Monday, June 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 611

புரட்சிக்கு ஏங்கும் காலம் – நூல் அறிமுகம்

1

புரட்சிக்கு ஏங்கும் காலம் – தோழர். துரை.சண்முகத்தின் கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்

விதைக்கு பொய்யழகு என்ற தமிழ் கவிதை மரபினை உடைத்து அதன் மெய்யான அழகை பாட்டாளி வர்க்கத்தின் பார்வையில் பதிவு செய்திருக்கிறார் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழர் துரை.சண்முகம். ஆனால் 2011 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தும் இவர் எடுத்தாண்ட சமூக பிரச்சினைகளை ஒரு பிரச்சினையாக கருதாத வாசகர்களிடம் ஒருவித குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதில் இக்கவிதைகள் முன்னிற்கின்றன. கீழைக்காற்று வெளியீடாக வந்துள்ள 72 பக்கத்தில் விரியும் இக்கவிதைத் தொகுப்பின் விலை ரூ.40.

புரட்சிக்கு ஏங்கும் காலம்மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து சென்னை வரையிலான பேருந்து பயணத்தினைக் கூட பொதுவான நபர்கள் கவனிக்கத் தவறும் ஓட்டுநர்களின் உழைப்பினை, பொறுப்பினை எடுத்துச் சொல்லும் கவிதையாக உள்ளீடு செய்கிறார் கவிஞர். அந்த உழைப்பை உதாசீனம் செய்யும் பயணிகளின் சொற்களோடு கவிதை முடிகிறது. இக்கவிதையை புதிய கலாச்சாரம் இதழின் அட்டையில் படித்தவர்களுக்கு இது புதிதாக இல்லாவிட்டாலும் பல கவிதைகளில் இந்த வடிவம் இருப்பதை தொகுப்பில் தான் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த முரண்பாட்டை கவிதை சுட்டிக்காட்டுவதால் ஏற்படும் குற்ற உணர்ச்சி கவிதையை மீண்டும் முதலில் இருந்து படிக்க சொல்கிறது. அதன்பிறகு வாசகர்களிடம் ஒரு சுய விமர்சனத்தை அது கோரி நிற்கிறது.

அழிபடல் சரியோ அண்ணாச்சி கடைகள் என்ற கவிதை சிறுவணிகர்களது வாழ்க்கையை கெடுக்க வரும் வால்மார்ட் போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு எதிராக அவர்களை பாதுகாக்க எல்லோருக்கும் அறைகூவல் விடுக்கிறது. உணர்ச்சி அம்சம் பொதுவான சமூக, அரசியல் கவிதைகளில் இருக்காது என்று சொல்பவர்களை தட்டி எழுப்பியபடியே செவுளில் அறைந்து அக்கருத்தை மாற்றச் சொல்கிறது கவிதையின் வடிவம். வாசகன் இதயத்தை விற்க சம்மாதிக்காதவனா என்று அவர்களிடம் ஒரு சுயபரிசோதனையை கோரி நிற்கிறது கவிதை.

ஆதலினால் காதல் செய் என்ற கவிதை தருமபுரி இளவரசன்-திவ்யா காதல் திருமணத்தை தொடர்ந்து ஆதிக்க சாதி வெறியர்கள் நான்கு தாழ்த்தப்பட்டோருக்கான கிராமங்களை சூறையாடிய போது எழுதப்பட்டது. “சைவப்பிள்ளையும், புதிரை வண்ணாரும் இணைந்தால் கீரிப்பிள்ளையா பிறந்து விடும்” என்ற எளிய படிமங்களை காடசிப்படுத்தி செல்லும் கவிதை எளிய மொழியில் இருப்பதும் வாசகர்களை சென்றடையவும், படித்த திருப்தியை அளிக்கவும் முக்கிய காரணமாக இருக்கிறது.

ஆணாதிக்கத்தை, பாலியல் வக்கிரத்தை தோலுரிக்கும் கவிதைகள், தனியார் கல்வியின் வியாபார புத்தியை சுட்டிக் காட்டும் மெட்ரிக் பள்ளிப் பக்கம் மேயப் போவதில்லை என்ற நாமக்கல் கோழிப் பள்ளிக்கெதிரான கவிதை, நரகாசுரன் பற்றிய தீபாவளிக் கவிதை, சச்சின் பற்றிய விமர்சன தொடுப்போடு வந்த கவிதை என எல்லா கவிதைகளுமே ஒரு புதிய பாட்டாளி வர்க்க பார்வையில் தனியாக மிளிர்ந்து நிற்கின்றன.

நடந்து முடிந்த நாடாளுமற்ற தேர்தலுக்கு காவிக் கும்பலும், சாதிக்கணக்குகளும் இணைவதை எள்ளி நகையாடும் தேர்தல் குறவஞ்சி, அரி பரந்தாமனின் வேட்டிக்காக தமிழகமே சட்டசபையின் 110 விதியின் கீழ் புரட்சித் தலைவியின் கீழ் ஒன்றுபட்டதை ஆதிக்க சாதிகள் எப்படி பார்க்கின்றன என்பதை விளக்கும் கவிதை என தோழரின் கவிதைகள் புதிய பரிமாணத்தில் மிளிர்கின்றன. கவிதை நீளமாக இருந்தாலும் வாசகனை அலுப்பு தட்டாத விதமாக அழைத்துச் செல்கின்றன அவர் எடுத்தாளும் பிரச்சினைகள்.

இந்தித் திணிப்பிற்கெதிராகவும், கோயம்பேட்டில் கருவாடு விற்க கூடாது என்ற மவுண்ட் ரோடு மகா விஷணுவின் நடவடிக்கைக்கு எதிராகவும் உள்ள கவிதைகள் பார்ப்பன பாசிசத்திற்கெதிரான நல்ல படைப்பு என எல்லோரும் ஒத்துக் கொள்வார்கள்.

புரட்சித்தலைவிக்கு தண்டனை என்றவுடன் எல்லோரையும் தங்களது துக்கத்தில் பங்குபெற சொன்ன ரத்த்தின் ரத்தங்களது கோரிக்கையை எள்ளி நகையாடுதல், தேர்தல் புறக்கணிப்பு என சமகால வெளியில் செல்லும் பயணிக்கும் கவிதைகளை அரசியல் முன்னணியாளராக தம்மை வடிவமைத்துக் கொள்ள நினைக்கும் இலக்கிய வாசகர்கள் அவசியம் படித்தாக வேண்டியிருக்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிவந்த சமுக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை கவிஞர் பாட்டாளி வர்க்க பார்வையில் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். அந்த வகையில் கட்டாயம் கவிதைக்கு மெய்யழகுதான் இருக்கிறது. அதனை தரிசிக்க வாசகர்களை அழைக்கிறது புத்தகம் – அதாவது “புரட்சிக்கு ஏங்கும் காலம்“.

புரட்சிக்கு ஏங்கும் காலம்

துரை சண்முகம்

வெளியீடு : கீழைக்காற்று

விலை : ரூ 40
பக்கங்கள் : 72

புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367

எண்: 80-81 (முதல் நுழைவாயில்)

38-வது சென்னை புத்தகக்காட்சி
சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி,
நந்தனம், சென்னை – 35

நாள் : சனவரி 9 – 21 (9 – 1 – 2015  முதல் 21 – 1 – 2015 வரை)

நேரம்:
வேலைநாட்கள் : மதியம் 2 – இரவு 9 – மணி வரை
விடுமுறைநாட்கள் : காலை 11 – இரவு 9 – மணி வரை

கொரிய நிறுவனத்தின் அடிமைகளாக தொழிலாளிகள் – நேரடி ரிப்போர்ட்

5

“அண்ணா என்ன போட்டோ எடுக்காதண்ணா. குடும்பம், கொழந்த இருக்குது. இப்பவே ‘கம்பெனி கேன் தண்ணியா குடிச்சி கம்பெனிய லாஸ் பண்ணிட்டோம், ஒண்ணுக்கு வருதுன்னு பாத்ரூம் அடிக்கடி போயி, உற்பத்திய குறைச்சிட்டோம்’னு கொரியாக்காரன் எங்கள இழுத்துப் போட்டு உதைக்கிறான். நியாயம் கேட்டா, போலீசு எங்கள கைது பண்ணி சிறையில தள்ளுது. வேலையும் இல்லாம இப்ப கேசு, வாய்தானு நிம்மதியில்லாம கோர்ட்டுக்கு அலையிறோம்”

என்று ஸ்ரீபெரும்புதூர் கோர்ட் மர நிழலில் சக தொழிலாளர்களுடன் ஒன்று கலந்தார் என்.வி.எச் பெண் தொழிலாளர் அஸ்வினி. அங்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி என தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்து வேலைசெய்யும் தொழிலாளர்கள் பலர் காத்திருந்தனர்.

என்.வி.எச் தொழிலாளர்கள்
மறுகாலனியாக்க அடிமைகளாக நடத்தப்படும் தொழிலாளர்கள்

சென்னை – ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பேட்டை சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 1400 ஏக்கரில் விரிந்திருக்கும் தெற்கு ஆசியாவின் மிகப் பெரும் ‘ஆட்டோ மொபைல்’ உற்பத்தி மையம்.

ஹூண்டாய், ஃபோர்டு, நிஸ்ஸான் என்று நூற்றுக்கணக்கான ஏக்கரில் எழுந்துள்ள இந்த தொழிற்பேட்டையில் உதிரிபாகங்கள் சப்ளை செய்யும் பல நூறு கம்பெனிகள் அமைந்துள்ளன. அவற்றில் பல வெளிநாட்டு கம்பெனிகளே. அதில் ஒன்றுதான் என்.வி.எச் இந்தியா என்ற கொரிய நிறுவனம். ஹூண்டாய் பன்னாட்டு நிறுவனத்துக்கான சப்ளையர் நிறுவனம். நோக்கியா, ஃபாக்ஸ்கான் வரிசையில் தற்போது 120-க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களை, போலீசு துணையுடன் தொழிற்சாலைக்குள்ளேயே அடித்து சிறையில் தள்ளியுள்ளது.

அப்படி,தொழிலாளிகள் செய்த குற்றம்தான் என்ன?

காஞ்சிபுரத்தை அடுத்த அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்த பெண் தொழிலாளி அருள்மொழி

“என் அப்பா கைத்தறி நெசவுத் தொழிலாளி. இதய நோயாளி. கஷ்டப்பட்டு என்னை +2 வரை படிக்க வைத்தார். 2007-ம் ஆண்டு ரூ 2700 சம்பளத்திற்கு இங்கு வேலையில் சேர்ந்தேன். என் சம்பளத்தில் வைத்தியம் கூட பார்த்துக் கொள்ளாமல் 4 ஆண்டுகள் என் சம்பாத்யத்தை சேமித்துதான் எனக்குத் திருமணம் செய்து வைத்தார்.

இக்கம்பெனியில் நாள் முழுக்க நான் பிளேடு பிடிச்சுதான் வேலை செய்யணும். கொஞ்சம் பிசகினாலும் கை பாதி போய்டும். பாதுகாப்புக்கு கொடுக்கும் துணி கையுறையைக் கூட கம்பெனில புதுசா தரதில்லை. மத்தவங்க போட்டதைத்தான் கொடுப்பாங்க. கேட்டா துவைச்சுதான் தர்றோம்னு கத்துவாங்க. பல பேரு வேர்வை பட்டதால கையில புண்ணு வரும். அதச் சொன்னா எதிரி மாதிரி பாப்பாங்க.

ஆலை முழுக்க 50-க்கும் மேற்பட்ட சிசிடி காமிரா மூலம் கண்காணிப்பாங்க, அவசரமா பாத்ரூம் போனா, அடிக்கடி பாத்ரூம் போயி என்ன பண்றனு அசிங்கமா கேட்டு கதவைத் தட்டுவாங்க. எம்.டி.யே இப்படி பலமுறை தட்டியிருக்காரு. எங்களுக்கு அழுகையா வரும். தண்ணி குடிக்க போனா, அசிங்கமா பேசுவாங்க இவ்வளவு நேரம் என்ன பண்னிணன்னு மத்தவங்க சிரிக்கிறா மாதிரி டபுள் மீனிங்கில் அடியாளுங்க கேட்பாங்க. காண்டிராக்ட் தொழிலாளிங்க நெலம இன்னும் மோசம். பெண்ணுனுக்கூட பாக்காம பாத்ரூம்ல இருந்து இழுத்துக்குனு போய் கேட்டாண்ட நிக்க வச்சிருவாங்க. அதப் பாத்து நாங்க பயப்படணும்னு சொல்வாங்க..

இவ்வளவு கஷ்டத்த பொறுத்துக்கினு இருக்கிறதுக்கு காரணம் எங்க குடும்ப நெலமதான். கடந்த ஆறு மாதமா கம்பெனில வேலை செய்றது சித்திரவதையா இருக்குது. 8 மணி நேர வேலைய 9 மணி நேரமாக்கிட்டாங்க, ஒரு மணி நேரத்துக்கு 40 பீசுக்கு பதிலா 80 பீசு புரடக்சன் தரணும்னு மிரட்டுறாங்க. காண்டிராக்டு தொழிலாளிங்க பயந்து போய் செய்றாங்க. இதப் பொறுக்க முடியாமத்தான் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம். இப்ப நிர்வாகத்து இடத்துல போலீசு. கைது, கேசு, கோர்ட்னு வதைக்குது. எஙக கஷ்டத்த யார்கிட்ட நாங்க சொல்றதுனே தெரியல”

என்றார் துயரத்துடன்.

nvh-company

1984-ம் ஆண்டு கொரியாவில் ஆரம்பிக்கப்பட்ட என்.வி.எச் நிறுவனம், சீனாவில் இரண்டு கிளைகள், ரசியாவில் ஒரு கிளையுடன் செயல்பட்டு வருகிறது 2007-ல் இந்தியாவில் கால் வைத்த இந்நிறுவனம் கார் உதிரி பாகங்கள் தயாரிப்பில் பிரதான பங்கு வகிக்கிறது. கார் எஞ்சினில் உருவாகும் வெப்பம், அதிக ஒலி, அதிர்வுகளை குறைக்கும் காரின் உட்புறத்தை சொகுசாக்கும் ஃபோம் மற்றும் பிளாஸ்டிக் மோல்டிங்கிலான பாகங்களை தயாரிக்கிறது.

ஆரம்பிக்கப்பட்ட முதல் 4 ஆண்டுகளிலேயே அதன் ஆண்டு வணிகம் 3 கோடி டாலரிலிருந்து 30 கோடி டாலராக உயர்ந்தது. இப்போது சென்னை-ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் 66 உதிரி பாகங்களை தயாரிக்கும் இந்நிறுவனம் “‘ஃபோம்’ உற்பத்தியில் கிடைக்கும் இலாபத்தை மட்டும்தான் நிர்வாகத்தை இயக்க ஒதுக்குகிறது. மற்ற 65 உதிரி பாகங்களின் இலாபத்தையும் இங்கிருந்து அள்ளிச் செல்கிறது என்று எங்களை மிரட்டும்போது திமிராக சொல்கிறது, நிர்வாகம்” என்கின்றனர், தொழிலாளிகள்.

என்.வி.எச் நிறுவன தலைமை அடியாளாக வேலை செய்யும் லியோ தவமணி பாண்டியன், இவரது கைத்தடிகளாக இருக்கும் பாரி, செல்வம் ஆகியோர், இவர்களுக்கு கீழ் ஒரு அல்லக்கை ஐந்தாம் படை மாஃபியா கும்பல் நிர்வாகம் என்ற பெயரில் தொழிலாளர்களை கடித்துக் குதறுகிறது.

“நீங்கள் வீடியோவில் காணும் கொலைவெறி, கொடுமைகளில் ஒரு துளிதான்” என்கிறார், தொழிலாளி யோகா நந்தன்.

https://www.youtube.com/watch?v=Lhog6dSIT-E

https://www.youtube.com/watch?v=Ro-R0FbxLcY

https://www.youtube.com/watch?v=_1EhFLPrWFc

“கடந்த கோடைக் காலத்தில் ஜூன் மாதம் நடத்த அட்டூழியம் குரூரத்தின் உச்சம். சராசரியாக ஒரு ஷிப்டுக்கு 100 கேன் தண்ணீர் செலவாகும். ஜூன் மாதம் வெயில் காலம் என்பதால் தொழிலாளிகள் குடித்த நீரால் 150 கேன் செலவானது. அல்லக்கை ஐந்தாம் படையினர், தண்ணீர் குடிக்கும் தொழிலாளர்களை ‘ஈன சாதிக் காரன்க தண்ணிய கூட மாடு மாதிரி குடிக்கிறான்க’ என்று திமிராக பேசினர். கொதித்த தொழிலாளிகள் ஒன்றுபட்டு உள்ளிருப்பு போராட்டம் செய்தோம்.

