Monday, August 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 595

ஐ.ஐ.டி தடை – சென்னை, மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் போராட்டம்

1

“சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் தடையை நீக்கு!” –

சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆவின் வாயிலருகே 02/06/2015 அன்று மதியம் 1.30 மணியளவில் வழக்குரைஞர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!

APSC தடை - சென்னை உயர்நீதிமன்றம் ஆர்ப்பாட்டம்
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆவின் வாயிலருகே வழக்குரைஞர்களின் ஆர்ப்பாட்டம்.

காலை முதல் மதியம் வரை வழக்குரைஞர்களுக்கும், மக்களுக்கும் பிரசுரங்களை வழக்குரைஞர்கள் விநியோகித்தனர். சிலர் பிரசுரத்தை படித்தவுடன் சரியான போராட்டம் எனவும் தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.

APSC தடை வழக்குரைஞர் ஆர்ப்பாட்டம்
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆவின் வாயிலருகே 02/06/2015 அன்று மதியம் 1.30 மணியளவில் வழக்குரைஞர்களின் ஆர்ப்பாட்டம்.

சென்னை ஐ.ஐ.டி மாணவர்களின் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தை தடை செய்ததின் மூலம் மாணவர்களின் ஜனநாயக குரலை நெறிக்கும் மோடி அரசை கண்டித்தும், அம்பேத்கர்-பெரியார் கருத்துக்களை தடை செய்த ஐ.ஐ.டி டீனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்றும் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் வழக்குரைஞர் பால் கனகராஜ் அவர்களும், செயலர் வழக்குரைஞர் அறிவழகன் அவர்களும், மூத்த வழக்குரைஞர் முத்துக்கிருஷ்ணன், வழக்குரைஞர் தமிழினியன், வழக்குரைஞர் பாரதி, வழக்குரைஞர் ரஜினிகாந்த், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சார்ந்த வழக்குரைஞர்கள் செயலர் ஜிம்ராஜ் மில்ட்டன் மற்றும் மீனாட்சி, இந்திரா, பார்த்தசாரதி என பலரும் பேசினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்த ஆர்ப்பாட்டம் ஜனநாயக சிந்தனை கொண்டவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், இந்துத்துவ வெறியர்களுக்கும் எதிராக போராடவேண்டும், பெரியார் பிறந்த மண்ணான தமிழகத்தில் இந்துத்துவத்திற்கு கல்லறை எழுப்பவேண்டும் என்ற உணர்வை தருவதாகவும் அமைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஏற்பாடு :

உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள், சென்னை.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை. 9094666320

மதுரை வழக்குரைஞர்கள்

  • அம்பேத்கார் – பெரியார் குறித்து பேசுவதை தடை செய்த பார்ப்பன மோடி அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
  • சென்னை ஐ.ஐ.டி டீன் சிவக்குமாரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்!
  • கருத்துரிமையைக் காக்க வழக்கறிஞர்கள் களம் இறங்குவோம்!

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 02.06.2015-ம் தேதி காலை 10 மணிக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

APSC தடை வழக்குரைஞர் ஆர்ப்பாட்டம்
02.06.2015-ம் தேதி காலை 10 மணிக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ”கடந்த ஆண்டு சென்னை அய்.அய்.டி-யில் தொடங்கப்பட்ட அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தின் செயல்பாடுகள் மோடியின் கார்ப்பரேட்-பார்ப்பனீய சேவையை விமர்சித்ததால் தற்போதைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதே மோடி காங்கிரஸ் உள்ளிட்ட பலரையும் விமர்சித்தே பதவிக்கு வந்தார். அதேபோல் சென்னை அய்.அய்.டி.யில் நீண்டகாலமாக செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பான விவேகானந்தா மையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் குருமூர்த்தியை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். ஆர்.எஸ்.எஸ் சாகாக்கள் நடத்துகின்றனர். பெரியார்-அம்பேத்கர் பெயர் அவர்களை அச்சுறுத்துகிறது. நாளை நமக்கும் இது நடக்கும். ஆகவே இந்த பார்ப்பனீய-மனுதர்ம தடையை எதிர்க்க வேண்டும்” என்றார்.

அடுத்துப் பேசிய வழக்கறிஞர் தி. லஜபதிராய் ”இந்தத் தடையால் பல நன்மைகள் நடந்துள்ளது. மும்பை, கான்பூரில் பெரியார்-அம்பேத்கர் படிப்பு வட்டங்கள் துவங்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து சமஸ்கிருத திணிப்பு,உயர்கல்வியில் காவிமயம் என்னும் வேலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இத்தடையும் உயர்கல்வியில் காவிமயத்தின் ஓர் அங்கம்தான். மோடி நாட்டைக் கூறுபோட்டு விற்று வருகிறார். எழுத்தாளர் அருந்ததிராய் இதனை சுட்டிக் காட்டியுள்ளார். அரசியல் சட்டத்தின்படி இத்தடை சட்டவிரோதமானது. இந்த அபாயமான போக்கை நாம் மிகக் கடுமையாக எதிர்க்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

APSC தடை வழக்குரைஞர் ஆர்ப்பாட்டம்
“சென்னை அய்.அய்.டி.யில் நீண்டகாலமாக செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பான விவேகானந்தா மையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் குருமூர்த்தியை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். ஆர்.எஸ்.எஸ் சாகாக்கள் நடத்துகின்றனர்.”

தனது வாயில் கருப்புத் துணியைக் கட்டி தனது எதிர்ப்பைப் பதிவு செய்து, மிகவும் உணர்சிப்பூர்வமாக உரையாற்றிய மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் அவர்கள் “இந்திய அரசியல் சட்டம் சரத்து 19-ன்படி எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம், சங்கம் அமைக்கும் உரிமை உண்டு. இதை அய்.அய்.டி நிர்வாகமும், மத்திய அரசும் பறிப்பது மாபெரும் அரசியல் சட்ட மீறல். பா.ஜ.க.தலைவர்கள் தொலைக்காட்சிகளில் பேசும்போது மோடிக்கு எதிராகப் பேசுவது தேசத் துரோகம் என்கிறார்கள். இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

APSC தடை வழக்குரைஞர் ஆர்ப்பாட்டம்
“பா.ஜ.க.தலைவர்கள் தொலைக்காட்சிகளில் பேசும்போது மோடிக்கு எதிராகப் பேசுவது தேசத் துரோகம் என்கிறார்கள். இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.”

மோடி அரசு வந்ததிலிருந்து மக்கள் விரோதமாகவே செயல்பட்டு வருகிறது. இதை எதிர்க்காமல் எப்படி இருக்க முடியும்? மோடி அரசின் செயல்பாடுகளை எதிர்ப்பதுதான் தேசபக்தி; எதிர்க்காமல் இருப்பது தேசத் துரோகம் என்று நான் சொல்கிறேன். இத்தடை இயற்கை நீதிக்கு எதிரானது. இதற்கெதிராக கடும் போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும். அதிகாரம், பாசிசம் வன்முறை வடிவில் வந்தால், நாமும் அவ்வடிவிலே எதிர்ப்பதுதான் இதற்கான ஒரே தீர்வு” என்றார்.

மூத்த வழக்கறிஞர் பொ.ரத்தினம் அவர்கள் “குஜராத்திலிருந்து இவர்களது அநீதிகள் அரங்கேறி வருகின்றன. குஜராத் படுகொலையின்போது உயர்காவல்துறை அதிகாரிகள் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு நாங்கள் தப்பித்ததே பெரிய விசயம் என்றனர். நாம் நேரடியாக அங்கு சென்று உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும். அம்பேத்கர் பார்ப்பனீயத்தின் கொடுங்கோண்மைகளை மிகத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளார். ஆனால் இன்று பி.ஜே.பி அம்பேத்கரைத் தூக்கி வருகிறது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருங்கிணந்து போராட வேண்டும்” என்றார்.

APSC தடை வழக்குரைஞர் ஆர்ப்பாட்டம்
“அம்பேத்கர் பார்ப்பனீயத்தின் கொடுங்கோண்மைகளை மிகத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளார். ஆனால் இன்று பி.ஜே.பி அம்பேத்கரைத் தூக்கி வருகிறது.”

அதன்பின் பேசிய வழக்கறிஞர்கள் சாஜி செல்லன், வாமனன், பானுமதி, எழிலரசு, சங்க செயலர் மாணிக்கம் ஆகியோர் சென்னை அய்.அய்.டி நிர்வாகத்தையும், மோடி அரசையும் வன்மையாகக் கண்டித்து, அய்.அய்.டி.யின் பார்ப்பனத் தன்மையை அம்பலப்படுத்தி, பெரியார்-அம்பேத்கரைப் பிரிக்கும் பார்ப்பன சூழ்ச்சியைக் கண்டித்து, மோடி-அம்மா லேடி கூட்டணியைச் சாடி, ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பலைப் புரிந்து கொண்டு பெரியார்-அம்பேத்கரை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆர்ப்பாட்டத்தில் “வினவு-இணையதள” செய்தியை துண்டறிக்கையாக மாற்றியும், அய்.அய்.டி.நிர்வாகத்தின் உத்தரவு மற்றும் மொட்டைக் கடிதத்தின் நகலும் விநியோகிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டம் வெறும் போனில் தகவல் சொல்லி அவசரமாக ஒருங்கிணைக்கப்பட்டாலும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

விநியோகிக்கப்பட்ட துண்டறிக்கை:

  • அம்பேத்கார் – பெரியார் குறித்து பேசுவதை தடை செய்த
    பார்ப்பன மோடி அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
  • சென்னை ஐ.ஐ.டி டீன் சிவக்குமாரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்!
  • கருத்துரிமையைக் காக்க வழக்கறிஞர்கள் களம் இறங்குவோம்!

த்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் நேரடித் தலையீட்டின் பெயரில், சென்னை ஐ.ஐ.டியில் செயல்பட்டு வரும் மாணவர் அமைப்பான அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தடைசெய்யப்பட்டு மாணவர்களின் குரல்வளை நெரிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, அம்பேத்கர் வாசகர் வட்டத்தின் மீதான இந்தத் தடை நடவடிக்கை, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பிய மொட்டைக் கடுதாசியின் பேரில் எந்த விசாரணையுமின்றி ஐஐடி நிர்வாகத்தால் எடுக்கப்பட்டிருக்கிறது.

நாட்டு மக்கள் தாங்கள் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காக கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் என அரசு உறுப்பின் ஒவ்வொரு கதவுகளையும் மனு மேல் மனுபோட்டும் பதில் கிடைக்காமல் இருக்கிற பொழுது ஒரு மொட்டைக் கடுதாசியின் பேரில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மாணவர் அமைப்பான அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஐஐடி நிர்வாகத்திற்கு உத்தரவிடுகிறது என்றால் அந்தக் கடுதாசியில் இருந்த பிராதுதான் என்ன?

  1. பாசிச மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளான நிலக் கையகப்படுத்துதல் சட்டம், காப்பீடு சட்டம், தொழிலாளர் நலச்சட்டம் மற்றும் கார்ப்பேரட் கைக்கூலியாகச் செயல்படுகிற மோடியை மாணவர்கள் மத்தியில் அம்பலப்படுத்தி விமர்சிக்கிறதாம் இவ்வமைப்பு.
  2. இந்துத்துவக் காலிகளின் சமஸ்கிருத இந்தி திணிப்பு, கர் வாப்சி, பசுவதைத் தடைச் சட்டம், லவ் ஜிகாத் கொள்கைகளை இவ்வமைப்பு விமர்சித்து துண்டுப்பிரசுரம் வழங்குகிறதாம்.
  3. குறிப்பாக அம்பேத்கர் பெரியார் கொள்கைகளை பரப்புவதன் மூலம் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களை இந்துக்களுக்கு எதிராகவும் மோடிக்கு எதிராகவும் இவ்வமைப்பு திரட்டுகிறதாம். (இதன் மூலமாக தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லர் என்று நெற்றிப்பொட்டில் அடித்துச் சத்தியம் செய்திருக்கிறது மோடி அரசின் இந்துத்துவக் கும்பல்)

மேற்கண்ட குற்றச் செயல்களுக்கு (!!!) சாட்சியாக ஏப்ரல்-14 அன்று அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அமைப்பு வழங்கிய துண்டுபிரசுரத்தைக் காட்டியிருக்கிறது இந்த மொட்டைக்கடுதாசி.

அமைச்சகத்தின் உத்தரவிற்கு பதில் சொல்லும் விதமாக சென்னை ஐ.ஐ.டி டீன் எம். சீனிவாசன், இவ்வமைப்பு ஒழுங்கு விதிகளை மீறியிருக்கிறது என்று சொல்லி எந்த விசாரணையுமின்றி தடை செய்திருக்கிறார். அது என்னடா ஒழுங்குவிதி என்றால் துண்டு பிரசுரமோ, போஸ்டரோ, டீனின் ஒப்புதல் இன்றி வழங்கப்படக் கூடாதாம்.

ஆனால், ஏப்ரல்-14-ல் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடந்த கருத்தரங்கிற்கு பிற்பாடான நாட்களில் அதாவது கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக ஒழுங்குவிதி மீறலைக் கண்டுபிடிக்காத ஐ.ஐ.டி நிர்வாகம், ஆர்.எஸ்.எஸ் காலிகள் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு மொட்டைகடுதாசி அனுப்பிய பிறகு தான் இது ஒழுங்குவிதி மீறல் என்று எதேச்சதிகாரத்துடன் மாணவர் அமைப்பை தடை செய்கிறது என்றால் இந்து பாசிசத்தின் எத்துணை கொடூரமான காலகட்டத்தில் இந்த நாடு போய்க்கொண்டிருக்கிறது என்பது தெரியவரும்.

ஆனால் இதே ஒழுங்குவிதி மீறல் விவேகானந்தா வாசகர் வட்டத்திற்கு கிடையாது என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில் சென்னை ஐ.ஐ.டி, தென்னிந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் கேந்திரமாக விவேகானந்த வாசகர் வட்டம் மூலமாகத்தான் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஐ.ஐ.டி விடுதி, நூலகங்களை கைப்பற்றுவது, ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்கள் நடத்துவது, வெறியுடன் பிள்ளையார் ஊர்வலம் நடத்துவது என்று பல காலி வேலைகளை செய்து வருகிறது.

மேலும் குருமூர்த்தி இந்துத்துவ லெக்சர் கொடுக்கவோ, அரை டவுசர் அரவிந்த நீலகண்டன் ஏகாந்தவாதம் பேசுவதற்கோ அவாள் நிர்வாகம் சாம்பிராணி போடுகிறது. ஆனால் அம்பேத்கர்-பெரியார் பெயரைக் கண்டவுடனே அலறித்துடித்து ஆயிரம் ஆண்டுகால பார்ப்பனிய வன்மத்துடன் மாணவர்களின் சனநாயக குரல்வளையை நசுக்குகிறது. இந்த கேடுகெட்ட சந்தர்ப்பத்திலும் கூட தாழ்த்தப்பட்ட மாணவர்களை இந்துக்களுக்கு எதிராகவும் மோடிக்கு எதிராகவும் திசைதிருப்புகிறது என்று சொல்வதன் மூலமாக தனது சனாதன வர்ணாசிரம பாசிசத்தை ஆழ்ந்து நிறுவுகிறது.

ஏற்கனவே சென்னை ஐ.ஐ.டி மறுகாலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் மேட்டுக்குடி வர்க்கங்களுக்கான கல்வி நிலையமாக இருந்துவரும் வேளையில் சமூக பாசிசக் கொள்கைகள் மாணவர்களை உந்தித் தள்ளி போராட வைக்கிறது. நலிந்த பின்புலத்திலும் சாதியக்கட்டுமானத்தில் பழிவாங்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தபட்ட மாணவர்களையும் சனநாயகத்தின் பால் நம்பிக்கை கொண்ட பிற மாணவர்களையும் அங்கு அப்பட்டமாக செயல்பட்டு வரும் பார்ப்பன-பாசிசத்திற்கு எதிராக போராட வைக்கின்றன.

தமிழ்நாட்டில் புரட்சிகர இயக்கங்களின் தாக்கத்தாலும் பல்வேறு மாநிலங்களின் மாணவர் இயக்கங்களின் பின்புலத்தாலும் சென்னை ஐ.ஐ.டியின் பார்ப்பன பாசிச நடவடிக்கைகள் முன் எப்பொழுதையும் விட மாணவர்களால் தீர்க்கமாக எதிர்க்கப்பட்டு போராடப்பட்டுவருகின்றன. இதன் குரல்வளையை நசுக்கும் சந்தர்ப்பமாக இந்துத்துவ பாசிச மோடி கும்பல் நேரடியாக தலையிட்டு மாணவர் அமைப்பை துடைத்தெறிய எத்தனித்திருக்கிறது.

ஆனால் சென்னை ஐ.ஐ.டி இந்துவக்காலிகளுக்கான இடமல்ல. அது மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் கல்வி நிறுவனம் என்றும் அது மக்களுக்கானது என்றும் அங்கே மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டிப்பதற்கு மாணவர்களாகிய எங்களுக்கு தார்மீக உரிமை உண்டு என்று சொல்கிற மாணவர்களின் குரல் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்து வருகிறது .இத்தகைய தருணத்தில் மாணவர்களுக்கு நாம் ஆதரவாக நிற்பதுடன் இந்து பார்ப்பனியத்தின் பாசிசக் கொள்கைகளை கருவறுத்திட வாசகர்களும் பிற கல்லூரி மாணவர்களும் அறிவுத்துறையினரும், வழக்கறிஞர்களும், மக்கள் திரளினரும் கைகோர்த்திட வேண்டும்.

இந்துத்துவம், கொடூரங்களின் கூடாரம் என்றார் அம்பேத்கர். ஸ்மிருதிகளையும் ஸ்ருதிகளையும் கொண்டிருக்கும் மதம் அழிக்கப்பட வேண்டும் என்றார் அம்பேத்கர் (இதைச் சொன்னதற்காகவும் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கிறது!). இவையிரண்டிற்கும் வழிவகுத்து பார்ப்பனியத்திற்கு சாட்டையடி கொடுத்தது பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு மரபு. ஆனால் இன்று இத்தலைவர்களின் பெயரைத்தாங்கிய மாணவர் திரளின் அமைப்பே கலைக்கப்பட்டு இந்து பாசிசம் நிலைநிறுத்தப்படுகிறது.

இதை இன்று நாம் எதிர்க்காவிட்டால் நாளை நாமும் அடிமையாவோம்! எனவே பார்வையாளராக இருந்தது போதும்! போராட்டங்களில் பங்கேற்பாளராக மாறுவோம்! கருத்துரிமைக்கெதிரான பார்ப்பன மதவாதத்தை வீழ்த்துவோம்! சமத்துவ சமூகத்தை நிறுவுவோம்!

இவண்:
வழக்கறிஞர்கள், மதுரை
9865348163, 9443421368.

தகவல்:
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
மதுரை மாவட்டக் கிளை.
9443471003, 9865348163.

தஞ்சை

ஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் செயல்பட்டு வரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களின் முன்முயற்சியால் பார் அசோசியேசனுக்கு கடிதம் வழங்கப்பட்டது. APSC மீதான தடையை நீக்க வேண்டிய அவசியத்தை தோழர்கள் விளக்கிப் பேசினர். இதனை ஏற்று பார் அசோசியேசன் சார்பாக நீதிமன்ற வளாகத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

தகவல்
பு.ஜ செய்தியாளர்,
திருச்சி

அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் தடை – ஆர்ப்பாட்டங்கள்

0
DCCver0077

சென்னை ஐ‌.ஐ‌.டி.யில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையையொட்டி தமிழகமெங்கும் நடத்தப்பட்ட மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள் பற்றிய செய்திகளின் அடுத்த பகுதி…

முந்தைய செய்திகள்

  1. சென்னை ஐ.ஐ.டி முன்பு
  2. திருச்சி என்.ஐ.டி, சட்டக் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம்
  3. ஒசூர், தருமபுரி, கரூர், விருத்தாச்சலம் ஆர்ப்பாட்டம்

கோவை

02.06.2015 அன்று கோவையில் திருவள்ளுவர் பேருந்து நிலையத்துக்கு அருகில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

APSC தடை - கண்டன ஆர்ப்பாட்டம்
கோவையில் திருவள்ளுவர் பேருந்து நிலையத்துக்கு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலர் மணிவண்ணன் தலைமையில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலர் திலீப் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் பாபு ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

APSC தடை - கண்டன ஆர்ப்பாட்டம்சி‌.ஆர்‌.ஐ, எஸ்‌.ஆர்‌.ஐ, பெஸ்ட் பம்ப்ஸ் போன்ற நிறுவனங்களிலிருந்து தொழிலாளர்களும், அரசுக் கலைக் கல்லூரி மற்றும் அரசு சட்டக் கல்லூரி ஆகிய கல்லூரி மாணவர்களும் ஜனநாயக சக்திகளும் பங்கேற்றனர்.

பேருந்து நிலையத்துக்கே எதிரே என்பதால் பெருவாரியான மக்களின் பார்வையில் பதிந்தது. உளவுப் பிரிவு, அதில் பல வகைகள் மற்றும் போலீசு என ஒரு பெரும் படையே நின்று கொண்டிருந்தனர். நிருபர் ஒருவர், “தோழர் சீக்கிரம் துவங்குங்க, பாரத் சேனா கலெக்டர் ஆபீஸ் முற்றுகையாமா..? நாங்க அங்க போகணும்” என கேட்டுக் கொண்டிருந்தார்.

APSC தடை - கண்டன ஆர்ப்பாட்டம்
சி‌.ஆர்‌.ஐ, எஸ்‌.ஆர்‌.ஐ, பெஸ்ட் பம்ப்ஸ் போன்ற நிறுவனங்களிலிருந்து தொழிலாளர்களும், அரசுக் கலைக் கல்லூரி மற்றும் அரசு சட்டக் கல்லூரி ஆகிய கல்லூரி மாணவர்களும் ஜனநாயக சக்திகளும் பங்கேற்றனர்.

நாம் ஒரு உளவுப் பிரிவு போலீஸிடம், “என்னங்க, கலெக்டர் ஆபீஸ் முற்றுகையாமா, அங்க போகாம இங்க நின்னுகிட்டுருக்கீங்க..” என கேட்க,

அவர், “அவனுக சும்மா டம்மி பீசுங்க, நீங்க இங்க முதல்ல முடிங்க., நாங்க அப்புறமா போய்க்கிறோம்” என்று கூறிவிட்டார்.

தோழர்களின் எழுச்சிகரமான முழக்கம் பேருந்து நிலையத்தை சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான மக்களை ஈர்த்தது.

அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். அங்கு ம.க.இ.க மாவட்ட செயலர் தோழர் மணிவண்ணன் பேசுகையில், “மாணவ வர்க்கம் என்பது எப்போதும் துடிப்புடன் இருக்கும் வர்க்கம். நீ அங்கயே கை வச்சுட்ட. தேன் கூட்ல கை வச்ச மாதிரி, இனி இந்த நெருப்பு இந்தியா முழுக்க பற்றி படரும்” என சூளுரைத்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அதன் பின்னர் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் தோழர் விளவை இராமசாமி பேசுகையில்,

“பார்ப்பானுக்கு முன் புத்தியும் இல்ல, பின் புத்தியும் இல்லைனு அய்யா சொன்னது சரியா போச்சு. சும்மா இல்லாம இப்பிடி பண்ணி, இப்ப இந்தியா முழுக்க பெரியாரையும் அம்பேத்கரையும் கொண்டு போய்ட்டான்.

இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் மாதிரி டூமாங்கோலிகள் எல்லாம், எங்களுக்கு அம்பேத்கர் வேணும் பெரியார் வேண்டாம்னு சொல்லப் போக, எல்லோரும் ஏன்னு, கேட்க ஆரம்பிச்சு பெரியாரை படிக்க ஆரம்பிக்கராங்க.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தம்பி, இது நீ சொன்னதா கேள்வி கேட்காம ஏத்துக்கற லும்பன் கும்பல் அல்ல. படித்துக் கொண்டிருக்கும் மாணவ வர்க்கம். ஏன் எதுக்கு ன்னு கேள்வி கேட்கற வர்க்கம். அம்பேத்கரை கூட பார்ப்பனியம் அரவணைச்சு கெடுத்துருச்சு. ஆனா இறந்து போயி நாப்பது வருஷம் ஆனாலும் பார்ப்பனியத்துக்கு எதிரான நேர் நிகரான முனை மழுங்கா வாளாக இருக்கிறது அய்யா தந்தை பெரியார் தான். அதனால் தான் சொல்றோம். இந்த ஆரிய பார்ப்பன கும்பலை முறியடிக்க நாம பெரியாரிய ஆயுத பாணிகளாக மாறணும்னு.

சென்னை ஐ‌.ஐ‌.டி மாதிரி இந்தியா முழுக்க இருக்கிற ஐ‌.ஐ‌.டிகள்ல அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் துவங்குவோம். நீ என்ன புடுங்க முடியுமோ புடுங்கு, அப்டினு சொல்லி மாணவர்கள் தன்னெழுச்சியா துவங்கறாங்க..!

பார்ப்பானுக இப்ப கடும் சிக்கல்ல மாட்டிட்டானுக. தமிழ்நாடு பி‌ஜெ‌பி காரனுகளுக்கு என்ன பேசறதுன்னே தெரியாம ஒளரிட்டு இருக்கானுக. இப்டி தன்னைத் தானே அம்பலப்படுத்திக்கிட்டானுக இந்த காவிக் கல்லுளி மங்கனும் அவன் கூட்டமும்” என பேசி முடித்தார். பின்னர், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

மதுரை

02/06/2015 மாலை 5.30 மணிக்கு மதுரை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், ” எந்தவொரு நபரையும் பற்றி பேசக்கூடாது. எந்தவொரு சாதியை பற்றியும் பேசக்கூடாது. எந்தவொரு மதத்தை பற்றியும் பேசக்கூடாது” என ஏகப்பட்ட கூடாது களை நிபந்தனையாக்கி நெருக்கியது காவல்துறை .

APSC தடை - கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய ம.க.இ.க மதுரை அமைப்பாளர் தோழர்.ராமலிங்கம் “அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்திற்கு மோடி அரசு தடை போட்டுள்ளது. இன்று மோடி அரசு அமல்படுத்தி வரும் இந்துத்துவ கொள்கைகளுக்கு அம்பேத்கரும் பெரியாரும் எதிரானவர்கள். பார்ப்பன மேலாதிக்கத்திற்கு எதிராக போராடியவர்கள். மோடியின் இந்து பாசிச திணிப்பு நடவடிக்கைகளை அம்பேத்கர் பெரியார் சிந்தனை கொண்டவர்கள் எதிர்ப்பதால் தான் இந்தத் தடை. இந்த பார்ப்பன பாசிஸ்டுகளை முறியடிக்க பள்ளி, வீடு, வீதி என எல்லா இடங்களிலும் இத்தகைய படிப்பு வட்டங்களை உருவாக்க வேண்டும். இது தான் அதற்கு சரியான தருணம்.” என உரையாற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பு.ஜ.தொ.மு தோழர்.போஸ், “ஐ.ஐ.டி.யில் படிப்பு வட்டத்திற்கு தடை விதித்ததை அ.தி.மு.க எதிர்க்கவில்லை. மேலும், ஐ.ஐ.டி.யில் இந்துத்துவ கருத்துக்களை தடை செய்யவில்லை . மோடியின் ஆட்சி நீடிக்க நீடிக்க இது போன்ற தடைகள் அதிகரிக்கும் ” என அம்பலப் படுத்தி பேசினார்.

உசிலை வட்ட வி.வி.மு தோழர் தென்னரசு, ‘மொட்டை கடுதாசியை வைத்துக் கொண்டு தடை செய்திருப்பதை’ சுட்டிக்காட்டி, “ஹெச்.ராஜா போன்றவர்கள் பெரியாரை இழிவு படுத்தி பேசிய போது, ரோட்டில் விட்டு செருப்பால் அடித்திருந்தால், இன்று திமிர்த்தனமாக பேசி இருக்க மாட்டான்” என ஹெச்.ராஜா பேச்சிற்கு செருப்படி கொடுத்தார்.

ம.உ.பா.மைய மதுரை மாவட்ட செயலர் தோழர் லயனல் அந்தோனி ராஜ், பிஜேபி அரசு பெரியார் அம்பேத்கர் கருத்துக்களுக்கு தடை விதித்துக் கொண்டே, அம்பேத்கருக்கு விழா எடுப்பதை அம்பலப் படுத்தியும், கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாளர் போல பேசும் மோடியின் இரட்டை நாக்கை தோலுரித்தும் பேசினார் . தமிழகம் மட்டுமே பார்ப்பன எதிர்ப்பு மரபை வரித்துக் கொண்டு போராடி வருகிறது என்றும் இந்தத் தடையை முறியடிக்க வேண்டிய அவசியம் பற்றியும் விளக்கிப் பேசினார்.

இறுதியாக ம.க.இ.க மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் , “கல்விக் கூடத்தில் பெரியாருக்கு என்ன வேலை ?” என்ற இமக அர்ஜுன் சம்பத் க்கு பதிலடி கொடுக்கும் விதமாக , “அதே ஐ.ஐ.டி யில் ஜெய்ஹிந்த் , வந்தேமாதரம், துருவா போன்ற 20க்கும் மேற்பட்ட பார்ப்பன அமைப்புகள் பயங்கரவாத பிரச்சாரம் செய்வது ஏன்” என கேள்வி எழுப்பியும் , “அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை தேசவிரோத சக்திகள் என்று சொல்லும் ஹெச்.ராஜாவே ! மோடி உலகம் முழுவதும் டூர் அடித்து பன்னாட்டு கம்பெனிகளுக்கு நாட்டை கூவிக் கூவி விற்பது தேசத் துரோகம் இல்லையா ?” என பார்ப்பனக் கும்பலின் புளுகை , அவர்களின் தேசத் துரோக செயல்களை அம்பலப் படுத்தி உரையாற்றினார்.

APSC தடை - கண்டன ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம் பார்ப்பனக் கும்பலுக்கு எதிராக அணிதிரள வேண்டிய அவசியத்தை உணர்த்தும் படியாக இருந்தது.

ஆர்ப்பாட்டம் எழுச்சியூட்டும் முழக்கங்களுடன் மக்களுக்கு உணர்வூட்டும் படியாகவும், பார்ப்பனக் கும்பலுக்கு எதிராக அணிதிரள வேண்டிய அவசியத்தை உணர்த்தும் படியாகவும் இருந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மோடி அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு கைதாகினர்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் ஆசாத் தலைமையில் பழைய ரயில்வே ஸ்டேசன் அருகிலிருந்து பேரணியாக புறப்பட்டுச் சென்றனர்.

APSC தடை - கண்டன ஆர்ப்பாட்டம்
ம.க.இ.க மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் முற்றுகையின் நோக்கத்தை விளக்கிப் பேசினார்.

