Friday, June 13, 2025
முகப்பு பதிவு பக்கம் 471

இன்றைய அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு என்ன ? விழுப்புரம் பொதுக்கூட்டம் !

0

விழுப்புரம் வட்டம் மக்கள் அதிகாரம் சார்பாக 28.10.2017 சனிக்கிழமை, மாலை புதிய பேருந்து நிலையம் அருகில் ஜல்லிக்கட்டுத் திடலில் “இன்றைய அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு என்ன? அரசியல் அராஜகங்களுக்கு, அக்கிரமங்களுக்கு முடிவு கட்டும் போராட்டங்கள் தேவை!” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்திற்கு தோழர்.சிவானந்தம் (பொருளாளர், விழுப்புரம் வட்டம் – மக்கள் அதிகாரம்) தலைமை தாங்கினார். தோழர்கள் ஞானவேல் (புரட்சிகர மாணவர்-இளைஞர் முண்ணனி அமைப்பாளர், விழுப்புரம்), மோகன்ராஜ் (விழுப்புரம் மண்டலம் ஒருங்கிணைப்பாளர்- மக்கள் அதிகாரம்), செல்வக்குமார் (விழுப்புரம் வட்டம் ஒருங்கிணைப்பாளர்- மக்கள் அதிகாரம்) உரையாற்றினார்கள். தோழர்.காளியப்பன் (மாநில பொருளாளர்- மக்கள் அதிகாரம் தமிழ்நாடு) அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக மோடியின் பணமதிப்பு நீக்கத்தால் வரிசையில் நின்று உயிரிழந்தவர்களுக்கும், காவிரி நீர் தடுத்து நிறுத்தப்பட்டு வறட்சியால் நெஞ்சு வெடித்து உயிரிழந்த விவசாயிகளுக்கும், நீட் நுழைவுத் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவிற்கும், கந்துவட்டி கொடுமையால் கலெக்டரும், போலீசு துறையும் வைத்த தீயில் கருகிய இசக்கிமுத்து குடும்பத்திற்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதையடுத்து கூட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர். சிவானந்தம் அவர்கள் பேசுகையில் “இன்று டெங்குவால் மக்கள் கொத்து கொத்தாக சாகின்றனர், நேற்று விவசாயிகள் சாகடிக்கப்பட்டனர், NEET- தேர்வால் மாணவர்கள் இறக்கின்றனர், கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மாட்டுக்கறி தடை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற அழிவு திட்டங்களை RSS-BJP கும்பல் திணித்து தமிழகத்தை சுடுகாடாக்குகிறது.

இந்த கொலைகார அரசிடமே சென்று மீண்டும் மீண்டும் மனுக் கொடுத்து, மன்றாடி  நம் பிரச்சனைகளுக்கு தீர்வு தேட போகிறோமா? அல்லது இந்த கட்சிகளுக்கு பதில் அந்தக் கட்சி என ஓட்டின் மூலமே தீர்வு தேடப் போகிறோமா? அல்லது இவர்கள் யாரும் சரியில்லை இன்று சினிமாக்காரர்கள் நன்றாக பேசுகிறார்கள்,படத்தில் கருத்து கூறுகிறார்கள் என்று அவர்கள் பின்னால் சென்று அவர்களுக்கு கொடி பிடிக்கப் போகிறோமா? இல்லை எப்படி மெரினாவில் சாதி கடந்து, மதம் கடந்து, அரசியல் கட்சிகளை தூக்கி எறிந்து, சினிமா மோகத்தை மறந்து, அதிகாரம் செலுத்தி நம் உரிமைகளை நாமே மீட்டு எடுத்தோமோ அது போன்ற போராட்டங்களை மீண்டும் முன்னெடுத்து நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண போகிறோமா? என்பதை விளக்கவே இந்த கூட்டம்” என்று முடித்தார்.

அவரைத் தொடர்ந்து தோழர்.ஞானவேல் பேசும்போது “வெறிநாய் கும்பலிடம் ஒரு ஆடு தனியாக மாட்டிக்கொண்டால் அதன் கதி என்னவோ? காம வெறிப் பிடித்த மிருகங்களிடம் ஒரு பெண் தனியாக மாட்டினால் அவள் கதி என்னவோ?” அப்படி இந்த அரசிடம் மக்கள் சிக்கி அவர்களுடைய வாழ்க்கை சின்னாபின்னமாக, கந்தல் கந்தலாக சீரழிந்து கொண்டிருக்கிறது.

மோடி வந்த பிறகு மக்களின் மீது அனைத்து திட்டங்களும் வலுக்கட்டாயமாக, அடாவடித்தனமாக திணிக்கப்படுகின்றன. இன்று நீட் தேர்வு வந்தபின் மாணவர்களின் கதி என்ன? நாங்கள் நீட்-ன் மூலம் மருத்துவ தரத்தை உயர்த்தப் போகிறோம், கட்டண கொள்ளையை தடுக்கப்போகிறோம், சுயநிதிக் கல்லூரிகள், தரமில்லா மருத்துவக் கல்லூரிகளுக்கு முடிவு கட்டப்படும் என்றெல்லாம் மோடி அரசு உதார் விட்டது.

காங்கிரஸ் அரசாங்கத்தின் போது நீதிபதி அல்கபீர் தாமஸ் என்பவரால் நீட் மனு நிராகரிக்கப்பட்டது. ஆனால் BJP ஆட்சிக்கு வந்த பிறகு அணில் ஆர் தவே என்ற RSS நீதிபதியால் மீண்டும் நீட் கொண்டுவரப்பட்டு, அனிதா உயிர் காவு வாங்கப்பட்டதோடு, அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களின் கொள்ளைகளும் சட்டப்பூர்வமாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வியிலிருந்து வெளியேற்றபட்டுள்ளனர்.

கேதான் தேசாய் போன்ற கிரிமினல்கள் மருத்துவ கவுன்சில் தலைவராகவும், கீதாலக்ஷ்மி போன்ற கிரிமினல்கள் துணை வேந்தர்களாகவும் நீடித்ததால்தான் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி SVS கல்லூரியில் மூன்று மாணவிகள் பலியாகினர். இப்படி மாணவர்களின் உயிர்களை குடித்த கிரிமினல் நடத்தக்கூடிய கல்லூரிகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்குகிறது.

கல்வியை அரசின் பொறுப்பிலிருந்து விடுவித்து HERA போன்ற முறைகளால் இனி தனியார் தான் மாணவர்களின் கல்வியை தீர்மானிக்கும். இனி யாரும் படிக்க கூடாது, காசு இருப்பவன் படிச்சிக்கோ, இல்லாதவன் அவன் அப்பன் தொழிலை செய்ய வேணும் என்று இந்த பார்ப்பன RSS, மோடி – கும்பல் மாணவர்களை கல்வியில் இருந்து வெளியேற்றுகிறது.

இப்படி தனியார் நிறுவனங்களின் ஊழலையோ, கட்டணக் கொள்ளையையோ  கட்டுப்படுத்தவோ, தண்டிக்கவோ அரசுக்கு அதிகாரம் இல்லை. இது தான் கல்வியை அனைவரும் சமமாக பயில இந்த யோக்கியர்கள் கொண்டு வரும் திட்டம்.

இனியும் மக்கள் ஒன்றிணையாமல், போராடாமல் தீர்வு இல்லை. எப்படி  ஒரு ஓட்டை வண்டியில் பயணம் செய்வது உயிருக்கு ஆபத்தோ அப்படி இந்த கட்டமைப்புக்குள்ளேயே தீர்வு தேடுவது பயனளிக்காது! நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியாது. இதற்கு வெளியில் தான் தீர்வு. எங்களோடு சேர்ந்து செயல்பட வாருங்கள்” என்று பேசி முடித்தார்.

அதன்பின்னர் பேசிய தோழர் மோகன்ராஜ் அவரது உரையில் “இன்று தமிழக மக்களை காவு வாங்கி கொண்டு இருக்கும் டெங்கு என்பது வேற எதுவும் இல்லை இந்த மோடி கும்பலும், எடப்பாடி- பன்னீர் கும்பலும் தான்.

அவர்களை ஒழித்தாலே டெங்குவும் ஒழிந்து விடும், மக்கள் கஷ்டமும் தீரும். அரசு மருத்துவமனைகளில் பத்து நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால் இங்கு நூறு நோயாளிக்கு ஒரு மருத்துவர் தான் உள்ளனர். ஒரு வார்டில் 32 இருக்கைகள் உள்ளன. ஆனால், 100 – 150 பேர் தரையில் படுத்துள்ளனர். எப்படி மாட்டுப் பட்டியில் மாடுகளை அடைத்து வைத்து இருப்பார்களோ அப்படி மக்களையும் அடைத்து வைத்துள்ளனர்.

போதிய மருத்துவர் இல்லை, மருந்துகள் இல்லை, படுக்கை  வசதி இல்லை. இதை ஏன் என்று மருத்துவ அதிகாரியிடம்  கேட்டால் எங்க கிட்ட இவ்ளோ தான் வசதி இருக்கு நாங்க என்ன பண்ண முடியும். இருப்பதை வைத்து தான் மருத்துவம் பார்க்க முடியும், நீங்க இதை மேலிடத்தில் தான் கேட்க வேண்டும் என்று அலட்சியமாக பதில் கூறுகின்றனர்.

ஆனால் மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் மாட்டுக்கு ஆம்புலன்ஸ் வசதி இருக்கு மக்களுக்கு இல்லை. இது தான் இவர்களின் யோக்கியதை. இன்னொரு புறம் கொசுவை ஒழிக்கிறோம் என்ற பெயரில் வீடுகளுக்கும், கடைகளுக்கும் நகராட்சி அபராதம் விதிக்கிறது. நாங்கள் விழுப்புரம் மக்கள் அதிகாரம் சார்பாக மாவட்ட, நகராட்சிகளில் உள்ள அரசு அலுவலகம், வாய்க்கால்கள் என்று ஆய்வு செய்து புகைப்பட ஆதாரங்களோடு நகராட்சியை முற்றுகையிட்டு போராடினால் அவர்களும் நாங்கள் என்ன செய்ய மேலிடம்… என்று சொல்கிறார்கள்.

எனவே மக்களே இனியும் இந்த அரசை நம்பி நாம் வாழ முடியாது. இவர்கள் நம்முடைய வேலையாட்கள் தான். இவர்களிடம் கெஞ்சுவதை நாம் விட்டுவிட்டு இவர்களுக்கு ஆணையிடுவதும், இவர்களிடம் நாம் அதிகாரம் செலுத்துவதன் மூலமே நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இது தான் மக்கள் அதிகாரம்” என்று முடித்தார்.

அவரையடுத்து தோழர் செல்வக்குமார் பேசும்போது “இன்று மக்களிடம் போய் இந்த ஆட்சியைப் பற்றி கேட்டாலே எடப்பாடி – ஓபிஎஸ் என்ற அடிமைகள் நம்மை  ஆண்டு கொண்டு இருக்கிறார்கள் என்று சாதாரணமாக சொல்லிவிடுவார்கள். ஏன்னென்றால் மக்களுக்கு பிரச்சனை தெரியாமல் இல்லை. அனால் அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தான் தெரிவதில்லை. அந்த தீர்வை சொல்வதற்குத் தான் இந்த பொதுக்கூட்டம்.

இப்போதெல்லாம் திருடர்கள் பயப்படுவதில்லை. எந்த வீட்டில் திருடுகிறார்களோ அந்த வீட்டிலேயே சமைத்து ஆம்லேட் போட்டு சாப்பிட்டு தூங்கிவிட்டு ஹாயாக போகிறார்கள். அது போலத்தான் இந்த அரசும் இன்று மக்களின் வரிப்பணத்தை கொள்ளையிட்டுக் கொண்டு அவர்களை காக்காமல் சுற்றுச்சூழல், சுகாதாரத்தை பராமரிக்காமல், மருத்துவக்கழிவுகளை அகற்றாமல், வாய்க்கால்களை மூடாமல், குப்பைகளை முறையாக பராமரிக்காமல் மக்கள் வசிப்பிடங்களிலேயே போட்டு விட்டு இன்று மக்கள் மீது பழி போட்டு அவர்களையே குற்றவாளிகளாக்கி அபராதமும் வசூல் செய்கின்றனர்.

இன்னொரு பக்கம் நேர்மையானவர்களின் நிலைமை என்ன? விஷ்ணுப்பிரியா, முத்துக்குமாரசாமி, சகாயம் – இவர்களின் நிலை என்ன? பெங்களூர் DSP கணபதி கர்நாடக உள்துறை அமைச்சர் ஜார்ஜ் மற்றும் இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகள் தான் என் தற்கொலைக்கு காரணம் என்று எழுதி வைத்து உயிரிழந்தார். DSP கணபதியின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரின் தந்தை சுப்ரீம் கோர்ட் சென்றுதான் முதல் தகவல் அறிக்கையையே பதிந்துள்ளார். அதுவும் மூன்று மாத போராட்டத்திற்கு பின். இதுதான் நேர்மையான அதிகாரிகளுக்கு நேரும் அவலம்.

அதிகார வர்க்கம் பெரும்பாலும் ஊழலிலும், முறைகேடுகளிலும் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு விழுப்புரம் முழுக்க மூணு சீட்டு, கஞ்சா வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. இது சாதாரண மக்களுக்கே தெரியும் போது போலீசுக்கு தெரியாதா? தெரியும். ஆனால் இந்த அரசு தடுக்காது. ஏனென்றால் மாமூலோடு சேர்த்து போனஸ் வாங்கும் போலீசுதுறை எப்படி இதைத் தடுக்கும்?

இந்த அரசுக் கட்டமைப்பில் நேர்மையானவர்களுக்கு இடமில்லை. ஏனென்றால் இது கிரிமினல்களின் கூடாரம். இங்கே நேர்மையானவர்களுக்கு கிடைப்பது மரணம், இல்லையென்றால் டம்மியான பதவிகளுக்கு தூக்கி எறியப்படுவார்கள். டாஸ்மாக் விசயத்தில் ஐயா சசிப்பெருமாள் நிலை என்ன?

ஆனால் மக்களே அதிகாரத்தை எடுத்து “மூடு டாஸ்மாக்கை” என்ற போராட்ட வழியை காட்டினோம். இன்று மக்களே மூடுகிறார்கள்.

இன்னொருபுறம் BJP, RSS, சிவசேனா, பஜ்ரங்தள் போன்ற சங்க பரிவாரங்கள் மக்கள் மீது இந்துத்துவத்தை திணிக்கின்றன. ஆனாலும் மோடியின் அனைத்து இந்தியாவும் கிழிந்து தொங்குகிறது. இன்று அனைத்து மக்களும் வீதிக்கு வந்துவிட்டனர்.” என்று முடித்தார்.

அடுத்து சிறப்புரையாற்றிய தோழர் காளியப்பன் பேசும்போது “உலகத்திலேயே சிறந்த அற இலக்கியத்தையும், நீதி இலக்கியத்தையும் கொண்டது தமிழ்நாடு. திருக்குறள் ஒன்றுக்காகவே நாமெல்லாம் பெருமைப்படலாம். ஒரு மன்னன் எவ்வாறு நாட்டை ஆள வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

”நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.”

என்று எந்நாளும் மக்களை தேடித்தேடிச் சென்று அவர்கள் விருப்பத்தை அறிந்து மன்னன் செயல்பட வேண்டும். மக்கள் எங்களுக்கு நிலம் கொடு, வீடு கொடு, என்று கேட்டால் அது நாடு அல்ல. மக்கள் மனதில் நினைப்பதற்கு முன்னால் அவர்களை காத்து நிற்பது தான் மன்னனின் கடமை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஜனநாயகம் என்றால் என்னவென்று மக்களுக்கு தெரியாது. அப்போது சட்டமன்றம் இல்லை, பாராளுமன்றம் இல்லை,  கலெக்டர் இல்லை, தாசில்தார் இல்லை, போலீசு இல்லை, உளவுப்பிரிவு இல்லை. ஆனாலும் மக்கள் வாழ்ந்தார்கள்.

பின்னர் மன்னர்கள் ஆண்டார்கள். மன்னன் வைத்தது தான் சட்டம், அவனை எதிர்த்து யாரும் கேட்க முடியாது. அது போலத்தான் அ.தி.மு.க. என்றொரு கட்சி இன்று கொள்ளை கூடாரமாக, கொள்ளை அடிப்பதை பிரிப்பதில் தான் சண்டை போட்டுக்கொண்டு   மக்கள் பிரச்சனைகளை கேட்பதற்கு கூட நாதி இல்லாமல், முட்டாள்களின் கூடாரமாக தினம்தினம் அராஜகங்களை அரங்கேற்றுகின்ற ஒரு கேவலமான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.

டெங்கு நோய் உயிரைக் கொல்லும் அளவுக்கு பெரிய நோய் அல்ல. ஆனால் ஒரு கொசுவைக் கூட ஒழிக்க முடியாத இந்த அரசின் சார்பாக, டெல்லியிலிருந்து, ஆம்னி பஸ்சின் மூலம் டெங்கு கொசு வருகிறது என  தெர்மாக்கோல் மேதை சொல்லுகிறார். வாசலில் சாணி தெளித்து கோலம் போட்டால் கொசு வராதாம். நாம் நோபல் பரிசுக்கு இந்தியாவிலிருந்து  அ.தி.மு.க. அமைச்சர்களை சிபாரிசு செய்யலாம். அந்தளவுக்கு அறிவாளிகளாக உள்ளனர்.

மதுரை ராஜாஜி தலைமை மருத்துவமனையில் என்ன நடந்தது. ஒரு துப்புறவு பணிப்பெண் ஊசி போட்டதற்காக பணிநீக்கம் செய்யப்படுகிறார், தலைமை மருத்துவமனைகளின் நிலையே இதுதான். மற்ற மருத்துவமனைகளைப் பற்றி சொல்லவா வேண்டும். இந்த அரசு எழவு வீட்டிலும் திருடுகின்றது. கொசு மருந்து அடிப்பதற்கு வக்கில்லாது மக்கள் மீது பழிப்போட்டு அபராதம் என்ற பெயரில் திருடுகிறது.

ஒரு பக்கம் டெல்டா விவசாயிகள் வறட்சி, பயிர் காப்பீடு கிடைக்கவில்லை. கடன் கிடைக்கவில்லை, காவிரியில் தண்ணீர் வரவில்லை என செத்து மடிந்தார்கள், திருப்பூரிலே நெசவுத்தொழில் அழிந்து அங்கு மக்கள் தங்கள் உடம்பை விற்று பிழைக்க வேண்டிய நிலை. சென்னை காசிமேட்டில் மீனவர்கள் சீன என்ஜின் படகுகளுக்கு எதிராகப் போராடினால் அவர்கள் மீது தடியடி நடத்துகிறது போலீசு. ஏனென்றால் அந்த சீன என்ஜின் படகுகள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு சொந்தமானவை.

கந்துவட்டியால் இசக்கிமுத்து குடும்பம் தீக்குளித்ததற்கு “அவர் ஏன் அவ்வளவு கடன் வாங்கணும், விரலுக்கு ஏத்த வீக்கம் வேணும்” என ஒரு அமைச்சர் பேசுகிறான். திருப்பூரில் ஐம்பது கோடி மதிப்புள்ள நூற்பாலை முதலாளி தற்கொலை செய்து கொண்டு இறந்து போனாரே அதற்கு யார் பொறுப்பேற்பது?  இப்படி மக்கள் சாவதை கண்டுகொள்ளாமல் எங்களை அம்மாவின் ஆவி தான் வழி நடத்துது,  ஆவிக்கூட பேசினேன் என்று அராஜகங்களை நாள்தோறும் அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

‘குட்கா புகழ்’ விஜயபாஸ்கர் டெங்குவுக்காக 26 கோடி ஒதுக்கியதாக கூறுகிறார், ஆனால் MGR நூற்றாண்டு விழாவுக்கு 76 கோடி செலவு செய்கிறது எடப்பாடி அரசு. எம்.ஜி.ஆர் -க்கு விழா எடுக்கும் அளவுக்கு அவர் என்ன செய்து விட்டார். அவர் தமிழகத்துக்கு கொடுத்த கொடை என்பது ஜெயா என்கிற சதிகாரியை கொண்டுவந்தது தான்.

ஜெயா தமிழகத்தை இருந்தும் கெடுத்தார், இறந்தும் கெடுக்கிறார். இப்போது ஜெயா செத்ததுக்கு விசாரணையாம். அனைவரும் பிறக்கும்போதே கட்டாயம் இறப்பும் இருக்கும். தேர்தல் நேரத்திலேயே அந்த அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை என எல்லோருக்கும் தெரியும். அதுவா பிரச்சனை? அவரை மருத்துவமனையில் வைத்து 75 நாள் மக்களை ஏமாற்றிய சசி, ஓ.பி.எஸ், எடப்பாடி, மோடி, கவர்னர், வெங்கையா நாயுடு இவர்கள் மேல் தான் விசாரணை வைக்கவேண்டும். இந்தக் கொள்ளைக்கார ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை என்று ஊழல் கண்காணிப்புத் துறையை சேர்ந்த மூத்த அதிகாரியே சொல்கிறார்.

இன்னொருபுறம் மோடியின் ஜி.எஸ்.டி. நாட்டின் பொருளாதாரத்தையும், வணிகர்களையும் அழிக்கத் தொடங்கியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் 2% வீழ்ச்சி. அதாவது 1% என்பது 15 லட்சம் குடும்பங்கள் பாதிப்பு பலகோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேட்டால் ஒரே வரி, ஒரே தேசம் என்று இந்த காவி கும்பல் பிதற்றுகிறது. சுருக்கமாக இந்த GST என்பது இனி தரகு முதலாளிகளும், அம்பானி, அதானி, போன்றவர்களும் வரிகட்ட தேவை இல்லை. அதாவது ஜவுளி வணிகத்தை எடுத்துக்கொண்டால் ஒரு இடத்தில் நூல் வாங்குவார், ஒரு இடத்தில் தைப்பார், ஒர் இடத்தில் எம்ப்ரைடு பண்ணுவார் இவருக்கு வரி. இவை அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்து வணிகம் செய்யும் அம்பானி போன்றவர்களுக்கு வரி இல்லை ஏனென்றால் அவர் உற்பத்தியாளர் ஆகிவிடுகிறார்.

முன்பு ஒருவர் 5 லட்சம் வியாபாரம் செய்தால் அவர் செய்த வியாபாரத்திற்கு ஏற்றதுபோல் வரி செலுத்தினார். ஆனால் இன்று அந்த 5 லட்சத்துக்கு வாங்கியவர்கள் வரியை கட்ட வேண்டும் அது தான் GST. இன்று நாட்டில் நடந்த ஊழல்களிலேயே மிகப்பெரிய ஊழல் மோடியின் பணமதிப்பு நீக்கம் தான் என்று அனைத்து முதலாளித்துவ பத்திரிக்கைகளே எழுதுகின்றன. இன்னும் சொல்லப்போனால் BJP-யை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அருண்சோரி, சுப்ரமணியசாமி போன்றவர்களே இதை பேசுகின்றனர்.

அமித்ஷாவின் மகன் ஒரு வழக்கில் சிக்குகிறார். அவரை விசாரிப்பதற்கு பதில் விசாரிக்க சொல்கிறவர்கள் மீது வழக்கு போடுகிறது இந்த யோக்கியர்களின் கட்சியான BJP. இப்படியாக விவசாயிகள், வணிகர்கள், சிறுதொழில்கள், மாணவர்கள், மீனவர்கள், முற்போக்காளர்கள், என்று யாருமே வாழமுடியாத சூழலிலேயே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

எனவே இந்த கொலைகார அரசிடம் போய் தீர்வு தேடுவதை விட்டு விட்டு இதற்கு வெளியில் தீர்வை தேடுவது தான் சரியாக இருக்கும். மீண்டும் மெரினா போராட்டத்தை, ஒரு அமைப்பாக, ஒரு அரசியல் தலைமையின் கீழ் முன்னெடுக்க வேண்டும்” என்று முடித்தார்.

இறுதியாக கூட்டத்திற்கு தோழர். வித்யாசாகர் நன்றியுரை கூறினார். வட்டாரக்கலைக்குழு தோழர்கள் உரையின் இடையிடையே புரட்சிகர பாடல்களை பாடி எழுச்சியூட்டினர்.

மக்கள் அதிகாரம் தோழர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மாற்றுக்கட்சியை சேர்ந்த ஜனநாயக சக்திகள் என கூட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம் – மண்டலம்.

ஒக்கேனக்கல் : பேருந்து கட்டணக் கொள்ளையை தட்டிக் கேட்ட மக்கள் அதிகாரம் !

