கம்யூனிசத்தை பூதமென்றும், கொடுங்கோலர்களது ஆட்சி என்றும் கதை கட்டி வந்த முதலாளித்துவத்தின் முகத்தில் கரிபூசப்பட்ட நாள் நவம்பர் 7, 1917. அது உலகின் முதல் சோசலிசக் குடியரசு கட்டப்பட்ட நாள். ஜாரின் கொடுங்கோல் முடியாட்சியிலிருந்தும், முதலாளித்துவத்தின் சுரண்டலில் இருந்து ரசிய மக்கள் விடுதலை பெற்ற நாள் அது. அன்று தான் மாமேதை தோழர் லெனின் தலைமையிலான ரசிய கம்யூனிஸ்ட் கட்சி ரசியாவில் மாபெரும் சோசலிசப் புரட்சியை நடத்தியது.
அது வரலாற்றின் மற்றுமொரு நிகழ்வு அல்ல. பரிணாம வரலாற்றில் மனிதக் குரங்கிலிருந்து மனித மூதாதையர் உருவானதற்கு இணையான நிகழ்வு. நிதி, நீதி, காவல், படை, நிர்வாகம் என அரசின் அனைத்து அலகுகளையும் மக்களே செலுத்த முடியும் என்பதை நிரூபித்த நிகழ்வு. பராரிகள் பாராள முடியும் என்பதை பறைசாற்றிய நிகழ்வு. செல்வத்தைப் படைத்தவர்கள் அதன் எஜமானர்களாகவும் முடியும் என்பதை உணர்த்திய நிகழ்வு.
அந்தச் சமூகத்தில் அநாதைகள் இல்லை, விலைமாதர்கள் இல்லை, ஆதரவற்ற முதியோர் இல்லை. பெண் கல்வி – சமமான வேலைவாய்ப்பு, பேறுகால விடுமுறை, அனைவருக்கும் ஓய்வூதியம், அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை இனங்களுக்கு பிரிந்து செல்லும் உரிமை என மேற்குலகம் பல நூற்றாண்டுகளாயும் சாதிக்க முடியாத விசயங்களை சில பத்தாண்டுகளில் சாதித்துக் காட்டியது சோசலிசம்.
இத்தகைய சாதனைகளை நிகழ்த்திய ரசியாவிலும் பிற சோசலிச நாடுகளிலும் மீண்டும் முதலாளித்துவம் வெற்றி பெற்றுவிட்டது என்பது உண்மைதான். தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையிலான போரின் ஒரு சுற்றில் தொழிலாளி வர்க்கம் தோற்றிருக்கிறது. இத்தகைய தோல்விகள் எதிர்பாரதவையல்ல. இதுவே இறுதிச் சுற்றும் அல்ல.
அதனை, 2010 வால் ஸ்ட்ரீட் எழுச்சி உலக முதலாளித்துவத்தின் கருவறையான அமெரிக்காவின் தலையில் ஓங்கியடித்து பறைசாட்டியிருக்கிறது. “முதலாளித்துவம் ஒழிக” என இலட்சக்கணக்கான மக்கள் குரல் எழுப்பினர். முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்களும் கூட மார்க்சின் மூலதனம் குறித்த கசப்பான உண்மைகளை அங்கீகரித்து விழுங்க வேண்டியதாயிற்று.
தனது உள்முரண்பாடுகளாலேயே முதலாளித்துவம் தனக்கான புதைகுழியைத் தோற்றுவித்திருக்கிறது. அதன் அழிவிலிருந்து அதனைக் காப்பது என்பது எந்த தேவனாலும் சாத்தானாலும் இயலாத காரியம். அதன் அழிவு தவிர்க்கவியலாதது. அதன் அழிவோடு மனிதகுலமும் தன்னை அழித்துக் கொள்ளுமா அல்லது முதலாளித்துவத்தின் பிடியிலிருந்து தப்புமா என்பதை மனித குலம் தனது செயல்பாட்டின் மூலமாகத் தான் தீர்மானிக்க முடியும் என்றார் மார்க்ஸ்
நவம்பர் புரட்சியின் எளிய அறிமுகத்தை தருகிறது இத்தொகுப்பு
தோழமையுடன் வினவு
நமக்கும் வேண்டும் நவம்பர் புரட்சி
நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!
ரசியப் புரட்சி – வேண்டும் தொடர்ச்சி !
தோழர் ஸ்டாலின் – உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம் !
நாட்டுப் பற்றாளர்களே கேளுங்கள்., நக்சல்பாரியே ஒரே மாற்று!
நமக்கும் வேண்டும் நவம்பர் – 7
அங்க இரும்புதான் இருக்கு திரையைக் காணோம் !
நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்
சோசலிசம்: முதலாளிகளின் கொடுங்கனவு ! பாட்டாளிகளின் கலங்கரை விளக்கம் !!
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
கார்டூனிஸ்ட் பாலா மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்து மக்கள் அதிகாரத்தின் சார்பில் தமிழகத்தின் பல இடங்களில் நவம்பர் 6,7 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
கோவையில்…
கந்துவட்டி கொடுமையால் கடந்த 23.10.2017 அன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனது மனைவி, குழந்தைகளோடு தீக்குளித்து இசக்கிமுத்து மாண்டு போனார்.
இசக்கிமுத்துவின் மொத்த குடும்பமும் அழிய காரணமாயிருந்தது, நெல்லை கலெக்டர், எஸ்.பி. மற்றும் செயல்படாத இந்த அரசுதான். இதனை தனது தூரிகையால் அம்பலப்படுத்திய கார்டூனிஸ்ட் பாலா 05.11.2017 கைது செய்யப்பட்டார். இக்கைது நடவடிக்கையை கண்டித்து கோவை மண்டல மக்கள் அதிகாரம் 06.11.2017 அன்று தடையைமீறி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
முன்னதாக ஆர்பாட்டம் குறித்து காவல்துறையிடம் தெரிவித்தபோது, ஏற்கனவே அனுமதிக்கப்படும் இடத்தில்தான் நடத்தவேண்டும் என உத்திரவிட்டது. மக்களுக்கான போராட்டங்களை மக்கள் கூடாத இடங்களில் நடத்த முடியாது என உறுதியாக கூறி கோவை காந்திபுரம் நகர மற்றும் விரைவு பேருந்து நிலையம் கூடும் போக்குவரத்து நிறைந்த பகுதியில் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி 06.11.2017 அன்று மாலை 4 மணியளவில் கோவை, கோத்தகிரி, உடுமலை, திருப்பூர் பகுதிகளின் தோழர்கள்கள் ஒன்றுகூடி பதாகைகள், கொடி, முழக்க அட்டை, கார்ட்டூன் படங்களோடு கந்துவட்டிக்கு காரணமான காவல்துறை மற்றும் ஆட்சியாளர்களை அம்பலபடுத்தும் முழக்கங்களோடு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பின்னர் ஊடங்களுக்கு போட்டி கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தோழர்களை காவல்துறை கைது செய்து வேனில் ஏற்றி மண்டபத்திற்கு கொண்டு சென்றது. செல்லும் வழியெங்கும் அரசை அம்பலப்படுத்தும் முழக்கங்களை தோழர்கள் முழக்கமிட்டவாறே சென்றனர்.
தங்கவைக்கப்பட்ட அரங்கத்திலேயே தோழர்கள் வட்டமாக அமர்ந்து கந்துவட்டியைப் பற்றியும் மற்றுயும், கருத்துரிமை பற்றியும் இந்த அரசின் கையாலாகாத்தனம் பற்றியும் கலந்துரையாடல் நடத்தினர். பின்னர் இரவு 8 மணிக்கு காவல்துறை தோழர்களை மண்டபத்தில் இருந்து விடுவித்தது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், கோவை – மண்டலம்.
________
நெல்லையில்….
நெல்லை நீதிமன்ற வளாகத்திற்கு 06.11.2017 அன்று கார்டூனிஸ்ட் பாலா அவர்களை ஆஜர்படுத்த அழைத்து வந்தபோது, அவருக்கு ஆதரவாக நெல்லை பகுதி மக்கள் அதிகாரம் தோழர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும் பிணை வழங்கப்பட்ட பின்னரும் பாலாவை சட்டவிரோதமாக கைது செய்ய முயன்றதைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
இதனைக் கண்ட வழக்கறிஞர்கள் பலரும் மக்கள் அதிகாரம் தோழர்களுடன் இணைந்து முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டமானது இந்த அரசை அம்பலப்படுத்தும் வகையில் அமைந்தது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், நெல்லை.
***
குடந்தையில்….
மக்கள் அதிகாரம் சார்பாக தோழர். தமிழ் ஜெயாபண்டியன் தலைமையில் கடந்த 6.11.2017 அன்று குடந்தை காந்தி பூங்காவில் “கார்டூனிஸ்ட் பாலா அவர்களின் கைது நடவடிக்கையைக் கண்டித்து” ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ”அனுமதி வாங்கி விட்டுதான் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்” எனக் கூறி போலீசு ஆர்ப்பாட்டத்தை தடுக்க முயன்றது. ஆனால் ”மைக் எதுவும் இல்லாமல் எங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு எதற்கு அனுமதி வாங்க வேண்டும்?” எனக் கேள்வி கேட்டனர் தோழர்கள். ஆர்ப்பாட்டம் முடியும் வரை அங்கு இருந்து விட்டு பின்னர் கலைந்து சென்றது போலீசு.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், குடந்தை.
***
ஓசூரில்….
