Friday, June 13, 2025
முகப்பு பதிவு பக்கம் 473

அனிதாக்களை 5 -ஆம் வகுப்பிலேயே தூக்கிலிடும் நவோதயா பள்ளிகள் !

6

த்திய அரசின் நவோதயா பள்ளிகளுக்குத் தடையில்லா சான்று வழங்கும்படித் தீர்ப்பளித்திருக்கிறது உயர்நீதி மன்ற மதுரைக் கிளை. சொன்ன நீதிபதி பா.ஜ.க. -வின் பொது சிவில் சட்டத்தை ஆதரித்துப் பேசியவராம். நியாயத்தையும் தர்மத்தையும் வாட்சப் வழியே மட்டும் கற்றுணர்ந்த பலர் இந்த தீர்ப்பை கொண்டாடித் தீர்க்கிறார்கள். நவோதயா இல்லாததால்தான் தமிழக கல்வித் தரம் நாசமாய்ப் போய்விட்டதென அம்பிகள் எல்லோரும் ஃபார்வேர்டு மெசேஜ் வழியே புகாரளிக்கிறார்கள். பெருங்குடிகாரன் ஏதோ ஒரு சரக்கு கிடைத்தால் போதும் என தவிப்பது போல, சுயசிந்தனையற்ற மக்கள் பலர் சி.பி.எஸ்.சி.,  நீட், நவோதயா எனக் கிடைக்கும் எல்லா வழியில் இருந்தும் பாபவிமோசனம் பெற்றுவிடலாமென நம்பி, அவற்றை வெறித்தனமாக ஆதரிக்க ஆரம்பிக்கிறார்கள்.

நவோதயா பள்ளி

மிகப் பலரை வசீகரித்த ஒரு அம்சம் நவோதயாவில் இந்த ஆண்டு +2 படித்து நீட் தேர்வெழுதிய 14000 சொச்சம் பேரில் 7000 பேர் இந்தியா முழுக்க மருத்துவம் படிக்கத் தேர்வாகியிருக்கிறார்கள் எனும் தகவல். இதில் எத்தனை பேர் எம்.பி.பி.எஸ். ஆவார்கள் என்பது தெரியவில்லை. ஆனாலும், 580+ பள்ளிகளில் இருந்து 7000 டாக்டர்கள் எனும் மந்திர எண் மிடில்கிளாசுக்கு உச்சகட்ட கிளுகிளுப்பூட்டுகிறது.

நவோதயா பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே உண்டு. 5-ஆம் வகுப்பு வரை மற்ற பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதி நவோதயா பள்ளிகளில் சேரவேண்டும். சராசரியாக நூறில் இருவர் தேர்வாகிறார்கள். தமிழகத்தில் 10 இலட்சம் மாணவர்கள் ஒவ்வோர் வகுப்பிலும் பயில்கிறார்கள். (5 ஆம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கை இன்னும் கணிசமாக இருக்கும்) ஒப்பீட்டளவில் மிக அதிக அளவு நகர்ப்புற மாணவர்களைக் கொண்ட மாநிலம் இது. அவர்களின் பெற்றோர்கள் பலர் இனி நவோதயாவை ஒரு வெறித்தனமான இலட்சியமாக வரித்துக்கொள்வார்கள். அதற்கான தயாரிப்பு இரண்டாம், மூன்றாம் வகுப்பிலேயே துவங்கும். இப்போது பத்தாம் வகுப்பு மாணவர்களும் 12-ஆம் வகுப்பு மாணவர்களும் வதைமுகாம்களுக்கு ஒப்பான சூழலில் வாழ்கிறார்கள். பள்ளியில் கூடுதல் வகுப்பு, 10-ஆம் வகுப்பு என்றால் 2 மணி நேரத்துக்கும் குறையாத டியூஷன், 12-ஆம் வகுப்பு எனில் குறைந்தது 3 பாடங்களுக்கு டியூஷன். இப்போது நீட் பயிற்சி கூடுதலாக இணைய இருக்கிறது.

+2 முடித்தால் நீட் பயிற்சி மையம்! ஆரம்பப்பள்ளி சிறார்க்கு நவோதயா பயிற்சி மையம்!

இப்போது வரைக்கும் ஓரளவுக்கு நிம்மதியாக இருப்பது ஆரம்பப் பள்ளி வகுப்பு சிறார்கள்தான். இனி 10, 11, 12-ஆம் வகுப்பு குழந்தைகளின் பெற்றோர்களைப் போல, 4, 5-ஆம் வகுப்பு பெற்றோர்களும் பெரும் பதட்டத்துக்கு ஆட்படுவார்கள். இது ஒன்றும் மிகையான அனுமானமல்ல. என் அனுபவத்தில் இந்த காலகட்டத்தில்தான் (10, 12-ஆம் வகுப்பு) பெற்றோர்களால் பிள்ளைகளும், பிள்ளைகளால் பெற்றோரும் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். காரணம், பொதுத்தேர்வு, அந்த மதிப்பெண் மூலம் மட்டுமே தெரிவு செய்ய முடிகிற உயர் கல்வி வாய்ப்புக்கள். நவோதயா இந்தப் போட்டியை இன்னும் அடிமட்டத்துக்குக் கொண்டுபோய் ஐந்தாம் வகுப்பையே உச்சகட்ட போட்டியுள்ள களமாக மாற்றும்.

நாமக்கல் பள்ளி ( மாதிரிப்படம்)

ஏற்கனவே உயர்கல்வி போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி கல்லா கட்டுகின்றன. நீட் அதனை 1 இலட்சம் கோடியாக உயர்த்தவிருக்கிறது. இதில் ஆரம்பப்பள்ளியிலேயே நுழைவுத்தேர்வு எனில், என்ன ஆவார்கள் குழந்தைகள்..? ஒருவனுக்கு இலட்ச ரூபாய் பரிசு என அறிவித்துவிட்டு, பல இலட்சம் பேரிடம் கோடிகளில் பணம் பிடுங்கும் லாட்டரி வியாபாரம் போல மத்திய அரசு நவோதயாவைத் துவங்கியிருக்கிறது. ஆனால், இங்கே பரிசு தரப்போவது மத்திய அரசு, லாட்டரி வியாபாரத்தைத் தனியார் பயிற்சி மையங்கள் செய்யும்.

எதிர்கால வாழ்வுக்குக் காலணாகூடச் சேமிக்காமல், சக்திக்கு மீறி கடன் வாங்கி பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் பலர் இங்கிருக்கிறார்கள். வீட்டில் ரேஷன் அரிசியில் சமைப்பார்கள் என்பதால், மதிய உணவு கொண்டுவராத மெட்ரிக் பள்ளி பிள்ளையை நான் பார்த்திருக்கிறேன் (அந்த வறுமையிலும் அவர்கள் ஆண்டுக்கு 30 ஆயிரம் கட்டி மகளைப் படிக்க வைக்கிறார்கள்).

தமது ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கை பிள்ளைகளின் பள்ளிக் கட்டணமாகச் செலுத்திவிட்டு, மிச்ச பணத்தில் அவல வாழ்வு வாழும் குடும்பங்களைக் கொஞ்சம் மெனக்கெட்டால் உங்களாலும் பார்க்க இயலும். குடிசைப் பகுதியில் இருந்து வருவதால் தம் வீட்டு முகவரியை சொல்லக் கூச்சப்படும் குழந்தைகள் பலரைச் சந்தித்திருக்கிறேன், (அவர்கள் தனியார் பள்ளிகளில் பயில்கிறார்கள்). பள்ளிகளில் கண்டறியப்படும் கற்றல் குறைபாடு கொண்ட மற்றும் நுண்ணறிவுக் குறைபாடு கொண்ட சிறார்கள் குறித்துப் பெற்றோர்களிடம் பேசக்கூட முடிவதில்லை. தம் பிள்ளைகளால் மற்ற பிள்ளைகளைப் போல படிக்க முடியாது என்பதை அனேகப் பெற்றோரால் ஏற்கவே முடிவதில்லை.

நான் சந்தித்த ஒரு தாய் தான் அணிந்திருந்த எல்லா நகைகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட்டதாகச் சொன்னார். வேண்டுதல் ஒன்றுதான், மகன் பத்தாம் வகுப்பில் (அவர்) சொல்லிக்கொள்ளும்படியான மதிப்பெண் வாங்க வேண்டும்.

தான் எதிர்பார்த்த மதிப்பெண் தன் மகளுக்கு +2வில் வராத நிலையில், நண்பர் ஒருவர் என்னிடம் சொன்ன வாக்கியம், “நாங்கள் (எங்கள் மகளால்) ஏமாற்றப்பட்டதாக உணர்கிறோம். உறவினர்களை எதிர்கொள்ள அவமானமாய் இருக்கிறது; அதனால் தொலைபேசியைக்கூட எடுக்க மனமில்லை.” மிட் டேர்ம் தேர்வில் 3 பாடங்களில் தேர்ச்சியடையாத ஒரு மாணவரது அப்பா, “இவன் அடுத்த பரீட்சையிலயும் இப்படி மார்க் எடுத்தா, நாங்க (பெற்றோர் இருவரும்) தற்கொலை பண்ணிக்கிறதைத் தவிர வேற வழியில்லை” என மகன் முன்னாலேயே அழுகிறார்.

தனியார் பள்ளியில் டிஜிட்டல் வகுப்பு

இவையெல்லாம் மிகையான எதிர்வினைகளாக தோன்றலாம். ஆனால், பெருந்தொகையான பெற்றோரின் மகிழ்ச்சி, கவலை, வெற்றி, தோல்வி, நம்பிக்கை, அவமானம் என சகலத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகப் பிள்ளைகளின் மதிப்பெண் இருக்கிறது. அதுதான் வெற்றிகரமான பள்ளி எனக் கருதப்படுபவற்றை நோக்கிப் பெற்றோர்களை ஓடவைக்கிறது. அப்படியான ஒரு பள்ளியில் தன் குழந்தையைச் சேர்க்க எந்த எல்லைக்கும் செல்லத் தயாராய் இருக்கும் பெற்றோர்கள் இங்கே மிகமிக அதிகம். குழந்தைகள் தற்கொலையைக் கேள்விப்பட்டதில்லை, நவோதயா அதைக் கொண்டுவரும்!

இந்த களச்சூழலில் இருந்து நவோதயாவைப் பாருங்கள். மாவட்டத்துக்கு ஒரு பள்ளி. அதில் அதிகபட்சம் வகுப்புக்கு 50 பேர் என்று வைத்தாலும் தமிழகம் முழுக்க 1500 பேருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். தோராயமாக 10 லட்சம் பேர் இருக்கும் இடத்தில் அதிக கற்றல் திறன் கொண்ட 1500 பேரைப் பொறுக்கி எடுத்து, அவர்களுக்கு உச்சபட்ச வசதிகளைக் கொடுத்து அவர்களை இன்னும் திறமையாகத் தேர்வெழுதும் மாணவர்களாக உருவாக்கப் போகிறார்கள்.

ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்ற தனியார் பள்ளி உணவு விடுதி

குறைந்தபட்சம் பள்ளிக்கல்வி செலவில் 6 இலட்சம் ரூபாயை மிச்சம் பிடிக்கவும், அதன் பிறகான கல்லூரி செலவில் இன்னும் அதிகம் மிச்சம் பிடிக்கவும், ஒரு வெற்றிகரமான பெற்றோராக தம்மை நிரூபிக்கவும் உள்ள பெரும் வாய்ப்பு நவோதயா பள்ளி சீட்டுக்களுக்கான ரேஸ்தான். ஆகவே, தமிழக மிடில்கிளாஸ் ஒரு வெறித்தனமான முனைப்போடு, தம் பிள்ளைகளை ஆரம்பப்பள்ளியிலேயே நவோதயா நுழைவுத்தேர்வுக்கு தயார் செய்யும். அமைச்சர்கள் தம் அதிகாரத்தின் கடைசித் துளியையும் சுவைக்க விரும்புவதுபோல, இவர்கள் நவோதயா சீட்டுக்காக எந்த விலையையும் கொடுப்பார்கள்.

அந்தக் கனத்தைச் சுமக்கப்போவது, நவோதயா பள்ளி என்றால் என்னவென்றே தெரியாத சிறார்கள். இனி ஆறாம் வகுப்பு மாணவர்களை 4 பிரிவில் அடக்கலாம்.

  • நவோதயாவை அறிந்திராத குழந்தைகள்,
  • அறிந்திருந்தாலும் அதனை அணுகவியலாத குழந்தைகள்,
  • அணுகித் தேர்வாகாத பிள்ளைகள்,
  • நவோதயா பிள்ளைகள்.

இது திறமை அடிப்படையிலான தீண்டாமை!

இதுவரை, நகரம் – கிராமம் என இருந்த பிரிவினை, சற்றே மாறி அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்றானது. பிறகு தனியார் பள்ளி – நாமக்கல் பள்ளி என்றானது. அது இப்போது மாநில பாடம் – சி.பி.எஸ்.சி என்று இருக்கிறது. இனி அது நவோதயா – ஏனையை பள்ளிகள் என்று ஆகப்போகிறது. ஒரு பிரிவு மாணவர்களை மேம்பட்டவர்களாகக் காட்டி இன்னொரு பிரிவினரைத் தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளுவது இங்கே பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கிறது.

அந்தப் பிளவை இன்னும் கூர்மைப்படுத்த நவோதயா மோகத்தால் முடியும். 14,000 பேரில் 7000 பேரை மருத்துவம் போன்ற உயர்படிப்புக்கு அனுப்ப முடிகிற ஒரு பள்ளியை ஒரு தொழிற்சாலையாகவே கருத முடியும்.  முழுக்க புத்திசாலிகளால் நிறைந்திருக்கும் பள்ளி அடிப்படையில் தவறானது. கற்றல் குறைபாடு உள்ள சிறார்களைக்கூட ஒரு பள்ளி கூடுமானவரை நிராகரிக்கக்கூடாது.

கல்விப் புலத்தில் நிலவும் வர்க்க ஏற்றத்தாழ்வுகளின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட அனிதா

நடைமுறை சிரமங்கள் இருக்கட்டும். நவோதயா போன்ற ஒரு பள்ளியை அரசே நடத்துவது அறமற்ற செயல். குடிநீரும், கழிப்பறையும் இல்லாத பள்ளிகள், போதுமான ஆசிரியர்கள் இல்லாத ஏராளமான பள்ளிகளை நாடுமுழுக்க வைத்துக்கொண்டு, அதில் படிக்கும் குழந்தைகளுக்கும் வாய்ப்பளிக்கிறோம் என பாசாங்கு செய்து நுழைவுத்தேர்வு வைப்பது உச்சகட்ட வக்கிரம். எல்லா வசதிகளோடு ஒரு சில குழந்தைகளை அரசே படிக்க வைப்பதும், ஏனைய இலட்சக்கணக்கான சிறார்களைப் பிச்சைக்காரர்களைப் போலக் கிடைப்பதை வாங்கிக்கொள்” எனப் படிக்க வைப்பதும் அநீதி என்பது உங்களுக்குப் புரியவில்லையா? 90 மார்க் இல்லை என்பதற்காக உங்கள் பிள்ளையை வராண்டாவில் உட்காரவைத்தால் ஒத்துக்கொள்வீர்களா?

எல்லா திட்டங்களையும் குறை சொல்கிறோம் என உடனடியாக தேசபக்தர்கள் எதிர்வினையாற்றுவார்கள். அவர்களுக்குப் பதிலளிக்க பல உதாரணங்களைக் கொடுக்க இயலும். வடசென்னையில் டான்பாஸ்கோ சபையின் பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ. செயல்படுகிறது. பல இடங்களில் உள்ள டான்பாஸ்கோ பள்ளிகளில் படிப்பவர்களில் பத்தாவது தேறாதவர்கள் அல்லது குறைவான மதிப்பெண் பெற்று 12 ஆம் வகுப்பு படிக்க ஆர்வமில்லாதவர்கள் படிப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் அது.

தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள பூவத்தூர் கிராமப் பள்ளியில் சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 2 மாணவர்கள் மட்டும் தோல்வியடைந்தார்கள். அவர்கள் இருவரும் போதிய நுண்ணறிவுத்திறன் இல்லதவர்கள். கடுமையான குறைபாடு உள்ளவர் ஒரு பாடத்தில் மட்டும் தேறினார். ஓரளவு குறைபாடு உள்ளவர் ஒரே பாடத்தில் மட்டும் தோல்வியடைந்தார். அந்த மாணவர்கள் நிச்சயம் தோல்வியடைவார்கள் என்பதை அறிந்தேதான் அந்தத் தலைமை ஆசிரியர் தேர்வுக்கு அனுமதித்திருக்கிறார். ஒரு தலைமை ஆசிரியராக 100% தேர்ச்சியை  தெரிந்தே இழந்து சிறு தோல்வியை சந்தித்திருக்கிறார். ஆனால், அந்த இரு மாணவர்களுக்கும் இது மகத்தான் வெற்றி இல்லையா!

நவோதயா பள்ளிகள் கல்வித்துறையை மேம்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. அதிக நவோதயா பள்ளிகளைக் கொண்ட உ.பி. கல்வித்தரத்தில் கடைசியிலும் கடைசி படியில் இருக்கிறது.

அனிதாக்கள் இனி ஐந்தாம் வகுப்பிலேயே ஒழிக்கப்படுவார்கள்!

அனிதா போன்ற எளிய மாணவர்களை உயர்கல்வி வாய்ப்பில் இருந்து விரட்டிவிடுவதற்கான பல திட்டங்களை அரசு பல தளங்களில் இருந்தும் செயல்படுத்துகிறது. ஆரம்பப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களையே நியமிக்காமல் இருப்பது, நீட் தேர்வு, ஐந்து, எட்டாம் வகுப்புக்களுக்குப் பொதுத்தேர்வு, உயர்கல்வி உதவித்தொகை குறைப்பு, பல்கலைக் கழகங்களுக்கான நிதியை வெட்டுவது என்பவை எல்லாமே பாமர மக்கள் உயர்கல்வி பயில்வதை நிறுத்தும் பல்வேறு உத்திகள்தான்.

நவோதயா என்பது அத்தகைய நடவடிக்கைகளின் காஸ்ட்லி வெர்ஷன். அதன் மூலம் ஒரு தரப்பு மக்களுக்கு போதையூட்டி, இன்னொரு தரப்பு பிள்ளைகளை இலாயக்கற்றவர்கள் என முத்திரை குத்தி ஒதுக்குவதே அதன் நோக்கம். இப்போது மாநில பாடத்திட்டம் மட்டமானது என மாணவர்களும் பெற்றோர்களும் நம்புவது போல, நவோதயா வந்தால் மற்ற பள்ளிகள் மட்டம் என மக்களும் மாணவர்களும் நம்புவார்கள். அவர்கள் நம்பிக்கையை 6 ஆம் வகுப்பிலேயே கொன்றுவிட்டால், 12 ஆம் வகுப்பில் அனேகமாக போட்டியே இருக்காதில்லையா?

ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிப்பது என்பது மலிவான கூலிகளை உற்பத்தி செய்யும் நுட்பம். மிக அதிக அளவு மாணவர்கள் உயர்கல்வி பயிலும் மாநிலங்களில் (தமிழகம், கேரளா) அடிமட்ட வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அங்கெல்லாம் வேலைக்கு வருவது ஏழைகளின் உயர்கல்விக்கு வாய்ப்பு குறைவாக உள்ள மாநில இளைஞர்கள்தான்.

அரசுப் பள்ளிகளை முற்றிலுமாக அழித்தொழிக்க எல்லா வேலைகளையும் செய்யும் இந்த அரசாங்கம், நவோதயா எனும் பெயரில் அரசுப் பள்ளிகளை கொண்டுவர இத்தனை முனைப்பாக இருப்பதில் இருந்தே அதன் பின்னால் ஒரு மோசமான உள்நோக்கம் இருப்பதை உணர இயலும். குழந்தைகளை வெறும் போட்டியாளர்களாக உருவாக்கும் இன்றைய முதலாளித்துவ சமூகத்தை இன்னும் கொடூரமான எல்லைக்கு இட்டுச்செல்வதைத்தான் நவோதயா செய்யும். அது உங்கள் குழந்தைகளை ஒன்றும் செய்யாமல் போகலாம். ஆனால், யாரோ  ஒருவரின் பிள்ளைகளை உளவியல்ரீதியாகக் கொல்லத்தான் போகிறது. யாரோ ஒரு குழந்தை கொல்லப்படுவதை உங்களால் இயல்பாக கடந்து போக இயலும் என்றால், நவோதயாவை அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லை என்றால், இந்த நவோதயா எனும் கல்வித் தீண்டாமைக்கு எதிரான உங்கள் குரலை பதிவுசெய்யுங்கள்.

-வில்லவன்

-புதிய ஜனநாயகம், அக்டோபர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கந்து வட்டி தற்கொலைகள் : குற்றவாளிகள் யார் ? கருத்துக் கணிப்பு

0

சக்கிமுத்து குடும்பத் தற்கொலையை பார்த்து தமிழகம் அதிர்ச்சி அடைந்திருக்கிறது. அந்தக் குழந்தை கையில் தின்பண்டத்துடன் தீயில் வேகும் காட்சி இப்போதைக்கு நம்மை விட்டு அகலாது. இது குறித்த வாதப் பிரதிவாதங்கள் தொலைக்காட்சிகள் முதல் நடுப்பக்க கட்டுரைகள் வரை பேசப்படுகின்றன.