2

மக்களிடம்  பகற்கொள்ளையில்  ஈடுபடும்  பென்னாகரம் அரசு போக்குவரத்து கழகத்தை  பணியவைத்த  மக்கள்  அதிகாரம்!

மிழகத்தின்  பிரபலமான சுற்றுலா தளங்களில்  ஒன்று  ஒகேனக்கல்  இங்கு ஆயிரக்கணக்கான  மக்கள்  வந்து செல்வது வழக்கம். அதுவும்  ஞாயிற்றுக்கிழமை   என்றால்  அதிக கூட்டம்  அலைமோதும். இந்த கூட்ட நெரிசலை  பயன்படுத்தி  அரசு ‘காய்லாங்கடை’  பேருந்துகளை இயக்கி கட்டண கொள்ளையடித்து வருகிறது பென்னாகரம் போக்குவரத்து துறை. பென்னாகரத்திலிருந்து  ஓகேனக்கல்லுக்கு  செல்லும் பேருந்துக்கு 8 ரூபாயும், டவுன் பஸ்சுக்கு  6 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கின்றனர்.

29.10.2017 அன்று ஞாயிற்றுகிழமை  என்பதால் காயிலாங்கடைக்கு  போடவேண்டிய  டவுன் பஸ்களை இயக்கி  6 ரூபாய் வாங்க வேண்டிய  பேருந்து  கட்டணத்திற்கு  பதிலாக 10 ரூபாய் வசூலித்தனர். அன்று  மாலை  3.30 மணிக்கு  ஒகேனக்கல்  பேருந்து  நிலையத்திலிருந்து 7-ம் எண்   டவுன் பஸ் பென்னாகரம்  சென்றது.  இதில்  60 க்கும்  மேற்பட்ட  பயணிகள்  பயணம்  செய்தனர். இந்த பேருந்தில்  மக்கள்  அதிகாரம்  தோழர்களும்  பயணம் செய்தனர்.

அப்போது நடத்துனர்  6 ரூபாய்க்கு  பதிலாக  10 ரூபாயை  டிக்கெட்டை  கொடுத்தார்.  மக்கள்  டவுன் பஸ்சில்  அநியாயமாக  காசு வாங்கிறீங்க என்று  முணுமுணுத்தனர்.  அப்போது பேருந்தில்  மக்கள்  அதிகாரம்  தோழர்கள், “யாரும் பயணசீட்டு  வாங்க வேண்டாம்”  என்று  மக்களிடம்  பேசினர். இதனையடுத்து  நடத்துனர் மாதுராஜ்  இது    சிறப்பு  பேருந்து;   அதனால்  டிக்கெட் விலை 10 ரூபாய் தான்; வாங்கினால் வாங்கு, இல்லை என்றால் இங்கே இறங்கு” என்று நடுகாட்டில் இறக்கி விட முயற்சித்தார்.

அப்போது, வயதான  முதியவர்கள், பெண்கள், கை குழந்தைகள் என  அனைவரும்  தவித்தனர்.  அதை பார்த்த மக்கள்  அதிகாரம் தோழர்கள்   யாரும்  பேருந்தில்  இருந்து  இறங்காதீர்கள்  என மக்களிடம் அறிவித்துவிட்டு, ஒட்டுனரிடம்  பணிமணைக்கு  பேருந்தை விடுங்கள் இல்லை எனில் அதிகாரியை  வரசொல்லுங்கள்  என்று கூறினர்.

அதன் பிறகு  காட்டு பகுதியில் இருந்து  வெளியே உள்ள செக்போஸ்ட்டுக்கு  ஒட்டி வந்தார் ஓட்டுநர். அப்போது  அங்கு இருந்த  போக்குவரத்து  போலீசு இன்ஸ்பெக்டர்  மக்களை  மிரட்டினார். இதற்கு  அச்சபடாமல் மக்கள்  அதிகார தோழர்கள்  “திருடனுக்கு போலீசு ஆதரவாகத்தான்  செயல்படும்” என்பதை  பேருந்தில்  அம்பலப்படுத்தி  பேசினர்.  இதனை கண்ட போலீசு உடனே பேருந்தில் ஒரு  போலீசை   உடன்  அனுப்பி   பென்னாகரம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.  அங்கு  பணியில் இருந்த எஸ்.ஐ கல்பனா  பேருந்தில் வந்த பயணிகள் கொடுத்த புகாரை  பெற்று,  கூடுதலாக  கட்டணம் வசூலிக்க நிர்பந்தித்த அதிகாரிகள்  மீது  நடவடிக்கை  எடுப்பதற்கு  பதிலாக  புகாரை  வாங்க மறுத்து விட்டார்.

இதனை  அடுத்து  அங்கு வந்த   பென்னாகரம்  போக்குவரத்து  கிளை மேலாளர்   போக்குவரத்து  நட்டத்தில் ஓடுது, என்ன சார்  பண்ண முடியும்?  இனிமேல்  கூடுதலாக  வசூலிக்க மாட்டோம்  என்றார். இதனை  குறுக்கிட்ட  மக்கள்  அதிகாரம் தோழர்கள்  இனி கூடுதலாக கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்று  எழுதித் தருமாறு  கேட்டனர்.

”அதெல்லாம் முடியாதுங்க, இனிமேல்  நடக்காது” என எழுதி தர  மறுத்தார்.  அப்போது  காவல் நிலையத்துக்குள்  வேகமாக  வந்தார்  இன்ஸபெக்டர் சிவராமன். ” மக்கள் அதிகாரத்துக்கு  இதே வேலையா போச்சு” என சத்தம் போட்டு பேசினார்.  ”கூட்டம்  இருக்குதுன்னு  பேசறீங்களா?” என்று  அதிகாரிகளுக்கு  ஆதரவாக  கண்மூடித்தனமாக  பேசினார். அதற்கு  ”அரசாங்க அதிகாரின்னா  பொறுமையா  பேசுவிங்க, மக்கள்ன்னா  எரிஞ்சு ,பொறுஞ்சி   மிரட்டி சத்தமா  பேசுவிங்க இல்லையா சார்?” என்று மக்கள்  அதிகார தோழர்கள் கேட்டனர்.

மேலும் கிளை மேலாளரிடம்  நீங்களும்  ஒரு  பெட்டிசன்  கொடுங்க  இரண்டு தரப்பிலும்  வழக்கு போடலாம் என்று மிரட்டினார்  இன்ஸ்பெக்டர். நீங்க  திருடனுக்கு  ஆதரவாகதான் பேசுவிங்க என்று தோழர்கள் கேட்ட உடனே  ”இவங்களுக்கு  மொதல்ல  பெட்டிசனை வாங்கி கிட்டு  சிஎஸ்ஆர்  போட்டு கொடுங்க” என்று  ஆத்திரத்தோடு  பேசி  உள்ளே  சென்றுவிட்டார்.

தினந்தோறும்  மக்கள்  தலையில் ஏதாவது ஒரு வரியை சுமத்தி கொள்ளையடிக்கும்  அரசு,  ஞாயிற்றுகிழமை  என்பதாலே  சுற்றுலா  பயணிகளையும், சாதாரண  உழைக்கும்  மக்களையும் பட்டபகலில் சிறப்பு  பேருந்து  என்று காய்லாங்கடை பஸ்ஸுக்கு கூடுதல்  கட்டணம்  வசூலித்து திருட்டை  பகிரங்கமாக  நடத்துகின்றனர். போக்குவரத்து  துறை அதிகாரிகள்.

இந்த மோசடியை  எதிர்த்து  கேள்வி கேட்டால் போலீசு  போராடுபவர்களை  மிரட்டுகிறது.  ஏற்கனவே  கடந்த ஆண்டு  பேருந்தை  மலைப்பகுதியில்  இயக்கியதால்  பெரிய  விபத்து ஏற்பட்டு  11  அப்பாவி  மக்கள் ஒகேனக்கல் மலைப்பகுதியில்   இறந்தனர். இது போன்ற விபத்துக்கள்  ஒகேனக்கல்  மலைப்பகுதியில்  அடிக்கடி சர்வ சாதாரணமாக  நிகழ்கின்றன.

பயணிகளின்   பயணத்தை  பாதுகாப்பாக  கொண்டு செல்வதற்கு  வக்கற்ற  அரசமைப்பு  மக்களை  பல வகையில்  சிறப்பு கட்டணம், விழா கட்டணம்  என்ற பெயரில்  கொள்ளையடிப்பதே நோக்கமாகக்  கொண்டு அதிகாரிகள்  செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு  அதிகாரிகளின்  வாய்வழி  உத்தரவு  போட்டு நடத்துனர்களை  மிரட்டி கூடுதல்  கட்டணம்  வசூலிக்க  நிர்பந்தம்  செய்கின்றனர்.

இது போல்  மக்கள்  கேள்வி கேட்கும் போதோ, போராடும் போதோ  ஓட்டுனர்கள்  நடத்துனர்கள் மீது  நடவடிக்கை  எடுத்து  அதிகாரிகள்  தப்பித்து  கொள்கின்றனர். இந்த பகற்கொள்ளையை திமிரோடு அதிகாரிகள் நடைமுறைப்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி முன்நின்று கேள்வி கேட்கும் நபர்கள் மீது  வழக்கு போடுவதாக மிரட்டுகின்றது போலீசு. அநியாயம்  நடக்கும்  போது  தட்டிகேட்கவும், வீதிக்கு வரவும், தயங்க கூடாது   என்பதே  தற்போது நம்முன் நிற்கும் ஒரே வழி என்பதை  இப்போராட்டம்  உணர்த்தியது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
பென்னாகரம்.
தொடர்புக்கு : 81485 73417.
த்தியிலும் மாநிலத்திலும் பா.ஜ.க, அ.தி.மு.க கும்பல்கள் அரங்கேற்றி வரும் மக்கள் விரோதக் கொள்கைகளையும் அராஜகங்களையும் அம்பலப்படுத்தியும், தற்போது நிலவும் அரசுக்கட்டமைப்பில் மக்கள் பிரச்சனைகள் எதையும் தீர்க்க முடியாது என்பதை விளக்கியும், இந்த கட்டமைப்புக்கு வெளியே நின்று மக்கள் தாங்களே அதிகாரத்தைக் கையிலெடுப்பதன் மூலமே தீர்வு காண முடியும் என்பதை வலியுறுத்தியும் தஞ்சை மானோஜிப்பட்டி உப்பிலி மண்டபம் அருகில் 29.10.2017 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தஞ்சை ஒருங்கிணைப்பாளர் தோழர் தேவா தலைமையேற்க, தோழர்கள் அருள், ராணி, பாலாஜி, சிவாநந்தம் ஆகியோர் உரையாற்றினர்.

தமிழகத்தில் டெங்குக்காய்ச்சலைக் கட்டுப்படுத்தி மரணங்களைத் தடுப்பதில் படுதோல்வியடைந்த எடப்பாடி அரசின் கயமைத்தனங்களையும், கொள்ளையையும் தோலுரித்து அம்பலப்படுத்திப் பேசினார் திருச்சி மக்கள் அதிகாரம் தோழர் ராஜா.

இறுதியில் சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன், ” டெங்குவால் தமிழகமே தத்தளித்துக்கொண்டிருக்கும் வேளையில் எடுபிடி எடப்பாடி அரசு எம்.ஜி.ஆர்-க்கு நூற்றாண்டு விழா என்ற பெயரில் கூத்தடித்துக் கொண்டிருக்கிறது. பல கோடி மக்கள் பணத்தை வாரியிறைக்கிறது” என அரசின் அக்கிரமங்களை அம்பலப்படுத்தினார். உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சகாயம் குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமல்படுத்த மறுப்பதன் மூலம் அரசுக் கட்டமைப்பே கொள்ளையர்களுக்குத் துணை போவதைக் கடுமையாக சாடினார். ஜெயலலிதா மரணத்தை விசாரணை செய்வதன் பெயரில் சசி-தினகரன் கும்பலைக் குற்றவாளியாக்கி எடப்பாடி- பன்னீர் கும்பல் தான் தப்பித்துக்கொள்வதற்கு தமிழகத்தையே பா.ஜ.க காலடியில் தாரைவார்த்து துரோகம் செய்வதை விளக்கினார்.

அறுபது மாதங்கள் கொடுங்கள், புதிய இந்தியாவை உருவாக்கிக் காட்டுகிறேன்” என சவடாலடித்து ஆட்சிக்கு வந்த மோடி முப்பதே மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்ததையும் ஜி.எஸ்.டி, பணமதிப்பழிப்பு நடவடிக்கைகள் மூலம் சிறு தொழில், சிறு வணிகம், விவசாயம் ஆகியவற்றை சார்ந்திருக்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டிருப்பதையும், இந்து மதவெறி பாசிசத்தை வெறி கொண்டு அமல்படுத்துவதால் ஏற்படப்போகும் அபாயத்தையும் விளக்கினார். உழைக்கும் மக்களாகிய நாம் அதிகாரத்தைக் கையிலெடுத்து மாற்று அமைப்பை உருவாக்குவதை நோக்கி சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இறுதியில் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற்று அனைவரின் பெருத்த வரவேற்பைப் பெற்றது.

தகவல்
மக்கள் அதிகாரம்
தஞ்சை.

தொடர்புக்கு: 94431 88285

அரசியல் அராஜகங்களுக்கு முடிவு கட்டுவோம் ! தஞ்சை பொதுக்கூட்டம் !

0

த்தியிலும் மாநிலத்திலும் பா.ஜ.க, அ.தி.மு.க கும்பல்கள் அரங்கேற்றி வரும் மக்கள் விரோதக் கொள்கைகளையும் அராஜகங்களையும் அம்பலப்படுத்தியும், தற்போது நிலவும் அரசுக்கட்டமைப்பில் மக்கள் பிரச்சனைகள் எதையும் தீர்க்க முடியாது என்பதை விளக்கியும், இந்த கட்டமைப்புக்கு வெளியே நின்று மக்கள் தாங்களே அதிகாரத்தைக் கையிலெடுப்பதன் மூலமே தீர்வு காண முடியும் என்பதை வலியுறுத்தியும் தஞ்சை மானோஜிப்பட்டி உப்பிலி மண்டபம் அருகில் 29.10.2017 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தஞ்சை ஒருங்கிணைப்பாளர் தோழர் தேவா தலைமையேற்க, தோழர்கள் அருள், ராணி, பாலாஜி, சிவாநந்தம் ஆகியோர் உரையாற்றினர்.

தமிழகத்தில் டெங்குக்காய்ச்சலைக் கட்டுப்படுத்தி மரணங்களைத் தடுப்பதில் படுதோல்வியடைந்த எடப்பாடி அரசின் கயமைத்தனங்களையும், கொள்ளையையும் தோலுரித்து அம்பலப்படுத்திப் பேசினார் திருச்சி மக்கள் அதிகாரம் தோழர் ராஜா.

இறுதியில் சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன், ” டெங்குவால் தமிழகமே தத்தளித்துக்கொண்டிருக்கும் வேளையில் எடுபிடி எடப்பாடி அரசு எம்.ஜி.ஆர்-க்கு நூற்றாண்டு விழா என்ற பெயரில் கூத்தடித்துக் கொண்டிருக்கிறது. பல கோடி மக்கள் பணத்தை வாரியிறைக்கிறது” என அரசின் அக்கிரமங்களை அம்பலப்படுத்தினார். உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சகாயம் குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமல்படுத்த மறுப்பதன் மூலம் அரசுக் கட்டமைப்பே கொள்ளையர்களுக்குத் துணை போவதைக் கடுமையாக சாடினார். ஜெயலலிதா மரணத்தை விசாரணை செய்வதன் பெயரில் சசி-தினகரன் கும்பலைக் குற்றவாளியாக்கி எடப்பாடி- பன்னீர் கும்பல் தான் தப்பித்துக்கொள்வதற்கு தமிழகத்தையே பா.ஜ.க காலடியில் தாரைவார்த்து துரோகம் செய்வதை விளக்கினார்.

அறுபது மாதங்கள் கொடுங்கள், புதிய இந்தியாவை உருவாக்கிக் காட்டுகிறேன்” என சவடாலடித்து ஆட்சிக்கு வந்த மோடி முப்பதே மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்ததையும்  ஜி.எஸ்.டி, பணமதிப்பழிப்பு நடவடிக்கைகள் மூலம் சிறு தொழில், சிறு வணிகம், விவசாயம் ஆகியவற்றை சார்ந்திருக்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டிருப்பதையும், இந்து மதவெறி பாசிசத்தை வெறி கொண்டு அமல்படுத்துவதால் ஏற்படப்போகும் அபாயத்தையும் விளக்கினார். உழைக்கும் மக்களாகிய நாம் அதிகாரத்தைக் கையிலெடுத்து மாற்று அமைப்பை உருவாக்குவதை நோக்கி சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இறுதியில் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற்று அனைவரின் பெருத்த வரவேற்பைப் பெற்றது.

தகவல்
மக்கள் அதிகாரம்
தஞ்சை.

தொடர்புக்கு: 94431 88285

முதலாளித்துவம் – ஒரு பேய்க்கதை ! – கருத்துப் படங்கள்

2

முதலாளித்துவம் –  ஒரு பேய்க்கதை !

முதலாளித்துவத்தின் இலாப வெறிக்கு இயற்கை அழிக்கப்படுகிறது ! எங்கும் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு ! மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடமாக பூமி மாற்றப்படுகிறது !
நன்றி: cartoon movement ஓவியர்: Maram Heshan

 

கோடிக்கணக்கான மக்கள் வீடில்லாமல் இருக்கையில், பல வீடுகள் கட்டப்பட்டு விற்கப்படாமல் தேங்கி நிற்கின்றன. இது தான் முதலாளித்துவத்தின் இயல்பான பண்பு. இதுவே முதலாளித்துவத்தை வீழ்ச்சியை நோக்கி உந்தித் தள்ளும் அதன் உள்முரண்பாடு.

 

திருடப்பட்ட நமது உழைப்பு தான் மூலதனமாக முதலாளிகளின் வசம் குவிந்திருக்கிறது!. நமது உரிமையை நாம் கேட்கும் போது, அவர்கள் நம்மையே குற்றஞ்சாட்டுகிறார்கள்!

 

டந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்குப் பின்னர் தான் மார்க்ஸின் மூலதனத்தில் பொதிந்திருக்கும் உண்மை  முதலாளித்துவவாதிகளின் மண்டையில் உறைத்தது! வால்வீதி எழுச்சியின் போது அதனை எண்ணி பயங்கொள்ளச் செய்தது!
ஓவியர்: கார்லோஸ் லடூஃப் ( Carlos Latuff ) – பிரேசில்

 

2008-ம் ஆண்டு அமெரிக்க பொருளாதார நெருக்கடியின் போது திவாலான கோல்டுமென் சாக்ஸ் எனும் முதலீட்டு வங்கி நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு பண உதவி செய்து தூக்கிவிட்டது. அந்நிறுவனத்தால் திவாலான மக்கள் நடுத்தெருவில்! நம்புங்கள் முதலாளித்துவம் வண்ணமயமானது !
நன்றி: cartoon movement ஓவியர்: எலிக்கோட்ரிஸ்ட்

 

முதலாளித்துவ வெறியாட்டத்தின் கோர விளைவுகளிலிருந்து மீள ஒரே தீர்வு – கம்யூனிசமே !

கந்து வட்டி கொடுமைக்கு தமிழகமே பலி!

3

மிழகத்தில் கந்து வட்டி கொடுமை போலிசு, அதிகாரிகளின் ஆசியோடு தலைவிரித்தாடுகிறது என்பதற்கான சமீபத்திய சாட்சியே நெல்லை இசக்கிமுத்துவின் மரணம். இசக்கிமுத்து எரிவதை பார்த்து பதறாத மனம் இல்லை. அந்த மரணத்தின் பின்னால் இருக்கும் வலி தோய்ந்த துயரங்களைச் சொல்லி மாளாது.

திங்கட்கிழமை குறைதீர்க்கும் நாள் அன்று  தன் தாய் பேச்சியம்மாள், தம்பி கோபியை நெல்லை கலெக்டர் அலுவலகம் வரச் சொல்லி விட்டு அவர்கள் கண்ணெதிரேயே குடும்பமே தீக்குளித்த சம்பவத்தை என்னவென்று சொல்வது. “ஐயோ…. எறியிறது எம்மொவனும், மருமொவளும்……என் பேத்திமாருங்களும் தான்” என்று பேச்சியம்மாள் கதறியதை நம்மால் மறக்க முடியாது. அன்று எரிந்த நெருப்பில் பொசுங்கியது இசக்கி மட்டுமல்ல. இந்த அரசு குறித்த மாயையும் தான்.

தீக்குளித்த இசக்கிமுத்து கந்து வட்டி தொல்லை காரணமாக நெல்லை மாவட்ட கலெக்டரிடம் ஆறு முறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அச்சன்புதூர் போலீசும், கந்து வட்டி கும்பலோடு சேர்ந்து  இசக்கிமுத்துவை மிரட்டியுள்ளது. தன்னை பாதுகாக்க வேண்டிய அரசே கைவிட்ட நிலையில் தான், இசக்கிமுத்து, தனது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் மதிசாருன்யா, அட்ஷயபரணிகா ஆகியோருடன் தீக்குளித்தார்.

தமிழகத்திற்கு இது புதிதல்ல. சில ஆண்டுகளுக்கு  முன்பு தருமபுரியில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து, கட்ட முடியாத சுமார் 27 பெண்களை தன் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டான் சிவராஜ் என்ற காமக் கொடூரன். தனக்கு நேர்ந்த  கொடூரத்தை வெளியில் சொன்னால் மானம் போய்விடும் என்ற பயத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் வெளியில் சொல்லவில்லை.  அன்று தருமபுரி சம்பவத்தை ஊடகங்கள் பரபரப்பாக்கி கல்லா கட்டியதை தவிர வேறெதுவும் பெரியதாக நடந்து விடவில்லை. வழக்கம் போல் “கைது நாடகம்” அரங்கேறியது அவ்வளவுதான்.

அதே போல, சமீபத்தில் திருப்பூரைச் சேர்ந்த பனியன் கம்பெனி உரிமையாளர் தாமரைக் கண்ணன்,  கடன் தொல்லை காரணமாக குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார். அதே போல் மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் விஷம் அருந்தி ஐந்து பேர் இறந்து விட்டதாக செய்திகள் வெளியானது. விசாரணையில் கடன் பிரச்சனை என்று தெரிய வந்தது. இதுபோன்று கந்து வட்டிக் கடன் தொல்லையால் “குடும்ப தலைவர் தற்கொலை” என்பது மறைந்து “குடும்பத்துடன் தற்கொலை” செய்திதான் தற்போது தமிழகத்தில் அதிகரித்துள்ளது.  கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் உளவியல் காரணங்களை புரிந்து கொள்ள மேற்சொன்ன தருமபுரி சம்பவம் ஒன்றே போதும்.

கல்விக்காக கடன் வாங்கி அடைப்பதற்கு வழியில்லாமல் இளைஞர்கள் தற்கொலை, சிறு தொழில் நிறுவனர்கள் கந்து வட்டிக் கும்பலிடம் கடன் அடைக்க முடியாமல் தற்கொலை, கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை, கடன் வாங்கிய தாய்மார்கள் பாலியல் வக்கிரங்களுக்கு உள்ளாக்கபடுவது என்று நாளுக்கு நாள் கந்து வட்டி கொடுமைகள் அரங்கேறி  வருகின்றன.

வங்கிகளில் விவசாயக்கடன், கல்விக்கடன், நகைக்கடன், வீடு கட்ட கடன், தனிநபர் கடன், தொழில் தொடங்க கடன் என்று ஏகப்பட்ட கடன்கள் ஏழை எளிய மக்களுக்கு  வழங்கப்பட்டு வருவதாவும், மக்கள் இதனை முறையாக பயன்படுத்துவது இல்லை என்ற கோணத்தில் காரசார விவாதங்களை ஊடகங்களில் நடத்துகிறார்கள். வங்கி அதிகாரிகளும் தனியாக ’அட்வைசு மழை’ பொழிகிறார்கள்.

“இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களில் 40,000 கிராமங்களில் தான் வங்கி கிளைகளே உள்ளன.  10, 20 கிராமங்களுக்கு ஒரு வங்கி என்ற நிலைதான் தற்போது இருந்து வருகிறது. அப்படி இருந்தால் கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு எப்படி கடன்கள் வழங்க முடியும். சில கிராமங்களில் வங்கி எங்கு உள்ளது என்பதை தேடி அலையும் நிலையும் உள்ளது” என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொது செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தினகரன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். வங்கிகளையே துளாவ வேண்டிய நிலையிலுள்ள இலட்சணத்தில் ’பணமில்லா பொருளாதாரம்’ என பீலா விட்டுக்கொண்டு திரிகிறார் மோடி.

