Thursday, August 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 472

திருப்பூர் : டாலர் சிட்டியை டல் சிட்டியாக்கிய மோடி அரசு !

2

திருப்பூர் : GST…. கதறும் ஆயத்த ஆடை நிறுவனங்கள் !!!  

ரு காலத்தில் தமிழகக் கிராமங்களில் வேலையிழந்து பிழைப்புத்தேடி நகரங்களை நோக்கி வருபவர்களின் முதல் தேர்வாக இருந்தது திருப்பூர் நகரம். தமிழகம் மட்டுமல்ல பல அண்டை மாநில மக்ககளையும் அரவணைத்து வாழ்வளித்து வந்த திருப்பூரின் ஆயத்த ஆடைத் தொழிலானது, இன்று மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. ஆகிய நாசகாரக் கொள்கைகளால் ‘யானை புகுந்த வெண்கலக் கடையைப் போல’ சின்னா பின்னமாகிக்  கிடக்கிறது!

ஆயத்த ஆடை உற்பத்தி என்பது விவசாயி உற்பத்தி செய்யும்  பருத்தியில் தொடங்கி பஞ்சாலை, நூல்மில், பின்னலாடை, சலவை, சாயமேற்றுதல், பிரிண்டிங், கம்பேக்டிங் ஆகியவற்றைக் கடந்து பின்; கட்டிங், பிரிண்டிங், எம்ப்ராய்டிங், தையல், பட்டன், செக்கிங், அயர்ன், பேக்கிங் என்று பல கட்டங்களின் வழியாக முழுமையடைகிறது. இதன் ஒவ்வொரு தொழில் பிரிவிலும் நூற்றுக்கணக்கான பெரு நிறுவனங்களும், சுமார் 6000 சிறு நிறுவனங்களும் திருப்பூரில் இயங்கி வருகின்றன.  இதுதவிர இவற்றின் துணைத் தொழில்களாக உள்ள போக்குவரத்து, மெக்கானிக், வயரிங், சில்லறை வர்த்தகம் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரமாக திருப்பூர் ஆயத்த ஆடை தொழில் விளங்கி வருகிறது.

மேற்கண்ட தொழில் பிரிவுகள் அனைத்தையும் சொந்தமாகக் கொண்டுள்ளதோடு, நேரடியாக அந்நிய நிறுவனங்களிடம் ஆர்டர் பெற்று ஆடை உற்பத்தி செய்யும் பெரு நிறுவனங்கள், இதில் ஒரு சில தொழில் பிரிவுகளை மட்டுமே சொந்தமாகக் கொண்டு இயங்கும் நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்கள், மேற்கண்ட இருவகை நிறுவனங்களிடமும் மற்றும் அந்நிய நிறுவனங்களின் ஏஜென்டுகளிடமும் குறைந்த லாபத்திற்கு ஆர்டர் எடுத்து ஆடை உற்பத்தி செய்து கொடுக்கும் சிறு நிறுவனங்கள், 5, 10 மிசின்களை வைத்துக் கொண்டு தையல் வேலை மட்டுமே செய்பவர்கள் மற்றும் உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தியாளர்கள் என மொத்தம் ஐந்து பிரிவுகளாக ஆயத்த ஆடை உற்பத்தி நடைபெற்று வருகிறது.

சிறு நிறுவனங்களின் அவல நிலைமை:

எண்ணிக்கை அளவிலும், வேலைவாய்ப்பு அளிப்பதிலும் சிறு நிறுவனங்களே அதிக பங்கு வகிக்கின்றன. பெரு நிறுவனங்களிடம் ஆர்டர் பெறும் இந்நிறுவனங்கள் அதற்கான நூலை தனது சொந்தப் பொறுப்பில் வாங்கி, அதனை நிட்டிங், வாஷிங், சாயமேற்றுவது, பிரிண்டிங், பிளீச்சிங், ஆகியவற்றுக்காக தனிச் சிறப்பாக இயங்கும் சிறு நிறுவனங்களிடம் ஜாப் ஒர்க்காகக் கொடுத்து முடிக்கின்றனர். இதற்கான கட்டணத்தை ஜாப் ஒர்க் நிறுவனங்கள் உடனே பெற்றுக் கொள்வதில்லை. பரஸ்பர புரிதலின் அடிப்படையில் 30 நாள் கடனாக செய்து தருகின்றனர்.

பின்னர் கட்டிங், தையல், அயர்ன், பேக்கிங் வேலைகளை முடித்துக் கொடுக்கும் சிறு நிறுவனங்கள் இதற்கான கூலியைப் பெரு நிறுவனங்களிடமிருந்து வாங்கிய பிறகுதான் ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு கடனை அடைக்கின்றனர். ஒரு வேளை இப்பணம் கிடைப்பதில் தாமதமானாலோ அல்லது வங்கியில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டாலோ வார வட்டிக்கு கடன் பெற்று இக்கடனை அடைத்தாக வேண்டும். மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது இவ்வாறுதான் பலநூறு சிறு நிறுவனங்கள் போண்டியாகிப் போனது!

ஏற்கனவே 30% லாபத்தில் ஆர்டர் கொடுத்துவந்த பெரு நிறுவனங்கள் தற்போது தொழில் போட்டியின் காரணமாக தற்போது 20 சதமாக குறைத்து விட்டன. இந்நிலையில் கட்டிட வாடகை, மின்கட்டணம், வார இறுதியில் கொடுக்க வேண்டிய கூலியாள் சம்பளம் என எப்போதும் நெருப்பின் மீது நிற்கும் நிலையில்தான் சிறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவ்வாறு சாவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டு விட்ட இச்சிறு நிறுவனங்களை, சவக்குழிக்குள் தள்ளி இறுதிச்சடங்கு நடத்துவதற்கு மோடி அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் ஜி.எஸ்.டி.!

என்ன சொல்கிறது ஜி.எஸ்.டி?

ஜி.எஸ்.டி. என்பது சரக்கு மற்றும் சேவை வரி என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், ஒரு பொருளின் உற்பத்தி நிலையிலிருந்து இறுதியாக நுகர்வோரைச் சென்றடையும் வரையுள்ள வர்த்தக சங்கிலியின் ஒவ்வொரு கண்ணியிலும் வரி விதிப்பதுதான் ஜி.எஸ்.டி-யின் வரி விதிப்பு முறை!

ஒரு ஆயத்த ஆடை, பஞ்சு கொள்முதலில் தொடங்கி இறுதியாக பேக்கிங் செய்யப்படுவது வரை சுமார் 10 நிலைகளைக் கடந்து உருவாகிறது. இதன்படி ஒவ்வொரு நிலையிலும் 5, 12, 18, 24 சதவீத வரி விதிக்கிறது ஜி.எஸ்.டி. இதற்கு முன் ‘வாட்’ வரியின்போது விலக்களிக்கப்பட்ட நிட்டிங், வாஷிங், காம்பேக்டிங், துணி ஆகியவற்றுக்கும் கூட ஜி.எஸ்.டி.யில் 5% வரி விதிக்கப்பட்டுள்ளது. தையல் நூல், அட்டைப்பெட்டி, கம்டேப், பட்டன், லேபில், ஹேங்கர் ஆகியவற்றுக்கு ‘வாட்’ வரியைவிட 3 மடங்கு அதிகமாக ஜி.எஸ்.டி.யில் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தக் கூடுதல் வரிவிதிப்பினால் கச்சாப் பொருள்களின் விலை உயர்வு, அதற்கான கூடுதல் முதலீடு செய்ய வேண்டிய நெருக்கடி என்பதைத் தாண்டி, இதன் வரி விதிப்பு நடைமுறைகளும் சிறு நிறுவனங்களை கடும் நெருக்கடிக்குத் தள்ளுவதாக உள்ளது.

ஜி.எஸ்.டி.யின் நடைமுறையும், சிறு நிறுவனங்களின் அழிவும்

மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள் கொள்முதல் விவரங்களையும், அடுத்த 10 நாட்களில் விற்பனை விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். 30-ம் தேதிக்குள் இவற்றுக்கான வரிகளையும் முன்கூட்டியே செலுத்திவிட வேண்டும். இதில் கூடுதலாக செலுத்தப்பட்ட வரித்தொகை ஏழு நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் (input tax recovery)  வரவு வைக்கப்படும் என்கிறது ஜி.எஸ்.டி. கவுன்சில்! இதனால் உள்ளீட்டு வரி வரவு வைக்கப்படும் வரை கொள்முதல் மற்றும் விற்பனை ரசீதுகளை பாதுகாப்பதுடன், தன்னிடம் வர்த்தகம் செய்பவர் வரி செலுத்திவிட்டாரா என்பதையும்  கண்காணிக்க  வேண்டியதுள்ளது. மேலும் இதற்காகவே கூடுதல் பணியாளர்களை நியமிப்பது, ஆடிட்டருக்கு மாதக் கட்டணமும் செலுத்துவது ஆகிய செலவுகளும் சிறு நிறுவனங்களின் தலையில் கூடுதல் சுமையாக ஏற்றிவிடப்படுகிறது.

ஆண்டுக்கு 20 லட்சம் வரை வர்த்தகம் செய்பவர்கள் ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்ய வேண்டியதில்லை என்கிறது ஜி.எஸ்.டி. கவுன்சில். ஆனால் ஜி.எஸ்.டி. பதிவு எண் இல்லாதவர்களிடம் வர்த்தகம் செய்தால் உள்ளீட்டு வரியை திரும்ப பெற முடியாது என்பதால் இத்தகைய சிறு நிறுவனங்களை பெரு நிறுவனங்கள் புறக்கணித்து விடுகின்றன. எனவே வேறு வழியின்றி எல்லா சிறு நிறுவனங்களும் ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இல்லாவிட்டால் தொழிலில் நீடிக்க முடியாது.

மேலும், உள்ளீட்டு வரியை 7 நாட்களுக்குள் வரவு வைத்து விடுவோம் என்ற தனது வாக்குறுதியை அரசே காற்றில் பறக்க விட்டுவிட்டது. ஜி.எஸ்.டி. அறிமுகமாகி  ஆறு மாதங்கள் ஓடிவிட்ட நிலையில் முதல் மாதம் செலுத்திய உள்ளீட்டு வரியே இதுநாள் வரை வரவு வைக்கப்படவில்லை. எப்போது வரும் என்ற உத்தரவாதமும் இல்லை. இதனால் பொருளை விற்பவர்கள் முன்கூட்டியே உள்ளீட்டு வரியையும் பிடித்துக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. இவ்வாறு அடுக்கடுக்கான சிக்கல்களை உருவாக்குவதன் மூலம் “நீ பிழைத்திருக்க வேண்டுமானால் எனக்கு வரி கட்டு. இல்லாவிட்டால் ஒழிந்து போ” என்று சிறு நிறுவனங்களை மிரட்டுகிறது மத்திய அரசின் ஜி.எஸ்.டி!

ஜி.எஸ்.டி.யின் விளைவுகள்

மேற்கண்ட பல்வேறு நெருக்கடிகளால் திருப்பூர் ஆயத்த ஆடை தொழிலே கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி-க்கு முன்பு ஆர்டர் கொடுத்த பெரு நிறுவனங்களும், ஏஜென்டுகளும் புதிய வரிச்சுமையை ஏற்க மறுத்து பழைய விலையிலேயே உற்பத்தி செய்து தருமாறு கோருகின்றன. முடியாத நிலையில் ஆர்டரை ரத்துசெய்து விடுகின்றன. மறுபுறமோ புதிய ஆர்டர்களில் வழக்கமான அளவுக்கும் குறைவான லாபமே கிடைப்பதால் நடைமுறை செலவுகளுக்கே ஈடுகொடுக்க முடியாமல் தொழிலையே கைவிட்டு ஓடும் நிலைக்கு சிறு நிறுவனங்கள் ஆளாகியுள்ளன.

இதற்கு முன்பு தொழில் போட்டியின் காரணமாக லாபம் குறைவாக கிடைத்தாலும், மத்திய அரசு தரும் ஏற்றுமதிக்கான ஊக்குவிப்புத் தொகையால்(duty draw back) ஓரளவு இழப்பை ஈடுகட்ட முடிந்தது. முன்பு 7% ஆக இருந்த இத்தொகையையும் ஜி.எஸ்.டி-க்குப் பின் 2% ஆக குறைத்து விட்டது மோடி அரசு.

மாதத்தில் பாதிநாள் வேலை இல்லை. வேலை இருந்தாலும் உரிய சம்பளம் கொடுக்க முடிவதில்லை. இதனால் திருப்பூரில் 60%  சிறுதொழில் நிறுவனங்கள் முடங்கி விட்டது. ஜி.எஸ்.டி. -க்குப்பின் அக்டோபரில் மட்டும் 1400கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி சரிந்துவிட்டது.  திருப்பூரின் வர்த்தக நிறுவனங்களுக்காகவே காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை இயங்கிவந்த வங்கிகள் எல்லாம் காலை 10  முதல் மாலை 4 மணி வரை என்ற வழக்கமான முறைக்குத் திரும்பி விட்டன. இவ்வாறு ‘டாலர் சிட்டி’யான திருப்பூர் இன்று ‘டல்’ சிட்டியாகி விட்டது! ஆனால் மோடி கும்பலோ, “ஜி.எஸ்.டி. -யால் விலைவாசி குறையும்” ‘ஏற்றுமதி பெருகும்” என்று மக்களை மோசடி செய்து வருகிறது!

கார்ப்பரேட் சேவைக்கே ஜி.எஸ்.டி!

1984 -க்கு முன்பு வெறும் 4 கோடியாக இருந்த திருப்பூரின் ஏற்றுமதியை இன்று 25,000 கோடியாக உயர்ந்து நிற்பதற்கு ஆணிவேராக செயல்பட்ட தொழிலாளர்களும், அவர்களுக்கு வேலைவாய்ப்பளித்த சிறு நிறுவனங்களும் இன்று நெருக்கடியில் சிக்கி மூச்சுத்திணறிக் கொண்டிருப்பது திடீரென ஜி.எஸ்.டி.யால் மட்டும் உருவானதல்ல. மத்திய ஆட்சியாளர்களின் தொடர் நடவடிக்கைகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை!

1984 வரை எளிய வரிவிதிப்பு, நேரடி பணப் பரிமாற்றம் என ஆயத்த ஆடை உற்பத்தி சுமூகமாகவே இருந்து வந்தது. உலக வர்த்தகக் கழக ஒப்பந்தத்திற்குப் பின் ஏற்றுமதிக்கான உற்பத்திக்கு முக்கியத்துவம் என்று திசை மாற்றி இழுத்துச் சென்றது மத்திய அரசு. ஆலைகளை நவீனப்படுத்துவதற்கு கடனுதவி, இறக்குமதி செய்யப்படும் கருவிகளுக்கு வரிச்சலுகை கொடுத்து ஊக்கப்படுத்தியது மத்திய அரசு! இவ்வாறு உள்நாட்டு சந்தைக்கான உற்பத்தியில் இருந்தவர்களை, கார்ப்பரேட் திமிங்கலங்களின் பிடியிலுள்ள உலகச் சந்தையோடு திருப்பூர் ஆயத்த ஆடைத்தொழிலை கோர்த்துவிட்டது மத்திய அரசு.

இதன் பிறகு 2007 -ல் கொண்டுவரப்பட்ட ‘வாட்’ வரிவிதிப்பு மூலம் அதுவரை இருந்த நேரடிப் பணபரிமாற்றத்தை வங்கிப் பரிமாற்றத்திற்குள் கொண்டு வந்தார்கள். அடுத்து மோடியின் ‘பணமதிப்பிழப்பு’ நடவடிக்கையோ வங்கிப் பரிமாற்றத்திற்கு மாறுவதைக் கட்டாயமாக்கி விட்டது. இதன் தொடர்ச்சியாகவே ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டிருக்கிறது. இவ்வாறு படிப்படியாக திட்டமிட்டு, சுற்றி வளைத்து, தான் விரித்த வலைக்குள் இரையை வீழ்த்தும் திறமையான வேட்டைக்காரனைப் போல மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

வலையில் விழுந்த இரையை கார்ப்பரேட்டுகளுக்கு விருந்தாக்குவதுதான் மோடி அரசின் நோக்கம். வேலையிழந்த தொழிலாளர்களும், சிறு நிறுவனங்களும் பெரும் நிறுவனங்களின் அற்பக் கூலிக்கு வேலை செய்யும் கொத்தடிமைகளாக மாறி விடுங்கள் என்கிறார் மோடி.

ஏன் மாற வேண்டும்? ஆயத்த ஆடை தொழிலில் நமக்குப் போட்டியாக உள்ள பங்களாதேஷ் நம்மை விடக் குறைந்த விலையில் உற்பத்தி செய்து வருகிறார்கள். நாம் பங்களாதேஷை விட மிகக் குறைந்த செலவில் உற்பத்தி செய்தால்தான் சர்வதேச ஆயத்த ஆடை வர்த்தகத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லாபம் அதிகரிக்கும். அப்போதுதான் அவர்கள் இந்தியாவுக்கு ஆர்டர் கொடுப்பார்கள். நம் நாட்டின் அந்நிய செலாவணி அதிகரிக்கும். நாடு வல்லரசாக முடியும், எனவே கொத்தடிமைகளாக மாறி நாட்டுக்காக தியாகம் செய்யுங்கள், என்கிறார் மோடி!

ஆயத்த ஆடைத் தொழில் மட்டுமல்ல, நாட்டின் அனைத்து தொழில்களையும், இயற்கை வளங்களையும் கார்ப்பரேட் நலனுக்காக தாரை வார்ப்பதையே மோடி அரசு தீவிரக் கொள்கையாகக் கொண்டுள்ளது. இதற்கேற்ப ஏற்கனவே உள்ள சட்ட விதிமுறைகளை, வரி விதிப்பு முறைகளை ஒழித்துக் கட்டிவிட்டு கார்ப்பரேட் நலனுக்கு சாதகமான வகையில் மறு கட்டமைப்பு செய்து வருகிறது மோடி அரசு! அதன் ஒரு கண்ணிதான் ஜி.எஸ்.டி. என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

ஜி.எஸ்.டி எதிர்ப்பு என ஒற்றைக் கோரிக்கையோடு நின்றுவிடாமல், ஒட்டுமொத்த மக்கள் நலனுக்கு எதிராக மாறிவரும் அரசுக் கட்டமைப்புக்கு எதிரான போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும்!

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருப்பூர். தொடர்புக்கு : 99658  86810.

கவுசல்யா இந்த மண்ணின் பெருமை !

13

இவளல்லவோ பெண்!

சாதிய – மத எதிர்ப்பில்,
மண் என்றால்
அது தமிழ்நாடு
பெண் என்றால்
அது கவுசல்யா
தந்தை என்றால்
அது பெரியார்!

