Saturday, June 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 575

புதுவை பல்கலையில் மாட்டிறைச்சி போராட்டம் – ஆர்.எஸ்.எஸ் அடாவடி

7

மாட்டிறைச்சி உண்டால் மரண தண்டனை–மறையாத மனு நீதிக்கு முடிவுகட்டுவோம்!

  • புதுவை பல்கலைக்கழக மாணவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்
  • ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க காலிகளின் அடாவடி
  • மாணவர்களின் பதிலடி!

மாட்டிறைச்சி உண்டார் என்ற பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி உத்திர பிரதேச மாநிலம் தாத்ரியைச் சார்ந்த முகமது அக்லாக் என்ற முஸ்லிமை அடித்து கொன்றுள்ளது இந்துத்துவ கும்பல். கடந்த செப்டம்பர் 28-ம் தேதி இரவு அவர் வீடு புகுந்த ஒரு கும்பல் அக்லாக் மற்றும் அவரது மகன் தானிஷை வீட்டிலிருந்து தரதரவென இழுத்து வெளியே போட்டுத் தாக்கியதில் அக்லாக் உடல் சிதைந்து இறந்துள்ளார், அவரது மகன் கடுமையாகக் காயமடைந்துள்ளார்.

புதுவை பல்கலைக் கழகம் மாட்டுக்கறி போராட்டம்
நாம் “மாடு தின்போர்” என்று உரக்கச் சொல்வோம்!

மாட்டுக்கறி உண்பவர்கள் என்ற காரணத்திற்காகவே இவ்வாறான பல்வேறு வன்முறைகளும் கொலைவெறித் தாக்குதல்களும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நித்தமும் அரங்கேறி வருகின்றன. இவ்வன்முறைகளில் உயர்சாதி இந்துக்களை ஈடுபடுத்தி அவர்களை இசுலாமிய மக்களுக்கு எதிராக நேரடியாகவும், தலித் மக்களுக்கு எதிராக மறைமுகமாகவும் அணிதிரட்டி வருகிறது இந்தியாவை ஆளும் இந்துத்துவ கும்பல்.

ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் உழைக்கும் மக்களை மதரீதியில் பிளவுபடுத்த ஓர் ஆயுதமாக மாட்டுக்கறி பயன்படுத்தப் படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது, நம் உணவு எதுவாக இருக்கவேண்டும் என்பதை ஒரு சிறு கூட்டம் தீர்மானிக்க அனுமதிக்க முடியாது!

புதுவை பல்கலைக் கழகம் மாட்டுக்கறி போராட்டம்
மாட்டுக்கறியின் பெயரால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இந்துவெறிக்கு முடிவுகட்டுவோம்!

“மாடுதின்னும் புலையர்” என்று இதே மாட்டுக்கறியின் பெயரால்தான் வரலாறு நெடுகிலும் கோடானகோடி தலித் மக்களும் ஆதிவாசிகளும் தீண்டாமைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். தற்போது அதே ஆயுதம் சிறுபான்மையினருக்கு எதிராக சாதி இந்துக்களை அணிதிரட்ட ஏவப்படுகிறது.

  • தீண்டாமையையும் சாதி வேற்றுமையையும் காத்துநிற்கும் இந்துமதத்தைப் புறக்கணிப்போம்!
  • நாம் “மாடு தின்போர்” என்று உரக்கச் சொல்வோம்!
  • தலித் மக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான இந்துவெறிப் பாசிசத்தை அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் பிறந்த இந்த நாட்டிலிருந்து துடைத்தெறிவோம்!
  • மாட்டுக்கறியின் பெயரால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இந்துவெறிக்கு முடிவுகட்டுவோம்!

என்ற முழக்கங்களை முன்வைத்து புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் ஒருங்கிணைத்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 13 அக்டோபர் 2015 அன்று பல்கலைக்கழகத்தின் இரண்டாவது நுழைவாயில் முன்பாக நடைபெற்றது. இதில் பெருந்திரளான மாணவர்களும், முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர அமைப்புகள் / கட்சிகளின் பிரதிநிதிகளும் எழுச்சியுடன் பங்கேற்றனர்.

புதுவை பல்கலைக் கழகம் மாட்டுக்கறி போராட்டம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விடுதலைச் சிறுத்தைகள், தலித் அமைப்புகள், இடதுசாரி அமைப்புகள், மற்றும் பெரியார் அமைப்புகளின் தோழர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் ஆனந்தன், பல்கலைக்கழக ஆய்வாளர் சத்தியராஜ் உள்ளிட்ட மாணவர்கள் ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இம்முன்னணியாளர்களும், பிற மாணவர்கள் பலரும் கண்டன உரையாற்றினர்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விடுதலைச் சிறுத்தைகள், தலித் அமைப்புகள், இடதுசாரி அமைப்புகள், மற்றும் பெரியார் அமைப்புகளின் தோழர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர். இவ்வார்ப்பாட்டத்தின் இறுதியில் கூடியிருந்த அனைவருக்கும் மாட்டுக்கறி வழங்கப்பட்டது. அனைவரும் மாட்டுக்கறியை உண்டு சாதி ஒடுக்குமுறை, பார்ப்பனக் காவிகளின் சிறுபான்மையினருக்கு எதிரான இந்து மதவெறி ஆகியவற்றிற்கு எதிரான தமது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

இதுபற்றி அறிந்த இந்து காவி வெறியர்கள் அடுத்தநாள் (14 அக்டோபர் 2015) அதே இடத்தில் மாட்டுக்கறிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தி மாட்டுக்கறி விருந்து நடத்திய மாணவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வசைபாடினர். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க., ஏ.பி.வி.பி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் காலிகள் திரண்டு தலித் மற்றும் முசுலீம் மக்களை மிக மோசமான, அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர்.

“மாட்டக் கொல்றதுக்கு உங்க அம்மாவக் கொல்லுங்கடா!” என்றும், “இந்த தலித் முஸ்லீம் பசங்க எங்க கோமாதாவ கொன்னா, நாங்க அவுங்களக் கொல்வோம்!” என்றும் பேசியது அக்கும்பல். இதுதான் பாரம்பரியம் மிக்க இந்து மதத்தின் பண்பாடு என்பதை நன்கு உணர்த்துவதாக இருந்தது அந்த இந்து வானரங்களின் வசைமொழிகள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அப்போது அங்கு திரண்டு அவர்களின் பேச்சுக்கு எதிராக முழக்கமிட்ட மாணவர்களைத் தடுத்து நிறுத்தி இந்து வெறியர்களின் காலுக்குச் செருப்பாய்ச் செயல்ப்பட்டது போலீசு. மாட்டுக்கறி உண்ணும் தலித் மக்களை இழிவுபடுத்தியும், நேரடியாக மிரட்டியும் பேசிய காவிக் கிரிமினல்களுக்கு எதிராக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவுசெய்யவேண்டிய காவல்துறை, “அவன் இன்னிக்கு மைக் போட்டுத் திட்டுறான், நீ நாளைக்கு திருப்பித் திட்டு. நான் இப்போ அவன ஏன் இப்டி பேசுற-னு கேக்க முடியாது.” என்று வெட்கமில்லாமல் கூறியது.

புதுவை பல்கலைக் கழகம் மாட்டுக்கறி போராட்டம்அதனைத் தொடர்ந்து ஒரு கொந்தளிப்பான சூழல் வளாகத்தில் உருவானது, 16 அக்டோபர் அன்று மீண்டும் தொடர் முழக்க ஆர்பாட்டம் நடத்துவது என்று முடிவுசெய்தனர் மாணவர்கள். இதனை ஒட்டி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி புதுவைப் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து கீழ்க்காணும் முழக்கங்களைக் கொண்ட சுவரொட்டிகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் வளாகத்தினுள்ளும் புதுவை நகர் முழுவதிலும் ஒட்டப்பட்டன:

“The saffron snake sneaking to poison Pondicherry University!

Govt. of Pondicherry and Police!

  • Arrest the RSS & BJP saffron fanatics who made shabby remarks on the basis of caste and religion against the students of Pondicherry University who came out in support of the nutritious and working class food of beef!

Students and people of working class!

  • Let us root out the RSS and ABVP Hindu fascists trying to polarise the united students of PU belonging to various faiths and cultures on caste and communal lines!
புதுவை பல்கலைக் கழகம் மாட்டுக்கறி போராட்டம்
தடையை மீறி தொடர்முழக்கப் போராட்டம்

It is absolutely ridiculous for the Brahmins who consumed bulls and horses during Yagas to advocate beef-banning!

Let us give a fitting reply to the saffron fascists who issued murder threats against the beef-eating Dalits and Muslims!”

மாணவர்களின் வேகத்தையும் எழுச்சியையும் கண்டு மிரண்டுபோன போலீசு அனுமதி மறுத்தது, போராட்டம் எதுவும் இதுகுறித்து இருதரப்பிலும் நடத்தக் கூடாது என்று கூறியது. இதனை ஏற்க மறுத்த மாணவர்கள் தடையை மீறி தொடர்முழக்கப் போராட்டம் நடத்தத் தயாராகினர்.

செயலில் இறங்கிய போலீசு, இரவோடு இரவாக ஒலிபெருக்கி வைக்கவோ வேறந்த ஏற்பாடுகளும் செய்யவோ முடியாதபடி அனைத்தையும் தடுத்தது. திட்டமிட்டபடி மாணவர்கள் 16-ம் தேதி காலை கூடி ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர்.

ஆங்கிலத்தில் சுவரொட்டிகளைப் படித்த காஷ்மீர், மராத்தி, வட இந்திய மாணவர்களும் தமிழ் மாணவர்கள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இந்துவெறியை முறியடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எழுச்சியுடன் பேசினர். புரட்சிகர அமைப்புகளின் தோழர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தமது ஆதரவை மாணவர்களுக்கு நல்கினர்.

செய்வதறியாது திகைத்த போலீசு உடனே கலைந்துசெல்லும்படி மிரட்டிப் பார்த்தது. மாணவர்கள் முடியாது என்று மறுத்து கைதுசெய்துகொல்லுமாறு கூறவே சற்று பின்வாங்கி பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருந்த அதே சமயத்தில் தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தி முடிக்கப்பட்டது!

காஷ்மீரி மற்றும் பிற வட இந்திய மாணவர்கள் தமிழ் மாணவர்களோடு இணைந்து இன, மொழி எல்லைகளைக் கடந்து நடந்த எழுச்சிகரமான போராட்ட நிகழ்வாக இது அமைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதுவை அமைப்புக்குழு.

கருப்பு மை மிரட்டல் – காவி ரவுடிகளை எதிர் கொள்வது எப்படி ?

2
gnani
பத்திரிகையாளர் ஞாநி

புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் பத்திரிகையாளர் ஞாநி மீது கருப்பு மை வீசுவேன் என்று மிரட்டியுள்ளது ஒரு கூலிப்படை இந்துத்துவ வானரம்.

புத்தக வெளியீட்டு நிகழ்வில் கருப்புமை வீசுவது, கிரிக்கெட் சங்கத்தில் மிரட்டுவது போன்ற சிவசேனா கட்சியினரின் சமீபத்திய ‘லீலைகள்’ குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒரு விவாதம் நடைபெற்றது. தமிழகத்தில் அரசியல் அனாதையாக இருக்கும் இந்துத்துவா கும்பலை மக்களிடம் பிரபலப்படுத்தும் புதியதலைமுறை, தந்தி தொலைக்காட்சிகளின் வழக்கப்படி இவ்விவாதத்திற்கும் தமிழக சிவசேனா பிரமுகர் என்று ஏதோ ஒரு கூமுட்டையை அழைத்திருந்தனர்.

இவ்விவாதத்தில்தான் “இந்துத்துவத்திற்கு எதிராக பேசினால் ஞாநி மீதும் மை வீசுவோம்” என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது அந்த வானரம். சிவசேனாவைச் சேர்ந்த இதன் பெயர் ராதாகிருஷ்ணனாம். ஆயிரக்கணக்கானோர் பார்க்கும் ஒரு ஊடகத்தில், காமிராவின் முன்னால், வில்லன் போன்றதொரு உடல் மொழியில் வன்முறையில் ஈடுபடுவேன் என்று அந்த ஜன்மம் பேசுவது இங்கே கவனிக்கத்தக்கது.

ஏதோ பெயர் தெரியாத கட்சிக்காரனின் சவடால் பேச்சு என்று இதை ஒதுக்கித் தள்ள முடியாது. இத்தகைய ஊர் முகவரி இல்லாத ஜந்துகள்தான் தற்போது இந்தியாவெங்கும் பொதுவெளியில் மிரட்டல்களை செய்கின்றனர். இதற்கு அரசும், ஆர்.எஸ்.எஸ்ஸும் ஆசி அளிக்கின்றன. கல்புர்கியையும், பன்சரேவையும் கொன்ற சனாதன் சன்ஸ்தாவை எத்தனை பேருக்கு தெரியும்?. அவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களா? அல்லது மக்களிடம் செல்வாக்கு இருக்கிறதா என்பதல்ல பிரச்சனை. காலம் காலமாக எதிர்க்குரலை நசுக்கியே பழக்கப்பட்ட பார்ப்பனிய சித்தாந்தம் அவர்களின் சிந்தையில் இருக்கிறது. அதை ஆளும் வர்க்கம் அங்கீகரித்திருப்பதால் சிந்தையில் ஏறிய சித்தாந்தம் வன்முறையாக வெளியே தெறிக்கும் போது இவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது.

பேரழிவு ஆயுதங்களைவிட கொடிய பார்பனிய பயங்கரவாதம், ‘தங்களுடைய ஆட்சி மலர்ந்துவிட்டது இனி தங்களை கேட்பதற்கு யாருமில்லை’ என்ற சூழலில் அதன் திமிர் பன்மடங்கு அதிகரிக்கிறது. அதுதான் தாத்ரியிலும், ஹரியானாவிலும், திருச்செங்கோட்டிலும், புதிய தலைமுறை அரங்கத்திலும் எதிரொலிக்கிறது.

பிரச்சார இயக்கம் போஸ்டர்-3
பாசிஸ்டுகளை போர்க்குணமிக்க முறையில் எதிர்க்க வேண்டும் – 2103-ம் ஆண்டின் சுவரொட்டி

கொலையே செய்தாலும் தங்களை தண்டிக்க முடியாது என்ற இவர்களது நம்பிக்கையை போலீசும், நீதிமன்றங்களும் ஜனநாயகத்தின் இதர தூண்களும் பாதுகாக்கின்றன. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்துகொள்ளும்படி தனக்கு அழுத்தம் தரப்பட்டதாக பகிரங்கமாக அம்பலப்படுத்தினார் அரசு வழக்கறிஞர் ரோஹினி சலியன். தாங்கள் இஸ்லாமியர்களை கொன்றதையும், பாலியல் வன்முறை செய்ததையும், அப்போதைய குஜராத் மோடி அரசு வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் சரிக்கட்டி தன்னை காப்பாற்றியதையும் காமிராவின் முன்னால் பேசினார் பாபு பஜ்ரங்கி. அப்பாவி அப்சல் குருவை தூக்கில் போட்ட இந்திய நீதித்துறை குற்றவாளி பாபு பஜ்ரங்கியை நலமாக பராமரிக்கிறது.

2002 குஜராத் படுகொலை வழக்கில் குற்றவாளியான அமித்ஷா உள்ளிட்ட பலருக்கும், அரசு வழக்கறிஞருக்கும் மற்றும் ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்திக்கும் இடையே நடந்த மின்னஞ்சல் பரிமாற்றங்களை நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தினார் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட். அரசு அதிகாரிகளும் ஆர்.எஸ்.எஸ்-ம் எத்தனை ஆயிரம் இழைகளால் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதில் அமித்ஷாவிற்கு எதிராக வாதாட வேண்டிய அரசு வழக்கறிஞர் அமித்ஷாவுக்கு ஆதரவான குருமூர்த்தி மற்றும் அவரது வழக்கறிஞர் ஜெத்மலானியோடு சேர்ந்து வாதங்களை முன்வைக்கிறார், கலந்தாலோசிக்கிறார்.

அதாவது அமித்ஷாவுக்கு எதிராக தான் தாக்கல் செய்ய வேண்டிய பதில் மனுவை ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்திக்கு அனுப்பி சரிபார்க்க சொல்கிறார், அரசு வழக்கறிஞர். திருத்தங்கள் செய்த குருமூர்த்தி அதை அமித்ஷாவின் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானிக்கு அனுப்பி மீண்டும் ஒரு முறை சரி பார்க்கக் கூறுகிறார். இதைக் கேட்டு உச்சநீதிமன்றம் பதறவில்லை. “குற்றம் சாட்டப்பட்டவரும், அரசும் கூட்டுசதியா” என்று கவலைப்படவில்லை. குறைந்தபட்சம் நித்யானந்தா கூறியது போல போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணம் என்று கூட மழுப்ப முயற்சிக்கவில்லை. மாறாக, “மூன்றாம் நபரிடம் கருத்து கேட்பது சட்டத்தில் தடைசெய்யப்படவில்லை, அதனால் குருமூர்த்தியிடம் கருத்து கேட்டது சரிதான்” என்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்; நீதிமன்றத்தை நாடிய சஞ்சீவ் பட்டை குற்றவாளியாக்குகிறது. இது குறித்து சஞ்சீவ் பட்டின் வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் இ-மெயில்ஆதாரங்களை பகிரங்கமாக வெளியிட்டு தீர்ப்பை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்.

இந்து மதவெறியர்களை போலீஸ் காப்பாற்றுவதும், போலிஸ் விட்டுவிட்டால் நீதிமன்றமே முன்வந்து அவர்களை காப்பாற்றுவதும், இத்தனையும் மீறினால் பாராளுமன்றம் அவர்களை காப்பாற்றுவதும்தான் இங்கு நடைமுறையாக உள்ளது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இது தான் நடைமுறை. சனாதன் சன்ஸ்தாவை தடை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டதும், அப்சல் குருவை தூக்கிலிட்டதும் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

sliderஇந்திய ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை தோற்றுவிக்கும் அதிகாரம் தான் சிவசேனாவின் வாள்களாகவும், கருப்பு மையாகவும், சனாதன் சன்ஸ்தாவின் துப்பாக்கி தோட்டாக்களாவும் வெளிவருகின்றன. கூடவே கட்சியில் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளவும், முன்னேறவும் பெரிய சம்பவங்களை அரங்கேற்ற வேண்டிய தேவையும் பல்வேறு வானரப்படை ஜந்துக்களுக்கு இருக்கிறது. ஆயிரக்கணக்கில் கொலை செய்தால் கட்சித் தலைவர் பதவி, நூற்றுக்கணக்கில் செய்தால் அமைச்சர் பதவி கிடைப்பது உறுதி.

அத்வானிகளும், அமித்ஷாக்களும், மோடிகளும் கட்சித் தலைவராகவும், பிரதமராகவும், மும்பை கலவரத்தில் விசாரணை கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட பால்தாக்கரே அரச மரியாதையோடு சமாதியானதும், முசாபர் நகர கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மத்திய அமைச்சர்களாக இருப்பதும் சமீபத்திய சான்றுகள்.

இதே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து போலீசில் புகார் செய்து, நீதிமன்றங்கள் மூலம் தண்டித்து, அதன் மூலம் இந்துமத வெறியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி அவர்களின் வன்முறையை அடக்கிவிடலாம் என்று முயல்வது கொக்குதலையில் வெண்ணெய் வைத்து பிடிப்பதற்கு ஒப்பானது.