நகரின் மையப்பகுதியில் உள்ள தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு இழுத்துமூடினர். சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் முற்றுகையின் நோக்கத்தை விளக்கிப் பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சமூக ஆர்வலர் ஜீ.வரதராஜன் உள்ளிட்ட ஜனநாயக சக்திகளும் போராட்டத்தில் பங்கேற்று கைதாகினர். சுற்றிலும் கூடியிருந்த மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. வழக்கம் போல காலதாமதமாக வந்த போலிசார் சுமார் 30-க்கும் மேற்பட்ட தோழர்களை கைது  செய்தனர்.

தகவல்
பு.ஜ செய்தியாளர்,
திருச்சி
9943176246

விழுப்புரம்

விழுப்புரத்தில் வி.வி.மு , பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள் இணைந்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் 02.06.2015 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் இணைச் செயலர் தோழர் ரஞ்சித் தலைமை தாங்கி பேசுகையில், “ஐ.ஐ.டி என்கிற நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அது பார்ப்பனர்களின் கோட்டையாகவே செயல்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றக்கூடிய பேராசிரியர்கள் 400 க்கும் மேற்பட்டோர் பார்ப்பனர்கள் தான். அதில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடமில்லை என்பது தான் அதன் வரலாறு. அப்பேற்பட்ட பார்ப்பனர்களின் கோட்டைக்குள் அம்பேத்கர்- பெரியார் கருத்துக்கள் நுழைந்தது தான் பார்ப்பன இந்துமதவெறி பாசிச மோடி கும்பலுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்துத்துவாவை விரட்டியடித்து தமிழகத்தில் சுயமரியாதையை நிலை நாட்டியவர் தந்தை பெரியார். இந்த மண்ணில் அம்பேத்கர்-பெரியாருக்கு தடை விதித்ததை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. உடனடியாக தடையை நீக்காவிட்டால் தமிழகம் தழுவிய அளவில் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்” என்று கூறி முடித்தார்.

APSC தடை - கண்டன ஆர்ப்பாட்டம்
“உடனடியாக தடையை நீக்காவிட்டால் தமிழகம் தழுவிய அளவில் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.”

அடுத்ததாக திரு.ஜனார்த்தனன், புதுவை பல்கலைக்கழக மாணவர் பேசுகையில், “அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் தடை செய்யப்பட்டது மாணவர்களின் கருத்துரிமையை பறிக்கும் செயல். மோடி அரசின் மக்கள் விரோத செயல்களை அம்பலப்படுத்தி பேசுவதற்கு மாணவர்களுக்கு உரிமை உள்ளது. அப்படி பேசினால் தடை விதிக்கப்படும் என்றால் உண்மையில் இது ஜனநாயக நாடு தானா” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “ஐ.ஐ.டி யில் சம்ஸ்கிருத-இந்தி திணிப்பு, மாட்டுகறிக்கு தடை, நிலம் கையகப்படுத்துதல் மசோதா போன்றவை குறித்தெல்லாம் மாணவர்கள் பேசியதால்தான் தடை விதித்துள்ளார்கள். அம்பேத்கர்-பெரியாரின் சித்தாந்தம் இல்லாமல் எந்த அரசியல் கட்சியும் இயங்க முடியாது. உடனடியாக இந்தத் தடையை நீக்க வேண்டும். இல்லை என்றால் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்” என எச்சரித்தார்.

APSC தடை - கண்டன ஆர்ப்பாட்டம்
“மோடி அரசின் மக்கள் விரோத செயல்களை அம்பலப்படுத்தி பேசுவதற்கு மாணவர்களுக்கு உரிமை உள்ளது.”

அவரை தொடர்ந்து பேசிய திரு. புருசோத்தமன், புதுவை பல்கலை கழகம் மாணவர்,  “ஐ.ஐ.டி வளாகத்தில் விவேகானந்தர் படிப்பு வட்டம், வசிஸ்டர் படிப்பு வட்டம், ராமாயணம், வந்தே மாதரம் உள்ளிட்ட பிற்போக்கு மாணவர் அமைப்பினர் செயல்படுகின்றனர். அவற்றைத் தடை செய்யாமல் முற்போக்கு கருத்துக்களை பிரச்சாரம் செய்த, இந்தி, சம்ஸ்கிருத திணிப்புக்கு எதிராக கருத்தரங்கம் நடத்திய அம்பேத்கர்-பெரியார் அமைப்பை தடை செய்தது இந்து மதவெறியர்களின் காட்டுமிராண்டி செயல்” என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.

APSC தடை - கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தி,சம்ஸ்கிருத திணிப்புக்கு எதிராக கருத்தரங்கம் நடத்திய அம்பேத்கர்-பெரியார் அமைப்பை தடை செய்தது இந்து மதவெறியர்களின் காட்டுமிராண்டி செயல்.

இறுதியாக, கண்டன உரையாற்றிய விவசாயிகள் விடுதலை முன்னணியின் விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர், “மோடி அரசு பதவியேற்றது முதல் மக்கள் விரோத செயல்களையே செய்து வருகிறார். குறிப்பாக நிலம் கையகப்படுத்தும் சட்டம், மாட்டிறைச்சிக்கு தடை, மாணவர் அமைப்பிற்கு தடை என்று கீழ்த்தரமான வேலைகளை செய்து வருகிறார். தாயையும் தண்ணீரையும் ஒன்று என்பார்கள். அது போல் தான் நிலமும். காலம் காலமாக உழுது பயிரிட்டு வந்த நிலத்தை பிடுங்கி கார்ப்பரேட் கம்பனிகளுக்கு கொடுக்கும் புரோக்கர் வேலை செய்யும் தேச துரோகி மோடி என்பதை தான் அம்பலப்படுத்தினர் மாணவர்கள்.

APSC தடை - கண்டன ஆர்ப்பாட்டம்
அம்பேத்கர் பெரியார் பெயரில் இயங்குவது தான் பார்ப்பன மதவெறி கும்பலால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதற்கு தான் இந்த தடை.

இதற்காக அமைப்பை தடை செய்வது என்பது ஒருபக்கம் இருந்தாலும், அம்பேத்கர் பெரியார் பெயரில் இயங்குவது தான் பார்ப்பன மதவெறி கும்பலால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதற்கு தான் இந்த தடை. இந்த சமூக அமைப்பில் மாணவர்கள், சமூக ஜனநாயக சக்திகள் என யாரும் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதை தான் இந்த தடை நமக்கு உணர்த்தும் உண்மை… எனவே நிலவுகின்ற இந்த அரசு கட்டமைப்பை தகர்த்துவிட்டு நமக்கான அரசமைப்பை நிறுவினால் தான் மாணவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள். உழைக்கும் மக்கள் அனைவரின் பிரச்சனைக்கும் தீர்வு. அதற்கு நக்சல்பாரிகள் தலைமையில் அணிதிரள வேண்டும்” என்பதை உணர்த்தும் விதமாக பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள்- இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். மேலும், குழந்தைகள்,பெண்கள் ஜனநாய சக்திகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம்

புதுச்சேரி

புதுச்சேரியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக ௦2.௦6.2015 அன்று மாலை 5:30 மணிக்கு முத்தியால் பேட்டை மார்கெட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. புதுச்சேரி மாநில பு.ஜ.தொ.மு தலைவர் எம்.கே.கே.சரவணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுவை பெரியார் திராவிட விடுதலை கழக ஒருங்கிணைப்பாளர் தோழர் கோகுல்காந்திநாத், புதுவை பு.ஜ.தொ.மு இணை செயலர் தோழர் ஆர்.லோகநாதன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

apsc-ban-pududvai-demo-1தோழர் சரவணன் தனது தலைமை உரையில், “ஒரு இனபடுகொலை குற்றவாளியான மோடியின் கையில் நாடு ஒப்படைக்கப்பட்டதால் அவர் இன்று கார்ப்பரேட் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக, எடுபிடியாக செயல்பட்டு வருவதையும் நாடு மீண்டும் அடிமையாக்கப்படும் தேசதுரோகச் செயலையும்” அம்பலப்படுத்தினார்.

“சென்னை ஐ.ஐ.டி யில் செயல்படும் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் ஆய்வு மாணவர்களை சிந்திக்கத் தூண்டுவதால் அதற்கு இந்த பார்ப்பனபாசிச அரசு தடைவிதிக்கிறது” என்பதை தோலுரித்து, “இதை முறியடிக்க மக்கள் அதிகாரமே தீர்வு” என்று அறைகூவினார்.

apsc-ban-pududvai-demo-2தோழர் கோகுல்காந்தினாத் தனது கண்டன உரையில் பார்ப்பன மதவெறி பாசிச மோடிகும்பலை பல்வேறு ஆதாரங்களுடன் அம்பலபடுத்தினார். மோடி பதவிக்கு வந்ததும் சங்கராச்சாரி உட்பட கொலைகார கும்பல்களை அடுத்து அடுத்து விடுதலை செய்து நாட்டையே பாசிசமயமாக்கி வருவதை அம்பலப்படுத்தினார். “கருத்து சுதந்திரத்தை எப்போதும் தடுப்பதுதான் மோடியின்  இழிசெயலாக தொடர்ந்து இருக்கிறது. அதன் ஒரு பகுதியாகதான் ஐ.ஐ.டி யில் படிப்பு வட்டத்தின் மீதான தடை” என அம்பலப்படுத்தினார். “பெரியாரும், அம்பேத்கரும் பார்ப்பனியத்தை எதிர்த்து போராடியதில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள். இங்குள்ள பார்ப்பன பாசிச கும்பலோ அம்பேத்கரை ஏற்பதாகவும் பெரியாரை எதிர்ப்பதாகவும் உளறிவருகின்றன” என்று கேலிக்கூத்தை திரைகிழித்து பேசினார்.

apsc-ban-pududvai-demo-3தோழர் லோகநாதன் தனது கண்டன உரையில், “ஐ.ஐ.டி என்பது உயர்கல்வி தொழில்நுட்ப கல்லூரி. அங்கு அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் பார்ப்பன பாசிச கும்பலின் பித்தலாட்டங்களை, ஜனநாயக ஒடுக்கு முறைகளை, சட்டத்தை மதிக்காமல் மனுநீதியை நடைமுறைப் படுத்தி வரும் மக்கள்விரோத செயல்களை அம்பலபடுத்தியது.

apsc-ban-pududvai-demo-4உழைக்காமல் உட்கார்ந்து தின்னும் இந்த பார்ப்பனபாசிச கும்பல் உழைக்கும் மக்களை இழிவு படுத்துவது கண்டு நமக்கு கோவம் வரவேண்டாமா?” எனக் கூடிநின்ற மக்களிடம் கேள்வி எழுப்பினார்.  “எச் ராஜா என்கிற பார்ப்பனபாசிச நச்சுப்பாம்பு மாணவர்களுக்கு அரசியல் கூடாது. எனவும் படிக்க மட்டும் செய்ய வேண்டும் எனவும் உளறிவருகிறார். ஆனால் இந்த பார்ப்பன பாசிச கும்பல் பள்ளி மாணவர்கள்உட்பட நாடுமுழுவதும் “ஷாகா” என்கிற பெயரில் பார்ப்பன நச்சுக்கருத்துக்களை ஊட்டி அவர்களை கொலைகார கும்பல்களாக தனது அடியாள்படையாக வளர்த்து வருவதை அம்பலப்படுத்தி இப்படிப்பட்ட கொலைகாரர்களையும் ரவுடிகளையும் உருவாக்கிவரும் பாசிச கும்பல்களுக்கு முடிவு கட்ட ஜனநாயாக சக்திகளையும் புரட்சிகர அமைப்புகளோடு இணைத்து உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடவேண்டும் ” என விளக்கி பேசினார்.

“மக்கள் அதிகாரத்தை கையில்எடுக்காமல் இந்த மண்ணையும் மக்களையும் பாதுகாக்க முடியாது ” என்ற உண்மையை உணர்த்தி பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி

கடலூர்

apsc-ban-cuddalore-demo-2டலூரில் “பார்ப்பன இந்துத்துவா தாக்குதல் முறியடிப்போம்” என்ற தலைப்பில் 02-06-2015 அன்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பு.மா.இ.மு தோழர்கள் பார்ப்பனபாசிச நடவடிக்கையை கண்டித்து  கண்டன முழக்கம் எழுப்பினார்கள்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்குரைஞர் செந்தில்குமார் மத்திய மனிதவளத் துறை அமைச்சராக இருக்கிற ஸ்மிருதி இரானி மோசடி செய்து படித்து பதவிக்கு வந்தவர் என்று அம்பலப்படுத்தி பேசினார்.

apsc-ban-cuddalore-demo-4புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி இணைச்செயலர் தோழர் நந்தா, “ஐ.ஐடி ஒரு உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம். ஆனால், அது எப்போதும் பார்ப்பன-பாசிச நச்சு கருத்துகளை பரப்புகின்ற கூடாரமாக செயல்படுகிறது.

பெரியார்-அம்பேத்கர் இருவரும் பார்ப்பன கொடுங்கோன்மையை தோலுரித்து காட்டி மக்களுக்கு வழி காட்டியவர்கள். அப்பேற்பட்ட தலைவர்கள் பெயரில் இயங்குவதற்கு தடையா? மாணவர்கள் ஜனநாயக பூர்வமாக சிந்தித்து மக்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை விவாதிப்பது தவறா? அதே ஐ.ஐ.டி. யில் ஆர்.எஸ்.எஸ் மாணவர்கள் அமைப்பு மூலம் அறிவியலுக்கு புறம்பான புராண கட்டுக்கதைகளை பற்றி ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கூட்டம் நடத்துகிறார்கள்.

முகவரி இல்லாத யாரோ அனுப்பிய மொட்டை கடிதத்துக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் அன்றாடம் திங்கள் கிழமை மனுநாளில் கலக்டர் அலுவலகத்தில் மனுகொடுத்து பல வருடமாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள், மக்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

ஆகவே, மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கும் இந்த அரசுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் ஒன்று திரண்டு போராட வேண்டும்” என்று உரையாற்றினார்.

apsc-ban-cuddalore-demo-3

இறுதியாக தோழர் புருசோத்தமன் நன்றி உரையாற்றினார்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர்

கோவை: போராட்டக் களத்தில் நக்சல்பாரி எழுச்சி நாள்

1

எம்பெஸ்ட் தொழிலாளர்கள் கைது..!

சுமார் இரண்டு மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது எம்பெஸ்ட் கம்பெனி தொழிலாளர்களின் போராட்டம். நிரந்தரமாக்குதல், போனசு, மாதச் சம்பளம் போன்ற மிக மிக அடிப்படையான உரிமைகளுக்காகக் கூட கடுமையான போராட்டங்களை சந்திக்க வேண்டிய நிலை.

பெஸ்ட் பம்ப்ஸ் முதலாளி ஸ்ரீப்ரியா வீட்டின் முன்பு குழந்தைகள் மனைவிகளுடன் குடும்பமாக வாரக்கணக்கில் அமர்ந்திருக்கிறார்கள் தொழிலாளிகள். தினசரி ஒரு அற்பப் பார்வையை வீசியபடி கடந்து போய்க் கொண்டும் வந்து கொண்டேயிருந்தார் ஸ்ரீப்ரியா. ஜூன் 1-ம் தேதி அவரை வெளியே போக விடாமல், “எங்களுக்கு பதில் சொல்லிவிட்டு போங்க..” என வழியை மறிக்க

கோவை பெஸ்ட் தொழிலாளர் கைது
சி‌.ஆர்‌.ஐ போன்ற கார்பரேட் முதலாளியை அல்லது பெஸ்ட் பம்ப்ஸ் போன்ற முதலாளித்துவ கொடுங்கோன்மைக்கோ எதிராக பயன்படுத்த ஒரே ஆயுதம் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான நக்சல்பாரிக் கட்சிதான்.

இத்துணை வாரமாக, “என்னடா இவங்க., ஒரு முடிவும் எடுக்க மாட்டேங்குறாங்க, இவங்க ஏதாவது முடிவெடுத்தா தானே நாம ஏதாவது ஒரு முடிவு எடுக்க முடியும்” என்று எண்ணியவாறு தேவுடு காத்திருந்த காவல் துறை “கெடச்சுதுடா சான்ஸ்: என்று எண்ணியவாறு வழக்கம் போல தனது ஒருதலைப் பட்சமான வழியில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டியது.

  • முறையாக தொழிலாளர் நலக் கோர்ட்டில் கேஸ் போட்டு, “ஏ‌.சி‌.எல் க்கு வா, டி‌.சி‌.எல்.க்கு வா” எனக் கூப்பிட்டு கூப்பிட்டு ஓய்ந்தும் வராமல் இருப்பது சட்ட விரோதம் இல்லை.
  • கலெக்டரிடம் மனு கொடுத்து பேச்சு வார்த்தைக்கு அழைத்தும் வராமல் இருப்பது சட்ட விரோதம் இல்லை.
  • 20 வருடங்களாக தினக்கூலியாகவே வைத்திருந்து இ‌.எஸ்‌.ஐ, பி‌.எஃப் என எந்த உரிமையும் கொடுக்காமல் சட்டத்தையும் நியாயத்தையும் தனது உரோமத்துக்கு சமானமாக அலட்சியப்படுத்தியது சட்ட விரோதம் இல்லை.

ஆனால், இவ்வளவு சுமையையும் பொறுத்துக் கொண்டு சுமார் இரண்டு மாதங்களாக குடும்பமாக போராடியதையும் இந்த நொடி வரை போராடிக் கொண்டிருப்பதையும் அரசமைப்பின் அனைத்து உறுப்புகளும் அவாளுக்கு ஆதரவாக நிற்பதை பார்த்துக் கொண்டிருந்து விட்டு இப்போது இப்படி மறித்து, “எங்களுக்கு ஒரு நியாயஞ் சொல்லிட்டு போ..” என்று கேட்டது சட்ட விரோதமாம்.

குழந்தைகள் பெண்களோடு சேர்த்து சுமார் 90 பேர் கைதாகினர். அதில் பெண்கள் குழந்தைகளை தவிர்த்து விட்டு சுமார் 33 பேரை மாஜிஸ்திரேட் முன்னால் ஆஜர்படுத்தி அதில் முன்னணியாளர்களான தோழர்கள் சரவணன், மகேந்திரன், சுரேஷ் மற்றும் நந்தகுமார் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறது போலீசு.

பல முறை கூறினாலும் இது மறுக்க முடியாத தவிர்க்க முடியாத உண்மை : இது போன்ற தொடர் போராட்டங்களை பாரம்பரியமான சங்கங்களை வைத்துள்ள தேசியக் கட்சிகளோ அல்லது இன்ன பிற எந்த அரசியல் கட்சியோ நடத்த முடியாதது.

சி‌.ஆர்‌.ஐ போன்ற கார்பரேட் முதலாளியை எதிர்ப்பதற்கோ அல்லது பெஸ்ட் பம்ப்ஸ் போன்ற மிக தீவிரமான முதலாளித்துவ கொடுங்கோன்மைக்கோ எதிராக பயன்படுத்த ஒரே ஆயுதம்தான் இருக்கிறது. அது, பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான நக்சல்பாரிக் கட்சிதான்.

தமிழ்நாட்டில் மட்டுமே இயங்கக் கூடிய அதிலும் போலிக் கம்யூனிஸ்டுகளை போல மூலைக்கு மூலை கிளை இல்லாத இந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அடியை சமாளிக்க முடியாமல் எஸ்‌.ஆர்‌.ஐ கம்பெனியில் தனது சங்கத்தை கலைக்க தயாராகி விட்டது சி‌.ஐ‌.டி‌.யு.

“அவங்கள மாதிரியே ஒப்பந்தம் போடணும்னா அவங்க சங்கத்துக்கே போய்க்கங்க..!” என பொதுக் குழுவிலேயே அறிவித்தும் விட்டார்கள். நமது சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டிருக்கிறது.

இது எப்படி சாத்தியமாகிறது? சி‌.ஆர்‌.ஐ மற்றும் பெஸ்ட் பம்ப்ஸ் மாதிரியான தொடர் போராட்டங்கள் எப்படி சாத்தியம். எப்படியெனில், இது நக்சல்பாரிப் படை.

ரசியப் புரட்சியை நடத்தி முடித்த லெனினியத்தின் வேலை நடை ரசியப் புரட்சிகர வீச்சு என்றால்., இங்கு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி யின் ரத்த ஓட்டமாக இயங்குவது நக்சல்பாரிப் புரட்சித் துடிப்பு. அதே நக்சல்பாரிப் புரட்சித் துடிப்பு தான் இந்து மதவெறியின் கழுத்தை நெறித்தவாறே முதலாளித்துவத்தின் நெற்றியில் துவக்கை நிறுத்துகிறது.

இப்போது இது சிறுபான்மையாக இருக்கலாம். ஆனால் இந்த நாட்டில் புரட்சியின் அடிநாதம் நக்சல்பாரிப் புரட்சித் துடிப்பே. இங்கு இன்னும் ஏராளமான வெற்றிகளை ஈட்டக் காத்திருக்கும் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையே இந்த கட்சி. இந்த நாட்டின் தேசபக்தர்களுக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் உணர்வும் உற்சாகமும் ஊட்டிக் கொண்டிருக்கும் ஒரே சொல் நக்சல்பாரி. இந்த போராட்டத்தின் உள்ளுணர்வு நக்சல்பாரி.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

மே 25 நக்சல்பாரி பேரெழுச்சி நாள்

குமாரவேல்
நக்சல்பாரி பாதைதான் கோவைத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஏற்ற பாதை.

தவடைப்புக்கு எதிராக கடந்த 60 நாட்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கும் சி‌.ஆர்‌.ஐ கம்பெனி நுழைவாயில் முன் 25-05-2015 அன்று மாலை 5 மணிக்கு நக்சல்பாரி பேரெழுச்சி நாள் கூட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி கோவைக் கிளையால் நடத்தப்பட்டது. நிகழ்வன்று காலை 10 மணிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சி‌.ஆர்‌.ஐ மற்றும் பெஸ்ட் நிறுவன தோழர்கள் சுமார் 250 பேர் திரண்டு சென்று மனு நீதி நாளை போராட்டமாக மாற்றி மாவட்ட ஆட்சித் தலைவரை தூங்க விடாமல் தட்டி எழுப்பி விட்டு வந்தனர்.

நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் தோழர் குமார வேல் தலைமை தாங்கினார். “நக்சல்பாரி சங்கமான பு.ஜ.தொ.மு வில் இணைந்த காரணத்தால் நாங்கள் சுயமரியாதை பெற்றோம். எங்கள் வாழ்நாளிலேயே கிடைக்காத உணர்வுகளை எல்லாம் பெற்றோம். பு.ஜ.தொ.மு வில் இணையாமல் இருந்தால் சி‌.ஆர்‌.ஐ முதலாளியால் சூறையாடப்பட்டிருப்போம். நக்சல்பாரி பாதைதான் கோவைத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஏற்ற பாதை” என்று முழங்கினார்.

பு.ஜ.தொ.மு மாநில துணைத் தலைவர் விளவை இராமசாமி தனது சிறப்புரையில் நக்சல்பாரியின் மாண்புகளை பட்டியலிட்டு பேசினார்.

“சில ராகங்கள் பாடும் போது தான் இனிமையாக இருக்கும். ஆனால் பெயரை கேட்டாலே இனிக்கும் ராகம், உச்சரித்தாலே உற்சாகம் தரும் ராகம் நக்சல்பாரி.

இமயத்தின் அடிவாரத்தில் இந்தியாவின் இதயத்தின் இடது மூலையில் மேற்கு வங்க மாநிலத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் சிலிகுரி வட்டத்தில் சுமார் 300 சதுர மைல் பரப்பளவில் நக்சல்பாரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இந்த ராகம் 1967 மே 25-ல் இசைக்கப்பட்டது. வில் அம்பு போன்ற கருவிகள் துணையுடன் ஆளும் வர்க்கங்களான ஜோதிதார் எனப்படும் நிலப்பண்ணைகளுக்கு எதிராகவும் அவர்களின் வேட்டை நாய்களான போலீசுக்கும் ராணுவத்துக்கும் எதிராக முழங்கியது நக்சல்பாரி.

இதன் இசை கேட்ட தோழர் மாவோ இந்தியப் புரட்சி என்னும் வசந்தத்தின் இடி முழக்கம் என்று வரவேற்றார்.

உழுபவனுக்கு நிலம்” “உழைப்பவனுக்கே அரசியலதிகாரம்” என்கிற நக்சல்பாரியின் பாடல் கடந்த 40 ஆண்டுகளாக இந்திய ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

கடந்த 10 ஆண்டு காலமாக உலக வங்கியின் கைக்கூலி மன்மோகன் சிங், ‘உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பவர்கள் நக்சல்கள்’ என ஓயாமல் ஒப்பாரி வைத்தார்.

சத்தீஸ்கரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பாசிச மோடி, ‘மாவோயிஸ்டுகள் துப்பாக்கிகளை கீழே போட்டுவிட்டு ஏர்க்கலப்பையை தூக்க வேண்டும்’ எனப் பேசியிருக்கிறார்.

ஏர்க்கலப்பையை தூக்கி விவசாயம் செய்துவிட்டு விளைந்த பொருளுக்கு விலை கிடைக்காமல் தூக்கில் தொங்க வேண்டும் என்பதுதான் மோ(ச)டியின் அறிவிப்பு.

1967-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி நடந்த ஆயுதந் தாங்கிய பேரெழுச்சியின் முக்கியச் செய்தியே அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போர்ப்பிரகடனமாக இருந்த காரணத்தால்தான் ஆளும்வர்க்கங்கள் இன்று வரை அஞ்சி நடுங்கிக் கொண்டுள்ளனர்.

இந்த போர்ப் பிரகடனத்தின் சிறப்பு என்னவென்றால்

  • இது ஒரு ஆயுதம் தாங்கிய பேரெழுச்சியை குறிக்கிறது.
விளவை ராமசாமி
“ஏர்க்கலப்பையை தூக்கி விவசாயம் செய்துவிட்டு விளைந்த பொருளுக்கு விலை கிடைக்காமல் தூக்கில் தொங்க வேண்டும் என்பதுதான் மோ(ச)டியின் அறிவிப்பு.”
  • நாடாளுமன்ற போலி ஜனநாயகத்திற்கு வெளியே உழைக்கும் மக்களை அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கின்ற போராட்டத்திற்கு அணிதிரட்டும் மையமாக விளங்குகிறது.
  • நாடாளுமன்ற பன்றித் தொழுவத்தில் விழுந்து புரளும் ஒட்டுக் கட்சிகளை காரி உமிழ்ந்தது.
  • எல்லாவற்றுக்கும் மேலாக அதிகார வர்க்க ராணுவ அரசமைப்பை தாக்கித் தகர்ப்பதற்கான பேராயுதமாக விளங்கியது.
  • உழைக்கும் மக்களை நேரடியாக அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஒரே பாதையை காட்டியது.

நக்சல்பாரி பேரெழுச்சியின் போர்ப்பிரகடனத்தை தோழர் மாவோ தலைமையிலான அரசால் வழிநடத்தப்பட்ட சீனாவின் பீகிங் வானொலி சீரிவரும் இந்தியப் புரட்சி சிறுத்தையின் முன்பாதம் எனவும், போலி மார்க்சிஸ்டுகளை “மக்களை ஏய்க்கும் எதிர் புரட்சியாளர்களின் கருவி” என அம்பலப்படுத்தியது.

நக்சல்பாரியில் எழுந்த இந்த பேரெழுச்சி, உழைக்கும் மக்களுக்கு உண்மையான கட்சியாக யார் இருக்க முடியும் என்பதை பறைசாற்றியது. அந்த வகையில் இப்பேரெழுச்சி ஓர் உண்மையான புரட்சிகரமான கம்யூனிச கட்சிக்கு அடித்தளமிட்டது. இதன் தாக்கம் நாடு முழுவதும் இருந்தது.

பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும் மாணவர்களும் சொந்த வாழ்க்கை மீதான பிடிப்பினைத் துறந்து புரட்சிகர இயக்கத்தில் இணைந்தனர்.

கோவையில் தோழர் எல்.அப்பு தலைமையில் சி‌.எஸ்‌.டபில்யு, காளீஸ்வரா சோமசுந்தரா மில் தொழிலாளர்கள் 1500 பேர் ஊர்வலமாகச் சென்று டவுன் ஹாலில் கூட்டம் நடத்தி நக்சல்பாரி போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இவர்களை நக்சல்பாரிகள் என்றும் நக்சலைட்டுகள் என்றும், தீவிர கம்யூனிஸ்டுகள் என்று ஆளும் வர்க்கம் முத்திரை குத்தி வேட்டையாடத் துவங்கியது. நக்சல்பாரிகளின் கட்சியாகிய இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) 1969-ம் ஆண்டு ஆசான் லெனினின் 100-வது பிறந்த நாளான ஏப்ரல் 22-ல் உதயமானது.

விளவை ராமசாமி
“நக்சல்பாரியில் எழுந்த இந்த பேரெழுச்சி, உழைக்கும் மக்களுக்கு உண்மையான கட்சியாக யார் இருக்க முடியும் என்பதை பறைசாற்றியது. “

நக்சல்பாரியின் சிறப்பே புதிய பாதையை உருவாக்கி சாதனை படைத்தது ஆகும். போலி பாராளுமன்றப் பாதையை திரை கிழித்தது நக்சல்பாரி. சுரண்டல் ஒடுக்குமுறைகளை எதிர்க்க தன்னை தவிர வேறு மார்க்கம் இந்தியாவில் இல்லை என ஒளிச் சுடராக எழுந்து நின்றது, நிற்கிறது நக்சல்பாரி.

நக்சல்பாரியின் பின்னடைவுகள் எல்லாம், அதன் தோல்விகள் எல்லாம் நடை பழகும் குழந்தை தடுமாறி கீழே விழுவதை போன்ற அழகுதான். மாபெரும் தியாகங்களை நிகழ்த்திய, கோரிய நக்சல்பாரிதான் புரட்சிகர ஆற்றல் முன்பு தோல்வியும் அழகுதான்.

இன்று ஆளும் வர்க்கத்தின் அரசுக் கட்டமைப்பு தோற்றுப் போய் திவாலாகி எதிர்நிலை சக்திகளாக மாறி ஆளும் அருகதையற்று விட்டது. அதன் பாதிப்பால் தொழிலாளர்களான நாம் தெருவில் நிற்கிறோம்.

  • கதவடைப்பு செய்ய வேண்டுமானால் அரசிடம் அனுமதி வாங்க வேண்டும் என சட்டம் உள்ளது. சட்டத்தை மதிக்காமல் அனுமதி வாங்காமல் கதவடைப்பு செய்கிறான் முதலாளி. அரசின் கட்டுமான உறுப்புகள் முதலாளியை எதிர்த்து முனகக் கூட முடியவில்லை.
  • 480 நாட்கள் வேலை செய்தால் நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசின் ஒரு அங்கமான தொழிலாளர் துறை உத்தரவே போடுகிறது. ஒரு அரசு அதிகாரியின் உத்தரவுக்கு நீதித் துறை ஒரு காரணமும் கூறாமல் தடை போடுகிறது. பெஸ்ட் தொழிலாளர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக பி‌எஃப், இ‌எஸ்‌ஐ கூட பிடித்தம் செய்யாமல் அரசை ஏமாற்றுகிறார் முதலாளி.
  • அரசு கட்டமைப்பான தொழிலாளர் துறை; இ‌எஸ்‌ஐ கார்ப்பரேசன் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், மாவட்ட ஆட்சித் தலைவர் என எங்கு புகார் கொடுத்தாலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

முதலாளியின் முன் அரசு கட்டமைப்பு செயலிழந்து நிற்கிறது. ஆளும் தகுதியிழந்து விட்டது. இதனை அடித்து நொறுக்கினால்தான் தீர்வு என வெளிப்படையாகத் தெரிகிறது. நமது வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் கட்டமைப்பு நெருக்கடி தெரிகிறது. இதனை எதிர்த்து போராடக் கூட யாருக்கும் துப்பில்லை.

