Sunday, June 22, 2025
முகப்பு பதிவு பக்கம் 611

வெள்ளாறு : உயிர் போனாலும் ஒரு பிடி மணலை எடுக்க விடமாட்டோம் !

0

டலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டம், முடிகண்ட நல்லூர் மணல் குவாரியை நிரந்தரமாக மூடவேண்டும் என காவாலக்குடி, சாந்தி நகர் மற்றும் பல கிராம மக்கள் 22-01-2015 அன்று  ஜேசிபி எந்திரத்தை மறித்து வெள்ளாற்றில் முற்றுகை போராட்டம்  நடத்தினர். குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது.

மணல் குவாரி முற்றுகை
காவாலக்குடி, சாந்தி நகர் மற்றும் பல கிராம மக்கள் 22-01-2015 அன்று ஜேசிபி எந்திரத்தை மறித்து வெள்ளாற்றில் முற்றுகை போராட்டம் நடத்தினர். குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது.

போராடிய மக்கள் மீது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெற்றிச்செல்வன் சோழதரம் போலீசில் பொய்புகார் மனு கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் செங்குட்டுவன், இளங்கோவன், ரவீந்திரன், சிவக்குமார், கவியரசன் என 30 பெயரை குறிப்பிட்டு, வழக்கறிஞர் ராஜு ஆகியோருடன் பெயர் விலாசம் தெரிந்த 100 ஆண்கள், 70 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணல் குவாரி முற்றுகை போராட்டம்
மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ராஜு, புஷ்பதேவன் ஆகியோர் வாழ்வாதாரத்திற்க்காக போராடுகின்ற மக்களுக்கு உதவி செய்ய சென்றனர்.

அரசு அங்கீகாரம் பெற்ற குவாரியில் பொதுப்பணித்துறை, காவல்துறை, வருவாய்துறை இவர்களை வேலை செய்யாமல் தடுத்தும், அனுமதி பெற்ற பொக்கலைன் மீது ஏறிக் கொண்டும்,வேலை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியும் எங்களை மிரட்டியும் உள்ளார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. (குற்ற எண்  :13/2015), (இ.த.ச.பிரிவு 188,147,341,353,506(1).)

women-at-quarry-siege“மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ராஜு, புஷ்பதேவன் ஆகியோர் வாழ்வாதாரத்திற்க்காக போராடுகின்ற மக்களுக்கு உதவி செய்ய சென்றனர். அவர்கள் மீதும் பொய்வழக்கு போடப்பட்டது கண்டிக்கதக்கது” என சோழதரம் போலீசு ஆய்வாளர் முரளி மற்றும் பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் வெற்றிச்செல்வன் ஆகியோரை கண்டித்து விருத்தாசலம் வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்றத்தை புறக்கணித்தும், பொய் வழக்கை வாபஸ் வாங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வழக்கறிஞர்கள் போராட்டம்
விருத்தாசலம் வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்றத்தை புறக்கணித்தும், பொய் வழக்கை வாபஸ் வாங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதைத் தொடர்ந்து 27/01/2015 அன்று சிதம்பரம் நீதிமன்றத்திலும் வழக்கறிஞர்கள், “வெள்ளாற்றை பாதுகாக்க போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட பொய்வழக்கை திரும்ப பெற வேண்டும்” என நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நட்த்தினர்.

மணல் குவாரி மூடுவது குறித்து அமைதி பேச்சுவார்த்தை
மணல் குவாரி மூடுவது குறித்து அமைதி பேச்சுவார்த்தை

27/01/2015 அன்று சிதம்பரம் சார் ஆட்சியர் அரவிந்த் முன்னிலையில் சேத்தியாதோப்பு டி.எஸ்.பி சுரேஷ்பாபு , ஆய்வாளர் முரளி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெற்றிச்செல்வன், தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மணல் குவாரி மூடுவது குறித்து அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

மணல் அள்ள வேண்டும் என முடிகண்ட நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகஜீவன்ராம் மற்றும் சிலருடன் பேச்சுவார்த்தை நடந்தது.  மணல்குவாரியை மூடக்கோரி பல்வேறு கிராமங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மக்கள் டிராக்டர், வேன், இருசக்கரவாகனம் என பெருந்திரளாக வந்திருந்தனர்.