தாழ்த்தப்பட்ட தொழிலாளிகளை கேவலமாக பேசும் லியோ தவமணியை கைது செய்யும்படி போலீசில் புகார் கொடுத்தோம். உடனே நிர்வாகம் போராடிய தொழிலாளிகளை வேலையில் இருந்து நீக்கியது. தொழிற்சாலையில் உற்பத்தியை தடுத்ததாக பொய்க் காரணங்களைக் கூறி ஒழுங்கு நடவடிக்கை, தற்காலிக வேலைநீக்கம் செய்த 8 தொழிலாளர்களுக்கு இதுநாள் வரையில் வேலை கொடுக்கவில்லை.

nvh-workers-2மேலும் வரும் மார்ச் மாதம் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையும் இருப்பதால் அதற்கு முன்பே நிரந்தரத் தொழிலாளர்களை மொத்தமாக வேலையிலிருந்து தூக்க நிர்வாகம் முயற்சிப்பதை எதிர்த்து,

வேலைநீக்கம் செய்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டும்
தொழிலாளர்களை மரியாதையாக நடத்த வேண்டும்
பணியிடத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்

என்று கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 2.1.15 அன்று காலை 9 மணிக்கு உள்ளிருப்பு வேலைநிறுத்தம் நடத்தினோம்.

நாங்கள் போராட்டத்தை அறிவிக்கும்போதே அடியாட்கள் வைத்து அங்கிருந்த உதிரிபாகங்களை லாரியில் ஏற்றியது நிர்வாகம்.

nvh-workers-4“எங்கள் கோரிக்கைக்கு பதில் சொல்லி விட்டு நாங்கள் தயாரித்த பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்” என்று தடுத்தோம்.

‘ஈனத் தொழிலாளிகளுக்கு இவ்வளவு திமிரா’ என்று வெறியோடு பாய்ந்து அடியாள் கும்பல். தொழிலாளர்கள் சிறிதும் அஞ்சாமல் தொடர்ந்து மறிக்கவே கடைசியில் நிறுவனத்தின் எம்.டி யே அடியாள் படைக்கு தலைமை தாங்கினார். கையில் கிடைத்த தொழிலாளியைக் கீழே தள்ளி, இழுத்து, காலிடுக்கில் மிதித்து மற்றவர்களுக்கும் இதே கதிதான் என்று வெறியோடு கத்தினார். இந்தக் கொலைவெறிக்கு மிரளாமல் நடு இரவு வரை தொழிற்சாலைக்குள் 3 பெண் தொழிலாளர்கள் உட்பட 129 நிரந்தர தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தோம். இத்தொழிற்சாலையிலிருந்து உதிரிபாகங்கள் போவது தடைப்பட்டதால் ஹூண்டாயின் மொத்த உற்பத்தியும் முடங்கும் நிலைக்கு சென்றது”

என்றார்.

நாம், அவரது பேச்சை இடைமறித்து, “எப்படி, உங்களைப் போன்ற சிறிய நிறுவனத்தின் உதிரிபாகம் இல்லாததால் ஹூண்டாய் முடங்கிப்போகும்? விளக்கமாக சொல்லுங்கள்” என்று கேட்டோம்.

இதை sequence parts production என்று அழைப்போம். தாய் நிறுவனமான ஹூண்டாயில் அடுத்த ஒவ்வொரு மணி நேரம் எந்தெந்த மாடலில் எந்தெந்த பாகங்கள் இணைக்கப்படும் என்று வேலை அறிக்கை, எங்கள் கம்பெனியின் production departmentக்கு வந்து சேரும். அதனடிப்படையில் நாங்கள் தயாரிக்கும் 66 பாகங்களையும் முறைப்படி அனுப்பிக் கொண்டே இருப்போம். இம்மாதிரி சுமார் 120 சப்ளை நிறுவனங்களும் இயங்கும். பெரிய பிசாசு வாயில் விழப் போகும் பொருட்கள் கன்வேயர் பெல்ட்டில், பாதி வழியில் நின்று விட்டால் என்ன ஆகும். அப்பொருளுக்கு மேல் உட்காரும் அடுத்தடுத்த பாகங்கள் பல்வேறு இடத்திலிருந்து வந்தாலும் வீணாகத்தான் கிடக்கும், உற்பத்தி முடங்கும்”

என்றார்.

nvh-workers-3இந்த இயக்கம் துல்லியமாக நடைபெறும் ஒவ்வொரு கணமும் முதலாளிக்கு கொள்ளை இலாபம். இயங்கும் பல்வேறு பற்களில் ஒன்று நின்றாலும் முதலாளிக்கு பட்டை நாமம். இதைத்தான் வேறு வார்த்தையில் ‘ஜிட்’ (JIT – just in time) என்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு முன் தேவையான பொருட்களைக் கூட இருப்பு வைத்துக் கொள்வதை வீண் வேலையாகவும், இலாப இழப்பாகவும் கருதுகின்றன, ஏகாதிபத்திய நிறுவனங்கள். காரணம், தேவையற்ற லோடிங், அன்லோடிங், குடோன் கட்டுமானம் பராமரிப்புச் செலவுகளை குறைக்கும் cost cutting என்ற விதியின் கீழ் இலாபத்தைத்தவிர முதலாளித்துவத்திற்கு மற்ற இயக்கம் எல்லாம் வீண்!

அதன்படி, “நள்ளிரவு 12 மணியிலிருந்து, போலீசு உயரதிகாரிகள் எங்களை ஆலையிலிருந்து வெளியேற்ற முயற்சித்தார்கள். பெண்கள் உட்பட நாங்கள் அனைவரும் போலீசின் மிரட்டலுக்கு பணிய மறுத்தோம். எங்களைத் தாக்கிய எம்.டி பகிரங்க மன்னிப்பு கேட்காதவரை நாங்கள் நகர மாட்டோம் என்றோம். பின்னிரவு 2 மணிக்கு போலீசு எங்களை வலுக்கட்டாயமாக இழுத்து 3 கம்பெனி வண்டிகளில் ஏற்றி தனியார் திருமண மண்டபங்களில் அடைத்தனர். திடீரென 1 வண்டியில் வந்த எங்கள் தொழிலாளர்களைக் காணவில்லை. மறுநாள்தான் எங்களுக்கு உண்மை தெரிந்தது. நிறுவனத்தின் உள்ளே நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதாகவும், ஹூண்டாய் நிறுவனத்திற்கு சென்ற உதிரிபாகங்களை தடுத்து உற்பத்தியை குலைத்ததாகவும் பொய்வழக்கு போட்டு வேலூர் சிறையில் அடைத்தனர். அத்தொழிலாளர்களை பிணையில் எடுப்பதற்கு இன்று ஒட்டுமொத்தத் தொழிலாளர்களும் இங்கு கோர்ட்டுக்கு வந்துள்ளோம். ஆனால் இதுவரை ஆலையில் வைத்து காட்டுமிராண்டி போலத் தாக்கிய கொரிய எம்.டி மேல் ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை. விசாரிக்கவும் இல்லை.” என்றார் கோபமாக.

என்.வி.எச். தொழிலாளர்களுக்கு, நிசான் உதிரி பாகங்கள் தயாரிக்கும் யூனிப்பிரஸ் மற்றும் கேட்டர் பில்லர் தொழிலாளர்களும் ஆதரவு கரம் நீட்டுகின்றனர். “இந்த நிலைமை எங்களுக்கும் வரக்கூடாது என்பதால் இங்கு வந்துள்ளோம். தொழிலாளிகளின் குறைகளைத் தீர்ப்பதற்கு, பேசுவதற்கு தொழிலாளர் உதவி ஆணையர் இருக்காருனு சொல்றாங்க, ஆனால் அவங்க எல்லாம் கம்பெனி கஸ்டத்த முதலாளி மாதிரியே எங்ககிட்டப் பேசறாங்க. எங்க கஸ்ட்டத்த பேசறத்துதான் யாரும் இல்ல” என்றார், வெறுப்புடன், யூனிபிரெஸ் தொழிலாளி.

இந்த வழியில், முன்னோக்கி போராடும் என்.வி.எச் தொழிலாளர்களை ‘சட்டபூர்வ’ கயிறு மாட்டி, கட்டிப்போடுகிறது, யு.எல்.எஃப் என்னும் ‘அரசியல்’சாரா தொழிற்சங்க அமைப்பு. அதன் இரண்டாம் மட்ட தலைவர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர் கா. மாரியப்பன் மற்றும் வி. லஷ்மணன்.

“தொழிலாளர்களுக்கு தலைமை தாங்கும் தங்கள் சங்கம் வன்முறை நாடாமல், அரசியல் சாராமல், வேகமாக வளர்கிறது. மிகப்பெரும் நிறுவனங்கள் அச்சப்படும் அளவு எங்கள் தலைவரும் சீனியர் லாயருமான பிரகாஷ் சட்டரீதியாகவே அனைத்து பிரச்சினைகளிலும் வெற்றி காண்கிறார். அதே நேரத்தில் தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்பனையும் கறாராகக் கூறுகிறார். நிர்வாகம், சட்ட விரோதமாக நடந்தாலும் தொழிலாளர்கள் அமைதி காக்க வேண்டும். சங்கத்தை அணுகி, சட்டவல்லுநர்களின் ஆலோசனைப்பெற்று அதன்படிதான் செயல்படவேண்டும், அப்போதுதான் தொழிலாளி வெல்ல முடியும். இப்படித்தான் வெற்றிமேல் வெற்றி பெற்று, ஓசூர், பெங்களூர், பாண்டிச்சேரி என பல இடங்களில் வளர்ந்து வருகிறோம்” என்று தாங்கள் வளர்ந்த ரகசியத்தை சொன்னார்கள்.

முதலாளியினுடைய அடக்குமுறைக்கு எதிராக பதிலடி கொடுக்கும் யூனியனை நிர்வாகம் விரும்புவதில்லை. முதலாளி சட்ட விரோதமாக நடந்தாலும் தொழிலாளர்கள் சட்ட பூர்வமாகத்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் முதலாளியின் விருப்பமும். அதையே யூனியனும் பேசினால், அதில் தொழிலாளர்களின் குரல் எங்கு உள்ளது? முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர் கொள்ள சட்டம், நீதிமன்றம், போலீசு என்ற திசையில் திரும்புவது எந்த பலனும் அளிக்காது என்பதை தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிர்வாக அமைப்புக்கள் அனைத்தும் தொழிலாளிகளின் அரசியல் ரீதியான ஒற்றுமைக்கு மட்டுமே பயப்படும். உலகமயமாக்கம் எனும் சுரண்டலை அரசியல் ரீதியாக புரிந்து கொண்டு, பல்வேறு துறை தொழிலாளர்கள் மட்டுமின்றி இதர பிரிவு மக்களோடும் சேர்ந்தும்தான் எதிர் கொள்ள முடியும். அதற்கா அரசியலையும் வழிமுறையையும் கொண்டிருப்பது புரட்சிக தொழிற்சங்கம் மட்டுமே.

– வினவு செய்தியாளர்கள்

To join NDLF – IT Employees Wing – பு.ஜ.தொ.மு – ஐ.டி யூனியன் விண்ணப்பம்

2
Combat IT Layoff!! Log Off Silence!! Log into NDLF!!

NDLF IT Wing - meeting

ndlf-it-wing-application-formDear IT employees,Hall meeting organized by our NDLF-IT Wing on 10th January to discuss formation of employees union in IT sector evoked massive response. Apart from the 200 odd people who attended the meeting, we continue to receive 100s of emails and phone calls from IT employees expressing willingness to join the union. For the convenience of IT employees, we provide herewith the PDF format of NDLF Admission Form

  1. Please download ndlf-it-wing-application-form, take a printout and fill in the details (except signature)
  2. Bring the following items to our office.
    1. Admission form (to be signed at the office)
    2. One passport size photograph (for Identity card)
    3. Copy of Identity card issued by the current employer (proof of employment)
  3. Submit the above documents and pay admission fee of Rs 40 (one time fee) and annual subscription for the first year Rs 60

That’s all. You will become a member of NDLF – IT Wing.

Our office address:
110/63, NSK Salai, Kodambakkam,
Chennai – 24

Office hours: 10 AM to 5 PM

For further details:
Contact 9003198576
Karpaga Vinayagam,
Organizer, NDLF IT Employees Wing
https://www.facebook.com/NDLFITEmployeesWing

ஐ.டி துறை நண்பர்களே,

NDLF IT Wing - meeting

ஐ.டி துறையில் ஊழியர் சங்கம் அமைப்பது தொடர்பாக கடந்த ஜனவரி 10-ம் தேதி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் கூட்டம் ஐ.டி ஊழியர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது. கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்ட 200-க்கும் மேற்பட்டவர்களோடு, நூற்றுக்கணக்கான பேர் மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு ஊழியர் சங்கத்தில் சேர ஆர்வம் தெரிவித்துள்ளனர்.ஐ.டி ஊழியர்களின் வசதிக்காக பு.ஜ.தொ.முவின் சேர்க்கை படிவத்தை இங்கு கொடுத்துள்ளோம்.

  1. படிவத்தை டவுன்லோட் (ndlf-it-wing-application-form) செய்து விபரங்களை நிரப்பவும் (கையொப்பத்தைத் தவிர)
  2. பின்வரும் ஆவணங்களுடன் பு.ஜ.தொ.மு அலுவலகத்துக்கு வரவும்
    1. சேர்க்கை படிவம்  (அலுவலகத்தில் கையொப்பம் இட வேண்டும்)
    2. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 1  (சங்க அடையாள அட்டைக்காக)
    3. வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கியுள்ள அடையாள அட்டையின் நகல்  (பணியிட ஆதாரம்)
  3. மேற்சொன்ன ஆவணங்களை சமர்ப்பித்து, சேர்க்கை கட்டணம் 40 மற்றும் ஆண்டு உறுப்பினர் கட்டணம் ரூ 60 (மாதம் ரூ 5) செலுத்தவும்

நீங்கள் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவின் உறுப்பினராகி விடலாம்.

அலுவலக முகவரி
110/63, என்.எஸ்.கே சாலை, கோடம்பாக்கம்,
சென்னை  – 24

வேலை நேரம் : 10 AM to 5 PM

மேலும் விபரங்கள் அறிய :

கற்பகவிநாயகம், அமைப்பாளர்
தொலைபேசி : 90031 98576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com

NDLF IT Wing - meeting

இவண்

கற்பக விநாயகம்
அமைப்பாளர், பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவு.

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா – நூல் அறிமுகம்

3

னது இந்து ராஷ்டிரக் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கு அயோத்தி பிரச்சினைக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட பிரச்சினையாக “பொது சிவில் சட்டம்” குறித்த பிரச்சினையை பாரதீய ஜனதா எழுப்புகிறது. முசுலீம்களின் நான்கு தார மணமுறை மற்றும் மணவிலக்கு முறையை மட்டும் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் ‘இந்து தனிநபர் சட்டம் ‘ ரொம்பவும் முற்போக்கானது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.

“இந்திய உண்மையான மதச்சார்பற்ற நாடென்றால் எல்லா இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டியதுதானே” என்ற பாரதீய ஜனதாவின் கேள்விக்கு, அதன் எதிர்ப்பாளர்களால் முகம் கொடுக்க முடியவில்லை. எனவே “இது முசுலீம்களுக்கு ஆதரவான போலி மதச்சார்பின்மை” என்ற பாரதீய ஜனதாவின் வாதம் பெரும்பான்மை ‘இந்து’க்களிடம் எடுபடுகிறது.

இது போலி மதச்சார்பின்மை என்ற கருத்தை இந்நூல் வேறொரு கோணத்திலிருந்து கூறுகிறது. “அரசு மற்றும் சிவில் சமூகத்தின் மீது எவ்வித அதிகாரமும் செலுத்தவியலாமல் மதத்தைத் துண்டிப்பது” என்ற மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்குப் பதிலாக, அனைத்து மதங்களையும் சமமாக நடத்துதல் என்ற மோசடியான விளக்கம் இந்திய மதச்சார்பின்மைக்குத் தரப்பட்டிருப்பதை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.

இந்திய அரசியல் சட்டத்தில் மதம், மதச்சார்பின்மை ஆகியவை தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பதுடன், மதம் – மத நம்பிக்கை குறித்து உச்சநீதி மன்றம் அளித்துள்ள விளக்கங்கள் மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்கே எதிரானவை என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறது இந்நூல்.

