அரசியல் அக்கிரமங்களுக்கும் அராஜகங்களுக்கு முடிவு கட்டும் போராட்டங்கள் தேவை ! மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்
திருச்சியில்…
நாள் : 30.10.2017
இடம் : உறையூர் கடைவீதி.
நேரம் : மாலை 5:30 மணி.
தலைமை : தோழர் செழியன், மண்டல ஒருங்கிணைப்பாளர், திருச்சி.
கண்டன உரை : தோழர் ராஜா, மக்கள் அதிகாரம் திருச்சி. தோழர் இராமசாமி, மக்கள் அதிகாரம், கரூர். தோழர் ஜீவா, ம.க.இ.க. மாவட்ட செயலர், திருச்சி.
சிறப்புரை : தோழர் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு. தமிழ்நாடு.
ம.க.இ.க -வின் புரட்சிகர கலைநிகழ்ச்சி.
நன்றியுரை : தோழர் பாண்டியன், மக்கள் அதிகாரம், மணவை.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், திருச்சி – மண்டலம். தொடர்புக்கு : 94454 75157
***
விழுப்புரத்தில்…
நாள் : 01.11.2017
நேரம் : மாலை 5:30 மணி.
இடம் : சங்கராபுரம் பேருந்து நிலையம்.
தகவல் : மக்கள் அதிகாரம், விழுப்புரம் – மண்டலம், சங்கராபுரம் வட்டம். தொடர்புக்கு – 97870 55680.
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
சேகர் ரெட்டி வீட்டில் கட்டு கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள்
மோடி அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு பிறகு சட்டவிரோத ரூ.2,000 நோட்டுக்கள் பதுக்கிய வழக்கிலிருந்து, “கறுப்புப் பண” தொழிலதிபர் சேகர் ரெட்டியை விடுவிக்கும் வேலைகளில் மோடி அரசு இறங்கி உள்ளது. ‘மணல் மாஃபியா’ சேகர் ரெட்டி, தமிழக அரசின் முதன்மையான காண்ட்ராக்டராகவும் இருந்தவர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டு பல மூத்த அமைச்சர்களுக்கு மிக நெருக்கமாக இருந்தவர் சேகர் ரெட்டி. கடந்த 2016 நவம்பர் 8 -ம் தேதி பணமதிப்பிழப்பை அறிவித்து, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அப்போது, நாடு முழுவதும் புதிய ரூ.2000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்படுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
சென்னையில் உள்ள சேகர் ரெட்டிக்குச் சொந்தமான எஸ்.ஆர்.எஸ். நிறுவனத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 8 -ம் தேதி வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ. 33 கோடியே 60 லட்சம் மதிப்பிலான ரூ.2000 ரூபாய் நோட்டுகளும், 178 தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, சேகர் ரெட்டியை கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அவரது ஆடிட்டர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்களும், பணமும் சிக்கின. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கு முழுமையாக சிபிஐ -க்கு மாற்றப்பட்டது. தமிழகமே அதிர்ச்சிக்குள்ளான இந்த வழக்கில் 90 நாட்களாகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை.
சேகர் ரெட்டி வீட்டில் கட்டு கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள்
இதுகுறித்து நீதிமன்றத்தில் “ரூ.33.6 கோடி புதிய 2000 நோட்டு குறித்து வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதால் குறித்த காலத்தில் எங்களால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை. என சி.பி.ஐ. கூறியதையடுத்து, சேகர் ரெட்டி கும்பலை நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது.
பிறகு, சேகர் ரெட்டியிடம் பிடிபட்ட ரூ.2000 நோட்டுகளின் வரிசை எண்களைக் குறிப்பிட்டு, எந்த வங்கி அல்லது குடோனில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டவை என்ற விவரங்களை ரிசர்வ் வங்கியிடம் சிபிஐ கேட்டிருந்தது.
ஆனால் ரிசர்வ் வங்கியோ, “சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள் எந்த பணக் கிடங்கு வழியாக சென்றன என்பதற்கான ஆதாரம் தங்களிடம் இல்லை. என்றும் பணத்தை அனுப்பும் போது வரிசை எண்களை தாங்கள் குறித்து வைக்கவில்லை” என்றும் ரிசர்வ் வங்கி கூலாக தெரிவித்துள்ளது.
வங்கிகளுக்கு விநியோகிக்கப்படும் ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்கள் கொண்ட பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும் என்று டிசம்பர் 2 -வது வாரம்தான் வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும், பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் கழித்து இயல்பு நிலைக்கு வந்த பின்னரே, ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்களை குறித்து வைத்து அனுப்பும் பணிகளைச் செய்ய முடிந்ததாகவும், சி.பி.ஐ. குறிப்பிட்டுள்ள ரூ.2000 ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்கள் தொடர்பான விவரங்கள் எவையுமே தங்களிடம் இல்லை என்றும் கூறியுள்ளது.
இதனால் சேகர் ரெட்டி மீதான வழக்கில் சி.பி.ஐ. அடுத்தகட்டமாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், சேகர் ரெட்டி மீதான வழக்கையே தள்ளுபடி செய்யும் நிலை கூட வரலாம் என்கிறார்கள்.
ஜாமீனில் வெளிவரும் கருப்புப் பண முதலை சேகர் ரெட்டி
பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட கடந்த நவம்பர் 8 -ம் தேதி முதல் டிசம்பர் 8 -ம் தேதி வரை சேகர் ரெட்டி, கணக்கு வைத்துள்ள வங்கியில் புதிய 2,000 மதிப்புள்ள ரூ.5 கோடி பணத்தை வங்கியில் கட்டியுள்ளது சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சேகர் ரெட்டியின் எஸ்ஆர்எஸ் மணல் குவாரி நிறுவனத்தின் மூலம் சிட்டி யூனியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.300 கோடி பணத்தை கடந்த 2015 ஏப்ரல் முதல் 2017 மார்ச் வரை எடுக்கப்படவுமில்லை.
எனினும், சேகர் ரெட்டிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் எப்படி கிடைத்தது? பழைய ரூபாய் நோட்டுகளை சேகர் ரெட்டி புதிய 2 ஆயிரம் நோட்டுகளாக மாற்றியது எப்படி? என்பது தெரியவில்லை என்கிறது சி.பி.ஐ. இதனை எல்லாம் கணக்கில் கொண்டு “இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படி” நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் சேகர் ரெட்டி.
தானும் தின்னமாட்டேன் அடுத்தவனையும் தின்னவிடமாட்டேன் என பிரச்சாரத்தின் போது முழங்கிய சவடால் வீரர் மோடி
கறுப்புப் பண பதுக்கலில், சேகர் ரெட்டி மட்டுமின்றி தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை மூலம் சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால், இப்போதுவரை சோதனை நடத்தப்பட்ட யார் மீதும் நடவடிக்கை இல்லை. இந்தக் கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணமெல்லாம் வருமான வரித் துறையின் பாதுகாப்பில் இருக்கிறதேயொழிய, பறிமுதல் செய்யப்படவுமில்லை. இதுதான் மோடி அரசின் கறுப்புப் பண ஒழிப்பின் லட்சணம்.
மஹாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதேபோல, கர்நாடகத்திலும், மேற்குவங்கத்திலும் உள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. இவை அனைத்தும் “குற்றவாளிகள் உட்பட” மோடி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்.
ஆனாலும், சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட புதிய ரூ.2000 நோட்டுக்கள் எந்த வங்கியிலிருந்து வாங்கப்பட்டன என்பதை சி.பி.ஐ.யால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுவது குற்றவாளிகளை தப்ப வைப்பது என்பதை தவிர வேறென்ன இருக்க முடியும்?
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்ட புதிய 2000 ரூபாய் நோட்டிலேயே இப்பேற்பட்ட கருப்புப் பண பெருச்சாளிகள் பகிரங்கமாக மோசடி செய்கிறார்கள். உள்நாட்டு பெருச்சாளிகளையே பிடிக்க முடியாத இந்த சூரப்புலிகள்தான் வெளிநாடுகளில் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு வருவார்களாம்.!
_____________
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
150-ஆவது ஆண்டில் மார்க்ஸின் மூலதனம் : மூலதனம் நூலில் மறைந்திருக்கும் வரலாறும் வரலாற்றில் மூலதனத்தின் இடமும்
கட்டுரைக்குள் நுழையும் முன்பாகச் சில வார்த்தைகள்…
மாமேதை கார்ல் மார்க்ஸின் மூலதனம் நூல் தொகுதியின் முதல் பாகம் வெளியிடப்பட்டதன் 150 – ஆவது ஆண்டு நிறைவு உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மூலதனத்தின் மரணத்தைப் பிரகடனம் செய்த இந்நூல், தொடர்ந்து உலக முதலாளி வர்க்கத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
உபரி மதிப்பின் இரகசியத்தைக் கண்டுபிடித்து மூலதனம் நூல் வழியாக உலகிற்கு எடுத்துரைத்த மாமேதை காரல்மார்க்ஸ்.
மூலதனம் காலாவதியாகிவிட்டது என்று உலக முதலாளி வர்க்கம் பலமுறை பிரகடனம் செய்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் அது தண்ணீரில் அமிழ்த்தப்பட்ட பந்து போல மேலெழுந்து வந்திருக்கிறது. 2008 உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தொழிலாளி வர்க்கம் மட்டுமல்ல, தங்களது எதிர்காலத்தை தெரிந்து கொள்ள முதலாளி வர்க்க அறிவுத்துறையினரும் மூலதனத்தைப் படிப்பதில் ஈடுபாடு காட்டத் தொடங்கினர்.
1867, செப்டம்பர் 14-ஆம் தேதியன்று மூலதனத்தின் முதல் தொகுதி ஜெர்மன் மொழியில் வெளிவந்தது. கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி அந்த மாபெரும் படைப்பை இருட்டடிப்பு செய்து விட முதலாளி வர்க்கம் முயன்றது. இருப்பினும், 1872-இலேயே அதன் ரசிய மொழிபெயர்ப்பு வெளிவந்துவிட்டது. தொடர்ந்து பிரெஞ்சு, ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளியாகின.
இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளை மார்க்ஸால் முடிக்க இயலவில்லை. முற்றுப்பெறாத கையெழுத்துப் படிகள் அனைத்தையும் எங்கெல்ஸிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்தார் மார்க்ஸ்.
தனது சொந்த ஆய்வுப் பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, மூலதனத்தின் இரண்டாவது, மூன்றாவது தொகுதிகளை முடிப்பதை மட்டுமே தனது வாழ்நாள் கடமையாக்கிக் கொண்டார் எங்கெல்ஸ். “இதற்கு மேல் மார்க்ஸின் கையெழுத்துப் பிரதியில் தொடர்ச்சியில்லை” என்ற எங்கெல்ஸின் துயரம் தோய்ந்த குறிப்புடன் நின்று போகிறது மூன்றாவது தொகுதி.
1867 ஆம் ஆண்டு செப்டம்பரில் முதன்முதலாக ஜெர்மன் மொழியில் வெளியான மூலதனம் – முதல் தொகுதியின் முகப்பு அட்டை.
முதல் தொகுதி வெளிவந்த இரண்டாண்டுகளில் மார்க்ஸ் ரசிய மொழி கற்கத் தொடங்கினார். 1870-இல் சிக்பிரீட் மேயர் என்ற தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார் மார்க்ஸ். “ஜெர்மன்-ரோமானிய மொழிக் குடும்பங்களிலிருந்து பெரிதும் வேறுபட்ட ஒரு மொழியை கற்றுத் தேர்வதற்கு இந்த வயதான காலத்தில் நான் முயற்சியைத் தொடங்கியிருக்கிறேன். இருப்பினும் நிச்சயமாக இது பயனுள்ள முயற்சிதான்.
ரசியாவில் தற்போது தோன்றியிருக்கும் அறிவுத்துறை இயக்கம், அந்தச் சமூகத்தின் அடியாழத்தில் குமுறிக்கொண்டிருக்கும் கொந்தளிப்புக்குச் சான்று பகர்கிறது. கண்ணுக்குத் தெரியாத இழைகள் மூலம் மனிதர்களின் உடல்களுடன் அவர்களது சிந்தனைகள் இணைக்கப்பட்டுத்தான் இருக்கின்றன” என்று அக்கடிதத்தில் குறிப்பிடுகிறார் மார்க்ஸ்.
அந்த மாமேதையின் புரட்சிகர உள்ளுணர்வு வெளிப்படுத்திய தீர்க்கதரிசனம் உண்மையென்று பின்னாளில் ரசியப் பாட்டாளி வர்க்கம் நிரூபித்தது. இது மூலதனம் நூலின் 150-ஆவது ஆண்டு. ரசிய சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டு. மூலதனம் பயில்வோம். மூலதனத்தின் அதிகாரத்தை வீழ்த்துவோம்!
***
“தான் வாழ்ந்த காலத்தில் மிகவும் வெறுக்கப்பட்ட, பெரிதும் தூற்றப்பட்ட மனிதர் மார்க்ஸ்” என்று அவருடைய கல்லறையில் நிகழ்த்திய உரையில் எங்கெல்ஸ் குறிப்பிட்டார்.
அத்தகைய வெறுப்புக்கும், தூற்றுதலுக்கும் மார்க்ஸ் இலக்கானதற்குக் காரணம், முதலாளித்துவ சமூகத்தின் உயிர்நிலையையே தாக்கும் இரண்டு விஷயங்களைத் தனது ஆய்வு மூலம் வெளிப்படுத்தியதுதான்.
முதலாவதாக, முதலாளித்துவம் மனித குல வரலாற்றில் இயல்பாகப் பரிணமித்ததோ, காலத்தால் அழியாததோ அல்ல என்பதை மார்க்சின் ஆய்வு நிறுவியது.
ஏனென்றால், பெரும் திரளான மக்களை, அவர்கள் உயிர் வாழ்வதற்கு அவசியமான பொருட்களை உற்பத்தி செய்யும் சாதனங்களிலிருந்து பலவந்தமாகவும், மோசடியாகவும் பிரித்து வீசி, அந்தச் சாதனங்களைத் திருடிக் கைப்பற்றித் தமக்கு சொந்தமாக்கிக் கொண்டவர்களைச் சார்ந்து வாழும்படி மக்களைக் கட்டாயப்படுத்திய வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் மீதுதான் முதலாளித்துவம் நிற்கிறது. இவ்வாறு ஒன்றுக்கொன்று எதிரான வர்க்கங்களுக்கு இடையிலான பகைமையின் அடிப்படையில் உருவான இந்த முதலாளித்துவ சமூக அமைப்பு தவிர்க்க முடியாமல் தன் முடிவைச் சந்திக்கும் என்கிறது மார்க்ஸின் ஆய்வு.
மார்க்ஸின் உயிர் நண்பர் மாமேதை ஏங்கெல்ஸ்
இவ்வாறு முதலாளித்துவம் அழிந்துபடும்போது, மனித குலத்தையும் தன்னோடு படுகுழிக்குள் இழுத்துச் செல்லுமா என்பதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடையை மனிதகுலம்தான் தனது செயல்பாட்டின் வாயிலாக அளிக்க வேண்டும் என்றார் மார்க்ஸ்.
இரண்டாவதாக, தொழிலாளர்கள் உபரி மதிப்புக்காக எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதையும், அவ்வாறு சுரண்டப்பட்ட உபரி மதிப்பை (இலாபம்) தமக்குள் பிரித்துக் கொள்வதில் ஆலை முதலாளிகளும், வணிகர்களும், நிலவுடைமையாளர்களும், வட்டிக் கடன்காரர்களும் எவ்வாறு போட்டி போடுகிறார்கள் என்பதையும், இந்த முரண்பாடுகள் சர்வதேச அளவில் முதலாளித்துவ நாடுகளுக்கிடையேயான போட்டியாகவும், காலனி ஆதிக்கமாகவும் ஏகாதிபத்தியமாகவும் வெளிப்படுவதையும் இயக்குகின்ற முதலாளித்துவத்தின் தனிச்சிறப்பான விதிகளை மார்க்ஸ் கண்டுபிடித்தார்.
அதாவது, முதலாளித்துவத்தை இயக்குவது வெறும் உலகளாவிய அரசியல் பொருளாதாரமல்ல; அரசுகளையும் அவற்றுக்கிடையிலான உறவுகளையும் மையமாகக் கொண்ட அரசியல் பொருளாதாரம் என்பதை அவர் நிறுவினார்.
150 ஆண்டுகளுக்கு முன்பு, 1867-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி பதிப்பிக்கப்பட்ட “மூலதனம்” நூலின் முதல் பாகம் மேற்கண்ட முதல் முடிவினை அடிப்படையாகக் கொண்டு, மேற்கண்ட இரண்டாவது முடிவை விளக்கிக் கூறுகிறது.
இந்த முடிவுகள் இரண்டுவிதமான பொருட்களில் வரலாற்றுப் பூர்வமானவை. முதலாவதாக, முதலாளித்துவம் என்பது காலத்துக்கு அப்பாற்பட்டதோ, என்றென்றும் நிலைத்திருப்பதோ அல்ல. முதலாளித்துவத்தின் தோற்றம் என்பது வரலாற்றின் குறிப்பிட்ட கட்டத்தைச் சார்ந்தது. மனிதகுல வரலாற்றின் கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அது தோற்றம் பெற்றதைப் போல, எதிர்காலத்தில் அதற்கு ஒரு முடிவும் உண்டு.
வர்க்கங்களுக்கிடையேயான போராட்டங்களும் குறிப்பிட்ட வர்க்கத்துக்குள் நடக்கும் போராட்டங்களும் தேசங்களுக்கிடையேயான போராட்டங்களும் ஒரு தேசத்துக்குள்ளேயே நடக்கும் போராட்டங்களும் முதலாளித்துவத்தின் நெருக்கடிகள் நிரம்பிய கொந்தளிப்பான வரலாற்றை நமக்குக் காட்டுகின்றன. முதலாளித்துவம் உருவாக்கப்பட்டதைப் போலவே, இந்தப் போராட்டங்களில் ஈடுபடும் வர்க்கங்கள் அடங்கிய மனித குலம், தனது தெரிவின் மூலம் அதனை முடித்து வைக்கவும் இயலும் என்பதை “மூலதனம்” நூல் நமக்குக் காட்டுகிறது.
