மிகவும் சிக்கலான குழாய்களின் மூலம், கிரேட்டர் மும்பையின் முனிசிபல் கார்ப்பரேஷன் சுமார் 15 மில்லியன் குடிமக்கள் பயன்படுத்தும் வகையில் தினசரி 4 பில்லியன் லிட்டர் குடிநீரை மும்பை நகரத்திற்கு வழங்குகிறது.
தொழில்நுட்ப ரீதியாக அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக நகரத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் போதுமான தண்ணீர் (வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட) சேவை நிலை அளவுகோலின்படி தினசரி 135 லிட்டர் பூர்த்தி செய்யும் நிலை உள்ளது.
உயர்தட்டு குடிமக்களுக்கு கார்ப்பரேசன் அதிக மானிய கொடுத்து 1000 லிட்டருக்கு ரூ.5 என்ற  விலையில் விற்கிறது. ஒரு உயர்ந்த சமுதாயத்தில் வாழும் ஒரு குடிமகன் தினசரி தன் நுகர்வுக்கு 240 லிட்டர் வரை தண்ணீரை பெறுகிறார். மறுபுறம் முறைசாரா குடியேற்றங்களில் உள்ள குடிமக்கள் (சேரிகளில் அங்கீகரிக்கப்படாத மக்கள்) தண்ணீருக்காக ரூ.40 முதல் ரூ.120 வரை அதிகமாக பணம் செலுத்துகிறார்கள்; அவர்களுக்கு ஒரு நாளைக்கு 20 லிட்டர் மட்டுமே  கிடைக்கிறது.
வரலாற்று ரீதியாக ‘மேல்சாதி இந்துக்கள்’, சாதி ஏணியின் அடித்தட்டு மக்களுக்கு தண்ணீர் மறுப்பது இந்தியாவில் ஒரு தொடர் கதையாக இருந்து வருகிறது. ஹைட்ராலிக் சிட்டி என்ற நூலில் ஆசிரியரான நிகில் ஆனந்த், குடிமக்களாக இருக்க தகுதியானவர்கள் மற்றும் பெருநகரத்தில் முறைசாரா முறையில் குடியேறியவர்கள் இடையே இன்று வரை நீர் பகிர்ந்தளிப்பதில் நிலவும் பாகுபாட்டைப் விளக்குகிறார்.
1995-ல் பம்பாய் ‘மும்பை’ஆனது, மேலும் மக்கள் நகரத்திற்கு இடம்பெயர்வதைத் தடுக்க, 1995-க்குப் பிறகு அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு தண்ணீர் வழங்கக் கூடாது என்று அரசு சுற்றறிக்கை வெளியிட்டது. இந்த மனிதாபிமானமற்ற கொள்கையை பானி ஹக் சமிதி உள்ளிட்ட சிவில் அமைப்புகள் மற்றும் குடிமக்கள் உயர்நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்.
படிக்க :
பாலஸ்தீனயர்களுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் || படக்கட்டுரை
மும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை !
டிசம்பர் 15, 2014-ல் பம்பாய் உயர்நீதிமன்றம் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு எதிராக தீர்ப்பளித்தது. “தண்ணீர் பெறும் உரிமை இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் வாழும் உரிமையின் ஒருங்கிணைந்த பகுதியாகும்” என்று கூறியது. மேலும், பல குடும்பங்கள் குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாகவும், ‘அறிவிக்கப்பட்ட’ சேரிகளின் கட்-ஆஃப் தேதியை ஜனவரி 1995 முதல் ஜனவரி 2000 வரை நீட்டிக்கவும் இந்த தீர்ப்பு கூறியது.
ஆனால், தீர்ப்பு இருந்தபோதிலும் எந்த மாற்றங்களும் இதுவரை செய்யபடவில்லை.
கொரோனா காலங்கள் அடித்தட்டு மக்கள் சுகாதாரமற்ற தண்ணீரை பயன்படுத்துவதினால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டனர். உயர்தட்டு குடிமக்களுக்கு குறைந்த விலையில் அதிக தண்ணீரும், அடித்தட்டும் மக்களுக்கு அதிக விலையில் குறைந்த தண்ணீரும் வழங்குவதென்பது சாதிய ஒடுக்குமுறையாகும். உயிர்வாழும் அடிப்படை உரிமைக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்படும் மும்பை முனிசிபாலிட்டி கார்ப்பரேசனுக்கு எதிராக மும்பை நகர உழைக்கும் மக்கள் போராட வேண்டும்.
பல முறைசாரா குடியிருப்புகளில் இது போன்ற பிளாஸ்டிக் பைகளில் உள்ள தண்ணீர் ரூ.2-3க்கு விற்கப்படுகிறது.
தெற்கு மும்பையில் உள்ள கீதா நகரின் முறைசாரா குடியேற்றத்தில் இந்து கடவுளான சிவனின் வரைபடம் தண்ணீர் இல்லாத காலி கேன்கள் இருக்கும் இடத்தில் வரையப்பட்டுள்ளது.
கீதா நகர் (தெற்கு மும்பை) குடியிருப்பாளர்கள் தங்கள் துணிகளை துவைக்க தண்ணீர் மிகவும் குறைவான நீரோடையை நம்பியுள்ளார்கள்.