ஆனால், நக்சல்பாரிகளான நமக்கு இதனை எதிர்த்து போராடும் புரட்சிகர ஆற்றல் உள்ளது. போராடுவது மட்டுமல்ல மாற்று மக்கள் அதிகார அமைப்புகளை நிறுவும் ஆற்றலும் உள்ளது. எனவே, நாம் நமது குடும்பம், நமது வீதி, நமது ஊர் என எங்கும் நாங்கள் நக்சல்பாரிகள் என்று முழங்குவோம், இந்த நாட்டின் உண்மையான புதல்வர்கள், நக்சல்பாரிகள்தான்” என அறைகூவல் விடுப்போம் என முடித்தார்.

நக்சல்பாரி எழுச்சி நாள்
நக்சல்பாரி எழுச்சி நாள் கூட்டத்தில் ஆர்வத்துடன் தொழிலாளிகள்

நக்சல்பாரியின் வரலாற்றை முதன் முதலில் செவி மடுத்த தொழிலாளர்கள் பல்வேறு கேள்விகள் கேட்டனர். பொருத்தமான விடைகள் சொல்லப்பட்டன. இரண்டு மணி நேரம் நடந்த கூட்டம் தொழிலாளர்கள் மத்தியில் தேடலுக்கான புதிய திசைகள் திறந்து விட்டுள்ளன.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

சிங்கப்பூர் சிறையில் 120 நாட்கள் !

9

ருக்குலைந்து வரும் விவசாயம் நல்லாருந்துச்சுன்னா இந்த ஜனங்க ஏன் இப்படி திசைக்கொருத்தரா ஓடப் போறாங்க!

கலைவாணிக்கு முப்பது வயசு கூட இருக்காது. ஏழை விவசாயக் குடும்பம், அம்மா செத்து, குடிகார அப்பனோட மல்லுக்கட்ட முடியாம, இன்னொரு ஏழைக்கு வாக்கப்பட்டு, சென்னைக்கு குடி வந்து, அங்க ஒரு பணக்கார மாளிகையில குடும்பத்தோட இடுப்பொடியற மாறி வேல பாத்து, அந்த கிழட்டு முதலாளியோட வக்கிர புத்திய எதித்து கேட்டு, இருந்த வேலையும் போக, ஐந்து வயசு புள்ளையோட அடுத்து என்ன பண்ணணும்ங்கிற நிலைமையிலதான் சிங்கப்பூரு தெய்வமாட்டம் வந்துது.

ஏழைன்னாலும் கலைவாணி ஊருல கௌரவமா வாழணும்கிறது ஒரு நியதி. ஏழையா கஷ்டப்பட்டு வாழ்றத விட ஏழைன்னு சொல்லிக்கிறதுதான் நம்ம ஆட்களுக்கு ரொம்ப அவமானம். அதனாலதான் கலைவாணி பட்டணத்துக்கு போய் ஓய்வு ஒழிச்சல் இல்லாம வேல பாத்தா. இலவச வீடு திட்டத்துல சேந்து ஒரு இலட்சம் கடன வாங்கி குடிசைக்கு தளம்போட்டா. மகளை இங்கிலீஸ் மீடியத்துல சேக்குறதுக்கு பணம் சேத்து வைச்சா. இதுக்கா அவ அடைஞ்ச துன்பத்த பாத்தீங்கன்னா நம்பவே மாட்டீங்க. இதுல கொஞ்சம் தப்பி விழுந்தா அவங்க ஊர்ல உடனே மருந்து குடிச்சு முடிச்சுக்குவாங்க. கலைவாணி சின்ன வயசுல இருந்தே வாழ்றதுக்கு போராடிக்கிட்டே இருந்தவங்கிறதுன்னால இன்னும் அந்த முடிவுக்கு போகல.

அவளோட வீட்டுக்காரரு ஒரு வாயில்லாப் பூச்சி. மாடு மாதிரி வேல மட்டும் பாப்பாரு. அத வுட்டா ஒரு சின்ன விவரம் கூட விசாரிக்க தெரியாத அப்பாவி. இதுல எதுன்னாலும் கலைவாணிதான் முடிவு செஞ்சாகணும். ஆனா வேலை இல்லாம, ஊருக்குள்ள எப்படி தலை காட்டமுடியும்? வயித்து பிழைப்ப எப்படி ஓட்ட முடியும்?

அவளோட நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சுய சாதி நண்பர் ஒருவர், “சிங்கப்பூரில் வீட்டு வேலை இருக்கு”ண்ணு சொன்னாரு. “கணவன் மனைவி இருவரும் ஒரே வீட்டில் வேலை செய்யலாம்னாலும், கையில் பெண்ணுக்கான விசா மட்டும்தான் இருக்கு”ண்ணு தூண்டில வீசுனாரு. மீனும் சிக்கியிருச்சு. “முதலில் நீங்கள் புறப்பட்டு போங்க, இரண்டு மாசத்துக்குள்ள உங்க வீட்டுக்காரரும் சேந்துக்கலாம். இதுக்காக நீங்கள் பத்து பைசா கூட செலவு வேணாம். பாஸ்போட்டும் விமான டிக்கட்டுக்கான பணமும் ஏற்பாடு செஞ்சா போதும்”னு பேசியிருக்கிறார்.

ஒரு ஏழைக்கு விடிவு காலத்தை கண்ணுல காட்டுறதுக்கு இது போதாதா என்ன? கலைவாணி சம்மதிச்சதும் அவரு மிச்ச ஏற்பாடுகள செஞ்சாறு.

“நீங்க வேலை செய்யுற வீடு தமிழ் குடும்பந்தான், எந்தப் பிரச்சனையும் இல்லை. சிங்கப்பூர் போய் சேருவதற்கான எல்லா செலவையும், சட்டரீதியான ஏற்பாடுகளையும் அவங்களே பாத்துக்குவாங்க”ண்ணு சொன்னாரு. “எத்தனையோ பேரு போக ரெடியா இருக்காங்க ஆனா நாணயமா இருப்பிங்கன்னு தான் உங்கள அனுப்புறேன்”னு நம்பிக்கையூட்டினார்.

மத்தவங்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு நல்ல வேலை நம்மள நம்பி ஒப்படைச்சுருக்காங்கண்ணு கலைவாணிக்கு கண்ணுல தண்ணி வந்துருச்சு. நாமெல்லாம் சீரியல பாத்தே அழுவுற அப்பாவிங்களாச்சே!

சிங்கப்பூர் சொர்க்கத்தை தேடி ஜனவரி 2015 முதல் வாரத்தில் பயணம் போனா கலைவாணி. பிறகு சிங்கப்பூர் நரகத்திலிருந்து தப்பி மே இரண்டாம் வாரத்தில் இந்தியா திரும்பிவிட்டாள்.

நான்கு மாத சிங்கப்பூர் சிறை வாழ்க்கையை அவளது வார்த்தையிலேயே கேளுங்க.

“சிங்கப்பூருல நான் வேலைக்கு போன குடும்பத்துல கணவன் மனைவியோட 18 வயசுல ஒரு பொண்ணு 13 வயசுல ஒரு பொண்ணுன்னு மொத்தம் நாலு பேரு இருந்தாங்க.

house-helper-1அந்த வீட்டுக்குள்ள நொழைஞ்சதுமே தூக்கி வாரி போட்ட முதல் விசயம் ஒரு கால் சட்டையையும், பிரா மாறி ஒரு பனியனையும் கொண்டு வந்து யூனிஃபாமாட்டம் போட்டுக்கன்னு சொன்னதும் உயிரே போச்சு. “இந்தாங்க இதையெல்லாம் நான் போட்டுக்க மாட்டேன். இதெல்லாம் போட்டுதான் ஆகனுன்னா இப்பையே என்னை வண்டி ஏத்தி விட்டுறுங்க நான் போயிர்ரே”ன்னு சொல்லிட்டேன். சரி வேல பாக்குற மாட்டுக்கு சட்டைன்னா என்ன, சேலைன்னா என்னண்ணு விட்டுட்டங்க போல.

அவங்க வீடு இருந்தது ஒரு பெரிய அடுக்கு மாடி கட்டிடத்துல. எங்க ஏறுனோம் எங்க எறங்குனோம் எத்தனாவது மாடியில இருக்கோம் எதுவும் தெரியாது. ஒரு மாசம் வரைக்கும் காலையில 8 மணிக்கி பூட்டிட்டு போனா ராத்திரி 8 மணிக்கு வந்துதான் திறப்பாங்க. வெளிக்காத்து இல்லாம போன ரெண்டு நாளுலயே மனசு வாடிப்போச்சு. கிராமத்துல சுத்தி சுத்தி பொழங்குனவங்களுக்கு ஒரு கட்டிடத்துக்குள்ளயே அடைஞ்சு கிடக்கணும்னா எப்படி இருக்கும்? சரி, நம்ம வயித்து கஷ்டத்துக்கு ஜெயில்ல இருக்குறதா மனச தேத்திக்கிட்டேன்.

பாத்ரூம தவிர வீட்ட சுத்தி கேமரா இருக்கும் ஒரு நிமிசம் நேரம் சும்மா உக்கார முடியாது. நடந்துகிட்டே இருக்கனும். கொஞ்ச நேரம் அக்கடான்னு உக்காந்தா கேமரா காட்டிக் கொடுக்கும். பாத்ரூம்ல கொஞ்சம் அதிக நேரம் இருந்தாக்கூட வூட்டம்மா கூச்சப்படாம ஏன் எதுக்குன்னு கேப்பாங்க. அந்தக்காலத்துல கங்காணி காலிப்பயலுவ மாறி இப்போ காமராவ அடியாள வச்சுருக்காங்க.

singapore-domestic-worker-abuseஅதுனாலதான் எனக்கும் காமரா இல்லேங்கிறதால பாத்ரூம்தான் எதோ கொஞ்சம் பிடிச்சிருந்துச்சுன்னு சொல்லலாம். அங்கதான பல நாளு மனம் விட்டு அழுதிருக்கேன். கால் கழுவுற தண்ணியோட கண்ணீரும் சேந்து ஓடும்.

வீடு சன்னல் டாய்லெட்டு சுத்தமா தொடச்சு வாசனையா வச்சுக்கனும். நெதமும் பெட்சிட்டு, கதவு ஜன்னலு ஸ்க்ரின், தலையணை உரை, மிதியடின்னு ஒரு நாள் பாக்கி விடாம தொவைக்கனும். ஒரு நிமிசம் சும்மா இருந்தா, “என்ன ரெஸ்ட் எடுக்குரியா. வேலையை பாரு”ன்னுவா வூட்டம்மா. வீட்டுல யாரும் இல்லேன்னாலும் ரெஸ்ட் எடுக்க முடியாது. வந்தா நான் என்ன செஞ்சேன்னு காமராவா பாத்து தெரிஞ்சுக்குவாங்க.

எங்க இருந்தாலும் சுத்தி சுத்தி வேல பாக்குறதுல என்ன மிஞ்ச முடியாதுன்னு எங்கூரு இளந்தாரிக சொல்லுவாளுக. அப்பிடி பெயரெடுத்த நானே அங்க ஒரு வாரத்துல ஒடஞ்சு போயிட்டேன். இங்கையாவது நம்மள மனுசின்னு எப்பவாச்சும் முதலாளிமாரு நினைப்பாங்க. அங்க பாத்தீங்கன்னா நம்மள சாவப்பொறந்த மெசின் மாறிதான் நடத்துவாங்க.

A maid cleans a window in Singapore November 3, 2006. REUTERS/Nicky Loh
A maid cleans a window in Singapore November 3, 2006. REUTERS/Nicky Loh

நான் சிங்கப்பூர் நாலு மாசத்துல ஒரு உருண்ட சோறு கூட சாப்புடல. அந்த வீட்டுல மூனு நேரமும் ப்ரெட்டுதான். பிரெட்ட துண்டு துண்டா வச்சு நடுவுல ஆம்லேட் இல்ல தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்கா, முட்டகோசு அது மேல ஏதோ டப்பாவுலேருந்து பிசுனாட்டம் ஊத்தி திம்பாங்க பாத்தாலே கொமட்டிக்கிட்டு வரும் என்னால திங்கவே முடியாது. வெறும் பிரெட்ட மட்டும் தின்னுட்டு தண்ணிய ஒன்னுக்கு ரெண்டு செம்பா குடிச்சிட்டு படுத்துருவேன்.

கறி மீனு வாங்கியாந்து ஃப்ரிஜ்ஜு நிறையா வச்சுருவாங்க. அதை அப்பிடியே கழுவிட்டு என்னமோ ஓவன்னு ஒரு அடுப்புல வச்சு சுட்டு அது மேல எதையோ ஊத்தி தின்னுவாங்க. இருவது ஆளு நின்னு வயல்ல நடவு செஞ்சாலும் ஒத்தாளா நின்னு ஆக்கி எறக்கிருவேன். ஆனா இவங்க சமையல செய்ய ரொம்பவே செரம்ப்பட்டேன். அவங்களுக்கு பிடிக்கிறது அவங்க நல்லா சாப்பிட்டடும். ஆனா நம்மள மாறி வேற ஊருக்காரங்க என்ன சாப்பிடுவோம்ணு கூட நினைக்கா மாட்டாங்களா?

அவங்க பேசரதே புரியாது. எல்லாருமே இங்லீஷ்லதான் பேசிக்குவாங்க. என்ன இங்லீஷ்லதான் திட்டுவாங்க. என்ன வேலை சொல்றாங்கன்னு புரியாது. அந்த அம்மாவுக்கு தமிழ் கொஞ்சம் தெரியும் ஆனா பழக்க தோசத்துல எல்லாத்தையும் இங்லீஷ்லேயே சொல்லும். புரியலன்னு அதுக்கும் திட்டும். ஸ்டுப்பிடுங்கற வார்த்தையும் அவங்க கொடூரமான மொகத்தையும் பாத்து ஏதோ திட்றாங்கன்னு புரியும். ஊமையப் போல கை சாடையும் கண் சாடையுமா கேட்டு தெரிஞ்சுக்கறதுக்குள்ள போதும்டா சாமி, பிசாசுங்களுக்கு மத்தியில மாட்டிகிட்டோன்னு மட்டும் புரிஞ்சுச்சு.

singapore-domestic-worker-abuse-2ஆரம்பத்துல ஏஜெண்டு என்ன சொன்னாருன்னா, சிங்கப்பூருல தமிழ வெச்சுக்கிட்டே பிழைச்சுரலாம், அரசாங்க மொழியா இருக்குன்னு ஏதோதோ சொன்னாரு. இங்க பாத்தா தமிழ் ஆளுங்களே கூட தமிழ்ல பேச மாட்டாங்க. சரி திட்டறதுக்கு தமிழ் ஒத்து வராதுன்னு, இங்கிலீசுல திட்டுறாங்கன்னு நினைச்சுக்கிட்டேன்.

ஒரு மாசம் கழிச்சு பக்கத்துல இருக்குற பள்ளிக்கூடத்துல போயி சின்ன பொண்ண அழைச்சுட்டு வான்னு அனுப்புனாங்க. கீழ இறங்கி வந்து மக்க மனுசங்கள பாத்ததும் தான் மூச்சே வந்துச்சு. ஒரு மாசம் வூட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடந்து, சுவரையும், காமராவையும் பாத்து பாத்து நானே கொஞ்சம் லூசாயிட்டேன்னு வையேன்.

ரெண்டு நாள் கழிச்சு அரைமணி நேரத்துக்கு முன்னாடியே கெளம்பி வெளிய வந்து வேடிக்க பாத்துட்டு பிள்ளைய அழைச்சுட்டு வந்தேன். அன்னைக்கி வீட்டுக்கு வந்ததும் வராத்துமா திட்டுச்சு பாரு அந்தம்மா! இங்லீஷ்சு பேய் படம் மாறி இருந்துச்சு.

அந்த பிள்ளையும் சும்மா சொல்லப்படாது நான் கூட்டிட்டு வரும்போது என் மோகத்தையே பாத்துட்டு வரும். யாருகிட்டயும் பேசுரனா, சிரிக்கிறனா எங்கனா பாக்குறனான்னு வந்ததும் ஒண்ணு விடாம போட்டு கொடுத்துரும். நம்ம கிராமத்துல குழந்தைங்க கொஞ்சம் மிராசுதார் வூடா இருந்தாலும் ஜனங்கன்னு இல்ல, வேலையாளுங்க எல்லாருகிட்டயும் மரியாதையா நடந்துக்குவாங்க. இங்க ஒரு குழந்தை கூட ஏட்டையா மாறி அதிகார தோரணையா வேலை செய்யுறவங்கள நடத்துங்கிறத என்னால ஜீரணிக்கவே முடியல.

house-helper-3அப்ப வூட்டம்மா என்ன திட்றாங்கன்னு புரிஞ்சுக்க முடியாம கட்டையாலேயே ஓங்கி மண்டையில போட்றலாம் போல இருக்கும்.

இதெல்லாம் பரவாயில்லை அந்த வீட்டுக்கார கம்முனாட்டி நடந்துகிட்டத நெனச்சா இருதயமே நடுங்குது. அம்மணமா பாத்ரூம்ல நின்னுகிட்டு துண்டு கேப்பான். பொண்டாட்டி காரி எடுத்து குடுக்க சொல்லுவா. தெரிஞ்சு பாதி, தெரியாம பாதின்னு நின்னுகிட்டு துண்ட வாங்குவான். அவன் ட்ரெஸ்சு போட்டுருந்தாலும் பாதி நேரம் முழுசா தெரியிரா மாறிதான் போட்ருப்பான். “பேப்பர எடு, ரிமோட்ட எடு, சோபாவுக்கு கீழ நல்லா பெருக்கு”ன்னு நாம அந்த கண்றாவிய பாக்குறா மாறிதான் வேலையும் சொல்லுவான், லூசுப்பய. இதெல்லாம் நம்ம சினிமாவுலதான் பாத்திருப்போம். இப்படியெல்லாம் நிசத்துல நடக்கும்கிறத அங்கதான் தெரிஞ்சுகிட்டேன்.

பொண்டாட்டி வேலைக்கு போன பிறகு அசிங்கமான படமெல்லாம் போட்டு பாப்பான். அதையும் வேல பாக்குற நேரத்துல போடுவான். நான் பாக்குறனான்னு ஓரக்கண்ணால நோட்டம் பாப்பான் அந்த படுபாவி. இதுக்குத்தான் தமிழ்நாட்டுல இருந்து வேலைக்கு பொண்ணுங்கள கூட்டிட்டு வாரனுகளோ இந்த பாவிங்கன்னும் தோணும்.

domestic-worker-abuseஎனக்கு படுக்க கொடுத்த இடம் பெரிய பொண்ணு பொழங்குற ரூம். அந்த பொண்ணு பல நாளு வெளிய போனா ராத்திரிக்கு வராது. அத வெச்சு இந்தாளு ராத்திரி தூங்கும்போது அலமாரில எதையோ தேடறாப்போல ஒரசுரதும் கால மிதிக்கிறதும் அவனோட போக்கு கூடிகிட்டே போச்சு. ஏதோ நடக்கப் போகுது எப்புடியாவது நம்ம ஊருக்கு போயிறனுமின்னு தோனுச்சு. ஆனா எப்படின்னு தெரியாம அழுக மட்டுந்தான் வந்துச்சு. இத ரெண்டு வார்த்தையில ஆறுதலா சொல்லி அழவும் அங்க நமக்கு சனமில்ல. ஃபோனும் இல்லை.

இந்த நாலு மாசத்துல ஊருக்கு பேசணும்னா மாசத்துல ஒரு வாட்டி ஃபோன கொடுத்து வூட்டம்மா பேசச் சொல்லும். அதுலயும் ரெக்கார்ட போட்டுக்கு கொடுக்கும். நாம என்ன செய்யறோம்னு பாக்குறவங்க, என்ன பேசுறோம்ங்கிறதையும் பதிவு செஞ்சு கேப்பாங்களாம். நல்லா இருக்குடி உங்கூரு நாகரீகம்.

யாருகிட்ட சொல்றது எப்புடி தப்பிக்கிறதுன்னு ஒன்னுமே வெளங்கல. என்னை அனுப்புன ஊர்க்கார நண்பருக்கும் இந்த வீட்டு ஓனருக்கும் நேரடி தொடர்பு இல்ல. இவங்களுக்கிடையில ஏஜெண்டு இருந்துருக்கான். ஒரு மாசம் கழிச்சு எஜெண்டு என் சம்பளப் பணத்தை கமிஷனா வாங்க வந்தப்பதான் அதுவும் எனக்கு தெரியும்.

வந்தவரு, “எதுத்து பேசக்கூடாது, சொல்றத கேட்டு பணிவா நடந்துக்கனும், அவங்களா போன் பண்ணி கொடுத்தாதான் பேசனும், நீயா கேக்க கூடாது. செல்போன் வச்சிக்கிட்டு பேச கூடாதுன்னு அக்ரிமெண்ட் போட்டுருக்கு, இந்த பணத்த வச்சுகிட்டு யாருக்கும் தெரியாம காயின் போட்டு உம்மக(ள்) கூட பேசிக்க”ன்னு சொல்லி நம்ம காசுக்கு ஆயிரம் ரூவா கொடுத்துட்டு கெளம்பிட்டாரு. தாசில்தாரு ஐயாவ பாக்கப் போன எப்படி நடந்துக்கணும்னு நம்ம தலையாரி சொல்லித்தர மாறி இருந்துச்சு. ஃபோன்ல பேசக்கூடாதன்னெல்லாம் அக்ரிமெண்ட் போட்டுருக்காணுகண்ணா நான் என்ன மிலிட்டிரியிலயா வேல பாக்குறேன்.

கிட்டதட்ட நம்மள வித்துட்டாய்ங்கென்னு மட்டும் புரிஞ்சுது. இந்த நெலமையில யாருகிட்ட உதவி கேப்பேன். இனிமே நம்ம பிள்ளைய போயி பாக்க முடியாது போலருக்கேன்னு தோணும் போது தான் பிள்ளைய பாத்தே ஆகனுமுன்னு மனசு கெடந்து துடிச்சுது. பிள்ள நெனப்பு வந்தப்புறம் பத்து நாள் வரைக்கும் ஒரு பீசு ரொட்டி துண்டு கூட என்னால சாபிட முடியல. வந்த இடத்துல பிசாசுங்களுகிட்ட மாட்டிகிட்டோம் எப்படி தப்பிக்கிறதுன்னு நெனச்சேன்.

ஏஜெண்டு குடுத்த அந்த காசுலேருந்து திருட்டு தனமா ஸ்கூலுக்கு வரும்போது என்னோட மாமா பையனுக்கு ஒரு போன் போட்டேன். அவன் கொஞ்சம் படிச்சவன். எப்படியாவது உதவ முடியுமா, இன்னும் ஒரு மாசம் இங்க இருந்தேன்னா நான் வேற மாறி மாறிருவேன். இல்ல செத்துருவேன்னு அழுதுட்டேன். “அவங்க போன் நம்பர் தா முயற்சி செய்றேன்”னு சொன்னான். அத ஏழு கடல், ஏழு மலை தாண்டி எப்படியோ விசாரிச்சு சொன்னேன்.

“குழந்தைக்கி உடம்பு சரியில்லாம ரொம்பவும் சீரியசா இருக்கு ஆஸ்பத்திரியில சேந்துருக்கு உடனே அனுப்புங்க”ன்னு சொல்லி தந்தி குடுத்தான். அதுக்கு அவங்க மசியல. பிறகு போன் செஞ்சு, “குழந்தை நெலமை கவலையா இருக்கு, அம்மா பக்கத்துல இருக்கனும்ன்னு டாக்டர் சொல்றாங்க, இப்பையும் நீங்க அனுப்பலன்னா சட்டபடிதான் போகுற மாறி இருக்கும், ஒரு 15 நாள் லீவு குடுத்து அனுப்புங்க, அது போதும்”னு சொன்னதும் அந்தம்மா ஒத்துகிச்சு.

ஊருக்கு அனுப்புறதுன்னு முடிவு செஞ்சதும் மூணு நாளைக்கு என்னை தூங்கவே விடலை, “அலமாரிய சுத்தம் பண்ணு, பொழங்காத அழகு பாத்திரத்தை தொடச்சு வை”ன்னு வேலை குடுத்துகிட்டே இருந்துச்சு. எது செய்ய சொன்னாலும் பரவாயில்ல உசிரோட பிள்ளைய பாத்தா போதுன்னு தொனுச்சு.

ஏற்கனவே ஏஜெண்டு ஒரு மாச சம்பளத்த வாங்கிட்டு போயிட்டான். மீதி ரெண்டு மாச சம்பளத்தை இந்த வூட்டம்மாவே வச்சுகிச்சு. கேட்டா, “சிங்கப்பூர் வந்ததுக்கு சட்டபடியான செலவு 65 ஆயிரம் ஆச்சு. நீ வேலை பாத்த சம்பளம் இதுக்கே சரியாப் போச்சு. இனிமே வேலை பாத்தாதான் உனக்கு காசுன்னு ஒரு பைசா காசு கையில கொடுக்கல. ஜெயில்ல இருந்து வெளிய போறவ காசோட போகனுன்னா நினைக்கப் போறேன்?

நான் கிளம்பி வர்ரேன்னு எங்க வீட்டுக்கு கூட தகவல் சொல்லாம ஏர்போட்டுக்குள்ள விட்டுட்டு, கையில மூணு டிக்கெட்ட குடுத்துட்டு 15 நாள்ல திரும்பி வந்துருன்னு சொல்லிய கையோட அந்தம்மா பாட்டுக்கு போயிருச்சு.

எத்தன மணிக்கி பிளைட்டு கெளம்புது, எங்கன நிக்குது, எதுக்கு மூணு டிக்கட்டு குடுத்தாங்க எதுவும் புரியல. கேட்டு தெரிஞ்சுக்குற மாதிரி எந்த மூஞ்சியும் கண்ணுல அகப்படல. பித்துக்குளி மாதிரி ஒரே எடத்துல நின்னுகிட்டு இருந்தேன். தெய்வமாட்டம் ஒரு மகராசன் வந்தாரு. பட்டுக்கோட்டையாம். துபாய்க்கி போறாறாம். உதவி செஞ்சாரு.

“பத்து நிமிசம் தான் இருக்கு பிளைட்டு கெளம்ப. அது சி கேட்டுல நிக்குது. நீங்க இன்னும் ஏ கேட்டுல நிக்கிறிங்களே”ன்னு சொன்னதும் உள்ள உயிரும் போச்சு. “எம்பின்னாடியே ஓடிவாங்க”ன்னு சொல்லிகிட்டே ஓடுனாரு. முன்ன பின்ன செத்தாதானே சுடுகாடு தெரியும் நான் ஏர்போட்ட கண்டேனா? ஃபிளைட்ட கண்டனா? பின்னாடியே ஓடுனேன்.

செக்கிங்கு நடக்கும் போது பட்டுக்கோட்டையாரு சொன்னாரு, “மலேசியாவுல, கொழும்புல நிக்கும் போது வெளிய எங்கயும் எழுந்துருச்சு போயிராதிங்க. போனிங்க அங்கேயே கெடக்க வேண்டியதுதான்.”

“என்னா சொல்றீங்க எனக்கு ஒன்னுமே புரியலயே, இது நம்மூருக்கு போற டிக்கெட்டு இல்லையா”ன்னேன்.

“இந்தியாதான் போறிங்க. ஆனா மூணு பிளைட்டு மூணு நாடு மாறி போறீங்க. அப்படிதான் டிக்கட்டு வச்சுருக்கிங்க”ன்னு சொன்னதும், முடிஞ்சது சோலி ஊருக்கு போயி பிள்ளைய பாத்தா மாறிதான்னு ஓன்னு அழ ஆரம்பிச்சுட்டேன். “அழுதுகிட்டு நின்னியன்னா பிளைட்டு போயிரும் சாமிய வேண்டிகிட்டு போயி ஏறுங்க”ன்னு அனுப்பி வச்சாரு. நாந்தான் பிளைட்டுக்கே கடைசி ஆளு, ஏறுன அடுத்த நிமிசமே புறப்பட்டுருச்சு.

காசு கம்மின்னு இப்படி சுத்தல்ல டிக்கெட்டு எடுத்து குடுத்துருக்கு அந்த மூதேவின்னு ஊருக்கு வந்துதான் தெரிஞ்சுகிட்டேன்.

விமானத்துல அழுதுகிட்டே இருந்தத பாத்துட்டு திருவாரூக்காரரு ஒருத்தரு என்ன ஏதுன்னு விசாரிச்சாரு. அப்பாடா இங்கேயும் ஒரு தெய்வம் இருக்குன்னு நிம்மதி மூச்சு விட்டுட்டு விசயத்த சொன்னேன். “நானும் திருச்சிதாங்க போறேன். கவலை படாதிங்க நான் உங்கள பத்திரமா அழைச்சிட்டு போறேன்”னாரு. சாமி கைவிடலன்னு தோணுச்சு. ஆனா அவரும் ஆதாயத்துக்குதான் என்ன விசாரிச்சாருங்கிறது அடுத்த பத்து நிமிசத்துக்குள்ள தெரிஞ்சு போச்சு.

மூணு பவுனு நகைய குடுத்து, “கழுத்துல போட்டுக்கங்க திருச்சில வந்து வாங்கிக்கறேன். ஆம்பளைங்க நகை எடுத்துட்டு வரக்கூடாது”ன்னாரு. அவரு தயவு இல்லாம ஊருக்கு போக முடியாது. வேற யாரும் தமிழும் கெடையாது. எது சொன்னாலும் செஞ்சுதான் ஆகனும். வாங்கி போட்டுகிட்டு விமானம் மாறி ஏறும் போது அவரு கூடவே இருந்தேன்.

திருச்சியில வந்து சோதனை செய்யும் போது அத்தன கேள்வி கேக்குறாங்க. “எத்த பவுணு. எதுக்கு கழுத்த மறைச்சு மறைச்சு வச்சிங்க, நகை வாங்கின பில்லு காமிங்க, சிங்கப்பூர் போயி எத்தன மாசம் ஆச்சு, எதுக்கு திரும்பி வர்ரீங்க, அதுக்கு உண்டான ஆதாரத்த காட்டுங்க”ன்னு என்னமோ நாந்தான் பெரிய கடத்தல்காரி மாறி விசாரிக்க ஆரம்பிச்சாங்க. ஏதோ மாட்டப்போறோம் புடிச்சு உள்ள வக்கெ போறாய்ங்கன்னு கதி கலங்கிருச்சு. இப்படியெல்லாம் கேள்வி கேப்பாங்கன்னு அந்த திருவாரூக்காரரு சொல்லியாவது இருந்துருக்கலாம்.