தமிழகத்தில் “தென்மாவட்டங்களை பொறுத்தவரை கந்துவட்டி தொழிலில் இருந்து அம்மக்களை தனியாக பிரிக்க முடியாது” என்ற அளவிற்கு தீவிரமாக உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பணத்தை வசூலிப்பதற்கென்று தனி பாணியை கையாளுகிறார்கள். அனைத்து இடங்களிலும் வெளிப்படையாகவே கந்து வட்டித் தொழில் நடைபெறுகிறது. எனினும், இந்த சட்டமும், நீதிமன்றமும் வட்டித்தொழிலை ஒழித்த பாடில்லை.

அருண் சக்திகுமார், நெல்லை மாவட்ட எஸ்.பி.

அதிக வட்டி வசூலிப்பது, வட்டி செலுத்தாதவர்களை மிரட்டுவது, துன்புறுத்துவதை தடுக்க கடந்த 1957 -ம் ஆண்டிலேயே சட்டம் கொண்டு வரப்பட்டது. அது ஏட்டளவிலேயே முடங்கிக் கிடக்கின்றது. தமிழ் சினிமா நாயகர்களின்  ஆதர்சன இயக்குனரான மணிரத்னத்தின் சகோதரரும், ஜெயா ஆட்சியில் அரசுப் பணத்தில் படம் எடுத்தவருமான தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட பின்னர், 2003 -ம் ஆண்டு கந்து வட்டி தடுப்புச் சட்டத்தை கொண்டு வந்தார் மறைந்த ‘A1’ ஜெயா. இருப்பினும் இந்த சட்டம் வெறும் ஏட்டளவில் தான் உள்ளது. முக்கியமாக இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல்துறை அதனை கழிப்பறை காகிதமாகத் தான் பயன்படுத்தி வருகிறது.

தமிழகம் முழுவதும் போலீசு கும்பல் கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்தையே நடத்தி வருகிறது என்பது ஊரறிந்த உண்மை. ஆனால் நெல்லை மாவட்ட எஸ்.பி அருண் சக்திகுமார் தினகரன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “கந்து வட்டியை பொறுத்தவரை காவல்துறையை குற்றம் சாட்ட முடியாது” என்று கூறி முழுப் பூசணியை சோற்றில் மறைக்க முயல்கிறார்.

இத்தனைக்கும் கந்து வட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் நெல்லையில் வெறும் 302 வழக்குகள் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. யாரும் தண்டிக்கப்படவில்லை. இந்த பிரச்சனை முன்னுக்கு வந்த பிறகு தான் பத்து பேர் மீது வழக்கு பதிந்து நான்கு பேரை சிறையில் அடைத்துள்ளது போலீசு .

அதே நாளிதழுக்கு பேட்டியளித்த ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கூறுகையில், “கந்து வட்டி பிரச்சனையில் நடவடிக்கை எடுக்காத போலிசு, அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்” என்கிறார்.  மேலும் அவர், “கந்து வட்டி தடுப்பு சட்டத்தை கடுமையாக கடைப்பிடிக்காத வரையில் இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டபோது “சட்டத்தை கடுமையாக்கினால்” இந்த குற்றங்கள் நடக்காமல் தடுக்கலாம் என்றார்கள். என்ன நடந்தது? பெண்களுக்கெதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறதே ஒழிய பிரச்சனை தீர்ந்தபாடில்லை.

கடந்த 2013ல் “ தி இந்து” நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையில், கந்து வட்டி தொடர்பாக தானாக முன்வந்து (சூமோட்டோ) வழக்கு பதிவு செய்த சென்னை உயர் நீதிமன்றம், “கந்து வட்டி கொடுமை பற்றி தரப்படும் புகார்களை ஆராய்ந்து மக்களுக்கு உதவி செய்யவும், கந்து வட்டி வசூலிப்போர் போலீஸ் கூட்டை தடுக்கவும் மாவட்ட, வட்டார அளவில் கமிட்டிகளை ஏற்படுத்துவது பற்றி அரசு ஆராய வேண்டும்.

கந்து வட்டி வசூலிப்பவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான சாத்தியம் பற்றியும் அரசு பரிசீலிக்க வேண்டும். கந்து வட்டி புகார்கள் தொடர்பான புலன் விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள் கண்காணிக்க வேண்டும். கந்து வட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தண்டனை பெற்றோர் பற்றிய விவரங்களைக் கொண்ட அறிக்கையை அவ்வப்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவை காற்றில் பறக்க விட்டது ஜெயா அரசு. ”ஒருமணி நேரத்தில் பணிக்கு திரும்பவில்லை என்றால் “சஸ்பென்ட்” செய்யப்படும் என்று ஜாக்டோ-ஜியோவை மிரட்டிய நீதிமன்றம், தான் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாதது பற்றி எந்த கண்டணமும் தெரிவிக்கவில்லை.  கந்து வட்டி விஷயத்தில் பல நூறு தற்கொலைகள் அரங்கேறிய பின்னரும் அதனை கண்டும் காணாமலும் தான் இருந்து வந்துள்ளது. இதுதான் நீதிமன்றத்தின் இலட்சணம்.

கந்து வட்டி, கடன் தொல்லையில் ஒட்டு மொத்த அரசுக் கட்டமைப்புமே சாதாரண ஏழை எளிய மக்களுக்கு எதிராகத் தான் உள்ளது. தான் இயற்றிய சட்டத்தை தானே மீறியுள்ளது. இந்த கட்டமைப்பின் தோல்வி தான் இசக்கிமுத்துவை தீக்கிரையாக்கியது. மீண்டும் இவர்களையே நம்பினால் நம் கதி என்ன ஆகும்? மக்கள், பகுதிக் கமிட்டிகளை ஏற்படுத்தி, அதன் மூலமாக கந்துவட்டிக்காரர்களையும், அவர்களது கூட்டாளிகளான போலீசு கிரிமினல்களையும் விசாரித்து தண்டனை வழங்கினால் தான்இசக்கிமுத்துக்களின் மரணத்தை தடுக்க முடியும்.

மேலும் :

அரசியல் அராஜகங்களுக்கு முடிவு கட்டுவோம் ! – சென்னை எம்.ஜி.ஆர். நகர் பொதுக்கூட்டம்

2

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் “அரசியல் அக்கிரமங்களுக்கும் அராஜகங்களுக்கும் முடிவு கட்டும் போராட்டங்கள் தேவை” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பாக 28.10.2017  அன்று மாலை 5.30 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திரளாக பொதுமக்களும்,  தோழர்களும், ஜனநாயக சக்திகளும் கலந்துகொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்துக்கு தலைமையேற்ற தோழர் வெற்றிவேல் செழியன் – சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.- அவரது உரையில்…

“எடப்பாடி அரசாங்கம் என்பது மக்கள் நலனில் துளியும் அக்கறையில்லாமல் கல்லா கட்டுவதையே தொழிலாக கொண்ட அரசாக உள்ளது. அதன் அமைச்சர்கள் ஒவ்வொருவரின் செயல்பாடுகளும் கேலிகூத்தாக உள்ளது மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு கொண்டிருக்கும் போது தமிழ்நாட்டிற்கு ஆம்னி பஸ்ஸில் கொசு வருகிறது என்கிறார் ஒரு அமைச்சர், வாசலில் சாணம் தெளித்தால் கொசு வராது என்கிறார் இன்னொரு அமைச்சர். இப்படிப்பட்ட அடிப்படை அறிவற்ற பேச்சுக்கள் மக்களை மேலும் ஆத்திரமூட்டுவதாக உள்ளது.

இந்த அரசின் அராஜகங்கள், அக்கிரமங்கள் ஒன்றா இரண்டா? ஒட்டு மொத்த அரசின் செயல்பாடுகளுமே அக்கிரமமாக தான் உள்ளது. தலைமை செயலகம் என்பது மக்களுக்காக திட்டங்களை போட்டு செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது என்று இவர்கள் சொல்கிறார்கள். ஏதாவது ஒரு வேலை அப்படி மக்களுக்காக நடக்கிறதா என்றால் இல்லை. ஒரு அதிகாரியாவது மக்கள் பிரச்சனையை எப்படி தீர்க்க வேண்டும் என்று பேசுகிறார்களா? என்றால் இல்லை. மக்கள் நல திட்டங்களை போடுகிறோம் என்ற பெயரில் கமிசன் பிரித்து கொண்டு தங்களுக்குள் பங்கு போட்டு கொள்ளுவது தான் நடக்கிறது. இதில் ஆளும் கட்சியில் உள்ளவர்களுக்கு மட்டும் பங்கு போவதில்லை, எதிர் கட்சியில் உள்ளவர்களுக்கும் சேர்த்து தான் பங்கு போகிறது. இவர்களை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை.

சமூகத்தில் நீர் நிலைகள் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நீர் நிலைகளை அழிக்கும் வேலையை செய்கிறது. போலீசுத் துறை சட்ட ஒழுங்கை காப்பாற்றவில்லை மாறாக சீர்குலைக்கிறது. நமக்கு எதிராக மாறியுள்ள அரசை வீழ்த்தி மக்கள் தான் அதிகாரத்தை கையில் எடுக்கவேண்டும்.

அவரைத் தொடர்ந்து பேசிய தோழர் ஜெயபிரகாஷ் – சென்னை பகுதி ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.- அவரது உரையில்….

“கே.கே நகர் பகுதியில் கடந்த மழையின் போது ஏற்பட்ட ஒரு பள்ளம் ஆறு மாத காலமாக மூடப்படாமல் இருக்கிறது, அதை மூட கூட வக்கில்லாமல் தான் இவர்கள் இருக்கிறார்கள். தான் வாழும் பகுதியில் தண்ணீர் பிரச்சனைக்காகவும், அடிப்படை பிரச்சனைகளுக்காகவும் போராடும் போது அதை ஒரு பொருட்டாகவே அதிகாரிகள் மதிப்பதில்லை.

மீஞ்சூர் பகுதியில் மீன் பண்ணைகள், இறால் பண்ணைகள் அமைத்து விவசாயம் அழிக்கப்படுகிறது. இதை தெரிந்தே தடுக்காமல் இருக்கும் நிர்வாகிகள் என ஒட்டு மொத்த அரசு நிர்வாகமே செயலழிந்து, எந்த பிரச்சனையும் தடுக்க வக்கில்லாமல் மக்களுக்கு எதிராக மாறி நிற்கிறது. இதற்கு மாற்று நமது பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரத்தை நாமே கையில் எடுப்பதுதான்.  இந்த பகுதியில் ஒரு பிரச்சனையென்றால் நாம் எல்லோரும் சேர்ந்து தானே கேள்வி கேட்போம் அது தான் மக்கள் அதிகாரம்”

அதன் பின் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தோழர் இராஜூ – மாநில ஒருங்கிணைப்பாளர் – மக்கள் அதிகாரம் – அவரது உரையில்…

அரசியல் அராஜங்களுக்கும், அக்கிரமங்களுக்கும் முடிவு கட்டும் போராட்டங்கள் தேவை என்ற இந்த பொதுக்கூட்டத்தை இன்று சென்னையில் தொடங்கியுள்ளோம். இன்று தர்மபுரி, விழுப்புரம் என மொத்தம் மூன்று இடங்களில் இந்த பொதுக்கூட்டம் நடக்கிறது. மேலும் பல இடங்களில் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது.

இன்று எதை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்துவது; போராட்டம் நடத்துவது? கந்துவட்டியை எதிர்த்து நடத்துவதா? டெங்கு பிரச்சனையை கண்டித்து நடத்துவதா? பொறையாரில் 8 தொழிலாளர்கள் இறந்தார்களே அதற்கு போராட்டம் நடத்துவதா? இல்லை புறம்போக்கு நிலத்தை யார் வேண்டுமென்றாலும் ஆக்கிரமிக்கலாம் என்பது போல செயல்படும் ஓபிஎஸ், இ.பி.எஸ் யை எதிர்த்து போராட்டம் நடத்துவதா? தினகரனை எதிர்த்து நடத்துவதா? எதை பேசுவது என்றே தெரியாமல் பேசும் எதிர் கட்சிகளை விமர்சித்து கூட்டம் நடத்துவதா?

விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள்,  வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள் என இவர்களின் கோரிக்கைகளிக்காக போராடுவதா? ஒவ்வொரு பிரச்சனைக்கும் எத்தனை முறை போராடுவது? இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் காரணமான அரசியல் அராஜகங்களுக்கும், அக்கிரமங்களும் முடிவுக்கட்டும் போராட்டங்கள் தேவை. அப்போது தான் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல ஒவ்வொரு பிரச்சனைக்கும் லட்சக்கணக்கான மக்களை திரட்டி போராட்டம் நடத்த முடியுமா? டெங்கு கொசு கடித்து மக்கள் சாகிறார்கள். குழந்தைகள் சாகிறார்கள். ஒரு நாளைக்கு 10 பேர் இறக்கிறார்கள். மக்கள் இறப்பது என்பது வெறும் புள்ளி விவரங்களாக ஆகிவிட்டது. இதற்கு என்ன சொல்கிறார்கள் அரசு முதலில் மர்ம காய்ச்சல் என்றது. அப்புறம் நிலவேம்பு கசாயம் குடி என்கிறது. ஆம்னி பஸ்ஸில் கொசு வருகிறது என்கிறார் ஒரு அமைச்சர்.  எவ்வளவு திமிராக பேசுகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் டெங்குவிற்கு மட்டும் தான் மருத்துவம் பார்க்க முடியாமல் இருக்கிறதா? மற்ற நோய்களுக்கெல்லாம் ஒழுங்காக மருத்துவம் பார்க்கிறார்களா?

விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் இருவரும் நான்கு நாள் ஊரில் உள்ள எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை பார்க்க வேண்டும் அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை கூடம், கழிப்பிடங்கள், பிரதேச பரிசோதனை கூடம், மற்றும் மருத்துவமனையை சுற்றியுள்ள இடங்களில் கொட்டியிருக்கின்ற கழிவுகள், என எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அதன் பிறகு பேச வேண்டும்.

டெங்கு ஒரு பிரச்சனையில்லை என்று ஒட்டு மொத்த அரசும் சொல்கிறது. ராஜீவ்காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை என எங்குமே சரியான மருத்துவ வசதியில்லை. கொசு கடித்தால் செத்துவிடுமோ என்று மக்கள் நினைப்பது இந்த அரசு நம்மை காப்பாற்றாது என்று அரசின் மீது நம்பிக்கை இழந்ததால் தான் வருகிறது.

மக்கள் பலர் உயிரிழந்து கொண்டிருக்கும் போது தமிழக அரசு வெறும் 40 பேர் தான் இறந்துள்ளார்கள் என்று சொல்கிறது. மத்திய அரசு ஆய்வு குழு 18 பேர் இறந்ததாக சொல்கிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். சிறு வியாபாரிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு நெருக்கடியில் சிக்கி கொண்டிருக்கும் போது அவர்களிடம் அபராதம் போடுவது அயோக்கியத்தனம் இல்லையா?

அரசு அதிகாரிகளே போலீஸ் நிலையத்திற்கு செல்லுங்கள், கலெக்டர் அலுவலகத்திற்கு போய் பாருங்கள். டெங்கு கொசுவை உருவாக்கும் நிலையிருந்தால் அவர்களுக்கு அபராதம் போடுங்கள். நீதிமன்றத்திற்கு செல்லுங்கள். அந்த வளாகம் நீதிபதி கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது. அங்கு பிரச்சனையிருந்தால் 50,000 அபராதம் போடுங்கள். யாரை ஏமாற்றுகிறீர்கள்? மருத்துவம் கிடைக்காமல் மக்கள் சாகிறார்கள் என்றால் மருத்துவம் தரமுடியவில்லை என்றால் இந்த அரசு தோற்றுவிட்டது என்று தானே அர்த்தம். தோற்றுவிட்டால் மன்னிப்பு கேட்டவேண்டும். பணிந்து போகவேண்டும். நாம் என்ன தவறு செய்தோம், நம் குழந்தைகளை, உறவினர்களை இழப்பதற்கு, தவறு செய்தது இராதாகிருஷ்ணனும், விஜயபாஸ்கரும், அதிமுக-வும், அதிகாரிகளும் தான் காரணம். நாம் ஏன் சாக வேண்டும்?

நெல்லையில் இசக்கிமுத்து குடும்பத்தோடு தீக்குளித்து இறந்தார், இதற்கு யார் காரணம், பல முறை மனு கொடுத்தும், நடவடிக்கை எடுக்காத கலெக்டரும், எஸ்.பி-யுமே காரணம், இதை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் போராட்டங்கள் நடத்தினோம். கலெக்டர் நடவடிக்கை எடுத்திருந்தால் தடுத்திருக்க முடியாதா? இல்லை கந்துவட்டி விட்ட முத்துலட்சுமியை எஸ்.பி கண்டித்து இருந்தால் தடுத்திருக்க முடியாதா?. அந்த குழந்தைகள் ஏன் சாக வேண்டும். நமக்கு பிறகு யாரும் நம் பிள்ளைகளை காப்பாற்ற மாட்டார்கள். நமக்கு பிறகு நமது குழந்தை பிச்சையெடுக்கும் என்று நினைத்து தானே குழந்தையோடு தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

கலெக்டர் ஹெல்ப் லைன் தொடங்க போகிறோம் என்று முடித்து கொண்டார். பல கட்சிகள் கண்டனம் தெரிவித்து முடித்து கொண்டார்கள். சில கட்சிகள் கடுமையான தண்டனை வேண்டும். மூன்று வருடம் என்று தான் இப்போது தண்டனை இருக்கிறது 30 வருடம் தண்டனை என்று கடுமையான சட்டம் கொண்டு வந்தால் இப்படி நடக்காது என்று தொலைக்காட்சி விவாதங்களில் பேசி முடித்து கொண்டார்கள்.

கந்துவட்டிக்காக நான்கு பேர் செத்திருக்கிறார்கள். அதற்கான காரணம் அப்படியே இருக்கின்றது. எங்கே போனால் தீர்த்து கொள்ள முடியும் கலெக்டரிடமோ, நீதிமன்றத்திற்கோ போனால் தீர்த்து கொள்ள முடியுமா? இது தனிநபர் பிரச்சனை இல்லை. இது சமூக பொருளாதார பிரச்சனை. ஒருத்தர்  10 வட்டிக்கு கடன் வாங்கிறார் என்றால் அவசர தேவைக்கு தான் வாங்குவார். கல்விக்கோ, மருத்துவத்திற்கோ, தொழிலுக்கோ தான் கடன் வாங்குகிறார். அந்த நேரத்தில் அவர்களுக்கு கந்து வட்டி விடுபவன் தான் மகாராசனாக தெரிகிறான். கந்துவட்டிக்காரன் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறான், சினிமா, வியாபாரம் என அவன் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறான்.

கந்துவட்டிக்காரன் தான் சமூக பொருளாதாரத்தை இயக்குகிறான். அரசு என்ன செய்கிறது. கணக்கில் வராத பணம் கருப்பு பணம் என்று தான் சட்டம் சொல்லுகிறது. கந்துவட்டி என்பது கருப்பு பணம் தானே? கந்துவட்டி என்ன உழைக்கும் தொழிலா? இவர்களுக்கு எங்கேயிருந்து பணம் வருகிறது. இதை எப்படி மாற்றுவது? இதற்கு என்ன தீர்வு?  நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாரத் வங்கி, கூட்டுறவு வங்கிகளுக்கு செல்வோம். கடனாக  பணம் கொடு என்று கேட்போம்.

எந்த முதலாளியாவது நிரந்தர வைப்பு தொகை லட்சக்கணக்கில் அரசு வங்கியில் போட்டு வைத்துள்ளானா? டாடா, பிர்லா, அம்பானி, மிட்டலின் சொத்தா? அரசு வங்கிகளில் இருப்பது யாருடைய பணம் நம்முடைய பணம், பெரும்பான்மை மக்களின் சேமிப்பு பணம். அரசே கொடுக்கும் புள்ளிவிபரம் என்ன? பாராளுமன்ற தணிக்கை குழுவின் அறிக்கை என்ன? பொதுத்துறை வங்கிகளில் வாரா கடன் 70% பன்னாட்டு கம்பெனிகள், தரகு முதலாளிகளின் கடன் தான். விவசாயிகள் கடன் வெறும் 1% தான். பெண்ணின் கையை பிடித்து இழுத்தால் உடனே அடிப்பது போல, கந்துவட்டியை உடனே ஒரு முடிவிற்கு கொண்டு வர வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் துப்புரவு தொழிலாளர்கள் வேலைக்கு பலர் விண்ணப்பித்துள்ளார்கள். அந்த வேலைக்கு 8 வதிலிருந்து 10 வது வரை படித்தால் போதும். ஆனால் அதற்கு பி.இ, எம்.ஏ,, பி.எட் படித்தவர்கள் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளார்கள். இந்த அரசு உயிரோடு இருக்கிறதா? இல்லையா?. பி.இ படித்தால் வேலைக்கிடைக்காது என்றால் எதற்கு இன்ஜினியரிங் கல்லூரி இழுத்து மூட வேண்டுயது தானே?.

பல அரசு துறைகள் இருந்தும் ஒன்றும் செயல்படவில்லை, பொதுப்பணித்துறை கட்டும் பாலங்கள் இடிந்து விழுக்கின்றன. வெறும் செய்தியாக கடந்து போகிறோம். 2000 வருடத்திற்கு முன்பு கட்டிய கல்லணை உறுதியாக இருக்கிறது. ஆங்கிலேயர்கள் காலத்தில் பென்னி குவிக் கட்டிய முல்லை பெரியாறு அணை உறுதியாக இருக்கிறது. இவர்கள் கட்டிய பல தடுப்பு பாலங்கள் இடிந்து விழுக்கின்றன. இதற்கு யாரை தண்டிப்பது, யாரிடம் கேள்வி கேட்பது? ஆனால் இவர்களிடம் தான் நாம் மனு கொடுக்கிறோம். எவன் தாலியை அறுத்தானோ? அவனிடமே மனு கொடுக்கிறோம். அவன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தான் நாம் தீக்குளிக்கிறோம், விஷம் குடிக்கிறோம், போராடுகிறோம். எவன் விவசாயத்தை அழித்தானோ அவனிடமே விவசாயத்தை காப்பாற்று என்று மன்றாடுகிறோம். இவர்கள் யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள்.

இசக்கிமுத்து செத்த பிறகு எல்லா கலெக்டர் அலுவலகத்திலும் தீயணைப்பு கருவிகள் பொருத்துகிறது அரசு.  பிரச்சனைக்கு என்ன காரணம் எப்படி தீர்ப்பது என்று யோசிப்பதில்லை. யாரும் கலெக்டர் அலுவலகத்தில் வந்து தீக்குளித்துவிடக்கூடாது என்று தான் சிந்திக்கிறார்கள். டெங்கு பிரச்சனையென்றால் எப்படி சரி செய்வது என்று யோசிக்காமல், காய்ச்சல் வந்ததையே மறைப்பது, மிரட்டுவது. எப்படி தீர்ப்பது என்று சிந்தக்கவில்லை எதற்காக இந்த அரசு மக்களை ஆள வேண்டும். குடும்ப தலைவர் என்பவன் மனைவி பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும், அதை விடுத்து மனைவியை விபச்சாரத்திற்கு விடுவது, பிள்ளைகளை பிச்சையெடுக்க வைத்து பிழைப்பது என்றால், அவன் குடும்ப தலைவனா? அது போல் இந்த அரசும் செயல்படுகின்றது.

கல்வி கொடுப்பேன், மருத்துவம் கொடுப்பேன், சுகாதாரம் கொடுப்பேன், பேச்சுரிமை, சங்கம் சேரும் உரிமை, வியாபாரம் செய்யும் உரிமை எல்லாம் தருவேன் என்று ஏற்று கொண்டு, இந்த அரசு எல்லாவற்றையும் பறிக்கிறது. மேலும் மேலும் வரி விதித்து மக்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறது. இசக்கிமுத்து செத்தால் தான் கந்துவட்டியை பற்றி பேசனும், ஏழை அனிதா செத்தால் தான் கல்வி உரிமையை பற்றி பேசனும், விவசாயி செத்தால் தான் விவசாயத்தை பற்றி பேசனும் என்றால் எதற்கு இந்த அரசு. மொத்த பிரச்சனைக்கும் காரணமே இந்த அரசு தான். இந்த அதிகாரிகள் தான் காரணம்.