இந்து – முசுலீம் தனிநபர் சட்டங்கள் பற்றிய ஒப்பீட்டைப் படிக்கும் வாசகர்கள் இந்து சட்டத்தின் ‘முற்போக்கான’ தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். எதார்த்தத்தில் இல்லாத இந்து மதத்தைச் சட்டத்தின் மூலம் செயற்கையாக உருவாக்கும் முயற்சிதான் ‘இந்து தனிநபர் சட்டம்’ என்பது வரலாற்று விவரங்களுடன் தரப்பட்டுள்ளது. அரசியலிலிருந்து மதத்தைப் பிரிக்கக் கூடாது என்று வாதாடும் பாரதீய ஜனதா, குடும்பத்திலிருந்து மட்டும் மதத்தைப் பிரிக்க வேண்டும் என்று கூறும் இரட்டை வேடத்தின் நோக்கம் ஆராயப்பட்டுள்ளது. இறுதியாக, பாரதீய ஜனதாவிதற்கு எதிராகப் போலி கம்யூனிஸ்டுகள் முதல் பின் நவீனத்துவ அறிஞர்கள் வரை பல தரப்பினரும் வைக்கும் தீர்வுகளுக்கான மறுப்புரை தரப்பட்டுள்ளது. உண்மையான மதச்சார்பின்மைக்கும் மதச்சார்பற்ற சிவில் சட்டத்திற்குமான போராட்டம் மட்டுமே இந்துத்துவத்தை முறியடிக்கும் என்பதை நூல் வலியுறுத்துகிறது.

1995 –இல் ஒரு உச்சநீதி மன்றத் தீர்ப்பு உருவாக்கிய விவாதத்தையொட்டி புதிய கலாச்சாரத்தில் தோழர் சூரியன் எழுதிய தொடர் கட்டுரையை தற்போது நூல் வடிவில் தருகிறோம் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் இந்துத்துவ எதிர்ப்புப் போராட்டத்திற்கு இது பெரிதும் பயன்படும் என நம்புகிறோம்.

(நூலின் முன்னுரையிலிருந்து)

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா

பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள்
புதிய கலாச்சாரம் கட்டுரைகள்

வெளியீடு : கீழைக்காற்று

விலை : ரூ 40
பக்கங்கள் : 64

புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367

எண்: 80-81 (முதல் நுழைவாயில்)

38-வது சென்னை புத்தகக்காட்சி
சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி,
நந்தனம், சென்னை – 35

நாள் : சனவரி 9 – 21 (9 – 1 – 2015  முதல் 21 – 1 – 2015 வரை)

நேரம்:
வேலைநாட்கள் : மதியம் 2 – இரவு 9 – மணி வரை
விடுமுறைநாட்கள் : காலை 11 – இரவு 9 – மணி வரை

civil-code-1 civil-code-2

 

தடுமாற்றமும் போராட்டமும் – நூல் அறிமுகம்

0

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொருளாளராக இருந்த தோழர் சீனிவாசனின் நினைவேந்தல் நிகழ்வில் தோழர் மருதையன் ஆற்றிய உரை கீழைக்காற்று பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

ninaivu-koorthalநினைவேந்தல் கூட்டங்களில் நினைவுகூரப்படும் நபர்களைப்பற்றி புகழ்ந்து பேசுவார்கள்; அந்த நபரின் வாழ்க்கை பற்றி சில விசயங்களை தெரிந்துகொள்ளலாம்; அதைத் தவிர வேறு என்ன இருக்கமுடியும்? என்ற கேள்வி உங்களுக்கு இருப்பின் அதை இந்தப் புத்தகம் நிச்சயமாக உடைத்தெறியும்.

தோழர் சீனிவாசனின் நினைவலைகளில் ஆரம்பிக்கும் எழுத்து அதனூடாக பயணித்து வாசகனின் சமூக வாழ்க்கை குறித்த பரிசீலனையாக, விளக்கமாக, தீர்வாக பல தளங்களில் விரிந்து செல்கிறது.

சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது. புதிய சமூகத்தை படைப்பதற்கான போராட்டமும், யதார்த்த வாழ்வும் மோதிக்கொள்ளும் போது ஏற்படும் தடுமாற்றத்தை இந்நுல் விவரிக்கிறது. மனிதர்களுக்கு மட்டுமல்ல ‘தேவகுமாரனுக்கு’ இந்த தடுமாற்றம் ஏற்பட்டதை சுட்டிக் காட்டுகிறார் தோழர் மருதையன். இத்தகைய தடுமாற்றத்தை எப்படி எதிர்கொண்டு வெளிவருவது என்பதையும் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.

ஆசான்களின், தோழர்களின் தியாகங்கள் அவ்வளவு எளிமையானதா இருந்ததா? அதற்கு பின்னால் இருந்த துயரமென்ன? இதை அனுபவிக்காமல் அவர்களின் மகத்துவத்தை அறிந்ததாக சொல்லமுடியுமா? என்ற கேள்வியை எழுப்புகிறது இந்நூல். மார்க்சின் தியாக வாழ்வயும் அதன் வலியையும் மார்க்சின் வார்த்தைகளிலிருந்தே அறியத் தருகிறார் தோழர் மருதையன்.

“தோழர் போராடினார், உறுதியாக இருந்தார், மகிழ்ச்சியாக இருந்தார்” என்பதெல்லாம் நமக்கு தெரிகின்ற சொற்கள். அதற்கு பின்னால் ஒரு மனிதன் தன்னுடைய பலவீனங்களுக்கு எதிராக, தன்னுடைய குறைகளுக்கு எதிராக நடத்திய ஒரு போராட்டம் இருக்கிறது. அது அளித்த துயரம் இருக்கிறது. தோழர்களின் மேன்மைகள் எனப்படுபவையெல்லாம் தமது பலவீனங்களுக்கு எதிராக, தவறுகளுக்கு எதிராக அவர்கள் நடத்தும் தொடர்ந்த போராட்டத்தின் ஊடாகத்தான் சாதிக்கப்படுகின்றன.” சமூக மாற்றத்திற்கு உழைக்கும் அனைவருக்கும் கொண்டிருக்க வேண்டிய கண்ணோட்டம் இது.

அங்கீகாரத்திற்காக அலையும் அற்பற்களுக்கு மத்தியில் கம்யூனிஸ்டுகளோ, இல்லை சிறந்த அறிவியலாளர்களோ எப்படி சிந்திக்கிறார்கள் என்பதை சுந்தரராமசாமி எனும் இலக்கியவாதியின் கவிதையையும், ஐன்ஸ்டீன் மற்றும் மார்க்சின் கவிதைகளையும் முன்வைத்து புரியவைக்கிறது இந்நூல்.

இந்நூல் முழுக்க பல புதிய தகவல்கள் காணக்கிடைகின்றன. தோழர்களுடனான பகத்சிங்கின் விவாதம்; மெய்காப்பாளருடனான லெனினின் விவாதம்; மார்க்ஸ், லெனின், பகத்சிங், ஐன்ஸ்டீன் என பல ஆளுமைகளின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் நூலின் கண்ணோட்டத்திற்கு பலம் சேர்ப்பதோடு சுவாரஸ்யமானதாகவும், வாசகர்களுக்கு புதியதாகவும் இருக்கின்றன.

சமூக மாற்றத்தை விரும்புவர்களும், சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களும் தங்கள வாழ்வில் எதிர் கொள்ளும் தடுமாற்றங்களுக்கு எதிராக போராட கற்றுத்தரும் ஆயுதம் இந்தப் புத்தகம்.

நினைவுகூர்தல்

தடுமாற்றமும் போராட்டமும்

– மருதையன்

வெளியீடு : கீழைக்காற்று வெளியீட்டகம்
விலை : ரூ 15
பக்கங்கள் : 24

புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்

எண்: 80-81 (முதல் நுழைவாயில்)

38-வது சென்னை புத்தகக்காட்சி
சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி,
நந்தனம், சென்னை – 35

நாள் : சனவரி 9 – 21 (9 – 1 – 2015  முதல் 21 – 1 – 2015 வரை)

நேரம்:
வேலைநாட்கள் : மதியம் 2 – இரவு 9 – மணி வரை
விடுமுறைநாட்கள் : காலை 11 – இரவு 9 – மணி வரை

ninavu-koorthal-front ninaivu-koorthal-back

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367

கடலூர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரின் ஆதிக்க சாதி வெறி

5

புழு பூச்சிகள் மனிதனாக பரிணமித்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் மனிதன் நாகரீக நிலையை இன்னும் அடையவில்லை. தமிழகத்தில் ஆதிக்க சாதி வெறியின் கொடுங்கரங்கள் இன்னும் ஓய்ந்துவிடவில்லை. கடலூர் மாவட்டம் புலியூர் கிராமத்தில் 700 குடும்பங்களைக் கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வன்னிய சாதியைச் சேர்ந்த ஆதிக்க சாதிவெறியர்களுக்கு எதிராக குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் முதல் முதலாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வன்னிய சாதி அரசியல்
வன்னியர் சாதி அரசியல்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்திற்கு உட்பட்ட புலியூர் காலனியை சார்ந்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கடந்த 2/01/2015 அன்று காலை 8 மணியளவில் அரசு பேருந்தில் கல்லூரிக்கு பயணித்து கொண்டிருந்த போது தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி. வேல்முருகனின் சொந்த வகையறாக்களால் கடுமையாக தாக்கப்பட்டனர்.

‘தாழ்த்தப்பட்ட இளைஞர்கள்-மாணவர்கள் நாகரீகமான உடையணியக் கூடாது, சட்டையை அயன் பண்ணி போடக்கூடாது. காலில் ஷூ போடக் கூடாது. பேருந்துகளில் சத்தமாக பேசக்கூடாது. ஆதிக்க சாதி பெண்கள் நிற்கும் பகுதிகளில் கண்டிப்பாக நிற்கக் கூடாது’ என்பன போன்ற எழுதப்படாத சட்டங்கள் இந்த முந்திரி காட்டு கிராமங்களில் ஆதிக்க சாதியினரால் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ‘சட்டங்களை’ மீறியதற்காக பேருந்தில் இருந்த புலியூர் த.வா.கட்சி சாதி வெறியர்கள், “என்னடா பரத் தே…… பயனுகளா உங்களுக்கெல்லாம் திமிர் ஏறிப் போச்சி” என்று திட்டிக் கொண்டே யாருக்கோ போன் போட்டு, “சேரிப்பயனுங்க எங்ககிட்ட திமிறா பேசுறானுங்க உடனே கிளம்பி வாங்க” என்று அழைத்தனர். தொடர்ந்து அம்பலவாணன் பேட்டையில் மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் பேருந்தை வழி மறித்தனர். அவர்களுடன், ஏற்கனவே பேருந்திற்குள் இருந்த த.வா.கட்சியினர் 20 பேர் சேர்ந்து 5 தாழ்த்தப்பட்ட இளைஞர்களை உருட்டுக் கட்டையாலும், கற்களாலும் தாக்கினார்கள். தாழ்த்தப்பட்ட மாணவர்களின் ஷூவை பிடுங்கி அடித்தார்கள்.

தாக்கப்பட்ட மாணவர்கள் குள்ளஞ்சாவடி காவல்நிலையத்திற்கு சென்று எழுதிக் கொடுத்த புகார் மனுவை வாங்காமல்,

“நீங்கள் எல்லோரும் 108-ல கடலூர் அரசு மருத்துவமனைக்கு போங்க, நாங்கள் அங்கு வந்து விசாரித்து வழக்கு பதிவு செய்கிறோம்” என அனுப்பியது போலீசு. தலையில் அடிபட்டு ரத்தக் காயத்துடன் மயக்க நிலையில் இருந்த ஒரு மாணவரிடம் அசிங்கமாகப் பேசுதல், கொலை செய்வதாக மிரட்டுதல், கட்டையால் அடித்தல் என்ற முறையில் புகார் மனு எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டனர்.

அடிபட்ட மாணவர்கள் தலை, உடம்பு பகுதிகளில் ரத்தம் ஒழுகியவாறு 108-ல் ஏற்றப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் வந்து இறங்கினர். அதே பகுதியைச் சார்ந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் கடலூர் பகுதி தோழர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அழைத்தனர். புலியூர் தோழர்களும் கடலூர் பகுதி பு.மா.இ.மு செயலாளர் கருணாமூர்த்தியும், தோழர்களும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட இணைச் செயலர் செந்தில் குமார் உடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர்களுடன் வந்திருந்த உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்தவர்களிடம் ,

“ஆதிக்க சாதியினரோடு போலீசு சேர்ந்துகொண்டு தலித் இளைஞர்கள் மீது சுமார் 30-க்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளது. அவற்றைத் திரும்ப பெற வேண்டும். தாக்குதல் நடத்திய த.வா கட்சியை சார்ந்த குண்டர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து புகார் கொடுக்கலாம்” என்று கோரப்பட்டது.

சிறிது நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் தாமரைசெல்வன் காரில் வந்து இறங்கி பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு, அங்கு கூடி இருந்தவர்களையும் பாதிக்கப்பட்ட மாணவர்களையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு, “இன்று வெள்ளிக்கிழமை. திங்கள்கிழமை நாம்  எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். அனைவரும் இப்போதைக்கு கலைந்து செல்லலாம்” என்று கூறினார். நடந்த சம்பவத்தையும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் புகைப் படத்தையும் பேஸ்புக்கில் போட்டு விட்டுக் கிளம்பிவிட்டார்.

பு.மா.இ.மு தோழர்கள் உறவினர்கள் மற்றும் வி.சி கட்சியை சார்ந்தவர்கள், புலியூர்காரர்களை மருத்துவமனையிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை அறிவிக்கப்படாத பேரணியாக, பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும்படி அழைத்துச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரும், தோழர்களும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து  புகார் மனுவை கொடுத்தனர். அவர் “கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கிறோம்” என்று கூறினார். ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் சடங்கு அளவிற்குக்கூட நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த இளைஞர்கள், “ஆண்டாண்டு காலமாக நாங்கள் நல்ல சட்டை போடமுடியாது தோழர். எங்கள் கருத்தை நாங்கள் சத்தமாக பேச முடியாது. வன்னியர்கள் எங்களை அடிச்சிட்டு எங்கள் மேலேயே வழக்கு போட்டுவாங்க. எங்க மேல ஆடு திருடினான், கரும்பை கொளுத்திட்டான் என்று படிச்ச பசங்க மேல போட்ட வழக்கு மட்டும் சுமார் 30 வழக்குகள் இருக்கும். ஆனால் அவங்க எவ்வளவு அடிச்சாலும் நாங்கள் நீட்டாத்தான் சட்டையைப் போடுவோம். எந்த காரணத்துக்காக அடித்தார்களோ அதற்கு எதிராக இன்று நாங்கள் எல்லோரும் அயன் பண்ண பேன்ட், சட்டையை, ஷூவையும் போட்டுக்கிட்டு வந்துள்ளோம்” என்று ஆத்திரம் பொங்க பேசினார்கள்.

4/01/15 அன்று கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டிருந்த மாணவர்களுக்கு எந்த விதமான மருத்துவமும் பார்க்காமல் 108 ஆம்புலன்சில் போட்ட இரத்தக் கட்டை பிரித்து கூட பார்க்காமல், அது எப்படி இருக்கிறது என்று தொட்டுக் கூட பார்க்காமல், “உங்க உடலுக்கு எந்த பிரச்னையும் இல்லை எல்லோரும் இப்போதே டிச்சார்ஜ் ஆகிடுங்க” என்று கூறியிருக்கிறார்கள்.

இதற்கு மாணவர்கள் “எங்களுக்கு மருத்துவம் பார்க்காமல் இப்படி வெளியேற்றுவது சரியா டாக்டர்” என கேள்வி எழுப்பியதற்கு “நான் டாக்டரா நீங்க டாக்டரா” என்று கூறி வெளியேற்ற முயற்சி செய்தனர். பு.மா.இ.மு தோழர்கள் மருத்துவமனைக்கு சென்று நிர்வாக அதிகாரியை சந்தித்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்காமல் வெளியேற்றுவது சரியில்லை என்று வாதிட்ட பிறகு மீண்டும் மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.

5/1/15 அன்று மீண்டும் போலீசின் உதவியுடன் மாணவர்களை மிரட்டி வெளியேற்ற முயற்சி செய்தார்கள். அப்போது மாணவர்கள், “எங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை, ரத்தக் கட்டுகளை பிரித்துக்கூட பார்க்கவில்லை. குள்ளன்சாவடி காவல்துறையும் இதுவரை விசாரிக்க வரவில்லை” என்று பேசியதும், “உங்க மீது வழக்கு போடுவேன்” என மிரட்டியது போலீசு.

வி.சி.கட்சியினர் பெருங்கூட்டமாக திரண்டுவந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களிடம், “எங்களை எதற்குடா கூப்பிடல. அந்த மாணவர் அமைப்புகாரனுங்க கடைசி வரைக்கும் உங்க கூட இருப்பாங்களா? நாங்க வேணுமா வேணாமா? எங்களை மீறி நீங்க என்ன செய்து விட முடியும்” என்று மிரட்டினர். “உங்களை எவன் டிஸ்சார்ஜ் பண்ணச் சொன்னான்” என்று மருத்துவமனையின் பெருக்கும் பெண்களையும், மாத்திரை மருந்து தரும் நர்சுகளையும் மிரட்டிக் கொண்டிருந்தனர்.