ஏழைங்க கஸ்டத்தையும் காலச் சூழ்நிலையையும் எப்டியெல்லாம் பயன்படுத்துராங்க பாருங்க!

திருவாரூரு பையனை அழைக்க காரோட குடும்பமே வந்துருந்தாங்க. நகைய சொமந்து வந்த நன்றி கடனுக்கும், பொட்டப்புள்ளன்னு பரிதாபபட்டும் கார்லேயே எங்க கிராமத்துக்கு பக்கத்துல இருக்குற டவுணு வரைக்கும் கொண்டு வந்து விட்டாங்க. சிங்கப்பூர் போகும் போது ஆயிரம் ரூபா கொண்டு போனேன். இப்ப என்ன மிச்சம்? சிங்கப்பூர்ல ஏஜெண்டு கொடுத்த ஆயிரம் ரூபாயல ஒண்ணு ரெண்டு ஃபோன் பேசுன காசு போக உள்ள மிச்சம் இருந்துச்சு.

விடியக்கால நாலு மணி எங்க கிராமத்துக்கு பஸ்சு கிடையாது இருந்த காசுக்கு ஒரு ஆட்டோ புடிச்சு ஊரு வந்து சேந்தேன்.

செவத்துல அடிச்ச பந்தாட்டொம் இருந்த எடத்துக்கே திரும்பி வந்துட்டேன். இனி சிங்கப்பூருக்கு போறதுக்கு கடனா வாங்குன 15,000 ரூபாய எப்படியாவது அடைச்சாகணும்.

இனி பட்டினி கிடந்து செத்தாலும் கிராமத்துலேயே இருக்கணும்ணு முடிவு பண்ணிட்டேன். இத தெரிஞ்சுக்கத்தான் சிங்கப்பூர் போனேன்னு வையேன்!

–    சரசம்மா

இந்து மக்கள் கட்சி எனும் கூலிப்படை – வீடியோ

3

லகமயம் ஆக்கிரமித்திருக்கும் காலத்தில் பல்வேறு நிறுவன, தனிநபர் கட்டப் பஞ்சாயத்துகளுக்கு பெருமளவு கூலிப்படை தேவைப்படும் காலமிது. சொத்துக்களை கைப்பற்றவோ இல்லை ஒப்பந்த தொழிலாளிகளை வெளியேற்றவோ, மனிதர்களை கொல்லவோ என இக்கூலிப்படைகள் பல்வேறு சேவைகள் புரிந்து வருகின்றன.

கூலிப்படைக்கு தேவைப்படும் ஒழுங்கு வாங்கிய காசுக்கு ‘நேர்மை’யாக கொல்வதோ, குதறுவதோ சரியாக செய்து முடிக்க வேண்டும். படைகளின் தளபதி மற்றும் தாக்குதல் திட்டத்தை அறிவாளி கிரிமினல்கள் ஏற்றுக் கொண்டாலும் நடைமுறை ரவுடி வேலைகளுக்கு குடிசைப் பகுதிகளிலிருந்து உதிரியான இளைஞர்கள் தேவைப்படுவார்கள்.

பிரமோத் முத்தாலிக்
வானரப்படையின் தலைவர் பிரமோத் முத்தாலிக் காசு வாங்கிக் கொண்டு கலவரம் செய்வதாக ஒரு கேமராவில் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதன்றி மேல்தட்டு, நடுத்தர வர்க்கங்களில் சொத்து மற்றும் இதர பண்பாட்டு பிரச்சினைகள், நுகர்வு கலாச்சாரங்களுக்காக நடக்கும் கொலைகள், வன்முறைகள் தனி. இத்தகைய கூலிப்படை சர்வீஸ்கள் மதத்திற்கும், அரசியல் கட்சிகளுக்கும் கூட பல்வேறு முறைகளில் தேவைப்படுகின்றன.

ஆர்.எஸ்.எஸ்-ஸும் இப்படித்தான் கூலிப்படை இந்துக்களை மட்டுமல்ல கூலிப்படை இந்து இயக்கங்களையும் பயன்படுத்தி வருகிறது. அவர்களது கலவரம், வெறுப்பு, பிரிவினை, தாக்குதல்…… பின்பு தேர்தல், அறுவடை எனும் தொடர்கதைக்கு இக்கூலிப்படைகள் தேவைப்படுகின்றார்கள். 1947-க்கு பிந்திய வரலாற்றில் இதற்கென ஏராளமான சான்றுகள் உள்ளன.

இதன் சமீபத்திய நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

கடந்த 2012 ஜனவரி ஒன்றாம் தேதி, கர்நாடக மாநிலம் சிந்தகியில் உள்ள தாசில்தார் அலுவலம் பக்கமாக வந்தவர்கள் திடுக்கிட்டார்கள். அங்கிருந்த கொடிக் கம்பத்தில் பாகிஸ்தானின் தேசிய கொடி, பட்டொளி வீசி பறந்துக் கொண்டிருந்தது. இந்திய நாட்டில், பாகிஸ்தான் கொடியை ஏற்றி, புத்தாண்டு கொண்டாடுபவர்கள் யார் என்று கேள்வி அனைவரது மனதிலும் எழுந்தது.

சரியாக, அப்போது பார்த்து, ‘இது இந்தப் பகுதியிலுள்ள இஸ்லாமியர்கள் செய்த செயல்…’ என்ற நச்சு தூவப்பட்டது. ஒளியை விட வேகமாக இந்த வாசகம் மக்களின் செவியை அடைந்தது. முதலில் நம்ப மறுத்தவர்கள் கூட, அடுத்தடுத்து வெவ்வேறு வார்த்தைகளுடன் இதே அர்த்தம் பொதிந்த சொற்களை எதிர்கொள்ள நேர்ந்ததும், ஒருவேளை அப்படி இருக்கலாமோ என நினைக்க ஆரம்பித்தார்கள். விளைவு, சில மணி நேரங்களில், சிந்தகி பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் அனைவருமே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டார்கள்.

ஆனால், இந்த அயோக்கியதனத்தை நிகழ்த்தியது, எந்த இஸ்லாமிய குழுக்களும் அல்ல; தனிப்பட்ட இஸ்லாமியரும் அல்ல. பதிலாக ஒரு மதக் கலவரத்தை உண்டாக்குவதற்காக அந்தப் பகுதியில் உள்ள ஸ்ரீராம் சேனா குண்டர்கள் நிகழ்த்திய நாடகம் இது. ராகேஷ் மத், என்ற ரவுடியின் தலைமையில் இந்தப் பித்தலாட்டத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

இப்படி இந்து வெறியர்களே பாகிஸ்தானின் தேசிய கொடியை இரவோடு இரவாக ஏற்றிவிட்டு, அந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீது சுமத்தியது அம்பலப்பட்டு போனதும், விழித்துக் கொண்ட காவல்துறை, ராகேஷ் மத் உட்பட ஆறு ஸ்ரீராம் சேனா குண்டர்களை கைது செய்து பிஜப்பூர் சிறையில் அடைத்தது. ஆனால், அந்த சிறையில் இருந்த மற்ற கைதிகள், ‘தேசத்தை துண்டாட முயற்சிப்பவர்களை எங்களுடன் அடைக்க வேண்டாம்’  என கோஷமிட்டதுடன், இந்த இந்துத்துவ பாசிஸ்ட்டுகளை நையப் புடைந்துள்ளனர்.

இதற்கு முன்பு ஜனவரி, 2009-ல் மங்களூரு பப்பில் குடித்துக் கொண்டிருந்த பெண்களைத் தாக்கி விரட்டியதில் இந்திய அளவில் ஒரே நாளில் பிரபலமானது ஸ்ரீராம் சேனா. அதற்கு முன் சிறுபான்மையினரை எதிர்த்து பல கலவரங்கள் செய்திருந்தாலும் மேட்டுக்குடி சீமாட்டிகளுக்கு ஏற்பட்ட அவமானமே பல தேசிய ஊடகங்களுக்கு கவலையாக இருந்தது. அந்தக் கவலையை சேனாவும் இலவசமான பிரபலமாக நன்கு அறுவடை செய்து கொண்டது.

சிவசேனா - பால் தாக்கரே
மராட்டிய மாநிலத்தில் இயங்கும் சிவசேனாதான் கூலிப்படை இந்துத்துவாவின் முன்னோடி.

அதன் பிறகு இவ்வானரப்படையின் தலைவர் பிரமோத் முத்தாலிக் காசு வாங்கிக் கொண்டு கலவரம் செய்வதாக ஒரு கேமராவில் ஒப்புக் கொண்டிருக்கிறார். தெகல்கா – ஹெட்லைன்ஸ் டுடே இணைந்து நடத்திய ஸ்டிங் ஆப்பரேஷனில் இந்த வானரங்கள் வகையாய் சிக்கியிருக்கின்றன.

இந்த நடவடிக்கையின் படி ஒரு நிருபர் டம்மி ஆர்ட்டிஸ்ட்டாக அதாவது ஓவியனாக நடித்து முத்தாலிக்கை அணுகியிருக்கிறார். அதன்படி அவரது ஓவியக் கண்காட்சியை முத்தாலிக்கின் ஸ்ரீராமசேனா வானரங்கள் அடித்து கலவரம் செய்தால் பிரபலமாகிவிடலாமென்றும், அதற்கு எவ்வளவு பணம் தரவேண்டுமென்பதே டீல். இதற்காக முத்தாலிக்கை மட்டுமல்ல அவரது இயக்கத்தின் மற்ற தலைவர்களையும் அந்த நிருபர் பார்த்திருக்கிறார். அவர்களும் அந்த கண்காட்சி முசுலீம்கள் இருக்கும் பகுதியில் இருந்தால் பிரச்சினையை பெரிதாக கொண்டு செல்லலாமென்று வழிகாட்டியிருக்கிறார்கள்.

மேலதிக விவரம் வேண்டுவோர் இணைப்பிலுள்ள கட்டுரைகள் படியுங்கள்.

மராட்டிய மாநிலத்தில் இயங்கும் சிவசேனாதான் இக்கூலிப்படை இந்துத்துவாவின் முன்னோடி. அதற்கு முன்பே சாவர்க்கர் புகழ் இந்து மகா சபை நேரடியாக பிரிட்டீஷ் காசில், தயவில் இயங்கியது என்றாலும் சிவசேனாதான் பரந்து பட்ட மக்களை கூலிப்படை அரசியல் நலனுக்காக அணிதிரட்டியது.

70களில் மும்பையிலுள்ள கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்களை கருவறுக்க முதலாளிகள் மற்றும் காங்கிரசு கட்சி, தாக்கரேவின் சேனாவுக்கு காசும், அரசு ஆதரவையும் அள்ளிக் கொடுத்து வேட்டை நாய் போல வளர்த்தது. ஆரம்பத்தில் மராத்திய இனவெறியும் பின்பு அதிலிருந்து பிரிக்க முடியாத படி இணைந்திருக்கும் ஆதிக்க சாதி + இந்துமதவெறியும் கொண்டு சிவசேனா மக்களை பிரித்தது. தொழிற்சங்களை கைப்பற்றியது. பின்னர் பாபர் மசூதி இடிப்பின்போது பெரும் கலவரம் நடத்தி முக்கிய கட்சியாக மாறியது. தற்போது பா.ஜ.க கூட்டணியோடு அங்கே ஆண்டு வருகிறது.

வெள்ளையப்பன் - ராமகோபாலன்
82 மண்டைக்காடு கலவரத்தை மூலதனமாக வைத்து இராம கோபாலன் எனும் பார்ப்பன வெறியர் ஆர்.எஸ்.எஸ் ஆசியுடன் இந்து முன்னணியை வளர்த்தார்

ஆர்.எஸ்.எஸ் எனும் வட இந்திய பருப்பு, பெரியாரின் தமிழகத்தில் வேகாத காரணத்தால் இங்கே இறக்கப்பட்ட வானரம்தான் இந்து முன்னணி. வடக்கே விஸ்வ ஹிந்து பரிஷத் செய்து வந்த பணிக்கு இங்கே தமிழ் ஃபிளேவரில் இ.முவாக இறக்கினார்கள். 82 மண்டைக்காடு கலவரத்தை மூலதனமாக வைத்து இராம கோபாலன் எனும் பார்ப்பன வெறியர் ஆர்.எஸ்.எஸ் ஆசியுடன் இந்து முன்னணியை வளர்த்தார். கோவையும், குமரியும் பின்னர் சிறுபான்மை மக்கள் கணிசமாக வாழும் பகுதிகளும் இ.முவின் வேட்டைக்காடானது.

என்ன இருந்தாலும் இந்து முன்னணி என்பதே பார்ப்பன முன்னணி என்பதை சில சூத்திர இந்துமதவெறியர்கள் புரிந்து கொண்டு ‘கலகம்’ செய்தார்கள். உடனே நீங்கள் இவர்கள் பார்ப்பனியத்தை புரிந்து கொண்டு எதிர்த்தார்கள் என்று பாஸ் மார்க் கொடுக்க கூடாது. இவர்கள் இந்து முன்னணியின் ‘இலட்சிய’ப் பயணத்தில் கிடைத்த அரசியல் செல்வாக்கு, பணம், புரவலர் வசதிகளில் பங்கு கிடைக்காததால் பிரிந்து போனவர்கள். கொள்ளைக்கூட்டத்தின் சில்லறை சண்டைகளுக்கான பிரிவினை இது.

போனவர்கள் சிவசேனா, அனுமன் சேனா, சுடுகாட்டு போண்டா என்று ஊருக்கு ஒன்றாய் பன்றி விட்டைகளாக பெருத்தார்கள். இந்த விட்டையில் அளவில் பெரிதான ஒன்று இந்து மக்கள் கட்சி. கோவையில் மார்வாடி, சேட்டுக்கள் சிலரின் நேரடியான கவனிப்பில் இக்கூட்டத்திற்கு பெரும் பண வசதிக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டது. மேலும் கோவையில் இக்கும்பல் தனக்கென்று ரியல் எஸ்டேட், கட்டப் பஞ்சாயத்து, கமிஷன் என்று வைட்டமீன் ப ரீதியாக நிலைநாட்டிக் கொண்டது. இதன் பயனாக ஊருக்கு ஒன்றோ இரண்டோ சில வானரங்கள் இக்கூட்டத்திற்கு கிடைத்தன. எலும்புகளுக்கு அலையாத பைரவர் யார்?

அர்ஜூன் சம்பத்
அம்பேத்கார் வாழ்க, பெரியாரை ஒழிப்போம், கம்யூனிசத்தை விரட்டுவோம் என்று பல்வேறு அஜெண்டாக்களை இக்கூலிப்படை காசுக்கேற்ற பேக்கேஜ்களாக எடுத்து விடுகிறது.

மேலும் இராம கோபாலனின் இந்து முன்னணி எங்கே வீக்காக இருக்கிறதோ அதை இக்கூட்டம் நன்கு பயன்படுத்திக் கொண்டது. முதலில் இந்துமதமே வட இந்திய சமாச்சாரம் எனும் உண்மையை மறைக்கும் முகமாக ஈழம், தமிழ், சாதி வேறுபாடு கூடாது என்றெல்லாம் பேசியது. இதை வெட்கம் கெட்ட தமிழின குழுக்கள் அனைத்தும் அங்கீகரித்து மேடையேற்றவும் செய்தன.

ஆனால் தமிழ் இன குழுக்களின் மேடையில் ஏறிய வானரங்கள் அதில் தமது இந்துமதவெறியை பகிரங்கமாகவே பேசினார்கள். தமிழ இன குழுக்களும் அடிப்படையில் தமிழ் ஆர்.எஸ்.எஸ் ஆக செயல்பட்ட படியால் இவர்களிடையே பங்காளி உறவு இயல்பாக ஏற்பட்டது.

தமிழகத்தில் பார்ப்பனியத்தின் எதிரியான பெரியார் – திராவிட இயக்கம் – பொதுவுடமை இயக்கங்களின் செல்வாக்கு பொதுவில் கருத்தளவில் இன்னமும் இருந்து வருகிறது. இதை முறியடிக்க பார்ப்பன ஊடகங்கள் இந்து மக்கள் கட்சி எனும் கூலிப்படையை பயன்படுத்திக் கொண்டன.

இதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் தினமணி வைத்தி. மாதத்திற்கு ரெண்டு நடுப்பக்க கட்டுரையை அர்ஜுன் சம்பத் பெயரில் போட்டு அவரை தமிழ் இந்து சான்றோராக மார்கெட் செய்தார். பிறகு தந்தி டி.வி, புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் இக்கூலிப்படை கூட்டத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்து விற்பனை செய்தன.

அம்பேத்கார் வாழ்க, பெரியாரை ஒழிப்போம், கம்யூனிசத்தை விரட்டுவோம் என்று பல்வேறு அஜெண்டாக்களை இக்கூலிப்படை காசுக்கேற்ற பேக்கேஜ்களாக எடுத்து விடுகிறது.

வழக்கமாக மெயின் ஸ்டிரீம் ஆர்.எஸ்.எஸ் கும்பலிலிருந்து வழி தவறிய ஆடுகளை பரப்பிரம்ம மேய்ப்பர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் தமிழகத்தில் முற்போக்கு மரபை முறியடிப்பதற்காகவே இக்கொள்கையை மாற்றி இந்து மக்கள் கட்சி எனும் இந்த வானரத்தை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தலைவர்கள் ஊக்குவிக்கிறார்கள்.

பெரியார் சிலை உடைப்பு, தீட்திதர் ஆதரவு ஊர்வலம் என இக்கூலிப்படை பல்வேறு கிரிமினல் செயல்களை காசு வாங்கிக் கொண்டு செய்கிறது.

மேலும் கர்நாடக ஸ்ரீராம் சேனா போல அவ்வப்போது முழுப்பொய்களை வதந்திகளாக, அதிரடி உண்மைகளாக பரப்பவும் செய்கிறது. இதற்கு பல்வேறு ஊடகங்கள் ஒத்துழைத்தும் வருகின்றன.

ராம ரவிக்குமார்
நியூஸ் 7 சேனலில் ஐ.ஐ.டி பிரச்சினை குறித்த விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட கூலிப்படை தலைவர் ராம ரவிக்குமார்

சமீபத்திய ஐ.ஐ.டி பிரச்சினையில் கூட இக்கூலிப்படை ஆஜராகி அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்ட தடை சரி என்று ‘போராடியது’. மேலும் இதை நியாயப்படுத்தும் வண்ணம் ஐ.ஐ.டி-க்கு அம்பேத்கர் பெயரை வைக்குமாறு ஒரு கோரிக்கையை அவிழ்த்து விட்டது. மராத்வாடா பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் வைத்தபோது சிவசேனா நடத்திய கலவரம், அம்பேத்கரின் சொந்த நூலகத்தை கொளுத்திய அயோக்கியத்தனம், மும்பையில் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அதை எதிர்த்த தலித் இளைஞர்களை போலிசால் சுட்டுக் கொன்றது, அம்பேத்கரின் ராமன் கிருஷண்ன புதிர் நூலை தடை செய்யக் கோரியது இவைதான் அம்பேத்கர் குறித்த இந்துமதவெறியரின் உண்மையான அக்கறை.

ஐ.ஐ.டி பிரச்சினை தொடர்பாக தமிழ் தொலைக்காட்சிகள் இக்கூலிப்படை தலைவர்களை வெட்கம் கெட்ட முறையில் அழைத்து அநாகரிகமாகவும், உளறலாகவும் பேசுவதை ரசிக்கின்றன. அவர்களும் கோவையில் பாகிஸ்தான் கொடி ஏற்றினார்கள், மோடி – ஸ்மிருதி இரானியை தவறாக இணைத்து பேசினார்கள் என்று கூசாமல் புளுகி அலறுகிறார்கள். இந்து மக்கள் கட்சி லும்பன்களை ஸ்டூடியோவில் ஏற்றும் போது பிக்பாக்கெட், ரவுடி, தாதா, மாஃபியா போன்றோரை மட்டும் புறக்கணிப்பது தர்மமாகாது.

சரி, இவர்கள் கூலிப்படை என்பதற்கு என்ன ஆதாரம்?

நியூஸ் 7 சேனலில் ஐ.ஐ.டி பிரச்சினை குறித்த விவாதம் ஒன்றில் இக்கூலிப்படையில் தலைவர் ராம ரவிக்குமார் எனும் வானரம் கலந்து கொண்டார். வடபழனி மேக்கப்பில் ஜொலிக்கும் சந்தனம், பொட்டு, காவி பட்டு என பார்ப்பதற்கே ஒரு மார்க்கமான மாமாவாக தென்பட்டார். மேற்கண்ட பாகிஸ்தான் கொடி ஏற்றம், தவறான உறவு செய்திகளை பாதி நேரம் பேசினார். மீதி நேரம் என்ன ஏசினார்?

உரையாடலை நடத்திய தொகுப்பாளர், “ஐ.ஐ.டியில் எதற்காக அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்தார்கள்” என்று நூறு முறை கேட்கிறார். அந்த கூலிப்படை தலைவனோ எல்லா முறையும் கொட்டைப்பாக்கின் விலையை கூறுகிறார். ஆக வாங்கிய காசுக்கு கூவ வேண்டும் என்பதைத் தாண்டி என்ன மாதிரி கூவ வேண்டும் என்று கூட அந்த அடிமுட்டாளுக்கு தெரியவில்லை.

இது கூட பரவாயில்லை. “ஏன் அம்பேத்காரை ஆதரிக்கிறீர்கள், பெரியாரை எதிர்க்கிறீர்கள்” என்று கேட்ட போது அந்த ராம ரவிக்குமார் வழக்கமான ஆர்.எஸ்.எஸ் வானர பதிலை கூறுகிறார். அதாகப்பட்டது, ‘அம்பேத்கார் சீர்திருத்த வாதி, இந்து மதத்தின் உட்பிரிவான புத்த மதத்திற்கு மாறினார், பெரியார் பார்ப்பனர்களை வெறுத்தார், இந்துக்களை பிரித்தார், கைக்கூலி’ என்றெல்லாம் உருப்போட்டதை வெறுப்போடு வாந்தி எடுத்தார்.

அடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர், “சரி அய்யா நான் இப்போது பெரியார் மேற்கோள் சிலவற்றை வாசிக்கிறேன், அதை ஏற்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா” என்று கேட்டு விட்டு படிக்கிறார். அந்த வாசிப்பின் போது இடையிடையே பெரியாரை முட்டாள் என்று ஏகத்துக்கும் திட்டுகிறது அந்த கூலிப்படை லூசு. இறுதியில் தொகுப்பாளர் வாசித்த பிறகு இதுவரை வாசித்தது பெரியாருடையது அல்ல அம்பேத்கருடையது என்ற உண்மையை தெரிவிக்கிறார்.

இது வரை தான் ஆடியது எல்லாம் போய் இப்போது அடி முட்டாளாக அம்மணமாக மாறிவிடுகிறார். அம்மணத்தை மறைக்க அந்த தாடி லூசு தாட் பூட்டென்று மீண்டும் கத்துகிறது. “நீங்கள் கருத்தை எதிர்க்கிறீர்களா, நபரை எதிர்க்கிறீர்களா என்று நிரூபிப்பதற்கே இப்படி பொய் சொன்னேன்” என்று தொகுப்பாளர் கச்சிதமாக முடித்தார். பிறகும் விவாதம் தொடர்ந்தாலும் இந்த காப்பிய தருணத்திற்கு இணை இல்லை. இதை நிலைய விவாதத்தில் கலந்து கொண்ட ஏனைய பெருமக்கள் ரசித்தார்களா தெரியவில்லை.

ஆக, அம்பேத்கார் சொன்னதை பெரியார் சொன்னதாக எதிர்த்த அந்த அற்பம் உண்மையில் அம்பேத்கரை ஆதரிப்பதாக சொன்னதற்கு என்ன பொருள்? பெரியரை அம்பேத்கருக்கு எதிராக நிறுத்தும் ஆர்.எஸ்.எஸ் சதி மற்றும் பெரியாரை வந்தேறி என்று நிறுத்தும் தமிழின பாசிஸ்டுகளின் சதியோடும் இந்த கூலிப்படை தலைவன் பேசுகிறார். இதனால்தான் இந்துமத்தை எதிர்த்து இருவரும் ஒரு போல சொன்னதை அவர்கள் விசமத்தனமாக மறைக்கிறார்கள்.

இப்பேற்பட்ட கூலிப்படை கூட்டத்தை ஊடகங்கள் அழைத்து அழகு பார்ப்பதன் அவசியம் என்ன? ஏனெனில் எந்த முதலாளிகள் கூலிப்படைகளை அமர்த்தி உலவ விடுகிறார்களோ அவர்களே ஊடகங்களுக்கும் கொட்டி அளக்கிறார்கள். மேலும் பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வமற்ற தமிழக அடியாளாக இந்து மக்கள் கட்சி தேவைக்கேற்ப செயல்படுகிறது. அந்த வகையில் இந்த முட்டாள்களை நிலையத்தில் அமர்த்தி பணிவோடு கேள்வி கேட்க வேண்டியதும் ஊடகங்களின் கடமையாகிறது.

அதை நியூஸ் 7 தொகுப்பாளர் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டு அம்பலப்படுத்தியிருக்கிறார். ஆனால் இதே கச்சிதத்தை அவர் மணற்கொள்ளையன் வைகுண்ட ராசனுக்கு பயன்படுத்த முடியாது என்பது ஒரு கசப்பான உண்மை.

அல்லது நாளையே வைகுண்டராசனின் கவனிப்பு பட்டியிலில் இந்து மக்கள் கட்சி வந்து விட்டால் இந்தக் கூலிப்படைக்கு இங்கேயும் சிவப்பு கம்பள வரவேற்பு நிச்சயம்.

இந்த வானரத்திற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் ஏதோ முனைவர் கலாநிதி, முன்னாள் அண்ணா பல்கலை துணைவேந்தர் என்று ஒரு சூட்டு கோட்டு போட்ட கனவானும் இருந்தார். சம்ஸ்கிருதத்தில் ஏகப்பட்ட விஞ்ஞான உண்மைகள் உள்ளன, கால்வாசி ஜெர்மனி மக்களுக்கு தேவபாஷை தெரியும் என்றெல்லாம் இதுவும் உளறியது. முன்னது கூலிப்படை என்றால் இதை என்னவென்று அழைப்பது?

அதற்குள் இந்த வீடியோவை பார்த்து விடுங்கள்! காலியாக வயிற்றை வைத்துக் கொண்டு பார்க்காதீர்கள்! சிரிப்பின் வலியில் செத்தே விடுவீர்கள்!

கூலிப்படை என்றால் கொடூரமாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை! ஆனால் கூலிப்படை குறித்து நாமும் இரக்கத்தோடு இருக்க வேண்டியதில்லை!!

அசுரக் குரல்

4

அசுரக்குரல்

பேசுவதுதான்
ஜனநாயகம் என்றார்கள்!

பேச ஆரம்பித்தவுடன்
பேசினால் பிரச்சனையாகும்
என்கிறார்கள்.

அம்பேத்கர்
“அடுத்தவனை கேள்வி கேட்க விடாமலே தடுத்துவிட்டு அவாள் மட்டுமே அறிவாளி என்று பேசித்திரிவதுதான் பார்ப்பனோ டெக்னாலஜி!”

சரி
பிரச்சனைகள் பற்றி பேசினால்?
அதுதான்
பிரச்சனையே என்கிறார்கள்!

இந்த
தொழில்நுட்பத்திற்கு பெயர்தான்
“இந்துவெறி இன்ஸ்டூயுட் ஆஃப் டெக்னாலஜி”!
அடுத்தவனை
கேள்வி கேட்க விடாமலே தடுத்துவிட்டு
அவாள் மட்டுமே அறிவாளி
என்று பேசித்திரிவதுதான்
பார்ப்பனோ டெக்னாலஜி!

இவ்வளவு காலம்
கேட்பாரற்ற
வேதக் கடிகையாகவும்
பார்ப்பனர் மட்டுமே பயிலும்
பிரம்ம புரியாகவும்
தனிக்காட்டு ராஜாங்கம் நடத்திய
தயிர்சாதக் கோட்டையில்
பெரியார்- அம்பேத்கர் குரல்
ஒலிக்கும் போது
அவாளுக்கு எப்படி இருந்திருக்கும்?

பெரியார்
ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கம்பியில் விடலாம் ‘பூணூல்’ தாங்குமோ?

ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை
கம்பியில் விடலாம்
‘பூணூல்’ தாங்குமோ?

அனுமார்களும், ராமனும் மட்டுமே
கொட்டமடித்த
அய்.அய்.டி-ன்
அடர்ந்த கானகத்தை
பிளந்த சம்புகக்குரல்
இதோ….
இந்தியாவெங்கும் எதிரொலிக்கிறது….

அய். அய். டி. யை
இயக்குவதற்கு
அரசியல் இருக்கும் போது
அய். அய். டி மாணவனுக்கு
ஏன் அரசியல் கூடாது?

பன்னாட்டுக் கம்பெனித் திட்டங்களுக்கு
மெட்ரோ வளர்ச்சித் திட்டங்களுக்கு
உயர்கல்விக் கூடத்தை நீ பயன்படும் போது
உழைக்கும் மக்களின்
அரசியல் திட்டங்களுக்கு
நாங்கள் ஏன் பயன்படுத்தக்கூடாது?

பன்னாட்டு கார்ப்பரேட்டுக்காக
நீங்கள்
சொம்பு ராமாயணம் நடத்தும் போது
எங்கள் பரம்பரை நிலங்களை பறிப்பதை எதிர்த்து
நாங்கள் ஏன் பேசக்கூடாது?

அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டம் தடை - போராட்டம்
பேசுவோம்… பெரியார் குரலில், அம்பேத்கர் குரலில்…

பேசுவோம்…
பெரியார் குரலில்,
அம்பேத்கர் குரலில்…

விசாரிப்போம்…
ராமன் செய்த கொலையை
மோடி செய்யும் அழிவை!

பேசுவதற்கென்றே உங்களை
பிரம்மன் படைத்ததாய்
நீங்கள் நம்பலாம்,
கேட்ப்பதற்க்கு
நாங்கள் தயாராயில்லை!

பேசுகிறோம் கேளுங்கள்..
நாட்டை வைத்து சூதாடும்
உங்கள் ‘மாகாபாரத’க் குப்பையை
நாட்டுப்பற்றுள்ள பகத்சிங் சூறாவளி
இனி துடைத்தொழிக்கத்தான் செய்யும்,

அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டம்
ராமபாணம் தலை தூக்கினால் பெரியார்-அம்பேத்கர் செருப்புகள் துரத்தும்!

ராமபாணம் தலை தூக்கினால்
பெரியார்-அம்பேத்கர் செருப்புகள் துரத்தும்!

உனக்கு-
ராமனிருக்கும் இடம்தான்
சீதைக்கு அயோத்தி என்றால்,
இனி
பெரியார்-அம்பேத்கர் இருக்குமிடந்தான்
எங்களுக்கு அய்.அய்.டி.!