அதனால்தான், “மூலதனம்” என்ற இந்த நூல் வேறெந்த நூலைக் காட்டிலும், முதலாளித்துவ உலகத்தின் வரலாற்றிலிருந்தே பிரிக்க முடியாத ஒரு அங்கமாக விளங்கி வருகிறது. அதனால்தான் புதிய தாராளவாதக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய 1990-களுக்கு முன்பு வரை, சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகெங்கும் பாட்டாளி வர்க்க இயக்கங்களும், புரட்சிகளும், மக்கள் போராட்டங்களும் மார்க்ஸின் “மூலதனம்” பாய்ச்சிய ஒளியில்தான் நடைபோட்டன.
மார்க்ஸ் விடை கண்ட கேள்விகள்
இன்று புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப்படத் தொடங்கி, 20 ஆண்டுகள் கடந்து விட்டன. முதலாளித்துவத்தின் தாயகங்களாக விளங்கும் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் நெருக்கடியில் சிக்கித் திணறுகின்றன. ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இளம்தலைமுறையின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. கோர்பின் (பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவர்), சாண்டர்ஸ் (அமெரிக்க சமூக ஜனநாயகவாதி) போன்ற தலைவர்கள் மற்றும் சோசலிச கட்சிகளின் பின்னால் அவர்கள் திரண்டு வருகின்றனர். இந்தச் சூழல், இந்நாடுகளின் வரலாறுகளுக்குள்ளே மார்க்சின் மூலதனத்தை மீண்டும் அழைத்து வருமா?
150 ஆண்டுகளாக “மூலதனம்” நூலின் உள்ளடக்கத்தை மேற்குலகம் திரித்துப் புரட்டியிருக்கிறது. அந்தத் திரிபுகள் மூலதனம் நூலின் மீது குவிந்து, அதனை நசுக்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றை அகற்றுவதென்பது, நமது அறிவுத்துறை பாரம்பரியம் என்று நாம் கருதிக் கொண்டிருப்பவற்றில் பெரும்பாலானவற்றையும், மார்க்சிய மைய நீரோட்டம் என்பனவற்றையும் அகற்றுவதாக இருக்கும். இவ்வாறு அகற்றப்படவேண்டியவை நாம் கற்பனை செய்வதை விட மிகவும் அதிகமானவையாக இருக்கும்.
செவ்வியல் பொருளாதாரவியல் 17-ம் நூற்றாண்டில் வில்லியம் பெட்டி-யின் எழுத்துக்களில் தொடங்கி, 1776-இல் பதிப்பிக்கப்பட்ட ஆடம் ஸ்மித்தின் “தேசங்களின் வளங்கள்” என்ற நூலில் உருப்பெற்று, 19-ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் ரிக்கார்டோ மரபினரால் வளர்த்துச் செல்லப்பட்டது.
இந்தக் கட்டத்தில், “மதிப்பு என்பது என்ன? உபரி மதிப்பு எங்கிருந்து வருகிறது? முதலாளித்துவ நெருக்கடிகள் ஏன் நிகழ்கின்றன? ஒரு நாட்டில் இலாபவீதம் குறைந்து கொண்டே போகும் போக்கை எப்படி விளக்குவது?” என்பன போன்ற சில முக்கியமான கேள்விகளுக்கு விடைகாண முடியாமல் செவ்வியல் பொருளாதாரம் தடுமாறி நின்றது.
கனடா – மாண்டிபா பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வுத்துறை பேராசிரியர் ராதிகா தேசாய்
மார்க்சின் மூலதனம் அனைத்துக்கும் விடையளித்தது. மதிப்பு என்பது என்ன, உபரி மதிப்பு எங்கிருந்து வருகிறது, நெருக்கடிகள் ஏன் ஏற்படுகின்றன, இலாப விகிதம் ஏன் குறைகிறது, ஊதியங்கள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன என்ற கேள்விகளுக்கு விடையளித்தது. சுரண்டல் தன்மை வாய்ந்ததும், நெருக்கடிகளிலிருந்து தப்ப முடியாததும், சர்வதேச வல்லாதிக்கத் தன்மை வாய்ந்ததுமான முதலாளித்துவத்தின் இயல்பை அம்பலப்படுத்திக் காட்டியதன் மூலம், செவ்வியல்
முதலாளித்துவத்தின் உண்மை இயல்பு உழைக்கும் மக்கள் முன்பு அம்பலப்படுத்தப்பட்டது. உழைக்கும் வர்க்கங்கள் மென்மேலும் தமது வர்க்கநலன் குறித்துத் தெளிவு பெறத் தொடங்கினர். முதலாளித்துவத்தை நியாயப்படுத்துவதென்பது மென்மேலும் சாத்தியமற்றதாக மாறத் தொடங்கியது. முதலாளித்துவத்தை நியாயப்படுத்துவதற்கு ஏற்ற புதியதொரு பொருளாதாரக் கோட்பாடு ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்துக்குத் தேவைப்பட்டது. சொல்லி வைத்தாற்போல அது வந்து சேர்ந்தது.
“மூலதனம்” நூல் வெளியான மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே 1870-இல் இங்கிலாந்தின் ஜெவோன்ஸ் தலைமையிலான அறிவுஜீவிகள் குழு உருவாக்கிய மார்ஜினலிச கோட்பாடு, வேண்டலை (Demand) ஆளும் விதிகளையும் வழங்கலை (Supply) ஆளும் விதிகளையும் தனித்தனியே ஆய்வுக்குட்படுத்தி, பொருளின் விலை இதன் வழியே தீர்மானிக்கப்படுவதாகக் கூறியது.
இதைப் புரிந்து கொள்ள “சரக்குகளின் மாய்மாலம்” என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவது அகிலத்தின் மார்க்சியத் திரிபுகளை எதிர்த்துப் போராடிய தோழர் ரோசா லக்சம்பர்க்
முதலாளித்துவ உற்பத்தி முறை ஆதிக்கம் செலுத்தும் சமூகங்களில் மனித உழைப்பு சமூகமயமாக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, ஒரு எளிய சட்டையில், அதன் உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளர்கள், பருத்தி-நூல்-துணி, பிளாஸ்டிக்-பட்டன், இரசாயனம்-சாயம், உலோகங்கள்-தையல் எந்திரம் என நூற்றுக்கணக்கான பொருட்களின் உற்பத்தி சங்கிலிகள் ஒவ்வொன்றிலும் ஈடுபடும் உழைப்பாளர்கள் என ஆயிரக்கணக்கான ஏன், இலட்சக்கணக்கான மனிதர்களின் உழைப்பு அடங்கியிருக்கிறது. ஒவ்வொரு உழைப்பாளி அல்லது உழைப்பாளர் குழுவும் இந்தச் சமூகமயமான உற்பத்திச் சங்கிலியில் ஒரு சிறு பகுதி உழைப்பை செலுத்தி, அதற்குப் பதிலாக ஒட்டு மொத்த சமூக உற்பத்தியில் உருவாக்கப்படும் பொருட்களில் ஒரு பகுதியைத் தமது பங்காகப் பெற்றுக் கொள்கின்றனர்.
இவ்வாறு முதலாளித்துவ சமூகத்தில், உழைப்பின் சமூகத்தன்மை பொருட்களைச் சந்தையில் விற்பதற்கான சரக்குகளாக உற்பத்தி செய்வதன் மூலம் வெளிப்படுகிறது; எனவே, மனிதர்களுக்கிடையேயான சமூக உறவாக வெளிப்படாமல், சரக்குகளுக்கிடையேயான சமூக உறவாகவும் மனிதர்களுக்கிடையேயான பொருளாயத உறவாகவும் வெளிப்படுகிறது; வெளிப்பார்வைக்கு புலப்படாமல் மறைக்கப்படுகிறது; இதிலிருந்து பல போலியான தோற்றங்களும், பொய்யான கருத்துக்களும் பரவி ஆதிக்கம் செலுத்துகின்றன.
மூலதனம் நூலில் சரக்குகளின் மாய்மாலம் (Commodity fetishism) என்ற தலைப்பின் கீழ், கொச்சைப் பொருளாதாரவியல் (Vulgar economics) என்று மார்க்ஸ் சாடிய, எள்ளி நகையாடிய இந்த போலித் தோற்றங்களையும், பொய்யான கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்ட தொகுப்புதான் மார்ஜினலிசம் எனப்படுவது.
கொச்சைப் பொருளாதாரவியலை உருவாக்கிய குழுவின் தலைவர் வில்லியம் ஸ்டான்லி ஜெவோன்ஸ்
இந்தப் போலி பொருளாதாரவியல், சரக்கு சந்தையில் விற்கப்படுவதை ஆய்வு செய்யும் போது, பொருளின் உற்பத்தியையும், வாங்குபவரின் பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியையும் விட்டு விடுகிறது. விலைகளை ஆய்வு செய்யும்போது விலைகளுக்கு அடிப்படையான மதிப்புகளை புறக்கணிக்கிறது. (இந்த அணுகுமுறையின் வக்கிரத்தைப் புரிந்து கொள்ள ஜுலை, 2017, பு.ஜ. இதழில் வெளியான விவசாயிகளின் அழிவில்தான் நாடு வல்லரசாகும் என்ற கட்டுரையைப் படிக்கவும்.) உற்பத்தியில் ஈடுபடும் சமூக வர்க்கங்களை புறக்கணித்து விட்டு, தனிநபர்கள் மீது கவனத்தைக் குவிக்கிறது.
“வேண்டலும், வழங்கலும் சமமாகும் போது விலை தீர்மானிக்கப்படுகிறது” என்ற கொச்சையான, அறிவியலுக்குப் புறம்பான சமநிலை கோட்பாடு, முதலாளித்துவத்தில் அடங்கியிருக்கும் உள்ளார்ந்த முரண்பாடுகளையும், நெருக்கடிகளுக்கு இட்டுச் செல்லும் நிகழ்ச்சிப் போக்கையும் புறக்கணிக்கிறது. இருப்பினும், நெருக்கடிகள் இருப்பதை மறுக்கவியலாமல், போர், பஞ்சம், மோசடி போன்ற வெளிப்புற காரணிகள்தான் பொருளாதார நெருக்கடிகளைத் தோற்றுவிப்பதாகக் கூறுகிறது இந்த கொச்சைப் பொருளாதாரவியல்.
19-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில், பொருளாதாரத்துறையில் பயிற்சி பெற்றவரான மேக்ஸ் வேபர், பொருளாதாரவியலிலிருந்து சமூகவியலைப் பிரித்தெடுத்து ஒரு புதுவிதமான சமூக அறிவியல் உழைப்புப் பிரிவினையைத் தோற்றுவித்தார். “நவீன முதலாளித்துவ சமூகத்தில் பல்வேறு துறைகள் தனித்தனியாக இயங்குவதால், அவற்றைத் தனித்தனியாக ஆய்வு செய்ய வேண்டும்” என்று வாதிட்டு, சமூகவியல் என்ற புதிய துறையைத் தனியாக உருவாக்கினார்.
ஏனென்றால், பொருளாதாரவியல் தனியாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுவது முதலாளிகளுக்கு மிகவும் அவசியமாக இருந்தது. ஏனென்றால், இந்த வழிமுறையின் மூலம்தான் தமது பொருளாதார நடவடிக்கைகளின் சமூக விளைவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளாமலேயே, பொருளாதாரத்தின் வேகத்தையும் தன்மையையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அவர்கள் தங்கள் கையில் வைத்துக்கொள்ள முடியும்.
முதலாளித்துவ சமூகவுயல் துறையை உருவாக்கிய மேக்ஸ் வேபர்
இத்தகைய செயற்கையான அறிவுத்துறை பிரிவினை தோற்றுவிக்கும் பிரச்சினைகளை முதலாளித்துவ ஆய்வாளர்கள் மேலோட்டமாகவே உணர்ந்திருக்கின்றனர். சமூக அறிவியல் பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டிருப்பது குறித்து புலம்புகின்றனர். “துறைகளுக்கிடையேயான ஆய்வு’’, “பல்துறை ஆய்வு” போன்ற வித்தைகளின் மூலம் இந்தக் குறைபாட்டைச் சரிக்கட்ட முயற்சிக்கின்றனர். ஆனால், சமூகத்திலிருந்து வரலாற்றைப் பிழிந்து வெளியேற்றியிருக்கும் மேற்கண்ட ஆய்வுமுறை ஏற்படுத்தியிருக்கும் பெருந்தீங்கைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகின்றனர்
மார்க்ஸ் முன்வைக்கும் வரலாற்றியல் ஆய்வு முறை என்ன? வர்க்கங்கள், கட்சிகள், அரசுகள் முதலான அமைப்பாகத் திரண்ட மனிதக் குழுக்கள், தமக்கு வரலாற்றுவழியில் கையளிக்கப்பெற்ற சூழலில் இயங்குகிறார்கள். தமது முடிவுகளாலும் செயல்பாடுகளாலும் எதிர்கால வரலாற்றைப் படைக்கிறார்கள்.
மேக்ஸ் வேபர் போன்றோர் பெற்றெடுத்த புதிய சமூக அறிவியல்களின்படி, “முந்தைய தலைமுறை மனிதர்கள் மேற்கொண்ட வரலாற்று வழியிலான முடிவுகளும், செயல்பாடுகளும், அந்தப் பின்புலத்திலிருந்து பிய்த்தெடுக்கப்படுகின்றன. அவையனைத்தும் வரலாற்றுத் தேர்வுகளின், முடிவுகளின் விளைவுகளே என்பதற்குப் பதிலாக, மண்டியிட்டு நிறைவேற்ற வேண்டிய விதிகளாக நம் முன் நிறுத்தப்படுகின்றன.”
“வரலாற்றின் கருவிகளாக இயங்கும் மனிதர்களின் நடவடிக்கை, இனி வரவிருக்கும் வரலாற்றின் செயற்களத்தை மாற்றியமைத்த வண்ணம் இருக்கிறது என்ற உண்மையையும் மறுக்கிறது. இப்போதைய வரலாற்றை முந்தைய காலத்து கட்சிகளும், வர்க்கங்களும், தனிநபர்களும், அரசுகளும் உருவாக்கிச் சென்றிருப்பதைப் போல இப்போதைய கட்சிகளும், வர்க்கங்களும், தனிநபர்களும், அரசுகளும் தமது செயல்களால் எதிர்கால வரலாற்றை உருவாக்குகின்றன என்பதை அது கருத்தில் எடுத்துக் கொள்வதில்லை.”
“இத்தகைய சமூக அறிவியல் அனைத்தையும் ஒரு எளிய நிகழ்கால மொழியில் சித்தரிக்கிறது. கட்சிகள் இதைச் செய்கின்றன – அரசுகள் இப்படிச் செய்கின்றன – பணவீக்கம் – வேலையில்லாத் திண்டாட்டம் இப்படிச் செய்கிறது – என்று பேசுகிறது. ஒரு காலகட்டத்தில் தோன்றும் பணவீக்கம் அல்லது வேலைவாய்ப்பின்மை முந்தைய காலகட்டங்களின் பணவீக்கம் அல்லது வேலை வாய்ப்பின்மையிலிருந்து வேறுபட்டது என்பதைப் புறக்கணிக்கிறது.”
வரலாற்று வழியில் தோன்றியிருக்கும் தேசிய வர்க்கங்களும் கட்சிகளும் அரசுகளும் தமது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளின் மூலமாக முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகளைக் கையாள்கின்றன என்ற உண்மையை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்கிறது இந்த அறிவியல். மார்க்ஸின் மூலதனம் கையாளும் ஆய்வுமுறைக்கும் வேபர் வகைப்பட்ட இந்த அறிவியலுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை.
நிதி மூலதனத்தின் தோல்வி : அமரிக்காவில் நடந்த வால் ஸ்ட்ரீடை முற்றுகையிடும் போராட்டத்தில், முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தின் மீது தொடுத்துவரும் போரட் நிறுத்தக் கோரும் பதாகையை ஏந்திவரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் (கோப்புப் படம்)
முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூக உற்பத்தி முறைகளிலிருந்து முதலாளித்துவத்தைப் பிரித்துக் காட்டுவது, அது பரிவர்த்தனை மதிப்பை உற்பத்தி செய்வதாக இருப்பதுதான் என்பதை மார்க்சின் மூலதனம் எடுத்துக் காட்டியது.
முந்தைய சமூகங்களில் (உதாரணம் : இந்திய கிராம சமுதாயம், ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை) பயன் மதிப்பை உற்பத்தி செய்யும் மனிதர்கள், சமூக உறவுகளின் அடிப்படையில் (சாதிய உறவுகள் அல்லது பண்ணையடிமை முறை) அவற்றை தமக்குள் பரிமாறிக் கொள்வது முதன்மையாக உள்ளது. சந்தை பரிவர்த்தனைக்கான உற்பத்தி மிகக் குறைந்த அளவே உள்ளது.
மாறாக, முதலாளித்துவ உற்பத்தி முறையில் பொருட்களின் பயன் மதிப்பை (எ.கா – சட்டையின் பயன்மதிப்பு உடலுக்கு பாதுகாப்பு, அழகு) உருவாக்கும் மனித உழைப்பின் (ஆலை உற்பத்தி, வடிவமைப்பு, தையல்) நேரம், அந்தப் பொருள் சந்தையில் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படும் பரிவர்த்தனை மதிப்பைத் தீர்மானிக்கிறது.
அதாவது உழைப்பிலிருந்து அந்நியப்படுத்தப்பட்ட பொருட்களுக்குள் உறைந்திருக்கும் உழைப்பின் அளவீடுதான் அது.
முதலாளிகளுக்கிடையேயான சந்தைப் போட்டி, புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளை அறிமுகப்படுத்தும்படி அவர்களைக் கட்டாயப்படுத்துகிறது. இதன் மூலம் பொருட்களின் மதிப்பு, சமூகரீதியில் அவசியமான அளவுக்கு வீழ்த்தப்படுகிறது. அதாவது அவற்றின் உற்பத்திக்குத் தேவையான சமூகரீதியிலான உழைப்பின் அளவு தொடர்ந்து குறைந்து செல்கிறது; சமூக உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது, புதிய தொழில்நுட்பங்கள், புதிய கருவிகள் என உற்பத்தி சக்திகள் வளர்ந்து கொண்டே செல்கின்றன.
முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையேயான சுரண்டல் உறவு தோற்றுவிக்கும் முரண்பாடு – ஒற்றுமை, முதலாளித்துவ நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி மற்றும் தேசிய அரசுகளின் கீழ் திரண்டு செயல்படும் மூலதனங்களுக்கிடையேயான போட்டி மற்றும் ஒற்றுமை என்ற இரண்டு வகை முதலாளித்துவ முரண்பாடுகளை உள்ளடக்கிதான் முதலாளித்துவம் மதிப்பை உற்பத்தி செய்கிறது. தனக்கேயுரிய அராஜகம் மற்றும் அநீதியின் காரணமாக, ஒரு நெருக்கடி முடிவதற்குள் இன்னொரு நெருக்கடி என்று தள்ளாடுகிறது. தன்னுடைய இருத்தலுக்கான நியாயத்தையும் இழக்கிறது.
வரலாற்றுரீதியாக முதலாளித்துவத்தின் தனிச்சிறப்பாக அமைவதும், முரண்பாடாக இருப்பதும், அதனை முன்னோக்கி செலுத்தும் சக்தியாக விளங்குவதும், அது, “பரிவர்த்தனை மதிப்பை” உற்பத்தி செய்கிறது என்பதுதான். புதிய செவ்வியல் பொருளாதாரக் கோட்பாடுகள், இந்த தனிச்சிறப்பான தன்மையை முதலாளித்துவத்திடமிருந்து அகற்றிவிடுவதால், முதலாளித்துவம் என்பது வரலாற்றுக்கு அப்பாற்பட்டதாகவும், நிலையானதாகவும், நிரந்தரமானதாகவும், மாற்றமில்லாததாகவும் நமக்கு காட்டப்படுகிறது. இதன் காரணமாக நெருக்கடிகள், போர்கள், ஒடுக்குமுறைகள் நிரம்பிய முதலாளித்துவத்தின் கொந்தளிப்பான வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கான மையச் சரடை நாம் இழந்து விடுகிறோம்.
அறிவுத்திறன் வறண்டுபோன மேற்கண்ட சமூக அறிவியல்களின் புரிதல்கள், மார்க்சின் மூலதனத்துக்கு அருகில் நிற்பதற்குக் கூட அருகதையற்றவை. ஆனால், மார்க்சியவாதிகள் எனப்படுவோரே, எதிரிகளின் படைக்கலன்களைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் புதிய செவ்வியல் பொருளாதாரம் என்ற டிரோஜன் குதிரையை, மார்க்சிய கோட்டைக்குள் உருட்டிக் கொண்டு வந்திருக்கிறார்களே!
மார்க்சியம் தோன்றிய ஒரு சில ஆண்டுகளுக்குள்ளாகவே, அதனால் ஈர்க்கப்பட்டு தொழிலாளர் வர்க்கத்தின் பக்கம் வந்து சேர்ந்த அறிவுத்துறையினர் பலர் தமக்குப் பள்ளியிலும் கல்லூரியிலும் கற்பிக்கப்பட்ட கொச்சைப் பொருளாதாரவியலைத் தம்மோடு இழுத்து வந்தார்கள். இளம் வயதிலேயே பதிய வைக்கப்பட்ட இந்தக் கல்வி, அதற்குரிய விளைவை ஏற்படுத்தியது.
அறிவியல் அடிப்படையிலான மார்க்சிய ஆய்வுமுறையைக் கற்று, தமது முந்தைய கொச்சைப் பொருளாதாரக் கல்வியை நிராகரிப்பதற்குப் பதிலாக, மார்க்சியத்துக்கு நேரெதிரான அந்தக் கொச்சைப் பொருளாதாரக் கோட்பாடு மற்றும் ஆய்வு முறையியல் சட்டகத்துக்குள் மார்க்சியத்தைப் பொருத்துவதில் அவர்களில் சிலர் ஈடுபட்டனர்.
1889-ல் உருவாக்கப்பட்டு 1916 வரை நீடித்த இரண்டாம் கம்யூனிஸ்ட் அகிலத்திலேயே இந்தப் போக்கு ஆரம்பித்திருந்தது.
முதலாளி தான் குவித்திருக்கும் பணத்தைப் பயன்படுத்தி உற்பத்திச் சாதனங்களையும், கூலி உழைப்பையும் சந்தையில் வாங்கிய பிறகுதான் உற்பத்தி நடைபெறுகிறது, தொழிலாளியிடமிருந்து உபரி உழைப்பைக் கறப்பதன் மூலம் போடப்பட்ட முதலீட்டை விட அதிக மதிப்பை உள்ளடக்கிய சரக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இச்சரக்குகளை சந்தையில் விற்றுப் பணமாக மாற்றி, அந்தப் பணம் மீண்டும் மூலதனமாக மாற்றப்பட வேண்டும். இப்படித் திரும்பத் திரும்ப நடைபெற்றால்தான் முதலாளித்துவ உற்பத்தி முறை நீடிக்க முடியும்.
இந்த மூலதனத்தின் மறுஉற்பத்தி சுற்றோட்டம் பற்றிய பகுப்பாய்வு, மார்க்சின் இறப்புக்குப் பிறகு அவர் விட்டுச் சென்ற குறிப்புகளிலிருந்து தொகுத்து எங்கெல்சால் “மூலதனம்” 2-ஆம் பாகமாக வெளியிடப்பட்டது. இந்தப் பகுப்பாய்வுக்காக மார்க்ஸ் உருவாக்கிய முறையியல், மூலதன மறுஉற்பத்திச் சுற்றோட்டத்தில் அடங்கியிருக்கும் முரண்பாடுகளையும் விகிதாச்சார குலைவையும் வெளிப்படுத்துகிறது.
ஆனால், 20-ஆம் நூற்றாண்டின் முதல் இரண்டு பத்தாண்டுகளின்போதே, இரண்டாம் அகிலத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதை மறுதலித்து, புதிய செவ்வியல் பொருளாதாரவாதமான முதலாளித்துவ உற்பத்தியே அதற்கான சந்தை வேண்டலைத் தோற்றுவிக்கிறது என்ற கருத்தை தூக்கிப்பிடித்தனர். இதை எதிர்த்து ரோசா லக்சம்பர்க் போராடினார். அறிவியலையும், வரலாற்றையும் பிரிக்கும் பாசிட்டிவிசமாக இரண்டாம் அகிலத்தின் மார்க்சியம் மாறியதற்கும்கூட இந்தப் போக்கு பின்புலமாக இருந்தது.
இன்று இது, “மார்க்சிய விரோத மார்க்சியப் பொருளாதாரவியல்” ஆக வளர்ந்து, “மூலதனம்” நூல் குறித்துக்கொச்சைப் பொருளாதாரவியல் அடிப்படையிலான பல அபத்தமான கேள்விகளை முன்வைத்து விவாதிக்கிறது.
முதலாவதாக, உழைப்பு நேரத்தால் தீர்மானிக்கப்படும் மதிப்பு, சந்தை போட்டியில் விலையாக எப்படி உருமாறுகிறது என்ற பிரச்சினை மூலதனத்தில் விளக்கப்படவில்லை என்ற வாதம்.
இரண்டாவதாக, முதலாளித்துவ உற்பத்தியில் மிகை உற்பத்தியும் வேண்டல் பற்றாக்குறையும் இல்லை என்ற அடிப்படையிலான வாத பிரதிவாதங்கள்.
மூன்றாவதாக, இலாபவீதம் குறைந்து கொண்டே போகும் பிரச்சினையை முதலாளித்துவம் எதிர்கொள்ளவில்லை என்ற வாதம்.
நான்காவதாக, மார்க்சின் பணம் பற்றிய கோட்பாடு சரக்கு அடிப்படையிலானது என்ற வாதங்கள் என்று இந்தப் பட்டியல் நீள்கிறது.
இன்னும் சில, ‘மார்க்சிய’ ஆய்வாளர்கள், “பொருளாதார நிர்ணயவாதம்” குறித்து எச்சரிக்கின்றனர். “பொருளாதார நிர்ணயவாதம்” என்ற பேச்சே பொருளாதாரவியலைப் பிற சமூக அறிவியல்களிலிருந்து பிரித்து ஆய்வு செய்யும் முதலாளித்துவ அணுமுறையில்தான் சாத்தியமாகும். “மூலதனம்” நூலுக்கும் இத்தகைய அணுகுமுறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
மேலே சொன்ன போக்குகளின் ஊடாக, “மூலதனம்” நூலைப் பல பத்தாண்டுகளாக மாணவர்களுக்குக் கற்பித்தவர்களான சில நட்சத்திர அறிஞர்கள், “மூலதனம்” நூலில் வரலாறே இல்லை என்று சாதிக்கும் கண்கொள்ளாக் காட்சியும் நமக்குக் காணக் கிடைக்கிறது.
மூலதனத்தில் உறைந்திருக்கும் வரலாற்றை மீட்போம்! முதலாளித்துவத்திலிருந்தும் மீள்வோம்!
சரி. இன்றைக்கு மூலதனம் நூலினைப் படிக்க விரும்புகிறவர் மேற்கூறியவற்றிலிருந்து என்ன புரிந்து கொள்ள வேண்டும்? தன்னோடு சேர்த்து ஒட்டு மொத்த மனிதகுலத்தையும் இந்த பூமிப்பந்தையும் அழிவுக்குக் கொண்டு செல்வதற்கு முன் முதலாளித்துவத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், “மூலதனம்” கற்பிக்கும் ஆய்வின் வழியிலான வரலாற்றை நாம் படைக்க வேண்டும். மூலதனம் மீண்டும் வரலாற்றுக்குள் நுழைய வேண்டுமானால், மூலதனம் நூலுக்குள் உறைந்திருக்கும் மூலதனத்தின் வரலாற்றை நாம் மீட்டெடுக்க வேண்டும்.
இதற்கு வரலாற்று நீக்கம் செய்யப்பட்ட பொருளாதாரவியல் கல்வியையும், சமூக அறிவியல் கல்வியையும் உங்கள் மூளையிலிருந்து கழற்றி வாசலிலேயே விட்டுவிட்டு, அதன் பின்னர் மூலதனம் நூலுக்குள் நுழையுங்கள். தற்போது இருக்கும் இடத்துக்கு மனிதகுலம் எப்படி வந்து சேர்ந்தது என்பதையும், எத்தகைய எதிர்காலத்தை நோக்கி நாம் செல்லக்கூடும் என்பதையும் புரிந்து கொள்வதற்கு அந்தக் கல்விகள் ஒருபோதும் உதவாது. மார்க்ஸ் கற்பிப்பதைப் படியுங்கள். “மூலதனம்” நூல் கடினமானது, என்று சொல்பவர்களின் பேச்சைக் கடுகளவும் பொருட்படுத்தாதீர்கள். அவர்கள் சொல்ல வருவதெல்லாம், “நான் எழுதிய புத்தகத்தை முதலில் படியுங்கள்” என்பதுதான்.
நம்மிடம் இருக்கும் அவகாசம் மிகக் குறைவு, அதை “மூலதனம்” வாசிப்பதற்குச் செலவிடுவோம். ஒரு அறிமுக நூலைப் படிப்பது அவசியம் என்று நீங்கள் கருதும்பட்சத்தில், எர்னஸ்ட் மன்டேலின் அறிமுகத்தைப் படியுங்கள். அது சுருக்கமானது. இக்கட்டுரையில் நாம் விவரித்துள்ள பிரச்சினைகள் இல்லாதது.
நினைவிற்கொள்ளுங்கள். மூலதனம் நூல் ஒரு தொழிலாளர் பத்திரிகையில் (1872-இல் பிரெஞ்சு தொழிலாளர் பத்திரிகையில்) தொடராக வெளியிடப்பட்டிருக்கிறது. நீங்கள் இன்றைய தொழிலாளி வர்க்கம். வரலாற்றின் உள்ளே வாருங்கள் என்று உங்களை வரவேற்கும் அழைப்பிதழ்தான் – மூலதனம்.
கட்டுரையாளர், பேராசிரியர் ராதிகா தேசாய், கனடாவின் வின்னிபெக் மாநிலத்தில் உள்ள மான்டிபா பல்கலைக் கழகத்தின் அரசியல் ஆய்வுத் துறை பேராசிரியர். 150-வது ஆண்டில் மார்க்சின் “மூலதனம்’’: “மூலதனத்தில்” வரலாறும், வரலாற்றில் “மூலதனம்” நூலும் – என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம் இது. அவசியமான இடங்களில் மட்டும் வாசகர்களின் புரிதலுக்காகக் கூடுதல் விளக்கங்கள் சேர்த்து தரப்பட்டுள்ளது.
மொழியாக்கம்: அப்துல்
*******************************************************************************
கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !! சென்னையில் மாபெரும் கூட்டம்
19 நவம்பர், 2017, மாலை 4:00 மணிக்கு, ஒய்.எம்.சி.ஏ அரங்கம், நந்தனம், சென்னை – 600 035.
நண்பர்களே,
ரசியப் புரட்சி 100-ம் ஆண்டு, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-வது ஆண்டு விழா சிறப்புக் கூட்டம், பருவமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டதை அறிவீர்கள். அந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 19, ஞாயிறு அன்று அதே இடத்தில் நடத்தப்படவுள்ளது. அனைவரும் வருக.
பெரும் பொருட்செலவுடன் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்திற்கு நன்கொடை தாருங்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம்தான். இங்கே நன்கொடைக்காக டிக்கெட் வடிவத்தை வெளியிட்டிருக்கிறோம். மனித குலத்தின் உலகு தழுவிய மாற்றம்- முன்னேற்றம் – புரட்சியின் குறியீடான ரசியப் புரட்சியின் இந்நிகழ்வுக்கான நன்கொடைச் சீட்டுக்களுக்கு ஐந்து பெருங்கடல்களின் பெயர்களை வைத்திருக்கிறோம். ஆதரவு தாருங்கள்!
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே நன்கொடை அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !! சென்னையில் மாபெரும் கூட்டம்
19 நவம்பர், 2017, மாலை 4:00 மணிக்கு, ஒய்.எம்.சி.ஏ அரங்கம், நந்தனம், சென்னை – 600 035.
நண்பர்களே,
ரசியப் புரட்சி 100-ம் ஆண்டு, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-வது ஆண்டு விழா சிறப்புக் கூட்டம், பருவமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டதை அறிவீர்கள். அந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 19, ஞாயிறு அன்று அதே இடத்தில் நடத்தப்படவுள்ளது. அனைவரும் வருக.
பெரும் பொருட்செலவுடன் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்திற்கு நன்கொடை தாருங்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம்தான். இங்கே நன்கொடைக்காக டிக்கெட் வடிவத்தை வெளியிட்டிருக்கிறோம். மனித குலத்தின் உலகு தழுவிய மாற்றம்- முன்னேற்றம் – புரட்சியின் குறியீடான ரசியப் புரட்சியின் இந்நிகழ்வுக்கான நன்கொடைச் சீட்டுக்களுக்கு ஐந்து பெருங்கடல்களின் பெயர்களை வைத்திருக்கிறோம். ஆதரவு தாருங்கள்!
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே நன்கொடை அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !! சென்னையில் மாபெரும் கூட்டம்
19 நவம்பர், 2017, மாலை 4:00 மணிக்கு, ஒய்.எம்.சி.ஏ அரங்கம், நந்தனம், சென்னை – 600 035.
நண்பர்களே,
ரசியப் புரட்சி 100-ம் ஆண்டு, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-வது ஆண்டு விழா சிறப்புக் கூட்டம், பருவமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டதை அறிவீர்கள். அந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 19, ஞாயிறு அன்று அதே இடத்தில் நடத்தப்படவுள்ளது. அனைவரும் வருக.
பெரும் பொருட்செலவுடன் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்திற்கு நன்கொடை தாருங்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம்தான். இங்கே நன்கொடைக்காக டிக்கெட் வடிவத்தை வெளியிட்டிருக்கிறோம். மனித குலத்தின் உலகு தழுவிய மாற்றம்- முன்னேற்றம் – புரட்சியின் குறியீடான ரசியப் புரட்சியின் இந்நிகழ்வுக்கான நன்கொடைச் சீட்டுக்களுக்கு ஐந்து பெருங்கடல்களின் பெயர்களை வைத்திருக்கிறோம். ஆதரவு தாருங்கள்!
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே நன்கொடை அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !! சென்னையில் மாபெரும் கூட்டம்
19 நவம்பர், 2017, மாலை 4:00 மணிக்கு, ஒய்.எம்.சி.ஏ அரங்கம், நந்தனம், சென்னை – 600 035.
நண்பர்களே,
ரசியப் புரட்சி 100-ம் ஆண்டு, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-வது ஆண்டு விழா சிறப்புக் கூட்டம், பருவமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டதை அறிவீர்கள். அந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 19, ஞாயிறு அன்று அதே இடத்தில் நடத்தப்படவுள்ளது. அனைவரும் வருக.
பெரும் பொருட்செலவுடன் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்திற்கு நன்கொடை தாருங்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம்தான். இங்கே நன்கொடைக்காக டிக்கெட் வடிவத்தை வெளியிட்டிருக்கிறோம். மனித குலத்தின் உலகு தழுவிய மாற்றம்- முன்னேற்றம் – புரட்சியின் குறியீடான ரசியப் புரட்சியின் இந்நிகழ்வுக்கான நன்கொடைச் சீட்டுக்களுக்கு ஐந்து பெருங்கடல்களின் பெயர்களை வைத்திருக்கிறோம். ஆதரவு தாருங்கள்!
