Saturday, June 14, 2025
முகப்பு பதிவு பக்கம் 474

மெர்சல் : ஒரு மசாலா மெசேஜ் உண்மை பேசுமா ?

42

மெர்சல் படம் வசூல்ல ஏறக்குறைய வெற்றிதான்னு ஊடக விமர்சகர்கள் சொல்றாங்க. ரசிகர்களைப் பொருத்தவரை ஏற்கனவே தெரிஞ்ச மசலான்னாலும், மெசேஜ் ஸ்ட்ராங்கா இருக்குன்னு ரசிக்கிறாங்க. படத்துல மருத்துவ உலகின் ஊழல், பிரச்சினைகளை மக்கள் பார்வையில சொல்றதாலா பிடிச்சிருக்குன்னு சொல்றாங்க. அதுல ஆங்காங்கே மத்திய, மாநில அரசு மீது விமர்சனம் வருவதால கொஞ்சம் தைரியமா படம் பேசுதுன்னு அவங்க நினைக்கிறத புரிஞ்சுக்குறோம்.

ஆனால் மருத்துவத்துல பிரச்சினைன்னு காட்டுறதும், தீர்வுன்னு சொல்றதிலும் சில விமர்சனங்களை உங்கள் முன்னாடி வைக்கிறோம்.

படத்தோட இறுதிக் காட்சியில கோர்ட்டு முன்னாடி விஜய் பேசுற சீன் வரும். அதுல “7% ஜி.எஸ்.டி வரி வாங்குற சிங்கப்பூர்ல மருத்துவத்தை இலவசமா மக்களுக்கு தர முடியுறப்போ, 28% ஜி.எஸ்.டி வாங்குற நம்ம அரசாங்கத்தால ஏன் இலவசமாக மருத்துவத்த தர முடியலை” -ன்னு விஜய் கேட்கிறார். இது நியாயமான கேள்விதானேன்னு மக்கள் சந்தோஷப்படுறாங்க. அந்தப் படி பாத்தா பாஜக தலைவருங்களுக்கு எரிச்சல் வந்துதானே ஆகணும்?

படத்துல மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் குறை சொல்லப்படுவதை கண்டிப்பதாக பாஜக தமிழிசை பொங்குறாரு. ஒருவேளை போன 2014 பாராளுமன்றத் தேர்தல்ல மோடி தமிழகத்திற்கு வந்த போது நடிகர் விஜய் கோவை விமான நிலையத்தில் காத்திருந்து பார்த்தவர்தானேன்னு ஒரு இளக்காரம் தமிழிசைக்கு இருக்கலாம்.

ஆனா இந்த சிங்கப்பூர் ஜி.எஸ்.டி விவகாரத்தை தமிழிசையும் அலசுறாரு. அதாவது சிங்கப்பூர்ல 80% மக்கள் வரிகட்டுவதாகவும், இங்கேயும் அப்படி கட்டுவதற்கு (பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி) மோடி அரசு முயற்சிக்கும் போது இப்படி விமர்சிக்கிறார்களேன்னு அவரும் நியாயம் பேசுராறு.

தமிழிசையும், நடிகர் விஜயும் சிங்கப்பூர் நாட்டை ஒத்துமையா ஆதரிக்கிறாங்க!

இப்ப விசயத்துக்கு வருவோம். படத்தில பேசுற விஜயும் சரி, வெளியே பேசுற தமிழிசையும் சரி இரண்டு பேருமே சிங்கப்பூரை ஆதரிச்சு பேசுறாங்க! அதுல அவங்களுக்கு கருத்து வேறுபாடு கிடையாது. ஆனா நம்மளப் பொறுத்த வரைக்கும் அவங்க இரண்டு பேரோட கருத்துமே அதாவது சிங்கப்பூர் ஏதோ ஒரு ஆசிய சொர்க்கம்ங்குற கருத்து தவறுங்கிறதோடு, உண்மையை உங்களுக்கும் சொல்றோம்.

சிங்கப்பூர்ல இலவச மருத்துவம்னே ஒண்ணு கிடையாது. நம்மூரு ஆரம்ப சுகாதார நிலையம் மாதிரி சிங்கப்பூர்ல அரசாங்கத்தோட பாலி கிளினிக்னு ஒண்ணு இருக்கு. அங்க போனா ஒரு சராசரி கட்டணத்தை வசூலிப்பாங்க. அத குறைவும்னு சொல்ல முடியாது. அதிகம்னு சொல்ல முடியாது. ஆனா நிச்சயம் இலவசம்னு ஒண்ணும் கிடையாது. நம்மூரு நிலவரத்த வைச்சு பாத்தா அந்த குறைஞ்ச கட்டணம் ஒரு சராசரிக் கட்டணும்னு சொல்லலாம். ஆதாரம் கேட்குறவங்க, “ஹெல்த்கேர் சிஸ்டம் இன் சிங்கப்பூர்னு” விக்கிபீடியாவுல தேடிப்பாருங்க.

இலவசம் இல்லேங்கிறது மட்டுமில்ல, எல்லா சிகிச்சைக்கும் ஒரே மாதிரியான கட்டணமும் கிடையாது. நோய்க்கு தகுந்த மாதிரி கட்டணமும் கூடும் குறையும். ஏன் இப்படி இலவசமாக கொடுக்கலியேன்னு கேட்டா, பொது சுகாதரத்துறையின் நிதி ஒதுக்கீட்டை அப்படி காலி பண்ண முடியாதுன்னு சிங்கப்பூர் அரசாங்கம் ஆரம்பத்திலேயே முடிவு எடுத்திருக்காம்.

அதிகம் செலவு பிடிக்கிற சிகிச்சைன்னு வந்தா சிங்கப்பூர்ல கொஞ்சம் மானியம் கொடுக்கிறாங்க. ஆனா குறைவான செலவு சிகிச்சைன்னு வந்தா அங்க மானியமே கிடையாது. அதாவது ஒரு சாதாரண காய்ச்சல், சளி, வயிற்று வலின்னு அரசோட பாலி கிளினிக் போனீங்கன்னா தனியார் மருத்துவமனை மாதிரியான கட்டணத்தையே வசூலிக்கிறாங்க. அதுக்கு டிஸ்கவுண்டு கிடையாது.

அப்புறம் அங்க சம்பளத்துல மருத்துவத்துக்குன்னு கண்டிப்பா ஒரு தொகையை பிடிப்பாங்க. அந்த தேசிய காப்பீட்டுத் திட்டத்தோட பேரு Medisave மெடிசேவ். அந்த தொகையை வெச்சு அந்தந்த ஊழியரோட குடும்பம் மருத்துவ செலவுக்கு பயன்படுத்திக்கலாம். இது இந்தியாவிலும் இருக்கு, அமெரிக்காவிலும் இருக்குது. ஆனா எங்கேயும் இது நிச்சயமா இலவசம் கிடையாது. ஏன்னா உங்க சம்பளத்துல இருந்து மாதாமாதம் ஒரு தொகையை பிடிச்சுகிட்டு தேவை வரும்போது அதை நீங்க செலவழிக்கலாம்கிறது எப்படி இலவசமாகும்?

சிங்கப்பூரில் இலவச மருத்துவம்கிறது ஒரு வடிகட்டிய பொய்!

மெடிஷீல்டுன்னு (Medishield) இன்னொன்னு காப்பீட்டு திட்டமும் அங்க இருக்கு. ஆனா இதை வெச்சு ஒரு நோயை சிகிச்சை செய்ய முடியாது. தொகை பத்தாது. இன்னும் மெடிஷீல்டு லைஃப்ன்னு ஒரு காப்பிடும், எல்டர்ஷீல்டுன்னு முதியோருக்கு ஒரு காப்பீடும் அங்க இருக்கு. அதே நேரம் இந்த காப்பீட்டுத் திட்டத்துல மிகவும் அபாயகரமான நோய்கள், சிகிச்சைகள் எல்லாம் மறைமுகமாக தவிர்க்கப்பட்டிருக்கு. அப்படிப் பாத்தீங்கன்னா சிங்கப்பூர் குடிமகனுக்கு அப்படி ஒரு நோயோ பிரச்சினையோ வந்தா அவர் அதிகம் காசு செலவழிச்சே ஆகணும்,

சிங்கப்பூர்ல நிறைய தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் இருக்குது. அங்க வெளிநாட்டு நோயாளிகள், வசதியான சிங்கப்பூர் குடிமக்களுக்கு அதிக கட்டணத்துல சிகிச்சை பாக்குறாங்க. சிங்கப்பூர் குடிமக்கள், இந்த தனியார் மருத்துவமனைகளில் ஒரளவுக்கு கட்டணத்துல தள்ளுபடி பெறலாம்னாலும், மொத்தத்துல இங்க கட்டணம் அதிகம்தான். ஆனா நம்ம தமிழ்நாட்டுல இருந்து ஒரு தொழிலாளி அங்க பிழைக்கப் போய் பெரிய நோய் வந்தா அவருக்கு இங்கே மானியம், தள்ளுபடி எதுவும் கிடையாது. ஏன்னா அவர் ஒரு ஃபாரினர்.

சிங்கப்பூரோட மொத்த தேசிய வருமானத்துல இருந்து 1.6% -த்தை பொது சுகாதரத்துறைக்கு ஒதுக்குறாங்க. இந்தியாவுல 1.4% ஒதுக்குறாங்க! புள்ளி இரண்டை வெச்சு மட்டும் சிங்கப்பூர் தரமானது இல்லீங்க.

இப்டி காஸ்ட்லியான சிங்கப்பூர் மருத்துவத்தைத்தான், உலக சுகாதார நிறுவனம் 2000-ம் ஆண்டின் கணக்குப்படி ஆறாவது ரேங்கில் வைச்சுருக்கு. ஒருக்கால் மருத்துவம் இலவசமாகவும் தரமாகவும் கொடுத்து சாதனை படைச்ச நாடுன்னா அது கியூபாதான். சிங்கப்பூர் இல்லை.

அடுத்து தமிழிசை சொல்ற சிங்கப்பூர்ல 80% மக்கள் வரி கட்டுற இலட்சணத்தை பார்ப்போம். சிங்கப்பூருங்கிறது வளைகுடா மாதிரி பிழைக்க வந்த மக்களோட உழைப்புல வாழ்ற நாடு. அதனால் சிங்கப்பூர் குடிமக்களுக்கு கொஞ்சம் வசதி, வாய்ப்பு இருக்கலாம். ஏன்னா சிங்கப்பூர்ல மத்த நாட்டுல இருக்குற மாதிரி சட்டப்படியான குறைந்த பட்ச கூலின்னே ஒண்ணு கிடையாது. இந்தியாவுல கூட குறைந்த பட்ச கூலி இவ்வளவு கொடுக்கணும்னு சட்டம் இருக்கு. பீகாருல ரூ 160 -ன்னும், கேரளாவுல ரூ 750 -ன்னும் அந்த தொகை மாறுபடுது. இன்னும் விவசாய தொழிலாளிகளுக்கும் இந்தியா முழுவதும் சட்டப்படி இவ்வளவு கொடுக்கணும்னு இருக்கு.

உலகத்திலேயே அப்படி ஒரு சட்டம் இல்லாத நாடுன்னு சொன்னா அது சிங்கப்பூர்தான். 2014-வது வருசத்துலதான் துப்புறவுத் தொழிலாளிகளுக்கு 1000 -ம் டாலரும்னு, செக்யூரிட்டி வேலைக்கு மாதம் 1,100 டாலரும்னு சட்டம் கொண்டு வந்திருக்காங்க. இது போக மத்தவங்களுக்கு முதலாளிங்க எவ்வளவு கம்மியா சம்பளம் கொடுத்தாலும் அதை யாரும் தட்டிக் கேக்க முடியாது.

சிங்கப்பூரோட ஒரு டாலருங்கிறது இந்திய ரூபாயில 48 ரூபாய் வரும். ஒரு சாதாரண காய்ச்சலுன்னு இந்த தொழிலாளிங்க அரசோட பாலி கிளினிக் போனா குறைஞ்சது 30 டாலராவது செலவாகும்கிறாங்க. அதாவது இந்திய மதிப்பில் 1,400 ரூபாய் செலவழிக்கணும்.

பெப்சி தொழிலாளிங்க ஸ்ட்ரைக் நடந்தப்போ, விஜயோட கவலை மெர்சல் ஷூட்டிங் பத்தித்தானே ஒழிய, தொழிலாளர் ஊதிய்ம் பற்றி அல்ல!

மெர்சல் படம் ஷூட்டிங் நடக்கும் போது பெப்சின்னு சினிமா தொழிலாளி சங்கம் ஸ்ட்ரைக் பண்ணாங்க. அவங்க கோரிக்கை என்னங்க? மூணு வருசத்துக்கு ஒரு முறை சம்பளத்த கூட்டணும்னு விதி இருக்கும் போது இன்னும் ஏன் கூட்டலை, இப்ப விக்கிற விலைவாசியில குறைஞ்ச சம்பளத்துல வேலை பார்த்து ஓட்ட முடியுமா, எல்லா நாளும் சினிமா வேலை கிடைக்காத போது கம்மியான சம்பளம் நியாயமா – இதுதான் அவங்க கோரிக்கை.

ஆனா சினிமா முதலாளிங்க இதுக்கு ஒத்துக்கல! தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் இரண்டிலும் இருக்குற நடிகர் விஷாலு, எங்களுக்கு பெப்சி சங்கமே தேவையில்லை, வெளிய இருந்து தொழிலாளிகளை ஏற்பாடு பண்ணிக்கிறோம்னு மிரட்டுனாரு. வேலை நிறுத்தம்தான் தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தைன்னு ரஜினிகாந்த் சொன்னாரு, இப்ப தளபதின்னு பேரு போட்டுறுக்குற விஜய் அப்ப வாயைத் திறக்கவே இல்லை. ஏன்னு யாராச்சும் கேட்டீங்களா?

சிங்கப்பூருல தொழிலாளிக்கு சட்டப்படி சம்பளம் இல்லேங்குற மாதிரி அங்க முதலாளிக்கு சட்டப்படியே வரியே கட்டவேண்டாம்கிற அளவுக்கு ஏகப்பட்ட சலுகை கொடுத்திருக்காங்க. அதனாலதான் வெளிநாட்டுல இருக்குற பல பண முதலைங்க சிங்கப்பூருலயும் கொஞ்சம் சொத்துக்களை மாத்தி வெச்சிருக்காங்க. நிறைய பேரு செட்டிலாகியிருக்காங்க. இது தொடர்பா எங்க வினவு தளத்துல நிறைய கட்டுரைங்க இருக்குது, படிச்சுப் பாருங்க!

பெப்சி தொழிலாளிகளுக்கு எதிராக நடிகர் விஷால்!

இந்தியாவுலயும் மறைமுக வரியை அதிகம் போட்டு மக்கள் மேல சுமத்துற மோடி அரசு, முதலாளிகளுக்கான நேரடி வரியை ரொம்பவே குறைச்சுட்டாங்க. இதைத்தான் சிங்கப்பூரு மாதிரி இங்கயும் மோடி முயற்சிக்கிறாருன்னு தமிழிசை சொல்றாங்க. தளபதி விஜயும் சிங்கப்பூருல இலவச மருத்துவம்னு அடிச்சு விடுறாரு!

ஆக இவங்க இரண்டு பேருக்கும் சிங்கப்பூரு மேட்டருல கருத்து வேறுபாடு கிடையாது. சரி, சாதாரண விக்கிபீடியா மேட்டர் அறிவு கூட இல்லாம இயக்குநர் அட்லி இப்படி ஒரு வசனத்தை ஏன் சேத்தாருன்னு உங்களுக்கு தோணலாம்.

7 சதவீத சிங்கப்பூருல மருத்தவம் இலவசம்னா, 28 சதவீத வரி கேக்குற இந்தியாவுல முடியாதான்னு ஒரு வாட்ஸ் அப் வதந்தியை பார்த்திருப்பாரு. நம்ம மக்கள் பலர் சிங்கப்பூரோட போக்கு வரத்து, வேலைக்கு போனவங்கங்கிறதால இங்க சிங்கப்பூர்னா ஒரு மரியாதை இருக்கு. அத வெச்சு அந்த மேட்டர் பொய்யா வந்தாலும் நம்ம ஆளுங்க அத உண்மைன்னு நம்புறாங்க. ஆனா ஒரு படத்தோட இயக்குநரும், நடிகரும் அத நம்புறாங்கன்னா இவங்களோட அறிவு, அரசியல், மேட்டரெல்லாம் என்ன லெவல்ல இருக்கும்கிறத நீங்களே முடிவு பண்ணிக்கோங்க!

ஜி.எஸ்.டி-யை வெச்சு இந்த படத்துல தைரியமாக பாஜகவை எதிர்க்கிறாங்க-கிறது உண்மையா?

ஃப்ரோ, இன்னி தேதிக்கு பாஜக-காரனே ஜி.எஸ்.டி-யை எதிர்த்துப் பேசறான். துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹான்னு ஏகப்பட்ட பேரு ஜி.எஸ்.டி சரியில்லேன்னு பேசுறாங்க. மத்தபடி எல்லா மக்களும், கட்சிகளும் ஜி.எஸ்.டியை கட்டி உரிச்சு உப்புக் கண்டம் போட்டு புதைக்கிறதுக்கு காத்திருக்காங்க. ஒரு தீப்பெட்டி வாங்குனாலும், தீபாவளி பட்டாசு வாங்கினாலும் ஜி.எஸ்.டி வரியால பாதிக்கப்படாத ஆளே எங்கேயும் இல்லை.

விஜயோட சினிமா உலகமும் கூட அந்த வரி அதிகம்னு சொல்லி பேசுனாங்களா இல்லையா? மத்தவங்களுக்கு எப்படியோ எங்களுக்காச்சும் குறைக்கணும்னு கமல்ஹாசன் கூட பணிவா பேட்டி கொடுத்தாருல்ல! மத்தபடி இந்த படம், ஜி.எஸ்.டி வரி கொடுமையானதுன்னோ, மக்களை வதைக்கிதுன்னோ, மோடி அரசு மக்களை ஒடுக்குதுண்ணோ சொல்லலை! இவ்வளவு வரி வாங்குறீங்களே, மருத்துவத்தை இலவசமாக கொடுக்கலாம்லன்னு கெஞ்சுது! அவ்வளவுதான். மக்களே ஜி.எஸ்.டி வரியே சாதாரண மக்களைப் பிழிந்து திரட்டப்படுற ஒரு கொள்ளை. அதை வாங்குற அரசாங்கத்த கண்டிக்காம, அதுல இருந்து இலவசம் கேப்பானா எவனாவது?