– துரை. சண்முகம்

APSC தடை – தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்

3

சென்னை ஐ.ஐ.டி.யில் “அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம்” என்ற மாணவர் அமைப்பின் மீதான தடையை நீக்கக் கோரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – விவசாயிகள் விடுதலை முன்னணி – புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பில் தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் 02-06-2015  அன்று நடத்தப்பட்டது

சென்னை ஐ.ஐ.டி முன்பு நடத்தப்பட்ட போராட்டச் செய்தியையும், திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட செய்தியையும் தொடர்ந்து ஒசூர், தருமபுரி, கரூர், விருத்தாச்சலம் நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட செய்திகளை தருகிறோம்.

ஒசூர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணியினர் ஒசூரில் நகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த போலீசில் அனுமதி கேட்டிருந்த்து. அதற்கு போலீசு அனுமதி மறுத்தது.

APSC தடை ஒசூர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்த இடத்தில் குவிக்கப்பட்டிருக்கும் போலீசு.

இருந்தபோதிலும் தங்களது கருத்துரிமையை நிலைநாட்டிடும் வண்ணம் திட்டமிட்ட வகையில் இன்று ஒசூர் பேருந்து நிலையம் அருகே குவிந்த இவ்வமைப்பினர், மாணவர் அமைப்பின் மீதான தடையை நீக்கக் கோரியும், மோடி அரசின் கருத்துரிமையை பறிக்கும் சட்டவிரோத, மக்கள்விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும் தங்களது பேனர், செங்கொடிப் பதாகைகளை உயர்த்திப்பிடித்து வழிநெடுகிலும் மக்களிடையே துண்டறிக்கைகளை விநியோகித்துக் கொண்டே விண்ணதிர முழக்கமெழுப்பியபடி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டனர். கைக்குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தடையை மீறி ஊர்வலம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்தியாவில் ஆட்சி புரியும் அரசை விமர்சிக்கக் கூடாது, பெரியார் அம்பேத்கர் பெயர்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது சர்வாதிகாரம் மட்டுமல்ல, இது பார்ப்பனிய பயங்கரவாதம். தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களை இந்த நாட்டில் பயன்படுத்த கூடாது என்பது மக்களை ஒடுக்குவதின் மற்றொருவடிவம்.

ஒருபுறம் நில அபகரிப்புச் சட்டம், சாலை பாதுகாப்புச் சட்டம், வங்கித்துறை – இரயில்வே தனியார்மயம் என்று கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கைக்கூலியாக செயல்படும் மோடி அரசை விமர்சிக்கவும் அதற்கெதிராக போராடவும் இந்த நாட்டில் பிறந்த அனைவருக்கும் உரிமை உள்ளது. இதனை மறுப்பது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடியாள் வேலை செய்வதற்கு ஒப்பானதாகும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கமிட்டனர்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் தோழர் பரசுராமன், இவ்வமைப்பின் பாகலூர் பகுதி அமைப்பாளர் தோழர் இரவிச்சந்திரன், விவசாயிகள் விடுதலை முன்னணியின் அஞ்செட்டி ஒன்றிய அமைப்பாளர் தோழர் சரவணன் மற்றும் இவ்வமைப்பின் முன்னணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

போலீசார் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி மறுத்ததைக் கண்டித்து, “ஆர்ப்பாட்டம் செய்வதற்கு முன்னாலே கைது செய்வது, கருத்துரிமையின் கழுத்தை நெறிப்பதாகும். எங்களது கருத்தை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும். பேச கூட அனுமதிக்காமல் கைது செய்வது சட்டவிரோதம்” என கண்டனம் எழுப்பினர்.

போலீசு ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்காமல், அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தது. இந்தக் கைதைக் கண்டித்து போர்க்குணத்துடன் முழக்கமெழுப்பியபடியே 30 பேர் கைதாகினர்.

பேரணியை மறித்து கைது செய்த போலீசு

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பேருந்து நிலையத்தில் மாலையில் கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கைது நடவடிக்கைக் கண்டித்தும், போலீசை எதிர்த்தும் தங்களது குமுறலை வெளிப்படுத்தினர்.

தகவல்

புதிய ஜனநாயகம் செய்தியாளர், ஓசூர்.

கரூர்

சென்னை ஐ.ஐ.டியில் பெரியார் அம்பேத்கருக்குத் தடையை எதிர்த்து கரூர் பேருந்து நிலையம் அருகில் 02-06-2015 அன்று காலை 10.30 மணிக்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர்
செல் : 9894166350

தர்மபுரி

சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்திற்கு மோடி அரசின் தடையைக் கண்டித்து 02-06-2015 அன்று மாலை 4 மணிக்கு தருமபுரி தந்தி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்புகளுக்கு போலீசு அனுமதி கொடுத்தது.

இந்தப் பிரச்சனை தொடர்பாக தோழர்கள் 2 நாட்களாக தருமபுரி நகரம், சுற்றியுள்ள கிராமங்கள், பேருந்து பிரச்சாரம் செய்திருந்தனர்.

2-ம் தேதி காலை திடீரென்று அனுமதி ரத்து என்று தகவல் தெரிவித்தது.

தோழர்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு பு.மா.இ.மு மாவட்ட அமைப்பாளர் தோழர் இராஜா தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தை பலரும் தங்கள் செல்ஃபோனில் வீடியோ, புகைப்படம் எடுத்தனர். ஒரு மணி நேரம் திட்டமிட்டிருந்தாலும், அரை மணி நேர ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு போலீஸ் ஆண் தோழர்களை கைது செய்து வேனில் ஏற்றியது.

apsc-ban-dharmapur-demo-07பெண் தோழர்களை கைது செய்ய பெண் போலீஸ் இல்லாததால், பெண் தோழர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தடையை மீறிய ஆர்ப்பாட்டம் மக்களுக்கு போராட்டத்தை கற்றுக் கொடுப்பதாக அமைந்தது.

தகவல்

விவசாயிகள் விடுதலை முன்னணி, தருமபுரி
9943312467

புரட்சிகர அமைப்புகள் பிரச்சாரம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

விருத்தாச்சலம்

சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர்- பெரியார் படிப்பு வட்டத்துக்கு தடை மோடி அரசின் உத்தரவை கண்டித்து விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம்.

2014-ல் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதில் இருந்து அரசும், ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவாரங்களும் நிறைவேற்றி வரும் மறுகாலனியாக்க மற்றும் பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை அம்பலபடுத்தி பிரசுரம் வினியோகித்து கூட்டங்களை நடத்திவந்த அம்பேத்கர்- பெரியார் படிப்பு வட்டத்தை தடை செய்யக் கோரி ஆர்.எஸ்.எஸ் வானரம் ஒன்று அனுப்பிய மொட்டை கடுதாசிக்கு பாய்ந்து நடவடிக்கை எடுத்த மனித வளத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி அவ்வமைப்பை தடை செய்துள்ளது ஐ.ஐ.டி நிர்வாகம்.

இதை கண்டித்து விருத்தாசலத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்ன்ணி சார்பாக 02-06-2015 காலை 10 மணிக்கு பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

apsc-ban-virudai-rsyf-demo-2
விருத்தாசலத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்ன்ணி சார்பாக 02-06-2015 காலை 10 மணிக்கு பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பாளர் தோழர் முருகானந்தம் தலைமை தாங்கிநடத்தினார். பறையிசை முழக்கமும், மோடியரசை கண்டித்து விண்ணதிரும் முழக்கங்களுடனும் தொடங்கிய ஆர்ப்பாட்டத்தின் தலைமையுரையில், “அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் தடை செய்யப்பட்டதற்கான காரணம் அந்த அமைப்பு மோடி அரசின் பார்ப்பன பயங்கரவாத நடவடிக்கைகளையும், மறுகாலனியாக்க தாக்குதல்களையும் அம்பலபடுத்தியதே என்பதையும் ஐ.ஐ.டியில் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டின் மீது பார்ப்பனியம் தொடுத்து இருக்கும் தாக்குதலின் ஒருபகுதி என்பதையும்” விளக்கி பேசினார்.

மேலும் இதை எதிர்த்து உழைக்கும் மக்களும் மாணவர் இளைஞர்களும் போராட வேண்டியதன் அவசியத்தையும் விளக்கி பேசினார்.

apsc-ban-virudai-rsyf-demo-3அடுத்தாக,  மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் புஷ்பதேவன் கண்டன உரையாற்றினார். தனது உரையில், “ஜெயலலிதா வழக்கு, ஜெயந்திரன் வழக்கு என அனைத்திலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் காரணமாக விடுதலை செய்யப்படுவது நடந்துள்ளது. இன்னொரு பக்கம், மக்கள் கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்றும் கொடைக்கானலில் மலைகளை ஆக்கரமிப்பதற்கு எதிராகவும் போராடி வருகின்றனர். இந்த அரசு அவர்கள்மீது தாக்குதல் நடத்தி வழக்கு போடுகிறது. ஐ.ஐ.டி விசயத்திலும் குறைந்தபட்ச சட்ட வழிமுறைகளை கூட இந்த மோடி அரசும் ஐ.ஐ.டியும் பின்பற்றவில்லை” என விளக்கி பேசினார்.

apsc-ban-virudai-rsyf-demo-1இறுதியாக,  ஜெயங்கொண்டம் பகுதி பு.மா.இ.மு தோழர் சேகர் பேசும் போது, “பார்ப்பனியம் சாதி ரீதியாக உழைக்கும் மக்களை பிரித்து ஆதிக்கம் செலுத்திவருகிறது. அதை முறியடிக்க உழைக்கும் மக்கள் ஒன்றுதிரண்டு போராட வேண்டும்” என்பதை வலியுறுத்தி பேசினார். கூட்டத்தில் 50 பேர் கலந்துகொண்டார்கள். பொதுமக்கள் திரளாக நின்று கவனித்தார்கள்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,

நாகர்கோவிலில் வழக்குரைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

நாகர்கோவில்

ம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தைத் தடை செய்த ஐ.ஐ.டி நிர்வாகத்தை கண்டித்து 02-06-2015 அன்று காலை 9.45 மணிக்கு நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சுமார் 35 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். தலைமையேற்று பேசிய ம.தி.மு.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிவேல், “அம்பேத்கர் – பெரியார் கருத்துக்குத் தடை என்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறினார்.

காமராஜர் நற்பணி மன்ற வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், “இந்தத் தடையை நீக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். இந்தப் போராட்டத்தை நாடு முழுவதும் பரவச் செய்வோம்” என்று பேசினார்.

நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் .

சி.பி.எம்-ஐச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மரிய ஸ்டீபன் மற்றும் மூத்த வழக்கறிஞர் செலஸ்டின் மதவெறி திட்டத்தோடு செயல்படும் மத்திய அரசை கண்டித்து பேசினர். விடுதலை சிறுத்தைகள், திராவிடர் விடுதலை கழகம், தமிழ்நாடு மார்க்சிய லெனியின கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை
இந்த ஆர்ப்பாட்டம் ஜனநாயக சிந்தனை கொண்ட வழக்கறிஞர்கள், முற்போக்காளர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.

நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டம் ஜனநாயக சிந்தனை கொண்ட வழக்கறிஞர்கள், முற்போக்காளர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.

பத்திரிகையில் வெளியான செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
கன்னியாகுமரி மாவட்டம்

விருத்தாசலம், தொடர்புக்கு : 9791286994

சென்னை ஐ.ஐ.டி + ஆர்.எஸ்.எஸ் சதி – அதிரடி ஆதாரங்கள்

4

சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர்-பெரியார்  வட்டம் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடெங்கிலும் மாணவர்கள், மக்கள் திரளினர் மற்றும் அறிவுத்துறையினரிடையே வீச்சான விவாதங்களும் போராட்டங்களும் களச்செயல்பாடுகளும் நடைபெற்றுவருகின்றன. இப்பிரச்சனையையொட்டி பாசிச இந்துத்துவ மோடியின் கார்ப்பரேட் கைக்கூலித்தனத்தையும், இந்துமயமாக்கலையும் மாணவர்கள் தீரமுடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக அம்பலப்படுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக விவாத மேடையில் முன்வைக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் பொதுப்புத்தியின் பேரில் இந்துத்துவ ஊடகங்களால் முன்வைக்கப்படும் பல்வேறு அவதூறுகளையும் இந்தப் பதிவு, கேள்வி பதில் வடிவில் ஆதாரங்களுடன் எதிர்கொள்கிறது.

1. பார்ப்பனியத்தின் நைச்சியம் என்றால் என்ன?

சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்ட பிறகு, அவாள் நிர்வாகம் தனது சொந்தப் பிள்ளையான இந்துத்துவக் காலிகளின் விவேகானந்தா வாசகர் வட்டத்தின் லோகோவை ராவோடு ராவாக மாற்றியிருக்கிறது. தற்பொழுதைய காட்சியின் படி விவேகானந்தா வாசகர் வட்டம் ஐ.ஐடி மெட்ராசால் அங்கீகரிக்கப்பட்ட தன்னிச்சையான மாணவர் அமைப்பு (IIT Madras Approved Independent Student’s Body) என்று புதிய வேதம் ஓதப்பட்டிருக்கிறது!

இதற்கு முன்பு வரை இந்த வாசகர் வட்டத்தின் அதிகாரப்பூர்வ வாசகம் An IITM’s Student Initiative for nation building through man-making என்பது மட்டுமே!

முந்தைய தரப்பு வாக்கியம் அவாள் நிர்வாகத்தின் ஒருதலைபட்ச நடவடிக்கையை அம்பலப்படுத்திவிடும் என்பதால் இப்படியொரு ஏற்பாட்டை கனஜோராக நிகழ்த்தியிருக்கிறது அவாள் கும்பல்.

பார்ப்பனியம் தன் இருப்புக்கு பங்கம் ஏற்படுகிற பொழுதெல்லாம் கடவுளின் பெயரில் விதிகளை உருவாக்குவது, ஸ்மிருதிகளைக் கொண்டு மக்கள் திரளை அடக்குவது, தீர்ப்பில் கணக்குப் பிழை விடுவது, இப்படி லோகோவை மாற்றி தான் ஒரு நடுநிலை என்று அழுச்சாட்டியம் செய்வது என பலதரப்பட்ட புல்லுருவித்தனத்தைத்தான் பார்ப்பனிய நைச்சியம் என்கிறோம். இந்த நைச்சியத்தின் வயது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல்! இது நீடிப்பதன் பொருட்டே மந்திரங்களும் வாக்கிய தந்திரங்களும் உருவாகின்றன. கீதை, இராமயாணம், பாரதம் போன்ற பாசிசக் கதைகளின் தோற்றமும் இத்தகையதுதான்.

மாற்றிய பின்பு:

VSC-After-Change
தற்பொழுதைய காட்சியின் படி விவேகானந்தா வாசகர் வட்டம் ஐ.ஐடி மெட்ராசால் அங்கீகரிக்கப்பட்ட தன்னிச்சையான மாணவர் அமைப்பு (IIT Madras Approved Independent Student’s Body) என்று புதிய வேதம் ஓதப்பட்டிருக்கிறது!

மாற்றப்படுவதற்கு முன் (இணைய சேமிப்பு சேவையின் தரவுப்படி):

vsc-before-change-3
மே 16, 2015 அன்று எடுக்கப்பட்ட ஆதாரத்தின்படி இந்த வாசகர் வட்டத்தின் அதிகாரப்பூர்வ வாசகம் An IITM’s Student Initiative for nation building through man-making

2. அவாள் நிர்வாகத்தின் தீர்வு எத்தகையது? வரலாறு மாறியிருக்கிறதா?

ஆர்.எஸ்.எஸ்.-ன் கோட்டையாக இருக்கிற சென்னை ஐ.ஐ.டி, அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான அறிவுபூர்வமான விமர்சனத்தையோ, விவாதத்தையோ முன்வைக்காமல் ஒழுங்குவிதி என்று இல்லாத ஒன்றை வைத்து பகடையை உருட்டிக்கொண்டிருக்கிறது. அம்பேத்கர்-பெரியார் பெயரைக்கண்டாலே அலர்ஜி என்பதற்காக, இல்லாத ஒழுங்குவிதிகளை ஐ.ஐ.டி காட்டுவதும், ஐ.ஐ.டி ஒரு தன்னாட்சி அமைப்பு என்று பாசிச மோடி அரசு கள்ள மவுனம் காப்பதும் புது வரலாறல்ல! பார்ப்பனியத்தின் போக்கே இப்படித்தான் இருக்கிறது. உதாரணத்திற்கு மதுரை வீரன் வரலாறு.

பார்ப்பனியத்தை எதிர்கொண்ட மதுரை வீரன்
மாணவர்களுக்கு பல்வேறு சனநாயக சக்திகளும் ஆதரவு தெரிவிப்பதைப்போல அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டங்களை வீதிதோறும் அமைப்பதைப் போல அன்றைக்கு பார்ப்பனியக் கோட்டை கொத்தளத்திற்குள்ளேயே மதுரைவீரனுக்கு சிலை எடுத்தார்களாம்.

சென்னை ஐ.ஐ.டி போன்றே மதுரை மீனாட்சியம்மன் கோவிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் தான் அன்றிலிருந்து இன்றுவரை இருந்துவருகிறது. இதில் சக்கிலியரான மதுரை வீரன், கோயிலில் மீனாட்சிக்கு மஞ்சம் ஆட்டும் வெள்ளையம்மாள் மீது காதல் கொண்டு கோயிலுக்குள் புகுந்து சந்திக்கச் சென்றனாம். (இங்கே அவாள் கோட்டையில் முற்போக்கு மாணவர்கள் உள்ளே புகுந்து அம்பேத்கர்- பெரியாரை நிலைநாட்டுகின்றனர் என்பதைக் கவனிக்க!) வெள்ளையம்மாளும் மதுரை வீரனும் கோயிலில் இருந்து வெளிவருகிற பொழுது, பார்ப்பனிய நிர்வாகம் கோயிலுக்குள் ‘ஒரு சக்கிலியப் பையன் நுழைந்துவிட்டான்’ என்று கூக்குரல் இடவில்லை! மாறாக, “வெள்ளையம்மாளை கவர்ந்து செல்கிறான்” என்று சொல்லி நைச்சியமாக மதுரை வீரனின் மாறு கால் மாறு கை வாங்கினர்.

இங்கே மாறுகால்-மாறு கைக்கு பதிலாக அமைப்பிற்கு தடைவிதிக்கப்பட்டு பார்ப்பனியத்தின் புனிதம் காப்பது எத்தனிக்கப்படுகிறது. இங்கே பார்ப்பனிய நிர்வாகத்திற்கு எப்படி பாசிச மோடி அரசு, முட்டுக்காலாக இருக்கிறதோ அன்றைக்கு மதுரை வீரன் காலத்தில் திருமலை நாயக்கர் அரசு இருந்தது. பிறகு அரசு என்றால் அப்படித்தானே இருக்கும்?!

இன்றைக்கு இருக்கிற மாணவர் எழுச்சி போல், அன்றைக்கு மதுரை வீரனை வாழ்த்தி வணங்கினார்களாம் ஒடுக்கப்பட்ட மக்கள்! அதுவும் இன்றைக்கு, எப்படி மாணவர்களுக்கு பல்வேறு சனநாயக சக்திகளும் ஆதரவு தெரிவிப்பதைப்போல அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டங்களை வீதிதோறும் அமைப்பதைப் போல அன்றைக்கு பார்ப்பனியக் கோட்டை கொத்தளத்திற்குள்ளேயே மதுரைவீரனுக்கு சிலை எடுத்தார்களாம்.

மதுரை வீரனும் கம்படித்தடி வீரா என்று போற்றப்பட்டு வந்தானாம். இது கண்டு பொறுக்காத பார்ப்பனிய நிர்வாகம், ‘சக்கிலியன் என்பதற்காகத்தானே தீர்த்துக்கட்டினோம்; இன்றைக்கு கோயிலுக்குள்ளேயே சக்கிலியனுக்கு சன்னிதியா’ என்று விழிபிதுங்கி இஞ்சி தின்ன ஓநாயாக அவாள் கூட்டம் புதுப் புது அமைப்பு விதிகளை உருவாக்கியதாம்.

அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்துக்கு தடை
துரோகத்தின் வரலாறாக மதுரை வீரன் வெளியேதான் நிற்கிறான்! இதே தீர்வைத் தான் அவாள் நிர்வாகமும் அம்பேத்கர்-வாசகர் வட்டத்திற்கு வைத்திருக்கிறது.

அரசு என்றால் அதன் வஞ்சகத்தைப் புரியாத மக்கள், திருமலை நாயக்கரின் கட்டுப்பாட்டிற்கு இணங்கி, “மதுரைவீரனுக்கு கோயில் சரி. ஆனா அது ஏன் அவாள் கோட்டைக்குள்ள இருக்கணும்; பேசாம கோயிலுக்கு வெளிய வெச்சுட்டா என்ன”வென்று ரூல்ஸ் போட்டு தீட்டு என்பதைக் காரணம் காட்டி மதுரை வீரனுக்கு, கோயிலுக்கு வெளியே ஒரு சின்னக் கோயில் கட்டினார்களாம்.

அன்றைய நாளிலிருந்து இன்றைக்குவரைக்கும் துரோகத்தின் வரலாறாக மதுரை வீரன் வெளியேதான் நிற்கிறான்! இதே தீர்வைத் தான் அவாள் நிர்வாகமும் அம்பேத்கர்-வாசகர் வட்டத்திற்கு வைத்திருக்கிறது.

புதுப்புது அமைப்பு விதி என்ற பெயரில் அம்பேத்கர்-பெரியார் பெயர்களை போராட்டக்களத்தை விட்டே விரட்டி விட்டால் என்னெவென்று யோசிக்கிறது அவாள் கும்பல்.

3. மண்டகப்படி வேலை என்றால் என்ன?

ஐ.ஐ.டி-க்குள் மனுதர்மம்
மண்டபத்திற்குள் நடப்பதோ இந்துத்துவக் காலிகளின் அட்டூழியம்!

ஊர் பற்றி எரிகிற பொழுது, பார்ப்பனக் கோட்டையை மக்கள் திரள் தாக்க முற்படுகிற பொழுது, அனந்த சயனத்தில் இருக்கும் பெருமாளுக்கு ஐந்து வேளை தீபாராதனை காட்டும் அவாள் கும்பலின் செயலுக்கு மண்டகப்படி வேலை என்று பெயர். இதன் படி தடை செய்யப்பட்ட அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் நியாயம் கேட்கும் பொருட்டு போராடப் போவதாக அறிவிக்கிற பொழுது அவாள் நிர்வாகம் சர்வே என்ற பெயரில் மாணவர்களுக்கிடையே மண்டகப்படி வேலையை ஆரம்பித்திருக்கிறது. மேற்படி அவாள் நிர்வாகம் சர்வே என்ற பெயரில் என்னென்ன கேள்விகள் எல்லாம் கேட்கிறது என்று சாம்பிளுக்கு இரண்டு பார்க்க வேண்டும்.

1. மாணவர் கூட்டம் (Board of students meeting) இன்னும் நடைபெறாமல் இருக்கிற பொழுது, அம்பேத்கர்பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என நினைக்கிறாயா?

பார்வை: மாணவர் கூட்டம் (Board of students meeting) இன்னும் நடைபெறவில்லை என்று சொல்கிற அவாள் நிர்வாகம் பிறகு மாணவர்களின் ஒப்புதல் இன்றி அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தை எப்படி தடை செய்ய இயலும்? எதன் அடிப்படையில் ஐ.ஐ.டி நிர்வாகம் இந்தக்கேள்வியை முன்வைக்கிறது?

2. APSC அமைப்பு, மாணவர் பிரதிநிதிகளை சந்தித்துவிட்டுதான் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க சென்றிருக்க வேண்டுமென்று நினைக்கிறாயா? இது இன்னொரு கேள்வி

பார்வை: இது ஒழுக்கக் கேள்வி எனில் இந்துத்துவக் காலிகள் மாணவர் பிரதிநிதிகளை சந்தித்துவிட்டு அது எடுபடாமல் தான் பாசிச மோடி அரசிற்கு மொட்டைக் கடிதாசி போட்டார்களா? இதே கேள்வியை ஏன் அவாள் நிர்வாகம் ஆர்.எஸ்.எஸ் கும்பலை முன்வைத்துக் கேட்கவில்லை?

பிள்ளை இல்லாதவன் வீட்டிலே கிழவன் துள்ளி விளையாண்ட கதையாக மோடி கும்பலின் இந்துத்துவ திணிப்பு ஊழிக்கூத்தாக இருக்கிறது. இந்த ஊழிக்கூத்து தான் புதியதலைமுறை நேர்படப் பேசு விவாதத்திலும் ஏ.பி.வி.பி இந்துத்துவக் காலிகளை “இது எங்கள் ஆட்சி” என்று கேலிக்கூத்தாக வெளிப்படையாக கொக்கரிக்க வைத்திருக்கிறது!

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அங்கே மண்டபத்திற்குள் நடப்பதோ இந்துத்துவக் காலிகளின் அட்டூழியம்! ஏற்கனவே தீஸ்தா செதல்வாத்தின் கருத்துரையின் போது உள்ளே புகுந்து ஆட்டம் போட்ட ஆர்.எஸ்.எஸ் அரை டவுசர்களை வேடிக்கை பார்த்த அவாள் நிர்வாகம் இன்றைக்கு சர்வே எடுக்கிறது என்றால் மண்டகப்படியின் முழுப்பரிமாணம் அத்தகையது என்று புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

3. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்துத்துவத் திணிப்பு நடவடிக்கைகள் இது முதல் தடவையா?

இல்லை. இன்றைக்கு எப்படி இந்துத்துவ வானரங்கள் மொட்டைக் கடிதாசி கொடுத்து அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம், மோடி அரசுக்கு எதிராகவும் இந்துக்களுக்கு எதிராகவும் இருக்கிறது என்று சொல்லி அமைப்பை தடை செய்து பாசிசத்தை கட்டவிழ்த்து விடுகிறார்களோ அதேபோன்று மோடி ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ஆர்.எஸ்.எஸ், ‘ஐ.ஐ.டி.-ல் படிக்கிற மாணவர்கள் அசைவ உணவால் தாம்ச குணங்களை பெறுவதாகவும் சைவ உணவு உண்பவர்களுக்கு தனி உணவு விடுதி வசதியை ஏற்படுத்தி தரவேண்டுமெ’ன கடிதம் எழுதியது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அன்றைக்கும் ஸ்மிருதி ஈரானி அமைச்சகம், “அனைத்து ஐ.ஐ.டி.யிலும் சுத்த சைவ உணவு விடுதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று சுற்றறிக்கை வெளியிட்டது.

இந்த சுற்றறிக்கை வருவதற்கு முன்னரே இத்தகைய பாசிச அரங்கேற்றத்திற்கு முன்னோடியாக இருந்தது சென்னை ஐ.ஐ.டிதான். அன்றைக்கு விடுதியில் ஊழியர் சங்கத்தில் இருந்த நிரந்தர தொழிலாளிகள் ஒவ்வொரு விடுதியிலும் சிறப்பான முறையில் உணவு வழங்கி வந்தனர். அன்றைக்கு இதே இந்து வானரங்கள், “முட்டை, அசைவம் வழங்குவது சுத்தம் பத்தம் இல்லை” என்று சொல்லி சுத்த சைவ உணவு விடுதியை தனியாக ஏற்படுத்திக்கொண்டனர். சுத்த சைவ உணவு விடுதி என்பது அசைவ உணவு விடுதியில் இருந்தே பாத்திரம் கரண்டி என அனைத்து வகையிலும் முற்றிலும் வேறுபட்டது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இது அவாளின் விருப்பம் என்றால் மாட்டுக்கறி உண்பதும் இந்துக்களின் உரிமை தான். அதை அவாள் நிர்வாகம் நிறைவேற்றியதா?

சொல்லப்போனால் ஸ்மிருதி ஈரானியின் சுற்றறிக்கைக்குப் பின்பு பெரும்பாலான ஐ.ஐ.டி.க்களில் அசைவ உணவு வழங்குவதே நிறுத்தப்பட்டிருக்கிறது. டில்லி ஐ.ஐ.டி.யில் அசைவ உணவு வழங்குவதற்கு கேண்டின்களில் டெண்டர் எடுக்க யாரும் வரவில்லை என்ற பொய்க்காரணம் முன்வைக்கப்பட்டது. இது பாசிச அரங்கேற்றலுக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு.

4. சென்னை ஐ.ஐ.டி, உயர் கல்வியின் கேந்திரமா? ஆர்.எஸ்.எஸ்ஸின் கேந்திரமா?

அரசிலும் ஆட்சியிலும் மதத்தை தனியாக பிரிப்பதுதான் பொது சிவில் சமூகத்தின் உண்மையான நோக்கம் என்றிருக்கும் பொழுது, இது வரை ஐ.ஐ.டி சென்னையைப் பற்றி அறியாதவர்கள் இந்தப் புகைப்படத்திற்கு பதில் சொல்ல வேண்டும். ஒவ்வொருமுறை பட்டம் வழங்குகிற பொழுது பட்ட உறுதியேற்பு மொழியோடு வேத வழிபாட்டை சமஸ்கிருதத்தில் அச்சடித்துத் தருகிறது சென்னை ஐ.ஐ.டி அவாள் நிர்வாகம். அந்த சமஸ்கிருத சுலோகம் இப்படி போகிறது.

ஸஹ நாவவது ஸஹ நெள புநக்து
ஸஹ வீர்யங்கரவாவஹை.
தேஜஸ்வி நாவதீதமஸ்து, மா வித்விஷாவஹை.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

மக்கள் வரிப்பணத்தில் செயல்படுகிற ஓர் உயர்கல்வி நிறுவனத்திற்கு இது வெட்கக்கேடான விசயம் இல்லையா? இங்கு நூற்றுக்கு 99% விசயங்கள் இப்படித்தான் நடைபெறுகின்றன. வேத காலத்தில் நியுரோ சயின்ஸ் என்று அடித்துவிடுவது, சின்ன ஜீயரைக் கூப்பிட்டு பரிணாமம் குறித்து வகுப்பெடுப்பது என்று இங்கு நடக்கிற அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இதில் இந்துத்துவத்தை சுவாசிக்கிற அற்ப இதயங்கள், ‘அரபு நாட்டில் குரான் இருக்கிற பொழுது இந்திய நாட்டில் இந்துமதம் தான் இருக்கும்’ என்று பல்லிளிக்கின்றன.

இந்தக் கூட்டம் இதை இந்துமதத்தின் அதிகாரப்பூர்வ எழுத்து என்று எதை வைத்து சொல்கிறது? இது யாருக்கெல்லாம் பொதுவானதாக இருந்தது? இது எப்பொழுது இந்த மக்களின் மதமாக இருந்தது என்று நேர்பட விவாதிக்க முன்வருமா? தடையே விவாதிக்க கூடாது என்பதற்குத்தானே!

5. எதற்காகத் தடை? இனி அடுத்தது என்ன?