நீட் அனிதா தற்கொலையின் போது அந்த மாணவி ஏன் வேறு படிப்பை தெரிவு செய்யவில்லை, அவளது தாழ்வு மனப்பான்மைக்கு கவுன்சிலிங் கொடுத்திருக்க வேண்டும், தரமான கல்வி – தேர்வு பயிற்சிக்கு தமிழகம்  தயாராக வேண்டும் என்று துக்க வீட்டில் சேட்டு கல்யாண விருந்தின் சரி தவறுகளை பீறாய்ந்தார்கள் பாஜக, அதிமுக மற்றும் கேரியருக்கு கொலை வெறியோடு வாரியராக அலையும் நடுத்தர வர்க்க அறிஞர்கள்.

கந்து வட்டிக்கும் அதே பீறாய்தல் தொடர்கிறது. இசக்கி முத்து ஏன் கடன் வாங்கினார், விரலுக்குத் தகுந்த வீக்கமாக செலவை அமைத்துக் கொள்ள வேண்டும், அறியாமை, குடும்ப பொருளாதாரத்தை திட்டமிடாமை, ஆன்மீக எண்ணம் குறைதல் … இப்படி சில பல விட்டைகளை பாஜக, அதிமுக மற்றும் கருத்து கந்தசாமி – காயத்ரிக்கள் இறைத்து வருகின்றனர்.

இசக்கி முத்துவின் முடிவுக்கு தள்ளிய கலெக்டர், காவலர்கள் மீது பலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர். கந்து வட்டி தடைச் சட்டத்தை கறாராக அமல்படுத்த வேண்டும் என்கின்றனர். அவ்வளவுதானா?

“தி இந்து” கட்டுரை ஒன்றில் (25.10.2017) தெரியவரும் ஒரு செய்தியைப் பார்ப்போம். தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் கந்து வட்டி கொடுமையால் மட்டும் சுமார் 823 பேர் தற்கொலை செய்ததாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. படித்தவர்கள் அதிகம் உள்ள குமரி மாவட்டத்திலும் கூட இந்த மரணங்கள் நிகழ்வதாக கந்துவட்டிக்கு எதிரான பிரச்சார இயக்கத்தின் அமைப்பாளர் ரவி கூறுகிறார்.

இந்தியா ஒரு ஏழை நாடு. எல்லா ஏழை நாடுகளிலும் கடன் இல்லாமல் மக்கள் வாழ்க்கை இல்லை. குறிப்பாக 90 -களுக்குப் பிறகு உலகமயமாக்கத்தின் வருகைக்கு பிறகு கடன் என்பது  மிகவும் அதிகரித்து வருகிறது. கல்வி, மருத்துவம், வேலை ஆகியவற்று மக்கள் கடன் வாங்கியே முயற்சிக்கிறார்கள். அன்றாடம் சுமார் 500 ரூபாய் வருவாய் பெறும் ஒரு குடும்பம் தனது குழந்தைகளின் ஆண்டு கட்டணத்திற்காகவும், அவ்வப்போது வரும் பெரும் நோய்கள் சிகிச்சைகளுக்காகவும் பெருந்தொகையை கடனாக வாங்க வேண்டியிருக்கிறது. துண்டு துக்காணி நகைகளை கடன் வைப்பது முடிந்ததும் வேறு வழியின்றி கந்து வட்டிக்காரர்களிடம்தான் சரணடைய வேண்டியிருக்கிறது.

தமிழ்வழிக் கல்வி மற்றும் அரசு பள்ளிகளில் படித்தால் எதிர்காலம் இல்லை என்பது மிகத்தீவிரமாக மக்களிடம் உறுதியடைந்திருக்கிறது. தனியார் கல்வியை அறிமுகம் செய்து மிகத்தீவிரமாக அமல்படுத்தி வரும் அரசு அன்றி இதில் மக்களை எப்படிக் குற்றம் சாட்ட முடியும்?

தலையில் அடிபட்ட ஒரு நபரை அருகாமை தனியார் மருத்துவமனையில் அவசரம் கருதி சேர்க்கிறார்கள். முதல்வர் காப்பீட்டுத் திட்டம் இருந்தாலும், அதில் எந்தெந்த மருத்துவமனைகளுக்கு எந்தெந்த சிகிச்சைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது மக்களுக்கு தெரியாது. சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் தலை சிகிச்சை வராது எனும் போது உயிரைக் காப்பாற்றும் பொருட்டு வேறு அரசு மருத்துவமனைகளுக்கு போக முடியாது. வேறு வழி? கடன்தான்.

அரசு பேருந்துகளில் ஐயாயிரம் ரூபாய் தற்காலிக சம்பள வேலைக்கே சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும். ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்கும் அறிஞர்கள், அந்த இளைஞர்கள் வேறு வழியின்றியே அதை கொடுக்கிறார்கள், அப்படிக் கொடுத்தாலும் அந்த வேலையில் நிம்மதியோ இல்லை உத்திரவாதமான வருமானமோ இல்லை என்பது தெரியாது.

பள்ளி இறுதி கல்வி முடித்த பிறகு பிள்ளைகள் ஆசைப்படும் கல்வியை அளிக்கவோ, இல்லை குடும்பத்தின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் கனவுடன் கடன் வாங்கி பொறியியல் கல்லூரியில் சேர்வது என்பது பெற்றோர்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.

இதன்றி நுகர்வுக் கலாச்சாரம், திருமணங்கள். திருமணத்திற்கு குறைந்தபட்சமாக செலவு செய்வதாக இருந்தாலும் ஓரிரு இலட்சம் இன்றி சாத்தியமில்லை. நடுத்தர வர்க்கத்தை பொறுத்த வரை வங்கி, அலுவலக கடன்கள் மூலம் வீடு, கார், நிலம் வாங்குகிறார்கள். பிறகு அதற்கே தமது ஆயுளை தாரை வார்க்கிறார்கள்.

சாதாரண மக்களுக்கு அந்த வங்கி, அலுவலக வாய்ப்பில்லை. கட்டிட வேலை மற்றும் திருப்பூரில் தொழிலாளியாக பணியாற்றிய இசக்கி முத்துவுக்கு ஐசிஐசிஐ வங்கியிலோ, இல்லை ஸ்டேட் வங்கியிலோ கடன் வாங்குவது குறித்து கனவு கூட  காண முடியாது.

மோடியின் பணமதிப்பழிப்பு, பொருளாதார வீழ்ச்சி, ஜி.எஸ்.டி வரி தாக்குதல் காரணமாக உழைக்கும் மக்கள் அடைந்துள்ள துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த தீபாவளிக்கு கடன் வாங்கித்தான் குழந்தைகளுக்கு ஏதாவது வாங்க வேண்டும் என்று இலட்சக்கணக்கானோர் தமிழகத்தில் கருதவில்லையா?

பிறகு அரசின் நலத்திட்டங்கள், சான்றிதழ்களுக்கு தர வேண்டிய லஞ்சம். நூறு நாள் வேலைத்திட்டத்தின் சம்பளத்தைக் கூட முழுசாக பார்க்க முடியாத நாடு இது. அதை வங்கியில் போட்டாலும் அந்தக் கழிவு கொடுத்துத்தான் ஆக வேண்டும். இது போக விலைவாசி உயர்வு, வேலை இழப்பு, ஆட் குறைப்பு என்று நமது மக்களை அச்சுறுத்தும் ஆயுதங்கள் ஏராளம்.

கந்து வட்டி கும்பலின் நெட்வொர்க்கில் தொந்தி வளர்க்கும் காவல் துறையை கூண்டோடு ஒழிக்காமல் கந்து வட்டிக் கும்பலை எப்படி ஒழிக்க முடியும்? இந்த வலைப்பின்னலில் ஓட்டுக் கட்சிகளின் வட்டார பிரமுகர்களும் உண்டு. அதிமுக எனும் கொள்ளைக் கூட்டத்தின் ஆட்சியில் கந்து வட்டிக் கும்பல்கள் இன்னும் வீரியமாக செயல்படுகின்றன என்பதை மிகவும் சாதாரண உண்மையில்லையா?

பொருளாதாரத்தில் ஏழ்மை, வருமானமோ வாழ்க்கைக்கு போதுமானது அல்ல, கடனோ கந்து வட்டியில் மட்டும்…. பிறகு இசக்கி முத்து சாகாமல் என்ன செய்வார்?

கந்து வட்டி தற்கொலைகளுக்கு காரணமான குற்றவாளிகள் யார்?

  • மோடியின் பொருளாதாரக் கொள்கை
  • அதிமுகவின் ஊழல் நிர்வாகம்
  • மாமுல் போலீசின் குற்றம்
  • மக்களுக்கு கடன் கொடுக்க மறுக்கும் வங்கிகள்
  • கல்வி-சுகாதாரம் தனியார் மயம்
  • மக்களின் அறியாமை

காரணங்கள் பல இருக்கலாம் என்பதால் ஒன்றுக்கு மேற்பட்ட மூன்று பதில்கள் வரை நீங்கள் தெரிவு செய்யலாம்.

வாக்களியுங்கள்!

_____________

சமூகத்தின் உண்மை நிலைமை அறியும் இந்தக் கருத்துக் கணிப்பு உங்களுக்கு பயனளித்ததா? உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை
ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

GST… GST… போலோ பாரத்…மாதாகி ஜெ…! ம.க.இ.க புதிய பாடல் !

7

டந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது ஆளும் வர்க்கங்கள் மோடியை மீட்பராக முன்னிறுத்தின. மூன்றாண்டு ஆட்சிக்கு பின்னர் இந்த மீட்பரால் நாட்டு மக்கள் அடைந்து துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல.

மோடியின் பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. போன்ற பொருளாதாரத் தாக்குதல்களால் அனைத்து தரப்பு மக்களும் மோடி மீதும் பாஜக ஆட்சியின் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். மோடியின் கோட்டையாக சொல்லப்பட்ட குஜராத்திலேயே லட்சக்கணக்கான வணிகர்கள் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து போராட்டம் நடத்தினர். இன்று மோடிக்கும், அமித்ஷாவுக்கும் கடும் எதிர்ப்பு அங்கே நிலவுகிறது.

மெரினா போராட்டத்திற்கு பின்னர் பாஜக -விற்கு ஜென்மப் பகையாளியாக உள்ள தமிழகத்தில் ஜி.எஸ்.டி. எதிர்ப்பு பற்றி சொல்லத் தேவையில்லை.

மெர்சல் படத்தில் ஒருவரியை நீக்கச் சொல்லி வாய்திறந்த பாஜக -வுக்கு எல்லா தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் தங்களின் காலுக்கு கீழே தாங்களே குழிதோண்டும் வேலையை தமிழக பாஜக மேலும் தீவிரமாக செய்து கொண்டிருக்கிறது. பணமதிப்பழிப்பின் போது வரிசையில் நின்று இறந்தார்கள் மக்கள். ஜி.எஸ்.டியின் போது வாழ்வை இழந்து விட்டு எங்கு போவது என்று தவிக்கிறார்கள்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இந்த பாடல் உழைக்கும் மக்களின் குரலாய் முழங்குகிறது.

பாடலை பருங்கள்… நண்பர்களுடன் பகிருங்கள்….

பாடல் வரிகள் :

ஜி.எஸ்.டி .. ஜி.எஸ்.டி – போலோ
பாரத் மாதா கி ஜெய்
நாடெங்கும் ஜி.எஸ்.டி
போட்டான் பாரு பி.ஜே.பி
பிச்சைக்காரன் காசைப் பிடுங்கி
பீட்சா திங்கிறார் மோடிஜி

குச்சி மிட்டாய் குருவி ரொட்டி
குழம்பு சட்டிக்கும் ஜி.எஸ்.டி
பத்து ரூவா ஆயிடிச்சி
நாயர் கடை சாயா டீ
நாப்கினுக்கும் வரி கேக்குறான்
காறித்துப்புறா பொண்டாட்டி

ஆஸ்திரேலியா டென் பர்சென்ட்
அமெரிக்கா எய்ட் பர்சென்ட்
அம்பத்தாறு இன்ச் மோடிஜி
அடிச்சார் இருபத்தெட்டு பர்சென்ட்
தங்க பிஸ்கெட் மூணு பர்சென்ட்
திங்கிற பிஸ்கெட் எட்டு பர்சென்ட்
பர்கர் பீட்சா ஃபைவ் பர்சென்ட்
இட்லி தோசை பதினெட்டு பர்சென்ட்
ஆட்டையப் போடும் வித்தையிலே
மோடி ரொம்ப இன்டெலிஜென்ட்

கடலை மிட்டாய் தீப்பெட்டியை
கொளுத்தி விட்ட மோடிஜி
கைத்தறிய விசைத்தறிய
கழுத்தறுத்த மோடிஜி
வரி வரியா மக்கள் முதுகில்
சாட்டையடி ஜி.எஸ்.டி – இப்போ
அம்பானிக்கும் அதானிக்கும்
மோடிஜிதான் ஜிகிடிஜி

தண்ணி நாங்களே வாங்கிக்கணும்
வேலை நாங்களே தேடிக்கணும்
கல்வி காசுக்கு வாங்கிக்கணும்
ரோட்டுக்கும் டோலு கட்டிக்கணும்
வைத்தியம் நாங்களே பண்ணிக்கணும்
வரியும் கரெக்டா கட்டிக்கணும்
எல்லா நாங்களே பாத்துக்கணும் – உன்னை
கெவர்மென்டுன்னு வேற ஒத்துக்கணும்

சர்க்கஸ் குரங்கு சைக்கிள் ஓட்டினா
பாக்குறவன் தலையில ஜி.எஸ்.டி
தப்படிச்சி டான்ஸ் ஆடினா
ஸ்டெப்புக்கு ஸ்டெப்பு ஜி.எஸ்.டி
சாவு வீட்டில் சாமியானா
செத்தவன் கட்டணும் ஜி.எஸ்.டி
கத்தி என்னுது மூஞ்சி உன்னுது
மோடிக்கு எதுக்கு ஜி.எஸ்.டி?

ஒரே தேசம் ஒரே வரி
வந்தே மாதரம் – வழிப்பறி
செக்போஸ்ட் இல்ல சிக்னல் இல்ல – பணம்
எல்லாம் டெல்லிக்கு டெலிவரி
மாநில உரிமைக்கு மார்ச்சுவரி
திஸ் இஸ் – ஒருமைப்பாட்டு கொத்துக்கறி!

பாடல், இசை, தயாரிப்பு: மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
வீடியோ ஆக்கம் வினவு
_______________________

இந்த பாடல் வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கிறதா!
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

அப்போலோ இட்லிக்கு முந்தைய இட்லிகள் !

7
ஜெயாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் சாக்கில் மிக்சர் பன்னீரை வளைத்துப் போட்டுக் கொண்ட

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பதற்கு வேறு ஒரு கோணத்திலும் பொருள் இருக்கிறது. செத்தாலும் ஜெயலலிதா, ஜெயலலிதாதான்.

தான் உயிர் வாழ்ந்த காலம் வரையில், ஜனநாயகத்தின் கவுரவமிக்க பதவிகள் என்று கூறப்படும் அனைத்தின் மீதும் காறித்துப்பியது மட்டுமல்ல, அப்படித் துப்பினால் துடைத்துக் கொள்வதற்கும் அதனை சகஜமாக எடுத்துக் கொள்வதற்கும் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், கவர்னர், மத்திய அமைச்சர்கள், நீதிமன்றம், ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரையும் பழக்கப்படுத்தி வைத்திருந்தவர் ஜெயலலிதா. இப்போது கல்லறையிலிருந்தும் அம்மா காறித்துப்புவதையும் மேற்படி கனவான்களின் முகத்தில் எச்சில் வழிந்து கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம்.

ஜெயா மரணம் குறித்து சசிகலாவை விசாரிப்பதற்கு முன், அரசு அதிகாரிகளை விசாரிக்கக் கோரும் டி.டி.வி. தினகரன்

இட்லி விவகாரம் மன்னார்குடி மாபியாவைத் தாக்கும் என்று பா.ஜ.க. குருநாதர்கள் எதிர்பார்த்திருக்கக் கூடும். மாறாக, அது எடப்பாடி-பன்னீர் கும்பல் மீது பூமராங்காகத் திரும்பியிருக்கிறது. “அப்போலோ மருத்துவமனையில் நடந்தது என்ன? ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கு அமைச்சர்களைக்கூட அனுமதிக்காதது ஏன்?” என்று டி.டி.வி. தினகரனிடம் ஒரு தொலைக்காட்சி சானலில் கேள்வி எழுப்ப, அவர் சொன்னார்: “உங்கள் கேள்வி நியாயமானது. ஆனால், இது என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியே அல்ல. முதலமைச்சரை யார் சந்திக்கலாம், சந்திக்கக் கூடாது என்று முடிவு செய்யும் அதிகாரம் படைத்தவர்கள், தலைமைச் செயலர், சுகாதாரத்துறை செயலர், முதல்வரது தனிச் செயலர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், முதலமைச்சர் பன்னீர், மருத்துவமனையின் நிர்வாகிகள் ஆகியவர்கள்தான். இவர்கள் அனைவரும் அப்போலோவில்தான் இருந்தார்கள். அவர்களிடம்தான் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கவேண்டும். தாங்கள் முதல்வரை பார்க்க முயன்றதாகவும் சசிகலா தடுத்துவிட்டதாகவும் அவர்கள் சொல்லட்டும், அப்புறம் என்னிடம் வந்து கேளுங்கள்” என்றார்.

அக்யூஸ்டு – 1 : கதாநாயகி, அக்யூஸ்டு – 2 : வில்லி என்கிற விசித்திரக் கதை !  

சசி குடும்பத்தைக் கொலைக்கஞ்சாத கொடியவர்களாகவும், ஜெயலலிதாவைப் பரிதாபத்துக்குரிய பலிகடாவாகவும் சித்தரிப்பதன் மூலம் தங்களுடைய திருட்டுத்தனங்களை மறைத்துக் கொள்ளலாம், அரசியல் ஆதாயமும் தேடலாம் என்பது எடப்பாடி, பன்னீர் கும்பல் மற்றும் அவர்களை இயக்கும் சங்க பரிவாரங்கள் தயாரித்திருக்கும் திரைக்கதை. இது துக்ளக் குருமூர்த்தியின் சொந்த சரக்கல்ல. இருபது ஆண்டுகளுக்கு முன்னரே அவரது குருநாதர் சோ உருவாக்கித் தந்த சரக்கு.

1991 – 96 ஆட்சிக்காலத்தில் அன்புச் சகோதரிகள் அடித்த கொட்டத்தின் விளைவாக மக்களின் கோபத்துக்கு ஆளாகி, ஆட்சியிழந்து, வழக்குகளால் அச்சுறுத்தப்பட்ட சூழலில், அவற்றிலிருந்து ஜெயலலிதாவை அரசியல்ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் காப்பாற்றும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்ட  கதை இது. போயஸ் தோட்டத்தில் இருந்து கொண்டே, தனக்குத் தெரியாமல் மன்னார்குடி மாபியா பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஒரு கதையை மக்கள் நம்பச் செய்வதற்குத்தான் சசிகலாவுடனான ஊடல், கூடல் நாடகங்களை ஜெயலலிதா அரங்கேற்றினார். பல்வேறு கிசுகிசு செய்திகள் மூலம் இந்தக் கதைக்கு நம்பகத்தன்மை ஏற்படுத்தும் வேலையைப் பார்ப்பன ஊடகங்கள் சிரமேற் கொண்டு செய்தன.

ஜெயாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் சாக்கில் மிக்சர் பன்னீரை வளைத்துப் போட்டுக் கொண்ட பிரதமர் மோடி

இந்த தந்திரத்தையே கொஞ்சம் வேறு விதமாகச் செய்தார் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. -வுக்கு உள்ளேயே பல கோஷ்டிகளைப் பராமரிப்பதன் மூலம், குற்றங்களுக்கான பொறுப்பை அவர்கள் மீது தள்ளிவிட்டு, தன்னைத் தவறுகளுக்கு அப்பாற்பட்ட புனிதனாகக் காட்டிக்கொள்வது என்பது எம்.ஜி.ஆர். கடைப்பிடித்த உத்தி. “ஐயா நல்லவர், தர்மப்பிரபு ; கணக்குப்பிள்ளைதான் அயோக்கியன்” என்ற நிலப்பிரபுத்துவ அடிமைக் கருத்தியலில் ஊறியிருந்த தனது வாக்குவங்கிக்குப் பொருத்தமான திரைக்கதையாக இது எம்.ஜி.யாருக்குப் பயன்பட்டது.