கந்துவட்டி கொடுமைக்கு இசக்கிமுத்து குடும்பத்தையே பலி வாங்கிய இந்த அரசை அம்பலப்படுத்தி, கார்ட்டூன் வரைந்த பாலாவின் கைதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக, “கந்து வட்டி- போலீசு- கலெக்டர் கொடுமையால் இசக்கிமுத்து குடும்பமே தீயில் கருகியது! கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!! இந்த அக்கிரமங்களுக்கும், அராஜகங்களுக்கும் முடிவு கட்டுவோம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் 07.11.2017 அன்று காலை 11.30 மணியளவில் ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் மக்கள் அதிகாரம் சார்பாக நடத்தப்பட்டது
மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர் ரவிச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் தோழர் பரசுராமன் சிறப்புரையாற்றினார். இறுதியாக, மக்கள் அதிகாரத்தின் பாகலூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் காந்தராஜ் நன்றியுரையாற்றினார்.
தோழர் பரசுராமன் தனது சிறப்புரையில், “கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட்டை கைது செய்வதில் காட்டும் முனைப்பை கந்துவட்டிக் கொடுமைக்காரர்களை கைதுசெய்வதில் காட்டவில்லை இந்த கலெக்டரும் , எஸ்.பி-யும் என அம்பலப்படுத்திப் பேசியது; மற்றும் இந்த சட்டமும் போலீசும் அனைத்து மக்களுக்கும் பொதுவானதோ நடுநிலையானதோ அல்ல என்பதை அம்பலப்படுத்திப் பேசியது நல்ல வரவேற்பைப் பெற்றது.
குறிப்பாக ஒரு கலெக்டரின் புகாரை வாங்கி சென்னைக்கு ஓடி வந்து பாலாவை கைது செய்ததில் இருந்த அக்கறையில் ஒரு மைக்ரான் அளவு கூட இசக்கிமுத்துவின் புகார் மனுவில் வெளிப்படவில்லை என்பதை ஒப்பிட்டுப் பேசியது” நல்ல வரவேற்பை பெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம்,
ஓசூர். தொடர்புக்கு : 99948 84923.
உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய இந்தக் கட்டுரை, அமெரிக்காவில், மன்த்லி ரிவியூ என்ற பத்திரிகையின் முதல் இதழில் (மே 1949) வெளியிடப்பட்டது.
***
பொருளாதார, சமூகப் பிரச்சனைகளில் நிபுணராக இல்லாத ஒருவர் சோசலிசம் குறித்துத் தனது கருத்துக்களை வெளியிடுவது சரிதானா? பல காரணங்களுக்காக அது சரிதான் என்று நான் கருதுகிறேன்.
முதலில், அறிவியல் கண்ணோட்டத்தில் இந்தக் கேள்வியைப் பரிசீலிக்கலாம். முதல் பார்வையில் வானவியலுக்கும் பொருளாதாரவியலுக்கும் அடிப்படையில் முறையியல் வேறுபாடுகள் இல்லாதது போலத் தோன்றலாம். இரண்டு துறைகளிலுமே அறிவியலாளர்கள் தாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நிகழ்வுகள் தொடர்பான விதிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.
அதன் மூலம் இந்நிகழ்வுகளுக்கிடையேயான உள்உறவுகளை முடிந்த வரைக்கும் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். ஆனால், உண்மையில் இரண்டு துறைகளுக்கும் இடையே முறையியல் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. தனியாகப் பிரித்து மதிப்பிட முடியாத பல காரணிகள் பொருளாதார நிகழ்வுகளைப் பாதிக்கின்றன என்பதால், பொருளாதாரவியல் துறையில் பொதுவான விதிகளைக் கண்டுபிடிப்பது சிக்கலானதாக உள்ளது.
மேலும், நாகரீகக் காலகட்டம் என்று அழைக்கப்படும் மனிதகுல வரலாற்றில் திரட்டப்பட்டுள்ள அனுபவங்கள் வெறும் பொருளாதாரக் காரணிகளால் மட்டும் பாதிக்கப்பட்டுத் தீர்மானிக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
உதாரணமாக, வரலாற்றில் தோன்றிய பேரரசுகளில் பெரும்பாலானவை நாடு பிடித்தலை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. வென்றடக்கும் தரப்பினர், வென்றடக்கிய நாட்டில் பொருளாதார ரீதியாகவும், சட்டரீதியாகவும் சலுகை பெற்ற வர்க்கமாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டார்கள். நிலவுடைமை ஏகபோகத்தைக் கைப்பற்றிக் கொண்ட அவர்கள், தமது தரப்பிலிருந்தே மத குருக்களை நியமித்துக் கொண்டார்கள். கல்வியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்த மத குருக்கள், சமூகம் வர்க்க ரீதியாகப் பிரிக்கப்பட்டிருப்பதை ஒரு நிரந்தர அமைப்பாக மாற்றினார்கள். மக்கள் தமது சமூக செயல்பாடுகளில் தம்மை அறியாமலேயே வழிநடத்தப்படும் வகையிலான ஒரு தார்மீகக் கட்டமைப்பை உருவாக்கினார்கள்.
இந்த வரலாற்றுப் பாரம்பரியம் நேற்றோடு முடிந்த போன கதை. இருப்பினும், நாம் இன்னும் தோர்ஸ்டெய்ன் வெப்லன் வேட்டையாடும் கட்டம் ( பார்க்க அடிக்குறிப்பு 1) என்று அழைக்கும் மனிதகுல வளர்ச்சிக் கட்டத்தை எந்த நாட்டிலும் கடந்து விடவில்லை. இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பொருளாதார நடைமுறைகள் அத்தகைய வேட்டையாடும் கட்டத்தைச் சேர்ந்தவை. இந்த நடைமுறைகளிலிருந்து நாம் வந்தடையக் கூடிய விதிகள் எதிர்காலத்தில் வரப் போகும் புதிய, மேம்பட்ட கட்டங்களுக்கு பொருந்தப் போவதில்லை.
மனிதகுல வளர்ச்சியின் வேட்டையாடும் கட்டத்தைத் தாண்டி முன்னேறிச் செல்வதுதான் சோசலிசத்தின் உண்மையான நோக்கம். எனவே, பொருளாதார அறிவியல் அதன் இன்றைய நிலையில் எதிர்கால சோசலிச சமூகத்தைப் பற்றி விளக்க சாத்தியமற்று உள்ளது.
இரண்டாவதாக, சோசலிசம் ஒரு சமூக அறம் சார்ந்த இலக்கை நோக்கிய பயணம். ஆனால், அறிவியல் அத்தகைய இலக்குகளை உருவாக்கித் தர முடியாது என்பதோடு, அறிவியல் மூலம் இலக்குகளை மனிதர்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்வதற்கான சாத்தியம் இன்னும் குறைவு. அதிகபட்சமாக, குறிப்பிட்ட இலக்குகளை எட்டுவதற்கான வழிமுறைகளை மட்டுமே அறிவியல் வழங்க முடியும். ஆனால், அத்தகைய இலக்குகளை உயர்ந்த அறநெறி இலட்சியங்களைக் கொண்டிருக்கும் ஆளுமைகள்தான் உருவாக்குகின்றனர். அந்த இலக்குகள் குறைப் பிரசவமாகி விடாமல் உயிர்த் துடிப்போடும், சக்தியோடும் இருக்கும் போது, உணர்ந்தும் உணராமலும் தமது செயல்பாடுகளால் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியை தீர்மானிக்கும் மனிதர்களால் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு முன்னெடுத்து செல்லப்படுகின்றன.
எனவே, மனிதகுலம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆய்வு செய்யும் போது அறிவியலையும் அறிவியல் முறையியலையும் அளவுக்கு மீறி மதிப்பிட்டு விடாமல் கவனமாக இருக்க வேண்டும். சமூகத்தின் கட்டமைப்பைப் பாதிக்கும் கேள்விகள் தொடர்பாக துறை நிபுணர்கள் மட்டும்தான் கருத்துச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து விடக் கூடாது.
சமீப காலமாக மனித சமூகம் ஒரு நெருக்கடியைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது என்றும் சமூகத்தின் நிலைத்தன்மை மிக மோசமாகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது என்றும் பல குரல்கள் ஆணித்தரமாக பேசிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலையில் தனிநபர்கள், அவர்கள் சார்ந்திருக்கும் சிறு அல்லது பெரிய குழு தொடர்பாக விட்டேற்றியாக, ஏன் பகை உணர்வோடு இருப்பது ஒரு போக்காக உள்ளது. நான் சொல்வதை விளக்குவதற்கு எனது சொந்த அனுபவம் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்.
சமீபத்தில் ஒரு புத்திசாலியான, நல்லெண்ணம் படைத்த ஒருவரிடம் இன்னொரு போர் மூண்டு விடும் அபாயத்தை பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அத்தகைய போர் மனிதகுலத்தின் இருத்தலையே கேள்விக்குள்ளாக்கி விடும் என்றும், தேசங்களுக்கு அப்பாற்பட்ட கட்டமைப்பு ஒன்றுதான் அத்தகைய அபாயத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க முடியும் என்றும் எனது கருத்தை தெரிவித்தேன். அதைக் கேட்டவுடன், அவர், மிக அமைதியாக, பதட்டமின்றி, மனித இனம் அழிந்து போவதை ஏன் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கிறீர்கள்? என்று கேட்டார்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கூட இப்படி ஒரு கருத்தை இவ்வளவு எளிதாக யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பது உறுதி. தனக்குள் ஒரு சமநிலையை வந்தடைவதற்குப் போராடித் தோற்று போய், இனிமேலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்து விட்ட ஒரு மனிதரின் கருத்து அது. இன்று பலரையும் பீடித்துள்ள வலிமிகுந்த தனிமையின், ஒதுக்கி வைப்பின் வெளிப்பாடு அது. இதற்கு என்ன காரணம்? இதிலிருந்து விடுபட ஏதாவது வழி இருக்கிறதா?