அருந்ததிராய் சரியாகச் சுட்டிக்காட்டுவதைப் போன்று இத்தகைய மாணவர் அமைப்புகள் இச்சமூகத்தின் ஆகக்கேடான முதலாளித்துவத்தையும் பார்ப்பனியத்தையும் சரியான பார்வையில் முன்வைத்து விமர்சிக்கின்றனர். இது ஆளும் வர்க்கத்தை எதை விடவும் அதிகமாக வினைபுரிய வைக்கிறது. இதை அவர்களால் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் இந்த சமூக விடுதலைக்கான உயிர்நாடியை செயல்தந்திரத்தை இன்றைக்கு மாணவ சமுதாயம் அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறது.

மறுகாலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் கார்ப்பரேட் கும்பல்களும் பாசிசத்தை செலுத்தும் இந்துத்துவக் கும்பலும் 50-50 சமன்பாட்டின் அடிப்படையிலேயே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஆகக்கேடான முறையில் சுரண்டி வருகிறது. இன்றைக்கு சந்தைக்கான வாய்ப்புக்கள் இல்லாத நிலையில் கார்ப்பரேட்டுகளின் பகாசுர கொள்ளைக்கு தீனி போட முடியாத ஏழையாக இந்தியா நிற்கப்போகிறது.

இந்த இரு கூட்டுக்களவாணிகளையும் அடித்துநொறுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை மாணவ சமுதாயம் அரசியல் அரங்கிற்கு தீர்க்கமாகக் கொண்டுவந்திருக்கிறது. புரட்சியின் வித்துக்கள் இப்படித்தான் தோற்றுவிக்கப்படுகின்றன; ‘இந்தப்போராட்டம் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்களோடு முடியப்போவதும் இல்லை’ என்று பகத்சிங் சொல்லியதை அரசியல் அரங்கில் நிரூபித்துக்காட்டுகின்றன. அதை பதியம் போட்டு வளர்த்தெடுப்பதும் போராட்டத்தில் ஒன்றிணைவதும் சனநாயகத்தை விரும்பும் ஒவ்வொருவர் முன் நிற்கும் கடமையாகும்.

6. எல்லாம் சரி. போராடுவதற்கு பயமாக உள்ளதே என்ற கேள்வி இருக்கிறதா?

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டதை ஒட்டி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் பல்வேறு மாணவர் அமைப்புகளும் தெருவில் இறங்கி போராடிய பொழுது ஆளும் வர்க்கமும் காவல்துறையும் மூர்க்கமாக போரிட்டன. தோழர்கள் பாசிசத்தை அம்பலப்படுத்தி ஆளும் வர்க்கத்தின் முகத்திரையை கிழித்தனர். இதைப் பார்க்கிற மாணவர்களுக்கு நாமும் போராட வேண்டும் என்ற உத்வேகம் வருகிற அதே சமயம் இந்த ஆளும் வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கிற பொதுபுத்தியோ போலீசு, அடக்குமுறை என்று பயம் காட்டவே செய்யும். அங்கு சனநாயகத்தை சரி என்று சொல்கிற மாணவர்கள் தனித்தனி தீவுகளாக நிற்கிற பொழுது பயம் ஆட்கொள்ளுதல் இயல்பே. இங்குதான் நாம் பயத்தின் அரசியலை கண்டு கொள்ள வேண்டும்.

பய உணர்ச்சி, தனிமநிலை உணர்ச்சியல்ல (It is not an absolute feeling). அது சமூகத்தின் பல்வேறு வர்க்கங்களை சார்ந்து எழுகிற சார்பு நிலை (Relative feeling) உணர்ச்சிதான்.

சான்றாக தனிமனிதரின் பயத்தைவிட போலீசு வர்க்கத்தின் பயம் நேற்றைய போராட்டத்தில் கடுமையாக இருந்தது. எங்கே சிவப்பு சட்டைகள் போராடினால் கலகம் பிறக்குமோ என்று அஞ்சிக் கொலைநடுங்கியது ஆளும்வர்க்கத்தின் ஏவல் வர்க்கம். இந்த பயத்தினாலேயே பேட்டியளிப்பதற்கு முன் தோழர்களை அள்ளிச்சென்றது போலீசு.

ஐ.ஐ.டி சென்னை
பயத்தினாலேயே பேட்டியளிப்பதற்கு முன் தோழர்களை அள்ளிச்சென்றது போலீசு.

இதே ஆளும் வர்க்கத்தின் பயத்தோடு ஒப்பிடுகிற பொழுது பார்ப்பனிய அவாள் நிர்வாகத்தின் பயத்தோடு ஒப்பிடுகிற பொழுது தனிமனிதனின் பயம் மிக மிக அற்பமானது. சான்றாக, இதே சென்னை ஐ.ஐ.டியில் மறுகாலனியாதிக்கக் கொள்கைகள் காரணமாக கொத்து கொத்தாக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதை அம்பலப்படுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்கள் ஐ.ஐ.டி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவப்புச் சட்டைகளை கண்ட அவாள் நிர்வாகம் அன்றைக்கு ஐ.ஐ.டி முழுவதும் 144 தடை உத்தரவு போட்டது. வேளச்சேரி, கிண்டி, தரமணியின் கதவுகள் இறுக்கிச் சாத்தப்பட்டன. பு.மா.இ.மு எதிர்த்துப் போராடுவதை செய்தியிலும் வரவிடாமல் பார்த்துக் கொண்டன.

சில மாணவர்களுக்கே பார்ப்பனியத்திற்கு முதுகுத்தண்டை சில்லிட வைக்கிற மரணபயம் அன்றைக்கு இருந்தது. அப்படியானால் சமூக விடுதலையை சுவாசிக்க வேண்டும் என்கிற மாணவர்களின் பயமோ இந்த ஆளும்வர்க்கத்தின் பயத்தோடு ஒப்பிடுகிற பொழுது சொற்பமானது மட்டுமல்ல; அற்பமானதும் கூட. இதைப் புரிந்து கொள்வது மட்டுமல்ல; இத்தகைய புரிதலை பெளதிக சக்தியாகவும் முன்னிறுத்த வேண்டும்.

இந்த வகையில் பயம் தெளிய வேண்டுபவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணினரை தொடர்பு கொண்டு நேரடி அனுபவத்தை பெறலாம். நாடெங்கிலும் பல்வேறு மாணவர்கள் உரத்துக் கூறுவதைப்போல வீதிதோறும் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தைக் கட்டியமைக்கலாம்.

– வினவு செய்தியாளர்.

IIT Ban – APSC Ramesh Interview – Video

1

Ambedkar – Periyar Study Circle Banned in Chennai IIT

Countering the lies and slanders of the IITM admin….

What really happened?

 Interview with IIT research student Mr. Ramesh

Periyar Ambedkar
Based on the thoughts of Ambedkar and Periyar we question Hindu religion and its tenets.

They say that Ambedkar-Periyar Study Circle violated the code of conduct of IIT? What is that Code of Conduct? Which section of that did you violate?

There is no such code of conduct. There has never been one. Now, they are inventing one to defend themselves against their indefensible action.

They say, that you have misused the name of IITM?

We have never used IIT’s emblem in our posters. We have only stated that this study circle is an Initiative by IITM students, which is a fact. For example, when Presidency college students put out a poster in support of Srilankan tamils, they call themselves as Presidency College students. What else should they say? Similary, we say that we are IIT students. That is all.

People think that IIT students enjoy more freedom than students of other colleges?

Nothing. All the activities of the students are monitored here. In the past 4 years, the number of CCTV cameras inside the campus have increased manifold. They have installed them in all departments. Contracts are given to fit them outdoors too. In hostels, even on the road sides, they are planning to install cameras. You are under alround surveillance here. Your every move is monitored.

iit-apsc-reaction-1They say that you didn’t obtain prior permission for your activities

No one takes prior permission here. For example, ISKCON – Hare Rama Hare Krishna – conducts Bhajans every week. They do not go to the Dean of Students every week and seek permission.

Do you mean that right to propagate Hindu belief is sanctioned – not the right to criticize?

Indeed! THAT is the issue. Based on the thoughts of Ambedkar and Periyar we question Hindu religion and its tenets. For them it is intolerable.

Congress BJP
Even when Congress was in power, the autonomous IITM was ruled by BJP

You mean, they allow Hindu religeous propaganda or even Hindu communal propaganda?

Gurumurthy keeps coming for talks. He comes to many departmnets and presents R.S.S view points on various issues. He will come to Economics Department, other student bodies, rightwing student bodies for talks.

The institute itself invites him many a times, he will be invited as a Chartered accountant. But the accountant speech would be R.S.S-Hindutva propoganda

To be specific, before the general elections in 2014, when Congress was in power, IITM admin did everything to support BJP. Sangh parivar students even conducted election campaign inside the campus.

APSC Ban
so… its a MATTER of name ?

It seems, even when Congress was in power, the autonomous IITM was ruled by BJP.

Yes, indeed. Kiran Bedi came before elections (for a talk sponsored by IITM). Winding up her speech, she canvassed for BJP. Yes, she did that openly.

What facilities IITM extends to your Study Circle.

Nothing. IIT does not extend us any facility. We use the class rooms. That too is not provided by IIT admin. Our professor helps us to get the classroom.
For funds IIT never supports us anyway. We invite speakers, print pamphlets and posters only with the help of student contributions.

But, Kiran Bedi etal meetings funded by IITM.

Yes, no doubt. IIT funded them. Details of these accounts are never made public. Tax payers money used to bring BJP to power.

Did the Dean asked you not to name your study circle after Ambedkar – Periyar? Did he say that explicitly?

Yes. When we talked to him, he said that this name is polarising. He said that it is also politically coloured. “You change the name; choose some sort of a generalized name, something from their thoughts if you wish. Or better choose some other name.” he said. When we tried to put forth our view point, he categorically said, “Nothing to debate. This is an order of the Dean. Better follow my order.” He did use these very words – THIS IS AN ORDER OF THE DEAN

IITM APSC ban
We have spoken out openly against the anti people economic policies and Hindutva programs.

so… its a MATTER of name ?

The essence of the whole issue is whatever we did in APSC was against Brahminism. That is the MATTER

On what issues you have conducted meetings?

We have conducted a meeting against Imposition of Sanskrit, inviting a person from Linguistics field. Then against ban on beef, on Ghar Wapsi.
When they started putting name boards in (Sanskritized) Hindi, even the Hindi speaking students could not understand those words. We exposed that this (imposition of Hindi) is a blatant Brahminical, Hindutva fanaticism.
We conducted meetings against Land acquisition bill and labour law amendments.
We have spoken out openly against the anti people economic policies and Hindutva programs. We have also written on them.
All these are against the government at the centre. Infact, this is what they accused us of.

Is it true that IITM refused to conduct a meeting to honour Bhagat Singh?

Yes. Last September, we (APSC) approached the co-ordinator ofExtra Mural Lectures (EML). We emailed him “We should hold a meeting on Bhagat Singh. APSC has no funds, moreover, it would be better if you you conduct the meeting. You can get funds from IITM. We could invite Prof. Chamanlal (the Bhagat Singh biographer)”. But our request was rejected by EML core team as well as the faculty advisor.

Mumbai IIT in solidarity with APSC
A student organization from IIT Mumbai, another from TIS (Tata institute of Social Sciences) have extended their support.

A core member of the EML mailed back, “EML is not a suitable platform for this. Better do it on your own”

When we spoke to him, he argued that Bhagat Singh would not be a acceptable person to majority of IIT students. So, this is not needed. This is how he responded.

But, Aravindan Neelakandan (a Hindutva propagandist of Tamil Nadu) was invited to the same platform. It was a meeting conducted exclusively for right wing students. That was funded by IIT.

Shall we accuse IITM of illegitemately channelising Tax payers money to promote Brahminical and right wing agenda?

Yes. That is how it is. You dont have to believe my word. Go to the FB page, type EML and see the list of lectures conducted. Then decide for yourself.

Arundhati Roy
Arundhati Roy has issued a statement in support.

So far, we were talking about right wing hindutva lectures. There is another side to it. The rest of the lectures are all pro corporate.

I will give you one recent example. Recently Kris Gopalakrishnan of Infosys and Yashwant Sinha came to speak.

Krish puts forward his demands to YS. He says taxation is a hurdle, hence should be relaxed, then the labour laws – still a source of nuisance.

Hereinafter, he says no more 8 hours work days, no more monthly salaries etc. The IT sector, he said is getting automated, and preferred to go for hourly wage system. In effect, Krish demands the labour laws to go.

This was also an Extra Mural Lecture funded by IIT. Such corporate lectures and conferences, discussions on how to promote privatization of education etc are a regular phenomena here.

iit c
This is an issue faced by students in all institutions of higher learning.

What is the level of support you have gained so far in your struggle?

We have got overwhelming support from intellectuals. A student organization from IIT Mumbai, another from TIS (Tata institute of Social Sciences) have extended their support.

SFI has supported us. Professor Chamanlal has written in support of us. Arundhati Roy has issued a statement in support.

Newyork Times, BBC India and The Guardian have also covered this issue.

It is not just an issue pertaining to APSC. This is an issue faced by students in all institutions of higher learning. IIT Mumbai students shared an experience. They wanted to organize a meeting inviting a lecturer from Kashmir. IIT Mumbai admin stopped the program saying that Kashmir is a very sensitive issue.

A wrong trend indeed. Yet its happening all over India.

Shall we conclude that from APSC to Land Grab Act, Labour law amendments or Kashmir, IITM will encourage only those views that are anti people?

Yes. You can say that. That is how IIT is administered. Its not a secret, inside IIT anyone can come and see this plain truth.

ஐ.ஐ.டி தடை – APSC ரமேஷ் நேர்காணல் – வீடியோ

0

அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்துக்கு தடை

ஐ.ஐ.டி நிர்வாகத்தின் பொய்களுக்கும், அவதூறுகளுக்கும் எதிராக…

உண்மையில், அங்கே நடந்தது என்ன?

ஐ.ஐ.டி ஆராய்ச்சி மாணவர் திரு ரமேஷ் – நேர்காணல்

பெரியார் - அம்பேத்கர்
“பெரியார் அம்பேத்கர் சொன்ன கருத்துகளின் அடிப்படையிலிருந்து நாங்க இந்து மதத்தை கேள்விக்கு உட்படுத்துறோம்.”

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் ஐ.ஐ.டியின் நடத்தை விதிகளை மீறி விட்டதாக சொல்கிறார்களே. அது என்ன நடத்தை விதி? அதன் எந்தப் பிரிவை மீறி விட்டீர்கள்?

code of conduct-னு, விதிமுறைகள்னு ஏதும் ஐ.ஐ.டி-ல இல்ல. இந்தப் பிரச்சனைக்கு அப்பறம் தங்களை தற்காத்துக் கொள்வதற்காகத்தான் இப்படி புதுசா ஒண்ணு கொண்டு வர்றாங்க.

நீங்கள் ஐ.ஐ.டி-யினுடைய பெயரை முறைகேடாக பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்று சொல்கிறார்களே?

ஐ.ஐ.டி-யினுடைய எம்ப்ளத்தை வச்சி எல்லாம் நாங்க போஸ்டர் எதுவும் போடக் கிடையாது. நாங்க initiated by IITM students-னு, ஐ.ஐ.டி மெட்ராஸ்ல படிக்கக் கூடிய மாணவர்கள்னு சொல்லியிருக்கோம், அவ்வளவுதான். பிரசிடென்சி காலேஜ் மாணவர்கள் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக போராட வர்றாங்கன்னா பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள்னு அவங்களோட பேனர்ல போட்டுப்பாங்க. அப்படித்தான் போட முடியும். அதே மாதிரி ஐ.ஐ.டியினுடைய மாணவர்கள்னு நாங்க போட்டிருக்கோம்,

ஐ.ஐ.டி கான்பூர் மாணவர்கள்
“இத சாதாரண அம்பேத்கர் பெரியார் ஸ்டடி சர்க்கிள் பிரச்சனையா பார்க்கல. இந்தியாவில இருக்கக் கூடிய எல்லா உயர்கல்வி நிலையங்கள்லயும் பிரச்சனையாத்தான் இருக்கும்.” (அம்பேத்கர் – பெரியார் தடையை கண்டித்து ஐ.ஐ.டி கான்பூர் மாணவர்கள்)

ஆனால், மற்ற கலைக்கல்லூரிகளை விட ஐ.ஐ.டியில் மாணவர்களுக்கு சுதந்திரம் அதிகம் என்றல்லவா சொல்கிறார்கள்?

அப்படியெல்லாம் கிடையாது. இங்க மாணவர்களுடைய நடவடிக்கைகள் அத்தனையும் முழுசாகவே கண்காணிக்கப்படுது.  கடந்த 4 வருட காலமாக ஐ.ஐ.டிக்குள்ள சி.சி.டி கேமரா எல்லா டிபார்ட்மெண்ட்லயும் பொருத்தியிருக்காங்க. இன்னும் வெளியிடங்கள்ள பொருத்தறதுக்காக contract விட்டிருக்காங்க, மாணவர்கள் ஆஸ்டல் சைட், ரோட் சைட் எல்லாம் கண்காணிக்கறதுக்காக. இங்க கடுமையான கண்காணிப்பு உண்டு. நீங்க என்ன செஞ்சாலும் அட்மினுக்குத் தெரியும்.

உங்கள் செயல்பாடுகளுக்கு முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று சொல்கிறார்களே?

அப்படி முன் அனுமதி பெற்று யாரும் செய்றது கிடையாது. எடுத்துக்காட்டுக்கு ஒரு விஷயத்தை சொல்லலாம். இஸ்கான் – ஹரே ராமா ஹரே கிருஷ்ணா  – வாரா வாரம் பஜனை நடத்துறாங்க. இந்த பஜனைக்காக வாரா வாரம் போய் அவங்க அட்மின் கிட்ட, டீன் ஆஃப் ஸ்டூடன்ட்ஸ் கிட்ட கையெழுத்து வாங்கிட்டு வர்றதில்ல.

அப்போ இந்து மத பிரச்சாரத்துக்கு சுதந்திரம் உண்டு, மதத்தை விமர்சனம் செய்ய சுதந்திரம் கிடையாதுன்னு சொல்லலாமா?

உண்மையா, அதுதான் அங்க பிரச்சனையா இருக்கு. பெரியார் அம்பேத்கர் சொன்ன கருத்துகளின் அடிப்படையிலிருந்து நாங்க வெளிப்படையாக இந்து மதத்தை கேள்விக்கு உட்படுத்துறோம். அதுதான் அவங்களுக்கு பிரச்சனையா இருக்கு.

அம்பேத்கர் - பெரியார் பெயர்
“இந்தப் பேரு polarising ஆ இருக்கு. நீங்க பேர மாத்துங்க, ஒரு ஜெனரலைஸ்ட் நேம் வச்சிக்குங்க” (படம் : பேஸ்புக்கிலிருந்து)

இந்து மதப் பிரச்சாரத்துக்குதான் அனுமதி என்கிறீர்களா? அல்லது இந்து மதவெறி பிரச்சாரத்துக்கும் அனுமதி இருக்கிறதா?

குருமூர்த்தி தொடர்ந்து பேச உள்ளே வர்றாரு. அவர் ஆர்.எஸ்.எஸ்-னுடைய கருத்தை முன் வைத்து பல்வேறு விதங்களில் சரி என்று பேசுவதற்கு எல்லா டிபார்ட்மென்டுக்கும் வருவார். எகனாமிக்ஸ் டிபார்ட்மென்ட்ல, மத்த ஸ்டூடன்ட்ஸ் ஆர்கனைசேஷன், ரைட் விங் ஆர்கனைசேஷன்ல வந்து பேசுவாரு. இன்ஸ்டிட்யூட்டே சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் டேகுக்குள்ள கூப்பிடுவாங்க. ஆனா அவரு பேசுவது எல்லாமே ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவா கருத்துக்களாத்தான் இருக்கும்.

ரொம்ப குறிப்பா சொல்றதா இருந்தா, 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு 6 மாத காலத்துக்கு முன்னாடியே, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே, இவங்க முழுமையா பி.ஜே.பிக்கு சார்பாக எல்லா நடவடிக்கைகளும் நடத்தினாங்க. பி.ஜே.பிக்கு ஓட்டு போடணும் என்று சங்க பரிவார ஆதரவு மாணவர்கள் உள்ளேயே பிரச்சாரம் பண்ணினாங்க.

டெல்லியில காங்கிரஸ் ஆட்சியில நடந்த போதே ஐ.ஐ.டியில பா.ஜ.க ஆட்சி நடந்தது என்று சொல்கிறீர்களா?

ஆமா. கிரண் பேடி உள்ள டாக் குடுக்கும் போது பி.ஜே.பிதான் கரெக்ட். நான் பி.ஜே.பிக்குதான் ஆதரவு தரப் போறேன். அதையே நீங்க பண்ணணும் என்று மேடையிலேயே நின்னு பேசி முடிச்சிட்டு போனாங்க.

காங்கிரஸ் - பா.ஜ.க
டெல்லியில காங்கிரஸ் ஆட்சியில நடந்த போதே ஐ.ஐ.டியில பா.ஜ.க ஆட்சி நடந்தது (படம் : பேஸ்புக்கிலிருந்து)

உங்களுடைய படிப்பு வட்டத்திற்கு ஐ.ஐ.டி வழங்கும் சலுகைகள் என்ன?

இல்ல. ஐ.ஐ.டில இருந்து எங்களுக்கு எதுவுமே கொடுக்கறது இல்ல. ஒரே ஒரு விஷயம் மட்டும் கொடுக்குறாங்க. நாங்க கிளாஸ் ரூம்ச வாங்கிக்கிறோம். அது ஐ.ஐ.டி நிர்வாகம் கொடுக்கல. நாங்க வேறு ஒரு பேராசிரியர் துணையோடு அவரு வாங்கிக் கொடுப்பாரு. ஐ.ஐ.டியிடமிருந்து எந்தவித சப்போர்ட்டும் கிடையாது. கூட்டங்களை நடத்துவதற்காக மாணவர்கள் கிட்ட உண்டியல் ஏந்தி  ஸ்பீக்கர்சுக்கு, பேம்ப்லட்ஸ், போஸ்டருக்கு உண்டான செலவுகள் எல்லாத்தையும் பண்ணியிருக்கோம்.

ஆனால், கிரண்பேடி, குருமூர்த்தி கூட்டங்களுக்கு ஐ.ஐ.டி பணம். அப்படித்தானே?

ஆமா, ஆமா. ஐ.ஐ.டிதான் பணம் கொடுத்திருக்கு. அது ஐ.ஐ.டியுடைய பணத்திலருந்துதான் நடக்குது. இதுக்குண்டான வரவு செலவு எதுவும் மாணவர்கள் மத்தியில வெளியிடுவது இல்ல. மக்களுடைய வரிப்பணத்தை பி.ஜே.பி ஆட்சிக்கு வருவதற்காக நிர்வாகமே பயன்படுத்துது.

உங்களுடைய படிப்பு வட்டத்திற்கு அம்பேத்கர் – பெரியார் பெயரை வைக்கக் கூடாது என்று டீன் வெளிப்படையாகவே சொன்னாரா?

அவர்கிட்ட பேசப் போகும்போது டீன் சிவகுமார், “இந்தப் பேரு polarising ஆ இருக்கு. பின்னாடி பொலிடிக்கல் கலர் இருக்க மாதிரி இருக்கு. நீங்க பேர மாத்துங்க, ஒரு ஜெனரலைஸ்ட் நேம் வச்சிக்குங்க. இல்லாட்டி வேறு பேரு வச்சுக்குங்க” என்றார். நாங்க அது குறித்து அவர்கிட்ட டிபேட் பண்ண போகும்போது, “இதில டிபேட் பண்றதுக்கெல்லாம் ஒண்ணும் இல்ல. இது டீன் ஆஃப் ஸ்டூட்ன்ட்சுடைய ஆர்டர். இத நீங்க ஃபாலோ பண்ணணும்.” என்றார். இதே வார்த்தைய பயன்படுத்தினார். இது டீன் ஆஃப் ஸ்டூடன்சுடைய ஆர்டர்.

அப்போ பெயர்தான் பிரச்சனையா?

ஒட்டு மொத்த பிரச்சனையோட சாராம்சமே அம்பேத்கர் – பெரியார் ஸ்டடி சர்க்கிளில் பேசப்பட்ட விஷயங்கள் பார்ப்பனியத்திற்கு எதிரா இருக்கு. அதுதான் முக்கியமான விஷயமே.

உங்களுடைய படிப்பு வட்டத்தின் சார்பில் என்ன பிரச்சனைகளுக்காக கூட்டங்கள் நடத்தியிருக்கிறீர்கள்?

நாங்க சான்ஸ்கிரீட் இம்போசிஷன் எதிர்த்து லிங்குவிஸ்டிக்ஸ், ஏரியால வொர்க் பண்றவர வச்சு கூட்டம் நடத்தியிருக்கோம். கர் வாபசி பத்தி கூட்டம் நடத்தியிருக்கோம். பீஃப் பேன் பண்ணது பத்தி பேசியிருக்கோம்.

ஐ.ஐ.டி-ல நேம் போர்ட்ஸ் எல்லாம் ஹிந்தியிலயும் எழுதினாங்க. ஹிந்தியில எழுதினது ஹிந்தி படிச்சவங்களுக்கே தெரியல, இது அப்பட்டமான பார்ப்பனிய வெறி, இந்துத்துவா வெறி அப்படீன்னு நாங்க புரூவ் பண்ணி காமிச்சோம்.

லேண்ட் அக்விசிசன் பில் பத்தி, லேபர் லா பத்தி கூட்டம் நடத்தியிருக்கோம்.

இப்படி மக்களுடைய அடிப்படை வாழ்வை பாதிக்கக் கூடிய அரசாங்கம் கொண்டு வரக் கூடிய பொருளாதார கொள்கைகளை எதிர்த்தும், ஹிந்துத்துவா அடிப்படையில் கொண்டு வரக் கூடிய எல்லா திட்டங்களை குறித்து நாங்க பகிரங்கமா பேசியிருக்கோம். அனலைஸ் பண்ணி கட்டுரை எழுதியிருக்கோம். இது எல்லாமே, இப்ப நடந்துகிட்டு இருக்கிற அரசாங்கத்துக்கு எதிரானதா இருக்கு என்பதுதான் எங்க மேல் இருக்கிற குற்றச்சாட்டே.

பகத்சிங் பிறந்தநாள் கூட்டம் கூட நடத்த முடியாது என்று ஐ.ஐ.டி மறுத்து விட்டதாமே, உண்மையா?

பகத்சிங் பிறந்தநாள் செப்டம்பர் மாசம் வந்தப்ப அம்பேத்கர் பெரியார் ஸ்டடி சர்க்கிள்ல இருந்து எக்ஸ்ட்ரா முயூரல் லெக்சருடைய கோ-ஆர்டினேட்டர அணுகினோம். “பகத் சிங்க பத்தி பேசணும். அத நாங்க நடத்துறத விட, நீங்க நடத்துனீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும். நீங்க ஐ.ஐ.டி கிட்ட ஃபண்ட் வாங்கி நீங்க நடத்துங்க. சமன்லாலை கூப்பிடலாம்”னு சொல்லி மெயில் அனுப்பினோம். அதை எக்ஸ்ட்ரா ம்யூரல் லெக்சரோட கோர் டீமும் ஒத்துக்கல, ஃபாகல்டி அட்வைசரும் ஒத்துக்கல.

எக்ஸ்ட்ரா ம்யூரல் லெக்சருடைய கோர் மெம்பர் ஒருத்தர், ரிப்ளை பண்ணும் போது, “ஈ.எம்.எல் இதுக்கு சூட்டபிள் பிளாட்பார்ம் கிடையாது. நீங்க வேறு விதத்தில, வேற சப்போர்ட்ல நடத்திக்குங்க” என்று சொன்னாரு.

அவர்கிட்ட தனிப்பட்ட முறையில பேசும் போது அவர் முன் வைச்ச வாதம், ஐ.ஐ.டி உள்ளே இருக்கக் கூடிய பெரும்பான்மை மாணவர்களுக்கு பொதுவான ஒரு ஆளா பகத் சிங் இருக்க மாட்டாரு. சோ இப்படி நடத்துவது தேவையில்லாதது என்று ரிப்ளை பண்ணாரு.

ஆனா, அரவிந்தன் நீலகண்டன் ஒரு கூட்டம் நடத்தினாரு. அந்தக் கூட்டம் நடத்தப்பட்டதே, வலது சாரி சிந்தனை உள்ள மாணவர்களுக்கு மட்டும்தான். அரவிந்தன் நீலகண்டன் பேசினது ஐ.ஐ.டி மெட்ராஸ் பணம் கொடுத்து நடந்த லெக்சர்.

பார்ப்பனியத்தையும் வலதுசாரி கருத்துகளையும் பரப்புவதற்கு மக்கள் வரிப்பணத்தை ஐ.ஐ.டி சென்னை முறைகேடாக பயன்படுத்துகிறது என்று  குற்றம் சாட்டலாமா?

உண்மையா அப்படித்தான் பயன்படுத்தப்படுது. இத நான் சொல்றேன்னு பார்க்க வேணாம். பேஸ்புக்குக்குப் போய் eml-னு டைப் பண்ணினா என்ன லெக்சர் நடத்தியிருக்காங்கன்னு லிஸ்ட் வரும். அந்த லிஸ்ட பார்த்து யார் வேண்டும்னாலும் புரிஞ்சிக்கலாம்.

இப்ப இவ்வளவு நேரம் வலது சாரி சிந்தனை, இந்துத்துவா சிந்தனை சார்பா நடந்த லெக்சர பத்தி பேசிக்கிட்டிருந்தோம். இன்னொரு சைடு இருக்கு எல்லாமே கம்ப்ளீட்லி ப்ரோ கார்ப்பரேட்.

ஒரே ஒரு எடுத்துக்காட்டு சொல்றேன். சமீபத்தில இன்ஃபோசிஸ் நிர்வாகி கிருஷ் கோபாலகிருஷ்ணன், யஷ்வந்த் சின்ஹா வந்து பேசினர்.

கிருஷ் கோபாலகிருஷ்ணன் யஷ்வந்த் சின்ஹாகிட்ட டிமாண்ட் வைக்கிறாரு, கிருஷ் கோபாலகிருஷ்ணன். எங்களுக்கு டாக்ஸ், இந்தத் துறையில் வரிகள் சம்பந்தமான பிரச்சனைகள் பெரிய ஹர்டிலா இருக்கு. அத நீங்க ஃப்ரீ பண்ணி கொடுக்கணும். யூனியன், லேபர் லா சம்பந்தமான விஷயங்கள் சிக்கலா இருக்கு. இன்னும் எங்களுக்கு சார்பா மாத்திக் கொடுக்கணும்.

இனிமேல், ஐ.டி துறையில் 8 மணி நேர வேலை, மாதா மாதம் சம்பளம் கொடுக்கிறது எல்லாம் இல்ல. ஃபுல்லா ஆட்டமேசன் பண்ணப் போறோம். அவர் பேசிஸ்ல வேலை கொடுத்து வாங்கப் போறோம். இதுக்கெல்லாம் ஏற்றாற்போல நீங்க சட்டங்களை மாத்தணும். இப்படிப்பட்ட டிமாண்ட்களை வைக்கிறாரு, கிருஷ் கோபாலகிருஷ்ணன்.