தோழர்கள் மருத்துவமனை நிர்வாகி சாயிலீலாவை சந்தித்து பேசுவதற்காக சென்றிருந்தபோது, “புலியூர் மாணவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை அவங்க வேண்டுமென படுத்துக்கொண்டு இருக்கானுங்க. சாதாரண காயத்தைக் காட்டிக் கொண்டு திமிராக பேசுறானுங்க” என ஒரு நர்சு அந்த அதிகாரியிடம் தவறான புகார் கூறியிருந்தார்கள்.

மருத்துவமனை நிர்வாகியிடம் தோழர்கள் “மாணவர்கள் மருத்துவமனையில் சேர்த்து நான்கு நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் 108 ஆம்புலன்சில் போட்ட கட்டை இன்றுவரை பிரித்து பார்க்கவில்லை. எக்ஸ்ரே ஸ்கேன் என எதுவும் எடுக்கவில்லை. ஒரு மாணவருக்கு இரண்டு நாட்களாக வயிற்றுப்போக்கு. மாத்திரை கேட்டுப் பார்த்து விட்டு வெளிக்கடைகளில் வாங்கி சாப்பிடுகிறார்கள். நோயாளிகளை வெளியேற்ற போலீசுக்கு மருத்துவமனையில் என்ன வேலை?” என்று கேட்டனர்.

“இவ்வளவு பிரச்சனை இருக்குன்னு தெரியாது. போலீசு உள்ளே வந்தது தப்பு. மாணவர்களை பார்க்க டாக்டரை அனுப்புறேன்” என்று கூறினார்கள்.

தோழர்கள் பேசிய விவரம் தெரியாத வி.சி. கட்சியினர் மீண்டும் கூச்சலிட்டுக் கொண்டே இருந்தனர். அப்போது ஒரு மருத்துவர் வந்து “போலீசு உள்ளே வந்தது தவறுதான். உங்களுக்கு சிகிச்சையில் சந்தேகம் இருந்தால் எக்ஸ்ரே, ஸ்கேன் எடுங்க. அதுல பிரச்சனை இருந்தா மீண்டும் மருத்துவமனையிலே இருங்க. இல்லைனா வெளியே போய்டுங்க” எனக் கேட்டதும் அதற்கு மேல் பேசத்தெரியாமல் வி.சி கட்சியினர் கையை பிசைந்து கொண்டு நின்றனர்.

உடனே தோழர்கள் குறுக்கிட்டு “சிகிச்சை பார்க்கவே இல்லை. நோயாளியின் பதிவேட்டில் அவர்களுடைய எடை, உயரம் இவையெல்லாம் தவறாக பதிவு செய்யபட்டுள்ளது. மேலும் ஆம்புலன்சில் முதல்உதவிக்காக போட்ட கட்டு இன்னும் பிரிக்காமல் இருக்கிறது” என்று விளக்கிபேசியதும் மருத்துவர் அமைதியாக மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்று விட்டார்.

போலீசு, மருத்துவமனை என்று எங்கு சென்றாலும் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களை விரட்டுவதற்கு எதிராக அவர்களை கண்டித்து ஆதிக்க சாதிவெறிக்கு பல்லக்கு தூக்கும் போலீசு என்ற தலைப்பில் போஸ்டர் போட்டு சம்பவம் நடந்த அருகாமையில் உள்ள கிராமங்களில் அம்பலப்படுத்தி ஒட்டப்பட்டது.

puliyur-caste-posterசம்பவம் நடந்த இரண்டு நாட்களில் போலீசு கைது நடவடிக்கைக்காக சென்றபோது வேல்முருகன் அண்ணன் திருமால்வளவன் கைதிகளுக்கு அடைக்கலம் கொடுததது மட்டும் இல்லாமல் “எங்க வீட்டுக்கு வந்து கைது செய்திருவீங்களா” என்று திமிராக பேசி பக்கத்தில் இருந்த கழியை எடுத்து போலீசை விரட்டி அடித்து இருக்கிறார். பின்னர்தான் கொலை மிரட்டல், தகராறு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இப்படி இந்த சம்பவத்துக்கு பக்கபலமாக த.வா.க வேல்முருகன் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

மேலும் 4/01/15 அன்று வேல்முருகன் அப்பா இறந்ததற்கு படத் திறப்பு விழாவிற்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும், ம.தி.மு.க வைகோ, சீமான் வந்தார்கள். இறந்த அன்று வந்திருந்த வி.சி.க திருமாவளவனும் படத்திறப்புக்கு வருவதாக இருந்தார். மக்கள் அவர் வந்தால் வழிமறித்து கேக்கலாம் என்று இருந்த செய்தி தெரிந்த பிறகு நிகழ்ச்சிக்கு வருவதை தவிர்த்து விட்டார். ஆனால் அந்தப் பகுதி வி.சி.கவை சேர்ந்தவர்கள் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

இப்படிப்பட்ட  வேல்முருகன்தான் தமிழர்களின் பாதுகாவலன் என்றும் திருமாவளவன் தலித்துகளின் அண்ணன் என்றும் வலம் வருகின்றனர். தலித் அமைப்புகள், 150 தமிழின அமைப்புகள், பல்வேறு தொழில் சங்கங்கள் இணைத்து கொண்டு தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருகிறார்கள். பா.ம.கவிற்கும் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது. இருவரும் தமிழினம், ஈழம் என்று ஒன்றையும் விட்டு வைக்க மாட்டார்கள். மேலோட்டமாக தலித்துக்களை ஆதரிப்பதாக கூறிக் கொண்டு அடிப்படையில் ஆதிக்க சாதிவெறியை பாதுகாப்பார்கள்.

உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடையும் இவர்களை அம்பலப்படுத்தி,

  • தலித் மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்,
  • அவர்கள் மேல் போட்டுள்ள வழ்க்குகளை வன்கொடுமை சட்டத்துக்கு மாற்ற வேண்டும்

என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட இருக்கிறோம்.

இவண்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்.

திருவண்ணாமலை பாலியல் வன்முறை – HRPC ஆர்ப்பாட்டம்

0

திருவண்ணாமலை நகரத்தில் கடந்த 29-12-2014 அன்று மாலை மணி 6.30 அளவில் டியுசன் முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை அஸ்வின், வினோத் என்ற இரண்டு பொறுக்கிகள் கத்திமுனையில் ஆட்டோவில் கடத்திசென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அம்மாணவியின் வீட்டின் அருகேயே விட்டுவிட்டு இதை வெளியில் சொன்னால் கொலைசெய்து விடுவோம் என மிரட்டிவிட்டு சென்றிருக்கின்றனர். இதைக் கண்டித்தும் இந்த கிரிமினல்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில்  13.01.2015 அன்று மாலை 6.00 மணிக்கு திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

thiruvannamalai-student-rape-5இக்கண்டன ஆர்பாட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட அமைப்பாளர் தோழர்.சரவணன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில்

“2012 -ம் ஆண்டு இறுதியில் டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற பெண் பலாத்காரம் செய்யப்பட்டு அதற்கு எதிராக நாடுமுழுக்க மக்கள் போராடிகொண்டிருந்தபோது டெல்லி பாட்டியாலா நீதி மன்றத்தில் ‘ஹோலிமேன்’ என்ற விழாவில் நீதிமன்ற வளாகத்திலேயே பெண் வழக்கறிஞர்கள் முன்னிலையிலேயே அரைகுறை ஆடைகளுடன் ஆபாச நடனத்தை நடத்தி கொண்டிருந்தவர்கள் தான் நீதிபதிகள். திண்டுக்கல் ரீட்டா, சிவகாசி ஜெயலட்சுமி ஆகியோர் உட்பட பல பெண்கள் போலிசாரால் வன்புணர்ச்சி செய்யப்பட்டுள்ளதை எடுத்துக்கூறி பெண்களை பாதுகாக்க வேண்டிய போலிசும், நீதிமன்றமும் பாலியல் குற்றவாளிகளாக இருக்கும் போது குற்றவாளிகளிடமே சென்று நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்காமல் வீதிக்கு வீதி மக்கள் பாதுகாப்பு கமிட்டியை கட்டியமைப்பதன் மூலமாகத்தான் நமது பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முடியும்” என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தார் .

அவரை தொடர்ந்து  AITUC கவுரவத்தலைவர் வே.முத்தையன்,  வழக்கறிஞர் மு.ஜெயபாலன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தித்தொடர்பாளர் சாரோன்.சௌந்தர், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆ.சக்திவேல், மனித உரிமை பாதுகாப்பு மைய திருவண்ணாமலை மாவட்ட கிளையினுடைய வழக்கறிஞர் சு.கண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். புதுச்சேரி மாநில புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச்செயலாளர் தோழர்.லோகநாதனும், மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.ராஜூவும் சிறப்புரையாற்றினர்.

 

thiruvannamalai-student-rape-4

வழக்கறிஞர் முத்தையன் கண்டன உரையாற்றுகையில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களை கண்டித்து,பாலியல் வன்முறைக்கு அரசுதான் முதல் குற்றவாளி. நாட்டை ஆளும் கட்சிகள் தான் காரணம். இவர்களை தூக்கி எறிந்துவிட்டு கம்யூனிச அரசமைப்பை நிறுவ வேண்டும்’ என்று வலியுறுத்தியும் பேசினார்.

வழக்கறிஞர் சாரோன் சௌந்தர் பேசுகையில் “ஓட்டுக்கட்சிகள் ரவுடிகளை அடியாட்களாக பயன்படுத்திக் கொண்டும், அவர்கள் குற்றத்தில் ஈடுபட்டால் காப்பாற்றிக்கொண்டும் அவர்களை கிரிமினல்களாகவே வளர்க்கின்றனர். அப்படிப்பட்ட ரவுடிகளை சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும், தேவைப்பட்டால் அவர்கள் வழியிலேயும் சென்று எதிர்கொள்ளத் தயாராகவேண்டும். அதற்கு வீதிக்கு வீதி இளைஞர் கமிட்டிகளை கட்டவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

வழக்கறிஞர் ஆ.சக்திவேல் பேசுகையில் “பழங்குடி பெண்களையும், இரவில் புகார் தெரிவிக்க வரும் பெண்களையும் போலிசே பாலியல் வல்லுறவுக்குள்ளாக்குகிறது” என்பதை சுட்டிக் காட்டினார். இதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசோ , “181 என்ற எண்ணுக்கு அழையுங்கள் பெண்களை காப்பாற்ற” என்று கூறுவதை கண்டித்தார். ஆபத்து நேரத்தில் தன்னை காப்பற்றிக்கொள்ள பார்ப்பாளா? அல்லது போன் செய்து கொண்டிருப்பாளா ? இது அரசின், ஆளும் வர்க்கத்தின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது, ஆளும் வர்க்கம் சீரழிந்து விட்டது என்பதை காட்டுகிறது” என்று அம்பலப்படுத்தினார்.

thiruvannamalai-student-rape-1

வழக்கறிஞர் கண்ணன் பேசுகையில் “பாலியல் வன்முறையை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக செயல் பட்ட வழக்கறிஞர் D.குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது புகார் கொடுக்க தற்போதுள்ள மாவட்ட காவல் துறை எஸ்.பியை சந்திக்க முயற்சித்த போது அவரை நேரில் பார்க்க முடியவில்லை, போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில் வழக்கறிஞர்கள் ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்த பிறகுதான் கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்துள்ளனர். ”என்றார்.

சிறப்புரையாற்றிய புதுச்சேரி மாநில புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைச்செயலாளர் தோழர்.லோகநாதன் பாலியல் வன்முறைக்கு காரணமான தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கையை அம்பலப்படுத்தியும், அந்நிய முதலீட்டால் பெண் தொழிலாளிகளின் உழைப்பு சுரண்டப்படுகிறது என்றும், பெண்கள் ஆபாசமாக உடை அணிவதால்தான் பாலியல் வன்முறைகள் நடக்கிறது என்று கூறுவோருக்கு உரைக்கும் விதமாக 2 வயது குழந்தையும், 60 வயது பாட்டியும் எந்த ஆபாச உடைகளை அணிகிறார்கள். அவர்கள் ஏன் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகின்றனர் ? இதற்கெல்லாம் காரணம் தனியார்மய உலகமய கொள்கைதான் என்றும், தனியார்மய கொள்கைக்கு எதிராக போராடாமல் பெண்களுக்கு விடிவு இல்லை என்றார் .

thiruvannamalai-student-rape-2

அடுத்து சிறப்புரை ஆற்றிய மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழகக்கறிஞர் ராஜூ பேசுகையில் “பாலியல் குற்றம் செய்தவர்களை தூக்கில் போடணும் என்கிறார்கள் தொக்கில் போட்டால் மீண்டும் குற்றங்கள் நடக்காதா ? அல்லது நடக்கவில்லையா ? இதற்கு ஆணிவேர் எது? உலகமயமாக்க கொள்கைதானே? அதை முறியடிக்க வேண்டும். திருவண்ணாமலை நகரில் பட்டப்பகலில் ஒரு பெண்ணை கத்திமுனையில் கடத்திசென்று பலாத்காரம் செய்து பின்னர் அப்பெண்ணின் வீட்டின் அருகிலேயே விட்டுவிட்டு போகமுடியம் என்றால் இங்கு இருக்கும் கலெக்டர், மாவட்ட காவல் துறை உட்பட ஆளும் வர்க்கங்கள் தோற்றுப்போய்விட்டது என்றுதானே அர்த்தம்.  பெண்களை இழிவு படுத்தும், ஆணாதிக்கத்தை பரப்பும் இந்து மதத்தை திணிக்கவே ஆளும் வர்க்கங்களும்,அரசும் துடிக்கின்றன. எனவே இவர்களை நம்பாமல், வீதிக்கு வீதி மக்கள் பாதுகாப்பு குழுவை கட்டியமைக்காமல் தீர்வு காண முடியாது. மனித உரிமை பாதுகாப்பு மையத்தில் இணைந்து இதற்கு எதிராக போராடுவோம் வாருங்கள் ” என்று அறைகூவல் விடுத்தார்.

இறுதியாக, மனித உரிமை பாதுகாப்பு மைய திருவண்ணாமலை மாவட்ட கிளையின் உறுப்பினர் தோழர்.சுந்தர் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

thiruvannamalai-student-rape-3பிரச்சார அனுபவங்கள்

தோழர்கள் பேருந்தில் பிரச்சாரம் செய்தபோது ஒரு மக்காச்சோள வியாபாரி குறுக்கிட்டார் அப்போது ஒரு பெண்மணி ‘எங்கள் பிரச்சினைக்காக எந்த கட்சிக்காரனும், அமைப்பும் பேசவில்லை. இவர்கள் பேசுகிறார்கள் குறுக்கிடாதே. உன் வியாபாரத்தை பிறகு செய்’ என்று சொல்லிவிட்டு நிதி கொடுத்தும் ஆதரித்தார் பெரும்பாலானவர்கள் அதரவு தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது மக்களின் கருத்து:

பிரகாஷ் என்பவர் “எனக்கு இந்த கூட்டம் நடப்பது பற்றி முன்னதாக தெரியாது. இந்த வழியாக போகும்போது நின்று கவனித்தேன். ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக கவனித்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் சிறப்பாக பேசுகிறீர்கள், நீங்கள் சொல்வதுதான் சரி இந்த அரசு மக்களுக்கு எதிரானது என்றும், உங்களை போல்தான் போராடவேண்டும் என்றும் புரிந்துகொண்டேன்” என்றார்.

ஒரு பெண் வியாபாரி, “நீங்கள் சொல்வதுதான் சரி இனிமேல் இனிமேல் இந்த பிரச்சனைகளை தீர்க்க போலிசை நம்பாமல் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள தயாராக வேண்டும். இந்த அரசை நம்பக்கூடாது” என்றார்.

ஆர்ப்பாட்ட முழக்கம்:

கண்டிக்கின்றோம் ! கண்டிக்கின்றோம் !
பெண்களுக்கு எதிரான
பாலியல் வன்முறையை
கண்டிக்கின்றோம் ! கண்டிக்கின்றோம் !

தூக்கில் போடு! தூக்கில் போடு!!
பத்தாம் வகுப்பு பெண்ணைக்கடத்தி
பாலியல் வன்முறையை செய்திட்ட
பொம்பள பொறுக்கிகள்
அஸ்வின், வினோத்தை
தூக்கில் போடு! தூக்கில் போடு!!

