உத்தரப் பிரதேசத்தில் அமைதியாக போராடிய விவசாயிகள் மீது பாஜக அமைச்சரின் மகன் காரை ஏற்றி படுகொலை செய்திருக்கிறான். இந்த நிகழ்வைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்று வேளாண் மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி, அரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் டெல்லி மாநகருக்குள் பேரணி சென்ற விவசாயிகள் மீது ஒன்றிய மோடி அரசு துப்பாக்கிச் சூடு, தடியடி நிகழ்த்தியதற்குச் சற்றும் குறையாத வகையிலான வன்முறையை தற்போது விவசாயிகள் மீது ஏவியுள்ளது ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாசிச பாஜக கிரிமினல் கும்பல் பல இடங்களில் அதற்கான வேலைகளைச் செய்யத் துவங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் இருக்கும் டிக்குனியா கிராமத்திற்குச் சென்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடி வாகனங்களை மறித்து நடந்து சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஆசிஷ் மிஸ்ரா விவசாயிகள் மீது காரை ஏற்றிவிட்டு, தப்பியோடியுள்ளான்.
படிக்க :
♦ அரியானா : போராடிய விவசாயிகள் மீது போலீசு கொலைவெறித் தாக்குதல் !
♦ டெல்லி : விவசாயிகளின் தொடர் போராட்டத்தை சிதைக்கத் துடிக்கும் NHRC !
இதில் அந்த இடத்திலேயே இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர். விவசாயிகள் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல், போலீசும் அங்கு கடுமையான தாக்குதலை நிகழ்த்தியுள்ளது.
இதில் 4 விவசாயிகள், 4 பொதுமக்கள், 1 பத்திரிகையாளர் ஆகிய 9 பேர் மரணமடைந்துள்ளனர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவும், செல்போன் இணையச் சேவை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது மாவட்ட நிர்வாகம்.
அப்பகுதிக்குச் சென்று கள நிலவரம் அறியச் சென்ற அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி ஆகியோரை தடுத்து நிறுத்தி கைது செய்திருக்கிறது உத்தரப் பிரதேச போலீசு.
लखीमपुर खीरी में किसानों को गाड़ियों से जानबूझकर कुचलने का यह वीडियो किसी की भी आत्मा को झखझोर देगा।
पुलिस इस वीडियो का संज्ञान लेकर इन गाड़ियों के मालिकों, इनमें बैठे लोगों, और इस प्रकरण में संलिप्त अन्य व्यक्तियों को चिन्हित कर तत्काल गिरफ्तार करे।
#LakhimpurKheri@dgpup pic.twitter.com/YmDZhUZ9xq
— Varun Gandhi (@varungandhi80) October 5, 2021
ஏர்கலப்பைகள் மண்ணை மட்டுமே “உழுவதை” நிறுத்தும் காலம் விரைவில் வரும்….