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே நன்கொடை அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
“நெல்லையில் கந்து வட்டிக்கு குடும்பமே பலி! போலீசும், அதிகாரிகளுமே குற்றவாளிகள் !” என்ற முழக்கத்தின் அடிப்படையில் மக்கள் அதிகாரம் சார்பில் 25.10.2017 அன்று காலை 11 மணியளவில் எழும்பூர் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் நடக்கவிருந்த எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். காலையில் தோழர்கள் அனைவரும் திரண்டு முழக்கமிட ஆரம்பித்தவுடனே போலீசார் பாய்ந்து வந்து, ஆர்ப்பாட்டத்தை நடத்தவிடாதபடி தோழர்களை கைது செய்ய முயற்சித்தனர். ஆனாலும் அவற்றைத் தாண்டி மக்கள் மத்தியில் கருத்துக்கள் சேரும் வகையில் தோழர்கள் முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்ற மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல்செழியன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்; “கந்துவட்டிக் கொடுமை குறித்து 6 முறை மனு கொடுத்தும் அதன்மீது நடவடிக்கை எடுக்காத நெல்லை மாவட்ட கலெக்டரும், மாவட்ட எஸ்.பி. -யும் தான் கந்துவட்டிப் படுகொலைக்கு முதன்மைக் காரணமானவர்கள். எனவே அவர்களைக் கைது செய்யவேண்டும்; மேலும் மக்களைக் காப்பதாகச் சொல்லிக் கொள்ளும் இந்த அரசு தனது கடமையில் இருந்து விலகிக் கொண்டது மட்டுமல்லாது மக்களுக்கே எதிரான குற்றக்கும்பலாக மாறிப்போயுள்ளது;
இந்தக் குற்றக்கும்பலிடமே கெஞ்சிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. மாறாக மக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள நகரம்தோறும், கிராமம்தோறும் மக்கள் கமிட்டிகளை அமைத்திடுவோம், நமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வோம்!” எனக் கூறினார். இறுதியில் போலீசு அனைவரையும் கைது செய்தது. தோழர்கள் போலீசு வாகனத்திலும் தோற்றுப் போன இந்த அரசமைப்புக்கு எதிராக முழக்கமிட்டுக் கொண்டே சென்றனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
ஆர்ப்பாத்தில் முழங்கப்பட்ட் முழக்கங்கள் :
கந்துவட்டி கொடுமைக்கு
தாயும் இரண்டு குழந்தைகளும்
தீயில் கருகிய கொடூரம்
கந்து வட்டியின் கூட்டாளிகளான
மாவட்ட ஆட்சியரும் போலிசுமே
கொலைக்குற்றவாளி கொலைக்குற்றவாளி!
மக்களிடம் மனுவை வாங்கி
துடைத்து போடும் அதிகாரிகளே
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் எதற்கு! சம்பளம் எதற்கு!!
கூட்டாளி கூட்டாளி
கந்துவட்டி கும்பலுக்கும்
கார்ப்பரேட் முதலாளிகளுக்கும்
காவல்துறை தான் கூட்டாளி!
பல கோடிகளை ஊழல் செய்தவன்
உல்லாசமாய் வாழ்கிறான்
கந்துவட்டிக்கு வாங்கியவன்
கரிக்கட்டையாய் சாகிறான்!
கந்துவட்டிக்கு குடும்பம் பலி!
டெங்குவிற்கு தமிழகம் பலி!
GST -க்கு நாடே பலி!
எதற்கு சட்டம்
எதற்கு போலீசு
எதற்கடா நீதிமன்றம்!
நகரம் தோறும் கிராமம் தோறும்
மக்கள் கமிட்டிகள் அமைத்திடுவோம்
மக்கள் அதிகாரம் கையிலெடுப்போம்!
தகவல் : மக்கள் அதிகாரம், சென்னை – மண்டலம்,
தொடர்புக்கு :91768 01656.
_____________
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 15 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது மோடி அரசு. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தற்பொழுது ஒப்பந்த தொழிலாளர்கள் 13,000 பேரும், நிரந்தர தொழிலாளர்கள் 12,000 பேரும், எக்சிகியூட்டிவ் அதிகாரிகள் 5,000 பேரும் வேலை பார்க்கிறார்கள். இந்த அதிகாரிகளில் பெரும்பான்மையோர் வட இந்தியர்கள்.
பத்தாண்டுகளுக்கு முன்பு 18,000 -க்கும் மேற்பட்டோர் நிரந்தர தொழிலாளர்கள் இருந்த நிலைமை படிப்படியாக மாறி தற்போது நிரந்தரத் தொழிலாளர்களே இல்லை என்ற நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டனர். இதனைத்தொடர்ந்து, ஆண்டிற்கு 1,500 கோடி ரூபாய்க்கு மேல் நிகர லாபம் ஈட்டும் என்.எல்.சி. நிறுவனத்தை தனியார்மயமாக்கும் சதித்தனமான முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறது மத்திய அரசு.
2002 -ம் ஆண்டு என்.எல்.சி. நிறுவனத்தின் 51 சதவீதப் பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டு, அமைச்சரவை ஒப்புதலையும் பெற்ற நிலையில், நாடாளுமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார் அன்றைய பாஜக பிரதமர் வாஜ்பாய். அப்பொழுது எழுந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக அது நிறுத்தி வைக்கப்பட்டது.
கடந்த 2013 -ம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியிலும் என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக என்.எல்.சி.யின் பங்குகளை பங்குச் சந்தையில் விற்கும் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் திணறிக்கொண்டிருந்த நிலையில், எதிர்ப்புகளைச் சமாளிக்க இப்பங்குகளை தமிழ்நாடு அரசு நிறுவனங்கள் வாங்கிக் கொள்ளும் திட்டத்தை நயவஞ்சகமாக அறிவித்தார் ‘A1’ ஜெயலலிதா.
இதன்படி, தமிழக அரசுத்துறை நிறுவனங்கள் 3.91% வாங்கியிருந்தாலும், அவை தனியார் முதலாளிகளின் கைகளுக்குப் போகாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நாளையே தமிழக அரசுக்கு நிதிப் பற்றாக்குறை என்று காரணம் காட்டி, இந்தப் பங்குகளை தமிழக அரசு விற்பனை செய்தால் அதை யாரும் தடுக்கவும் முடியாது. என்.எல்.சி.யின் பங்குகளை வாங்கும் தமிழக அரசுத்துறை நிறுவனங்கள் அவற்றைப் பங்குச் சந்தையில் விற்கவோ, ஒரு ஆண்டுக்குப் பிறகு வேறு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு விற்கவோ எந்தத் தடையும் கிடையாது. இதை என்.எல்.சி. நிர்வாகம் கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது.
இம்மோசடியை மூடிமறைத்து, “எனது தலைமையிலான அரசின் தொடர் நடவடிக்கையாலும், எனது தனிப்பட்ட முயற்சியாலும் என்.எல்.சி. பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது தொழிலாளர் போராட்டத்துக்கும் தமிழக மக்களின் ஒருமித்த குரலுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி” என்று தனக்குத்தானே பாராட்டியும் கொண்டார் ஜெயா. அத்துடன் அப்பிரச்சினை முடிவுக்கு வந்தது.
தற்போது கார்பரேட்களின் ’வளர்ப்புப் பிராணியான’ மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை சிறிது சிறிதாக தனியாரிடம் தாரை வார்க்கும் முயற்சியாக, சுரங்கப் பணிகள் உள்ளிட்ட அனைத்தையும் அயல் பணி ஒப்பந்தம் மூலம் நிறைவேற்றி வருகிறது.
நடப்பு நிதியாண்டில் என்.எல்.சி. நிறுவன பங்குகள் 20 சதவீதம் விற்பனை செய்வதற்கும் மோடி அரசு திட்டமிட்டு ஆட்குறைப்பு, சம்பள வெட்டு, வேலை நாட்கள் குறைப்பு என்று தொடர்ந்து தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது மோடி அரசு.
என்.எல்.சி. நிறுவனப் பங்குகளில் 89.32% பங்குகள் மத்திய அரசிடம் உள்ளன. 4.06% வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமும், 3.91% பங்குகள் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களிடமும், 0.96% பங்குகள் காப்பீட்டு நிறுவனங்களிடமும் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் மத்திய அரசிடம் 75 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கக் கூடாது என எடுக்கப்பட்ட கொள்கை முடிவின் அடிப்படையில்தான் பங்குகள் விற்கப்படவுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய அரசின் இந்த கொள்கை முடிவே பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் சதிச் செயல்தான்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் நிறுவனத்தின் 2012 – 13 -ம் ஆண்டுக்கான நிகர லாபம் ரூ. 1,479 கோடி. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 3.5 சதவீதம் அதிகம். கடந்த (2016-17) 31.03.2017 அன்றுடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ.2,342.20 கோடியை நிகர லாபமாக பெற்று இதுவரை இல்லாத அளவில் சாதனை படைத்துள்ளது.
அதாவது, கடந்த 2016 – 17 நிதியாண்டில்ரூ. 8,672.84 கோடி வர்த்தகம் மேற்கொண்டுள்ளது.
இது 2015 – 16 -ம் ஆண்டின் வர்த்தகத் தொகையான ரூ. 6,652.5 கோடியை விட 30.38 சதவீதம் அதிகம். மொத்த வருவாயாக ரூ. 9,347.25 கோடியை ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது 2015 – 16ஆம் ஆண்டின் மொத்த வருவாயான ரூ. 7,177.20 கோடியை விட 30.24 சதவீதம் அதிகம். வரிக்கு முந்தைய லாபமாக ரூ. 3,027.56 கோடியை ஈட்டியுள்ளது.
2015-16 -ம் ஆண்டின் வரிக்கு முந்தைய லாபத் தொகையான ரூ. 1,856.7 கோடியை விட 63.12 சதவீதம் அதிகம். இந்த லாபத்தில் பெரும்பகுதி மத்திய அரசுக்கு ஈவுத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர்களின் குருதி சிந்திய உழைப்பில் இந்நிறுவனம் அபார வளர்ச்சியை நோக்கித் தான் சென்று கொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் மைய அரசு ஏன் பங்குகளை விற்க வேண்டும்?
தொழில் நிறுவனங்களை அரசு நடத்தக்கூடாது; அனைத்தையும் சந்தையின் கட்டுப்பாட்டில் விட்டுவிட வேண்டும் – என்பது தான் தனியார்மயக் கொள்கையின் தாரக மந்திரம். தொழில் நிறுவனங்களையும் அவற்றின் சந்தை வர்த்தக நடவடிக்கைகளையும் நாடாளுமன்றமோ, அரசாங்கமோ கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருக்கக் கூடாது; மாறாக தகுதியான, நேர்மையான, நிர்வாக நுணுக்கங்களை அறிந்துள்ள அதிகார வர்க்க நிபுணர்களிடம், துறை சார்ந்த வல்லுநர்களிடம் அதிகாரத்தை அளிப்பதன் மூலம்தான் வளர்ச்சியைச் சாதிக்க முடியும் – என்பதுதான் புதிய தாராளமயக் கொள்கையின் அடிப்படை விதி.
இதன்படி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் – என அடுத்தடுத்து உருவாக்கப்பட்ட இத்தகைய அமைப்புகள் அனைத்தும் ஏற்கெனவே பெயரளவில் இருந்த அரசாங்கக் கண்காணிப்புகளை ஒழித்துக்கட்டி, முழுவதும் தனியார் முதலாளிகளின் சூறையாடலுக்கு ஏற்ப இயங்க ஆரம்பித்தன. இந்த ஒழுங்குமுறை ஆணையங்களும் வாரியங்களும் தீர்மானிக்கும் விதிகளைத்தான் யார் பிரதமராக இருந்தாலும், எந்தக் கூட்டணி அரசாங்கமாக இருந்தாலும் பின்பற்ற வேண்டும் என்பதே தனியார்மயத்தின் பொதுவிதி .
இவை ஒருபுறமிருக்க, மோடி அரசின் அடுத்தடுத்த தாக்குதல்களால் நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. (அதே சமயம் அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு அபாரமாக உயர்ந்துள்ளது என்பதை கவனிக்கவும். அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா சொத்து மதிப்பும் 16,000 மடங்கு அதிகரித்துள்ளது).
இந்த வீழ்ச்சியை தூக்கி நிறுத்தவே, மத்திய அரசு நான்கு டிஃபென்ஸ் நிறுவனங்களின் 25 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி நான்கு டிஃபென்ஸ் நிறுவனங்களான மசகான் டாக் லிமிடெட், பாரத் டைனமிக்ஸ் லிமிடெட், கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ், மிஷ்ரா தத்து நிகம் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் 25 சதவிகித பங்குகள் பொது விற்பனைக்குவிட ஏற்பாடு செய்யப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், பல்வேறு அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய நடவடிக்கையும் எடுத்து வருகிறது. இதன் மூலம் இந்த நிதி ஆண்டில் ரூ.72,500 கோடி நிதித்திரட்ட உள்ளது. ஏற்கனவே ரூ.49,759 கோடி வருவாய் ஈட்டியுள்ள நிலையில் மீதமுள்ள தொகையை வரும் மார்ச்சுக்குள் திரட்ட முடிவெடுத்துள்ளது. அந்த இலக்கை நிறைவேற்றவே தற்போது என்.எல்.சி. -யின் 15% பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்த தொகை மட்டும் பல இலட்சம் கோடி இருக்கும். இதுபோக பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் தொகையில் 73% முதலாளிகளிடமிருந்து வசூலிக்காமல் அவர்களுக்கு தேவையான வசதிகளையும் செய்து தரும் இந்த அரசு, என்.எல்.சி. -யின் 15% பங்குகளை வெறும் ரூ.2,500 கோடியை திரட்டுவதற்காக தனியாரிடம் விற்கத் துடிக்கிறது.
இப்படித்தான் மாருதி நிறுவனத்தில் 50 சதவீதப் பங்குகளைக் கொண்டிருந்த இந்திய அரசு, பா.ஜ.க. ஆட்சியின்போது பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்கிறோம் என்ற பெயரில் ஜப்பானிய ஏகபோக சுசுகி நிறுவனத்திடம் விற்றது. இப்போது மாருதி முழுக்கவும் சுசுகியின் ஆதிக்கப் பிடிக்குள் சென்றுவிட்டது.
என்.எல்.சி. போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை படிப்படியாக விற்று நாட்டையே தனியார்மயமாக்கி விடலாம் என நினைக்கிறது மோடி கும்பல். எப்படியிருப்பினும் இது மோடி-கார்ப்பரேட் கூட்டணிக்கு லாபம் தான். ஆனால் இந்நாட்டின் உரிமைதாரர்களாகிய நமக்கு ?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
நவம்பர் புரட்சியின் நூறாண்டு இது. ரசியாவில் 1917 -ல் நடந்த புரட்சி என்பது பூவுலகில் முதல் முறையாக உழைக்கும் மக்களின் அரசை நிறுவியது. அதிகாரத்தில் மட்டுமல்ல, இன்றைக்கு பேசப்படும் அத்தனை நலத்திட்டங்களுக்கும் சோவியத் அரசுதான் முன்னோடி. அங்கே மருத்துவத்துறையில் மக்களுக்கான சுகாதாரம் என்பது எப்படி நடைபெற்றது என்பதை பார்ப்போம்.
நோய் தடுப்பு, தகுதி பெற்ற மருத்துவர்கள் மூலம் உயர்ந்த சிகிச்சை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல் ஆகிய இரண்டு அடிப்படைகளை சோவியத் மருத்துவம் கொண்டிருந்தது.
உலகிலேயே முதல்முறையாக, சோவியத் குடிமக்கள் தான் இலவச மருத்துவ வசதியை அனுபவித்தனர். மருத்துவ ஆலோசனை முதல், அறுவை சிகிச்சை வரை அனைத்துமே இங்கு இலவசம் தான். ஒவ்வொரு நகரத்திலும் பத்துக்கும் குறையாத மருத்துவ மையங்கள் இருந்தன. தேவைக்கேற்ப இவற்றின் எண்ணிக்கை அதிகரித்தன.
இலவச மருத்துவத்தின் மூலம் கொடுக்கிற காசுக்கேற்ற வைத்தியம் என்ற ஏற்றத் தாழ்வை ஒழித்துக் கட்டியது சோவியத் அரசு. விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆம்புலன்சாக பயன்படுத்தப்பட்டன. பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் இதன் பிறகு மருத்துவத்தை இலவசமாக்கின.
அனைத்து வகையான இலவச மருத்துவ உதவிகளையும் பெறும் உரிமை (சோவியத் சட்டத்தின்படி சோவியத் குடிமக்கள் மட்டுமின்றி சோவியத்தில் இருக்கக்கூடிய வெளிநாட்டவர்களுக்கும் இலவச மருத்துவ சேவை வழங்கப்பட்டது) முதியவர்களுக்கான ஓய்வுரிமை ஆகியவை அடிப்படை உரிமைகளாக வகுக்கப்பட்டிருந்தவற்றுள் ஒரு சில மட்டுமே, இன்னும் பல்வேறு அடிப்படை உரிமைகள் சட்டங்களாக இயற்றப்பட்டிருக்கின்றன.
இந்த உரிமைகளை உறுதி செய்யும் வகையிலும், இந்த உரிமைகளை மக்களிடமிருந்து பிறர் பறிக்க முடியாதவாறும், அப்படி பறிக்க எத்தனிப்போருக்கு கடுமையான தண்டனைகளையும் சோவியத் சட்டங்கள் உறுதி செய்தன.
ஆலைத்தொழிலாளருக்கான மருத்துவ வசதிகள்
ஆலைகள் கம்யூனிச சித்தாந்தங்களின் கோட்டை என்று கருதப்பட்டன. இது மட்டுமன்றி ஒவ்வொரு ஆலைகளுமே உடல்நலம் பேணும் மருத்துவமனைகளாக மாற்றப்பட வேண்டுமென்பதே சோவியத்தின் முக்கிய குறிக்கோளாக இருந்தது.
மருத்துவ வசதிகள் என்றதும் நோய்களுக்கு மட்டும் சிகிச்சை அளிப்பது என்று கருதாமல் வேலை, ஓய்வு, கலாச்சார வளர்ச்சி என்ற எல்லா அம்சங்களையுமே மருத்துவத்தின் அங்கமாகக் கருதினர். ஏனெனில் ஏற்றத்தாழ்வான சமூகத்தின் மனநலத்தை பாதிக்கும் அம்சத்தை கலையால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்ற புரிதல் அவர்களுக்கு இருந்தது.
நோயாளிகளின் நோயின் தன்மையைப் பொருத்து கீழ்க்கண்ட மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு அதனடிப்படையில் சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
புற நோயாளிகள் மருத்துவமனை
பரிசோதனை வசதிகள் கொண்ட மருத்துவமனை
காச நோய் மற்றும் பாலியல் சிகிச்சை தொடர்பான மருத்துவமனை
பல் நோக்கு வசதிகள் கொண்ட மருத்துவமனை
பல்கலைக்கழக மருத்துவமனை
காச நோய்க்கான சிறப்பு மருத்துவமனை
சிறப்பு இரவு நேர காச நோய் மருத்துவமனை
இரவு நேர காச நோய் மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கு பாதுகாப்பான உணவும், உறங்கும் வசதிகளும் செய்து தரப்பட்டன. ஒவ்வொரு மருத்துவமனையிலும் 60 படுக்கைகள் வரை இருந்தன. நோயின் தன்மையைப் பொருத்து ஒவ்வொருவருக்கும் இலகுவான சில வேலைகள் தரப்பட்டன; 6 முதல் 7 மணி நேரம் வேலை செய்து பின்னர் ஓய்வெடுத்துக் கொள்ள வசதிகள் செய்யப்பட்டன.