ஜாமீனில் விடாதே! ஜாமீனில் விடாதே !!
பாலியல் குற்றத்தில் ஈடுப்பட்ட
குற்றவாளிகள் மீது
குண்டர் தடுப்பு சட்டத்தில்
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!!

தமிழக அரசே! தமிழக அரசே !!
பெண்களை இழிவுபடுத்தும்
ஆபாச பத்திரிகைகளையும்
சினிமா விளம்பரங்களையும்
தடை செய்! தடை செய்!!

இளைஞர்களை சீரழிக்கின்ற
ஆபாச பத்திரிக்கைகள்
ஆபாச இணையங்கள்
நடத்திக்கொள்ள அனுமதித்து
கோடி கோடியாய் கொள்ளையடிக்க
முதலாளிக்கு காவல் நிக்குது
அரசாங்கம்! அரசாங்கம்!!

தமிழக அரசே! தமிழக அரசே!!
இழுத்து மூடு! இழுத்து மூடு !!
பாலியல் குற்றத்துக்கு
மூல காரணமான
டாஸ்மாக் கடைகளை
இழுத்து மூடு! இழுத்து மூடு!!

சிதம்பரத்தில் பத்மினி
செஞ்சியில் ரீட்டா மேரி
திருகோவிலூரில் பழங்குடிப் பெண்கள்
வேலியாய் சொல்லப்படும்
போலிசே ஊரை மேய்ந்ததை
நாடே காறி துப்புது!
நாடே காறி துப்புது!!

விடிவு இல்லை! விடிவு இல்லை!!
உழைக்கும் பெண்கள் வீதியில் இறங்காமல்
கிரிமினல் ஆணாதிக்கத் திமிருக்கு
விடிவு இல்லை! விடிவு இல்லை!!

முறியடிப்போம்! முறியடிப்போம்!!
பெண்கள் மீதான வன்முறையைத் தூண்டும்
தனியார் மாயம், தாராளமயம்,
உலகமய கொள்கைகளை முறியடிப்போம்!

முடிவு கட்டுவோம்! முடிவு கட்டுவோம்!!
பெண்கள் மீதான
பாலியல் வன்முறைக்கும்
கிரிமினல் ஆணாதிக்கத்துக்கும்
முடிவு கட்டுவோம்! முடிவு கட்டுவோம்!!

notice-2
notice-1

தகவல்:

திருவண்ணாமலை மாவட்ட கிளை
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு

தாய் மரம் !

2
தாய் மரம்
தாய் மரம்

மையலறையில் திடீரென நுழைந்ததும் குட்டி, குட்டி பூச்சிகள் அங்குமிங்கும் சிதறி ஓடின. நாங்கள் சமைத்து பல மாதங்களானதற்கு அந்த பூச்சிகள் சாட்சிகள். ஒரு காலத்தில், சமையலில் எத்தனை விதமான பரிசோதனை முயற்சிகள்! சிலவற்றில் பெரிய வெற்றி; பலவற்றில் தோல்வி என்றாலும், சாப்பிடமுடியாத முடியாத அளவிற்கு, எதுவும் தோற்று போனதில்லை.

அறையில் உள்ள அனைவரும் அலுவலக, சொந்த வேலை பளுவில், பிஸியாகிவிட சமைப்பதற்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது. குறைந்தபட்சம் சுடுதண்ணீர் கூட வைப்பதில்லை!

மூன்று நேரங்களிலும் ஹோட்டலிலேயே சாப்பிட்டதால், இரண்டுவிதமான சிக்கலில் சிக்கினோம். உடல் நலம் கெட்டது; பணம் நிறைய செலவானது. வேறுவழியில்லை. பெருநகரத்தின் பல்சக்கரத்தில் சிக்கி, ஓடிக்கொண்டே இருந்தோம்.

ஒருநாள் திடீரென, சமைக்க ஆள் கிடைக்குமா என தேடிப்பார்க்கலாமே என மண்டையில் பல்பு எரிந்தது. எங்கள் அறையில் டைபாய்டு-ல் உடல் நலமில்லாமல், பஞ்சத்தில் அடிபட்டவனை போல இருந்தவனை (அப்பத்தான் பரிதாபப்பட்டு உடனே உதவுவார்கள்) அனுப்பி, பக்கத்து வீடுகளில், கடைகளில் “சமைக்க ஆள் இருந்தால் சொல்லுங்கள்” என கல்லெறிந்து வைத்தோம். மூன்று மாதங்களாகியும் எந்த நல்ல செய்தியும் காதுக்கு வரவில்லை.

திடீரென ஒருநாள் விடிகாலையில், ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா வந்தார்.

“பக்கத்து கடைக்காரர் சொல்லி அனுப்பினார்” என்றார்

“காலை, மாலை இருவேளையும் வரமுடியுமா” என கேட்டோம்.

“குடும்பச் சூழ்நிலையால், ஒரு நேரம் மட்டும் வருகிறேன்” என்று கூறினார். வேறுவழியேயில்லை. ஏற்றுக்கொண்டோம்.

மீண்டும் சமையலறைக்கு உயிர் வந்தது. ஒரு கொழம்பு. ஒரு பொரியல்; ஒரு கூட்டு என வைத்துவிடுவார். அதையே, இரவுவரை வைத்துக்கொண்டு சமாளித்தோம்.

சமீதாம்மா என்ன செய்தாலும் சுவையாக செய்தார். சைவம் அசத்தினார். அசைவம் அதைவிட அசத்தினார். ரசம் மட்டும் விதிவிலக்கு. வாரம் இருமுறை கறி, மீன் என எடுத்து தந்தோம். ஞாயிறு விடுப்பு எடுத்துக்கொள்ளுங்கள் என சொன்னால் கூட, எனக்கு தேவையான பொழுது எடுத்துக்கொள்கிறேன் என ஏழுநாளும் வந்து சமைத்தார்.

இப்படியாக, பலவீனமாக இருந்தவர்கள் எல்லாம், நன்றாக தேறினார்கள். இருவருக்கு ஹிப் சைஸ் கூடி பேண்ட் டைட்டாக மாறியது. மூன்று மாதங்களில் சமீதாம்மாவிடம் இயல்பாக பேசும் வழக்கம் வந்திருந்தது.

“என்னம்மா உங்க பேரு ஸ்டைலா இருக்கே?!” என்றால்

“சமீதான்றது என்னுடைய பொண்ணு பேரு தம்பி. அம்மா என்பதால் சமீதாம்மா என கூப்பிடுகிறார்கள்” என்றார்.

“எங்களுக்கே இவ்வளவு அருமையா சமைக்கிறீர்களே! உங்க பிள்ளைகளுக்கு இன்னும் நல்லா சமைப்பீங்களே!” என்றேன் சிரித்துக் கொண்டே!

“அதெல்லாம் இல்லை தம்பி!” என்றார் பொதுவாய்!

“உங்களுக்கு இரண்டு பசங்க! தள்ளு வண்டில பாத்திரம் விக்கிறதா சொல்றீங்க! ஒரு பொண்ணையும் பாதுகாப்பா தம்பிக்கே கட்டிக்கொடுத்திட்டிங்க! அப்புறம் என்ன பிரச்சனை? நீங்க ஏன் வேலைக்கு வருகிறீர்கள்? ” என்றேன்.

அந்த கேள்வி அவரை அசைத்தது.

“என் புருசன் பொறுப்பில்லாதவர் தம்பி. அவர் சம்பாதிப்பதை அவரே குடின்னு தொலைச்சுடுறார். சம்பாதிச்சதுல பேரப்பிள்ளைக்கு ஒரு ரூபாய்க்கு மிட்டாய் கொடுத்தா பெரிய விசயம் தம்பி. ஒரு சொந்த வீடு வேணும்ற கனவுல, வட்டிக்கு பணத்தை வாங்கி, ஒரு இடத்தை வாங்கினோம். வட்டியோட, அந்தக் கடனை இந்த மூணு வருசத்துல, வாயைக்கட்டி, வயித்தக்கட்டி முக்கால்வாசியை அடைச்சிருக்கோம்.

இப்ப அந்த இடத்துல ஒரு வீட்டைக் கட்டி, குடி போகலாம்ற எண்ணத்திலே பிள்ளைக கஷ்டப்படுதுக தம்பி. மூணு வருசமா ரேசன் கடை அரிசியை வாங்கித்தான் சமைக்கிறோம். தினம் புளிக் (காரக்) குழம்பு தான். வேற குழம்பு வைச்சா, வாய்க்கு விளங்காது! நல்ல சோறு சாப்பிட்டு, மூணு வருசம் ஆச்சு! வைராக்கியத்துல வாழ்ந்துகிட்டு இருக்கோம்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும், நானும் சித்தாள் வேலைக்கு போயிட்டிருந்தேன். இப்ப உடம்பு தாங்கல! இப்படி சமைக்கிற வேலைக்கு போக வேண்டாம்னு என் பசங்க சொல்றாங்க! நாள் முழுவதும், வெயில், மழையில பிள்ளைக சுற்றி திரியும் பொழுது, வீட்டுல சும்மா உட்கார மனசு கேக்கல!” என்றார் கண்ணீருடன்!

அவ்வப்பொழுது, “இன்னைக்கு உங்க வீட்டுல என்ன கொழம்பு” என கேட்கிற பொழுது, எப்பொழுதுமே மாறாமல் ‘காரக்குழம்பு’ என சொன்னது நினைவுக்கு வந்தது.

இங்கு கறி, மீனு சமைச்சிட்டு, பிள்ளைகளுக்கு காரக்குழம்பு தினமும் வைக்கிற பொழுது, மனம் எவ்வளவு வருந்தியிருப்பார் என எண்ணமும் வந்தது.

அதற்கு பிறகு, இரண்டு மாதம் ஓடிவிட்டது. நேற்று சமைத்து முடித்துவிட்டு,

“திரும்பவும் கடனை வாங்கி, இப்ப வீட்டை கட்டலாம்னு முடிவு செய்ஞ்சு, கடனுக்கு இவ்வளவு நாள் அலைஞ்சோம். இப்ப கடன் கிடைச்சிருச்சு. ஆளோட ஆளா நானும் ஒரு சித்தாளா வீட்டில் வேலை செய்யலாம்னு இருக்கேன். யார் யாருக்கோ இளவயசுலே கல், மண் சுமந்தேன்.. இப்ப நம்ம வீட்டுக்கு சந்தோசமா சுமக்கப்போறேன் தம்பி! நீங்க தான் என்ன செய்யப்போறீங்கன்னு ஒரே கவலையா இருக்கு!” என்றார்.

“பரவாயில்லைங்கம்மா! நாங்க சிரமப்படுவோம் தான். சமாளிச்சுக்குவோம். நீங்க வீட்டை நல்லாபடியா கட்டுங்க! எங்க அம்மா போல உங்களை நினைக்கிறோம். வீட்டைக் கட்டினதும் எங்களுக்கு சொல்லுங்க! பொதுவா, புதுவீடு விசேசத்துக்கு நாங்க போறதில்ல! ஆனால், உங்க வீட்டு விசேஷத்துக்கு கண்டிப்பா வர்றோம்!” என்றேன்.

கண்களில் எங்களைப் பற்றிய கவலையிலேயே, விடைபெற்று போனார்.

இனி, எப்பொழுது காரக்குழம்பு சாப்பிட்டாலும், சமீதாம்மா நினைவுக்கு வருவார்.

நேற்று மீண்டும் சமையலறையில் நுழைந்தேன். சின்ன சின்ன பூச்சிகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன. எங்களுக்கு சமைத்து, நோயிலிருந்து காத்த‌ சமீதாம்மா போல இன்னொரு தேவதைக்காக காத்திருக்கிறோம்.

குருத்து

ஜனவரி 25 : இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா

12

rsyf

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ன்பார்ந்த மாணவர்களே, உழைக்கும் மக்களே,

1937-ம் ஆண்டிலேயே, அன்று சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை கொல்லைப்புற வழியாக கைப்பற்றிய பார்ப்பன ராஜகோபாலாச்சாரி, 1937 ஏப்ரல் முதல் இந்தியை கட்டாய பாடமாக்கினார். இந்தியா முழுமைக்கும் சமஸ்கிருதத்தை ஆட்சிமொழியாக்கும் நோக்கத்துடன் தான் இந்தியை கட்டாய பாடமாக்குவதாக பகிரங்கமாகவே அறிவித்தார்.

பார்ப்பனராஜாஜிக்குபாடம் புகட்டிய முதல் மொழிப்போர் தியாகிகள் நடராசன் – தளமுத்து;

இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் போராட்டம்கொதித்தெழுந்த தமிழக மக்கள் தமிழறிஞர் சோமசுந்தர பாரதியார், தந்தை பெரியார், கி.ஆ.பெ விசுவநாதம் போன்றவர்களின் தலைமையில் இந்தித் திணிப்பை எதிர்த்து வீறுகொண்ட போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் சிறை சென்ற நடராசனும் (1939 சனவரி 15- ம் தேதி ), தாளமுத்துவும் (1939 மார்ச்-12 ம் தேதி) தியாகி ஆனார்கள். தமிழகமெங்கும் பற்றிப் படர்ந்த போராட்டத் தீயின் வலிமையால் ராஜகோபாலாச்சாரி பணிந்து இந்தித் திணிப்பு உத்தரவை திரும்பப் பெற்றார்.

இந்தியை கட்டாயமாக்குவதில் இருந்து அன்றைய காங்கிரசு அரசு தற்காலிகமாக பின்வாங்கியதேயொழிய, திட்டத்தைக் கைவிடவில்லை. 1965 சனவரி – 26, குடியரசு தினத்தன்று இந்தியை ஆட்சிமொழியாக அறிவிக்க முடிவுசெய்தது.

1965 சனவரி-25; அரசைநிலைகுலையச்செய்த வீரம் செறிந்த மாணவர் போராட்டம்!

சென்னையில் கூடிய அனைத்துக் கல்லூரி மாணவர் போரட்டக் குழு அன்றைய நாளை துக்க நாளாக அறிவித்தது. இந்தி ஆட்சி மொழியாவதை எதிர்த்து சனவரி 25-ம் தேதி மதுரையில் தொடங்கிய மாணவர்களின் போராட்டத் தீ சென்னை, நெல்லை, கோவை, திருச்சி என தமிழகம் முழுவதும் கொழுந்துவிட்டெறிந்தது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து சுமார் 55 நாட்கள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினர்.

மாணவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது, ஆனால், போரட்டம் ஓயவில்லை. திமிறி எழுந்த மாணவர்களை ஒடுக்க இந்திய ராணுவம் வந்து கொலை வெறியாட்டம் போட்டது. மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க இந்திய ராணுவமே இறங்கியது இதுவே முதல் தடவையாகும். திருச்சி மாவட்டம் கீழப்பழவூர் சின்னசாமி, சென்னை கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழக மாணவர் ராஜேந்திரன் என வீரமிக்க மாணவர்கள், இளைஞர்களின் உயிர்த் தியாகத்தால் தமிழகமே சிவந்தது. 55 நாட்கள் நீடித்த மாணவர் போராட்டம் இறுதியில் வெற்றி கண்டது.

இது வெறும் இந்தித் திணிப்பு அல்ல -நாட்டை வருண, சாதி – பார்ப்பன சமஸ்கிருதமயமாக்கும் சதி!

அவ்வப்போது பின்வாங்கிய ஆரிய – பார்ப்பன கூட்டம் என்றைக்குமே இந்தியை மட்டும் தனியாக திணிக்க முயன்றதில்லை. நாட்டை ஆரிய பார்ப்பன – சமஸ்கிருதமயமாக்குவதற்கான ஒரு முகாந்திரமாகத்தான் இந்தியை முன்னிறுத்துகிறது. 1937-ல் ராஜாஜி தொடங்கி, பக்தவச்சலம், இன்று மோடி என அனைவரின் நோக்கமும் இதுதான்.

இந்துமதவெறி பாசிஸ்டு மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தவுடன் அரசு சமூக வலைதளங்களில் இந்தியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில் தொடங்கி அடுத்தடுத்து இந்துத்துவா வருணாசிரம – சாதி – தீண்மையைக் கொள்கைகளை புகுத்த முயன்றது. இவை வெறும் இந்தியை திணிக்கும் நடவடிக்கைகள் மட்டுமல்ல. பல் தேசிய இனம், மொழி, பண்பாடு கொண்ட நாட்டில் இவற்றையெல்லாம் அழித்து ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு எனும் ஆரிய – பார்ப்பன கும்பலின் நீண்டநாள் கனவான அகண்ட பாரதத்தை உருவாக்குவது, சமஸ்கிருதமயமாக்குவது, பார்ப்பனியமயக்குவது என்ற திட்டத்தின் பகுதிகள் தாம் இவை.