இன்னிக்கு பாத்தீங்கன்னா தமிழ்நாடே டெங்குவால பீதியில உறைஞ்சு போயிருக்கு. செத்தவங்களோட கணக்கை குறைக்கிறதுலதான் அரசாங்கம் கருத்தா இருக்கு. இதுக்கு முன்னாடி சிக்கன் குனியா, மலேரியா, காலரா, மூளைக் காய்ச்சல்னு சீசனுக்கு ஒரு வியாதியில நம்ம மக்கள் பட்ட கஷ்ட்டம் கொஞ்ச நஞ்சமில்லீங்க.

ஈழத்துலயோ, காஷ்மீரிலயோ, ஈராக்கிலயோ போரின் ஒடுக்குமுறையால வீட்டுக்கு ஒரு இழப்பு இருக்குங்கிற மாதிரி, தமிழகத்துல வீட்டுக்கு வீடு ஒரு மருத்துவ கஷ்டம் ரொம்பவே இருக்கு. இதுல முதல் கஷ்டம் பணம், அடுத்து அரசு மருத்துவமனையில வசதி இல்லாதது, பிறகு மருத்துவருங்க செய்யுற தவறுகள்னு பட்டியல் போடலாம்.

மெர்சல் படத்துல அப்பா விஜய் மீசை, வீபூதி வேட்டி சகிதமா “மதுரைக்கு போகாதடி” பாட்டு கெட்டப்புல இருக்காரு. அவரோட கிராமத்துல தீ விபத்துல பாதிக்கப்பட்ட குழந்தைங்கள காப்பாத்த முடியல. உடனே பஞ்சாயத்து கூடி விஜய் தலைமையில மருத்துவமனை கட்ட முடிவு செய்து தாய்மார்களெல்லாம் நகைகளை கழட்டி தாராங்க. கொஞ்சம் வசதியான கிராமம்தான் போல இருக்கு. ஏன்னா தற்கொலை செஞ்சுகிட்ட நீட் அனிதா வீட்ட பாத்தீங்கன்னா குடிசையும், மண்தரையும்தான் இருக்கு. சரி, சினிமான்னா கொஞ்சம் ரிச்சாத்தான் இருக்கணும் போல.

இலவச மருத்துவமனை இல்லாம மக்கள் கஷடப்படுறத, பாரின் டூயட் கால்ஷீட் போக இருக்குற கேப்புல காமிக்கிறாங்க, பேசுறாங்க.

அந்த புதிய மருத்துவமனைக்கு டாக்டராக வந்த வில்லன்கள் இரண்டு பேரு விஜய ஏமாத்தி ஆஸ்பத்திரியை கைப்பத்துறாங்க. விஜயும் அவரது மனைவியும் கொல்லப்படுறாங்க. இரண்டு குழந்தை விஜயும் பிரிஞ்சு ஒண்ணு ஐஞ்சு ரூபா டாக்டராகவும், இன்னொன்னு மாஜிக் கலைஞராகவும் மாறிடுறாங்க.

கடைசியில இரண்டு பேரும் சேந்து வில்லன பழிவாங்குறாங்க. அதுல இலவச மருத்துவமனை இல்லாம மக்கள் கஷடப்படுறத, பாரின் டூயட் கால்ஷீட் போக இருக்குற கேப்புல காமிக்கிறாங்க, பேசுறாங்க.

ஒரு ஆட்டோ டிரைவரோட மகளுக்கு விபத்து ஏற்படுறத வாயில இருந்து, மண்டையில இருந்து ரத்தம் பீறிட்டு வர்றதையெல்லாம் கொடூரமாக காட்டுறாங்க! ஏன்னா நாம்ம மருத்துவர்களோட வில்லத்தனத்தை கொடூரமா புரிஞ்சுக்கணும்ல, அதுக்குத்தான்.

அந்த ஆட்டோ டிரைவர் மகளை கொன்ன தனியார் மருத்துவமனை புரோக்கர், ஆம்புலன்ஸ் டிரைவர், பி.ஆர்.ஓ, டாக்டர் அத்தனை பேரையும் மேஜிக் விஜய் பிடிச்சு வித்தியாசமா கொல்றாரு. இப்படி படம் முழுக்க மருத்துவருங்க வில்லனா காட்டப்படுறாங்க.

ஒரு நோயால மரணமோ, பாதிப்போ எது இருந்தாலும் மக்கள் முதல்ல கோபப்படறது மருத்துவருங்க மேலதான். ஆனா மருத்துவருங்க மேல மட்டும் கோபப்பட்டு பிரோயஜனம் இல்லை.

தமிழ்நாட்டிலயோ இல்லை இந்தியாவிலயோ ஏன் உலகத்துலயோ பெரிய பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைங்கள கட்டி வெச்சு கொள்ளையடிக்கிறவங்களெல்லாம் மிகப்பெரும் நிறுவனங்களாகவோ இல்லை முதலாளிகளாகவோதான் இருக்காங்க. அப்பல்லோ பிரதாப் ரெட்டி மாதிரி ஒரு சில டாக்டருங்கதான் முதலாளிகளா இருக்காங்க. இவங்களும் டாக்டர் தொழிலை வெச்சு ஆஸ்பத்திரி கட்டலை. அரசு சலுகை, மானியம், வங்கி கடன் வசதி, பங்கு சந்தை இப்டித்தான் கட்டுனாங்க.

மெர்சல் படத்துல ரெண்டு சீனுக்கு ஒருவாட்டி எம்ஜிஆரைக் காட்டுறாங்க. அவருக்கு அப்புறம் நான்தான்னு காட்ட விஜய் நினைச்சிருக்கலாம். தலைவா படத்துக்கு அவர் கொடநாட்டுக்கு ஓடிப்போய் தவமிருந்தும் “அம்மாவை” பாக்க முடியாம படத்துல இருந்த பஞ்ச் டயலாக்கையெல்லாம் பட்டி டிங்கர் பாத்து தூக்குனது தனிக் கதை!

ஆனா அந்த எம்ஜிஆர்தான் தனது அடியாளுங்க மத்த அபிமானிங்க பலருக்கு சுயநிதிக் கல்லூரி துவங்கவும், மருத்துவமனைகள் கட்டவும் ஏராளமான அரசு நிலத்தை இலவசமாகவோ இல்லை மலிவு விலை குத்தகையாகவோ கொடுத்தாரு.

மியாட் மருத்துவமனை மோகன்தாஸ், ராமச்சந்திரா மருத்துவமனை உடையாரு, ஜெப்பியார் கல்லூரின்னு இதுல ஆதாயம் அடைஞ்சவங்க நிறைய பேரு! இதுல ஜேப்பியாரும், உடையாரும் சாராயம் ஓட்டுனவங்கன்னு உலகத்துக்கே தெரியும்.

இப்படி மியாட்டுல போய் விஜய் இந்த படத்தோட வசனத்த பேசுனாருன்னு வையுங்க, அப்புறம் எம்ஜிஆரே ஆவியா வந்து அடிப்பாரு!

1990-களில் இருந்தே நம்ம நாட்டுல பொது சுகாதாரத்தை அரசு கழுவிட்டு தனியாருக்கு தாரை வாக்கணும்னு முடிவு பண்ணீட்டாங்க. அதுதான் உலகவங்கி, உலக வர்த்தக கழகத்தோட ஆணை.

அதே மாதிரி தனியார் மருந்துக் கம்பெனிகள் அதுல உள்நாடு-வெளிநாடு இரண்டுமே அடிப்படை மருந்துகளுக்கு அதிக விலை வெச்சு கொள்ளையடிக்கிறாங்க. மத்திய அரசோட ஐடிபிஎல்-ங்கிற மருத்து நிறுவனமோ இல்லை கிங் மருந்து ஆராய்ச்சி நிறுவனமோ இப்பவா அப்பவான்னு சாகுற நிலைமையிலதான் இருக்கு.

அரசு மருத்துவமனைகள்ள பல வசதிகளை தனியார் சேவைன்னு மாத்திட்டாங்க. அங்கேயும் போதுமான மருத்தவருங்களோ, நர்சுங்களோ கிடையாது. நீட் வந்ததுக்கு பிறகு அரசு மருத்துவமனைங்கள்ள வேலை பாக்க புது டாக்டரே வரமாட்டாங்க!

நோயளிகளுக்கு தங்களோட மருந்துகளை எழுதணும்னு தனியார் மருந்துக்  கம்பெனிகள் டாக்டருகளுக்கு, பணமாவோ, சொத்தாவோ, இல்லை வெளிநாடு சுற்றுலாவோ பரிசா அளிக்கிறாங்க. அதுமாதிரி எல்லா சோதனைகளுக்கும் மருத்துவர்களுக்கு கமிஷன் உண்டு. அவன் கொடுக்குறாங்கிறதால இவன் எழுதுறான்.

அங்க அடிக்காம இவன திருத்த முடியுமா சொல்லுங்க! கூட்டிக் கழிச்சுப் பாத்தா நம்ம நாட்டுல மருத்துவத்துறையில் இருக்கும் தனியார் மயத்தை ஒழிக்காம, பன்னாட்டு நிறுவனங்களோட மருந்து ஏகபோகத்தை மறுக்காம நம்ம அரசு மருத்துவமனைகளை எப்படி காப்பாத்த முடியும்? சொல்லுங்க!

மியாட்டுல போய் விஜய் இந்த படத்தோட வசனத்த பேசுனாருன்னு வையுங்க, அப்புறம் எம்ஜிஆரே ஆவியா வந்து அடிப்பாரு!

அரசியல்வாதிகள், அதிகாரிகள், அமைச்சர்கள் அத்தனை பேரும் அரசு மருத்துவமனையிலதான் சிகிச்சை பெறணும்னு சொல்லுற விஜய் அதையே நடிகர்கள், பத்திரிகை துறையினர், தனியார் முதலாளிகள்னு சொல்ல மாட்டேங்குறாரு!

ரஜினியோ இல்லை விஜயகாந்தோ தும்முனாலும் துவண்டாலும் சிங்கப்பூர் போவாங்கன்னா அதை தளபதி விஜய் கண்டிக்க மாட்டாரா? இல்ல அவருதான் தன்னோட நோய்களுக்கு ஜிஎச்சுக்கு போவாரா?

மாசத்துக்கு 1500 ரூபாய் ஊதியம் வாங்குற ஒரு இந்தியக் குடிமகன், மருத்துவர் கிட்ட ஐஞ்சு ரூபா கொடுக்குறதே அதிகம்ணு சொல்ராறு விஜய். சரிங்க ஆபிசர், அதே மாதிரி உங்க படத்துக்கு முதல் நாளுல ரசிகருங்க ஐநூறு, ஆயிரம்ன்னு கொட்டிக் கொடுக்குறதும், இல்லேன்னா சட்டபூர்வமாகவே மல்டிபிளக்சுல 160 ரூபாயும், மத்ததுல 120-ம் கொடுக்குறத மட்டும் சரியா? இல்லை இந்தியக் குடிமகன் 1500 ரூபாய் வாங்குறதால இனி விஜய், அஜித், ரஜனி, கமல் அத்தனை பேரும் ஒரு  படத்துக்கு ஐயாயிரம் ரூபாய் வேணாம், ஒரு ஐம்பது இலட்சத்தை மட்டும் வாங்கிப்பாங்களா?

இல்லை லாஜிக்க மாத்திப் போட்டா ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குறவன் டாக்டருக்கு ஐஞ்சு ரூபா கொடுக்குறது நியாயமனா, கோடிகளில் சம்பளம் வாங்குறவன் இலட்சக் கணக்குல ட்ரீட் மெண்ட் எடுக்குறது நியாயம்ணு வருதா இல்லையா?

ஐயா, அந்த காலத்துல நடிகருங்க தங்களோட மார்க்கெட்டுக்கு ஒரு சென்டிமென்ட் டச்சு கொடுக்குறதுக்குண்ணே, மூணு சக்கர சைக்கிள், இஸ்திரிப் பெட்டி, கல்வி உதவித் தொகை, பிரியாணி சாப்பாடுன்னு கொடுப்பாங்க. இப்ப சமூக வலைத்தளங்களோட காலத்துல இப்பிடி பிசிக்கலா பொருளா கொடுக்கணும்னு அவசியமில்லே.

கமல்ஹாசன் டிவிட்டரில் கருத்தால தானம் கொடுக்குற மாதிரி, விஜய் மாதிரி எல்லா நடிகருங்களும் படத்துல மெசேஜ் கொடுக்குறாங்க. இது இஸ்திரிப் பெட்டியை விட   ஒரு போராளி பில்டப்பை கொடுக்குது. அதனால்தானே கபாலியில ரஜினியை கூட ஒரு சமூகப் போராளின்னு தூக்கிச் சுமந்தாங்க சிலபேரு! சைக்கிள் செலவும் மிச்சம், சைக்கிள் கேப்புல நடிகருங்க போராளியாவும் ஆகலாம்.

ஹாலிவுட்டுலேயே இப்பல்லாம் வில்லன்னா கார்ப்பரேட் கம்பெனிங்களையும், முதலாளிகளையும் காட்ட ஆரம்பிச்சாட்டங்க! அப்பதான் மக்களோட சிந்தனையில படத்தை ஓட்ட முடியும். அது இப்ப தமிழ் சினிமாவுக்கும் வந்தாச்சு. மத்தபடி இந்த மசாலாவை மெசேஜ்னு சொல்லி நம்மள நாமே ஏமாத்துனா, இங்க டெங்கு நோய் ஏன் நம்மள கொல்லாது சொல்லுங்க!

_____________

இந்த சினிமா விமர்சனம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

இந்திய – தமிழக நதிகள் : பொது அறிவு வினாடி வினா – 4

சென்ற வினாடி வினாவில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி. பதினான்கு கேள்விகளுக்கும் சரியான பதில்களை ஆறு நண்பர்கள் சொல்லியிருக்கின்றனர். பிறகு 13, 12, 11, 10 வரை சரியான பதில்களை சராசரியாக பத்து முதல் இருபது பேர் வரை கண்டுபிடித்தனர். கணிசமான நண்பர்கள் ஐந்து கேள்விகள் வரை சரியான பதில்களை சொல்லியிருந்தனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்! மறுமொழிகளில் ஆலோசனை வழங்கிய நண்பர்களுக்கும் நன்றி!

இந்த பகுதியில் இந்திய, தமிழக நதிகள் குறித்து கேட்கிறோம். முயன்று பாருங்கள்!

கீழ்க்கண்ட நதிகளில் காவிரியின் துணையாறு எது?

(விடைக்கான விடுகதை: இந்த ஆறுக்கும் டாலர், ஜக்கி வாசுதேவ், வானவில்லுக்கும் என்ன தொடர்பு?)

நொய்யல் ஆறு
உப்பாறு
கடனா நதி
மணிமுத்தாறு

கீழ்க்கண்ட நதி – மாவட்ட பெயர்களில் எது பொருத்தமற்றது?

(விடைக்கான விடுகதை: ஐயா, தேயிலை நீரில் உப்பு போடலாமா?)

தேனி மாவட்டம் – வெண்ணாறு
கடலூர் மாவட்டம் – கோமுகி
திருச்சி மாவட்டம் – பாம்பாறு
கோயம்பத்தூர் மாவட்டம் – அமராவதி

முல்லைப் பெரியாறு அணை எந்த ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது?

(ஜான் பென்னிகுயிக்கின் சீரிய முயற்சியால் கட்டப்பட்ட இந்த அணையின் முதல் கட்டுமானம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது.)

கி.பி 1895
கி.பி 1795
கி.பி 1755
கி.பி 1859

சிவசமுத்திரம் அருவி எந்த நதியில் அமைந்திருக்கிறது?

(இந்த அருவிப் பகுதியில் இருக்கும் நீர்நிலை மின்சார நிலையம், 1902-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இது ஆசிய நாடுகளின் மூத்த நீர்நிலை மின்சார நிலையங்களில் ஒன்று. இன்றும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்நிலையம் ஆரம்பத்தில் கோலார் தங்க வயல் தேவைகளுக்கு பயன்பட்டது. இப்போது கோலார் தங்க வயல் மூடப்பட்டுவிட்டது. இந்த அருவி இரண்டு பாதையில் பிரிந்து செல்வதால் இடையில் இருக்கும் தீவுப் பகுதியில் சிவசமுத்திர நகரம் அமைந்திருக்கிறது.)

காவிரி
கிருஷ்ணா
நர்மதா
கோதாவரி

மாஞ்சோலை தேயிலை தொழிலாளர் போராட்டத்தோடு தொடர்புடைய நதி எது?

(இந்த நதிக் கரையில்தான் ஊதிய உயர்வு கேட்டு 1999 ஆம் ஆண்டு சூலை 23 அன்று  தேயிலைத் தொழிலாளர் நடத்திய பேரணியின் போது காவல்துறையினர் நடத்திய தடியடி படுகொலையில் 17 பேர் கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்டவர்கள் பல சாதி மதங்களைச் சார்ந்தவர்கள். இருந்தும் முதலாளி வர்க்கத்துக்கெதிரான இந்தத் தொழிலாளிகளின் போராட்டத்தை, திசை திருப்பி, சாதிப் பிரச்சினை என்று அரசியலாக்கினார் அன்றைக்கு பதவியில் இருந்த கருணாநிதி.)

தாமிரபரணி
மணிமுத்தாறு
சேர்வலாறு
வைகை

சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் எந்த நதியோடு தொடர்புடையவர்?

(இந்த நதியில் கட்டப்பட்ட 30 அணைகளில் சர்தார் சரோவார் அணைதான் மிகப்பெரியது ஆகும். 1979 முதல் 2008 வரை இவ்வணை கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணைக்காக தமது சொந்த கிராமங்களில் இருந்து 18,346 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன என்று அரசு கூறினாலும், எண்ணிக்கை இதைப் போல இரண்டு மடங்கு இருக்கும் என்கிறார் மேதா பட்கர்.)

நர்மதா
கோதாவரி
கிருஷ்ணா
மகாநதி

இந்தியா – பாக் நாடுகள் எந்த ஆண்டில் சிந்து நதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன?

(2016-17 –ம் ஆண்டுகளில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போதாக பாஜக அரசு மிரட்டியது. ஆனால் சிந்து நதியின் வெள்ள நீரை தேக்கி வைக்குமளவு இந்தியாவில் அணைகள் இல்லை என்பதால் இந்த ரத்து என்பது வெறும் உதார்தான் என்று நீர்வளத்துறை நிபுணர்கள் கூறினர். பாக் எதிர்ப்பு அரசியலில் மக்களிடம் ஒரு வெத்து வேட்டு வீரத்தை காண்பிக்க மோடி அரசு இப்படி பேசியது.)

1960
1970
1965
1957

காவிரி தோன்றும் தலைக்காவிரி பகுதி எந்த மலையில் அமைந்திருக்கிறது?

(இந்த மலையில் இருக்கும் காஃபித் தோட்டங்கள் பிரபலமானவை. அனேக பணக்காரர்களுக்கும் முதலாளிகளுக்கும் இங்கே தோட்டங்கள் உண்டு. சிக்மகளூரில் இருக்கும் புதாங்கிரி மலைப் பகுதிக்கு அடுத்து இந்தியாவிலேயே அதிகம் காபி உற்பத்தி செய்யப்டுவது இப்பகுதியில்தான்.)