மக்கள் திரள்
பல்வேறு கிராமங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மக்கள் டிராக்டர், வேன், இருசக்கரவாகனம் என பெருந்திரளாக மக்கள் வந்திருந்தனர்.

நமது மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் செந்தில் மற்றும் சேத்தியாதோப்பு பாலுமகேந்திரன் ஆகியோர் இறுதிவரை நின்று மக்களுக்கு நம்பிக்கையூட்டினர்.

வெள்ளாற்று பாதுகாப்பு இயக்க காவாலக்குடி ஒருங்கிணைப்பாளர்  செங்குட்டுவன் மற்றும் 8 பேர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

“மணலை கொள்ளையடிக்க பாசனத்திற்க்கு வெள்ளாறு வழியாக பெருமாள் ஏரிக்கு தண்ணீர்   செல்லவிடாமல் பாழ் வாய்க்கால் வழியாக கடலுக்கு திருப்படுகிறது. அதிகாரிகள் மனசாட்சிக்கு விரோதமாக நடக்கிறார்கள் .

முடிகண்டநல்லூர் மணல் குவாரி 15 வருடமாக செயல்பட்டு வருகிறது. 3 அடி மணல் எடுக்கலாம் என சட்டம் சொல்கிறது. 25 அடி 30 அடி என ஆற்றை சின்னா பின்னமாக்கி உள்ளார்கள். நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு போர்செட்டு தண்ணீர் இறைக்கவில்லை. சேட்டிலைட்டு கருவி ஒரே இடத்தையா 15 வருடமாக காட்டுகிறது” என இடித்துரைத்து  பேசினர்.

மணல் கொள்ளை பேச்சுவார்த்தை
மணல் கொள்ளை குறித்து இடித்துரைத்து பேசிய பிரதிநிதிகள்.

“முப்போகம் செய்யும் சாகுபடி இன்று இரண்டு போகமாக மாறியுள்ளது. குடி நீருக்கே தட்டுப்பாடு வரும்போல் உள்ளது. 37,500 யூனிட் மணல்தான் எடுக்கவேண்டும். கடந்த பத்து மாதமாக நாள் ஒன்றுக்கு 500 யூனிட் என வைத்தால் 125,000 லோடு மணல் எடுத்துள்ளார்கள். அரசு கஜானாவிற்கு 10-ல் ஒரு பங்குகூட  செல்லவில்லை. அனைத்து பணமும் மணல்கொள்ளையர்களிடம்தான் சென்றுள்ளது.

பொதுப்பணித்துறை ஏ.இ புரோக்கர்கள் போல் செயல்பட்டு வருகின்றார்கள். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரியாக செயல்படவில்லை . எங்களை எதிரிபோல் பார்க்கின்றனர். நாங்கள் பஞ்சம் பிழைக்க ஊரை காலிசெய்யும் நிலை  வந்துவிடும்.

உயிரே போனாலும் ஒரு பிடி மணலை கூட அள்ள விடமாட்டோம். எத்தனை பொய்வழக்கு போட்டாலும், கைது செய்து சிறையில் அடைத்தாலும் மணல் கொள்ளைக்கு எதிராக போராடுவோம்” என உறுதியாக தெரிவித்தனர்.

பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் சார் ஆட்சியரை மக்களை சந்திக்க அழைத்தனர். 300-க்கும் மேற்பட்ட மக்கள் வளாகத்தில் உணர்ச்சிப் பிழம்பாக காட்சியளித்தனர்.