ஆலைகளுக்கு வேலை செய்யப்போகும் தொழிலாளர்கள் இது போன்ற இடங்களில் குளியலறை வசதிகள் செய்து தரப்பட்டன. நோய்த்தடுப்பூசிகளும் இங்கே போடப்பட்டன. தொழிலாளிகள் இங்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ளலாம். இதற்கென்று சிறப்பு மருத்துவர்களும் பணியமர்த்தப்பட்டனர்.
ஆலை வளாகத்துக்குள் இருந்த வெவ்வேறு உற்பத்திக் கூடங்களில் பெரும்பாலும் பெண் மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டனர். முதலுதவி அளிப்பது இவர்களின் பிரதான வேலையாகும். ஆலை மருத்துவர்களின் பரிந்துரைகளின் பேரில் சோதனைகள் செய்து ஒவ்வொருவரைப் பற்றியும் தரவுகளைப் பராமரிப்பது இவர்களின் பணியாகும். முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களைப் பற்றிய தகவல்களும் ஆலை மருத்துவருக்குத் தெரிவிக்கப்படும். அடிக்கடி நோய்வாய்ப்படும் தொழிலாளிகள் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர்.
மருத்துவர்கள் மட்டுமல்லாது ஆலை நிர்வாகக் குழுவும் மருத்துவர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்வார்கள். நோயின் தன்மை அதிகரிக்கும் பட்சத்தில் வேலை செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு சிறப்பு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
நோய்க்கான சிகிச்சை மட்டுமன்றி மனநல ஆலோசனைகளும் கூடுதலாகத் தரப்பட்டன. நோயினின்று தற்காத்துக் கொள்ளும் ஆலோசனைகளும் மருத்துவர்களால் வழங்கப்பட்டன.
குழந்தைகள் மற்றும் இளையோருக்கான சிகிச்சை
குழந்தைகளுக்கான மருத்துவம் என்பது சிகிச்சை என்பதை தாண்டி பல்வேறு வகைகளில் விரிவடைந்திருந்தது. குழந்தைகள் நல மையத்தில் தொடங்கி, திறந்த வெளிப் பள்ளிகள் மற்றும் கோடை கால சிறப்பு முகாம்கள் வரை மருத்துவப் பராமரிப்பு நீண்டிருந்தது.
இவற்றின் தரம் இங்கிலாந்தில் உள்ள உயர்வகுப்பினர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் குழந்தைகளுக்காக நடத்தப்பட்டு வந்த உறைவிடப்பள்ளிகளின் தரத்திற்கு இணையாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் அதைவிட மேம்பட்ட வழிகளில் செழுமையடைந்திருந்தது.
கம்யூனிஸ்டுகளின் முதலாவது அகிலத்தில் உரையாற்றிய மார்க்ஸ், கம்யூனிச சமூகத்தில் தாய் சேய் நலப் பராமரிப்புகளின் முக்கியத்துவம் குறித்து ஆற்றிய உரை சோவியத்தில் கண்கூடாக நிறைவேற்றியது.
மாவட்ட ரீதியாக அமைக்கப்பட்டிருந்து குழந்தைகள் நல மையங்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறப்பு மருத்துவமனையோடு எளிதில் தொடர்பு கொள்ளும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தன. சிகிச்சைக்குக் கொண்டு வர முடியாத குழந்தைகளுக்கு வீட்டிலேயே சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. குழந்தை வளர்ப்பு மையங்களும், குழந்தைகள் நல மையங்களும் ஒருங்கே இணைக்கப்பட்டிருந்தன.
சோவியத் சமூகத்தின் சமூக மயமாக்கப்பட்ட உடல் நலம் என்ற நூலின் ஆசிரியர் திருமதி. ஆலிஸ் ஃபீல்டு குறிப்பிடுகையில், 1931 -ம் ஆண்டு மாஸ்கோ நகரத்தில் மட்டும் 35 குழந்தைகள் நல மையம் அமைந்திருந்தது. இவையனைத்திலும் பால் பொருட்கள் எந்நேரமும் கிடைக்கும் வசதி செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரும் மையத்திலும் ஒரு வருடத்திற்கு 7,000 குழந்தைகள் வரை பயனடைந்தனர். அங்கிருந்த மருத்துவ அதிகாரிகள் 40,000 முறை பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்குச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களைப் பொருத்தவரை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டன. ஒன்று நிரந்தரமாக இயங்குபவை மற்றொன்று தற்காலிக நோக்கங்களுக்காக இயங்குபவை. 1927 முதல் 1932 வரை சோவியத்தில் இயங்கி வந்த குழந்தைகள் மையங்கள் குறித்த புள்ளிவிவரம்.
குழந்தைகள் மையங்களில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை
(ஆயிரங்களில்)
வருடம்
1927-28
1931
1932
நகரம்
34
129
263
கிராமம்
நிரந்தரமானவை
2.5
103
329
தற்காலிகமானவை
101
1426
3501
பிறந்து ஒரு மாதம் மற்றும் இரண்டு மாதமான குழந்தைகள் அங்கே அனுமதிக்கப்பட்டன. மூன்று வயதிலிருந்து அதிகபட்டம் ஐந்து வயது வரை இங்கே அவர்கள் பராமரிக்கப்பட்டனர். உள்ளே அனுமதிக்கப்படும் குழந்தைகள் பிரத்தியேகமான சோதனைக்குட்படுத்தப்பட்டு ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் குழந்தைகள் தாயுடன் வீட்டிற்குத் திருப்பியனுப்பப்பட்டு கூடவே ஒரு மருத்துவரும் அனுப்பி வைக்கப்படுவார்.
அந்த மருத்துவர் அங்கே சென்று அந்தக் குழந்தைக்குச் சிகிச்சை அளிப்பதோடு மட்டுமன்றி அந்தக் குழந்தை பிறந்த இடம், பெற்றோரின் உணவுப்பழக்கம் உள்ளிட்ட தகவல்களைச் சேமித்து வருவார். உடல் நிலை சரியான பின் அந்தக் குழந்தை பராமரிப்பு மையத்திற்குள் அனுமதிக்கப்படும்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் அந்தக் குழந்தையின் தாய் ஒரு நாளைக்கு மூன்று முறை தாய்ப்பாலூட்ட அனுமதி உண்டு. குழந்தைகள் வயதை வைத்து மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு பராமரிக்கப்படுவர். சிறந்த உணவுகள், சுகாதாரமான சூழ்நிலை மற்றும் குழந்தைகளை சுயசார்புள்ள சோவியத் குடிமக்களாக மாற்றும் பொறுப்பை அங்கு உள்ள நிர்வாகிகள் உறுதிசெய்வார்கள்.
இளைஞர், இளம்பெண்களுக்கு என்று சிறப்புத் திட்டங்கள் சோசலிச ரஷ்யாவில் வகுக்கப்பட்டன. குறிப்பாக குடியுரிமைச் சட்டம் குறித்த வகுப்புக்கள் பரவலாக எடுக்கப்பட்டன. ஆண் பெண் பாகுபாடின்றி வகுப்புக்கள் அனைவருக்கும் சரிசமமாக வகுப்புக்கள் எடுக்கப்பட்டன.
இளைஞர், இளம்பெண்களிடையே போதைப்பொருள், மதுப்பழக்கம் குறித்த பிரச்சாரங்கள் பரவலாக எடுத்துச்செல்லப்பட்டன. உடற்கல்வி மற்றும் மனவளம் குறித்த வகுப்புக்கள் மாதந்தோறும் எடுக்கப்பட்டன. வருடாந்திர வகுப்புத் திட்டங்களும் போடப்பட்டு செயல்படுத்தப்பட்டன.
பெண்களுக்கான மகப்பேறு கால மருத்துவ சேவைகள்
ஐரோப்பாவிலுள்ள இதர நாடுகளைக் காட்டிலும் சோவியத்தில் தான் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகமாகும். தாய்-சேய் நலத்திட்டத்திற்கென்று சோவியத் யூனியனில் சிறப்பு நிதிகள் ஒதுக்கப்பட்டது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கென்று பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன.
1929 -ம் ஆண்டு வாக்கில் குழந்தைகள் பிறப்பு விகிதம் (1,000 பேர் கொண்ட மக்கள் தொகையில் ) 38.6 சதவீதமாகவும் அதே நேரத்தில் இறப்பு விகிதம் 20.6 சதவீதமாகவும் குறைந்தது.
பெண்களுக்கு அவர்கள் கருவுற்றிருக்கும் காலங்களில், குழந்தை பிறப்பதற்கு முன்னால் 52 நாட்களுக்கும், குழந்தை பிறந்த பிறகு 52 நாட்களுக்கும் முழுமையான ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகைகளும் பல்வேறு சலுகைகளும் அளிக்கப்பட்டன. கர்ப்பகாலத்தில் வீடு தேடி வந்து மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவர்களுக்கான சத்துணவு மிகக் குறைந்த விலைகளில் விற்கப்பட்டன. அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சம உரிமை என்பதால் பெண்கள் நாட்டின் அனைத்துத் துறையிலும் தலைசிறந்து விளங்கினர்.
இன்றைக்கு பல்வேறு நாடுளில் இருக்கும் சுகாதாரத் துறையின் முன்னோடியே சோவியத் அரசாங்கம்தான். இன்றும் கூட அமெரிக்காவில் ஊதியத்துடன் கூடிய பிரசவ கால விடுமுறை என்பது சட்டப்பூர்வமாக இல்லை. காப்பீடு மூலமே சிகிச்சை பெற முடியும் என்பதால் பல அமெரிக்க மக்கள் நோயோடு சாவை எதிர்நோக்கி இருக்கும் அவலத்தை மைக்கேல் மூரின் சீக்கோ ஆவணப்படம் அம்பலப்படுத்தியது.
நவம்பர் புரட்சி ஒன்றில்லாமல் இந்த உலகம் கடைத்தேற வழியில்லை!
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
சீர்காழி தாலுகா மாதனம் தொடக்க வேளாண்மை வங்கிக்கு உட்பட்ட பச்சைபெருமாநல்லூர், மகாராஜபுரம், உமையாள்பதி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட விவாசாயிகள் பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி மாதனம் தொடக்க வேளாண்மை கடன் சங்கம்(லிட்) முன்பு 26.10.2017 வியாழன் அன்று காலை 11 மணிக்கு மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது தனது கண்டன உரையில் தோழர் ரவி “பச்சைபெருமாநல்லூர், மகாராஜபுரம், உமையாள்பதி ஆகிய கிராமங்களில் விவசாயிகள் பயிர்காப்பீடு பதிவு செய்தும் இதுவரை காப்பீடு வழங்கப்படவில்லை. குறிப்பாக பச்சைபெருமாநல்லூர் கிராம விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு இது வரை அறிவிக்கவும் இல்லை. இது தொடர்ப்பாக நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் அவர்களிடம் விவசாயிகள் மனுக்கொடுத்து காப்பீடு வழங்க கேட்டபோது என்னால் ஒன்றும் செய்ய முடியாது. கடவுளிடம் தான் சொல்ல வேண்டும் என்றார்.
சீர்காழி வட்டாட்சியர் பாலமுருகனிடம் மனுகொடுத்து முறையிட்டபோது ஆவன செய்வதாக சொன்னார். தொடக்க வேளாண்மை கடன் சங்க செயலர் மேகவண்ணனிடம் கேட்டபோது எங்களுக்கு தெரியாது என்கிறார். மூன்று மாதமாக அரசு அலுவலகங்களில் அலைந்தும் பயனில்லை இதற்கெல்லாம் காரணம் கடவாசல் வேளாண்மை விரிவாக்க அலுவலர் சுரேஷ் சம்மந்தபட்ட அலுவலகத்தில் கணக்கை கொடுக்காதது தான் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே பச்சை பெருமாநல்லூர் உள்ளிட்ட கிராமத்திற்கு உடனடியாக பயிர் காப்பீடு வழங்க வேண்டும்! இல்லையென்றால் இதே இடத்தில் தொடர் போராட்டத்தை அறிவித்து நடத்துவோம்” என்று எச்சரித்து கண்டன உரையை நிறைவு செய்தார்.
விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பிகாபதி பேசுகையில்; “உடனடியாக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும். அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மக்கள் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். மூன்று மாத காலமாக போராடியும் காப்பீடு தர மறுக்கிறது இந்த அரசு. விவசாயிகள் சாகுபடிக்கு இன்னும் புதுமணியாற்றில் இதுவரை தண்ணீர் விட மறுக்கிறார்கள். இந்த அரசு கட்டமைப்பு மக்களுக்கு எதிராக மாறிவிட்டது ஆகையால் அனைத்து கிராமங்களிலும் மக்கள் கமிட்டி அமைப்போம், அதிகாரத்தை கையில் எடுப்போம்” என்று கூறி முடித்தார்.
விவசாயிகள் விடுதலை முன்னணியின் வட்ட அமைப்பாளர் தோழர் ஸ்டாலின் பேசுகையில் “மூன்று மாத காலமாக மாதனத்தை சுற்றியுள்ள ஐந்து கிராமங்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. இது சம்பந்தமாக விவசாயிகள் பலமுறை போராடியும் பலன் இல்லை. இந்த அரசு கட்டமைப்பு தோற்றுவிட்டது அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் உள்ள பிரச்சனை பற்றிதான் ஊடகங்களில் விவாதம் நடக்கிறது மக்களை பற்றி கவலை இல்லை” என்று கூறினார் .
போலீசும் மக்கள் போராட்டங்கள் எங்கு நடந்தாலும் மக்களை போராட விடாமல் தடுப்பதும், கந்து வட்டிகாரனுக்கு மாமா வேலை பார்ப்பதும், அரசு அதிகாரிகளைப் பாதுகாப்பதும், அவர்கள் கொள்ளை அடித்து வைத்திருக்கும் சொத்தை காவல் காக்கவும் தான் செய்கிறார்கள். மக்களை பாதுகாக்க வக்கற்ற இந்த அதிகார வர்க்கத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டும். மக்கள் நாம் அனைவரும் அமைப்பாக இருந்தால்தான் இவர்களின் சட்டையை பிடித்து கேள்வி கேட்க முடியும். ஆகையால் ஒன்றுசேர்ந்து கிராமம்தோறும் மக்கள் அதிகாரத்தினை நிறுவுவோம்” என்று கூறி முடித்தார்.
இறுதியாக தோழர் வீரசோழன் நன்றியுரை கூறி முடித்தார். இப்போராட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், சீர்காழி.
_____________
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி சார்பாக விருத்தாசலம், நெல்லிக்குப்பம் கோட்டங்களில் கொடியேற்று விழா!
தமிழக அரசின் மின் துறையில் மத்திய சங்கங்கள், திராவிட, சாதிய சங்கங்கள் என கணக்கற்ற வகையில் பல சங்கங்கள் இருந்தாலும், அத்துறையில் பணிபுரியும் ஊழியர்களின் உரிமை பறிப்புகளையோ, லஞ்சம், ஊழல் முறைகேடுகளையோ, மின் துறைச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் திணிக்கப்படும் கார்ப்பரேட் கொள்கைகளையோ எதிர்த்து முறியடிக்க திராணியற்ற சங்கங்களாகவே உள்ளன.
மின் துறையில் உள்ள மிகப்பெரிய சங்கமான சி.ஐ.டி.யூ. சங்கத்தின் சமரசப் போக்குகளால் அதிகரித்து வரும் வேலைப் பளு, ஊதியப் பிரச்சினை போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் கூட தீர்க்கப்படாத நிலையில் கடந்த 19.03.2017 அன்று பு.ஜ.தொ.மு. இணைப்புச் சங்கமான தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி தொழிற்சங்கம் கடலூர் மின் வட்டத்தில் கொடி அறிமுகத்துடன் உதயமானது.
அதன் தொடர்ச்சியாக கடந்த 25.09.2017 அன்று நெல்லிக்குப்பம் கோட்டத்திலும், 10.10.2017 அன்று விருத்தாசலம் கோட்டத்திலும் கொடியேற்று விழா நடத்தப்பட்டது
நெல்லிக்குப்பம் கோட்டத்தில், தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணியின் கடலூர் மாவட்டப் பொருளாளர் தோழர் ஜோதிபாசு தலைமையில் கொடியேற்று விழா நடந்தது. விழாவில் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஸ்ரீதர் அவர்கள் கொடியேற்றி துவக்க உரையாற்றினார்.
புஜதொமு இணைப்பு சங்கமான நெல்லிகுப்பம் லோட்டே மிட்டாய் ஆலைத் தொழிலாளர்கள் சங்க செயலாளர் தோழர் கந்தசாமி, தமிழ்நாடு புஜதொமு மாநில இணைச் செயலாளர் தோழர். பழனிசாமி, புதுச்சேரி புஜதொமு மாநில பொதுச் செயலாளர் தோழர் லோகநாதன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் தோழர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
விருத்தாசலம் கோட்டத்தில், தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணியின் கடலூர் மாவட்டத் தலைவர் தோழர் சண்முகம் தலைமையில் கொடியேற்று விழா நடந்தது. விழாவில் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஸ்ரீதர் அவர்கள் கொடியேற்றி துவக்க உரையாற்றினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ மற்றும் புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் லோகநாதன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
பஞ்சப்படியைக் குறைக்கும் மின்வாரியத்தைக் கண்டிப்பது, வேலைப்பளுவற்ற ஊதிய உயர்வைப் பெறுவது, ஊதிய உயர்வுப் பிரச்சினையை திசைதிருப்ப பணியிட மாற்றம் என்ற நிர்வாகத்தின் தந்திரத்தை முறியடிப்பது, 30,000 -த்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை, தற்போதுள்ள ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஐ.டி.ஐ. – டிப்ளமோ படித்த அப்ரண்டீஸ் முடித்த இளைஞர்கள் மூலம் நிரப்பி, மக்களுக்கான சேவையைத் தொய்வின்றி நடத்த நிர்வாகத்தை வலியுறுத்திப் போராடுவது ஆகிய கோரிக்கைகளை விளக்கி தோழர்கள் உரை நிகழ்த்தினர்.