குடகு மலை
முதுமலை
கல்வராயன்
ஆனைமலை

இராஜஸ்தானில் எந்த நதிக்கு அருகில் ஆஜ்மீர் நகரம் அமைந்திருக்கிறது?

(கி.பி 12-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த நகரம் ஆரவல்லி மலைகளால் சூழப்பட்டது. சூஃபி தர்காக்களும், புராதான கோவில்களும், கோட்டைகளும் இந்நகரில் உள்ளன. ராஜஸ்தானில் ஐந்தாவது பெரிய நகரமாக விளங்கும் அஜ்மீரில் 2011 சென்சஸ் கணக்குப்படி 5,42,580 மக்கள் வாழ்கின்றனர்.)

லூனி
யமுனை
சட்லஜ்
சிந்து

பிரம்ம்புத்ரா நதியின் நீளத்தில் (2,900 கி.மீ) பாதி நீளத்தைக் (1465) கொண்டிருக்கும் நதி எது?

(இந்தியாவில் மட்டும் ஓடும் நதிகளில் கங்கைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நதி இதுதான். இந்நதி எட்டு மாநிலங்களில் பாய்கிறது.)

கோதாவரி
நர்மதா
கிருஷ்ணா
யமுனை

உத்திரப்பிரதேச தலைநகரமான லக்னோ எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது?

(1857 முதல் இந்திய சுதந்திரப்போரில் லக்னோ நகரம் ஒரு முக்கியமான மையாமாக இருந்தது.)

கோம்தி
கங்கை
யமுனை
கண்டக்

இந்தியாவில் எந்த நதி மிகப்பெரும் சமவெளிப் படுகையை உருவாக்கியிருக்கிறது?

(இச்சமவெளியில்தான் ஆரியர்களின் பிற்காத வேத நாகரீகம் எழுந்தது. வருணாசிரமத்தின் ஆரம்ப கால மையம் இதுதான். அதன் பொருட்டே இப்பிராந்தியத்தில் பார்ப்ப்பனியத்தை எதிர்த்து புத்த, ஜைன மதங்களும் எழுந்தன.)

கங்கை
சிந்து
பிரம்மபுத்ரா
நர்மதா

மத்தியப் பிரதேசத்தின் இந்திரா சாகர் அணை எந்த நதியில் அமைந்திருக்கிறது?

(அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் அவரது பெயர் கொண்ட இந்த அணை 1984-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு அணையின் முதன்மைப் பகுதி 1992-ம் ஆண்டில் முடிக்கப்பட்டது. தமிழகத்து அம்மா பெயர் பல திட்டங்களுக்கு வைக்கப்பட்டது போல அன்று இந்திரா பெயர் பலவற்றுக்கு சூட்டப்பட்டது. கொள்ளளவின் படி இந்த அணைதான் இந்தியாவில் மிகப்பெரியது.)

நர்மதா
யமுனா
கிருஷ்ணா
சம்பல்

ஹிராகுட் அணை எந்த நதியில் கட்டப்பட்டிருக்கிறது?

(இந்த அணை 1957-ம் ஆண்டில் நேருவால் திறக்கப்பட்டது. இந்த அணைக் கட்டுமானத்தால் ஒன்றறை இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, 22,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர்.)

மகாநதி
கிருஷ்ணா
நர்மதா
கோதாவரி

 

 

டெங்கு : ஒழிப்பது எப்படி? அக்டோபர் 2017 மின்னூல்

0

இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :

1. டெங்கையும் “டெட்பாடி” அரசையும் ஒழிப்பது எப்படி?

டெங்கு நோய் தாக்கி ஒவ்வொரு நாளும் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வரும் வேளையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறார் எடுபிடி எடப்பாடி.

2. அப்போலோ இட்லிக்கு முந்தைய இட்லிகள்!

கல்லறையிலிருந்தும் அம்மா காறித்துப்புவதையும் மேற்படி கனவான்களின் முகத்தில் எச்சில் வழிந்து கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம்.

3. அர்ச்சக மாணவர்களுக்கு அநீதி: இது தமிழ்ச் சமூகத்தின் தன்மானப் பிரச்சினை!

கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குப் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் 36 பேரை நியமித்திருக்கிறது.

4. தகுதி இருந்தால் விண்ணப்பித்துக் கொள்!

5. யானையைப் பானைக்குள் அடைக்கத் தடையில்லை!- இதுதான் அர்ச்சகர் வழக்கில் உச்சநீதி மன்றத் தீர்ப்பு

ஆகமத்தின் உதவியுடனேயே அர்ச்சகர் பதவியைப் பெற்றுவிடலாம் என்று சிந்திப்பது, பார்ப்பனியத்துக்கு மனித முகம் வழங்குவதற்கும், இந்த அரசமைப்புச் சட்டத்துக்கு ஜனநாயக முகப்பூச்சு அணிவிப்பதற்கும் மட்டுமே பயன்படும்

6. “சதிச் செயல் செய்தவன் புத்திசாலி, அதைச் சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி!”- மோடியின் நர்மதா அணை பிரகடனம்

7. 150-ஆவது ஆண்டில் மார்க்ஸின் மூலதனம்:மூலதனம் நூலில் மறைந்திருக்கும் வரலாறும் வரலாற்றில் மூலதனத்தின் இடமும்

மூலதனம் காலாவதியாகிவிட்டது என்று உலக முதலாளி வர்க்கம் பலமுறை பிரகடனம் செய்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் அது தண்ணீரில் அமிழ்த்தப்பட்ட பந்து போல மேலெழுந்து வந்திருக்கிறது.

8. நவோதயா பள்ளிகளை வரவேற்போம்! அனிதாக்களை 5-ஆம் வகுப்பிலேயே தூக்கிலிடுவோம்!!

குழந்தைகளை வெறும் போட்டியாளர்களாக உருவாக்கும் இன்றைய முதலாளித்துவ சமூகத்தை, இன்னும் கொடூரமான எல்லைக்கு இட்டுச் செல்லும். குழந்தைகளை உளவியல்ரீதியாகக் கொல்லும்.

9. பா.ஜ.க.வைப் பணிய வைத்த ராஜஸ்தான் விவசாயிகள்!

அரசைப் பணியவைக்கும் போராட்டங்களை நடத்துவதன் மூலம்தான் கோரிக்கைகளை ஓரளவாவது நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதை ராஜஸ்தான் விவசாயிகளின் போராட்டத்திலிருந்து தமிழக விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும்

10. மோடியின் பணமதிப்பழிப்பு: எஸ்கேப் ஆகிறார் குருமூர்த்தி!

மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையை ஆதரித்து எழுதியும் பேசியும் வந்த குருமூர்த்தி, சென்னை பொருளாதார மையத்தில் ஆற்றிய உரையில் பல்டியடித்துவிட்டார்.

11. அரசு மருத்துவமனைகள் விற்பனைக்கு… மோடியின் அடுத்த தாக்குதல்!

இந்தியாவெங்கிலும் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலுள்ள மூன்று முக்கிய பிரிவுகளைத் தனியார் வசம் ஒப்படைக்கும் மோடி அரசின் முடிவு, ஒட்டகம் கூடாரத்தினுள் மூக்கை நுழைத்த கதையாகவே முடியும்.

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

 

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

ஒசூர் பாகலூர் அரசு மருத்துவமனையை திருத்திய மக்கள் போராட்டம் !

1

மக்கள் அதிகாரத்தின் அதிரடி நடவடிக்கை :

சுகாதாரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது பாகலூர் ஆரம்ப சுகாதார நிலையம் !

சூரில் அடுத்துள்ள பாகலூர் பகுதியில் கடந்த 12.10.2017 அன்று டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அம்பலபபடுத்தி “எதிர் கட்சித் தலைவர்களே, ஊடகங்களே, செயலற்ற அரசுதான் மக்களின் மரணத்திற்கு காரணம்! டெங்கு, மலேரியா பிரச்சினைக்கு தீர்வு காண பேசுங்கள்!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் மக்கள் அதிகாரம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தினை கவனித்துச் சென்ற பகுதிவாழ் மக்கள் அங்குள்ள அரசு சுகாதார மருத்துவமனையை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதன்படி 14.10.2017 அன்று மக்கள் அதிகாரம் தலைமையில் தோழர்களும், ஆர்வலர்களும், உள்ளூர் விவசாயிகள் பொதுமக்கள் என 20 பேர் கொண்ட குழு  பாகலூர் மேம்படுத்தபட்ட அரசு சுகாதார நிலையத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் நேரத்திற்கு வருவதில்லை, பல நோய்களுக்கு மருந்து இல்லை, ஒழுங்காக மருத்துவம் பார்ப்பதில்லை என்ற பொதுமக்களின் குற்றசாட்டுகள் இருந்தன. ஆனால், ஆய்வுக்கு சென்ற போது மருத்துவமனைதான் டெங்கு கொசுக்களின் உற்பத்தியிடம் போல காட்சியளித்தது.

உடனடியாக ஊடகங்களுக்கு அழைப்புக் கொடுத்துவிட்டு மருத்துவமனையின் உள்ளே சென்ற போது இரண்டு மருத்துவர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களிடம் “நாய் கடி, பாம்பு கடிக்கு மருந்து இருக்கிறாதா” என்று கேட்ட போது, அந்த மருத்துவர்கள், “இருக்கிறது என்று பொய் சொன்னார்கள்”, எங்கே காட்டுங்கள் என்று கேட்டவுடன் அமைதியாகிவிட்டனர். “செடிகொடிகள் அதிகமாக வளர்ந்து புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. இவை எல்லா இடங்களிலும் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி இருக்கிறது இதனை சுத்தம் செய்து மருந்து அடிக்க வேண்டும் என்று இல்லாமல் அலட்சியமாக செயல்படுகிறீர்கள், நோயாளிகளை தொட்டு கூடப் பார்ப்பதில்லை, பார்வையாலேயே மருந்து மாத்திரைகளை பொதுவாக கொடுக்கிறீர்கள்”  என்று சொல்லி கேட்டோம். இதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல, இன்சார்ஜை கேளுங்கள் என்று நிறுத்திக் கொண்டார்கள்.

இன்சார்ஜ்க்கு போன் செய்தவடன் 30 நிமிடத்தில் வந்தார். அவர் மருத்துவர் சுகன்யா. அவரிடம் நாங்கள் மக்கள் அதிகாரம் சார்பாக வந்துள்ளதை அறிமுகப்படுத்திக்கொண்டு, ”மருத்துவமனை புதர்கள் மண்டியும் கொசுக்கள், கழிவுகள் என சுகாதார சீர்கேடாக உள்ளது, மருத்துவர்களின் பணி நேரம் காலை 8 மணிக்கு வந்து மாலை 4 மணி. ஆனால்  11 மணிக்கு வந்து மதியம் 1.30 மணிக்கு கிளம்பிவிடுகிறார்கள்” என்று மருத்துவமனையின் அவலத்தை அடுக்கிக் கொண்டிருக்கும் போது, “நான் மருத்துவ விடுப்பில் இருந்தேன், நீங்க எப்போது வந்தீர்கள்,  நீங்கள் கூறுவது எதுவும் உண்மையல்ல” என்றார். “நாங்கள் உள்ளூர்காரர்கள், மருத்துவமனை எப்படி இயங்குகிறது என்று எங்களுக்கு நன்றாக தெரியும்” என்றதும், “அதற்கு முன்பு இருந்தது மாதிரி இப்போது இல்லை சிஸ்டம் எல்லாம் மாறியிருக்கிறது” என்றார்.

“எப்படி இரண்டு நாளில் சிஸ்டம் மாறியிருக்க முடியும். ஸ்வச் பாரதமுனு சொல்லுகிறீர்கள் அதன் யோக்கியதை இங்கு வந்து பார்த்தால் தெரிகிறது. கிராமப்புற கழிவுகளில் உற்பத்தியாவதை விட இந்த மருத்துவமனையில் தான் கொசு அதிகமாக உற்பத்தியாகிறது. அதனை நாங்கள் வீடியோ எடுத்துள்ளோம் பார்க்கிறீர்களா?” என்றதும், “நாங்கள் என்ன சார் செய்வது, பீ.டி.ஓ கிட்ட பல முறை பேசியிருக்கோம்” என்றார்.

“அப்படியெல்லாம் நீங்க முயற்சி பண்ணதா தெரியவில்லை, வாங்க காட்டுகிறோம்” என்று மருத்துவமனை அவலங்களைச் சுற்றிக்காட்டினோம். தவறு செய்பவர்கள் தெரியாமல் செய்தால், அவர்களைத் திருத்தலாம். இந்த மருத்துவரோ, மருத்துவமனை சுகாதாரமாக இருக்கிறது என்று அப்பட்டமாக, மக்கள் மத்தியில் சொல்லியவராயிற்றே இந்த மருத்துவர். கழிவறையை காண்பித்து, “பாருங்கள் எவ்வளவு அசிங்கமாக உள்ளது” என்றதும், “பொது மக்கள் வெளியில் இருந்து வந்து கலீஜ் (அசிங்கம்) பண்ணிட்டு போகிறார்கள் நாங்கள் என்ன சார் பண்ண முடியும்” அபாண்டமாக பொய் கூறினார். ஆத்திரப்பட்ட உள்ளூர் மக்கள், “அப்படியெல்லாம் பொது மக்கள் யாரும் மருத்துவமனைக்கு வந்து அசிங்கம் செய்வதில்லை, இது பாழடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை நீங்கள் யாரும் பராமரிப்பது இல்லை, உங்க தவறை நீங்கள் மறைத்துக்கொண்டு பொது மக்கள் மேலே பழிபோட்டு அவங்கள நீங்க இழிவுபடுத்தாதீங்க” என்றனர் ஆவேசமாக.

ஊசி போடும் அறையின் பக்கத்தில் புதர் மண்டியிருந்ததைக் காட்டி, செடிகளைத் தட்டிய போது குபு குபு வென கொசுக்கள் கூட்டமாக பறந்தன, மருத்துவமனை வளாகத்திலேயே ஒரு லோடு தேங்காய் மட்டை கொட்டி வைக்கப்படிருந்தது. அதிலும் தண்ணீர் தேங்கி கொசுப் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. சில மட்டைகளை கொசுக்கள் மூடியிருந்தன. அவ்வளவு கொசுக்கள். இதனைக் காண்பித்து “தேங்காய் மட்டையில் தண்ணீர் தேங்கினால் ஏ.டி.எஸ் கொசு உற்பத்தியாகும் என்று ஊருக்கெல்லாம் சொல்றீங்க ஆனால் நீங்க வேலை பார்க்கிற இந்த மருத்துவமனையை எப்படி வைத்துள்ளீர்கள்” என்று கேள்வி எழுப்பியதும் “இதெல்லாம் ஒன்றும் பிரச்சனையல்ல அது ஏ.டி.எஸ் கொசு கிடையாது அது நல்ல தண்ணீரில் தான் உற்பத்தியாகும் அதெல்லாம் எடுக்க சொல்லி ஊழியர்களிடம் எச்சரித்து இருக்கோம்” என்று மழுப்பலாகப் பேசினார். “கொசு வராதுனு சொன்ன பிறகு ஏன் மேடம் எடுக்க சொல்றீங்க, நீங்க பொய் பேசுறதுக்கு ஒரு அளவே இல்லையா” என்று ஒரு முதியவர் திட்டினார். “இதே உங்க வீட்டில் இப்படி கிடந்தா எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டு சும்மாவாக இருப்பீங்களா? உடனே கம்பளைன்ட் கொடுத்து நடவடிக்கை எடுக்க செய்வீர்கள் உங்கள் வீடு போல இந்த மருத்துவமனையை பாருங்கள்” என்று மக்கள் கண்டித்தனர்.

சிறிதும் நேர்மையோ மக்கள் தொண்டு என்ற சிந்தனையோ இல்லாத இந்த மருத்துவர் சுகன்யா, பேசிக்கொண்டிருக்கும் போதே, போலீசுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தார். முந்தைய நாள் ஆர்ப்பாட்டத்தின் போதே, மக்களைத் திரட்டி அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்ததால், போலீசும் பொதுமக்களுக்கு சல்யூட் அடித்துவிட்டு வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தது.

இதன் பிறகு வேறு வழியில்லாமல், சம்பந்தப்பட்ட நபரை அழைத்து அந்த தேங்காய் மட்டைகளை எடுக்க செய்தார். அது ஏறக்குறைய ஒரு குடோன் போல் இருந்தது, சில லாரிகளில் அள்ளிச்சென்றனர். பொதுமக்களும் மக்கள் அதிகாரம் தோழர்களும் சுட்டிக்காட்டிய குறைகள் எல்லாவற்றையும் நாங்கள் சுத்தம் செய்துவிடுகிறோம் என்று சொல்லி மருந்து அடிப்பவர்களை வரவழைத்தார். கழிவறைகளை இடித்து தரைமட்டம் செய்வதற்கு ஜெ.சி.பி வரவழைத்தார். மருந்துகளும் வந்து இறங்கியது. மதியம் 1.30 க்கு சென்றுவிடக்கூடிய மருத்துவர்கள் மாலை 4.30 மணி வரை  இருந்தார்கள். இதற்கு முன்னால் ஆம்புலன்ஸ் எங்கே என்று கேட்டால் சூளகிரியில் இருக்கிறது இங்க இல்லை என்ற இதே மருத்துவர், மக்கள் அதிகாரம் ஆய்வை முடிப்பதற்க்குள் இந்த மருத்துவமனைக்கு உரிய இரண்டு ஆம்புலன்ஸ்களும் மருத்துவமனை வாசலில் நிறுத்தி வைத்துள்ளனர். ஒரு மூட்டை மருந்துகள் வந்து இறங்கியுள்ளது. நாய் படம் போட்டு நாய்கடி மருந்து கிடைக்கும் என போர்டு மாட்டினர். மருத்துவமனை சுத்தம் செய்வதை துரித வேகத்தில் தொடங்கியது. இவற்றை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். மக்கள் அதிகாரம் பிரச்சனையைக் கையில் எடுத்த பிறகு தான் ஒரு தீர்வு கிடைத்துள்ளது என்று அந்த பகுதிவாழ் மக்கள் தோழர்களின் கரம் பிடித்து நன்றி தெரிவித்தனர். நெகிழ்ந்து பாராட்டினர்.