இப்படிப்பட்ட கேள்விகளை கேட்பது எளிது. ஆனால், குறிப்பிடத்தக்க அளவு உறுதியுடன் அவற்றுக்கு விடை சொல்வது கடினமானது. இருப்பினும், என்னால் முடிந்த அளவு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல நான் முயற்சிக்கிறேன். நமது உணர்ச்சிகளும், தேடல்களும் பல நேரங்களில் முரண்பட்டவையாகவும் தெளிவற்றவையாகவும் இருக்கின்றன என்பதையும், எளிதான, எளிமையான சூத்திரங்களாக அவற்றை வெளிப்படுத்த முடியாது என்பதையும் தெரிந்தே நான் இந்த முயற்சியில் இறங்குகிறேன்.
ஒரு மனிதர் ஒரே நேரத்தில் தனித்த பிறவியாகவும், சமூகப் பிறவியாகவும் இருக்கிறார். தனித்த பிறவியாக தனது வாழ்வையும், தனக்கு மிகவும் நெருக்கமானவர்களின் வாழ்வையும் பாதுகாத்துக் கொள்ளவும், தனது தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், தனது உள்ளார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் முயற்சிக்கிறார். சமூகப் பிறவியாக, தனது சக மனிதர்களின் அங்கீகாரத்தையும், அன்பையும் பெற முயற்சிக்கிறார்; அவர்களது மகிழ்ச்சிகளில் பங்கெடுக்க விளைகிறார்; அவர்களது துயரங்களுக்கு ஆறுதல் சொல்கிறார்; அவர்களது வாழ்க்கை நிலையை மேம்படுத்த முயற்சிக்கிறார்.
பல்வகைப்பட்ட, பல நேரங்களில் ஒன்றோடொன்று முரண்படும் இத்தகைய முயற்சிகள்தான் ஒரு மனிதரின் தனிச்சிறப்பான தன்மையைத் தீர்மானிக்கின்றன. ஒரு மனிதரின் வாழ்வில் அவற்றின் குறிப்பிட்ட சேர்க்கை, அவர் தனது உள்மன சமநிலையைப் பராமரித்து சமூகத்தின் நலனுக்கு பங்களிக்க முடியுமா என்பதைத் தீர்மானிக்கின்றது.
இந்த இரண்டு உந்துதல்களின் ஒப்பீட்டு வலிமைகள் மரபு வழியில் தீர்மானிக்கப்படுவதற்கான சாத்தியம் இருந்தாலும், ஆனால், இறுதியாக வெளிப்படும் ஒரு மனிதரின் ஆளுமை அவர் வளர்ந்த சூழலாலும், வளர்ந்த சமூகத்தின் கட்டமைப்பாலும், அச்சமூகத்தின் பாரம்பரியங்களாலும், குறிப்பிட்ட வகையிலான நடத்தைகள் பற்றிய அச்சமூகத்தின் மதிப்பீடுகளாலும் தீர்மானிக்கப்படுகிறது.
ஒரு தனி மனிதரைப் பொருத்தவரை “சமூகம்” என்ற கருத்தாக்கம், சமகால மனிதர்களுடனும், முந்தைய தலைமுறை மனிதர்களுடனும் அவருக்கு இருக்கும் நேரடி, மறைமுக உறவுகளின் தொகுப்பைக் குறிக்கிறது. ஒரு தனிமனிதர் தானாகவே சிந்திக்கவும், உணரவும், முயற்சிக்கவும், வேலை செய்யவும் முடிகிறது; ஆனால், உடல்ரீதியாகவும், அறிவு ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சமூகத்தை அவர் பெருமளவு சார்ந்திருப்பதால், சமூகம் என்ற சட்டகத்துக்கு வெளியில் ஒரு மனிதரைப் பற்றிச் சிந்திப்பதோ, புரிந்து கொள்வதோ, சாத்தியமற்றதாகிறது.
“சமூகம்” தான் மனிதருக்கு உணவு, உடைகள், வீடு போன்ற அத்தியாவசிய தேவைகளையும், வேலை செய்வதற்கான கருவிகளையும், மொழியையும் சிந்தனை வடிவங்களையும் சிந்தனையின் பெரும்பகுதி உள்ளடக்கத்தையும் வழங்குகிறது. “சமூகம்” என்ற சிறு சொல்லின் பின் மறைந்திருக்கும் கடந்த காலத்தையும், சமகாலத்தையும் சேர்ந்த கோடிக்கணக்கான மனிதர்களின் உழைப்பின் மூலமும், சாதனைகளின் மூலமும்தான் ஒரு மனிதரது வாழ்க்கை சாத்தியமாக்கப்படுகிறது.
எனவே, சமூகத்தின் மீது தனிநபரின் சார்பு இயற்கை யதார்த்தமாக உள்ளது. எப்படி எறும்புகளையும், தேனீக்களையும் அவற்றின் சமூகத்திலிருந்து பிரிக்க முடியாதோ அது போல மனிதருக்கும் சமூகம் ஒரு பிரிக்க முடியாத அம்சமாக உள்ளது. எறும்புகளின், தேனீக்களின் வாழ்க்கையின் சின்னஞ்சிறு விபரங்கள் கூட, மாற்ற முடியாத, பாரம்பரியமாக பெறப்பட்ட உள்ளுணர்வுகளால் தீர்மானிக்கப்படுகின்றன. ஆனால், மனிதர்களின் சமூக வடிவமைப்புகளும், அவர்களுக்கிடையேயான உறவுகளும் மாறக் கூடியவையாகவும், மாற்றத்துக்குட்பட்டவையாகவும் உள்ளன.
மனிதர்களின் நினைவுத் திறன், புதிய சேர்க்கைகளை படைக்கும் திறன், மொழி வழி தகவல் பரிமாற்றம் ஆகியவை உயிரியல் அவசியங்களால் கட்டுப்படுத்தப்படாத முன்னேற்றங்களைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. அந்த முன்னேற்றங்கள் பாரம்பரியங்கள், நிறுவனங்கள், அமைப்புகள் போன்றவற்றிலும் இலக்கியத்திலும், அறிவியல், தொழில்நுட்ப சாதனைகளிலும், கலைப்படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. ஒரு மனிதர் குறிப்பிட்ட வகையில் தனது சொந்த நடத்தையைக் கட்டுப்படுத்த முடிவதையும், அவரது உணர்வுபூர்வமான சிந்தனையும், விருப்பங்களும் அதில் பங்களிப்பு செய்வதையும் இது விளக்குகிறது.
ஒரு மனிதர் பிறக்கும்போதே மரபுரீதியாக ஒரு உடற்கட்டமைப்பைப் பெறுகிறார். மனித இனத்தின் இயல்பான இயற்கை உந்துதல்கள் உள்ளிட்ட அந்தக் கட்டமைப்பு நிலையானது, மாற்ற முடியாதது என்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மேல், தன் வாழ்நாள் முழுவதும், தகவல் தொடர்பு மூலமும் பிற வகை தாக்கங்களின் மூலமும் சமூகத்திலிருந்து ஒரு கலாச்சார கட்டமைப்பை அவர் வரித்துக் கொள்கிறார். காலப்போக்கில் மாற்றப்படக்கூடிய இந்தக் கலாச்சார கட்டமைப்புதான் ஒரு தனிநபருக்கும் சமூகத்துக்கும் இடையேயான உறவை முதன்மையாகத் தீர்மானிக்கிறது.
மானுடவியலின் புராதன சமூகங்கள் பற்றிய ஒப்பீட்டு ஆய்வுகள் மூலம் நிலவும் கலாச்சார வடிவங்களைப் பொறுத்தும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமைப்புகளின் தன்மையைப் பொறுத்தும் மனிதர்களின் சமூக நடத்தை பெருமளவு வேறுபடலாம் என்று தெரிய வருகிறது. மனித குலத்தின் நிலையை மேம்படுத்த முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள் இதில்தான் நம்பிக்கைவைக்க வேண்டும். உயிரியல் கட்டமைப்பின் காரணமாக ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வதோ, குரூரமான, சுயமாகச் சுமத்தப்பட்டுக் கொண்ட விதியின் தயவில் வாழ்வதோ மனித குலத்தின் விதி இல்லை.
மனித வாழ்க்கையை அதிகபட்ச நிறைவளிக்கக் கூடியதாக மாற்றுவதற்கு சமூகத்தின் கட்டமைப்பையும், மனிதரின் கலாச்சார கண்ணோட்டத்தையும் எப்படி மாற்ற வேண்டும்? சில நிலைமைகள் நம்மால் மாற்றியமைக்கப்பட முடியாதவை என்ற உண்மையை நாம் எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும். முன்பு குறிப்பிட்டது போல மனிதரின் உயிரியல் இயல்புகள் நமது நடைமுறையை பொறுத்தவரை மாற்றப்பட முடியாதவை.