கவுசல்யா…
பெண்ணின் பெருமை
மட்டுமல்ல
இந்த மண்ணின் பெருமை,
ஆயிரம் அடக்குமுறைகள்
அழுத்தினாலும்
சாதிய வேலிகள் தடுத்தாலும்
சமுதாயம்
முன்னோக்கி வளர்ந்தே தீரும்
என்ற வரலாற்றின் உண்மை.

படம் : நன்றி – இது வேற தமிழ்நாடு முகநூல் பக்கம்

தனிப்பட்ட
காதலுக்காக மட்டுமன்றி
தான் வாழும் சமூகத்தின்
கொடுமைகளுக்கு
எதிராகத் துடிக்கும்
அவள் இதயம்.
என்ன ஒரு திண்மை!

சாதிவெறியைப் பார்த்து
சொந்த தந்தையையும்
வெறுத்தாள்.
சமத்துவத்தை நேசிக்கும்
சுயமரியாதை
உணர்வைப் பார்த்து
பெரியாரை தந்தையாய்
நினைத்தாள்.
இவளல்லவோ பெண்!

நேசித்த காதலனை
கண் எதிரே
வெட்டி வெறியாடிய போதும்
நிலைகுலைந்த
தனக்காக மட்டும்
கதறவில்லை
அந்தக்காதல்.

வெறுக்கத்தக்க சாதிவெறியை
கட்டி அழும்
சமூகத்தின் குரூரத்தை
பேசுகிறது அவள் குரல்.

கவுசல்யா,
யாரையும்
பாவப்பட  கூப்பிடவில்லை,
சாதிவெறி ஆணவத்திற்கு எதிராக
கோவப்பட கூப்பிடுகிறாள்…

விலங்குகள் கூட
விளங்கிக் கொள்ளும்
சக அன்பை,
மனிதர்களுக்கு மறுக்கும்
கயமைத்தனம் தான் சாதி.
கவுசல்யா போல்
சுயசாதிக்கு எதிரான
கலகம்தான் நீதி!

வெட்டியவர்கள்
சமூகத்தின் கண்களுக்கு
தழும்பாக,
வெட்டுப்பட்டவளோ
சமூக நீதியின் பிழம்பாக,

சங்கர்
வெட்டவெட்ட துளிர்க்கிறான்
கவுசல்யாவிடம்,
பெரியார் மொழியில்
நகைக்கிறான்

சாதிய மனம்
இருந்தாலும்
அழுகிடும் பிணம்

சங்கர் இறந்தாலும்
கவுசல்யாவின்
கருத்தில் பரவிடும்
சமூக நறுமணம்.

ஒரு ஆணை
விரும்பியதைவிட
சங்கர் எனும்
தாழ்த்தப்பட்டவரை
காதலித்தது தான்
சாதிய மனநிலைக்கு
கடுங்குற்றம்.

சங்கரின் மீதான காதல்
சமூகத்தின் மீதான காதலாக
விரிவதைப்பார்த்து
ஆணாதிக்கத்தின் வக்கிரங்கள்
வசவுகளில் வாழ்கிறது.
உண்மையில்
‘வாழா வெட்டி’யானது
கவுசல்யா அல்ல,
வக்கிரம் பிடித்த சாதிவெறி.

கெட்ட வார்த்தை சாதிக்காரர்களே
தாங்கள் கெட்டழிவது திண்னம்!
பல கவுசல்யாக்களை உருவாக்கும்
பெரியார் மண்ணில்
பலிக்காது உங்கள் எண்ணம்!

கவுசல்யாவின்
தனிப்பட்ட காதல் பிரச்சனை என்று
யாரும் ஒதுங்கிட முடியுமா?

சாதியின் காதலர்கள்
வெறியோடு
எகிறி வரும் போது,

காதலுக்காக
உருகுபவர்கள்,
காதலுக்காக
படம் எடுப்பவர்கள்,
காதலுக்காக
தத்துவம் பேசுபவர்கள்,
சுடப்பட்ட காவலர்க்கு
வீரவணக்கம் செலுத்தும்
விசித்திர காதல் தளபதிகள்
யாருமே
வெட்டப்பட்ட
கவுசல்யா பக்கம்
காணவில்லையே ஏன்?

சாதிவெறி
அரிவாளோடு சுத்தும்
கூலிப்படை என்று
நாம் நினைத்தால்
அது அறியாமை.

சாதிவெறியர்கள்…
சினிமாவாக
இலக்கியாமாக, எழுத்தாக
பேஸ்புக்காக, டிவிட்டராக
நம்மை சுற்றி திரிகிறார்கள்.

சமூகத்தின் காதலர்களே
நாம்
கவுசல்யாக்களாக
உரு‍வெடுப்போம்
சாதிவெறிக்கு எதிராக
பெரியாரின் தடியை
முன்னேடுப்போம்!

-துரை. சண்முகம்


 

வங்கி மறுமுதலீடு : தரகு முதலாளிகளுக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடி !

0

பொருளாதார வளர்ச்சியைத் தூண்டிவிடுவது, வேலைவாய்ப்பை உருவாக்குவது எனும் அடிப்படையில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் கோடி ரூபாய் மறுமுதலீடு செய்வது, ஏழு இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நெடுஞ்சாலைகளை அமைப்பது ஆகிய இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது, மோடி அரசு.

“பொதுத்துறை வங்கிகளுக்கு அளிக்கப்படும் மறுமுதலீடால், அவை தொழில்களுக்குக் கடன் கொடுப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் தடைகளும் குறைந்து, தொழில் முனைவோரின் தேவைக்கேற்ப வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். மார்ச் 2022 -க்குள் 83,777 கி.மீ. தொலைவிற்குச் சாலை அமைக்கும் பாரத்மாலா திட்டத்தின் கீழ் 14.2 கோடி மனித உழைப்பு நாட்கள் உருவாக்கப்படும்” என இந்தத் திட்டங்களால் அடுத்த இரண்டொரு ஆண்டுகளில் ஏற்படவுள்ள பலன்கள் குறித்துக் கவர்ச்சிகரமான வாதங்களும் புள்ளிவிவரங்களும் எடுத்து வீசப்படுகின்றன.

இந்த ஆரூடமெல்லாம் பலிக்குமா, பலிக்காதா என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, இந்த இரண்டு அறிவிப்புகளும் பா.ஜ.க. அரசு தோல்வியடைந்துவிட்டதை எடுத்துக்காட்டும் ஒப்புதல் வாக்குமூலங்கள் என்றே கூறலாம். பொருளாதாரத் தேக்கமும், வேலைவாய்ப்பின்மையும், பணமதிப்பழிப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பும் மோடியின் டவுசரைக் கழட்டி, ‘வளர்ச்சி’, ‘அச்சே தின்’ குறித்த அவரது வாய்வீச்சுகளையெல்லாம் அம்மணமாக்கவிட்ட நிலையில், இந்த இரண்டு அறிவிப்புகள் வெளிவந்திருப்பது தற்செயலான பொருளாதார நடவடிக்கையல்ல.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் தோல்வியிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆளுங்கட்சிகள் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு கவர்ச்சித் திட்டங்களை அவிழ்த்துவிடுவார்களே, அதைத்தான் மோடி அரசும் செய்திருக்கிறது. வேறுபாடு என்னவென்றால், இந்த இரண்டு திட்டங்களும் மக்களின் பெயரால் கார்ப்பரேட் முதலாளிகளுக்குப் பரிமாறப்படும் கறி விருந்தாகும்.

குஜராத் மாநிலத் தேர்தலில் ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்தோடு 200 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியைக் குறைத்திருக்கும் மோடி அரசு, 2019 -இல் வரவுள்ள பொதுத் தேர்தலை மனதில்கொண்டு, 9 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான இந்த இரண்டு கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.

மக்களின் வாக்குகளைக் கவரக்கூடிய கவர்ச்சித் திட்டங்களை ஆளுங்கட்சியோ எதிர்க்கட்சியோ அறிவிக்கும்போது நிதிப் பற்றாக்குறை என மூக்கைச் சிந்தும் மேட்டுக்குடி அறிஞர் பெருமக்கள், கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் பாக்கெட்டை நிரப்பக்கூடிய இந்தத் திட்டங்களைக் கைதட்டி வரவேற்று, தங்களின் அறிவு நாணயத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் இந்தியாவில் முதலீடு செய்யும் தரத்தை மூடிஸ் நிறுவனம் உயர்த்தியிருப்பதையும், உலக நாடுகளின் முதலீட்டு வரிசையில் இந்தியா முப்பது இடங்கள் முன்னேறியிருப்பதையும் தனது ஆட்சியின் சாதனையாகப் பீற்றிக் கொண்டார், மோடி. ஆனால், நடப்பது என்ன?

“தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய இன்னும் சில காலம் பிடிக்கும். அதுவரை மைய, மாநில அரசுகளும், பொதுத்துறை நிறுவனங்களும்தான் முதலீட்டுச் செலவுகளைச் செய்ய வேண்டும்” என்கிறார் எல். அண்ட் டி. நிறுவன அதிபர் எஸ்.என்.சுப்பிரமணியன். அதற்கேற்ப பல இலட்சம் கோடி ரூபாய் பெறுமான மக்களின் வரிப்பணம்தான் இந்த இரண்டு திட்டங்களிலும் முதலீடாகக் கொட்டப்படுகிறது. தனியார்மயம் – உலகமயம் என்பதே மக்களின் வரிப்பணத்தை, பொதுச் சொத்துக்களை கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திற்குப் படையல் இடும் நடவடிக்கைதான் என்பது இந்த இரண்டு அறிவிப்புகளின் வழியே மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.

வாஜ்பாயி, தனது ஆட்சியில் நாட்டைக் குறுக்கும் நெடுக்குமாக இணைக்கும் தங்க நாற்கரண சாலைத் திட்டத்தைச் செயல்படுத்தினார். அந்தத் திட்டத்தால் வளர்ச்சியடைந்தது யார்? நான்கு தட விரைவுச் சாலைகளை அமைப்பதற்காக பல்லாயிரக்கணக்கான விவசாயிகளிடமிருந்து அவர்களின் நிலங்கள் பறித்தெடுக்கப்பட்ட அதேசமயத்தில், சிமெண்ட், இரும்பாலை முதலாளிகளும், எல்.அண்ட் டி. போன்ற கட்டுமான நிறுவனங்களும் கொள்ளை இலாபம் ஈட்டின. கட்டணமின்றி நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தி வந்த பொதுமக்களின் மீது டோல்கேட் கட்டணக் கொள்ளை திணிக்கப்பட்டது. மோடியின் பாரத்மாலா திட்டம் இந்த வழிப்பறிக் கொள்ளையை மேலும் விரிவுபடுத்துவதைத் தாண்டி, வேறு எந்த வளர்ச்சியையும் கொண்டுவரப் போவதில்லை.

2.11 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான வங்கி மறுமுதலீட்டுத் திட்டமோ, விஜய் மல்லையா, அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகள் வைத்துள்ள வங்கிக் கடன் பாக்கியை மறைமுகமாகத் தள்ளுபடி செய்யும் சதியாகும். மேலும், 58,000 கோடி ரூபாய் பெறுமான பொதுத்துறை வங்கிகளின் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் தந்திரமும் இதில் அடங்கியிருக்கிறது.

***

மோடியின் ஆட்சியில் தொழில் வளர்ச்சியைவிட, வாராக் கடன்தான் மலையளவு வளர்ந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் வங்கிகளின் வாராக் கடன் 4.55 இலட்சம் கோடி ரூபாய் அதிகரித்திருப்பதாகக் குறிப்பிடுகிறது, இந்து நாளிதழ். சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில், இந்திய வங்கிகளின் மொத்த வாராக் கடன் 11.5 இலட்சம் கோடி ரூபாய் என மதிப்பிட்டிருக்கிறது. வாராக் கடன்களோடு தவணை முறை மாற்றியமைக்கப்பட்ட கடன்களையும் சேர்த்தால் வங்கிகளின் வாராக் கடன் 15 இலட்சம் கோடி ரூபாயாகும் என்கிறார், அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளத்தின் தலைவர் சி.எச்.வெங்கடாச்சலம்.

பொதுத்துறை வங்கிகள் விவசாயம், சிறுதொழில்கள், தனிநபர்கள் எனப் பலவிதமான கடன்களை அளித்திருந்தாலும், வாராக் கடனில் பெரும் பகுதி அம்பானி, அதானி உள்ளிட்ட இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் ஏப்பம் விட்டுள்ள கடன்களாகும். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆலோசனைக் குழு அளித்திருக்கும் அறிக்கை, வங்கிகளின் மொத்த வாராக் கடனில் 25 சதவீதத்தை 12 நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பதாகக் குறிப்பிடுகிறது. தனது மொத்த வாராக் கடனில் வெறும் 11 சதவீதம் மட்டும்தான் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் திரும்பச் செலுத்தாத தொகையாகும் எனக் குறிப்பிடுகிறது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா.

டிராக்டர் கடன் தவணையைக் கட்டத் தவறிய திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரன் வங்கி ஏவிவிட்ட குண்டர்களால் தாக்கப்பட்டு இறந்துபோனார். கடன் தள்ளுபடி கேட்டுப் போராடிய ம.பி. விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகள் உதாசீனப்படுத்தப்பட்டனர். ஆனால், தரகு முதலாளி விசயத்திலோ மோடி அரசு பெருந்தன்மையோடும் கருணையோடும் நடந்து வருகிறது.

விஜய் மல்லையாவை இலண்டனுக்கு வழியனுப்பி வைத்தது மட்டுமல்ல, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பெரு நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த 1,88,287 கோடி ரூபாய் பெறுமான கடன்களைக் கமுக்கமாகத் தள்ளுபடி செய்திருக்கிறது, மோடி அரசு. பொதுத்துறை வங்கிகள் 2016 – 17 நிதியாண்டில் ஈட்டிய 1,58,982 கோடி ரூபாய் இலாபத்தை வாராக் கடன்களுக்கு ஈடுகட்டுமாறு செய்ததால், அவை அந்த ஆண்டில் 11,388 கோடி ரூபாய் நட்டமடைந்தன.

வாராக் கடன்களால் நட்டத்திலும் திவாலாகும் அபாயத்திலும் சிக்கியிருக்கும் பொதுத்துறை வங்கிகளை மீட்பது என்ற பெயரில் இப்பொழுது 2.11 இலட்சம் கோடி ரூபாயை மொய்யாக எழுதத் துணிந்திருக்கிறது, மோடி அரசு.

காங்கிரசு அரசு அலைக்கற்றையையும் நிலக்கரிச் சுரங்கங்களையும் அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திற்கு வாரிக் கொடுத்தது ஊழல் என்றால், மோடி அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் வாராக் கடன்களை, பொது மக்களின் சேமிப்பைக் கொண்டு ஈடு செய்துவருவதை என்னவென்பது? சட்டவிரோதமாக நடக்கும் முறைகேடுகள் மட்டும்தான் ஊழல் என்ற சமூகத்தின் பொதுப்புத்தியைப் பயன்படுத்திக்கொண்டுதான் மோடி தன்னைப் பரிசுத்தவானாகக் காட்டிவருகிறார். அந்தப் பொதுப்புத்தியை உதறிவிட்டுப் பார்த்தால், மோடி அரசு கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திற்கு சட்டபூர்வமாக அளித்துவரும் ஒவ்வொரு சலுகையும் மெகா ஊழல்தான்.

***

பா.ஜ.க. ஆட்சியில் கார்ப்பரேட் கடன்காரர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்தச் சலுகைகளைவிட, வாராக் கடன்கள் குறித்து சங்கப் பரிவாரங்கள் கொண்டிருக்கும் அணுகுமுறைதான் மிக ஆபத்தானது. ஆர்.எஸ்.எஸ்.இன் பொருளாதாரப் புலியான துக்ளக் குருமூர்த்தி, “கடன்களைக் கட்டத் தவறும் நிறுவனங்களுக்கு மேலும் மேலும் தவணைகள் கொடுக்க வேண்டுமே தவிர, அவர்களுக்கு நெருக்கடி தரக் கூடாது. இதுதான் நமது பாரத நடைமுறை. இதற்கு மாறாக, ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் தவணை தவறிய கடன்களை நட்டக் கணக்கில் சேர்த்ததன் விளைவுதான் வங்கிகளின் வாராக் கடன்” என வாதிடுகிறார்.

இதுதான் ஆடிட்டர் புத்தி என்பது. இந்த வாதத்தின் மூலம் தானொரு கார்ப்பரேட் முதலாளிகளின் தரகன் எனக் காட்டிக்கொண்டிருக்கிறார், குருமூர்த்தி.

வாங்கிய கடனை ஒழுங்காகக் கட்டு என்றுதான் கூறினார் ரகுராம் ராஜன். அவர் ரிசர்வ் வங்கி கவர்னர் ஆன பிறகுதான், தேவ இரகசியம் போல அமுக்கி வைக்கப்பட்டிருந்த வாராக் கடன் தொகை வெளியே வந்தது. அனில் அம்பானி, எஸ்ஸார், லான்கோ இன்ஃப்ராடெக் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது சொத்தை விற்று வங்கிக் கடனைக் கட்ட வேண்டிய நிர்பந்தம் உருவானது. இப்படி நெருக்குதல் கொடுத்ததன் காரணமாகத்தான், பா.ஜ.க. யோக்கியசிகாமணிகள் அவருக்கு நெருக்குதல் கொடுத்து, பதவி விலகிச் செல்லுமாறு செய்தனர்.

வாராக் கடன் குறித்த பிரச்சினையில் ரிசர்வ் வங்கிக்கும் மோடி அரசிற்கும் இடையே இப்பொழுதுகூடப் பனிப்போர் நடந்து வருவதாகக் கூசாமல் புளுகி வருகிறார், குருமூர்த்தி. உண்மையில் கடந்த மூன்று ஆண்டுகளில் நிலுவையில் உள்ள வாராக் கடன்களில் ஒரு பைசாவைக்கூட மோடி அரசு வசூலிக்கவில்லை. வாராக் கடன்களை வசூலிப்பதற்காகவே புதிய திவால் சட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாக மோடி அரசு கூறிவந்தாலும், அந்தச் சட்டத்தின் கீழ் இதுவரை எந்தவொரு நிறுவனத்தின் சொத்தும் ஏலத்தில் விடப்படவில்லை.

எந்த நிறுவனம் வங்கிக் கடனைச் செலுத்தத் தவறியிருக்கிறதோ, அந்த நிறுவனமும் ஏலத்தில் கலந்துகொண்டு தனது சொத்துக்களைத் தானே ஏலத்தில் எடுக்கலாம் என்ற சலுகையைத் தமது அரசு நீக்கிவிட்டதாகப் பீற்றிவருகிறார், மோடி. அதனாலென்ன, கடனைச் செலுத்த தவறிய நிறுவனங்கள் தமது பினாமிகளின் மூலம் ஏலத்தில் கலந்துகொள்ள முடியுமே. இந்தச் சட்டம், திருத்தம் எல்லாம் மோடியின் இன்னொரு மோசடி தவிர வேறல்ல.

வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள எஸ்ஸார் ஸ்டீல், பூஷன் ஸ்டீல், லான்கோ இன்ஃப்ராடெக் உள்ளிட்ட 12 நிறுவனங்களை இப்புதிய திவால் சட்டத்தின் கீழ் கொண்டு வந்து, அவற்றின் சொத்துக்களை டிசம்பர் இறுதிக்குள் ஏலத்தில் விட வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. ஆனால், நவம்பர் மாத இறுதி வரையிலும் இவ்விசயத்தில் ஒரு துரும்புகூட நகரவில்லை. இப்புதிய திவால் சட்டமும் சோளக் காட்டு பொம்மைதான் என்பது இதன் வழியாக அம்பலமாகியிருக்கிறது. ஆனாலும், இப்படியான சோளக் காட்டு பொம்மை சட்டம்கூட இந்தியாவிற்குப் பொருந்தாது என வாதிடுகிறார், குருமூர்த்தி.

ஏல முறையில் காணப்படும் இந்தத் தாமதத்தைக் காட்டி, வாராக் கடன் மொத்தத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டியதில்லை, அதில் குறிப்பிட்ட அளவிற்குத் தள்ளுபடி செய்யும் சலுகையை நிறுவனங்களுக்கு வழங்கலாம் எனத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் ஆலோசனையைப் பொருளாதார நிபுணர்களும் அதிகார வர்க்கமும் முன்வைத்திருக்கிறது.

இந்தச் சலுகைக்கு ஆளும் வர்க்கம் சூட்டியிருக்கும் பெயர் ஹேர்கட். சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில், நான்கு இலட்சம் கோடி ரூபாய் வரை கடன் வைத்திருக்கும் 50 நிறுவனங்களுக்கு 60 சதவீத ஹேர்கட் – 2.4 இலட்சம் கோடி ரூபாய் வரை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசிற்குப் பரிந்துரைக்கிறது. மோடி அரசு 2.11 இலட்சத்தை வங்கிகளுக்குக் கொடுக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் எள் என்று சொன்னவுடன் எண்ணெயாக நிற்கிறார், மோடி. இந்த அடிவருடித்தனத்திற்கு அவர்கள் சூட்டியிருக்கும் பெயர் செயல் திறமை!

-திப்பு

***************************

பெட்டிச் செய்தி : இனி கோவணம்கூடத் தப்பாது!

ங்கித் தீர்மானம் மற்றும் டெபாசிட் காப்பீடு – 2017 என்றொரு மசோதாவை கடந்த ஆகஸ்டு மாதத்தில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்திருக்கிறது, மோடி அரசு. இம்மசோதா, வங்கிகளில் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கி, அப்பணத்தை வங்கியின் மூலதனமாக மாற்றிக் கொள்வதற்கு வங்கி நிர்வாகங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. இதற்கு வாடிக்கையாளர்களின் சம்மதத்தைப் பெற வேண்டிய அவசியம் கிடையாது. வாடிக்கையாளர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொள்ளப்படும் தொகைக்கு ஈடாக வங்கியின் பங்குகள் அல்லது கடன் பத்திரங்கள் தரப்படும் என அறிவிக்கிறது இச்சட்டம். அவல் கொடுத்தவனுக்கு உமியைக் காட்டும் மோசடி இது.

வாராக் கடனால் தள்ளாடிக் கொண்டிருக்கும் பொதுத்துறை வங்கிகளைப் பாதுகாக்கவே இந்தச் சட்டம் என வக்கணை பேசுகிறது, மோடி அரசு. வங்கிப் பணத்தைக் கொள்ளையடித்த விஜய் மல்லையா, அம்பானி, அதானிக்களின் சொத்துக்களைக் கைப்பற்ற மறுக்கும் மோடி அரசு, மக்களின் சேமிப்பைக் கொள்ளையடிக்கத் துணிகிறது.

பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றுக்கு அடுத்து மக்கள் தலையில் இறங்கியிருக்கும் அடுத்த இடி இந்தச் சட்டம்.

ஒவ்வொரு கொள்ளைத் திட்டத்தை அறிவிக்கும்போதும், புதிய இந்தியா பிறக்கப் போவதாக அடித்துவிடுகிறார், மோடி. பழைய இந்தியாவில் மக்களிடம் மிஞ்சியிருந்த கோவணம்கூட மோடியின் புதிய இந்தியாவில் இருக்காது போலும்!

-புதிய ஜனநாயகம், டிசம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

ராஜீவுக்கு போஃபர்ஸ் ! மோடிக்கு ரபேல் !!

1
இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பிரான்சு அதிபர் ஃபிரான்கோயிஸ் ஹாலண்டே இடையே ரபேல் பேர ஒப்பந்தத்தை மாற்றியமைப்பது தொடர்பாக பாரீஸ் நகரில் நடந்த பேச்சுவார்த்தை.(கோப்புப் படம்)

714-ஐ விட 1611 அதிகமென்பதை ஐந்தாம் வகுப்பு மாணவன்கூடச் சொல்லிவிடுவான். ஆனால், இது ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் வரும் கணக்கல்ல. ரபேல் போர் விமான பேரம் தொடர்பான கணக்கு. அதனால் 1611 குறைவானது எனப் பாரதப் பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்டு பா.ஜ.க.வைச் சேர்ந்த அனைவரும் சாதிக்கிறார்கள்.

மன்மோகன் சிங் ஆட்சியின் இறுதியாண்டுகளில் பிரெஞ்சு நிறுவனமான தஸ்ஸால்டிடம் இருந்து 90,000 கோடி ரூபாய் மதிப்பில் 126 மத்திய ரக பல்நோக்குப் போர் விமானங்கள் (MMRCA – Medium Multi-Role Combat Aircraft) வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் பொதுத்துறை இராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு விமானத் தொழில்நுட்பங்களை மாற்றித் தருவது, 108 விமானங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது, இந்த ஒப்பந்தத்தின் மூலம் தஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு கிடைக்கும் மொத்த வருவாயில் 50 சதவீதத்தை இந்தியாவில் முதலீடு செய்வது ஆகிய விதிகள் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்தன.

ரபேல் போர்விமானங்களை வாங்குவது தொடர்பாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிராண்டு அதிபர் ஃபிரான்கோயிஸ் ஹாலண்டே இடையே நடந்த பேச்சுவார்த்தை.(கோப்புப் படம்)

பிரான்சு நாட்டைத் தவிர, பிற நாட்டு விமானப் படைகள் ரஃபேல் விமானங்களைச் சீந்தாத காரணத்தால், தஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வரப்பிரசாதமாக அமைந்தது. இதன் காரணமாகப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் உள்ளிட்டுப் பல்வேறு தரப்பிலிருந்து இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக விமரிசனங்கள் எழுந்தன.

நியாயமாகப் பார்த்தால், பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்த பிறகு இந்த ஒப்பந்தத்தைக் கைகழுவியிருக்க வேண்டும். ஆனால் மோடி, 2012-இல் 126 விமானங்களை வாங்க காங்கிரசு அரசு செய்திருந்த ஒப்பந்தத்தைக் கைவிட்டு,  36 விமானங்களை வாங்குவதற்கு ஒரு புதிய ஒப்பந்தத்தைப் பேசி முடித்தார். பழைய ஒப்பந்தத்தின்படி 126 விமானங்களின் விலை 90 ஆயிரம் கோடி ரூபாய். இதன்படி ஒரு விமானத்தின் விலை 714 கோடி ரூபாய். மோடியின் புதிய ஒப்பந்தத்தின்படி 36 விமானங்களுக்கான விலை 58 ஆயிரம் கோடி, ஒரு விமானத்தின் விலை 1611 கோடி ரூபாய்.

சந்தை விலையைவிடக் குறைவான விலைக்கு 2ஜி அலைக்கற்றைகளை விற்றது காங்கிரசு கூட்டணி அரசு. சந்தை விலையைவிடக் கூடுதல் விலைக்குப் போர் விமானங்களை வாங்குகிறது மோடி அரசு. முன்னது ஊழல் என்றால், பின்னது..? அப்படி யாரும் விமரிசிக்கக் கூடாதென்ற முன்னெச்சரிக்கையோடு, “இந்தப் பேரத்தைக் கேள்விக்குள்ளாக்குவது, நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்குவதற்கு ஒப்பானது” என ஒரே போடாகப் போட்டுவிட்டார், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். மாமிக்கு வாய்த்த இந்த வாய்த்திறமை, ஆ.ராசாவுக்கு இல்லாமல் போய்விட்டது.

விலை போகாத சரக்கை அதிக விலை கொடுத்து வாங்கியதோடு மட்டும் இந்தப் புதிய பேரம் நின்றுவிடவில்லை. பழைய ஒப்பந்தப்படி, பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்சுடன் இணைந்து 108 விமானங்களைத் தயாரிக்கவும், அந்நிறுவனத்துக்கு தொழில்நுட்பங்களை மாற்றிக் கொடுக்கவும் இசைந்திருந்த தஸ்ஸால்ட், இப்பொழுது, தனது தொழில்நுட்பங்களை இந்திய நிறுவனங்களுக்கு மாற்றித் தர முடியாதென்றும், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தயாரிக்கும் விமானங்களில் கோளாறுகளோ, விபத்துக்களோ ஏற்பட்டால், அதற்குத் தஸ்ஸால்ட் நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்ளாது என்றும் புதுப்புது நிபந்தனைகளை விதித்து வருகிறது.

இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பிரான்சு அதிபர் ஃபிரான்கோயிஸ் ஹாலண்டே இடையே ரபேல் பேர ஒப்பந்தத்தை மாற்றியமைப்பது தொடர்பாக பாரீஸ் நகரில் நடந்த பேச்சுவார்த்தை.(கோப்புப் படம்)

இந்த ஒப்பந்தம் வியாபாரமின்றிக் காத்துவாங்கி வரும் தஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு மட்டுமின்றி, உள்ளூர் தரகு முதலாளிகளுக்கும் அடித்திருக்கும் பம்பர் பரிசாகும். காங்கிரசு ஆட்சியில் தஸ்ஸால்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கையெழுத்தானவுடனேயே, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், அனில் அம்பானியின் அனில் திருபாய் அம்பானி குழுமமும் தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டன.

நரேந்திர மோடி காங்கிரசு அரசு போட்ட ஒப்பந்தத்தைக் கைவிட்டாலும், அம்பானிகளைக் கைவிடவில்லை. தஸ்ஸால்டுடன் புதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிப்பதற்கு மோடி பாரீஸ் சென்றபோது, அம்பானியையும் கையோடு அழைத்துச் சென்றார். இப்புதிய ஒப்பந்தப்படி, அம்பானியின் நிறுவனங்களுக்கு 22,000 கோடி ரூபாய் பெறுமான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஆர்டர்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் அம்பானிகளுக்கு, மோடி படைத்திருக்கும் கறி விருந்து இது.

அரசுத் துறை கொள்முதல்களில் வழக்கமாக பின்பற்றப்படும் டெண்டர் விதிமுறைகளின் படி, விற்பனைக்கான உத்தேச கோரிக்கையின் (Request for Proposal – RFP) அடிப்படையில் விலை, விற்பனைப் பொருளின் இறுதிக் கட்டமைப்பு (configuration), பொருட்களின் எண்ணிக்கை, அளவு ஆகியவற்றை ஒப்பந்தம் கையெழுத்தான பின் மாற்றக்கூடாது. இவற்றுள் ஏதாவது ஒன்றை மாற்றினாலும், புதிதாக டெண்டர் விடவேண்டும். இந்த விதியைக் கடாசிவிட்டு புதிய ஒப்பந்தத்தைச் செய்து கொண்டிருக்கிறார், மோடி. தஸ்ஸால்ட் நிறுவனமோ முந்தைய ஒப்பந்தத்தில் தான் ஒப்புக்கொண்ட  நிபந்தனைகளை நிறைவேற்ற மறுத்துவருகிறது.

அலைக்கற்றை விற்பனையில் ஏல நடைமுறையை மீறினார் என்பது ஆ.ராசாவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு. யோக்கியர் மோடி டெண்டர் விதிமுறைகளை மீறி, தஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து அதிக விலை கொடுத்துப் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். அம்பிகளுக்கு அது ஊழலாம், இது தேசத் தொண்டாம்!

***

தஸ்ஸால்ட் நிறுவனத்தோடு கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள அம்பானி சகோதரர்கள்.

இந்திய இராணுவத்திற்கு 126 விமானங்கள் வாங்குவதற்குக் கையெழுத்தான ஒப்பந்தத்தை மோடி கைவிட்டதற்குக் காரணம் சுவாரசியமானது. அம்பானிகளின் நிறுவனங்கள் தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்திருப்பதைப் போல, டாடா குழுமம் எப்.16 இரக போர் விமானங்களைத் தயாரிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த லாக்ஹீட் மார்டின் நிறுவனத்துடனும், அதானி குழுமம் கிரிப்பென் ரக போர் விமானங்களைத் தயாரிக்கும் இன்னொரு அமெரிக்க நிறுவனமான சாப் உடனும் கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளன. தஸ்ஸால்ட் நிறுவனத்திடம் 126-க்குப் பதிலாக  36 போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கும் மோடி அரசு, மீதி விமானங்களை டாடாவும் அதானியும் கூட்டுச் சேர்ந்துள்ள அமெரிக்க நிறுவனங்களிலிருந்து வாங்கும் முடிவை எடுத்திருக்கிறது.  அவ்விரு நிறுவனங்களுக்குப் புதிய போர் விமானங்களை வாங்குவதற்கான தகவல் கோரும் ஆவணங்களை (RFI – Request for Information) அனுப்பி வைத்துள்ளது இந்திய அரசு.

ஆக, விமானப் படைக்குத் தேவையான 126 விமானங்களை பிரான்சு மற்றும் அமெரிக்க கம்பெனிகளுக்கும்; அம்பானி, அதானி மற்றும் டாடா குழுமங்களுக்கும் பங்கு வைத்திருக்கிறார் மோடி. வேறு தரகு முதலாளிகள் யாரேனும் தேசப் பாதுகாப்பில் தங்களுடைய பங்களிப்பைச் செலுத்த விரும்புவார்களாயின், அவர்களுக்குரிய பங்கையும் வழங்குவதன் மூலம் தனது ஜனநாயக மாண்பினை அவர் நிரூபிப்பார்.

2ஜி அலைக்கற்றையைத் தனக்கு வேண்டப்பட்ட உப்புமா கம்பெனிகளுக்கு ஆ.ராசா தூக்கிக் கொடுத்தார் என்பது அவ்வழக்கில் ஒரு குற்றச்சாட்டு. 126 போர் விமானங்களை வாங்குவதற்கு காங்கிரசு அரசு சர்வதேச டெண்டர் கோரியபோது, அதில் கலந்துகொண்ட மேற்படி இரு அமெரிக்க நிறுவனங்களும் தகுதியற்றவை என நிராகரிக்கப்பட்டன. அப்படி நிராகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மோடி அரசு போர் விமானங்களை வாங்க முயற்சிக்கிறது. பனை மரத்தடியின் கீழ் உட்கார்ந்துகொண்டு மோடி பாலைத்தான் அருந்துகிறார் என நம்புவோமாக!

***

ரபேல் பேரத்தில் நடந்துள்ள முறைகேடுகள், விலை உயர்வு ஆகியவற்றை நியாயப்படுத்த மோடி பக்தர்கள் அடுக்கும் வாதங்களனைத்தும் எருமை ஏரோப்பிளேன் ஓட்டிய ரகத்தைச் சேர்ந்தவை. இந்தியாவுக்கு தொழிநுட்பங்களை மாற்றித் தர தஸ்ஸால்ட் மறுப்பதைப் பற்றிக் கேட்டால், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளத் தகுதியற்றது என்று தஸ்ஸால்ட் முடிவு செய்தால் நாம் என்ன செய்ய முடியும் என்கிறார்கள். விமானத் தயாரிப்பில் அனுபவம் வாய்ந்த அப்பொதுத்துறை நிறுவனத்தைப் புறக்கணித்து விட்டு, எந்த முன்னனுபவமும் இல்லாத அம்பானியோடு மட்டும் எதனடிப்படையில் தஸ்ஸால்ட் ஒப்பந்தம் மேற்கொண்டது என்ற கேள்விக்குப் பதில் இல்லை.

பழைய ஒப்பந்தப்படி நமக்குக் கிடைக்கவிருந்த விமானங்கள் அடிப்படை மாடல்கள் எனவும், தற்போது வாங்க முடிவு செய்துள்ள விமானங்களில் கூடுதல் ஆயுதங்கள் பொருத்தும் வசதியிருப்பதால், விலை அதிகம் என்கிறார்கள். துப்பாக்கியைவிடத் தோட்டாக்களுக்கு அதிக விலை என்கிற மோசடியான தர்க்கத்துக்கு ஒரேயொரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம். விமானத்தில் பொருத்தப்படவுள்ள மெட்டியார் இரக ஏவுகணையின் சந்தை விலையே 12.6 கோடிதான். அதே போல் H.D.M.S. எனப்படும் ஹெல்மெட்டில் பொருத்தப்படும் வழிகாட்டும் அமைப்பின் விலை 2.4 கோடி. இவ்வாறு தனித்தனியே விமானத்தில் பொருத்தப்பட உள்ளதாகச் சொல்லப்படும் ஆயுதங்களின் சந்தை விலையைக் கூட்டினால், ஒரு விமானத்திற்கு 60 கோடி அதிகரிக்கலாம். ஆனால், தற்போது ஊதிப் பெருக்கப்பட்டுள்ள விலையோ 100 சதவீதத்துக்கும் அதிகம்

அமெரிக்க நிறுவனங்களோடு கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ள அதானி(இடது) மற்றும் ரத்தன் டாடா

அடுத்து, மோடி வாங்கவுள்ள விமானம் இந்தியாவுக்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்படுவதால் விலை அதிகமாவதைத் தவிர்க்க முடியாது என்கிறார்கள். ஆனால், 2012ம் ஆண்டின் டெண்டர் கோரும் ஆவணங்களிலேயே விமானங்கள் இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்கிற விதி உள்ளது. அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டுதான் 126 விமானங்களுக்கான பழைய விலையை தஸ்ஸால்ட் நிர்ணயித்தது. மேலும், விமான ஓட்டிகளுக்கான பயிற்சி, பயிற்சிக் கையேடு, விமானத்திற்கான தர உத்திரவாதம் என அனைத்துமே பழைய டெண்டர் ஆவணங்களில் நிபந்தனையாகச் சேர்க்கப்பட்டு, அவற்றையும்  கணக்கில்கொண்டுதான் தஸ்ஸால்ட் நிறுவனம் விலையை நிர்ணயித்தது.