இன்று நேற்றல்ல, ஆரிய – பார்ப்பன கூட்டம் கி.பி 6-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் மீது ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக, சமஸ்கிருத ஆதிக்க பண்பாட்டு படையெடுப்பை நிகழ்த்தியது, இன்று மீண்டும் ஆரிய பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி தலைமையில் இரண்டாவது முறையாக படையெடுத்து வருகிறது.

சமஸ்கிருதத்தை ஒரு மொழி என்பதைவிட பார்ப்பன (இந்து) மதத்தின் கொலைக்கருவி என்றுதான் சொல்ல வேண்டும். அது எப்பொழுதுமே ஆளும் வர்க்கங்களான டாடா, அம்பானி போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகள் மற்றும் நிலபிரபுக்களின் ஆதிக்க கருவியாகத்தான் இருந்து வருகிறது. பிற்போக்குத்தனத்தை – மூடத்தனத்தை, வேத, வைதீக, புராண கட்டுக் கதைகளை போதிக்கும், சனாதன வருணாசிரம தர்மத்தை நியாயப்படுத்தும், தீண்டாமையை அரங்கேற்றும், இவற்றிற்காக கொலை, களவு, பொய், கற்பழிப்பு போன்ற கிரிமினல் குற்றங்கள் செய்யத் தூண்டும், நியாயப்படுத்தும் பகவத் கீதையையும், மனுதர்மத்தையும் வேதநூல்களாக கொண்டதுதான் சமஸ்கிருத மொழியின் பண்பாடு.

வேத, வைதீக – பார்ப்பன – சமஸ்கிருத -இந்தி எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாக தமிழ்நாட்டை கட்டியமைப்போம்!

ஆனால், அன்றும், இன்றும் ஆரிய – பார்ப்பன கூட்டத்திற்கு சவாலாக இருப்பது தமிழ் தேசிய இனத்தின் கடவுள் – ஆன்மீக மறுப்பு, வேத, வைதீக – பார்ப்பன, சமஸ்கிருத – இந்தி வருணாசிரம – சாதி – தீண்டாமை எதிர்ப்பு பாரம்பரியம்தான். ஆரியத்தை எதிர்த்துப் போராடி இன்றளவும் அழியாமல் புகழோடு நிற்பது நமது தமிழ் மொழியும், பண்பாடும்தான்.

சமஸ்கிருதத்தைக் காட்டிலும் தொன்மைவாய்ந்த, வேறு ஒரு பண்பாட்டுத் தளத்தில் தோன்றிய, இலக்கண, இலக்கிய வளம் பொருந்திய, செம்மொழிக்கான அனைத்து தகுதிகளும் கொண்ட ஒரே மொழி நமது தமிழ் மொழிதான். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பொதுவுடைமை பேசிய, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமத்துவத்தைக் உயர்த்திப் பிடித்த, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், கொல்லாமை, கள்ளுண்ணாமை, பொய் சொல்லாமை, பிறன்மனை நோக்காமை போன்ற உயரிய அறங்களை கற்பிக்கின்ற பண்பாடுதான் நமது தமிழ் பண்பாடு.

இத்தகைய தமிழ் மொழியை, பண்பாட்டை போர்வாளாக ஏந்தித்தான் மீண்டும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி தலைமையில் படையெடுத்து வருகிற ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக, சமஸ்கிருத – இந்தி ஆதிக்க பண்பாட்டை வெட்டி வீழ்த்த முடியும். இதை சாதிக்க மாணவர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் அமைப்பாக அணிதிரள்வோம். 1937 லும், 1965 களிலும் தமிழ்மொழி, இனம் காக்க போராட்டக் களம் கண்ட மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி வீறுகொண்டெழுவோம்! வேத, வைதீக – பார்ப்பன – சமஸ்கிருத – இந்தி, வருணாசிரம – சாதி – தீண்டாமை எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாக தமிழ்நாட்டை கட்டியமைப்போம்!

2015 சனவரி-25

தமிழ்நாட்டு மாணவர்களின்

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா ஆண்டு.

  • மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி வீறுகொண்டெழுவோம்!
  • தமிழ் தேசிய இனத்தின் கடவுள் – ஆன்மீக மறுப்பு, வேத, வைதீக – பார்ப்பன, சமஸ்கிருத – இந்தி எதிர்ப்பு பாரம்பரியத்தை போர்வாளாக ஏந்துவோம்!
  • மீண்டும் படையெடுத்து வருகிற ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக, சமஸ்கிருத – இந்தி ஆதிக்க பண்பாட்டை போரிட்டு வீழ்த்துவோம்!
  • ஆரிய – பார்ப்பன எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாக தமிழ் நாட்டை கட்டியமைப்போம்!

சென்னை நிகழ்ச்சி நிரல்:

சனவரி – 15 முதல் மொழிப்போர் தியாகி நடராசன் நினைவுநாள்
அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து – நினைவேந்தல் கூட்டம்:
இடம்; மூலக்கொத்தரம், தியாகி நடராசன் நினைவிடம்.
சனவரி – 15, மாலை 5.00 மணி.

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் கூட்டம்
சனவரி – 25, மாலை- 6 மணி
இடம்: கோடம்பாக்கம்,சென்னை.

 

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி
தமிழ்நாடு.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் போராட்டம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் போராட்டம்

TCS Layoff – Speech by Senior Lawyer Balan Haridas – வீடியோ

4

Speech by senior lawyer Balan Haridas at meeting organized by New Democratic Labour Front – IT Employees Wing on 10-1-2015 in Chennai.

(கடந்த 10-1-2015 அன்று சென்னை பழைய மகாபலி புரம் சாலையில் உள்ள படூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி ஊழியர் பிரிவு நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் சென்னையின் முன்னணி தொழிலாளர் துறை வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் ஆற்றிய உரையின் (in English) வீடியோ பதிவு. உரையின் சுருக்கம் தமிழில் கீழே தரப்பட்டுள்ளது)

Video By
– Vinavu Correspondents

ஆடியோ பதிவு (in English) – Voice recording

Transcript of the speecah

When the General Secretary of this union approached me and said that employees of IT sector wanted to form an union, I was really astonished, because IT industry was there for long and they have been exploited. He also told me that I can clarify doubts they may have.

As far as legislation is concerned, two legislations which conern us today are Industrial Disputes act 1947 and Trade Union Act 1926. The other legistation is Tamil nadu Shops and Establishments act 1947.

As far as ID is concerned we can split it into 2 kinds of disputes. One is collective dispute, the other is individual dispute. A collective dispute is one concerning working condition – payscale, working hours, increments, benefits, how it should be, how long wage scale should remain. As far as the ID act is concerned only Trade Union can expose collective dispute.

Only with regards to non employment or retrenchment individual can approach court directly. Individual grievances like pay scale, increment, discrimination all can be addressed only by Trade Union only.

As far as Trade Union act is concerned if 7 of you are there, you can form a Trade Union. If you are not organizing yourself, there are chances of victimization. Trade Unions are well trained on how to raise a problem, it is called collective bargaining in law. Forming a trade union is not a sin. After all you are exercising your democratic right. You work for better living conditions, not merely getting wages. That can be achieved only by forming a Trade Union under the Trade Union Act.

There will be some difficulties in law, certain employees to raise a dispute under ID act. For that there is protection under Tamil Nadu Shops and Establishments Act. When a person is dismissed from service, he can file a grievance under section 41/2 and redress his grievance. When certain employees are not covered under ID action they can take recourse under the TNSEA.

As far as queries are concerned,

1. Whether on joining union I lose my employment.

Simple answer, joining a trade union, employer can not terminate service. You are fully protected. It can not be an offence at all. Right to expression and Right to form an union are  fundamental rights. Right to strike is a statutory right, it is protected under the ID act.

You need not feel afraid to join a Trade Union. There is a law protecting your right. Your rights are fully protected. If you want to express against employer, there is no disciplinary action. Honest criticism is welcome. Joining a Trade Union can not be sin, can not be a misconduct.

2.Whether company can prohibit joining a trade union

If joining trade union listed as misconduct by IT company,  it is certainly ultra vires of the constituion. Such a rule or such an agreement can be set at nought by the court as contrary to fundamental right enshrined in the constitution. It can be never be an offence, even if  you entered into, it is void ab initio (from inception). You can not be apprehensive about such an agreement.

3. If I lose a job, how to get redressal?

25,000 employees are going to be retrenched. A large body of workmen are going to be retrenched. Under the ID act there is a provision called section 25F, an employee who has completed 240 days of continuous service in an organization, can not be retrenced without complying with section 25F.

There is a provision called chapter 5B, in an industry more than 100 employees are employed, you can not retrench without getting prior permission from the government. Chapter 5B is debatable, because certain courts have said that chapter 5B may not be applicable.

4. Can we prevent it?

In any event, when a large body of workmen are sought to be displaced, there is a provision for preventing it by approaching appropriate forum, you can prevent an employer from discharging a large body of workmen. 25,000 families being uprooted, will be a monstrous situation as the courts say. When there is monstrous situation, high court will give a helping hand.

For Individual disputes, as far as Tamil nadu is concerned, if an employee is dismissed from service it can only for misconduct. Even then they have to conduct an enquiry prove the charge and then only dismiss an employee.

The law says, an employee can not be dismissed from service without reasonable cause. If you are dismissed from service for misconduct also you can raise a dispute or for retrenchment also you can raise an Industrial Dispute. The appropriate forum is conciliation officer created by the government.

5. It is a 3 party process.

In a labour dispute, there is Employer, employee, government. Intially you have to approach government under section 2A-2 and conciliation officer will intiate a conciliation proceeding. You will have an opportunity to discuss and arrive at a settlement amicably. If the settlement is not forthcoming he has to give a failure report.

As far as non-employment is concerned in the state of Tamil Nadu, after getting failure report in labour court you can straight away approach labour court. Labour court will adjudicate. Your rights are protected under ID act.

6. What about supervisors and managers?

Certain persons supervisorial managerial person, there is an exemption only for working hours.

Whereas under 41-2 there is a protection evern for persons who are discharging supervisory, managerial work, you can file a case. A person who has put in 6 months of service can not be dispensed with without a reasonable cause. A person who is dismissed even a supervisorial or managerial cadre can approach appropriate forum that is the Deputy Commissioner form and he can get a redressal.

7. How to improve working conditions?

For working conditions, only solution is raising a charter of demands. You can tell a union, union will formulate them and industrial dispute can be raised under section 2k.

A person working till 2 am and again asked to come at 8 am. You have to set right these things. Self respect is important. We are not machines, we have heart and soul. That is why trade unions are there to extend a helping hand.

If no conciliation is reached, labour courts are there to adjudicate and pass an award.

8. Black listing by employers

The question, if you join a Trade Union, they will black list you? That is thoroughly illegal. That is totally unconstitutional. Trade Union can challenge in court. That is curtailing democratic right of an individual. Every person has to assert their rights, they have a bundle of right.

9. Can we fight this individually?

You can not do invidually, you can be vicitimized. If you form an union employer will also be guarded. You can not ask people who have given their life and blood to suddenly to go out. It is a inhuman behaviour.

You have to think aloud and take collective action, to prvent this.

10.  If you file a case, how long it will take?

That should not deter a person. If you do not approach court, you will be continued to be exploited. But when a large body of workmen are terminted suddenly, you need to something. In labour laws can be expedited compared to civil case. Sometimes it gets over in one month.

வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ்
வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ்

உரையின் தமிழ் சுருக்கம்

இது தொடர்பான சட்டங்கள்

1. தொழில் தாவா சட்டம் 1947, தொழிற்சங்க சட்டம் 1926 மற்றும் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947.

2. தொழில் தாவா சட்டத்தில் தனிநபர் தாவா, கூட்டு தாவா என்று இரண்டு வகைகள் உள்ளன. கூட்டு தாவாவில் பணிச் சூழல் பற்றிய பிரச்சனைகளை எடுத்துக் கொள்ளலாம்.

3. வேலை இழப்புக்கு மட்டும்தான் தனிநபர் நீதிமன்றத்தை அணுக முடியும்.

4. 7 பேர் சேர்ந்தால் ஒரு தொழிற்சங்கத்தை அமைத்துக் கொள்ளலாம். தனியாக செய்தால் நீங்கள் பழி வாங்கப்படலாம். அந்த வகையில் தொழிற்சங்கங்கள் உங்களுக்கு வழி காட்ட முடியும்.

5. தொழில் தாவா சட்டத்தின் கீழ் வராத நபர்களும் தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் தனக்கு நிவாரணம் தேடிக் கொள்ளலாம்.

6. யூனியனில் சேருவதால் வேலை இழக்க நேருமா என்ற கேள்வியைப் பொறுத்த வரை, உங்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளது. கருத்துரிமையும், சங்கம் அமைக்கும் உரிமையும் ஒரு அரசியல் சட்ட அடிப்படை உரிமை. தொழிற்சங்கத்தில் சேருவது பாவம் இல்லை, அது ஒரு முறை தவறிய நடத்தையும் இல்லை.

7. யூனியனில் சேருவது முறைகேடு என்று ஒரு நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருந்தால் அந்த ஒப்பந்தம் தொடக்கத்திலிருந்தே செல்லாத ஒன்று.

8. வேலை இழந்தால் எப்படி நிவாரணம் பெறுவது? தொழில் தாவா சட்டத்தின் கீழ் பிரிவு 25F-ன் கீழ் 240 நாட்கள் பணி புரிந்த ஒரு ஊழியரை வழிமுறைகளை பின்பற்றாமல் வேலை நீக்கம் செய்ய முடியாது.

9. பெருமளவு ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படும் போது அதில் நீதிமனங்கள் தலையிட்டு தடை விதிக்க பெருமளவு வாய்ப்பு உள்ளது.

10. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு ஊழியர் வேலை நீக்கம் செய்யப்படுவதாக இருந்தால் அது முறைகேடான நடத்தைக்கு மட்டுமாகத்தான் இருக்க முடியும். அப்போது கூட ஒரு விசாரணை நடத்தி குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்.

11. அப்படி இருப்பினும், இது தொடர்பாக நீங்கள் ஒரு வழக்கு தொடரலாம்.

12. தொழிலாளர் தாவாவில் ஊழியர், நிறுவனம் மற்றும் அரசு என்று முத்தரப்பு ஈடுபாடு உள்ளது. அரசு நியமித்த அதிகாரி பிரச்சனையை தீர்த்து வைக்கா விட்டால் நீதிமன்றத்தை அணுகலாம்.

13. சூப்பர்வைசர், மேனேஜர் போன்றவர்களுக்கு வேலை நேர வரம்பிலிருந்து மட்டும்தான் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வேலை இழப்பு தொடர்பாக அவர்களும் வழக்கு தொடரலாம். 6 மாதம் பணி புரிந்த யாரையும் முறையான காரணம் இன்றி வேலை நீக்கம் செய்ய முடியாது.

14. பணி நிலைமைகளை பொறுத்தவரை, ஒரு தொழிற்சங்கம்தான் அதை முன்னெடுக்க முடியும்.

15. தொழிற்சங்கத்தில் சேர்ந்தால் கறுப்பு பட்டியலில் சேர்த்து விடுவார்கள் என்ற கேள்வியைப் பற்றி. இது முழுக்க முழுக்க சட்டவிரோதமானது. அரசியல் சட்டத்துக்கு எதிரானது.

16. வழக்கு தொடுத்தால் எவ்வளவு காலம் பிடிக்கும்? என்ற கேள்வியைப் பொறுத்த வரை, நீதிமன்றத்தை அணுகா விட்டால் நீங்கள் தொடர்ந்து சுரண்டப்படுவீர்கள். மற்ற வழக்குகளைப் போல் இல்லாமல், தொழில் தாவா வழக்குகளில் நீதிமன்றங்களும் விரைவில் முடிக்க உதவுகின்றன. சில சமயம் 1 மாதத்தில் கூட வழக்கு முடிந்து விடக் கூடும். எவ்வளவு காலம் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

We, NDLF, call upon IT employees not to put in their papers even when threatened by management. We call upon all of them to join us in our effort to organize a trade union in this sector.

Join us
New Democratic Labour Front
I T Employees Wing

fb/VinavuCombatsLayoff
Phone : 90031 98576
combatlayoff@gmail.com

விழுப்புரம் மாவட்டத்தை பாலைவனமாக்கும் மணல் மாஃபியாக்கள்

3

பெண்ணையாற்று மணல் கொள்ளையர்களை விரட்டியடிப்போம்!
குடிநீரையும்,விவசாயத்தையும் பாதுகாப்போம்!