மேலும், கடந்த சில நூற்றாண்டுகளில் தொழில்நுட்பங்களும், மக்கள் தொகை பெருக்கமும் உருவாக்கியுள்ள நிலைமைகளை இல்லாமல் செய்து விட முடியாது. மக்களின் தொடர்ந்த இருத்தலுக்கு இன்றியமையாத பொருட்களுடன் கூடிய, ஒப்பீட்டளவில் மக்கள்நெருக்கம் அதிகமான பகுதிகளுக்கு, பெருமளவு உழைப்புப் பிரிவினையுடன் கூடிய மையப்படுத்தப்பட்ட உற்பத்திப் பொறியமைவு இன்றியமையாதது. தனிநபர்களும், ஒப்பீட்டளவில் சிறு குழுக்களும் தமது தேவைகளைத் தாமே நிறைவு செய்து கொள்ளும் வாழ்க்கை நினைத்துப் பார்க்கும் போது சொர்க்கமாக இனித்தாலும், அது இனிமேல் திரும்பி வரப் போவதில்லை. மாறாக, இப்போது மனிதகுலம் இந்த பூமிக் கோளம் தழுவிய உற்பத்தி, நுகர்வு சமூகமாக உள்ளது என்று சொல்வது மிகையாகாது.
நமது காலத்தின் நெருக்கடியின் சாராம்சம் என்ன என்று சுருக்கமாக சுட்டிக் காட்ட வேண்டிய கட்டத்துக்கு நான் வந்திருக்கிறேன். தனிமனிதர் சமூகத்துடன் கொண்டிருக்கும் உறவைப் பற்றியது அது. சமூகத்தின் மீது தனது சார்பை மனிதர் முன்னெப்போதையும் விட அதிகமாக உணர்ந்திருக்கிறார். ஆனால், இந்தச் சார்பை ஒரு நேர்மறையான சொத்தாக உணராமல், ஒரு உயிரோட்டமான பிணைப்பாக உணராமல், தன்னைப் பாதுகாக்கும் சக்தியாக உணராமல், தனது இயற்கை உரிமைகளுக்கும், தனது பொருளாதார இருத்தலுக்கும் அச்சுறுத்தலாக அவர் பார்க்கிறார்.
மேலும், சமூகத்தில் அவர் வைக்கப்பட்டிருக்கும் இடம், அவரது உயிரியல் கட்டமைப்பில் உள்ளார்ந்து இருக்கும் தான் என்ற தன் முனைப்பு போக்கைத் தீவிரப்படுத்துகிறது. இயல்பாகவே பலவீனமாக இருக்கும் சமூக போக்குகளை, மேலும் மேலும் பலவீனப்படுத்துகிறது. சமூகத்தின் ஒவ்வொரு நிலையில் இருக்கும் மனிதர்களும் இந்தச் சீரழிவு நிகழ்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமது சொந்த அகந்தையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள அவர்கள் பாதுகாப்பற்றும், தனிமையாகவும் உணர்கிறார்கள்; ஒரு வகை அப்பாவித்தனமான, எளிமையான, பகட்டற்ற வாழ்வின் மகிழ்ச்சியை இழக்கிறார்கள். சமூகத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதன் மூலமாகவே குறுகிய, அபாயங்கள் நிரம்பிய தனது வாழ்க்கையின் உண்மையான பொருளை ஒரு மனிதர் கண்டு கொள்ள முடியும்.
இன்று நிலவும் முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார அராஜகம்தான் தீங்குகளின் உண்மையான மூலம் என்பது எனது கருத்து. பெரும் எண்ணிக்கையிலான உற்பத்தியாளர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் அவர்களது உழைப்பின் பலன்களை பறித்துக் கொள்ள தொடர்ந்து முயற்சிப்பதை நாம் காண்கிறோம். அவ்வாறு பறித்துக் கொள்வது வன்முறையின் மூலம் நடக்கவில்லை, சட்டரீதியாக நிறுவப்பட்ட விதிகளைக் கவனமாகக் கடைப்பிடிப்பதன் மூலமே நடக்கிறது. இதைப் பற்றி பேசும் போது, உற்பத்தி சாதனங்கள் – அதாவது, நுகர்வு பொருட்களையும், கூடுதல் எந்திர சாதனங்களையும் உற்பத்தி செய்வதற்கான ஒட்டு மொத்த உற்பத்தித் திறன் – சட்டப்படியாகவும், நடைமுறையிலும் தனியார் சொத்தாக உள்ளன என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.
விளக்குவதற்கு எளிமையாக இருக்கும் வகையில் பின்வரும் விவாதத்தில், உற்பத்தி சாதனங்களின் உடைமையில் பங்கு இல்லாத அனைவரையும் தொழிலாளர்கள் என்று நான் குறிப்பிடுகிறேன். அந்தச் சொல் வழக்கமாக இந்தப் பொருளில் பயன்படுத்தப்படுவதில்லை.
உற்பத்திச் சாதனங்களைச் சொந்தமாக வைத்திருப்பவர், தொழிலாளரின் உழைப்புச் சக்தியை வாங்கும் நிலையில் இருக்கிறார். உழைப்புச் சாதனங்களைப் பயன்படுத்தி தொழிலாளர் உற்பத்தி செய்யும் புதிய பொருட்கள் முதலாளியின் சொத்தாக மாறி விடுகின்றன. இந்த நிகழ்முறையின் சாராம்சமான விஷயம் என்னவென்றால் தொழிலாளர் உற்பத்தி செய்வதற்கும், அவர் பெறும் ஊதியத்துக்கும் இடையேயான உறவுதான். இரண்டுமே உண்மையான மதிப்பின் அலகுகளில் அளவிடப்படுகின்றன.
உழைப்பு ஒப்பந்தம், சுதந்திரமானதாக இருந்தாலும் தொழிலாளருக்குக் கிடைக்கும் வருமானம் அவர் உற்பத்தி செய்யும் பொருட்களின் உண்மை மதிப்பால் தீர்மானிக்கப்படுவதில்லை; மாறாக, அவரது குறைந்தபட்ச தேவைகளாலும், முதலாளிகளின் உழைப்பு சக்திக்கான தேவையை நிறைவு செய்ய போட்டி போடும் தொழிலாளர்களின் எண்ணிக்கையாலும் தீர்மானிக்கப்படுகின்றது. கோட்பாட்டில்கூடத் தொழிலாளருக்கான ஊதியம், அவர் உற்பத்தி செய்யப்படும் பொருளின் மதிப்பால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தனியார் மூலதனம் ஒரு சிலரிடம் குவியும் போக்கு காணப்படுகிறது. ஒரு பக்கம் முதலாளிகளுக்கிடையேயான போட்டி, இன்னொரு பக்கம் தொழில்நுட்ப முன்னேற்றமும், அதிகரிக்கும் உழைப்புப் பிரிவினையும் சிறு உற்பத்திக் கூடங்களை அழித்து விட்டுப் பெரும் தொழிற்சாலைகள் உருவாவதை ஊக்குவிப்பது இதற்குக் காரணமாகின்றன. இந்த வளர்ச்சிகளின் விளைவாக ஜனநாயகரீதியில் அமைப்பாக்கப்பட்ட அரசியல் சமூகத்தால்கூடக் கட்டுப்படுத்த முடியாத தனியார் மூலதன சிறு கும்பலின் சர்வாதிகாரம் தோன்றுகிறது.
சட்டமியற்றும் அவைகளின் உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; தனியார் முதலாளிகள் அவர்களுக்குப் பெருமளவு நிதி உதவி அளித்து அவர்கள் மீது தாக்கம் செலுத்துகின்றனர்; இதன் மூலம் அனைத்து நடைமுறை விஷயங்களைப் பொருத்தவரையில் வாக்காளர்களைச் சட்டமியற்றும் அவையிலிருந்து பிரித்து வைத்து விடுகின்றனர். இதன் விளைவு என்னவென்றால், மக்களின் பிரதிநிதிகள், மக்கள் தொகையின் நலிவுற்ற பிரிவினரின் நலன்களைப் போதுமான அளவு பாதுகாப்பதில்லை.
மேலும், தனியார் முதலாளிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தகவல் தொடர்பின் முக்கியமான ஊடகங்களான பத்திரிகைகள், வானொலி, கல்வி போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்றனர். எனவே, ஒரு தனிப்பட்ட குடிமகன் புறநிலையைச் சரியாக புரிந்து கொண்டு முடிவு எடுப்பதும் தனது அரசியல் உரிமைகளை அறிவுபூர்வமாகப் பயன்படுத்துவதும் பெரும்பாலான நேரங்களில் மிகக் கடினமாகவோ, அல்லது சாத்தியமற்றதாகவோ உள்ளது.
மூலதனத்தில் தனியுடைமை என்ற அடிப்படையிலான பொருளாதாரத்தில் நிலவும் நிலைமை இரண்டு முக்கிய கோட்பாடுகளை கொண்டிருக்கிறது : முதலில், உற்பத்திச் சாதனங்கள் (மூலதனம்) தனியாருக்குச் சொந்தமாக உள்ளன. அவற்றின் உடைமையாளர்கள் தம் விருப்பப்படி அவற்றைப் பயன்படுத்துகின்றனர். இரண்டாவதாக, உழைப்பு ஒப்பந்தம் சுதந்திரமானதாக உள்ளது.
இந்த வகையில் தூய்மையான முதலாளித்துவ சமூகம் என்ற ஒன்று நிச்சயமாக இல்லைதான். குறிப்பாக, தொழிலாளர்கள் நீண்ட, கடுமையான அரசியல் போராட்டங்களின் மூலம் குறிப்பிட்ட வகை தொழிலாளர்களுக்குச் “சுதந்திர உழைப்பு ஒப்பந்தத்தின்” மேம்பட்ட வடிவத்தைப் பெறுவதில் வெற்றியடைந்திருக்கிறார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இன்றைய பொருளாதாரம், “தூய்மை”யான முதலாளித்துவத்திலிருந்து பெருமளவு வேறுபடவில்லை என்று தெரிகிறது.