மின் துறையில் அதிகரித்து வரும் வேலைப்பளு, ஊழியர்கள் பற்றாக்குறை, ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் தொழிலாளர்கள் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல; அவை அரசின் மக்கள் விரோதக் கொள்கையுடன் இணைந்தது. மக்கள் பிரச்சினைகளுடன் இணைந்தது. மேலும், இதை எதிர்கொள்ள தொழிலாளர் ஒற்றுமை என்பது மட்டுமல்ல, உழைக்கும் மக்களுடன் இணைந்த வர்க்க ஒற்றுமை தான் தேவை என்பதை பல்வேறு உதாரணங்களுடன் தோழர்கள் தங்களது உரையில் விளக்கினர்.
மின் துறையில் உள்ள பிரச்சினைகளை, இலவச மின்சாரம், மீட்டர் பொருத்துவது என்பன போன்ற விவசாயிகள் பிரச்சினையுடன் இணைத்துப் பேசியது தொழிலாளர் மத்தியில் அல்லாது, பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது.
எனவே, மின் துறையில் உள்ள பிரச்சினைகளை, உழைக்கும் வர்க்கப் பிரச்சினைகளோடு இணைத்துக் கொண்டு செல்லும் அரசியல் போராட்டங்கள் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்பதை தொழிலாளர்கள் தெளிவு பெறும் வகையில் அமைந்தது இந்த கொடியேற்று விழா நிகழ்ச்சிகள்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி. தொடர்புக்கு: 95977 89801
_____________
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
பேருந்து கட்டண உயர்வு : மக்களை அழிக்கின்ற நாசவேலையில் பேடியும் – ‘சாமி’ களும் ஒண்ணு!
இந்த ஆண்டு தீபாவளி புதுச்சேரி மக்களுக்கு இரட்டைக் கசப்பை அளித்திருக்கிறது. தீபாவளி வெடிகளின் சத்தத்தில் எவ்வித முன்னறிவிப்பின்றி திருட்டுத்தனமாக பேருந்து கட்டணத்தை 100% அளவிற்கு உயர்த்தியிருக்கிறது நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி காங்கிரசு அரசு. தீபாவளி செலவுகளின் கலக்கத்திலும், பண்டிகையின் இறுக்கத்திலும் இருந்த மக்கள், அடுத்த நாள் தங்களது அன்றாட வேலைக்காக பேருந்தில் ஏறிய பின்னர் தான் கட்டணக் கொள்ளை இடியாய் இறங்கியது.
புதுச்சேரியின் கவர்னராக ஆர்.எஸ்.எஸ் -ன் அடியாள் கிரண்பேடி கவர்னராக பதவியேற்ற போது அவருக்கு ஒளிவட்டம் போட்ட ஊடகங்களும், கட்சிகளும் இன்று அதிகாரத்துக்கான நாய்ச் சண்டையைப் பற்றித்தான் பக்கம் பக்கமாகப் பேசி வருகிறார்கள். இந்த அதிகாரச் சண்டையில் மக்களின் பிரச்சினைகளை பற்றிப் பேசுவதற்கு கவர்னருக்கும், முதல்வருக்கும் நேரமில்லை.
கோப்புகளில் கையொப்பமிடாமல் தேக்கி வைத்திருக்கிறார் என்று அமைச்சர் கந்தசாமியும், முதல்வர் நாராயணசாமியும் சொல்வதும், எவ்வித கோப்புகளும் வரவில்லை என்று கிரண்பேடி சொல்வதும் என சிறுபிள்ளை விளையாட்டாய் மாறிப் போயுள்ளது புதுச்சேரி அரசு. ஆனால் இப்படி மக்கள் பிரச்சினைகளை வைத்து விளையாடும் இவர்கள், தனியார் பஸ் முதலாளிகளின் கோரிக்கையை ஏற்று, மக்களைக் கொள்ளையடிக்க ஓரணியில் நின்று அனுமதி அளித்துள்ளனர்.
இந்த தீவட்டிக் கொள்ளையை எதிர்த்து அனைத்து ஓட்டுக் கட்சிகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து போராட்டங்கள் நடத்தின. ஆளும் காங்கிரசின் கூட்டணிக் கட்சியான திமுக, தங்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவித்தது தவறு எனவும், அதைத் திரும்பப் பெற்று, தங்களுடன் கலந்தாலோசித்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மனு கொடுத்து ‘கூட்டணி தர்மத்தை’ நிலை நாட்டிக் கொண்டது.
மக்களின் எதிர்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், கூட்டணியில் பிளவு ஏற்படுவது போன்ற சலசலப்புக்கள் ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதால், கூட்டணிக் கட்சியையும், பிற கட்சிகளையும் சமாளிக்கும் வகையில் ஒரு குழு அமைத்து மூன்று மாதத்திற்குள் முடிவெடுத்து கட்டண உயர்வை அறிவிப்பது என அறிவித்துள்ளது காங்கிரசு அரசு.
எனவே, காங்கிரசு அரசு அறிவித்த பஸ் கட்டண உயர்வு ரத்து என்பது தற்காலிகமே! நிரந்தர ரத்து செய்ய வீதியில் இறங்குவோம்! என்ற முழக்கத்தின் கீழ் 25.10.2017 அன்று மாலை 06.00 மணிக்கு புதுச்சேரியின் மையப் பகுதியான சுதேசி காட்டன் மில் அருகே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு, புதுச்சேரி புஜதொமு தலைவர் தோழர். சரவணன், தலைமை தாங்கினார். புஜதொமு பொருளாளர் தோழர். செல்லக்கண்ணு கண்டன உரையாற்றினார்.
தலைமையுரையில், மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்காமல் அதிகாரச் சண்டையிடும் முதல்வரும், கவர்னரும் மக்களைச் சுரண்டுவதிலும், முதலாளிகளுக்குச் சேவை செய்வதிலும் ஒரே அணியாக செயல்படுவதை அம்பலப்படுத்திப் பேசினார்.
ஆர்.எஸ்.எஸ்.-ன் சொம்பாக செயல்படும் கிரண்பேடி, மக்களை நேரில் சந்தித்து ஆய்வு நடத்துவது, இரவில் வாகனத்தில் சுற்றுவது போன்ற சில்லரை நடவடிக்கைகளையே சாதனைகளாக மார்தட்டிக் கொள்கிறார். அரசின் பல்வேறு துறை ஊழியர்கள் பல மாதங்களாக ஊதியமின்றி இருப்பதைப் பற்றியோ, டெங்குவால் கொத்து கொத்தாக மக்கள் சாவதைப் பற்றியோ பேச மறுக்கிறார்.
மோடியோ, புல்லட் ரயில் மக்களுக்கான திட்டம் என சரடு விடுகிறார். அவரைப் பொறுத்தவரை விமானத்தில் பயணிப்பவர்கள் தான் மக்கள். ஏனெனில் புல்லட் ரயில் கட்டணம் என்பது விமானக் கட்டணத்திற்கு நிகரான கட்டணம். இதைத்தான், இங்கு கிரண்பேடியும் செய்ய நினைக்கிறார் என தோழர் செல்லக்கண்ணு தனது கண்டன உரையில் அம்பலப்படுத்தினார்.
போலீசு உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும் கட்டண உயர்வு ரத்து செய்யப்பட்ட பின் ஆர்ப்பாட்டம் எதற்கு என்று கேள்வி எழுப்பிய நேரத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கட்டண உயர்வு ரத்து தற்காலிகம் தான் என்பதையும், அரசின் அனைத்து திட்டங்களும் மக்களின் வாழ்வை சீர்குலைப்பதாக உள்ளது எனவே, அந்தப் பிரச்சினைகளுடன் பஸ் கட்டண உயர்வையும் இணைத்து வீதியில் இறங்கிப் போராடும் போது மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும் என்ற வகையில் நடந்த ஆர்ப்பாட்டம் அங்கு நின்றிருந்த மக்கள், தொழிலாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி. தொடர்புக்கு: 9597789801
_____________
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
நடப்பு அரசியல் செய்திகளை படிக்கிறோம். அதை தொடர்ந்து நினைவு வைத்திருக்க முடியுமா? மோடி குறித்து ஒரு வினாடி வினா தயாரித்தால் அதில் வரலாறு, பொருளாதாரம், தலைவர்கள் வரலாறு என்று நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் மோடியின் கருத்துக்கள் பல பழம்பெருமை மற்றும் தற்பெருமை சார்ந்து தயாரிக்கப்படுவதால் பல பொய்களாக சிரிக்கின்றன. எனினும் நமக்கு அவை ஒரு அறிவுப் பயிற்சியைக் கொடுக்கும். முயன்று பாருங்கள்!
“மெர்சல்” படத்தில் தவறான விவரங்களை கூறிவிட்டார்கள், பொய் சொல்லியிருக்கிறார்கள் என்று பாஜக-வின் தமிழக தலைவர்கள்அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்று மிரட்டினார்கள். சரி, பிரதமர் மோடி சொன்ன பொய்களுக்காக ஆட்சியை நீக்கலாமா? இந்த வினாடி வினாவில் ஓரிரு பொய்களைத்தான் தந்திருக்கிறோம். அவற்றின் பட்டியல் மிகப்பெரியது!
வினாடி வினாவில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!
தனக்கு திருமணமாகிவிட்டது, மனைவியின் பெயர் யசோதாபென் என்பதை எந்த ஆண்டுத் தேர்தல் பிரமாண பத்திரத்தில் மோடி முதன் முறையாக குறிப்பிடுகிறார்?
2013 –ம் ஆண்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடி ஒரு வரலாற்றுப் பொய்யை வெளியிட்டார்? அது என்ன? (இத்தகவல் பொய் என்பதற்கு மொரார்ஜி தேசாயின் சுயசரிதையும், வீடியோ ஆதாரமும் இருந்தன. பிறகு மோடி அந்தப் பொய்யை பேசுவதில்லை.)
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் ஒரு ரூபாய், அமெரிக்காவின் ஒரு டாலருக்கு இணையாக இருந்ததாக 2013 ஜூலையில் அகமதாபாத் பொதுக்கூட்டத்தில் மோடி குறிப்பிட்டார். உண்மையில் அப்போது ரூபாய் மதிப்பு என்ன?
“இப்படி பொய் மேல் பொய் சொல்லும் ஒரு பிரதமரை எங்காவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என ஆவேசமடைந்த முதல்வர் யார்? (இந்த முதல்வரின் மாநிலத்திற்கு மத்திய அரசு 1.8 லட்சம் கோடி ரூபாய் கொடுத்ததாக மோடி பொய் சொன்னதற்காக ஆவேசப்பட்டார் அந்த முதல்வர்.)
2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில் 41% வாக்காளர்கள் பா.ஜ.கவிற்கு ஆதரவளிப்பதாக கருத்துக் கணிப்பை வெளியிட்ட பத்திரிகை எது?
2014 தேர்தலின் போது பீகாரில் உரையாற்றி மோடி, பீகாரிகள் அலெக்சாண்டரை கங்கைக் கரையில் வென்றவர்கள் என்று சொன்னார். உண்மையில் அலெக்சாண்டர் இந்தியாவில் எந்தப் பகுதி வரை வந்தார்?
2014 தேர்தலில் கோயிலை விட கழிப்பறைதான் முக்கியம் என பேசிய மோடி, குஜராத் அரசு சார்பாக வல்லபாய் பட்டேல் சிலை வைக்க ஒதுக்கிய தொகை என்ன?
2014 தேர்தலில் “எல்லாராலும் குஜராத்தை உருவாக்கி விட முடியாது. அதற்கு 56 அங்குல மார்பு தேவைப்படுகிறது” என்ற ‘புகழ்’ பெற்ற வாக்கியத்தை மோடி எந்த மாநிலத்தில் பேசினார்?
2014-ம் ஆண்டில் தி இந்து ஆசிரியராக இருந்த சித்தார்த்த வரதராஜன் (தற்போது தி வயர் நிறுவனர்) நீக்கப்பட்டதற்கு கீழ்க்கண்டவற்றில் ஒன்று மட்டும் தவறானது. அது எது?
2011-ம் ஆண்டில் மோடியை பிரதமர் பதவிக்கு சிபாரிசு செய்தவர் யார்?
2014 ஏப்ரல் பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் பா.ஜ.க கூட்டணிக்கு எத்தனை சதவீதம் கிடைக்கவில்லை?
தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விருதை – சிதம்பரம். தொடர்புக்கு – 97888 08110.
***
கடனை கட்டாதே கந்துவட்டிக்கு எதிராக கலகம் செய் !
தகவல் : மக்கள் அதிகாரம், சென்னை – 91768 01656.
_____________
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேச மாநிலங்களைத் தொடர்ந்து, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான இராஜஸ்தான், சத்தீஸ்கரிலும் விவசாயிகளின் போராட்டங்கள் நடந்து தணிந்திருக்கின்றன.
இராஜஸ்தான் மாநிலத்தில், மார்க்சிஸ்ட் கட்சி விவசாய சங்கத்தின் தலைமையில் நடந்த போராட்டம், 20 மாவட்டங்களில் அரசை முற்றிலும் முடக்கி, குறிப்பிடத்தக்க வெற்றியைச் சாதித்திருக்கிறது. உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், கடையடைப்பு போன்ற வழமையான போராட்ட வடிவங்களோடு நின்றுவிடாமல், ஆயிரக்கணக்கான விவசாயிகள் அரசின் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு, அங்கேயே சமைத்துச் சாப்பிட்டுத் தங்களது கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றும் வரை 14 நாட்கள் தொடர்ந்து போராடினர்.
ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அம்மாநில பா.ஜ.க. அரசு செத்துப் போய்விட்டதென அறிவித்து, இறுதிச்சடங்கு நடத்தப்படுகிறது.
இந்தப் போராட்டத்தின் மையமாக இருந்த சிகார் மாவட்டத்தை மற்ற மாவட்டங்களோடு இணைக்கும் சாலைகள் அனைத்திலும் நூற்றுக்கணக்கான தடையரண்களை அமைத்து, அந்தப் பகுதியை மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து துண்டித்ததன் மூலம் போராடும் விவசாயிகள் மீது அரசு தனது படைகளை ஏவி தாக்குதல் தொடுக்க முடியாதபடி தடுத்தனர். இது மட்டுமன்றி, பா.ஜ.க. அரசை நிர்பந்திக்கும் வகையில் மாநிலம் முழுவதும் இலட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்வது, சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது, மாடு விற்கத் தடைச் சட்டத்தை விலக்கிக் கொள்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளின் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
உரம், பூச்சிக் கொல்லி மருந்து, டீசல் போன்றவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், “அச்செலவை ஈடுகட்டும் வகையில் விளைபொருட்களின் விலை அதிகரிப்பதில்லை” எனக் கூறுகிறார், உத்தாராம் தோர் என்ற விவசாயி,
வங்கியில் தான் வாங்கிய கடனைச் செலுத்த இயலாததால், தனது சொத்துக்களை ஜப்தி செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறுகிறார், சேவாராம் என்ற விவசாயி.
முன்பெல்லாம் விவசாயிகள் பண நெருக்கடியில் இருந்தாலோ அல்லது வறட்சியின் காரணமாகப் பயிர்கள் கருகிப் போனாலோ, அவர்கள் முதலில் தங்களது மாடுகளை விற்றுப் பிரச்சினையைச் சமாளிப்பார்கள். ஆனால், இன்றோ மாடுகளை வாங்குவதற்கு வணிகர்கள் யாரும் முன்வருவதில்லை.
பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் திரண்டுள்ள இந்து மதவெறிக் குண்டர்கள் மாடுகளை வாங்கிச் செல்பவர்களைத் தாக்கிப் பணம் பறிப்பதோடு, அடித்துக் கொலையும் செய்கின்றனர். இவர்களுக்கு ஆதரவாக மாநில அரசு செயல்படுவதால் மாட்டுத் தரகர்கள் யாரும் மாடுகளை வாங்கி விற்க முன்வருவதில்லை. இதன் காரணமாக விவசாயிகள் தமது பண நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
அது மட்டுமன்றி, பால் வற்றிப் போன மாடுகளைப் பராமரிக்க முடியாமல், அவற்றை விவசாயிகள் அவிழ்த்து விடுவதால், அவை வயல்வெளிகளில் புகுந்து பயிர்களை மேய்ந்துவிடுகின்றன. மாடுகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க பகல், இரவு என எல்லா நேரத்திலும் ஒருவர் வயலில் காவல் காக்க வேண்டிய நிலைமை உருவாகி வருகிறது.
பால் வற்றிப் போன மாடுகளைப் பராமரிப்பதே விவசாயிகளுக்குப் பெரும் பொருளாதாரச் சுமையாக மாறிப் போயிருக்கும் நிலையில், மாநில அரசோ, பராமரிக்கப்படாமல் திரியும் மாடுகளின் உரிமையாளர்களைக் கண்டறிந்து தண்டிக்கப் போவதாக மிரட்டுகிறது. இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதன் காரணமாக, மாடு விற்பதைத் தடை செய்யும் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இப்போராட்டத்தின் மையமாக இருந்தது.
சதிஷ்கர் மாநிலம் – காங்கேர் நகரில் நடந்த விவசாயிகளின் சாலை மறியல்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு முதலில் செவி சாய்க்காத அரசு, போராட்டத்தை முடக்குவதற்கு போராட்டம் நடைபெற்ற மாவட்டங்களில் 144 தடையுத்தரவு பிறப்பித்ததுடன், அனைத்து வகையான போலீஸ் படைகளையும் குவித்து விவசாயிகளை அச்சுறுத்தியது. அதுமட்டுமன்றி, செல்போன் சிக்னல்களை முடக்கியதுடன், இணையதள சேவையை முடக்கியது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல விவசாயிகளின் உறுதியான போராட்டத்திற்கு சமூகத்தின் மற்ற பிரிவு மக்களிடமிருந்தும் ஆதரவு பெருகத் தொடங்கியது.
மோடி அரசின் பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி., ஆகிய நடவடிக்கைகள் விவசாயிகளையும், வணிகர்களையும், சமூகத்தின் எல்லாப் பிரிவு மக்களையும் ஒருசேரப் பாதித்துள்ளதால், விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் சமூகத்தின் அனைத்துத் தட்டுக்களைச் சேர்ந்த மக்களும் அவர்களோடு கைகோர்த்து அரசுக்கெதிராகக் களமிறங்கினர்.