கோடிக்கணக்கான மக்களின் வாயில் புகுந்து புறப்பட்ட ஒரே காரணத்தினால் உண்மையாக மாறிவிட்ட இந்த வதந்தியையே தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வாதமாக நீதிமன்றத்தில் வைத்தார் ஜெயலலிதா. தனக்கும் சசிகலா பெயரில் உள்ள சொத்துக்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்ற ஜெயலலிதாவின் வாதத்தை எள்ளி நகையாடித் தூக்கியெறிந்தார் நீதிபதி குன்ஹா. ஊழல் சொத்துக்கு பினாமியாகப் பயன்படுத்துவதற்காக அல்லாமல் வேறு எந்த உயர்ந்த நோக்கத்துக்காகவும் நீங்கள் சசிகலாவை போயஸ் தோட்டத்தில் தங்க வைத்துக் கொள்ளவில்லை என்று குன்ஹாவை வழிமொழிய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது உச்சநீதி மன்றம்.

ஒருபுறம் குன்ஹாவின் அசைக்க முடியாத தீர்ப்பு, இன்னொருபுறம் குமாரசாமியின் அபத்தமான உளறல்கள் என்ற கிடுக்கிப்பிடியில் சிக்கியிருந்தார் ஜெயலலிதா. தீர்ப்பைத் தள்ளிப்போட இயலுமேயன்றி, ஜெயலலிதாவைக் குற்றத்திலிருந்து விடுவிக்கவியலாது என்ற இக்கட்டில் சிக்கியிருந்தது உச்சநீதி மன்றம். செத்துப்போவது ஒன்றைத் தவிர சிறைத் தண்டனையிலிருந்து தப்புவதற்கு வேறு வழியில்லை என்பதுதான் அப்போலோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன் ஜெயலலிதா எதிர்கொண்டிருந்த சூழல்.

அம்மாவை அப்போலோவுக்கு அனுப்பிய சூழல்!

செப். 22 ஆம் தேதியன்று அப்போலோவில் அனுமதிக்கப்படுவதற்கான சூழலைப் பற்றியும், டிசம்பர் – 5 ஆம் தேதி வரை அவருக்கு மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிகிச்சையைப் பற்றியும் நீதிபதி ஆறுமுகசாமி கமிசனை விசாரிக்கச் சொல்லியிருக்கிறது எடப்பாடி அரசு. இதுதான் அந்தச் சூழல்.

இந்தச் சூழல் அ.தி.மு.க.வினர் அறியாததல்ல. அதனால்தான், நம் அனைவரின் பாவங்களுக்காகவும்தான் சின்னம்மா சிலுவை சுமக்கிறார் என்றும், அம்மாவுக்காகத்தானே சின்னம்மா சிறையில் இருக்கிறார் என்றும் உருக்கமாக மிரட்டல் விடுக்கிறார் தினகரன். அதனால்தான் ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை என்று சீனிவாசன் சொன்னால், எல்லோரும் பார்த்தோம் என்று வேறு சில அமைச்சர்கள் பேசுகிறார்கள்.

அப்பல்லோ மருத்துவமனைக்கு வெளியே, ஜெயாவின் உடல்நிலை குறித்து பேட்டியளிக்கும் ஜெயா-சசி கும்பலின் முன்னால் ஏஜண்ட் வெங்கய்யா நாயுடு

“நேற்று வரை சின்னம்மா காலில் விழுந்து கிடந்தவன்தானே நீ?” என்ற வசனத்தையும், “நீங்கள்தான் முதல்வராயிற்றே. அப்போலோவில் நீங்கள் அம்மாவைப் பார்ப்பதைத் தடுப்பதற்கு உங்களை விட பெரிய ஆள் அங்கே யார் இருந்தார்கள்?” என்ற வசனத்தையும் ஒரே நேரத்தில் பன்னீரை நோக்கிப் பேசுகிறார் தினகரன். முதல் வரி உண்மை. இரண்டாவது வரி சட்டப்படி உண்மை.

“சசிகலாவை மீறி பன்னீரோ வெந்நீரோ உள்ளே போயிருக்க முடியுமா?” என்பதல்ல கேட்கப்படவேண்டிய கேள்வி. அவ்வாறு மீறிப் போகவேண்டும் என்று யாரேனும் மனதாலும் நினைத்திருப்பார்களா என்பதுதான் விசயம்.

அப்போலோவில் என்ன நடந்திருக்கும் என்பது ஊகிக்கக் கடினமானதல்ல. அடி முதல் நுனி வரை அங்கே நடந்தது அனைத்தும் முறைகேடுதான். காவிரி பிரச்சினை தொடர்பாக அதிகாரிகள் அமைச்சர்களுடன் ஜெ. நடத்தியதாக கூறப்படும் ஆலோசனையில் தொடங்கி கைரேகை, கையெழுத்து உள்ளிட்ட அனைத்துமே பித்தலாட்டம்தான்.

இந்த பித்தலாட்டங்கள் அனைத்தும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளரான ‘மணல்’ ராமமோகன ராவ், சுகாதாரத்துறை செயலரான மாட்டு டாக்டர் ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி. உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், இசட் பிளஸ் பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரிகள், கவர்னர், ஜெயாவின் டில்லி கணக்குப் பிள்ளைகளான வெங்கையா நாயுடு, ஜெட்லி, கவர்னர், அருமை நண்பர் மோடி, அப்போலோ நிர்வாகம் ஆகிய அனைவரின் ஒத்துழைப்புடன்தான் அரங்கேறியிருக்கின்றன.

ஜெயா இட்லி சாப்பிட எபிசோட்டின் கதாசிரியர் சீனிவாசன்

அன்று இது குறித்து கேள்வி எழுப்பிய தி.மு.க. தலைவர் கருணாநிதியை அ.தி.மு.க. மட்டுமின்றி, பார்ப்பன ஊடகங்களும் வசை பாடின. சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியவர்கள் கைது செய்யப்பட்டனர். எதிர்க்கட்சியினர் எனப்படுவோரில் பலர், அப்போலோ வாசலில் நின்று கொண்டு பேட்டியளித்து இந்தப் பித்தலாட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கினர்.

ஜெயலலிதா உயிருடன் இருக்கிறாரா, சுய நினைவுடன் இருக்கிறாரா என்பது அவர்களது சொந்தப் பிரச்சினையோ, அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரமோ அல்ல. இருந்த போதிலும், இது குறித்து டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்ததன் மூலம் சென்னை உயர்நீதி மன்றமும் இந்த மோசடி நாடகம் தொடர அனுமதித்தது.

கவர்னர் இட்லி, மோடி இட்லி, ஜெட்லி இட்லி கடைசி இட்லிதான் சீனிவாசன் இட்லி!

அரசமைப்பின் அத்தனை நிறுவனங்களும், ஆகப்பெரும்பான்மையான ஊடகங்களும் இந்த முறைகேட்டுக்கு ஏன் துணை போயின? சசிகலாவின் மீதான பயமா? சசிகலாவுக்கு பன்னீர் பயப்படலாம், மோடியும் ஜெட்லியும் கவர்னரும் ஏன் பயப்படவேண்டும்?

ஏனென்றால், இது வெறும் பயம் குறித்த பிரச்சினை அல்ல. நடந்த முறைகேடுகள் அப்போலோவில் திடீரென்று உருவானவையும் அல்ல. அமைச்சர்கள், அதிகாரவர்க்கம், மைய அரசு, நீதித்துறை, ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரும் ஜெயலலிதாவின் முறைகேடுகளுக்குப் பழகியவர்கள். அவற்றை அங்கீகரித்தவர்கள், நியாயப்படுத்தியவர்கள். அந்த முறைகேடுகளுள் ஒன்றுதான் சசிகலாவின் அதிகாரம்.

ஆகவே, விசாரிக்கப்பட வேண்டியது, ஜெயலலிதாவின் கீழ் சட்டத்தின் ஆட்சி எப்படி செத்துப்போனது என்பதுதானே தவிர, ஜெயலலிதா எப்படி செத்துப்போனார் என்பதல்ல. ஏற்கனவே கேட்பாரின்றி நடைபெற்று வந்த முறைகேடுகளின் இயல்பான தொடர்ச்சிதான் அப்போலோவில் அரங்கேறியிருக்கிறது.

அப்போலோவிற்குச் செல்வதற்கு முந்தைய நாட்களில், தலைமைச் செயலகத்துக்கு வராமலேயே ஜெயலலிதா வந்ததாகக் காட்டி வெளியிடப்பட்ட புகைப்படங்களும், பங்கேற்றதாகக் கூறப்பட்ட திறப்புவிழா நிகழ்ச்சிகளும் போட்டோஷாப் செய்து வெளியிடப்பட்டவை என்று அம்பலமான பின்னரும், கவர்னர் முதல் தலைமைச்செயலர் வரையிலான அனைவரும் அந்த மோசடிக்குத் துணை நிற்கவில்லையா? இந்த திறப்பு விழா இட்லிகள், திண்டுக்கல் சீனிவாசனின் இட்லிக்கும் முந்தையதில்லையா?

பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ஆலோசகர்கள் என்ற பெயரில் ஷீலா பாலகிருஷ்ணனும், ராமானுஜமும் அரசாங்க முடிவுகள் அனைத்தையும் எடுத்தார்களே, அது சசிகலாவின் அதிகாரத்துக்கு இணையான அதிகார முறைகேடில்லையா? வளர்ப்பு மகன் திருமணத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் எடுத்த சாம்பார் வாளிகள், இட்லி கதையில் சேராதவையா?

ஆர்.கே. நகர் வாக்குச்சாவடியொன்றில் வாக்காளர் எண்ணிக்கைக்கு மேல் வாக்குகள் பதிவான பின்னரும், தேர்தலை ரத்து செய்யாமல் அம்மா பெற்றது வெற்றிதான் என்று தேர்தல் ஆணையம் சாதித்ததே, அது சீனிவாசன், சி.ஆர்.சரஸ்வதி முதலானோர் எடுத்துவிட்ட இட்லி கதையைக் காட்டிலும் அருவெறுப்பானதில்லையா?

கன்டெயினர் கருப்புப் பணம் 520 கோடியை, வங்கிப் பணம்தான் என்று சாதித்ததே மோடி அரசு, அந்தக் கன்டெயினரை விடவா பெரியது சீனிவாசனின் இட்லி?

சென்ற சட்டமன்றத் தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்பே, முதல்வர் ஜெயலலிதாவின் வெற்றிக்கு வாழ்த்துக் கூறினாரே பிரதமர் மோடி, அந்த வெற்றியும் சீனிவாசனின் இட்லியும் வேறு வேறானவையா?

எம்.ஜி.ஆர். சமாதியிலும், அரசாங்க சிற்றுந்துகளிலும் காணப்படுவது இரட்டை இலை அல்ல என்று ஜெ. அரசு சொன்ன இட்லிக் கதையை நம்பி ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தார்களே மாண்புமிகு நீதியரசர்கள், அவர்களை திண்டுக்கல் சீனிவாசனுக்கு இணையான அப்பாவிகள் என்று மதிப்பிடுவது பொருட்குற்றமாகுமா?

அம்மாவை மரணத்துக்குத் தள்ளிய சட்டத்தின் ஆட்சி!

அம்மாவின் உடல்நிலை சீர்குலையக் காரணம் பெங்களூரு சிறைவாசம்தான் என்று எழுதி குன்ஹாவை ஒரு அக்யூஸ்டாகவே ஆக்கியது தினமணி. ராம் ரகீமின் ஆட்கள் சிர்சாவில் நடத்திய கலவரத்துக்குப் பொறுப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதிதான் என்று கூறிய அமித் ஷாவின் பேச்சுக்கும் தினமணி தலையங்கத்துக்கும் வேறுபாடும் இருக்கிறதா?

தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா என்று குன்ஹாவின் தீர்ப்புக்கு எதிராகத் தமிழ்த் திரையுலகம் நடத்திய போராட்டத்துக்கும், சிர்சாவில் ராம் ரகீமின் பக்தர்கள் செய்த காலித்தனத்துக்கும் வேறுபாடு உண்டா?

மொத்தத்தில் சட்டத்தின் ஆட்சி என்று சொல்லப்படுவதை லேசாக நிலைநாட்டினாலும் அது அம்மாவின் உடம்புக்கும் உள்ளத்துக்கும் எப்போதும் ஒத்துக்கொண்டதில்லை. சட்டவிரோதக் கும்பலின் சர்வாதிகாரம்தான், அம்மாவின்  ஆரோக்கியத்துக்கும் அரசியலுக்கும் எப்போதுமே உகந்ததாக இருந்திருக்கிறது.

சசிகலாவைப் பொருத்தவரை, அக்காவின் நலனுக்கு எது உகந்ததோ அதை மட்டுமே செய்து பழகியவர். அதனால்தான் சட்டவிரோத கும்பலாட்சியை உத்திரவாதப் படுத்துவதன் வாயிலாக, அக்காவின் உடல்நலத்தை இத்தனை நாளும் அவர் பேணி வந்தார்.

மற்றபடி, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தப் பாடுபடுவதாக, சசிகலா எந்த கவர்னர் மாளிகையிலும் சத்தியப் பிரமாணம் செய்ததில்லை. அவ்வாறு அரசமைப்பு சட்டத்தின் மீது சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள் மத்திய மாநில அமைச்சர்களும், அதிகாரிகளும், கவர்னர், நீதியரசர்கள் முதலானோரும்தான். சட்டமீறலை இனம் கண்டு தண்டிப்பதுதான் நோக்கமென்றால், விசாரிக்கப்பட வேண்டியவர்கள் இவர்கள்தான்.

ஜெயலலிதாவின் மரணத்துக்கான காரணத்தை கண்டுபிடிப்பது மட்டுமே கமிசனின் நோக்கமாக இருக்கும் பட்சத்தில், சட்டமீறல்கள் மூலம் அக்காவின் ஆரோக்கியத்தைப் பேணியது மட்டுமின்றி, அந்த சேவைக்காக இன்று சிறையில் இருக்கும் தியாகியான சசிகலாவை ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பொறுப்பாக்குவது உண்மைக்கு எதிரானது. நீதிக்கும் புறம்பானது.

-மருதையன்

-புதிய ஜனநாயகம், அக்டோபர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

பெல்லட் குண்டு : கண்ணில்லாத என் மகனின் கனவுகள் பொசுங்கிவிட்டன !

0

“இடது கண்ணால் அவன் பார்க்க முடியாது. பார்ப்பதற்கு நன்றாக இருப்பது போல தோன்றும் அவனது இன்னொரு கண்பார்வையும் கூட பெல்லட் குண்டுகள் பார்வை நரம்பை சிதைத்து விட்டதால் இனி மங்கிவிடும். இது ஒரு கையறு நிலை” என்று மாணவன் மைசார் மீரை ஆய்வு செய்த ஸ்ரீநகரைச் சேர்ந்த ஸ்ரீ மஹாராஜா ஹரி சிங் (SMHS) மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறுகிறார்.

அக்டோபர் 14 –ம் தேதி மாநகரின் நொவ்காம் பகுதியில் நடைபெற்ற போராட்டங்களுக்கிடையே 10–ம் வகுப்பு மாணவரான மீர் சிக்கிக்கொண்டான். அவனது மாமா பாசிர் அகமது கூற்றின் படி, ஒரு காவல்காரர் நேரடியாக பெல்லட் குண்டுகளால் மீரைத் தாக்கினார். பெல்லட் குண்டுகள் அவரது முகத்தைக் காயப்படுத்தின, கண் இமைகளை நொறுக்கின மற்றும் குருதிப்போக்கை ஏற்படுத்தின. மீர் இப்போது முழுமையான பார்வைக்குறைப்பாட்டின் வாயிலில் நிற்கிறான்.

மீரைத் தவிர, நவாப் பஜாரை சேர்ந்த சோனு மற்றும் சான்போராவின் டஃபெயில் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மேலும் ஒன்பது பேர் கண் காயங்களுடன் அதே நாளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எப்படியானாலும் மீரைப் போன்ற பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை சிறு அளவில் மட்டுமே ஊடக கவனத்தைப் பெற்றது. பெல்லட் குண்டுகளை முற்றிலும் தடை செய்ய வேண்டுமென்று சென்ற ஆண்டு பரப்புரை நடத்திய ஜம்மு காஷ்மீர் குடிமை சமூக கூட்டணியிடமிருந்து (JKCCS) இம்முறை எவ்விதமான எதிர்வினையும் இல்லை. பேரளவிலான மனித இழப்புகள் இருந்த போதிலும் பெல்லட் குண்டுகள் பயன்படுத்துவதை மாநில அரசாங்கம் ஆதரிப்பதுடன் காஷ்மீரின் புதிய நெறிமுறையாகவும் இது மாறிவிட்டது. பெல்லட் குண்டு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக குறைந்தபோதிலும் இது தான் நிலைமை.

ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதியான புர்ஹான் வானி 2016 -ம் ஆண்டு ஜூலை மாதம் கொல்லப்பட்டது மாநிலத்தில் ஒரு பெரும் எழுச்சியைத் தூண்டியது. மருத்துவமனையின் பதிவுகளின்படி அதன் பிறகு பெல்லட் குண்டுகளால் இரு கண்களும் பாதிக்கப்பட்ட 75 -வது நபர் மீர்.

“எனது மகன் ஒரு அரும்பு போல இருந்தான். கண்பார்வையற்ற ஒருவனாக அவன் வாழ நேருமோ என்று கற்பனை செய்ய கூட நான் அஞ்சுகிறேன்” என்று மீரின் தந்தை முஹம்மது ரம்சன் “தி வயரிடம்” கூறினார்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஆயுதமாக பெல்லட் துப்பாக்கிகளை 2010 -ம் ஆண்டு அரசு அறிமுகப்படுத்தியது. போராட்டக்காரர்களுக்கெதிராக பாதுகாப்புப்படையினரின் முதற்கட்ட ஆயுதங்களாக அவை இன்று காஷ்மீரில் மாறிவிட்டன. பள்ளத்தாக்கிலுள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்களின் கண்களை அவை பறித்துக்கொண்டன. கண் மருத்துவத்துறையால் கடந்த 13 மாதங்களில் நடத்தப்பட்ட சிகிச்சைக்குப் பிறகும் சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 1,091 பேர் ஒன்று பகுதியளவாகவோ அல்லது முழுமையாகவோ பார்வையை இழந்துவிட்டனர்.

மருத்துவமனையின் பதிவுகளின் படி பாதிக்கப்பட்ட 1,091 பேரில் 171 பேர்களுக்கு காயமடைந்த கண்ணில் பார்வை பறிபோய்விட்டது. இரண்டு கண்களில் காயமடைந்த 76 பேரில் 50 பேருக்கு ஒரு கண்ணில் பார்வை முற்றிலும் இல்லை. இன்னொரு கண்ணின் குறைந்தபட்ச பார்வைத்திறனும் 10 – 40 விழுக்காடு வரை மட்டுமே இருக்கிறது. மேலும் காயத்தின் கடுமை காரணமாக பாதிக்கப்பட்ட 20 பேருக்கு ஒன்று அல்லது இரண்டு கண்களும் அகற்றப்பட்டன.

பள்ளத்தாக்கில், கடந்த ஆண்டு எழுச்சியின் போது குறைந்தது 100 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். கிட்டத்தட்ட 15,000 பொதுமக்கள் பெல்லட் குண்டுகளால் தங்களது கண்களில் காயமடைந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம் தெரிவித்தது.

படுகொலைகள் மற்றும் காயங்களை ஏற்படுத்தும் அளவிற்கு பலப்பிரயோகம் செய்யப்பட்டதா என்பதைக் கண்டறிவதற்கு மாவட்ட அளவிலான சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) உருவாக்க இருப்பதாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெஹ்புபா முஃப்தி இந்த ஆண்டு ஜனவரி 10 -ம் தேதி மாநில சட்டமன்றத்தில் அறிவித்தார். அறிவிப்பு வந்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் விசாரணைப் பற்றி அரசாங்கத்திலிருந்து ஒருவார்த்தை கூட இதுவரை இல்லை.

பெல்லட் குண்டுகளால் பார்வை பறிக்கப்பட்டவர்களுக்கு இலவசக் கல்வியையும் வேலை வாய்ப்பையும் அளிப்பதாக முதலமைச்சரால் வழங்கப்பட்ட வாக்குறுதியும் கூட இதுவரை செயல்படுத்தப்படவில்லை. பார்வையிழந்தவர்களுக்கு வழங்குவதாக அறிவித்த 4 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையில் கூட வெறும் 34 பேருக்கு அதுவும் 1 லட்சம் மற்றும் 2 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ஒருவருக்கும் வேலை ஏதுவும் கிடைக்கவில்லை.

இந்தப் பிரச்சினைகளுக்கு கவலை தெரிவித்த அம்னெஸ்டி இண்டர்நேஷனல் பெல்லட் துப்பாக்கிகளை முழுமையாக தடை செய்யுமாறு செப்டம்பர் 23 ம் தேதி அழைப்பு விடுத்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தற்காக பயன்படுத்தப்படும் என்று மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களால் கூறப்பட்ட பெல்லட் துப்பாக்கிகளே காஷ்மீர் மக்களின் கண்பார்வை இழப்பிற்கும், படுகொலைக்கும் காரணம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கடுமையாக சாடியது.