ஆனால், ஞாநியோ அந்த அளவிற்கு கூட செல்லவில்லை. புதிய தலைமுறை நிறுவனத்திடம் நியாயம் கேட்டு புகார் செய்திருக்கிறார். அவர்கள் சரியான முடிவெடுப்பார்கள் என்று நம்புவதாக அப்புகார் கடிதத்தின் இறுதியில் அவரே கூறுகிறார். இன்று வரை பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் பாரிவேந்தர் பச்சமுத்துவின் வியாபார சாம்ராஜ்யத்தில் ஒன்று தான் புதிய தலைமுறை. ஒரு வேளை வெண்ணெய் உருகி கொக்கின் கண்ணை மறைக்கும் போது ஞாநி வெற்றி பெறலாம். வானரங்களையும், கூலிப்படைகளையும் புதிய தலைமுறை தொலைக்காட்சி அழைத்து வருவது ஒன்று, நிர்வாகம் சார்ந்தது. அதன்படி கூட்டணிகட்சி தலைவரான பச்சமுத்து தனது இந்திய அளவிலான தொழில் விரிவாக்கத்திற்கு இத்தகைய “பிரைம் டைம்” பிச்சைகளை இந்துமதவெறி கும்பலுக்கு போடவேண்டும். பதிலுக்கு அந்த கும்பல் இவருக்கு தொழில் பிச்சையை போடும். இப்படி பரஸ்பர ஆதாயம் உள்ளது. இரண்டாவது, இத்தகைய கூலிப்படை கோஷ்டிகளை கூட்டி வந்து இப்படி மிரட்டுவதால் தமது சானலின் ரேட்டிங் எகிறும் என்பது. அதே நேரம் இத்தகைய மிரட்டலை இந்துமதவெறியர்கள் விடுவது போலத்தான் அவர்கள் அனுமதிக்க முடியும்.

தாலி குறித்த விவாதத்தில் வானரங்கள் வகை தொகையே இன்றி அட்டூழியங்கள் செய்தாலும் ஒரு பத்திரிகை நிர்வாகம் என்ற முறையில் கூட புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எள்ளளவும் கோபமோ, தார்மீக உணர்வோ வரவில்லை. அங்கே பணியாற்றும் ஊழியர்களோ, செய்தியாளர்களோ தமது பாதுகாப்பிற்கு கூட நிர்வாகத்தை நம்பியிருக்க முடியாத சூழ்நிலை. இதில் தனது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வேண்டும் என்று பச்சமுத்துவின் மகனுக்கு கடிதம் எழுதுகிறார் ஞாநி. ஏன்? மோடிக்கே எழுதலாமே?

கடந்த பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் ஞாநிக்கு பின்வருமாறு எழுதியிருந்தோம். மீண்டும் நினைவூட்டுகிறோம்.

“இத்தகைய மதவெறி பாசிஸ்ட்டுகளை எதிர்த்த போராட்டம் தெருவிலும், மக்கள் களங்களிலும் சித்தாந்த ரீதியிலும், போர்க் குணமிக்க முறையிலும் நடக்க வேண்டும். இதன்றி இவர்களை வேரறுக்க வேறு வழியில்லை. அப்படி இருப்பதாக ஞாநி போன்றவர்கள் காட்டும் ‘ஜனநாயக’ நம்பிக்கைதான் அபாயகரமானது.”

இதனால் ஞாநி போன்றவர்கள் கம்புச்சண்டை போடவேண்டும் என்று பொருளில்லை. ஆனால் இந்துமதவெறியை வளர்த்து பாதுகாக்கும் ஊடகங்கள், அரசு, நீதிமன்றம், போலிசு மேல் அவரைப் போன்றவர்கள் கொண்டிருக்கும் மாயைதான் ஆர்.எஸ்.எஸ்-இன் பலம்.

அமைப்பு ரீதியில் கட்டமைக்கப்பட்டு நாடெங்கிலும் பல ஆயிரக்கணக்கான ஷாகாக்களுடன் அடிமுதல் நுனி வரை மதவெறியூட்டப்பட்டு இந்துமதவெறியர்கள் செயல்படுகிறார்கள். இவர்களை எப்படி வீழ்த்துவது என்று ஜனநாயக சக்திகள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

மேலும் படிக்க:

குற்றக் கும்பல்களின் காவலர்களாக போலீசு !

0

டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா ‘தற்கொலை’ : குற்றக் கும்பல்களின் காவலர்களாக போலீசு!

னிதர்களின் கழுத்தைக் கடித்து இரத்தம் குடிக்கும் வக்கிர டிராகுலாவாகிய கிரிமினல் குற்றக் கும்பலின் நெருங்கிய கூட்டாளிதாம் போலீசார் என்பதற்கு கண்முன்பாக வெளிவந்திருக்கும் சான்றுகள்: கோகுல்ராஜ் மற்றும் விஷ்ணுப்பிரியா சாவுகள் குறித்த  திருச்செங்கோடு வழக்குகள்; மேலூர், கீழவளவு – சின்னமலம்பட்டி கிராமத்தில் சட்ட ஆணையர் சகாயம் குழுவினர் தோண்டத் தோண்ட வரும் நரபலி செய்யப்பட்டவர்களின் பிணங்கள்- எலும்புக் கூடுகள். கோகுல்ராஜ்-அவருக்கு முன்பு இளவரசன், விஷ்ணுப்பிரியா-அவருக்கு முன்பு முத்துக்குமாரசாமி, கீழவளவு கிரானைட் கொள்ளைகளுக்கு நடுவில் நடந்த நரபலிக் கொலைகள் மட்டுமல்ல, மணற்கொள்ளைகளுக்கு இடையே நடக்கும் கொலைகள் – இவற்றுக்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டிய போலீசார் மட்டுமல்ல, நீதிமன்றங்களும்  அநேகமாக அனைத்து அரசுத் துறைகளும் ஆட்சியாளர்களும் குற்றவாளிகளின் காவலர்களாகவும் கூட்டாளிகளாகவும் செயல்படுகிறார்கள்.

விஷ்ணுபிரியா
‘தற்கொலை’ செய்து கொண்ட போலீசு துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுப்பிரியா

இத்தகைய போக்குகள் ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் நெருக்கடிகளில் சிக்கி, நிலைகுலைந்து, நாட்டுக்கும் மக்களுக்கும் எதிர்மறைச் சக்திகளாக மாறிப்போயுள்ளதையும் அது சமூத்துக்கே மாபெரும் அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் விளங்குவதையும் காட்டுகின்றன. இந்த உண்மையை கோகுல்ராஜ், விஷ்ணுப்பிரியா சாவுகள் குறித்த  திருச்செங்கோடு வழக்குகள் மற்றும் கிரானைட் கொள்ளை-நரபலிக் கொலைகள் துலக்கமாக வெளிப்படுத்தியிருக்கின்றன. இந்த விவகாரங்கள் தொடர்பான அன்றாட நிகழ்வுகளைப் பரபரப்பூட்டும் தகவல்களாகவும் கிசுகிசுக்களாகவும் வெளியிட்டு வியாபாரம் பார்ப்பதோடு ஊடகங்கள் பெரும்பாலும் நின்றுவிடுகின்றன. இந்த விவகாரங்கள் எல்லாம் நிலவும் அரசியல், சமூக சீரழிவின் வெளிப்பாடுகள்தாம். இவற்றுக்கான அடிப்படைகளை ஆழமாக ஆய்வு செய்து, தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் அரசியல், சமூக சிந்தனையாளர்கள்கூட ஈடுபடுவதில்லை.

“பணி நெருக்கடி, குறிப்பாகப் பெண்களுக்கு எதிராக மேலதிகாரிகளின் நிர்ப்பந்தம், மன அழுத்தம் போன்றவை காரணமாக விஷ்ணுப்பிரியா தற்கொலை” நேர்ந்துவிட்டது என்ற மேலெழுந்தவாரியான ஆராய்ச்சிகளில் மக்கள் மூழ்கடிக்கப்படுகிறார்கள். இலஞ்ச-ஊழல், வசூல்வேட்டை, அதிகார முறைகேடுகள், சாதி ஆதிக்கம், இயற்கை வளக் கொள்ளை, இலாபவெறி முதலானவற்றை நோக்கமாகக் கொண்ட இறுக்கமான வலைப் பின்னலாக அரசுக் கட்டுமான அமைப்பு செயல்படுகிறது. அதனுடன் ஒத்துப்போக முடியாதவர்கள், குறிப்பாக அரசுப் பணிகள் மக்கள் சேவைக்கான உன்னதமானவை என்று உருவாக்கப்பட்டிருக்கும் பொய்த் தோற்றத்தை நம்பும் புதிய அலுவலர்கள் பலியாக்கப்படுகிறார்கள்.

‘விஷ்ணுப்பிரியா தற்கொலை’க்குக் காரணமானவர் என்று கை காட்டப்படுபவர் அவரது மேலதிகாரி நாமக்கல் எஸ்.பி.செந்தில்குமார். விஷ்ணுப்பிரியா மரணச்செய்தி எட்டிய உடனே இரவு ஏழு மணிக்குள் அவர் தூக்கில் தொங்கிய அறைக்குள் புகுந்த செந்தில்குமார் உள்ளேயிருந்தவர்கள் அனைவரையும் வெளியே விரட்டிவிட்டார். தற்கொலை செய்துகொண்டவரின், அதுவும் ஒரு உயர் போலீசு அதிகாரியின் உடலை மீட்கும் போது போலீசார் கட்டாயம் செய்திருக்க வேண்டிய கடமை – அதை வீடியோவாகப் பதிவு செய்திருக்க வேண்டும். அப்படிப் பதிவு செய்ய வந்த போலீசு வீடியோ பதிவாளரை அதெல்லாம் வேண்டாமென்று வெளியேற்றிவிட்டு, செய்தி ஊடகத்தாரையும் உள்ளே விடாமல் தடுத்துவிட்டார். தற்கொலை செய்து கொண்டவர் ஒரு உயர் அரசு அதிகாரி ஆதலால், முதலில் ஒரு ஆர்.டி.ஓ. அல்லது வட்டாட்சியர் வரவழைக்கப்பட்டிருக்க வேண்டும். இவை எதையும் செய்யாமல் அந்த அறைக்குள் தனக்கு விசுவாசமான ஒரு போலீசுக்காரரை மட்டும் வைத்துக்கொண்டு வேறு சில வேலைகளைச் செய்திருக்கிறார். தூக்கை அறுத்து சடலத்தைக் கீழேபோட்டு புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். விஷ்ணுப்பிரியா எழுதிய கடிதம், என அவரது செல்போன்கள், மடிக்கணினி, கேமரா முதலானவற்றைக் கைப்பற்றிக் கொண்டுள்ளார். கடிதத்திலிருந்த தான் சம்பந்தப்பட்ட பக்கங்களை மறைத்திருக்கிறார். அதன் பிறகுதான், போலீசு டி.ஐ.ஜி., ஐ.ஜி. முதலானோர் வந்திருக்கிறார்கள். குற்றவாளிகளைத் தப்புவிக்கும் நோக்கில், அரசே, யாரும் கோராமலேயே தனக்கும் மிகவும் விசுவாசமானதும் செந்தில்குமாரின் நெருங்கிய சகாக்களைக் கொண்டதுமான சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்திரவிட்டது. சி.பி.சி.ஐ.டியோ, வழக்குக்கு அவசியமான ஆதாரங்களை எல்லாம் நீக்கிவிட்டு, சிலநாட்களுக்குப் பிறகு நீதிமன்றத்தில் மேற்படிப் பொருட்களைத் தாக்கல் செய்துள்ளது.

சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்திரவிட்ட கையோடு, அந்த மாவட்டத்தில் விஷ்ணுப் பிரியாவுக்கு உதவியாகப் பணியாற்றி வந்த ஏ.டி.எஸ்.பி. சேவியர் பிரான்சிஸ் பெஸ்கி உட்பட சில போலீசார் வேறு இடத்துக்குத் தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்கள். போலீசுக்கேயுரிய கிரிமினல் புத்தியோடு, குற்றவாளிகளைத் தப்புவிக்கும் நோக்கில் முக்கிய ஆதாரங்களை அழித்ததோடு, கைக்கூலி ஊடகங்களைக் கொண்டு பொய்யான வதந்திகள் பரப்பப்படுகின்றன. எல்லாக் கோணங்களிலும் புலனாய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு திசைதிருப்பும் வகையில் வழக்கு முடுக்கி விடப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் மீதே, குறிப்பாக, பெண்களானால் அவர்கள் மீதே  பழிபோட்டு, அவதூறுகளும் வதந்திகளும் பரப்பி, குணக்கேடு விளைவிக்கும் போலியான, கோமாளித்தனமான சாட்சியங்களை சோடிக்கும் வழக்கமான, போலீசு உத்திகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசு ஈடுபடுகிறது.

சட்ட ஆணையர்  சகாயம்
சட்ட ஆணையர் சகாயத்திற்கு வந்த “சோதனை”! : சின்னமலம்பட்டி கிராமத்தில் நரபலியிடப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் படுத்துறங்கும் சகாயம்.

விஷ்ணுப்பிரியா விசாரித்து வந்த வழக்குகளில் முக்கியமானது கோகுல்ராஜ் கொலை வழக்கு மட்டுமல்ல, குமாரபாளையம் தொழிலதிபர் ஜெகந்நாதன் கொலை வழக்கும் அடங்கும். அதில் இரண்டு ஆளும் கட்சி அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இந்த இரு கொலைகளையும் செய்தது தூத்துக்குடியைச் சேர்ந்த பாயாசம் எனப்படும் பேச்சிமுத்து தலைமையிலான கூலிக்கொலை கும்பல்தான். அக்கும்பல் விஷ்ணுப்பிரியாவைக் கொல்லவும் முயன்றிருக்கிறது. ஜெகந்நாதன், கோகுல்ராஜ் கொலை வழக்குகளையும் விசாரிக்கும் பொறுப்பில் இருந்த விஷ்ணுப்பிரியாவை அவற்றுக்குக் காரணமான குற்றவாளிகளோடு, வேறுபிற சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுவரும் குற்றவாளிகளையும் நெருங்கவிடாமல் மேலதிகாரியான செந்தில்குமார் தடுத்து, நெருக்கடிகள் கொடுத்து வந்தார். இத்தகைய புகார்கள் நம்பத்தகுந்தனவாக இருந்தும் இவை மீது, இந்தக்கோணங்களில் இந்தக் கூலிக்கொலைக் கும்பலையும் சாதிவெறிக் கொலைக் கும்பலையும் பிடிப்பதிலோ, இவற்றின் கூட்டாளியான செந்தில்குமாரைத் தீர்க்கமாக விசாரிப்பதிலோ சி.பி.சிஐ.டி. போலீசு பாரிய அக்கறை காட்டவோ இல்லை.

செந்தில்குமாருக்கு மாமியார் வீட்டு மரியாதைகளுடன் உபசரிப்புகள் காட்டிய அதே சமயம், ‘விஷ்ணுப்பிரியா தற்கொலை’க்கு காரணம் காதல் விவகாரங்கள்தாம் என்பதற்கான ஆதாரங்களை சோடிப்பதிலே சி.பி.சிஐ.டி. போலீசு முனைப்புக் காட்டுவது அனைவரும் அறிந்த பகிரங்கமான உண்மை. ‘விஷ்ணுப்பிரியாவின் காதலர்கள்’ என்று சித்தரிக்கப்படுபவர்கள், போலீசு மிரட்டலுக்குப் பயந்து தலைமறைவாக இருக்கும் சிவகங்கை கோயில் குருக்கள் விஜயராகவன், மதுரை வழக்கறிஞர் மாளவியா. விஷ்ணுப்பிரியா இவ்விருவரிடம் தொலைபேசியில் அடிக்கடி பேசினார் என்பது போலீசு கூறும் ஆதாரம். (இப்படித்தான் கர்நாடகாவில் அதிகாரி ரவி மரண வழக்கில் போலீசு இட்டுக்கட்டிய புளுகுமூட்டை அம்பலப்பட்டுப் போனது.) செந்தில்குமார் மீது புகார் கூறிய மாளவியா, கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரி ஆகியோரிடமிருந்து விசாரணை என்ற பெயரில் பொய்யான வாக்கு மூலங்களைப் பெறவும் ஆதாரங்களைப் பறித்துக் கொள்ளவும்தான் போலீசு  எத்தனித்தது. ஜெயா-சசி சொத்துக் குவிப்பு வழக்கில் பிறழ் சாட்சியம் முதல் பவானி சிங் நியமனம் ஈறாக ஜெயாவின் பொறுப்பிலுள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசு செய்த தில்லுமுல்லுகள் எல்லோரும் அறிந்ததே. அதனால்தான் தனக்கு முக்கியமான வழக்குகளை, தமக்கு விசுவாசமான சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் ஜெயா-சசி கும்பல் ஒப்படைக்கிறது. அதேபோன்று அக்கும்பலுக்கு விசுவாசமான சாதியின் வாக்கு வங்கியையும் அதன் பிரதிநிதிகளான தனது இரு அமைச்சர்களையும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியைப் போலத் தனக்காக வசூல் வேட்டைகளை நடத்தும் எஸ்.பி. செந்தில்குமாரையும் காப்பதற்காகவே சி.பி.சி.ஐ.டி.யிடம்  இந்த வழக்குகள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. இந்த விசாரணை மூலம் நீதி கிடைக்கும் என்று அரசியல் முட்டாள்கள்தாம் நம்புவார்கள்.

– ஆர்.கே.
_________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
_________________________________

பத்து நாள் ஜெயில்ல இருந்தா என்ன ?

8

“பத்து நாள் ஜெயில்ல இருந்துட்டுப் போனா என்ன குடிமுழுகிடப் போகுது…!” – போராட்டம் ஏற்படுத்திய மாற்றங்கள்

“டாஸ்மாக்கை மூடு” என்ற முழக்கத்துடன் கடந்த ஆகஸ்ட் 3 அன்று சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி நடத்திய போராட்டத்தில் அக்கல்லூரிக்கு அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடை அடித்து நொறுக்கப்பட்டது. அப்போராட்டத்தில் பங்கேற்று, சாராய பாட்டிலை உடைத்ததற்காக 38 நாட்கள் புழல் சிறையிலடைக்கப்பட்டிருந்த 13 மாணவர்கள் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

டாஸ்மாக் போராட்டம் - சிறை சென்ற மாணவர்கள்
சிறை சென்ற மாணவர்கள்

சிறை சென்றவர்களில் செல்வம், தினேஷ், நினைவேந்தன் ஆகியோர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்; கனிமொழி சட்டக்கல்லூரி மாணவி; நிவேதிதா, வாணிசிறீ, ஜான்சி ஆகியோர் ராணிமேரிக் கல்லூரி மாணவிகள்; மாரிமுத்து பள்ளி மாணவர்; மணி ஐ.டி.ஐ. மாணவர்; சாரதி, ஆசாத், திருமலை மற்றும் ரூபாவதி ஆகியோர் பு.மா.இ.மு. அமைப்பின் முன்னணியாளர்கள். போராட்டம், போலீசின் அடக்குமுறை, சிறை அனுபவம் குறித்து அவர்களுடன் கலந்துரையாடினோம்.

“டாஸ்மாக் கடையை இழுத்து மூடனும்ற உணர்வோடதான் போராட்டத்துல கலந்துகிட்டேன். ஆனா, ஜெயில்ல போடுவாங்கனெல்லாம் நினைக்கல. ஜெயிலுக்குள்ள வந்த முத நாளே அழுதிட்டேன். தோழர்கள் புத்தகம் படித்து விவாதிப்பதும் அமைப்பு பாட்டு பாடிகிட்டும், மத்த கைதிங்ககூட அரசியல் பேசிகிட்டும் இயல்பா இருந்தாங்க. இவங்களால மட்டும் எப்படி இருக்க முடியுதுன்னு யோசிச்சேன்…” என்கிறார், பச்சையப்பன் கல்லூரி மாணவரான தினேஷ்.

“யார்கூடவும் சகஜமாக பேசமாட்டேன்; பத்து மணிவரைக்கும்கூட வீட்டுல தூங்குவேன். ரேஷன் அரிசியில சமைச்சிருந்தா மூனு நாளானாலும் சாப்பிடாம அடம்பிடிப்பேன். புக் படிக்கற பழக்கமே இருந்ததில்லை. ஆனா, ஜெயிலுக்கு வந்தப்பிறகு எல்லாமே மாத்திகிட்டேன்…” என்கிறார், பச்சையப்பன் கல்லூரி மாணவரான நினைவேந்தன்.

“ஜெயில்ல அம்மா வந்து என்னை பாத்தப்ப வீட்டை காலி பண்ணவச்சிட்டாங்கனு சொல்லி அழுதாங்க. அப்போ மனசு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சி” எனும் மாரிமுத்து, மதுரவாயல் அரசு மேநிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர். அப்பாவின் ஆதரவில்லாத குடும்பம் அவருடையது. கல்லூரி செல்லும் அக்கா; பத்தாம் வகுப்பு பயிலும் தம்பி; சிற்றாள் வேலை செய்து ஒற்றை ஆளாய் நின்று மொத்தக் குடும்பத்தையும் காப்பாற்றும் தாய். மூன்றுமாதங்களாக வீட்டுவாடகை செலுத்தவியலாத அளவுக்கு வாட்டும் குடும்ப வறுமை. எந்நேரமும் வீட்டைக் காலி செய்து வீதியில் துரத்தியடிக்கப்படலாம் என்ற நெருக்கடியான அந்தச் சூழலிலும் மனம்தளராமல் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்றவர் மாரிமுத்து.