தீர்வு தான் என்ன?

எந்த சட்டத்தை படித்துவிட்டு வியாபாரிகள் வியாபாரம் செய்கிறார்கள்? எந்த சட்டத்தையும் படிக்காமல் தான் மக்கள் தங்கள் வேலைகளை தாங்களே பார்த்து கொள்கிறார்கள். ஒரு பொது ஒழுங்கிற்கு கட்டுப்பட்டு தான் வாழ்கிறார்கள்.

மெரினாவில் பல லட்சம் மக்கள் ஒன்று கூடினார்கள். ஒரு திருட்டு இல்லை, நகை பறிப்பு இல்லை, பெண்களுக்கு தொந்தரவு இல்லை. ஏழு நாட்கள் இரவு தூங்கி காலையில் எழுந்து போராடினோம். யார் உணவு கொடுத்தார்கள், யார் போர்வை கொடுத்தார்கள் யாருக்கும் தெரியாது. போக்குவரத்தை அவர்களே ஒழுங்கு செய்து கொண்டார்கள். மக்களிடம் ஒழுங்கு அர்ப்பணிப்பு இருக்கிறது. மின்வாரியத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை இவர்களெல்லாம் இல்லாததா பிரச்சனை? இருப்பது தான் பிரச்சனை? அவர்கள் இருப்பதால் தான் பிரச்சனை. இந்த அரசு கட்டமைப்பில் ஆளை மாற்றி பிரயோஜனம் இல்லை.

இதில் தீர்வு இல்லை என்று முடிவு செய்வோம். டாஸ்மாக் கடையை மூடனுமா? மக்கள் அதிகாரத்தை கூப்பிடுங்கள். வருகிறோம். சேர்ந்து மூடுவோம். அப்படி தமிழ்நாட்டில் பல கடைகளை மூடியுள்ளோம். அய்யா சசிபெருமாளை போல போராடி தீர்வு இல்லை. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போல போராடுவோம். கடைகளை அடித்து உடைப்போம். கடை வைப்பது ஒரு குற்றம் அதை அரசு செய்யும் போது, மக்கள் எதிர்த்து தானே போராடியாக வேண்டும். மக்கள் அதிகாரத்தில் இணையுங்கள். மக்கள் அதிகாரத்தை அழையுங்கள். உண்மையான சுதந்திர போராட்டத்தை தொடங்குவோம். இதே மாதிரி பல பொதுக்கூட்டங்கள் நடத்துவோம் அதில் நீங்கள் வந்து பேசுங்கள் பிரச்சனைகளை குறித்து பேசுவோம். தீர்வை நோக்கி நகர்வோம்.”

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கலை நிகழ்ச்சி சமகால அரசியலை அம்பலப்படுத்தும் வகையில் பாடல்கள் பாடப்பட்டது. இப்பொதுக் கூட்டத்தையும் கலை நிகழ்ச்சிகளையும் திரளான பொதுமக்கள், வணிகர்கள் என பலதரப்பினரும் கவனித்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொலைபேசி : 91768 01656.

பெண் : வலியும் வலிமையும் – புதிய கலாச்சாரம் மின்னூல் !

0

பெண் : வலியும் வலிமையும் மின்னூலில் இடம்பெறும் பெண்களின் கதைகள் – அந்த வலியை ஆழமாக உணர்த்துகின்றது.

கிராமத்து வாழ்க்கையில் கருப்பு நிறம் ஒரு பெண்ணுக்கு தரும் சித்திரவதை எப்படி இருக்கும்? தாலிபான்களிடம் சாகாமல் அந்த வங்க பெண் எழுத்தாளர் ஏன் தப்பிக்கவில்லை ? இந்திய சுற்றுலாவுக்கு வந்த அந்த அமெரிக்க மாணவி ஊர் திரும்பியதும் மனநோயாளியானது ஏன்? பாலியல் வன்முறையை ஒரு பெண் எதிர்க்க பயப்படுவதும், மாத விலக்கு என்றொரு உயிரியல் நிகழ்வை அவமானமாக கருத வைப்பதும் வேறு வேறா? பாலஸ்தீனத்து தாய் அபு ரஹ்மேவிடம் இன்னும் கண்ணிர் வற்றாமல் இருப்பது எப்படி? 20 ரூபாய் எலுமிச்சை சாதத்தை கனவாகக் கருதும் அந்த பூங்கா பராமரிக்கும் பெண்ணின் பொழுது எப்படி போகிறது?

அரசு மருத்துவமனையில் குழந்தைகள் குடிக்கும் தாய்ப்பாலில் சோசலிசம் இருப்பதை அறிவீர்களா? இந்தியாவுக்கு அருகே இருப்பதாகச் சொல்லப்படும் ‘சிங்கப்பூர் சொர்க்கத்தில்’ வீட்டு வேலை செய்யச் செல்லும் ஒரு தமிழ்ப் பெண்ணின் கதை என்ன? மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட மணிஷா கட்லாலின் கிராமத்தை சுடுகாடாக்கியது யார்? கொல்கத்தா தன்னைக் கைவிட்டு விட்டதாக கூறும் அந்த பெண் பத்திரிகையாளரின் வருத்தம் எது?

இவர்கள் புதுமைப் பெண்கள் அல்ல; போராடும் பெண்கள். போராடும் கடமையை உணர்த்தும் வலிமையான பெண்கள். அந்தப் போராட்டத்தில் தங்களது உயிரையும் வாழ்வையும் இழந்த பெண்கள்.

பெண் விடுதலையானது சமூக விடுதலையின் அங்கம் என்பதை உணர்ந்தவர்களுக்கு இந்த பெண்கள் தமது நெஞ்சுரத்துடன் துணை வருவார்கள்.

பெண் : வலியும் வலிமையும்

நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • தாய்ப்பால் சோசலிசம்
  • கருப்பாயி
  • தாலிபான்களை எதிர்த்து உயிர்துறந்த வங்கப் பெண் !
  • நீங்கள் ஒருபோதும் கேட்க விரும்பாத பாரதக் கதை !
  • என்னாது மாசா மாசம் வருமா ?
  • பாலஸ்தீனம்: ஒரு விதவைத்தாயின் வீரக்கதை !
  • ஏம்மா… ஒரு எலுமிச்ச சாதம் என்ன விலைம்மா ?
  • நாமறியாத அரசு செவிலியர்கள் !
  • கிம்பெர்லி ரெவேரா: ஆதிக்கத்திற்கு துணை போகாத வீரம் !
  • சிங்கப்பூர்: நினைத்தாலே கசக்கும்
  • மணிஷா எழுதிய கவிதை !
  • கொல்கத்தா என்னை கைவிட்டு விட்டது !
  • மேட்டுக்குடி இந்தியாவின் பெண் வெறுப்பு !

பதிமுன்று கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்

20.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Emailvinavu@gmail.com

இந்நூலின் கட்டுரைகள் வினவு தளத்தில் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

மின் நூல் விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
 

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

இதயத்தை பிசையும் மாணவர் பிரகாஷின் மரண வாக்குமூலம் !

2

சென்னை எழும்பூரில் உள்ள கவின் கலைக் கல்லூரியில் சிராமிக் துறையில் (பீங்கான்) இறுதியாண்டு படித்து வந்த மாணவர் பிரகாஷ் கடந்த 25-10-2017 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷ் – சுயமாக வரைந்த ஓவியம்.

வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன், தாமரை தம்பதியனருக்கு இரண்டு மகன்கள். பார்த்திபன் அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக பணிபுரிகிறார். அவரது மூத்த மகன் பிரதாப், பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது இளையமகன் தான் பிரகாஷ். சிறு வயது முதலே கலைகளில் அதிக ஆர்வம் கொண்ட பிரகாஷ், பள்ளிப்படிப்பின் போதே மாநில அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

பள்ளிக்கல்வி முடித்ததும், சென்னை வந்து அரசு கவின் கலைக் கல்லூரிக்கான நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, இக்கல்லூரியில் பீங்கான் கலைத் (Ceramic) துறையில் பயின்றிருக்கிறார். சென்னையில் தங்கிப் படித்தால் அதிக செலவாகும் என்பதால், குடும்ப சூழல் கருதி, அன்றாடம் கல்லூரிக்கு அடுக்கம்பாறையிலிருந்து இரயிலில் வந்து சென்றுள்ளார் பிரகாஷ். இச்சூழலிலும் ஒரு நாள்கூட விடுமுறை எடுக்காமல் கல்லூரி வகுப்புகளில் பங்கேற்றுள்ளார். கல்லூரியில் 2 ஆண்டுகள் சிறந்த மாணவருக்கான விருதையும் பெற்றுள்ளார்.

பிரகாஷ் இயல்பிலேயே, இயலாதவர்களின் மீது கரிசனம் கொண்டவராக இருந்துள்ளார். பார்வையற்றோர் ஆதரவு இல்லத்திற்கு அவ்வப்போது சென்று அவர்களுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். மேலும் வரைகலை, டெரகட்டா, மற்றும் பீங்கான் கலையியலில் மிகச்சிறந்த அறிவும், திறமையும் கொண்டவராக இருந்துள்ளார் பிரகாஷ்.

பேராசிரியர் இரவிக்குமார்

கல்லூரியில் பீங்கான் கலையியல் பாடப்பிரிவின் துறைத்தலைவரான இரவிக்குமார், குறிப்பாக பிரகாஷை வகுப்பில் ஒதுக்கி வைத்து, அவரை கட்டம் கட்ட ஆரம்பித்தார். நன்றாகப் படிக்கும் ஒரு மாணவரை ஒரு துறைத்தலைவர் அவ்வாறு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன ?

ஓவியக் கல்லூரியில் இருக்கும் பீங்கான் துறை என்பது ஒப்பீட்டளவில் மாணவர்களுக்கு குறைவான வேலை வாய்ப்பு அளிக்கும் துறை என்று மாணவர்கள் கூறுகின்றனர். துறைத் தலைவர் ரவிக்குமார் அப்படி சில மாணவர்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலை  வாய்ப்பினை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

இது போக அவர் கல்லூரியில் பாடம் எடுக்கும் போது இந்துப் புராணங்களை விதந்தோதி கதைப்பார். கேட்டால் அது கலைகள் சார்ந்து விவாதிக்க வேண்டிய மரபார்ந்த விசயம் என அவர் நியாயப்படத்தக் கூடும். அவரது வேலை வாங்கித் தரும் தகுதியை மனதில் வைத்து மாணவர்கள் இத்தகைய விசயங்களில் ஆர்வம் காட்ட விரும்ப வில்லை என்றாலும், எதிர்ப்பை வெளிப்படையாக காட்ட முடியாது. ஆசிரியரை பகைத்துக் கொண்டால் இன்டர்னல் மார்க்கில் கைவைப்பார் என்பது தமிழக மாணவர்கள்  அனைவரும் அறிந்த ஒன்று.

இப்படித்தான மாணவர் பிரகாஷ் ஆசிரியரோடு மெல்ல மெல்ல முரண்பட ஆரம்பித்தார்.

மாணவர் பிரகாசை ஒருமுறை கூப்பிட்டு, “ நீ நல்லவன் என்பதால் தான் உனக்கு இரண்டு முறை சிறந்த மாணவன் விருது கொடுத்திருக்கிறேன். ஆனால் நீ ஏன் இன்னமும் சர்ச்சிற்கு சென்று கொண்டிருக்கிறாய் ?” எனக் கேட்டுள்ளார். அதன் பின் தொடர்ச்சியாக அவரை ஒதுக்கி வைத்தல், கண்டுகொள்ளாமல் விடுதல், மற்ற மாணவர்கள் முன்னிலையில் அசிங்கப்படுத்துதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளார் இரவிக்குமார். மாணவர் பிரகாஷ் இதனை தனது மரண வாக்குமூல வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில் உணர்ச்சி வசப்பட்ட குரலில் பேசும் பிரகாஷின் கேள்விகள் நம்மை நொறுங்கச் செய்கிறது. ஏழ்மை பின்னணியல் வரும் மாணவன், ஒரு ஆசிரியரின் நாட்டாமைத்தனத்தால் தூக்கில் தொங்கி இறநது போயிருக்கிறான் என்பது நம்மை வெட்கி தலை குனியவைக்கிறது. தான் கிறித்தவராக இருப்பது இவருக்கு ஏன் பிரச்சினை என்று ஆரம்பித்த முரண்பாடு பின்னர் அதிகரிக்கிறது. ரவிக்குமாரின் இந்துமதப்பற்றை ஏற்றால்தான் தான் ஒரு ஆளாக வெளியே வர முடியும் என்ற நிலை அவருக்கு பிடிக்கவில்லை. அவரது சுயமரியாதை அதை ஏற்கவில்லை.

பிரகாஷ் மரணத்திற்கு நியாயம் கேட்கப் போராடும் கல்லூரி மாணவர்கள்

மேலும் வகுப்பில் இல்லாத அடிப்படை வசதிகள், செய்முறைப் பயிற்சிக்கும், ஆய்விற்கும் தேவையான ஆய்வகப் பொருட்கள், கல்லூரியில் வழங்கப்படாமல் இருப்பதையும் அவர் ஆசிரியரிடம் சுட்டிக் காட்டியுள்ளார். இதனை வகுப்பறையில் இரவிக்குமாரிடம் பிரகாஷ் கேட்ட போது, வகுப்பு முடியும் முன்னரே வெளிறிப்போன முகத்தோடு வகுப்பறையில் இருந்து வெளியேறியுள்ளார் இரவிக்குமார். ஒரு அடிமை மாணவன் நம்மை கேள்வி கேட்பதா என்று ஒரு ஆண்டைக்கு உரிய வெஞ்சினத்தல் ரவிக்குமார் பயணிக்க ஆரம்பித்தார்.

இதன் தொடர்ச்சியாக இப்பிரச்சினைகளை கல்லூரி முதல்வரிடம் முன்வைத்துள்ளார் பிரகாஷ். இரவிக்குமார் பாடம் எடுக்காமல் இந்துமத வெறி மற்றும் மதத் துவேஷத்தை வளர்ப்பது குறித்து  கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுத்துள்ளார். அதனைக் கேட்டுக் கொண்ட கல்லூரி முதல்வர், பிரகாஷை சமாதானம் செய்து அனுப்பியுள்ளார்.

கல்லூரியை பற்றிய சில உண்மைகள்…

மறுநாள் காலையில், வகுப்பறைக்கு வந்த இரவிக்குமார்,  “ எவன்கிட்ட போயி கம்ப்ளைண்ட் பண்ணினாலும், என்னை ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது” என வகுப்பில் அனைவருக்கும் பொதுவாகக் கூறியுள்ளார். அதாவது பிரகாஷை ஜாடையாக மிரட்டியிருக்கிறார். இதனால் மிகவும் மனமுடைந்துள்ளார் பிரகாஷ்.

இந்நிலையில் மற்றொரு ஆசிரியர் ஒருவர் மாணவர் பிரகாஷின் கையறு நிலையை வைத்து இரவிக்குமாரை மிரட்ட திட்டமிட்டார். பின்னர் அந்த உள் தகராறு நடக்காமல் ஆசிரியர்களுக்குள் ‘புரிந்துணர்வு’ ஏற்பட்டு மாணவர் பிரகாஷ் முன்னிலும் அதிகமாக ஒதுக்கப்பட்டார்.

கடந்த ஆண்டில் முதலாமாண்டு சேர நுழைவுத்தேர்வில் தேர்வான மாணவர்களிடம் சுமார் ரூ.20,000-லிருந்து – ரூ.50,000 வரை பேரம் பேசப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓவியக் கல்லூரிக்காக  அரசு ஒதுக்கும் பல்வேறு நிதிகள் இங்குள்ள நிர்வாகத்தால் சுருட்டப்படுவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அத்தகைய கூட்டு காரணமாகவே ஆசிரியர் பிரகாஷ் அவரை மிரட்ட திட்டமிட்ட ஆசிரியரை பேசி சரிசெய்திருக்கிறார். இது குறித்து இறந்து போன மாணவர் பிரகாஷின் ஆடியோவை போலிசின் வசம் கொடுத்திருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். எனினும் இந்த ஆடியோவை பரிசோதனை செய்து முடிப்பதற்கே 4 மாதம் ஆகிவிடும் என்பதால்   யாரையும் கைது செய்ய முடியாது என போலீசு கைவிரித்ததாக மாணவர்கள் சோர்வுடன் கூறுகின்றனர்.

இந்நிலையில் மாணவர் பிரகாஷின் முயற்சிகளுக்கு ஆதரவாக மற்ற மாணவர்கள் வெளிப்படையாக முன்வரவில்லை. ”வந்தால் ஒழுங்கா படிச்சிட்டுப் போற வழியைப் பார். வகுப்புக்கு வாத்தியார் வரலை, அது இல்லை, இது இல்லைன்னு கம்ப்ளைண்ட் பண்ற வேலையெல்லாம் பார்க்காத, இல்லைன்னா உனக்குத் தான் பிரச்சினை. ஜாக்கிரதை” என ஆசிரியர் சிவராஜ் கூறியதை வீடியோவில் சொல்கிறார் பிரகாஷ்.

பிரகாஷின் படைப்புகளில் ஒன்று

இதனால் மனம் நொந்த பிரகாஷ், மறுநாளில் இருந்து கல்லூரிக்குச் செல்லவில்லை. வீட்டிலும் சந்தேகம் வரக் கூடாது என்று இரயில் நிலையத்திலேயே இருந்துவிட்டு மாலை வீட்டிற்கு திரும்பச் சென்றுள்ளார். கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆன நிலையில், அதே கல்லூரியில் வேறு துறையில் படிக்கும் அவரது நண்பர் அலைபேசியில் அழைத்து கல்லூரிக்குப் பிரகாஷ் வராதது குறித்து கேட்டபோது, நடந்த சம்பவங்களை எடுத்துக் கூறி கல்லூரிக்கு வருவதை விட செத்துவிடுவது மேல் எனக் கூறி அழுதுள்ளார் பிரகாஷ். அவரை ஆற்றுப்படுத்தி ஆறுதல் கூறியிருக்கிறார் அவரது நண்பர்.

மறுநாள் காலையில், கல்லூரிக்குச் சென்று அலைபேசியில் பிரகாஷ் பேசிய பதிவை கல்லூரி முதல்வரிடமும் ஆசிரியர் சிவராஜிடமும் போட்டுக் காட்டியுள்ளார், பிரகாஷின் நண்பர். ஆனால் இப்பிரச்சினையை உதாசீனப்ப்படுத்தி இருக்கின்றனர் இருவரும். துறைத்தலைவர் இரவிக்குமார், ”இது போன்று பல மிரட்டல்களைப் பார்த்தவன் நான், இதற்கெல்லாம் சளைக்கமாட்டேன்” எனத் திமிராகக் கூறியுள்ளார். அதன் பின்னர் மற்ற மாணவர்கள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுத்து, பிரகாஷின் வீட்டு முகவரியை கல்லூரி அலுவலகத்தில் இருந்து பெற்று அவரது வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர்.

பின்னர், பிரகாஷின் பெற்றோரிடம் நிலைமையை எடுத்துக் கூறியுள்ளனர். பிரகாஷின் பெற்றோர்களும், கல்லூரி முதல்வரை பிரகாஷோடு வந்து சந்தித்துள்ளனர். அங்கு பிரச்சினையை முன் வைத்த பிரகாஷை, பல்வேறு கேள்விகள் மூலம் அவரை மனதளவில் காயப்படுத்தியிருக்கின்றனர். இறுதியில் ”எனது கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவாதமளிக்கும் வகையில் எழுதிக் கையெழுத்திட்டுத் தாருங்கள்” எனக் கேட்டுள்ளார் பிரகாஷ். அதற்கு மறுத்துள்ளது கல்லூரி முதல்வர், இரவிக்குமார் மற்றும் சிவராஜ்-ஐ உள்ளடக்கிய கல்லூரி நிர்வாகம்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரகாஷ், கடந்த 25.10.2017 அன்று மாலை 4 மணிக்கு தனது முகநூல் பதிவில் “ இனி கல்லூரிக்கு என்னால் வரமுடியாது. என்னை மிகவும் இழிவு படுத்துகிறார்கள். எனது படிப்பையும் முடிக்க விடமாட்டார்கள். நான் சாகபோகிறேன்” என கடிதம் எழுதிவிட்டு, தனது மரணவாக்கு மூலத்தை வீடியோவாக தனது மொபைலில் பதிவிட்டிருக்கிறார். பின்னர் மாலை 7 மணியளவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

தூக்கிட்டுக்கொண்ட நிலையில் பிரகாஷ்

கல்லூரி மாணவர்கள் அனைவரும், ”கல்லூரி முதல்வர், பேராசிரியர் இரவிக்குமார் மற்றும் சிவராஜைக் கைது செய்யவேண்டும்” என கோரிக்கை முன்வைத்து போராட்டம் செய்துள்ளனர். அங்கு வந்த போலீசிடம், அவருக்கு நடந்த கொடுமை குறித்து அவர் தனது நண்பருக்கு அலைபேசியில் அழுது கொண்டே விவரித்த ஆடியோ பதிவையும் மாணவர்கள் கொடுத்துள்ளனர்.

ஆனால் போலீசு கும்பலோ, யார் மீது நடவடிக்கை எடுக்காமல், மழுப்பி வருகிறது. மாணவர்கள் புகாரளித்தபோதும், முக்கிய சாட்சியமான ஆடியோவைக் குறிப்பிட்டு ”கல்லூரி முதல்வர் – சிவராஜ் – இரவிக்குமார்” கூட்டணியைக் கைது செய்யவேண்டும் எனக் கேட்ட போதும், பதிலளிக்காமல் மழுப்பிச் சென்றுள்ளது.

முதல் தகவலறிக்கையிலும் கூட தூண்டுதலின் பெயரிலான மரணம் எனப் பதிவு செய்யாமல், சந்தேகத்திற்குரிய மரணம் எனப் பதிவு செய்துள்ளது போலீசு.

தனது சுயமரியாதைக்காக, தனது உரிமைக்காகத் தனது உயிரை இழந்திருக்கிறார் பிரகாஷ். அவர் தனது நண்பர்களுக்கும், தன்னை துன்புறுத்தி தற்கொலைக்குத் தள்ளிய ஆசிரியர்களுக்கும் பேசியுள்ள வீடியோ பார்ப்போரைக் கலங்கச் செய்வதாக இருக்கிறது. கல்லூரிகளில் ஜனநாயகம் இல்லாத நிலையையும் அது எடுத்துக் காட்டுகிறது.

அவரது ஓவியங்களைப் பார்க்கையில் நமக்கு நீட் அனிதா நினைவுக்கு வருகிறார். ஒரு நல்ல கலைஞனை இங்கே கொலை செய்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் நமது மாணவச்செல்வங்கள் சாக வேண்டுமா என்ற கேள்வி இதயத்தைக் குடைகிறது. ஒரு அடிப்படை ஜனநாயகம் கூட இல்லாத இந்நாட்டில் என்ன இருந் என்ன பயன்?

பிரகாசின் படைப்புகளில் சில

பிரகாசின் கடைசி கடிதங்கள்

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
சென்னை

அராஜகங்களுக்கு முடிவு கட்டும் போராட்டங்கள் தேவை ! தருமபுரி பொதுக்கூட்டம் !

0

அரசியல்  அக்கிரமங்களுக்கு,  அராஜகங்களுக்கு  முடிவுக்கட்டும்  போராட்டம்  தேவை! தருமபுரி  பொதுக்கூட்டம் !

டெங்குவுக்கு  அன்றாடம்  15, 10  பேர் பலி, கந்துவட்டிக்கு  குடும்பமே  பலி என அன்றாடம்  மக்கள் இறந்து  கொண்டிருக்கும் இந்த தருணத்தில் எம்.ஜி.ஆர்-க்கு  நூற்றாண்டு விழா  எடுப்பது, அம்மா  எப்படி  செத்தார்  என  ஆய்வு  நடத்துவது  என்று   அன்றாடம்  அராஜங்களும், அக்கிரமங்களும்  அரங்கேறி  வருகின்றன,  இதனை  அம்பலப்படுத்தி மக்கள் அதிகாரம் சார்பாக, தருமபுரி  முழுவதும் தெருமுனைக்கூட்டம்,  ஆர்ப்பாட்டம் என  பல்வேறு  பிரச்சாரங்களை  மேற்கொண்டு  28.10.2017  அன்று  தருமபுரி  சந்தைப்பேட்டையில் பொதுக்கூட்டம்  நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தினை தோழர் ராஜா தலைமை தாங்கினார்.  அவர் பேசுகையில் ”நெல்லையில்  கந்துவட்டி கொடுமையால் 6 முறை மனுக்கொடுத்தும் கண்டுகொள்ளாத நிலையில் தீயில் கருகி  இறந்துள்ளனர். கல்வி, மருத்துவம், சுகாதாரம் அனைத்தையும் அரசு மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருக்கிறது. மர்ம காய்ச்சல் என்ற அராஜகங்களின் மூலம் மக்களை சாகடிக்கிறார்கள். எனவே மக்களை இந்த அரசு வாழ வைக்காது. எனவே    நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.