“பள்ளிக்கூடம் செல்லும் சிறார்கள் ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்வை இழந்துவிட்டனர் … மேலும் கல்லூரி மாணவர்களும் மேற்ப்படிப்பிற்கான அவர்களது கனவுகளை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. இளைஞர்களும் குடும்ப பொறுப்பாளர்களும் குடும்பங்களுக்கு தாங்கள் சுமையாகிவிட்டதாக கூறுகின்றனர்” – பாதிக்கப்பட்டவர்களின் பயங்கரமான நிலைமையை அந்த அறிக்கை வெளிக்கொணர்ந்தது. தொடர்ச்சியான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டாலும் பாதிக்கப்பட்டவர்களில் பலர் பார்வையை மீண்டும் பெறவில்லை என்பதை அது மேலும் அழுந்தக் கூறியது. பாதிக்கப்பட்டவர்களில் சிலரது கண்களில் இன்னும் பெல்லட் குண்டுகள் புதைந்திருப்பினும் அவற்றை அகற்றுவது மருத்துவமுறைப்படி மிகவும் ஆபத்தானது.

அம்னஸ்டி இன்டர்நேஷனலின் அறிக்கை வெளிவந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தெரு ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்காக புதிதாக தயாரிக்கப்பட்ட 21,000 சுற்றுகள் நெகிலித் தோட்டாக்களை காஷ்மீருக்கு அனுப்பியதாக மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF) அக்டோபர் 8 ம் தேதி தெரிவித்தது. மேலும் பெல்லட் குண்டுகளை விட இது ஆபத்து குறைவானது என்றும் கூறியது.

கடந்த ஆண்டை விட எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தபோதிலும் கண் காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் வந்துக்கொண்டிருப்பதாக SMHS மருத்துவமனையில் ஒராண்டிற்கு மேலாக பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மூத்த கண் மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

காஷ்மீரில் பலரது வாழ்க்கையை பெல்லட் குண்டுகள் அழித்துவிட்டிருக்கின்றன. பெல்லட் குண்டினால் தாக்கப்பட்ட பின்னர் கண்பார்வையை மீண்டும் பெறுவது என்பது நிச்சயமல்ல. மேலும், நீண்ட கால சிகிச்சை நோயாளி மற்றும் அவரது குடும்பத்தை உடல் மற்றும் பணரீதியாக சோர்வடையச் செய்கிறது” என்று அந்த மருத்துவர் தி வயரிடம் கூறினார். அனைத்து காயங்களும் இயல்பில் பார்வையை “முடக்குகின்றன”. அதுவே மருத்துவத்துறையின் படி காட்சி புலம் 20 பாகைக்கு குறைவாகவும், பார்வைக்குறைபாடு 6/60-க்கு குறைவாகவும் இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் “மருத்துவரீதியாக பார்வையற்றவர்கள்” என்று வரையறுக்கப்பட்டுள்ளதாக மேலும் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான டேனிஷ் இராஜப் ஜாட் ஸ்ரீநகரின் இரெயினவரியைச் சேர்ந்தவர். ஜூலை 17, 2016 அன்று பாதுகாப்பு படையினரால் அருகிலிருந்து சுடப்பட்ட குண்டுகள் அவரது முகம் மற்றும் கண்களில் இரத்தக்கசிவை ஏற்படுத்தின. அந்தத் துப்பாக்கிச்சூட்டின் தாக்கம் மிகவும் வலுவானது. ஒரு முழு குண்டும் அவரது இடது கண்ணில் துளைத்து சிக்கியிருந்ததால் கண்ணை நீக்க வேண்டியிருந்தது. விளைவாக குடும்பப்பொறுப்பை தன்னந்ததனியாக சுமந்த அந்த 24 வயதான இளைஞர் வேலையிழந்தார். ஓராண்டிற்குப் பின்னரும் டேனிஷிற்கு நடப்பதற்கு இன்னும் துணை வேண்டும்.

“என் வலது கண்ணில் சற்று பார்வை இருந்தது. ஆனால் மூன்று அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னர் அதுவும் போய்விட்டது. இப்போது என் கண்களுக்கு முன்னால் ஒரு நிழலை மட்டும் என்னால் பார்க்க முடிகிறது” என்று டேனிஷ் கூறினார். அவருக்கு 2 இலட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்கப்பட்டது. டேனிஷுடைய இடது கண் குழியில் ஒரு செயற்கைக்கண் பொருத்தப்பட்டிருக்கிறது. அவரது வலது கண்ணிலும் கூட மீண்டும் பார்வை வரும் என்று மருத்துவர்கள் நம்பவில்லை.

பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டவர்களின் நிலைமையைப் பார்த்த பின்னர் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதைத் தடைச்செய்யக் கோரி ஜம்மு காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஒருவேளை இந்த ஆயுதம் தடை செய்யப்பட்டால் நேரடியாக சுடுவது மட்டுமே தங்கள் முன்னே இருக்கும் ஒரே வாய்ப்பு என்றும் இன்னும் அது கூடுதலான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்குமென்றும் மத்திய ரிசர்வ் படை பதில் கூறியது. பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துவது “தவிர்க்க முடியாதது” என்று நீதிமன்றமும் அதை நியாயப்படுத்தியது.

உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்வதை இத்தீர்ப்பு கட்டாயப்படுத்தியது. வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் காஷ்மீரில் போராட்டம் ஒவ்வொரு முறை வெடிக்கும் போதும் பாதுகாப்புப்படையின் பெல்லட் குண்டுகளால் புதிய பலி எண்ணிக்கை புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படுகிறது

“எங்களைப் பற்றி யாரும் எதுவும் பேசாதிருப்பது அச்சமூட்டுகிறது. அரசாங்கம் எங்கள் நிலைமைக்கு பொறுப்பாளியாக இருந்தாலும் மக்களும் எங்களை மறந்துவிட்டனர்” என்று புல்வாமாவின் கரீமாபாத்தைச் சேர்ந்த 22 வயதான அதில் ரெஹ்மான் கூறினார். அவரது இரண்டு கண்களிலும் ஜூன் மாதம் ஏற்பட்ட காயங்கள் கல்லூரியில் இருந்து வெளியேறும்படி அவரைக் கட்டாயப்படுத்தியது. இரு வாரத்திற்கொருமுறை பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் செல்கிறார்.

“என் வாழ்க்கை இப்போது இப்படி ஆகிவிட்டது. நான் ஒரு ஆசிரியராக வேண்டுமென்று விரும்பினேன் ஆனால் இந்த பயங்கரம் என் கனவை நசுக்கிவிட்டது” என்று ரஹ்மான் தி வயரிடம் கூறினார். “நாங்கள் எதிர்கொண்ட பயங்கரத்திற்கு என்றைக்குமான குறைந்தபட்ச நினைவூட்டலாக பார்வையற்ற இந்த நிலைமை இருக்கும். இல்லையா? ”

(டை செய்யப்பட பெல்லட் குண்டுகளால் காசுமீர் மக்களின் பற்றியெரியும் விடுதலை தாகத்தை தணிக்க இந்திய அரசு துடிக்கிறது. ஆயிரக்கணக்கான சாவுகள். நூற்றுக்கணக்கில் கண்பார்வை பறிப்பு. காஷ்மீர் மக்களின் கண்பார்வையைப் பறிப்பதுடன் பொருளாதார ரீதியாக பெரும் சுமையை அவர்கள் மேல் சுமத்துகின்றன பெல்லட் குண்டுகள். “தி வயரில்” வெளி வந்த கட்டுரையின் தமிழாக்கம் இது.)

தமிழாக்கம்: சுந்தரம்

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

இந்தியாவில் இலவச மருத்துவம் ஒரு ஏமாற்று – ஆதாரங்கள் !

0

வினவு குறிப்பு: மெர்சல் படத்தில் இந்தியாவில் இலவச மருத்துவம் இல்லையென பொய்யான விவரத்தை சொன்னார்கள் என்று குதிக்கும் பாஜக – பண்டாரங்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம். இங்கே அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை எடுப்பதற்கு அரசே காப்பீட்டுத் திட்டங்களை வழங்கியிருக்கின்றது. ஆனால் அதன் இலட்சணம் என்ன? அரசு மருத்துவமனை எனும் போது அங்கே எதற்கு காப்பீடு? அந்தக் காப்பீட்டுப்பணம் அரசால் வழங்கப்பட்டாலும், அதை பறித்துக் கொண்டு போவது யார்? தனியார் மருத்துவமனைகள் இந்தக் காப்பீட்டு தொகை போக அதிக தொகை கேட்டு வாங்குகிறார்கள். இறுதியில் மக்கள் இலவசம் என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள். அந்தக் காப்பீட்டு திட்டத்தில் சேர்வதற்கும், அதை அமல்படுத்துவதற்கும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகள்! இதுதான் இலவச மருத்துவத்தின் இலட்சணம்! தொலைக்காட்சிகளின் விவாதங்களை நடத்தும் பத்திரிகையாளர்களும்,கலந்து கொள்ளும் அறிஞர்களும் இந்தக் கட்டுரையின் விவரங்களை படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தேசிய சுகாதார காப்பீடு திட்டம் இருந்தபோதும் இந்தியாவின் ஏழைகள் ஏன் இன்னமும் செலவு செய்கிறார்கள்?

ருத்துவமனை சேர்க்கைக்கான செலவுகள் 2004 மற்றும் 2014 -ம் ஆண்டு இடைவெளியில் 10 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்தாலும் இராஷ்ட்ரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா (RSBY) காப்பீடு திட்டம் என்னவோ மாறாமல் அப்படியே தான் உள்ளது.

ஏழைகளுக்கான சுகாதார நிதிச்சுமையை உலகின் மிகப்பெரிய அரசாங்க சுகாதார காப்பீடு திட்டம் குறைக்கவில்லை என்றும் இந்திய ஏழைகள் தங்களது கைக்காசை போட்டுதான் செலவு செய்ய வேண்டி இருக்கிறது என்றும் சமூக அறிவியல் மருத்துவம் (Social Science Medicine) என்ற சஞ்சிகையில் வெளிவந்த புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

வறுமைக்கோட்டிற்கு கிழே வாழும் 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 30,000 ரூபாய் மருத்துவ காப்பீட்டை இந்த திட்டம் அளிக்கிறது. இத்திட்டத்தில் 15 கோடி மக்கள் இணைந்துள்ளனர். நாளொன்றிற்கு நகர்ப்புறங்களில் 33 ரூபாய்க்கும் கிராமபுரங்களில் 27 ரூபாய்க்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்களாக இந்திய அரசு வரையறுக்கிறது. ஆயினும் இத்திட்டம் உள்நோயாளிக்கான மருத்துவம் என்ற அளவில் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

உடல்நலன் தொடர்பான செலவினங்களினால் கடனிலும் ஆழ்ந்த வறுமையிலும் வாடும் குடும்பங்கள் இருக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. உடல்நலத்திற்காக கைச்செலவு செய்யும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய 50 நாடுகளில் இந்தியா 6-வது இடத்தை பிடித்திருப்பதாக 2017, மே 8 அன்று வெளியான இண்டியாஸ்பென்ட் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அரசாங்க காப்பீடு திட்டம் இருந்தபோதிலும் ஏழைகள் ஏன் இன்னும் செலவு செய்கிறார்கள்? குறைந்த அளவிலான சேர்க்கை, பற்றாக்குறையான மருத்துவ காப்பீடு மற்றும் புறநோயாளிக்கான மருத்துவ செலவுகளை RSBY-ல் சேர்க்காதது போன்றவையே காரணங்களாக அந்த ஆய்வு சொல்லுகிறது.

ஒட்டுமொத்தமாக போடும் கைக்காசில் புறநோயாளிகளுக்கான மருத்துவ செலவு மட்டுமே 65.3 விழுக்காடு இருப்பதாக 2016 -ம் ஆண்டு புரூக்கிங்ஸ் அறிக்கை கூறுகிறது. ஆனால் இவை RSBY -ல் சேர்க்கப்படவில்லை.

RSBY -ல் 2010 -ம் ஆண்டுக்கு முன்னர் சேர்ந்தவர்களின் புறநோயாளிக்கான மருத்துவ செலவுகள் 23% வீதத்தில் அதிகரித்ததற்கான அடிப்படையான காரணம் இது தான் என்று கூறிய அந்த ஆய்வு மார்ச் 2012 வரையிலான காப்பீடு திட்டத்தை மதிப்பீடு செய்தது.

மேலும் 2004 மற்றும் 2014 -ம் ஆண்டுகளுக்கு இடையே மருத்துவமனை சேர்க்கை செலவினம் 10 விழுக்காட்டிற்கும் மேலாக அதிகரித்துள்ள போதிலும் RSBY-ன் காப்பீடு திட்டம் மாற்றப்படாமல் அப்படியே தான் உள்ளது.

சுகாதார “பரிசோதனை” முயற்சி :

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஏப்ரல் 2008 -ம் ஆண்டு RSBY -ஐ அறிமுகப்படுத்தியது. வலுவான பொது சுகாதார உட்கட்டமைப்பை வழங்குவதில் தோல்வியுற்ற பின்னர் காப்பீடு திட்டங்களுடன் “பரிசோதனை” முயற்சியில் இறங்க அரசு முடிவு செய்தது என்று RSBY வலைத்தளம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உள்ள நோய்களையும் RSBY உள்ளடக்கியிருக்கிறது மேலும் மருத்துவ செலவினங்களுடன் 100 ரூபாய் போக்குவரத்து செலவையும் சேர்த்தே அது வழங்குகிறது. அரசு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளன.

பதிவீட்டின் போது 30 ரூபாயை பயனாளிகள் செலுத்துகின்றனர். மாநில மற்றும் மத்திய அரசுகளால் மீதமுள்ள காப்பீடு தொகை செலுத்தப்படுகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வறுமைக்கோட்டிற்கு கிழே உள்ள குடும்பங்கள் மட்டுமே RSBY -ல் பதிவு செய்யப்படலாம்.

இந்தியாவில் உள்ள 707 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 460 மாவட்டங்களை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.

வறுமைக்கோட்டிற்கு கிழே உள்ள 40 விழுக்காட்டினர் இன்னமும் சேர்க்கப்படவில்லை :

தகுதி (காப்பீட்டிற்காக) பெற்ற 5.9 கோடி குடும்பங்களில் 3.63 கோடி (61%) குடும்பங்கள் RSBY –ல் சேர்க்கப்பட்டன. இருப்பினும் இதன் தாக்கம் தெரிய வேண்டுமெனில் பெரும்பகுதியான ஏழை மக்களை இதில் சேர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்தியாவின் பொது சுகாதார அறக்கட்டளையான இந்திய சுகாதார பொது நிறுவனத்தை (IIPH) சேர்ந்தவரும் ஆய்வாசிரியர்களில் ஒருவரான அனுப் கரண் கூறினார்.

“RSBY திட்டத்தில் அதிக மக்களை சேர்த்துள்ள சத்தீஸ்கர் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் ஏழைகளுக்கான உள்நோயாளி மருத்துவ செலவில் சில வகையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்” என்று கரண் கூறினார்.

உடல்நலம் மற்றும் கல்விக்குறியீடுகளில் மோசமாக இருக்கும் அஸ்ஸாம் மற்றும் பீகார் ஆகிய இரண்டு மாநிலங்களில் வறுமைக்கோட்டிற்கு கிழே வாழும் 50 முதல் 60 விழுக்காடு குடும்பங்கள் மட்டுமே இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

35 விழுக்காட்டினர் மட்டுமே RSBY-ஐ அறிந்துள்ளனர் :

RSBY -ஐ பற்றி பெரும்பாலான மக்களுக்கு தெரியாதது மிகக்குறைவான சேர்க்கைக்கு ஒரு இன்றியமையாத காரணம் என்கிறது அந்த ஆய்வு.

தகுதிவாய்ந்த குடும்பங்களில் 35 விழுக்காட்டினர் இத்திட்டத்தை அறிந்திருக்கவில்லை என்று மும்பையில் இருக்கும் டாடா சமூக அறிவியல் நிறுவனம் 2013 -ம் ஆண்டு நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. பதிவு செய்யப்பட 15 கோடி பேரில் 1.4 கோடி பேர் (9.94%) கூட மருத்துவமனைக்கு செல்லவில்லை என்று மேலும் அது கூறுகிறது.

அதனால் “ஏழைகளுக்கு திட்டத்தின் நலன்களை விளக்கும் தேவை இருக்கிறது” என்று கரண் கூறினார்.

செலவுகள் அதிகரிக்கிறது ஆனால் திட்டம் மாறவில்லை :

ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 30,000 ரூபாய் காப்பீடு போதாது என்கிறார் கரண்.

மருத்துவமனைக்கான 2014 -ம் ஆண்டு சராசரி செலவு கிராமிய இந்தியாவில் 14,935 ரூபாயாகவும் மற்றும் நகர்ப்புறத்தில் 24,435 ரூபாயாகவும் இருந்ததாக தேசிய மாதிரி மதிப்பாய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

2014 -ம் ஆண்டு முடிவடைந்த பத்தாண்டில் மருத்துவமனையின் செலவு கிராமப்புற பகுதிகளில் 10.1 விழுக்காடும் நகர்ப்புற இந்தியாவில் 10.7 விழுக்காடும் அதிகரித்தது. ஆனால் RSBY -ன் காப்பீடு தொகை ஒன்பது ஆண்டுகளாக அப்படியே உள்ளது.

பொது அறுவை சிகிச்சைக்கான செலவுகள் :

அடிவயிற்று அறுவை சிகிச்சைக்கு 2,469 – 41,087 ரூபாய், கருப்பை நீக்கத்திற்கு 4,124 – 57,622 ரூபாய் மற்றும் குடல்வால் சிகிச்சைக்கு 2,421 – 3,616 ரூபாய் என்று பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையின் 2013 -ம் ஆண்டு ஆய்வு கூறுகிறது.

“திட்டத்தின் பற்றாக்குறையான வரம்பு சில குடும்பங்களை RSBY திட்டத்திற்கு வெளியே மருத்துவமனை சேவைகளை நாடுவதற்கு வழிவகுத்திருக்கலாம்” என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. உள்நோயாளி மருத்துவத்திற்காக கைக்காசை செலவு செய்யும் குடும்பங்களில் தோராயமாக 9 விழுக்காட்டினர் சராசரியாக 30,000 ரூபாய் செலவு செய்வதாக கூறுகிறது. ஆண்டிற்கு சராசரியாக 75,000 – 80,000 ரூபாய் வரை செலவு பிடிப்பதாக 2012 -ம் ஆண்டு கணக்கெடுப்புத் தரவு கூறுகிறது.

புறநோயாளிக்கான மருத்துவத்தையே ஏழை மக்கள் விரும்புகின்றனர் :

மருத்துவமனை சேர்க்கையற்ற புறநோயாளிக்கான மருத்துவ பராமரிப்புச்செலவை RSBY செலுத்துவதில்லை. இது பொதுவாக மருத்துவரின் ஆலோசனைக் கட்டணம், மருந்துகள் மற்றும் மருத்துவ பயன்பாட்டு செலவுகள் ஆகியவற்றை உள்ளடக்கும்.

இருப்பினும் சுகாதாரத்திற்கான ஒட்டுமொத்த கைச்செலவினில் 63.5% புறநோயாளிக்கான மருத்துவ செலவுகள் தொடர்பானதாக இருக்கிறது. வறுமைக்கோட்டிற்கு கிழே வாழும் குடும்பங்களின் சுமையைக் குறைப்பதாக சொல்லும் ஒரு திட்டத்தில் தவற விடப்பட்ட ஒரு அடிப்படையான காரணி இதுவாகும்.

அதுமட்டுமல்லாமல் நடைமுறைக் காரணி ஒன்றையும் இது தவற விடுகிறது.

“பொதுவாக புறநோயாளிக்கான மருத்துவத்தையே ஏழைகள் விரும்புகிறார்கள். ஏனெனில் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லாததால் ஊதிய இழப்பிற்கு அது வழிவகுக்காது என்பதால் தான்” என்கிறார் கரண்.

ஏழை மக்களுக்கு கொடுக்கப்படும் மோசமான சிகிச்சை :

மருந்துகளுக்கான பணத்தை மருத்துவமனையில் RSBY செலுத்துகின்ற போதிலும் பல (தனியார்) மருத்துவமனைகள் இந்த சேவைகளை வழங்க மறுக்கின்றன. மேலும், சிலநேரங்களில் (காப்பீட்டிற்கு வெளியே) தேவையற்ற சில சிகிச்சைகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. எனவே மருத்துவமனைகளுக்கான ஒழுங்குமுறை அவசியம் என்று கரண் கூறினார்.

ஏழை நோயாளிகளுக்கு நெருக்கமாக (தனியார்) மருத்துவமனைகள் இருப்பதில்லை. இது மருத்துவ உதவியை நாடி ஏழை நோயாளிகள் வருவதைத் தடுக்கின்றன. “பல மருத்துவமனைகள் RSBY -ன் தாமதமான பணமளிப்பு நடவடிக்கை உள்ளிட்ட நிர்வாக கோளாறுகளால் நோயாளிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன” என்று IIPH -ன் ஆய்வு தெரிவிக்கிறது.

பணமில்லா பரிமாற்ற சேவைக்காக RSBY பயனாளிகளுக்கு சூட்டிகை அட்டைகள் வழங்கப்படுகிறது. கைரேகைகள் மூலம் அவை சரிபார்க்கப்படுகின்றன. ஆயினும் இரண்டு காரணங்களுக்காக அந்த அட்டைகள் பயன்படுத்தப்படுவதில்லை.