மணி
மணி

“இந்த சமூகத்தில் பெண்கள் போராட வருவதே அரிது. அமைப்பு கற்றுக்கொடுத்த அரசியல் உணர்விலிருந்து இளம்பெண்களாக இருந்தபோதிலும் நாங்கள் போராட்டக் களத்தில் முன்னிற்கிறோம். இப்போராட்டங்களின் பொழுது, எங்களை கைது செய்ய முயன்ற போலீசார் மாணவிகளாகிய எங்களிடம் அருவருக்கத்தக்க முறையில் நடந்து கொண்டனர். கண்ட இடங்களில் கையை வைத்து எங்களைத் தூக்குவதும், உடைகளைக் கிழித்துவிடுவதும், பேண்ட் நாடாவை அவிழ்த்துவிடுவதும் என சொல்ல நாக்கூசும் அளவிற்குக் கீழ்த்தரமான முறையில்தான் எங்களை போலீசார் நடத்தினர்.” என்கிறார் சட்டக்கல்லூரி மாணவியான கனிமொழி.

“ஏட்டய்யாவ பத்தி எஸ்.ஐ. கிட்ட கம்ப்ளைண்ட் பன்னினா என்ன ரெஸ்பான்ஸ் இருக்குமோ, அதுமாதிரித்தான், போலீசோட டார்ச்சர பத்தி ஜட்ஜ் கிட்ட சொன்னப்பவும் இருந்துச்சி. போலீசு அடிச்சாங்கன்னு சொன்னா, ‘அடிச்சு கை-கால் உடைஞ்சிருச்சா, இல்ல இரத்தம் வந்திச்சான்னு’ எங்களையே திருப்பிக் கேட்குது கயல்விழின்னு எழும்பூர் ஜட்ஜ். காக்கிச் சட்டை போட்ட போலீசும், கருப்பு கோட்டு போட்ட நீதிபதியும் எங்களுக்கு ஒன்னாதான் தெரிஞ்சாங்க…” என்கிறார் ராணிமேரிக் கல்லூரி மாணவியான வாணிசிறீ.

“மூனுநாள்ல வெளிய வந்திருவோம்னுதான் முதல்ல நினைச்சோம். அப்புறம் ஒருமாசம்கூட ஆகலாம்னு தெரிஞ்சப்ப, கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்திச்சி…” என்று ராணிமேரிக்கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு பயிலும் மாணவி ஜான்சி சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்த, அவரது சீனியரான நிவேதிதா, “பொய் கேசு போட்டு போலீசு ஸ்டேசன்ல மூனு நாளா முழுநிர்வாணமா வச்சே கொடுமைப்படுத்துனாங்கன்னு ஒரு பெண் கைதி தனக்கு நேர்ந்த கொடுமையை விவரிச்சப்ப அதிர்ச்சியில் நாங்க உறைஞ்சி போனோம். பொய் கேசுலேயும், சின்ன சின்ன தப்பு செஞ்சதுக்காகவும் ஜெயிலுக்கு வந்திருக்க சாதாரண மக்களே இவ்வளவு கொடுமைகளை அனுபவிக்கும்பொழுது, போராட்டம் நடத்தி அரசியல் கைதியாக உள்ள வந்திருக்கோம், பத்துநாள் இருந்துட்டு போனா என்ன குடிமுழுகிடப் போவுதுன்னு தோணுச்சி…” என்கிறார், அவர்.

“டாஸ்மாக் குடியினால் பல பெண்களின் தாலியறுக்கப்படுகிறது. அன்றாடம் குடிகார கணவன்களின் சித்திரவதைக்குள்ளாகிறார்கள் தமிழகத்தின் தாய்மார்கள். இவர்கள் அனுபவிக்கும் சித்திரவதைகளுடன் ஒப்பிடும்போது, போராட்டத்தின் பொழுதும் சிறைக்குள்ளும் நாங்கள் அனுபவித்த அடக்குமுறைகள் ஒன்றும் பெரிதாகப் படவில்லை.” என்கின்றனர் சிறை சென்ற மாணவர்கள்.

“இந்த சவாலான நெலமைய மாத்தனும்னுதானே போராடுறோம்…”

“போலீசையும், ஜெயில் வாழ்க்கையும் கூட சமாளிச்சிட்டேன். பெயில் கிடைச்சு வீட்டுக்குப் போனா, மொத்தக் குடும்பமும் சேர்ந்து என்ன அடிச்சது. ‘பொட்டபுள்ள ஜெயிலுக்கெல்லாம் போயிட்டு வர்றீயே, இனி உன்னை எவன்டி கட்டிக்குவான்?’ னு கண்டபடி பேச ஆரம்பிச்சிட்டாங்க…” என்று கூறும் ரூபாவதி, எட்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர். எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு வேலைக்குச் செல்லும் இளம்பெண்.

ரூபாவதி
ரூபாவதி

“கல்லூரி மாணவியல்லாத நீங்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றது எப்படி?” என்று கேள்வியை முடிப்பதற்குள்ளாகவே, பேசத் தொடங்கினார் ரூபாவதி. “பு.மா.இ.மு. அமைப்புல உறுப்பினர் என்பதையும்தாண்டி, டாஸ்மாக் குடியினால் சொந்தமுறையில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி. குடியினாலேயே 29 வயதில எங்க அண்ணனை இழந்திருக்கேன். எங்கப்பாவும் மொடா குடிகாரர்தான். சம்பாத்தியம் முழுசையும் குடிச்சே அழிக்கிறவரு. நினைவுக்கு தெரிஞ்ச நாள் வரையில் பல இரவுகள் சாப்பிடாம பச்ச தண்ணிய மட்டுமே குடிச்சிட்டு தூங்கியிருக்கேன். குடிக்கலைன்னா எங்கப்பா எங்க மேல அவ்ளோ பாசமா நடந்துப்பாரு. அதே குடிச்சுட்டு வந்துட்டாருன்னா அப்படியே ஆப்போசிட்டா மாறிடுவாரு. அம்மா சமைச்சு வச்ச சாப்பாட்டுல உப்பையோ, மண்ணையோ அள்ளிப் போட்டுருவாரு. அது மட்டுமில்லாம, அந்தச் சாப்பாட்டை நாங்க எல்லாம் சாப்பிடனும்னு அடிப்பாரு. அப்பாவோட அடிக்கு பயந்தே பல நாளு மண்ணள்ளிப்போட்ட சொத்தை மொத்தக் குடும்பமும் சேர்ந்து சாப்பிட்டிருக்கோம். இப்படி, குடியினால சொந்த முறையில அதன் பாதிப்ப உணர்ந்த என் குடும்பமே எனக்கு ஆதரவா இல்லையேனு நினைக்கிறப்போ வருத்தமாத்தான் இருக்கு. ஆனாலும், இந்த சவாலான நிலைமையை மாத்தனும்னு தானே பு.மா.இ.மு. தோழர்கள் போராடுறாங்க.” என்கிறார், ரூபாவதி.

“நல்ல விசயத்துக்குத்தான் எம்புள்ள ஜெயிலுக்குப் போயிருக்கான்…”

அமுதம்
அமுதம்

“என் வீட்டுக்காரனால பைசா காசு பிரயோசனம் இல்லை. இவனயும் வயசுக்கு வந்த பொம்பள புள்ளையும் வச்சிகிட்டு வீட்டுவேலை செஞ்சி ஒத்த ஆளா நின்னு நாந்தான் கஷ்டபடுறேன். கொழந்த கால்ல மாட்டியிருந்த கொலுசு, காமாட்சி விளக்குனு வூட்ல இருக்க ஒரு பொருள் வுடாம அடகு வச்சு குடிச்சுருவான் எம் புருசன். அந்த ஆளு குடிச்சிட்டு வந்து பிரச்சினை பண்றதாலேயே வீட்டு ஓனருங்க துரத்திவுட்டு, இதுவரைக்கும் எட்டு வீட்டுக்கு மேல மாறிட்டோம். புருசன்தான் சேத்திக்கில்லைனா, புள்ளைனாச்சும் உருப்படுமானு பார்த்தா இவனும் இந்த நாசமத்த குடியைத்தான் குடிச்சுட்டு வந்து நிக்கிறான். 17 வயசுல குடி என்ன வேண்டியிருக்கு?

இவன் போராட்டத்துக்கு போயி ஜெயில்ல புடுச்சி போட்டுட்டாங்கனு புள்ளைங்க (பு.மா.இ.மு. தோழர்கள்) சொன்னப்ப நான் மண்ண அள்ளி தூத்தாத குறையா புள்ளைகள திட்டிபுட்டேன். அப்புறம் புள்ளைங்க எடுத்து சொன்னிச்சிங்க. ‘சாராயக்கடையை மூடனும்னு நல்ல விசயத்துக்குத்தான் எம்புள்ள போராடி ஜெயிலுக்குப் போயிருக்கானு நினைக்கிறப்ப ஒருபக்கம் சந்தோசமாத்தா இருக்கு’. ஆனா, இவன் முதல்ல திருந்தனுமே?” எனக் கேள்வியெழுப்புகிறார், இப்போராட்டத்தில் சிறை சென்றவர்களுள் ஒருவரான ஐ.டி.ஐ. மாணவர் மணியின் தாயார் அமுதம்.

குடிப்பழக்கமுள்ள ஒரு மாணவர் டாஸ்மாக்கிற்கு எதிரானப் போராட்டத்தில் பங்கெடுத்திருப்பது வியப்பைத் தரலாம். இதைவிட ஆச்சரியமானது, பச்சையப்பன் கல்லூரியில் தன் நண்பனைப் பார்க்கச் சென்ற மணி இப்போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகியிருப்பது. மக்கள்திரள் போராட்டங்கள் எப்பொழுதுமே இப்படிப்பட்ட ஆச்சரியங்களை உருவாக்கக் கூடியவைதான்!

– இளங்கதிர்
_________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
_________________________________

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு : ஜெயா வழங்கிய “மானாடா.. மயிலாட…”

2

ன்னாட்டு முதலாளிகளே வாருங்கள், உங்கள் விருப்பம் போல தமிழகத்தையும் தமிழக மக்களையும் கொள்ளையடித்துச் செல்லுங்கள் என்று அறைகூவியழைத்து, பார்ப்பன பாசிஸ்டுக்கே உரித்தான அருவருக்கத்தக்க சுயவிளம்பரத்துடன் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு என்ற ஒரு ஆபாசக் கூத்தை அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நடத்தியிருக்கிறார்.

சர்வதேச முதலீட்டாளர் மாநாடு
சென்னையில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு : தமிழகத்தை பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரைவார்க்க பாசிச ஜெயலலிதாவால் நடத்தப்பட்ட அருவருக்கத்தக்க சுயவிளம்பரக் கூத்து.

ஏற்கெனவே பல மாநில அரசுகள் இத்தகைய மாநாடுகளை நடத்தியுள்ளபோதிலும், நாலாந்தர நடிகைக்கே உரித்தான ‘அறிவுக்கூர்மையுடன்’, ஆபாசக் குத்தாட்டங்களுடன் இம்மாநாட்டில் முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுத்து ஜெயலலிதா வரவேற்றுள்ளார். தனது இச்சாதனையை அங்கீகரித்து, தன்னைப் போற்றிப் புகழ வேண்டுமென்ற வக்கிரத்துடன், மின்னணு தொழில்நுட்பத்தில் பறக்கும் குதிரை ஜெயலலிதா காலில் மண்டியிடுவது போன்ற காட்சியைத் தனது அடிமைகளைக் கொண்டு ஏற்பாடு செய்து ரசித்துப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.

உலகெங்கும் சுற்றி ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை பிரதமர் மோடி கொண்டுவந்தார் என்றால், உள்ளூரில் இருந்துகொண்டே ஜெயலலிதா 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டைக் கொண்டுவந்துவிட்டதாகவும், மோடியைவிட லேடிதான் டாப் என்றும் அவரது துதிபாடிகள் மார்தட்டுகின்றனர். இம்மாநாட்டையொட்டி தற்போது ஆரவாரமாக அறிவிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பு 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் என்ற புள்ளிவிவரக் கணக்கு அடிமைகளால் நடத்தப்பட்ட இன்னுமொரு கேலிக் கூத்து. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 என்பதை வைத்து 24,2 என்று வருமாறு இத்தொகையை நிர்ணயித்துள்ளனர்.

ஆனால், கடந்த 2008-ம் ஆண்டிலிருந்தே அமெரிக்க – ஐரோப்பிய பொருளாதாரங்கள் தேக்கத்திலும் நெருக்கடியிலும் சிக்கி, சந்தை வற்றிப்போய் அந்நாடுகளின் ஏகபோக ஆளும் வர்க்கமே தடுமாறிக் கொண்டிருக்கும்போது, அந்நாடுகளின் ஏகபோக முதலாளிகள் தமிழகத்தில் வந்து முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது கேழ்வரகில் நெய்வடிந்த கதைதான்.

ஏற்கெனவே காங்கிரசு கூட்டணி ஆட்சியை விஞ்சும் வகையில் தொழிலாளர் சட்டத் திருத்தம், காடுகளையும் கனிமவளங்களையும் கார்ப்பரேட் முதலாளிகள் தடையின்றிச் சுரண்டுவதற்கேற்ப சுற்றுச்சூழல் விதிகள் திருத்தம், வங்கி, காப்பீடுதுறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்குத் தாராள அனுமதி, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகைள் – என இந்தியாவைத் தாரைவார்த்துக் கொடுப்பதாக மோடி கும்பல் உலகமெங்கும் சுற்றி கூவிக்கூவி அழைத்த போதிலும், எதிர்பார்த்தபடி அந்நிய முதலீடுகள் வரவில்லை. மோடி கும்பலால் ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட “மேக் இன் இந்தியா” திட்டமே புஸ்வாணமாகி நிற்கும்போது, மோடி கும்பலையே விஞ்சிவிட்டதாக மாய்மாலம் செய்கிறது ஜெ.கும்பல்.

எல்லாவற்றுக்கும் மேலாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றால் வரும், ஆனா வராது கதைதான். புரிந்துணர்வுதானே தவிர, உடனே யாரும் முதலீடு செய்யப் போவதில்லை. ஏன் முதலீடு செய்யவில்லை என்று யாரும் கேட்கவும் முடியாது. செயலாக்கத்துக்கு வருமா என்று யாருக்கும் தெரியாது. ஏற்கெனவே கடந்த 4 ஆண்டுகளில் ஜெயா ஆட்சியில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன என்று பார்த்தாலே இதன் யோக்கியதை விளங்கிவிடும்.

2011-ல் தமிழகத்தில் 73,298 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக ஜெ. அரசு அறிவித்தது. ஆனால், அவற்றில் வெறும் 238 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே தமிழகத்துக்கு வந்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வெறும் 0.3 சதவீதம்தான்.

2012-ல் 12 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி அதன் மூலம் 36,855 பேருக்கு வேலை கிடைக்குமென்றும், 20 ஆயிரத்து 925 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலைகள் தொடங்கப்படவுள்ளதாகவும் பிரம்மாண்ட அறிவிப்பு செய்தது ஜெ. கும்பல். அப்புறம் அந்த அறிவிப்பு காற்றோடு கலந்துவிட்டது.

ஏற்கெனவே தமிழகத்துக்குக் கொண்டுவரப்பட்ட பெரும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள்தான் நோக்கியாவும் ஹூண்டாயும். சென்னை அருகே இருங்காட்டுக் கோட்டை பகுதியில் விவசாய நிலங்களைப் பறித்து, தடையற்ற மின்சாரத்துடன் வரிச்சலுகைகளை வாரியிறைத்தும், தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளையும் பறித்தும் கொண்டுவரப்பட்ட இந்நிறுவனங்களால் தமிழகத்தில் வளர்ச்சி ஏற்படவில்லை. ஏரிகள்-குளங்களை ஆக்கிரமித்தும், கழிவுகளைக் கொட்டி சுற்றுச்சூழலை நாசமாக்கியும் வரும் இத்தகைய அந்நிய முதலீட்டாளர்களால் பேரழிவுகளும் பகற்கொள்ளையும்தான் நடந்திருக்கிறது.

நோக்கியா, பி.ஒய்.டி. போன்ற நிறுவனங்களின் சட்டவிரோதக் கதவடைப்பால் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இன்னும் பல சிப்காட் தொழிற்பேட்டைகளில் எவ்வித உரிமையுமின்றி, தொழிலாளர்கள் சட்டவிரோதமாகக் கொத்தடிமைகளாகச் சுரண்டப்படுவதும், பாதுகாப்பு ஏற்பாடுகளின்றிப் பணியாற்ற வைப்பதன் மூலம் பலர் படுகாயமடைந்து உடல் உறுப்புகளை இழந்து நிற்கும் கொடுமையும் கேள்விமுறையின்றித் தொடர்கிறது. நோக்கியா இயங்கிய 8 ஆண்டுகளில் பல ஆயிரம் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக வைத்து சுரண்டிக் கொழுத்ததோடு, வரி ஏய்ப்பு செய்து பல ஆயிரம் கோடிகளைச் சுருட்டிக் கொண்டது. பிறகு சட்டவிரோதமாக ஆலையை மூடி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வீதியில் வீசியெறிந்தது. இதுதான் பெருமையாகப் பீற்றிக் கொள்ளப்பட்ட அந்நிய முதலீட்டின் மகிமை.

நோக்கியாவுக்கு முன்னதாக 2013-ல் மோட்டரோலா தனது சூறையாடலை முடித்துக் கொண்டு தனது நிறுவனத்தை மூடிவிட்டது. சென்னையில் தனது பிரிவை மூடிவிட்ட ஃபாக்ஸ்கான் நிறுவனம், தனது ஆலையின் விரிவாக்கத்தை உ.பி. குஜராத் மற்றும் ஆந்திராவுக்கு மாற்றத் தீர்மானித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனமும், மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் நிறுவனமும் மூடப்படும் நிலையில் உள்ளன. தமிழ்நாடு பெட்ரோப்ராடக்ஸ் நிறுவனம், திருச்சி டிஸ்டிலரீஸ் நிறுவனம், தூத்துக்குடி அல்கலின் கெமிக்கல்ஸ் நிறுவனம் ஆகியன ஏற்கெனவே மூடப்பட்டுவிட்டன. இவற்றின் விளைவாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து பரிதவிக்கின்றனர்.

தமிழகத்தைச் சூறையாடுவதற்காக கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு கதவை அகலத் திறந்துவிட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா பெருமிதம் கொள்வதைப் போலத்தான், அன்றைய தமிழக முதல்வரான கருணாநிதி, தமிகத்தின் தொழில்வளர்ச்சி – வேலைவாய்ப்புக்காக நான்தான் நோக்கியாவைக் கொண்டுவந்தேன் என்று மார்தட்டிக் கொண்டார். நோக்கியாவால் தமிழத்துக்கு என்ன கதி ஏற்பட்டது என்பதைப் பற்றி வாய்திறக்க மறுக்கும் கருணாநிதி, கடந்த நான்காண்டு காலமாக நன்றாகத் தூங்கிவிட்டு இப்போது திடீரென சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டைக் கூட்டி ஒரு நாடகத்தை நடத்துவதாக ஜெ. கும்பலைச் சாடுகிறார்.

தமிழகத்தைச் சூறையாடும் இத்தகைய பேரழிவுப் பாதையைத்தான் எல்லா ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் நியாயப்படுத்தி வருகின்றன. ஏதோ ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையின்மையால்தான் அந்நிய முதலீடுகள் வராததைப் போலவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதைவிட இன்னும் அதிகமாக அந்நிய முதலீடுகளை கொண்டுவந்து தமிழகத்தை வளப்படுத்தப் போவதாகவும் ஜெயா ஆட்சிக்கு எதிராகப் புழுதி அரசியலை நடத்திக் கொண்டிருக்கின்றன.

