ரவல்லி – உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்று – டெல்லியில் இருந்து தென்மேற்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இருப்பினும், இந்த பழைய மலைகள் சட்டவிரோத சுரங்கங்களின் காரணமாக படிப்படியாக மறைந்து வருகின்றன.
2002-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ஆரவல்லி பகுதி முழுவதும் சுரங்க நடவடிக்கைகளுக்கு தடை விதித்த போதிலும், கடந்த ஆண்டில் பல சட்டவிரோத சுரங்கங்கள் இயங்கியுள்ளது. அரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தில் உள்ள ஆரவல்லிகளின் பந்தலா மலைகளில், 2021-2022-ம் ஆண்டில் (மலையேறுபவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் செல்லாத) எட்டு மாத கால இடைவெளியில் 30 முதல் 40 அடி வரை குன்றுகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.
“ஏழு முதல் எட்டு மாதங்களில், ஒரு முழு மலையும் அழிக்கப்பட்டு, தின்று பல மீட்டர்கள் பின்னால் தள்ளப்பட்டது” என்று ஆரவல்லி பச்சாவ் இயக்கத்தின் நிறுவனர் – நீலம் அலுவாலியா மற்றும் இயக்கத்தின் மற்றொரு உறுப்பினரான ஜோதி ராகவன் கூறினார்.
படிக்க :
♦ ஆரவல்லியை கூறுபோட்டு விற்கும் பா.ஜ.க !
♦ அரியானா : உச்சநீதிமன்ற ஆசியோடு விரட்டியடிக்கப்படும் தொழிலாளர்கள் !
வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன், குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (NGT) ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது ஆரவல்லி பச்சாவ் இயக்கம். கடந்த ஆண்டில் சட்டவிரோத சுரங்கம் தொடர்பான புகார்களுக்கு போலீசுத்துறை உள்ளிட்ட உள்ளூர் அதிகாரிகள் பதிலளிக்கவில்லை, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இயக்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த மே 23 அன்று, ஆரவல்லி மலைத்தொடரில் சட்டவிரோத சுரங்கத்தை கண்காணிக்கவும் தடுக்கவும் தவறியதற்காக அரியானா மற்றும் மத்திய அரசுகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டித்தது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தங்கள் பதில்களை தாக்கல் செய்யுமாறு பல அரசுத் துறைகளுக்கு உச்ச பசுமை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அரியானா வனத்துறை, சுரங்கம் மற்றும் புவியியல் துறை மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை அடங்கும்.
அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள கோட்டா கண்டேவ்லா கிராமத்திற்கு அருகில் சட்டவிரோத சுரங்கம். புகைப்படம்: ஆரவல்லி பச்சாவோ குடிமக்கள் இயக்கம்
ஆரவல்லி மலைத்தொடர், இலையுதிர் காடுகள் மற்றும் புதர்க்காடுகளை உள்ளடக்கியது, ராஜஸ்தான், அரியானா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் மலைத்தொடர் விரவிக்கிடக்கிறது. 2018-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்திய குழுவின் (CEC) அறிக்கை, ராஜஸ்தானில் 1968-ம் ஆண்டு முதல் சட்டவிரோத சுரங்கங்கலால் ஆரவல்லி மலைத்தொடரின் 25 சதவீத மலைகளை இழந்துள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளது.
அலுவாலியாவின் கூற்றுப்படி, உச்ச நீதிமன்றத்தால் 2002 தடை செய்யப்பட்டபோதிலும் அப்பகுதியில் சுரங்கத் தடையை அமல்படுத்துவதற்கான “அரசியல் மற்றும் நிர்வாக விருப்பமின்மை” என்பதே அது தடையின்றி தொடர்வதற்குக் காரணம். ஆரவல்லியில் சுரங்கம் தோண்டுவதில் நிர்வாக அக்கறையின்மை புதிதல்ல. இந்த சட்டவிரோத சுரங்கங்கள் உள்ளூர் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது.
ஜனவரி 2022-ல், அரியானாவின் பிவானி மாவட்டத்தின் தாதம் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். அக்டோபர் 2021-ல், அப்பகுதியில் உள்ள சட்டவிரோத சுரங்கங்கள் குறித்து உள்ளூர் போலீசு நிலையத்தில் உள்ளூர்வாசிகள் புகார் அளித்துள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்ட துறைகள் – மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உட்பட – எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
படிக்க :
♦ கவுத்தி – வேடியப்பன் மலை : கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் போராட்டம்!
♦ தாளவாடி வனப்பகுதி : பழங்குடி மக்களை அச்சுறுத்தும் புலிகள் காப்பகமும் – கார்ப்பரேட் நலனும் !
டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தை இயற்கை எழில் கொஞ்சும் இடமாக காண்பிக்கும் ஆரவல்லி மலைத்தொடர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவிக்கிடக்கிறது. இந்த மலைத்தொடரில் சட்டவிரோதமான சுரங்கங்கள் தோண்டப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டவிரோத சுரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதிலிருந்தே, அரசின் அனைத்து துறைகளும் கூட்டு சேர்ந்துகொண்டு மலைத்தொடரை கொள்ளையடித்து அழித்துக் கொண்டிருக்கின்றன என்பது தெளிவாக தெரிகிறது.
சட்டவிரோத சுரங்கங்களிடமிருந்தும், அதற்கு துணைபோகும் அரசிடமிருந்தும் ஆரவல்லி மலைத்தொடரை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

புகழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க