அடுத்ததாக தோழர் காந்தராஜ் மக்கள் அதிகாரம் பாகலூர் பகுதி ஒருங்கிணைப்பாளர்  பேசுகையில், ”கடைகளில் பிளாஸ்டிக் இருக்கிறதா என்றும் கடைகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறதா என்றும் சோதித்து அபராதம் விதிக்கின்றனர். இதனை சுத்தப்படுத்தி அப்புறப்படுத்தாமல், பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும்  ஆலைகளை  மூடாமல், மக்களின்  வாழ்வாதாரத்தில்  மண்ணை  அள்ளி போடுகிறது.  இதுதான்  அராஜகம் இதுதான்  அக்கிரமம்.  எனவே  இதனை  வேடிக்கை  பார்க்காமல்  போராட வேண்டும்”  என்றார்.

மக்கள்  உரிமை  பாதுகாப்பு மையம்  வழக்கறிஞர்  ஜானகிராமன்  பேசுகையில், ”தமிழகம் மற்றும்  இந்தியா  முழுவதும்   அராஜகங்களும் அக்கிரமங்களும்  அரங்கேறி வருகிறது.  அட்லி   சொன்ன  கதையும், இங்கே  சீனிவாசன்  சொன்ன  இட்லி கதையும்  தான்  மிகப்பெரிய  அராஜகங்களுக்கு  உச்சகட்டமாக  இருக்கிறது. பொருளாதாரத்தை   தூக்கி நிறுத்தி விடுவேன்  என்று  பேசிய  மோடி, இன்றைக்கு  சர்வதேச  அளவில்  பொருளாதாரம்  மந்தம்   இதனால்  தூக்கி நிறுத்த முடியாது என்று  கூறுகிறார்கள். இதனை  மூடி மறைக்க  பசு பாதுகாப்பு  என்கிற  பெயரில் மக்களை  தாக்குவது,  கல்புர்கி போன்ற  முற்போக்காளர்களை  சுட்டுக்கொல்வது என  பிஜேபி, ஆர் எஸ்.எஸ்  அகண்ட  பாரத  கனவை நிறைவேற்ற  மக்களுக்கு  எதிரான  திட்டங்களை திட்டமிட்டே  செய்கிறார்கள்.

இன்னொரு பக்கம்  மக்கள்  பிரச்சினைகளை  விட்டுவிட்டு ஜெயலலிதா  இறப்புக்கு  விசாரணை  என்றும் கட்சியயையும்  பதவியையும்  பிடிக்கும்  வேலையையும்  பார்க்கிறார்கள்.   மக்களுக்கு  எதிரான  திட்டங்களை  எதிர்த்து  போராடினால்  அதற்கு  எதிராக வழக்கு போடுவது, அதுவும்  சட்டத்திற்கு  உட்பட்டு  போடுவதும் இல்லை. இதுதான்  இந்தியா  முழுவதுமான நிலைமை.  எனவே  நாற்றம் அடிக்கும் இந்த  அரசை  தூக்கி  எரியும்  போராட்டம் தான்  தேவை.  மாற்று  போராட்டம்  வெற்றி தராது” என்றார்.

மக்கள்  அதிகாரம் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர்  தோழர் முத்துக்குமார்  பேசுகையில், ”அரசு மக்கள்  நலனில் அக்கறை கொண்டு சுகாதாரத்தை பேண   வேண்டும்.  ஆனால்  மனித  ஆரோக்கியத்தை  கெடுக்கும்  வகையில்  செயல்படுகிறது.  சிறப்பு மருத்துமனைகளுக்கு  அவார்டு கொடுக்கிறேன் என்கிறார்கள். ஆனால் இங்கு மக்களை  சாகடிக்கும் அதிகாரிகளுக்கு  என்ன  தண்டனை  கொடுப்பது. பல நாடுகளில் சுகாதார துறையில் 8% ஒதுக்குகிறார்கள்  ஆனால்  இந்தியாவில்  1% மட்டுமே  ஒதுக்குகின்றனர். அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதில்லை.

சவப்பெட்டியில் ஊழல் இருந்ததை போல மக்களை  சாகடிப்பதில்  போட்டிப்போட்டுக்கொண்டு  ஊழல் செய்கின்றனர். சாக்கடையில்  உற்பத்தியாகும்  ஏடிஎஸ்  கொசுவை விட  அரசியல் சாக்கடையில்  உற்பத்தியாகும் இபிஎஸ், ஒபிஎஸ்-யை  தூக்கியெறிவோம்” என்றார்.

தமிழக  விவசாயிகள் சங்கம் கடலூர்  மாவட்ட செயலாளர் திரு. ஆர்.நந்தகுமார்  சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், ”அயோக்கியர்  நெ.1  மோடி, அயோக்கியர் நெ.2  எடப்பாடி, இவர்களுக்காக நீதித்துறை, காவல்துறை, பத்திரிக்கை துறை என எல்லா துறைகளும் இவர்களை பற்றி பேசுவது, இவர்களுடைய  பிரச்சினையை பற்றி  விசாரிப்பது  தான்  இவர்களின்  வேலையாக  இருக்கிறது.  3 அடிதான்  மணல்  அள்ளவேண்டும்  என்றால்  30 அடி வரைக்கும்  அள்ளுகிறார்கள்.  கிரானைட் கொள்ளை, தாதுமணல் கொள்ளை,  கதிராமங்களத்தில்  கொள்ளை என தொடருகின்றன கொள்ளைகள். இது அராஜகம் அக்கிரமம் இல்லையா?

டெங்குவால் தமிழகத்தில் 17  பேர்தான்  இறந்தாக  கூறுகிறார்கள். ஆனால் ஜெயலலிதா  சிறைக்கு செல்லும் போது, 300 பேர்  இறந்தததாக  அறிக்கை  தாக்கல் செய்கிறார்கள். ஒவ்வொரு  அமைச்சருக்கும்  ஒரு மணல் குவாரி, மதுபான ஆலை என பிரித்து கொடுத்துள்ளார் எடப்பாடி, எனவே  அரசுக்கான  மணல்குவாரி  அல்ல , அமைச்சர்களின் கொள்ளைக்கான மணல்குவாரியாக ஆகிவிட்டது. இந்த கொள்ளைகள்  அனைத்திலும்  அதிகாரிகளுக்கு  பங்கு இருக்கிறது.

அம்மா  எப்படி செத்தார்  என்பதை  அவருடைய  செக்யூரிட்டியிடம் கேட்க வேண்டும், இல்லை உடன்பிறவா  சகோதரி  சின்னம்மாவிடம்  கேட்க வேண்டும்.  இல்லையா அமைச்சர்களை  தெருவில்  நிற்க வைத்தாவது விசாரணை செய்ய வேண்டும். ஆனால் விசாரணை கமிசன் என்று  ஊரை ஏமாற்றுகிறார்கள். இதனை பயன்படுத்தி  தமிழக பா.ஜ.க  தலைவர்  தமிழிசை “பாவிகள் ஆள்வதை  காட்டிலும்  காவிகள் ஆளலாம்” என்று கூறுகிறார். பெரியார்  பாரம்பரியத்தில்  வாழ்ந்த  தமிழகத்தில் ஒபிஎஸ், ஈபிஎஸ் போன்ற காட்டிக்கொடுக்கும் கைகைகூலிகளுக்கும் காவிக்கும்  இடம் இல்லை, நாங்கள் விடமாட்டோம்”  என்றார்.

மக்கள்  அதிகாரம்  தலைமை குழு  தோழர் மருது  பேசுகையில் ”இன்றைக்கு  4 பேர் இறந்து போன பிறகு தான் ஆய்வு? கலெக்டர் சரியாக  செயல்பட்டு இருந்தால்  இதுபோன்ற  சம்பவம்  நடந்திருக்காது  என்று  பேசுகிறார்கள்.  தமிழகம்  சரியாக  செயல்பட்டதால்தான்   கடந்த  7 ஆண்டுகளில்  823 பேர்  இறந்து போயிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். டெங்கு காய்ச்சலை ஒழிக்க  நிலவேம்பு  கசாயம்  குடியுங்கள் என்று கூறுகிறார்கள். இப்படிப்பட்ட  அறிவாளிகளும்  முட்டாள்களும்தான்  நம்மை  ஆட்சி செய்கிறார்கள்.

நீட், கெயில், நவோதய பள்ளி என்று  நம்முடைய  வாழ்க்கையே பறிக்கிறது. வேலைவாய்ப்பு  அலுவலகம் என்ற ஒன்று வேலையை கொடுக்காமல் இருக்கிறது. இதனை  முடிவுக்கு  கொண்டு வர வேண்டும். புயல், வெள்ளம், சுனாமி என்று வந்தபோதும்  மக்கள்தான்  காப்பாற்றினார்கள். எனவே  எதிரிக்கும், துரோகிகளுக்காகவும் செயல்படும்  இந்த அரசு, மக்களுக்கோ செயல்படாத அரசு. இதிலிருந்து  தப்பிக்க விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் என தனித்தனியாக  போராடினால்  தீர்க்க முடியாது.  எல்லா பிரச்சினையும்  தீர்க்க  கரம் கோர்ப்போம், வீதிக்கு வருவோம் தோற்றுப்போன  கட்டமைப்பு இது என அம்பலப்படுத்துவோம். மக்கள் அதிகாரம்  படைப்போம்” அழைத்தார்.

இக்கூட்டத்தினை   நூற்றுக்கணக்கானோர்  கவனித்தனர்.  இன்றைக்கு  அரசியல் அக்கிரமங்களுக்கும், அராஜகத்திற்கும்  முடிவு கட்டாமல்  வாழ்வு  இல்லை  என்பதை  உணர்த்துவதாக  இக்கூட்டம்  அமைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள்  அதிகாரம்.
தருமபுரி. தொடர்புக்கு : 81485 73417.

கந்து வட்டி முதல் டெங்கு வரை தீர்வு என்ன? ஓசூர் போராட்டம்

0

டந்த அக்டோபர் 23, அன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள காசிதர்மம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இசக்கிமுத்து 24 வயதுடைய அவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் 4 வயதுடைய மதுசரண்யா, 1 வயது பிஞ்சுக்குழந்தையான அட்சய பரணிகா ஆகிய இரண்டு குழந்தைகள் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீவைக்கப்பட்டு தற்கொலை செய்துக்கொண்டனர். தீயில் கருகிய அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டு தற்போது நால்வருமே இறந்துப்போயினர்.

பார்ப்போர் இதயமே வெடிக்கும் அளவுக்கு நடந்த அந்த துயரச்சம்பவம் கண்டு நாட்டு மக்கள் அனைவருமே பதறிப்போயினர். இந்த துயரச் சம்பவத்திற்கு காரணமான கந்துவட்டிக்கும்பல் , கந்துவட்டிக் கும்பலுக்கு ஆதரவாக இருந்த போலீசு அதிகாரிகள், எஸ்.பி அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகங்களில் 6 முறை மனுகொடுத்தும் அதனை அலட்சியப்படுத்திய எஸ்.பி, கலெக்டர் உள்ளிட்ட இந்த அரசு நிர்வாகமே குற்றவாளிகள் என தங்களின் இன்னுயிரை பலி கொடுத்து நாட்டுமக்களுக்கு இனம் காட்டிச் சென்றுள்ளனர் அந்த இசக்கிமுத்து குடும்பத்தினர்.

இந்நிலையில், இதனை பிரதிபலித்து விளக்கியும், அதற்கான தீர்வை முன்வைத்தும்… நெல்லையில் குடும்பமே தீயில் பலி! கந்துவட்டியை கட்டுப்படுத்தாத அரசுதான் குற்றவாளி!” என்ற முழக்கத்தை  முன்வைத்து ஒசூரில் செயல்பட்டுவரும் புரட்சிகர அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 26.10.2017 அன்று மாலை 4.30 மணியளவில் காமராஜர் காலனியில்  விண்ணதிரும் முழக்கங்களுடன் எழுச்சிகரமாக நடத்தப்பட்டது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பாகலூர் பகுதி அமைப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் துணைத்தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார், இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் முருகேசன் நன்றியுரையாற்றினார். திரளான மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஆதரித்துச் சென்றனர்.

தோழர் பரசுராமன் தனது கண்டன உரையில்.., “திருநெல்வேலியில் கந்து வட்டிக் கொடுமைக்கு குடும்பமே பலியாகி விட்டது. பிஞ்சு குழந்தைகளின் மரணம் நம்மை போராடவும், படுகொலையின் குற்றவாளிகளை அம்பலப்படுத்தவும் தூண்டுகிறது. நாடு முழுவதும் பல கட்சிகள் போராடுகிறது. கந்து வட்டிக் கொடுமைக்காரனை கைது செய்ய கேட்கிறார்கள். நிவாரணம், நீதி கேட்கிறார்கள். எல்லாத்துக்கும் மேலே உயர் நீதிமன்றம் விசாரணை அறிக்கை கேட்கிறது. யாரிடம் என்பது ஆட்சேபனைக்கு உரிய விசயமாக இருக்கிறது. மாவட்ட கலெக்டரிடம் கேட்கிறது, நீதிமன்றம்.

போலீசும் கலெக்டர் தான் இந்த வழக்கில் குற்றவாளிகள்.ஏன்?

எங்கள் விருப்பத்தில் இருந்து குற்றபட்டியலில் போலீசு, கலெக்டரை சேர்க்கவில்லை.
போலீசு விசாரணையில் மிரட்டல்தான் நடந்துள்ளது. அதற்கான ஆதாரம் (செல்போன் பதிவு) வெளியாகியுள்ளது. அதிகாரம் இவர்களிடம் உள்ளது. பிரச்சனையை தீர்க்கவில்லை. இவர்களின் அலட்சியம், கந்து வட்டி கொள்ளையர்களுடனான கள்ளக் கூட்டு அநியாயமாக 4 உயிர்களை பறித்து விட்டது.

ஒரு வேளை இசக்கிமுத்து மனுதரவில்லை என்றால் அது வேறு கதை. மாவட்ட ஆட்சியரிடம் 6 முறை மனு கொடுத்துள்ளார். அந்த மனு மீண்டும் மீண்டும்  காவல் நிலையத்துக்கே திருப்பி இருக்கிறார்கள். போலீசும் ‘விசாரணை’ செய்திருக்கிறது. நீ ஏன் கடன் கொடுத்தாய்? கேட்கவில்லையே? பதில் பதிவாகவில்லையே? கந்து வட்டிக்காரனிடம் கேள்வி கேட்கப்படவில்லை. அவர்களை அவமானப்படுத்தவில்லை. கடன் எப்ப கட்டுவாய்? ஏன் ஒடுற? இப்படி இசக்கிமுத்து குடும்பத்தை குடைந்து திருக்கிறது, போலீசு. சுமூகமான முடிவு காணும் நோக்கம் போலீஸிடம் இல்லை. முடியவில்லை என்றால் நீதிமன்றத்துக்கு அனுப்பியிருக்கவேண்டும். அதை செய்யவில்லை,போலீசு. விசாரணை என்ற பேரில் நெருக்கடி கொடுத்துள்ளார்கள். போலீசு அதன் கடமையை செய்யாததால்  குற்றவாளி என்கிறோம்.

அடுத்து, கந்து வட்டிக்காரன் A1 குற்றவாளி என்றால், A2 குற்றவாளி கலெக்டர் சந்திப் நந்தூரி என்கிறோம். ஏன்? ஆதாரம் இல்லாமல் குற்றவாளி பட்டியலில் கலெக்டரை சேர்க்கக்கோரவில்லை. 6 முறை மனு வாங்கியும் பிரச்சனையை தீர்க்கவில்லை. காரணம் தகுந்த பரிசீலனை இல்லை. தன்னுடைய கீழ் நிலை அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை என்பதால் பெரும்பாலும் மக்கள் மனு கொடுக்கிறார்கள். அதே போலீசு காரர்களை விசாரணைக்கு போடுவது அறிவுள்ள செயலா?

அடுத்து, அனுபவமில்லை என்றும் ஒதுக்கிட முடியாது. இதே ஒசூரில் 2012 -ல் கூலி உயர்வு கேட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்திய குளோபல் பார்மாடெக் தொழிலாளர் மீது தடியடி நடத்தி வெளியேற்றினார். ஆக கலெக்டர்களிடம் நல்ல பண்பாடு இல்லை. இவர்கள் தொழிலாளர்கள் மனு கொடுத்தால் அதற்காக இயங்குவதில்லை. மாறாக கார்ப்பரேட்களுக்காக, சுரண்டலில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். இங்குள்ள ஆறு , ஏரி, குளம், இயற்கை வளம் ஆகியவற்றை கொள்ளையடிக்க துணை நிற்கிறார்கள். இந்த ஆட்சியாளர்களால் தான் , இந்த அதிகார அமைப்பால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அடுத்து, டெங்கு வால் தமிழகம் சாகிறது. டெங்கு கொசு ஒழிக்கிறோம் என்ற பெயரில் வீட்டிற்குள் அது சரியா, இது என்ன? என மக்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். மக்களை குற்றவாளியாக்குகிறார்கள். அரசு / அதிகார அமைப்பை கேள்வி கேட்டு விடக் கூடாது என்று முந்திக் கொள்கிறார்கள். கல்வித்துறையில் தரம் உயர்த்துவதாக சொல்லி நீட் தேர்வு வைத்து  ஏழை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இல்லை என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள்.

அடுத்து, விவசாயிகளுக்கு விலையில்லை, கடன் தொல்லையால் 3 லட்சம் விவசாயிகளின் உயிர் பறிபோய்விட்டது. விலைவாசி உயர்வு பல பேரை பட்டனி சாவுக்கு தள்ளி விட்டது.
அடுத்து, தொழிலாளர்களை கசக்கி பிழிகிறார்கள். பணி நிரந்தரம் இல்லை, கூலி, போனஸ் நியாயமா இல்லை ஏன்?  கம்பெனி முதலாளிகள் சுரண்டுகிறார்கள். மனு போட்டு ஒரு தீர்வும் எட்ட முடியவில்லை. போலியான ஜனநாயக நீதிமன்ற அமைப்புகள் முதலாளிகளுக்கு ஆதரவாக இயங்குகிறது.

பண மதிப்பு நீக்கம்,GSTவரி போட்டுள்ளார்கள். கந்து வட்டி கொள்ளை போல் உள்ளது. சிறுதொழில்களை அழித்துவிட்டது. மக்களை ரோட்டுக்கு கொண்டு வந்து விட்டது. இந்த துயரம் தீர வழி காட்ட அரசு தயாரில்லை. துல்லியமாக இலக்கு வைத்து தொழில்களை அழித்து மக்களை சாகடிக்கிறது, அரசு. மக்கள் சாவை வேடிக்கையும் பார்க்கிறது.” என இந்த அரசுக்கட்டமைப்பின் சீர்குலைவை விளக்கியதுடன் இவற்றிற்கு மாற்று மக்கள் அதிகாரமே என்பதையும் விளக்கி பேசினார்.

மேலும் மக்கள் மத்தியில் திருநெல்வேலி : கந்துவட்டிக் கொடுமைக்கு தொழிலாளி, அவரது மனைவி, பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகினர்! என்ற தலைப்பில் ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. மக்கள் அவற்றை ஆர்வமுடன் வாங்கிப்படித்தனர்.

 ***

திருநெல்வேலி : கந்துவட்டிக் கொடுமைக்கு தொழிலாளி, அவரது மனைவி, பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகினர்!

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

டனைக் கட்டியப் பிறகும் துறத்திய கந்துவட்டிக் கொடுமைக்கு, கந்துவட்டிக் கொடூரனின் சுடு சொற்களை சகிக்க முடியாமல், தலைமறைவாகி தன்மானமிழந்து வாழ பிடிக்காமல், அரசின் பாதுகாப்பு கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டு, தான் மட்டும் தற்கொலை செய்தால் குடும்பமே பரிதவிக்குமே என கருதி, மனதை கல்லாக்கிக் கொண்டு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பிஞ்சு மனைவி – குழந்தைகளுக்கும் தீ வைத்து குடும்பத்துடன் தற்கொலை செய்துக்கொண்டார் கந்துவட்டியால் வாழ வழியின்றிப்போன இசக்கிமுத்து.

குழந்தைகளின் கதறல் நெஞ்சை பிளக்கிறது தீவின் சுவாலை மனதை பொசுக்குகிறது போலீசு, கலெக்டரின் அலட்சியம் -இரத்தம் கொதிக்கிறது இசக்கியை தற்கொலைக்குத் தள்ளிய இந்த சமூகத்தை சகித்துக்கொள்ள மனம் மறுக்கிறது – இன்னுமா ஒதுங்கி இருப்பது?

பலமுறை மனு கொடுத்தும் கலெக்டர், போலீசு எஸ்.பி. கண்டுக்கொள்ளவில்லை. இதற்கு முன் கந்துவட்டி கொடுமையால் பலர் தற்கொலை செய்துக்கொண்ட போதும் இந்த அதிகாரிகளுக்கு உரைக்கவில்லை. ஏன்? கந்துவட்டி என்பது பொதுமக்களின் தனிப்பட்ட பிரச்சினையல்ல. இது கந்துவட்டி கொள்ளையர்கள், போலீசு, அரசு அதிகாரிகளின் கூட்டுப்பயங்கரவாதம்.

உள்ளூர் கந்துவட்டி என்பது பழைய வகை! ஃபைனான்சு, நகைக்கடன், வீட்டுக்கடன் என்ற பெயரில் கார்ப்பரேட் கம்பெனிகள் நடத்தும் கந்துவட்டி புதிய வகை! இரண்டுக்கும் காவல் போலீசும் அரசு நிர்வாகமும்தான்! மீட்டர்வட்டி, வார வட்டி, ஸ்பீடு வட்டி என நடக்கும் கந்துவட்டிக் கொள்ளை என்பது ஒருவகை! தங்க சேமிப்பு, சிறு சேமிப்பு, ஈமு கோழி வளர்ப்பு, தீபாவளி – பொங்கல் – சாமி சீட்டு என மக்களின் சேமிப்பைக் கொள்ளையடிப்பது மற்றொருவகை!

கந்துவட்டி ஒழிப்புச் சட்டம் என்பது பம்மாத்து! அதை கடுமையாக்க வேண்டுமென்பது ஏமாத்து! கந்துவட்டிக்கு பலியான 60-க்கும் மேற்பட்ட கூலி ஏழைப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஆர். எஸ்.எஸ் காரனான பாலக்கோடு சிவராஜன் போன்ற பல குற்றவாளிகள் இந்த சட்டம் – நீதி மன்றத்தால் தண்டிக்கப்ப்ட்டதிலைல.

மக்கள் நலனில் அக்கறையின்றி, மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிராக கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், கந்துவட்டி கொள்ளையர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும் ஆதரவாக செயல்பட்டு தகுதி உயர்வு பெற்று வருபவர்கள் தான் அரசு அதிகாரிகள். சென்ற ஆண்டு விவசாயிகளின் தற்கொலைக்கு காரணங்களில் முக்கியமான ஒன்று இந்த கந்துவட்டி!

அரசு ஊழியர்கள், ஐடி ஊழியர்கள் முதல் கார்ப்பரேட் கம்பெனி தொழிலாளர் வரை அனைவரையும் ஆட்டிப் படைக்குது கந்துவட்டி! மாணவருக்கு நீட்! தமிழகத்திற்கு டெங்கு! தேசத்திற்கு ஜி.எஸ்.டி! மக்களை உயிருடன் கொள்ளிவைப்பதே அரசின் நோக்கம்!  தள்ளுவண்டி-தரைக்கடை வியாபாரிகள், ஆட்டோ தொழிலாளர்கள், சிறு முதலாளிகள், சிறு வணிகர்கள் என சமூகத்தின் பல பிரிவினரும் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டு அல்லாடுகின்றனர்.