ஒன்று நோயாளிகள் நிராகரிக்கப்படுகிறார்கள் அல்லது அவற்றின் பயன்பாடு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளால் நிராகரிக்கப்படுகிறது. இரண்டு, மருத்துவமனைகளால் வழங்கப்படும் சேவைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று பெரும்பாலான பயனாளிகளுக்குத் தெரியவில்லை என்று வெளிநாடு மேம்பாட்டு நிறுவனத்தின் 2014 -ம் ஆண்டு ஆய்வு கண்டறிந்தது. நோயாளியின் வீட்டிற்கும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைக்கும் இடையிலான தொலைவும் பயனாளிகளை மட்டுப்படுத்தும் காரணியாகும்.

திட்டத்தை பயனுள்ளதாக்குவது எப்படி?

சேர்க்கையை அதிகரிப்பதும் காப்பீட்டில் சேர்க்கப்பட்ட மக்களுக்கு புரிதலை கொடுப்பதும் RSBY -ன் செயலூக்கத்தை அதிகரிக்கும் என்று அந்த ஆய்வு சில பரிந்துரைகளை கூறுகிறது.

புறநோயாளிக்கான மருத்துவ செலவுகளை குறிப்பாக நீடித்த நோய்களுக்கான செலவுகளை காப்பீடு உள்ளடக்க வேண்டும் என்றும் அந்த ஆய்வின் ஆசிரியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

வியட்நாம் அரசு நடத்தும் கட்டாய உடல்நல காப்பீடு கொள்கையை கவனியுங்கள். புறநோயாளிக்கான மருத்துவ செலவினங்களையும் உள்ளடக்குவதற்கான சீர்திருத்தம் 2002 -ம் ஆண்டு செய்யப்பட்டது. மருத்துவமனைகளில் நேரம் செலவாகினும் கைச்செலவை இது குறைத்தது. இது வேலையிழப்பு ஏற்படுவதையும் பள்ளிக்கூட விடுப்பு எடுப்பதையும் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

கைச்செலவு செய்வதைக் குறைப்பதற்காக சுகாதார வசதிகளை வலுப்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அண்டை நாடுகளான இலங்கையும் தாய்லாந்தும் தங்களது சுகாதாரப் பாதுகாப்பு முறையை அனைவரையும் உள்ளடக்கும் விதமாக பலப்படுத்தியுள்ளன.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. ஆயினும் சுகாதாரத்தில் வங்கதேசம், நேபாளம், கானா உள்ளிட்ட ஏழை நாடுகளை விட மோசமாகவே இருக்கிறது. சுகாதார குறியீட்டில் 154 -வது இடமே இந்தியாவிற்கு. ஏனைய நாடுகளை ஒப்பிடும் போது சுகாதாரத்திற்காக இந்தியா மிகக்குறைவாகவே செலவிடுகிறது.இந்நிலையில் கூரை ஏறி கோழி பிடிக்கத்தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா? என்ற கதையாக வல்லரசுக்கனவு வேறு.

மேலும் :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

நரகாசுரன் அந்தக் கால நக்சலைட் ! மின்னூல்

0

ரலாற்றில் தீபாவளி பண்டிகைக்கு பல கதைகள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை அசுரர்களுக்கு எதிராக ‘இந்து’ மத ‘பெருந்தெய்வங்கள்’ நடத்திய யுத்தங்களையும் அதன் பொருட்டே மக்கள் கொண்டாடுகிறார்கள் என்றும் விளக்குகின்றன. வட இந்தியாவில் ‘இந்துக்களிடம்’ இருக்கும் நம்பிக்கையை பயன்படுத்தி இராவண வதம் (இராவண பொம்மை எரிப்பு) கொண்டாடப்படுகின்றது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு பழங்குடி மக்கள் இராவணன் தங்களது முன்னோர், தெய்வம் என்பதால் எரிக்க கூடாது என போராடி வருகின்றனர்.

இந்த உண்மை ஒரு விசயத்தை எடுத்துரைக்கின்றது. தீபாவளியின் கதை கூறும் சமூகவியலின் படி இந்தியாவில் இருந்த பூர்வகுடி பழங்குடி மக்களை வென்ற கதைகளே இப்படி பண்டிகைகளாக கொண்டாடப்படுகின்றன. அந்த மக்கள் அசுரர்கள், தஸ்யூக்கள், நாகர்கள், திராவிடர்கள், அரக்கர்கள் என பல பெயர்களின் அழைக்கப்படுகின்றனர். இந்த வரலாற்று செய்திகளையும் நடப்பு போராட்டங்களையும் விளக்கும் கட்டுரைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன.

இதன்றி நவீன முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சரத்தின் படி மக்களிடம் பொருட்களை கொண்டு திணிப்பதற்குரிய பண்டிகையாகவும் தீபாவளி மாறி வருகின்றது. அதன் பொருட்டே “போனசை” இத்தினத்தில் கொடுக்கிறார்கள். எனினும் தொழிலாளிகளோ இல்லை பொது மக்களோ ஜி.எஸ்.டி, விலைவாசி உயர்வு, பணமதிப்பழிப்பு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தீபாவளியை கொண்டாடும் மனநிலையில் இல்லை. குழந்தைகளுக்காக எதோ கொஞ்சம் கொண்டாடுவதைத் தாண்டி பண்டிகைக் காலத்திற்குரிய மகிழ்ச்சியில் மக்கள் இல்லை.

அதே நேரம் முற்போக்கு பண்பாட்டினை கொண்டிருப்போர் கூட தீபாவளியை கொண்டாடும் வழக்கத்திற்கு மாறி வருகின்றனர். அதையும் ஆய்வு செய்கின்றது ஒரு கட்டுரை.

தீபாவளி குறித்த இத்தொகுப்பு ஒரு ஆவணமாக உங்களுக்கு பயன்படுமென்று நம்புகிறோம்.

தோழமையுடன்
வினவு

நரகாசுரன் அந்தக் கால நக்சலைட்!

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தீபாவளி தேவையா ? தந்தை பெரியார்
  • சிவகாசி தொழிலாளிகளுக்கு தீபாவளி உண்டா ?
  • ஜெய் ராவணா! ஜெய் சம்பூகா! ஜெய் சூர்ப்பனகா! ஜெய் மகாபலி!
  • முசுலீம்கள் தீபாவளி இனிப்பு சாப்பிடலாமா ?
  • தீபாவளி: பதிவுலக முற்போக்காளர்களின் ஊசலாட்டம்!
  • நரகாசுரன் அந்தக் கால நக்சலைட் !
  • ராவணனை எரிக்காதே – ஓங்கி ஒலிக்கும் அசுரர்களின் குரல் !
  • இவர்களுக்கு இல்லை தீபாவளி
  • புதுதில்லி – மஹிசாசுரனை போற்றுவதில் என்னடா குற்றம் ?
  • நன்றி நரகாசுரன்…!
  • இந்துத்துவக் கோட்டையான உ.பி-யில் மக்களின் இராவண லீலா !
  • நடப்பவைகளை சகிக்க மாட்டேன் – நான் நரகாசுரன் !
  • இராவணனை எரிக்காதே ! மராட்டிய பழங்குடி மக்கள் போராட்டம் !
  • தீபாவளி : நாள் முழுக்க உழைச்சும் உடம்புல ஒண்ணும் ஒட்டலயே !
  • Diwali For whom – By Whom – Against Whom?

பதினைந்து கட்டுரைகள் – 117 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில் – மின் நூல் விலை ரூ. 20.00

20.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Emailvinavu@gmail.com

இந்நூலின் கட்டுரைகள் வினவு தளத்தில் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

 

டெங்கு மரணங்கள் : உசிலையில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம் !

0

யிரக்கணக்கான மக்களுக்கு டெங்கு பாதிப்பு உள்ள நிலையிலும் அவற்றை மறைப்பதிலேயே எடப்பாடி அரசு குறியாக உள்ளது. செயலற்ற அரசை கண்டித்து மக்கள் அதிகாரத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் “தொடரும் டெங்கு மரணம்!! குற்றவாளி யார்? கொசுவா? அரசா?”-என்ற தலைப்பில் 19.10.2017 அன்று போடியில்  மாலை 5:00 -மணிக்கு மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு தோழர் பா.ஜோதிபாஸ் தலைமையேற்றார்.இதில் கண்டன உரையாற்றிய மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் பா.மோகன் மக்களை காக்க துப்பில்லாத அரசை அம்பலப்படுத்தி பேசினார்.மேலும் ஆர்ப்பாட்டத்தின் இடையே புரட்சிகர பாடல்கள் பாடபட்டது. மக்கள் அதிகாரம் தோழர்கள் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர். காவல்துறையினர் கூட்டத்தின் முடிவில் இந்த ஆர்ப்பாட்டம் தற்போதய சூழலில்  அவசியமானது என தோழர்களிடம் கூறி சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தேனி மாவட்டம்.

***

தனித் தனி பிரச்னைகளுக்கு தனித் தனி தீர்வு சாத்தியமில்லை
அரசியல்
அக்கிரமங்களுக்கு அராஜகங்களுக்கு முடிவு காட்டும் போராட்டங்கள் தேவை

துரை மாவட்டம், உசிலை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கடந்த 21.10.2017 அன்று மாலை சுமார் 4:00  மணியளவில் மக்கள் அதிகார தோழர்கள் தெருமுனைப் பிரச்சாரத்தை தொடங்கினர்.

தோழர். குருசாமி அவர்கள் தலைமையில் பிரச்சாரம் தொடங்கியது. பின் வத்தலக்குண்டு சாலையிலும், தேனி சாலையிலும் நடந்தேறியது. தோழர் குருசாமி  பேசுகையில். “எடப்பாடி மற்றும் பன்னீரின் கூட்டு மோசடிகளை” வெட்ட வெளிச்சமாக்கினார்.  “ஜெயா எப்படி செத்தால் நமக்கு என்ன…. டெங்கு தொடர் மரணங்கள் தான் குறையுமா அல்லது நம் வீட்டில் உலை தான் கொதிக்குமா ?” போன்ற கேள்விகள் மக்களை உலுக்கின. அரசை, அரசு அதிகாரிகளை விமரிசனம் செய்ய பயப்படும் மக்களுக்கு தோழர்களின் பேசசுக்கள் உணர்வூட்டின.

பின்னர் தோழர் ஆசை அவர்களின் எழுச்சி கொண்ட பேச்சு வீரியமாக வெடித்தது. பாஜக மற்றும் மோடியின் சதித் திட்டங்களையும், மக்கள் விரோத நடவடிக்கைகளையம் பட்டியலிட்டார். மக்களை சிந்திக்க விடாமல், சிந்தனையை மழுங்கடிக்கும் ஊடகங்களை  “கேடு கெட்ட ஊடகங்கள்” எனச் சாடினார். “பாஜக பேசுவது தேச பக்தி…செய்வது தேச துரோகம்” என்பதை தோழர்கள் பகிரங்கப் படுத்தினர்.

ஊழலில் ஊறி ஊரெங்கும் நாறி… மக்களை முட்டாள்களாக்கும் இந்த கட்டமைப்பை தூக்கி  எறிய உத்வேகம் கொடுத்தனர். இந்த நாற்றமடிக்கும் கட்டமைப்பில் ஒரு நல்லவரை முதல்வராகத் தேர்ந்தெடுக்க நம்மை நிர்பந்திப்பது…. அழுகிய மீன் கூடையில் நல்ல மீனைத் தேடும் முட்டாள்தனம் எனப் புரிய வைத்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
உசிலம்பட்டி.

____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

மெர்சலால் டென்சனான ஹெச் ராஜா – கருத்துக் கணிப்பு

6

ஹெச். ராஜாஅல்லது எச்.ராஜா என்று அழைக்கப்படும் ஹரிஹர ராஜா சர்மா இன்றைய தேதிக்கு தமிழகத்தில் அதிகம் வெறுக்கப்படும் நபரா?

“மெர்சல்” திரைப்படத்தில் வரும் காட்சிகளால் பாஜக-வின் தமிழக எடுபிடிகள் வெறுப்பானார்கள். அந்த வெறுப்பில் பெரும் வெறுப்பான ராஜா அன்றாடம் வன்மத்தோடு துப்பி வருகிறார். நடிகர் விஜய், ஜோசப் என்ற பெயரை மறைத்து வாழும் கிறித்தவர் என்றதோடு அவரது ஆதார் அட்டையின் புகைப்படத்தையும் ( உண்மையில் இது வாக்காளர் அடையாள அட்டை) வெளியிட்டுள்ளார். ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைக் கொண்டிருக்கும் ஆதார் அட்டை அரசிடமிருந்து இந்த ஆளுக்கு எப்படிவந்தது? இதை வெளியிட என்ன ஒரு வக்கிரம் இருக்க வேண்டும்?

இதைக் கண்டு அனைவரும் கொதித்தெழுந்துள்ளனர். ராஜாவின் இளைய பங்காளியான அர்ஜுன் சம்பத்தோ இன்னும் வன்மமாக நடிகர் விஜய் தனது மனைவியையை மதம் மாற்றித் திருமணம் செய்தார் என்றெல்லாம் கள் குடித்த காட்டெருமை போல (எருமைகள் மன்னிக்க) கத்தி வருகிறார்.

இவர்களுடைய வாதப்படி கிறித்தவரான நடிகர் விஜய், இந்து கோவில்களுக்குப் பதில் மருத்துவமனைகள் வேண்டும் என்று கூறக்கூடாதாம். அதையே நீட்டித்தால் நடிகர் நாசர் இந்துவாக நடிக்க கூடாது, முசுலீமான ஷகிலா ஐயராத்து பெண்ணாக நடிக்க கூடாது என்று கூட சொல்வார்கள்!

பாபர் மசூதியை இடித்த இந்த ஞானசீலர்கள் தங்களைப் போன்றே மற்ற மதத்தவரும் வெறியாக இருப்பார்கள் என்று கருதுகிறார்கள். இன்னும் அதிகாரிகள், அமைச்சர்கள், போலீசு, இராணுவம் என்று எல்லா இடத்திலும் சிறுபான்மை மதத்தவர் வரக்கூடாது என்பதே இவர்கள் பின்பற்றும் எழுதப்படாத விதி.

ராஜாவின் குற்றங்கள் இத்தோடு முடியவில்லை. மோடியை அவன் இவன் என்று பேசும் வைகோ தமிழ்நாட்டில் நடமாடமுடியாது என்றார். ஊடக சந்திப்பில் இவரை மடக்கி கேட்டால் அந்த செய்தியாளரை தேசத்துரோகி என்றார்.

பெரியார், வழக்கறிஞர் அருள்மொழி, தி.க வீரமணி, சுப.வீரபாண்டியன், மனுஷ்யபுத்திரன் ஆகியோரை இழிவாகவும் ஆபாசமாகவும் பேசியதோடு அவர்களை தண்டிப்பதற்கான சட்டப்பிரிவுகளையும் கூறியிருக்கிறார். இது குறித்து வினவு தளத்தில் ஒரு வீடியோவே இருக்கிறது.

தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் முசுலீம்களை விமரிசிக்காதது ஏன் என்று கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை கூறுவது போன்ற செய்திப் படத்தை வெளியிட்டார். அது அப்பட்டமான பொய் என்பது தெரிந்த பிறகும் அதை தனது டிவிட்டர் பக்கத்தில் நீக்காமல் வைத்திருந்தார். மெர்சல் படத்தில் பொய், பொய் என்று கத்தும் இந்த ஜீவராசி இதை பொய் என்று தெரிந்தே கூறுகிறது என்றால் இது என்ன மாதிரியான டிசைன்?

தமிழக பாஜக மற்றும் ‘சங்கி’ பரிவாக் கும்பலின் தொண்டர்கள் இத்தகைய அடாவடி அரசியல் செய்யும் தலைவர்களை மாபெரும் சண்டைக்காரர்கள் என்று நம்புவதோடு உசுப்பேற்றியும் வருகிறது. இதன் மூலம் கோஷ்டி மோதல்களைத் தாண்டி தான் ஒரு ‘அப்பப்பாடக்கராக’ வர முடியும் என்று ராஜா மட்டுமல்ல, நாராயணன், சீனிவாசன், அர்ஜின் சம்பத் என்று பல்வேறு டிசைன்கள் பிதற்றி வருகின்றன.

ஆனால் தமிழக மக்களிடம் இந்தக் கூட்டம் மேலும் அம்பலமாகி வருவதையே மெர்சல் படத்தின் விவாதம் சுட்டிக்க காட்டுகிறது. விரைவில் தமிழத்தில் எந்த இடத்திலும் பாஜக கம்பம் பறக்க கூடாது என்ற நிலையை தமிழக மக்கள் ஏற்படுத்துவார்கள். அதை தாமதிக்க கூடாது என்றே பாஜக கூட்டம் தீயா…ய் வேலை செய்கிறது.

எனினும் எச்.ராஜாவின் இந்த இந்துமதவெறிப் பிரச்சாரம் ஓரளவுக்கு பார்ப்பன – ‘மேல்சாதி’ நடுத்தர வர்க்கத்திடமும் எடுபடலாம். அந்த செல்வாக்கும் இனி இருக்காது என்பதை நோக்கி பாஜக பீடை நடை போடுகிறது.

நமது கணிப்பு சரிதானா? ஹெச் ராஜா குறித்து மக்கள் மனநிலை என்ன? வாக்களியுங்கள்!

பதில்களில் ராஜாவுக்கு ஆதரவாக நான்கும், எதிர்ப்பாக ஐந்தும் இருக்கின்றன. எனவே ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களை தெரிவு செய்யலாம். அதே நேரம் எதிர்ப்பை விட ஆதரவு ஒன்று குறைவாக இருப்பதால் நீங்கள் நான்கு பதில்களை மட்டுமே தெரிவு செய்ய முடியும்!

  • சிறந்த தேசபக்தர்
  • அவரெல்லாம் ஒரு ஆளுன்னு… வாயில் வந்துரப் போகுது
  • தமிழக மக்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர்
  • தென்னாட்டு கோட்சே
  • வாயில் வசை வந்தாலும் மனசில நல்லவரு
  • அரசியல்வாதியாக பணியாற்ற தடை விதிக்க வேண்டும்
  • இவரு பேசப்பேசத்தான் பாஜக வேகமாக அழியும்
  • கிறித்தவ முஸ்லீம் இடதுசாரி சதியால் கெட்டபெயர் வாங்கும் நல்லவர்
  • இந்துமதக் காவலர்

_____________

இந்த கருத்துக் கணிப்பு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

டெங்கையும் “டெட்பாடி” அரசையும் ஒழிப்பது எப்படி ?

0

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கும்பகோணம் மகாமகம் விழாவில், நெரிசலில் சிக்கி, மிதிபட்டு முப்பதுக்கும் மேற்பட்டோர் இறந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில், அது பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலையின்றி, ஜெயாவும் அவரது தோழி சசிகலாவும் மகாமகக் குளத்து “ஜலத்தை” எடுத்து ஒருவர் தலையில் இன்னொருவர் ஊற்றிக்கொண்டு “புனித” நீராடினார்கள்.

அதே அக்கிரமம் எடப்பாடி அரசிலும் தொடர்கிறது. டெங்கு நோய் தாக்கி ஒவ்வொரு நாளும் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வரும் வேளையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறார் எடுபிடி எடப்பாடி.  நிலவேம்பு கசாயத்தை ஊற்றிக் கொடுப்பதைக்கூட, அமைச்சர்களை வரவழைத்து, சால்வை போர்த்தி வாழ்த்திப் பேசி, கட்சி விழாவாக நடத்துகிறார்கள், இந்த அருவெறுக்கத்தக்க பிறவிகள்.

நிலவேம்பு கசாயத்தை ஊற்றிக் கொடுப்பதைக்கூட, அமைச்சர்களை வரவழைத்து, சால்வை போர்த்தி வாழ்த்திப் பேசி, கட்சி விழாவாக நடத்துகிறார்கள், இந்த அருவெறுக்கத்தக்க பிறவிகள்.

அமைச்சர்களும் அதிகாரிகளும் தரும் வியாக்கியானங்களில் பொய்யும் முட்டாள்தனமும் மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிக் கூண்டிலேற்றும் திமிர்த்தனமும் வாய்க்கொழுப்பும் வழிகின்றன. “காய்ச்சல் கண்டவுடனேயே அரசு மருத்துவமனைக்கு வராமல், சோம்பேறித்தனமாக கடைசி நேரத்தில் வருகிறார்கள். அதுதான் இறப்புக்குக் காரணம்” என்கிறார், ஆர்.கே.நகர் இலஞ்சக் குற்றவாளி விஜய பாஸ்கர்.

சேலம் மாவட்டத்தில் டெங்குவால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்பாக எழுந்த விமரிசனங்களுக்கு, “அது பெரிய மாவட்டம் அல்லவா” என எகத்தளமாக பதில் அளிக்கிறார், உணவுத் துறை அமைச்சர் காமராஜ்.