டெங்கு கொசுவை உற்பத்தி செய்வதே மருத்துவமனையாக இருக்கிறது என்பது இந்த ஆய்வில் உணரமுடிந்தது. இந்த அரசு, சுகாதாரத்தை வளர்ப்பதைவிட டெங்குவை வளர்க்கிறது; சுகாதாரக் கேட்டை வளர்க்கிறது. மண்டிகிடக்கும் புதர்களாக, புழுக்கள் நெளியும் சாக்கடைகளாக அரசு மருத்துவமனைகள் திகழ்கின்றன. மேலும், இந்த அரசுக் கட்டமைப்பு கொசுக்களோடு சேர்த்து மக்கள் சேவை என்ற எண்ணமற்ற, மக்களின் வரிப்பணத்தில்தான் வாழ்கிறோம் என்ற நன்றி உணர்ச்சியற்ற, மருத்துவம் என்பது சேவை என்ற சுரணையற்ற, பொய்களை அப்பட்டமாக பேசுகின்ற, அதிகாரத் திமிர் பிடித்த மருத்துவர்களையும் அதிகாரிகளையும் உருவாக்கியுள்ளது. டெங்குக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாக விஜய பாஸ்கர் போன்ற அமைச்சர்கள் பேசுவதெல்லாம் அப்பட்டமான பொய், வடிகட்டிய பொய்.

இன்று மக்கள் அதிகாரம் மேற்கொண்ட இந்த அதிரடி ஆய்வு மருத்துவமனையை சுத்தம் செய்துள்ளது. இந்த அரசுக் கட்டமைப்பை சுத்தம் செய்ய முடியாது, துடைத்தெறிய வேண்டும். அதற்கு மக்கள் அதிகாரம்தான் தீர்வு என்பதை மக்களும் உணர்ந்து வருகிறார்கள்…!

தகவல்:
தோழர்.காந்தராஜ்,பகுதி ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்,
பாகலூர் பகுதி, கிருஷ்ணகிரி மாவட்டம்.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

வேட்டு வைத்த மோடி ! – கேலிப்படம் !

0

மோடி தீபாவளி – கேலிப்படம் !

கேலிப்படம் : வேலன்

இணையுங்கள்:

_____________

இந்த கேலிச்சித்திரம் உங்களுக்கு பிடித்திருக்கிறது?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

தீபாவளி : நாள் முழுக்க உழைச்சும் உடம்புல ஒண்ணும் ஒட்டலயே !

1

இவர்களுக்கில்லை தீபாவளி! படக்கட்டுரை

மோடியின் ஜி.எஸ்.டி.வரிவிதிப்பு, பணமதிப்பழிப்பு, வேலையிழப்பு, விலைவாசி உயர்வு  காரணமாக இன்று எந்த பண்டிகைகயும் கொண்டாடத்தக்கதாக இல்லை. ஒருவாரம் முன்பிருந்தே ஆரம்பிக்கும் தீபாவளி கொண்டாட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. அதிலும் இந்தவருடம் மிகவும் குறைவான  கொண்டாட்டங்களே காணப்பட்டன.

ஆனாலும் மக்கள் “ஆட்சியாளர்கள் யாரும் சரியில்லை, ஒருத்தனும் யோக்கியன் இல்லை…” என்று சொன்னாலும், தேர்தல் நாளில் வரிசையில் நின்று எப்படி வாக்களிக்கிறார்களோ அதுபோல தீபாவளியும் இன்று ஒரு பழக்கத்தால் கொண்டாடப் படுகிறது. ஆனாலும் இந்த சம்பிரதாயமான கொண்டாட்டம் கூட இல்லாமல் பல லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். அவர்களில் சிலர் பேசுகின்றனர். இந்த நேர்காணல் தீபாவளி அன்று சென்னை நகரின் சில பகுதிகளில் எடுக்கப்பட்டது.

ரவி, கோடம்பாக்கத்தில் கரும்புச்சாறு கடை வைத்திருப்பவர்.

தீபாவளி நமக்கு எல்லாம் இல்ல… பசங்களுக்கு தான். போன வருசத்தை விட இந்த வருஷம் எல்லா பொருளும் வெல அதிகம். வேல செஞ்சா தான எதுனா வாங்கி குடுக்க முடியும்.”

செல்வி, பெரியார் நகர் துப்புரவு தொழிலாளி.

எனக்கு அஞ்சும் பொண்ணுங்க. புருஷன் ஒரு குடிகாரன். இருக்குற பொண்ணுங்கள கட்டிக்கொடுக்கணும். நா… வேலைக்கு வந்தா தான் பொழப்பு ஓடும். இதுல எங்க தீபாவளி கொண்டாடுறது. வெறும் ரூ.6,000 சம்பளம். இத வச்சிக்கிட்டு இன்னா பண்றது. இதுக்கே நான் கான்ராட்டு தொழிலாளி தான். எங்கள நிரந்தரம் பண்ண சொல்லி பல போராட்டம் பண்ணிட்டோம், ஒன்னும் ஆகல. எப்ப நிரந்தமா வேலை கெடக்கிதோ அது தான் எனக்கு தீபாவளி.”

சுரேஷ்குமார், துப்புரவு தொழிலாளி.

தீபாவளி கொண்டாடுறதுக்கு எல்லாம் எங்க நேரம் இருக்கு. காலைல இருந்து இந்த குப்பைய வாரிகிட்டு இருக்கேன். ஒன்பது மணிக்கு வாங்கி வச்ச இட்லி. இப்ப மணி பதினொன்னு ஆகுது. இன்னும் சாப்படல. இது தான் எங்க பொழப்பு. நான் வாங்குற சம்பளத்துக்கு தீபாவளி ஒரு கேடா? என்னால என் புள்ளைங்களுக்கு பட்டாசு வாங்கி தர முடியல. என் தம்பி தான் வாங்கி தந்தான். நாள் முழுக்க ஒழச்சாலும் ஒன்னும் ஒட்டலையே!”

ருக்கு, வள்ளுவர் கோட்டம் அருகே 20 ஆண்டுகளாக பூ வியாபாரம் செய்பவர்.

“ இன்னா கொண்டாட சொல்ற. மோடி வந்து எல்லாத்துக்கும் டேக்சு போட்டுட்டாரு. யாரும் பூ கூட வாங்க வர மாட்றாங்க. வந்தாலும் வெலைய கேட்டுட்டு போயிடறாங்க. இன்னிக்கு விக்கிற வெலவாசிக்கு ஒருகிலோ கறி எடுத்து துன்ன முடில. தோ… காய் கொழம்பு சாப்ட்டுன்னு கீறேன். எல்லா காலமும் ஒழப்பு…ஒழப்பு தான். என்னிக்கு கண்ணா மூடுரனோ அது தான் எனக்கு ரெஸ்ட்.”

பார்த்திபன், அகத்தி கீரை விற்பனையாளர்.

“விடிய காத்தால கொல்லைல இருந்து எடுத்துட்டு வந்தது.. இத அதிகமா கோசாலைக்கு தானமா கொடுக்க சேட்டுங்க தான் வாங்குவாங்க. நம்மாளுங்க ஏதாவது வைத்தியத்துக்கு தான் வாங்குவாங்க. இன்னைக்குள்ளே இதை வித்துடனும். இல்லனா வீணா போய்டும். இது வித்துட்டாலே எங்களுக்கு தீபாவளி தான்.”

சிவக்குமார், மாநகரப் போக்குவரத்து கழக தொழிலாளி.

எந்த ஒரு பண்டிகையும் மகிழ்ச்சியா இருக்கத் தான். ஆனா இன்னைக்கு நெலம அப்படி இல்ல. அதனால் நமக்கு இன்னைக்கு தீபாவளி இல்ல. மத்த மக்கள் மகிழ்ச்சி தான் எங்களோட மகிழ்ச்சி.

ராஜேந்திரன், சைக்கிள் கடை.

“எந்த பண்டிகையா இருந்தாலும் உழைப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. தோ… இன்னிக்கு வந்தேன். இந்த சைக்கிளுக்கு பஞ்சர் போடுறேன். இன்னொரு சைக்கிள ரெடி பன்னிட்டேன். எந்த நாளா இருந்தாலும் என் கட தெறந்து இருக்கும். இதை விட வேறென்ன பண்டிகை எனக்கு வேணும்.”

சுப்ரமணியன், புதினா – கொத்தமல்லி விற்பவர்.

“சம்பாதிக்கிற பணம் வாடகை கொடுக்கவும், குடும்ப செலவுக்கும் தான் இருக்கு. இதுல தீபாவளிய எப்படி கொண்டாடுறது. எனக்கு ரெண்டும் பொண்ணு தான். இன்னிக்கு வேல இருந்தா வர வருமானத்த கொண்டு பசங்களுக்கு ஏதாவது வாங்கி தரலாம்னு வந்தேன். வேலை இல்லாததால இப்ப சும்மாவே திரும்பி போறேன். இனிமே தான் யார்கிட்டயாவது ஒரு 500 ரூபா கடன் கேட்டு பார்க்கணும்”.

ஏழுமலை, இருபது ஆண்டாக இளநீர் விற்பனை செய்து வருபவர்.

“நாம என்ன அரசாங்க வேலையா செய்யுறோம். கையெழுத்து போட்டு சம்பளமும் போனசும் வாங்கி கொண்டாடுறதுக்கு. மழையானாலும், வெயிலானாலும் வேலைக்கு வந்தா தான் சோறு.”

பொன்னம்மாள், சைதாப்பேட்டை மார்கெட்டில் பூ, தோரணம் விற்பவர்.

“ நேத்துலாம் கீர வித்தேன். இன்னிக்கு எங்கயும் கீரை கெடக்கல. இந்த பூவும் தோரணமும் தான் கெடச்சது. இதை வித்தா தான் எனக்கு சோறு.”

ஆட்களிளில்லாத சைதாப்பேட்டை மார்க்கெட்டில் வாடிக்கையாளரின் வரவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும்  பாட்டிகள்.

இவர்களுக்கு இல்லை தீபாவளி !

-வினவு செய்தியாளர்

_____________

இந்த புகைப்படக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கமல்ஹாசனின் பகிரங்க மன்னிப்பு – கருத்துக் கணிப்பு

1

தீபாவளிக்கு ஒரு புயல் கரையைக் கடக்கும் என்றார்கள். அந்தப் புயல் கரையைக் கடக்கவில்லை. ஆனால் வாரா வாரம் திருவாளர் கமல்ஹாசன் அவர்கள் “என்னுள்ளே மையம் கொண்ட புயல்” தொடரை ஆ.விகடனில் வெளியிடுகிறார்.

ஒருத்தருக்குள்ளே மையல்தான் வரும். புயல் வருவதாக இருந்தால் ஏதோ சில பிரச்சினைகளால் அவர் பாதிக்கப்பட்டு பாரதூரமான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கும். கமல் அப்படிப்பட்டவர் இல்லை. அவர் சாதரணமாக நடந்தாலே கண்ணி வெடிக்குரிய சோதனைகள் மாதிரி செக் பண்ணிவிட்டுத்தான் உலவ விடுகிறார்கள் அவரது அணியினர்.

கமலைப் போன்றவர்களின் புயலை புரளி என்பதா, இல்லை புதிரா என டிவிட்டர் துவங்கி ஃபேஸ்புக் வரை அவ்வ்ப்போது ஆய்வுகள் நடக்கின்றன. நடக்கட்டும்! செயலுக்கு வழியில்லாத போது சிதறல்களே மாபெரும் ஆய்வுகளாவதில் தவறில்லை!

மேற்படி புயல் தொடரில் மூன்றாமாவது பாகத்தில் அன்னார் ஒரு பகிரங்க மன்னிப்பு கேட்டதாக ஒரு செய்தி வெளியானது. என்னவாம்?

பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது, மோடி கருப்பு பணத்தை ஒழிக்கப்போகிறார் என்று நம்பி அதை ஆதரித்தவர்கள் பலர். அவர்கள் பெரும்பான்மை மக்கள்.

இது மோசடி என்று தெரிந்தும், இதை எதிர்த்துப் பேசினால், கருப்பு பண பேர்வழி என்ற முத்திரையை மோடி நம் மீது குத்தி விடுவார் என்று பயந்து வரவேற்றவர்கள் பலர்.

ரஜனிகாந்த் முதல் பல கருப்பு பண நட்சத்திரங்களும் மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்தார்கள்.

முதல் நாளன்றே இதனை எதிர்த்து, இதன் நோக்கத்தை அம்பலப் படுத்தியவர்கள் சிலர். அவர்கள் ஆய்வாளர்கள் மற்றும் இடதுசாரிகள்.

அன்று கமல் இதை ஆதரித்தார்.

பணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்ட சில மாதங்களிலேயே அதனால் அழிந்தவர்கள் கருப்பு பண பேர்வழிகள் அல்ல, சாதாரண மக்களும் அவர்களுடைய சிறு தொழில்களும்தான் என்பது உலகத்துக்கே வெளிச்சமாகிவிட்டது.

போனமாதம் (செப் 22 ஆம் தேதியன்று) பணமதிப்பழிப்பு பற்றி கேட்டபோது, உரிய ஆதாரம் இல்லாமல் அதனை விமரிசிக்க முடியாது என்று பதிலளித்தார் கமலஹாசன். ஸ்வச் பாரத், பண மதிப்பழிப்பு போன்ற நடவடிக்கைகளின் நோக்கம் நேர்மையானது என்று மோடிக்கு சான்றிதழ் வேறு கொடுத்தார்.

தினத்தந்தி, தினகரன், நக்கீரன், ஜுவி படிக்கின்ற சராசரித் தமிழர்கள் மட்டுமின்றி, நம்மாள் செய்வது சரியில்லை என்று அவாளுக்கே புரியத்தொடங்கிய காலத்திலும் கமலுக்கு இந்த உண்மை புரியவில்லையாம். உலக சினிமா, உலக கவிதை, இலக்கியமெல்லாம் படிக்கும் இந்த ஞானிக்கு பொருளாதார அறிஞர்கள் சிலர் தொலைபேசியில் சொன்ன பிறகுதான் மேட்டரே புரிந்ததாம்.

அதற்குப் பிறகுதான் கமலின் இந்த மன்னிப்பு. தான் மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி மோடியையும் மன்னிப்பு கேட்குமாறு சிபாரிசு செய்திருக்கிறார் கமல். இதுதான் மிகப்பெரிய கேலிக்கூத்து.

ஐயா, செல்லாத நோட்டு விவகாரத்தில் செத்தவர் எத்தனை, வியாபாரத்தை இழந்தவர் எத்தனை பேர், வேலைகளை விட்டு துரத்தப்பட்டவர் எத்தனை பேர் என்பதை உலகமே அறியும். ஆழ்வார்ப்பேட்டையில் இருந்து டவிட்டரிலும், தனது கிச்சன் கேபினட் மூலமாக  உலகையும் பார்க்கும் கமல் அவர்களுக்கு அது தெரியாததில் வியப்பில்லை.

முக்கியமாக ஹிட்லர் கூட ஒரு ஹாய் மன்னிப்பு என்று கேட்டால் பெருந்தன்மை என ஆசிரியப்பா பாடும் வல்லமை கொண்ட கமல்ஹாசனின் அரசியல் அறிவு, பிரவேசம் குறித்து யோசித்தால் டெரராக இருக்கிறது.

விடுங்கள்!

கமல்ஹாசனின் அந்த பகிரங்க மன்னிப்பு குறித்து என்ன கருதுகிறீர்கள்? வாக்களியுங்கள்

  • நேர்மையான மன்னிப்பு
  • டேமேஜ் ஆன இமேஜை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சி
  • கோழைத்தனம் பாதி சந்தர்ப்பவாதம் பாதி
  • நேர்மையில்லைதான், இருந்தாலும் மன்னிப்பு கேட்டிருக்கிறாரே

_____________

இந்த கருத்துக்கணிப்பு உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

உளுந்தூர் பேட்டையில் டெங்கு : போராட்டமில்லாமல் ஆரோக்கியம் வருமா ?

0

உளுந்துர்பேட்டை பேருராட்சி ஆணையருக்கு மக்கள் அதிகாரம் எச்சரிக்கை !

மிழகத்தில் டெங்குகாய்ச்சலால்  பாதிக்கப்பட்ட பெண்கள் ஆண்கள் குழைந்தைகள் என 400-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக பலவேறு ஊடக செய்திகள் கூறுகின்றன. அரசோ இந்த எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்கு தீயாய் வேலை செய்கிறது.  சுகாதார சீர்கேட்டால் நோய் தீவிரமடைந்துள்ளது, தமிழக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மக்கள் அதிகாரம் சார்பில் உளுந்துர்பேட்டை, திருக்கோயிலூர், திருவெண்ணைநல்லூர் ஆகிய பகுதிகளில் மருத்துவமனை அதை சுற்றியுள்ள உட்பகுதி, நகரம் முழுவதும் டெங்குவின் பாதிப்பை விளக்கி 5,000 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. உளுந்துர்பேட்டை நகரை சுற்றியும் கழிவுக் கொட்டப்படுகிறது. அரசு மருத்துவமனை சுற்றியும் சிறுநீர் கழிப்பிடமாக மாறியுள்ளது. இந்திரா நகர் பகுதிகளில் சாக்கடை நீர் தெருக்களில் ஓடுகிறது, பேருந்து நிலையமும் பின்புறமும் மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

சட்டமன்ற அலுவலகம் அருகாமையில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. உளுந்துர்பேட்டை கள்ளக்குறிச்சி ரோட்டின் அருகில் நகரத்தின் கழிவுகள் கொட்டபடுகிறது. நகரத்தின் அருகாமையில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளது 180 மாணவர்கள் தங்கியுள்ளனர். விடுதியைச் சுற்றிலும் குளம்போல் நீர்தேங்கியுள்ளது. விடுதிஅருகாமையில் சாக்கடை ஓடுவதால் அம்மாணவர்களுக்கு நோய் தோற்றும் அபாயம் உள்ளது .

இந்த பதிப்பு அனைத்தையும் மனுவாக தயாரித்து   16-10-2017 அன்று காலை 12 மணியளவில்  மக்கள் அதிகாரம் உளுந்துர்பேட்டை வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் அரிகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து முழக்கம் போட்டுகொண்டு பேருராட்சி அலுவலம் வரை ஊர்வலமாக சென்று பேருராட்சி ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது.

மனுவை ஏற்றுக்கொண்டு மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார், ஆணையர். நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இன்னும் அதிகபடியான மக்களை திரட்டி முற்றுகையிடுவோம் என்பதை மக்கள் அதிகாரம் சார்பாக  தெரிவிக்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்.
விழுப்புரம்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கிருஷ்ணம்மாள் சாகும் போது ஒரு மருத்துவர் கூட இல்லை !

0

ருத்துவம் என்பது நமது பிறப்புரிமை ஆனால் அரசோ நமக்கு இறப்பை மட்டுமே கொடுக்கிறது! தருமபுரி மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவமனையாக பென்னாகரம் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் 800 -க்கும் அதிகமான மக்கள் மருத்துவம் பார்க்க வந்து செல்கிறார்கள்.