அதுவும் எக்ஸ்ட்ரா மூரல் லெக்சர்தான், ஐ.ஐடி ஃபண்டட். இதோ போல் புரோ கார்ப்பரேட், கல்வியில் தனியார்மயத்தை எப்படி கொண்டுவ ருவது தொடர்பான நிறைய கான்ஃபரன்ஸ், நிறைய மீட்டிங் உள்ளே நடக்கும்.

இந்தப் போராட்டத்தில் உங்களுக்கு ஆதரவு எந்த அளவுக்கு இருக்கிறது?

அறிவுத்துறையினர் மத்தியில் பெரும்பான்மையினர் எங்களுக்கு ஆதரவு கொடுத்திருக்காங்க. ஐ.ஐ.டி பாம்பே ஸ்டூடன்ட் ஆர்கனைசேசன், டி.ஐ.எஸ் டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோசல் ஸ்டடீஸ்ல ஒரு ஸ்டூடண்ட் ஆர்கனைசேசன் எங்களுக்கு சப்போர்ட் பண்ணியிருக்குது.

எஸ்.எஃப்.ஐ முழு ஆதரவு கொடுக்கிறோம். சமன்லால் எங்களுக்கு ஆதரவா பேஸ்புக்கில் எழுதியிருக்கிறார். அருந்ததி ராய், உங்களுக்கு சார்பா நான் ஸ்டேட்மென்ட் தர்றேன் என்று சொல்லியிருக்காங்க

நியூயார்க் டைம்ஸ், பி.பி.சி இந்தியா, கார்டியன் இது மாதிரி விஷயங்களில் இருந்து கூட எங்களுக்கு ஆதரவு வந்திருக்கு.

இத சாதாரண அம்பேத்கர் பெரியார் ஸ்டடி சர்க்கிள் பிரச்சனையா பார்க்கல. இந்தியாவில இருக்கக் கூடிய எல்லா உயர்கல்வி நிலையங்கள்லயும் பிரச்சனையாத்தான் இருக்கும். பேஸ்புக்ல ஐ.ஐ.டி மும்பையில இருந்து ஷேர் பண்ணியிருந்தாங்க. சமீபத்தில காஷ்மீர்ல இருந்து ஒரு லெக்சரரா கூட்டி வந்து கூட்டம் நடத்தினாங்களாம். ஐ.ஐ.டி மும்பை நிர்வாகம், காஷ்மீர் ரொம்ப சென்சிடிவான இஷ்யூ, அதை நடத்தக் கூடாதுன்னு தடை விதிச்சிட்டாங்களாம்.

இது ரொம்பத் தவறானாது. இது இந்தியா முழுக்க எல்லா பகுதிகளிலும் நடக்குது.

அம்பேத்கர் பெரியாரில் தொடங்கி, நில அபகரிப்பு சட்டம், தொழிலாளர் சட்ட திருத்தம், காஷ்மீர் பிரச்சனை வரை அனைத்திலும் மக்களுக்கு எதிரான கருத்தை மட்டும்தான் ஐ.ஐ.டி நிர்வாகம் ஊக்குவிக்கும் என்று நாம் கூறலாமா?

அப்படித்தான், அப்படி எடுத்துக்கலாம். ஐ.ஐ.டி நிர்வாகமே நடைமுறையில் அப்படித்தான் நடக்குது. உள்ள யார் வேண்டும்னாலும் புரிஞ்சிக்கலாம். அது ரகசியம் கிடையாது. வெளிப்படையான உண்மை அது.

சென்னை ஐ.ஐ.டி APSC தடை : ஹைதராபாத்தில் மோடி படம் எரிப்பு

1

Ambedkar Periyar Study Circle (APSC) தடையை கண்டித்து ஹைதரபாத் பல்கலைக்கழகத்தில் மோடியின் உருவப்படம் எரிப்பு!

பாசிச மோடி அதிகாரத்திற்கு வந்த பிறகு முற்போக்கு இயக்கங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மிக கடுமையான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. அதேசமயத்தில், இந்துத்துவத்தை வாழ்த்தி பேசுவதற்கும் சிறுபான்மை மக்களை தாக்குவதற்கும் சங்க பரிவார இயக்கங்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். பத்திரிகைகளும் தொலைக்காட்சி செய்திகளும் மோடி அரசின் ஓர் ஆண்டு வேதனைகளை மறைத்து சாதனைகளாக பட்டியலிட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்த பாசிச அரசை தோலுரிப்பது ஜனநாயக சக்திகளின்  தலையாய கடமையாகும்.

கடந்த ஓர் ஆண்டு காலமாக கல்வித்துறையில் பல சீரழிவுகளை இந்த மோடி அரசு ஏற்படுத்தி வருகிறது.

சமஸ்கிருத வாரத்தை கொண்டாடுவதற்கு ஆணை பிறப்பித்தது, சமஸ்கிருதத்தை கட்டாயமாக புகுத்தியது, கிறிஸ்மஸ் தினத்தன்று விடுமுறையை மறுக்க வேண்டுமென்றே வாஜ்பாயி குறித்த போட்டிளை பள்ளி மாணவர்கள் மத்தியில் நடத்தியது, வரலாற்றுத் துறையில் பழம் பஞ்சாங்கங்களை கொண்டு வந்தது என பல நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவை எல்லாவற்றிலும் பார்ப்பனிய மேலாதிக்க வக்கிரமும் மறுகாலனியாக்க நடவடிக்கைகளில் இருந்து மக்களின் கவனத்தை மடைமாற்றம் செய்யும் திட்டமுமே உள்ளன.

மேல்குறிப்பிட்ட நிகழ்வுகள் அனைத்தும்  மாணவர்களை குறிவைத்து அமல்படுத்தப்பட்டன. ஆனால், பெரிதாக பேசப்படும் உயர்கல்வி நிறுவனங்களில் நிலைமை மிகக் கொடுமையாக உள்ளது. பல மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் அமைப்பே இல்லை, காரணம் பல்கலைக்கழக நிர்வாகங்கள் மாணவர் தேர்தலை பல ஆண்டுகளாக நடத்துவதே இல்லை. உதாரணமாக, ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகள் பல்கலைக்கழகத்தில் (English and Foreign Languages University—EFLU) மாணவர் அமைப்பு முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது, மாணவர் தேர்தலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படுவதில்லை.

இந்நிலையில் பல மத்திய பல்கலைக்கழகங்களில் முற்போக்கு மாணவர் அமைப்புகளுக்கு மறைமுகமாக நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய வளர்ச்சியின் ஒரு அங்கமாக கருதப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (IITs) மாணவர்கள் தம்மை முற்போக்கு வாதிகள் என்று அடையாளப்படுத்துவதற்குக் கூட இயலாதநிலை ஏற்பட்டுள்ளது.

குஜராத் உள்ளிட்ட பல IIT-களில் இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் ஆய்வு மேற்கொள்ள விரும்பும் மாணவர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக சமஸ்கிருதம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளச்சொல்லி கட்டாயப் படுத்துவது போன்ற பார்ப்பனிய இம்சை பல பேராசிரியர்கள் மத்தியில் காணப்படுகிறது. ஹிந்துத்துவம் மேலோங்கி இருக்கும் இவ்வாறான மத்திய நிறுவனங்களில் முற்போக்கு அரசியலை பேசுவதென்பதே ஒரு பெரிய போராட்டமாக உள்ளது. மேலும், அவ்வாறு மாற்று அரசியலை பேசும் மாணவர்களை திட்டமிட்டு துறைரீதியான நடவடிக்கைகளுக்கு ஆளாகுவதும் இதுபோன்ற நிறுவனங்களில் ஒரு வாடிக்கையாகவே மாறிவிட்டது.

இந்நிலையில் இந்த நிறுவனங்களில் பரவி இருக்கும் பார்ப்பனிய காவி பயங்கரவாதத்தையும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தபட்ட மாணவர்களுக்கு எதிராக இந்நிறுவனங்களில் நிலவும் சூழலையும், இந்த பாசிச அரசின் மக்களுக்கு எதிரான திட்டங்களையும் மாணவர்களின் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை ஐ.ஐ.டி.யில் உருவாக்கப்பட்ட அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை dean of students (DOS) தடை செய்திருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அதேசமயத்தில் இதுபோன்ற தடைகள் மட்டுமல்ல இம்மாதிரியான நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடமில்லை என்பதனையும் மறைமுகமாக இந்தத் தடையின் மூலமாக ஆர்.எஸ்.எஸ் காவி கும்பல் நமக்கு சொல்லியிருக்கிறது. இங்கு குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில், ஒரு சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஐ.ஐ.டி-களில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றளவிலும் பேராசிரியர்களை நியமிப்பதில் இடஒதுக்கீடு சரியாகப் பின்பற்றுவதில்லை.

முழுக்க முழுக்க ஒடுக்கப்பட்ட பிரிவினர்களுக்கு எதிராக இருக்கும் இந்த நிறுவனங்களை கண்டித்தும் கருத்து சுதந்திரத்திற்கு தடைவிதிக்க ஆணை பிறப்பித்திருக்கும் பாசிச மோடி அரசை வன்மையாக கண்டித்தும் நாடுதழுவிய அளவில் APSC வாசகர் வட்டத்திற்கு ஆதரவான போராட்டத்தை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயம்.

துணைவேந்தரின் ஊழலை விவரித்தும் கட்டமைப்பு வசதிகள் சரியில்லை என்று கூறியும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் பல பல்கலைக்கழகங்களில் இருந்து  தொடர்ந்து மாணவர்கள் அமைப்புகளின் மூலமாகவும் பேராசிரியர்களின் அமைப்புகள் மூலமாகவும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றுக்கெல்லாம் பதில்கூட கூறாத இந்த அமைச்சகம் ஒரு பெயரிடாத மொட்டைக் கடிதத்திற்கு வினையாற்றி உடனேடியாக மாணவர் அமைப்பை தடைசெய்ய கோரி மறைமுகமாக உத்திரவிட்டிருக்கிறது.

ஏன் என்றால், இந்த அமைப்பு அவர்களின் அரசின் திட்டங்களில் உள்ள வக்கிரத்தையும், பார்ப்பன காவி பயங்கரவாததையும் துண்டுபிரசுரங்கள் வாயிலாக அம்பலப்படுத்தி இருக்கிறது. பெரியார் பிறந்த மண்ணில் இந்தத் தடையை விதித்து இருக்கும் இந்துத்துவத்தின் கூடாரமான IIT சென்னையையும் காவி கும்பலின் அதிகார மையமான பாசிச மோடி அரசையும் நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்தத் தடையை எதிர்த்து ஹைதராபத்தில் உள்ள ஒஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்களும் ஆங்கிலம் மற்றும் பன்னாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழக மாணவர்களும் 30-05-2015 அன்று ஒஸ்மானிய பல்கலைக்கழக வளாகத்தில் மாலை ஐந்து மணியளவில் மோடியின் உருவப்படத்தை எரித்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

முன்னதாக “மோடி அரசு ஒழிக”, “போராடுவோம் போராடுவோம், பார்ப்பனிய அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவோம்” என்ற வாசகங்களோடு கோஷமிட்டவாறே பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் ஊர்வலம் வந்தனர். மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தையும் APSC மாணவர்களுக்கு ஆதரவையும் தெரிவித்தனர்.

apsc-solidority-protest-usmania-unversity

தகவல்:
ஆய்வு மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் பன்னாட்டு மொழிகளுக்கான பல்கலைகழகம் (EFLU) ஹைதராபாத்

அம்பேத்கர் பெரியாருக்காக மும்பை ஐ.ஐ.டி மாணவர்கள் போர்க்கோலம்

2
மும்பை ஐ.ஐ.டி முதன்மை கட்டிடம்
மும்பை ஐ.ஐ.டி முதன்மை கட்டிடம்

IITs turned out to be strongholds of superstition, conformism, prejudice & apathy; ruthless criticism of all that exists is the bitter pill that cures us.

.ஐ.டி-க்கள் மூடநம்பிக்கை, பழமைவாதம், வெறுப்பு, அலட்சியம் ஆகியவற்றின் மடமாக மாறியிருக்கின்றன. இருப்பவற்றை எல்லாம் கடும் விமர்சனத்துக்குட்படுத்துவதுதான் நம்மை குணப்படுத்த வல்ல கசப்பு மருந்து என்ற முழக்கத்துடன் மும்பை ஐ.ஐ.டி.-யில் அம்பேத்கர் – பெரியார் – பூலே வாசகர் வட்டம்   ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பித்த கையோடு இந்த மாணவர்கள் சென்னை ஐ.ஐ.டியில் தடை செய்யப்பட்ட அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்ட மாணவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர்.

இங்கே குறிப்பிடப்படும் பூலே மராட்டியத்தில் பார்ப்பனியத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களை திரட்டி போராடியவர்.

இறுதியில் இஞ்சி தின்ன ஓநாயாக பா.ஜ.க அரசின் நிலை மாறிவிட்டது. “நம்ம ஆத்துலேயே மோடிஜியை விமரிசனம் பண்றேளா, தொலைச்சுப் புடுவேன் படுவா” என்று சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்தார்கள்.

இதை நியாயப்படுத்த நிர்வாக உத்திரவு, ஒழுங்கு, நடைமுறை என்று ஃபிலிம் காட்டினார்கள். பிறகு மோடி அரசுக்கு தொடர்பு கிடையாது என்று டெக்னிக்கலாக பேசிப்பார்த்தார்கள். தமிழக தொலைக்காட்சி விவாதங்களிலோ ஆர்.எஸ்.எஸ் வானரங்கள் அம்பேத்கரை ஆதரிப்பதாக காட்டிக் கொண்டு பெரியார் மீது வன்மத்தை காட்டினார்கள்.

அதனால் என்ன?

தந்தை பெரியாரின் படங்களும் முழக்கங்களும் தற்போது இந்தியாவெங்கும் கொண்டு போகப்படுகின்றன. யாரய்யா அந்த தாடி வைத்த கிழவன், அவரைப் பாத்து மோடி ஏன் பயப்படுகிறார் என்று வட இந்திய மாணவர்கள் பெரியாரின் கைப்பிடிக்க ஓடிவருகின்றனர். மறுபுறம் அம்பேத்கரை இந்துத்துவத்திற்குள் இழுத்துப் போடும் சதியையையும் அவர்கள் முறியடித்து வருகின்றனர்.

ஆம். இன்று இந்தியாவின் அநேக ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களில் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்ட மாணவர் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. அவை குறித்த செய்திகளை விரைந்து தர முயல்கிறோம்.  இங்கே மும்பை மாநகரின் ஐ.ஐ.டி வளாகத்தின் அருகில் மாணவர்களின் முழக்கங்கள் போர்க்குணத்துடன் ஒலிக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் கையில் ஆட்சி இருக்கலாம். ஊடகங்கள் கட்டுப்படலாம். ஆனால் மக்கள்? இதோ நீங்கள் பொத்திப் பொத்தி பாதுகாத்த உயர்கல்வி நிறுவனமான ஐ.ஐ.டியிலேயே பார்ப்பன எதிர்ப்பு குரல் ஒலிக்கத் துவங்கிவிட்டது. சென்னையில் அதாவது தந்தை பெரியாரின் மண்ணான தமிழகத்தில் துவங்கிய நெருப்பு இந்தியாவெங்கும் பரவி வருகிறது.

பார்ப்பனியத்தையும், அதன் பரிவாரங்களையும் வீழ்த்தாமல் இந்த தீ ஓயாது!

IIT_B (2)

IIT_B (3)

mumbai-iit-in-solidarity-with-apsc-10
மனித வளத்துறை மற்றும் ஐ.ஐ.டி சென்னை நிர்வாகத்தின் பாசிச நடவடிக்கையை கண்டிக்கிறோம்! சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கார் – பெரியார் வாசகர் வட்டத்திற்கு தோள் கொடுப்போம்!
mumbai-iit-in-solidarity-with-apsc-9
மக்களை பிரிப்பது இந்துமதம்தான், அம்பேத்கர் அல்ல!
mumbai-iit-in-solidarity-with-apsc-8
உண்மையிலேயே இந்துமதம்தான் நிஜமான கொடூரங்களின் உறைவிடம். சாதிகள் அழிவதற்கு இம்மதம் இறந்து போக வேண்டும். – பாரதரத்னா அம்பேத்கர்
mumbai-iit-in-solidarity-with-apsc-3
துரதிஷ்டவசமான இந்தியாவில் கருத்துக்கள் சொல்வதே அரிது. சுதந்திரமான கருத்தோ இன்னும் அரிது – பி.ஆர்.அம்பேத்கர் 1940

mumbai-iit-in-solidarity-with-apsc-7  mumbai-iit-in-solidarity-with-apsc-5  mumbai-iit-in-solidarity-with-apsc-2

IIT_B (4)

IIT_B (1)

படங்கள் : அம்பேத்கர்-பெரியார்-பூலே படிப்பு வட்டம், மும்பை ஐ.ஐ.டி

உசிலம்பட்டி குடிநீர் ஊழல் – நகராட்சிக்கு எதிராக வி.வி.மு போர்

0

லஞ்ச ஊழலில் நாறிக்கிடக்குது உசிலை நகராட்சி! துணை நிற்குது போலீசு!

உசிலை குடிநீர் இணைப்பு ஊழல் எதிர்ப்பு போராட்டம்
‘தண்ணீர் இல்லாமல் உயிர்வாழ முடியாது. சட்டப்படி இணைப்பு பெறுவது குதிரை கொம்பாச்சே’

“குடிநீர் இணைப்புக்கு உசிலை நகர்மன்ற தலைவி பஞ்சம்மாளுக்கும் ஆணையர் மருதுவுக்கும் லஞ்சமாக ரூபாய் 30,000/- கொடுக்காமல், அ.தி.மு.க கவுன்சிலரே ஆனாலும் இணைப்பு கிடைக்காது” என்று புதுச்சட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறது உசிலை நகராட்சி.”புதிய குடிநீர் இணைப்புக் கட்டணம் ரூபாய் 3,500/- என்றும், பணம் செலுத்திய 7 அல்லது 10 நாட்களுக்குள் இணைப்பு வழங்க வேண்டும்” என்றும் அரசு சட்டம் உள்ளது.

புதிய குடிநீர் இணைப்பு மனு கொடுப்போரிடம் நகராட்சி அதிகாரிகள் ரூ 2,000/- பெற்றுக் கொண்டு, “சீனியாரிட்டிபடி இணைப்பு கொடுப்போம். அப்பொழுது கட்டணம் செலுத்தி இணைப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று பதில் கூறுகிறார்கள்.

இந்நிலையில் சில வார்டு கவுன்சிலர்கள் (ரூபாய் 10,000/-) பத்தாயிரம் கொடுப்பவர்களுக்கு பிட்டர் சுகுணா மூலம் இணைப்பு வழங்குகிறார்கள். ‘தண்ணீர் இல்லாமல் உயிர்வாழ முடியாது. சட்டப்படி இணைப்பு பெறுவது குதிரை கொம்பாச்சே’ என்று ரூபாய் 10,000/- கொடுத்து குடிநீர் இணைப்பு பெற்றுக் கொண்டார்கள் மக்கள்.

பொறுக்கித் தின்றே வயிறு வளர்க்கும் பஞ்சம்மாளும், ஆணையர் மருதுவும், “இது சட்டப்படி (ரூ 30,000 லஞ்சம் கொடுக்காமல்) வழங்கப்படாத இணைப்பு” என்ற அதிகாரிகளை வைத்து இணைப்பைத் துண்டித்து விட்டார்கள்.

இதைக் கண்டித்து 7-வது வார்டு விரிவாக்க பகுதி மக்களும், விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்களும் நகராட்சியை முற்றுகையிட்டனர். அதன்பின், 100-க்கும் மேற்பட்டோரிடம் ரூ 3,500/- பெற்றுக் கொண்டு இணைப்பு கொடுப்பதாக நகராட்சி நிர்வாகம் ஒத்துக் கொண்டது. மூன்று மாதங்கள் முடிந்த நிலையில் இன்னும் இணைப்பு வழங்கவில்லை.

குடிநீர் இணைப்புக்கு பணம் செலுத்தியவர்களிடம் பிட்டர் சுகுணா, “ரூ 20,000/- லஞ்சம் கொடுக்காமல் இணைப்பு கிடைக்காது” என்று மிரட்டுவதாக ஒரு புகார் மனுவும், 7-வது வார்டு விரிவாக்கப் பகுதியில் (பொது) தெருக்குழாய் அமைத்து தரக்கோரி மனுவும் கொடுத்துள்ளார் தோழர் ரவி.

மேலும், “சீனியாரிட்டி லிஸ்ட் கொடுங்கள்” என்று ஆணையாளர் மருதுவிடம் கேட்டதற்கு, “தர முடியாது, தெரிந்ததைப் பாரு” என்று ஒரு காட்டுமிராண்டி போல நடந்து கொண்டு, “என்னை பணிசெய்ய விடாமல் தடுக்கிறார், ரவி” என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் ஆணையாளர்.

அரசாணையை மதிக்காமல், லஞ்சம் கொடுப்போருக்கு மட்டும்தான் இணைப்பு கொடுக்கமுடியும் என்று அடாவடி செய்யும் ஆணையாளர் மீது வழக்கு பதிவு செய்யும்படி காவல் நிலையத்தில் புகார் செய்தார் ரவி.

“நரிக்கு நாட்டாமை கொடுத்தா கிடைக்கு நான்கு ஆடு கேட்கும்” என்பது போல டி.எஸ்.பி சரவணகுமார் தோழர் ரவி மீது மட்டும் வழக்கு பதிவு செய்தார்.

ஆணையாளர் மருதுவை கைது செய்யக் கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்ட வி.வி.மு தோழர்கள் 7 பேர் மீது கொலை செய்ய முயற்சித்ததாக கைது செய்து பொய் வழக்கும் போட்டுள்ளனர்.

சமீபகாலமாகவே சில நேர்மையான அதிகாரிகள் தமது மேல் அதிகாரிகள், அமைச்சர்கள் பெருமக்களின் மிரட்டலுக்கு பயந்து, “தம் பணியை செய்ய முடியவில்லையே! தன்மானத்தை கேலிக்கூத்தாக்குகிறார்கள்” என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வதை பார்க்கிறோம்.

பஞ்சம்மாளின் பகற்கொள்ளை ஆட்சிக்கு புரோக்கர் வேலை பார்ப்பதுதான் ஆணையாளர் மருது, சுகுணா, கதிரேசன், பிச்சைமணி ஆகியோரின் களப்பணி என்று 24 வார்டு கவுன்சிலர்களுக்கும் கடந்த நான்கு ஆண்டுகள் நகராட்சிக்கு போய் வந்த மக்களுக்கும் தெரியும், பொய் வழக்கு போட்ட போலீசுக்கும் தெரியும்.

மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து, சட்டத்தையும் அரசாணையையும் மலம் துடைக்கும் காகிதமாக பஞ்சம்மாளும், ஆணையர் மருதுவும், டி.எஸ்.பி சரவகுமாரும் துடைத்தெறியும் போது பொதுமக்களாகிய நாம் மட்டும் ஏன் சட்டத்தை மதிக்க வேண்டும்.

பஞ்சத்தில் பட்டினியில் இருந்த பஞ்சம்மாளே, பங்களா, கார் வாங்கும் போது பெரியம்மா ஜெயலலிதா பல கோடி சொத்து சேர்த்து வைத்திருப்பதில் என்ன தப்பு என்று அ.தி.மு.க தொண்டன் மட்டுமல்ல உயர்நீதிமன்ற நீதிபதியே கூறிவிட்டார்.

இந்த மக்கள் விரோத கொள்ளைக் கூட்டணி நம்மை ஆள இனியும் அனுமதிப்பது சரியா?

பொதுமக்களே!

  • இப்படி அரசியல்வாதிகளும், ஆளும் அதிகார வர்க்கமும், போலீசும், நீதிபதிகளும் மதிக்காத
  • சட்டத்தை நாம் மட்டும் ஏன் மதிக்க வேண்டும்!
  • இதற்குத் தீர்வு இந்த அரசு கட்டமைவுக்கு வெளியே உள்ளது!
  • ஆளத்தகுதி இழந்து தன் வேலையைச் செய்ய மறுத்து மக்களுக்கு எதிர்நிலை சக்தியாக மாறியுள்ள நகராட்சி நிர்வாகத்தை தூக்கி எறிவோம்!
  • அடிப்படை உரிமையை நிலைநாட்ட ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிணைவோம்

தமிழக அரசே!

  • லஞ்ச ஊழலில் கொழுத்துப் போய் ஆட்டம் போடும் பஞ்சம்மாளையும், மருதுவையும் கைது செய்!
  • ஊழலுக்குத் துணைநின்று தோழர்களை தாக்கிய டி.எஸ்.பி சரவணகுமார் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்!

உசிலை நகராட்சியே!

  • 7-வது வார்டு விரிவாக்கப் பகுதியில் தெருக்களில் பொதுக்குழாய் அமைத்திடு!
  • சீனியாரிட்டி லிஸ்டை வெளிப்படையாக தகவல் பலகையில் வைத்திடு!
  • அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்திய பொது மக்களுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்கிடு!
  • 9-வது வார்டில் கட்டியுள்ள மேல்நிலை குடிநீர்த் தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உடனே கொண்டுவா!

லஞ்ச ஊழலில் ஊறிக் கிடக்கும் உசிலை நகராட்சியையும், போலீசையும் கண்டித்து  உசிலம்பட்டியில் 21-05-2015 வியாழன் காலை 11 மணியளவில் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பின் சார்பில்

  • பச்சத்தண்ணிய பாட்டில்ல அடைச்சு 10 ரூபாய்க்கு விக்கிறா பெரியம்மா ஜெயல்லிதா
    குடிநீர் இணைப்புக்கு ரூபா 30,000 என்று ஏலம் விடுறா சின்னம்மா பஞ்சம்மா
  • கலெக்சன் பண்ணுறான் கமிசனரு
    காவல் காக்குறான் டிஎஸ்பி

என்ற முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

உசிலை வி.வி.மு துணைச்செயலாளர் தோழர் சந்திரபோஸ் தலைமை தாங்கினார். உசிலை நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்புக்கு ரூ 3,500 க்கு பதில் ரூ 30,000 லஞ்சம் வாங்கி இணைப்பு கொடுப்பதையும், இதற்கு ஆணையர் புரோக்கராக இருப்பதையும், பஞ்சம்மாள் கட்டுக்கடங்காமல் ஆட்டம் போடுவதையும் அம்பலப்படுத்தினார்.

“தெனாலிராமன் கதையில் மன்னருக்கு காலில் அடி பட்டுவிட தெனாலி, ‘மன்னா எல்லாம் நல்லதுக்குத்தான்’ என்க,

மன்ன்னோ, ‘என் காலில் அடிபட்டால் எப்படி நல்லதுக்குதான் எனச் சொல்கிறாய். தெனாலியை சிறையில் அடையுங்கள்’ என்க,

தெனாலியோ, ‘இதுவும் நல்லதுக்குதான்’ என்க,

மன்னன் ‘சரியான கிறுக்குப்பயலாய் இருப்பான் போல’ என எண்ணிக்கொண்டு வேட்டைக்குச் செல்கிறான்.

காட்டில் மனித மாமிசம் தின்னும் ஆதிவாசிகள் மன்னனை சிறை பிடித்து பலியிடப்போகும் போது அவர்கள் வழக்கப்படி காயம் உள்ள மனிதனை பலியிடக் கூடாது என மன்னனை விரட்டி விடுகின்றனர்.

மன்னன், ‘ஆஹா தெனாலி சொன்னது சரிதான்’ என தெனாலியை சிறையில் இருந்து விடுவிக்கிறான்.

தெனாலியைப்பார்த்து, ‘எனக்கு காயம் பட்டது நல்லதுக்கு, உன்னை சிறையில் அடைத்தது எப்படி நல்லதுக்கு?’ என வினவினான்.

தெனாலியோ, ‘மன்னா என்னை நீங்கள் சிறையில் தள்ளாவிட்டால் நான் உங்களோடு வேட்டைக்கு வந்த்திருப்பேன். என் உடலில் காயம் இல்லாததால் ஆதிவாசிகள் என்னை பலியிட்டு இருப்பார்கள். எனவே சிறையில் தள்ளியதும் நல்லதுக்குத்தான்’ என்பார்.

அதுபோல, பெரியம்மா ஜெயல்லிதா விடுதலையும் நல்லதுக்குத்தான், சின்னம்மா பஞ்சம்மா ஊழலும் நல்லதுக்கு தான், ஆணையாளர் மருதுவும் டிஎஸ்பி சரவணக்குமாரும் சேர்ந்து தோழர்களை சிறைக்குஅனுப்பியதும் நல்லதுக்குத்தான்.

இவையனைத்தும் மக்கள் இந்த நகராட்சி மீது, காவல்துறை, நீதித்துறை மீது வைத்திருக்கும் நம்பிக்கையை எல்லாம் உடைப்பதற்கும், இந்த அரசமைப்பு சீரழிந்துவிட்ட்து இதை தகர்த்து மக்கள் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என உணர்த்தவும் பயன்பட்டு உள்ளது” என முடித்தார்.

உசிலை குடிநீர் இணைப்பு ஊழல் எதிர்ப்பு போராட்டம்
“பெரியம்மா ஜெயல்லிதா விடுதலையும் நல்லதுக்குத்தான், சின்னம்மா பஞ்சம்மா ஊழலும் நல்லதுக்கு தான், ஆணையாளர் மருதுவும் டிஎஸ்பி சரவணக்குமாரும் சேர்ந்து தோழர்களை சிறைக்குஅனுப்பியதும் நல்லதுக்குத்தான்.”

தோழர் ரவி தனது உரையில்

“உசிலை காவல்துறையில் சட்டம் ஒழுங்கு, க்யூ ப்ராஞ்ச், க்ரைம், எஸ்.பி சி.ஐ.டி, எஸ்.பி போலீஸ் என பல பிரிவில் உள்ளவர்களும் மணல் கட்த்துபவர்கள், கஞ்சா விற்பவர்கள், பிக்பாக்கெட் திருடர்கள் போன்றவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு மிகப்பெரிய வீடுகள் கட்டி, பலஏக்கரில் பெரும் பண்ணைத்தோட்டங்கள் அமைத்து விவசாயம் செய்து வருமானத்திற்கு அதிகமாய் சொத்து வைத்துள்ளீர்கள்.

நீங்கள் ஏதோ பெரிய யோக்யவான்களைப்போல எங்களை அச்சுறுத்துவதாக எண்ணிக் கொண்டு மிக அருகில் வந்து போட்டோ வீடியோ எடுத்தவாறு உள்ளீர்கள். நாங்களும் உங்களை போட்டோ வீடியோ எடுக்கின்றோம்.

தேவைப்படும் நேரத்தில் எஸ்.பி போலீஸ் பழனியப்பனை அம்பலப்படுத்தியதைப் போல அம்பலப்படுத்துவோம்” என எச்சரித்தார்.

மேலும், பொய் வழக்கு போட்ட ஆணையாளர் மருது மற்றும் டிஎஸ்பி சரவணக்குமாரையும் கண்டித்து உரையாற்றினார்.

தோழர் தென்னரசு தனது உரையில் உசிலை நகராட்சியில் பஞ்சம்மாளின் ஊழல் வரைமுறையின்றி செல்வதை கண்டித்தார். மேலும், “நகர காவல் நிலையத்தில் எஸ்.ஐ சரவணன் காவல் நிலையத்திற்கு மக்களின் வழக்கு சார்ந்து விசாரிக்கச்சென்றால் வக்கீலோடு மட்டும் வாருங்கள் என்கிறார்.

புரட்சிகர இயக்கங்களை சேர்ந்த எங்களுக்கு சட்ட்த்தைப் பற்றியும் தெரியும். வக்கீலைத்தவிர மற்றவர்களுக்கும் சட்ட்த்தைப் பற்றிக் கேட்க உரிமை உண்டு எனவும் தெரியும்” என விளக்கினார்.

உசிலை குடிநீர் இணைப்பு ஊழல் எதிர்ப்பு போராட்டம்
“பஞ்சம்மாளின் ஊழல் வரைமுறையின்றி செல்கிறது”

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தனது சிறப்புரையில்

உசிலை குடிநீர் இணைப்பு ஊழல் எதிர்ப்பு போராட்டம்
“போலீஸ் ஸ்டேசன் வரும் மக்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்யாமல், லஞ்சம் வாங்காமல், தரக்குறைவாய் பேசாமல் நடந்துகொள்ளும்படி தனக்குகீழ் இருக்கும் காவலர்களுக்கு உத்த்ரவிடுவாரா?”

“உசிலை நகர எஸ்.ஐ சரவணன் தோழர்களிடம் ஆர்ப்பாட்ட்த்தில் டி.எஸ்.பி.யை அவன் இவன் என்று பேசாதீர்கள். சட்டப்படி நடந்து கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டாராம். சரிதான்…சபை நாகரீகம் அதுதான் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

இதே எஸ்.ஐ சரவணன் நகராட்சியில் ரூ 3,500 க்கு ரூ 30,000 கேட்கும் நகராட்சி ஆணையாளர் மற்றும் பஞ்சம்மாளிடம் போய் சட்டப்படி ரூ 3,500 க்கு இணைப்பு கொடுங்கள் என கேட்பாரா?

அரசு விதிப்படி இணைப்பு கேட்கும் மக்களை தரக்குறைவாய் பேசும் ஆணையர், பஞ்சம்மாளை மக்களிடம் மரியாதையாய் பேசுங்கள் எனச் சொல்வாரா?

நகராட்சியில் ஆணையாளருக்கும் தோழர் ரவிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு இருவரும் புகார் மனு கொடுத்தால் ஆணையர் மனுவுக்கு மட்டும் முதல்தகவலறிக்கை போட்டு உள்ளாரே டிஎஸ்பி. ஆனால் ல்லிதாகுமாரி வழக்கின் படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியும் இருவர் கொடுத்த புகார் மனுவையும் ஏற்று முதல்தகவலறிக்கை பதிவது தானே சரி. டி.எஸ்.பி.யிடம் சட்டப்படி நடந்து கொள்ளச் சொல்வாரா?

போலீஸ் ஸ்டேசன் வரும் மக்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்யாமல், லஞ்சம் வாங்காமல், தரக்குறைவாய் பேசாமல் நடந்துகொள்ளும்படி தனக்குகீழ் இருக்கும் காவலர்களுக்கு உத்த்ரவிடுவாரா?

இந்த ஆர்ப்பாட்டமே போலீசையும் நகராட்சியையும் திட்டுவதற்குதான். அரசியல் சட்டப்படி இது எங்கள் உரிமை” என ஆரம்பித்து

“இந்த ஆர்ப்பட்ட்த்தில் முக்கியமாக மூவருக்கு பட்டம் வழ்ங்க வேண்டியுள்ளது.

  • தமிழ்நாட்டின் பெரிய களவாணி ஜெயல்லிதா என்றால் நகராட்சிகளில் பெரிய களவாணி பஞ்சம்மாள்,
  • நகராட்சி ஆணையாளர்களிலேயே மக்களிடம் பணம் பறித்துக் கொடுக்கும் சிறந்த அரசு புரோக்கர் ஆணையாளர் மருது,
  • காவல் துறைகளில் சிறந்த கட்டப்பஞ்சாயத்துத் தலைவர் டி.எஸ்.பி சரவணக்குமார்”

என்று பட்டங்கள் வழங்கினார்.

மேலும், “நகராட்சியில் சட்ட்த்துக்கு புறம்பாய் நடப்பவர்களை சட்டையைப் பிடித்து செருப்பால் அடியுங்கள். அதற்கு வரும் வழக்கை இலவசமாய் நாங்கள் நடத்துகிறோம்” என்றும் “காவல்துறையினர் எங்கள் தோழர்களுக்கு எதிராய் தனிப்பட்ட அக்கறை எடுத்து வேலை செய்தால் எஸ்.பி பிரேம்குமாரை சட்டையை கழ்ற்ற வைத்தது போல் உங்களையும் சட்டையை கழற்ற வைக்க வேண்டிய வேலையைச் செய்ய வேண்டிவரும்” என எச்சரித்தார்.

“இந்த அரசமைப்பே மக்களுக்கு எதிர்நிலை சக்தியாக மாறிவிட்ட்து. இதில் அவர்களே மதிக்காத சட்ட்த்தை நாம் மட்டும் ஏன் மதிக்க வேண்டும். இந்த அரசமைப்பை தகர்த்து புதிய மக்களுக்கான அரசமைப்பை நிறுவுவோம்” என கூறினார்.

தோழர் குருசாமி தனது உரையில்

உசிலை குடிநீர் இணைப்பு ஊழல் எதிர்ப்பு போராட்டம்
“உசிலம்பட்டி நகராட்சியும் காவல்துறையும் எப்படி எல்லாம் சீரழிந்து உள்ளது அதற்கு எதிராய் நாம் என்ன செய்ய வேண்டும்?”

உசிலம்பட்டி நகராட்சியும் காவல்துறையும் எப்படி எல்லாம் சீரழிந்து உள்ளது அதற்கு எதிராய் நாம் என்ன செய்ய வேண்டும் என விளக்கினார்.

காவலுக்கு நின்ற காவலர்கள் அவர்களை வசை பாடுவதை கேட்க சகியாமல் பாதி ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போயினர். உள்ளுர் க்யூ பிராஞ்ச் போலீஸ் சிங்கம் ம்ற்றும் கண்ணன் அருகில் வரவேயில்லை.

பேரையூர் க்யூ ப்ராஞ்ச் பாலமுருகனை ஆர்ப்பாட்ட்த்தின் அருகில் போட்டோ எடுக்க அனுப்பினர். அவரிடம் தோழர்கள் எஸ்.பி போலீஸ் பழனியப்பன் பிரசுரத்தைக் காட்டி, “இது போல் உங்களையும்..” என எட்டடி பின்னால் சென்றுவிட்டார்.

மக்கள் காவல்துறையை திட்டுவதை ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் பார்த்து கேட்டு ரசித்தனர்.

பு.ஜ.செய்தியாளர்கள்
உசிலம்பட்டி

ஐ.ஐ.டி டீனை கைது செய் ! பு.மா.இ.மு போராட்டம்

25

rayf iit protest (3)

rayf iit protest (1)

rayf iit protest (2)

ஐ.ஐ.டி.யை ஆக்கிரமித்துள்ள பார்ப்பன கும்பலை விரட்டியடிப்போம்! புமாஇமுவினர் போராட்டம்!

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் செயல்பட்டு கொண்டிருந்த அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்ட அமைப்பை தடை செய்து பார்ப்பனத் திமிரை வெளிப்படுத்திய ஐ.ஐ.டி நிர்வாகத்தை கண்டித்து, 30-05-2015 அன்று பல்வேறு மாணவர் அமைப்பினர் போராட்டங்கள் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதனால், ஐ.ஐ.டி வளாகத்தின் முன்பாக காலையிலிருந்தே ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஏராளமான இந்திய அளவிலான ஊடகங்களும் வந்து குவிந்திருந்தன. அந்த சாலை முழுவதுமே ஊடகங்களாலும், காவல்துறையாலும் நிரம்பி வழிந்தது.

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

மாணவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுப்பதற்காக அனைத்து வாயில்களிலும் போலிசார் தடுப்புகளை அமைத்திருந்தனர்.

சுமார் பதினோரு மணி அளவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மோடி அரசிற்கு எதிராகவும், கருத்து சுதந்திரத்தை பறிக்காதே எனவும் முழக்கங்களை எழுப்பிக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். “இது வெறும் கருத்து சுதந்திர பறிப்பு மட்டுமல்ல பச்சையான பார்ப்பன பாசிச நடவடிக்கை” என்பதை அம்பலப்படுத்தியவாறு அவர்களைத் தொடர்ந்து சென்னை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் போராட்டக்களத்தில் இறங்கினர்.

இளம் சிறார்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அந்தப் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். விரைந்து செயல்பட்ட காவல்துறை, “ஊடகங்களுக்கு செய்தி சென்று சேரக்கூடாது” என்பதற்காக பேட்டியளித்துக் கொண்டிருந்த பு.மா.இ.மு மாநில அமைப்பாளர் தோழர் கணேசனின் சட்டை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றது. அதே நேரம் மற்றவர்களையும் அடித்து துன்புறுத்தி போலீசு வாகனத்தில் ஏற்ற துடித்தது. இதனால அந்த பகுதியே கலவரப்பகுதியாக மாறிப்போனது.

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாக போலீசார் குண்டுகட்டாக தூக்கி கொண்டு சென்று வாகனத்தில் ஏற்றினர். வாகனத்தில் ஏறும் வரையில் பார்ப்பன பாசிசத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய வண்ணமே இருந்தனர். அதனைத் தொடர்ந்து பு.மா.இ.மு.வின் பெண் தோழர்களை ஏற்றுவதற்காக காவல்துறையினர் முனைந்தனர். உறுதியுடன் இருந்த பெண் தோழர்களை ஏற்ற முடியாததால் போர்க்களமானது சர்தார் பட்டேல் சாலை.

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

மாணவர் அமைப்பினர் கொண்டு வந்திருந்த கொடி, தட்டிகளை கிழித்தெறிந்து அராஜகத்தை வெளிப்படுத்தியது போலீசு. இறுதி வரை வளைந்து கொடுக்காத பெண் தோழர்களை துன்புறுத்தும் பணியில் போலிசார் இறங்கினர். தடுப்பிற்காக கட்டப்பட்டிருந்த கயிறில் பெண் தோழர்களை தள்ளிவிட்டு காயப்படுத்தினர். அதையும் மீறி வீரமாக முழங்கிக் கொண்டு பார்ப்பன பாசிசத்தை அமபலப்படுத்தியவாறு பெரியாரை உயர்த்திப்பிடித்தனர் புமாஇமு தோழர்கள்.

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்பு.மா.இ.மு செய்தி தொடர்பாளர் தோழர் மருது பேசுகையில், “ஐ.ஐ.டி.யில் ஆர்.எஸ்.எஸ்-க்கு தடை இல்லை. ஆனால் பெரியார் அம்பேத்கருக்கு தடை. அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்திற்கான தடையை நீக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். மேலும், அம்பேத்கர் – பெரியார் கருத்துகளை தடை செய்து இழிவுபடுத்திய ஐ.ஐ.டி டீன் சிவக்குமார் சீனிவாசனை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்தார்.

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

“நாலு பொண்னுங்கதான் அவளுங்கல ஏத்தறுதக்குள்ள நாக்கு தள்ளிடுச்சு” என அங்கிருந்த பெண்காவலர்கள் நொந்து போயினர். கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்தனர்.
அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

அவர்களைத் தொடர்ந்து மத்திய கைலாஷ் பகுதியில் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கத்தினரும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரும் சுமார் நூறு பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சற்று நேரம் கழித்து யாரோ ஸ்பான்சர் செய்த கார்களில் கண்களில் போதையும், வெறியும் கலந்தவாறு இந்து மக்கள் கட்சி எனும் கோஷ்டியினர் வந்திறங்கினர். கையில் அம்பேத்கர் படத்தையும், திருவள்ளுவர் படத்தையும் கொண்டு வந்திருந்தனர். ‘சென்னை ஐ.ஐ.டி.க்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் அதே சமயம் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தினை தடை செய்ய வேண்டும்’ என உளறினர்.

இந்த சில்லுண்டிகளது நோக்கம் பெரியாரை ஐ.ஐ.டி வளாகத்திலிருந்து ஒழிக்க வேண்டும் என்பதே. ஏற்கனவே பெரியார் சிலைகளை சேதப்படுத்தி ஆட்டம் போட்ட இந்த சிறு வானரக் கூட்டம் இங்கும் தனது விசம வாலை ஆட்டியவாறு வந்தது. எதிர்ப்பு என்ற பெயரில் போராட்டத்தின் நியாயத்தை சாவடிக்க இந்த என்.ஜி.வோ டெக்னிக்கை இந்த கூட்டம் கையிலெடுத்தாலும், தமிழக மக்கள் செருப்படி கொடுத்து இந்த ஜந்துவை ஒழிப்பார்கள்.

இந்த ஜந்துகள் வெளியே பேசுவதை உள்ளே இருக்கும் பார்ப்பனக் கூட்டம் அமல்படுத்தியிருக்கிறது.

ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த கதையாக இன்று சென்னையில் உள்ள கல்லூரியிலேயே பெரியாருக்கு தடை விதித்துள்ளது பார்ப்பனக் கூட்டம்.

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

இனியும் இதை அனுமதித்தால் தமிழகத்தை அடுத்த குஜராத்தாக மாற்றும் காலம் வெகு தொலைவில் இருக்காது. உறங்கும் தமிழகமே விழித்தெழு என்பதனை உணர்த்துவது போல் அமைந்தன இன்றைய போராட்டங்கள்.

பு.ஜ செய்தியாளர்கள்.
சென்னை.

மேலும் புகைப்படங்கள்

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

 

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்திருவாரூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சுவரொட்டிப் பிரச்சாரம்

iit-aspc-rsyf-tvr-poster

Ambedkar – Periyar Study Circle Ban in IIT Madras – The Real Story

12

We, Ambedkar – Periyar Study Circle (APSC), an independent student body of IIT Madras (IITM) has been derecognized by the Dean of Students (DoS), on 22-05-2015 stating that we have misused the privileges given by IITM. It was later informed that the move is based on a letter from MHRD undersigned by the Under Secretary to the government of India.

Ambedkar Periyar Study Circle
Ambedkar Periyar Study Circle – to promote Ambedkar – Periyar thoughts and to initiate debates on socio-economic-political and cultural impacts

Ambedkar – Periyar Study Circle was created as an independent student body on 14th April 2014, by a group of students from IITM to promote Ambedkar – Periyar thoughts and to initiate debates on socio-economic-political and cultural impacts which affects common mass within academic fraternity. The student of IITM has a dictum of using APSC as a platform for the above mentioned issues. As IITM has a long history of being a platform for right wing groups alone to propagate their own ideology and train young minds for their intellectual wings through Vivekananda Study Circle, RSS Shakha, Hare Rama Hare Krishna, Vande matram, Dhurva etc…

With this motto, in the past one year, we organized Hall meets, Movie Screening and pamphlet distribution among students and ignited debates on issues like: Agriculture under threat – Coal bed Methane project, GM Crops – Impact on Agriculture, Factory disputes act 1947 (Amendment) and creating devastating effect on the labour conditions, Language Politics in India: past and present based on Sanskrit week celebrations, MHRD’s overt attempt to have separate vegetarian mess halls in IITs and IIMs and IITM administration’s move replacing the name board of faculties and laboratories with Sanskritized Hindi. We celebrated birthdays of Bhagat Singh and Ambedkar and organized talks on ‘Understanding Bhagat Singh’ and ‘Contemporary relevance of Dr. Ambedkar’. (For more information check our facebook page –Ambedkar periyar study circle IITmadras)

Though the platform created a space for the students of IITM to discuss and debate on issues directly affecting the peasants, labours and the common mass, APSC continuously faced threats from rightwing groups inside IITM. Even the administration tried to curtail the activities of APSC. In June 2014, the Dean of Students (DoS) Dr.M.S.Sivakumar directed us to change the name stating that the names ‘Ambedkar and Periyar’ are politically motivated and thus the study circle should be renamed with some apolitical titles without any personality’s name. APSC took a firm decision to stick with the same title. We also pointed out that activities of right wing groups under the banner of Vivekananda Study Circle. But the Dean of Students said that they have been using the name (Vivekananda) for many years and he refused to the change of name of “Vivekananda study circle”. For a second time in September 2014, he sent a mail for the same reason, through MITR (the general counseling unit for students run by IITM admin) rather than from Dean’s office stating that the name is polarising students. We clearly explained to the Dean, the motto of the study circle and relevance of Ambedkar and Periyar’s name.

Ambedkar-Periyar Study Circle
MHRD’s overt attempt to have separate vegetarian mess halls in IITs and IIMs

In this scenario, APSC celebrated Ambedkar’s birth anniversary and its first anniversary in April 2015 by organizing a talk on “contemporary relevance of Dr. Ambedkar”. Pamphlets were issued, on the basis of how communalism and corporatism are being the two sides of a single coin which is tossed by the present government against the common masses. The pamphlet contents were referred from leading magazines, newspapers and writings of Ambedkar (the copy of posters and phamphlets are attached)

After this event, the above mentioned mail from Dean came on 22nd may 2015. (The copy of mail from dean is attached), it particularly states that “because of the misuse of the privileges” given to your study circle (Ambedkar-Periyar study circle) as an independent student body, your student body is de-recognized by the institute. However it does not contain any details regarding the privileges misused by the APSC.

Based on the email, when we met Dean Students he gave a letter from MHRD with a subject matter ” Distribution of contorversial posters and phamplets in the campus and creating hatred atmosphere among the students by one of the student group namely Ambedkar Periyar” and forwarded a copy of the complaint sent by the RSS students in IIT. The anonymous complaint letter – as mentioned by the Under Secretary himself states that “APSC is trying to de-align the ST, SC students and trying to make them to protest against MHRD and Central government and trying to create hatred against honorable prime minister and Hindus”. Based on this complaint and MHRD letter, the Dean of students charge APSC that it misuses the privileges given by them and derecogonise APSC. (For the reference the MHRD letter and complaint letter are attached with the mail)

Ambedkar-Periyar Study Circle
“We are clear that we have not misuse any privileges given by the institute.”

We resent the fact that the Dean has de-recognized our study circle unilaterally without giving us a fair hearing and an opportunity to represent ourselves. In our face to face interaction with the Dean of Students, we have been told that our study circle engages in “controversial activities” and violated the code of conduct of independent student bodies. We are clear that we have not misuse any privileges given by the institute. So far our activities are engaging healthy discussions on socio-economic issues on scientific basis to promote scientific temper among students which is allowed by the Indian constitution. We have not been given a satisfactory definition of what entails “controversial”. Further, we were asked to give assurances that we shall desist from such activities in the future before the Dean (Students) can allow us to restart our activities. We have also been asked to route all our activities through the Dean’s office rather than the usual practice of routing all our discussions, plan of activities and pamphlets through our faculty adviser. This excessive scrutiny is unprecedented and does not apply to any other students’ organization. Vis-à-vis this move of DoS clearly shows, only opinions put forth by the right wing group will get the consent to see the light of the day, while the voices and opinion of democratic students like us will be curtailed hereafter.

Our discussions, meetings and pamphlets are meant to kick start a discussion within the campus among the academic fraternity. The issues that we discuss are very important and define the way we live our lives. IITM is a public funded higher education institute, whose vision and mission should abide for the upliftment of the common masses, who are the taxpayers. Instead, the move from DoS, IITM says there is no space for such opinions and discussions.

We strongly believe that what we stated in our pamphlets and content of our discussion is correct as per the Constitution. Therefore, action against the Ambedkar-Periyar Study Circle by the DoS, IITM is undemocratic and unilateral against the interest of common masses for whom the Institute itself is indebted; hence we are not accepting this decision taken by the Institute.

Voltaire told “I do not agree with what you have to say, but I’ll defend to the death your right to say it.” We need a democratic space in academic fraternity to debate on matters that affect the common masses which feed us

Mail which we sent to Dean and Director of IITM to explain our stand on recent issue

Sir,

We the students of Ambedkar-Periyar Study circle are writing you regarding our stand on the recent email that we received from the Dean of Students, de-recognized our students’ organization.

The mail from Dean of Students dated on 22/05/2015 says “because of the misuse of the privileges” given to your study circle (Ambedkar-Periyar study circle) as an independent student body, your student body is de-recognized by the institute. However it does not contain any details regarding the privileges misused by the APSC.

Ambedkar Periyar Study Circle
We resent the fact that the Dean has de-recognized our study circle unilaterally without giving us a fair hearing and an opportunity to represent ourselves.

We resent the fact that the Dean has de-recognized our study circle unilaterally without giving us a fair hearing and an opportunity to represent ourselves. In our face to face interaction with the Dean of Students, we have been told that our study circle engages in “controversial activities” and violated the code of conduct of independent student bodies. We are clear on the stand that we have not misuse any privileges given by the institute. So far our activities are engaged with the healthy discussion on socio-economic issues on scientific basis to promote the scientific temper among the student which is allowed by the Indian constitution. We have not been given a satisfactory definition of what entails “controversial”. Further, we were asked to give assurances that we shall desist from such activities in the future before the Dean (Students) can allow us to restart our activities. We have also been asked to route all our activities through the Dean’s office rather than the usual practice of routing all our discussions, plan of activities and pamphlets through our faculty adviser. This excessive scrutiny is unprecedented and does not apply to any other students’ organization. Vis-à-vis this move of DoS clearly shows, only opinions put forth by the right wing group will get the consent to see the light of the day, while the voices and opinion of the democratic students like us will be curtailed hereafter. Since DoS chaired this position, two times he warned us to change the name “Ambedkar-Periyar” stating that it is polarizing the student. This shows the aversion of DoS towards the the name “Ambedkar-Periyar.”

The Dean’s office has provided us with a copy of a letter from the MHRD dated 21/05/2015with the ref no. F. No. 5-3/2014-TS-I. The letter stated that the MHRD has received serious complaints regarding the activities of our study circle through anonymous letter. A copy of one such letter was provided. We wish to respond to the allegations in the complainant’s letter.

Ambedkar - Periyar Study Circle
“IITM itself have had many meetings that discussed the policies and legislation’s of the current and previous elected governments. “

1. It has been alleged that we have spread hatred against the Modi government and a copy of our pamphlet on the occasion of Ambedkar Jayanti was enclosed. We do not see any merit in such a statement. We stand by our opinions. Yes, we were very critical of the government. However, we do not understand how dissent and criticism of the government’s policy is akin to “spreading hatred”. If any person professing an anti-establishment view is accused of engaging in “controversial” activities and all dissent is stifled, wouldn’t that be a violation of our constitutionally guaranteed rights to freely express ourselves? We feel that a vibrant and proactive civil society is an integral part of a healthy democracy. IITM itself have had many meetings that discussed the policies and legislation’s of the current and previous elected governments. Among them the reservation policy is the one which has not been still implemented in IITM campus. Here we want to raise a rational question on IITM’s stand on the reservation policy which is still an alive Government policy even in Modi Government since Independence. When OBC reservation was announced by then Govt., whether anti-reservation student group of IITM simply sat without commending because that its ‘government’s policy’ or it fought against it on the streets of Chennai with its tooth and nail to stop that move? What was the action taken by IITM towards those who fought on streets against the Govt. Policy on Reservation? Rather, the IITM took part in negotiating a raise of 24% to safeguard the vested interested of those anti-reservation body functioning in IITM?

2. We have been accused of spreading hatred between SC-ST and the Hindus and vitiating the atmosphere of the institute. We are surprised and slightly amused. Are SC, ST not part of the so called ‘Hindus’? How MHRD and IITM is perceiving such a venomous anonymous mail with full of hatred towards the SC, ST and Ambedkar? Are we the one who polarise the students or they are the one who think IITM is their own base to propagate against the interest of SC, ST, OBC who are the majority in our Society? Rather our organization is engaged in propagating Ambedkar and Periyar thoughts, in helping depressed castes and the caste Hindus to realize the evilness of caste based discrimination taking place in modern India and expose the ideology functioning behind such discrimination. When we talk about the hierarchical caste structure existing in Indian Society, inevitably we end up in talking about the present pathetic condition of peasants and labours. There are a number of sociological studies that will bear us out when we say that caste based discrimination is still very strong in our society, that caste based associations can leave some with privileges that add up throughout their lives while those that are excluded face powerful social barriers to their attempts to improve their social and economic status. We have only been discussing these issues with an aim to make a common platform for all students inspite of their caste and creed so as to dismantle the evilness of caste barriers. However, even in 2015, our activities are seen to be too radical by the religious right. If the religious right has the right to be offended, then don’t the oppressed Dalits and Bahujans who still face powerful prejudices have a right to be offended with the state of affairs? Our pamphlets do not have any material that would surprise a sociological or political scientist. Yet, the institute has taken these complaints seriously and has chosen to derecognise our organisation. Any higher education institute should be a platform where critical thinking and dissent ought to be encouraged. Where brave new thoughts are nurtured. However, the “dangerous” ideas that we have been accused of spreading are at least a few decades old, if not a few centuries.

3. The complainant has taken exception to one of our meetings which dealt with an MHRD circular regarding vegetarian and non-vegetarian mess halls. We do not understand how anybody’s sentiments could have been hurt when the entire discussion was about the right of every individual to decide what they can eat. This meeting could be seen as trivial when compared to the meetings on much larger issues. However, the complaint against this meeting indicates how unsparing the dominant establishment has become when it comes to stifling dissent. If such a trivial freedom such as being able to eat meat in the mess halls is seen as dangerous, then the continued existence of our study group becomes all the more important.

4. Another issue that the complainant has taken exception to is a meeting that discussed language politics and the primacy given to Sanskrit and Hindi in the disbursement of central funds. We had a Linguist from HSS, IITM and a linguistic scholar from Pondicherry University who led the discussion. As rationalists, we feel that though Sanskrit has a valued place as part of culture and history of certain sections of our society, it is also an instrument of spreading a Brahminical, dominant narrative. Imposition of Sanskrit in school has less to do with teaching a language and more to do with the ideology behind teaching the language. We stand by our opinions and wish to assert our rights to profess our opinions freely.

5. Finally, we have been accused of getting funds from the outside organization. This allegation is completely baseless and absurd. So far for all the programs the financial support had been taken from the study circle members’ own pockets and collected in paisas from IITM students at their doorsteps which was witnessed even by those who wrote the above said ‘anonymous pettition’. Why we had to collect in paisas from the students to conduct our events through a platform like APSC is because IITM rejected many of our moves to bring personalities like Prof. Chaman Lal through EML. Since its birth, EML is been the monopoly of religious right wing to propagate their metaphysical idealist ideology and is a platform for corporate think tanks in the scientific and academic fraternity. When the taxpayers money is been spend for propogating anti-people, anti-rational agenda, pro –people, rational groups like APSC have to collect money from the students to conduct its events. We are maintaining proper account for all our expenditures.

Our discussions, meetings and pamphlets are meant to kick start a discussion within the campus among the academic fraternity. The issues that we discuss are very important and define the way we live our lives. IITM is a public funded higher education institute, whose vision and mission should abide for the upliftment of the common mass, who are the taxpayers. Rather, the move from DoS, IITM says there is no space for such opinions and discussions. We would also like to know what exactly constitutes the “misuse of privileges” and how the specific issues raised in the complainant’s letter could be deemed controversial? The right of function of any independent student body is not the ‘privilege’ given by the authority, rather it’s the democratic right of student themselves.

We strongly believe that what we stated in our pamphlets and content of our discussion is correct and as per the Constitution. Therefore, action against the Ambedkar-Periyar Study Circle by the DoS, IITM is undemocratic and unilateral against the interest of common mass for whom the Institute itself is indebted; hence we are not accepting this decision taken by the Institute.

Dean of students mail to us

———- Forwarded message ———-
From: “Dean Students” <dost@iitm.ac.in>
Date: 22 May 2015 16:07
Subject: Your study circle is now de-recognized because of violation of code of conduct

This is to inform you that because of the misuse of the privileges given to your study circle (Ambedkar-Periyar study circle) as an independent student body, your student body is de-recognized by the institute.
You are welcome to come and explain your stand and actions.

Thanks,

anbudan,
Siva

SIVAKUMAR M. SRINIVASAN

“on a mission to nurture the students of today to be change leaders of tomorrow”

PROFESSOR             |   DEAN (STUDENTS)  |  Coordinator
Dept. of App. Mech.   |   044 2257 8050            |  Structures Panel, AR&DB
(91) 044 2257 4061   |   9444008050                |   9445284085
mssiva@iitm.ac.in      |   dost@iitm.ac.in           |   ardb.sp.coordinator@gmail.com

I. I. T. Madras, Chennai 600 036. INDIA

Attachments
1. Letter sent by MHRD

iit-ban-letter-s42. Anonymous complaint sent by IIT Madras RSS students

iit-ban-letter-s2
3. pamphlet issue by us in which the so called controversial words were underlined by MHRD

iit-ban-letter-s34. The clear content of the pamphlet

“CASTE” is a word which has no significance for most of the urban elites in current times. The statement, “I don’t think caste and caste oppression exist today” is popular among academic fraternity. Contrary to this, according to a recent survey, 21% upper caste population occupy the 75% of power and influential positions in government and private sectors in UP. Similar scenario exists in other states and even in central government organizations. On the other hand, all lower grade and manual jobs are exclusively reserved (i.e 100% reservation) for Dalits permanently! Though several ‘reformers’ have fought and are fighting against this rotten stinkard caste system, a scientific and scholarly approach towards caste was initially taken, and its sole authority of brahmanical hegemony was rigorously exposed by Dr. B. R. Ambedkar.

Caste in contemporary times has become a political tool for the ruling class to severe its social oppression over Dalits and also for economically exploiting the working classes. The Modi government, while carrying forward its Hindutva agenda, it is simultaneously assisting the multinational corporates to loot mother India. While implementing pro-corporate moves like Land Acquisition Bill, Insurance Bill, Labour laws, corporate favor budget, 100% FDI in PSUs etc and paving way for the corporate to loot the livelihood of the children of India, it is communally polarising the common people by the ban on cow slaughtering, gar vapsi program and promoting Vedas etc.. In the name of ‘Swadesi’ they are selling mother India and dividing her children in the name of communalism. As part of this, now they are revisionising Ambedkar and projecting him as an icon for their vote politics. Ambedkar proposed to annihilate the caste by destroying Hinduism. He says, “You must destroy the Religion of the Shrutis and the Smritis. Nothing else will avail”. “Hinduism is a veritable chamber of horrors and it must die for caste to vanish”. But in the contemporary days, when caste is supporting the economic exploitation, it can only be annihilated by taking forward struggle against caste simultaneously with the struggle against recolonization.

5. Initial approval letter from Dean of Students

iit-ban-letter-s1Regards

APSC Team
Facebook Page