“உற்பத்தி இலாபத்துக்காகச் செய்யப்படுகிறது. பயன்பாட்டுக்காக இல்லை. “வேலை செய்ய திறமையும் விருப்பமும் உடைய எல்லோருக்கும் வேலை கிடைப்பதற்கு எந்த வழிவகையும் இல்லை; வேலை இல்லாதவர்களின் படை ஒன்று எப்போதுமே இருக்கிறது.
“எப்போது வேலை போகுமோ என்ற பயத்தில்தான் தொழிலாளர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.”
வேலையில்லாதவர்களும் குறைவான சம்பளம் பெறும் தொழிலாளர்களும் இலாபகரமான சந்தையாக அமைவதில்லை என்பதால் நுகர்வு பொருட்களின் உற்பத்தி மட்டுப்படுத்தப்படுகிறது; அதன் விளைவாக பெருமளவு சிரமங்கள் ஏற்படுகின்றன. தொழில்நுட்ப முன்னேற்றம், அனைவரது வேலைச் சுமையையும் குறைப்பதற்கு மாறாக, கூடுதல் வேலை இழப்பை உருவாக்குகிறது.
இலாப நோக்கமும், முதலாளிகளுக்கிடையேயான போட்டியும், மூலதனத்தை ஒன்று குவிப்பதிலும் பயன்படுத்துவதிலும் நிலையற்ற தன்மைக்குக் காரணமாக உள்ளது. இது கடும் பொருளாதார மந்தங்களுக்கு இட்டுச் செல்கிறது. கட்டற்ற போட்டி பெருமளவு உழைப்பை வீணாக்குவதற்கும் மேலே குறிப்பிட்ட தனிநபர்களின் சமூக உணர்வை முடக்கிப் போடுவதற்கும் இட்டுச் செல்கிறது.
தனிநபர்களை முடக்கிப் போடுவது, முதலாளித்துவத்தின் மிக மோசமான தீங்கு என்று நான் கருதுகிறேன். தமது எதிர்கால வாழ்க்கைப் பணிக்குத் தயாராகும் மாணவர்கள், பொருள் ஈட்டுவதில் அடையும் வெற்றியை வியந்து வழிபடும் மனோபாவத்தின் அடிப்படையிலான, ஒரு அதீதமான போட்டி மனப்பான்மைக்குப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.
இந்த சாகடிக்கும் தீங்குகளை ஒழித்துக் கட்டுவதற்கு ஒரே வழிதான் உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன். சமூக இலக்குகளை நோக்கியதான கல்வி முறையுடன் கூடிய ஒரு சோசலிச பொருளாதாரத்தை கட்டியமைப்பதுதான் அந்த வழி. அத்தகைய ஒரு பொருளாதாரத்தில் உற்பத்தி சாதனங்கள் சமூகத்துக்கு சொந்தமாக்கப்பட்டு, திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்படுகின்றன.
சமூகத்தின் தேவைகளுக்கேற்ப உற்பத்தியை முறைப்படுத்திக் கொள்ளும் ஒரு திட்டமிட்ட பொருளாதாரம், வேலை செய்ய திறன் உடைய அனைவருக்கும் வேலையைப் பகிர்ந்து கொடுத்து, ஒவ்வொரு ஆண், பெண், குழந்தைக்கும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும். ஒரு மனிதருக்கு வழங்கப்படும் கல்வி, அவரது உள்ளார்ந்த திறமைகளை வளர்ப்பதோடு, சக மனிதர்கள் மீதான பொறுப்புணர்வையும் வளர்க்கும். இப்போதைய சமூகத்தில் ஊக்குவிக்கப்படும் அதிகாரத்தையும் வெற்றியையும் வழிபடுவதற்கு மாற்றாக அது இருக்கும்.
இருப்பினும் திட்டமிட்ட பொருளாதாரம் மட்டுமே சோசலிசம் ஆகி விடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு திட்டமிட்ட பொருளாதார அமைப்போடு தனிநபரை முழுமையாக அடிமைப்படுத்துவது இணைந்திருக்கலாம். உண்மையான சோசலிசத்தைச் சாதிப்பற்கு மிகக் கடினமான சில சமூக-பொருளாதார பிரச்சனைகளுக்கு விடை தேட வேண்டியிருக்கிறது; அனைத்தும் தழுவிய அரசியல் பொருளாதார அதிகாரத்தின் மையப்படுத்தலை அமல்படுத்தும் போதே அதிகார வர்க்கம் சர்வாதிகாரம் படைத்ததாகவும், அனைத்துக்கும் மேலே தன்னை நிறுத்திக் கொள்வதாகவும் மாறுவதை எப்படித் தடுப்பது? தனிமனிதரின் உரிமைகளை எப்படிப் பாதுகாப்பது, அதன் மூலம் அதிகார வர்க்கத்தின் அதிகாரத்துக்கு ஒரு ஜனநாயக எதிர்சக்தியை உருவாக்குவதை எப்படி உறுதி செய்வது?
மாறிச் செல்லும் கட்டத்தில் இருக்கும் நமது காலத்தில் (1949-ல் எழுதியது) சோசலிசத்தின் நோக்கங்கள் குறித்தும் அது சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் தெளிவு ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இந்தப் பிரச்சனைகள் குறித்த சுதந்திரமான, தடையற்ற விவாதங்கள் முடக்கப்பட்ட இப்போதைய நிலைமைகளில்,(பார்க்க அடிக்குறிப்பு 2) இந்த பத்திரிகையை (monthly review) தொடங்குவது மிக முக்கியமான பொதுச் சேவை என்று நான் கருதுகிறேன்.
1. மிருகங்களை வேட்டையாடுவதைப் போல பிற இனங்களைச் சேர்ந்த மனிதர்களையும் வேட்டையாடுகின்ற ஒரு வர்க்கம், தன்னைத்தானே சமூகத்தின் காவலனாக நியமித்துக்
கொண்டு, சமூகத்தின் உழைப்பைச் சுரண்டி உல்லாசமாக வாழ்வதை வெப்லன் குறிக்கிறார். ஐன்ஸ்டைன் முதலாளித்துவத்தை அந்த வர்க்கத்துடன் ஒப்பிடுகிறார்.
2. இரண்டாம் உலகப்போருக்குப் பின் சோசலிச ரசியாவின் செல்வாக்கு உலகெங்கும் அதிகரித்திருந்த சூழலில், சோசலிசக் கருத்தை ஆதரித்தவர்கள் அனைவரையும் அமெரிக்காவின் எதிரிகள், ரசிய உளவாளிகள் என்று முத்திரை குத்தி ஒடுக்கியது அமெரிக்க அரசு. 1947-56 காலகட்டத்தில் தலைவிரித்தாடிய மெக்கார்த்தியிசம் என்றழைக்கப்பட்ட இந்த அடக்குமுறையில் சாப்லின், ஐன்ஸ்டைன் உள்ளிட்ட பலரும் குறிவைத்து மிரட்டப்பட்ட சூழலை அவர் குறிப்பிடுகிறார். இந்த அடக்குமுறைக்குப் பணிய மறுத்தார் ஐன்ஸ்டைன்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
உலக முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டவேண்டும். தவறினால், முதலாளித்துவத்துடன் சேர்ந்து மொத்த சமூகமும் இந்தப் புவிப்பரப்பும் அழிவை நோக்கச் செல்வதைத் தவிர்க்கவே இயலாது என்ற நிலையை எதிர் கொண்டிருக்கிறோம்.
2. தொழில்துறை முதலாளிகள் பிறந்த கதை !
முதலாளித்துவத்தின் தாயகமான இங்கிலாந்திலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் முதன்முதலில் தோன்றிய தொழில்துறை முதலாளிகள் என்ற வர்க்கத்தினரின் ஆதி மூலதனம் திரட்டப்பட்ட வரலாற்றை, அதாவது மூலதனத்தின் ரிஷி மூலத்தைத் தனது மூலதனம் நூலில் வெளிக்கொணர்கிறார் மார்க்ஸ்.
3. மூலதனத்தின் தத்துவஞானம் !
மார்க்ஸின் மூலதனம் ஒரு பொருளாதார ஆய்வு நூலா, வரலாற்று ஆய்வா, தத்துவஞானங்களின் ஆய்வு முறையிலிருந்து மார்க்சியம் எப்படி வேறுபடுகிறது, ஏன் வேறுபடுகிறது என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.
4. ஏன் சோசலிசம் ?
உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய இந்த கட்டுரை, அமெரிக்காவில், மன்த்லி ரிவியூ என்ற பத்திரிக்கையின் முதல் இதழில் ( மே 1949 ) வெளியிடப்பட்டது.
5. செங்கொடியைத் தாங்கி நின்ற செந்நிறச் சவப்பெட்டிகள் !
ரசிய சோசலிசப் புரட்சியின் நேரடி சாட்சியாக இருந்த அமெரிக்கப் பத்திரிக்கையாளர் ஜான் ரீடு எழுதிய “உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” என்ற நூலில், புரட்சியின் வெற்றி தோற்றுவித்த மகிழ்ச்சிக்கிடையே, உயிர் துறந்த தொழிலாளர்கள், படைவீரர்களின் உடல்களைச் செஞ்சதுக்கத்தில் அடக்கம் செய்த நிகழ்வினை விவரிக்கிறது இப்பகுதி. உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசை நிறுவுவதற்காகத் தம் இன்னுயிரை ஈந்த தியாகிகளின் இறுதி அஞ்சலியில் பங்கேற்க வாசகர்களை அழைக்கிறார் ஜான் ரீடு.