கடந்த 15.10.2017 அன்று காலை பிரசவத்திற்காக கூத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த அன்பரசு அவர்களின் மனைவி கிருஷ்ணம்மாள் (25 வயது) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது.  10.30 -க்கு சுகபிரசவமாக பெண் குழந்தை பிறந்தது அவருக்கு இது இரண்டாவது குழந்தை என்பதால் குழந்தை பிறப்பதில் சிக்கலேதும் இல்லை. தாயும் சேயும் நலமுடனே இருந்தனர்.

திடீரென கிருஷ்ணம்மாளுக்கு ரத்தபோக்கு ஏற்றபட்டுள்ளது. இந்த பிரச்சினையை மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் முறையாக கவனிக்காமல் இருந்துள்ளனர். ரத்தபோக்கு அதிகமானவுடனே கிருஷ்ணம்மாள் ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளார்.

இதில் ஆகக்கொடுமையான விசயம் என்னவெனில் கிருஷ்ணம்மாள் நிலை மோசமாக இருக்கும் போது மருத்துவமனையில் மருத்துவர்களே இல்லை என்பதுதான். இவ்வாறு முறையான மருத்துவமின்றி அநியாயமாக உயிரிழந்தார் கிருஷ்ணம்மாள்.

அவரின் மரணத்திற்கு நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். இதனை அறிந்த மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள் அவரது உறவினர்களோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மணிநேரம் மறியல் போராட்டம் நடந்தது. அப்போது அங்கு வந்த மருத்துவமனை அதிகாரி போராடி கொண்டிருக்கும் மக்களை சந்திப்பதற்கு பதில் மருத்துவ மனையில் முறையாக மருத்துவம் பார்க்காத மருத்துவர்களை காப்பற்றுவதிலேயே குறியாக இருந்தனர். அதற்குப் பிறகுதான் அதிகாரிகள் பேச வந்தனர்.

கிருஷ்ணம்மாள் இறப்பு குறித்து உறவினர்களை அழைத்து பேசும்போது மருத்துவம் பார்க்க தவறிய மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மருத்துவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க என்பதை குறித்து மேலிடத்திற்கு அனுப்பிய புகாரை படித்துக்காட்டுங்கள் என உறவினர்கள் கேட்டனர். அப்போது மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் கிருஷ்ணம்மாளுக்கு மருத்துவம் பார்த்தனர் அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தை என்ற பெயரில் குற்றவாளிகளை தப்ப வைக்கின்றனர் என்பதை புரிந்து கொண்டு மீண்டும் சாலை மறியல் செய்த பிறகே மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதி அளித்தனர். இப்படி மருத்துவம் முறையாக பார்க்காமல் இறப்பது ஏதோ ஒரு சம்பவம் என்று ஒதுக்கிவிட முடியாது. மொத்த அரசு மருத்துவமனையின் நிலைமையும் இதுதான். மாவட்ட தலைமை மருத்துவமனையில் 40 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவர் கூட இல்லாமல் கிருஷ்ணம்மாள் இறந்து போயுள்ளார்.

மாவட்ட தலைமை மருத்துவமனையே இப்படி என்றால் இதற்கு கீழ் இருக்கும் மருத்துவமனைகளின் நிலை என்னவாக இருக்கும். ஏழை மக்கள் அரசு மருத்துவமனைக்கு சென்றால் மரணம் தான் என்பது இன்றைய அரசு மருத்துவமனையின் நிலை. மக்கள் இன்று அரசு மருத்துவமனை என்றலே அச்சப்படுகிற நிலைதான் இருக்கிறது. தங்கள் உயிரைப் பாதுகாத்து கொள்ள சொத்துக்களை விற்றோ, கடன் வாங்கியோ தனியார் மருத்துவமனையை நோக்கிச் செல்கின்றனர் மக்கள்.

விஞ்ஞானம் வாளர்ந்து விட்டது ‘நிலவில் தண்ணீர்’ இருப்பதை கண்டு பிடித்து விட்டோம். உலக அரங்கில் தனி இடத்தை பிடித்துவிட்டோம் என மார்தட்டி பேசி கொள்ளும் ஆட்சியாளர்கள். இன்னும் அடிப்படை மருத்துவம் கூட இல்லாமல் மக்கள் தினந்தோறும் அரசு மருத்துவமனைகளில் செத்து மடிகிறார்கள்.

டெங்கு வந்து நாடு முழுவதும் மக்கள் செத்துக்கொண்டு இருக்கும் போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் டெங்குவால் ஒருவர் கூட தமிழ்நாட்டில் இறக்கவில்லை என்று பேசுகிறார். நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கு மேலானவர்களுக்கு டெங்கு பாதித்துள்ள நிலையில் ‘சாணத்தை வீட்டு முன்னால் தெளியுங்கள்’ டெங்கு வராது என்று பேசுகிறார்கள் அமைச்சார்கள். மற்றொரு அமைச்சர் மாட்டு மூத்திரத்தை பயன்படுத்த சொல்கிறார்.

மக்கள் நோய் வந்து சாகும்போது மருத்துவர்களை நியமிப்பது, மருந்துகளை தரமாக கொடுப்பது, சுகாதாரத்தை தரப்படுத்துவது, என்ற அடிப்படை வேலையை கூட அரசு செய்வதற்கு துப்பபற்று கிடக்கிறது. மக்கள் கொத்து கொத்தாய் சாகும்போது மக்களை பாதுக்காப்பதை விட்டு டெங்கு மரணங்களை மூடி மறைக்கும் வேலையைதான் அரசும், அதிகாரிகளும் திட்டமிட்டு செய்கின்றனர்.

மக்களுக்கு முறையான மருத்துவம் கிடைக்காத அவலநிலையை பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் தங்கள் கொள்ளையையால் மக்களை ஈவிரக்கமற்ற முறையில் சுரண்டுகின்றனர். அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர்கள் நோயாளிகளை தொட்டுகூட பார்பதில்லை, நோயாளிகளை பார்த்தவுடன் மருத்துவ சீட்டில் மாத்திரைகளை எழுதி கொடுக்கின்றர்.

என்ன பிரச்சனை என்றுகூட கேட்பதில்லை, ஆனால் இவர்கள்  வெளியில் நடத்தும் மருத்துவமனையில் இரவு 12 மணி என்றால் கூட வந்து பார்க்கின்றர். அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு 2 மாத்திரைகளை கொடுத்தனுப்பும் மருத்துவர்கள், தனியாக நடத்தும் கிளினிக்குகளில் குறைந்த பட்சம் 500 ரூபாய் மருந்து எழுதி கொடுக்கின்றனர்.

மக்களுக்கு கொடுக்க வேண்டிய மருத்துவத்தை மறுத்து, சட்டபூர்வ கொள்ளைக்கு வழி வகுப்பதே அரசின் தற்போதைய கொள்கையாக உள்ளது. நீட் வருவதால் தரமான மருத்துவமோ அல்லது அரசு மருத்துவமனையில் முறையான மருத்துவம் கிடைப்பதையோ உறுதிசெய்ய முடியாது.

மோடி அமுல்படுத்தி வரும் நிதி ஆயோக் திட்டம் அரசு மருத்துவமனையை தனியாருக்கு தரைவார்க்க சொல்கிறது. மருத்துவம் என்பது நமது பிறப்புரிமை, நமது உரிமையை மருத்துவத்தை சேவையாக, இலவசமாக பெற போராடுவதே நமக்கு தற்போது தேவையாக இருக்கின்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
பென்னாகரம், தொடர்புக்கு – 81485 73417.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

ஜி.எஸ்.டி – யை அம்பலப்படுத்தி கோவை மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !

1

லகோடி மக்களின் வாழ்வையும், லட்சக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகள், சிறு குறு நிறுவனங்களையும் சூறையாட வந்துள்ளது ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு நடவடிக்கை. இதனை எதிர்த்து மக்கள் அதிகாரம் கோவை மண்டலம் சார்பாக பாப்பநாயக்கன் பாளையம் காய்கடை மைதானத்தில் 2017 செப் 27 அன்று பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

அக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு அப்பகுதியின் C2 போலீசு நிலையத்தில் 31.08.17 அன்று முறையாக கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் சட்டஒழுங்கு கெட்டுவிடுமென காரணம் காட்டி அனுமதி தரமறுத்தது போலீசு. அதனை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்து 11.10.2017 -அன்று கூடம் நடத்துவதற்கான அனுமதி பெறப்பட்டது (ஆணை எண் 25561/17).

ஆனால் அதற்கான அனுமதிக் கடிதத்தை தருவதற்கு 10.10.2017 வரை இழுத்தடித்து, அதையே காரணம் காட்டி திட்டமிட்டிருந்த நாளில் பொதுகூட்டத்தை நடத்தவிடாது சதி செய்தது போலீசு. கோவை மண்டலம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக மேற்கண்ட பொதுக்கூட்டம் குறித்து துண்டறிக்கைகள் விநியோகித்து பேருந்து, இரயில், சிக்னல், குடியிருப்பு பகுதி, கடைவீதி என பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத, காவிக்கும்பல் – காக்கிகளின் துணையுடன் 08.10.2017 ஞாயிறு அன்று கோவை இராமநாதபுரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த எட்டு தோழர்கள் மீது IPC 384 சட்ட பிரிவின் படி வழக்கு தொடர்ந்து போலீசு நிலையத்திலேயே இரவு முழுதும் அடைத்து வைத்தது. மறுநாள் காலை தோழர்களை, நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போது நீதிபதியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டது போலீசு. மேலும் நமது வழக்கறிஞர்களின் தொடர் வாதத்தால் நீதிபதியின் முன் காக்கி(விக)ள் முகம் தொங்கிப்போனது.

இதனிடையே 11.10.2017 -லும் பொதுக்கூட்டம் நடத்தவிடாமல் தள்ளிபோட சொன்ன C2 காவல்துறை, உயர்நீதிமன்ற ஆணைக் கடிதத்தை பார்த்தும் ஏதும் அறியாததை போல் நடித்தது. மக்கள் அதிகாரத்தின் தொடர் போராட்டத்தால் 13.10.2017 கூட்டம் நடத்த அனுமதியளித்தது. கோவை நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மீண்டும் பிரச்சாரம் வலுப்பெற்றதை பார்த்த காவல்துறை, அனுமதி கேட்ட ஓரிரு நாட்களில் பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த இடத்தில், மாநகர நிர்வாகம் சாக்கடை சீரமைப்புப்பணி என்ற பெயரில், ஒரு பெரும் குழியை வெட்டியது. இதுவே சாக்கென்று போலீசு கூட்டத்திற்கு அனுமதியை மீண்டும் மறுத்துப் பேச தொடங்கியது.

அவர்களிடம் தோழர்கள் உங்கள் ‘அக்கறையை’ பாராட்டுகிறோம். கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு நாங்கள் பாதுகாப்பு தருகிறோம் என கூறி பொதுக்கூட்ட வேலையை தொடங்கினர். இதனூடே பிரச்சாரம் செய்த 4 தோழர்களின் கைதை கண்டித்து ஒட்டப்பட்ட தோழமை இயக்க போஸ்டர்களை போலீசே கழுதை போல மாறுவேடத்தில் சென்று கிழித்து எரிந்தது.

13.10.17 பொதுக்கூட்ட பகுதியை சுற்றியுள்ள கடைகள், குடியிருப்புகள், கிரைண்டர் – மோட்டார் உற்பத்தி நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்து, பொதுக்கூட்டதிற்கு அழைக்கும் பணியில் தோழர்கள் ஈடுபட்டனர். மாலை எதிர்பாராத மழையை கூட ஒரு பொருட்டாகவே எண்ணாமல் நனைந்துகொண்டே மகஇக கலைக்குழு தோழர்களின் பாடல்களோடு நிகழ்ச்சி தொடங்கியது, மழையின் காரணமாக ஆரம்பத்தில் தயங்கிய மக்கள், பின்னர் தானாக முன்வந்து இருக்கைகளில் அமர்ந்தனர்.

கூட்டத்திற்கு கோவை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் மூர்த்தி தலைமை தாங்கினார். பிரச்சாரத்தில் ஈடுபட்டு கைதான தோழர்களை போலீசின் சதியை அம்பலப்படுத்தி ஒரே நாளில் பிணையில் எடுத்த தோழர் பாலமுருகன் (PUCL) GST யின் சட்ட விதி மீறல்களை அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்து பேசிய தோழர் கிருஷ்ணமூர்த்தி (CITU மாநில நிர்வாக குழு) GST வரி விதிப்பால் இலட்சகணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதையும், பலநூறு சிறுகுறு நிறுவனங்கள் அழிந்து வருவதை அம்பலப்படுத்தினார்.

திரு.மாணிக்கம் (தமிழ்நாடு வணிகர் சங்கம் – தலைவர் கோவை) GST வரியினால் இலட்சகணக்கான வியாபாரிகள் தமது தொழிலை இழக்கப்போவதையும், அதன் மூலம் ஊகவணிகம், விலைவாசி உயர்வு அதிகரித்து வருவதையும் பற்றி விளக்கிப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் – கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ் ஏற்கனவே தேயிலை தொழில் நலிவுற்றதையும், எஞ்சியதை GST வரி காவுகொள்ள காத்திருப்பதையும் விளக்கினார்.

பின்னர் பேசிய பு.ஜ.தொ.மு மாநில துணை தலைவர் தோழர் விளவை ராமசாமி GST -யின் வரிமுறையால் பஞ்சாலைகள் மற்றும் மில்கள் உள்நாட்டு பொருளாதார நெருக்கடியால் மூடப்படுவதையும் அதற்கு BJP அரசு துணைபோவதை அம்பலப்படுதிப் பேசினார்.

சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் மேற்கண்ட வரிவிதிப்பு நடைமுறையால் கருவாடு தொழில் முதல் கம்ப்யூட்டர் விற்பனை வரை எதுவும் தப்பாமல் அழியப்போகும் ஒரு மோசமான சூழலை எதிர்கொண்டு இருப்பதையும், அதை எதிர்க்க மாநில அரசுகள் திராணியற்றுப் போயுள்ளதையும், பணமதிப்பழிப்பு தொடங்கி GST வரையிலான தொடர் பொருளாதார தாக்குதல்களை குறிப்பிட்டு அவற்றை விளக்கி பேசினார்.

கூட்டத்தின் ஒருபகுதியாக பொதுக்கூட்டப் பிரச்சாரத்தின் போது காவிகளின் பொய்ப்புகாரால் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ள தோழர்கள் மேடை ஏற்றப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். அவர்களுக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் கோவன் புத்தகங்களை போராட்ட நினைவாக வழங்கினார்.

இறுதியாக மகஇக கலைக் குழுவினரின் புரட்சிகர பாடல்களால் GST, NEET, டெங்கு ஆகியப் பிரச்சினைகளை அம்பலப்படுத்தினர். இறுதியாக தோழர் சூரியா நன்றியுரை கூற பொதுக்கூட்டம் நிறைவடைந்தது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கோவை.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

இந்திய வரலாறு : பொது அறிவு வினாடி வினா !

சென்ற முறை தமிழகத்தின் விவரங்களை வினாடி வினாவில் கேட்டிருந்தோம். மொத்தம் 14 கேள்விகளுக்கும் சரியாக பதிலளிப்பது சிரமம் என்றாலும் பத்திற்கும் மேற்பட்டோர் இலக்கை எட்டியிருந்தனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள்! பதினெட்டு நாடுகளில் இருந்து நண்பர்கள் இப்பகுதியில் பங்கேற்றிருக்கிறார்கள். சென்னை, இந்தியா போக அமெரிக்கா, இந்தோனேசியா, வளைகுடா நாடுகளில் இருந்து கணிசமான தமிழ் மக்கள் இப்போட்டியில் பங்கேற்றிருக்கிறார்கள்.

இக்கேள்விகள் அதிகம் எண்ணிக்கையில் வருவதால் நினைவில் வைத்திருப்பது சிரமம் என்றார் ஒரு தோழர். அதை கணக்கில் கொள்கிறோம். இன்று இந்திய வரலாறு குறித்து சில கேள்விகள். கூடுதலாக கேள்வியின் வரலாற்றுக் குறிப்பையும் தந்திருக்கிறோம். இது இன்னும் அழுத்தமாக அந்த செய்தியை  நினைவில் நிறுத்த பயன்படும். படிவத்திற்கு கீழே கேள்விகளையும், அதற்கான குறிப்புக்களையும் தந்திருக்கிறோம். அதை நிதானமாக படித்து விட்டு படிவத்திற்கு வாருங்கள்! வாழ்த்துக்கள்!

 

1. பார்ப்பனியத்தின் சதி – உடன்கட்டை ஏறும் பழக்கத்தை தடை செய்த ஆங்கிலேய ஆட்சியாளர் யார்?

பிற்கால வேதங்களில் சதி பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் மன்னர் குலத்தில் இருந்த இக்கொடிய பழக்கம் பின்பு சில ‘இந்து’ சமூகப் பிரிவுகளில் பரவ ஆரம்பித்தன. கி.பி 1815 -ம் ஆண்டில் வங்கத்தில் 378 ஆக இருந்த சதி படுகொலை கி.பி 1818 -ல் 839 ஆக அதிகரித்தது.

2. இந்தியாவின் முதல் ஆங்கில தினசரி எது?

கி.பி 1780 -ல் இவ்வாரப் பத்திரிகையை ஹிக்கி எனும் ஐரிஷ் நாட்டவர் ஆரம்பித்தார். அப்போது இருந்த கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் -ஐ விமரிசித்த இப்பத்திரிகை கிழக்கிந்திய கம்பெனி அலுவலர்களின் ஊழலை வெளியிட்டு வந்ததால் இரு ஆண்டுகளில் பலவந்தமாக நிறுத்தப்பட்டது. அதனால்தான் என்னவோ இன்றைக்கும் பெரும்பாலான ஆங்கிலப் பத்திரிகைகள் ஆளும் வர்க்கத்தின் நலனையே செய்திகளாக வெளியிடுகின்றன.

3. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான ரௌலட் சட்டத்தை அமல்படுத்திய ஆங்கிலேய வைஸ்ராய் யார்?

The Anarchical and Revolutionary Crimes Act, 1919, எனப்படும் ரௌலட் சட்டம் அப்போதிருந்த இந்தியாவின் போராளிகளை கைது செய்து விசாரணையின்றி சிறையலடைப்பதற்கு ஆங்கிலேய அரசால் கொண்டு வரப்பட்டது. இன்றைக்கு இருந்த தடா, பொடா சட்டங்களின் முன்னோடி. சிட்னி ரௌலட் எனும் நீதிபதி கமிட்டியின் பரிந்துரையின் பெயரில் நிறைவேற்றப்பட்ட சட்டம்.

4. பாஜக -விற்கு பிடிக்காத தாஜ்மகாலைக் கட்டிய தலைமைப் பொறியாளராக கருதப்படுபவர் யார்?

