உளுந்தூர்பேட்டை: இளம்பெண் ஆணவப் படுகொலை | ம.அ.க
நன்றாக நீச்சல் தெரிந்த அபிஷா கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை. அவரது தந்தை கூறுவதிலிருந்து இது ஒரு ஆணவப் படுகொலையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம். ஆனால் போலீசோ இது ஒரு தற்கொலை என்ற வரம்பில் மட்டுமே வழக்குப்பதிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரா சாதிப் பஞ்சாயத்து: பெண் அரை நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்!
வெளிப்படையாக, தங்களின் கண்முன்னே நடைபெற்ற இக்கொடூரத்தை யாரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர் என்பதே மிகப்பெரிய வேதனையாகும். அதிலும் அதனை காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளனர். அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி மனித நேயத்தையும், மனித உணர்வுகளையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
உ.பி.: பொதுக் குழாயில் நீர் அருந்தியதற்காக தலித் சிறுவன் மீது கொலைவெறித் தாக்குதல்
சிறுவன் குழாயில் தண்ணீர் குடித்ததையும், அருகிலிருந்த வாளியைத் தொட்டதையும் கண்டு சாதிவெறித் தலைக்கேறிய சஞ்சய் ராஜ்புத், அவனது சகோதரன் தீபக் மற்றும் கூட்டாளிகளான சாகர் குமார், பாட்டியா குமார் ஆகியோருடன் இணைந்து, சிறுவனின் ஆடைகளைக் களைந்து கொடூரமாகத் தாக்கியுள்ளான்.
காதலி கண்முன் காதலன்; மகள் கண்முன் தாய் – தொடரும் ஆணவப் படுகொலை பயங்கரங்கள்!
ஆணவக் கொலைகளுக்கு எதிரான சிறப்புச் சட்டம் இயற்றவும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. இந்துத்துவ கும்பலையும், ஆதிக்க சாதிவெறி சங்கங்களையும் தடை செய்ய உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் ஆகியோர் ஒன்றிணைந்து களமிறங்கிப் போராட வேண்டும்.
கிருஷ்ணகிரி – போத்தசந்திரம்: சாதி மறுப்பு மணம் புரிந்த பெண்ணை கொடுமைப்படுத்தும் பெற்றோர்!
தேஜாஸ்ரீ மற்றும் அவரது கணவர் தீபக் ஆகியோருக்கு நிரந்தரமாக பாதுகாப்பு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் தேஜாஸ்ரீ யின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் கிருஷ்ணகிரி மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
சாதி ஆதிக்கத்திற்கு எதிராக “பெருவிழா” ஊடகத்தின் களமாடல்!
எமது சமூக ஊடகப் பரப்புரையைப் பார்த்து சமூக உணர்வு - சாதிய எதிர்ப்புணர்வு கொண்டவர்கள் எமது தோழமை அமைப்பில் இணைய முன்வந்துள்ளனர். தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.
பேருற்சாகத்துடன் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா!
தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகளும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஆதிக்கச் சாதிவெறியர்களின் தாக்குதல்களும் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில், தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா நடத்தப்பட்டிருப்பதானது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்று ஜனநாயக சக்திகளில் பலரும் பெருவிழா ஊடகத்திற்கு பேட்டியளித்திருக்கின்றனர்.
நாங்குநேரி பெரும்பத்து: ஒரு தேர்தல் புறக்கணிப்பின் ரத்தமும் கண்ணீரும்!
திரைப்படத்தில் காணாமல் போன “அத்திப்பட்டி” கிராமத்தைப் போல, பெயரற்ற நிலையில் இந்த “இந்திரா காலனி” மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிக்பாஸ் வீட்டில் கூட சண்டையிட்டுக் கொண்டு 30 நாட்கள் வாழ்ந்துவிடலாம்; ஆனால் எங்கள் ஊரில் நிலவும் சாதி வெறிக்கு மத்தியில் 10 நாட்கள் வாழ்வதுகூட நரகம் தான்.