– மனோகரன்
_________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
_________________________________

வழக்கறிஞர்களுக்கு எதிரான அடக்குமுறை : நடந்தது என்ன ?

2

மிழக வழக்கறிஞர்களுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் ஒரு போர் தொடுத்திருக்கிறது. தங்களது ஊழல் முறைகேடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் வழக்கறிஞர்களைக் களையெடுப்பதன் வாயிலாக கேள்விக்கிடமற்ற சர்வாதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதே நீதிபதிகளின் நோக்கம்.

நீதித்துறைக்கு எதிராகப் பேசுவதற்கு ஓட்டுக்கட்சிகள் தயங்குகின்றன. பார்ப்பன ஊடகங்களோ பக்க வாத்தியம் வாசிக்கின்றன. வழக்கறிஞர்களுக்கு எதிராக சதித்தனமாக எப்படிக் காய் நகர்த்தப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள கடந்த சில நாட்களில் என்ன நடந்திருக்கிறது என்பதைப் அறிந்து கொள்வது அவசியம். எனவே, நாள் வாரியாக அந்த விவரங்களைக் கீழே தொகுத்துத் தருகிறோம்.

***

நீதிபதி கிருபாகரன்
ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கி அளித்த தீர்ப்பில் போலீசின் வசூல் வேட்டைக்குச் சாதகமாக உத்தரவுகளை அளித்த நீதிபதி கிருபாகரன்

ஜூலை-1 ஆம் தேதி முதல் பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென்றும், தவறுவோரின் உரிமம் மட்டுமின்றி வாகனத்தையும் பறிமுதல் செய்ய வேண்டுமென்றும் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். இது சட்டவிரோதமான தீர்ப்பு என்று விமரிசித்து போராடிய மதுரை மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர், செயலர் மீது நீதிமன்றத்தை அவமதித்ததாக உயர்நீதிமன்றம் நோட்டீசு அனுப்பியது. இதற்கெதிராக மதுரை வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர்

24.8.2015 – சுமுகமாக பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று தலைமை நீதிபதி கூறியதை நம்பி சென்னை வந்த இருவரையும் நீதிபதிகள் அவமானப்படுத்தினர். வழக்கை விசாரிக்கப்போவதாகவும் சமரச தீர்வு கிடையாது என்றும் கூறினர்.

10.09.2015 – அன்று சுமார் 1500-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மதுரையில் நீதித்துறை ஊழலுக்கு எதிராகப் பேரணி நடத்தி, ஊழல் நீதிபதிகளின் பட்டியலை வெளியிட்டனர்.

14.09.2015 – தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கக் கோரி தலைமை நீதிபதியின் கோர்ட்டில் வழக்கறிஞர்களும் சட்டக்கல்லூரி மாணவர்களுமாக 12 பேர், வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தினர். அன்று மாலை கைது செய்து சிறை வைக்கப்பட்டனர்.

இந்தப் போராட்டத்தைக் காரணம் காட்டி தலைமை நீதிபதி கவுல் தானே முன்வந்து ஒரு ரிட் மனுவை எடுத்துக் கொண்டார். ஒரு போலீசு உதவி ஆணையர் வழக்கறிஞர்களுக்கு எதிராகத் தெரிவித்த, சில புகார்களை அதில் தொகுத்திருந்தார்.

“நீதிபதிகள் தைரியமாக நீதி வழங்க முடியாத சூழல் நீதிமன்றத்தில் நிலவுவதாகவும், எனவே நீதிபதிகளைப் பாதுகாப்பதற்கு, மத்திய தொழில்படை வர வேண்டும்” என்றும் கூறி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்பினார்.

15.09.2015 – 16-ம் தேதியன்று நடைபெறவுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை திரைமறைவில்தான் நடத்தப்படும் என்றுநீதிபதிகள் அறிவிக்கவே, இதற்கு வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

திரை மறைவு விசாரணை ரத்து என்ற முடிவு இரவு 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. இருப்பினும் பாதுகாப்புக்கு போலீசு குவிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகிறது.

16.09.2015 – காலை 10.00 மணிக்கு மதுரை வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஊழல் நீதிபதிகள் மீது நடவடிக்கை கோரி கவர்னரிடம் மனு கொடுக்கின்றனர்.

அன்று மதியம் போலீசு படை வழக்கறிஞர்களைத் தடுக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத், சங்கரசுப்பு ஆகியோர் விசாரணையைப் புறக்கணிக்கின்றனர். போலீசு தடையை எதிர்த்து சென்னை வழக்கறிஞர்களின் போராட்டம்.

பி.தர்மராஜ்,  ஏ.கே.ராமசாமி
நீதிபதி கிருபாகரனின் தீர்ப்பு சட்டவிரோதமானது என்ற உண்மையை எடுத்துக் கூறியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்தித்து வரும் மதுரை மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பி.தர்மராஜ் (இடது) மற்றும் செயலர் ஏ.கே.ராமசாமி.

திரு ஏ.கே.ராமசாமியிடம் விசாரணை துவங்கியவுடன், ஏற்கெனவே நீதிபதிகளால் உள்ளே அழைத்து வரப்பட்டிருந்த வழக்கறிஞர்களான அணுகுண்டு ஆறுமுகம், பொன்னுச்சாமி ஆகியோர் மதுரை ஊழல் எதிர்ப்புப் பேரணி நீதிபதிகளை அவமதித்ததாக புகைப்படங்களைக் காட்டினர். உடனே நீதிபதிகள் ஹெல்மெட் வழக்கை விட்டுவிட்டு, இதனை விசாரிக்கத் தொடங்குகின்றனர். இதனை ஏ.கே.ராமசாமி ஆட்சேபிக்கிறார். சிறைக்கு அனுப்ப வேண்டி வரும் என்று நீதிபதிகள் அவரை மிரட்டுகின்றனர்.

17.09.2015 – ஊடகங்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் கலகம் செய்ததாகச் சித்தரிக்கின்றன. ஊழல் நீதிபதிகள் மீது விசாரணை கோரி ஆளுநரிடம் தரப்பட்ட மனு தொடர்பான செய்தியை இருட்டடிப்பு செய்கின்றன.

18.09.2015 – எந்தெந்த மதுரை வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பட்டியலுடன் இரு நீதிபதிகள் மதுரையிலிருந்து சென்னை சென்று தலைமை நீதிபதியைச் சந்திக்கின்றனர்.

“போராடிய வழக்கறிஞர்களை உடனே நீக்கு, மத்திய போலீசு படையை உடனே அனுப்பு” என்று “தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம்” என்ற புரோக்கர் சங்கத் தலைவர் பிரபாகரன் கடிதம் அனுப்புகிறார்.

21.09.2015 -சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடையிலான மோதல் தொடர்பான வழக்கை விசாரிக்க எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி தத்து, போராடும் வழக்கறிஞர்களை அவதூறு செய்தது மட்டுமின்றி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பார் கவுன்சிலைத் தூண்டுகிறார்.

வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய பார் கவுன்சில் தமிழக பார் கவுன்சிலுக்குக் கடிதம் எழுதுகிறது.

அடுத்த சில மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்கறிஞர்கள் பட்டியலைத் தமிழக பார் கவுன்சிலும் உயர்நீதிமன்றமும் அனைத்திந்திய பார் கவுன்சிலுக்கு அனுப்புகின்றன.

22.09.2015 – தமிழக பார் கவுன்சிலின் அதிகாரத்தை நிராகரிக்கும் வகையில் 14 மதுரை வழக்கறிஞர்களை விசாரணை இல்லாமல் நேரடியாகவே இடைநீக்கம் செய்துவிட்டு, விசாரணை கர்நாடகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கிறது அனைத்திந்திய பார் கவுன்சில்.

மதுரை வழக்கறிஞர் சங்கத்தைக் காலி செயுமாறு சென்னை உயர்நீதி மன்றப் பதிவாளர் உத்தரவிடுகிறார்.

24.09.2015 – தமிழ்நாடு பார் கவுன்சில் அவசரக் கூட்டம் நடைபெறுகிறது. “நீதித்துறையையோ, போலீசையோ எந்த ஒரு வழக்கறிஞரும் விமரிசித்துக் கூட்டம் நடத்தக்கூடாது, துண்டறிக்கை வெளியிடக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பார் கவுன்சில் தலைவர் செல்வம் அறிவிக்கிறார்.

25.09.2015 – வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் ஆஜராகத் தவறினால், விசாரணை நீதிமன்றமானது வக்கீல் குறித்த புகாரை நேரடியாக அனைத்திந்திய பார் கவுன்சிலுக்கு அனுப்ப வேண்டும் என்று நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிடுகிறார்.

“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வளாகத்திற்கு உள்ளேயோ வெளியேயோ கூட்டங்கள், ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது. சுவரொட்டி, துண்டறிக்கை, பானர் உள்ளிட்ட எல்லா விதமான நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது” என்ற சட்ட விரோதமான பாசிச அறிவிப்பை உயர்நீதிமன்றம் வெளியிடுகிறது.

சி.டி.செல்வம், தமிழ்வாணன்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உள்நோக்கத்தோடும், வன்மத்தோடும் நடத்தி வரும் நீதிபதிகள் சி.டி.செல்வம் (இடது) மற்றும் தமிழ்வாணன்.

28.09.2015 – திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட, 1000 வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட அவசரக் கூட்டம் நடந்தது. சில வழக்கறிஞர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்காக வழக்கறிஞர் சங்கத்தை இழுத்து மூட உத்தரவிடலாமெனில், நீதிபதிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பல நிலுவையில் உள்ளதால் நீதிமன்றங்களையும் இழுத்து மூட வேண்டியிருக்கும் என்றும் நீதிபதிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கும் சட்டங்கள் ரத்து செயப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.

30.09.2015 – இந்தியாவிலேயே முதன் முறையாக நீதிமன்றத்திற்கு வெளியே அகலத்திரையை வைத்து நீதிமன்ற அவமதிப்பு விசாரணை ஒளிபரப்பானது. அவமதிப்புவழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டது.
_________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
_________________________________

ஈட்டி முனையாக எழுந்து நிற்போம் !

0

காவிரி டெல்டா மாவட்டங்களில் பல இலட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரின் நிலை இன்றோ அல்லது நாளையோ என்ற அபாயக் கட்டத்தைத் தொட்டு நிற்கிறது. காவிரித் தண்ணீரை நம்பி வெள்ளாமையில் இறங்கிய விவசாயிகள், இன்று லாரித் தண்ணீரை வயலில் பாய்ச்சி பயிர்களைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி நிலைமை கைமீறிப் போக் கொண்டிருக்கும் வேளையில்தான், மைய அரசு தனது கும்பகர்ண தூக்கத்திலிருந்து எழுந்து டெல்லியில் கடந்த செப்டம்பர் 28 அன்று காவிரி கண்காணிப்புக் குழுவைக் கூட்டியது. கொஞ்சத்துக்கு கொஞ்சமாவது நல்ல சேதி கிடைக்காதா என டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்திருந்தபொழுது, “கர்நாடகா மாநிலத்தின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்கான தண்ணீரே கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது” என அக்கூட்டத்தில் கர்நாடகா அரசு இரக்கமின்றி மமதையோடு அறிவித்து, அவர்களின் தலையில் நெருப்பை வாரிக்கொட்டிவிட்டது.

கர்நாடகா அரசு கூறுவது அப்பட்டமான, அடுக்கமாட்டாத பொய். கர்நாடகாவிலுள்ள காவிரி அணைகளில் உள்ள தண்ணீரின் இருப்பு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துள்ள மழையின் அளவு ஆகியவை குறித்து வெளிவந்திருக்கும் புள்ளிவிவரங்களே, கர்நாடகா காங்கிரசு அரசு தீய எண்ணத்தோடு தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது என்பதையும் தமிழகத்திற்குத் தண்ணீரைத் திறந்துவிடக் கூடாது என்ற அடாவடித்தனமான முடிவோடு அது செயல்படுவதையும் நிரூபிக்கின்றன.

காவிரி டெல்டா தண்ணீர் பிரச்சனைகர்நாடகா அரசு தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 192 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் திறந்துவிட வேண்டும் என்ற நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளிவந்து எட்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இத்தீர்ப்பை கர்நாடகா அரசு ஒருநாளும் மதித்து நடந்து கொண்டதேயில்லை. இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு நிர்பந்தம் கொடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மைய அரசோ இந்த விசயத்தில் கர்நாடகாவின் கூட்டாளியாகவே செயல்பட்டு வருகிறது. இதோடு, நடுவர் மன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு அமைப்பதைத் திட்டமிட்டே புறக்கணித்து வருகிறது. காவிரியில் புதிய அணைகளைக் கட்டத் திட்டமிட்டுள்ள கர்நாடகாவின் முயற்சிகளைத் தடுப்பது போல நடிக்கிறது. கர்நாடக மாநிலத்திலும், மத்தியிலும் காங்கிரசு ஆட்சி நடந்தாலும் சரி, பா.ஜ.க. ஆட்சி நடந்தாலும் சரி தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதில் இவ்விரண்டு கட்சிகளும் ஒற்றுமையாகவே நடந்து வருகின்றன.

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கு இணையானது. ஹெல்மெட் அணிவது தொடர்பான தீர்ப்பை விமர்சித்த வழக்குரைஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்து, அவர்களின் கவுனைக் கழட்ட வைக்கும் நீதிமன்றங்கள், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை கழிப்பறை காகிதம் போல கசக்கிப் போட்ட கர்நாடகா அரசின், மைய அரசின் அடாவடித்தனத்தைக் கேள்விக்குள்ளாக்க மறுக்கின்றன. ஒரு சட்டத்தின் தகுதியைப் பெற்றுள்ள நடுவர் மன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பிலுள்ள கர்நாடகா மாநில அரசு, மைய அரசு, நீதிமன்றங்கள் அனைத்தும் அதனை நடைமுறைப்படுத்த மறுக்கும் எதிர்நிலையை எடுத்துள்ள அயோக்கியத்தனத்தைத் தமிழகம் எதிர்கொண்டு நிற்கிறது.

குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைந்த பூமியில் இன்று ஒரு போகம், டெல்டா விவசாயிகளின் உயிர் நாடியான சம்பா பயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலைமைக்குத் தமிழகம் தள்ளப்பட்டுவிட்டது. ஒருபுறம் பாரம்பரிய பெருமை கொண்ட விவசாயத்திற்கு கர்நாடகா அரசு வேட்டு வைக்கிறதென்றால், இன்னொருபுறமோ டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஷேல் மீத்தேன் எடுக்கும் திட்டங்களைக் கொண்டுவந்து தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைச் சுடுகாட்ட முயலுகிறது, மைய அரசு. ஆற்று மணல், தாதுமணல், கிரானைட் கொள்ளைகள் ஏற்படுத்தியிருக்கும் அழிவைவிடப் பன்மடங்கு பேரழிவைக் கொண்ட திட்டமிது. இந்த இரட்டை தாக்குதலை எதிர்த்து டெல்டா விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஒட்டுமொத்த தமிழகமும் ஈட்டி முனையாக எழுந்து நிற்பது எப்போது?
_________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
_________________________________

ஈஸ்வரன் கட்சியின் சாதிவெறிக் கலாச்சாரத்திற்கு ஒரு மாநாடு

0

ரியாதையான வட்டார வழக்கிற்காக நினைவு கூறப்படும் கொங்கு மண்டலத்திற்கு மற்றொரு குரூர முகமும் இருக்கிறது. அதுதான், கவுண்டர் சாதி முகம்.

தமிழகத்திலேயே மிகக் கடுமையான சாதிய புறக்கணிப்பும் அடக்குமுறையும் இருக்கும் பகுதி. தமிழகத்திலேயே மிக வலுவான சாதிய பொருளாதார அரசியல் அதிகார வர்க்க அடித்தளம் கொண்ட சாதியாக கவுண்டர் சாதி இருக்கிறது. தலித்திய அமைப்புகளும் தமிழகத்தின் இதர பகுதிகளில் இருக்குமளவுக்கு கூட இங்கே இல்லை.

இத்தகைய சூழலில் இந்த ஆதிக்க சாதி உணர்வுக்கு அரசியல் வடிவம் கொடுக்கும் சில அமைப்புகளில் சற்றே பெரிய அமைப்புதான் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி.

கொங்கு ஈஸ்வரன் சாதிவெறி மாநாடுஇத்தகைய ஒரு ஆகப்பிற்போக்கான அமைப்பு “கலாச்சாரம் காப்போம்” என்ற முழக்கத்தின் கீழ் கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியாவில் ஒரு மாவட்ட மாநாடை 27-09-2015 ஞாயிறு அன்று நடத்தியது.

இரண்டு மாதங்களாக சுவரெழுத்து கடைசி ஒரு வாரத்தில் சுவரொட்டி நகரெங்கும் பிளக்ஸ் பேனர்கள் கொடி என ஏகத்திற்கும் விளம்பரம் செய்திருந்தார்கள். ஆதிக்க சாதி வெறி காக்கப் போகும் கலாச்சாரத்தை அறிய கொடிசியா சென்றோம்.

சாதிக் கட்சி தலைவர்களுக்கு முன் நிபந்தனை சாதிப் பெருமிதத்திற்கு நிகரான முட்டாள் தனம் என்பதை ஈ.ஆர்.ஈஸ்வரன் பல தொலைக்காட்சி விவாதங்களில் தெளிவுற விளக்கியுள்ளார்.

“சாதிய சாக்கடைகள் பலவாகும். அவை கலக்கும் மையக் கடலே ஆர்‌.எஸ்‌.எஸ் ஆகும்” என்ற புதுமொழிக்கிணங்க, ஈஸ்வரன், இந்த விநாயகர் சதுர்த்தி அன்று மேட்டுப் பாளையத்தில் இந்து முன்னணியின் விநாயகர் சதுர்த்தி நிகழ்வில் சிறப்புரை நல்கியுள்ளார். இதே இந்து முன்னணி மற்றும் இங்கிருக்கும் இந்து அமைப்புகளின் அணிகளில் கணிசமானோர் அருந்ததிய சமூக இளைஞர்களே. கோவைக் கலவரத்தில் சிறை சென்றவர்களில் 90 சதம் அவர்களே. கலவரத்திற்கு தலித்துக்களையும் களவாணித்தனத்திற்கு ஆதிக்க சாதிகளையும் பயன்படுத்துவது பார்ப்பனியத்தின் தந்திரம்.

கொங்கு ஈஸ்வரன் சாதிவெறி மாநாடுஅவ்வகையில் கொடிசியாவில் நடந்த இந்த மாநாட்டிற்கும் (மாநாடே ஆர்‌.எஸ்‌.எஸ் அஜெண்டா தான் என்ற போதிலும்) ஆர்‌.எஸ்‌.எஸ் நிர்வாகிகளையும் பி‌.ஜே.பி, இந்து முன்னணி நிர்வாகிகளையும் அழைத்து மேடையில் அமர வைத்திருந்தார். ஆக ஆதிக்க சாதியும், ஆர்‌.எஸ்‌.எஸ் மும் கள்ள உறவை விடுத்து நேரடி உறவிலேயே இறங்கி வெகு நாட்களாயிற்று.

மூன்று மணிக்கு மாநாட்டுத் திடலை அடைந்த பொது பொது மக்களில் ஒருவர் கூட இல்லை. ER Boys என டிசர்ட் அணிந்த இளைஞர்கள் மட்டும் தான் சுற்றிக் கொண்டிருந்தனர். மாநாட்டுத் திடலை சுற்றிலும் ஏராளமான பிளக்ஸ் பேனர்களில் ஈஸ்வரன் இளித்துக் கொண்டிருந்தார். அதிலும் தலைமைச் செயலக பின்னணியில் தலையை சாய்த்த படி அவர் இருக்கும் பிளக்ஸ் ஜெயாவின் கண்ணிற்கு கொண்டு செல்லப்பட்டால் சுளுக்கு உறுதி. இதில் ஈசன் படை எனவும் ஒரு குரூப் சுற்றிக் கொண்டிருந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ரோட்டில் இருந்து மாநாட்டுத் திடலுக்கு திரும்பும் வழியில் தீரன் சின்னமலையின் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. காலனியாதிக்கத்தை எதிர்த்து சமரசமில்லாமல் போராடிய இந்த மாவீரனை சாதிய அடையாளமாக்கி அரசியல் செய்யும் யுவராஜ் முதல் இன்ன பிற ஆட்களை என்ன பிறவி எனக் கொள்வது. அதிலும் சின்னமலையை புகழ்ந்து விட்டு, ஆர்‌.எஸ்‌.எஸ் வெறியர்களுடன் சேர்ந்து கொண்டு திப்புவை இகழும் ஈஸ்வரனை விட இழி பிறவி யாரும் இல்லை என்றே கொள்ளலாம்.