வங்கியில் கடன் உதவி இல்லை, அரசின் நிதி உதவி இல்லை, விவசாயிகளுக்க கடன் தள்ளுபடி இல்லை, சிறு தொழில் – விவசாயம் செய்ய முதலீடு இல்லை, விலைவாசி உயர்வு – ஜி.எஸ்.டி வரி கொள்ளை, டெங்குவினால் மரணங்கள் – இவையெல்லாம் கந்துவட்டியில் மக்கள் விழ காரணம்! மக்கள் நலனை காக்க தவறியது மட்டமல்ல, இந்த அரசு மக்களுக்கு எதிர்நிலை சக்தியாகிவிட்டது!

கந்துவட்டிக் கொள்ளையை ஒழிக்க, சிறு தொழில் – விவசாயத்தை மீட்க, அனைவருக்கும் வேலை அளிக்க, கல்வி – சுகாதாரத்தை உத்திரவாதப்படுத்த மக்கள் அதிகாரத்தை நிறுவுவது ஒன்றே தீர்வு!

ஊரெங்கும் மக்கள் கமிட்டி அமைப்போம்! மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள் )
தொடர்புக்கு – 97880 11784.

***

”மக்கள் சாகிறார்கள், எதிர்கட்சி தலைவர்களே ஊடகங்களே! டெங்கு மலேரியா பிரச்சினைக்குதீர்வுகாண பேசுங்கள்! செயலற்றஅரசுதான் மரணத்திற்கு காரணம்”, “ஆளத்தகுதி இழந்துவிட்டது அரசுக்கட்டமைப்பு. இதோ, ஆளவருகுது மக்கள் அதிகாரம்” என்றமுழக்கத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம்,

நாட்றாம்பாளையம் பேருந்துநிலையம் அருகில் மக்கள்அதிகாரம் அமைப்பு சார்பாக கடந்த 23-10-2017 காலை 11.00 மணியளவில் தெருமுனைக் கூட்டம் நடத்தபட்டது. மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர் முனியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த தெருமுனைக்கூட்டத்தில்  மக்கள் அதிகாரம் தோழர் சரவணன் சிறப்புரை ஆற்றினார். இறுதியாக,தோழர் துரை நன்றியுரைஆற்றினார்.

இங்கே அஞ்செட்டி அருகே உள்ள ஆற்றில் தரைப்பாலம் இடிந்துப் போனதையடுத்து, அஞ்செட்டி ஒகேனக்கல் இடையேயான பேருந்துப்போக்குவரத்து தடைபட்டு போயுள்ளது. (இதற்கு முன் எட்டு முறை பாலம் இதே போல் இடிந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.) இதனை துரித நடவடிக்கை எடுத்து தற்போது சீர் செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளது அதிகார வர்க்கம். இதனால் அஞ்செட்டியிலிருந்துஒகேனக்கல் செல்லும் வழியில் உள்ள கேரட்டி, தொட்டமஞ்சி, ஜேசுராஜபுரம், நாட்ராம்பாளையம், மோட்ராகி உள்ளிட்ட100 -க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமலும் வீட்டில் இருந்து வெளியேற முடியாமலும் தவித்துவருகின்றனர்.

மழை பெய்து ஆங்காங்கே குட்டைகளாக நீர் தேங்கி வழி நெடுகிலும் கொசுக்களை உற்பத்தி செய்து சுகாதாரக்கேடுகளை உருவாக்கியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான உழைக்கும் மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர். காய்சலினால் பாதிக்கப்பட்டு வேறெங்கும் செல்லமுடியாமல் முடங்கிப்போயுள்ளனர்.  மக்களின் வாழ்வின் மீது இந்த அதிகார வர்க்கத்திற்கு அக்கறை இல்லை. மக்களே ஒன்று திரண்டு தங்களின் அதிகாரத்தை நிறுவிக் கொள்வது ஒன்றே தீர்வு என்று சொல்லி அந்த வகையிலான போராட்டத்தை கட்டியமைக்க மக்கள் அதிகாரமாக ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை உணர்த்தி அறைகூவி பேசியது மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நாட்றாம்பாளையம், கிருஷ்ணகிரி மாவட்டம்.
தொடர்புக்கு – 89402 99026.

மோடியின் பணமதிப்பழிப்பு : எஸ்கேப் ஆகிறார் குருமூர்த்தி !

3

“பலன்கள் இருந்தாலும், பணமதிப்பழிப்பு நடவடிக்கை மோசமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக” துக்ளக் இதழின் ஆசிரியரும் சங்கப் பரிவார அமைப்புகளின் சித்தாந்தவாதியுமான குருமூர்த்தி முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார். பணமதிப்பழிப்பு நடவடிக்கை குறித்து துக்ளக் இதழில் வெளிவந்த / வெளிவரும் கட்டுரைகளுள் ஒன்றில்கூடக் காணப்படாத இந்தக் கண்ணீர், சென்னையில் மேட்டுக்குடி அறிவுஜீவிகள் கலந்துகொண்ட கருத்தரங்கமொன்றில் வழிந்தோடியது.

“பணமதிப்பழிப்பு – அதன் பாத்திரம், தாக்கம், விளைவுகள்” என்ற தலைப்பில் சென்னையைச் சேர்ந்த மெட்ராஸ் பொருளாதாரப் பள்ளி நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய குருமூர்த்தி,

சென்னையைச் சேர்ந்த மெட்ராஸ் பொருளாதரப் பள்ளி நடத்திய கருத்தரங்கில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மண்ணைக் கவ்விவிட்டதை ஒப்புக்கொண்டு உரையாற்றும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி

“பணமதிப்பழிப்பு, வாராக் கடன்களை வசூலிக்க உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிகள், திவால் சட்டம், சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), கருப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என ஒரே நேரத்தில் அடுத்தடுத்து வந்துள்ள இவற்றைப் பொருளாதாரத்தால் ஜீரணிக்க முடியாது.”

“90 சதவீத வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரக்கூடிய, தனக்குத் தேவைப்படும் மூலதனத்தில் 95 சதவீதத்தை வங்கிக்கு வெளியே பெற்றுவரும் அமைப்புசாரா தொழில்துறையைப் பணமதிப்பழிப்பு நடவடிக்கை முடக்கிப் போட்டுவிட்டது. இதனால், வேலைவாய்ப்பு உருவாக்கமும், நுகர்வும் தேங்கிவிட்டன. அமைப்புசாரா தொழில்துறை 360 முதல் 480 சதவீத வட்டிக்குக் கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.”

“பணமதிப்பழிப்பு நடவடிக்கை ஒரு விஷவாயுக் கூடமாக மாறிவிட்டது. முன்கூட்டியே வரியை வசூலிக்க முடியாத அரசாங்கம், இப்பொழுது வரியை வசூலிப்பதற்காகக் கருப்புப் பணத்தைத் துரத்தி வருகிறது” என்றெல்லாம் பொளந்து கட்டியிருக்கிறார்.

குருமூர்த்தி கூறியிருப்பவை எவையும் புதிதல்ல. இந்த உண்மைகளைப் பேச வேண்டிய அல்லது ஒப்புக்கொள்ள வேண்டிய அல்லது சமாளிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் பா.ஜ.க. அரசும் மோடியின் ஆதரவாளர்களும் சிக்கிக் கொண்டுவிட்டார்கள் என்பதுதான் புதிது.

ஆர்.எஸ்.எஸ். கும்பலால் வெறுக்கப்பட்ட ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்

பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் தொடக்கத்திலேயே, அது ஏற்படுத்தவுள்ள பேரழிவு குறித்து சமூக அக்கறை கொண்ட பொருளாதார வல்லுநர்களும் புரட்சிகர, ஜனநாயக அமைப்புகளும் பேசிய சமயத்தில், அவர்களையெல்லாம் மோடி எதிர்ப்பு அரசியல் நடத்தும் பேர்வழிகள், நாட்டு நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்றெல்லாம் இழித்தும் பழித்தும் துக்ளக் இதழின் வழியாக ஏசிவந்தவர்தான் ஆடிட்டர் குருமூர்த்தி.

“நோட்டுத் தடை (பணமதிப்பழிப்பு நடவடிக்கை) செய்யவில்லையென்றால், நாட்டின் பொருளாதாரம் (அடுத்த) ஓரிரு ஆண்டுகளில் கவிழ்ந்திருக்கும். அது தடுக்கப்பட்டிருக்கிறது.” (துக்ளக், 02.08.2017, 13.09.2017)

“இதன் (பணமதிப்பழிப்பு) மூலம் கிட்டதட்ட 50-60 இலட்சம் கோடி ரூபாய் வரை மூலதனம் உருவாக வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. வெளியில் இருந்த கருப்பு, வெள்ளை ரொக்கம் வங்கிகளை அடைந்ததால், வங்கிகளிடம் பணம் பெருகி, வட்டி விகிதம் குறையும். வங்கிகளில் பணம் பெருகி, வட்டி குறைந்தால்தான் சிறு, குறு தொழில்களுக்கு வங்கிக் கடன்கள் கிடைக்கும்.” (துக்ளக், 25.01.2017)

“ரூபாய் நோட்டுக்கள் தடை, தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது.” (துக்ளக், 18.01.2017)

இப்படி பணமதிப்பழிப்பு நடவடிக்கையைச் சிலாகித்துப் புல்லரிக்கச் செய்யும் வாதங்களையும் புள்ளிவிவரங்களையும் ஊதிவிட்டு வந்தவர்தான் குருமூர்த்தி. இப்பொழுது தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டுகிறார், அரையும் குறையுமாக. முழுப் பொய்யைவிட அரைகுறையான உண்மைதான் மிக ஆபத்தானது.

மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குத் தலையாட்டிய ரிசர்வ் வங்கியின் தற்போதைய கவர்னர் உர்ஜித் படேல்

ஆடிட்டர் குருமூர்த்தி சாதாரணமான யோக்கியவான் அல்ல. ஆடிட்டர் தொழிலில் பொய்யையும் புரட்டையும் செய்ய வேண்டியிருப்பதால், அத்தொழிலையே தாம் விட்டுவிட்டதாகக் கூறிவரும் மகா யோக்கியவான். அப்படிப்பட்ட இந்த மகா யோக்கியவான், பணமதிப்பழிப்பு நடவடிக்கை குறித்துத் தான் எழுதியவையும் பேசியவையும் மண்ணைக் கவ்விவிட்டதைக் குறித்து அக்கருத்தரங்கிலும் வாய் திறக்கவில்லை. அதன் பிறகு வெளிவந்த துக்ளக் இதழிலும் ஒப்புக் கொள்ளவில்லை.

துக்ளக் வாசகனை ஏமாற்றும் குருமூர்த்தி

பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட 15.44 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களில் 15.28 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான நோட்டுக்கள் வங்கிக்குள் வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தனது பொருளாதார அறிக்கையில் குறிப்பிட்டதையடுத்து, மோடியின் கருப்புப் பண வேட்டை மிகக் கேவலமான முறையில் தோல்வியடைந்திருப்பது ஊரறிய அம்பலமானது. இதனையடுத்து இந்தியாவே மோடியைக் கழுவி ஊத்திக் கொண்டிருந்த வேளையில், ஆடிட்டர் குருமூர்த்தி, “99 சதவீத நோட்டுக்கள் வங்கிக்குத் திரும்பிவந்திருப்பது தோல்வியாகாது” என வரிந்து கட்டிக்கொண்டு வாதாடினார்.

“500, 1,000 ரூபாய் கருப்புப் பணம் வைத்திருந்தவர்களால் துணிந்து வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட 2.90 இலட்சம் கோடி ரூபாயை, வருமான வரித்துறை பட்டியலிட்டு விசாரணை செய்து வருகிறது. இதனையும் சேர்த்து 3.35 இலட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் பிடிபட்டிருக்கிறது அல்லது பிடிபடும். அதன் மீது 3 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரியும் அபராதமும் வசூலாகும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது” என 13.09.2017 தேதியிட்ட துக்ளக் இதழில் புள்ளிவிவரங்களை எடுத்துப்போட்டு மதிப்பிழந்து போன மோடியின் நடவடிக்கைக்கு முட்டுக் கொடுத்தார்.

அந்த இதழ் வெளிவந்த பத்தாவது நாளில்தான் சென்னை பொருளாதார மையத்தின் கருத்தரங்கம் நடந்தது. அதில் வங்கிக்குள் வந்துவிட்ட கருப்புப் பணத்தின் மீது 3 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அபராதம் விதிக்கும் நல்வாய்ப்பு விளைந்திருப்பது குறித்து துக்ளக் இதழில் எழுதியதைப் பேசவில்லை. மாறாக, முன்கூட்டியே வரியை வசூலிக்க முடியாத அரசாங்கம், இப்பொழுது கருப்புப் பணத்தைத் துரத்திக் கொண்டிருப்பதாக அலுத்துக் கொண்டார்.

அதே துக்ளக் இதழில், “பண மதிப்பழிப்பு நடவடிக்கையால் வங்கிகளில் மக்கள் டெபாஸிட் செய்த தொகை 10 இலட்சம் கோடி ரூபாய் உயர்ந்திருக்கிறது. இதனால் வங்கி வட்டி வீதம் சரிவதோடு, முத்ரா திட்டத்தின் கீழ் கந்து வட்டியால் வாடும் குறுந்தொழில்களுக்கு இயல்பான வட்டியில் கடன் கொடுக்கும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது, குறுந்தொழில்களுக்கு அச்சே தின் வரப் போகிறது” என்று உடுக்கடித்தார்.

ஆனால், கருத்தரங்கிலோ, வங்கிக்குள் இவ்வளவு இலட்சம் கோடி ரூபாய் வந்த பிறகும்கூட, குறு, சிறு தொழில்களுக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை என்றும், பணமதிப்பழிப்பு நடவடிக்கை பணப்புழக்கத்தைக் குறைத்துவிட்டதால், சிறு தொழில்கள் 360 முதல் 480 சதவீத வட்டிக்கு கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதாகவும்” குறிப்பிட்டு கண்ணீர் உகுத்தார்.

ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதைக்கும் பணமதிப்பழிப்பு நடவடிக்கையை முட்டுக் கொடுத்து குருமூர்த்தி முன்வைத்த வாதங்களுக்கும் ஒற்றுமையும் வேற்றுமையும் உண்டு. ஒற்றுமை, ஆண்டிகளின் கற்பனை நிறைவேறாதது போலவே, குருமூர்த்தியின் வாதங்களும் தோற்றுப் பல்லிளித்துவிட்டன. வேற்றுமை, ஆண்டிகளின் மடம் கற்பனைக் கதை என்பதால், அதைப் படித்துச் சிரித்துவிட்டுப் போகலாம். ஆனால், குருமூர்த்தியின் வாதங்களோ திட்டமிடப்பட்ட மோசடி.

இந்த மோசடி குறித்து கருத்தரங்கிற்கு வந்திருந்த மேல்தட்டு அறிவுஜீவிகளும் கேள்வி எழுப்பவில்லை. கருத்தரங்கில் பேசியது உண்மையா, துக்ளக் இதழில் எழுதியிருப்பது உண்மையா என துக்ளக் வாசகனும் கேட்கவில்லை.

உண்மைதான் முதல் பலிகடா

பழைய நோட்டுக்களைச் செல்லாதாக்கிவிட்டு, புதிய நோட்டுக்களை அறிமுகப்படுத்தும்போது, அதற்கேற்ப ஏ.டி.எம். இயந்திரங்களை மாற்றியமைக்க வேண்டும் என்ற சாதாரண அறிவுகூட இல்லாமல், அவசர அவசரமாக, பேர் எடுக்கும் சுயதம்பட்ட நோக்கத்தோடு அறிவிக்கப்பட்ட அரைவேக்காட்டுத்தனமான நடவடிக்கைதான் மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை.

மோடி அரசின் இந்த முட்டாள்தனத்தைப் பொதுமக்கள் பரிகசித்தபொழுது, “ஏ.டி.எம். இயந்திரங்களை முன்னரே மாற்றத் தொடங்கியிருந்தால், கருப்புப் பணப் பேர்வழிகள் சுதாரித்திருப்பார்கள், அதனால்தான் செய்யவில்லை” என்று சால்ஜாப்பு சொன்னார்கள். “தனது அமைச்சர்களுக்குக்கூடச் சொல்லாமல், இந்த நடவடிக்கையை மோடி மிக இரகசியமாக எடுத்தார், அவரைத் தவிர வேறு யாருக்கும் இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும் தைரியம் கிடையாது, தனக்குக் கெட்ட பெயர் ஏற்படக்கூடும் எனத் தெரிந்தும் நாட்டு நலன் கருதி இந்த நடவடிக்கையில் குதித்தார்” என்றெல்லாம் எழுதி, மோடிக்கும் அவரது அரைவேக்காட்டுத்தனத்துக்கும் ஒளிவட்டம் கட்டினார்கள்.

வௌக்குமாறுக்குப் பட்டுக் குஞ்சம் கட்டிய இந்த வாதங்கள் அனைத்தும் இப்பொழுது பல்லிளித்துவிட்டன. நாட்டையும் மக்களையும் மிகப் பெரும் பேரழிவுக்குத் தள்ளிய மோடியைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டிய நேரமிது. ஆனால், குருமூர்த்தியோ முதன்மைக் குற்றவாளியான மோடியைத் தப்ப வைப்பதற்காக ரிசர்வ் வங்கியையும், உச்சநீதி மன்றத்தையும், அதிகார வர்க்கத்தையும் குற்றம் சாட்டுகிறார்.

“பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பொறுப்பான இரகசியக் குழுவுக்கும் நிதியமைச்சகத்துக்கும் இடையே தகவல் தொடர்பில் ஏற்பட்ட பிழைகள் காரணமாகவே கருப்புப் பண பேர்வழிகள் தப்பிவிட்டனர்.”

“தாமாகவே முன்வந்து கருப்புப் பணத்தை ஒப்படைக்கும் சலுகை திட்டத்தையும் பணமதிப்பழிப்பு நடவடிக்கையையும் ஒரேசமயத்தில் அறிவிக்காதது தகவல் தொடர்பு குளறுபடி.”

பணமதிப்பழிப்புக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் ( கோப்புப் படம் )

“அரசாங்கம் முத்ரா வங்கிகளை நடைமுறைக்குக் கொண்டுவந்துவிட்டு, பணமதிப்பழிப்பு நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். இதுதான் அசல் திட்டம். ஆனால், முத்ரா திட்டத்தை ரிசர்வ் வங்கி சுயநல நோக்கில் தனது அதிகாரத்தைக் கொண்டு தடுத்துவிட்டது.”

“இவற்றுக்கு அப்பால், அரசியல் குறுக்கீடுகளும், உச்சநீதி மன்றத்தின் தலையீடும் இருந்தன.” – இவையெல்லாம் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் தோல்வியிலிருந்து மோடியைத் தப்பவைக்க குருமூர்த்தி அடுக்கியிருக்கும் காரணங்கள்.

“கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கடன் கொடுப்பதில் முட்டைக்கட்டு போடுகிறார், வாராக் கடன்களைக் கறாராக வசூலிக்க முனைப்பு காட்டுகிறார், பணமதிப்பழிப்பு நடவடிக்கை எடுப்பதை ஆதரிக்க மறுக்கிறார்” எனப் பழிசுமத்தி, ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியிலிருந்து விலகிச் செல்லும்படி ரகுராம் ராஜனுக்கு நிர்பந்தம் கொடுத்துவிட்டு, அந்த இடத்தில் உர்ஜித் படேலை அமர்த்திய மோடி அரசு, இப்போது தோல்விக்கு அவரைப் பொறுப்பாக்குகிறது.

வலிமையானவரும் துணிவுமிக்கவரும் அப்பாடக்கருமான மோடியின் முத்ரா திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி முட்டுக்கட்டை போட்டுவிட்டதென்றும், அதனால்தான் எல்லாமே பாழாகி விட்டதென்றும் குருமூர்த்தி அளக்கும் கதையை யாராவது நம்பமுடியுமா? தனது அமைச்சரவைக்கும், ரிசர்வ் வங்கி மற்றும் நிதித்துறை அதிகாரிகளுக்கும்கூடச் சொல்லாமல், ஒரேநாள் இரவில் பணமதிப்பழிப்பு நடவடிக்கையை எடுக்கத் துணிந்த மோடியால், முத்ரா திட்டத்திற்கு ரிசர்வ் வங்கி போட்ட முட்டுக்கட்டையைத் தூக்க முடியவில்லையாம்!

தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பது என்ற பெயரில் மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா என கலர் கலராகத் திட்டங்களை அறிவித்திருக்கிறது, மோடி அரசு. அதிலொன்றுதான் முத்ரா திட்டம். இந்தத் திட்டங்கள் அனைத்தும் மோடியின் சுயதம்பட்ட, விளம்பர மோகத்திற்குப் போடப்பட்ட தீனி தவிர வேறில்லை. விளம்பரம் பல்லைக் காட்டிய பிறகு, பலிகடாக்களைத் தயார் செய்கிறார், குருமூர்த்தி.

சூதாட்டம்தான் வளர்ச்சி

பணமதிப்பழிப்பு நடவடிக்கையும், சரக்கு மற்றும் சேவை வரியும் விவசாயத்தையும் குறு, சிறு தொழில்களையும் பேரழிவுக்குள் தள்ளிவிட்டிருப்பதோடு, பொருளாதாரத்தையும் குப்புறத் தள்ளவிட்டது என்பது இன்று மறுக்கவியலாதபடி நிரூபணமாகிவிட்டது. இதனை அரைகுறையாகவேனும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள குருமூர்த்தி அண்ட் கோ, “இதைத்தான் அன்றே, மக்கள் கசப்பு கசாயம் குடிக்க வேண்டியிருக்கும்” என மோடி கூறிவிட்டாரே எனச் சொல்லித் தங்களை நியாயவான்களைப் போலக் காட்டிக் கொள்ள முயலுகிறார்கள்.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை எதிர்த்து, மோடியின் கோட்டையாகக் கருதப்படும் குஜராத்-அகமதாபாத் நகரில் சிறு வியாபாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

மேலும், “பணம் இருந்தும் வங்கிகள் கடன் கொடுக்க மறுக்கின்றன. இதனால், ரிஸர்வ் வங்கிக்கும் மோடி அரசுக்கும் இன்றும் பனிப்போர் நடந்து வருகிறது” எனக் கூறி (துக்ளக், 11.10.2017), பொருளாதார முடக்கத்திற்கான பழி முழுவதையும் ரிசர்வ் வங்கி மீது சுமத்துகிறார். ரிசர்வ் வங்கி கடன் வழங்குவதில் தாராளமாக நடந்துகொண்டால், மோடி வானத்தை வில்லாக வளைத்துவிடுவார் என்று அளந்து விடுகிறார்.

கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் தாராளமாகக் கடன் கிடைத்தால், இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து, வேலைவாய்ப்பு பெருகி, மக்கள் கையிலும் நாலு காசு புழங்கி, நாடே முன்னேற்றப் பாதையில் நடைபோடத் தொடங்கிவிடும் என நம்புவதற்கு ஏதாவது அடிப்படை இருக்கிறதா?

விவசாய நெருக்கடியாலும், வேலைவாய்ப்பின்மையாலும் இந்திய மக்களின் வாங்கும் சக்தி படுபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. அந்தத் தோல்வியை மூடிமறைக்கும் நோக்கில்தான், இந்தியாவில் உற்பத்தி செய்து, அந்நிய நாடுகளில் சந்தைப்படுத்தும் மேக் இன் இந்தியா திட்டத்தைத் தடபுடலாக அறிவித்தார், மோடி. மேற்கத்திய நாடுகளின் பொருளாதார நிலைமையும் இந்தியாவைப் போலவே குப்புறக் கவிழ்ந்துகிடப்பதால், மேக் இன் இந்தியா திட்டம் பிறவி ஊனமாகிவிட்டது. இந்த நிலையில் வங்கிக் கடன்கள் மூலம் உள்நாட்டு நுகர்பொருள் உற்பத்தியையும், நுகர்வையும் அதிகப்படுத்தச் சொல்லும் குருமூர்த்தியின் யோசனை இன்னொரு சூதாட்டமாகவே முடியும்.

இன்றைய பொருளாதாரத் தேக்க நிலையில், வங்கிக் கடன் கிடைப்பதைத் தாராளமயப்படுத்துவது ஒருபுறம் வாராக் கடன்களையும் இன்னொருபுறம் விலைவாசியையும் அதிகரிக்கச் செய்யும். பணத்தைக் கொண்டு உற்பத்தியில் ஈடுபடாமல் பங்குகளை, நிலங்களை வாங்கிக் குவிக்கும் சூதாட்டப் பொருளாதாரத்தை மீண்டும் சூடுபிடிக்கச் செய்யும். அதனால்தான் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி வீதத்தைக் குறைக்க மறுக்கிறது.