உ.பி மாநிலத்தின் ஆக்ராவில் மொகலாய கட்டடக் கலையின் அழகோடு இருக்கும் தாஜ்மகால் சந்தன மற்றும் வெள்ளை மார்பிளால் கட்டப்பட்டது. யமுனைக் கரையில் கி.பி 1632 -ம் ஆண்டில் மொகலாயப் பேரரசர் ஷாஜகானால் திறந்து வைக்கப்பட்டது. இப்போது 2014 -ம் ஆண்டு கணக்கின் படி தாஜ்மகாலைப் பார்த்தோர் எண்ணிக்கை சுமார் 80 இலட்சம் பேர்.

5. உலகம் ரசிக்கும் தாஜ்மகாலை கட்டுவதற்கு எவ்வளவு வருடங்கள் ஆயிற்று?

இன்றைய மதிப்பில் சுமார் 52.8 பில்லியன் ரூபாயில் தாஜ்மகால் கட்டப்பட்டிருக்கிறது. சுமார் 20,000 தொழிலாளிகள் பங்கேற்றிருக்கின்றனர். 1983 -ம் ஆண்டு யுனஸ்கோ அமைப்பால் “உலகில் பாரம்பரிய சின்னமாக” அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்துமதவெறியர்கள் இச்சின்னத்தை உ.பி சுற்றுலாக் கையேட்டில் இருந்து எடுத்து விட்டிருக்கின்றனர். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!

6. இந்தியாவை அடிமைப்படுத்த ஆங்கிலேயர்கள் முதலில் கட்டிய கோட்டை எது?

கி.பி 1644 -ம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனியால் கட்டப்பட்ட கோட்டை. அவர்களது வணிக நடவடிக்கைகள், நிர்வாக பேச்சு வார்த்தைக்காக கட்டப்பட்டது.

7. அக்பர் நாமா எனும் அக்பரின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியவர் யார்?

கி.பி 1556 முதல் 1605 வரை ஆண்ட அக்பரின் வரலாற்றை பெர்சிய மொழியில் கூறுகிறது இந்நூல். ஏழு வருடங்களில் எழுதப்பட்ட இந்நூலில் விவரணைகளோடு அரிய ஓவியங்களும் இருந்தன. தற்போது இதன் பிரதி ஒன்று 116 அரிய ஓவியங்களோடு லண்டனில் இருக்கும் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

8. வங்கமாதாவிற்காக எழுதப்பட்ட வந்தே மாதரம் பாடல் இடம் இடம்பெற்ற நாவல் எது?

முசுலீம் குறுமன்னர்களை எதிர்த்து இந்து விவசாயிகள் போராடுவதான இக்கதையில் வரும் வந்தே மாதரத்தை காங்கிரசு கட்சி முதலில் அரசியலில் அறிமுகப்படுத்தியது. இதில் மாதாவை உருவகப்படுத்த வரும் இந்து மத தெய்வங்களால் அப்போதே முசுலீம்களால் எதிர்ப்பு தெரிக்கப்பட்டது. இந்திய அரசியலில் இந்துத்துவம் நுழைக்கப்பட்டதில் வந்தே மாதரத்திற்கும் முக்கிய பங்குண்டு.

9. இந்துமதத்தை சீர்திருத்துவதற்காக 1875-ம் ஆண்டில் “ஆர்யா சமாஜ்” இயக்கத்தை ஆரம்பித்தவர் யார்?

ஆங்கிலேய ஆட்சியில் கல்வி அறிவு பெற்ற இந்தியர்களின் பெருமிதத் தேடல்களின் விளைவில் இதுவும் ஒன்று. வேதங்களின் புனிதத்தை ஏற்றுக் கொண்ட சமாஜம், சில சீர்திருத்தங்களுக்காக பிரச்சாரம் செய்ததாலும் அடிப்படையில் வருண தர்மம் அல்லது சாதிய அமைப்பை ஏற்றுக் கொண்டது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் இந்து முசுலீம் பிரிவினையின் போது சமாஜம், இந்து தர்மத்திற்காக பரிந்து பேசியது.

10. தற்போதைய ஐ.ஏ.எஸ் எனப்படும் இந்திய குடிமைப் பணி பதவிகளை அறிமுகப்படுத்திய ஆங்கிலேய கவர்னர் யார்?

கி.பி 1858 -ல் ஏற்படுத்தப்பட்ட இப்பதவி அப்போது இந்தியன் சிவில் சர்வீஸ் என அழைக்கப்பட்டது. வரிவசூல் உள்ளிட்ட அனைத்து ஆட்சிப் பணிகளையும் இக்கலெக்டர்கள் மேற்கொண்டார்கள். 1947-ம் ஆண்டில் 322 இந்தியர்களும் 688 ஆங்கிலேயர்களும் கலெக்டர்களாக இருந்தனர். மக்களை கிள்ளுக்கீரையாக நினைக்கும் இன்றைய மாவட்ட ஆட்சியர்களின் பயிற்சி அனைத்திற்கும் இத்தகைய வரலாற்றுப் பின்னணி இருக்கிறது.

11. மதம் கடந்து வங்கதேசிய ஒற்றுமையால் பிணைக்கப்பட்ட வங்கத்தை பிரிக்க முடிவெடுத்த ஆங்கிலேய வைஸ்ராய் யார்?

கி.பி 1905-ம் ஆண்டில் வங்கம் பிரிக்கப்பட்டது. முசுலீம்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு வங்கமும், இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் மேற்கு வங்கமும் ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாக பிரிக்கப்பட்டன. ஆனால் மக்கள் மதம் கடந்த ஒற்றுமையுடன் இப்பிரிவினையை எதிர்த்துப் போராடினர். அதன்பிறகு 1911-ம் ஆண்டில் வங்கம் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு இப்போராட்டம் ஒரு சான்று.

12. இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியை 1885-ம் ஆண்டில் துவக்கியவர் யார்?

இன்றைக்கு சோனியா காந்தியின் தலைமையில் இருக்கும் காங்கிரசுக் கட்சி 1885-ம் ஆண்டில் துவக்கப்பட்டது. நவீன இந்தியாவின் முதல் அரசியல் இயக்கம் என்று அழைக்கப்பட்டாலும் இது வெள்ளையர்களிடம் கருணை மனு கொடுத்து தமது பிரச்சினைகளை இந்திய மக்கள் தெரிவிப்பதற்காகவே முதலில் துவக்கப்பட்டது. இன்றும் அதன் பாரம்பரியம் உலக வர்த்தக கழகம், உலக வங்கி, அமெரிக்கா என்று தொடர்கிறது.

13. யாருடைய ஆட்சிக் காலத்தில் சீனப் பயணி யுவான் சுவாங் இந்தியாவிற்கு வந்தார்?

கி.பி 602-ல் பிறந்த யுவான் சுவாங் – சென் இ – கி.பி 664-ல் மரணமடைந்தார். புத்த துறவியான இவர் சீனாவில் இருந்து இந்தியா வந்து இங்கே பல மொழிகளைக் கற்று ஏராளமான புத்த இலக்கியங்களோடு சீனா சென்றார். அக்காலத்தில் இது அபராமான சாதனை. இவரைப் பற்றிய ஆங்கிலப் படம் 2016-ம் ஆண்டில் வெளிவந்தது.

14. பகவான் கிருஷ்ணனால் நாகஸ்வரன் கொல்லப்பட்டதை மக்கள் கொண்டாடுவதே தீபாவளி எனும் புராண விளக்கத்தின் சமூகவியல் பின்னணி என்ன?

பூர்வகுடி இந்திய பழங்குடிகளை ஆரியர்கள் போரிட்டு வென்றதன் குறியீடு
நல்ல சக்தி கெட்ட சக்தியை அழித்ததன் குறியீடு
வாழ்வில் ஒளியேற்றும் மங்களகரமான நாளின் துவக்கம்
மோட்சம் செல்வதற்கு கடவுளிடம் கோரிக்கை வைக்கும் நாளின் குறியீடு

_____________

இந்தக் வினாடி வினா பகுதி உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

அந்தக் காரின் விலை 22 கோடி ரூபாய் !

3

இதுதான் இன்றைய உலகம்

தீபாவளி மழையில் வெளியே செல்வதற்கு மக்கள் யோசிக்கிறார்கள். நனைவதோடு, சாலைப் பள்ளங்களின் விபத்துக்கள், மழையால் ஏற்படும் நெரிசல் போக்குவரத்து காரணமாக வீட்டில் முடங்க வேண்டிய கட்டாயம். நகரப் பேருந்தோ இல்லை இரு சக்கர வாகனமோ இருந்தாலும் மழையில் எதிர் நீச்சல் போடுவது சிரமம்.

கார்களின் நெரிசலில் தத்தளிப்பது சென்னையின் அன்றாடக் காட்சிகளில் ஒன்று. அனேக கார்களில் ஒரிருவரே பயணிக்கிறார்கள். அன்றைக்குரிய கோட்டாவை முடித்தால்தான் ஊக்கத்தொகை கிடைக்குமென்பதால் ஓலாக்களும், உபர்களும் பறக்கின்றன அல்லது காத்துக் கிடக்கின்றன. இதன்றி வீட்டில் இடமின்றி தெருவில் நிறுத்தி வைத்திருக்கும் கார்-காரர்கள் சென்னையில் அதிகம்.

ஆனால் தங்க விமானப் படிக்கட்டில் மன்னர் இறங்கும் சவுதி மற்றும் வளைகுடாவின் நிலைமை வேறு! அங்கே கார்கள் என்பது பயணத்திற்கானதல்ல. அந்தஸ்தை பறைசாற்றுவது!

அரபுலகின் முதல் சூப்பர்கார் என அழைக்கப்படுகிறது லைக்கன் ஹைப்பர் பி போர்ட் கார் – Lykan HyperPport. லெபனானில் இருக்கும் டபிள்யு மோட்டார்ஸ் நிறுவனம் இதை உருவாக்கியிருக்கிறது – இல்லை செதுக்கியிருக்கிறது.

இதன் முகப்பு விளக்குகளில் வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. டைட்டானியம் எல்டி தகடுகளில் மொத்தம் 420 (15 காரட்) வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. வாங்குவோரின் விருப்பத்திற்கேற்ப விதவிதமான வைரக்கற்கள் விதவிதமான வண்ணங்களில் கிடைக்கும்.

இரட்டை டர்போ 3.8 லிட்டர் ஆறு குழாய் என்ஜின் மூலம் 780 குதிரைச் சக்தி வெளியாகும். மூன்றே வினாடிகளில் அறுபது மைல் வேகத்தை (96) கி.மீ) அடையலாம். அதிக பட்சம் 240 மைல்கள் (386 கி.மீ) வேகமெடுக்கிறது இந்த கார்.

உலகின் அதி உயர் விலைக் கார்களில் இதுவும் ஒன்று என மார் தட்டுகிறார்கள், அரபு ஷேக்குகள். விலை என்ன தெரியுமா? 22 கோடியே ஆறு லட்சத்தி 43 ஆயிரம் ரூபாய்.

அந்த மார்தட்டலைப் பார்க்கும் போது இங்கே மூச்சு விடக்கூட முடியாமல் ஒரு பேருந்தில் மக்கள் பயணிக்கிறார்கள். இந்த பேருந்து இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ இல்லை வங்கதேசத்திலோ பல இடங்களில் பார்க்க முடியும். விடுமுறை நாட்களில் தோளில் தொங்கும் பைகளுடன் இந்த மனிதக் கூட்டம் பெரும் அபாயத்துடன் பயணிக்கின்றது. தீபாவளி நாட்களில் திருப்பூரில் இருந்து மதுரை செல்லும் பேருந்துகளில் மக்கள் பயணிப்பதற்கு பெரும் போரே நடத்த வேண்டியிருக்கும்.

மேற்கண்ட அரபு காரின் விலையில் எத்தனை பேருந்துகள் வாங்க முடியும் தெரியுமா?

150 பேருந்துகள் வாங்க முடியும். இதுதான் இன்றைய உலகின் அந்தஸ்து ஆற்றும் அறம்!

செய்தி ஆதாரம் :

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

பச்சைக் குழந்தைகளோடு பரிதவிக்கும் ரோஹிங்கியா தாய்மார்கள் !

1

னக்கு பிறக்கப் போகும் இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி காத்திருந்தார், 24 வயதான சாமிரான். அச்சமயத்தில் தான் மியான்மர் இராணுவம் அவரது கிராமத்துக்குள் புகுந்து மக்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்துக் கொண்டிருந்தது.

கொடுமைக்குள்ளாக்கப்படும் ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்த சாமிரானும், அவரது கணவர் அன்வர் மற்றும் அவர்களது மூன்று வயது குழந்தையான சபிகாவும், மியான்மரின் ராக்கைன் மாநிலத்தின் ராஜர்பில்லில் உள்ள தங்களது வீட்டை விட்டு கடந்த ஆகஸ்ட் 25  அன்று தப்பித்து வெளியேறினர்.

நிறைமாத கற்பிணியான சாமிரான், தன் குடும்பத்தாருடன் இரவு முழுக்க உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வெளியேறினார்.

சாமிரான் தனது பச்சிளம் குழந்தை சாதிகாவுடன்

”காலையில் நாங்கள் இட்டெல்லா எனும் கிராமத்தை அடைந்தோம். அந்த கிராமம் மியான்மர் படைகளால் தாக்கப்பட்டு, நிர்மூலமாக்கப்பட்டிருந்தது” என நினைவுகூர்கிறார் சாமிரான்.

பிறகு அவர்கள் கைவிடப்பட்ட ஒரு வீட்டை காண்கிறார்கள். அதில் ஐந்து நாட்கள் அவர்களுக்குப் போதுமான உணவு பொருட்கள் கிடைக்கிறது. ஆனால், இராணுவம் மீண்டும் அக்கிராமத்தினுள் நுழைந்தது,

”நாங்கள் அங்கிருந்து தப்பிவிட்டோம்” என்கிறார் சாமிரா.

அவர்களது அடுத்தகட்ட பயணம் மிகவும் கடினமாக இருந்தது. உணவு, தண்ணீர் கூட இல்லாமல் ஒரு நாள் பகல், இரவு முழுக்க அக்குடும்பம் நடந்தது.

“அந்த வலியைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூட விரும்பவில்லை.  எனக்கு வயிற்றில் தொடர்ச்சியான வலி இருந்தது. மிகவும் மோசமான உடல்நிலையை உணர்ந்தேன். தாங்க முடியாத வலி என் வயிற்றில் வரும் போதெல்லாம், அதனைச் சிறிது குறைக்க சிறிது நேரம் உட்கார்ந்து, குனிந்து ஆசுவாசப்படுத்துவேன்”  எனக் கண்ணீரோடு நினைவுகூர்கிறார் சாமிரான்.

”அது எனது வாழ்க்கையில் மிகவும் மோசமான காலகட்டமாகும். நான் மூச்சுவாங்கிக் கொண்டு நடையைத் தொடர்ந்தேன். என்னையும் எனது மகளையும் மாறி மாறி எனது கணவர் சுமந்து நடந்தார். என் மகளாலும் நடக்க முடியவில்லை. ஓய்வில்லா பயணத்தின் வலியால் அவள் அழத் தொடங்கினாள். வலியாலும், பசியாலும், விரக்தியாலும் நாங்கள் அனைவரும் அழுதோம். ” என சாமிரான் கூறினார்.

சமீரானின் குடும்பம் ஒருவழியாக மோங்கினி பாராவை அடைந்தது. அங்கு அப்போதும் சில குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருந்தன. சாமிரான் குழந்தையைப் பெற்றெடுக்க அங்குள்ள வயது முதிர்ந்த பெண்கள் சிலர் உதவினர்.

“5 நாட்களுக்குப் பிறகு நாங்கள் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டியது இருந்தது.  நான் நடக்க கூடிய நிலைமையில் இல்லை. எனினும், ஒரு வழியாக நடந்து ஓரிடத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்குதான் நாஃப் நதியைக் கடந்து  வங்காளதேசத்தை அடைய ஒரு படகு கிடைத்தது. படகு சவாரிக்கு 650,000 கியாட்(31,022 ரூபாய்) தேவைப்பட்டது. எங்களிடம் போதிய பணமில்லாததால் படகில் ஏற்ற மறுத்தார்கள். ஆனால் மக்களில் சிலர் உதவியதன் காரணமாகப் படகில் ஏறி வந்தேன்” என்கிறார் வங்க தேசத்தின் துறைமுக நகரான காக்ஸ் பசாரில், ஒரு மசூதிக்கு வெளியே தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  மருத்துவமனையில் உதவிகளுக்காக வரிசையில் தனது கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த சாமிரான்.

அவரது அயராத பயணத்தாலும், நலிந்த உடல்நிலையாலும், அவரால் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை.  “பலநாட்கள் உணவின்றி பயணம் செய்து வந்த நிலையில் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க எப்படி பால் சுரக்கும் ?” எனக் கேட்கிறார் சாமிரான்.

பலரும் இதே நிலைமையில் தான் இருந்தார்கள்.

யூனிசெஃப்-ஐச் சேர்ந்த மாயங்க் சாரி எனும் ஊட்டச்சத்து நிபுணர் கூறுகையில், “இளம் தாய்மார்களும் குழந்தைகளும்தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மிகக் கடுமையான மனஅழுத்தமும், மோசமான நிலைமைகளும் தாய்மார்களையும் அவர்களது குழந்தைகளையும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கியது.  இதுவே அவர்களுக்குத், தங்களது குழந்தைகளுக்குப் பால் கொடுக்க முடியாத நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.  இது மிகப்பெரிய பிரச்சினையாக மாறலாம்” என்று கூறுகிறார்.

காலிதா(20) தனது ஒரு வயது மகளான சஹானாவுடன் இருக்கிறார். “எங்களது ஊரில் இராணுவம் புகுந்து, வீடுகளுக்கு தீவைத்து மக்களைக் கொன்று குவித்தது. எங்கள் உயிரைப் பாதுகாக்க நாங்களும் ஓடி, படகில் வங்கதேசத்திற்கு எல்லை கடந்து வந்தோம். படகில் இங்கு தப்பித்து வர ஐந்து நாட்கள் ஆனது. நான் என்னை அதிர்ஸ்டசாலி என்றே கருதுகிறேன். காரணம், எனது மொத்தக் குடும்பமும் இன்று என்னுடன் உள்ளது. எனது கணவர் உணவு வாங்க சென்றுள்ளார், எனக்கும் அவரோடு சென்று உணவு வாங்கி வரவேண்டும் என்று ஆசை ஆனால் கைக்குழந்தையுடன் உணவுக்காக நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருப்பதும், உணவுக்காகப் போராடுவதும் இயலாத காரியம்.” என்று கூறுகிறார் காலிதா

சோனா மெஹர்(45), தனது மூன்று மாத குழந்தையான மிரனா பேகத்தோடு இருக்கிறார். ”எனது ஏழு குழந்தைகளையும் நானே தனியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் கணவருக்கு தோள்பட்டையில் குண்டடி பட்டுவிட்டது. அதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார். உணவு பெறுவதற்காக, இந்த கைக்குழந்தையுடன் நான் ஒரு நாள் முழுக்க வரிசையில் நிற்கிறேன்.” எனக் கூறுகிறார் சோனா மெஹர்.