என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்…
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்…

பெண்ணையாறு மணல் கொள்ளைமேலே குறிப்பிட்ட பாடல் வரிகளுக்கு இணங்க இயற்கையாகவே உருவாகியுள்ள காடு, மலை, குடிநீர், கிரானைட், தாது மணல், இரும்பு சுரங்கம், பாக்சைட், ஆற்றுமணல், மீத்தேன் வாயு ஆகிய அனைத்து வளங்களும் நிறைந்து கிடந்த நமது தாய்நாட்டின் இயற்கை வளங்கள் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் துணையோடு சூறையாடப்பட்டு நம் நாட்டின் இறையாண்மை அழிந்து ஒரு வேளை உணவுக்காக கூட அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளிடம் கையேந்தும் நிலை ஏற்படப்போகிறது.

ஏனென்றால் ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்கு உணவு தான் அடிப்படையாக விளங்குகிறது. அந்த உணவின் மூலதனமாக விவசாயம் முன் தேவையாக உள்ளது. அதற்கு அடிப்படை நீர் ஆதாரமாக விளங்குகிறது. அப்படிப்பட்ட நீரை பஞ்சு போல் தேக்கி வைத்து கொடுக்கின்ற ஆற்றின் மணலை அரசின் துணையோடு மணல் கொள்ளையர்கள் சூறையாடி வருகிறார்கள்.

மணல் மாபியாக்களின் பிடியில் விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட மணல் மாபியாக்களின் கொள்ளை எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது. தென்பெண்ணை ஆற்றில் மணல் அல்ல இரண்டு குவாரிகளுக்கு மட்டுமே அனுமதியுள்ளது. ஆனால், குவாரி உரிமையாளர்கள் ஆற்றில் 10 குவாரி அமைத்து மணல் அள்ளுவதுடன் அந்த குவாரிகளுக்கு இணைப்புச் சாலை போட்டு ஆற்றின் போக்கையே மாற்றி விட்டனர்.

பெண்ணையாறு மணல் கொள்ளை
குவாரிகளுக்கு இணைப்புச் சாலை போட்டு ஆற்றின் போக்கையே மாற்றி விட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலத்துக்கும் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டத்துக்கும் நீர் ஆதாரமாக விளங்குவது தென்பெண்ணை ஆறு. சங்கராபுரத்தில் ஆரம்பித்து திருக்கோவிலூர், விழுப்புரம் உளுந்தூர்பேட்டை வழியாக கடலூர் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன் திருக்கோவிலூரில் முதல் மணல் குவாரி அமைக்கப்பட்டது. அப்போதே மக்கள் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால்,மணல் குவாரிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கின்றது. எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் லாபத்தை மட்டுமே குறியாக கொண்டு மணல் மாபியாக்கள் செயல்படுவதால் விழுப்புரம் மாவட்டமே பாலைவனமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெண்ணையாறு மணல் கொள்ளை
மணல் மாபியாக்கள் செயல்படுவதால் விழுப்புரம் மாவட்டமே பாலைவனமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் காவிரி பாலாறுக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய ஆறு தென்பெண்ணை. கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலத்துக்கு இந்த ஆற்றின் மூலம் நீர்பாசனம் கிடைக்கிறது. இந்த ஆற்றை நம்பித்தான் பல கூட்டு குடிநீர் திட்டங்கள் உள்ளன. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, என பல  முக்கிய நகரங்களுக்கு இங்கிருந்து தான் குடிநீர் செல்கிறது. இந்த வளமான ஆறு தான் இப்போது பாலைவனமாகியிருக்கிறது.

  • ஆறுகளில் ஒரு மீட்டர் ஆழத்துக்கு மேல் மணல் அள்ளக்கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனால், இங்குள்ள குவாரிகளில் 12 மீட்டர் ஆழத்துக்கு மணல் அள்ளியுள்ளார்கள்.
  • காவிரியை விட பெரிய ஆறு கேரளாவில் உள்ள பெரியாறு. அங்கு மணல் அல்ல ஜே.சி.பி. இயந்திரம் பயன்படுத்த கூடாது. ஆந்திராவில் உள்ள கோதாவரியிலும், கிருஷ்ணாவிலும் ஜே.சி.பி இயந்திரத்துக்கு அனுமதி இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் தான் குவாரிக்கு இரண்டு ஜே.சி.பி இயந்திரம் வைத்து கொள்ளையடிக்கிறார்கள்.
  • கூட்டுக்குடிநீர் திட்டம் இருக்கும் இடத்துக்கு 500 மீட்டர் சுற்றளவில் மணல் அள்ளக் கூடாது. ஆனால், இங்கோ, எல்லா விதத்திலும் மணல் கொள்ளையர்களுக்கு சட்டம் வளைந்துள்ளது. மணல் கொள்ளையால் ஆறுகள் வறண்டு, நகரத்தில் உள்ள மக்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை கூட தண்ணீர் கிடைக்காத அவலம்.
  • விழுப்புரம் மாவட்டத்தில் தென் குச்சிப்பாளையம்,  திருப்பாச்சனூர் ஆகிய  இடங்களில் தான் மணல் அள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், குவாரி உரிமையாளர்கள் இந்த இடங்களில் அள்ளுவதுடன் அனுமதி இல்லாமல் மேலும் 10 இடங்களில் குவாரி அமைத்து மணல் அள்ளி வருகின்றனர்.
  • லாரியில் ஒரு லோடு மணல் ஏற்றினால் இரண்டு யூனிட் மணல் 600 ரூபாய். அதற்கு வரியாக 26 ரூபாய் செலுத்த வேண்டும். 626 ரூபாய் கொடுத்து ஒரு லோடு மணல் ஏற்றி சென்று உள்ளூர் மக்களுக்கு 100 ரூபாய் கூடுதலாக லாபம் வைத்து விற்றால் பரவாயில்லை. ஆனால், மணலை எங்காவது சேமித்து வைத்து கேரளாவுக்கும்,கர்நாடகத்துக்கும் சென்னைக்கும் கொண்டு சென்று விற்கிறார்கள். தினமும் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 2000 லாரிகளில் மணல் செல்லுகிறது. 626 ரூபாய் கொடுத்து வாங்கப்படும் மணல் 15,000 ரூபாய்க்கும்,  20,000 ரூபாய்க்கும் விற்கப்படுவது கொள்ளையில்லாமல் வேறு என்ன?
பெண்ணையாறு மணல் கொள்ளை
மணல் குவியல்

கண்ணை விற்று சித்திரமா? மண்ணை விற்று முன்னேற்றமா?

விழுப்புரம் மாவட்டத்தில் பெண்ணையாற்றை நம்பி மூன்று போகம் விவசாயம் செய்த விவசாயிகளின் எதிர்காலம் மானம் பார்த்த விவசாயமாக மாறும் அவலம் ஏற்ப்பட்டுள்ளது. காரணம் பேரங்கியூரில் இயங்கி வரும் மணல் குவாரியின் கொள்ளையர்களால் பெண்ணையாறு மணல் இல்லா கட்டாந்தரையாக மாறி வேலிகாத்தான் முள் முளைத்து காட்சியளிப்பதை நாம் காண முடிகிறது.

இதே விஷயத்தை அம்பலப்படுத்தி எமது அமைப்பு சார்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு துண்டு பிரசுரம் குவாரியை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் விநியோகம் செய்யப்பட்டது. அந்த பிரசாரத்தின் போது ஒரு சிலர் தவிர அனைவரும் மௌனம் காத்தார்கள். காரணம் அவர்களுடைய வாயை மணல் கொள்ளையர்கள் பணத்தின் மூலம் பூட்டி வைத்திருந்தார்கள் என்பதை நம்மால் உணர முடிந்தது. சிலர் நம்முடைய பிரச்சாரத்தை கொச்சைப் படுத்தினார்கள், அதாவது “நோட்டீஸ் போடுவிங்க அப்புறம் குவாரிக்காரன் பணம் கொடுத்ததும் கண்டுக்காம போய்விடுவிங்க” எனச் சொன்னார்கள்.

விழுப்புரம் மணல் கொள்ளை - வி.வி.மு பிரச்சாரம்
சமூக விரோத செயல்களில் ஈடுபடாத பெரும்பான்மை மக்களிடம் நிதிபெற்று மக்களுடைய பாதிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடக்கூடிய இயக்கம் தான் வி.வி.மு

இவர்கள் நினைப்பதை போல் எல்லா கட்சிகளும் இதை ஒரு தொழிலாக செய்கிறார்கள் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் விவசாயிகள் விடுதலை முன்னணி ஒரு சிலர் நினைப்பதை போல மக்கள் எதிரிகளிடம் காசு வாங்கி கட்சி நடத்தும் இயக்கம் அல்ல. மாறாக சமூக விரோத செயல்களில் ஈடுபடாத பெரும்பான்மை மக்களிடம் நிதிபெற்று மக்களுடைய பாதிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடக்கூடிய இயக்கம் தான் வி.வி.மு மீண்டும் தெரிவித்து கொள்கிறோம்.

ஆடு நனையுதே என்று ஓநாய் அழுததாம்!

மணல் கொள்ளையர்களுக்கு குவாரியை சுற்றியுள்ள மக்கள் மீது அக்கறை பொங்கி வழிகிறதாம். குறிப்பாக ஒவ்வொரு கிராமத்திலும் பாழடைந்த கோவிலை லட்சக்கணக்கில் செலவு செய்து பளபளக்க வைக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஒருவரை தத்து எடுத்து கொண்டு தினமும் அவருக்கு ரூபாய் 300 கொடுத்து பராமரித்து வருகிறார்கள். லாரி உரிமையாளர்களுக்கு அன்றாட செலவுக்காக தினமும் ரூபாய் 1000 கொடுத்து வருகிறார்கள். சில நேரங்களில் வசதி படைத்த லாரி உரிமையாளர்களே இந்த பணத்தை சுருட்டிக்கொள்வதும்  உண்டு. அதுமட்டுமல்லாமல் வார்டு கவுன்சிலர் , ஊராட்சி மன்ற தலைவர்,  சேர்மன்,  மாவட்ட கவுன்சிலர்,  மற்றும் அந்த பகுதியல் இயங்கும் அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 5,000 தொடங்கி ரூபாய் 50,000 வரை பணம் கொடுத்து அனைத்து ஜீவராசிகளையும் அடக்கி ஆளும் ஆண்டவனாக ( மக்கள் மொழியில்) மணல்கொள்ளையர்கள்  அரசாட்சி செய்து வருகிறார்கள்.

விழுப்புரம் பெண்ணையாறு மணல் கொள்ளை
அனைத்து ஜீவராசிகளையும் அடக்கி ஆளும் ஆண்டவனாக ( மக்கள் மொழியில்) மணல்கொள்ளையர்கள் அரசாட்சி செய்து வருகிறார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் மேலோட்டமாக பார்த்தாலே மிகப்பெரிய மோசடி என்பதை புரிந்து கொள்ள முடியும். மணல் கொள்ளையர்களுக்கு  நம் மீது ஏன் இவ்வளவு பாசம்? அதன் பின்புலத்தை பார்ப்போம்.

மணல் என்பது இன்றைக்கு விலையுயர்ந்த பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. அதை பயன்படுத்தி கொண்டு அரசாங்கத்திடம் 3 யூனிட்டுக்கு ரசீது பெற்றுக்கொண்டு 7 யூனிட் மணல் எடுத்துக்கொள்வது. அதற்கு ரசீது போடும் அதிகாரிகளுக்கு தினமும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூபாய் 1 லட்சம் என கீழ்நிலை அதிகாரிகள் தொடங்கி உயர்நிலை அதிகாரிகள் வரை பணப்பரிமாற்ற வேலை நடக்கிறது. இதன் விசுவாசமாக அனுமதி  இல்லாத இடங்களில் எல்லாம் மணல் அள்ளுவது என்ற சட்டவிரோதமான வேலைகள் நடந்து வருகின்றது. மேலும் சட்டப்படி ஒரு மீட்டர் மணல் எடுப்பதை தாண்டி 5 மீட்டர் வரை மணல் எடுக்கும் விதி மீறல்களும் நடந்து வருகிறது.

மணல் கொள்ளையால் எதிர்கொள்ளும் அபாயங்கள்!

மணல் அள்ளுவதினால் ஏற்படும் அபாயத்தை பற்றி நாம் மக்களிடம் விளக்கும் போது சிலர் மேதாவி போல் பேசுகிறார்கள். குறிப்பாக மணல் எடுத்தால் தண்ணீர் வரும்போது சமநிலைக்கு வந்து விடும் என விளக்கம் அளிக்கின்றனர். மலை தொடங்கி கடல் வரை மணல் முழுவதும் சுரண்டிய நிலையில் சாத்தியமில்லை என்பது அவர்களுக்கு தெரியாதது அல்ல.   அவர்களை மணல் கொள்ளையர்களின் காசு அப்படி பேச வைக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

pennaiyaru-river-sand-mafia-vivimu-campaign-04இப்படி அதள பாதாளம் வரை மணல் அள்ளப்படுவதால் மிகப்பெரிய அபாயத்தை நாம் சந்திக்க போகிறோம். குறிப்பாக குடிக்க தண்ணீர் கிடைக்காது. நிலத்தடி நீர் வற்றி விவசாயம் அழியும் இதன் காரணமாக ஆடு, மாடு தொடங்கி மனித ஜீவன் வரை செத்து மடிவதும் ஆற்றை சுற்றியுள்ள 15 கிலோ மீட்டர் வரை இலகுவாகி வீடுகள் இடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதை உடனடியாக உணர்ந்து இருக்கின்ற நாம் மணலை பாதுகாக்கின்ற வகையில்,  அத்தியூர், வேலியம்பாக்கம், காவனூர் போன்ற பகுதிகளில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த சாதி, மதம், கட்சி, ஊர் என்ற பாகுபாட்டை கடந்து ஒன்றுபட்டு போராடுவதன் மூலம் உறுதியாக தடுத்து நிறுத்த முடியும். எடுத்துக்காட்டாக, விருத்தாசலம் பகுதியில் வெள்ளாற்று மணல் கொள்ளையர்களை எதிர்த்து தொடர்ந்து போராடி குறிப்பாக இரவு முழுக்க போராடி குவாரியை இதுவரை செயல்படாமல் தடுத்து வருகின்றனர். அதேபோல் நாமும் ஒரு புது அமைப்பை தொடங்கி தொடர்ந்து போராடுவோம். அதன் மூலம் மண் வளம் மற்றும் நீர் ஆதாரத்தை பாதுகாப்போம்.

பெண்ணையாறு மணல் கொள்ளை
மண் வளம் மற்றும் நீர் ஆதாரத்தை பாதுகாப்போம்.

தமிழக அரசே!

  • 1 மீட்டர் மணல் எடுக்க வேண்டும் என்ற அரசாணை இருந்தும் ஐந்துக்கும் மேற்பட்ட மீட்டர் ஆழம் எடுப்பதை உடனடியாக தடுத்தது நிறுத்து!
  • மூன்று யூனிட் ரசீது பெற்று  ஏழு யூனிட் வரை மணல் அள்ளி செல்லும் கொள்ளை மட்டுமல்லாமல், அதிகாரிகள் துணையோடு அந்த ஒரே ரசீதை பயன்படுத்தி  நாள் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட லோடுகளை ஏற்றி கொள்ளை லாபம் அடிக்கும் மணல் கொள்ளையர்களையும், துணை போகும் அதிகாரிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்! சிறையில் அடை!
பெண்ணையாறு மணல் கொள்ளை
கொள்ளை லாபம் அடிக்கும் மணல் கொள்ளையர்களையும், துணை போகும் அதிகாரிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்! சிறையில் அடை!

இவண்…

விவசாயிகள் விடுதலை முன்னணி
விழுப்புரம் மாவட்டம்.
தொடர்புக்கு
; 96555 87276

நோன்பு, பள்ளி வாசல், தொழுகை… சொற்களின் மூலம் எது ?

5

சாதிமத அடிப்படை வாதிகளின் கருத்தை பெரும்பான்மை தமிழ்மக்கள் ஏற்கவில்லை” என்றார் “யாதும்” ஆவணப்பட இயக்குனர் கோம்பை அன்வர்.

27.12.2014 அன்று தஞ்சை பேருந்து நிலையம் யூனியன் கிளப் மாடியில் நடைபெற்ற “யாதும்” ஆவணப்பட அறிமுகம் திரையிடல் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது

கோம்பை அன்வர்
கோம்பை அன்வர் உரை

இந்த ஆவணப்படத்தை தயாரிக்கும் போது பல்வேறு தகவல்கள் எனக்கு ஆச்சரியத்தை அளித்தன. ஆவணப்படம் பார்த்த நீங்களும் அதை உணர்ந்திருக்கக் கூடும்.