6. வளர்ச்சி உருவாக்கிவரும் சமூக ஏற்றத்தாழ்வு
தனியார்மயக் கொள்கைகள் அமலுக்கு வந்து இருபத்தைந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கண்ட பலனோ, மற்ற உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் சமூக ஏற்றத்தாழ்வு மிக வக்கிரமாக வளர்ச்சி அடைந்து கொண்டே செல்வதைத்தான்.
7. மதயானையை வீழ்த்திய சிற்றெறும்பு !
அவர்கள் முன்பு இரண்டு வாய்ப்புகள் தான் இருந்தன. ஒன்று, தமது வயல்களை, தோட்டங்களை போஸ்கோவிடம் பறிகொடுத்துவிட்டு, அகதிகளாக வெளியேறுவது. இல்லையென்றால், உயிருக்குத் துணிந்து போஸ்கோவை எதிர்த்தி நிற்பது. அவர்கள் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார்கள்.
8. ஜேப்படிக்கு நோபல் பரிசு !
முதலாளி வர்க்கத்தின் நலனுக்கு ஏற்ற வகையில், மக்களின் பொருளாதாரம் சார்ந்த நடத்தையை மாற்றியமைக்கும் தந்திரத்துக்குத்தான், நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், ஓபசமுத்திரம் கிராமத்தில் சுமார் 6 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். அக்கிராமத்தை சுற்றி 15 -க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக அந்த கிராமத்தின் பிரதான தொழில்களான மீன் பிடி தொழிலும், விவசாயமும் முற்றிலுமாக அழிந்து வருகிறது.அதுமட்டுமல்லாமல், நிலத்தடி நீர் முற்றிலும் கெட்டுப்போய், குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தற்போதைக்கு அக்கிராமத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நத்தம் கிராமத்திலிருந்துதான் குழாய் மூலமாக குடி தண்ணீர் பெற்று வருகின்றனர். தற்போதே இந்த நிலைமை என்றால், எதிர் வரும் காலத்தில் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை என்னவாகப்போகிறது? என உணர்ந்த கிராம மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக இறால் பண்ணைகளை அகற்றுவதற்கான போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இடைப்பட்ட காலத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுப்பது, வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுப்பது, உண்ணாவிரதம், சாலை மறியல் உள்ளிட்ட அனைத்து வடிவங்களிலும் போராட்டங்களை நடத்திவிட்டனர். அரசு அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியப்படுத்தியுள்ளனர். மக்களின் போராட்டத்தால் மிகுந்த நெருக்கடிக்கு ஆட்படும்போது, அரசு அதிகாரிகள் பெயரளவிற்கு கிராமத்தில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதியளித்து சென்றுள்ளனர்.
அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இறால் பண்ணைகளை அகற்றியே ஆகவேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் 2016 -ம் ஆண்டு பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக வருவாய் கோட்டாட்சியர் திரு.நாராயணன்அவர்கள் இறால் பண்ணைகளை அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உத்தரவு பிறப்பித்தது மட்டுமல்லாமல் கிராமத்திற்கே வந்து இறால் பண்ணை உரிமையாளர்களை அழைத்து “உடனடியாக இறால் பண்ணைகளை அகற்றவேண்டும்; இல்லாவிட்டால் அரசு நிர்வாகமே அந்த வேலையை செய்யும், அதற்கான அபராதமும் விதிக்கப்படும்” என எச்சரிக்கை செய்துள்ளார். இதனால் கிராம மக்கள் தங்கள் போராட்டம் வெற்றியடைந்ததாக நினைத்து மகிழ்ச்சியடைந்தனர். பின்னர்தான் தெரிந்தது அது வெரும் கண்துடைப்பு, ஏமாற்று என்று!.
இன்றளவும் இறால் பண்ணைகள் அகற்றப்படவில்லை. மாறாக நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை கிராம மக்கள் அவமானமாக கருதினர். இதே நிலை நீடித்தால் தங்களது வாழ்நாளிலேயே, தமது சந்ததிகள் வாழ்வாதாரத்தை இழந்து அடுத்தவனிடன் கையேந்தும் நிலை ஏற்பட்டுவிடும் என்கிற அச்சம் உண்டானது.
ஓபசமுத்திரம் இறால் பண்ணை அழிப்பு போராட்டதில் கைது செய்து ரீமான்டு செய்யப்பட்ட பெண்.
இனி அரசு அதிகாரிகளை நம்பி பயனில்லை என உணர்ந்த கிராம மக்கள் கடந்த 29.10.2017 அன்று கிராம கூட்டத்தை கூட்டி இறால் பண்ணை உரிமையாளர்களுக்கு, பண்ணையை அகற்றுவதற்கு ஒரு வாரம் கெடு விதித்து தீர்மானம் நிறைவேற்றினர். இருந்தபோதிலும் இறால் பண்ணை உரிமையாளர்கள் ‘தமக்கு ஆதரவாக அரசு அதிகாரிகளும், போலீசும் இருக்கும்போது நாம் ஏன் கவலை கொள்ளவேண்டும், மக்களால் என்ன செய்துவிட முடியும்’ என அலட்சியமாக இருந்துவிட்டனர். ஆனால், அதற்கு மாறாக சொன்னபடியே 05.11.2017 அன்று கிராம மக்கள் ஒன்றுகூடி தங்கள் சொந்த அதிகாரத்தை கொண்டு இறால் பண்ணைகளை அகற்றும் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.
பாதிப்படைந்த பண்ணை உரிமையாளர்கள் போராட்டத்தில் முன்னணி வகித்த பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, ஆரம்பாக்கம் போலீசு நிலையத்தில் 11 பேர் மீது பொய் புகாரும் கொடுத்துள்ளனர். காவல் துறையும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளது. இந்த அரசு நமக்கு உதவாது என தங்கள் சொந்த அனுபவத்தில் உணர்ந்துள்ள ஓபசமுத்திர கிராம மக்கள் என்ன நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளுர் (கிழக்கு). தொடர்புக்கு : 94444 61480
2017 – கார்ல் மார்க்ஸின் மூலதனம் வெளியிடப்பட்டதன் நூற்று ஐம்பதாவது ஆண்டு. ரசிய சோசலிசப் புரட்சியின் நூறாவது ஆண்டு. சீனத்தின் மாபெரும் கலாச்சாரப் புரட்சிக்கும் இந்தியாவின் நக்சல்பாரி எழுச்சிக்கும் இது ஐம்பதாம் ஆண்டு.
பல்வேறு கற்பனாவாத சோசலிசப் போக்குகள் கோலோச்சிய ஒரு காலத்தில், முதலாளி வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு ஒரு வலிமையான தத்துவ ஆயுதத்தை வழங்கினார் மார்க்ஸ். தொழிலாளி வர்க்க இயக்கத்துக்குள் தோன்றிய பொருளாதாரவாதம், இடது சாகசவாதம், தேசவெறி ஆகியவற்றுக்கு எதிராகப் போராடிப் பாட்டாளி வர்க்கப் புரட்சியை வெற்றிக்கு இட்டுச் சென்றார் லெனின்.
பின் தங்கிய விவசாய நாட்டில் புரட்சியைச் சாதித்தது மட்டுமின்றி, சோசலிச சமூகத்திலும் முதலாளித்துவ மீட்சி சாத்தியமே என்று எச்சரித்து, அதனை எதிர்த்துப் போராடுவதற்குத் தொழிலாளி வர்க்கம் நடத்த வேண்டிய கலாச்சாரப் புரட்சியையும் நடத்திக் காட்டினார் மாவோ, ஏகாதிபத்தியத்துடன் சமாதான சகவாழ்வு என்ற சமரசவாத அரசியலிலிருந்தும், நாடாளுமன்றச் சரணடைவுப் பாதையிலிருந்தும் இந்திய கம்யூனிஸ்டு இயக்கத்தை மீட்டு புரட்சிப் பாதைக்குக் கொண்டு வந்தது நக்சல்பாரி எழுச்சி.
இவையனைத்தும் இடையறாமல் தொடர்ந்து வரும் வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றுப் பதிவுகள். இப்போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம் பின்னடைவுக்கும் தோல்விக்கும் உள்ளாகியிருக்கிறது என்பதன் பொருள் முதலாளி வர்க்கம் அறுதி வெற்றி பெற்று விட்டது என்பதல்ல.
ஆனால், அப்படி ஒரு பிரமையை ஏற்படுத்தவே உலக முதலாளி வர்க்கம் தொடர்ந்து முயற்சிக்கிறது. தனது மூலதனம் நூலின் மூலம் அந்தப் பிரமையைத் தகர்த்தெறிந்தார் மார்க்ஸ். வரலாற்றின் குறிப்பிட்ட கட்டத்தில் முதலாளித்துவம் எப்படித் தோன்றியது என்பதையும், தனது உள் முரண் பாடுகள் காரணமாக அது அழிவை நோக்கிச் செல்வது ஏன் தவிர்க்கவியலாதது என்பதையும் அறிவியல்பூர்வமாக நிறுவினார்.
