-vijayanபரோலில் விடுவிக்கப்பட்டவர்களில் சிபிஎம் தலைவர் டி.பி. சந்திரசேகரன் கொலை வழக்கில் தண்டனை பெற்ற கோடி சுனி, முஹம்மது ஷாஃபி மற்றும் கிர்மானி மனோஜ் ஆகியோரும் கொலை செய்வதற்கென்று அமர்த்தப்பட்ட கூலி ஆட்களும் அடக்கம். கொலையை திட்டமிடுதல், தங்கம் கடத்தல், சிறையில் இருந்து போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளும் சுனி மீது சுமத்தப்பட்டுள்ளன.

எப்படி இருந்தாலும், இப்ராஹிம் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.

கடந்த ஆறு ஆண்டுகளில், அவர் இரண்டு முறை மட்டுமே வீட்டிற்குச் செல்ல முடிந்தது. அதுவும் இறுக்கமான போலீசு பாதுகாவலரின் கீழ். ஒவ்வொரு முறையும் ஒரு நாள் மட்டுமே அவருக்கு பரோல் வழங்கப்பட்டது” என்கிறார் ஜமீலா .

கோவிட்டின் இரண்டாவது அலை தொடங்கியதும், மூன்றாவது அலையும் வரும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். நாங்கள் மீண்டும் பிணை பெறுவதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளோம்” என்கிறார் நவ்ஃபால்.

அவருக்கு கடுமையான நோய்கள் இருப்பதால் நாங்கள் கவலைப்பட்டோம். கொடூரமான குற்றங்களைச் செய்பவர்கள் பிணையும் பரோலும் பெறும்போது, குறைந்தபட்சம் என் தந்தைக்கு நீதியை உறுதி செய்ய வேண்டும்.”

குடும்பத்தின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கு இணங்கி, சிறை அதிகாரிகள் இப்ராஹிமுக்கு சில மருத்துவ சிகிச்சையை வழங்கியதாக நவ்ஃபால் நன்றி கூறினார். ஆனால், தங்களுடைய குடும்பத்தின் ஏழ்மை நிலையால் செயற்கை பற்களை கட்டுவதற்குக்கூட இயலவில்லை என்கிறார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஜெ.தேவிகா, கே.சச்சிதானந்தன், மீனா கந்தசாமி உள்ளிட்ட முக்கிய எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விஜயனுக்கு கடிதம் எழுதி இப்ராஹிமை விடுவிக்குமாறு வலியுறுத்தினர்.

சித்திக் கப்பன் (உத்தரபிரதேசத்தில் ஊபாவின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட கேரள பத்திரிகையாளர்) மற்றும் ஹனி பாபு (எல்கார் பரிஷத் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கல்வியாளர்) வழக்கில் நீங்கள் செய்ததைப் போலவே இப்ராஹிம் வழக்கிலும் சரியான நேரத்தில் தலையீடு செய்ய வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் பினராயி அரசின் தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் இல்லை.

சித்திக் காப்பான், ஹனி பாபு விவகாரத்தில்  பினராயி விஜயன் மத்திய அரசுக்கும் உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் எந்தவொரு முடிவும் கிடைக்கவில்லை.

கேரளாவின் ஆளும் சிபிஎம் ஊபா போன்ற கடுமையான சட்டங்களுக்கு எதிரானது எனக் கூறிக்கொண்டாலும், விஜயனின் அரசாங்கம் எதிர்க்குரல்களை ஒடுக்குவதற்கு ஒரு கருவியாக இதைப் பயன்படுத்துவதாக விமர்சிக்கப்படுகிறது.

சி.பி.எம் குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு மாணவர்களான ஆலன் மற்றும் தாஹா ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சி கொள்கைகளை விமர்சிக்கத் தொடங்கியபோது பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தப்பட்டு என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஆலன் இப்போது பிணையில் வந்துள்ளார். ஆனால், தாஹா இன்னமும் சிறையில் இருக்கிறார்.

செய்திகட்டுரை : கே..ஷாஜி
நன்றி : டெலிகிராப் இந்தியா
தமிழாக்கம் : கலைமதி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க