மாநாட்டுப் பந்தலுக்கு திரும்புவோம்.

தலித் இளைஞர்கள் குழு ஒன்றை அழைத்து வந்திருந்தனர் (மத்தளம்) ஜமாப் அடிக்க. அவர்களுக்கும் ஈசன் படை என்ற டிசர்ட்டை அவர்கள் போட்டிருந்த சட்டைக்கு மேல் அணிவித்து நிறுத்தியிருந்தார்கள். இங்கு பெரும்பாலும் ஜமாப் அடிப்பது தலித்துகளாகவும் ஆடுவது கவுண்டர்களாகவும் இருக்கும்.

ஈசன் படை

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கொங்கு ஈஸ்வரன் சாதிவெறி மாநாடு
“நம்மால் முடியும்”

இளைஞர் அணி தள்ளாடியபடி வந்து நின்றது. அப்போதே மழை தூறத் துவங்கியிருந்தது. மேடையில் வேறு ஆண்கள் கும்மியடித்துக் கொண்டிருந்தனர். அடடே, கொங்கு நாட்டின் பழம்பெரும் கலையென்று சற்று அருகே சென்று பார்த்தால்,

தன்னானே தன்னானே.. தன்னானே… அண்ணன் ஈஸ்வரன் புகழ் தன்னானே… என்று பாடிக்கொண்டிருந்தார்கள்.

மழை வேகம் பிடித்துக் கொண்டது. அனைவரும் கலைந்து சென்று ஆங்காங்கே கிடைக்கும் நிழல்களில் பதுங்கிக் கொண்டனர். கூட்டம் என்று சொல்லிக்கொள்ள சேர்ந்திருந்த நூறு பேரும் சேர்களை தலைக்கு பிடித்துக் கொண்டு பரிதாபமாக நின்று கொண்டிருந்தார்கள். இவர்களும் ஒரு 1 மணி நேரம் பார்த்தார்கள் மழை விடுவதாயில்லை. இதெல்லாம் ஒரு மழையா…? எனக் கூறியவாறு

முடியும் முடியும் ! நம்மால் முடியும் !

என முழக்கம் போட்டும் பார்த்தார்கள். கொங்கு சிங்கங்கள் எவையும் மழையில் நனைவதற்கு தயாராக இல்லை.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பிறகு ஒரு வழியாக மழையின் வேகம் குறைந்தது. உடனடியாக ஐந்தாறு டான்ஸ் பாய்ஸை மேடையில் ஏற்றி விட்டனர். சினிமா பாடல் மெட்டுக்களில் ஈஸ்வரனை ஆபாசமான புகழ் மொழிகளுடன் பாடல்கள் ஒலிக்க அதற்கு அந்த டான்ஸ் பாய்ஸ் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு 17,000 ரூபாயம் ஒன்பது நிமிட நடனத்துக்கு. மேடை, மேடைப் பின்னணி, அலங்காரங்கள் இன்ன பிறவெல்லாம் ஆர்‌கே ஈவண்ட்ஸ் என்ற ஒப்பந்த முறை ஒருங்கிணைப்புக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். கொடிசியா வாடகை, இந்த ஏற்பாடுகள் விளம்பரங்கள் என எல்லாவற்றையும் பார்க்கையில் தோராயமாக அரைக் கோடிக்கும் மேல் செலவு செய்திருப்பார்கள் எனத் தெரிகிறது.

டான்ஸ் பாய்ஸ் ஆட்டம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அடுத்து, பெண்கள் சிறிது நேரம் கும்மியடித்தனர். பின்னர் ஜமாப் அணியினரை மேடையில் ஏற்றி அடிக்க வைத்தனர். கூட்டத்தை தக்க வைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருந்தனர். இதில் இடையிடையில் அண்ணன் ஈஸ்வரன் வந்துகொண்டிருக்கிறார் என ரன்னிங் கமெண்ட்ரி வேறு.

ஈஸ்வரன் என்ட்ரி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஈஸ்வரன் ஐந்தே கால் மணி வாக்கில் 3 நபர்களை அழைத்துக் கொண்டு கையை மேலே தூக்கி காட்டியவாறே வந்தார். இந்த கூட்டத்திற்கென மலேஷியாவில் இருந்து வந்திருக்கிறார்களாம். ஈஸ்வரன் வந்தவுடன் அவருக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாக கூறி புதிதாக ஒரு ஜமாப் குழுவினரை மேடையேற்றினர். அறிவிப்பாளர், நம்ம பசங்க அடிச்சி நம்ம பொண்ணுக ஆடும் ஜமாப் என அறிவித்தார். அது முடிந்த பின்னர், கொ.ம.தே.க நிர்வாகிகள், கவுண்டர் சங்க நிர்வாகிகள், ஆர்.‌எஸ்.‌எஸ் இந்து முன்னணி பி.‌ஜெ.‌பி நிர்வாகிகள் என அனைவரும் மேடையேறி மாநாட்டை துவக்கினர்.

கொங்கு ஈஸ்வரன் சாதி வெறி மாநாடு
சரவணம்பட்டி கௌமார மடாலய சிரவை ஆதீனம் அருளுரை

பல்வேறு பகுதிச் செயலாளர்களாக பேசத் துவங்கிய சுமார் 10 பேரின் பேச்சுக்களும் “கலாச்சாரம் காப்போம்” என்ற தலைப்பின் கீழ் கோவையில் ரோடு சரி இல்லை. தொழில் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கெல்லாம் ஒரு தீர்வு வேண்டுமென்று ஈஸ்வரனிடமும் அரசிடமும் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தனர். சரவணம்பட்டி கௌமார மடாலய சிரவை ஆதீனம் அருளுரை என்கிற பெயரில் மதமாற்ற தடை சட்டம் வேண்டும் மத வெறியை துவக்கி வைத்தார்.

கொங்கு ஈஸ்வரன் சாதி வெறி மாநாடு
மலேஷியாவில் முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவர் கேவியாஸ்.

மலேசிய மங்குனிகளில் மூன்றில் இருவர் மட்டுமே பேசினர். அதில் ஒருவர் மலேஷியாவில் முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவர் கேவியாஸ். “இங்கிருந்து போன கொங்கு இனம் நாங்க. மலேஷியாவில் நாங்க நல்லா பெருமையோட வாழ்கிறோம். அடுத்த வருடம் மலேஷியாவில் ஒரு கொங்கு மாநாட்டை போடுகிறோம். அதற்கு உலகக் கொங்கு மக்கள் வர வேண்டும்” என பேசினார். பேசாத நபர்தான் மலேசியாவின் இளம் தொழிலதிபர் பிரக்தீஸ் குமாராம். கொங்கு மண்ணின் மைந்தாராம் எப்போது நிதி கேட்டாலும் அள்ளிக் கொடுப்பார் எனவும் கூறினார்கள்.

மேடையில் ஈஸ்வரனின் வலது புறம் இந்த தொழிலதிபர்களும் இடது புறம் கவுண்டர் சங்க தலைவர்களும் அமர்ந்திருந்தனர். ஈஸ்வரன் கட்சியின் கட்டுமானம் இவர்களை வைத்து தான் இருக்கிறது.

கொங்கு ஈஸ்வரன் சாதி வெறி மாநாடு
ஈஸ்வரன்

இறுதியாக, ஈஸ்வரன் மைக் பிடித்தார். எடுத்த எடுப்பிலேயே, மலேசியாவின் ரப்பர் தோட்டத்துக்கு பிழைக்கச் சென்று அப்போதே நேதாஜியின் படையில் பணியாற்றிய வீரர்களின் வாரிசுகள் இந்த மலேசியா காரர்கள் என ஆரம்பித்தார்.

‘பயபுள்ள வாங்குன காசுக்கு மேல கூவுராண்டா’ என நினைப்பார்களோ என்று நினைத்தாரோ என்னவோ அடுத்ததாக, கோவைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் அது வேண்டும் இது வேண்டும் என ஒரு லிஸ்ட் வாசித்தார். கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள் அவர்கள் யார் என்றால் அந்நிய சக்திகள் என சாதிவெறியை ஆரம்பித்து வைத்தார்.

கொங்கு ஈஸ்வரன் சாதி வெறி மாநாடு
‘நடுநிலை’ பத்திரிகை

இடையில் அண்ணனின் கொங்கு நாடு என்ற ‘நடுநிலை’ பத்திரிகையை அனைவருக்கும் இலவச விநியோகம் செய்து கொண்டிருந்தனர் ஈசன் படையினர்.

“நான் 10 நாளைக்கு முன்னாடி அமெரிக்கா போனது எல்லோருக்கும் தெரியும். அங்கு ஐநா அலுவலகத்தில் ஒரு வாசகம் இருந்தது, கற்பழிப்புகளை தடுப்பது பற்றி. அந்த வாசகத்திற்கு ஒரு தென்னிந்தியப் பெண்ணின் படத்தை போட்டிருக்கிறார்கள். என்ன அநியாயம். அங்கு ஒரு அமெரிக்கப் பெண்ணின் படத்தை போட வேண்டியது தானே. இதையெல்லாம் பார்க்கையில் எனக்கு வேதனையாக இருக்கிறது.” என்று வன்புணர்ச்சியின் கொடுமையை வெளியே தெரியவிடக்கூடாது என்று உறுமினார்.

அடுத்து, “ஜவுளித் தொழில் பாதிக்குது, 1970 விவசாயிகள் போராட்டம், கொங்கு மக்களுக்கு அரசு வேலை வேண்டும், அவினாசி அத்திக்கடவு காளிங்க ராயன் வாய்க்கால், உலக முதலீட்டாளர் மாநாடு, கொங்கு மண்ணில் மாவோயிஸ்டுகளா என ஈஸ்வரன் சாதி-மதவெறிக்கு இடையில் பல்வேறு ‘நலத்திட்டங்கள்’ குறித்து கவலைப்பட்டார்.

கொங்கு ஈஸ்வரன் சாதி வெறி மாநாடு
வெட்டி சாதிப் பெருமிதத்தை ஊட்டி ஒரு பெரும் முட்டாள் கும்பலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஈஸ்வரன்

ஒரு வழியாக பேச வேண்டியதை யெல்லாம் பேசி முடித்து கொங்கு நாட்டை காக்க அனைவரும் ஜாதி மதம் பார்க்காமல் ஒன்று சேர வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாநாட்டை முடித்து வைத்தார்.

மேடையில் அமர்ந்திருந்த நிர்வாகிகளும் வி‌.வி‌.ஐ‌.பி வரிசையில் அமர்ந்திருந்த பணக்கார கவுண்டர்களும் மேடையை முற்றுகையிட்டிருந்த ஆடி போன்ற கார்களில் கிளம்ப அடுத்தடுத்த வரிசைகளில் அமர்ந்திருந்தவர்கள் டூவீலர் ஸ்டாண்டையும் தாங்கள் வந்த பஸ் இருக்கும் ஸ்டாண்டுகளையும் நோக்கி நடக்கத் துவங்கினர்.

இப்படியாக வெறும் வெட்டி சாதிப் பெருமிதத்தை ஊட்டி ஒரு பெரும் முட்டாள் கும்பலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஈஸ்வரன். திராவிட இயக்கங்களின் வளர்ச்சியால் மட்டுப்பட்டிருந்த சாதிய மத இயக்கங்கள் அ.தி.மு.க என்ற சீரழிவின் சின்னம் துவங்கிய பின்னர் சற்று வேகமாக தமிழகத்தில் வளரத் துவங்கின. தமிழகத்தில் துவண்டு கிடந்த சாதியத்தை உயிர்ப்பித்ததில் ராமதாஸ் போன்றவர்கள் முன்னோடிகள்.

பெரியாரையும் பார்ப்பனியத்திற்கு எதிரான தமிழகத்தின் மரபையும் கண்டு பயந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம் சாதியத்தால் இங்கு ஊடுருவி பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை ஊடறுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அந்தந்த வட்டார ஆதிக்க சாதிவெறி சங்கங்கள் உதவுகின்றன. இந்துமதவெறியின் இயல்பான கூட்டாளியாக ஆதிக்க சாதி இருப்பதில் ஆச்சரியமில்லை.

இந்துமதவெறியின் இயல்பான கூட்டாளியாக ஆதிக்க சாதி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இளவரசன், கோகுல்ராஜ் என்று தலித் இளைஞர்களின் தலைகள் பகிரங்கமாக வெட்டப்படும் சூழ்நிலையில், பயங்கரவாதி யுவராஜ் போன்ற சாதிவெறியர்கள் அரசு, ஊடகங்கள், போலிசால கொண்டாடப்படும் நிலையில் இந்த ஆதிக்க சாதிவெறியை முறியடிப்பது அவசியம். இதில் “தமிழ் இந்து” உள்ளிட்டு பல்வேறு ஊடகங்கள் ஈஸ்வரன் கட்சி மாநாட்டை வரவேற்று எழுதுகின்றன.

ஆர்.எஸ்.எஸ்-இன் கலாச்சாரம் மதவெறி என்றால், ஈஸ்வரன் கட்சியின் கலாச்சாரம் சாதிவெறி. இந்தக் கலாச்சாரத்தைக் காக்கத்தான் இவர்கள் மாநாடு போடுகிறார்கள். பணம் வசூலிக்கிறார்கள். தேர்தலிலும் போட்டியிடுகிறார்கள். இப்படி பகிரங்கமாகவே கிரிமினல்கள் பொதுவாழ்க்கையில் கலந்து கொள்வது இந்தியாவைத் தவிர வேறு எங்கு நடக்கும்?

மக்கள் அதிகாரம் – புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

1

வுடையார்கோவிலில் 29-09-2015-ம் தேதி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சாளர்களில் பெரும்பாலானோர் காவல்துறையின் அயோக்கியத்தனத்தையும், டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய பச்சையப்பா கல்லூரி மாணவ – மாணவிகளை தாக்கியும், டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய மக்கள் மீது பொய்வழக்கு போட்ட காவல்துறையை கண்டித்தும் பேசினார்கள்.

ஆவுடையார்கோவிலில் காவல் ஆய்வாளராக உள்ள பிரேம் ஆனந்த், சினிமா பாணியில் வரும் விறைத்த போலீசாக தனக்கு கீழ் வேலை பார்க்கும் காவலர்களிடம் காட்டி வந்தார். மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டத்தின் மூலம் அவரது பிம்பம் கலைய தொடங்கியதால், ஆத்திரம் அடைந்து பிரேம் ஆனந்த் மற்றும் காவலர் மாரிமுத்து மக்கள் அதிகார தோழர்கள் MSK பழனி, இந்தியன் பழனி ஆகியோர் தனியாக இருந்தபோது சீருடை அணியாமல் கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு தோழர்களைப் பார்த்து “கோத்தா, கொம்மா, ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா” என்று பேசி ரௌவுடித்தனம் செய்ததை ஏற்கனவே வினவில் “ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் அதிகார தோழர்கள் மீது இன்ஸ்பெக்டர் காட்டிய வீரம்” என்ற தலைப்பில் எழுதியிருந்தோம்.

போலீஸ் தாக்குதல் குறித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்பிய கடிதம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இதனைத் தொடார்ந்து தோழர்கள், ஆவுடையார்கோவில் அம்பாள்புரம், கீழவீதி, ஒக்கூர் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு மக்களிடம் பிரச்சாரம் செய்து மக்களை தயார் செய்து வருகின்றனார். இதனால் ஆவுடையார்கோவில் காவல்நிலையத்தில் எஸ்.பி சி.ஐ.டி யாக இருக்கும் ராஜாராம், ஆய்வாளார் பிரேம் ஆனந்த், மாரிமுத்துவைப் போன்று முரடர்களாக நடக்காமல் நரித்தனமான சில சதி வேலைகளில் ஈடுபட்டார்.

தோழர்களின் வீடுகளுக்கு ரகசியமாக சென்று அவர்கள் பெற்றோர்களை சந்தித்து தோழர்களின் எதிர்கால வாழ்க்கையின் மீது அதீத அக்கறை கொண்டவர் போல் நடித்து, “மக்கள் அதிகாரம் அமைப்பு அரசுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத அமைப்பு அதில் உங்கள் பிள்ளைகள் இருந்தால், அரசு வேலை கிடைக்காது” என்று கூறியுள்ளார்.

அதற்கு அந்த பெற்றோர்கள், “அமைப்பில் சேராமல் சும்மா இருந்தால் அரசு வேலை கிடைத்துவிடுமா?” என்று எதிர்கேள்வியை கேட்டுள்ளனார்.

அதற்கு ராஜாராம் புத்திசாலித்தனமாக, “TNPSC, IAS, IPS தேர்வுகளை எழுதுவதற்கு தாம் இலவசமாக பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்வதாக” சொல்லியுள்ளார்.

ராஜாராமின் நோக்கத்தை புரிந்தவர்கள், “அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் செல்லுங்கள்” என கூறியுள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் பேசவந்த பேச்சாளார்களையும், ஆர்ப்பாட்டத்தில் பேசவேண்டாமென மூளைச்சலவை செய்துள்ளார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்நிலையில் பிரேம் ஆனந்த், மாரிமுத்து ஆகிய போலீஸ்காரர்கள் மக்கள் அதிகாரத் தோழர்களை மீண்டும் வீடுகளுக்கு சென்று விசாரணை என்ற பெயரில் தோழர்களைப் பற்றி மக்களுக்கு பீதியை ஏற்படுத்த முயற்சித்து வந்ததால், ஆவுடையார்கோவில் மக்கள் அதிகாரம் சார்பில் காவல் ஆய்வாளரர் பிரேம் ஆனந்த், காவலர் மாரிமுத்து ஆகியோரின் சட்ட விரோத செயல்களை கண்டித்து கண்டன போஸ்டர்கள் ஆவுடையார்கோவில், அறந்தாங்கி, கரூர், ஒக்கூர் போன்ற இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டன.

இதனை மக்கள் ஆங்காங்கே நின்று பரபரப்பாக பார்க்க தொடங்கியவுடன் பீதி அடைந்த போலீசு மக்கள் படிக்கும்போதே பகல் நேரத்தில் போஸ்டர்களை கிழித்து மக்களிடம் அம்பலப்பட்டுப் போனார்கள். பின்னர் 12-10-2015 அன்று மக்கள அதிகார மாநில ஒருங்கிணைப்புக் குழு தோழர்கள் மாரிமுத்து, தனியரசு, மக்கள் கலை இலக்கியக் கழக தோழர் ஜீவா, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் மணிமாறன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சோர்ந்த வழக்கறிஞர்கள் இராமலிங்கம், அலாவுதீன் மற்றும் ஆவுடையார்கோவில் மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட தோழர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து ஆவுடையார் கோவிலில் உள்ள அம்பாள்புரம், கீழவீதி மற்றும் ஒக்கூர் டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லியும் ரௌடித்தனம் செய்த ஆய்வாளர் பிரேம்ஆனந்த், காவலர் மாரிமுத்து ஆகியோர் மீது நடவடிக்கை கோரியும் நேரில் சென்று முறையிடச் சென்றார்கள்.

ஆனால் தோழர்கள் ஒருமணி நேரமாக கலெக்டரைச் சந்திக்க கேட்டும் அனுமதி வழங்கப்படாததால் “கலெக்டர், மக்கள் அதிகார தோழர்களைச் சந்திக்காமல் அறையைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்கமாட்டோம்” என்று அறிவித்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அனைத்து மீடியாக்களும் படம் பிடிக்க தொடங்கிவிட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகார வார்க்கம் தோழர்கள் கலெக்டரை சந்தித்து பேச உடனே அனுமதி வழங்கினர்.

மக்கள் அதிகாரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதைக் குறித்த பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அப்பொழுது டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லியும், ஆவுடையார்கோவில் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், காவலர் மாரிமுத்து ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதற்கு உடனே மாவட்ட ஆட்சித் தலைவர் அறந்தாங்கி வருவாய் வட்ட கோட்டாட்சியரை அழைத்து போலீசுக்கு எதிரான புகாரை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதி அளித்தார். அதனைத் தொடார்ந்து கலெக்டர் அலுவலக போராட்டம் கைவிடப்பட்டது.

மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனுக்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தற்பொழுது காவலர் மாரிமுத்து ஆவுடையார்கோவில் காவல் நிலையத்திலிருந்து பணி மாற்றம் செய்து விராலிமலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

டாஸ்மாக் கடைகளை நிபந்தனையின்றி மூடவேண்டும், மூடாவிட்டால் நாங்கள் மக்களை திரட்டி மூடுவோம் என அறிவித்து ஆவுடையார்கோவில் மக்கள் அதிகார தோழார்கள் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், காவலர் மாரிமுத்து, SP CID ராஜாராம் ஆகியோரின் சதிகள், மிரட்டல்கள் மற்றும் அதிகார மமதைகளை உடைத்து அடுத்த கட்ட போரட்டத்திற்கு தயராகி கொண்டிருக்கின்றார்கள்.

மேலும் ”போலீசால் பொய் வழக்கு போட்டு சிறையில் தான் அடைக்கமுடியும், மக்களுக்காக அதனை எதிர்கொள்ள, தோழரர்கள் தயாராக இருக்கிறோம்” எனக் கூறி போலீசின் தார்மீக பலத்தை ஆவுடையார்கோவிலில் இழக்கச் செய்து வருகிறார்கள்.

தகவல்

மக்கள் அதிகாரம்,
ஆவுடையாரர்கோவில் பகுதி,
புதுக்கோட்டை மாவட்டம்.

விஷ்ணுபிரியா மரணம் – கடலூரில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

0

நேர்மையாய் வாழ வேண்டுமாயின்
வதைபடுதலும், மரியாதையை இழப்பதும்
எந்நேரமும் போராடுதலும்,
இடறி விழுவதும், முட்டி மோதுவதும்
அவமானப்படுதலும் எந்நேரமும் இழப்புக்கு உள்ளாவதும்
தவிர்க்க முடியாதவை
மீண்டும் எழுந்து போராடு

– லியோ டால்ஸ்டாய்

விஷ்ணு பிரியா தூக்கு! முத்துக்குமாரசாமி தற்கொலை! சுடுகாட்டில் உறங்கிய சகாயம்!

விஷ்ணுபிரியா
கொலை செய்தது போலீசு  கைது செய்து உள்ளே தள்ளு!

ர்மமில்லை
சந்தேகமில்லை
கொலை செய்தது போலீசு
கைது செய்து உள்ளே தள்ளு!

ரவுடியும், போலிசும் கூட்டாளி
ஜட்ஜ் அவனுக்கு பங்காளி
போராடுபவனுக்கு எதிராளி
ரவுடி கையில் சட்டம் ஒழுங்கு
போராடுபவனுக்கு போலிசு விலங்கு

சி.பி.சி.ஐ.டி என்பது லேடி போலீசு
சி.பி.ஐ என்பது மோடி போலிசு
லேடி போலிசும், மோடி போலிசும்
மூடிமறைக்கும் கைக்கூலிகள்

நாட்டில் நடப்பது ரவுடிகள் ஆட்சி
நாட்டில் நடப்பது போலீசு ஆட்சி
நம்ப மறுத்தால் இதுவே சாட்சி!

நம்பாதே! நம்பாதே!
காவல் துறையை நம்பாதே!
நீதித்துறையை நம்பாதே
ஆளு வச்சி கொல்லுறான்
அடிச்சி தூக்குல மாட்டுறான்!

காவல் துறையில் படுகொலை
நீதித் துறையில் படுகொலை
வேளாண்மை துறையில் படுகொலை
கனிம வளத்துறையில் படுகொலை
கல்வித் துறையில் படுகொலை

தோற்றுப்போச்சு! தோற்றுப்போச்சு
அரசமைப்பே தோற்றுப் போச்சு
நாட்டையும், மக்களையும் பாதுகாக்க
அதிகாரத்தை கையிலெடுப்போம்!

என்ற முழக்கங்களோடு கடலூரைச் சேர்ந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவின் மரணத்தின் பின்னணியை அம்பலப்படுத்தி கடலூரில் பிரச்சார இயக்கமும், 09-10-2015 அன்று பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தை பொறுத்தவரையில், ஆரம்பம் முதலே எல்லாக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுவது, நேரில் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறுவது என்றளவில் மட்டுமே வினையாற்றினார்கள். ஒரு இளம்பெண் அதிகாரி நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டு கொங்கு வேளாளர் சாதியைச் சேர்ந்த கல்வி முதலாளிகள், சாதி வெறியர்கள், ரவுடிகள், கொலைகாரர்களின் கொட்டத்தை அடக்கி வைக்கப் போராடிக் கொண்டிருந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சார்ந்த தலித் சமூகத்தில் பிறந்த பொறியியல் மாணவர் கோகுல் ராஜ், சாதி மாறி நட்பு வைத்த ஒரே காரணத்திற்காக கொங்கு வேளாள சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் நடந்தது.

யுவராஜ் - கோகுல்ராஜ் - விஷ்ணுபிரியா
சம்பவத்தில் முதல் குற்றவாளி வாட்சப் யுவராஜ்

இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளி பயங்கரவாதி யுவராஜ். இவரை பிடிக்கும் பொறுப்பும் இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பும் விஷ்ணுபிரியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கு முன்பாக ஆயில் மில் முதலாளி ஜெகந்நாதன் கொலை வழக்கிலும், யுவராஜூக்கும், கூலிப்படைத் தலைவன் கொலைகாரன் பேச்சி முத்துவுக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து இந்த வழக்கின் விசாரணையும் விஷ்ணு பிரியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேற்கண்ட இரு வழக்குகளிலும் மேலதிகாரிகளின் உத்தரவினால் (ஐ.ஜி.பி சங்கர், எஸ்.பி செந்தில்குமார், எஸ்.பி ராஜ்) தவறான குற்றவாளிகளைக் கைது செய்து வழக்கை முடித்துவிட வேண்டும் என்ற உத்தரவை ஏற்க மறுத்து ஆரம்ப முதலே அவர்களோடு டி.எஸ்.பி விஷ்ணு பிரியா போராடியதை கீழக்கரை டி.எஸ்.பி மகேஸ்வரி, வழக்குரைஞர் மாளவியாவின் பேட்டியில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

முடிவாக காவல் துறையிலும், அதற்கு வெளியிலும் உள்ள அரசியல், கிரிமினல்கள், சாதிவெறிக் கிரிமினல்களின் கூட்டுச்சதியே இந்த மரணத்தில் மேலாதிக்கம் செலுத்துகிறது என்பதுதான் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை. சட்டம், நீதி, நேர்மை எல்லாம் எங்கள் மசுருக்கு சமம் என்று சவால் விட்டு இருக்கிறார்கள் இந்த முக்கூட்டு கிரிமினல்கள்.

உள்ளுர் ஆளும்கட்சி சாதிவெறியர்கள், அரசியல் கிரிமினல்களின் கைக்கூலிகளாக அதிகார வர்க்க கிரிமினல் எஸ்.பி செந்தில்குமார், ஐ.ஜி.பி சங்கரிடமும், எஸ்.பி விஷ்ணு பிரியாவுடன் ஏற்பட்ட மோதல்களையும், லஞ்சம் வாங்க மறுப்பதையும் பேசியுள்ளார். இவை மட்டும் அல்லாமல் கல்லாக் கட்டும் பேர்வழிகளான ஐ.ஜி.பி சங்கர், எஸ்.பி செந்தில்குமார் இருவருக்கும் மாதாமாதம் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்து தரவேண்டும் என வாய்மொழி உத்தரவிட்டு இருக்கின்றனர்.

விஷ்ணுபிரியா தற்கொலை கடிதம்
விஷ்ணுபிரியா தூக்கு தொடர்பாக காவல்துறையை கண்டித்து கடலூரில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

இதை ஏற்க மறுத்து முரண்பட்ட வேளையில் காவல் துறையால் நடத்தப்படும் பல அதிகாரிகளின் கூட்டத்திலும், போலீசு வாக்கி டாக்கியிலும் “நீ போலிசு வேலைக்கே தகுதியில்லை” என்று மரியாதைக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ளனர், இந்த காக்கி கிரிமினல்கள். இப்படிப்பட்ட அதிகாரவர்க்க கிரிமினல்களின் அடக்குமுறையால் தான் காவல் துறையிலேயே 250-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக புள்ளி விவரம் தருகிறது தமிழ்நாடு காவல்துறை.

விஷ்ணு பிரியாவின் வீட்டுக்கு வந்த தமிழிசை சௌந்தரராஜன், கனிமொழி, வைகோ உள்ளிட்ட பலரும் பொதுவில் ஆறுதல் கூறுவது, கண்டனம் தெரிவிப்பது என்றதோடு நிறுத்திக் கொண்டனர். விஷ்ணு பிரியாவின் மரணத்திற்கு பின்புலமாக செயல்பட்ட சாதி வெறியர்கள், அதிகார வர்க்க கிரிமினல்களை ஒரு வார்த்தை கூட விமர்சித்து பேசவில்லை.

காவல்துறை மட்டுமல்ல உள்துறை செயலர் ஞானதேசிகனின் உறவினர்களும், வேளாண்மைத்துறை பொறியாளர் முத்துக்குமார சாமியின் தற்கொலை, கிரானைட் கொள்ளை விவகாரத்தில் சட்ட ஆணையர் சகாயம் ஐ.ஏ.எஸ் இந்த அரசை, போலீசை நம்பாமல் சுடுகாட்டிலேயே படுத்துறங்கி செத்த பிணத்தின் மண்டை ஓடுகளிலும், எலும்புக் கூடுகளிலும், நீதியையும், ஆதாரங்களையும் தேடி கொண்டிருக்கிறார்.

இந்த அரசுக் கட்டமைப்பு தோல்வியடைந்து விட்டது என்று எமது மக்கள் அதிகாரம் பிரச்சாரம் செய்கிறது. ஆனால் அரசுக்கு உள்ளேயே இருந்து உயர்பொறுப்பில் உள்ளவர்களே வாழ்வா? சாவா? என்று போராடி கொண்டிருக்கின்றனர்.

ஆம், இது தனிப்பட்ட முத்துக்குமார சாமி, விஷ்ணு பிரியா, சகாயம் ஆகியோரின் தனிப்பட்ட விவகாரம் அல்ல அரசுக்குள்ளும், அரசுக்கு வெளியேயும் உள்ள நேர்மையாளவர்களுக்கும், நேர்மையற்ற மக்கள் விரோதிகளுக்கும் இடையில் நடக்கும் யுத்தம்.

காவல்துறை, நீதித்துறை, கல்வித்துறை, கனிம வளத்துறை, மருத்துவத் துறை என அரசின் அனைத்து கட்டுமானத் துறைகளும் மக்களுக்கு சேவையாற்றுவதற்கு பதிலாக சிதைக்கப்பட்டு அதிகார வர்க்க குற்ற கிரிமினல்களின் கையில் சிக்கி சீரழிந்துள்ளதோடு மட்டும் அல்லாமல் தோற்றுப்போய் மக்களுக்கே எதிரான நிறுவனங்களாக மாறிப் போனதன் விளைவே விஷ்ணுபிரியாவின் இறப்பு என்பதை விளக்கியும், இதற்குத் தீர்வு மக்கள் அதிகாரத்தை கையிலெடுப்பதே என்று விளக்கியும் நகரம் எங்கும் வீடு வீடாகவும், பேருந்துகளிலும் எமது மக்கள் அதிகார தோழர்கள் பிரச்சாரம் செய்தனர்.

09-10-2015 அன்று காலையில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை வழக்குரைஞர் சங்கத்தலைவர் வேலுகுபேந்திரன் பேசுகையில், “மக்களை பாதுகாக்கத்தான் அரசு. அது மக்களுக்காகத்தான் செயல்பட வேண்டும். அந்த மக்களின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்பட்டு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தங்களை பாதுகாத்துக் கொள்ள எந்த ஆயுதத்தையும் எடுததுக் கொள்ளலாம் என்று சட்டமே சொல்கிறது. அரசே இனி உன்னால் முடியாது. நாட்டை ஆளப்போவது மக்கள் அதிகாரமே” என்று முடித்தார்.

மக்கள் வாழ்வதாரப் பாதுகாப்பு இயக்கத்தின் லோகபரணி பேசுகையில், “விஷ்ணுபிரியாவுக்கு காதலன் யார்? கோயில் குருக்களா, வக்கீல் மாளவியாவா? என்று ஆள்செட்டப் செய்யும் மாமாவாக மட்டுமே சி.பி.சி.ஐ.டி போலிசும், அரசும் செயல்படுகிறது. ஒரு நேர்மையான அதிகாரியை இழந்துவிட்டோமே என்ற வருத்தம் அரசுக்கு துளிகூட இல்லை. கடந்த 7 ஆண்டுகளாய் சாயப்பட்டறையை தடுக்க போராடி வருகிறோம். எங்கள் அனுபவத்தில் ஒரு நேர்மையான அதிகாரியை கூட பார்க்க முடியவில்லை” என்றார்.

வெண்புறா பொது நல பேரவை தலைவர் குமார் பேசுகையில், “இனி மனுகொடுப்பது, மண்டியிடுவது தேவையில்லை. நிலைமைகள் கைமீறி போகும்போது சட்டமன்றம், தலைமை செயலகம், கவர்னர் அலுவலகம் என்று முற்றுகையிட்டு போராடுவதுதான் தீர்வை நோக்கி இட்டுச் செல்லும்” என்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை மாநில இணைச்செயலர் மதிசேகர் பேசுகையில்,  “அதிகாரிகளும், அமைச்சர்களும், ரவுடிகளும் கூட்டு சேர்ந்து தமிழகத்தை கிரிமினல் மயமாக்கி வருகின்றனர். யார் குற்றவாளியோ அவனிடமே மனுகொடுக்கும் அவலம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது” என்று அம்பலப்படுத்தினார்.

இறுதியில் பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ,  “இந்த அரசின் அனைத்து கட்டுமானங்களும் மக்களைப் பாதுகாக்க வக்கற்று தோற்றுப்போனது மட்டுமல்ல, தன்னை பாதுகாக்கும் அதிகாரியை கூட பாதுகாக்கும் தகுதியிழந்ததன் விளைவுதான் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரணமும், முத்துக்குமாரசாமி தற்கொலையும், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தின் போராட்டமும் நிரூபிக்கின்றன.

இந்த அரசானது ஒரு பழுதடைந்த வாகனம். இதில் மனுகொடுப்பது என்பது உடைந்த பாகங்களை மட்டும் மாற்றுவதற்கு ஒப்பானது. கட்சி மாற்றி ஓட்டு போடுவது என்பது டிரைவரை மாற்றுவதற்கு ஒப்பானது. இங்கு காரும், கார் டிரைவரும், அது போகும் சாலையும் மோசமாக இருக்கும்போது பயணங்கள் எப்படி நல்லமுறையில் போக முடியும். எனவே பயணிகளாகிய அதாவது மக்களாகிய நாம் நம்மை ஆளத் தகுதியற்ற இந்த அரசக்கட்டமைப்பையும், அதில் உள்ள காவல்துறை, நீதித்துறை உள்ளிட்ட அனைத்து அதிகார வர்க்க கிரிமினல் கும்பலையும் கேள்விக்குள்ளாக்கி மக்கள் அதிகாரத்தை நிறுவுவதே நமது உடனடிக்கடமை” என்று முடித்தார்.

குறிப்பு:

டி.எஸ்.பி தூக்கிட்டதாக சொல்லப்படும் சம்பவத்துக்கு வருவோம். 16-ம் தேதி உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருந்து விட்டு, சம்வத்தன்று காலையில் திருச்செங்கோட்டில் போக்குவரத்துக் காவலருக்கும், பள்ளி ஆசிரியருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் போலிசு ஆசிரியரை அடித்த சம்பவத்தில் ஏற்பட்ட சாலை மறியல் மற்றும் வினாயகர் சிலை ஊர்வலத்தின் பாதுகாப்பு என்று இருவேலைகளையும் முடித்து விட்டு 2.48 மணிவரை நண்பர்கள், உறவினர்கள் மற்றும் கீழக்கரை டி.எஸ்.பி-யும், தன் தோழியுமான மகேஸ்வரியுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் நாமக்கல் எஸ்.பி செந்தில் குமாரிடமிருந்து போன் அழைப்பு வந்துள்ளது.

இதற்குப் பின் 3.00 மணிவாக்கில் மகேஸ்வரி மீண்டும் தொடர்பு கொள்ளும்போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின் 5 மணிக்கு விஷ்ணு பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தொலைக்காட்சி செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார் மகேஸ்வரி.

5.00 மணிக்கு வேலைக்கு சென்ற வீட்டு வேலைக்காரம்மா ஜன்னல் வழியே பார்த்த பின்தான் தெரியும் என்கிறது போலிசு.

இதிலிருந்து நமக்கு எழும் கேள்விகள்

சம்பவ இடத்தின் கூரை 12 அடிக்கும் அதிக உயரத்தில் உள்ளது.  இந்த நீண்ட இடைவெளியில் குண்டான டி.எஸ்.பி எப்படி துப்பட்டாவை மாட்டியிருக்க முடியும்?

இந்த வளாகத்திற்குள் போலிசு தவிர மற்ற நபர்கள் யாரும் அவ்வளவு எளிதில் நுழைய முடியாது.

மிகக் குறுகிய நேரத்தில் 9 அல்லது 12 அல்லது 15 பக்க கடிதங்கள் எழுத வாய்ப்பே இல்லை.

நேரில் வந்த எஸ்.பி செந்தில்குமார் ஒரு உயர் அதிகாரி தற்கொலை செய்து கொண்டதை நீதித்துறை அதிகாரம் கொண்ட டெபுடி தாசில்தார், அல்லது மாஜிஸ்ரேட் முன்னிலையில் தான் அறையை ஆய்வு செய்ய வேண்டும் என்ற சட்ட நடைமுறை கடைபிடிக்கப்படாமல் தான் மட்டுமே ஆய்வு செய்ததன் நோக்கம் என்ன?

தகவல்
மக்கள் அதிகாரம், கடலூர்
8810815963

படங்கள் : நன்றி thenewsminute.com

ஈழப் போர்க்குற்ற விசாரணை: தோல்வியில் முடிந்த தமிழினவாதிகளின் உத்திகள்

21

மிழீழ விடுதலைக்கான புலிகளின் ஆயுதப் போரைப் போலவே, ஈழ இறுதிப் போரில் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களுக்குக் காரணமான போர்க் குற்றவாளிகளைத் தண்டிப்பது, ஈழத்தின் திறந்தவெளியில் சிறைப்பட்டுக் கிடக்கும் அகதிகளை விடுவிப்பது, ஒரு பொதுவாக்கெடுப்பு மூலம் தமிழீழத்தைப் பெறுவது முதலானவற்றை அமெரிக்க வல்லரசின் தலைமையில் சர்வதேச சமூகத்தைக் கொண்டு சாதிப்பது என்ற இனவாதிகளின் உத்திகளும் சோகமான முடிவுகளை எட்டியிருக்கின்றன.

வவுனியா மாணிக்ஃபார்ம் முகாமில் தமிழ் அகதிகள்
வவுனியா மாணிக்ஃபார்ம் முகாமில் தமிழ் அகதிகள் (கோப்புப் படம் இணையத்திலிருந்து)

ஈழச் சிக்கலுக்குச் சர்வதேச சமூகம் மூலமான தீர்வுகளுக்குச் சாதகமாக அமெரிக்க வல்லரசின் நிலைப்பாடுகள் இருக்கும் என்று இனவாதிகள் கற்பிதம் கொண்டிருந்ததும் பொய்த்துப் போனது. சீனா – ராஜபக்சே கூட்டுக்கு எதிராக அரசியல் காய்களை நகர்த்தினால், சீன எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தால், அமெரிக்க வல்லரசு மட்டுமல்ல, இந்திய வட்டார வல்லரசுகூட ஈழச் சிக்கலில் தமக்குத் துணை நிற்கும் என்று உலகின் மாபெரும் அரசியல் சிந்தனையாளர் என்று தாம் போற்றிய பிரபாகரனைப் போலவே இனவாதிகள் நம்பினர். அவர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்குப் பாராட்டும் அவரது தூதருக்கு நன்றியும் செலுத்தினார்கள். ஆனால், இனவாதிகளின் உத்திகள் எல்லாம் வெறுங்கனவாய்ப் போயின.