ஹசீனா(25), தனது 18 மாத குழந்தை முனீராவோடு இருக்கிறார். ”எனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நான் இங்கு வந்தேன்.  இரண்டு நாட்களுக்குத் தேவையான உணவை மட்டுமே எங்களால் எடுத்துக் கொள்ளமுடிந்தது. மீத நாட்களில் நாங்கள் பட்டினியோடே நடந்தோம். எங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடும் சூழலில் எனது பசுவை அங்கேயே விட்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை. அதையும் என்னோடு கொண்டு வந்திருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்” என்கிறார் ஹசீனா.

33 வயதான ஹமீதா தனது 4 மாத மருமகன் யூசஃபுடன். ”இவனது பெற்றோர்கள் ராணுவத்திரனால் கொல்லப்பட்டனர். இவனை நான் காப்பாற்றி என்னோடு கொண்டு வந்துவிட்டேன். இல்லாவிட்டால் இவன் அங்கேயே இறந்திருப்பான். எனக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள், அதில் ஒரு குழந்தை பிறந்து ஆறு மாதகாலமே ஆகிறது.  இவர்கள் இருவருக்கும் இந்த உணவை வழங்க முடியாது என்பதால், இருவருக்கும் நான் தாய்ப்பால் கொடுக்கவேண்டியது இருக்கிறது.  எனக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு கிடைப்பதே அரிதானதாக இருக்கும் சூழலில் இது எனக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது” என்கிறார் ஹமீதா .

16 வயதான புஷ்ரா பேகம் தனது 3 மாத மகன் முகமது கைசருடன் இருகிறார். ”நாங்கள் வங்கதேசத்துக்கு நடந்தே வந்து சேர்ந்தோம். குடுபலாங்கில் உள்ள இந்த அகதி முகாமிற்கு வந்து சேர்வதற்கு எங்களுக்கு 10 நாட்கள் ஆகிவிட்டது. நான் எனது மகனைக் குறித்தே முகவும் கவலையுறுகிறேன். இந்த நெடும்பயணத்தால் அவனை மிரளச் செய்திருக்கும் என்று எண்ணுகிறேன். நாங்கள் வீட்டை விட்டு வெளியேறிய நாளிலிருந்து அவன் மிகவும் குறைந்த அளவிலேயே பால் குடித்தான். பயணம் மிகவும் கடுமையானதாக இருந்தது. போதிய உணவில்லாமல்  பல நாட்கள் கடந்தன. இதுவும் அவனது உடல்நிலையை பாதித்திருக்கிறது” என்கிறார் புஷ்ரா.

35 வயதான ஹமீதா தனது ஒரு வயது மகன் முகமது ஆலமுடன் இருக்கிறார். ”அவர்கள் என் கணவரை கொன்று விட்டார்கள். எனது 5 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற நான் ஓடவேண்டியது இருந்தது. உதவியையும், நிவாரணப் பொருட்களையும் பெற எனக்கு உதவ இங்கு யாரும் கிடையாது. எனது குழந்தைகளுக்கு உணவளிக்க எனக்கு உணவுப் பொட்டலங்கள் அவசியமாகத் தேவை. கடந்த 3 மணிநேரமாக வரிசையில் நின்றும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆண்கள் அரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பதால் எங்களை நோக்கித் தூக்கி வீசப்படும் உணவுப் பொட்டலங்களை எளிதில் அவர்களால் குதித்துப் பெற்றுக் கொள்ள முடிகிறது. என்னைப் போன்ற பெண்கள் காத்துக் கிடக்க வேண்டியதுள்ளது” என்று கூறுகிறார்.

24 வயதான தாகிரா தனது ஏழு மாத மகள் ருஷ்மா அக்தருடன் இருக்கிறார். ”நாங்கள் எங்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது வெளியில் அலறல் சத்தம் கேட்டது. வெளியே எங்கும் தீப் பற்றி எரிவதையும் மக்கள் ஓடுவதையும் தான் கண்டோம். எனது கணவர் எனது மகளைப் பற்றிக் கொள்ள, நாங்கள் மற்றவர்களோடு வெளியேறினோம். எங்களது உடைமைகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கும். சுவற்றிலிருந்த எங்களது குடும்பத்தின் பெரிய புகைப்படத்தை எப்படியாவது பெறவேண்டும் என விரும்புகிறேன்” எனக் கூறுகிறார் தாகிரா.

ஷாம்ஸ் உன் நெகார் (35) தனது இரண்டு மாத இரட்டைக் குழந்தைகளுடன்(ஈசா, முசல்) இருக்கிறார். ”எனக்கு இவர்களைத் தவிர மேலும் 10 குழந்தைகள் உள்ளனர்.நாங்கள் மூன்று நாட்கள் நடந்து வங்க எல்லையை அடைந்தோம். இந்த மூன்று நாட்களில் ஒரு கவள உணவு கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை. அதன் காரணமாக  என்னால் இந்தக் குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியவில்லை. தாகத்தாலும் பசியாலும் அவர்கள்  அழுது கொண்டே இருந்தனர். என் கண்முன்னேயே எனது குழந்தைகள் இது போன்று பட்டினியாக இருந்தது, மிகவும் அச்சுறுத்துவதாகவும் வலிமிகுந்ததாகவும் இருந்தது” என்று கூறுகிறார்..

யேமீனா அரா, (30) தனது ஆறு மாத மகள் ரோஹனாவுடன் இருக்கிறார். ”எங்களது கிராமம் பக்ரீத் அன்று தாக்கப்பட்டது. அன்று நாங்கள் தப்பித்து விட்டோம். இங்கு வந்து சேர 5 பகல்களும், இரவுகளும் எடுத்துக்கொண்டன. குழந்தைகளால் வெகுதூரம் நடக்க முடியாத காரணத்தால், வங்கதேச எல்லைக்குள் வருவதற்கு,  நானும் எனது கணவரும் குழந்தைகளைக் கைகளிலும், தோள்பட்டையிலும் தூக்கிச் சுமந்து வந்தோம்” என்கிறார்.

நன்றி : அல்ஜசீரா

_____________

இந்த படக்கட்டுரை பிடித்திருக்கிறதா? இனவெறி மதவெறி ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்து எதிர்க்கும் வினவு தளம் வலுப்பெற உதவுங்கள்! சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

டெங்கு : விருதை – ஓசூர் – தருமபுரி ஆர்ப்பாட்டங்கள் !

0

மிழகம் முழுக்க இலட்சக்கணக்கான மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் செயலற்ற எடப்பாடி அரசு மக்களையே குற்றவாளிகளாக்க காட்டும் வகையில் பேசி வருகிறது. அரசு மருத்துவமனைகள் டெங்கு நோய் தாக்கப்பட்டவர்கள் பலரையும் உரிய சிகிச்சையளிக்காமல் சாதாரணக் காய்ச்சல் மர்மக் காய்ச்சல் என அனுப்பிவைக்கிறது. அவ்வாறு அனுப்பச்சொல்லி அரசே சொல்கிறது.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் டெங்குவால் இறந்த பின்னும் 16 பேர்தான் இறந்துள்ளனர் என மோசடியாக கணக்கு கூறுகிறது எடப்பாடி அரசு. இந்நிலையில் விருத்தாச்சலம் பகுதியில் உள்ள 33 -வார்டுகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆய்வு செய்து அதனை புகைப்பட ஆதாரங்களுடன் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

அதனடிப்படையில் கடந்த 13.10.2017 அன்று மதியம் 12:00 மணிக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. மேலும் மாநகராட்சி அலுவலரிடம் புகைப்பட ஆதாரங்கள் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் உள்ள சுகாதார சீர்கேடுகளை சரி செய்யவேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. இதற்கு மக்கள்அதிகாரம் வட்டார ஒருங்கிணைப்பாளா் தோழா் முருகானந்தம் தலைமையேற்றார். மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இந்த முற்றுகையில் பங்கெடுத்துக் கொண்டனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம், விருத்தாச்சலம்.

***

சூர் – பாகலூர் சர்க்கிள் அருகே, மக்கள் அதிகாரம் சார்பில் “எதிர்க்கட்சித் தலைவர்களே, ஊடகங்களே, ஜெயா, எப்படி செத்தால் என்ன?, செயலற்ற அரசுதான் மக்களின் மரணத்திற்கு காரணம்! டெங்கு, மலேரியா பிரச்சனைக்கு தீர்வு காண பேசுங்கள்!“ என்ற முழக்கத்தின் அடிப்படையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் பாகலூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் காந்தராஜ் தலைமைத் தாங்கினார், சூடாபுரம் கேபிள் ஆப்பரேட்டர் திரு. முருகேசன், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் இரவிச்சந்திரன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் துணைத்தலைவர் தோழர் பரசுராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக, மக்கள்  அதிகாரத்தை சேர்ந்த தோழர் இராமசாமி நன்றியுரையாற்றினார்.

தலைமையுரையாற்றிய தோழர் காந்தராஜ் பேசுகையில், ‘ இங்கே பாகலூரில் ஆர்ப்பாட்ட துண்டறிக்கையை மக்களிடம் விநியோகித்து பிரச்சாரம் செய்ததன் விளைவாக இது நாள் வரை தூங்கிக் கொண்டிருந்த அரசு நிர்வாகம் இப்ப வந்து அவசர அவசரமாக கொசு மருந்து அடிச்சிட்டு போயிருக்கிறது என்று தன்னிடம் தாய்மார்கள் வந்து கூறியதை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்தார். மேலும், இது மாதிரி தெருவில் இறங்கி மக்கள் பிரச்சனைக்கு முகம் கொடுத்து களம்  காண்பதன் மூலமே டெங்கு முதல் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க வழி பிறக்கும் என்றார்.

அடுத்து பேசிய திரு.முருகேசன், ‘ ஒட்டுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை சந்திக்க வருகின்றனர். ஆனால் மக்கள் அதிகாரம் 24 மணி நேரமும் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருவது தன்னை நெகிழச் செய்து இருக்கிறது என்ற வகையில் மக்கள் அதிகாரம் தோழர்களின் அடுத்தடுத்த போராட்டங்கள் முன் முயற்சிகளை பட்டியலிட்டு  மக்கள் அணிதிரள வேண்டிய அவசியத்தை உணர்த்தினார்.

அடுத்து உரையாற்றிய தோழர் ரவிச்சந்திரன்,   “பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையம், அரசுப் பொது மருத்துவமனைகளே நோயை உற்பத்தி செய்யும் ஆலைகளாக உள்ளது” என்ற தகவலை தாங்கள் ஆய்வு செய்த போது கிடைத்த அனுபவங்களை தொகுத்து பேசினார்.

அதனையடுத்து பேசிய தோழர் பரசுராமன் ,  டெங்கு கொசு ஒழிக்கப்பட முடியாத விசயமல்ல. அரசுக்கு ஒழிக்க வேண்டும் என்ற அக்கறை இல்லை. மாறாக, மக்களை சுரண்டும் அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மருத்துவத்துறையை மேலாண்மையோடு முடுக்கிவிட்டு மரணங்களை தடுக்காமல் 20,000 பேருக்கு நோட்டீசு கொடுத்து மக்களையே குற்றவாளியாக்கி சித்தரிக்கிறது.

மேலும், சித்த மருத்துவத்துறைக்கு உள்நோயாளியாக அனுமதிக்கக் கூடாது என்ற இயக்குனர் அறிவிப்பானது அரசு கார்ப்பரேட் மருந்து கம்பெனிகளுக்கு அடியாளாக போயுள்ளதை அம்பலப்படுத்தி இந்த அரசு மக்களை காக்காது என்றார். தோற்று நிற்கும் இந்த அரசுக் கட்டமைப்பு தூக்கி எறியும் திசை வழியில் போராட்டங்களை செல்வது ஒன்றே ஒரே தீர்வு என்று பேசினார். திரளான மக்கள் இறுதி வரை இருந்து ஆர்ப்பாட்டத்தை ஆர்வமுடன் கவனித்துச் சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
பாகலூர் பகுதி. தொடர்புக்கு : 9994884923.

***

டெங்கு : தொடரும் மரணம் செயலிழந்த  எடப்பாடி  அரசும் நகராட்சியுமே குற்றவாளிகள் – தருமபுரி ஆர்ப்பாட்டம்.

டெங்குவால் தமிழகத்தில் அன்றாடம் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கானோர் பலியாகிவிட்டனர். இதனை தடுக்க வக்கற்ற இந்த அரசுதான் குற்றவாளி என்றதை உணர்த்தும் வகையில் தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பு தெருமுனைக்கூட்டங்கள்,  ஆர்ப்பாட்டங்களை  நடத்தி வருகிறது. அதனுடைய  ஒருபகுதியாக தருமபுரி தந்தி அலுவலகம் முன்பு 14.10.2017 அன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டம் தோழர் சிவா தலைமையில் நடைபெற்றது.

மக்கள் அதிகாரம் மண்டல குழு உறுப்பினர் தோழர் கோபிநாத் பேசுகையில், ஒரு காலத்தில் அம்மை நோய்க்கு மருத்துவம் இல்லாமல் கொத்துக் கொத்தாக இறந்தனர்.  ஆனால் இன்றைக்கு டெங்குவுக்கு மருத்துவம் இருந்தும் கொத்துக் கொத்தாக இறக்கின்றனர். சாணம் தெளித்தால் கொசு வராது என்கிறார் அமைச்சர்.

மக்களின் உயிரோடு விளையாடும் அமைச்சர்களும், அதிகாரிகளும் நமக்கு தேவையா? அமைச்சர்களின் இந்த திமிர்த்தனமான பேச்சு “பட்டபகலில்  மக்களை  கொலை  செய்வதற்கு  சமம்”.  மக்களை  தூய்மையாக  இருக்க வேண்டும் என்று கூறும் இவர்கள் சாக்கடையை தூர்வாராமல், குப்பை தேங்கி நிற்கிறது. குப்பை அள்ளுவதற்கு லண்டன் நிறுவனங்கள். இதற்காக பலதிட்டம், நிதி ஒதுக்கீடு என எல்லாவற்றிலும் ஊழல்.

இதனால் புதிய புதிய நோய்கள் பரவி வருகிறது.  “நாமக்கல்லில் ஒரு தாய் தனது குழந்தைக்கு  மருத்துவம் பார்க்க முடியாமல் தனது குழந்தையோடு தற்கொலை செய்து கொள்கிறார்” என்றால் நாம் எப்படி பட்ட தேசத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை பரிசீலிக்க வேண்டும். நிதி ஆயோக், அரசு மருத்துவமனைகளை தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்கிறது. நமது  மருத்துவ உரிமைகளை பறிப்பவனிடம் நியாயம் கேட்க முடியுமா? எனவே இந்த நாட்டையே கொள்ளையடிக்கும், மக்களின் உயிரோடு விளையாடும் அமைச்சர்களையும்,  அதிகாரிகளையும் தண்டிக்காத வரையில் தீர்வு கிடைக்காது என்றார்.

தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர்  முத்துக்குமார் பேசுகையில், டெங்குவால்  இறக்கும் மக்களை மர்ம காய்ச்சல் என்று மூடி மறைந்து கொண்டு இருக்கிறார்கள். 400 கோடி ஊழல் செய்த ‘குட்கா’ அமைச்சர்கள் எப்படி மக்களை சுகாதரமாக பாதுகாப்பார்கள்? சாராயக்கடையைத் திறந்து  மக்களை கொலை செய்பவர்களிடம் எப்படி நியாத்தை எதிர்பார்க்க  முடியும்?

இலவச மருத்துவம் இல்லை, இலவச கல்வி இல்லை,  இலவச தண்ணீர் இல்லை, 400 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். காவிரி பிரச்சினையை இவர்களால் தீர்க்க முடிந்ததா? எனவே மக்கள் பிரச்சனையை தீர்க்க துப்பில்லாத இந்த அரசின் அனைத்து உறுப்புகளும் மக்களுக்கு எதிராக போய்விட்டது. எனவே இதற்கு எதிராக மக்கள் அனைவரும்  ஒன்றிணைவதுதான்  ஒரே மாற்று என்று அறைகூவல் விடுத்தார்.  இந்த ஆர்ப்பாட்டத்தை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நின்று கவனித்தனர்.

தகவல் :
மக்கள்  அதிகாரம்,
தருமபுரி. தொடர்புக்கு; 81485 73417

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

தானியங்கல் தொழில்நுட்பத்தின் சமூகத் தாக்கம் வேலையிழப்பு மட்டுமல்ல !

6

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 4

வர் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகின்றவர் – நெருங்கிய உறவினர். வழக்கமாக உற்சாகமான ஒரு துள்ளலுடன் வருகிறவர், இன்று இறங்கிய தோள்களுடன் கருத்த முகத்துடன் வந்திருந்தார். நிறைய புகைத்திருப்பார் என்று தெரிந்தது – அவரோடு கை குலுக்கிய பின் எனது கையிலும் புகையிலையின் தீய்ந்த வாடை தொற்றிக் கொண்டது. இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. திருமண அழைப்பு கொடுக்கத் தான் வந்திருந்தார்.

அவரது சோர்வுக்கு என்ன காரணம் என்று விசாரித்தேன். அவரது நிறுவனம் தன்னை திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் (Performance Improvement Plan) சேர்த்திருப்பதாகச் சொன்னவர், ஒருவரை வேலையை விட்டுத் தூக்குவதற்கு முன் செய்யப்படும் கண் துடைப்பு தான் இந்த திட்டம் என்றார். இன்னும் ஒரு மாதத்தில் திருமணம், இரண்டு மாதத்தில் வேலை இழப்பு. பெண்ணுக்கும் அவரது வீட்டாருக்கும் விசயத்தை சொல்லி விடவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். வேலை இழப்புக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முயன்றேன்.

அவர் மெய்நிகர் இயங்குதளமான (Virtualization) விஎம்வேர் (Vmware) மென்பொருளை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார். மெய்நிகர் இயங்குதளத்தில் தேவையான சர்வர்களை ஏற்படுத்திப் பராமரிப்பது, சர்வர்களுக்கு இடையே மின் தரவுகளை இடம்பெயர்ப்பது (Data Migration) தேவையான சேமிப்பு இடங்களை (Storage Space) உண்டாக்குவது போன்ற நிர்வாக வேலைகளைச் செய்து வந்துள்ளார். இதே வேலையில் சுமார் ஆறாண்டு அனுபவம் கொண்டிருந்தார்.