ராஜீவ் காந்தி ஆட்சியின்போது போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து பீரங்கி வாங்கியதில் நடந்த ஊழலை நியாயப்படுத்துவதற்கு, அந்தப் பீரங்கிதான் கார்கில் போரில் பாகிஸ்தான் படைகளைத் தோற்கடிக்கப் பயன்பட்டது என்றொரு வாதம் இப்பொழுது காங்கிரசு அடிவருடிகளால் முன்வைக்கப்படுகிறது. மோடி, தனது ஆட்சியில் சந்தி சிரிக்கும் இந்த போர் விமான பேர ஊழலை நியாயப்படுத்த, ஓர் அதிரடிப் போரை நடத்தவும்கூடும். ஊழல், முறைகேடுகளை நியாயப்படுத்த தேசபக்தியைவிட வேறு சிறந்த கவசம் எதுவும் கிடையாது என்பதைப் பார்ப்பன பாசிசக் கும்பலுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை.

–     சாக்கியன்

-புதிய ஜனநாயகம், டிசம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

 

நீதித்துறை நாட்டாமை : எதிர்த்து நில் !

1

காஞ்சு போன நதிகளெல்லாம் வற்றாத கங்கையைப் பார்த்து  ஆறுதலடையும். அந்த கங்கையே காஞ்சுபோனா.. என்றொரு  வசனம் தங்கப்பதக்கம் திரைப்பாடலின் நடுவே வரும்.  உச்சநீதி மன்றத்தில் நவம்பர் 10 -ஆம் தேதியன்று தலைமை  நீதிபதி தீபக் மிஸ்ரா அரங்கேற்றிய காட்சிகளைக் கண்டு பல  முன்னாள் நீதிபதிகளும் மூத்த வழக்கறிஞர்களும் தெரிவித்த  கருத்துகள் இந்தப் பாடல் வரிகளுக்கு இணையானவை.

லல்லு பிரசாத் யாதவ் மீதோ ஆ.ராசா மீதோ ஊழல் வழக்கு  என்றால், அதனை விசாரித்து உச்சநீதி மன்றம் தண்டிக்கலாம், அல்லது விடுவிக்கலாம். உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி மீதே ஊழல் குற்றச்சாட்டு என்றால், அதனை யாரிடம் முறையிடுவது? அந்த வழக்கை யார் விசாரித்துத் தீர்ப்புச் சொல்வது?

***

ழல் குற்றச்சாட்டுக்குரிய வழக்கு, உ.பி. மாநிலத்தில்  மருத்துவக் கல்லூரியொன்றுக்கு அனுமதி வழங்குவது  தொடர்பானது. உ.பி. -யைச் சேர்ந்த பிரசாத் கல்வி அறக்கட்டளை  என்ற அமைப்பு புதியதொரு மருத்துவக் கல்லூரி  தொடங்குவதற்கு 2015 -இல் மருத்துவக் கவுன்சிலிடம்  விண்ணப்பித்தது. கல்லூரியைப் பார்வையிட்ட பின், அது  கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். கல்லூரியைப் போன்ற ஒரு  டுபாக்கூர் கல்லூரி என்பதால், அனுமதி மறுத்தது மருத்துவக்  கவுன்சில். உடனே மேற்படி பிரசாத் அறக்கட்டளை லோதா  கமிட்டியிடம் முறையிட்டது. அடுத்த ஆண்டுக்குள் எல்லா குறைபாடுகளையும் சரி செய்வதாக உத்திரவாதமளித்து அனுமதியும் பெற்றது.

அடுத்த ஆண்டில் கல்லூரியைச் சோதனை செய்த மருத்துவக்  கவுன்சில், மருத்துவமனையில் நோயாளி இல்லை,  கல்லூரியிலும் மாணவர்கள் இல்லை என்பன உள்ளிட்ட பிரச்சினைகளைப் பட்டியலிட்டு, அடுத்த இரண்டாண்டுகளுக்கு மாணவர் சேர்க்கைக்குத் தடை விதித்தது. இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது பிரசாத் அறக்கட்டளை.

தீபக் மிஸ்ரா, கன்வில்கார், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய  அமர்வு அறக்கட்டளைக்கு அநீதி எதுவும் இழைக்கப்படாமல் தவிர்க்கும்பொருட்டு இன்னொருமுறை முடிவைப் பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சகத்துக்கு உத்தரவிட்டது. அறக்கட்டளை நிர்வாகத்திடம் இன்னொரு விசாரணை நடத்தி, இன்னொரு முறை பரிசீலித்த சுகாதார அமைச்சகம், மீண்டும் பழைய முடிவையே உச்சநீதி மன்றத்தில் வலியுறுத்தியது.  அப்பவும் தீபக் மிஸ்ரா விடுவதாக இல்லை. கல்லூரியை  மீண்டும் ஒருமுறை நேரில் சென்று சோதனையிடுமாறு செப். 18 அன்று மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தரவிட்டது. தகுதியற்றவை  என்று அனுமதி மறுக்கப்பட்ட மேலும் 6 மருத்துவக்  கல்லூரிகளுக்குச் சாதகமாக ஆகஸ்டு மாத இறுதியில் தீர்ப்பு  வழங்கியிருக்கிறது இந்த அமர்வு.

பிரசாத் அறக்கட்டளைக்கு ஆதரவாக செப். 18 அன்று தீபக் மிஸ்ரா உத்தரவு பிறப்பித்த மறுநாளே, சி.பி.ஐ. ஒரு முதல்  தகவல் அறிக்கை பதிவு செய்தது. ஓய்வு பெற்ற ஒரிசா  உயர்நீதி மன்ற நீதிபதி குத்தூஸி உள்ளிடடோர் டில்லியைச் சேர்ந்த  விஸ்வநாத் அகர்வாலா என்ற நீதிமன்றத் தரகன் மூலம் பிரசாத்  கல்வி அறக்கட்டளைக்குச் சாதகமான தீர்ப்பை உச்சநீதி மன்றத்தில் வாங்குவதற்கு முயன்றனர் என்பது குற்றச்சாட்டு.  குத்தூஸி, ஹவாலா புரோக்கர்கள் மற்றும் அறக்கட்டளை  நிர்வாகிகள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. முதல் தகவல் அறிக்கையில்  நீதிபதிகளின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், இவர்களுடன்  பெயர் தெரியாத பொது ஊழியர்கள் சிலர் என்று கூறுகிறது சி.பி.ஐ. -இன் முதல் தகவல் அறிக்கை.

இதுவரை இந்த வழக்கில் நடந்துள்ள விசயங்களைப் படித்த  வாசகர்கள் யார் அந்தப் பொது ஊழியர்களாக இருக்கக்கூடும்  என்பதை எளிதில் ஊகிக்க முடியும். ஆனால், தலைமை  நீதிபதிக்கோ, மற்ற நீதிபதிகளுக்கோ எதிராக அசைக்க முடியாத  ஆதாரமே இருந்தால்கூட, அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு  செய்ய சி.பி.ஐ. -க்கு மட்டுமின்றி யாருக்கும் அதிகாரம் கிடையாது  என்பதுதான் தற்போது சட்டத்தின் நிலை. தலைமை நீதிபதி மீது  ஊழல் குற்றச்சாட்டு வந்துவிட்டபோது அதற்குச் சட்ட  வழிமுறைப்படி உள்ள தீர்வு என்ன என்பதுதான் அடுத்து எழும் கேள்வி.

சி.ஜே.ஏ.ஆர். Campaign for judicial accountability and reform என்ற  அமைப்பின் மூலம் நீதித்துறை சீர்திருத்தம் தொடர்பான  நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் உச்சநீதி மன்ற  வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷண், காமினி ஜெய்ஸ்வால் ஆகிய  இருவரும் நீதிபதி சிக்ரி மற்றும் நீதிபதி செல்லமேஸ்வர்  ஆகியோரது  தலைமையிலான அமர்வுகளில் தனித்தனியே இரு மனுக்களைத்  தாக்கல் செய்தனர். அந்த மனுக்களின் சாரம் இதுதான்.

பிரச்சினைக்குரிய இவ்வழக்கில் நீதிபதிகள் மீது குற்றம்  இருக்காது என்றே நம்புகிறோம். எவ்வாறாயினும், இந்த  வழக்கை சி.பி.ஐ. தொடரந்து விசாரிப்பதன் மூலம் ஒட்டு மொத்த  நீதித்துறையையும் அச்சுறுத்துவதற்கு இதனை அரசு  பயன்படுத்தும். எனவே, இவ்வழக்கை சி.பி.ஐ. -இடமிருந்து விடுவித்து, ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க  வேண்டும். அந்தக் குழுவை, தீபக் மிஸ்ரா உள்ளிட்ட மூன்று  நீதிபதிகளைத் தவிர்த்து, எஞ்சியுள்ள நீதிபதிகளில் மூத்தவர்களான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு  கண்காணிக்க வேண்டும்.

ஒரு வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க  வேண்டும் என்று முடிவு செய்யும் நிர்வாக அதிகாரம் தலைமை  நீதிபதிக்கு உரியது என்ற போதிலும், இந்த பிரச்சனையில்  தலைமை நீதிபதியே குற்றம் சாட்டப்பட்டவராக இருப்பதால், தன் வழக்கை விசாரிக்கின்ற நீதிபதிகள் யார் என்பதை அவர்  தீர்மானிப்பதோ, அந்த அமர்வில் ஒரு நீதிபதியாக அவரும்  இருப்பதோ தவறானது. யாரொருவரும் தனக்கு எதிரான  வழக்கில் தானே நீதிபதியாக இருக்க முடியாது என்பது மிகவும்  அடிப்படையான இயற்கை நீதிக் கோட்பாடு. எனவே, வழக்கை 5  நீதிபதிகள் அமர்வுக்கு விடவேண்டும் என்று கோரினர்.

இது  மிகவும் கவலைக்குரிய விசயம்தான் என்று கூறிய நீதிபதி செல்லமேஸ்வர், தீபக் மிஸ்ராவையும் உள்ளிட்ட 5 மூத்த  நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நவ, 13 அன்று இது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும், சி.பி.ஐ. தன் வசமுள்ள ஆவணங்கள் அனைத்தையும் இந்த அமர்விடம்  ஒப்படைக்க வேண்டும் என்றும் நவ, 9 ஆம் தேதியன்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை முடக்கும் நோக்கத்துடன் மேற்படி வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று உத்தரவிட்டார் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. அதில் இரண்டு நீதிபதிகள் விலகிக் கொள்ளவே, மீதமுள்ள 5 நீதிபதிகள் முன் விசாரணை தொடங்கியது. இந்த 5 பேரில் 3 பேர் தனியார்  கல்லூரிக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தவர்கள். பணியில் உள்ள  நீதிபதிகளில் மூத்தவர்களைக் கொண்டு இந்த அமர்வு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். வேறு இரண்டு நீதிபதிகள் ஒரு  தீர்ப்பினை வழங்கியிருக்கும்போது, அதனை மீளாய்வுக்கு உட்படுத்துவது என்றால், அப்படி உட்படுத்தும் அமர்வில் அந்த இரு நீதிபதிகளும் இருக்க வேண்டும் என்பது விதி. அதுவும் மீறப்பட்டது.

விசாரணை தொடங்கியது. மனுதாரராகிய பிரசாந்த் பூஷணைப் பேசவிடாமல், செட்டப் செய்து அழைத்து வரப்பட்ட ஒரு  வழக்கறிஞர் கூட்டம் ஊளையிட்டது. நீதிமன்றம் அவமதிக்கப்பட்டு விட்டதாகவும் பிரசாந்த் பூஷணின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பேசினர்.

முதல் தகவல் அறிக்கை உங்களைக் குறிப்பிடுவதால், நீங்கள்  இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று தீபக் மிஸ்ராவிடம் கூறினார் பிரசாந்த் பூஷண். என் பெயர் எப்.ஐ.ஆரில் இல்லை. உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பேன் என்றார் தீபக் மிஸ்ரா. ஒரு நீதிபதி மீது யாரும் எப்.ஐ.ஆர். போட  முடியாது எனும்போது, அப்படி எப்.ஐ.ஆர். போட்டிருந்தால், அதுவே நீதிமன்ற அவமதிப்பு குற்றம் என்றார் இன்னொரு  நீதிபதி அருண் மிஸ்ரா.

அப்படியானால் என் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை  எடுங்கள் என்றார் பிரசாந்த் பூஷண். அதற்குரிய அருகதைகூட  உங்களுக்குக் கிடையாது என்றார் தீபக் மிஸ்ரா. கூட்டம்  ஊளையிட்டது. மனுதாரராகிய என்னைப் பேசவிடாமலேயே வழக்கை நடத்துகிறீர்கள். உங்கள் விருப்பம் போலத் தீர்ப்பு  எழுதிக்கொள்ளுங்கள். நான் நீதிமன்றத்திலிருந்து வெளியேறுகிறேன் என்று கூறி, வெளியேறினார் பிரசாந்த்  பூஷண்.

எந்த வழக்கை யார் விசாரிப்பது என்பதைத் தலைமை நீதிபதியைத் தவிர வேறு யாரும் முடிவு செய்ய முடியாது என்று கூறி, இவ்வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட  வேறு ஒரு அமர்வை நியமித்தார் தலைமை நீதிபதி. அத்தோடு நிற்காமல், சி.பி.ஐ. விசாரித்துவரும் வழக்கில் தங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று விசாரணை தொடங்கு முன்னரே அதன் மீது தீர்ப்பும் வழங்கி விட்டார்.

தீபக் மிஸ்ராவால் நியமிக்கப்பட்ட அந்த 3 நீதிபதிகள் அமர்வு, சி.ஜே.ஏ.ஆர். அமைப்புக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம்  விதித்திருக்கிறது. நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு சொன்னாலே தண்டிப்போம் என்று மிரட்டுவதற்காகவே இந்த  உத்தரவு என்று இதனை விமரிசித்திருக்கிறார் பிரசாந்த் பூஷண்.

தீபக் மிஸ்ரா மீதான ஊழல் வழக்கு என்பது புதியதல்ல. அவர் மீது நிலமோசடிக் குற்றச்சாட்டு இருக்கிறது. சென்ற ஆண்டு  தற்கொலை செய்து கொண்ட அருணாசல பிரதேச முதல்வர்  கலிகோ புல், அன்றைய தலைமை நீதிபதி கேஹர், தீபக் மிஸ்ரா ஆகியோர் 49 கோடி ரூபாய் கொடுத்தால், சாதகமாகத் தீர்ப்பு  வழங்குவதாகப் பேரம் பேசினர் என்று தனது தற்கொலைக்  கடிதத்திலேயே எழுதியிருக்கிறார். அதற்கு முந்தைய தலைமை நீதிபதி தத்து மீது ஜெ. வுக்குப் பிணை வழங்கிய ஊழல், கர்நாடகத்தில் அவரது முறைகேடான சொத்துகள் குறித்து  கட்ஜு எழுப்பிய குற்றச்சாட்டுகள் ஆகியவை உள்ளன.  கே.ஜி.பாலகிருஷ்ணன் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

நீதிபதிகள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க  வேண்டும் என்று கேட்ட குற்றத்துக்கே 25 லட்சம் அபராதம்  விதிக்கப்படும்போது, அமித் ஷா வழக்கில் விசாரணை நடத்திய லோயாவுக்கு மரணம் விதிக்கப்பட்டதில் வியப்பில்லை.  மோடிக்கு எதிராகத் தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதிக்கு  மாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதிலும் ஆச்சரியமில்லை.

இதுதான் நீதித்துறையின் யோக்கியதை. இந்த நீதிமன்றம் சோரபுதின் வழக்கு விசாரணை விவரத்தையும் ஆதித்யநாத்  வழக்கு விவரத்தையும் வெளியிடக்கூடாது என்று  ஊடகங்களுக்குத் தடை விதிப்பதில் வியப்பிருக்கிறதா? அல்லது  செவிலியர் போராட்டம், போக்குவரத்து ஊழியர் போராட்டம்,  அரசு ஊழியர் போராட்டம் உள்ளிட்ட தொழிற்சங்க  போராட்டங்களுக்குத் தடைவிதிப்பதிலும், மிரட்டுவதிலும்  வியப்பிருக்கிறதா? வாயிற்புறம் வழியே நுழைந்து மக்களை  ஒடுக்குகிறது மோடி அரசு. நீதிமன்றத்துக்கு கொல்லைப்புற வழி.

சமீபத்தில் நடைபெற்ற தேசிய சட்ட தினக் கூட்டத்தில் பேசிய  சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அணுகுண்டுப் பொத்தானை  அழுத்தும் அதிகாரத்தைப் பெற்றிருக்கும் பிரதமருக்கு  நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் இருக்கக்கூடாதா என்று  கேள்வி எழுப்பினார்.

நீதிபதிகளை அணுகுண்டுக்கு ஒப்பிட்டுப் பேசிய நகைச்சுவையை விஞ்சியது தீபக் மிஸ்ராவின் பதிலில் பொதிந்திருந்த  நகைச்சுவை. குடிமக்களின் அடிப்படை உரிமையைப்  பாதுகாப்பதற்காகத்தான் நீதித்துறை சுதந்திரத்தை வலியுறுத்துவதாக அடக்கமாகப் பதிலளித்தார் மிஸ்ரா. பிரசாத்  அறக்கட்டளைக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கிய குடிமக்களின் சுதந்திரம் குறித்து அவர் சொல்லியிருக்கக்கூடும்.

-மருதையன்

-புதிய ஜனநாயகம், டிசம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

 

ஆர்.கே.நகர் அசிங்கமே இந்து ராஷ்டிரம் !

0

ர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. இரண்டு வேட்பாளர்களைக் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது. ஒருவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த கரு.நாகராஜன். மற்றொருவர், அ.தி.மு.க. என்ற பெயரில் உள்ள தமிழக பா.ஜ.க.வின் பி டீமைச் சேர்ந்த மதுசூதனன்.

மதுசூதனன் பா.ஜ.க.வின் ஆசிபெற்ற வேட்பாளர் மட்டுமல்ல, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆசிபெற்ற வேட்பாளரும்கூட. இரட்டை இலைச் சின்னத்தை ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். அணிக்கு ஒதுக்கிய கையோடு, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு நாளும் குறித்த அதனின் வேகத்தைக் கொண்டே இதனை யாரும் புரிந்துகொள்ளலாம்.

கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல் ஆணைய அதிகாரிகள் அ.தி.மு.க.வின் பூத் ஏஜெண்டுகளைப் போலத்தான் செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு படிவங்களில், அ.தி.மு.க.வின் பொதுச் செயலர் ஜெயா வைத்ததாகக் கூறப்படும் கைநாட்டை, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திலிருந்து வந்த கட்டளைப்படி, எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் ஏற்றுக்கொண்டோம் என ஒப்புதல் வாக்குமூலமே அளித்திருக்கிறார், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி.

ஏப்ரலில் நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்ததற்கு பணப் பட்டுவாடாவா காரணம்? அதுவொரு சாக்கு, அவ்வளவே. அத்தேர்தலில் பா.ஜ.க.வின் ஆசிபெற்ற மிக்சர் பன்னீர் அணி வெற்றிபெற முடியாது என்று தெரிந்தவுடன், அத்தேர்தலை ரத்து செய்வதற்கு டெல்லி சுல்தான் மோடிக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. அதையொட்டி சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அந்த ரெய்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணப்பட்டுவாடா விவகாரத்தைக் காரணமாக வைத்து அத்தேர்தலை ரத்து செய்தது, தேர்தல் ஆணையம். அந்த விவகாரத்தில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தால் குற்றஞ்சுமத்தப்பட்ட விஜய பாஸ்கர், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரும் இப்பொழுது மோடியின் பாதாரவிந்தங்களில் சரணடைந்து, அவரது அனுக்கிரஹத்தைப் பெற்றுவிட்டதால், அந்த வழக்கைத் தேர்தல் ஆணையமும் அமலாக்கத் துறையும் மறந்தேவிட்டன.

ஆர்.கே. நகர் தொகுதியில் இன்னும் 5,000 போலி வாக்காளர்களை நீக்காமல் இருப்பதாகத் தேர்தல் ஆணையத்தின் மீது தி.மு.க. தொடுத்துள்ள வழக்கும், நடிகர் விஷாலின் வேட்பு மனுவைப் பின்னிரவு நேரத்தில் தள்ளுபடி செய்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் சதியும் அ.தி.மு.க. மதுசூதனனை ஜெயிக்க வைக்க மத்திய பா.ஜ.க. அரசும் தேர்தல் ஆணையமும் எந்த எல்லை வரையும் செல்லக்கூடும் என்பதை எடுத்துக்காட்டிவிட்டன.

இரட்டை இலைச் சின்னத்தை ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அணிக்கு ஒதுக்கி தீர்ப்பளித்துள்ள தேர்தல் ஆணையம், அத்தீர்ப்பில் அந்த அணிக்கு 111 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. தமிழகத்தைச் சட்டவிரோதமான முறையில் ஒரு சிறுபான்மை அரசு ஆண்டு வருவதை ஒப்புக்கொண்டுள்ள வாக்குமூலம் இது. இந்தச் சட்டவிரோத ஆட்சியை எப்படியாவது காப்பாற்றிக் கரை சேர்ப்பதற்கு துக்ளக் குருமூர்த்தியின் தலைமையிலான தமிழகப் பார்ப்பனக் கும்பலும், மோடி அரசும் பலவிதமான முறைகேடுகளையும் அதிகார அத்துமீறல்களையும் நடத்தி வருகிறார்கள்.

தமிழகச் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திட அடாவடித்தனமாக மறுத்துவருகிறார், கவர்னர். இதோடு தொடர்புடைய மூன்று வழக்குகளை விசாரித்துவரும் சென்னை உயர்நீதி மன்றம் வாய்தாவுக்கு மேல் வாய்தா கொடுத்தே எடப்பாடி அரசைக் காப்பாற்றி வருகிறது. தினகரன் பக்கமுள்ள எம்.எல்.ஏ.க்களை எடப்பாடி பக்கம் இழுத்துவிடும் நோக்கத்தோடு, சசிகலா குடும்பத்தினர் மீது ரெய்டு நடவடிக்கைகள் அடுத்தடுத்து ஏவப்படுகின்றன.

ஜெயாவின் பினாமிதான் சசி குடும்பம் என்ற உண்மை சொத்துக்குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்புகளின் வழியே உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தியோ, “மன்னார்குடியின் சொத்துக்குவிப்புக்கு ஜெயலலிதா உடந்தை என்கிற அடிப்படையில்தான்  நீதிபதி குன்ஹா ஜெயலலிதாவுக்குத் தண்டனை கொடுத்தார். ஜெயலலிதா தன் பெயரில் தனக்குச் சொத்து சேர்த்தார் என்பதற்காக அல்ல” எனக் கூசாமல் புளுகி வருகிறார். (துக்ளக், 22.11.2017) இந்தப் புரட்டின் மூலம் கொள்ளைக்காரி ஜெயாவை அப்பாவியாகக் காட்டிவிட முயலுகிறார், அவர்.

இது மட்டுமா, ஜெயாவின் கலெக்சன் ஏஜெண்டுகளாகக் காலந்தள்ளிய பன்னீரையும், எடப்பாடியையும் உத்தமர்களாகக் காட்டும் நோக்கில், “எடப்பாடியும் ஓ.பி.எஸ்-ம் முயன்று அ.தி.மு.க. அரசில் நடக்கும் ஊழலைப் பெருமளவு குறைத்தால்தான் சின்னத்தால் அ.தி.மு.க.வுக்குப் பலன் கிடைக்கும்” என்றும்  உபதேசம் செய்கிறார். (துக்ளக், 06.12.2017)

ஜெயா உயிரோடு இருந்த காலத்திலேயே அ.தி.மு.க.வின் ஐவரணி என அழைக்கப்பட்ட பன்னீர், எடப்பாடி உள்ளிட்ட கும்பல்  மட்டும் ஏறத்தாழ 30,000 கோடி ரூபாய் வரை கொள்ளையடித்திருக்கக்கூடும் என அப்பொழுதே செய்திகள் வெளியாகின. ஐவரணியில் ஒருவராக இருந்த வைத்திலிங்கம்,  பன்னீரின் கூட்டாளி சேகர் ரெட்டி, சேகர் ரெட்டியின் கூட்டாளி முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகனராவ், ஐவரணியின் பினாமியாகச் செயல்பட்ட கரூர் அன்புநாதன் உள்ளிட்டுப் பலரின் வீடுகளில் ரெய்டுகள் நடத்தப்பட்டன.

இவை அனைத்திற்கும் மேலாக, எடப்பாடியின் அரசே, தலைக்கு இத்துணை கோடி என கூவத்தூர் ரிசார்டில் பேரம் பேசப்பட்டு உருவாக்கப்பட்ட அரசுதான். முதலமைச்சரான எடப்பாடி மீதே பணப் பட்டுவாடா குற்றத்தைச் சுமத்தியிருக்கிறது, வருமான வரித்துறை. இதுதான் கடைசி ஆட்டம் என்பதால் முடிந்தவரை கொள்ளையிடுவது என்பதைக் கொள்கையாகவே கொண்டு செயல்படுகிறது, இந்த அரசு. புதிதாக 70 மணல் குவாரிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு, எடப்பாடி அரசு எந்த அளவிற்குத் தமிழகத்தை மொட்டையடிக்கும் வெறியோடு செயல்படுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

திட்டத்தில் ஊழல் என்பது போய் ஊழலுக்காகவே திட்டம் என்பதை நிலைநாட்டியவர் ஜெயா. அம்மா வழியில் செல்வதாகக் கூறிவரும் எடப்பாடி அரசு அதில் புதிய வரலாறையே படைத்துவருகிறது. 1,000 கோடி ரூபாய் தார் ஊழல், 400 கோடி ரூபாய் குடிமராமத்து ஊழல், 39 கோடி ரூபாய் குட்கா ஊழல், 350 கோடி ரூபாய் சென்னை மாநகராட்சி சாலை மேம்பாட்டு ஊழல், வாக்கி டாக்கி கொள்முதல் ஊழல், சத்துணவுப் பணியாளர், சிறப்பு மருத்துவர்கள் நியமனத்தில் நடந்துள்ள முறைகேடுகள், நெடுஞ்சாலை துறையில் அயல்பணி ஒப்படைப்பில் நடந்துள்ள ஊழல் எனத் தினந்தோறும் ஒரு ஊழல் அம்பலமாகி, வெட்க மானம் ஏதுமற்ற ஒரு பிடுங்கித்தின்னி கும்பலிடம்  தமிழகம் சிக்கியிருப்பது தெரிய வருகிறது.

எடப்பாடி-பன்னீர் கொள்ளையர்களிடம் தமிழகத்தை அவுட் சோர்ஸ் செய்திருக்கிறது, மத்திய பா.ஜ.க. அரசு. சசிகலா இல்லாத அ.தி.மு.க.தான் நாட்டுக்கும் தமிழகத்துக்கும் நல்லது என இந்த அசிங்கத்திற்குக் கூச்சமேயின்றிப் பட்டுக்குஞ்சம் கட்டுகிறார், குருமூர்த்தி.

எம்.ஜி.ஆர்., அவருக்குப் பின் ஜெயாவின் வழியாகத் திராவிட அரசியலை வீழ்த்தித் தமிழகத்தை மீண்டும் பார்ப்பன ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முயன்றுவந்த தமிழகத்துப் பார்ப்பனக் கும்பல், தற்போதைய தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையை அருமையானதொரு வாய்ப்பாகக் கருதுகிறது. எடப்பாடி-பன்னீர் கும்பலைத் தமது கைக்குள் வைத்துக் கொள்வதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க.வின் மறைமுக ஆட்சியை நடத்துவது மட்டுமின்றி, அ.தி.மு.க.வின் முதுகில் சவாரி செய்வதன் மூலம் பா.ஜ.க.விற்குத் தமிழகத்தில் ஒரு அடித்தளத்தை உருவாக்கிக் கொள்வது என்ற இரட்டை நோக்கத்தை ஈடேற்றிக் கொள்ள முயன்று வருகிறது, அக்கும்பல்.

இந்தக் கூட்டணி தமிழர்களின் சுயமரியாதைக்கு விடப்பட்டுள்ள சவால். இந்தக் கும்பலை ஆர்.கே. நகர் தொகுதியிலிருந்து மட்டுமல்ல, தமிழகத்திலிருந்தே விரட்டியடிப்பதன் மூலம்தான் தமிழகத்தில் நடந்துவரும் அரசியல் அட்டூழியங்களுக்கும் அராஜகங்களுக்கும் முடிவு கட்ட முடியும்.

-புதிய ஜனநாயகம், டிசம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

 

நீதித்துறை நாட்டாமை : எதிர்த்து நில் ! புதிய ஜனநாயகம் டிசம்பர் 2017 மின்னூல்

0

இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :

1. ஆர்.கே.நகர் அசிங்கமே இந்து ராஷ்டிரம்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. இரண்டு வேட்பாளர்களைக் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது. ஒருவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த கரு.நாகராஜன். மற்றொருவர், அ.தி.மு.க. என்ற பெயரில் உள்ள தமிழக பா.ஜ.க.வின் பி டீமைச் சேர்ந்த மதுசூதனன்.

2. மீனவர் துயரம்: உறங்காதே தமிழகமே, போராடு!

நடுக்கடலில் தத்தளிக்கும் தம் சொந்தங்களை மீட்பதற்கு இவர்களிடம் மன்றாட வேண்டியிருந்த போதிலும், இந்தக் கும்பல் வெளியிடும் நிவாரணங்கள் மற்றும் வாக்குறுதிகளின் பொய்மையை மீனவ மக்கள் அம்பலப்படுத்துகிறார்கள். உண்மை விவரங்கள் அதனினும் கூடுதலாக இவர்களை அம்பலப்படுத்துகின்றன.

3. நீதித்துறை நாட்டாமை: எதிர்த்து நில்!

ஊழல், அதிகார முறைகேடுகள், அண்டிப்பிழைக்கும் கைக்கூலித்தனத்தால் அழுகி நாறும் நீதித்துறைக்கு, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களைக் கேள்வி கேட்கும் தகுதி கிடையாது.

4. ராஜீவுக்கு போஃபர்ஸ்! மோடிக்கு ரபேல்!!

ஒண்ணுக்கு இரண்டாக விலை கொடுத்து ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது, மோடி அரசு.

5. பணிந்தால் பதவி!  மறுத்தால் மரணம்!!

சோராபுதீன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அமித் ஷா விடுவிக்கப்பட்டதன் பின்னே நடந்துள்ள சதிகளை, அவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயாவின் மர்ம மரணம் அம்பலப்படுத்துகிறது.

6. வங்கி மறுமுதலீடு: தரகு முதலாளிகளுக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடி!

வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த மறுக்கும் தரகு முதலாளிகளின் சட்டையைப் பிடிப்பதற்குப் பதிலாக, அரசு கஜானாவைச் சூறையாடுகிறார், மோடி.

7. இன்றைய தொழிலாளர்களின் நிலைமை 18, 19-ஆம் நூற்றாண்டிலே இருந்த நிலைமைதான். இதற்கு மாற்று சோசலிசமே!

– தோழர் எஸ்.பாலன், வழக்கறிஞர், பெங்களூரு உயர்நீதி மன்றம்

8. கார்ல் மார்க்சின் மூலதனம்: மனிதகுல வரலாற்றின் மாவெடிப்பு!

– தோழர் தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

9. மனிதனை நாயாகப் பயிற்றுவிக்கிறது முதலாளித்துவம்! சகோதரர்களாக வாழக் கற்றுக் கொடுக்கிறது சோசலிசம்!!

– தோழர் மருதையன், பொதுச் செயலர், ம.க.இ.க.

10. அக்டோபர் புரட்சி: உலகின் விடிவெள்ளி!

– மும்பையிலிருந்து வெளிவரும் “ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இந்தியாஸ் எகானமி” இதழின் வெளியீட்டாளர் தோழர் ரஜனி எக்ஸ். தேசாய் அனுப்பிய அறிக்கையின் தமிழாக்கம்.

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart


 

ஊடக சுதந்திரம் என்பது இங்கே கிடையாது !

0

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரைக் கிளையின்
– 14 வது ஆண்டுவிழா  கருத்தரங்கம் !

க்கள்  உரிமைப் பாதுகாப்பு  மையம், மதுரை மாவட்டக் கிளையின் 14 வது ஆண்டு விழா கருத்தரங்கம், 2017  டிசம்பர் 9 அன்று மாலை 5.00 மணியளவில்  மதுரை கோ.புதூர் டி.நொபிலி அரங்கத்தில் நடந்தது.

கருத்தரங்கத்திற்குத் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தலைவர் பேரா அ.சீனிவாசன் தலைமையேற்று உரையாற்றினார். “ இந்திய அரசியல் சட்டம் நமக்குப் பேச்சுரிமை, எழுத்துரிமை  எனப் பல அடிப்படை உரிமைகளை வழங்கியிருந்தாலும் ஒரு பேனர்  வைக்க அனுமதி கிடைப்பதில்லை. அரசியல் சட்டம் வழங்கியுள்ள  எந்த அடிப்படைச் சட்டத்தையும் இந்திய அரசு குறிப்பாக மோடி அரசு மதிப்பதே இல்லை.

இது மக்களுக்கான அரசு இல்லை. கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கின்ற அரசாகவே இருக்கிறது. பல்வேறு மொழிகள் , பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு தேசிய இனங்கள் இருக்கின்ற இந்தியாவில் ஒற்றைக் கலாச்சாரமும், ஒற்றை மொழியும், ஒற்றை மதமும் எப்படி சாத்தியமாகும்? இதனால் முஸ்லிம்கள், கிருத்தவர்கள் மிகப்பெரிய பாதிப்புக்கும், துன்பங்களுக்கும் ஆட்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மாநில உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. தமிழ் நீதிமன்ற மொழியாக இல்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜஸ்தானி மொழியும், பீகார், உ.பி.யில் இந்தி நீதிமன்ற மொழியாக இருக்கும்போது செம்மொழியாகியத் தமிழுக்கு நீதிமன்றத்தில் இடமில்லை. பல போராட்டங்கள் நடத்தியும் விடிவு பிறக்கவில்லை. தமிழர்களின் உரிமைகளுக்காக லட்சக்கணக்கான மக்களைத் திரட்டிப் போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை”, என்று முடித்தார் பேரா. அ. சீனிவாசன்.

கருத்தரங்கில் தொடக்க உரையாற்றிய மக்கள் உரிமைப்  பாதுகாப்பு மையத்தின் மாநில  ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே .வாஞ்சிநாதன் பேசிய போது, “ஒக்கி புயலால் தமிழகத்து மீனவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். 10 நாட்கள் ஆகியும் காணாமல் போன ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் நிலை தெரியவில்லை. உலகின் பலம் பொருந்திய கடற்படை விமானப்படை நம்மிடம் இருக்கிறது. உயர் தொழில் நுட்பம் இருக்கிறது. ஆனாலும் மீனவர்களை காப்பாற்ற இந்த அரசுக்கு வக்கில்லை. நம் கண்ணெதிரே அவர்கள் துடிதுடித்து செத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் இ .பி.எஸ்-ஸும்  போகவில்லை. பிரதமர்  மோடியும் போகவில்லை. எதுவும் பேசவும் இல்லை.

எத்தனையோ வழக்குகளைத் தாமாகவே முன்வந்து எடுக்கின்ற நீதிமன்றங்கள் இந்த அநீதியைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. கடமை தவறிய எந்த அதிகாரியையும் தட்டிக் கேட்க முடியவில்லை. இந்தக் கட்டமைப்பு எல்லாம் எதற்கு இருக்கிறது. இந்தியாவில் சாதி  அமைப்பு இருக்கிறது. இதைத் தீர்க்க அரசியல் அமைப்புச்சட்டமும் இருக்கிறது. அதைப் புனிதம் போல் பேசுகின்றனர். ஆனால் இத்தனை ஆண்டுகள் ஆகியும் சாதியத்தை அது தீர்த்து விட்டதா? தீர்க்கமுடியுமா?

சாதிய ஏற்றத்தாழ்வுகளும் மத ஒடுக்குமுறைகளும் தொடரத்தானே செய்கிறது. இந்திய அரசியல் சட்டம் என்பது சாதியத்தை, பார்ப்பனியத்தை, மதத்தைப் பாதுகாக்கவே செய்கிறது. அதனால்தான் டாக்டர்.அம்பேத்கர் “நான் ஒரு குதிரையைப் போல் பயன்படுத்தப்பட்டேன். அரசியல் சட்டத்தைக் கொளுத்தும் முதல் ஆளாக நான் இருப்பேன்”என்று கூறினார்.

கருத்துரிமைகள் இங்கே நசுக்கப்படுகிறது. மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. மணிப்பூரில் இந்திய சிறப்புக்காவல் படை 1500 -க்கும் அதிகமான மக்களை சுட்டுக் கொன்றுள்ளது. உச்ச நீதிமன்றமும் இந்த மனித உரிமை மீறல்களைக் கண்டுகொள்வதில்லை. 90 சதம் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான பேராசிரியர் சாயிபாபாவை எந்தவிதமான உறுதியான சாட்சியும் இல்லாமலேயே மாவோயிஸ்ட்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி  சிறையில் அடைத்தனர். பிணை மறுக்கப்படுகிறது. ஒருமிருகத்தைப் போல கேவலமாக நடத்தப்படுகிறார்.

அதே வேளையில் பல குண்டு வெடிப்புகளில் பலரையும் கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சுவாமி அசீமானந்தா விடுதலை செய்யப்படுகிறார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் வழக்கில் மனுதர்மத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. பல தீர்ப்புகள் மதக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே  சொல்லப்படுகிறது. எனவே மாற்று ஓன்று தேவைப்படுகிறது”, என்றார்.

“நொறுக்கப்படும் மனித உரிமைகள்  பறிக்கப்படும் ஊடக சுதந்திரம்” என்ற தலைப்பில் ஊடகவியலாளர் திரு.இரகுமான் ஆற்றிய உரை ; 

“ஊடகங்களுக்கு 24 மணி நேரமும் செய்திகளை ஒளிபரப்ப செய்திகள் தேவைப்படுகிறது. ஆனால் செய்தி பற்றாக்குறையாகவே இருக்கிறது. காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு, தமிழக மீனவர்கள் இலங்கை படைகளால் கைது என்று ஒருநாள் தொடங்கும்போதே மனித உரிமை மீறலோடே தொடங்குகிறது.

யாரையாவது சுட்டு கொன்றுவிட்டு அவரை தீவிரவாதி என்று முத்திரை குத்துகிறது அரசு. ஆனால் ராணுவத்தில் ஆண்டுதோறும் 1500 பேருக்கும் அதிகமானோர் மாண்டு போகின்றனர். அதில் தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. மன அழுத்தத்தால் மரணம் அடைந்தவர்களும் உண்டு. எல்லாவற்றிக்கும் மேலாக சுட்டு கொல்லப்பட்டவர்களும் உண்டு. மிகப் பெரிய மனித உரிமை மீறல்கள் அங்கேயும் நடக்கிறது. கன்னியாகுமரியில் காணாமல் போன 1000 மீனவர்களைக் கண்டுபிடிப்பதற்கும், நடுக்கடலில் சிக்கியவர்களை மீட்கவும் அரசோடு போராடவேண்டியுள்ளது.

காஷ்மீரில் ஒருவரை ஜீப்பில் கட்டி ராணுவமே  அவரை மனிதக்கேடயமாக்கியது, டாஸ்மாக்குக்கு எதிராக போராடிய ஒரு பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அடித்த போலீஸ் அதிகாரிக்கு  பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.  இந்திய சிறைகளில் 50 சதவீதத்துக்கும் மேலான கைதிகள் விசாரணைக் கைதிகளாக பல ஆண்டுகள் வாடுகின்றனர். ஆண்டுக்கணக்கில் வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்றன. ஆனால் பாலியல் கொலை செய்தவன் 90 நாட்களில் வெளியே வந்து விடுகிறான். எல்லாத் துறைகளிலும் மனித உரிமைமீறல் நடக்கிறது. காவல்துறையில்  மிக  அதிகமாக நடக்கிறது. காவல்துறையை சீர்திருத்துவது, நவீனமயப்படுத்துவது என்று அரசு பேசினாலும் நவீனமயப்படுத்தும் வேலையை மட்டுமே செய்கிறார்கள். சீர்திருத்துவது இல்லை.

காவல் துறை மனித உரிமைகளை மீறவேண்டும் என்றே விரும்புகிறது. மாட்டுக்கறி வைத்திருந்தால் 10 ஆண்டு சிறை என்று சட்டம் இயற்றும் அரசு, கஞ்சா பயிரிடவும், சாராயம் விற்கவும் அனுமதிக்கிறது. இந்த நிலையில் மக்கள் உரிமை என்று பேசுவதில் என்ன பொருள் இருக்கமுடியும். அரசியல் சட்டம் மனித உரிமைகளை வழங்குவதாகக் கூறினாலும் உண்மை அப்படி இல்லை. அது  ஒரு தற்காலிக தீர்வாக இருக்கலாம். முதலாளி தொழிலாளி சமூக உறவுகளின் துணை விளைவு தான் மனித உரிமை. எனவே உண்மையான தீர்வு என்பது சமுதாய மாற்றத்தில் தான் இருக்கிறது.

ஊடக சுதந்திரம்  என்பது இங்கே கிடையாது. அது வர்த்தக உறவுக்கு உட்பட்டதாகவும், வணிகநோக்கம் உடையதாகவும இருக்கிறது. அது சொல்லும் ஒவ்வொரு செய்தியிலும் வர்த்தகம் தான் இருக்கிறது. வர்க்கநலன்களை மீறியதாக அது இருக்க முடியாது. சமுதாய உறவுகளின் விளைவுகளில் ஊடகமும் ஓன்று தான். எனவே ஊடக சுதந்திரம் என்ற ஒன்று இல்லாத போது இதில் பறிப்பதற்கு என்ன இருக்கிறது. உண்மையில் ஊடகங்கள் பேசமுடியாததை வினவு போன்ற இணைய தளங்களும், சமூக வலைத்தளங்கள் தான் பேசுகின்றன. சமூகத்தை தோலுரித்து அவைகளே காட்டுகின்றன. எனவேதான் அதைக் கட்டுப்படுத்தவும் அதன் சுதந்திரத்தைப் பறிக்கவும்  புதிய சட்டங்களை அரசு கொண்டுவர முனைப்போடு செயல்படுகிறது. அதை முறியடிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.” எனப் பேசினார்.

நசுக்கப்படும் கருத்துரிமை நிலைகுலையும் நீதித் துறை – நமது கடமை என்ன ? என்ற தலைப்பில் திரு.அரிபரந்தாமன்,நீதிபதி [ஓய்வு ] சென்னை உயர்நீதி மன்றம் அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்.

இந்திய  அரசியல்  சட்ட வரைவுக் குழுவில் இருந்தவர்கள் எவரும் அனைத்து மக்களும்  வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் இல்லை. படித்தவர்கள், சொத்துடைய வர்க்கங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவே இருந்தனர். அம்பேத்கர் எல்லோராலும் அறியப்பட்டவராக இருந்தார். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சமூகம், பொருளாதாரத் துறைகளில் சமத்துவத்தைப் பேசியது. ஆனால் நடைமுறை வேறாக இருக்கிறது.

40 சதம் இடங்கள் உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ளது. உச்ச நீதிமன்றம் நீதிபதிகளைப் பரிந்துரை செய்து பல மாதங்கள் ஆகியும் மத்திய அரசு நியமனம் செய்யவில்லை.  உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தாக்குர் இத்தகைய நிலை தொடர்வதைக் குறிப்பிட்டுப் பிரதமர் மோடி முன்னிலையில் பொது மேடையிலேயே அழுதார். ஆனால் அதற்குப் பின்பும் கூட  அதை ஆதரித்து மிகப்பெரிய எழுச்சியை வழக்கறிஞர்களோ, மக்களோ நடத்தவில்லை என்பது தான் வருத்தம். நீதித் துறையில் மிகப்பெரிய தாக்குதல் என்பதே நியமன மறுப்பு தான் .

மற்ற துறைகளை விட  நீதித் துறையில் தான் ஊழல் குறைவு என்று நம்புகிறேன். 40 வருடங்களுக்கு முன்னால் மாவட்ட நீதிபதிகள் மத்தியில் கூட  ஊழல் இல்லை. ஆனால் இன்று தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல்வாதிகள் என்று சாந்திபூஷண் புகார் கொடுத்து 7 வருடங்கள் ஆகியும் வழக்கு இல்லை. ஊழலே இல்லாத நீதிபதிகள் இருக்கிறார்கள் என்று சொல்லமாட்டேன்  என்று தலைமை நீதிபதி வர்மா கூறும் நிலையில் தான் இன்று நீதித்துறை இருக்கிறது. நீதித்துறையில் 20 சதம்  பேர் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள்.

நாம் பலவற்றுக்கும்  சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்கிறோம். ஆனால் சி.பி.ஐ.மதிப்பு குறைந்து பல காலமாகிவிட்டது. ஜெ., லல்லு மீது வழக்குப் போடும் சி.பி.ஐ. மத்திய அமைச்சர்கள் மீதும், நீதிபதிகள் மீதும் நடவடிக்கை எடுத்தது உண்டா? சுதந்திரமான அமைப்பு என்று சொல்லப்பட்ட சி.பி.ஐ , வருமானவரி துறை, தேர்தல் ஆணையம் இன்று சுதந்திரமானதாக இல்லை. இரட்டை இலை தீர்ப்பு வந்த மறு நாளே, ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்படுவதும் குஜராத், இமாச்சலப்பிரதேஷ் தேர்தல் தேதியை மத்திய அரசின் விருப்பம் அறிந்து அறிவிப்பதும் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இல்லை என்பதையே புலப்படுத்துகிறது.

நீதித் துறையின் மீது அரசு பல வழிகளில் தாக்குதல் தொடுக்கிறது. “பொது நல வழக்கு என்ற பெயரில் நீதித் துறை ஆட்சி செய்ய முயற்சிக்கிறது” என்று தலைமை நீதிபதிக்கு முன்பே சட்ட அமைச்சரும் பொது நல வழக்குப் போடுவதில் உச்சநீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும் என்று  பிரதம மந்திரி மோடி பேசுவதும் நீதித்துறையின் மீது அரசு தொடுக்கும்  மற்றொரு தாக்குதலே ஆகும். நீதித் துறையில் தலையிடாதே என்று தலைமை நீதிபதி கூறமுடியாமல் மக்கள் உரிமைகளுக்காக நிற்கிறோம் என்றே அவரால் கூறமுடிகிறது. வேண்டாத நீதிபதிகள் தூக்கி எறியப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. கோபால் சுப்பிரமணியம், லோயா, திப்சே என்று ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது.

கருத்துரிமையின் ஒரு பகுதி தான் ஊடக  உரிமை, பேசும் உரிமை. ஆனால் இங்கே லஞ்சம் பற்றி பேசுவதற்கு, கூட்டம் போடுவதற்குக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. மெழுகுவர்த்தி ஏந்தி ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினால், துண்டறிக்கை கொடுத்தால், மீத்தேனை எதிர்த்தால் குண்டர் சட்டம் பாய்கிறது. தனிமனித சுதந்திரம் பறிக்கப்படுகிறது. அவசர காலகட்டத்தில் பாதிக்கப்பட்டதைப் போலவே இப்பொழுதும் பாதிக்கப்படுகிறது. கவுரி லங்கேஷ் கருத்து சுதந்திரத்துக்காகப் போராடியதனால் கொல்லப்பட்ட போதும் மோடி கருத்துக் கூறவில்லை.

லவ் ஜிகாத் என்ற பெயரில்  முஸ்லீம் ஒருவரை உயிரோடு எரித்து அதை வீடியோ எடுத்து பரப்பினர். எல்லோருக்கும் இது தான் கதி என்று இதன் மூலம் அறிவித்தனர். அக்லக் மாட்டுக் கறிக்காகக் கொலை செய்யப்பட்டபோது மோடி கண்டிக்கவில்லை, வருந்துகிறேன் என்றார்.  ஊனாவில் தலித் மக்கள் தாக்கப்பட்டு ஒரு மாதம் கழித்து எனக்கு வலிக்கிறது என்றார். இன்றைய சூழலில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகள் எல்லாம் பறிபோய்க்கொண்டிருக்கிறது. அரசு ஊழியர்கள், செவிலியர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என்று யார் போராடினாலும் அவர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாக வேண்டியுள்ளது. எனவே நாம் எல்லா வேற்றுமைகளையும் மறந்து ஒன்றிணைந்து அடக்குமுறைக்கு எதிராகப் போராடவேண்டும். வேறு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை

கிளைச் செயலாளர் திரு.லயனல் அந்தோணிராஜ் நன்றி உரையுடன் கருத்தரங்கம் நிறைவு பெற்றது.

கருத்தரங்கம் தொடங்குவதற்கு முன்னதாக மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நெல் ஜெயராமன் தயாரித்த “மீத்தேன் அகதிகள்” என்ற 30 நிமிடக் குறும்படம் திரையிடப்பட்டது. மீத்தேன் திட்டத்தின் நாசகர விளைவுகளைப் பற்றி குறும்படம் சிறப்பாக விளக்கியது. கருத்தரங்கின் இறுதியில் கானல் நீர் குறும்படம் திரையிடப்பட்டது. கேரள மாநிலம் பிளாச்சிமடா கிராமத்திலிருந்து கோகோ-கோலா ஆலையை விரட்டியடித்த போராட்டங்கள் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. ஆலையை மூடவில்லை என்றால் அதை அடித்து நொறுக்குவதைத் தவிர வேறு வழி இல்லை என்று ஓர் இளம் பெண் கூறுவது உழைக்கும் மக்களின் உறுதியை எடுத்துக்காட்டியது.

கருத்தரங்கில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள், தோழமை அமைப்பினர், பெண்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், இசுலாமியர்கள், ம.உ.பா மையத்தின் திருச்சி, கடலூர், தூத்துக்குடி கிளையைச் சார்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் புதிய இளைஞர்கள் பலர் என 350 பேர் கலந்து கொண்டனர்.

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரைக் கிளை, தொடர்புக்கு:94434 71003


 

இலங்கை : பொது அறிவு வினாடி வினா 7

1. இலங்கையின் அதிகாரப்பூர்வ பெயர் எது?
(பல நாடுகள் தங்களது பெயரில் இப்படி குடியரசு, சோசலிசம் போன்ற வார்த்தைகளை கொண்டிருந்தாலும் உண்மையில் அவைகளுக்கு எந்த பொருளுமில்லை.)

2. பிரிட்டிஷ் ஆட்சியின் போது சிலோன் என்ற அழைக்கப்பட்ட இலங்கை எப்போதிருந்து அதை துறந்தது?
(கி.பி 1505-ம் ஆண்டில் வந்த போர்ச்சுகீசியர்கள்தான் செல்லோ என்று இலங்கையை அழைத்தார்கள். இந்த வார்த்தையின் ஆங்கில மொழியாக்கமே சிலோன்.)

3. சங்க இலக்கியத்தில் இலங்கை எவ்வாறு அழைக்கப்பட்டது?

4. 1953 –ம் ஆண்டில் மக்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தினால் போது பிரதமர் டட்லி சேனனாயகே பதவி விலகியதற்கு காரணம் என்ன?

5. 1959-ம் ஆண்டில் பிரதமராக இருந்த பண்டாரநாயகே யாரால் கொல்லப்பட்டார்?

6. 2004 சுனாமியால் இலங்கையில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை என்ன?

7. 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாட்களில் இலங்கை அரசால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
(இந்த எண்ணிக்கை ஐ.நா நியமித்த நிபுணர் குழுவின் மதிப்பீடு)

8. இலங்கையின் பெரிய நதியான மகாவேலியின் நீளம் எவ்வளவு?

9. இலங்கையின் தேசிய விளையாட்டு எது?

10. இலங்கையில் எத்தனை மாகாணங்கள் (நிர்வாக அடிப்படையில்) உள்ளன?

11. கிழக்கு மாகாணத்தின் தலைநகர் எது?

12. இலங்கையில் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் எவ்வளவு?

13. ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமியலான கியூபா நாட்டை இலங்கை அங்கீரித்த ஆண்டு எது?
(அதே ஆண்டில் சே குவேராவின் இலங்கை வருகைக்கு பிறகே அந்தநாடு கியூபாவை அங்கீகரித்தது.)

14. 1964-ம் ஆண்டு சிரிமாவோ – சாஸ்திரி ஒப்பந்தமும், 1974 சிரிமாவோ – காந்தி ஒப்பந்தமும் என்ன பிரச்சினைக்காக போடப்பட்டது?

15. எந்த ஆண்டில் கச்சத்தீவு இலங்கையிடம் கொடுக்கப்பட்டது?

16. ரிசர்வ் படைகளையும் சேர்த்து இலங்கையின் முப்படை எண்ணிக்கை எவ்வளவு

17. எந்த நாட்டோடு இலங்கை அதிக வர்த்தக உறவைக் கொண்டிருக்கிறது?

18. இலங்கையில் சிங்கள – தமிழ் மக்களின் மக்கள் தொகை விகிதம் – கீழ்க்கண்டவற்றில் எது சரி?

19. ஐ.நா சபையின் மனித உரிமை கவுன்சிலால் பதிவு செய்யப்பட்ட – இலங்கை பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டு காணாமல் போனோரின் எண்ணிக்கை எவ்வளவு?


 

5,000 கோடி : சட்டையைப் பிடித்து சலுகை கேட்கும் நிஸான் !

3

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான், சுமார் 5,000 ஆயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகை நிலுவை மற்றும் நட்டஈடு கேட்டு இந்தியாவுக்கு எதிராக சர்வதேச சமரச தீர்வு மையத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனம், ரெனால்ட் நிறுவனத்துடன் இணைந்து சென்னை ஒரகடத்தில் கார் தயாரிப்பு நிறுவனம் தொடங்க 2008 -ம் ஆண்டு தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. 6,100 கோடி ரூபாய் முதலீடு செய்து, ஆண்டுக்கு 4,80,000 வாகனங்கள் தயாரிக்கும் திறனுள்ள தொழிற்சாலையை ஒரகடத்தில் அமைப்பது என ஒப்பந்தம்.

இப்போது, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உறுதி அளித்துள்ளபடி வரிச்சலுகைகளை வழங்குவதில் தமிழக அரசு இழுத்தடித்து வருவதாகச் சொல்லி வழக்குத் தொடர்ந்திருக்கிறது. நிஸான் சொல்வதன் படி, அரசு வழங்க வேண்டிய வரிச் சலுகை மீதி 2,900 கோடி ரூபாய். இதை உரிய நேரத்தில் தராமல் இழுத்தடிப்பதற்காக நஷ்ட ஈடாக 2,100 கோடி ரூபாய் கேட்கிறது நிஸான். மொத்தம் 5000 கோடி. Comprehensive Economic Partnership Agreement with Japan – ஒப்பந்தபடி உரிய நேரத்தில் வரிச் சலுகைத் தொகையை வழங்க வேண்டியது அரசின் கடமை என்றும், அப்படி தராமல் இழுத்தடிப்பது தங்களின் தொழில் செய்யும் உரிமைக்கு எதிரானது என்றும் சொல்கிறது நிஸான்.

ஆனால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதே 2011 -ல்தான் என்றும், அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு 2008 -லேயே ஒரகடம் தொழிற்சாலைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது என்று சொல்லும் தமிழக அரசு, நிஸான் வழக்குக்குத் தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளது.

“2012 ஏப்ரல் 1 -ம் தேதி முதல் 2014 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் நிஸான் நிறுவனம் தனது பிசினஸ் மாடலை முன்னறிவிப்பின்றி மாற்றியுள்ளது. இதன்படி, நிஸானின் தயாரிப்புப் பிரிவான RNAIPL நிறுவனமும், அதன் விற்பனைப் பிரிவுகளான ரெனால்ட் இந்தியா மற்றும் நிஸான் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனங்களும் ஒரே பரிவர்த்தனைக்கு அரசின் இருவேறு துறைகளில் இருந்து வரிச்சலுகைப் பெறத் தொடங்கின. இதைத் தொடர்ந்து RNAIPL நிறுவனம் மட்டுமே வரிச் சலுகையை பெற முடியும் என  தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து நிஸான் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அது இப்போதும் நிலுவையில் உள்ளது.” என்கிறது தமிழக அரசு.

மேலும், 2017 ஆகஸ்ட் 31 -ம் தேதி வணிகவரித்துறை நிஸான் நிறுவனத்துக்கு வழங்கிய வரிசெலுத்தியதற்கான சான்றிதழில், 2,616 கோடி ரூபாய் வரிச் சலுகையாக திருப்பித் தரப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளது. அதாவது நிஸான் கூறுவது போல எந்த வரிச் சலுகையும் அவர்களுக்கு வழங்கப்படாமல் இல்லை. வரிச் சலுகையின் ஒரு பகுதியை அவர்கள் ஏற்கெனவே பெற்றுள்ளனர். “சில அதிகாரிகள் குறிப்பிடுவதன்படி, இதுவரை நிஸான் நிறுவனம் 4,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதற்கு சுமார் 1,600 கோடி ரூபாய் வரிச் சலுகையாக பெற்றுள்ளது” என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி. ஆனால் நிஸான் நிறுவனமோ, இன்னும் 2,900 கோடி ரூபாய் உறுதி அளிக்கப்பட்ட வரிச் சலுகை வழங்கப்படவில்லை என்கிறது.

இதற்குப் பதில் சொல்லியிருக்கும் தமிழக அரசின் தரப்பு, “நிஸான் நிறுவனம் இங்கே 21 ஆண்டுகள் இயங்குவதாக ஒப்பந்தம். அந்த ஒட்டுமொத்த காலத்துக்குமான வரிச் சலுகையையும் இப்போதே எதிர்பார்க்கிறார்கள். அது சாத்தியம் இல்லை. ஏனெனில், வரிச் சலுகையின் பெரும்பான்மையை அவர்கள் பெற்றுவிட்டால் பிறகு இங்கே தொழில் செய்யவே மாட்டார்கள். திட்டத்தை கைவிட்டுவிட்டு ஓடிவிடுவார்கள்” என்கிறது.

‘விட்டா ஓடிப் போய்விடுவான்’ என்று மாநில அரசு சொல்வதில் உண்மை இருக்கிறது. ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிய நோக்கியா நிறுவனம் 6,000 கோடி ரூபாய் வரிபாக்கி வைத்துவிட்டு, ஆலையை இழுத்து மூடி, 20 ஆயிரம் தொழிலாளர்களை நடுரோட்டில் நிறுத்திய கதையை ஏற்கெனவே தமிழகம் கண்டுள்ளது. என்ரான் தொடங்கி ஏராளமான வழக்குகளில் வரிச் சலுகையை பெறுவதற்காகவே பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்குவதும் அந்த “Tax holidays” “வரிச்சலுகை காலம்” முடிந்ததும் ஓடிவிடுவது தொடர்கதையாகி வருகிறது. இத்தகைய நிறுவனங்களிடம் இப்படி ஒரு மாபெரும் சலுகைகளும், மானியங்களும் போட்டு அரவணைப்பதே நமது அரசுகள்தான்.

பல்லாயிரம் கோடியை முதலீடு செய்து ஒரு தொழிற்சாலையைத் தொடங்கி, உற்பத்தி செய்து, மக்களிடம் விற்று, அதில் லாபத்தை எடுக்கும் வழக்கமான முறையில் இருந்து இந்த பெரு நிறுவனங்கள் வேறுபடுகின்றன. இது சுற்றுவழி என்று அவர்கள் நினைக்கிறார்கள். ‘எதுக்கு இந்த மக்கள் கிட்டப்போயி பொருளை வித்துகிட்டு… பேசாம அரசாங்கத்துக்கிட்டயே ஆட்டயப் போடலாம்’ என்ற திட்டத்தின் ஒரு பகுதிதான் வரிச் சலுகைகள்.

பருத்த மூலதனத்தை பையில் வைத்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் ஒவ்வொரு நாடாக சென்று முதலீடு செய்கின்றன. இவர்களின் 100 ரூபாய் முதலீட்டுக்கு 150 ரூபாய் வரிச்சலுகை கிடைப்பதை உத்தரவாதப்படுத்த Bilateral Investment Treaty, Investor-State Dispute Settlement என வகைதொகையில்லாமல் ஒப்பந்தங்களைப் போட்டு வைத்திருக்கிறார்கள். மன்மோகன் சிங் உலகம் சுற்றியதும், இப்போது மோடி ஊர் சுற்றுவதும் சும்மா குளிர் பிரதேச காட்சிகளை கண்டுகளிப்பதற்காக அல்ல… ஒவ்வொரு நாட்டிலும் இத்தகைய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன. அவர்கள், வந்து தொழில் தொடங்கி வரிச் சலுகைகளை எல்லாம் ஒரு சில ஆண்டுகளில் பெற்றுக்கொண்டு அடுத்த இடம் நோக்கி நகர்கிறார்கள்.

ஆனால் நிஸான் செய்தியை வெளியிட்டுள்ள எக்கனாமிக்ஸ் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகள், ‘சர்வதேச நிறுவனங்கள் மத்தியில் இப்படி கெட்டபெயர் சம்பாதிப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல’ என புத்திமதி சொல்கின்றன. “தர நிர்ணய நிறுவனமான Moody சமீபத்தில்தான் இந்தியாவுக்கான ரேட்டிங்கை உயர்த்தியது. எளிதில் தொழில் தொடங்கக்கூடிய நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் 130 -வது இடத்தில் இருந்த இந்தியாவை 100 -வது இடத்துக்கு உயர்த்தியுள்ளது உலக வங்கி. இந்த நிலைமையில் இப்படி செய்தால், முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள் என்பது மட்டுமல்ல… அது இந்தியா மீதான நம்பகத்தன்மையையும் பாதிக்கும்” என்று சொல்லும் எக்கனாமிக்ஸ் டைம்ஸ், சர்வதேச சமரச தீர்வு மையத்தில் இந்தியாவுக்கு எதிராக 20 -க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், தனியொரு நாட்டுக்கு எதிராக நிலுவையில் உள்ள அதிகபட்ச வழக்குகள் இவை என்றும் சொல்கிறது.

Deutsche Telekom of Germany, Vodafone International Holdings BV, Sistema of Russia, Children’s Investment Fund and TCI Cyprus Holdings, White Industries of Australia உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளன. இவை அனைத்துமே ‘உத்தரவாதம் அளித்த வரிச்சலுகையை தர மறுக்கிறார்கள்’ என்ற அடிப்படையிலானவை.

தங்களுக்கு அரசு வழங்குவதாக சொன்ன ‘சலுகை’யை சட்டையைப் பிடித்து கேட்கும் இவர்கள், தொழிலாளர்களுக்கான எந்த உரிமையையாவது வழங்கியது உண்டா? குறைந்தபட்ச ஊதியம், ஊதிய உயர்வு, சங்கம் அமைக்கும் உரிமை எதுவும் இல்லை. Assembly line-ல் இன்னும் ஓர் உதிரிபாகமாக தொழிலாளியின் உடலை மாற்றி நாள் முழுவதும் கசக்கிப் பிழிகிறார்கள்.

50 ஆயிரம் வட்டிக்கு வாங்கினால் கூட முதல் மாத வட்டியை எடுத்துக்கொண்டுதான் முதல் தொகையையே தருகிறார்கள். ஆனால் இந்த நிறுவனங்களோ ஒட்டுமொத்த திட்டத்துக்குமான வரிச் சலுகைகளை முன்கூட்டியே கேட்கின்றன. அதை தரவில்லை என்று வழக்குப் போடுகிறார்கள். நாட்டின் இயற்கை வளத்தை ஒட்ட உறிஞ்சி, சூழலை நஞ்சாக்கி, தொழிலாளர்களின் உடல் உழைப்பை சொற்பக் கூலிக்கு சுரண்டி… கல்லா நிறைந்ததும் ஓட்டம் எடுக்கும் இந்த திருட்டுக் கும்பல் வரவில்லை என்றால் இங்கு தொழிலே நடக்காதாம்; எல்லாம் முடக்குவாதம் வந்து படுத்துவிடுமாம். பொருளாதார அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள்.

இந்த எச்சரிக்கையின் விளைவு என்னவாக இருக்கப்போகிறது? என்னவாக இருக்க சாத்தியம் இருக்கிறது? நிஸானுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்றம் சென்றுள்ளது. ஏற்கெனவே ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதையும், ‘சென்னையில் மட்டுமே வழக்கு நடத்த முடியும்’ என புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் வைத்து டெக்னிக்கல் கிரவுண்டில் வழக்கை அணுகுகிறது மாநில அரசு. ஆனால் மோடி அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, மேலிருந்து ஓர் உத்தரவு வந்தால் ஒரு நொடியில் இதில் இருந்து பின் வாங்கும். ‘மாநில நலன், தொழில் வளர்ச்சி, தொழிலாளர் நலன்’ என நான்கு வார்த்தைகளை ஆங்காங்கே பிய்த்துப்போட்டு ஓர் அறிக்கை விட்டு அவர்கள் கேட்கும் வரிச் சலுகையை பைசா பாக்கியில்லாமல் செட்டில் செய்வார்கள். ‘கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்’ எம்.ஜி.ஆரின் வாரிசுகள் அல்லவா?

ஆனால் இவர்கள் கொடுப்பது யார் வீட்டுப் பணம்? அது நம் பணம். நாம் உழைத்து ஈட்டிய செல்வம். அதை வரியின் பெயரால் நம்மிடம் இருந்து பெற்று, வரிச் சலுகையின் பெயரால் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் படையல் வைப்பதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

– கீரன்


 

மீனவர்கள் போராட்டம் : மக்கள் அதிகாரம் தோழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு சிறை !

3

பத்திரிக்கைச் செய்தி

க்கிப்புயலுக்கு சொந்தங்களை இழந்து, படகு, வலை, மீன்பிடி சொத்துக்களை இழந்து கண்ணீரில் கொந்தளிக்கும் மீனவ மக்களுக்கு ஆதரவுகரம் நீட்டிய மக்கள் அதிகார தோழர்கள் ஏழு பேர் 10-12-2017 அன்று காலை நீரோடை கிராமத்தில் கைது செய்யப்பட்டனர். கைது செய்தவர்களை எங்கு வைத்திருக்கிறார்கள் என்பதை குமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் பல முறை பேசிய பின்புதான் தோழர்கள் இருக்கும் இடம் மாலை தெரிந்தது. மண்டைக்காடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, குழித்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள்

தோழர்கள் கிங்சன், மருது, கணேசன், முகமது அனஸ், ஆதி, மாரிமுத்து, அன்பு ஆகியோர் மீதான குற்றச்சாட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என்பது. பிரிவுகள் 151 இ.த.ச மற்றும் 7(1) A கிரிமினல் லா அமெண்ட்மென்ட் ஆக்ட்.

ஒக்கிப்புயல் ஏற்படுத்திய பேரழிவிற்கு சற்றும் குறைவானதில்லை. எடப்பாடி, மோடி அரசின் கண்துடைப்பு மீட்பு நாடகங்கள். மீனவ மக்களின் போராட்டங்கள் உறுதியாக சென்றுவிடக்கூடாது என்ற அச்சம்தான் தமிழக காவல் துறையின் இந்த கைது சிறை நடவடிக்கை. எடப்பாடி அரசுக்கு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவும் முக்கியம் மீனவர்கள் உயிர் இரண்டாம் பட்சம்.

“எங்களுக்கு நிவாரணம் வேண்டாம், கடலுக்கு சென்ற எங்கள் மீனவர்களை மீட்டுத்தா…!” என்றும்,  அதிகாரிகளும் அமைச்சர்களும் நாடகமாடுகிறார்கள் என்றும், புயலுக்கு பிறகு உடனே உரிய இடத்தில் ஆழ்கடலுக்கு சென்று தேடியிருந்தால் பல மீனவர்களை உயிருடன் காப்பாற்றி இருக்கலாம் என்றும் மீனவர்கள் கேள்விகளால் ஆட்சியாளர்களை துளைக்கிறார்கள்.

சுரணையற்ற அரசுக்கு கேட்கவில்லை. ஆனால் பிற மக்கள் நெஞ்சம் பதைக்கிறார்கள். மீனவ மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருகிறார்கள். மீனவ கிராமங்களில் பல அமைப்புகள், கட்சியினர், ஊடகத்துறையினர் தங்கி அவர்கள் போராட்டத்தின் நியாயத்தை, ஆதரித்து பேசி வருகிறார்கள். தமிழகம் தழுவிய அளவில் மீனவர் பிரச்சினைக்கு ஆர்ப்பாட்டம் நடத்திவரும் வேலையில் மக்கள் அதிகார தோழர்களை குறி வைத்து ஏதோ தீவிர வாத நடவடிக்கையில் ஈடுபட்டது போல் தமிழக காவல் துறை கைது செய்திருப்பது அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சியா அல்லது பாசிஸ்டுகளின் காட்டாட்சியா? காவல் துறையா? கூலிப்படையா?

கருத்து சுதந்திரம் பேச்சு சுதந்திரம் இன்னும் இருக்கிறது என்று எப்படி நம்புவது?

கடலோர மீனவ மக்களை பாதுகாக்க, மேம்படுத்த எந்த விருப்பமும் கொள்கையும் அரசிடம் இல்லை. பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடல்வளங்களை தாரைவார்க்க துடிக்கிறது என்பதை மீனவமக்கள் ஆதாரங்களுடன் அரசை தோலுரிக்கிறார்கள்.

மீனவர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் உயிரை பணயம் வைத்து மீன்பிடி தொழில் செய்கிறார்கள். ஆழ்கடலில் 40 நாட்கள் தங்கி மீன்பிடிப்பது என்பது கரையில் உள்ளவர்களால் புரிந்து கொள்வது சிரமம். தகவல் தொழில் நுட்பம் இல்லை. பேரிடர் முன்னறிவிப்பு, போதிய மீட்பு நடவடிக்கை இல்லை. இறந்தவர்கள், காணாமல் போனவர்கள் பற்றி அரசு தவறான தகவலை தருகிறது. ஒக்கிப்புயல் என்பது சுனாமி போன்று பேரிடர். அரசு முனைந்து பொறுப்போடு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டிருந்தால் இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்காது என்கிறார்கள். மீனவர்களின், இத்தகைய பேரழிவிற்கு அரசுதான் பொறுப்பு முதல் குற்றவாளி.

குழித்துறை ரயில் நிலையம், குளச்சல் பேருந்து நிலையம், தொடர் சாலை மறியல் என பெரும் மக்கள் திரள் போராட்டங்கள்தான் தமிழக அரசை, அதிகாரிகளை வீதிக்கு இழுத்து வந்திருக்கிறது. இரண்டாயிரம் மீனவர்களை காணவில்லை, நூற்றுக்கனக்கான படகுகள் கரை திரும்பாது என்ற உண்மைகள் வெளி உலகிற்கு தெரிய வந்தது.

எப்படி அமைதியாக இருப்பது? மீனவ தாய்மார்களின் கண்ணீருக்கு நீதி வேண்டும். அலை அலையாக தமிழகத்தின் கரங்கள் குமரி நோக்கி நீளட்டும். போராட்டத்தின் கோரிக்கையை உண்மையாக பரிசீலித்து நிரந்தர தீர்வு காணாமல், போராடுபவர்களை மிரட்டவே இந்த கைது நடவடிக்கை. தமிழக அரசு இத்தகைய ஜனநாயக விரோத போக்கை கைவிட வேண்டும்.

மீனவ மக்களுக்கு உதவ சென்ற மக்கள் அதிகார தோழர்களை கைது செய்தது அநீதி ! அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

அரச பயங்கரத்தாலும், இயற்கை சீற்றத்தாலும் பாதிக்கப்படும் உழைக்கும் மக்கள் உலகில் எந்த கடை கோடியில் இருந்தாலும் அவர்களுக்கு உதவுவதுதான் இயற்கை நீதி. இதனைத்தடுக்கும் மிருகதனத்தை ஒருநாளும் ஏற்க இயலாது. அனைவரும் மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்போம் ஆதரிப்போம்.

கடைசிச் செய்தி: கைது செய்யப்பட்ட தோழர்கள் குமரி மாவட்ட மண்டைக்காடு காவல் நிலையத்தில்  உடைகளை உருவப்பட்டு போலீசால் கடுமையாக அடிக்கப்பட்டிருக்கின்றனர்.

வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.


 

மீனவர்களுக்காக குரல் கொடுக்கச் சென்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் குமரியில் கைது!

0

மீனவர்களுக்காக குரல் கொடுக்கச் சென்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் குமரியில் கைது!

மிழக மீனவர்களை காக்கத் தவறிய எடப்பாடி அரசையும், மத்திய மோடி அரசையும் கண்டித்துக் குமரியில் பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் போராடி வருகின்றனர். மீனவர்களுடன் பல்வேறு ஜனநாயக மற்றும் புரட்சிகர அமைப்புகளும் இணைந்து போராடி வருகின்றனர். மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் பல குழுக்களாக கன்னியாகுமரியில் தங்கி அங்கு மீனவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 7 தோழர்கள் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி கிராமத்தில் மக்களுடன் இணைந்து பிரச்சாரத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். இன்று (10.12.2017) காலை சுமார் 6:00 மணியளவில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் தங்கியிருந்த மீனவரின் வீட்டிற்கு வந்த போலீசு, தோழர்களையும், அவர்களுக்கு தங்க இடமளித்த மீனவரையும் காரணம் ஏதும் சொல்லாமல் கைது செய்து அழைத்துச் சென்றது.

மேலும் நீரோடி கிராமத்தினர் மத்தியில் ‘தீவிரவாதிகள்’ இங்கு தங்கியிருப்பதாகவும் அவர்களைக் கைது செய்து போவதாகவும் பொய்யான தகவல்களைப் பரப்பி பீதியை ஏற்படுத்தியது போலீசு.
கைது குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், தோழர்கள் 7 பேரையும் அவர்களுக்கு தங்க வீடு கொடுத்த மீனவரையும் எந்த போலீசு நிலையத்தில் வைத்திருக்கிறோம் என்ற தகவலைக் கூறாமல் இழுத்தடித்தது போலீசு.