வணிகர் சங்கங்கள், பால் விநியோகிப்பாளர்கள் சங்கம், நகர போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம், ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம், ஆட்டோ ஓட்டுனர் சங்கம், டெம்போ உரிமையாளர்கள் சங்கம், சத்துணவுப் பணியாளர் சங்கம் என 50-க்கும் மேற்பட்ட சங்கங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு உணவு, குடிநீர் என அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். அது மட்டுமன்றி, மாநிலம் தழுவிய அளவிற்குக் கடையடைப்பை நடத்தி, விவசாயிகளின் போராட்டத்திற்கு வலு சேர்த்தனர்.
விவசாயிகளின் போராட்டத்தின் முன் பணிந்து போவதைத் தவிர வேறு வழியில்லாத நிலையில், வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க. அரசு விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தி, 20,000 கோடி ருபாய் அளவிற்கு விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்திருக்கிறது.
சத்தீஸ்கரில் நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையாக 2100 ருபாய் நிர்ணயிக்க வேண்டும், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளின் போராட்டம் நடந்தது.
போராட்டத்தின் மையமாக இருந்த ராஜ்நந்கோன் மற்றும் கவர்தா மாவட்டங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு, விவசாய சங்கத் தலைவர்களும், அம்மாநில முதல்வர் ராமன் சிங்கின் வீட்டை முற்றுகையிடச் சென்ற 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் கைது செய்யப்பட்டனர். போலீசின் தொடர் அடக்குமுறை, கைதுகளின் காரணமாக சத்தீஸ்கரில் விவசாயிகள் போராட்டம் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது.
விவசாயிகளின் கோரிக்கைகள், பகுதிப் பிரச்சினையாகவோ, மாநிலப் பிரச்சினையாகவோ இல்லாமல், நாடு தழுவிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பதை இப்போராட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன. மேலும், இராஜஸ்தான் விவசாயிகளின் போராட்டமும், அதில் கிடைத்த வெற்றியும், விவசாயிகள் அரசிடம் கெஞ்சிக் கொண்டிராமல், ஆளுங்கும்பலை நிர்பந்திக்கும் வகையில் போராட்டங்களை நடத்துவதன் மூலம் மட்டுமே வெற்றியை ஈட்ட முடியும் என்பதை எடுத்துக் காட்டுகின்றன.
எனவே, அய்யாக்கண்ணு உள்ளிட்ட தமிழக விவசாய சங்கத் தலைவர்களும், அமைப்புகளும் தமது போராட்ட முறையை, வடிவங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்துவிட்டதை இனி யாரும் மறுத்துவிட முடியாது. ஏனென்றால், பாரம்பரிய விவசாயத்தை ஒழித்துக்கட்டி, விவசாயிகளை நிலத்திலிருந்து அப்புறப்படுத்தும் நோக்கத்தில் செயல்படும் அரசுகளை எதிர்த்து, அதாவது விவசாயிகளின் பரம வைரிகளாக மாறிப்போன அரசுக் கட்டமைவை எதிர்த்து நாம் களத்தில் நிற்பதால், அதற்கு ஏற்ற வகையில் போராட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
“சதிச் செயல் செய்தவன் புத்திசாலி, அதைச் சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி!”- மோடியின் நர்மதா அணை பிரகடனம்
“சர்தார் சரோவர் அணையைக் கட்டுவதற்கு எழுந்த தடைகளைப் போல உலகில் வேறு எந்தவொரு திட்டத்துக்கும் இவ்வளவு இடைஞ்சல்கள் ஏற்பட்டிருக்காது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுக்க பல்வேறு சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன. எனினும், இத்திட்டத்தை முடிக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். அதன்படி தற்போது அணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.”
– இது, கடந்த செப்டெம்பர் 17 ஆம் தேதி அன்று குஜராத்தில் நர்மதா நதியின் மீது கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை நாட்டிற்கு ‘அர்ப்பணித்து’ மோடி ஆற்றிய உரையின் ஒரு பகுதி.
138 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் சரோவர் அணைக்கட்டத் தனது பிறந்தநாளில் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் நரேந்திர மோடி
இந்த அணைக்கட்டின் பிரம்மாண்டம் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான பழங்குடி மக்களும், விவசாயிகளும் தாம் பிறந்து, வளர்ந்து, பிழைத்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் என்பது உலகமே அறிந்த உண்மை. இந்த அணைக்கட்டால் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ, யார் அகதிகளாகத் துரத்தப்பட்டார்களோ, அவர்களைத்தான் சதிகாரர்கள் எனக் குற்றஞ்சுமத்துகிறார், மோடி. காரணம், அவர்கள் அணைக்கட்டுக்கு எதிராகப் போராடினார்களாம். சொந்த பூமியை விட்டு, நிலத்தைவிட்டு வெளியேறு என அரசு உத்தரவிட்டவுடன், யாராவது எதிர்ப்புத் தெரிவிக்காமல் மூட்டைமுடிச்சைக் கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்களா?
சரோவர் அணைக்கட்டுக்கான நிதியுதவி 1985 -ஆம் ஆண்டு உலக வங்கியிடமிருந்து பெறப்பட்டு, 1987 -ஆம் ஆண்டில் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இக்காலகட்டத்தில்தான், இதற்கு எதிராக மத்தியப்பிரதேசம், குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில், அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் வாழும் கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்கள், நர்மதா பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் கீழ் அணிதிரண்டு, சமூக ஆர்வலர் மேதா பட்கர் தலைமையில் போராடத் தொடங்கினர். இவ்வியக்கம் இந்த அணைக்கட்டு குறித்து முன்வைத்த உண்மை விவரங்களைப் பரிசீலித்து, அதன் அடிப்படையில்தான் அணைக்கட்டிற்கு வழங்கி வந்த நிதியுதவியை இரத்து செய்தது, உலக வங்கி.
இதன் பின்னர் உள்நாட்டு முதலீடுகளைக் கொண்டு அணை கட்டும் வேலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், வெளியேற்றப்படும் மக்களின் நிவாரண மற்றும் மறுவாழ்வுக்கான வழிகாட்டுதல்கள் எதுவும் பின்பற்றப்படாததைச் சுட்டிக்காட்டி, 1995 -ஆம் ஆண்டு அணை கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்தது உச்சநீதி மன்றம்.
இந்த இடைக்கால தடை 1999 -ஆம் ஆண்டில் விலக்கிக் கொள்ளப்பட்டு, கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. மேலும், அணையின் உயரத்தையும் 49 மீட்டரில் இருந்து 85 மீட்டர், அதன் பின்னர் 121 மீட்டர் எனத் தடாலடியாக உயர்த்திக்கொண்டே சென்றது அரசு. அணைக்கட்டின் உயரம் அதிகரிக்கப்பட்டதற்கு ஏற்ப பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 121 மீட்டர் உயரத்தோடு திருப்தி அடையாத குஜராத் அரசு, மோடி அம்மாநில முதல்வராக இருந்த சமயத்தில் அணையின் உயரத்தை 138 மீட்டராக உயர்த்தவேண்டும் எனக் கோரியதை, அப்போதைய மத்திய அரசு (காங்கிரசு) நிராகரித்தது. 2014 -ஆம் ஆண்டு மோடி பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்த பதினேழாவது நாளில் அணையின் உயரத்தை 138 மீட்டராக உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இந்த சர்தார் சரோவர் அணையின் நீர்பிடிப்புப் பகுதிக்காக, சுமார் 13,542 ஹெக்டேர் வனப் பகுதியும், 12,869 ஹெக்டேர் பொதுநிலமும், 11,279 ஹெக்டேர் விளைச்சல் நிலமும் மூழ்கடிக்கப்பட்டிருப்பதாக அரசு வெளியிட்டிருக்கும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலப்பகுதிகள் மத்தியப் பிரதேசம், மராட்டியம், குஜராத் உள்ளிட்ட மூன்று மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 245 கிராமங்களை உள்ளடக்கியவை. இக்கிராமங்களில் வசித்த சுமார் 2.5 இலட்சத்திற்கும் அதிகமானோர் அணை கட்டுவதற்காக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மறுகுடியேற்றம் மற்றும் மறுவாழ்வு உதவிகளைச் செய்து தருவதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்துக்காட்ட ம.பி., குஜராத் மற்றும் மராட்டிய மாநில அரசுகள் முயற்சித்துள்ளன. இதனைக் கடந்த 2005 -ஆம் ஆண்டு, உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டிச் சாடியிருக்கிறது.
பாதிக்கப்பட்ட 245 கிராமங்களில் 193 கிராமங்களைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் மட்டும் சுமார் 40,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், வெறும் 18,346 குடும்பங்களை மட்டும் கணக்கில் காட்டியிருக்கிறது ம.பி. அரசு. கணக்கில் காட்டப்பட்ட குடும்பத்தினருக்கும்கூட முழுமையான இழப்பீடு கொடுக்கப்படவில்லை. வழங்கப்பட்ட நிவாரணங்களிலும்கூட மிகப்பெரும் முறைகேடுகள் நடந்திருக்கின்றன.
பழங்குடியின மக்கள், தங்களுக்கு இழப்பீடாகப் பணம் தேவையில்லை என்றும் நிலம்தான் வேண்டும் என்றும் கோரினர். ஆனால், பெரும்பான்மையானவர்களுக்கு இன்றளவும் நிலம் ஒதுக்கப்படவில்லை.
மறுகுடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இடங்களில் குடிநீர், மின்சாரம், சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படுத்தித் தரப்படவில்லை. கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் ஒதுக்கப்படவில்லை. மேலும் ம.பி.யில் ஒதுக்கப்பட்ட மறுகுடியிருப்புப் பகுதிகளில் 78 இடங்கள் வசிப்பதற்குத் தகுதியற்றவை என விசாரணைக் கமிசன்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இவ்வளவுக்குப் பிறகும், பாதிக்கப்பட்ட மக்களைச் சதிகாரர்கள் எனச் சாடுவதற்கு மோடியின் நாக்கும் மனமும் கூசவில்லை. பழங்குடியின மக்களுக்கு எதிராகத் தீர்ப்பெழுதிய உச்சநீதி மன்ற நீதிபதிகளின் கைகளும் நடுங்கவில்லை.
***
நர்மதா பாதுகாப்பு இயக்கம் இத்திட்டத்தைக் கைவிடக் கோரி 1987 ஆம் ஆண்டு தொடங்கி, கடந்த முப்பது ஆண்டுகளாகப் போராடி வருகிறது. அவ்வியக்கத்தினர் மும்பை, டெல்லி உள்ளிட்டுப் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள், தர்ணா, உண்ணாவிரதம் எனப் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தியிருப்பதோடு, தமது கிராமங்கள் நீரில் மூழ்கிய பின்னும் அங்கிருந்து வெளியேற மறுத்து, உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டங்கள் எவையும் இரகசியமாகவோ, சதித்தனமாகவோ நடந்தவையல்ல. சட்டத்தின் அனுமதி பெற்று நடைபெற்றவைதான்.
சர்தார் சரோவர் அணைக்கட்டுத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு இதுவரை நிவாரண, மறுவாழ்வு உதவிகள் வழங்கப்படாததைக் கண்டித்து மத்தியப்பிரதேசம் – போபால் நகரில் நர்மதா பாதுகாப்பு இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் மேதா பட்கர்.
இந்தத் திட்டம் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து, அவர்கள் அகதிகளாக்குகிறது என்ற அடிப்படையில் இத்திட்டத்திற்குத் தடை கோரி போடப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதி மன்றம், அதனை வெறும் நிவாரணத்திற்கான வழக்காகச் சுருக்கிக் கொண்டுதான் பல்வேறு தீர்ப்புகளை அளித்திருக்கிறது.
அணையின் உயரத்தை 85 மீட்டருக்கு உயர்த்திக் கொள்ள அனுமதியளித்த உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நர்மதா பாதுகாப்பு இயக்கம் 2000-ஆம் ஆண்டில் தொடுத்த வழக்கில், “வெளியேற்றப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரம், மறுவாழ்வு வழங்குவது குறித்து மட்டுமே தாம் இனி தலையிடப் போவதாகவும், அணை கட்டுவதை நிறுத்தி வைக்க உத்தரவிடப் போவதில்லை” என்றுதான் நீதிபதிகள் மனச்சாட்சியின்றித் தீர்ப்பை எழுதினர்.
அணையின் உயரத்தை அதிகரித்துக் கொள்ள அனுமதித்து உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை விமர்சித்த குற்றத்துக்காக எழுத்தாளர் அருந்ததி ராய் மீது தானே வலிய வந்து அவதூறு வழக்குத் தொடுத்தனர் உச்சநீதி மன்ற நீதிபதிகள். அவர்கள் தொடுத்த வழக்கை அவர்களே விசாரித்து, அருந்ததி ராய்க்கு ஒரு நாள் சிறைத் தண்டனையும், 2,000 ரூபாயும் அபராதமும் விதித்தனர். இந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால், மூன்று மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் அந்தக் கட்டைப் பஞ்சாயத்து தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற அருந்ததி ராயையே சிறைக்கு அனுப்பியது மூலம், அணைக்கட்டு தொடர்பான தமது தீர்ப்புகளை விமர்சிக்க யாரும் துணியக்கூடாது என்ற அச்சுறுத்தலைக் கட்டவிழ்த்துவிட்டது உச்சநீதி மன்றம்.
இந்த அணைக்கட்டு, குஜராத் மாநில விவசாயிகளுக்கும் கட்ச் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் பெரும் பயன் அளிக்கப் போவதாகத் தம்பட்டம் அடித்து, பழங்குடியின மக்கள் அவர்களது கிராமம், நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்தி வருகிறார், மோடி. ஆனால், தண்ணீரை எடுத்துச் செல்லும் கால்வாய்களில் வெறும் 30% மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
அருணாச்சல பிரதேசத்திலும் வடகிழக்கிந்திய மாநிலங்களிலும் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட அணைக்கட்டுக்களின் கட்டுமானத்தை நிறுத்தக்கோரி நர்மதா பாதுகாப்பு இயக்கத்தின் தலைமையில் அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
அவையும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயன்தரும் வகையில் அமைக்கப்படாமல், பெரும்பாலும் தொழிற்பேட்டைகள் மற்றும் நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்குத் தண்ணீரை எடுத்துச் செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சதி மூடிமறைக்கப்பட்டு, வாழ்வாதாரத்திற்காகப் போராடிய மக்கள் சதிகாரர்களாகக் காட்டப்படுகின்றனர்.
ஆளுங்கும்பலே கூறிவரும் சட்டம், தர்மத்திற்கு உட்பட்டு, முப்பது ஆண்டுகளாகச் சளைக்காமல் போராடிய பிறகும் கிடைத்த பலன் இதுதான் எனும்போது, பொதுமக்கள் தமது வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாத்துக் கொள்ள இந்தச் சட்டத்தை மதித்து ஏன் போராட வேண்டும் என்ற கேள்வி தவிர்க்கவியலாமல் எழுந்து நிற்கிறது.
குறிப்பாக, பார்ப்பன பாசிசக் கும்பல், சட்டப்பூர்வமாகவும், சட்டத்தை மீறியும் மிகக் கொடூரமான பொருளாதாரத் தாக்குதல்களையும் அடக்குமுறைகளையும் மக்கள் மீது ஏவிவரும் வேளையில், மேற்கண்ட கேள்வி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில், நடுத்தர வர்க்க அறிவுத்துறையினர் சட்டம், ஜனநாயகம், நீதிமன்றம் எனப் பம்மாத்து செய்து, இந்தக் கேள்வியைப் புறந்தள்ளிவிட முயலுவது நெருப்புக் கோழி மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொள்வதற்குச் சமமானதாகும்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
ஜி.எஸ்.டி. குறித்த வசனத்தை மெர்சல் திரைப்படத்தில் இருந்து நீக்கவேண்டும் என்று தமிழிசை சௌந்திரராஜன், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா (எ) ஹரிஹர ராஜா சர்மா ஆகிய பாஜக தலைவர்கள் வரிந்துகட்டி வந்தனர். மிரட்டியும் வந்தனர். பிறகு மக்கள் எதிர்ப்பு அதிகம் ஆனதும் பஞ்சாயததை முடித்துக் கொண்டதாக கூறினர்.
இது குறித்து சென்னையில் மெர்சல் திரைப்படம் ஓடும் திரையரங்குகளில் சென்று மக்களைச் சந்தித்தோம். கேளுங்கள்!
– வினவு செய்தியாளர்கள்.
_____________
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
மத்திய அரசின் நவோதயா பள்ளிகளுக்குத் தடையில்லா சான்று வழங்கும்படித் தீர்ப்பளித்திருக்கிறது உயர்நீதி மன்ற மதுரைக் கிளை. சொன்ன நீதிபதி பா.ஜ.க. -வின் பொது சிவில் சட்டத்தை ஆதரித்துப் பேசியவராம். நியாயத்தையும் தர்மத்தையும் வாட்சப் வழியே மட்டும் கற்றுணர்ந்த பலர் இந்த தீர்ப்பை கொண்டாடித் தீர்க்கிறார்கள். நவோதயா இல்லாததால்தான் தமிழக கல்வித் தரம் நாசமாய்ப் போய்விட்டதென அம்பிகள் எல்லோரும் ஃபார்வேர்டு மெசேஜ் வழியே புகாரளிக்கிறார்கள். பெருங்குடிகாரன் ஏதோ ஒரு சரக்கு கிடைத்தால் போதும் என தவிப்பது போல, சுயசிந்தனையற்ற மக்கள் பலர் சி.பி.எஸ்.சி., நீட், நவோதயா எனக் கிடைக்கும் எல்லா வழியில் இருந்தும் பாபவிமோசனம் பெற்றுவிடலாமென நம்பி, அவற்றை வெறித்தனமாக ஆதரிக்க ஆரம்பிக்கிறார்கள்.
நவோதயா பள்ளி
மிகப் பலரை வசீகரித்த ஒரு அம்சம் நவோதயாவில் இந்த ஆண்டு +2 படித்து நீட் தேர்வெழுதிய 14000 சொச்சம் பேரில் 7000 பேர் இந்தியா முழுக்க மருத்துவம் படிக்கத் தேர்வாகியிருக்கிறார்கள் எனும் தகவல். இதில் எத்தனை பேர் எம்.பி.பி.எஸ். ஆவார்கள் என்பது தெரியவில்லை. ஆனாலும், 580+ பள்ளிகளில் இருந்து 7000 டாக்டர்கள் எனும் மந்திர எண் மிடில்கிளாசுக்கு உச்சகட்ட கிளுகிளுப்பூட்டுகிறது.