உலகப் போர்களும் புரட்சிகளும், தேச விடுதலைப் போராட்டங்களும், முதலாளித்துவப் போட்டியும், சுரண்டலும் தோற்றுவித்த தவிர்க்கவியலாத விளைவுகள்தான். அவற்றைத் தற்செயல் நிகழ்வுகளாகக் காட்டுவதன் மூலம்தான் சாகாவரம் பெற்று விட முடியும் என்று மனப்பால் குடிக்கிறது சர்வதேச மூலதனம்.
மீட்சியே இல்லாமல் தொடரும் உலகப் பொருளாதார நெருக்கடியும், அதன் விளைவாக அமெரிக்கா முதல் இந்தியா வரையிலான பல நாடுகளில் வெடித்துக் கிளம்பும் மக்கள் போராட்டங்களும் உலக முதலாளித்துவக் கட்டமைவு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்குச் சான்று கூறுகின்றன. கடுமையான கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தில் மூழ்கடிக்கப்பட்டிருந்த அமெரிக்க, ஐரோப்பிய இளம் தலைமுறையினர் மத்தியிலேயே இந்த நெருக்கடி, மார்க்சியத்தை நோக்கிய ஈர்ப்பைத் தோற்றுவித்திருக்கிறது.
உலக முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டவேண்டும். தவறினால், முதலாளித்துவத்துடன் சேர்ந்து மொத்த சமூகமும் இந்தப் புவிப்பரப்பும் அழிவை நோக்கிச் செல்வதைத் தவிர்க்கவே இயலாது என்ற நிலையை எதிர் கொண்டிருக்கிறோம்.
முதலாளித்துவ அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கட்டமைவுகளின் தோல்வி மறைக்கவே முடியாத அளவுக்கு மக்களிடம் அம்பலமாகி வருவதால், ஆளும் வர்க்கங்களே புதிய மீட்பர்களை இறக்கி விடுகின்றன. பாசிஸ்டுகள், இனவெறியர்கள், சாதிவெறியர்கள் முதல் அரசியல் கோமாளிகள் வரையிலான பலரும் மக்களைத் திசை திருப்ப அரசியல் களத்தில் நிற்கிறார்கள்.
இந்நிலையில் இளம் தலைமுறை தொழிலாளி வர்க்கத்தினரிடையே மார்க்சியத்தைக் கொண்டு செல்வது காலத்தின் தேவை. இதனைக் கருத்தில் கொண்டே இந்த இதழைக் கொண்டு வந்திருக்கிறோம்.
மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையகம் முன் வன்முறையில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி. – ஆர்.எஸ்.எஸ். கும்பலை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு அலுவலகத்தின் முன்பு ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏ.பி.வி.பி. பொறுக்கிகள் மார்க்சிஸ்ட் கட்சிக் கொடியையும் கேரள முதல்வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயனின் புகைப்படத்தையும் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனை காவல் துறை அனுமதித்தது மட்டுமன்றி அவர்களை பெயருக்கு நான்கு பிரிவுகளில் வழக்கு போட்டு உடனே விடுவித்தும் உள்ளது. இச்செயலை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது
பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகளான சங்கப் பரிவாரங்கள் அனைத்தும் சமூகத்தின் நச்சுக்களை தின்று வன்முறையை தூண்டுவதிலேயே குறியாய் இருக்கின்றன. இவற்றின் அடையாளம் வன்முறையும் பிற்போக்குத்தனமும் ஏகாதிபத்திய அடிமைப்புத்தியும் ஆகும். பிற்போக்குத்தனத்தையும் ஏகாதிபத்திய அடிமைதனத்தையும் நாம் கேள்விக்குள்ளாக்கினால் அதனை வன்முறையாக எதிர்கொள்வதும், அந்த வன்முறையை எதிர்த்தால் அதனை பெரும் கலவரமாக மாற்றுவதுமே இவர்களின் செயல்முறையாக இருக்கிறது.
இதற்கு முன்பாக கோவை மார்க்சிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தின் மீது வி.ஹெச்.பி. பொறுக்கிகள் பெட்ரோல் குண்டு வீசினார்கள். இவ்விரு சம்பவங்களும் ஒரு சில மாதங்களுக்குள் நடந்துள்ளன. ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் இம்மாதிரியான சம்பவங்கள் பெரும் வன்முறையை எதிர்நோக்கிய சிறு பொறிகள் இதில் பாரதிய ஜனதாவின் தேர்தல் பலாபலன்களும் ஒரு பகுதி பாஜக அரசின் வருமான வரி மற்றும் இதர துறைகளின் மூலம் அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துவிட்ட ஆளும் அதிமுக அரசும் அதன் காவல்துறையும் இந்த அயோக்கியத்தனத்திற்கு உடந்தையாக இருப்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.
ஆகையினால், இந்த ஒருங்கிணைக்கப்பட்ட வன்முறையை ஒரு பரந்த முற்போக்கு ஜனநாயக சக்திகளின் ஐக்கிய முன்னணி மூலமே எதிர்க்க முடியும்! விழ்த்த முடியும்! அதற்கான அபாய மணியாக இச்சம்பவத்தை எடுத்துக் கொண்டு அணியமாவோம் என அறைகூவி அழைக்கிறோம்.
விளவை இராமசமி
மாநில துணைத் தலைவர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கோவை. தொடர்புக்கு : 90924 60750.
தமிழகம் முழுக்க டெங்குவால் பலர் இறந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்திலும் கூட எடப்பாடி அரசும், நகராட்சியும் பொது சுகாதாரத்தைப் பற்றி எள்ளளவும் அக்கறை காட்டாமல் இருந்து வருகிறது.
விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் மழையின் காரணமாக பேருந்துநிலையம் முழுவதும் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசியது. பேருந்துநிலையத்துக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் மூக்கை பொத்திக் கொண்டு கடந்து செல்லும் நிலையே இருந்தது. இதனை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்ற வகையில், கடந்த 3.11.2017 அன்று விருத்தாச்சலம் பேருந்துநிலைத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக அங்குள்ள வணிகர்களை அணிதிரட்டி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக பொதுமக்களும் இணைந்தனர். பின்னர் மக்களின் போராட்டமானது சாலை மறியலாக மாறியது. அதன் பின்னர் போலீசு வந்து பேச்சு வார்த்தை நடத்தியது.
“உடனடியாக பேருந்துநிலையத்தில் உள்ள சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய வேண்டும் இல்லையென்றால் சுத்தம் செய்யும் வரை போராட்டம் தொடரும்.” என தோழர்களும் பொதுமக்களும் உறுதியாக கூறினர்.
அதன்பின் போலீஸ் தரப்பில் “5 நிமிடம் பொறுத்துக் கொள்ளுங்கள், உடனடியாக சுத்தம் செய்து தருகிறோம்” என உறுதிமொழி அளித்தார்கள். பின்னர் பேருந்து நிலையத்தைச் சுற்றி முழக்கமிட்டு பேரணியாக சென்ற போது அங்கு கூடியிருந்த மக்கள் மற்றும் பயணிகள் நமது போராட்டத்துக்கு ஆதரவு அளித்தனர்.
பின் நகராட்சி ஊழியர்கள் வந்து கொசு மருந்து அடிப்பது, குப்பைக் கழிவுகளை அகற்றுவது மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிப்பது என சுகாதாரப்பணிகளை செய்தனர்.
மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற வக்கில்லாத இந்த அரசை மக்கள் போராட்டங்களே பணியவைக்கின்றன. உங்கள் ஊரில், உங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வு போராட்டங்களே!
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
கார்ட்டூனிஸ்ட் பாலா கைது தொடர்பான விவாதங்கள் அனைத்தும், பாலா வரைந்தது கருத்துரிமையின் வரைமுறைக்கு உட்பட்டதா அல்லது, அல்லது மீறியதா என்ற அளவில் தான் விவாதிக்கப்படுகின்றன. பாலா கைது விவகாரத்தில் பேசப்பட வேண்டியது, பாலாவின் கார்ட்டூன் அம்பலப்படுத்திய அமைப்பின் தோல்வி குறித்த பிரச்சினையா இல்லை கருத்துரிமை குறித்த பிரச்சினையா? மூலப் பிரச்சினையை மறைத்து விட்டு கருத்துரிமையை முன் வைத்து விவாதங்கள் நடத்தப்படுவதையும் அதற்கு முற்போக்காளர்கள் பலியாவதையும் குறித்து தோழர் மருதையன் உரையாற்றுகிறார்
நீரில் மூழ்கிய பள்ளிக்கரணை: தூங்கி வழியும் மாநகராட்சி – களத்தில் இறங்கிய மக்கள் அதிகாரம் !
வட- கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்ததால், சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
பன்னாட்டு கம்பெனிகள், ஷாப்பிங் மால்கள், பொறியியல் கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள் ஆகிய வளர்ச்சியின் அடையாளங்களாக சொல்லப்படும் இவைதான், தமிழகம் முழுவதும் நீர்வழி பாதைகளையும், நீர் நிலைகளையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இதன் விளைவு தண்ணீர் வெளியேற வழியில்லாமல், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
நிரம்பி வழியும் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி
அப்படி பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான பள்ளிக்கரணை நாராயணபுரம் அண்ணாநகர் மேற்கு பகுதிக்கு உட்பட்டு மொத்தம், 10 தெருக்களில் 6,7,8,9 ஆகிய தெருக்களில் முழங்கால் அளவு முதல் இடுப்பு அளவு வரை தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக மேற்கண்ட பகுதியில் நிவாரணப் பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது இந்த அரசின் கடமை என்பதை விளக்கும் விதமாகவும் மக்களிடம் பேசப்பட்டது.
