உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி || பாகம் 1 || வீடியோ

கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி மதுரையில் ம.க.இ.க-வின் உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் உரையாற்றிய தோழர்கள் குருசாமி, ராமலிங்கம் உரை || காணொலி

டந்த அக்டோபர் 22-ம் தேதி மதுரையில் ம.க.இ.க-வின் உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. அக் கருத்தரங்கில் மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் குருசாமி வரவேற்புரையாற்றினார். “சமூக பிரச்சனைகளில் இருந்து தான் மட்டும் எப்படி தப்பிப்பது என மக்களில் ஒவ்வொருவரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நமது அனைத்து பிரச்சனைக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளையே காரணம் என்பதை இந்த ஆவணப்படம் சொல்கிறது” என்று தனது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.
அடுத்தாக, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் கூட்டத்திற்குத் தலைமையேற்று, தலைமையுரையாற்றினர். தனது உரையில், “கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்ற அடிப்படையில் ம.க.இ.க தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. நாம் பல்வேறு கலை வடிவங்களில் மக்களுக்கான அரசியலை எடுத்துச் செல்கிறோம் என்பதை தமிழக மக்கள் அறிவார்கள்.
ம.க.இ.க. கடந்துவந்த  பாதையில், பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு, தமிழ் மக்கள் இசை விழா, விடுதலைப் போரின் வீர மரபு எனும் மாபெரும் நிகழ்ச்சி, தில்லை நடராசர் கோவிலில் தமிழில் பாடும் போராட்டம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக்கும் போராட்டம் என பல முன்னனி போராட்டங்களை ம.க.இ.க. நடத்தியுள்ளது.

படிக்க :

ஆவணப்படம் : “உப்பிட்டவரை…” || ம.க.இ.க.

விழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது ?

ஆவணப்படங்களை பொருத்தவரை, 2015-ம் ஆண்டு டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டத்தை மக்கள் அதிகாரம் உக்கிரமாக எடுத்து நடத்தியது. டாஸ்மாக் கடை உடைப்பு, கைது, சிறை என்று தமிழகத்தின் பல பகுதிகளில் போராடி வந்த  தருணத்தில், “அம்மாவின் மரணதேசம்” என்ற ஆவணப்படம் கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக்கால் சீரழிந்த கிராமங்களை மையப்படுத்தி ம.க.இ.க தயாரித்து வெளியிட்டது.
அதே போல, 2017-ம் ஆண்டு, குமரியைத் தாக்கிய ஒக்கிப் புயலின் காரணமாகவும், இந்திய அரசும், தமிழக அரசும் மீனவர்களை அலட்சியப்படுத்தியதன் காரணமாகவும் நிகழ்ந்த துயரச் சம்பவங்களை படம்பிடித்து வெளிகொணரும் விதமாக அமைந்தது, ஒக்கிப்புயல் ஆவணப்படம்.
தற்போது 2021-ல் உப்பிட்டவரை என்ற இந்த ஆவணப்படம் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கை அவலங்களை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அரசியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் மக்களிடம் அரசியலைக் கொண்டு செல்வதே மிகவும் முக்கியமானது அந்த வகையில் அமைந்ததுதான் இந்த ஆவணப்படம்.
இந்த ஆவணப்படத்திற்கான உழைத்த தோழர்கள் அனைவரும் அர்பணிப்புடன் செயல்பட்டனர். இதே போன்ற பல கலைவடிவங்களில் மக்களின் அவலங்களை கொண்டுவரவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டவேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாக நான் பார்க்கிறேன்”. என்று தன் தலைமை உரையை நிறைவு செய்தார்.
தோழர்கள் இருவரின் உரையை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.

காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க