நவோதயா பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே உண்டு. 5-ஆம் வகுப்பு வரை மற்ற பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதி நவோதயா பள்ளிகளில் சேரவேண்டும். சராசரியாக நூறில் இருவர் தேர்வாகிறார்கள். தமிழகத்தில் 10 இலட்சம் மாணவர்கள் ஒவ்வோர் வகுப்பிலும் பயில்கிறார்கள். (5 ஆம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கை இன்னும் கணிசமாக இருக்கும்) ஒப்பீட்டளவில் மிக அதிக அளவு நகர்ப்புற மாணவர்களைக் கொண்ட மாநிலம் இது. அவர்களின் பெற்றோர்கள் பலர் இனி நவோதயாவை ஒரு வெறித்தனமான இலட்சியமாக வரித்துக்கொள்வார்கள். அதற்கான தயாரிப்பு இரண்டாம், மூன்றாம் வகுப்பிலேயே துவங்கும். இப்போது பத்தாம் வகுப்பு மாணவர்களும் 12-ஆம் வகுப்பு மாணவர்களும் வதைமுகாம்களுக்கு ஒப்பான சூழலில் வாழ்கிறார்கள். பள்ளியில் கூடுதல் வகுப்பு, 10-ஆம் வகுப்பு என்றால் 2 மணி நேரத்துக்கும் குறையாத டியூஷன், 12-ஆம் வகுப்பு எனில் குறைந்தது 3 பாடங்களுக்கு டியூஷன். இப்போது நீட் பயிற்சி கூடுதலாக இணைய இருக்கிறது.
+2 முடித்தால் நீட் பயிற்சி மையம்! ஆரம்பப்பள்ளி சிறார்க்கு நவோதயா பயிற்சி மையம்!
இப்போது வரைக்கும் ஓரளவுக்கு நிம்மதியாக இருப்பது ஆரம்பப் பள்ளி வகுப்பு சிறார்கள்தான். இனி 10, 11, 12-ஆம் வகுப்பு குழந்தைகளின் பெற்றோர்களைப் போல, 4, 5-ஆம் வகுப்பு பெற்றோர்களும் பெரும் பதட்டத்துக்கு ஆட்படுவார்கள். இது ஒன்றும் மிகையான அனுமானமல்ல. என் அனுபவத்தில் இந்த காலகட்டத்தில்தான் (10, 12-ஆம் வகுப்பு) பெற்றோர்களால் பிள்ளைகளும், பிள்ளைகளால் பெற்றோரும் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். காரணம், பொதுத்தேர்வு, அந்த மதிப்பெண் மூலம் மட்டுமே தெரிவு செய்ய முடிகிற உயர் கல்வி வாய்ப்புக்கள். நவோதயா இந்தப் போட்டியை இன்னும் அடிமட்டத்துக்குக் கொண்டுபோய் ஐந்தாம் வகுப்பையே உச்சகட்ட போட்டியுள்ள களமாக மாற்றும்.
நாமக்கல் பள்ளி ( மாதிரிப்படம்)
ஏற்கனவே உயர்கல்வி போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி கல்லா கட்டுகின்றன. நீட் அதனை 1 இலட்சம் கோடியாக உயர்த்தவிருக்கிறது. இதில் ஆரம்பப்பள்ளியிலேயே நுழைவுத்தேர்வு எனில், என்ன ஆவார்கள் குழந்தைகள்..? ஒருவனுக்கு இலட்ச ரூபாய் பரிசு என அறிவித்துவிட்டு, பல இலட்சம் பேரிடம் கோடிகளில் பணம் பிடுங்கும் லாட்டரி வியாபாரம் போல மத்திய அரசு நவோதயாவைத் துவங்கியிருக்கிறது. ஆனால், இங்கே பரிசு தரப்போவது மத்திய அரசு, லாட்டரி வியாபாரத்தைத் தனியார் பயிற்சி மையங்கள் செய்யும்.
எதிர்கால வாழ்வுக்குக் காலணாகூடச் சேமிக்காமல், சக்திக்கு மீறி கடன் வாங்கி பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் பலர் இங்கிருக்கிறார்கள். வீட்டில் ரேஷன் அரிசியில் சமைப்பார்கள் என்பதால், மதிய உணவு கொண்டுவராத மெட்ரிக் பள்ளி பிள்ளையை நான் பார்த்திருக்கிறேன் (அந்த வறுமையிலும் அவர்கள் ஆண்டுக்கு 30 ஆயிரம் கட்டி மகளைப் படிக்க வைக்கிறார்கள்).
தமது ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கை பிள்ளைகளின் பள்ளிக் கட்டணமாகச் செலுத்திவிட்டு, மிச்ச பணத்தில் அவல வாழ்வு வாழும் குடும்பங்களைக் கொஞ்சம் மெனக்கெட்டால் உங்களாலும் பார்க்க இயலும். குடிசைப் பகுதியில் இருந்து வருவதால் தம் வீட்டு முகவரியை சொல்லக் கூச்சப்படும் குழந்தைகள் பலரைச் சந்தித்திருக்கிறேன், (அவர்கள் தனியார் பள்ளிகளில் பயில்கிறார்கள்). பள்ளிகளில் கண்டறியப்படும் கற்றல் குறைபாடு கொண்ட மற்றும் நுண்ணறிவுக் குறைபாடு கொண்ட சிறார்கள் குறித்துப் பெற்றோர்களிடம் பேசக்கூட முடிவதில்லை. தம் பிள்ளைகளால் மற்ற பிள்ளைகளைப் போல படிக்க முடியாது என்பதை அனேகப் பெற்றோரால் ஏற்கவே முடிவதில்லை.
நான் சந்தித்த ஒரு தாய் தான் அணிந்திருந்த எல்லா நகைகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட்டதாகச் சொன்னார். வேண்டுதல் ஒன்றுதான், மகன் பத்தாம் வகுப்பில் (அவர்) சொல்லிக்கொள்ளும்படியான மதிப்பெண் வாங்க வேண்டும்.
தான் எதிர்பார்த்த மதிப்பெண் தன் மகளுக்கு +2வில் வராத நிலையில், நண்பர் ஒருவர் என்னிடம் சொன்ன வாக்கியம், “நாங்கள் (எங்கள் மகளால்) ஏமாற்றப்பட்டதாக உணர்கிறோம். உறவினர்களை எதிர்கொள்ள அவமானமாய் இருக்கிறது; அதனால் தொலைபேசியைக்கூட எடுக்க மனமில்லை.” மிட் டேர்ம் தேர்வில் 3 பாடங்களில் தேர்ச்சியடையாத ஒரு மாணவரது அப்பா, “இவன் அடுத்த பரீட்சையிலயும் இப்படி மார்க் எடுத்தா, நாங்க (பெற்றோர் இருவரும்) தற்கொலை பண்ணிக்கிறதைத் தவிர வேற வழியில்லை” என மகன் முன்னாலேயே அழுகிறார்.
தனியார் பள்ளியில் டிஜிட்டல் வகுப்பு
இவையெல்லாம் மிகையான எதிர்வினைகளாக தோன்றலாம். ஆனால், பெருந்தொகையான பெற்றோரின் மகிழ்ச்சி, கவலை, வெற்றி, தோல்வி, நம்பிக்கை, அவமானம் என சகலத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகப் பிள்ளைகளின் மதிப்பெண் இருக்கிறது. அதுதான் வெற்றிகரமான பள்ளி எனக் கருதப்படுபவற்றை நோக்கிப் பெற்றோர்களை ஓடவைக்கிறது. அப்படியான ஒரு பள்ளியில் தன் குழந்தையைச் சேர்க்க எந்த எல்லைக்கும் செல்லத் தயாராய் இருக்கும் பெற்றோர்கள் இங்கே மிகமிக அதிகம். குழந்தைகள் தற்கொலையைக் கேள்விப்பட்டதில்லை, நவோதயா அதைக் கொண்டுவரும்!
இந்த களச்சூழலில் இருந்து நவோதயாவைப் பாருங்கள். மாவட்டத்துக்கு ஒரு பள்ளி. அதில் அதிகபட்சம் வகுப்புக்கு 50 பேர் என்று வைத்தாலும் தமிழகம் முழுக்க 1500 பேருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். தோராயமாக 10 லட்சம் பேர் இருக்கும் இடத்தில் அதிக கற்றல் திறன் கொண்ட 1500 பேரைப் பொறுக்கி எடுத்து, அவர்களுக்கு உச்சபட்ச வசதிகளைக் கொடுத்து அவர்களை இன்னும் திறமையாகத் தேர்வெழுதும் மாணவர்களாக உருவாக்கப் போகிறார்கள்.
ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்ற தனியார் பள்ளி உணவு விடுதி
குறைந்தபட்சம் பள்ளிக்கல்வி செலவில் 6 இலட்சம் ரூபாயை மிச்சம் பிடிக்கவும், அதன் பிறகான கல்லூரி செலவில் இன்னும் அதிகம் மிச்சம் பிடிக்கவும், ஒரு வெற்றிகரமான பெற்றோராக தம்மை நிரூபிக்கவும் உள்ள பெரும் வாய்ப்பு நவோதயா பள்ளி சீட்டுக்களுக்கான ரேஸ்தான். ஆகவே, தமிழக மிடில்கிளாஸ் ஒரு வெறித்தனமான முனைப்போடு, தம் பிள்ளைகளை ஆரம்பப்பள்ளியிலேயே நவோதயா நுழைவுத்தேர்வுக்கு தயார் செய்யும். அமைச்சர்கள் தம் அதிகாரத்தின் கடைசித் துளியையும் சுவைக்க விரும்புவதுபோல, இவர்கள் நவோதயா சீட்டுக்காக எந்த விலையையும் கொடுப்பார்கள்.
அந்தக் கனத்தைச் சுமக்கப்போவது, நவோதயா பள்ளி என்றால் என்னவென்றே தெரியாத சிறார்கள். இனி ஆறாம் வகுப்பு மாணவர்களை 4 பிரிவில் அடக்கலாம்.
நவோதயாவை அறிந்திராத குழந்தைகள்,
அறிந்திருந்தாலும் அதனை அணுகவியலாத குழந்தைகள்,
அணுகித் தேர்வாகாத பிள்ளைகள்,
நவோதயா பிள்ளைகள்.
இது திறமை அடிப்படையிலான தீண்டாமை!
இதுவரை, நகரம் – கிராமம் என இருந்த பிரிவினை, சற்றே மாறி அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்றானது. பிறகு தனியார் பள்ளி – நாமக்கல் பள்ளி என்றானது. அது இப்போது மாநில பாடம் – சி.பி.எஸ்.சி என்று இருக்கிறது. இனி அது நவோதயா – ஏனையை பள்ளிகள் என்று ஆகப்போகிறது. ஒரு பிரிவு மாணவர்களை மேம்பட்டவர்களாகக் காட்டி இன்னொரு பிரிவினரைத் தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளுவது இங்கே பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கிறது.
அந்தப் பிளவை இன்னும் கூர்மைப்படுத்த நவோதயா மோகத்தால் முடியும். 14,000 பேரில் 7000 பேரை மருத்துவம் போன்ற உயர்படிப்புக்கு அனுப்ப முடிகிற ஒரு பள்ளியை ஒரு தொழிற்சாலையாகவே கருத முடியும். முழுக்க புத்திசாலிகளால் நிறைந்திருக்கும் பள்ளி அடிப்படையில் தவறானது. கற்றல் குறைபாடு உள்ள சிறார்களைக்கூட ஒரு பள்ளி கூடுமானவரை நிராகரிக்கக்கூடாது.
கல்விப் புலத்தில் நிலவும் வர்க்க ஏற்றத்தாழ்வுகளின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட அனிதா
நடைமுறை சிரமங்கள் இருக்கட்டும். நவோதயா போன்ற ஒரு பள்ளியை அரசே நடத்துவது அறமற்ற செயல். குடிநீரும், கழிப்பறையும் இல்லாத பள்ளிகள், போதுமான ஆசிரியர்கள் இல்லாத ஏராளமான பள்ளிகளை நாடுமுழுக்க வைத்துக்கொண்டு, அதில் படிக்கும் குழந்தைகளுக்கும் வாய்ப்பளிக்கிறோம் என பாசாங்கு செய்து நுழைவுத்தேர்வு வைப்பது உச்சகட்ட வக்கிரம். எல்லா வசதிகளோடு ஒரு சில குழந்தைகளை அரசே படிக்க வைப்பதும், ஏனைய இலட்சக்கணக்கான சிறார்களைப் பிச்சைக்காரர்களைப் போலக் கிடைப்பதை வாங்கிக்கொள்” எனப் படிக்க வைப்பதும் அநீதி என்பது உங்களுக்குப் புரியவில்லையா? 90 மார்க் இல்லை என்பதற்காக உங்கள் பிள்ளையை வராண்டாவில் உட்காரவைத்தால் ஒத்துக்கொள்வீர்களா?
எல்லா திட்டங்களையும் குறை சொல்கிறோம் என உடனடியாக தேசபக்தர்கள் எதிர்வினையாற்றுவார்கள். அவர்களுக்குப் பதிலளிக்க பல உதாரணங்களைக் கொடுக்க இயலும். வடசென்னையில் டான்பாஸ்கோ சபையின் பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ. செயல்படுகிறது. பல இடங்களில் உள்ள டான்பாஸ்கோ பள்ளிகளில் படிப்பவர்களில் பத்தாவது தேறாதவர்கள் அல்லது குறைவான மதிப்பெண் பெற்று 12 ஆம் வகுப்பு படிக்க ஆர்வமில்லாதவர்கள் படிப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் அது.
தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள பூவத்தூர் கிராமப் பள்ளியில் சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 2 மாணவர்கள் மட்டும் தோல்வியடைந்தார்கள். அவர்கள் இருவரும் போதிய நுண்ணறிவுத்திறன் இல்லதவர்கள். கடுமையான குறைபாடு உள்ளவர் ஒரு பாடத்தில் மட்டும் தேறினார். ஓரளவு குறைபாடு உள்ளவர் ஒரே பாடத்தில் மட்டும் தோல்வியடைந்தார். அந்த மாணவர்கள் நிச்சயம் தோல்வியடைவார்கள் என்பதை அறிந்தேதான் அந்தத் தலைமை ஆசிரியர் தேர்வுக்கு அனுமதித்திருக்கிறார். ஒரு தலைமை ஆசிரியராக 100% தேர்ச்சியை தெரிந்தே இழந்து சிறு தோல்வியை சந்தித்திருக்கிறார். ஆனால், அந்த இரு மாணவர்களுக்கும் இது மகத்தான் வெற்றி இல்லையா!
நவோதயா பள்ளிகள் கல்வித்துறையை மேம்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. அதிக நவோதயா பள்ளிகளைக் கொண்ட உ.பி. கல்வித்தரத்தில் கடைசியிலும் கடைசி படியில் இருக்கிறது.
அனிதாக்கள் இனி ஐந்தாம் வகுப்பிலேயே ஒழிக்கப்படுவார்கள்!
அனிதா போன்ற எளிய மாணவர்களை உயர்கல்வி வாய்ப்பில் இருந்து விரட்டிவிடுவதற்கான பல திட்டங்களை அரசு பல தளங்களில் இருந்தும் செயல்படுத்துகிறது. ஆரம்பப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களையே நியமிக்காமல் இருப்பது, நீட் தேர்வு, ஐந்து, எட்டாம் வகுப்புக்களுக்குப் பொதுத்தேர்வு, உயர்கல்வி உதவித்தொகை குறைப்பு, பல்கலைக் கழகங்களுக்கான நிதியை வெட்டுவது என்பவை எல்லாமே பாமர மக்கள் உயர்கல்வி பயில்வதை நிறுத்தும் பல்வேறு உத்திகள்தான்.
நவோதயா என்பது அத்தகைய நடவடிக்கைகளின் காஸ்ட்லி வெர்ஷன். அதன் மூலம் ஒரு தரப்பு மக்களுக்கு போதையூட்டி, இன்னொரு தரப்பு பிள்ளைகளை இலாயக்கற்றவர்கள் என முத்திரை குத்தி ஒதுக்குவதே அதன் நோக்கம். இப்போது மாநில பாடத்திட்டம் மட்டமானது என மாணவர்களும் பெற்றோர்களும் நம்புவது போல, நவோதயா வந்தால் மற்ற பள்ளிகள் மட்டம் என மக்களும் மாணவர்களும் நம்புவார்கள். அவர்கள் நம்பிக்கையை 6 ஆம் வகுப்பிலேயே கொன்றுவிட்டால், 12 ஆம் வகுப்பில் அனேகமாக போட்டியே இருக்காதில்லையா?
ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிப்பது என்பது மலிவான கூலிகளை உற்பத்தி செய்யும் நுட்பம். மிக அதிக அளவு மாணவர்கள் உயர்கல்வி பயிலும் மாநிலங்களில் (தமிழகம், கேரளா) அடிமட்ட வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அங்கெல்லாம் வேலைக்கு வருவது ஏழைகளின் உயர்கல்விக்கு வாய்ப்பு குறைவாக உள்ள மாநில இளைஞர்கள்தான்.
அரசுப் பள்ளிகளை முற்றிலுமாக அழித்தொழிக்க எல்லா வேலைகளையும் செய்யும் இந்த அரசாங்கம், நவோதயா எனும் பெயரில் அரசுப் பள்ளிகளை கொண்டுவர இத்தனை முனைப்பாக இருப்பதில் இருந்தே அதன் பின்னால் ஒரு மோசமான உள்நோக்கம் இருப்பதை உணர இயலும். குழந்தைகளை வெறும் போட்டியாளர்களாக உருவாக்கும் இன்றைய முதலாளித்துவ சமூகத்தை இன்னும் கொடூரமான எல்லைக்கு இட்டுச்செல்வதைத்தான் நவோதயா செய்யும். அது உங்கள் குழந்தைகளை ஒன்றும் செய்யாமல் போகலாம். ஆனால், யாரோ ஒருவரின் பிள்ளைகளை உளவியல்ரீதியாகக் கொல்லத்தான் போகிறது. யாரோ ஒரு குழந்தை கொல்லப்படுவதை உங்களால் இயல்பாக கடந்து போக இயலும் என்றால், நவோதயாவை அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லை என்றால், இந்த நவோதயா எனும் கல்வித் தீண்டாமைக்கு எதிரான உங்கள் குரலை பதிவுசெய்யுங்கள்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி