பாசிசத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம் !
பாசிசத்தின் பாதுகாப்பில் உச்ச நீதிமன்றம் !!
இந்திய ‘‘ஜனநாயகம்” பாதுகாப்பான நான்கு தூண்களின் மீது நிற்கிறது என்ற பொய்மை, அதன் மீது நம்பிக்கை கொண்டவர்களே பயந்து அலறும் விதத்தில் மிக வேகமாக நொறுங்கிச் சரிந்து வருகிறது.
இந்திய ‘‘ஜனநாயகத்தை” வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றுவதற்கான கடைசி நம்பிக்கையாகச் சித்தரிக்கப்பட்டுவரும் நீதித்துறை, அந்தச் சித்தரிப்புக்கு நேரெதிரான திசையில் வெகு வேகமாக நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக அதிர்ச்சியில் உறைந்திருக்கும் அறிவுத்துறையினரும் அரசியல் கட்சிகளும் ‘‘நீதிமன்றத்தை மதிக்கிறோம்” என்ற அவர்களுக்கேயுரிய சம்பிரதாயச் சொற்றொடரைக்கூடப் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையின் வெளிப்பாடுதான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்திருக்கும் ‘‘இம்பீச்மென்ட் மோஷன்” எனப்படும் பதவி நீக்கத் தீர்மானம்.
இதற்கு முன் நீதிபதிகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பதவி நீக்கத் தீர்மானங்கள் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பானவை. தற்போதைய தீர்மானத்திலும் தலைமை நீதிபதிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
இருப்பினும், ‘‘தீபக் மிஸ்ரா தலைமையிலான ஒரு நீதிபதிகள் குழு, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் முழுவதையும் சட்டவிரோதமாகக் கைப்பற்றிக்கொண்டு, மோடி அரசுக்குத் துணை நிற்கிறது” என்பதே தற்போதைய தீர்மானத்தின் மையப்பொருள்.
உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, ‘‘ஜனநாயகத்துக்கு ஆபத்து” என்று பிரகடனம் செய்தபோது, அது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத நிகழ்வு என்று அதிர்ச்சியுடன் பேசப்பட்டது.
இந்நடவடிக்கை தீபக் மிஸ்ராவுக்கும் மோடி அரசுக்கும் அரசியல்ரீதியில் நெருக்கடியை ஏற்படுத்திய போதிலும், இருவருமே சமரசத்துக்கு இறங்கி வரவில்லை.
மருத்துவக் கல்லூரி ஊழலில் சி.பி.ஐ.-இடம் கையும் களவுமாகச் சிக்கியிருக்கும் தீபக் மிஸ்ராவும், லோயா வழக்கில் ஆதாரபூர்வமாக சிக்கியிருக்கும் மோடி- அமித் ஷா கும்பலும் ஒருவரையொருவர் காப்பாற்றியாக வேண்டும் என்ற நிலையில் பிணைக்கப்பட்டிருக்கின்றனர்.
வாரிசுரிமை, சாதி, அரசு ஆதரவு, ஊழல் போன்ற தகுதிகளால் பதவியைப் பெற்றிருக்கும் நீதிபதிகளோ, மோடி கூட்டணிக்கு ஒத்துழைக்கத் தயாராக இருக்கின்றனர். எனவே, நான்கு மூத்த நீதிபதிகளின் குமுறல் ‘‘பரபரப்பு செய்தி” என்ற அளவுக்கு மேல் பாரிய விளைவு எதையும் ஏற்படுத்திவிடவில்லை.
நீதிபதி லோயாவின் மர்ம மரணம் தொடர்பான வழக்கு அருண் மிஸ்ராவுக்கு ஒதுக்கப்பட்டதை நான்கு நீதிபதிகள் வெளிப்படையாகவே விமரிசித்ததால், அந்த வழக்கை தனது தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றிக்கொண்டார் தலைமை நீதிபதி.
லோயாவின் மரணம் நிகழ்ந்த சூழல் குறித்து எழுப்பப்பட்ட எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமலேயே ‘‘மரணத்தில் சந்தேகப்பட ஏதுமில்லை” என்று தீர்ப்பு வழங்கியது இந்த அமர்வு. அதுமட்டுமல்ல, மரணம் குறித்து சந்தேகம் எழுப்பிய அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட மனுதாரர்கள் ‘‘நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைப்பதாக” அவர்களை எச்சரித்தது.
முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளிலிருந்து மூத்த நீதிபதிகள் திட்டமிட்டே ஒதுக்கப்படுகின்றனர் என்பதும், அரசுக்குச் சாதகமான தீர்ப்பு வருவதை உத்திரவாதம் செய்யும் விதத்தில் குறிப்பிட்ட சில நீதிபதிகளுக்கு மட்டுமே அவை ஒதுக்கப்படுகின்றன என்பதும் தீபக் மிஸ்ரா மீது கூறப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டு.
தீபக் மிஸ்ராவால் இதுவரை நியமிக்கப்பட்ட 7 அரசியல் சட்ட அமர்வுகளிலும் அவர் இருக்கிறார். ஒன்றில் கூட கொலீஜியத்தின் மற்ற நான்கு நீதிபதிகள் இல்லை. மற்ற பல மூத்த நீதிபதிகளும் ஓரங்கட்டப்பட்டு, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அரசியல்ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் ஒதுக்கப்படுகின்றன.
செல்லமேஸ்வர் அமர்வு விசாரித்து வந்த ஆதார் வழக்கிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். ரஞ்சன் கோகோய் விசாரித்து வந்த சி.பி.ஐ. இயக்குநர் நியமன வழக்கு அவரிடமிருந்து மாற்றப்பட்டது.
பாபர் மசூதி வழக்கிலும் மற்ற மூத்த நீதிபதிகள் விலக்கப்பட்டனர். மோடிக்கு எதிரான சகாரா-பிர்லா ஊழல் வழக்கு, பா.ஜ.க.-வினருக்கு நெருக்கமானவர் என்று அறியப்பட்டிருக்கும் அருண் மிஸ்ரா அமர்வுக்கு ஒதுக்கப்பட்டது. குட்கா வழக்கைப் போல மறுக்கமுடியாத ஆதாரங்கள் இருந்தும், அவ்வழக்கைத் தள்ளுபடி செய்து மோடியைக் காப்பாற்றினார் அருண் மிஸ்ரா.
வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பயன்படுத்தும் தன்னிச்சையான அதிகாரத்தை எதிர்த்து ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கையும் தானே விசாரித்த தீபக் மிஸ்ரா, ‘‘தலைமை நீதிபதி அரசமைப்பு சட்டத்தின் நம்பிக்கைக்கு உரியவர் என்பதால், சட்டப்படி அவர் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவர்” என்று தீர்ப்புக் கூறி, நிர்வாகி என்ற முறையில் தான் செலுத்திவரும் சர்வாதிகாரத்தை, தன்னுடைய தீர்ப்பின் வழியாகவே சட்டபூர்வமானதாக மாற்றிக்கொண்டார்.
‘‘சட்டப்படிச் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்” என்று நகைக்கத்தக்க முறையில் தனது நல்லொழுக்கத்துக்கு சான்று வழங்கிக் கொண்டிருக்கும் இந்தத் தலைமை நீதிபதி, மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கில் இலஞ்சம் வாங்கியதாகச் சந்தேகிக்கப்படுபவர்.
யாரும் தனக்குத்தானே நீதிபதியாக முடியாது என்ற இயற்கை நீதிக் கோட்பாட்டை மீறி, தனக்கெதிரான வழக்கைத் தானே விசாரித்துத் தள்ளுபடி செய்தவர், அவ்வழக்கு பிற நீதிபதிகளிடம் விசாரணைக்குச் செல்வதைத் தடுப்பதற்காக, தனது உத்தரவின் தேதியைத் திருத்தி போர்ஜரி செய்தவர்.
தானொரு நிலமில்லாத ஏழை பிராமணன் என்று பொய் சத்தியம் செய்து ஒரிசா அரசிடமிருந்து இலவச நிலம் வாங்கி, பிறகு மோசடி நிரூபிக்கப்பட்டு பிடிபட்டவர். அந்தக் குற்றத்தை மறைத்து நீதிபதி பதவியைக் கைப்பற்றியவர். மேற்சொன்ன குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் ஆளான தீபக் மிஸ்ராவைத்தான் உத்தமர் மோடியின் அரசு பாதுகாக்கிறது.
இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாதவரும், உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு கொலீஜியத்தால் ஒருமனதாகப் பரிந்துரைக்கப்பட்டவருமான உத்தர்கண்ட் தலைமை நீதிபதி மாத்யூ ஜோசப்பின் பெயரை நிராகரித்திருக்கிறது மோடி அரசு. ஏனெனில், அவர் உத்தர்கண்டில் மோடி அரசுத்தலைவர் ஆட்சி பிரகடனம் செய்ததைத் தனது தீர்ப்பின் மூலம் ரத்து செய்தவர்.
கோபால் சுப்பிரமணியத்தை நீதிபதியாக விடாமல் தடுத்ததில் தொடங்கி இஷ்ரத் ஜகான் வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதி ஜெயந்த் படேலை ராஜினாமாவுக்குத் தள்ளியது வரை நீதித்துறையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு மோடி அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.
தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்துக்கு எதிரான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக வாயிற்புறம் வழியே நுழைந்து நீதித்துறையைக் கைப்பற்றும் வாய்ப்பு தவறிப் போனதால், கொல்லைப்புறம் வழியே நீதித்துறைக்குள் நுழைகிறது மோடி அரசு.
நீதிபதி பதவியில் அமர்ந்திருக்கும் முன்னாள் நீதிபதிகளின் வாரிசுகளும், பதவி வேட்டைக்காரர்களும் கொல்லைப்புறக் கதவைத் திறந்து பார்ப்பன பாசிசத்தை வரவேற்கிறார்கள்.
இதற்கு நன்றிக்கடனாக, ‘‘தீபக் மிஸ்ராவுக்கு எதிரான பதவிநீக்கத் தீர்மான நோட்டீசை நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது” என்று நிராகரிக்கிறார் வெங்கையா நாயுடு. நாயுடுவின் முடிவை எதிர்ப்பதாயின், எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடுக்க வேண்டும்.
‘‘அந்த வழக்கை விசாரிப்பதற்கான நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் தீபக் மிஸ்ராவுக்கு உண்டு” என்று கூறும் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், ‘‘தீபக் மிஸ்ராவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பறித்துவிடுமென்று” கவலைப்படுகிறார்.
‘‘தலையை வேண்டுமானால் சீவி விடலாம். ஆனால், அது நீதித்துறையைப் பிடித்தாட்டும் தலைவலிக்கு மருந்தாகுமா?” என்று பதவி நீக்க தீர்மானம் குறித்து கேள்வி எழுப்புகிறார் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே.
நீதித்துறை உள்ளிட்ட இந்த அரசமைப்பு மீள முடியாத நெருக்கடியில் சிக்கியுள்ளதற்கு இது மறுக்கமுடியாத நிரூபணம். நெருங்கி வரும் பாசிசத்துக்கும் இது முன்னறிவிப்பு.
-புதிய ஜனநாயகம், மே 2018



குட்கா தயாரிக்கப் பயன்படும் பொருட்களைத் தனித்தனியாக எடுத்துப் பார்த்தால், அவை குறைவான தீமை கொண்டவை, தவிர்க்க வேண்டியவை, புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை எனப் பல்வேறு விதமாக உள்ளன. ஆனால், அவையெல்லாம் ஒன்று சேர்ந்து குட்காவாக உருவெடுக்கும்போது, அபாயகரமான போதைப் பொருளாக மாறிவிடுகிறது.
அ.தி.மு.க. அரசு ஊழலற்ற அரசு என நற்சான்றிதழ் வழங்குகிறார், ஆளுநர் பன்வாரிலால் புரோகித். மறுபுறம், அ.தி.மு.க. அரசோ நிர்மலா தேவி விவகாரத்தை விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி. பிரிவின் ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளியை மாற்றிவிட்டு, அந்த இடத்தில் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக இருந்த அம்ரேஷ் பூஜாரியை நியமித்து, மோடிக்கும் புரோகித்துக்கும் நன்றிக்கடனைச் செலுத்தியிருக்கிறது.
மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை, பதிவாளர் சின்னையா, மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநர் கலைச்செல்வன் தொடங்கி கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அவரின் தனிச் செயலர் ராஜகோபால் வரை பல பெரிய மனிதர்களின் பெயர்கள் நிர்மலா தேவி விவகாரத்தில் அடிபடுகின்றன.



எடப்பாடி அரசிற்கு நற்சான்றிதழ் வழங்குகிறார், ஆளுநர். எடப்பாடி அரசோ ஆளுநரின் களிவெறியாட்ட லீலைகள் அம்பலமாகிவிடாமல் காப்பாற்றுகிறது. இந்த பாண்டவர்களைக் காப்பாற்றும் கிருஷ்ணா பரமாத்மா பாத்திரத்தை மோடி அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது.








அதாவது நாட்டுமக்களின் பணத்தை பாதுகாப்புத்துறை அமைச்சகம் தனது நலனுக்கு பயன்படுத்துவதாகவும் இதைச் சொல்லலாம். ஒரு படத்தில் ஆபாசம் இருக்கிறதா, உண்மையா – பொய்யா, கலைப்பூர்வமான வெளிப்பாடு… இவையெல்லாம் இராணுவத்தின் அக்கறைக்குரியவை அல்ல. அமெரிக்க மக்கள் தேசவெறி பிடித்து இராணுவத்தை ஆதரிக்க வேண்டும். இது மட்டுமே பாதுகாப்புத்துறை அமைச்சகம் விரும்புகிற விசயம்.
பிரம்மாண்டமான பொழுதுபோக்கு ரசனையை திறமையுடன் உருவாக்கும் ஹாலிவுட், அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பு போர்களுக்கு ஆதரவான மனநிலையை உருவாக்குகிறது. “அயர்ன் மேன், எக்ஸ்-மென், டிரான்ஸ்பார்மர்ஸ், ஜுராசிக் பார்க்” (Iron Man,’ ‘X-Men,’ ‘Transformers’ or ‘Jurassic Park III’) போன்ற படங்களில் ஏதோ வேடிக்கை காட்டுவதற்காக அமெரிக்க இராணுவம் பங்கேற்பதில்லை. அமெரிக்க மக்களை குறிப்பாக இளைஞர்களிடம் உளவியல் ரீதியாக இராணுவத்தை வழிபடும் மனநிலையை உருவாக்குகிறார்கள். இத்தகைய அப்பட்டமான வெறி யதார்த்த உலகில் பெரும் அழிவுகளையும் ஏற்படுத்துகிறது.
பாதுகாப்பு அமைச்சகம் தனது கொள்கை பிரச்சாரத்திற்காக டாம் கூரூஸின் பெருவெற்றி படமான “டாப் கன் (1986)”-ஐ (Top Gun ) ஆதரித்தது மற்றுமொரு சான்று. ப்ரூக் ஹைமரை தயாரிப்பாளராகக் கொண்ட இப்படம்தான் ஹாலிவுட் – அமெரிக்க இராணுவக் கூட்டணிக்கு ஒரு மைல் கல் எனலாம். அதே நேரம் போர் எதிர்ப்பு படங்களான “அப்போகலிப்ஸ் நவ், பிளாட்டூன், ஃபுல் மெட்டல் ஜாக்கெட்” (‘Apocalypse Now,’ ‘Platoon’ and ‘Full Metal Jacket,’) போன்றவை வியட்நாம் போரில் சிக்கிய அமெரிக்காவின் நெருக்கடியை சித்தரித்ததால் இராணுவம் இப்படங்களை கடுமையாக எதிர்த்தது. வெற்றிப் பெருமிதத்துடன் அமெரிக்க ஆதிக்கத்தை கொடியசைத்து கொண்டாடும் ரீகனுடைய அரசியலின் திரை வடிவம்தான் டாப் கன் திரைப்படம். பனிப்போர் காலகட்டத்தில், வியத்நாம் தோல்வியால் துவண்டிருந்த அமெரிக்க மனத்துக்கு போடப்பட்ட முறிவு மருந்துதான் டாப் கன் திரைப்படம்.
அமெரிக்க இராணுவத்தின் பெரிய அளவிலான உதவி இல்லாமல் “டாப் கன்” திரைப்படத்தை தயாரித்திருக்கவே முடியாது. அதனால்தான் இரண்டு மணிநேரம் ஓடக்கூடிய இத்திரைப்படம் இராணுவம் குறித்த மக்களின் ஆதரவை பெருமளவு உயர்த்தியது. அதன் விளைவாகவே 1991 வளைகுடா ஆக்கிரமிப்பு போரின் போது 85 சதவீத மக்கள் இராணுவத்தை ஆதரித்தார்கள்.
சான்றாக, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது சார்லி வில்சனின் போர் (charlie wilson’s war, 2007) என்ற பொய்களால் நிரம்பிய திரைப்படத்தைப் பயன்படுத்தி, ஆப்கான் முஜாகிதீன்களுடன் தான் கொண்டிருந்த கடந்த கால உறவை மறைத்துக் கொண்டு, மாவீரர்களாகத் அமெரிக்காவை சித்தரித்துக் கொண்டது சிஐஏ.
அமெரிக்காதான் இந்த உலகின் மிக உயர்ந்த ஜனநாயக நாடு என்றால், அதன் இராணுவமும், உளவுத் துறையும் எதன் பொருட்டு தனது குடிமக்களை திசை திருப்ப வேண்டும்? கலையின் பெயரால் உண்மைகளை ஏன் திரிக்க வேண்டும்? இதற்கான விடை தெரிந்ததுதான். அமெரிக்காதான் இந்த உலகின் மிக உயரிய ஜனநாயகம் என்று அமெரிக்க மக்களை நம்ப வைக்க வேண்டுமானால், இந்த பொய் பித்தலாட்டம் கலை கிராபிக்ஸ் எல்லாம் இருந்தால் மட்டும்தான் முடியும்!
வியட்நாம் போரில் அமெரிக்கா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து வெளிவந்த பல படங்கள் சங்கடமான பல உண்மைகளைப் புலனாய்வு செய்து வெளியே கொண்டு வந்தன. “அப்போகலிப்ஸ் நவ், கமிங் ஹோம், தி டீர் ஹன்டர், பிளாட்டூன், ஃபுல் மெட்டல் ஜாக்கெட், மற்றும் பார்ன் ஆன் தி ஃபோர்த் ஜூலை (‘Apocalypse Now,’ ‘Coming Home,’ ‘The Deer Hunter,’ ‘Platoon,’ ‘Full Metal Jacket’ and ‘Born on the Fourth of July,’) போன்ற ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்கள் அனைத்துமே அமெரிக்க பாதுகாப்புத்துறையின் உதவியின்றி தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.





























இதுவொருபுறமிருக்க, நாகை மாவட்டம் நரிமணத்தில் செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்யும் நோக்கில், அப்பகுதியில் 600 ஏக்கர் நிலப்பரப்பைக் கையகப்படுத்தி ஒப்படைக்கும்படி எடுபிடி எடப்பாடி அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது, மோடி அரசு. இந்த விரிவாக்கத்திற்கு ஏற்ப புதிய கச்சா எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டும் அபாயமும் எழுந்து நிற்கிறது.
இந்த விரிவாக்கத்திற்கு எதிராக குமரரெட்டியாபுரம், பதியம்புத்தூர், சிறீபெரும்புதூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 40 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்ளிட்டு எட்டு பேர் மீது பொய்வழக்குப் போட்டு, அடக்குமுறைகளின் மூலம் போராட்டத்தை ஒடுக்குகிறது, தமிழக அரசு.

ஆதனூர், அண்டர்காடு, கோவில்தாழ்வு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் திரண்டனர். “விவசாயிகளை சாகடிக்காதே! காவிரி மேலாண்மை வாரியம் அமை! நூறு நாள் வேலைத்திட்டத்தை அமல்படுத்து! மீத்தேன் திட்டத்தை கைவிடு !” என்ற முழக்கங்களுடன் வேதாரண்யம் கடைவீதியில் திரண்டனர் மக்கள்.















இவைதான் மக்களுக்கு இடையிலான முரண்பாடுகள் என்று அப்போது அழைக்கப்பட்டன. ஏனெனில், இந்த முரண்பாடுகளில் இரு தரப்பினருக்கும் எதிரெதிரான நோக்கங்கள் இல்லை. அவர்களின் நோக்கம் ஒன்றுதான். அணுகுமுறையில் தான் வேறுபட்டார்கள். ஒரு தொழிற்சாலையை மேலும் சிறப்பாக, மேலும் திறன்கூடியதாக எப்படி நடத்துவது? சீனாவை ஏழ்மையிலிருந்தும் பின்தங்கிய நிலையிலிருந்தும் எப்படி மீட்பது? அதை ஒரு தொழில்மயமான நாடாக எப்படி மாற்றுவது? இவை மக்களுக்கு இடையிலான முரண்பாடுகள். இவற்றை எப்படிக் கையாள்வது?


