சாதி ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாகும் டெலிவரி தொழிலாளர்கள் !

நவீன கொத்தடிமைகளாக இருக்கும் இவர்கள், ஒருபக்கம் டெலிவரி நிறுவனங்களால் குறைந்த சம்பளத்திற்கு வேலைசெய்து தனது இளமையை இழக்கின்றனர். மறுபுறம், சாதிவெறியர்களால் தாக்குதலுக்குள்ளாகிறார்கள்.

0
வினீத் குமார் ராவத் Zomato நிறுவனத்தில் டெலிவரி வேலை செய்துவருகிறார். கடந்த ஜூன் 18 அன்று ஆஷியானா பகுதியின் செக்டார் எச் பகுதியில் உணவு டெலிவரி செய்ய அஜய் சிங்கின் வீட்டுக் கதவைத் தட்டினார் ராவத். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் வீட்டில் வசிப்பவர்கள் அவரது கைகளில் இருந்து உணவை வாங்க மறுத்துவிட்டனர்.
ராவத் தனக்கு நேர்ந்த கொடுமையை போலீசுக்கு அளித்த புகாரிலும் வீடியோவிலும் கூறுகிறார். கதவைத் திறந்த ஒருவர் அவரது பெயரையும் சாதியையும் கேட்டார். ராவத் தனது பெயரைச் சொன்னதும் அவர் முகத்தில் புகையிலையை துப்பியுள்ளார்.
“அஜய்யின் சகோதரர் அபய் சிங் கதவைத் திறந்தார். அவர் நான் ஒரு பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிந்து சாதிரீதியாக அவதூறு செய்தார். அபய் ஆர்டரைப் பெற மறுத்து, பசியின் (பட்டியலிடப்பட்ட சாதி) கையிலிருந்து உணவை எடுக்க மாட்டோம் என்று வாங்குவாதத்தில் ஈடுபட்டனர்” என்று ராவத் தனக்கு நேர்ந்த சாதிய கொடுமையை விவரிக்கிறார்.
உணவு ஆர்டரை என்னிடம் இருந்து வாங்க விருப்பவில்லை என்றால், அந்த ஆடரை ரத்து செய்யுமாறு அஜய்யிடம் ராவத் கேட்டுக் கொண்டார். சாதிவெறியுடன் இருந்த அஜய், ராவத் மீது புகையிலையை துப்பியது மட்டுமல்லாமல், சாதி ரீதியாக கேவலப்படுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் 10 முதல் 12 பேர் அஜய் வீட்டில் இருந்து வெளியே வந்து ராவத்தை அடிக்க ஆரம்பித்தனர். அவர்கள் தடி மற்றும் கம்பியால் தாக்கியதாக ராவத் கூறுகிறார்.
படிக்க :
♦ தொழிலாளர்களை சுரண்டும் சொமாடோ – ஸ்விகி !
♦ ‘கிக்’ தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் அர்பன் நிறுவனம் !
தடியால் தாக்கியபோது, ராவத் ஹெல்மெட் அணிந்திருந்ததால் ராவத் தலைப்பகுதியில் காயம் ஏற்படவில்லை. ஆனால், ராவத் அந்த சாதிவெறி பிடித்த கும்பலால் மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார் என்பது உடலில் ஏற்பட்டிருக்கும் காயங்கள் மூலம் நாம் உணரமுடியும். ராவத் கடந்த நான்கு வருடங்களாக டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார். இது போன்ற ஒரு சம்பவத்தை கடந்த காலத்தில் நான் சந்தித்ததே இல்லை என்று கூறுகிறார்.
ராவத்தின் புகாரின் பேரில், அபய் சிங் மற்றும் 10-12 குற்றவாளிகள் மீது வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், 147, 148, 323 மற்றும் 504 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
கடந்த 2019-ம் ஆண்டு Zomato தொழிலாளி இதுபோன்ற ஓர் சாதி ரீதியான அடக்குமுறையை சந்தித்துள்ளார்.
ஜூலை 30, 2019 அன்று, மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரைச் சேர்ந்த அமித் சுக்லா, டெலிவரி செய்ப்வர் “இந்து அல்லாதவர்” என்பதால், தனது ஆர்டரை ரத்து செய்தது பற்றி ட்வீட் செய்தார். டெலிவரி பாயை மாற்றவும், பணத்தைத் திருப்பித் தரவும் Zomato மறுத்துவிட்டதாகவும் அவர் புகார் கூறினார்.
படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல், தன் வயிற்று பிழைப்புக்காகவும், தன் குடும்ப வறுமையை போக்கவும், வெயிலியும் மழையிலிலும் உணவு ஆடர்களை டெலிவரி செய்துவருகின்றனர். நவீன கொத்தடிமைகளாக இருக்கும் இவர்கள், ஒருபக்கம் டெலிவரி நிறுவனங்களால் குறைந்த சம்பளத்திற்கு வேலைசெய்து தனது இளமையை இழக்கின்றனர். மறுபுறம், சாதிவெறியர்களால் தாக்குதலுக்குள்ளாகிறார்கள்.
நவீன கொத்தடிமைகளாக இருக்கும் இத்தகையை டெலிவரி தொழிலாளர்கள் புரட்சிகர சங்கமாய் இணைந்து தனது உரிமைக்காகப் போராடுவதே அவர்களின் உடனடிக் கடமையாக இருக்க முடியும்.

காளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க