ம.பி: குதிரை ஊர்வலம் சென்ற தலித் மணமகனைத் தாக்கிய ஆதிக்கச் சாதிவெறியர்கள்!
“என் சகோதரரைக் குதிரையிலிருந்து கீழே தள்ளி எங்களை அடித்தனர். நால்வர் எங்களைத் தாக்கினர். இந்த மாதிரி குதிரை ஊர்வலம் உங்களுக்கு கிடையாது என்று வெளிப்படையாகக் கூறினர்” என்று ஆதிக்கச் சாதிவெறியர்களின் வெறியாட்டம் குறித்து தாக்குதலுக்கு ஆளான கோலுவின் சகோதரி விவரித்துள்ளார்.
அருந்ததியர் சாதியைச் சேர்ந்த வழக்கறிஞரைத் தாக்கிய பள்ளர் சாதி வெறியர்கள்
பள்ளர் சாதியைச் சார்ந்த கிஷோர், சக்கரவர்த்தி, திலீபன் ஆகிய மூன்று சாதிவெறியர்களும் தெருவிற்குள் நுழைந்து “சக்கிலிய பயலெல்லாம் எங்கள பாத்து போக சொல்லுவியா” என்று வழக்கறிஞர் மாரிமுத்து மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு “அடுத்த மாசம் உன்தெருவுல எப்படி திருவிழா நடக்கும்னு பார்ப்போம்” என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.
விருதுநகர்: சாதிய வன்கொடுமைக்கு எதிராகத் தேர்தலைப் புறக்கணிக்கும் அச்சந்தவிழ்த்தான் மக்கள்
வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் தனிப்பிரிவு எனப் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த மக்கள், தங்களது கிராமத்தின் பெயரை “வடக்கு அச்சந்தவிழ்த்தான்” என அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
நாங்குநேரி சாதிவெறியாட்டம்: தேர்தலைப் புறக்கணிக்கும் பெரும்பத்து மக்கள்!
தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, பெரும்பத்து நீதி கேட்கிறது. ஜான் மார்க், திரிநாத் கட்டா, தாக்குதலுக்குள்ளானவர்கள் உள்ளிட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான, நீதியின் குரல்தான் அப்பகுதி மக்களின் தேர்தல் புறக்கணிப்பு.
வன்கொடுமைகளின் கூடாரமாகும் தமிழ்நாடு
தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. கும்பலே ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களில் ஊடுருவி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இத்தகைய தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. அதன் மூலம் கலவரங்களை தூண்டிவிட்டு ஆதிக்கச் சாதி மக்களை திரட்டிக்கொள்ள விழைகிறது.
கேரளா: பேராசிரியர்களின் சாதி வெறிக்கு பலியான தலித் மாணவன்!
தனக்கு பேராசிரியர்களால் ஏற்படுகின்ற சாதி வன்கொடுமைகள் குறித்து கல்லூரி முதல்வரிடம் மாணவர் புகார் அளித்தும் பேராசிரியர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கல்லூரி முதல்வரும் தன்னுடைய சாதி வெறியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே மாணவர் உயிரிழந்திருப்பது பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தால் அரங்கேற்றப்பட்ட நிறுவனப் படுகொலையாகும்.
கரூர்: அருந்ததியர் மக்கள் மீது அரங்கேற்றப்படும் தீண்டாமைக் கொடூரம்!
பல ஆண்டுகளாக அருந்ததியர் மக்கள் கடவுளை வழிபடத் தடை, இறந்தவர்களின் உடலை பொது மயானத்தில் அடக்கம் செய்வதற்குத் தடை, தெருவுக்குள் செருப்பு அணிந்து வரத் தடை என ஆதிக்க சாதிவெறியர்களால் அருந்ததியர் மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடூரங்கள் தீண்டாமையின் உச்சமாகும்.
