உணர்ச்சிப் பிழம்பாக மக்கள்
உணர்ச்சிப் பிழம்பாக மக்கள்

“ரேஷன் கார்டு வேண்டாம், வாக்காளர் அட்டை வேண்டாம், நாங்கள் எங்காவது போகிறோம் நீங்கள் ஆற்று மணலை முழுவதையும் அள்ளிக் கொள்ளுங்கள்” என உரத்த குரலில் பேசினர்.

செய்வதறியாது திகைத்த இளம் வயது சார் ஆட்சியர், “எங்களுக்கு மக்கள்தான் முக்கியம் கண்டிப்பாக என்னால் ஆனதை செய்வேன்” என உறுதி சொல்லி அனுப்பினார்.

வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் கருவேப்பிலங்குறிச்சி தொடங்கி 20-க்கும் மேற்ப்பட்ட வெள்ளாற்று கரையோர கிராம மக்களிடையே  தொடர்ந்து  நம்பிக்கையுடன் பயணித்து வருகிறது.

இன்று சேத்தியாதோப்பு டி.எஸ்.பி போராடும் முன்னணியாளர்களை அழைத்து “மணல்குவாரி விதிமுறைகளுடன் சரியாக செயல்பட்டு வருகிறது, பாதுகாப்பு கொடுக்கசொல்லி எங்களுக்கு மேலிடத்து உத்தரவு. நாளை நீங்கள் மறித்தால் கைது செய்வோம். போலீசு மீது வருத்தபடாதீர்கள்” என சொல்லியுள்ளார். இப்படி அதிகார வர்க்கம், போலீசு அனைத்தும் மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக இருக்கின்றது. எனினும் மக்கள் இந்த தடைகளை முறியடித்து தமது வாழ்வாதாரப் போராட்டத்தில் வெல்வார்கள்.

விருத்தாசலம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் மணல் குவாரி மூடுவது குறித்த பேச்சுவார்த்தை – பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அடுத்த கட்ட போராட்டம் பற்றி மனித உரிமை பாதுகாப்பு மையமும், வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கமும் கலந்து பேசி முடிவு செய்ய உள்ளனர்.

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாசலம்

திருச்சி, வேதாரண்யம், விழுப்புரம் – மீண்டும் துவங்கியது மொழிப்போர்

4

மிழ்நாட்டு மாணவர்களின் இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பொன்விழா ஆண்டினை நினைவு கூர்ந்து அப்படி ஒரு மொழிப்போரினை மீண்டும் துவக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில், குடியிருப்புப் பகுதிகள் என எல்லா இடங்களிலும் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது.  சைக்கிள் பேரணி, கல்லூரிகளில் வாயில் நாடகம் என பல வடிவங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஜனவரி 25, 2015 அன்று மொழிப்போர் தியாகிகள் நாள் புரட்சிகர அமைப்புகளால் தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டது. அது தொடர்பான தகவல்கள், புகைப்படங்களின் மூன்றாவது பகுதி.

6. திருச்சி

திருச்சியில் மாநகரம் தழுவிய அளவில் சுவரெழுத்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி சுவரெழுத்துக்களை போலீசார் அழித்து விட்டனர்.

trichy-mozhipor-campaign-01தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போதே பாசிச கோமாளி எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், சுவரெழுத்துக்கள் உள்ளிட்டவற்றை அனுமதித்த போலீசு, மொழிப்போர் தியாகிகளின் நினைவேந்தலை தடுப்பதில் முனைப்புடன் செயல்பட்டது. நக்குற நாய்க்கு செக்கு வேறு சிவலிங்கம் வேறு என்பது தெரியாது என்பதை நிரூபித்தது ஜெயா போலீசு.

இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரச்சாரங்களை கொண்டு செல்லும் விதமாக ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்களை அச்சிட்டு மக்கள் மத்தியில் கொண்டு சென்றோம். குறிப்பாக, கல்லூரி மாணவர்கள் மத்தியில் பிரச்சாரங்கள் விரிவாக முன்னெடுக்கப்பட்டது. கல்லூரி விடுதிகளில் குறும்படங்கள் திரையிட்டு மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், ஆரிய பார்ப்பன எதிர்ப்பு போரின் தளப்பிரதேசமாக தமிழ்நாட்டை கட்டியமைக்க உறுதியேற்கும் உணர்வினை உருவாக்கியும் சிறப்புக்கூட்டங்கள் பு.மா.இ.மு தோழர்களால் நடத்தப்பட்டன.

trichy-mozhipor-campaign-03மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறுவது கூடவே, தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்பு போராட்ட பங்களிப்பை உயர்த்தி பிடிக்கும் வகையில், சனவரி 25 அன்று காலை 10 மணி அளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான பாய்லர் ப்ளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனின் பொதுச்செயலாளரான தோழர் சுந்தர்ராஜ் தலைமையில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு மற்றும் பெ.வி.மு தோழர்கள் மாலை அணிவித்தனர். சுமார் 15 நிமிடம் எழுச்சிகரமாக முழக்கமிட்டு உரையாற்றினர்.

trichy-mozhipor-campaign-02அதன் பின்னர் அங்கிருந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் செங்கொடிகளுடன் முழக்கமிட்டு ஊர்வலமாக புறப்பட்டனர். அமெரிக்கன் மருத்துவமனை, நீதிமன்றம், புத்தூர் 4 ரோடு, தென்னூர் உள்ளிட்ட பகுதிகளின் வழியே ஆயிரக்கணக்கான பிரசுரங்களை மக்கள் மத்தியில் விநியோகித்துக் கொண்டே சென்ற ஊர்வலம், தென்னூர் அருகில் உள்ள தக்ஷின பாரத ஹிந்தி பிரச்சார சபா வளாகத்தின் முன் முடிவுற்றது.

சுமார் அரை மணி நேரம் அங்கே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாவட்ட பொருளாளர் தோழர் ஓவியா தலைமை தாங்கி நடத்தினார். ம.க.இ.க தோழர் ஜீவா உள்ளிட்டோர் எழுச்சியுரையாற்றினர்.

trichy-mozhipor-campaign-20“தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போலீசிடம் முன் கூட்டியே அனுமதி பெற்றும், (மக்கள் நடமாட்டம் இல்லாத உழவர் சந்தை அமைந்துள்ள பகுதி வழியாக) அமைதி ஊர்வலமாக செல்லும் போது நீங்கள் மட்டும் சர்ச்சைக்குரிய இடத்தில் இவ்வாறு உரிய முன் அனுமதி பெறாமல் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடத்துவது சரியல்ல” என்று போலீசார் தோழர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

“சீழ் உள்ள இடத்தில் தானே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்! இது எங்கள் உரிமை இதற்கு யாரிடமும் அனுமதி பெறவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” என்று உறுதியான குரலில் மறுப்பை தெரிவித்துவிட்டு இந்தி பிரச்சார சபாவின் முன்பு முற்றுகையிடும் விதமாக விண்ணதிரும் முழக்கங்களை எழுப்பினர் தோழர்கள்.

trichy-mozhipor-campaign-12“இந்தி என்பது மொழியல்ல
பார்ப்பன ஆதிக்க அடையாளம்!

இந்தி கற்றால் வேலை என்பதை
ஏற்றுக்கொள்வது அவமானம்!
வேலைவாய்ப்பு என்பதற்காக
நடத்தலாமா விபச்சாரம்?

இந்தி என்பது மொழியல்ல
சமஸ்கிருதத்தின் மறுஉருவம்!
சமஸ்கிருதம் மொழியல்ல – அது
சாதியைத் திணித்த மனுதர்மம்!