அப்பகுதி மக்கள் “மூன்று நாட்களாக மழை கொட்டியது, எங்களை அரசு – கட்சிக்காரங்க யாரும் எட்டி பார்க்கவில்லை. நீங்கள் வந்து பார்த்ததே ஆறுதலாக உள்ளது”என்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக, உணவு, தண்ணீர் ஏற்பாடு செய்ய, ஆபீஸ் மேடம் (office madam) – 8778814966, AE – 9445190788 ஆகிய அரசு அதிகாரிகளின் எண்களுக்குத் தொடர்பு கொண்ட போது, போனை அணைத்துவிட்டனர் (Switch off). மேலும் சுகாதார கண்கானிப்பாளர் (Health inspector) 9445190074 எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது, உரிய ஏற்பாடுகளைச் செய்வோம், ஒரு மணி நேரத்தில் தொடர்பு கொள்ளுமாறு (4.11.2017 மாலை, 6:45) கூறினார் சம்பந்தப்பட்ட அதிகாரி. மீண்டும் தொடர்பு கொண்ட போது, இவருடைய தொலைபேசியும் அணைக்கப்பட்டிருந்தது.
கள நிலவரம் இவ்வாறு இருக்க, மழை நிவாரண வேலைகளுக்கு துறைவாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், துறை சார்ந்த அதிகாரிகளிடத்தில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அரசு விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு எதிராக அரசு நடந்து வருகிறது என்பது தான் உண்மையாகும்.
கடந்த 2015 -ம் ஆண்டைப் போல தொடர்ச்சியாக கனமழை பொழியாமல், சற்று இடைவெளி விட்டு பெய்த மழையால், தண்ணீர் வெளியேற இயற்கை வாய்ப்பளித்துள்ளது. ஆனாலும் நீர் வழிதடங்கள் அனைத்தும் முதலாளிகள் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் தண்ணீர் வெளியேற வாய்ப்பு இல்லாமல் மக்கள் தத்தளித்து வருகின்றனர். இது பள்ளிக்கரணை நாராயணபுரம் பகுதியில் மட்டுமல்ல, சென்னையின் பல இடங்களிலும் பார்த்தாலே தெரியும் உண்மையாகும்.
வட கிழக்கு பருவ மழை பெய்வது என்பது இயற்கை! ஆனால் எடப்பாடி அரசு இன்னமும் நீடிப்பது இயற்கைக்கே எதிரானது என்பதுதான் கள நிலைமைகள் உணர்த்தும் உண்மை. இந்த உண்மையினை மக்களிடம் கொண்டு செல்வோம்…
கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்ததைக் கண்டித்து தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்!
கந்துவட்டி கொடுமைக்கு இசக்கிமுத்து குடும்பத்தையே பலி வாங்கிய இந்த அரசை கண்டித்து கார்ட்டூன் வரைந்த பாலா அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 06.11.2017 (இன்று) தமிழகத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மதுரையில்…
இசக்கிமுத்து மரணத்திற்கு காரணமான நெல்லை எஸ் பி, கலெக்டர் மற்றும் எருமைத்தோல் எடப்பாடியை கைது செய்! கார்ட்டூனிஸ்ட் பாலாவை நிபந்தனையின்றி விடுதலை செய் ! என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம், மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இருபது தோழர்கள் கைது செய்யப்பட்டு மதுரை திலகர் திடல், காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
திருச்சியில்…
கந்து வட்டி – போலிஸ் – கலெக்டர் கொடுமையால் தீயில் கருகியது இசக்கிமுத்துவின் குடும்பம் ! இந்த அக்கிரம அராஜகங்களுக்கு முடிவுகட்டுவோம் !! கார்டூனிஸ்ட் பாலாவை விடுதலை செய்! என்ற முழக்கத்தின் கீழ் திருச்சி மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
விருத்தாச்சலத்தில்…
மக்கள் அதிகாரம் சார்பில் விருத்தாச்சலம் பகுதியில் கார்ட்டூனிஸ்ட் பாலாவை விடுதலை செய்! என்ற முழக்கத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
நாட்டில்
நீங்கள் நடத்தும் ஆபாசத்தை
கோட்டில் வரையும் அளவுக்கு
கூசாத இதயம்
எங்களுக்கு இல்லை.
எங்கள் கையில் இருப்பது
கண்ணாடி தான்
பிம்பம் உங்களுடையது.
ஆபாசமாய் இருப்பதாய்
அரற்றுவதால் தான் சொல்கிறோம்
கேலிக்குரியதாக்குவது
நீங்களே!
கொட்டாங்கச்சியில்
கொஞ்சம் நீர் இருந்தாலே
டெங்குவிற்கு நீங்கள்தான்
காரணம் என்று
தண்டம் விதித்தவர்கள்,
குடிசைக்குள் தண்ணீர் நிற்கும் அளவுக்கு
தெண்டமான உங்கள் ஆட்சியை
கேள்விகேட்டால்
”மழை என்றாலே
தண்ணீர் தேங்கத்தான் செய்யும்”
என்கிறீர்கள்.
இதைவிடவா ஒரு அருவருப்பை
கார்ட்டூனில் காட்ட முடியும்?
நிவாரணம் கேட்டு
நிர்வாணமாக ஓடினான் விவசாயி.
வெடித்த நிலம் பார்த்து
நெஞ்சு வெடித்துச் செத்தான்,
அதையும்,
சொந்தப் பிரச்சனைக்காக செத்தான்!
என்றீர்கள்,
இந்த ஆபாசத்தை வரைவதற்கு
எந்த கார்ட்டூனிஸ்ட்டால் முடியும்?
கார்ட்டூன் மேல் வந்த கோபம்
கந்துவட்டி மேல் வரவில்லையே!
கருகிய மழலையைக் கண்டவுடன்
‘யானே கள்வன் என்று!’
நெஞ்சு வெடித்து சாக
நீங்கள் என்ன சிலப்பதிகார பாண்டியரா!
ஊருக்கே தெரியும்
உங்கள் உத்தமம்!
நெல்லையில் கந்து வட்டிக் கொடுமையால் தீயில் கருகிய குழந்தையை கலெக்டர், கமிசனர், எடப்பாடி ஆகிய மூவரும் அம்மணமாக நின்று வேடிக்கை பார்ப்பது போல் கார்ட்டூன் படம் வரைந்த பத்திரிகையாளர் பாலாவை மாவட்ட ஆட்சியர் அளித்த சந்தீப் புகாரின் பேரில் நெல்லை போலீசார் இன்று 5-11-2017 காலை கைது செய்துள்ளனர். வீட்டிலிருந்த கம்ப்யூட்டர், செல் போன், கீ போர்டு என அனைத்தையும் போலீசார் குற்றத்தை நிருபிக்க பறிமுதல் செய்து எடுத்துச் சென்று விட்டனர். படம் வரைந்ததை பாலா மறுக்கவில்லை. தமிழக மக்கள் அனைவரும் ”இந்த படத்தில் என்ன தப்பு இருக்கு ?”என்று கேட்கிறார்கள்.
இசக்கிமுத்துவின் மரணம் கிரிமினல்மயமான தோற்றுப்போன இந்த அரசு கட்டமைப்பின் மீது தொடுக்கப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல். இதன் மூலம் அதிகார வர்க்கம் தங்களை நியாயப்படுத்த முடியாமல் அம்மணமாகி நின்றது. இதுதான் பாலாவின் கார்ட்டூன்.
நான்கு பேர் அநியாயமாகத் தீயில் கருகியது குற்றமாகத் தெரியவில்லை. கலெக்டர், கமிசனர், எடப்பாடியை அம்மணமாக பாலா படம் வரைந்தது தான் குற்றமாகத் தெரிகிறது. இந்த அக்கிரம அராஜகங்களுக்கு முடிவு கட்டுவது எப்போது?. மக்கள் பிரச்சினைகளால் வெடிக்க காத்திருக்கும் தமிழகத்தை எந்தத் திரி பற்ற வைக்கும் எனத் தெரியவில்லை. அனிதா மரணத்திலும், டெங்கு மரணத்திலும், சென்னை வெள்ளத்திலும் சிக்கிய அதிமுக அரசு இப்போது கருத்துரிமையில் கை வைத்துச் சிக்கியிருக்கிறது.
“கந்துவட்டிக்காரன் மிரட்டுகிறான் காப்பாற்றுங்கள்” என ஆறு முறை குடும்பத்தோடு நெல்லை கலெக்டரிடம் மனு கொடுத்தார் இசக்கி முத்து. எந்தத் தீர்வும் இல்லை. மாவட்ட ஆட்சியரை நம்பினால் இனி மானத்தோடு வாழ முடியாது என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டு 23-10-2017 அன்று தனது இரு குழந்தைகள் உட்பட குடும்பத்தோடு தீ வைத்துக் கொளுத்திக் கொண்டார்.
இதைக் கேட்டாலே ஈரக் குலை நடுங்குகிறது. அனைவரும் பார்த்து நெஞ்சம் பதறினோம். கார்டூனிஸ்ட் பாலா படம் வரைந்தார். இனியும் வரைவார். அது நமது உரிமை. கந்துவட்டிக் கொடுமைக்கு எதிராக இசக்கிமுத்து பற்ற வைத்த தீ இன்று தமிழகம் முழுவதும் பரவுகிறது. எடப்பாடி அதிமுக அடிமை அரசிற்கு சுதந்திரம், ஜனநாயகம், மானம், சுயமரியாதை என எதுவும் கிடையாது. ஆனால் ’மானம் போச்சு’ என்றுதான் வழக்கு பதிவு செய்யபட்டிருக்கிறது.