டெங்குவுடன் வேறு பல நோய்த்தொற்றுகளும் இணைந்து வருவதுதான் பிரச்சினையின் தீவிரத்தை அதிகப்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லை, கழிவுநீர்க் கால்வாய் பராமரிப்பு இல்லை, மலைமலையாய் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற ஊழியர்கள் இல்லை – இதுதான் தமிழகமெங்கும் நாம் காணும் நிலை. ஆனால், “டெங்குவைப் பரப்பும் ஏ.டி.எஸ். வகை கொசுக்கள் நன்னீரில்தான் வளரும்” என்ற ஒரு விசயத்தைச் சாக்காக வைத்துக்கொண்டு, பொதுச் சுகாதாரத்தை சீர்குலைத்து வரும் சுகாதாரத் துறையும் ஊராட்சித் துறையும் பொதுமக்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் நோட்டீஸ் கொடுக்கின்றன. வீடு சுகாதாரமாக இல்லையென்றால், ஆறு மாதம் சிறை, ஒரு இலட்சம் அபராதம் எனப் பொதுமக்களை அச்சுறுத்துகிறது எடப்பாடி அரசு.

மதுரை மாநகராட்சியோ குப்பைகளை அகற்றுவதற்குப் பொதுமக்கள் மீது வரி விதிக்க முடிவு செய்கிறது.

ஜூன் மாத இறுதியிலேயே தமிழகத்தைத் தாக்கத் தொடங்கிய டெங்கு காய்ச்சல், அக்டோபர் மாதத்தில் நாளொன்றுக்கு பத்து, பதினைந்து பேரைச் சாகடிக்கும் கொள்ளை நோயாக வீரியமடைந்திருக்கிறது. “கொசுக்களின் பெருக்கம் அதிகமாகத் தொடங்கும் ஜூலை மாதத்தில், சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை உள்பட அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து கொசு ஒழிப்பு மற்றும் தொற்றுநோய் தடுப்பு தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும். இந்த ஆண்டு அப்படியான ஒருங்கிணைந்த ஆய்வுக்கூட்டங்கள் எதுவுமே நடைபெறவில்லை” என அம்பலப்படுத்தியிருக்கிறது, ஜூனியர் விகடன்.

டெங்கு காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்த குளித்தலையைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி பூஜாவின் உடலை திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட போராட்டம்

இந்த நான்கு மாதங்களில் வேறென்ன நடந்தது? எடப்பாடியோடு பன்னீரைக் கூட்டி வைக்கும் புரோக்கர் வேலை பார்த்தது பா.ஜ.க. அரசு. பா.ஜ.க.வும் எடுபிடி அரசும் இணைந்து மக்கள் போராட்டங்களை முனைப்பாக ஒடுக்கினர். தரமான மருத்துவர்களை உருவாக்கப் போகிறோம் என்ற பெயரில் நீட் தேர்வைத் திணித்து அனிதாவைச் சாகடித்த பா.ஜ.க., கொசு ஒழிப்பு மாநிலத்தின் வேலை என்று திமிராகப் பதில் சொல்கிறது. உள்ளாட்சித் துறைக்கு மைய நிதியிலிருந்து தர வேண்டிய 4,000 கோடி ரூபாயை தராமல் வைத்துக்கொண்டு, “உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்தவில்லை?” எனத் தனது அடிமையிடம் கேள்வி கேட்கிறது.

தனது அலட்சியத்தால் மக்களை அகால மரணத்திற்கு தள்ளிவரும் இந்த எடுபிடி அரசு, தன் குற்றத்தை மறைக்க, நிலவேம்புக் குடிநீர் விநியோகம், கொசு ஒழிப்புக்கு 16 கோடி ரூபாய், டெங்கு சிகிச்சையைக் காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டுவருவது என நாடகம் நடத்துகிறது. மறுபுறம் டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையையும், மரணமடைந்தோரின் எண்ணிக்கையையும் குறைத்துக் காட்டுகிறது. மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், இறந்துபோனதாகவும் பொய்ப்பதிவுகளைத் தயாரிக்கச் சொல்கிறது.

எடப்பாடி கக்கூசுக்குப் போனால்கூட, அவருக்குப் பின்னால் ஒரு பெரும் போலீசு படை பாதுகாப்புக்காகப் போகிறது. தமிழக மக்களைத் தொற்று நோயிலிருந்து காப்பாற்ற வேண்டிய கட்டமைப்போ சீரழிந்து கிடக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் களத்துக்குச் செல்லும் ஊழியர் பணியிடங்கள் பல வருடங்களாக காலியாக உள்ளன. 5,000 மக்கள்தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் இருந்த நிலைமை மாறி, 25 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்றாகிவிட்டது. பரவிக்கொண்டிருப்பது டெங்குவில் என்ன வகை என்ற குழப்பம் நிலவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கொசு உள்ளிட்டு நோய் பரப்பும் பூச்சியினங்களை ஆய்வு செய்யும் பூச்சியியல் துறை இதனை ஆய்வு செய்து கூறியிருக்க வேண்டும். அது பெயர்ப்பலகை அமைப்பாகச் சுருங்கிக் கிடக்கிறது.

ஒருபுறம் செயலின்மை, இன்னொருபுறமோ ஊழல்! மேடவாக்கம் அருகேயுள்ள ஒட்டியம்பாக்கம் பஞ்சாயத்தில் கடந்த நான்கு மாதங்களில் கொசு ஒழிப்புக்காக மட்டும் 43 ஆயிரம் செலவழித்திருப்பதாகக் கணக்கு எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால், ஊரில் ஒருமுறைகூட கொசு மருந்து அடிக்கவில்லை என்கிறார்கள், அக்கிராம மக்கள். இப்படித் தமிழகமெங்கும் கொசு ஒழிப்பு என்ற பெயரில் எத்தனை நூறு கோடி ஊழல் நடந்திருக்கும்? கொசு ஒழிப்பு மருந்திலிருந்து காய்ச்சலுக்குக் கொடுக்கப்படும் மருந்து வரை அனைத்திலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் ஒரே படுக்கையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 4 சிறுவர்களுக்கு சிகிச்சையளிக்கும் அவலம்.

அரசுக் கட்டமைப்பு இப்படியென்றால், தனியார் மருத்துவமனைகள், தீபாவளி காலத்து ஆம்னி பஸ் கொள்ளை போல இதனைப் பயன்படுத்துகிறார்கள். பரிசோதனைகள் என்ற பெயரில் பல ஆயிரங்களைக் கறக்கிறார்கள். காப்பாற்றுவது கடினம் என்ற நிலை வந்துவிட்டால், ஈவிரக்கமின்றி நோயாளிகளை அரசு மருத்துவமனைக்குத் தள்ளிவிடுகிறார்கள். கொள்ளைநோய் பரவிவரும் இந்தச் சூழலில், தனியார் மருத்துவமனை ஒவ்வொன்றும் டெங்குவுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிடவேண்டும். கொள்ளையிடும் மருத்துவமனைகள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, காப்பீடு திட்டங்களின் வழியாக, அவர்களின் கல்லாபெட்டியை நிரப்பிக் கொள்ளும் ஏற்பாட்டை செய்து கொடுக்கிறது, எடப்பாடி அரசு. இந்த அயோக்கியத்தனத்தில் தங்களுக்கும் பங்குண்டு என்று உரிமை பாராட்டிக் கொள்கிறார், தமிழிசை.

ஒரு கொள்ளைநோயில் சிக்கி, பிஞ்சுக்குழந்தைகள் கொத்துக்கொத்தாக மடிந்து வரும் நிலையிலும் சுகாதாரத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட இந்த அரசின் எல்லா உறுப்புகளும் இரக்கமே இல்லாத வழிப்பறிக் கும்பலாக நடந்து கொள்வதை நாம் காண்கிறோம். இதற்கு எடப்பாடி தலைமையிலான கும்பல் தலைமை தாங்குகிறது. இந்தக் கும்பலின் ஆட்சியைப் பாதுகாத்து வருகிறது மோடி அரசு. சுகாதாரக்கேடு, அசுத்தமான குடிநீர், ஊட்டச்சத்தின்மை போன்ற காரணங்களால், பல்வேறு விதமான நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகி நொந்துபோன உடல் மீது டெங்கு தாக்கியிருக்கும் நிலையை ஒத்த சூழல் இது.

செங்கோலை கன்னக்கோலாகப் பயன்படுத்தும் எடப்பாடி அரசும், அதன் பாதுகாவலனான மோடி அரசும், அருகதையே இல்லாத இந்த அரசமைப்பின் துணையுடன் மக்களைத் துயரத்தில் தள்ளி வருகின்றன. இவர்களை ஒழிப்பது எப்படி என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி. சென்னை பெருவெள்ளப் பேரழிவு, வறட்சி, டாஸ்மாக், இப்போது டெங்கு.

ஏ.டி.எஸ். வகை கொசுக்களை ஒழித்தால் டெங்குவைக் ஒழித்துவிட இயலும். இவர்களுடைய அதிகாரத்தை ஒழிப்பது எப்படி என்ற கேள்விக்குத்தான் மக்கள் விடை தேடவேண்டும்.

-புதிய ஜனநாயகம், அக்டோபர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

அந்த கொலைக்களத்திற்குப் பெயர் பணிமனை !

4

அரசு அன்றே கொல்லும்!

அந்த கல்லறைக்கு பெயர்
ஓய்விடமாம்
அந்த கொலைக்களத்திற்குப் பெயர்
பணி மனையாம்!

தினம், தினம்
செத்துப்பிழைத்த தொழிலாளர்கள்
இப்போது
செத்தே போய்விட்டார்கள்.

எந்நேரமும்
இடிந்துவிழ காத்திருந்த கட்டிடத்தில்
கண்மூட அனுமதித்த
அந்த கொலைகாரர்கள்
சொல்கிறார்கள்
இது விபத்து!

நசுங்கிய
தொழிலாளர் ரத்தத்தில்
உறைந்திருக்கும்
உலுத்துப்போன மண்ணும்
அரசின் கோரம் பார்த்து
வெளிறிக் கிடக்கிறது.

விடிந்ததும்
நீங்கள் குடும்பத்துடன்
தீபாவளி கொண்டாட
விடிய விடிய
கண்களை தீய்த்துக்கொண்டு
கால்களை எரித்துக்கொண்டு
பத்திரமாக இறக்கிவிடும்
அரசுப் போக்குவரத்து தொழிலாளிகள்
இதோ,
உருத்தெரியாமல் கிடக்கிறார்கள்.

எப்படி செத்தார்கள்
என்ற அவலத்தை அல்ல
எதனால் செத்தார்கள்?
யாரால் செத்தார்கள்?
என்ற கொடூரத்தை
தண்டிக்க வேண்டி
இடிபாடுகளுக்கிடையே
நம்மை அழைக்கின்றன
உறங்க மறுக்கும்
ஓட்டுநர்களின் விழிகள்.

எப்படி வாழ்கிறார்கள்
என்பதை கண்டுகொள்ளாதவர்கள்,
இப்படியா செத்தார்கள்!
என இரக்கப்படுவதில்
என்ன நியாயமிருக்கிறது!

தேவை,
மரணத்தின் மீதான இரக்கமில்லை
விளைவித்தவர்களின் மீதான ஆத்திரம்.
சாவு விசாரிப்பது
சடங்காபிமானம்
வாழ்வை விசாரிப்பதுதான்
உண்மையான
மனிதாபிமானம்.

எந்தச் சூழலில்
தொழிலாளி வேலை செய்கிறான்
என்பது
எத்தனை பேருக்கு தெரியும்?

கட்டாயம்
அரசுக்கு தெரியும்
அய்யோ பாவம்!
என நடிக்கும்
அதிகாரிகளுக்கு தெரியும்.

இயங்காத வைப்பர்கள்
எடுபடாத விளக்குகள்
பிடி கொடுக்காத பிரேக்குகள்
சரிப்படாத கியர் பாக்சுகள்
உருப்படாத டயர்கள்

இத்தனையோடும் போராடி
மக்களை காத்தவர்கள்
அதிகாரவர்க்கத்துடன் போராடி
தன்னை இழந்திருக்கிறார்கள்.

உதவாக்கரை நிர்வாகத்தின்
ஒவ்வொரு விளிம்பிலும் தப்பித்த
தொழிலாளர்களுக்கு
கடைசி நிறுத்தம்தான் சாவு,
ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட
மரணக்கூண்டில் தான் அவர்களின் வாழ்வு!

இற்று விழக்கூடிய
இப்படி ஒரு கட்டிடத்தில்
ஒரு நிமிடம் படுப்பார்களா
இந்த
ஆட்சியாளர்களும்
அதிகாரிகளும்,

இவர்களின் கழிப்பறைக்கும்
நாய்களுக்கும் கூட ஏ.சி.
நாற்பது தொழிலாளர்கள்
படுத்துறங்க ஒரே ஒரு மின்விசிறி.

தன்னை விழாமல்
தற்காத்துக்கொள்ள
கட்டிடத்திற்க்கு கிடைத்த
ஒரே ஆதரவு,
வெளியேற திசை தேடி
முதுகெலும்பில் கசிந்தோடிய
தொழிலாளர் வியர்வையின்
ஈரப் பசை.

தெரிந்தே மவுனமாய்
காத்திருந்து கொன்றது
அந்தக்கால கட்டிடமா
அரசாங்க கட்டமைப்பா!

உருவகப்படுத்தவே
முடியாத அளவுக்கு
கொடூரமானது அதிகாரவர்க்கம்.

இரக்கமற்ற கொள்ளையர்க்கு
இசட் ப்ளஸ்,
உறக்கமற்ற தொழிலாளிக்கு
உயிரும் மைனஸ்.
சாவினும் கொடியது
ஆளும் வர்க்கம்.

தொழிலாளி என்றால்
அவர்களுக்கு பிணத்திற்கு சமம்
இந்த அரசமைப்பு
சாவுக்கு சமம்.

இற்றுவிழக் காத்திருப்பது
கட்டிடம் அல்ல,
இந்தக் கட்டமைப்பு!

மண்ணில் கலந்த தொழிலாளர்களே..
கண்கள் நனைகிறோம்
இதயம் எரிகிறோம்…

மாற்றத்திற்க்கான அரசியல் பயணத்தின்
நடத்துனர்களாய்,
ஓட்டுனர்களாய்
தலைமுறையை மாற்றுவோம்
உங்களுக்கான அஞ்சலியை
அர்த்தமுள்ளதாக்குவோம்!

– துரை. சண்முகம்

( நாகை மாவட்டம் பொறையாறில், பணிமனை இடிந்து அரசுப் போக்குவரத்து தொழிலாளர் 8 பேர் பலி! )

_____________

இந்த கவிதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

9 தொழிலாளிகளை விட நான்கு பசுக்களே முக்கியம் – தினமலர் வக்கிரம்

1

நாகை பேருந்து தொழிலாளர்கள் 9 பேர் பணிமனை இடிந்து 20.10.2017 அன்று காலை கொல்லப்பட்டனர். இது அடுத்த நாள் 21.10.2017 அன்று அனைத்து தினசரிகளிலும் வெளிவந்தது. பல நாளேடுகள் இந்த செய்தியை தமது சுவரொட்டி விளம்பரத்தில் தெரிவித்திருந்தன. தினமலரோ அதை தெரிவிக்காததோடு பசு மாடுகள் தீவிபத்தல் இறந்த செய்தியை வெளியிட்டிருந்தது. பசுக்களை விட மனிதர்கள் முக்கியமல்ல என்பது பார்ப்பனியத்தின் கொள்கையன்றி வேறென்ன?

கேலிப்படம் : வேலன்

இணையுங்கள்:

_____________

இந்த கேலிச்சித்திரம் உங்களுக்கு பிடித்திருக்கிறது?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

நாகை – 9 பேருந்து தொழிலாளிகளைக் கொன்றது யார் ?

1

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

பத்திரிகை செய்தி

20.10.2017 அதிகாலை 4 மணியளவில் நாகை மாவட்டத்தில் உள்ள பொறையார் பேருந்து பணிமனை ஓய்வறையின் மேற்கூரை இடிந்து விழுந்து உறங்கிக் கொண்டிருந்த அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 9 பேர் கோர மரணமடைந்தனர். மேலும் பல தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். தீபாவளிக்கு சிறப்புப் பேருந்து இயக்குவதற்காக பகல் இரவு பார்க்காமல் மக்களின் நலனிற்காக அயாரது உழைத்த தொழிலாளர்களின் இந்த மரணம் என்பது நம்மை எல்லோரையும் வேதனையும் அளிக்கும் துயரமிக்கதாக உள்ளது. மரணமடைந்தத் தொழிலாளர்களது குடும்பத்தினருக்கு புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தப் பேருந்து பணிமனை என்பது 1943 – ம் ஆண்டு கட்டப்பட்டது. அன்றைக்கு தனியார் முதலாளிகள் போக்குவரத்துத் துறையை தங்கள் வசம் வைத்திருந்த போது கட்டப்பட்டது. இன்று வரை இது புதுப்பிக்கப்படாமல் பழுதடைந்த நிலையிலேயே இருந்துள்ளது. இந்த விபத்திற்கு காரணமான அதிகாரிகளின் அலட்சியத்தையும், போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்க முயற்சிக்கும் தமிழக அரசின் நடவடிக்கையையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு ஒரு கட்டிடத்தின் மேற்கூரை இடிந்துவிழுந்து தொழிலாளர்கள் இறந்துவிட்டதை நாம் மேலோட்டமாகப் பார்க்க முடியாது. இது ஏதோ ஒரு பேருந்து பணிமனையில் இருக்கும் ஒரு விசயம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இருக்கின்ற பெரும்பாலான அனைத்து பேருந்து பணிமனைகளும் இந்த நிலையில்தான் இருக்கின்றன.

பேருந்து பணிமனையில் தொழிற்சாலை ஆய்வாளர்கள் நேரில் சென்று பார்வையிடுவதில்லை. தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வருகின்ற போக்குவரத்துத் துறை போன்ற இடங்களில் எக்காரணம் கொண்டும் இந்த அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. அமைச்சர்கள் சொல்லுவதையே அறிக்கையாக தருகின்றனர். பேருந்து பணிமனைகளில் இந்த அவலக் கதைகளை போக்குவரத்துத் தொழிலாளர்களிடம் விசாரித்தால் சொல்வார்கள். பேருந்தையே ஒழுங்காகப் பராமரிப்பதை சோதிக்காத அதிகாரிகள், பணிமனையின் நிலைமையை சோதிக்கவா போகிறார்கள் என்று தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இது மட்டுமல்ல, இலாப நோக்கத்தையே குறியாகக் கொண்டுள்ளனர். தொழிலாளர் நலன் குறித்து பேசவே முடியாது. தீபாவளிக்கு பல பேருந்துகள் மோசமான நிலையிலும் இயக்குவதற்கே சிரமமான நிலையிலும் இருந்தாலும் தொழிலாளர்கள் ஓட்டுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர். இரண்டு சிப்ட் ஓட்டகட்டாயப்படுத்தப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஓடிய வண்டியை ஓட்ட கூடாது என்ற விதியை அரசே மதிப்பது கிடையாது. இப்படி கசக்கிப் பிழியப்படும் தொழிலாளர்கள் பல இடங்களில் கொசுக்கடியிலும் குளிரிலும்தான் உறங்குகின்றனர். இப்படி தொழிலாளர்களை ஈவிரக்கமின்றி பிழிந்தெடுக்கும் டிப்போ மேனேஜர்கள் பணிமனையில் அவலநிலை குறித்து சிறிதும் கவலைப்படுவதில்லை. இது தொழிலாளர்கள் தங்கியிருக்கும் நவீன அடிமைக் கூடங்களாகத் திகழ்கின்றன என்றால் மிகையல்ல.

போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் இந்த அலட்சியத்திற்கு முக்கியக் காரணம், இந்தத் துறையில் மலிந்து கிடக்கும் ஊழலும், இந்தத் துறையை மொத்தமாக தனியார்மயமாக்கத் துடிக்கும் அரசின் சதித்திட்டமும்தான்.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஒய்வறையின் மேற்கூரை இடிந்துவிழுந்த இந்த விபத்து மட்டுமல்ல, நடப்பில் ஓடிக்கொண்டிருக்கும் அரசுப் பேருந்துகளும் இதே போல குத்துயிரும் கொலையுயிருமான நிலையிலேயே ஒடிக்கொண்டிருக்கின்றன. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் அரசுப் பேருந்துகளில் 50% மேலானவை காலவதியானவை. காலாவதியான பேருந்துகள் மாற்றாமல் ஒட்டுவதால் விபத்துகள் அதிகரித்துள்ளன; பொதுமக்கள் இறப்பது என்பது அன்றாட கதையாகிவிட்டது. ஒருகால் உங்கள் பகுதியில் சில விபத்துகள் நடக்காமல் தவிர்க்கப்பட்டுள்ளது அல்லது நடக்காமல் இருக்கிறது எனில் அதற்கு முக்கியக் காரணம் நீண்ட அனுபவம் மிக்க போக்குவரத்துத் தொழிலாளர்களின் தியாகமும் அற்பணிப்பும்தான். பல தொழிலாளர்கள் தங்களது சொந்த செலவில் பேருந்துகளை சரி செய்து ஒட்டி வருகின்றனர். இதனால்தான் அரசுப் பேருந்துகள் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

பேருந்துகளில் அவலநிலை மட்டுமல்ல, சென்ற மாதம் 7 -ம் தேதியன்று கோவை மாவட்டத்தில் சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 7 பேர் ஒரு பெண்மணி மரணமடைந்ததைப் பலரும் அறிவோம். இந்த அவலத்திற்கும் இந்த அரசின் அலட்சியம்தான் முதன்மையான காரணமாக உள்ளது.

