டெல்லியில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவின் பெருநகரங்களிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் நகரமாக டெல்லி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, பாசிச பா.ஜ.க கும்பல் ஆட்சியைக் கைப்பற்றும் மாநிலங்கள் அனைத்திலும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தீவிரமடைவது ஒரு தொடர் போக்காகவே உள்ளது.
ஹோமியோபதியில் அரசு கல்லூரியிலேயே முதுநிலை பட்டப்படிப்பு வேண்டும்; ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மாவட்ட அரசு மருத்துவமனை வரை ஹோமியோபதிக்கான உள்கட்டமைப்பு உருவாக்கி வேலைவாய்ப்பினை வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் மூன்று நாட்களாகப் போராடி வருகின்றனர்.
நீட் மோசடி: NTA-ஐ கலைத்திடு!
வேண்டாம் நீட்! வேண்டும் ஜனநாயகம்! | தோழர் ரவி
https://youtu.be/PLgZAe2pkmA
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
மே 1ஆம் தேதியே ராஜஸ்தானின் சிகார் பகுதியில் இந்த வினாத்தாள் சுழற்சிக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது. இது மாணவர்களிடம் 25,000 ரூபாய் முதல் 40 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில், 600 மதிப்பெண்களுக்கான கேள்விகள் தேர்வுக்கு முன்னரே கசிந்துள்ளன.
78 மாணவர்களின் வாழ்க்கையில் ஓராண்டை அழித்துவிட எத்தனிக்கிறது நிர்வாகம். பல்கலைக்கழகத்திடம் மாணவர்கள் முறையிடவே, அவர்கள் ஏதோ தங்களுக்கு தொடர்பே இல்லை என்பது போலவும், நீங்கள் கல்லூரியிடம்தான் கேட்கவேண்டும் என்றும் பதிலளித்து தனது தார்மீக பொறுப்பை கைகழுவியுள்ளனர்.
குழந்தை திருமணம் நடைபெறுவதற்கு பல்வேறு சமூக, பொருளாதார காரணங்கள் இருக்கின்றன. இவற்றைக் களையாமல் குழந்தை திருமணத்தைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆகையால், குழந்தை திருமணத்தைத் தடுக்க அரசியல் - பொருளாதார மாற்றுத் திட்டங்களை முன்வைத்துப் போராட வேண்டிய அவசியம் உள்ளது.
22 சதவீதம் பெண் பத்திரிகையாளர்கள் தங்கள் தொழில்முறை வேலையிலேயே கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கின்றனர். சான்றாக ஒரு அரசியல்வாதியைப் பற்றி எழுதுவதற்கு முன்பாக ஆபத்து வரும் எனத் தெரிந்தால், அந்தச் செய்தியை எழுதாமல் தவிர்ப்பது, வன்முறையைத் தூண்டும் குழுக்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்ப்பது என்று தங்களைத் தாமே கட்டுப்படுத்திக் கொள்கின்றனர்.
தேஜாஸ்ரீ மற்றும் அவரது கணவர் தீபக் ஆகியோருக்கு நிரந்தரமாக பாதுகாப்பு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் தேஜாஸ்ரீ யின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் கிருஷ்ணகிரி மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
கூனிக் கிடந்த
தொழிலாளி வர்க்கம்
முதுகெலும்பின் கூர்முனையால்,
முதலாளித்துவத்தின் மார்பில்
செங்குருதி கொண்டு செதுக்கிய
மாபெரும் விடுதலை வரலாறு,
இன்னும் முற்றுப் பெறவில்லை!
இரத்தத்தை,
வியர்வையை
காலங்காலமாய் உறிஞ்சிக் கொழுத்து, கார்ப்பரேட் காட்டேறியாய் வளர்ந்து,
முழு உலகும் போதாதென
பாசிச வெறியேறிச் சுற்றித் திரிகிறது,
முதலாளித்துவம்!
பறிக்கப்பட்ட
நம் உரிமைகளைப்
பச்சை மாமிசமென மென்று தின்ன,
மிச்சமிருக்கும்
சட்ட வேலிகளை உடைத்து,
வழி சமைத்துக் கொடுக்கின்றன
‘காவல்’ எந்திரங்கள்!
மின்னல்களைத் தரிக்கும்
மாபெரும் போராட்டத்தின் இடிமுழக்கமாய்,
நம் முன்னே எஞ்சி நிற்கிறது,
சுரண்டலின் இருள் வானத்தை
சுடர் விட்டெரிக்கும்...
உழைக்கும் வர்க்கம் நாட்டின் முதுகெலும்பு என்பதை சந்தேகத்திற்கிடமின்றி இரண்டாவது உலக யுத்தம் நிரூபித்தது. உழைக்கும் மக்கள் மட்டும் பிளவுபட்டிருந்தால், பாசிசம் தனது அதிகாரத்திற்கு உலகையே நாசகர யுத்தத்தில் மூழ்கடித்திருக்கும்.
“சிலந்தியும் ஈயும்” வெளிவந்த காலத்தில் வெகுவாய் வரவேற்கப்பட்ட பிரசுரமாய்த் திகழ்ந்தது. பாட்டாளிகளிடையே அரசியல் உணர்வை உயர்த்துவதற்கு அருஞ்சேவை புரிந்தது. சுரண்டும் சிலந்திக்கும் சுரண்டப்படும் ஈக்கும் இடையிலே நிலவும் பகை முரண்பாடுகளை லீப்னெஹ்ட் புலப்படுத்துகிறார்.
எமது சமூக ஊடகப் பரப்புரையைப் பார்த்து சமூக உணர்வு - சாதிய எதிர்ப்புணர்வு கொண்டவர்கள் எமது தோழமை அமைப்பில் இணைய முன்வந்துள்ளனர். தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகளும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஆதிக்கச் சாதிவெறியர்களின் தாக்குதல்களும் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில், தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா நடத்தப்பட்டிருப்பதானது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்று ஜனநாயக சக்திகளில் பலரும் பெருவிழா ஊடகத்திற்கு பேட்டியளித்திருக்கின்றனர்.
திரைப்படத்தில் காணாமல் போன “அத்திப்பட்டி” கிராமத்தைப் போல, பெயரற்ற நிலையில் இந்த “இந்திரா காலனி” மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிக்பாஸ் வீட்டில் கூட சண்டையிட்டுக் கொண்டு 30 நாட்கள் வாழ்ந்துவிடலாம்; ஆனால் எங்கள் ஊரில் நிலவும் சாதி வெறிக்கு மத்தியில் 10 நாட்கள் வாழ்வதுகூட நரகம் தான்.
“என் சகோதரரைக் குதிரையிலிருந்து கீழே தள்ளி எங்களை அடித்தனர். நால்வர் எங்களைத் தாக்கினர். இந்த மாதிரி குதிரை ஊர்வலம் உங்களுக்கு கிடையாது என்று வெளிப்படையாகக் கூறினர்” என்று ஆதிக்கச் சாதிவெறியர்களின் வெறியாட்டம் குறித்து தாக்குதலுக்கு ஆளான கோலுவின் சகோதரி விவரித்துள்ளார்.

