“மன்மோகன் சிங் ஆட்சி சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரித்து, சூதாட்டப் பொருளாதாரத்தை வளர்ச்சியடைய வைத்தது. அதனால்தான், பொருளாதாரம் 8 சதவீதம் வளர்ச்சியடைந்தாலும் அது வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. எனவே, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டுமென்றால், புழக்கத்திலுள்ள அளவுக்கு அதிகமான பணத்தை வங்கிக்குள் கொண்டுவர வேண்டும் என முடிவுசெய்து,  அதற்காகத்தான் மோடி பணமதிப்பழிப்பு நடவடிக்கையை எடுத்தார்” என நியாயம் பேசும் குருமூர்த்தி, இப்பொழுது தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டி, “வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் உருவாக்க வங்கிகள் தாராளமாகக் கடன் தந்து, பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும்” என வாதிடுகிறார்.

அடுத்தவன் செய்தால் பித்தலாட்டம், அதையே பார்ப்பான் செய்தால் தர்மம்!

– செல்வம்
-புதிய ஜனநாயகம், அக்டோபர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

_____________

கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!
சென்னையில் மாபெரும் கூட்டம்

19 நவம்பர், 2017 மாலை 4:00 மணிக்கு, ஒய்.எம்.சி.ஏ அரங்கம், நந்தனம், சென்னை – 600 035.

நண்பர்களே,

ரசியப் புரட்சி 100-ம் ஆண்டு, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-வது ஆண்டு விழா சிறப்புக் கூட்டம், பருவமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டதை அறிவீர்கள். அந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 19, ஞாயிறு அன்று அதே இடத்தில் நடத்தப்படவுள்ளது. அனைவரும் வருக.

பெரும் பொருட்செலவுடன் நடைபெறும் இக்கூட்டத்திற்கு நன்கொடை தாருங்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம்தான். இங்கே நன்கொடைக்காக டிக்கெட் வடிவத்தை வெளியிட்டிருக்கிறோம். மனித குலத்தின் உலகு தழுவிய மாற்றம்- முன்னேற்றம் – புரட்சியின் குறியீடான ரசியப் புரட்சியின் இந்நிகழ்வு நன்கொடைச் சீட்டுக்களுக்கு ஐந்து பெருங் கடல்களின் பெயர்களை வைத்திருக்கிறோம். ஆதரவு தாருங்கள்!

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே நன்கொடை அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

ஏர் – இந்தியா : மகாராஜா விற்பனைக்கு !

2

ஏர் – இந்தியா தனியார் : 2ஜி ஊழலை விஞ்சுமோ ?

ர்-இந்தியா நிறுவனம் தொடர்ச்சியான நட்டத்தைச் சந்தித்து வருவதாகத் தேசிய பொருளாதாரக் கள ஆய்வு நிறுவனத்தின் 2016-2017-ஆம் ஆண்டுக்கான அறிக்கை திரியைக் கொளுத்திப் போட, அந்த அறிக்கையின் அடிப்படையில் ஏர்-இந்தியா நிறுவனத்தைத் தனியார்மயமாக்க வேண்டுமென நிதி ஆயோக் பரிந்துரைத்தது. அப்பரிந்துரையை ஏற்றுக் கொண்டுவிட்ட மைய அமைச்சரவைக் கமிட்டி, ஏர்-இந்தியா 52,000 கோடி ரூபாய் அளவிற்குக் கடனில் சிக்கியிருப்பதைக் காட்டி, இத்தனியார்மயமாக்கலை நியாயப்படுத்தி வருகிறது.

இலாபத்தில் இயங்கும் நிறுவனங்களையே அடிமாட்டு விலைக்குக் கேட்கும் இந்தக் காலத்தில்,  இவ்வளவு கடன் தொகையுள்ள ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்க முன்வந்திருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. இது டாடாவின் பெரிய மனதைக் காட்டுகிறதா அல்லது இதற்குப் பின்னே வேறு ஏதாவது ஆதாயம் இருக்கிறதா என்பதற்குள் செல்லும் முன்னே, 2006-ஆம் ஆண்டு வரையில் இலாபத்தில் இயங்கிவந்த ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் நட்டத்திற்குள் தள்ளப்பட்ட கதையைத் தெரிந்து கொள்வது அவசியமானது.

விமான சேவையில் தனியார்மயம் திணிக்கப்பட்டதையடுத்து, தனியார் நிறுவனங்களோடு போட்டிபோடும் திறனை மழுங்கடிக்கும் சதித்தனத்தோடு, 1998 தொடங்கி 2003 வரையிலும் ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்குப் புதிய வானூர்திகள் வாங்கி, அதனை நவீனப்படுத்துவது கைகழுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்நிறுவனங்களின் இலாபம் சரிந்து, அவை தள்ளாடிக்கொண்டிருந்த  சமயத்தில், 2004 ஆம் ஆண்டு இறுதியில் இந்நிறுவனங்களுக்கு 41,000 கோடி ரூபாய் செலவில் 68 புதிய வானூர்திகள் வாங்கும் முடிவெடுக்கப்பட்டது. இதற்காக மைய அரசு 325 கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கியது. மீதிச்சுமை முழுவதும் அந்நிறுவனங்களின் தலையில் சுமத்தப்பட்டது. புதிய வானூர்திகள் வாங்குவதில் நடந்த முறைகேடுகளும், அதனால் ஏற்பட்ட கடன் சுமையும் இந்த இரண்டு நிறுவனங்களையும் நட்டத்தை நோக்கித் தள்ளிச் சென்ற சமயத்தில், ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை ஒன்றாக இணைக்கும் முடிவை எடுத்தது, மன்மோகன் சிங் அரசு.

மேலும், மூன்றாண்டுகளுக்கு முன்பு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலருக்கும் மேலாக அதிகரித்ததைத் தொடர்ந்து, உள்நாட்டில் விமான எரிபொருள் விலையும் அதிகரித்தது. ஏற்கெனவே வலிந்து கடனுக்குள் தள்ளப்பட்டிருந்த நிலையில், இலாபம் தரத்தக்க வழித்தடங்கள் தனியார் வானூர்தி நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டிருந்த நிலையில், விமான பெட்ரோல் விலையேற்றம் ஏர் இந்தியாவிற்கு இன்னொரு சுமையாக மாறியது. இக்காலக்கட்டத்தில்தான் ஏர் இந்தியா நிறுவனத்தின் வருடாந்திர நட்டம் 5,000 கோடி ரூபாயாகவும், அதனின் கடன் சுமை 43,500 கோடி ரூபாயாகவும் அதிகரித்தது.

இந்த நிலையில், ஏர்-இந்தியா நிறுவனத்திற்குப் புத்தாக்க நிதி கொடுத்து, அதனை மீட்கும் திட்டத்தைக் கடந்த 2012-ஆம் ஆண்டு காங்கிரசு அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த மூன்றாண்டுகளில் ஏர்-இந்தியா நிறுவனம் நட்டத்தில் இருந்து மீண்டு வந்திருப்பதோடு, அதனின் வருமானமும் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, 2015-16 ஆம் ஆண்டில் ஏர் இந்தியாவின் இலாபம் 105 கோடி ரூபாயாகவும், அதற்கடுத்த 2016-17 ஆம் ஆண்டில் 1,086 கோடி ரூபாயாகவும் அதிகரித்திருக்கிறது. தனது வருமானத்தின் மூலமாகவே தனது கடன்களை அடைத்துக் கொள்ளும் நிலைமையை ஏர்-இந்தியா இன்று வந்தடைந்திருக்கிறது. ஆனால், மோடி அரசோ, வெண்ணெய் திரண்டுவரும்போது தாழியை உடைத்த கதையாக, புத்தாக்கத் திட்டத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, ஏர் இந்தியாவைத் தனியார்மயமாக்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறது.

ஏர்-இந்தியா நிறுவனத்தைத் தனியார்மயமாக்குவது என முடிவெடுத்தவுடனேயே, அதன் கடன் தொகையில் சுமார் ரூ.20,000 கோடியைத் தள்ளுபடி செய்யப் போவதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். அதன் விமான ஓடுதள வாடகை உள்ளிட்ட ரூ.8,000 கோடி பெறுமான கடன்களை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் ஜெட்லி தெரிவித்துள்ளார். மொத்தத்தில், ஏர்-இந்தியாவை டாடாவோ அல்லது வேறு எந்த தனியார் நிறுவனமோ வாங்கினாலும், இத்தள்ளுபடிகள் போக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு வெறும் ரூ.24,000 கோடி மட்டுமே கடன் தொகையாக எஞ்சி நிற்கும்.

ஏர்-இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களின் மதிப்பு மட்டும் 20,000 கோடி ரூபாயைத் தொடும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கு அப்பால், அதற்குச் சொந்தமான 118 அதிநவீன  விமானங்கள், பல்வேறு சர்வதேச விமான நிலையங்களில் ஏர் இந்தியாவின் சார்பாகச் செலுத்தப்பட்டிருக்கும் பிரீமியம் தொகை மற்றும் அதன் 5 துணை நிறுவனங்கள் என மேலும் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டிருக்கிறது ஏர்-இந்தியா. இந்தச் சொத்து மதிப்புகளோடு ஒப்பிட்டால், அரசு தள்ளுபடி செய்த பிறகு எஞ்சி நிற்கும் ஏர் இந்தியாவின் கடன் தொகை – 24,000 கோடி ரூபாய் என்பது வெறும் பூஜ்யம்தான். இந்த அத்துணை சொத்துக்களோடும் ஏர் இந்தியாவைத் தனியார்மயமாக்க மோடி அரசு முடிவெடுத்திருப்பதால்தான், தானே வலிய முன்வந்து, ஏர் இந்தியாவின் கடனையும் பொருட்படுத்தாமல், அதனை வாங்கிவிட முன்நிற்கிறது, டாடா நிறுவனம்.

வாஜ்பாய் தலைமையில் இருந்த முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, இந்தியத் தொலைதொடர்புத் துறைக்குச் சொந்தமாக இருந்த சர்வதேச தொலைதொடர்பு சேவை நிறுவனமான வீ.எஸ்.என்.எல். டாடாவிற்கு விற்கப்பட்டது. அச்சமயத்தில் வீ.எஸ்.என்.எல். தன்னிடம் ரொக்கக் கையிருப்பாக மட்டும் 1,000 கோடி ரூபாயை வைத்திருந்தது. “ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே” என்ற பழமொழிக்கு ஏற்ப, டாடா அந்த ஆயிரம் கோடியை லவட்டிக்கொண்டு, தனது சொந்த நிறுவனமான டாடா டெலிசர்வீசஸின் நட்டத்தை ஈடுகட்டிக் கொண்டார். இப்பொழுது எந்த நட்டத்தை ஈடுகட்ட ஏர் இந்தியா நிறுவனத்தை விழுங்க டாடா திட்டமிடுகிறது  என்பது தேவ இரகசியம்.

பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்ட ஏர் இந்தியாவை விற்பதற்கு எந்தவிதமான சர்வதேச டெண்டரும் கோராமல், தாம்பாளத்தில் வைத்து டாடாவிடம் தூக்கிக் கொடுக்க மோடி அரசு முயலுவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. “டெண்டர் கோராமல், முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்ட 2 ஜி அலைக்கற்றை விற்பனையை ஊழல்” எனச் சொல்லி சாமியாடிய பார்ப்பன ஊடகங்கள், மோடி அரசின் இந்த முறைகேடு குறித்துக் கண்டும் காணாமல் நடந்துகொள்கின்றன. மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் அல்லவா!

-அழகு

-புதிய ஜனநாயகம், அக்டோபர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

_____________

கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!
சென்னையில் மாபெரும் கூட்டம்

19 நவம்பர், 2017 மாலை 4:00 மணிக்கு, ஒய்.எம்.சி.ஏ அரங்கம், நந்தனம், சென்னை – 600 035.

நண்பர்களே,

ரசியப் புரட்சி 100-ம் ஆண்டு, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-வது ஆண்டு விழா சிறப்புக் கூட்டம், பருவமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டதை அறிவீர்கள். அந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 19, ஞாயிறு அன்று அதே இடத்தில் நடத்தப்படவுள்ளது. அனைவரும் வருக.

பெரும் பொருட்செலவுடன் நடைபெறும் இக்கூட்டத்திற்கு நன்கொடை தாருங்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம்தான். இங்கே நன்கொடைக்காக டிக்கெட் வடிவத்தை வெளியிட்டிருக்கிறோம். மனித குலத்தின் உலகு தழுவிய மாற்றம்- முன்னேற்றம் – புரட்சியின் குறியீடான ரசியப் புரட்சியின் இந்நிகழ்வு நன்கொடைச் சீட்டுக்களுக்கு ஐந்து பெருங் கடல்களின் பெயர்களை வைத்திருக்கிறோம். ஆதரவு தாருங்கள்!

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே நன்கொடை அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

டெங்கு : செயலிழந்த அரசை தட்டிக் கேட்போம் – திருப்பூர் ஆர்ப்பாட்டம் !

0

தேர்தல் வந்தால் தெருவெங்கும் தோரணங்கள் இருப்பது போல இப்போது டெங்கு நோய் பரப்பும் கொசுக்களும் அதற்கு காரணமான OPS – EPS வகையறாக்களும் கையில் ‘A1’ குற்றவாளி ஜெயாவின் படத்துடன் நிலவேம்பு கசாயம் கொடுப்பதாக போஸ் கொடுக்கும் செய்திகள் தினசரி வருகின்றன.

ஈவிரக்கமற்ற கிரிமினல்கள் எதற்கும் அஞ்சாமல் திருடுவது – கொலை செய்வது போலத்தான் அரசும் – அதிகாரிகளும் கூட்டுச்  சேர்ந்து மக்கள் மற்றும் வணிகர்கள் மேல் அபராதம் விதித்து மக்களிடம் வழிபறியும், டெங்கு – மர்ம – வைரஸ் காய்ச்சலை தடுக்காமல்  கொலை செய்து கொண்டு வருகின்றனர். அதற்கு உதாரணமாக மாநகராட்சி குப்பைகளை சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணமோ- போதிய சம்பளமோ – நோய் வந்தால் இலவச மருத்துவமோ கொடுக்காமல் அவர்கள் வாங்கும் சொற்ப கூலியில் அனைத்தையும் செய்து வர நிர்பந்திக்கப்படுகிறார்கள். அன்றாடம் திருப்பூரை சுத்தம் செய்து வரும் அவர்களின் பணி போற்றுதலுக்கு உரியது.

இவர்களுக்கு நேர் எதிராக அதிகாரிகள் லஞ்சம் – ஊழல் செய்து கொழுத்து வருகின்றனர். அரசு தலைமை மருத்துவமனையில் எதோ கிரிமினல் குற்றவாளியை பார்க்க ஜெயிலுக்கு வந்தவர்களைப் பார்ப்பது போல கம்பிக்கேட்டு  போட்டு பத்து – பத்து நபர்களாக டோக்கன் கொடுத்து பாராசிட்டமால் மாத்திரை கொடுத்து அனுப்பி விடுகின்றனர்.

மயங்கிய நிலையில் வருபவர்களுக்கும் பாராசிட்டமால்தான் என்றால் இவர்களின் யோக்கியதை என்ன என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள் – போதிய மருத்துவர் – செவிலியர் இல்லாமல், இருக்கும் சொற்ப மருத்துவர்,பணியாளர்களைக் கொண்டு தரமான மருத்துவம் இல்லையென்றாலும் கனிவாகப் பேசி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர் மேலதிகாரிகள்.

ஒரு மருத்துவரிடம் நோட்டீஸ் கொடுத்து டெங்கு பற்றி தங்களுக்கு தெரிந்த விபரங்களைக் கூறினால் ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு கோரிக்கை வைப்போம் என்று கேட்டதற்கு எது பற்றியும்  வாய்திறக்காமல் மேலதிகாரியை பாருங்கள் – ஆபீஸ்-ல் கேளுங்கள், நோயாளியை என்னுடைய கிளினிக்குக்கு வரச்சொல்லுங்கள் என 12.30 மணிக்கே தனது காரில் ஏறிச் சென்றுவிட்டார் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் [Dr.T.S.K], பெயரே இல்லாதவர் போல ஒருவரும் தங்கள் பெயரை சொல்லவில்லை.

தலைமை மருத்துவர் எங்கே என்றால் எல்லோரும் கலெக்டர்  பின்னால் சென்றுவிட்டார் என்றார்கள், கலெக்டர்  எங்கே என்றால் மோடியின் அல்லக்கை OPS – EPS ன் – அமைச்சர்கள், MLA , MP களுக்கு பின்னால் கசாயம் கொடுத்துக் கொண்டுள்ளார் என்பதே பதிலாக உள்ளது. காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனை சென்றால் குறைந்தது 6,000 வசூலிக்காமல் வெளியில் விடுவதில்லை. மக்களை பயமுறுத்தியே மருத்துவம் பார்க்கின்றனர் NEET ஆதரவு கயவாளிகள்

மக்கள், அதிகாரம் செலுத்துவதன் மூலம்தான் மரண பீதீயை உருவாக்கியிருக்கும் டெங்குவில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும்.

அரசின் செயல்பாடுகளுக்கு ஒருசில புகைப்படங்களை இணைத்துள்ளோம் இந்த அவலங்கள் போக்க அனைத்து தரப்பு மக்களும் – தொழிலாளிகளும் அணிதிரண்டு ஆர்ப்பாட்டத்திற்கு வரவேண்டும் என அழைக்கின்றோம்.

டெங்கு சிகிச்சைக்காக காத்திருக்கும் மக்கள்

திருப்பூர் டெங்கு பாதிப்புகள் குறித்து நாளிதழ்களில் வெளியான செய்தி

திருப்பூர் நகரெங்கும் காணப்படும் சுகாதார சீர்கேடுகள்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம் – திருப்பூர்.
தொடர்புக்கு – 99658 86810.

_____________

கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!
சென்னையில் மாபெரும் கூட்டம்

19 நவம்பர், 2017 மாலை 4:00 மணிக்கு, ஒய்.எம்.சி.ஏ அரங்கம், நந்தனம், சென்னை – 600 035.

நண்பர்களே,

ரசியப் புரட்சி 100-ம் ஆண்டு, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-வது ஆண்டு விழா சிறப்புக் கூட்டம், பருவமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டதை அறிவீர்கள். அந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 19, ஞாயிறு அன்று அதே இடத்தில் நடத்தப்படவுள்ளது. அனைவரும் வருக.

பெரும் பொருட்செலவுடன் நடைபெறும் இக்கூட்டத்திற்கு நன்கொடை தாருங்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம்தான். இங்கே நன்கொடைக்காக டிக்கெட் வடிவத்தை வெளியிட்டிருக்கிறோம். மனித குலத்தின் உலகு தழுவிய மாற்றம்- முன்னேற்றம் – புரட்சியின் குறியீடான ரசியப் புரட்சியின் இந்நிகழ்வு நன்கொடைச் சீட்டுக்களுக்கு ஐந்து பெருங் கடல்களின் பெயர்களை வைத்திருக்கிறோம். ஆதரவு தாருங்கள்!

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே நன்கொடை அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

நீயா நானா நிகழ்ச்சி தேவையா ? கருத்துக் கணிப்பு

13

“கற்பில் சிறந்தவள் கண்ணகியா, மாதவியா”, “பாயாசத்தில் சிறந்தது சேமியா பாயாசமா, பாசிப்பருப்பு பாயாசமா” வகை பட்டிமன்றங்கள் தமிழகத்தின் வெட்டிப் பேச்சு நோய்க்கு ஒரு மைல்கல். அடிமைத்தனமும், அதையே இலக்கிய செதுக்கலாக ரசிக்கும் ‘நுண்ணுணர்வு’ம் யாராலும் மறக்க முடியாத எரிச்சல்கள். இலக்கிய வளமும், வரலாறும் உள்ள தமிழ் மொழியில் தானம் தரும் அரசனை மானே தேனே என்று புலவர்கள் பாராட்டி பாடுவது அதன் இருண்ட பக்கமாக இருக்கிறது.

இன்றைக்கு அரசன் இல்லை என்றாலும் அரசனது கடமையை ஞானகுரு போல அரசாங்கத்தை பின்னின்று இயக்கும் ஆளும் வர்க்கம் இருப்பதால் மக்களிடையே பேசப்படும் நீதி நேர்மை அனைத்தும் அப்துல் கலாம் வகைப்பட்ட “ எம்மால் வரும் பிரச்சினைகளை மறைக்க உன்னால் முடியும் தம்பி” வகை அட்வைசு அபத்தங்களால் நிரம்பி வழிகின்றன.

விசுவின் அரட்டை அரங்கம் இந்த நோயையை டிவி மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்றது. பத்து டெசிபலில் கத்தி பேசும் இந்த பாணியில் சிலை வழிபாட்டு நாட்டுப்பற்று, மூத்தோர் மரியாதை, உழைத்தால் உயர்வு இன்னபிற மறைகழண்ட அட்வைசு பீஸ்கள் அடிக்கடி நம் காதுகளை அறுத்து ரத்தம் வர வைக்கும்.

இந்த எழவுகள் பெரும் நிறுவனங்களால் ஸ்பான்சர் செய்யப்படுவதால் விசுவோ, வெங்காயங்களோ தம்மை மாபெரும் வெங்காய சுரங்கங்களாக கருதிக் கொள்கின்றன. நாஞ்சில் சம்பத், வைகோ, நெல்லை கண்ணன், தமிழருவி மணியின் ஆகியோர் அரசியல் வெங்காயங்களாக மணம் பரப்பினர். இவர்கள் சரக்கில் சத்து இல்லையென்றாலும் சத்தத்தில் ஊரே நடுங்கும்.

மேற்கண்ட பின்னணியில் அதையே கொஞ்சம் நவீனமாக்கி கார்ப்பரேட் பாணியில் “புராடக்ட் லாஞ்ச்” போல  நடத்தினால் அது நீயா நானா நிகழ்ச்சி. மேலும் அமெரிக்காவில் பேஜ் 3 எனப்படும் மேட்டுக்குடியின் உணவு உடை இருப்பிடம் இதர அக்கப்போர்கள் குறித்து பேசப்படும் டாக் ஷோவின் பிரதிதான் நீயா நானா என்பது அதன் இயக்குநர் ஆண்டனிக்கு கூட தெரியாது.

அவரோ இல்லை கோபிநாத்தோ தம்மை தமிழகத்தில் ஒரு அறிவுப் பேரலையை உருவாக்கிய பேராத்மாக்கள் என்று நம்பியிருக்க கூடும். இதைக் கேட்டால் விஜய் டி.வி -யின் ஓனரான ரூபர்ட் முர்டோச் எனப்படும் சர்வதேச ஊடக மாஃபியா தல, செந்திலை உதைக்கும் கவுண்ட மணியின் வசவுகளை ஆங்கிலத்தில் அடிவாய்வுடன் சேர்த்து வெளியிடக் கூடும்.

மற்ற நிகழ்ச்சிகளை விட நீயா – நானா நிகழ்ச்சியின் அடையாளம் என்னவென்றால் அது நவீன வாழ்க்கை குறியீடுகளான அழகு, நிதி, சுற்றுலா, காதல், பங்கு சந்தை, போன்றவற்றை வைத்து தமிழகத்தின் ஏட்டிக்கு போட்டி பட்டி மன்ற ஸ்டைலில் நடத்துவது.

சமீபத்தில் “கேரளா – தமிழ்ப்பெண்களில் யார் அழகு?” என்று ஒரு தலைப்பின் முன்னோட்டத்தை வெளியிட்டார்கள். இதைக் கண்டித்த சில முற்போக்காளார்கள் – பெண்ணியவாதிகள் இது குறித்து சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்க, பிறகு நடந்த பஞ்சாயத்தில் விஜய் டி.வி அந்த நீயா நானா நிகழ்ச்சியை ரத்து செய்வதாக கூறி அதே போல செய்தது.

இதனால் காண்டான நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான ஆண்டனி அவர்கள் நியூஸ் 18 தமிழில் வந்து, உப்பு குறைந்த அவியலுக்காக அந்த சமையற்காரரின் பத்து தலைமுறையை திட்டித் தீர்க்கும் நெல்லை சைவப் பிள்ளைவாள் போல கத்தி சாபமிட்டார்.

இதில் அவர் முன்வைத்த கருத்துக்கள், கருத்துரிமை மீதான பாதிப்பு, ஒரு விவாதத்தினை தடை செய்த இடதுசாரி பெண்ணிய அடிப்படைவாதம், பேசவிட்டு மறுக்காமல் பேசுவதையே தடை செய்யும் பாசிசம், இளைஞர்களின் உலகை அறியாத பெரிசுகளின் தொந்தரவு, ஆங்கிலம் பேசும் பெண் பத்திரிகையாளர்களின் லாபி வேலை…..போன்றவை.