தீபாவளிக்குக் கூடுதல் பேருந்துகளை அரசு இயக்குவதற்குப் பதிலாக கிராமப்புறங்களுக்கு செல்லும் பேருந்துகளையும் நகரப் பேருந்துகளையும் தான் தடம் மாற்றி இயக்குகிறது. இவையெல்லாம் தனியார்மயமாக்கத்தை இலக்காகக் கொண்டுள்ளன; மக்களை அரசு கைகழுவிவிட்டதைக் குறிக்கின்றன.

மொத்தமாக, போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் அரசின் சதித்திட்டத்தின் ஒரு வெளிப்பாடாகத்தான் பேருந்து பணிமனை, பேருந்துகள், பேருந்து நிலையங்களில் நிலவும் அவலநிலைக்கு முக்கியக் காரணமாக உள்ளன. இரண்டாவது, இதில் நடக்கும் பெரிய அளவிலான ஊழல் முக்கியப் பங்காற்றுகிறது.

எனவே, பணிமனையை பராமரிக்காத அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும், இந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு உரிய நட்ட ஈடு கொடுக்க வேண்டும் என புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,

சுப. தங்கராசு,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.

_____________

தொழிலாளி வர்க்கத்தின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

மெர்சல் : ஒரு மசாலா மெசேஜ் உண்மை பேசுமா ?

42

மெர்சல் படம் வசூல்ல ஏறக்குறைய வெற்றிதான்னு ஊடக விமர்சகர்கள் சொல்றாங்க. ரசிகர்களைப் பொருத்தவரை ஏற்கனவே தெரிஞ்ச மசலான்னாலும், மெசேஜ் ஸ்ட்ராங்கா இருக்குன்னு ரசிக்கிறாங்க. படத்துல மருத்துவ உலகின் ஊழல், பிரச்சினைகளை மக்கள் பார்வையில சொல்றதாலா பிடிச்சிருக்குன்னு சொல்றாங்க. அதுல ஆங்காங்கே மத்திய, மாநில அரசு மீது விமர்சனம் வருவதால கொஞ்சம் தைரியமா படம் பேசுதுன்னு அவங்க நினைக்கிறத புரிஞ்சுக்குறோம்.

ஆனால் மருத்துவத்துல பிரச்சினைன்னு காட்டுறதும், தீர்வுன்னு சொல்றதிலும் சில விமர்சனங்களை உங்கள் முன்னாடி வைக்கிறோம்.

படத்தோட இறுதிக் காட்சியில கோர்ட்டு முன்னாடி விஜய் பேசுற சீன் வரும். அதுல “7% ஜி.எஸ்.டி வரி வாங்குற சிங்கப்பூர்ல மருத்துவத்தை இலவசமா மக்களுக்கு தர முடியுறப்போ, 28% ஜி.எஸ்.டி வாங்குற நம்ம அரசாங்கத்தால ஏன் இலவசமாக மருத்துவத்த தர முடியலை” -ன்னு விஜய் கேட்கிறார். இது நியாயமான கேள்விதானேன்னு மக்கள் சந்தோஷப்படுறாங்க. அந்தப் படி பாத்தா பாஜக தலைவருங்களுக்கு எரிச்சல் வந்துதானே ஆகணும்?

படத்துல மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் குறை சொல்லப்படுவதை கண்டிப்பதாக பாஜக தமிழிசை பொங்குறாரு. ஒருவேளை போன 2014 பாராளுமன்றத் தேர்தல்ல மோடி தமிழகத்திற்கு வந்த போது நடிகர் விஜய் கோவை விமான நிலையத்தில் காத்திருந்து பார்த்தவர்தானேன்னு ஒரு இளக்காரம் தமிழிசைக்கு இருக்கலாம்.

ஆனா இந்த சிங்கப்பூர் ஜி.எஸ்.டி விவகாரத்தை தமிழிசையும் அலசுறாரு. அதாவது சிங்கப்பூர்ல 80% மக்கள் வரிகட்டுவதாகவும், இங்கேயும் அப்படி கட்டுவதற்கு (பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி) மோடி அரசு முயற்சிக்கும் போது இப்படி விமர்சிக்கிறார்களேன்னு அவரும் நியாயம் பேசுராறு.

தமிழிசையும், நடிகர் விஜயும் சிங்கப்பூர் நாட்டை ஒத்துமையா ஆதரிக்கிறாங்க!

இப்ப விசயத்துக்கு வருவோம். படத்தில பேசுற விஜயும் சரி, வெளியே பேசுற தமிழிசையும் சரி இரண்டு பேருமே சிங்கப்பூரை ஆதரிச்சு பேசுறாங்க! அதுல அவங்களுக்கு கருத்து வேறுபாடு கிடையாது. ஆனா நம்மளப் பொறுத்த வரைக்கும் அவங்க இரண்டு பேரோட கருத்துமே அதாவது சிங்கப்பூர் ஏதோ ஒரு ஆசிய சொர்க்கம்ங்குற கருத்து தவறுங்கிறதோடு, உண்மையை உங்களுக்கும் சொல்றோம்.

சிங்கப்பூர்ல இலவச மருத்துவம்னே ஒண்ணு கிடையாது. நம்மூரு ஆரம்ப சுகாதார நிலையம் மாதிரி சிங்கப்பூர்ல அரசாங்கத்தோட பாலி கிளினிக்னு ஒண்ணு இருக்கு. அங்க போனா ஒரு சராசரி கட்டணத்தை வசூலிப்பாங்க. அத குறைவும்னு சொல்ல முடியாது. அதிகம்னு சொல்ல முடியாது. ஆனா நிச்சயம் இலவசம்னு ஒண்ணும் கிடையாது. நம்மூரு நிலவரத்த வைச்சு பாத்தா அந்த குறைஞ்ச கட்டணம் ஒரு சராசரிக் கட்டணும்னு சொல்லலாம். ஆதாரம் கேட்குறவங்க, “ஹெல்த்கேர் சிஸ்டம் இன் சிங்கப்பூர்னு” விக்கிபீடியாவுல தேடிப்பாருங்க.

இலவசம் இல்லேங்கிறது மட்டுமில்ல, எல்லா சிகிச்சைக்கும் ஒரே மாதிரியான கட்டணமும் கிடையாது. நோய்க்கு தகுந்த மாதிரி கட்டணமும் கூடும் குறையும். ஏன் இப்படி இலவசமாக கொடுக்கலியேன்னு கேட்டா, பொது சுகாதரத்துறையின் நிதி ஒதுக்கீட்டை அப்படி காலி பண்ண முடியாதுன்னு சிங்கப்பூர் அரசாங்கம் ஆரம்பத்திலேயே முடிவு எடுத்திருக்காம்.

அதிகம் செலவு பிடிக்கிற சிகிச்சைன்னு வந்தா சிங்கப்பூர்ல கொஞ்சம் மானியம் கொடுக்கிறாங்க. ஆனா குறைவான செலவு சிகிச்சைன்னு வந்தா அங்க மானியமே கிடையாது. அதாவது ஒரு சாதாரண காய்ச்சல், சளி, வயிற்று வலின்னு அரசோட பாலி கிளினிக் போனீங்கன்னா தனியார் மருத்துவமனை மாதிரியான கட்டணத்தையே வசூலிக்கிறாங்க. அதுக்கு டிஸ்கவுண்டு கிடையாது.

அப்புறம் அங்க சம்பளத்துல மருத்துவத்துக்குன்னு கண்டிப்பா ஒரு தொகையை பிடிப்பாங்க. அந்த தேசிய காப்பீட்டுத் திட்டத்தோட பேரு Medisave மெடிசேவ். அந்த தொகையை வெச்சு அந்தந்த ஊழியரோட குடும்பம் மருத்துவ செலவுக்கு பயன்படுத்திக்கலாம். இது இந்தியாவிலும் இருக்கு, அமெரிக்காவிலும் இருக்குது. ஆனா எங்கேயும் இது நிச்சயமா இலவசம் கிடையாது. ஏன்னா உங்க சம்பளத்துல இருந்து மாதாமாதம் ஒரு தொகையை பிடிச்சுகிட்டு தேவை வரும்போது அதை நீங்க செலவழிக்கலாம்கிறது எப்படி இலவசமாகும்?

சிங்கப்பூரில் இலவச மருத்துவம்கிறது ஒரு வடிகட்டிய பொய்!

மெடிஷீல்டுன்னு (Medishield) இன்னொன்னு காப்பீட்டு திட்டமும் அங்க இருக்கு. ஆனா இதை வெச்சு ஒரு நோயை சிகிச்சை செய்ய முடியாது. தொகை பத்தாது. இன்னும் மெடிஷீல்டு லைஃப்ன்னு ஒரு காப்பிடும், எல்டர்ஷீல்டுன்னு முதியோருக்கு ஒரு காப்பீடும் அங்க இருக்கு. அதே நேரம் இந்த காப்பீட்டுத் திட்டத்துல மிகவும் அபாயகரமான நோய்கள், சிகிச்சைகள் எல்லாம் மறைமுகமாக தவிர்க்கப்பட்டிருக்கு. அப்படிப் பாத்தீங்கன்னா சிங்கப்பூர் குடிமகனுக்கு அப்படி ஒரு நோயோ பிரச்சினையோ வந்தா அவர் அதிகம் காசு செலவழிச்சே ஆகணும்,

சிங்கப்பூர்ல நிறைய தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் இருக்குது. அங்க வெளிநாட்டு நோயாளிகள், வசதியான சிங்கப்பூர் குடிமக்களுக்கு அதிக கட்டணத்துல சிகிச்சை பாக்குறாங்க. சிங்கப்பூர் குடிமக்கள், இந்த தனியார் மருத்துவமனைகளில் ஒரளவுக்கு கட்டணத்துல தள்ளுபடி பெறலாம்னாலும், மொத்தத்துல இங்க கட்டணம் அதிகம்தான். ஆனா நம்ம தமிழ்நாட்டுல இருந்து ஒரு தொழிலாளி அங்க பிழைக்கப் போய் பெரிய நோய் வந்தா அவருக்கு இங்கே மானியம், தள்ளுபடி எதுவும் கிடையாது. ஏன்னா அவர் ஒரு ஃபாரினர்.

சிங்கப்பூரோட மொத்த தேசிய வருமானத்துல இருந்து 1.6% -த்தை பொது சுகாதரத்துறைக்கு ஒதுக்குறாங்க. இந்தியாவுல 1.4% ஒதுக்குறாங்க! புள்ளி இரண்டை வெச்சு மட்டும் சிங்கப்பூர் தரமானது இல்லீங்க.

இப்டி காஸ்ட்லியான சிங்கப்பூர் மருத்துவத்தைத்தான், உலக சுகாதார நிறுவனம் 2000-ம் ஆண்டின் கணக்குப்படி ஆறாவது ரேங்கில் வைச்சுருக்கு. ஒருக்கால் மருத்துவம் இலவசமாகவும் தரமாகவும் கொடுத்து சாதனை படைச்ச நாடுன்னா அது கியூபாதான். சிங்கப்பூர் இல்லை.

அடுத்து தமிழிசை சொல்ற சிங்கப்பூர்ல 80% மக்கள் வரி கட்டுற இலட்சணத்தை பார்ப்போம். சிங்கப்பூருங்கிறது வளைகுடா மாதிரி பிழைக்க வந்த மக்களோட உழைப்புல வாழ்ற நாடு. அதனால் சிங்கப்பூர் குடிமக்களுக்கு கொஞ்சம் வசதி, வாய்ப்பு இருக்கலாம். ஏன்னா சிங்கப்பூர்ல மத்த நாட்டுல இருக்குற மாதிரி சட்டப்படியான குறைந்த பட்ச கூலின்னே ஒண்ணு கிடையாது. இந்தியாவுல கூட குறைந்த பட்ச கூலி இவ்வளவு கொடுக்கணும்னு சட்டம் இருக்கு. பீகாருல ரூ 160 -ன்னும், கேரளாவுல ரூ 750 -ன்னும் அந்த தொகை மாறுபடுது. இன்னும் விவசாய தொழிலாளிகளுக்கும் இந்தியா முழுவதும் சட்டப்படி இவ்வளவு கொடுக்கணும்னு இருக்கு.

உலகத்திலேயே அப்படி ஒரு சட்டம் இல்லாத நாடுன்னு சொன்னா அது சிங்கப்பூர்தான். 2014-வது வருசத்துலதான் துப்புறவுத் தொழிலாளிகளுக்கு 1000 -ம் டாலரும்னு, செக்யூரிட்டி வேலைக்கு மாதம் 1,100 டாலரும்னு சட்டம் கொண்டு வந்திருக்காங்க. இது போக மத்தவங்களுக்கு முதலாளிங்க எவ்வளவு கம்மியா சம்பளம் கொடுத்தாலும் அதை யாரும் தட்டிக் கேக்க முடியாது.

சிங்கப்பூரோட ஒரு டாலருங்கிறது இந்திய ரூபாயில 48 ரூபாய் வரும். ஒரு சாதாரண காய்ச்சலுன்னு இந்த தொழிலாளிங்க அரசோட பாலி கிளினிக் போனா குறைஞ்சது 30 டாலராவது செலவாகும்கிறாங்க. அதாவது இந்திய மதிப்பில் 1,400 ரூபாய் செலவழிக்கணும்.

பெப்சி தொழிலாளிங்க ஸ்ட்ரைக் நடந்தப்போ, விஜயோட கவலை மெர்சல் ஷூட்டிங் பத்தித்தானே ஒழிய, தொழிலாளர் ஊதிய்ம் பற்றி அல்ல!

மெர்சல் படம் ஷூட்டிங் நடக்கும் போது பெப்சின்னு சினிமா தொழிலாளி சங்கம் ஸ்ட்ரைக் பண்ணாங்க. அவங்க கோரிக்கை என்னங்க? மூணு வருசத்துக்கு ஒரு முறை சம்பளத்த கூட்டணும்னு விதி இருக்கும் போது இன்னும் ஏன் கூட்டலை, இப்ப விக்கிற விலைவாசியில குறைஞ்ச சம்பளத்துல வேலை பார்த்து ஓட்ட முடியுமா, எல்லா நாளும் சினிமா வேலை கிடைக்காத போது கம்மியான சம்பளம் நியாயமா – இதுதான் அவங்க கோரிக்கை.

ஆனா சினிமா முதலாளிங்க இதுக்கு ஒத்துக்கல! தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் இரண்டிலும் இருக்குற நடிகர் விஷாலு, எங்களுக்கு பெப்சி சங்கமே தேவையில்லை, வெளிய இருந்து தொழிலாளிகளை ஏற்பாடு பண்ணிக்கிறோம்னு மிரட்டுனாரு. வேலை நிறுத்தம்தான் தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தைன்னு ரஜினிகாந்த் சொன்னாரு, இப்ப தளபதின்னு பேரு போட்டுறுக்குற விஜய் அப்ப வாயைத் திறக்கவே இல்லை. ஏன்னு யாராச்சும் கேட்டீங்களா?

சிங்கப்பூருல தொழிலாளிக்கு சட்டப்படி சம்பளம் இல்லேங்குற மாதிரி அங்க முதலாளிக்கு சட்டப்படியே வரியே கட்டவேண்டாம்கிற அளவுக்கு ஏகப்பட்ட சலுகை கொடுத்திருக்காங்க. அதனாலதான் வெளிநாட்டுல இருக்குற பல பண முதலைங்க சிங்கப்பூருலயும் கொஞ்சம் சொத்துக்களை மாத்தி வெச்சிருக்காங்க. நிறைய பேரு செட்டிலாகியிருக்காங்க. இது தொடர்பா எங்க வினவு தளத்துல நிறைய கட்டுரைங்க இருக்குது, படிச்சுப் பாருங்க!

பெப்சி தொழிலாளிகளுக்கு எதிராக நடிகர் விஷால்!

இந்தியாவுலயும் மறைமுக வரியை அதிகம் போட்டு மக்கள் மேல சுமத்துற மோடி அரசு, முதலாளிகளுக்கான நேரடி வரியை ரொம்பவே குறைச்சுட்டாங்க. இதைத்தான் சிங்கப்பூரு மாதிரி இங்கயும் மோடி முயற்சிக்கிறாருன்னு தமிழிசை சொல்றாங்க. தளபதி விஜயும் சிங்கப்பூருல இலவச மருத்துவம்னு அடிச்சு விடுறாரு!

ஆக இவங்க இரண்டு பேருக்கும் சிங்கப்பூரு மேட்டருல கருத்து வேறுபாடு கிடையாது. சரி, சாதாரண விக்கிபீடியா மேட்டர் அறிவு கூட இல்லாம இயக்குநர் அட்லி இப்படி ஒரு வசனத்தை ஏன் சேத்தாருன்னு உங்களுக்கு தோணலாம்.

7 சதவீத சிங்கப்பூருல மருத்தவம் இலவசம்னா, 28 சதவீத வரி கேக்குற இந்தியாவுல முடியாதான்னு ஒரு வாட்ஸ் அப் வதந்தியை பார்த்திருப்பாரு. நம்ம மக்கள் பலர் சிங்கப்பூரோட போக்கு வரத்து, வேலைக்கு போனவங்கங்கிறதால இங்க சிங்கப்பூர்னா ஒரு மரியாதை இருக்கு. அத வெச்சு அந்த மேட்டர் பொய்யா வந்தாலும் நம்ம ஆளுங்க அத உண்மைன்னு நம்புறாங்க. ஆனா ஒரு படத்தோட இயக்குநரும், நடிகரும் அத நம்புறாங்கன்னா இவங்களோட அறிவு, அரசியல், மேட்டரெல்லாம் என்ன லெவல்ல இருக்கும்கிறத நீங்களே முடிவு பண்ணிக்கோங்க!

ஜி.எஸ்.டி-யை வெச்சு இந்த படத்துல தைரியமாக பாஜகவை எதிர்க்கிறாங்க-கிறது உண்மையா?

ஃப்ரோ, இன்னி தேதிக்கு பாஜக-காரனே ஜி.எஸ்.டி-யை எதிர்த்துப் பேசறான். துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹான்னு ஏகப்பட்ட பேரு ஜி.எஸ்.டி சரியில்லேன்னு பேசுறாங்க. மத்தபடி எல்லா மக்களும், கட்சிகளும் ஜி.எஸ்.டியை கட்டி உரிச்சு உப்புக் கண்டம் போட்டு புதைக்கிறதுக்கு காத்திருக்காங்க. ஒரு தீப்பெட்டி வாங்குனாலும், தீபாவளி பட்டாசு வாங்கினாலும் ஜி.எஸ்.டி வரியால பாதிக்கப்படாத ஆளே எங்கேயும் இல்லை.

விஜயோட சினிமா உலகமும் கூட அந்த வரி அதிகம்னு சொல்லி பேசுனாங்களா இல்லையா? மத்தவங்களுக்கு எப்படியோ எங்களுக்காச்சும் குறைக்கணும்னு கமல்ஹாசன் கூட பணிவா பேட்டி கொடுத்தாருல்ல! மத்தபடி இந்த படம், ஜி.எஸ்.டி வரி கொடுமையானதுன்னோ, மக்களை வதைக்கிதுன்னோ, மோடி அரசு மக்களை ஒடுக்குதுண்ணோ சொல்லலை! இவ்வளவு வரி வாங்குறீங்களே, மருத்துவத்தை இலவசமாக கொடுக்கலாம்லன்னு கெஞ்சுது! அவ்வளவுதான். மக்களே ஜி.எஸ்.டி வரியே சாதாரண மக்களைப் பிழிந்து திரட்டப்படுற ஒரு கொள்ளை. அதை வாங்குற அரசாங்கத்த கண்டிக்காம, அதுல இருந்து இலவசம் கேப்பானா எவனாவது?

இன்னிக்கு பாத்தீங்கன்னா தமிழ்நாடே டெங்குவால பீதியில உறைஞ்சு போயிருக்கு. செத்தவங்களோட கணக்கை குறைக்கிறதுலதான் அரசாங்கம் கருத்தா இருக்கு. இதுக்கு முன்னாடி சிக்கன் குனியா, மலேரியா, காலரா, மூளைக் காய்ச்சல்னு சீசனுக்கு ஒரு வியாதியில நம்ம மக்கள் பட்ட கஷ்ட்டம் கொஞ்ச நஞ்சமில்லீங்க.

ஈழத்துலயோ, காஷ்மீரிலயோ, ஈராக்கிலயோ போரின் ஒடுக்குமுறையால வீட்டுக்கு ஒரு இழப்பு இருக்குங்கிற மாதிரி, தமிழகத்துல வீட்டுக்கு வீடு ஒரு மருத்துவ கஷ்டம் ரொம்பவே இருக்கு. இதுல முதல் கஷ்டம் பணம், அடுத்து அரசு மருத்துவமனையில வசதி இல்லாதது, பிறகு மருத்துவருங்க செய்யுற தவறுகள்னு பட்டியல் போடலாம்.