தெற்கு மும்பையில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்பில் உள்ளூர் பிளமர்களின் கூட்டு முயற்சியில் அமைக்கப்பட்ட மிதக்கும் குழாய்கள் இங்கே காணப்படுகிறது.
கொரோனா காலத்தின் போது சமூக விலகல் விதிமுறைகளின் காரணாமாக காத்திருக்கும் நேரம் அதிகரித்ததால், முறைசாரா குடியேற்றங்களில் தண்ணீர் ஒதுக்கீட்டின் அளவு மற்றும் வரிசையில் அவர்களிடையே அடிக்கடி சண்டைகள் நிகழ்ந்தன.
சித்தார்த் நகரில் (மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதி) வசிப்பவர் ஒருவர் 20 லிட்டர் தண்ணீரை எடுத்து செல்கிறார். இது மும்பை முனிசிபல் கார்ப்பரேசன் வழங்கிய வாரத்திற்கான குடும்ப தேவைக்கான தண்ணீரில் பாதி அளவே, கூடுதல் தண்ணீருக்கு பகுதியில் உள்ள சொசைட்டியால் தண்ணீர் வழங்கப்படவில்லை. அதிக விலைக்கு தனியார் சப்ளையர்களை நம்பியிருக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
அந்தேரி மேற்கில் உள்ள சித்தார்த் நகரைச் சேர்ந்த தையல்காரரான ஜெய் மதி, சட்டப்பூர்வ வழிமுறைகள் மூலம் தனது மக்களுக்கு தண்ணீர் இணைப்பைப் பெற்றுத் தர தொடந்து முயன்று வருகிறார். அவரது விண்ணப்பத்தின் ஒரு பகுதியாக முனிசிபாலிட்டியிடம் தண்ணீர் கோரிய 3 ஆண்டுகளா போராட்டத்தின் ஆவணங்களை காட்டுகிறார். இன்னும் சித்தார்த் நகருக்கு சட்டப்பூர்வ குடிநீர் இணைப்பு கிடைக்கவில்லை.
கௌலா புந்தர் (முறைசாரா தொழில்துறை பகுதி) என்ற தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியில், அங்கீகரிக்கப்பட்ட விலையை விட 40 மடங்குக்கு மேல் தண்ணீர் விற்கப்படுகிறது. இங்கே படத்தில் பகுதி மக்கள் தஙக்ள் காலை வழக்கத்தை செய்கிறார்கள்.
பல முறைசாரா குடியேற்றங்களில் (அவற்றில் பாதிபகுதிகள் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படாதவை), பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் அனைத்துத் தேவைகளுகும் தினசரி 50 லிட்டருக்கும் குறைவாகவே (உலக சுகாதார அமைப்பால் கட்டளையிட குறைந்தபட்சத் தொகைக்குக் கீழே) பெறுகிறார்கள்.
முனிசிபல் கார்ப்பரேசன் விண்ணப்பப்படி தண்ணீர் இணைப்புக்கு 5 குடும்பங்கள் கூட்டாக விண்ணப்பிக்க வேண்டும். படத்தில், GTB நகரில் (மத்திய மும்பை) வசிப்பவர்கள் உள்ளூர் வார்டு அலுவலகத்திற்கு வெளியே புதிய தண்ணீர் இணைப்புக்காக 7 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆனந்த், (14 வயது) என்ற வீடற்ற சிறுவனால், இலவசப் பள்ளிப்படைப்பைத் தொடர முடியவில்லை. போரிவலியில் (நகரின் வடக்கே) உள்ள எக்ஸார் நுல்லாவில் பாயும் ஓர் ஓடையில் மிகவும் குறைவான கசிவுத்தண்ணீரில் இருந்து ஒரு டம்பாவில் தண்ணீர் நிரப்புவதற்கு ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக செலவிடுகிறான்.
பொதுவாக பெண்கள்தான் தண்ணீர் சேகரிப்பு மற்றும் வீட்டு உபயோகத்திற்கான சுமையை சுமக்க வேண்டும். மும்பையின் லோயர் பரேல் பகுதியில் எடுக்கப்பட்ட படம்.
ரயில்வேக்கு சொந்தமான நிலங்களில் வசிக்கும் அடித்தட்டு மக்கள் தேசிய தொழில் வகைப்பாடு (National Occupational Classification – NOC) பெற முடியாததால் சட்டப்பூர்வ குடிநீர் இணைப்புகளுக்கு தகுதியாற்றவர்களாக உள்ளார்கள். படம் : மேற்கு ரயில் பாதையில் தினமும் 7 தண்டவாளங்களைக் கடந்து, தண்ணீர் கசிவில் இருந்து தண்ணீரை நிரப்பும் ஒரு பெண்.
இந்த பிரம்மாண்ட கட்டிடங்களின் ஒவ்வொரு அறையிலும் அதிக மானிய விலையில் (1000 லிட்டருக்கு ரூ.5.40) வரம்பற்ற நீர் விநியோகம் செய்யப்படுவதால், தண்ணீர் கிடைக்காத அடித்தட்டு மக்கள் அதிகவிலை கொடுத்து குறைவான தண்ணீரை பெறுகிறார்கள் என்பதை வசதியுள்ள குடிமக்கள் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது.

சந்துரு
செய்தி ஆதாரம் : த வயர்
புகைப்படங்கள் : சூரஜ் கத்ரா புகைப்படக் கலைஞர் மும்பை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க