ரவல்லி மலைத்தொடர் வனப்பகுதியை ஒட்டிய ஃபரிதாபாத் மாவட்டத்திற்கு உட்பட்ட, கோரிக்கான் என்ற சேரி பகுதியில் அதிகளவிலான கூலி தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தலித், சிறுபான்மை மக்கள் இரண்டு தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இப்பகுதியில் 173 ஏக்கர் நிலப்பரப்பில்  உள்ள 10,000-க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற அம்மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது. அரியானா மாநில அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரியும், வீடுகள் இடிக்கபடுவதற்கு முன்னர் பாதுகாப்பு கோரியும் அப்பகுதி மக்கள், போராடும் இயக்கங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகினர்.

படிக்க :
♦ தீவுத்திடல் குடிசைகள் இடிப்பு : எடப்பாடி அரசின் அடாவடித் திமிரும் தீண்டாமையும்..
♦ அகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் !

உச்சநீதிமன்றம் ஜூன் 7-ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கியது. கோரிக்கான் பகுதியில் உள்ள குடிசை பகுதியை உடனடியாக அகற்றுமாறு அம்மக்களுக்கு எதிராக அநீதியான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனை கண்டித்து குடியிருப்புகளை அகற்ற கூடாது என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நீதிமன்றமோ தனது அநீதியான தீர்ப்புக்கு ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள காடுகளைப்  பாதுகாப்பதாக கூறி ’நியாயம்’ கற்பிக்கிறது. ஆனால், அதே பகுதியில் மலைத்தொடரை ஒட்டி உயர்தர தங்கும் விடுதிகள், அப்பார்ட்மெண்ட்ஸ், 500-க்கும் மேற்ப்பட்ட பண்ணை வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், சட்டத்திற்கு புறம்பாக சுரங்கங்கள் செயல்படுகின்றன. அப்பகுதியில் உள்ள காடுகளை பெரும் தொழில் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன.

சாதரண குடிசை அமைத்து வாழக் கூடிய கூலி தொழிலாளர்களை வன ஆக்கிரம்மிப்பாளர்களாகவும், விரோதிகளாகவும் சித்தரிக்கும் உச்சநீதிமன்றமும் ஒன்றிய அரசும், அம்பானி, அதானி, டாடா மற்றும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தன் விருப்பத்துக்கு ஏற்றது போல் இயற்கை வளங்களை  கொள்ளையடிக்கவும், காடுகளை அழிப்பதையும், பெரும் சுற்றுலா தளங்கள் அமைக்கவும் சிவப்பு கம்பளம் இட்டு வரவேற்கின்றன.

மக்களுக்கு அடிப்படை உரிமையை மறுக்கும் அரசு, கார்ப்பரேட் கொள்ளையடிக்க அனைத்து அனுமதியையும் உடனே வழங்க சூற்றுச்சூழல் சட்டத்தையே மாற்றி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

அரியானா மாநில அரசின் நடவடிக்கையால் கோரிக்கான் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட வீடுகள் தற்போது இடிக்கப்பட்டுவிட்டன. தொடர்ந்து இடிக்கபட்டும் வருகின்றன. கோரிக்கான் பகுதியில் மட்டும் 20,000 மேலான குழந்தைகள், சிறுவர்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். 5000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசின் இந்த மனித தன்மையற்ற செயலால் வீடுகளை இழந்தும், கொரோனாவால் வேலை இழந்தும் வாடகை கொடுக்க கூட பணம் இல்லாமலும் திறந்த வெளியில் வாழும் நிலைமைக்கு அம்மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் அடிப்படை சட்ட உரிமையான உயிர் வாழ்வதற்கான உரிமையின்படி மக்களுக்கு தங்குமிடத்தை உத்திரவாதம் செய்வது அரசின் கடமை.

ஆனால், அதைப்பற்றி வாய் திறக்காத உச்ச நீதிமன்றமோ, நிதிகேட்டுச் சென்றவர்களை வீதியில் தள்ளுவதற்கு விரைந்து நடவடிக்கை வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. உழைக்கும் மக்களுக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது என்பதை மீண்டும் நிருபித்து இருக்கிறது இத்தீர்ப்பு.

ஏற்கனவே 1990-களில் ஆரவல்லி மலைத்தொடர்களில் உள்ள காடுகளை அழித்து சுரங்க பணிகள் மேற்கொள்ளபட்டன. இச்சுரங்க செயல்பாடுகளால் சீரழிக்கப்பட்ட பகுதி தான் கோரிக்கான் ஆகும். மக்கள் வாழமுடியாத ஒரு பகுதியாக தான் இருந்தது.

அப்பகுதியை வியர்வையும், ரத்ததையும் சிந்தியும் பல ஆயிரங்கள் செலவு செய்தும் மறுசீரமைத்து அம்மக்கள் குடியிருப்புக்களை அமைத்துள்ளனர். இன்றும் அப்பகுதியில் மின்சார வசதி கிடையாது, குடிநீர் வசதி கிடையாது. எந்த அடிப்படை வசதியும் அரசு செய்து தரவில்லை.

அரியானா மாநில அரசும், உச்சநீதிமன்றமும் சொல்வது போல், காடுகளை பாதுகாப்பது இவர்களின் நோக்கம் அல்ல. கோரிக்கான் பகுதியானது டெல்லி மெட்ரோ சிட்டிக்கு உட்பட்ட பகுதியாகவும், ஸ்மார்ட் சிட்டியின் ஒரு பகுதியாகவும் உள்ளது. அப்பகுதியில் பெரும்பாலும் தலித், சிறுபான்மை, தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான் வாழ்கின்றனர்.

நகரத்தில் இருந்து சேரியை அப்புறப்படுத்துவது  என்ற பார்ப்பனிய திட்டத்தின் அடிப்படையிலும், வளர்ச்சி, சூற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் கார்ப்பரேட்களுக்கான பொலிவுறு நகரத்தை அமைக்கவும் தான் கோரிக்கான் பகுதி மக்கள் விரட்டியடிக்கப் படுகின்றனர்.

படிக்க :
♦ நாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை
♦ அசாம் : 70 ஆண்டுகளாக வீடு, சாலை, மின்சாரம் இல்லாமல் வாழும் பழங்குடிகள் !

இது நாட்டின் ஒரு பகுதியில் மட்டும் நடக்கவில்லை, சிங்கார சென்னை என்ற பெயரில் அதனை சுற்றியுள்ள சேரி பகுதியை காலி செய்வது, குஜராத்- மும்பை புல்லட் ரயில் திட்டம், அகமதபாத் மெட்ரோ திட்டம், மும்பை பெருநகர வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் கார்ப்பரேட் நலனுக்காக  உழைக்கும் மக்களை நகர்புறத்திலிருந்து அப்புறப்படுத்தும் வேலையை வேகமாகச் செய்து வருகின்றன ஒன்றிய, மாநில அரசுகள்.

எனவே, போராடும் கோரிக்கான் பகுதி மக்களின் போராட்டத்திற்கு துனை நிற்போம். வளர்ச்சி என்ற பெயரால் கொண்டுவரப்படும், மக்களின் வாழ்வாதரத்தை பறிக்கும் தனியார்மய – தாராளமய கொள்கையின் ஒரு பகுதியான ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தை எதிர்த்து போராடுவோம்.

பிரபு
செய்தி ஆதாரம் : countercurrents, countercurrents2

முகநூலில் : Revolutionary Students Youth Front – Rsyf
disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க