மெர்சல் படத்துல அப்பா விஜய் மீசை, வீபூதி வேட்டி சகிதமா “மதுரைக்கு போகாதடி” பாட்டு கெட்டப்புல இருக்காரு. அவரோட கிராமத்துல தீ விபத்துல பாதிக்கப்பட்ட குழந்தைங்கள காப்பாத்த முடியல. உடனே பஞ்சாயத்து கூடி விஜய் தலைமையில மருத்துவமனை கட்ட முடிவு செய்து தாய்மார்களெல்லாம் நகைகளை கழட்டி தாராங்க. கொஞ்சம் வசதியான கிராமம்தான் போல இருக்கு. ஏன்னா தற்கொலை செஞ்சுகிட்ட நீட் அனிதா வீட்ட பாத்தீங்கன்னா குடிசையும், மண்தரையும்தான் இருக்கு. சரி, சினிமான்னா கொஞ்சம் ரிச்சாத்தான் இருக்கணும் போல.

இலவச மருத்துவமனை இல்லாம மக்கள் கஷடப்படுறத, பாரின் டூயட் கால்ஷீட் போக இருக்குற கேப்புல காமிக்கிறாங்க, பேசுறாங்க.

அந்த புதிய மருத்துவமனைக்கு டாக்டராக வந்த வில்லன்கள் இரண்டு பேரு விஜய ஏமாத்தி ஆஸ்பத்திரியை கைப்பத்துறாங்க. விஜயும் அவரது மனைவியும் கொல்லப்படுறாங்க. இரண்டு குழந்தை விஜயும் பிரிஞ்சு ஒண்ணு ஐஞ்சு ரூபா டாக்டராகவும், இன்னொன்னு மாஜிக் கலைஞராகவும் மாறிடுறாங்க.

கடைசியில இரண்டு பேரும் சேந்து வில்லன பழிவாங்குறாங்க. அதுல இலவச மருத்துவமனை இல்லாம மக்கள் கஷடப்படுறத, பாரின் டூயட் கால்ஷீட் போக இருக்குற கேப்புல காமிக்கிறாங்க, பேசுறாங்க.

ஒரு ஆட்டோ டிரைவரோட மகளுக்கு விபத்து ஏற்படுறத வாயில இருந்து, மண்டையில இருந்து ரத்தம் பீறிட்டு வர்றதையெல்லாம் கொடூரமாக காட்டுறாங்க! ஏன்னா நாம்ம மருத்துவர்களோட வில்லத்தனத்தை கொடூரமா புரிஞ்சுக்கணும்ல, அதுக்குத்தான்.

அந்த ஆட்டோ டிரைவர் மகளை கொன்ன தனியார் மருத்துவமனை புரோக்கர், ஆம்புலன்ஸ் டிரைவர், பி.ஆர்.ஓ, டாக்டர் அத்தனை பேரையும் மேஜிக் விஜய் பிடிச்சு வித்தியாசமா கொல்றாரு. இப்படி படம் முழுக்க மருத்துவருங்க வில்லனா காட்டப்படுறாங்க.

ஒரு நோயால மரணமோ, பாதிப்போ எது இருந்தாலும் மக்கள் முதல்ல கோபப்படறது மருத்துவருங்க மேலதான். ஆனா மருத்துவருங்க மேல மட்டும் கோபப்பட்டு பிரோயஜனம் இல்லை.

தமிழ்நாட்டிலயோ இல்லை இந்தியாவிலயோ ஏன் உலகத்துலயோ பெரிய பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைங்கள கட்டி வெச்சு கொள்ளையடிக்கிறவங்களெல்லாம் மிகப்பெரும் நிறுவனங்களாகவோ இல்லை முதலாளிகளாகவோதான் இருக்காங்க. அப்பல்லோ பிரதாப் ரெட்டி மாதிரி ஒரு சில டாக்டருங்கதான் முதலாளிகளா இருக்காங்க. இவங்களும் டாக்டர் தொழிலை வெச்சு ஆஸ்பத்திரி கட்டலை. அரசு சலுகை, மானியம், வங்கி கடன் வசதி, பங்கு சந்தை இப்டித்தான் கட்டுனாங்க.

மெர்சல் படத்துல ரெண்டு சீனுக்கு ஒருவாட்டி எம்ஜிஆரைக் காட்டுறாங்க. அவருக்கு அப்புறம் நான்தான்னு காட்ட விஜய் நினைச்சிருக்கலாம். தலைவா படத்துக்கு அவர் கொடநாட்டுக்கு ஓடிப்போய் தவமிருந்தும் “அம்மாவை” பாக்க முடியாம படத்துல இருந்த பஞ்ச் டயலாக்கையெல்லாம் பட்டி டிங்கர் பாத்து தூக்குனது தனிக் கதை!

ஆனா அந்த எம்ஜிஆர்தான் தனது அடியாளுங்க மத்த அபிமானிங்க பலருக்கு சுயநிதிக் கல்லூரி துவங்கவும், மருத்துவமனைகள் கட்டவும் ஏராளமான அரசு நிலத்தை இலவசமாகவோ இல்லை மலிவு விலை குத்தகையாகவோ கொடுத்தாரு.

மியாட் மருத்துவமனை மோகன்தாஸ், ராமச்சந்திரா மருத்துவமனை உடையாரு, ஜெப்பியார் கல்லூரின்னு இதுல ஆதாயம் அடைஞ்சவங்க நிறைய பேரு! இதுல ஜேப்பியாரும், உடையாரும் சாராயம் ஓட்டுனவங்கன்னு உலகத்துக்கே தெரியும்.

இப்படி மியாட்டுல போய் விஜய் இந்த படத்தோட வசனத்த பேசுனாருன்னு வையுங்க, அப்புறம் எம்ஜிஆரே ஆவியா வந்து அடிப்பாரு!

1990-களில் இருந்தே நம்ம நாட்டுல பொது சுகாதாரத்தை அரசு கழுவிட்டு தனியாருக்கு தாரை வாக்கணும்னு முடிவு பண்ணீட்டாங்க. அதுதான் உலகவங்கி, உலக வர்த்தக கழகத்தோட ஆணை.

அதே மாதிரி தனியார் மருந்துக் கம்பெனிகள் அதுல உள்நாடு-வெளிநாடு இரண்டுமே அடிப்படை மருந்துகளுக்கு அதிக விலை வெச்சு கொள்ளையடிக்கிறாங்க. மத்திய அரசோட ஐடிபிஎல்-ங்கிற மருத்து நிறுவனமோ இல்லை கிங் மருந்து ஆராய்ச்சி நிறுவனமோ இப்பவா அப்பவான்னு சாகுற நிலைமையிலதான் இருக்கு.

அரசு மருத்துவமனைகள்ள பல வசதிகளை தனியார் சேவைன்னு மாத்திட்டாங்க. அங்கேயும் போதுமான மருத்தவருங்களோ, நர்சுங்களோ கிடையாது. நீட் வந்ததுக்கு பிறகு அரசு மருத்துவமனைங்கள்ள வேலை பாக்க புது டாக்டரே வரமாட்டாங்க!

நோயளிகளுக்கு தங்களோட மருந்துகளை எழுதணும்னு தனியார் மருந்துக்  கம்பெனிகள் டாக்டருகளுக்கு, பணமாவோ, சொத்தாவோ, இல்லை வெளிநாடு சுற்றுலாவோ பரிசா அளிக்கிறாங்க. அதுமாதிரி எல்லா சோதனைகளுக்கும் மருத்துவர்களுக்கு கமிஷன் உண்டு. அவன் கொடுக்குறாங்கிறதால இவன் எழுதுறான்.

அங்க அடிக்காம இவன திருத்த முடியுமா சொல்லுங்க! கூட்டிக் கழிச்சுப் பாத்தா நம்ம நாட்டுல மருத்துவத்துறையில் இருக்கும் தனியார் மயத்தை ஒழிக்காம, பன்னாட்டு நிறுவனங்களோட மருந்து ஏகபோகத்தை மறுக்காம நம்ம அரசு மருத்துவமனைகளை எப்படி காப்பாத்த முடியும்? சொல்லுங்க!

மியாட்டுல போய் விஜய் இந்த படத்தோட வசனத்த பேசுனாருன்னு வையுங்க, அப்புறம் எம்ஜிஆரே ஆவியா வந்து அடிப்பாரு!

அரசியல்வாதிகள், அதிகாரிகள், அமைச்சர்கள் அத்தனை பேரும் அரசு மருத்துவமனையிலதான் சிகிச்சை பெறணும்னு சொல்லுற விஜய் அதையே நடிகர்கள், பத்திரிகை துறையினர், தனியார் முதலாளிகள்னு சொல்ல மாட்டேங்குறாரு!

ரஜினியோ இல்லை விஜயகாந்தோ தும்முனாலும் துவண்டாலும் சிங்கப்பூர் போவாங்கன்னா அதை தளபதி விஜய் கண்டிக்க மாட்டாரா? இல்ல அவருதான் தன்னோட நோய்களுக்கு ஜிஎச்சுக்கு போவாரா?

மாசத்துக்கு 1500 ரூபாய் ஊதியம் வாங்குற ஒரு இந்தியக் குடிமகன், மருத்துவர் கிட்ட ஐஞ்சு ரூபா கொடுக்குறதே அதிகம்ணு சொல்ராறு விஜய். சரிங்க ஆபிசர், அதே மாதிரி உங்க படத்துக்கு முதல் நாளுல ரசிகருங்க ஐநூறு, ஆயிரம்ன்னு கொட்டிக் கொடுக்குறதும், இல்லேன்னா சட்டபூர்வமாகவே மல்டிபிளக்சுல 160 ரூபாயும், மத்ததுல 120-ம் கொடுக்குறத மட்டும் சரியா? இல்லை இந்தியக் குடிமகன் 1500 ரூபாய் வாங்குறதால இனி விஜய், அஜித், ரஜனி, கமல் அத்தனை பேரும் ஒரு  படத்துக்கு ஐயாயிரம் ரூபாய் வேணாம், ஒரு ஐம்பது இலட்சத்தை மட்டும் வாங்கிப்பாங்களா?

இல்லை லாஜிக்க மாத்திப் போட்டா ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குறவன் டாக்டருக்கு ஐஞ்சு ரூபா கொடுக்குறது நியாயமனா, கோடிகளில் சம்பளம் வாங்குறவன் இலட்சக் கணக்குல ட்ரீட் மெண்ட் எடுக்குறது நியாயம்ணு வருதா இல்லையா?

ஐயா, அந்த காலத்துல நடிகருங்க தங்களோட மார்க்கெட்டுக்கு ஒரு சென்டிமென்ட் டச்சு கொடுக்குறதுக்குண்ணே, மூணு சக்கர சைக்கிள், இஸ்திரிப் பெட்டி, கல்வி உதவித் தொகை, பிரியாணி சாப்பாடுன்னு கொடுப்பாங்க. இப்ப சமூக வலைத்தளங்களோட காலத்துல இப்பிடி பிசிக்கலா பொருளா கொடுக்கணும்னு அவசியமில்லே.

கமல்ஹாசன் டிவிட்டரில் கருத்தால தானம் கொடுக்குற மாதிரி, விஜய் மாதிரி எல்லா நடிகருங்களும் படத்துல மெசேஜ் கொடுக்குறாங்க. இது இஸ்திரிப் பெட்டியை விட   ஒரு போராளி பில்டப்பை கொடுக்குது. அதனால்தானே கபாலியில ரஜினியை கூட ஒரு சமூகப் போராளின்னு தூக்கிச் சுமந்தாங்க சிலபேரு! சைக்கிள் செலவும் மிச்சம், சைக்கிள் கேப்புல நடிகருங்க போராளியாவும் ஆகலாம்.

ஹாலிவுட்டுலேயே இப்பல்லாம் வில்லன்னா கார்ப்பரேட் கம்பெனிங்களையும், முதலாளிகளையும் காட்ட ஆரம்பிச்சாட்டங்க! அப்பதான் மக்களோட சிந்தனையில படத்தை ஓட்ட முடியும். அது இப்ப தமிழ் சினிமாவுக்கும் வந்தாச்சு. மத்தபடி இந்த மசாலாவை மெசேஜ்னு சொல்லி நம்மள நாமே ஏமாத்துனா, இங்க டெங்கு நோய் ஏன் நம்மள கொல்லாது சொல்லுங்க!

_____________

இந்த சினிமா விமர்சனம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

இந்திய – தமிழக நதிகள் : பொது அறிவு வினாடி வினா – 4

சென்ற வினாடி வினாவில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி. பதினான்கு கேள்விகளுக்கும் சரியான பதில்களை ஆறு நண்பர்கள் சொல்லியிருக்கின்றனர். பிறகு 13, 12, 11, 10 வரை சரியான பதில்களை சராசரியாக பத்து முதல் இருபது பேர் வரை கண்டுபிடித்தனர். கணிசமான நண்பர்கள் ஐந்து கேள்விகள் வரை சரியான பதில்களை சொல்லியிருந்தனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்! மறுமொழிகளில் ஆலோசனை வழங்கிய நண்பர்களுக்கும் நன்றி!

இந்த பகுதியில் இந்திய, தமிழக நதிகள் குறித்து கேட்கிறோம். முயன்று பாருங்கள்!

கீழ்க்கண்ட நதிகளில் காவிரியின் துணையாறு எது?

(விடைக்கான விடுகதை: இந்த ஆறுக்கும் டாலர், ஜக்கி வாசுதேவ், வானவில்லுக்கும் என்ன தொடர்பு?)

நொய்யல் ஆறு
உப்பாறு
கடனா நதி
மணிமுத்தாறு

கீழ்க்கண்ட நதி – மாவட்ட பெயர்களில் எது பொருத்தமற்றது?

(விடைக்கான விடுகதை: ஐயா, தேயிலை நீரில் உப்பு போடலாமா?)

தேனி மாவட்டம் – வெண்ணாறு
கடலூர் மாவட்டம் – கோமுகி
திருச்சி மாவட்டம் – பாம்பாறு
கோயம்பத்தூர் மாவட்டம் – அமராவதி

முல்லைப் பெரியாறு அணை எந்த ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது?

(ஜான் பென்னிகுயிக்கின் சீரிய முயற்சியால் கட்டப்பட்ட இந்த அணையின் முதல் கட்டுமானம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது.)

கி.பி 1895
கி.பி 1795
கி.பி 1755
கி.பி 1859

சிவசமுத்திரம் அருவி எந்த நதியில் அமைந்திருக்கிறது?

(இந்த அருவிப் பகுதியில் இருக்கும் நீர்நிலை மின்சார நிலையம், 1902-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இது ஆசிய நாடுகளின் மூத்த நீர்நிலை மின்சார நிலையங்களில் ஒன்று. இன்றும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்நிலையம் ஆரம்பத்தில் கோலார் தங்க வயல் தேவைகளுக்கு பயன்பட்டது. இப்போது கோலார் தங்க வயல் மூடப்பட்டுவிட்டது. இந்த அருவி இரண்டு பாதையில் பிரிந்து செல்வதால் இடையில் இருக்கும் தீவுப் பகுதியில் சிவசமுத்திர நகரம் அமைந்திருக்கிறது.)

காவிரி
கிருஷ்ணா
நர்மதா
கோதாவரி

மாஞ்சோலை தேயிலை தொழிலாளர் போராட்டத்தோடு தொடர்புடைய நதி எது?

(இந்த நதிக் கரையில்தான் ஊதிய உயர்வு கேட்டு 1999 ஆம் ஆண்டு சூலை 23 அன்று  தேயிலைத் தொழிலாளர் நடத்திய பேரணியின் போது காவல்துறையினர் நடத்திய தடியடி படுகொலையில் 17 பேர் கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்டவர்கள் பல சாதி மதங்களைச் சார்ந்தவர்கள். இருந்தும் முதலாளி வர்க்கத்துக்கெதிரான இந்தத் தொழிலாளிகளின் போராட்டத்தை, திசை திருப்பி, சாதிப் பிரச்சினை என்று அரசியலாக்கினார் அன்றைக்கு பதவியில் இருந்த கருணாநிதி.)

தாமிரபரணி
மணிமுத்தாறு
சேர்வலாறு
வைகை

சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் எந்த நதியோடு தொடர்புடையவர்?

(இந்த நதியில் கட்டப்பட்ட 30 அணைகளில் சர்தார் சரோவார் அணைதான் மிகப்பெரியது ஆகும். 1979 முதல் 2008 வரை இவ்வணை கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணைக்காக தமது சொந்த கிராமங்களில் இருந்து 18,346 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன என்று அரசு கூறினாலும், எண்ணிக்கை இதைப் போல இரண்டு மடங்கு இருக்கும் என்கிறார் மேதா பட்கர்.)

நர்மதா
கோதாவரி
கிருஷ்ணா
மகாநதி

இந்தியா – பாக் நாடுகள் எந்த ஆண்டில் சிந்து நதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன?

(2016-17 –ம் ஆண்டுகளில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போதாக பாஜக அரசு மிரட்டியது. ஆனால் சிந்து நதியின் வெள்ள நீரை தேக்கி வைக்குமளவு இந்தியாவில் அணைகள் இல்லை என்பதால் இந்த ரத்து என்பது வெறும் உதார்தான் என்று நீர்வளத்துறை நிபுணர்கள் கூறினர். பாக் எதிர்ப்பு அரசியலில் மக்களிடம் ஒரு வெத்து வேட்டு வீரத்தை காண்பிக்க மோடி அரசு இப்படி பேசியது.)

1960
1970
1965
1957

காவிரி தோன்றும் தலைக்காவிரி பகுதி எந்த மலையில் அமைந்திருக்கிறது?

(இந்த மலையில் இருக்கும் காஃபித் தோட்டங்கள் பிரபலமானவை. அனேக பணக்காரர்களுக்கும் முதலாளிகளுக்கும் இங்கே தோட்டங்கள் உண்டு. சிக்மகளூரில் இருக்கும் புதாங்கிரி மலைப் பகுதிக்கு அடுத்து இந்தியாவிலேயே அதிகம் காபி உற்பத்தி செய்யப்டுவது இப்பகுதியில்தான்.)

குடகு மலை
முதுமலை
கல்வராயன்
ஆனைமலை

இராஜஸ்தானில் எந்த நதிக்கு அருகில் ஆஜ்மீர் நகரம் அமைந்திருக்கிறது?

(கி.பி 12-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த நகரம் ஆரவல்லி மலைகளால் சூழப்பட்டது. சூஃபி தர்காக்களும், புராதான கோவில்களும், கோட்டைகளும் இந்நகரில் உள்ளன. ராஜஸ்தானில் ஐந்தாவது பெரிய நகரமாக விளங்கும் அஜ்மீரில் 2011 சென்சஸ் கணக்குப்படி 5,42,580 மக்கள் வாழ்கின்றனர்.)

லூனி
யமுனை
சட்லஜ்
சிந்து

பிரம்ம்புத்ரா நதியின் நீளத்தில் (2,900 கி.மீ) பாதி நீளத்தைக் (1465) கொண்டிருக்கும் நதி எது?

(இந்தியாவில் மட்டும் ஓடும் நதிகளில் கங்கைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நதி இதுதான். இந்நதி எட்டு மாநிலங்களில் பாய்கிறது.)

கோதாவரி
நர்மதா
கிருஷ்ணா
யமுனை

உத்திரப்பிரதேச தலைநகரமான லக்னோ எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது?

(1857 முதல் இந்திய சுதந்திரப்போரில் லக்னோ நகரம் ஒரு முக்கியமான மையாமாக இருந்தது.)

கோம்தி
கங்கை
யமுனை
கண்டக்

இந்தியாவில் எந்த நதி மிகப்பெரும் சமவெளிப் படுகையை உருவாக்கியிருக்கிறது?

(இச்சமவெளியில்தான் ஆரியர்களின் பிற்காத வேத நாகரீகம் எழுந்தது. வருணாசிரமத்தின் ஆரம்ப கால மையம் இதுதான். அதன் பொருட்டே இப்பிராந்தியத்தில் பார்ப்ப்பனியத்தை எதிர்த்து புத்த, ஜைன மதங்களும் எழுந்தன.)

கங்கை
சிந்து
பிரம்மபுத்ரா
நர்மதா

மத்தியப் பிரதேசத்தின் இந்திரா சாகர் அணை எந்த நதியில் அமைந்திருக்கிறது?

(அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் அவரது பெயர் கொண்ட இந்த அணை 1984-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு அணையின் முதன்மைப் பகுதி 1992-ம் ஆண்டில் முடிக்கப்பட்டது. தமிழகத்து அம்மா பெயர் பல திட்டங்களுக்கு வைக்கப்பட்டது போல அன்று இந்திரா பெயர் பலவற்றுக்கு சூட்டப்பட்டது. கொள்ளளவின் படி இந்த அணைதான் இந்தியாவில் மிகப்பெரியது.)

நர்மதா
யமுனா
கிருஷ்ணா
சம்பல்

ஹிராகுட் அணை எந்த நதியில் கட்டப்பட்டிருக்கிறது?

(இந்த அணை 1957-ம் ஆண்டில் நேருவால் திறக்கப்பட்டது. இந்த அணைக் கட்டுமானத்தால் ஒன்றறை இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, 22,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர்.)

மகாநதி
கிருஷ்ணா
நர்மதா
கோதாவரி