தற்போது அவரது நிறுவனம், இது போன்ற வழமையான நிர்வாகப் பணிகளை (Routine management tasks) தானியங்கி முறையில் (Automate) நிறைவேற்றும் பொருட்டு விஎம்வேர் நிறுவனம் வெளியிட்டுள்ள வி.ரியலைஸ் (Vrealize) எனும் மென்பொருளைப் பயன்படுத்த துவங்கியுள்ளது – இதனால் அவரது நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் ஐம்பது ஊழியர்கள் வேலையிழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வி.ரியலைஸ் என்பது தானியங்கித் தொழில்நுட்பத்தின் (Automation) மிக அடிப்படையான வடிவம். இதே தொழில்நுட்பம் தற்போது மிகப் பெரியளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் அமல்படுத்தப்பட்டு பல லட்சம் தொழிலாளர்களின் வேலையைக் காவு வாங்கத் துவங்கியுள்ளது. மனிதக் கட்டுப்பாட்டின் (Manual Control) கீழ் செய்யப்பட்டு வந்த வழமையான நிர்வாகப் பணிகளை விட தானியங்கி முறை குறைவான நேரத்தையும் மனித ஆற்றலையும் கோருவதால் பல நிறுவனங்களும் இப்புதிய தொழில்நுட்பத்தை சுவீகரிக்கத் துவங்கியுள்ளன.

இந்தியாவில் சுமார் 31 லட்சம் தகவல் தொழில்நுட்ப வேலைகள் இருப்பதாக ஒரு கணக்கீடு தெரிவிக்கின்றது – தானியங்கித் தொழில்நுட்பம் முழுவீச்சில் அமல்படுத்தப்படும் போது சுமார் 6 லட்சம் பேர் வேலையிழப்புக்கு ஆளாவார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். இவை இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டும் நடக்கவுள்ள வேலை இழப்புகள்.

உற்பத்தியில் தானியங்கி முறை என்பது புதிய போக்கல்ல. மனிதக் கரங்களை இயந்திரக் கரங்களால் மாற்றீடு செய்வது முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொடர்ந்து நிகழும் போக்காகும். சந்தையை வேகமாகக் கைப்பற்றுவது, அதற்காக உற்பத்தியை அதிகரிப்பது, உற்பத்திப் பொருளை உடனடியாக சந்தைக்குக் கொண்டு சேர்ப்பது, சந்தையில் நிலவும் போட்டியை முன்னரே கணித்து அதற்கேற்ப உற்பத்தியை அதிகரிப்பது என முதலாளித்துவ உற்பத்திமுறை தனது தோற்றத்தில் இருந்தே மனித ஆற்றலை விஞ்சிய இயந்திர ஆற்றல்களைத் தேடத் துவங்கி விட்டது.

தகவல் தொழில்நுட்பத் துறையிலும் கணினிகளுக்கு தனித்தனியாக செலுத்தும் ஆணைகளை தேவைக்கேற்ப நிரல்களாக (Programme) எழுதுவது வழக்கம் தான். எனினும், ஏற்கனவே வழக்கத்தில் உள்ள தானியங்கி முறைகள் அனைத்தும் மனித மூளையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படக் கூடியதாக இருந்தன.

அதாவது வழமையான தானியங்கி முறையை இயக்குபவர்களாகவும், கட்டுப்படுத்துபவர்களாகவும், தீர்மானிப்பவர்களாகவும் மனிதர்கள் இருந்தனர். இது குறிப்பிடத்தகுந்த அளவுக்கு தொழிலாளர்களை வேலையிழக்கச் செய்தது என்றாலும் இன்னொரு முனையில் புதிய வேலைகளை (குறைந்த விகிதத்திலாவது) உருவாக்கியது. மேலும் தானியங்கி முறையில் நடக்கும் உற்பத்தியைக் கண்காணிக்கும் பணியை மனிதர்கள் செய்தனர்.

ஆனால், தற்போது கூறப்படும் “தானியங்கித் தொழில்நுட்பம்” என்கிற சொல்லின் பொருளும் பரிமாணமும் முற்றிலும் வேறானதாக உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக செயற்கை நுண்ணறித் திறனில் உருவான பாய்ச்சல் வளர்ச்சியின் தாக்கம் தானியங்கித் தொழில்நுட்பத்திலும் பிரதிபலித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட வேலையை எப்போது, எப்படி, எந்த வகையில் தானியங்கல் முறையில் செயல்படுத்த வேண்டும் என்கிற முடிவை எடுப்பதற்கும், அதை செயல்படுத்துதற்குமான இடத்தை செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் அடைந்துள்ளது.

மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வேலை அதற்கு முன் எங்கெல்லாம் நடந்தது, அவ்வாறு நடந்த வேலைகளின் விளைவு என்ன, என்னென்ன சாத்தியமான தவறுகள் ஏற்படலாம் என்பதை செயற்கை நுண்ணறிக் கணினிகள் ‘கற்றுள்ளன’. எனவே மென்பொருட்கள் விடுக்கும் கட்டளைக்குப் பதிலாக, செய்யப்படும் வேலைகளைச் சோதித்தறிவதும், சூழலுக்குத் தகுந்தாற் போல் எதிர்வினையாற்றுவதும் செயற்கை நுண்ணறிக் கணினிகளுக்கு தற்போது சாத்தியமாகியுள்ளது.

ஆலை உற்பத்தித் துறைகளைப் பொருத்தளவில் – குறிப்பாக இயந்திரவியல் துறையில் – என்பதுகளிலேயே மெல்ல மெல்ல தானியங்கித் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு வந்தது. கடந்த பத்தாண்டுகளில் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் அடைந்துள்ள வளர்ச்சியின் விளைவாக இயந்திரக் கரங்களின் துல்லியம் அதிகரித்துள்ளது.

ஆலை உற்பத்தியில் இதுவரை புகுத்தப்பட முடியாமல் இருந்த வேலைப் பிரிவுகளுக்கெல்லாம் தானியங்கல் உற்பத்தி முறை விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது. இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிந்தைய காலகட்டத்தில், அமெரிக்காவில் நடந்த 50 லட்சம் வேலையிழப்புகளில் சுமார் 88 சதவீதம் தானியங்கித் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டதால் நிகழ்ந்துள்ளது என்கிறது பால் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின்  ஆய்வு ஒன்று.

அடுத்த பத்தாண்டுகளில் தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம், உற்பத்தி ஆலைகள் உள்ளிட்டு பல்வேறு துறைகளில் சுமார் 38 சதவீத வேலைகளை தானியங்கித் தொழில்நுட்பம் காவு வாங்க உள்ளதாக ப்ரைஸ்வாட்டர் கூப்பரின் ஆய்வறிக்கை ஒன்று எச்சரிகை மணி அடிக்கின்றது. இந்தியாவில் மட்டும் அடுத்த நான்காண்டுகளில் சுமார் 23 சதவீத தொழிலாளர்கள் தானியங்கித் தொழில்நுட்பத்தால் வேலை இழப்புக்கு ஆளாவார்கள் என்கிறார் பீப்பிள்ஸ்ட்ராங் நிறுவனத்தின் தலைவர் பன்சால்.

இப்புதிய போக்கு ஒவ்வொரு துறையிலும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. உதாரணமாக மருத்துவத் துறையை எடுத்துக் கொள்வோம்.

மருத்துவ பரிசோதனை மற்றும் நோய்களைக் கண்டறிய SOAP (Subjective, Objective, Assessment and Plan) முறை பின்பற்றப்படுகின்றது. நோயாளி ஒருவரின் பிரச்சினை குறித்து கேள்விகள் கேட்டு அகநிலையாக (Subjective) அந்த நோய் அல்லது பிரச்சினை உருவாக என்ன காரணம் என்பதைப் புரிந்து கொள்வது. பின் புறநிலையாக (Objective) பல்வேறு சோதனைகளின் மூலம் அந்த நோயைப் புரிந்து கொள்வது. பின் சோதனை முடிவுகளை அலசி ஆராய்வது (Assessment). இறுதியாக அவரது நோயைக் குணப்படுத்தும் திட்டம் (Plan) ஒன்றை வகுப்பது என்பதே தற்போது கைக்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ நடைமுறை.

இதில் சோதனைகளைப் பரிசீலித்து நோயின் தாக்கத்தைப் புரிந்து கொள்வது என்ற கட்டத்தில் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரத் துவங்கியுள்ளது. குறிப்பாக ஐ.பி.எம் நிறுவனம், மெர்ஜ் ஹெல்த்கேர் எனும் நிறுவனத்தை சுமார் 1 பில்லியன் டாலர் செலவில் கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மெர்ஜ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் வசமிருந்த சுமார் 30 ஆயிரம் கோடி மருத்துவ ஆய்வறிக்கையின் படிமங்களுக்கு (Scanned images) உரிமம் பெற்றுள்ளது.

சுமார் 7,500 மருத்துவமனைகளின் பரிசோதனைக் கூடங்களில் இருந்து பெறப்பட்ட இந்த ஆய்வறிக்கைப் படிமங்களை தற்போது ஐ.பி.எம் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிக் கணினியான வாட்சனில் (Watson) பதிவேற்றியுள்ளது. குறிப்பிட்ட நோயைக் கண்டறியச் செய்யப்படும் ஸ்கேன் அறிக்கைக்கைகளை வாட்சனிடம் கொடுத்தால், அது தன்னிடம் இருக்கும் படிம மாதிரிகளோடு ஒப்பிட்டு நோய் தாக்கு உள்ளதா, எந்த அளவில் உள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடித்துச் சொல்லிவிடும். அதாவது, இன்று எக்ஸ் ரே அல்லது ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து ஒரு ரேடியாலஜிஸ்ட் அல்லது சிறப்பு மருத்துவர் கூறுகின்ற மதிப்பீட்டினை, அவர்களைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு துல்லியத்துடன் வாட்சனால் கூற முடியும்.

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள திறன் கடிகாரம் (Smart watch) வாட்சனின் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நமது உடலின் வெப்ப நிலை, இதயத் துடிப்பின் வேகம், உடலின் இயக்கம் உள்ளிட்டவைகளை தொடர்ந்து கண்காணிக்கும் ஆற்றல் கொண்ட திறன் கடிகாரம், அவ்வப்போதைய உடல் நிலைக்கு ஏற்ப மேற்கொள்ள வேண்டிய செயல்களை பரிந்துரைக்கும். உதாரணமாக, உங்களது கொழுப்பின் அளவுக்கு இன்று நீங்கள் ஐந்து கிலோமீட்டர்கள் நடக்க வேண்டும் என்பதைப் பரிந்துரைப்பதோடு, நீங்கள் நடக்கிறீர்களா இல்லையா என்பதையும் கண்காணிக்கும். மேலும் உங்களது இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், வெப்ப நிலை உள்ளிட்ட தகவல்களைத் தொடர்ந்து வாட்சனுக்கு அனுப்பிக் கொண்டும் இருக்கும்.

தற்போது நோயை முன்கூட்டியே கண்டறியும் கட்டத்தைக் கடந்து, குறிப்பிட்ட நோயாளியைக் குணப்படுத்துவதற்கான பிரத்யேகமான மருத்துவ திட்டங்களையும் செயற்கை நுண்ணறிக் கணினியின் மூலம் வகுப்பதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றது. இதன் மூலம் மருத்துவர்களை ஒரேயடியாக இயந்திரங்களின் மூலம் மாற்றீடு செய்ய முடியுமா அல்லது அப்படி செய்வது சாத்தியமா என்றும் மேற்குலகில் விவாதங்கள் நடந்து வருகின்றன.

குறிப்பான ஒரு நோயாளியின் சூழல், அவரது கலாச்சாரம், அவர் சார்ந்த வர்க்கம் உட்பட பல்வேறு புறநிலை மற்றும் அகநிலை அம்சங்களையும் கணக்கெடுத்தே அவரைத் தாக்கியிருக்கும் குறிப்பிட்ட நோய்க்கு தீர்வளிக்க முடியும் – சுருக்கமாகச் சொல்வதென்றால் நோய்க்கான மருத்துவத்தை அறிவியல் என்று சொன்னால், அதை யாருக்கு எப்போது எந்த அளவில் வழங்குவது என்பதை மருத்துவர் தீர்மானிப்பது ஒரு கலையாகவும் இருக்கிறது.

மருத்துவரின் அனுபவ அறிவு, நோயாளியின் வாய்மொழி, உடல்மொழி உள்ளிட்டவற்றை மதிப்பிடும் அவருடைய திறன் மற்றும் மருத்துவரின் உள்ளுணர்வு உள்ளிட்ட பல அம்சங்கள், மருத்துவத்தை ஒரு “கலை”யாகவும் ஆக்குகின்றன. இதை செயற்கை நுண்ணறிவு மாற்றீடு செய்ய முடியுமா என்பது குறித்தும் அதன் சாதக பாதகங்கள் குறித்தும் மேற்குலகில் விவாதங்கள் நடந்து வருகின்றன.

சட்டத் துறையை எடுத்துக் கொண்டால், ஐ.பி.எம் வாட்சன் செயற்கை நுண்ணறிக் கணினியில் இயங்கும் ராஸ் இண்டெலிஜென்ஸ் (ROSS Intelligence) எனும் தொழில்நுட்பம், சட்ட ஒப்பந்தங்களின் படிம மாதிரிகளை (Scanned images) ஆய்வு செய்து சட்ட ஆலோசனை வழங்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான சட்ட நூல்கள், ஏற்கனவே வழங்கப்பட்ட மில்லியன் கணக்கிலான தீர்ப்புகள், மாதிரி சட்ட ஒப்பந்தங்கள் உள்ளிட்டு பல கோடிக்கணக்கான சட்ட ஆவணங்கள் படிமங்களாக (Images) செயற்கை நுண்ணறிக் கணினியில் ஏற்றப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஒப்பந்தம் பற்றிய சட்ட ஆலோசனை பெற வேண்டுமெனில், அந்த ஒப்பந்த நகலை ஸ்கேன் செய்து வாட்சனிடம் கொடுத்தால் துல்லியமான ஆலோசனையை அது வழங்கி விடும்.

அமெரிக்காவைச் சேர்ந்த தணிக்கை நிறுவனமான டெலோய்டி, செயற்கை நுண்ணறித் திறன் கொண்ட தானியங்கி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட சில வருடங்களில் கீழ்நிலை சட்ட உதவியாளர்களாக உள்ள சுமார் 40 சதவீத வழக்கறிஞர்கள் வேலை இழப்புக்கு ஆளாவார்கள் என்கிறது. ஒரு குறிப்பிட்ட ஒப்பந்த ஆவணத்தை மனித ஆற்றலைக் கொண்டு ஆய்வு செய்து சட்ட ஆலோசனை வழங்கும் போது 65 சதவீத அளவுக்கே பிழையற்ற அலோசனை கிடைக்கிறது.

இதே செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது சுமார் 98 சதவீத அளவுக்கு துல்லியமான ஆலோசனை கிடைக்கின்றது. எனினும் மருத்துவத் துறையில் நடக்கும் விவாதத்தைப் போலவே சட்ட உலகிலும், மனித மூளையின் முடிவெடுக்கும் திறனுக்கு இயந்திரத்தின் முடிவெடுக்கும் திறனுக்கும் ஒப்பீடு செய்து விவாதங்கள் நடந்து வருகின்றன.

கட்டுமானத் துறை தொடங்கி ஆலை உற்பத்தி, தகவல் தொழில்நுட்பத் துறை வரையிலான எந்தத் துறையும் தானியங்கல் தொழில்நுட்பத்தின் தாக்கத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை. தற்போது இந்திய ஐ.டி துறை ஊழியர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தானியங்கல் முறையை இந்தப் பின்புலத்தில் வைத்தே புரிந்து கொள்ள வேண்டும்.

தகவல் தொழில்நுட்பத் துறை என்பதே பிற துறைத் தொழிலாளர்களுடைய வேலைகளைத் தின்று தான் வளர்ந்தது. தற்போது செயற்கை நுண்ணறித் திறனும் தானியங்கல் தொழில்நுட்பமும் அதே துறையினைச் சேர்ந்த ஊழியர்களை ரத்தப்பலி கேட்கத் தொடங்கியிருக்கிறது.

குறைவான தொழிலாளர்களைக் கொண்டு அதிக பட்ச உற்பத்தி; உற்பத்திச் செலவைக் குறைப்பது; உற்பத்தித் திறனைக் கூட்டுவது; மனிதர்களை இயந்திரங்களைக் கொண்டு மாற்றீடு செய்வது என்பவையெல்லாம் முதலாளித்துவ நியதிகளின்படி  தவிர்க்கவியலாத போக்குகள். இதன் விளைவாக வேலையற்றோர் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கிறது.

தொழில் துறைகளில் முன்னறிப் புலனாய்வுத் திறன் ஏற்படுத்தி வரும் மாற்றங்களும், அதன் விளைவான வேலையிழப்புகளும் ஒருபுறமிருக்க, இன்னொரு புறம் ஆளும் வர்க்கங்களின் கைகளில் இத்தொழில்நுட்பம் புதிய ஆயுதங்களைக் கொடுத்துள்ளது. மீப்பெரும் மின் தரவுகளை ஆய்வு செய்வதன் மூலம் சமூகத்தை மேலிருந்து கட்டுப்படுத்துவதற்கும் இயக்குவதற்கும் தேவையான முடிவுகளை வந்தடைகின்ற சாத்தியங்களை இத்தொழில்நுட்பங்கள் கொண்டிருக்கின்றன.

எதிர்காலம் குறித்து துல்லியமாக அனுமானிக்கும் ஆற்றலை செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் அடைந்து வருகிறது. மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் மென்மேலும் ”கற்றுக் கொள்கிறது”. இதன் காரணமாகவே துல்லியமான அனுமானங்கள் சாத்தியமாகின்றன. எதிர்காலம் குறித்த இந்த முன்னறிப் புலனாய்வுத் (Predective intelligence) திறனின் விளைவுகள் தாம், கடந்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளாக தானியங்கல் தொழில்நுட்பத் துறையில் பிரதிபலிக்கின்றன.

செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தின் மூலம் எடுக்கப்படும் முடிவுகள் சரியாக இருக்குமா இல்லையா என்பதைப் புரிந்து கொள்ள, அந்த முடிவுகளை வந்தடைய இத்தொழில்நுட்பம் கைக்கொள்ளும் முன்னறிப் புலனாய்வு (Predictive intelligence) முறையையும் அது தொடர்பான பகுப்பாய்வு (analytics) முறைகளையும் புரிந்து கொள்வது அவசியமாகிறது.

(தொடரும்)

– சாக்கியன், வினவு
புதிய கலாச்சாரம், ஜூலை 2017

இந்த கட்டுரையின் பிற பாகங்களுக்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் !

_____________

இதனை முழுமையான புத்தகமாக வாங்க

20.00Read more

அச்சு நூல் தேவைப்படுவோர்  மலிவு விலைப் பதிப்பை பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) கெட்டி அட்டை புத்தகப் பதிப்பை பெற ரூ 100-ம் (நூல் விலை ரூ. 60,  தபால் கட்டணம் ரூ. 40) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

_________________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத் தரவும். நன்றி