முதலில் சென்னை போலீசு ஆணையரின் பஞ்சாயத்திற்கு விஜய் டிவி என்ன விதிமுறையின் கீழ் சென்று கலந்து கொண்டது? அந்த பெண்ணியவாதிகள் சொன்னார்கள் என்று போலீசு எப்படி இந்த நிகழ்ச்சியை ரத்து செய்வதாக கூற முடியும்? உண்மையில் இந்தப் பிரச்சினை குறித்த போலீசின் அபிப்ராயத்தை விஜய் டிவி நிர்வாகம் ஏற்றுக் கொண்டு தாமே நிகழ்ச்சியை ரத்து செய்வதுதான் சாத்தியம். அப்படி என்றால் திரு ஆண்டனி அவர்கள் சண்டை போட வேண்டியது விஜய் டிவியோடு தானே தவிர புகார் கொடுத்தவர்களோடு அல்ல! ஒரு வேளை போலீசு சொல்லித்தான் நிறுத்தினார்கள் என்றால் அதை பகிரங்கமாக பேசுவதோடு, வழக்கும் தொடுத்திருக்க வேண்டும் அல்லவா?

நீயா? நானா? – நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ஆண்டனி

மேலும் சமூகவலைத்தளங்களின் காலத்தில் பல்வேறு இளைஞர்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நவீன வடிவங்களில் பேசி விவாதிப்பது அதிகரித்துள்ள நிலையில் இயல்பாகவே நீயா நானா நிகழ்ச்சி படுத்து விட்டதை ஊரே அறியும். அந்த வகையில் அதை பிரபலப்படுத்துவதற்காகவே விஜய் டிவி, இந்த சர்ச்சை எழுந்த பிறகு நிகழ்ச்சியை நீக்கி, சமூக வலைத்தளங்களில் நீயா நானா குறித்து பேசவைப்பதற்கும் வாய்ப்பு அதிகம். அல்லது இவை தற்செயலாகவே நடந்திருந்தாலும் அவர்களுக்கு சாதகமே அன்றி அது பாதகமே அல்ல!

நான் ஒரு தலித்தை வெட்டுவேன், சூத்திரன் நாக்கை அறுப்பேன், படிதாண்டிய பெண்ணை குதறுவேன், முஸ்லீம்களை பாக்-கிற்கு துரத்துவேன், தமிழ் மொழி நீசர்களின் மொழி, அமெரிக்க கருப்பர்களை நீக்ரோ என்று அழைப்பேன், போன்றவற்றையெல்லாம் யாரும் கருத்துரிமையின் பெயரில் முன் வைக்க முடியுமா? இவையெல்லாம் சட்டப்படியே தவறு, தண்டிக்கப்படும் பட்டியலில் உள்ள குற்றங்கள்!

ஆகவே அறிஞர் ஆண்டனி அவர்கள் கருத்துரிமையின் பெயரில் போராளியாக பேசுவது ஏழைகள் கஞ்சி கிடைக்கவில்லை என்றால் பீட்சா சாப்பிடலாமே என்று பேசுவதற்கு ஒப்பானது.

அடுத்து அழகு என்பதில் முதலாளித்துவம் நடத்தி வரும் வன்முறை கொஞ்ச நஞ்சமல்ல. கருப்பே அசிங்கம், வெள்ளையே அழகு, சிலை போன்ற முகமே அழகு, கோணல் மாணலான முகங்களோ காமெடியானவை என்பதில் துவங்கி, ஃபேர் அண்ட் லவ்லி, அழகு நிலையங்கள், அழகு சிகிச்சைகள் வரை அதன் கார்ப்பரேட் வர்த்தகமும் சுரண்டலும் மிகப்பெரியவை.

இரண்டு வாரத்தில் களிம்பு பூசினால் வெள்ளையாகலாம் என்ற பொய்யை, கருப்பிற்கு எதிராகவும் பேசி விளம்பரம் செய்வது கருத்துரிமையில் வருமா மிஸ்டர் அவியல் ஆண்டனி?

அதே போல கேரளப் பெண்கள் அழகு என்ற படிமம் தமிழக ‘ஆண்களிடம்’ எப்படி பதிந்திருக்கிறது என்பதை உண்மையிலேயே நீங்கள் யாரையாவது பகிரங்கமாக பேசத்தான் வைக்க முடியுமா? அது குறித்து நடிகர் ஜெயராம் பேசிய தடிச்சி –தமிழச்சிகள் விவகாரத்தில் நாங்கள் பேசியிருக்கிறோம். பெண்கள் அழகு குறித்து எப்படிப் பேசினாலும் ஒன்று நிலவுடமை அடிமைத்தனமாகவோ இரண்டு கார்ப்பரேட் அடிமைத்தனமாகவோ அன்றி மூன்றாவது ஒன்று இல்லையே?

ஆண்டனியிடம் விவாதித்த பெண்ணியவாதியான சுசிலா என்பவர் அடிப்படையில் நீயா நானா நிகழ்ச்சியை ஏற்பதாகவும், அதற்கு தாமே பங்கேற்றதோடு, பலரையும் பங்கேற்க வைத்ததாகவும் கூறியவர் இந்தத் தலைப்பு மட்டுமே பிரச்சினைக்குறியது என்றார். இந்தப் புரிதல்தான் பிரச்சினைக்குறியது. நீயா நானா நிகழ்வு ஏதோ இந்த தலைப்பில் பெண்களுக்கு எதிராக அமைந்திருக்கிறது என்பதே தவறு! அந்த நிகழ்வின் வடிவம், உள்ளடக்கம், விவாத முறை, அனைத்தும் பெண்களுக்கு மட்டுமல்ல, மாறத்துடிக்கும் புதிய உலகின் பாதைகளை திசை திருப்பும் வகையில் நீரோ மன்னன் பிடில் வாசிக்கும் ரசனையோடு பொருந்தக் கூடியவை.

அப்பட்டமான பேஜ் 3 எனப்படும் மேட்டுக்குடி மாந்தர்கள் உண்டு உடுத்தி கழிக்கும் நுகர்வு கலாச்சார வாழ்வியல் வசந்தங்களை “மாதவியா – கண்ணகியா” பாணியில் பேசும் இந்த விவாத நிகழ்விற்கும் அறிவுத் தேடலுக்கும், சமூக அக்கறைக்கும் கிஞ்சித்தும் தொடர்பில்லை. இது குறித்து ஒவ்வொரு தலைப்பாக பிரித்து மேயலாம் – நேரமிருந்தால்…

வினவு தளத்தில் காதலை தீர்மானிப்பது அப்பியரன்சா, அப்ரோச்சா, அறிவாளா என்று ஒரு கட்டுரையில் நீயா நானாவின் உள்கிடக்கையை சற்றே கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

தமிழக காதல்களின் மையச்சரடு சாதிவெறி, ஆணாதிக்கம், மதவெறி போன்ற தீயசக்திகளிடம் மாட்டிக் கொண்டிருக்கும் போது எப்படி உடை உடுத்தி காதலை ஃபிரபோஸ் செய்வது, எந்த ரோசாவை கொடுப்பது, எப்படி பேசுவது போன்ற ஜோடனைகளை விரிவாக செய்து காண்பித்து நடத்துகிறது நீயா நானா நிகழ்வு! இந்த வாய்ச்சொல் அலங்கார வீரம், அவர்களின் அனைத்து தலைப்புக்களுக்கும் பொருந்தும்.

நீயா நானா நிகழ்வில் ஏதோ ஒரு தலைப்பில் விவாதம் முடிந்து ஒரு பஞ்ச் டயலாக் போல ஒரு மேசேஜ் சொல்ல வேண்டி வந்தால் அவியல் ஆண்டனி என்ன செய்வார் என்று நினைக்கிறீர்கள்?

அங்கே சிவப்பாக இருக்கும் ‘அழகான’ பெண்ணின் பேச்சை மட்டும் போடுவோம், அப்போதுதான் மெசேஜ் மக்களிடத்தில் போய்ச்சேரும் என்பார் – என்றார். இதையும் ஆண்டனியிடம் கேட்டால், மக்களிடம் கருத்து சேர்வதற்காக செய்யும் சமரசமே அன்றி பிழையில்லை என்பார். அதுதான் அமெரிக்கா துவங்கி, அழகுப் போட்டி வரை, பாஜக துவங்கி, பதஞ்சலி பாபா ராம் தேவ், ரஜினி – கமல் வரைக்கும் வேறு வேறு அளவுகளில் பேசுகிறார்கள்.

நம்மைப் பொறுத்த வரை ரோட்டரி கிளப் கூட்டமொன்றில் டெங்கு குறித்து பேசினால் என்ன நடக்கும்? அந்த கூட்டத்தின் விருந்து செலவை சுற்று முறையில் வரும் ஒரு ரோட்டேரியன் ஏற்பார். 95 சதவீத ரூபாய் விருந்திற்கும், ஐந்து சதவீதரூபாய் டெங்கு விழிப்புணர்விற்கும் ஒதுக்கப்படும். இதில் சமூக அக்கறை இருந்தால் நீயா நானாவும் ஒரு போராளியே!

விஜய் டிவி-யின் நீயா நானா குறித்து உங்கள் கருத்து?

(இரண்டு பதில்களை அதிகபட்சமாக தெரிவு செய்யலாம்)

  • தடை செய்ய வேண்டும்
  • மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டும் நிகழ்ச்சி
  • தடை செய்ய வேண்டியதில்லை, ஆனால் புறக்கணிக்க வேண்டும்
  • இளைஞர்களை பேஜ் 3 லைஃப் ஸ்டைலுக்குள் திணிக்கும் நிகழ்வு
  • மொக்கை நிகழ்வுதான், இதுவாவது இளைஞர்களுக்கு கிடைத்திருக்கிறதே!

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

அரசு மருத்துவமனைகள் விற்பனைக்கு… மோடியின் அடுத்த தாக்குதல் !

1
காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளி

ரசு மருத்துவமனைகள்தான் அடித்தட்டு மக்களுக்கு, சில சந்தர்ப்பங்களில் நடுத்தர வர்க்கப் பிரிவினருக்கும்கூட ஆபத்பாந்தவனாக இருந்து வருகின்றன. அவற்றின் கட்டமைப்பையும் தரத்தையும் மேம்படுத்த வேண்டும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிவரும் நிலையில், அதற்கு நேர்எதிராக, அரசு மருத்துவமனைகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் திட்டமொன்றை அறிவித்திருக்கிறது, மோடி அரசு.

மருத்துவக் காப்பீடு, எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி.ஸ்கேன் போன்ற ஆய்வுகளுக்குக் கட்டணம், கட்டணப் படுக்கைகள் என ஏற்கெனவே தனியார்மயம் அரசு மருத்துவமனைகளில் திணிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அடுத்த கட்டமாக, அரசு மருத்துவமனைகளின் குறிப்பிட்ட சிகிச்சைப் பிரிவுகளை அப்போலோ போன்ற தனியார் கார்ப்பரேட் மருத்துவமனை முதலாளிகளிடம் ஒப்படைப்பதுதான் இத்தனியார்மயத் திட்டத்தின் குறிக்கோள்.

அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறக் காத்திருக்கும் நோயாளிகள்

“அனைத்து மக்களுக்கும் மருத்துவ சிகிச்சை வழங்க அரசு தவறிவிட்டதென்றும், இந்த இடைவெளியைத் தனியாரைக் கொண்டு மட்டுமே நிரப்ப முடியும்” என்றும் அறிவிக்கிறது, மோடி அரசின் தேசிய சுகாதாரக் கொள்கை -2017. இதன்படி, நாடெங்கிலுமுள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ள இருதய நோய், நுரையீரல் நோய் மற்றும் புற்று நோய் ஆகிய மூன்று பிரிவுகளையும், அரசு-தனியார் கூட்டு என்ற பெயரில் தனியாரிடம் ஒப்படைக்கும் நகல் திட்டமொன்றைத் தயாரித்து, அதன் மீது  கருத்துக் கூறும்படி மாநில அரசுகளுக்கு கடந்த ஜூன் மாதம் அனுப்பி வைத்திருக்கிறது, மைய அரசு.

அரசு மருத்துவமனைகள் அனைத்தும் மாநில அரசுகளின் நிதி ஆதாரத்தைக் கொண்டுதான் நடத்தப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான மாநில அரசுகளுக்குத் தெரியாமலேயே மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தனியாரை நுழைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. உலக வங்கி, இந்தியத் தரகு முதலாளிகள் சங்கமான சி.ஐ.ஐ., நிதி ஆயோக் மற்றும் பா.ஜ.க. ஆளும் சில மாநில அரசுகள் ஆகியவை மட்டுமே சேர்ந்து இத்திட்டத்தைக் கமுக்கமாகத் தயாரித்துவிட்டு, யோக்கியவானைப் போல கருத்துக் கேட்டு அனுப்பியிருக்கின்றன.

பொதுமக்களின், குறிப்பாகச் சொல்லப்போனால் மேற்சொன்ன நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பியிருக்கும் ஏழை மக்களின் உயிரோடு விளையாடும் இந்த பாரதூரமான சீர்திருத்தத்தின் மீது கருத்துக் கூற மாநில அரசுகளுக்குத் தரப்பட்ட கெடு வெறும் இரண்டு வாரம்தான். மோடி அரசு, மாநில அரசுகளை முனிசிபாலிட்டிகளைப் போல நடத்தி வருவதற்கு இது இன்னுமொரு எடுத்துக்காட்டு. மேலும், இத்தனியார்மயத் திட்டம் உலக வங்கியின் வழிகாட்டுதலின்படி மேலிருந்து திணிக்கப்படுவதால், மாநில அரசுகள் இத்திட்டத்திற்குத் தலையாட்டுவதைத் தவிர, மறுத்துப் பேசுவதற்கு எந்தவொரு வாய்ப்பும் கிடையாது.

இந்த நோய்களுக்குச் சிகிச்சை எடுப்பதற்கு பெருநகர மருத்துவமனைகளை நாடி மக்கள் வர வேண்டியிருக்கும் சிரமத்தைத் தவிர்த்து, இந்த நோய்களுக்கான மூன்றாம் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சிகிச்சைகளைத் தனியார் மூலம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வழங்குவதும், அதன் மூலம் பெருநகர மருத்துவமனைகளின் சுமையைக் குறைப்பதும்தான் நோக்கம் என இந்தத் திட்டம் குறித்து தேனொழுகப் பேசுகிறது, நிதி ஆயோக். ஆனால், அது தேனல்ல, விஷம்.

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்ட தாய்-சேய் நல மருத்துவமனையைத் தனியார்மயமாக்கும் திட்டத்தை எதிர்த்து நடந்த ஆர்ப்பட்டம் (கோப்புப் படம்)

அப்போலோ போன்ற தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள், தங்கள் கைக்காசைப் போட்டு, மாவட்ட அரசு மருத்துவமனைகளின் வசதியையும் தரத்தையும் மேம்படுத்தி சிகிச்சை அளிப்பார்கள் எனக் கற்பனையாக நினைத்துக் கொள்வதைக்கூட அனுமதிக்கவில்லை நிதி ஆயோக். மாறாக, கார்ப்பரேட் மருத்துவமனை முதலாளிகளுக்கு எந்தவிதமான நட்டமோ, நிதிச்சுமையோ ஏற்படாதவாறு, மாநில அரசுகள் தனியாருக்கு சர்வமானியம் அளிக்கும் தீய நோக்கில் இத்திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. உர மானியம் எப்படி உரக் கம்பெனிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறதோ, அதுபோல இனிமேல் சுகாதார மானியங்கள் ஐந்து நட்சத்திர கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு வழங்கும் ஏற்பாடுதான் இந்தத் திட்டம்.

இத்திட்டத்தின் கீழ் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 50 படுக்கைகளைக் கொண்ட சிகிச்சை பிரிவைத் தொடங்குவதற்குக் குறைந்தபட்சமாக 30,000 சதுர அடியும் 100 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவைத் தொடங்குவதற்குக் குறைந்தபட்சமாக 60,000 சதுர அடியும் அந்தந்த மருத்துவமனைக்குள்ளேயே தனியார் நிறுவனங்களுக்கு மாநில அரசு வழங்க வேண்டும். இந்த இட வசதியில் 75 சதவீதத்தைக் கட்டிடமாகவும், மீதியை அடி மனையாகவும் வழங்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் தொடங்கி மருந்து வழங்குவது வரை, ஆம்புலன்ஸ் தொடங்கி கழிப்பறை வரை அனைத்து நிலைகளிலும் பற்றாக்குறையும் வசதிக் குறைபாடுகளும் நிலவி வரும் நிலையில், மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உருவாக்கப்பட்டிருக்கும் ஆம்புலன்ஸ், இரத்த வங்கி, உடல் இயன்முறை சிகிச்சை, மருத்துவக் கழிவுகளை அகற்றுதல், பிணவறை உள்ளிட்ட பல்வேறு சேவைகளைத் தனியாரோடு பங்கிட்டுக் கொள்ள வேண்டும். தனியாருக்குத் தேவைப்படும் கார் மற்றும் இரு சக்கர வாகன நிறுத்தம், தடையில்லா மின்சாரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகம் செய்துதர வேண்டும்.

நிலமும், கட்டிடமும், வசதிகளும் செய்து கொடுத்தால் மட்டும் போதாது. அரசு மருத்துவமனைகளில் நுழைந்துள்ள தனியாருக்கு நோயாளிகளை சப்ளை செய்யும் புரோக்கராகவும் மாநில அரசு செயல்பட வேண்டும் என்கிறது, நிதி ஆயோக். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மைய சுகாதார நிலையங்களில் தொற்றா நோய்களுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள், தமது நோயாளிகளை மேல்சிகிச்சைக்கு அனுப்ப வேண்டுமென்றால், மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நுழைந்திருக்கும் தனியாருக்குப் பரிந்துரைப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்கிறது, நிதி ஆயோக்கின் நகலறிக்கை.

காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளி

இம்மூன்று சிகிச்சைப் பிரிவுகளை முப்பது வருடக் குத்தகைக்குத் தனியாரிடம் ஒப்படைக்கப் பரிந்துரைக்கும் நிதி ஆயோக், அப்பிரிவுகளில் நோயாளிகள் இலவசமாக சிகிச்சைப் பெறுவதைத் தடை செய்கிறது. எனினும், தனியாரிடம் ஒப்படைக்கப்படும் சிகிச்சை பிரிவுகளில், அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இணைந்திருக்கும் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் எனச் சலுகை தருகிறது.

இந்தச் சலுகை இரண்டு விதங்களில் மோசடியானது. ஒன்று, இந்தியாவின் மொத்த மக்கட்தொகையில் வெறும் 12 சதவீதப் பேர்தான் அரசின் காப்பீட்டுத் திட்டங்களில் இணைக்கப்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள 88 சதவீதப் பேரை இலவச மருத்துவ சேவை பெறுவதிலிருந்து விலக்கி வைக்கிறது, நிதி ஆயோக். மேலும், இந்த 12 சதவீதப் பேருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது. ஏனென்றால், காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் இலவச சிகிச்சைக்குப் பரிந்துரைக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் “சுதந்திரத்தை” மாநில அரசுகளுக்கு வழங்கியிருக்கிறது, நிதி ஆயோக்.

இரண்டாவது, இலவச சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குரிய கட்டணத்தை அரசு தனியாருக்குத் தாமதமின்றிச் செலுத்திவிட வேண்டும் என்றும், தாமதம் ஏற்படும் சமயங்களில் தனியாருக்கு நட்டமேற்படுவதைத் தவிர்ப்பதற்காக மாநில அரசுகள் தனியாக நிதி ஒதுக்கீடு செய்து பராமரிக்க வேண்டும் என்றும் நிதி ஆயோக் திட்டம் கூறுகிறது. எனவே, இலவச சிகிச்சை என்பது தனியார் மருத்துவமனை நிர்வாகங்களுக்கு அரசு மறைமுகமாகச் செலுத்தும் மானியமாகும்.

இம்மூன்று சிகிச்சை பிரிவுகளை முப்பது வருட குத்தகைக்கு எடுக்கும் தனியார் நிறுவனங்களுக்குத் தொழிலை நடத்துவதற்குத் தேவைப்படும் நிதி உதவிகளையும் மாநில அரசு அளிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்திருக்கிறது, நிதி ஆயோக். சுருக்கமாகச் சொன்னால், நிதி ஆயோக் இந்தத் திட்டத்தின் வழியாக, கூடாரத்திற்குள் ஒட்டகத்தின் மூக்கை நுழைத்துவிட்டிருக்கிறது. ஒட்டகம் கூடாரத்தையே காலிசெய்துவிடும் நாள் வெகுவிரைவில் வந்துவிடும் என்பதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டியது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வெறும் 1.2 சதவீத நிதிதான் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படுகிறது. மற்ற உலக நாடுகளோடு ஒப்பீடும்போது, சுகாதாரத்திற்கு அரசு நிதியை ஒதுக்குவதில் இந்தியா 190-வது இடத்தில் இருக்கிறது. இந்திய கிராமப்புறங்களில் வாழும் 72 சதவீதப் பேரும், நகர்ப்புறங்களில் வாழும் 79 சதவீதப் பேரும் தமது மருத்துவ தேவைகளுக்குத் தனியாரைத்தான் நம்பியிருக்கின்றனர். இப்படிபட்ட நிலையில், இருப்பதையும் பறிப்பது போல மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தனியார்மயம் புகுத்தப்படுகிறது.

வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள் எனப்படும் இருதய நோய், புற்று நோய், சர்க்கரை நோய் போன்ற தொற்றா நோய்களை வெகுவிரைவாகக் கட்டுப்படுத்த வேண்டும் என உலகமே ஏற்றுக்கொண்டிருக்கும் உறுதிமொழியை நிறைவேற்றத்தான், இருதய நோய், புற்று நோய், நுரையீரல் நோய் ஆகிய மூன்று சிகிச்சைப் பிரிவுகளைத் தனியாரிடம் ஒப்படைத்துப் பொதுமக்களுக்குத் தரமான சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்வதாகக் கூறுகிறது, நிதி ஆயோக்.

பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்குத் தனியாருக்கு விற்றபோதும் இது போலத்தான் – கல்வி உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வோம் – பேசினார்கள். அந்த வாக்குறுதிகளில் ஒன்றாவது நிறைவேறியிருக்கிறதா?

இந்திய மக்களிடேயே தொற்றா நோய்கள் எவ்வளவு விரைவாகப் பரவி வருகிறதோ, அதைவிடப் பல மடங்கு வேகத்தோடு காசநோய், ஆஸ்துமா, டெங்கு, பன்றிக் காய்ச்சல், மூளைக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவி வருகின்றன. காசநோய் பாதிப்பில் உலகின் தலைநகரமாக இந்தியா மாறிவருவதாகக் கூறப்படுகிறது. மருத்துவ சுற்றுலாவின் தலைநகர் எனப் பீற்றிக் கொள்ளப்படும் சென்னைகூட டெங்கு நோய் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தோற்றுப்போய் நிற்பதை, டெங்கு மரணங்கள் அம்பலப்படுத்துகின்றன.

தொற்று நோய்கள் பணக்காரர்களைவிட, ஏழைகளைத்தான் அதிகம் பாதிக்கின்றன. அதனாலும், தொற்று நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதைவிட தொற்றா நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதுதான் துட்டைக் கறக்கும் வழியாக இருப்பதாலும் அப்போலோ போன்ற கார்ப்பரேட் மருத்துவமனைகள், தொற்று நோய்களைவிட, தொற்றா நோய்களின் சிகிச்சையில் அக்கறை காட்டி வருகின்றன.  அக்கும்பலின் பணப்பையை நிரப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் அடிப்படையில்தான் இருதய நோய் உள்ளிட்ட மூன்று சிகிச்சைப் பிரிவுகளைத் தனியாருக்குக் குத்தகைக்கு விடும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் சிறு நகர்ப்புறங்களைச் சேர்ந்த அரசு காப்பீட்டின் கீழ் வரும் ஏழை நோயாளிகளை மட்டுமின்றி, வேறு வழியின்றி அரசு மருத்துவமனைகளைத் தஞ்சமடையும் நடுத்தர வர்க்கப் பிரிவினரையும் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் இலாப வேட்டைக்குப் பலியிடத் துணிந்திருக்கிறது, மோடி அரசு.

– குப்பன்

-புதிய ஜனநாயகம், அக்டோபர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி