privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம் | மக்கள் அதிகாரம் வரவேற்கிறது

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் அமலாக்கத்துறை மூலம் கைது செய்வது, அமலாக்கத்துறை சோதனைகள், வருமானவரித்துறை சோதனைகள் என்று தினமும் நடந்தேறி வருகின்றன.

மோடிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியவர் மீது தாக்குதல்! | மக்கள் அதிகாரம் கண்டனம்

கோவையில், இனிவரும் காலங்களில் மோடிக்கு எதிராக பொதுவெளியில் பேசவும், பிரச்சாரம் செய்யவும் முடியாத நிலையை உருவாக்க ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி கும்பல் முயற்சித்து வருகிறது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து ஆர்.எஸ்.எஸ்- பி.ஜே.பி குண்டர்படையினருக்கு எதிரான களப்போராட்டத்தை முன்னேடுக்க வேண்டும்.

விசிக, மதிமுக, நாம் தமிழர் கட்சிகளுக்கு தனிச் சின்னம் மறுப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

சிறிய கட்சிகளை ஒழித்துக் கட்டி பெரிய கட்சிகள், கார்ப்பரேட் கட்சிகள் மட்டுமே தேர்தல் ஜனநாயகத்தில் போட்டியிட முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இப்படிப்பட்ட தேர்தல் ஆணையம் ஒரு நேர்மையான தேர்தலை நடத்துமா?

ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்! || மக்கள் அதிகாரம்

ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியை ராஜினாமா செய்ய மறுக்கும் பட்சத்தில், அவரை தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது! || மக்கள் அதிகாரம் கண்டனம்

அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை, தேசிய புலனாய்வு முகமை ஆகியவைகள் கலைக்கப்பட வேண்டும் என்பதை முன்னிறுத்தி மக்கள் போராட்டங்களை உருவாக்க வேண்டும்.

ஆசிரியர் உமா மகேஸ்வரி மீதான பணியிடை நீக்க உத்தரவை திரும்ப பெறுக!

தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து போராடி வரக்கூடிய ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்களின் மீதான நடவடிக்கை தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகிறது.

“உயர்நீதிமன்றத்தில் தமிழ்” – உழைக்கும் மக்களே! வழக்குரைஞர் போராட்டத்திற்கு துணைநிற்போம்!

சென்னையில் நடக்கும் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு போலீசுத்துறை தற்போது தடை விதித்திருக்கிறது. மக்கள் அதிகாரத்தின் சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.

“உயர்நீதிமன்றத்தில் தமிழ்” வழக்குரைஞர் போராட்டம் வெல்க! | துண்டறிக்கை

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலக்கியம் இலக்கணம் என செழுமைமிக்க மொழியானது நம்முடைய மொழி. தமிழைக் காக்க பல நூறு பேர்தங்கள் உயிரை தியாகம் புரிந்திருக்கிறார்கள். இந்தித் திணிப்புக்கு எதிராக மொழிப்போர் கண்டதும் நம் தமிழ் மொழியே. இப்படிப்பட்ட தொன்மை வாய்ந்த வரலாறு படைத்த நம் தமிழ் மொழிக்கு ஏன் இன்னும் உயர் நீதிமன்றத்தில் மட்டும் இடமில்லை?

மக்கள் அதிகாரம் மூன்றாவது பொதுக்குழு தீர்மானங்கள்

முதன்மையான கட்சிகளுக்கு நிகராக மக்கள் அதிகாரம் நடப்புப் பிரச்சினைகள், மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக உடனுக்குடன் குரல் கொடுத்துள்ளது. தோழமை அமைப்புகள் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பாசிசத்திற்கு எதிராக போராடி முன்னேறி வருவதை இப்பொதுக்குழு வாழ்த்தி வரவேற்கிறது.

தமிழ்நாடு அரசே! கொலைகார ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்று!

ஸ்டெர்லைட்டை மூடியது அரசு அல்ல; வீரம் செறிந்த தூத்துக்குடி மக்களின் தியாகமே ஸ்டெர்லைட்டை மூடியது. உச்ச நீதிமன்றம் அல்லது எந்த ஒரு அதிகார அமைப்பாக இருந்தாலும் சரி மீண்டும் ஸ்டெர்லைட்டை திறப்பதற்கு முனைந்தால் அது தூத்துக்குடி மக்களின் போராட்டமாக மட்டும் இருக்காது.

தி கேரவன் பத்திரிகையின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் பாசிச மோடி அரசை கண்டிக்கின்றோம்!

2023 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகள், செய்தி இணையதளங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் வெளியான கட்டுரைகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரிவிக்காமலேயே அகற்ற தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு அவசரக்கால அதிகாரங்களை வழங்கியுள்ளது.

ரஃபா எல்லை: இது இன்னொரு முள்ளிவாய்க்கால்!

பாசிஸ்டான இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்கள் இஸ்ரேலில் நடந்து கொண்டிருக்கும் போதும் கூட, இன அழிப்புப் போரை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

பாசிச மோடியின் ஆட்சியை வீழ்த்த டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகளை வரவேற்போம்!

மக்கள் அதிகாரம் நீதி கேட்டுப் போராடும் விவசாயிகளை வரவேற்கிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்த நாட்டு மக்களின் ஆதரவு எப்போதும் உள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களை உருவாக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

நேற்று அயோத்தி ! இன்று ஞான வாபி ! தொடரும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் !

மோடியின் பாசிச நடவடிக்கையை இனி ஒருபோதும் நீதிமன்றங்கள் மூலம் தடுத்து நிறுத்த முடியாது. மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டியமைப்போம்! ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க; அம்பானி -அதானி பாசிச கும்பலுக்கு முடிவு கட்டுவோம் என்று மக்கள் அதிகாரம் அறைகூவி அழைக்கிறது.

ஹேமந்த்  சோரன் கைது ! வெறி பிடித்து அலையும் மோடி அரசு !

02.02.2024 ஹேமந்த்  சோரன் கைது ! வெறி பிடித்து அலையும் மோடி அரசு ! பத்திரிகைச் செய்தி ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நேற்றைய தினம் தனது பதவியை இராஜினாமா செய்தார்.அன்றைய தினமே அவர் அமலாக்கத்துறையில்...

அண்மை பதிவுகள்