இனப் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றவாளிகளைத் தண்டிப்பது போன்ற அமெரிக்க நாடகங்கள் எல்லாம் தனது விசுவாசிகளான சிறீசேனா – ரணில் கும்பல் ஆட்சியைப் பிடிப்பது வரைதான் நீடித்திருந்தன. இப்போது ஈழத் தமிழினத்துக்கு எதிராக இலங்கையின் சிங்கள இனவெறி அரசே முன்மொழிந்தவாறு அமெரிக்க வல்லரசு கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா, சீனா உட்பட சர்வதேச சமூகம் முழுவதும் கைகோர்த்துக் கொண்டு, அக்டோபர் முதலன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளன.

முந்தைய தீர்மானங்களில் இடம் பெற்றிருந்த சர்வதேச நீதி விசாரணை கிடையாது; இனப் படுகொலைகள், போர்க் குற்றங்கள் போன்ற சொற்களும் நீக்கப்பட்டு, விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசு இரண்டினதும் மனித உரிமை மீறல்களை இலங்கையின் சட்ட முறைமைகளுக்குட்பட்டு, அந்நாட்டு நீதி அதிகாரிகளின் விசாரணையின் கீழ் நடத்தப்படும். அச்சமயம் இலங்கை அரசின், காமென்வெல்த் நாடுகள் போன்றவற்றின் நீதிபதிகள், சட்ட வழக்குரைஞர்கள் உடனிருப்பார்கள். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தீர்மானத்தின் அமலாக்கம் பரிசீலிக்கப்படும். இவை தவிர, ஈழத்தின் திறந்தவெளிச் சிறைகளில்/முகாம்களில் வதியும் அகதிகள் விடுதலை, இராணுவ வெளியேற்றம், பறிக்கப்பட்ட நிலங்கள் ஒப்படைப்பு மற்றும் அரசியல் உரிமைகள் ஆகியவை குறித்த பேச்சுக்கள் எதுவும் கிடையாது.

என்றாலும் அந்தத் தீர்மானத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு ஆளும் தமிழ்தேசக் கூட்டமைப்பின் பிரமுகர்கள் தனித்தனியான முறையில் கூறிவருகிறார்கள். ஆனால், அந்தத் தீர்மானத்தின் மீது வடக்கின் அதிகாரபூர்வ ஆட்சியாளர்களோ ஒப்புக்கு அதிருப்தியும் அவநம்பிக்கையும் தெரிவித்தாலும், மாற்றுத் தீர்வு எதையும் முன்வைக்கவில்லை.

அந்தத் தீர்மானத்தைத் தமிழகக் கட்சிகள் அனைத்தும் நிராகரித்து, அதற்கு எதிராக ஓட்டளிக்குமாறு இந்திய அரசைக் கோரி ஒருமனதாகச் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றின. அதைக் கழிப்பறைக் காகித அளவுக்குக்கூட இந்திய அரசு மதிக்கவில்லை. கடனுக்குத் தீர்மானம் நிறைவேற்றியதோடு கண்டன அறிக்கை தவிர, வேறு எதையும் அக்கட்சிகள் செய்யவில்லை. தமிழக இனவாதக் குழுக்கள் சடங்குத்தனமான அடையாளப் போரட்டங்களுக்கு மேல் எதுவும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. ஈழத் தமிழினம் ஆளும் சிங்கள இனவெறிக்கு எதிராகத் தமது இனவுரிமைக் கோரிக்கைகளோடு, இலங்கையின் உழைக்கும் மக்களோடு வர்க்கரீதியில் இணைந்து நீண்டகால நோக்கில் ஜனநாயகத்துக்காகப் புரட்சி வழியில் போராடுவதுதான் ஈழச் சிக்கலுக்குத் தீர்வாகும்.
_________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
_________________________________

பாலாறு மணல் கொள்ளை – தட்டிக் கேட்டால் சிறை

0

மணல் கொள்ளையனைப் பாதுகாக்க திருப்பாற்கடல், அத்திபட்டு ஊர்களை சூறையாடிய ஆர்.டி.ஓ, தாசில்தார், போலீசு

க்களின் வாழ்வாதாரங்களையும், உரிமைகளையும் பாதுகாக்கத்தான் அரசு என்ற கதையெல்லாம் காலாவதியாகிப் போய்விட்டது என்பதற்கு வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள திருப்பாற்கடல், அத்திப்பட்டு ஆகிய ஊர்களில் வேலூர் மாவட்ட அரசு நிர்வாகம் நடத்திய அட்டூழியம், அரசு நம்மை ஆளும் தகுதியை இழந்து விட்டதை சாட்சியாக நம்முன் நிறுத்தியுள்ளது.

பாலாற்று மணல் கடந்த பல ஆண்டுகளாக மணல் மாஃபியாக்களால் சூறையாடப்பட்டு வருகின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அப்படி சூறையாடப்பட்ட இடங்களில் எல்லாம் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் மணல் கொள்ளையை தடுக்க போராடியுள்ளனர். அந்த போராட்டங்களை எல்லாம் ஒடுக்கி மணல் மாஃபியாக்களுக்கு துணை நின்றது மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ, தாசில்தார், வி.ஏ.ஓ, ஊர் பஞ்சாயத்து தலைவர் ஆகியோர்தான் என்பதும் வெட்ட வெளிச்சமான உண்மை. இதன் தொடர்ச்சியாக திருப்பாற்கடல், அத்திப்பட்டு ஆகிய இரண்டு கிராமங்களில் கடந்த மூன்று வருடங்களாக அனுமதியின்றி சட்டவிரோதமாக மணற்கொள்ளை நடைபெற்று வருகின்றது.

காவேரிப்பாக்கம் பேருராட்சி தலைவராக ஜெயா கட்சியின் குலக்கொழுந்து சாராய மணி. இவரின் குலத் தொழிலே சாராயம் காய்ச்சுவது. தற்போது இதை ஜெயா செய்து வருவதால் தனது தொழிலை விட்டுக் கொடுத்துவிட்டு அதைவிட அதிக வருவாய் வரும் மணலை கொள்ளையடித்து வருகின்றார். தி.மு.க.வைச் சேர்ந்த பாஸ்கரன், மணி, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட சாராய வியாபாரி முருகன், ஜெயா கட்சியின் கவுன்சிலர் குட்டா என்ற சுந்தர் ஆகிய இந்த கிரிமினல் கும்பல்தான் மணல் கொள்ளையை கடந்த மூன்று வருடங்களாக நடத்தி வருகின்றது. இதற்கு இடையூறு இல்லாமல் பாதுகாக்கும் முக்கியமான வேலையை , வேலூர் மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ, தாசில்தார், போலீசு என்ற மொத்த அரசு நிர்வாகமும் செய்து வருகின்றனர்.

இங்கு மணல் கொள்ளையடிக்கும் டிராக்டர்களை ஓட்டுபவர்கள் அனைவரும் லைசன்ஸ் இல்லாத சிறுவர்கள். இவர்கள் எப்போதும் குடிபோதையில்தான் டிராக்டர் ஓட்டுவார்கள். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு சம்பளம் போக 1 குவாட்டரும் பிரியாணி பொட்டலம் வழங்கப்படும். மணல் அள்ளிக் கொண்டு நிலை தடுமாறி ஊருக்குள் செல்லும் இந்த டிராக்டர்களால் ஒவ்வொரு நொடியும் விபத்தை எதிர்நோக்கி அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர் திருப்பாற்கடல், அத்திப்பட்டு கிராம மக்கள்.

திருப்பாற்கடல் மக்கள் போராட்டம்
மக்கள் போராட்டம் – “தாசில்தார், ஆர்.டி.ஓ வராமல் டிராக்டரை எடுக்க அனுமதிக்க முடியாது”.

இந்நிலையில் 09.10.2015 அன்று நள்ளிரவு 1 மணிக்கு மணல் ஏற்றிக் கொண்டு தள்ளாடி வந்த டிராக்டர் மின்கம்பத்தில் மோதி மின்கம்பத்தை சாய்த்து டிராக்டர் குப்புற கவிழ்ந்தது. இதன் மூலம் 10 கிராமங்களில் மின்சாரம் தடைபட்டது.

திருப்பாற்கடல் முழுவதும் தறி ஓட்டும் தொழில் செய்து வரும் மக்கள் மற்றும் சுற்றுப்பட்ட கிராம மக்கள் சம்பவம் நடந்த இடத்தில் கூடிவிட்டனர். உடனே அங்கு வந்த காவேரிப்பாக்கம் போலீசு ஆய்வாளர் சந்திரசேகரன் உடனே ஜே.சி.பி-ஐ வரவழைத்து விடிவதற்குள் டிராக்டரை எடுத்து, சம்பவம் நடந்ததே தெரியாமல் செய்துவிட வேண்டும் என முயற்சி செய்தார்.

மக்கள் விடவில்லை. “தாசில்தார், ஆர்.டி.ஓ வராமல் டிராக்டரை எடுக்க அனுமதிக்க முடியாது” என்றனர்.

பொழுது விடிந்தது. காலை 8 மணிக்கு ஊருக்கு வந்த அரசு பேருந்தை மக்கள் சிறை பிடித்தனர். “ஆர்.டி.ஓ, தாசில்தார் வராமல் பேருந்து போகாது” என்றனர்.

உடனே 1 மணி நேரத்தில் தாசில்தார் குணசேகரன், ஆர்.டி.ஓ முருகேசன் வந்தனர். தாசில்தார் சேர் எடுத்துப் போட்டு உட்கார்ந்தார். 5 மணி நேரத்துக்கு மேல் கால் கடுக்க காத்து நின்ற மக்கள் தாசில்தாரை சேரில் உட்கார அனுமதிக்கவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகாளக நடந்துவரும் மணற் கொள்ளையை தடுக்க பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத தாசில்தாரை மக்கள் நாக்கை பிடுங்கும் அளவு கேள்விகளை கேட்டனர்.

ஒருவர் “மனசாட்சியை தொட்டு சொல் எவ்வளவு மாமூல் வாங்குற” என்று கேட்டார். உணர்ச்சிவசப்பட்ட தாசில்தார் “நான் மட்டுமா வாங்குறேன், எல்லாரும்தான் வாங்குறாங்க” என்றார்.

ஆர்.டி.ஓ, டி.எஸ்.பி, தாசில்தார் என அதிகார தாழ்வாரங்கள் அனைத்தும் அங்கு வந்துவிட்டன. பேருந்தை விடுவிக்க கோரினர்.

“ஸ்பீடு பிரேக் உடனே போட வேண்டும், மின்சாரம் வர உடனே ஏற்பாடு செய்ய வேண்டும், இனி மணல் கொள்ள நடக்க கூடாது” என்ற கோரிக்கைகளை முன் வைத்து எழுத்துபூர்வமாக எழுதி கேட்டனர், மக்கள்.

உடனே ஆர்.டி.ஓ, “நீங்கள் போலீசில் மணல் திருடியவர்கள் மீது புகார் கொடுத்துவிட்டு வாருங்கள் நான் எழுதி தருகிறேன்” என்றார்.

அருகில் இருந்த டி.எஸ்.பி, “இங்கு எத்தனை டிராக்டர் மணல் திருடப்படுகிறது, யார் திருடுகிறார்கள் என்று எங்க போலீசுக்கு தெரியும் நாங்க அரஸ்ட் பண்றோம். சிறை பிடித்த பஸ்ஸை விடுங்கள்” என்று கூறியதை நம்பிய மக்கள் சிறை பிடித்த பேருந்தை விடுவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சென்ற ஒரு சில நிமிடங்களில் அங்கு வந்து இறங்கிய 100-க்கும் மேற்பட்ட அதிரடி படை போலீசு ஊருக்குள் புகுந்து வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள், கழனிக்கு சென்று கொண்டிருந்தவர்கள், கடையில் நின்று கொண்டு இருந்தவர்கள் என அனைவரையும் வெறித்தனமாக அடித்து உதைத்து ஊரையே சூறையாடியது.

டி.எஸ்.பி தலைமையில் 40 பேரை கைது செய்து அடித்து இழுத்து சென்ற போலீசு, காவேரிப்பாக்கம் போலீசு ஸ்டேசனில் வைத்து போலீசு புடைசூழ கைது செய்யப்பட்ட 40 பேரையும் தனித்தனியாக அழைத்து மிரட்டி இனி போராட மாட்டேன் என்று சொன்னவர்களை வெளியே விட்டுவிட்டு போராடியது சரிதான் என்று கூறிய 20 பேரை மட்டும் தனியாக பிரித்து வைத்து கொடூரமாக அடித்துள்ளனர்.

திருப்பாற்கடல் போலீஸ் பயங்கரவாதம்
போலீஸ் காட்டுமிராண்டித்தனம்

விவேகானந்தன் என்ற போராட்ட முன்னணியாளரை தனி அறையில் அடைத்து அரக்கோணம் ஆய்வாளர் துரைப்பாண்டியன் என்பவரை வரவழைத்து, துரைப்பாண்டி, டி.எஸ்.பி மற்றும் சில போலீசார் விவேகானந்தனை தரையில் கால் நீட்டி உட்கார வைத்து தடியால் பாதத்தில் தாக்கியுள்ளனர். பாதம் மரத்து போனவுடன் பாதம் முதல் கால் முட்டி வரை தடியால் கொடூரமாக தாக்கி ரத்தம் வழிய வழிய அடித்துள்ளனர்.

டி.எஸ்.பி மதிவாணன் “மணல் அள்ளுனா உனக்கு என்னடா? இங்கேயே கொன்னு மூடிடுவேன்” என்று மிரட்டியுள்ளார்.

இரவு 8 மணிக்கு அனைவரையும் நீதிபதியிடம் ஆஜர் படுத்தியுள்ளனர். நீதிபதியிடம் அடித்து வீங்கி போன கால்களை ரத்த காயத்துடன் விவேகானந்தன் காட்டியுள்ளார்.

உடனே போலீசைப் பார்த்து, “காவேரிப்பாக்கம் போலீசு எப்போதும் இப்படிதான் நடந்து கொள்கின்றார்கள்” என்று சின்ன குழந்தை தவறு செய்த மாதிரி செல்லமாக திட்டிய நீதிபதி அனைவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

“எந்தத் தவறும் செய்யாத எங்களை போலீசு பிடித்து வந்துள்ளது” என்று கைதானவர்கள் கூறியதை காதில் வாங்காத நீதிபதி அனைவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

வாலாஜாபாத் மருத்துவமனைக்கு அழைத்து சென்று எந்தவிதமான சிகிச்சையும் அளிக்காமல் பெயரளவில் வைத்தியம் பார்த்ததாக கணக்கு காட்டி, வேலூர் மத்திய சிறையில் 20 பேரையும் அடைத்துள்ளனர்.

சிறையில் அடைப்பதற்கு முன்பு வேனில் வைத்து விவேகானந்தனை, “அடித்ததை வெளியில் சொன்னால் உன்னை ரவுடி லிஸ்டில் கொண்டு வந்து விடுவேன்” என்று டி.எஸ்.பி மதிவாணன் மிரட்டியுள்ளார்.

மணற் கொள்ளையை தடுக்க வேண்டிய ஆர்.டி.ஓ, தாசில்தார், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டி போலீசு, மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டும், மணற்கொள்ளையன் கொடுக்கும் லஞ்சப் பணத்திற்கு வேலை செய்கின்றனர். கிரிமினல்களை பாதுகாக்கும் இந்த குற்ற கும்பல்தான் நம்மை ஆட்சி செய்கிறது என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. அரசு மக்களை ஆள்வதற்கான தகுதியை இழந்து விட்டதற்கு மேலும் ஒரு உதாரணமாக இந்த சம்பவம் உள்ளது.

மக்கள் அதிகாரம், சென்னை

தொடர்பான செய்திகள்

  1. தினத்தந்தி
  2. தினகரன்
  3. தினமலர்

மூடு டாஸ்மாக்கை – அதிரையில் மக்கள் அதிகாரம் போராட்டம்

0
  • மூடு டாஸ்மாக்கை
  • மக்கள் போராட்டங்களை ஒடுக்குமுறையில் தடுக்க முடியாது
  • ஏரிப்புறக்கரை, அதிராம்பட்டினம் நகரம், கிழக்கு கடற்கரை சாலையில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடு
மூடு டாஸ்மாக்கை - அதிரை ஆர்ப்பாட்டம்
“டாஸ்மாக் கடை அருகில் போராட்டம் நடத்தினால், கடை மீது கல் வீசுவார்கள். கடையை மக்கள் தாக்குவார்கள்.” – காவல்துறை.

என்ற கோரிக்கையை முன் வைத்து அதிரை நகரம், பட்டுக்கோட்டை நகரம், மதுக்கூர், முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை, ஏரிப்புறக்கரை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பிரசுரம் வினியோகித்தும், தெருமுனைக் கூட்டங்கள் வாயிலாகவும் மக்கள் அதிகாரம் தோழர்கள் இரண்டு மாத காலமாக தொடர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இறுதியாக 15-10-2015 அன்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டனர். அதற்கு, “டாஸ்மாக் கடை அருகில் போராட்டம் நடத்தினால், கடை மீது கல் வீசுவார்கள். கடையை மக்கள் தாக்குவார்கள். எனவே டாஸ்மாக் கடை இருக்கும் இடத்தில் உங்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று உயர் அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்கு பதிலாக அதிரை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பட்டம் நடத்துங்கள்” என்று அனுமதி அளித்தனர்.

மூடு டாஸ்மாக்கை - அதிரை ஆர்ப்பாட்டம்
பெண்கள் முன்வந்து தாலிக் கயிற்றை காண்பித்து “வெறும் கயிறுதாங்க கிடக்குது, இந்த டாஸ்மாக்கால” என்று குமுறினர் – பிரச்சாரத்தில்

குறிப்பாக, முக்கிய சாலையான கிழக்குக் கடற்கரை சாலையில் பல்வேறு விபத்துகள் நடக்கின்றன. இரண்டு முக்கிய கல்லூரிகள், கோவில், மசூதி, சர்ச், மற்றும் குடியிருப்பு அருகில் இயங்கும் இந்தக் கடையை அகற்ற வலியுறுத்தி மக்களிடம் சென்றபோது நல்ல வரவேற்பு இருந்தது. பெண்கள் முன்வந்து தாலிக் கயிற்றை காண்பித்து “வெறும் கயிறுதாங்க கிடக்குது, இந்த டாஸ்மாக்கால” என்று குமுறினர். கடையை மூட வருகிறோம் என்றனர்.

பலர் டாஸ்மாக் கடை அருகிலேயே இறந்து கிடந்துள்ளனர்.

தோழர்கள், “அதிகாரிகளை நம்பி நமது வாழ்க்கையை காப்பாற்றவும், டாஸ்மாக்கையையும் மூட முடியாது. மக்கள் அதிகாரத்தால்தான் டாஸ்மாக்கை மூட முடியும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று பிரச்சாரம் செய்தனர்.

மூடு டாஸ்மாக்கை - அதிரை ஆர்ப்பாட்டம்கடை அருகில் போராட்டம் நடத்தினால் மக்கள் திரளாக வருவார்கள் என்று உணர்ந்த காவல்துறை வேறு இடத்தில் அனுமதி கொடுத்தது.

ஆர்ப்பாட்டம், மக்கள் அதிகாரம் தோழர் நடராஜன் தலைமையில் அதிரை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கிராமங்களில் இருந்து பெண்கள், கிராம கமிட்டி தலைவர்கள், பெரும் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். சமூக ஆர்வலர்கள், கிராம கமிட்டி தலைவர்கள், சி.பி.ஐ, வி.சி.கட்சி, தி.மு.க, ம.தி.மு.க, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள், உழைக்கும் மக்கள் கட்சி போன்ற அமைப்பினரும், தமிழ்தேச கூட்டமைப்பு தோழர் இராமசாமி, தமிழக மக்கள் விடுதலை இயக்கம் பொதுச்செயலர் தோழர் தங்க குமரவேல், மக்கள் அதிகாரம் மாநில தலைமைக்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன், மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் மாரிமுத்து ஆகியோர் கண்டனை உரையாற்றினர்.