இந்த தஞ்சையிலேயே அல்லாசாமி கோயில் இருப்பது அங்கு ஷியா முஸ்லீம் பள்ளிவாசல் ஆசர்கானா இருப்பது எனக்கு வியப்பை அளித்தது. தஞ்சையில் சன்னி முஸ்லிம் பிரிவினரே அதிகம். அரபு, உருது மொழிகளில் குர்ஆன் எழுதப்பட்டிருந்தாலும் தேவ பாஷை என்ற ஒன்று இங்கு இல்லை. தமிழ், குஜராத்தி, மராட்டி, பெங்காளி என்று அந்தந்த வட்டார பண்பாட்டுக் கலாச்சாரத்தின் அடையாளங்களாகவே முஸ்லீம்கள் பரவலாகி வாழ்கிறார்கள் என்பது எனக்கு மேலும் வியப்பை அளிக்கிறது. எனது பயணம் மேலும் நெடுந்தூரம் உள்ளது என்பதை நான் உணர்கிறேன். சமணம், பௌத்தம் என்று விரிந்து கொண்டே போகிறது.

கடலாடி, திரவியத் தேடிய தமிழர்களின் தொன்மப் பதிவுகள் ஏராளம் உள்ளன. இந்தப் பதிவிலும் நீங்கள் சிலவற்றை பார்த்திருப்பீர்கள். இந்த ஆவணப்படம் ஒரு பகுதிதான். இன்னும் இரண்டு பகுதிகளாக பிரித்து ஆவணப்படுத்தும் முயற்சியில் இருக்கிறேன்.

வாள்முனையில் மதமாற்றம் செய்யப்பட்டது என்று கூறுகிறார்கள். ஏதாவது, ஓரிரு சம்பவங்களை வைத்து அப்படி கருதுவது தவறு. சமண, பௌத்த சமயங்களின் மீதான தாக்குதல்கள் சாதிய இறுக்கம் இதன் எதிர்வினையாக மதமாற்றம் இருந்திருக்கக் கூடும் என்று நான் கருதுகிறேன்.

இராசராசன் வடக்கு நோக்கியும், கஜினி முகமது தெற்கு நோக்கியும் 10-ம் நூற்றாண்டில் படையெடுத்ததை பார்க்கிறோம். குத்புதீன் கில்ஜி முதலிய அடிமை வம்ச அரசுகளை பார்க்கிறோம். அது மன்னர்கள் ஆட்சிகாலம். பீஜப்பூர் சுல்தான் படைத்தளபதியாக தஞ்சையை ஆண்ட ஏகோஜி இருந்தார். சாமோரி மன்னரின் படைத்தளபதியாக குஞ்ஞானி மரைக்காயர் இருந்தார். சிருங்கேரி மடம் மராட்டிய சித்பவன் பார்ப்பனர்களான பேஷ்வாக்களால் தாக்கி அழிக்கப்பட்ட போது மடாதிபதி திப்பு சுல்தானிடம் முறையிட்டார். திப்பு சுல்தான் உதவியது ஆவணமாக உள்ளது.

நோன்பு, தொழுகை, பள்ளிவாசல் போன்ற தமிழ் சொற்கள் பௌத்த சமண தொன்மங்களின் குறியீடாகவே உள்ளன. சீனி வெங்கடசாமி அவர்களின் நூல்களில் மேலும் பலவற்றை நீங்களும் அறிந்து கொள்ளலாம்.

தோள்சீலை போராட்டம், நாடார் உறவின்முறை பள்ளிவாசல் ஆகியவை சமீபத்திய நிகழ்வுகளின் ஆவணங்களாக உள்ளன.

தமிழகத்திலும், கேரளாவிலும் உள்ள கட்டிடக் கலைகள் இஸ்லாமிய திராவிட கலாச்சாரத்தின் கூட்டாக உள்ளது. அதனையும் நான் தமிழ் தொன்மமாகவே பார்க்கிறேன்.

கருப்பாயி என்ற நூர்ஜஹான் நூல் தற்போது விவாதத்திற்கு வந்துள்ளது. முஸ்லீம்களின் வர்க்க ஏற்றத் தாழ்வுகள் எல்லா சமூகத்திலும் உள்ளது போலவே இங்கும் உண்டு. எந்த மதமாக இருந்தாலும் மத அடிப்படை வாதத்திலிருந்து வெளிப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

பெரும்பான்மை தமிழர்கள் சாதி, மதம் பார்த்து தங்களது கடமையை வரையறுத்துக் கொள்வதில்லை. மயிலாடுதுறை தொகுதியில் இரண்டரை லட்சம் முஸ்லீம் ஓட்டுகள் உள்ளன. பா.ம.கவும் முஸ்லீம் லீகும் கூட்டணி வைத்து போட்டியிட்ட போது இஸ்லாமிய வேட்பாளர் பெற்ற வாக்குகள் வெறும் முப்பதாயிரம். “எங்களது வாக்கு இருபத்து ஒன்பதாயிரம், உங்களுடைய வாக்கு ஆயிரம்தான்” என்று முஸ்லீம் லீகைப் பார்த்து ராமதாஸ் கேலி பேசினார். த.மு.மு.க தனது வேட்பாளரை நிறுத்திய போது பெற்ற வாக்குகள் 19,000. இதிலிருந்து தெரிவது பெரும்பான்மை தமிழர்கள் சாதிமத அடிப்படை வாதிகளின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான்.

இந்தச் சந்திப்பு எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. மேலும் எனது பயணத்தைத் தொடர உங்கள் ஆதரவு ஊக்கமளிக்கிறது

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் அறிமுக உரையாற்றினார். தமிழ் பல்கலைக் கழக பேராசிரியர் வெற்றிச் செல்வன், மக்கள் கலை இலக்கியக் கழக மைய கலைக்குழு தோழர் கோவன் ஆகியோர் விமர்சனை உரையாற்றினர். தஞ்சை யூனியன் கிளப் அரங்கம் நிறைந்து வெளியிலும் நின்று மக்கள் நிகழ்ச்சியை கவனித்து ஆதரவு அளித்தனர்.

யாதும் திரையிடல் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள்
யாதும் திரையிடல் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள்

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை கிளை.

லாபத்துக்காக நம்ம கேரியர்ல கை வைக்கிறாங்க : கிருத்திகா

10

நான் கிருத்திகா.

நான் டி.சி.எஸ்லதான் வேலை பார்க்கிறேன். அதாவது பார்த்துக்கிட்டிருந்தேன். திடீர்னு டிசம்பர் 22-ம் தேதி காலையில ஒரு மின்னஞ்சல் வந்தது. உங்க திறமை குறைபாடு காரணமாக உங்களை இந்த புராஜக்டிலிருந்து விடுவிக்கிறோம் என்று சொல்லியிருந்தாங்க. ஆர்.எம்.ஜி (மனித வள நிர்வாகப் பிரிவு)-யுடன் தொடர்பு கொண்டு அடுத்த புராஜக்டை தேடிக் கொள்ளும்படி சொல்லியிருந்தாங்க.

பணி வாழ்க்கையை பலி கேட்கும் கார்ப்பரேட்டுகள்நான்தான் எங்க புராஜக்டோட லீட் (குழுவில் மூத்தவர்), 10 வருச எக்ஸ்பீரியன்சுக்குப் பிறகும் தினமும் நான் கோட் (நிரல்) எழுதுகிறேன், டெக்னிகல் (தொழில்நுட்ப) வேலை செய்றேன். எங்க புராஜக்ட்ல மிடில்வேர் (இடையீட்டு நிரல்) வேலையை நான் மட்டும்தான் பாத்துக்கிட்டிருந்தேன். அந்த புராஜக்ட்டோட லீடும் மூத்த டெவலப்பரும் நான்தான்.

டிசம்பர் 15-ம் தேதி எங்க புராஜக்டுக்கு இன்னொருத்தர டிரான்ஸ்பர் செஞ்சாங்க. “நமக்கு யூ.ஐ-ல (பயனர் இடைமுகம்) வேலை செய்றவங்கதான வேணும், இன்னொரு மிடில்வேர் ரிசோர்ஸ் எதுக்கு”ன்னு கேட்டேன். அதுக்கு பதில் சொல்லாம புதுசா வந்தவருக்கு என்னோட வேலை எல்லாம் கத்துக் கொடுக்கும்படி சொல்லியிருந்தாங்க. நானும் சொல்லிக் கொடுத்தேன்.

எங்க அமெரிக்க கிளையன்ட் (வாடிக்கையாளர்) கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு பார்த்தா என்னை புராஜக்ட்லருந்து விடுவிக்கிறதா ஒரு மின்னஞ்சல். என்னோட பழைய வான் (பணிக்கான அடையாள எண்) வைச்சி லாக்-இன் பண்ண முடியல. பெஞ்ச் வான் பயன்படுத்தி லாக்-இன் செஞ்சேன்.

அதுக்கப்புறம் 1-ம் தேதி என்னோட மேனேஜரா எச்.ஆர் (மனித வளத்துறை) ஒருத்தரோட பேரு போட்டாங்க. அதுக்கு அடுத்த நாளு எங்க குரூப் ஹெட் (குழுத் தலைவர்) பேருக்கு மாத்தினாங்க. என்ன நடக்குதுன்னு எனக்கு எந்த தகவலும் இல்லை. நான் எப்படி வேலை செய்யப் போறேன்னு கம்ப்யூட்டரில் நடக்கும் மாறுதல்களை வச்சி தெரிஞ்சுக்க வேண்டியிருந்தது. ஏதோ செஸ் போர்டுல சிப்பாயை நகர்த்தற மாதிரி என்ன வச்சி சதுரங்கம் ஆடிக்கிட்டிருந்தாங்க.

இப்போ என்னோட நிலைமை என்னன்னு எனக்கே தெரியல. நான் எந்த ஆர்.எம்.ஜியை தொடர்பு கொள்ளணும்னு கூட தெரியல.

அப்படி தெரிஞ்சாலும் புது புராஜக்ட் அசைன் (சேர்வதற்கு) ஆக ஆர்.எம்.ஜி பக்கம் நான் போகப் போறதேயில்ல. அவங்க மனுசங்கள அவ்வளவு அவமானப்படுத்துவாங்க. சாதாரண நேரத்தில புராஜக்டுக்கு போனாலே அங்கங்க அலைக்கழிப்பாங்க. எனக்கு டி.சி.எஸ் இனிமே வேண்டாம். என்னோட திறமைக்கு எங்க வேணும்னாலும் வேலை கிடைக்கும். இதே புராஜக்ட்ல சேர்த்துக்கிறேன்னு சொன்னாலும், எனக்கு டி.சி.எஸ் வேணாம்.

நான் மூணு வருசம் பேண்ட் சி வாங்கினதால என்ன எடுத்திட்டதா என்னோட மேனேஜர் சொல்லியிருக்காரு. டி.சி.எஸ்ல அப்ரைசல்ங்கறதுக்கு அர்த்தமே கிடையாதுன்னு எல்லாருக்கும் தெரியும். நல்லா வேலை செய்றவங்களுக்குத்தான் நல்ல அப்ரைசல்னு கிடையாது. யாரு மேனேஜருக்கு சோப்பு போட்டாங்க, யாரு மேனேஜர்கிட்ட நல்ல எண்ணத்தை உருவாக்கியிருக்காங்களோ அதில இருந்துதான் ரேட்டிங் கிடைக்கும். அது ஒரு பக்கம் இருந்தாலும் கம்பெனியோட வரையறை படியே பேண்ட் சி-ன்னா எதிர்பார்ப்புகள நிறைவேற்றியிருக்கிறோம் என்பதுதான் அர்த்தம்.

இப்போ என்னை புராஜக்ட்ல இருந்து நீக்கினதையே எடுத்துக்கோங்க. எங்க குரூப்ல இன்னொரு புராஜக்ட்ல இருந்தவரோட புராஜக்ட் நவம்பர் கடைசி வாரத்தில முடிஞ்சி அவரு விடுபட்டிருந்தாரு. அவர்கிட்ட இருந்து கம்பெனி லேப்டாப் வாங்கிக்கும்படி மேனேஜர் சொல்லியிருந்தாரு. கிறிஸ்துமஸ் லீவு முடிஞ்சு வரதுக்கு முன்னாடி அவரை இந்த புராஜக்டுக்கு அசைன் பண்ணிட்டு என்ன கழற்றி விட்டிருக்காங்க.

பணி வாழ்க்கையை பலி கேட்கும் கார்ப்பரேட்டுகள்இப்படி புராஜக்ட்ல இருந்து டி-அலகேட் (நீக்கப்படுதல்) ஆன பிறகு 2-3 வாரம் கழிச்சி எச்.ஆர் கூப்பிட்டு வெளிய அனுப்பிடுவாங்கன்னு சொல்றாங்க. என்னோட ஃபிரெண்ட்ஸ் அவங்க ஆபிஸ்ல 30 பேர் வரைக்கும் இப்படி அனுப்பிட்டாங்கன்னு சொல்றாங்க.

எச்.ஆர் மேனேஜர் அஜய் முகர்ஜி லே ஆஃப் எல்லாம் இல்லன்னு சொல்லியிருக்காருன்னு போர்டுல பார்த்தேன். ஒரு வேளை லேஆஃப்பை கை-விட்டுட்டாங்களோ என்னவோ? ஆனாலும், இவங்க என்னை நடத்தினது ரொம்பவும் அவமானமா இருக்கிறது. நமக்குன்னு ஒரு சுயகௌரவம் இருக்கில்லையா. இதுக்கு மேலையும் நாம இங்க வேலை பார்க்கணுமான்னு தோணுது.

என்னோட பெர்ஃபார்மன்ஸ் சரியில்லன்னு எப்படி சொல்றாங்கன்னு கேட்கறேன். நான் என்ன வேலை செஞ்சேன்னு எனக்கு தெரியும். என்னோட மேனேஜருக்கும் தெரியும். இதுக்காக எத்தனை பாராட்டு கடிதம் அனுப்பியிருக்காங்க, “ஜெம்ஸ்” கொடுத்திருக்காங்க. இன்னைக்கு இப்படி திடீர்னு சொல்றத நான் ஏத்துக்கப் போறதில்ல. என்ன திறமை குறைவு, என்ன செயல்பாட்டு பற்றாக்குறைன்னு அவங்க எனக்கு விளக்கம் சொல்லணும்.

என்னே மாதிரியே 25,000 பேரை இப்படி நடத்தி, மன உளைச்சலுக்கும் டென்சனுக்கும் ஆளாக்கியிருக்காங்களே. இப்போ இந்த லிஸ்ட்ல (பட்டியல்) வராதவங்களுக்குக் கூட எதிர்காலத்தில என்ன உத்தரவாதம்? 10 நாளா எனக்கு நடந்தது யாருக்கும் நடக்கக் கூடாது. கிளையன்ட் பில்லிங் (வாடிக்கையாளர் வருமானம்) குறைஞ்சத சரிக்கட்ட, நம்ம கேரியர் (பணி வாழ்க்கை)-ல கை வைக்கிறாங்க. அசிஸ்டன்ட் கன்சல்டன்டுக்கும் அதுக்கும் மேலயும் உள்ளவங்களதான் இப்போ தூக்கி எறியிறாங்க. திறமை, பெர்ஃபார்மன்ஸ்னு சொல்றதெல்லாம் ஏமாத்து வேலை.

(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

_______________________

இதை எதிர்த்து தனியா கோர்ட்டுக்கு போனால், கிருத்திகா சில லட்சத்துக்கு வக்கீல் அமர்த்துக் கொள்ளலாம். ஆனா, டாடாவை தனியாக எதிர் கொள்ள முடியாது. தொழிலாளர் துறையை அணுகினாலும், அந்தத் துறை அதிகாரிகள் யாருக்கு சார்பாக செயல்படுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் இது தொடர்பாக ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். டி.சி.எஸ் சி..ஓ சந்திரசேகரனுடன் அவர்களது ஜப்பான் அலுவலகத்தை திறந்து வைத்தவரே மோடிதான். மாருதி மானேசர் தொழிலாளர் பிரச்சனைக்குப் பிறகு ஜப்பானுக்கே போய் சுசுகியை குஜராத்துக்கு வந்தால் தொழிலாளர் பிரச்சனையே இருக்காது என்று அழைத்தவர் அவர். இப்போது, பெயரளவில் இருக்கிற தொழிலாளர் நலச் சட்டங்களையும் கார்ப்பரேட்டுகளின் கட்டளைப்படி அவர்களுக்கு சாதகமாக தொழிலாளர்களுக்கு எதிரானவையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

மேலும், எல்லா கட்சிகளுக்கும் தேர்தலுக்கு பணம் கொடுப்பதே டாடா முதலான கார்ப்பரேட்டுகள்தான். அந்த கட்சிகள் ஊழியர் சார்பில் எதுவும் செய்து விட முடியுமா?

கோர்ட்டோ, பிரதமரோ, அதிகாரிகளோ யாராயிருந்தாலும், மனு போடுவதால் மட்டும் எதையும் சாதிக்க முடியாது. அரசியல் ரீதியான தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

Join us
New Democratic Labour Front
I T Employees Wing

fb/VinavuCombatsLayoff
Phone : 90031 98576
combatlayoff@gmail.com