குமரி மாவட்ட பகுதியில் உள்ள மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும் ஏனைய வழக்கறிஞர் நண்பர்களும் முழுவீச்சாகத் தேடியதில் தோழர்களையும் அவர்களுக்கு தங்க இடமளித்த மீனவரையும் மண்டைக்காடு போலீசு நிலையத்தில் வைத்திருப்பதாக தெரியவந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு உள்ளூர் மீனவர்கள் மத்தியில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க அந்த மீனவரை மட்டும் விடுவித்திருக்கிறது போலீசு.

இதனையடுத்து வழக்கறிஞர்கள் அங்கு சென்று அவர்களை எந்தக் காரணத்திற்காக கைது செய்துள்ளனர் எனக் கேட்டதற்கு முன் பின் முரணாகப் பதிலளித்தது போலீசு. பின்னர், சென்னையிலிருந்து தங்களுக்கு உத்தரவு வரும் வரை மக்கள் அதிகாரம் தோழர்களை விடுவிக்க முடியாது என கூறியிருக்கிறது போலீசு.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட தோழர்கள் கிங்சன், மருது, கணேசன், முகமது அனஸ், ஆதி, மாரிமுத்து, அன்பு ஆகியோர் மீது u/s. 151 CRPC. r/w7(1)A. cla Act. ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது போலீசு.

  • எடப்பாடி மீனவர்களை வந்து பார்க்க மாட்டார்!
    பொன்னார் வந்து பார்க்க மாட்டார்!
  • மீனவர்களை வந்து பார்த்து ஆதரவு தெரிவிப்பவர்களையும் இந்த அரசு கைது செய்யுமாம் இவர்கள் மீனவர்களின் எதிரிகள், தமிழ்மக்களின் எதிரிகள் என்பதற்கு இன்னுமென்ன சான்று வேண்டும்?
  • தமிழ் மக்களே ஆயிரக்கணக்கில் குமரி நோக்கி வாருங்கள்
    எத்தனை பேரை கைது செய்வார்கள் பார்த்து விடுவோம்!

 

மீனவர் துயரம் : உறங்காதே தமிழகமே, போராடு !

0

பேரழிவைத் தோற்றுவித்த ஓக்கி புயல் கடந்து சென்று விட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் திரும்பவில்லை என்று உரிய விவரங்களுடன் மக்கள் கூறுகிறார்கள். சாவு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டவேண்டுமென்கின்ற கிரிமினல் புத்தியை தனது இயல்பாக கொண்டிருக்கும் அதிகாரவர்க்கமும், உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரான வெறுப்பைத் தனது பிறவிக் குணமாக கொண்டிருக்கும் பார்ப்பனப் பாசிஸ்டுகளின் மத்திய அரசும் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறுகின்றன.

எண்ணிக்கை எதுவாக இருந்தாலும், நிவாரணத் தொகையிலும் மறு கட்டுமானப் பணியிலும் தமக்கு கிடைக்கக்கூடிய லஞ்சப்பங்கை எண்ணி எச்சில் ஊறக் காத்திருக்கிறது அதிமுக என்றழைக்கப்படும் பிணந்தின்னிக் கூட்டம். இப்படி ஒரு கிரிமினல் முக்கோணத்தில் சிக்கியிருக்கிறது மீனவர்களின் உயிர்.

ஊடக விளம்பரத்துக்காக மக்களை சந்திக்கும் தருணத்தில் கூட முகத்தில் கருணையை வரவழைத்துக்கொள்ள இயலாத அளவுக்கு மேட்டிமைத்தனத்தால் முகம் இறுகிய நிர்மலா சீதாராமன்தான் மீனவர்களுக்கு “ஆறுதல்” கூறவந்த மோடியின் தூதர். நிவாரணப் பணிகளை கண்காணிப்பதாக கிளம்பி, சுசீந்திரம், கன்னியாகுமரி கோயில்கள் மற்றும் விவேகானந்தர் பாறைக்குச் சென்று தரிசனம் செய்து விட்டு, மிச்சமிருந்த நேரத்தில் தன்னை தரிசிக்குமாறு மீனவர்களை அழைக்கும் புரோகிதருக்குப் பெயர், தமிழகத்தின் ஆளுநர்.

ஓகி புயலால் குமரி மாவட்டம் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும்போது அந்தப் பக்கம் தலையைக்கூடத் திருப்பாமல், எம்.ஜி.யாருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடி, கம்பராமாயணம் எழுதிய சேக்கிழார் தஞ்சாவூரில் பிறந்தவர் என்று ஒரு வாக்கியத்தில் ஒன்பது உளறல்களை எழுதிவைத்துப் படிக்கும் எடப்பாடி, ஒரு முதலமைச்சர்.

நடுக்கடலில் தத்தளிக்கும் தம் சொந்தங்களை மீட்பதற்கு இவர்களிடம் மன்றாட வேண்டியிருந்த போதிலும், இந்தக் கும்பல் வெளியிடும் நிவாரணங்கள் மற்றும் வாக்குறுதிகளின் பொய்மையை மீனவ மக்கள் அம்பலப்படுத்துகிறார்கள். உண்மை விவரங்கள் அதனினும் கூடுதலாக இவர்களை அம்பலப்படுத்துகின்றன.

முதலாவதாக, இந்தப் புயல் குறித்து இந்திய வானவியல் ஆய்வு மையம் முன் எச்சரிக்கை செய்யவில்லை. ஆனால், “தமிழ்நாடு வெதர்மேன்” என்ற பிரபல தன்னார்வலர், தனது முகநூலில் “நவ 29 காலை 9.12 மணிக்கே கடலுக்குள் செல்லவேண்டாமென்று குமரி, கேரள மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். நவ, 30 காலை 9.57 க்கு ஓக்கி புயல் குமரிக்கு வெகு அருகில் உள்ளது. இது குமரி, திருவனந்தபுரம் கரையைக் கடக்காது. அவற்றைத் தொட்டுச் செல்லும். (ஓக்கி புயல் குறித்து வானியல்துறை இதுவரை அறிவிக்கவில்லை. விரைவில் அறிவிக்கக் கூடும்)” என்று எழுதியிருந்தார்.

தன்னார்வலர் “தமிழ்நாடு வெதர்மேன்” தனது முகநூலில் ஓக்கி புயல் குறித்து வெளியிட்ட எச்சரிக்கை செய்தி ( படங்கள் )

வானிலை ஆய்வு மையத்தின் இந்த தோல்வி குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு விளக்கமளித்த அதன் டில்லி தலைமையக அதிகாரி மிருத்யுஞ்சய் மொகபாத்ரா, “தொலைதூரக் கடலில் இந்தப் புயல் உருவாகியிருந்தால் கணிப்பதற்கு அவகாசம் இருந்திருக்குமென்றும், குமரிக்கு அருகில் இது உருப்பெற்ற காரணத்தினால் கணிக்க இயலாமல்” போனதாகவும் விளக்கமளித்துள்ளார்.

ஒரு ஆர்வலரால் செய்ய முடிந்த கணிப்பை தொழில்நுட்பத்தையும் வல்லுநர் படையையும் வைத்திருக்கும் அரசுத்துறையால் செய்ய இயலாமைக்கு காரணம் அதன் அதிகாரவர்க்கத் தடித்தனமா, மக்கள் நலனில் அக்கறையற்ற அலட்சியமா, அறிவீனமா என்பதை யோக்கியமாக ஆய்வுக்குட்படுத்தியிருக்க வேண்டும்.

தமது குற்றத்தின் காரணமாகத்தான் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகின்றன என்ற குற்றவுணர்வோ, நேர்மையோ கடுகளவேனும் இருந்திருந்தால் அப்படியொரு பரிசீலனை நடந்திருக்கும். மாறாக,  அதிகாரவர்க்க வார்த்தை ஜாலங்கள் மூலம் தாங்கள் 28 ஆம் தேதியே எச்சரிக்கை கொடுத்துவிட்டதாகவும் கேரள அரசுதான் செயல்படவில்லை என்றும் ஒரு பச்சைப்பொய்யை தனது கைக்கூலி ஊடகங்கள் மூலம் பரப்புகிறது மோடி அரசு.

ஓகி புயல் மோடியின் குஜராத்தை தாக்குமா என்பதே வானியல்துறைன் ஒரே கவலையாக இருந்தது என்பதற்கு அதன் அறிக்கைகளே சான்று. நடுக்கடலில் புயலின் பாதையில் சிக்கக்கூடிய தமிழக, கேரள மீனவர்களைப் பற்றி வானிலை ஆய்வு மையம் கவலை கொள்ளவே இல்லை என்பதுதான் உண்மை. ஒருவேளை முறையாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தாலும், அது ஆழ்கடற்பகுதிகளில் இருந்த மீனவர்களை சேர்ந்திருக்காது.

கரையிலிருந்து சுமார் 200 கிமீ இல் தொடங்கி 600 கிமீ தூரம் வரை சென்று மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு, 15 கிமீ தொலைவுக்கு எட்டக்கூடிய ஒயர்லெஸ் கருவிகளை மட்டுமே அனுமதித்திருக்கிறது இந்திய அரசு. சிங்கள மீனவர்கள் வளைகுடா கடல்பகுதியிலிருந்து குடும்பத்துடன் பேசிக்கொள்ளும் விதத்தில் அவர்களுக்கு சாட்டிலைட் போனை அனுமதித்திருக்கிறது இலங்கை அரசு. தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் இந்திய அரசு நமது மீனவர்களுக்கு அதைத் தடை செய்திருக்கிறது. இப்படி மீனவர்களை மரணத்துக்குத் தள்ளியிருக்கும் இந்திய அரசுதான், இப்போது மீட்புப்பணி என்ற நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

“மீட்புப்பணிக்கு செல்லும் ஹெலிகாப்டர்களின் எரிபொருள் ஒன்றரை மணி நேரம் மட்டுமே தாங்குமென்பதால், எரிபொருள் நிரப்பும் வசதி கொண்ட விமானந்தாங்கி கப்பல்களைப் பயன்படுத்தினாலன்றி அவை ஆழ்கடலுக்கு போகவே முடியாது. தேடவேண்டிய இடத்தை காட்டுமாறு எங்களை அழைத்துப்போன கடலோர காவல்படை, 12 கடல் மைல் தொலைவுக்கு மேல் செல்வதற்கு தங்களுக்கு அனுமதியில்லை என்று திரும்புகிறது.  200 கடல் மைல்களுக்கு அப்பாலிருந்துதான் தேடுதலை தொடங்கவே வேண்டும் எனும்போது இந்த தேடுதல் நடவடிக்கையே ஒரு ஏமாற்று. செயற்கைக்கோள் (GPS) தொழில் நுட்பத்தின் மூலம் கடல்பரப்பில் ஒரு சதுர மீட்டரில் என்ன இருக்கிறது என்பதைக் கூட கண்டுபிடிக்கின்ற தொழில்நுட்ப வசதி இருந்தும் அதனை மீனவர்களுக்காக பயன்படுத்த மறுக்கிறது இந்திய அரசு” – என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டுகிறார்கள் குமரி மீனவர்கள்.

ஒரு நூற்றாண்டில் அரபிக்கடல் கண்ட கொடிய புயல் இது என்பதால், இதனை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டுமென்று கோரியிருக்கிறார் பினராயி விஜயன். இந்து தேசியத்தை நிராகரிக்கின்ற தமிழக, கேரள மக்களின் துயரம் “தேசிய” பேரிடராக கருதத் தக்கதல்ல என்பது மோடி அரசின் நிலையாக இருக்கக் கூடும். இந்தியக் கடற்பரப்பை சூறையாடுவதற்கு பன்னாட்டு மீன்பிடி டிராலர்களை அனுமதித்த பின்னரும், அவர்களுடன் போட்டி போட்டு ஆழ்கடலில் மீன்பிடித்து வாழ்கிறார்கள் மீனவர்கள்.

“தூங்க முடியவில்லை அய்யா”

பின்னர், கூடங்குளம் அணு உலையை எதிர்த்தார்கள். இன்று இந்தியக் கடற்கரைகளை கார்ப்பரேட் துறைமுகங்களாக மாற்றும் சாகர்மாலா என்கிற பேரழிவுத் திட்டத்தையும், எண்ணூர், சீர்காழி, ஏணையம் துறைமுகங்களையும் எதிர்க்கிறார்கள். சென்னை மீனவ மக்களின் குடியிருப்புகளை அகற்றுவதற்கு கிடைத்த நல்வாய்ப்பாக சுனாமியைப் பயன்படுத்திக் கொண்டதைப்போல, குமரி மீனவர்களை அப்புறப்படுத்தக் கிடைத்த நல்வாய்ப்பாக ஓகி புயலை மோடி எடப்பாடி அரசுகள் பயன்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை.

இந்த மக்கள் விரோதிகளை அப்புறப்படுத்துவதற்குக் கிடைத்த வாய்ப்பாக தமிழக மக்கள் இதனைப் பயன்படுத்த வேண்டும். இது தமிழகத்தின் உரிமைக்காக மெரினாவில் ரத்தம் சிந்திய மீனவ சமூகத்துக்கு தமிழ் மக்கள் செலுத்த வேண்டிய நன்றி. டில்லியின் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குவது மட்டுமின்றி, தமது அதிகாரத்துக்கான பாதையை உருவாக்கிக் கொள்ளவும் மக்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு.

“தூங்க முடியவில்லை அய்யா” என்ற மீனவத் தாய்மார்களின் ஓலம்,… கையில் இறுகப்பற்றிய தின்பண்டத்துடன் தீயில் வெந்துதுடித்த இசக்கிமுத்துவின் குழந்தைகளுடைய அலறல்,… அனிதாவின் தொண்டைக்குழியில் தேங்கிநின்ற துயரம்…. இத்தனைக்கும் பின்னர் தமிழகம் உறங்கக்கூடாது. எதிரிகளை உறங்க விடவும் கூடாது.

-சூரியன்


 

மீனவர்களை ஏமாற்றும் அரசு – அம்பலப்படுத்தும் குமரி மாவட்ட இளைஞர்கள் !

1

கொந்தளிக்கும் குமரி பூத்துறை கிராம இளைஞர்கள் ! – வீடியோ

ரை திரும்பாத மீனவர்களை மீட்கக் கோரி, குழித்துறை ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற பூத்துறை கிராம இளைஞர்கள் மத்திய மாநில அரசுகள் மீனவர்களுக்கு செய்யும் துரோகத்தையும். மீனவர்கள் செத்து மிதக்கும் போது ஆர்.கே. நகரில் விஷால் வேட்புமனு பற்றி விவாதம் நடத்தும் ஊடகங்களையும் தங்களது பேச்சில் தோலுரிக்கின்றனர்.

பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகட்டும், தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஆகட்டும் மீனவர்களுக்கு கண்கட்டுவித்தை காட்டி வருகின்றனர். மறுபுறம் சமூக வலத்தளங்களில் ஆர்.எஸ்.எஸ். கும்பலும் மீனவர் போராட்டங்களை சீர்குலைக்கும் வகையிலான மதவெறிப் பிரச்சாரத்தை நடத்திவருகின்றனர்.

மாவட்ட நிர்வாகமோ போராட்டத்தை ஒருங்கிணைத்த பாதிரியார்களை பேச்சுவார்த்தை என்ற பெயரில் அழைத்து, இங்கு கலவரம் ஏற்படும் சூழல் உள்ளது ஆகையால் போராட்டத்தைத் திரும்பப் பெறுங்கள் என மறைமுகமாக மிரட்டி போராட்டத்தைத் திரும்பப்பெற வைத்துள்ளனர்.

ஆனால் இந்த தடைகளைத் தாண்டி கூடங்குளம், நெடுவாசல், மெரினா போல ஒரு மக்கள் எழுச்சியை நாங்கள் உருவாக்குவோம் என இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

***

எடப்பாடி அரசு அறிவித்திருக்கும் நிவாரணம் ஒரு மோசடி ! – வீடியோ

கி புயலில் உயிர் இழந்த மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இதே போல பல்வேறு சந்தர்ப்பங்களில் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் அவை எதையும் அரசு முறையாக வழங்கியதில்லை என்பதை, தங்களது சொந்த அனுபவத்தில் இருந்தே விளக்குகின்றனர் இளைஞர்கள்.

இறந்தும் உடல் கிடைக்காத மீனவர்களை காணாமல் போனவர்களாகத்தான் இந்த அரசு அறிவிக்கும். அதன் பின்னர் 7 ஆண்டுகள் கழித்துத்தான் அவர்களுக்கான மரணச்சான்றிதழை வழங்கும்.

அதுமட்டுமல்லாது தமிழகத்தில் அரசு அலுவலகங்களின் ஒவ்வொரு துறையிலும் மீனவர்களை இழுத்தடித்து அலைகழிப்பார்கள். ஆனால் அருகில் உள்ள கேரளாவில் ஆறுமாத காலத்தில் நிவாரணத்தை வழங்கிவிடுகின்றனர். இதுகுறித்து இளைஞர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்ட போது அவர் அதற்கு பதிலேதும் அளிக்காது சென்றுவிட்டார்.

இவ்வாறு அரசு தங்களை எப்படி தொடர்ந்து வஞ்சித்து வந்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்தினர் கிராம இளைஞர்கள்.

வீடியோ – நேர்காணல் : வினவு செய்தியாளர் குழு


 

இன்று PRPC – 14வது ஆண்டுவிழா ! அனைவரும் வருக !

0

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் – 14வது ஆண்டுவிழா கருத்தரங்கம் !


நிகழ்ச்சி நிரல்

கருத்தரங்கம்:

தலைமை: பேராசிரியர் அ.சீனிவாசன்,
தலைவர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரை

தொடக்க உரை: வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

கருத்துரை:

நொறுக்கப்படும் மனித உரிமைகள் பறிக்கப்படும் ஊடக சுதந்திரம்!

திரு பி.எஸ்.எம். இரகுமான்,
ஊடகவியலாளர்,
 சென்னை.

நசுக்கப்படும் கருத்துரிமை நிலை குலையும் நீதித்துறை – நமது கடமை என்ன?

திரு. அரிபரந்தாமன்,
நீதிபதி (ஓய்வு), சென்னை உயர்நீதிமன்றம்

காட்சி அரங்கம்: குறும்படங்கள் – மக்கள் உரிமைகளும், கார்ப்பரேட் ஜனநாயகமும்

நன்றியுரை: திரு. ம. லயனல் அந்தோனிராஜ்,
செயலாளர், ம.உ.பா. மையம் மதுரை

நூலரங்கம்: கீழைக்காற்று வெளியீட்டகம், சென்னை

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,

மதுரை மாவட்டம். அலைபேசி: 94434 71003