“டாஸ்மாக் கடை அருகில் பார் வைத்துள்ளது, அரசு. 24 மணி நேரமும் டாஸ்மாக் சாராயத்தை பல இடங்களில் விற்பது அ.தி.மு.க.தான். டாஸ்மாக்கை மூடினால் அ.தி.மு.க கலைந்து விடும்.

கள்ளச்சாராயம் விற்றால் மக்களே தண்டனை வழங்க வேண்டும். கள்ளச் சாராயத்திற்கு துணை போகும் காவல்துறையை அம்பலப்படுத்துவது மூலமும், நாம் மக்கள் அதிகாரத்தை கையிலெடுக்கவும், நீதித்துறை போலீஸ், அதிகார வர்க்கம், அரசியல் கட்சிகள் போன்ற இத்துப் போன அமைப்புகளுக்கு மாற்று மக்கள் அதிகாரமே என்று நிறுவவும் வேண்டும்” என்று தோழர் காளியப்பன் உரையாற்றினார்.

செய்தி
மக்கள் அதிகாரம்,
பட்டுக்கோட்டை

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2015 மின்னிதழ் டவுன்லோட்

1

puthiya-jananayagam-september-2015
புதிய ஜனநாயகம் அக்டோபர் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

1. நீதித்துறை ஊழலை வீதிக்கு இழுத்த மதுரை வழக்கறிஞர் போராட்டம்!

2. ஈழப் போர்க்குற்ற விசாரணை: தோல்வியில் முடிந்த தமிழினவாதிகளின் உத்திகள்

3. டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா ‘தற்கொலை’ : குற்றக் கும்பல்களின் காவலர்களாக போலீசு!
குற்றவாளிகளைத் தண்டிக்கும் பொறுப்பில் உள்ள போலீசு, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளும், ஆட்சியாளர்களும் குற்றவாளிகளின் காவலர்களாகச் செயல்படுகிறார்கள்.

4. வழக்கறிஞர்களுக்கு எதிரான அடக்குமுறை : நடந்தது என்ன?

5. நீதிபதிகள் மன்னர்களும் அல்ல! வழக்கறிஞர்கள் அடிமைகளும் அல்ல!!
ஊழலும், பார்ப்பன பாசிசமும் கைகோர்த்து நிற்கும் இந்திய நீதித்துறை, வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கே எதிரியாகப் பரிணமித்து நிற்கிறது.

6. எம்.எம்.கல்புர்கி கொலை: இந்துமதவெறி – ஆதிக்க சாதிவெறிக் கூட்டணியின் அட்டூழியம்
முற்போக்கு சமூக சிந்தனையாளர்களை ஒடுக்கி, ஒழித்துக் கட்டும் பயங்கரவாதச் செயல்களில் இந்து மதவெறி அமைப்புகளும், ஆதிக்க சாதிவெறி சங்கங்களும் இயற்கை கூட்டாளிகளாகச் செயல்படுகின்றன.

7. சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு : ஜெயா வழங்கிய “மானாடா.. மயிலாட…”
அந்நிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதையே மோடியை விஞ்சிய சாதனையாகக் காட்டி சுயவிளம்பரக் கூத்தை வக்கிரமாக நடத்தியுள்ளது ஜெ. கும்பல்.

8. 2ஜி வழக்கில் பார்ப்பன நரித்தனங்கள்
2ஜி மற்றும் மாறன் சகோதரர்கள் மீதான வழக்குகளைக் கிளறி ஊதிவிடுவதன் மூலம், தி.மு.க.வைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறது தமிழகப் பார்ப்பனக் கும்பல்.

9. வியாபம் ஊழல் : பார்ப்பன கிரிமினல்தனம்
ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல் ஊழல் செய்தால், அது எத்துணை கிரிமினல்தனமாகவும், சதிகள் நிறைந்த பயங்கரமானதாகவும் இருக்கும் என்பதற்கு வியாபம் ஊழலே சாட்சி.

10. அரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!
11. சிரிய அகதிகள் : அமெரிக்காவே குற்றவாளி!
சிரியாவில் அதிபர் அல் அசாத் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அமெரிக்க தனது கைக்கூலிகள் மூலம் நடத்திவரும் அநீதியான போர்தான் இலட்சக்கணக்கான சிரிய மக்களை அகதிகளாகத் துரத்துகிறது.

12. ஈட்டி முனையாக எழுந்து நிற்போம்!

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

தஞ்சை, தருமபுரி, கருவேப்பிலங்குறிச்சி – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டங்கள்

0

1. கருவேப்பிலங்குறிச்சி

மூடு டாஸ்மாக்கை!
போடு பாழடைந்த பவழங்குடி, தேவங்குடி சாலையை!

என்ற முழக்கத்தின் கீழ் கருவேப்பிலங்குறிச்சியில், விவசாயிகள் சங்கத் தலைவர் A நந்தகுமார் தலைமையில் மக்கள் அதிகாரம் சார்பாக அக்டோபர் 7, 2015 அன்று மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

karuveppilangkurichi-people-power-demo-posterஅவர் தனது தலைமை உரையில் “டாஸ்மாக்கை மூடுவதற்காக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்துள்ளோம். கிராமப் புற சூழலே சீரழிந்துள்ளது, மேலப்பாளையூர் கிராமத்திலே டாஸ்மாக் கடையை மூட சொல்லி ஊர் மக்கள் சார்பாக போராட்டம் நடத்தினோம். அந்த டாஸ்மாக் கடையை சேல்ஸ்மேன் முன்னதாகவே மூடிவிட்டு சென்று விட்டான். மீண்டும் அக்கடையை திறக்கக் கூடாது என்று ஊர்மக்கள் சார்பாக, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாகவும் போராட்டம் நடத்தினோம்.

அந்தக் கடையில் ஆளே இல்லை. ஆனால் போலீசார் எங்கள் மீது 307 பொய் வழக்கு பதிவு செய்தனர். போராட்டம் நடத்த ஒவ்வொரு மக்களுக்கும் உரிமை உண்டு. ஆனால் போராட்டம் நடத்தியதால் எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

நாங்கள் சிறைக்கு போனதும் எங்களை ஒரு அக்யூஸ்ட்டை போல நடத்தினர். நாங்கள் சிறைக்குள் உணவு உண்ணமாட்டோம் எனக் கூறினோம். காரணம் கடை எங்கள் ஊரில் இருக்கக் கூடாது. வருவாய் அதிகாரிகள் எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினோம். தாசில்தார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். எங்கள் கோரிக்கையை கூறினோம், டாஸ்மாக் மூடினோம்” என்று பேசினார்.

people-power-karuveppilankurichi-demo-1மக்கள் அதிகாரம், விருத்தாசலம் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தனது கண்டன உரையில், “காவனூர் கடையை மூடச் சொல்லிதான் இந்த ஆர்ப்பாட்டம். டாஸ்மாக்கை பற்றி போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து சிறையில் அடைத்தால் போராட்டம் நின்று போகும் என்று நினைத்தனர். ஆனால் அடுத்த 10 நிமிடத்தில் கோயம்புத்தூர், விருத்தாசலம், திருச்சி, விழுப்புரம் போன்ற இடங்களில் போராட்டம் பற்றி படர்ந்தது. மது பாட்டிலை உடைத்தனர், சாணியால் அடித்தனர், மலத்தால் அடித்தனர், தக்காளியால் அடித்தனர், முட்டையால் அடித்தனர். ஆகவே மக்கள் போராட்டத்தை அடக்கு முறையால் தடுக்க முடியாது என்ற நிரூபித்து காட்டினார் மக்கள்.” என்று குறிப்பிட்டார்.

கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இளங்கோவன் பேசும் போது, “டாஸ்மாக் இருப்பதால் குடிக்கத் தூண்டுகிறது. இதே போல ஊரில் 100 பேருக்கு 98 பேர் குடிக்கின்றனர். 2- பேர் குடிக்காதவர். ஆனால் டாஸ்மாக்கை மூட 100% மக்களிடையே ஆதரவு உள்ளது. ஆனால் இதை யார்? மூடுவது, எப்படி மூடுவது எப்பொழுது, மூடுவது என்ற நிலை உள்ளது.  அனைவரும் வீதிக்கு இறங்கி போராடினால் நம்மால் மூட முடியும்.” என்று பேசினார்.

people-power-karuveppilankurichi-demo-2கச்சிராயநத்தத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட இளம் விதவை மந்திரகுமாரி பேசியது “டாஸ்மாக்கினால் எங்கள் ஊரில் 105 பேர் விதவைகள். அதில் 80 பேர் இளம் விதவைகள். நாங்கள் அனைவரும் டாஸ்மாக்கு எதிராக போராடி எங்கள் ஊரிலுள்ள கடையை 2 கி.மீ துரம் அகற்றி வைத்தோம்.

எங்களைப் போல உள்ள பெண்கள் இளம் விதவையாக தாலியறுக்குது அரசாங்கம். ஆனா தாலிக்கு தங்கம் கொடுக்குதாம். குடும்பத்தலைவர் செத்தா ஈமச்சடங்குக்கு ரூ 2500 பணம் கொடுக்கிறது, ஆனால் எங்கள் பிள்ளைகளுக்கு ஒழுங்கா கல்வி கொடுக்க வக்கில்ல; எங்களுக்கு வேலை கொடுக்க துப்பில்ல.

போராட்டம் நடத்தினால் தப்பா! நாங்க ரோட்டில் நடந்தா சகுனத் தடை, நாங்க எதாவது கேட்டா வாய் ரொம்ப வளர்ந்துடுச்சின்னு சொல்லுராங்க. இப்போ தேர்தலுக்கு வராங்க. இதுக்கு முன்னாடி யாரும் வரல. இந்த அரசியல்வாதிங்கள நம்பாதிங்க. இவங்க நமக்கு ஒன்றும் செய்ய மாட்டாங்க. அதனால் மக்கள் அதிகாரம் மூலம் போராடுவதற்கு வாங்க.”

T.பாவழங்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சிறு தொண்டநாயனார், மருங்கூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ராஜகோபால் இருவரும் காவல்துறை சிறையிலும், வெளியிலும் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதைப்பற்றி பேசினர்.

people-power-karuveppilankurichi-demo-3விருத்தாசலம் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் அருகதை இழந்த அரசு கட்டமைப்பு பற்றியும் மக்களை ஆள தகுதி இழந்ததையும் தெளிவாக விளக்கி மக்கள் மத்தியில் தனது கண்டனத்தை வெளிப்படுத்தினர்

விருத்தாசலம் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் புஷ்பதேவன், “இது வரை மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மக்களுக்காக நடத்திய போராட்டங்களையும் (உதாரணமாக தில்லை கோவில் போராட்டம்) டாஸ்மாக் போராட்டத்தில் காவல் துறையின் நடவடிக்கைக்கு அஞ்சாமலும், உளவு பிரிவு போலிசாருக்கு சவால் விட்டும் நாங்கள் மக்களுக்கு ஆதரவாக போராடியதால் எங்களை மக்கள் நம்புகின்றனர். சமச்சீர் கல்வி போராட்டம், மணல் கொள்ளை போராட்டம், முத்துகுமார் இறுதி ஊர்வல போராட்டம் இந்த போராட்டங்களின் சி.டி-களை காவல்துறையினர் கட்டாயம் குடும்பத்தோடு பார்க்க வேண்டும் அப்பொழுது தான் எங்களை பற்றி தெரியும்.” என்று பேசினார்.

தோழர் ராஜு வழக்கறிஞர், மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு

கட்டமைப்பு நெருக்கடி பற்றி:

சட்டத்தை மதிக்காத அதிகாரவர்க்கம் பற்றியும், மாஃபியாக்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் கூலிப்படையாக செயல்படும் காவல் துறையைப் பற்றியும் விளக்கி, அரசு எந்திரம் துருப்பிடித்து, மக்கிப் போய், மக்களுக்கு உபயோக மற்றதாக மாறிவிட்டது. இதனை அடித்து வீ‘ழ்த்தி மக்கள் அதிகாரத்தை நிறுவ வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

people-power-karuveppilankurichi-demo-4காவனூர் டாஸ்மாக்கையும் கருவேப்பிலங்குறிச்சி டாஸ்மாக்கையும் இழுத்து மூடவும், பாழடைந்த பவழங்குடி ரோட்டை போடவும் மக்கள் அதிகார அமைப்பின் ஆதரவோடு அணிதிரண்டு போராடி 15 நாள் கைதாகி சிறை செல்ல இப்பகுதி மக்கள் பெயர் கொடுத்தால் இன்னும் 24 to 48 மணி நேரத்திற்குள் டாஸ்மாக்கை மூடி இந்த ரோட்டையும் போட்டுகாட்டுகிறோம் என்று மக்களின் சார்பாக அரசுக்கு சவால் விடுத்தார். விருத்தாசலம் மக்கள் அனைவரும் போராட்டத்திற்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சிறைக்கு உங்கள் ஊரில் உள்ளவர்கள் சென்று வந்துள்ளார்கள் அவர்களிடம் சிறை பற்றி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். வீட்டிற்கு ரூ 100 வரியாக கொடுத்து உதவுங்கள்.

அரசியல் கட்சிகளை அம்பலப்படுத்துதல் :

தமிழகத்தில் மிகப் பெரிய தி.மு.க, பா.ம.க, வி.சி.க, காங்கிரஸ் போன்ற கட்சிகள் அதிகப்படியான உறுப்பினர்களை வைத்துக்கொண்டு உங்கள் பலத்தால் முதலில் டாஸ்மாக் கடையை மூடிக்காட்ட வேண்டியதுதானே? ஏன் மூடவில்லை?

ஏன் சாலை போடவில்லை? ஏன் நோட்டீஸ் கொடுப்பதோடு போராட்டத்தை நிறுத்திக்கொள்கிறீர்கள்?

மக்களுக்காக பாடுபடுவேன் என்று கூறுகிற நீங்கள் செருப்பாக தேய்கிறேன் என்று கூறுகிற நீங்கள் மக்களுக்காக போராடி டாஸ்மாக்கை மூடி சிறைக்கு செல்வதுதானே! ஏன் சிறைக்கு செல்ல தயங்குகிறீர்கள்?

நீங்கள் தான் மிகப் பெரிய கட்சியாச்சே மக்கள் மத்தியில் மக்கள் நலனுக்காக சிறை செல்ல தயாரா? தயார் என்று கூறுங்கள், நாங்கள் ஓட்டுபோடுவது பற்றி யோசிக்கிறோம்.

அன்புமணி சொல்கிறார் எனக்கு ஓட்டு போட்டு முதல்வராக்குங்கள், முதல் நாள் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று கூறுகிறார். வடிவேலு படத்திலே ஒரு காமெடியில் மலையை யாராவது தூக்க முடியுமா என கேள்விக்கு நீங்கள் அதைத் தூக்கி தோளில் வைத்தால் நான் தூக்கிச் செல்கிறேன் என்று ஒருவர் கூறுவார். அதைப் போல ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்து முதல்வராக்கினால் அவர் மதுவிலக்கை அறிவிப்பாராம். இது எப்போ நடப்பது? ஆகையால் தான் சொல்கிறோம் ஓட்டுக் கட்சிகளை நம்பி பலனில்லை.

மக்கள் தங்கள் அதிகாரத்தை கையில் எடுப்பதன் மூலம்தான் இதனை சாத்தியமாக்க முடியும். போராட வக்கில்கள் இருக்கிறார்கள் என்று நினைக்காமல் நாம் இறங்கி போராடினால் தான் ரோடை போட முடியும். நெல், கரும்புக்கு விலை உயர்த்த முடியும். நாம் நிம்மதியாக ஊரில் வாழ முடியும்.

ஆர்ப்பாட்டத்தின் விளைவு :

நாம் இந்த கோரிக்கையை வைத்து ஆர்ப்பாட்டம் என்று என்று அறிவித்திருந்ததால் மாலை 3 மணிக்கு கருவேப்பிலங்குறிச்சி பஸ்டாப்புக்கு அருகில் இருந்த டாஸ்மாக்கை மூடிவிட்டனர். சூப்பர்வைசரும் சேல்ஸ்மேன் அடுத்து காவனூரில் உள்ள டாஸ்மாக்கை மூடினர். மக்கள் அதிகாரத்தின் மேல் உள்ள அரசின் அச்சம் வெளிப்பட்டது. நம் முழக்கத்தை பார்த்து மிரண்டு போய் நின்றது இந்த அதிகார வர்க்கம்.

ஆர்பாட்டத்தினால் டாஸ்மாக்கின் பாதுகாப்பு நிலை :

நம் ஆர்ப்பாட்டத்தினால் முன்பு டாஸ்மாக் காவலில் இருந்த 2 போலிஸ் மாறி தற்பொழுது 5 காவல் நிலையங்களிலிருந்து போலிசார் குவிக்கப்பட்டனர்.

அது மட்டுமல்லாமல் உளவு பிரிவு போலிசார் 1. விருத்தாசலம் 2.கம்மாபுரம் 3. மங்கலம்பேட்டை 4. ஜெயங்கொண்டம் 5.கருவேப்பிலங்குறிச்சி போன்ற பகுதிகளிலிருந்து வந்திருந்தனர். இவர்கள் உளவு பார்த்தனர். திருமணத்திற்கு வீடியோ எடுப்பதை போல வீடியோ காட்சி பதிவு செய்தனர்

ஆனால் காவல்துறை அதிகாரிகள் பலர் “மூடு டாஸ்மாக்கை” பிரச்சாரத்தின் போது அதிகளவில் அவர்களது ஆதரவை தெரிவித்தனர். அவர்கள் கூறும் கருத்து

“எங்கள் ஊரில் உள்ள டாஸ்மாக் கடையால் தான் அதிக பிரச்சினை வருது. அத மூடுங்க. அப்பதான் பிரச்சினை இல்லாமலிருக்கும். நாங்க யூனிபார்ம்ல இருக்கிருதனால் எங்களால் மூட முடியாது. நீங்களாவது மூடுங்க சார், ரொம்ப நல்லது”

ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகார அமைப்பின் தோழர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கருவேப்பிலங்குறிச்சி பஸ்டாப் அருகில் 500-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கு எடுத்து கொண்டனர். குறிப்பாக பெண் தோழர் மந்திரகுமாரி பேசுவதைக் கண்டு அதிகப்படியான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்,

குறிப்பாக அ.தி.மு.க பிரமுகர்கள் இருவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அதில் சாராய வியாபாரி சசி ஜெயகும்பால கண்டித்து பேசும்போது ஒரு அ.தி.மு.க பிரமுகர் ஆர்ப்பாட்டத்திலிருந்து  மற்றொரு அ.தி.மு.க வினரை வெளியே வரும்படி அழைத்தார். ஆனால் அவர் ஆர்ப்பாட்டத்தை விட்டு வரமறுத்தார்.

தகவல்,
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்

2. தஞ்சை

  • ஊழல், சா்வாதிகாரம்,
  • சிவில் சமூகத்தின் மீதான அடக்குமுறைகள்!
  • மஃபியாக்கள் கன்மவளக் கொள்ளையா்கள், பணக்காரா்களின் எடுபிடிகளாய் நீதித்துறை!
  • ஆளும் அருகதையற்ற நீதித்துறைக்கு மாற்று…? மக்கள் அதிகாரமே!people-power-demo-on-judicial-corruption

என்ற தலைப்பில் தஞ்சாவூரில் 11-10-2015 அன்று மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தை மக்கள் அதிகார அமைப்பின் உறுப்பினா் தோழா் அருள் துவக்கி வைத்தாா். மக்கள் அதிகாரத்தின் ஒருங்கிணைப்பாளா் தோழா் தா்மரஜ் உரையாற்றினாா். மக்கள் அதிகாரத்தின் மாநில தலைமைக் குழு உறுப்பினா் தோழா் காளியப்பன் சிறப்புரையாற்றினாா்.

இறுதியாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழுவினா் கலை நிகழ்ச்சி நடத்தினா். மக்கள் அதிகார அமைப்பின் உறுப்பினா் தோழா் தேவா நன்றி உரை வழங்கினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
தஞ்சை

3. தருமபுரி

“மூடு டாஸ்மாக்கை” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பில் 12-10-2015 அன்று தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

people-power-demo-dpi

தகவல்
மக்கள் அதிகாரம்,
தருமபுரி