பல மொழியை கற்பது வேறு
பார்ப்பன மொழிக்கு பணிவது வேறு!
பார்ப்பனியத்தை ஏற்க மாட்டோம்
பார்ப்பன இந்தியை எதிர்த்து நிற்போம்!

பார்ப்பனியத்தின் பிடரியைப் பிடித்து
உலுக்கி எடுத்த தமிழ்மண்ணில்
மீண்டும் திரும்புது வரலாறு!
கொட்டமடிக்குது ஆர்.எஸ்.எஸ்!

அனுமதியோம்! அனுமதியோம்!
தியாகிகள்மண்ணில்தமிழ்மண்ணில்
பார்ப்பனியம்கொட்டமடிக்க
அனுமதியோம்! அனுமதியோம்!

சபதமேற்போம்! சபதமேற்போம்!
மொழிப்போர்தியாகிகளே
உங்கள் பெயரால் உறுதியேற்போம்!

வீழ்த்துவோம்! வீழ்த்துவோம்!
ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக,
சமஸ்கிருத இந்தி
ஆதிக்கபண்பாட்டை
போரிட்டு வீழ்த்துவோம்!

ஆணையிடு! ஆணையிடு!
தமிழ்வழி கல்வி பயின்றோர்க்கு
தமிழகத்தில் அரசு வேலை என்று ஆணையிடு!

கல்வி நிலையங்களில் தமிழ் பயிற்று மொழி
அரசு தமிழே நிர்வாக மொழி
நீதி மன்றங்களில் தமிழே வழக்காடுமொழி
என ஆணையில் தமிழை வைப்போம்!

என முழங்கி போராட்டத்தை தொடர்ந்தனர்.

அடுத்தடுத்து வந்த காவல்துறை உயர்அதிகாரிகள் வேறு வழியின்றி பேரணியை அனுமதித்து மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்திற்கு செல்ல அனுமதித்தனர்.

பெண்கள் குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உணர்வுப்பூர்வமாக முழக்கமிட்டு பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து கீழப்பழுர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகிய மொழிப்போர் தியாகிகளின் கல்லறையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்ட தலைவர் காவிரிநாடன் மற்றும் ம.க.இ.க மையக்கலைக் குழு தோழர் சத்யா உள்ளிட்டோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தி உறுதி மொழியேற்று உணர்வூட்டினர்.

trichy-mozhipor-campaign-24மாற்று கட்சிகள் அனைத்தும் இந்நாளை துக்க தினம் போல் அமைதி ஊர்வலமாக நடத்துகையில் புரட்சிகர அமைப்புகள் முழக்கமிட்டு பறையடித்து போராட்டக் களம் போல் மாற்றின.

trichy-mozhipor-campaign-23

செய்தி:
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி பகுதி.

7. வேதாரண்யம்

 வேதாரண்யம் பகுதியின் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாகவும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பாகவும் இந்தி-பார்ப்பன எதிர்ப்பு போரின் அடையாளமாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இந்தி எதிர்ப்பு, மொழிப்போர் தியாகிகளின் தியாகத்திற்கு வீர வணக்க முழக்கம் இடப்பட்டது.

அதனையொட்டி நடந்த அரங்கக் கூட்டத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு, இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றை இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் கொண்டு செல்ல வேண்டிய காலச் சூழலின் அவசியத்தை விளக்கினர்.

தகவல்:
விவசாயிகள் விடுதலை முன்னணி,
வேதாரண்யம்

8. விழுப்புரம்

விழுப்புரம் நகரம் முழுவதும்  பேருந்து,  ரயில் நிலையம், அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி,  விவேகானந்தா கலைக்கல்லூரி,  ES பொறியியல் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, நீதிமன்றம்,  மாவட்ட ஆட்சியர் வளாகம்,  மக்கள் குடியிருப்பு பகுதி என அனைத்து இடங்களிலும் முழு வீச்சில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

tttewqqகுறிப்பாக தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கலையொட்டி 13,14,19 ஆகிய தினங்களில் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்திலும் பிரச்சாரம் செய்யப்பட்டது. பேருந்தில் இருந்த பல இளைஞர்கள் நமக்கு வாழ்த்து கூறி ஆதரவளித்ததோடு, மட்டுமல்லாமல் தமிழ் வாழ்க! என்று பேருந்திலேயே ஒரு இளைஞர் முழக்கமிட்டு தனது உணர்வை வெளிப்படுத்தினர்.

mozhipor-rsyf-vpm-420, 21, 22 -ஆகிய தேதிகளில் நகரத்தில் உள்ள 10 – பள்ளிகளிலும்,  4 – கல்லூரிகளிலும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விளக்கி பேசி பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.  குறிப்பாக அரசு உதவி  பெரும் சம்ஸ்கிருத பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவரை சந்தித்து பேசுகையில் ‘நாங்களே சமஸ்கிருதம் சொல்லி தருகிறோம், எங்க பள்ளியிலேவா’  என்று கேட்டார். அதற்கு நாம் ‘இது தமிழ்நாடு!  தமிழுக்குத்தான் முதல் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்’ என்று விளக்கி கூறியதும் நம் பிரசுரத்தை வாங்கிகொண்டார்.

mozhipor-rsyf-vpm-223-ம் தேதி நீதிமன்றத்திற்கு சென்று பிரச்சாரம் செய்தோம்.  அன்றைய தினம்  விழுப்புரம் மற்றும் திண்டிவனம் வழக்கறிஞர்கள் சங்கங்கள் திண்டிவனம் போலீஸ் இரண்டு வழக்கறிஞர்களை தாக்கியதை கண்டித்து எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்து இருந்தனர்.  இதனால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு  வந்திருந்தனர். இதனால் நீதிமன்றத்தில்  பரபரப்பான சூழல் நிலவியது.

mozhipor-rsyf-vpm-1நெருக்கடியான சூழலிலும்  நாங்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் சென்று பிரசாரத்தை செய்தோம்.  வழக்கறிஞர்களுக்கு பிரசுரம் கொடுக்கும்போது அங்கு ஒரு குழுவாக நின்று பேசிக்கொண்டு இருந்த வழக்கறிஞர்கள் பிரசுரத்தை ஆர்வமாக வாங்கி படித்தனர். அவர்களில் ஒருவர் இவர்கள் மட்டும்தான் எந்த இடத்திலும் துணிச்சலுடன் பிரச்சாரத்தை செய்கிறார்கள் என்று தங்களுக்குள் பேசிக்  கொண்டிருந்தனர். இந்த பிரச்சாரம் வழக்கறிஞர்களிடமும் அங்கே  இருந்த மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

அன்று மாலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது. குறிப்பாக ஆட்சியர் அலுவலகம்,  கருவூலம், வனத்துறை, ஊனமுற்றோர் நலத்துறை, பதிவுத்துறை, அஞ்சல்துறை, என  அனைத்து  அலுவலகங்களிலும் பிரசுரம் விநியோகிகப்பட்டது. அப்போது அரசு ஊழியர் ஒருவர்  ‘நான் கள்ளக்குறிச்சியில் வேலை பார்க்கிறேன், எங்கள் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு பிரசுரம் கொடுக்கவேண்டும். கொஞ்சம் கூடுதலாக பிரசுரம் வேண்டும்’ என்று கேட்டு ஆர்வத்துடன் வாங்கி சென்றார்.

mozhipor-rsyf-vpm-524-ம் தேதி விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, கல்லூரி மாணவர்கள் மற்றும் புதிய இளைஞர்கள் நம்முடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.இதனை பார்த்த மக்கள் உற்சாகமாக நம் பிரசுரத்தை வாங்கி படித்தனர்.  ஒவ்வொரு வீடாக சென்று விளக்கி பேசியதும் மக்கள் ஆர்வமாக கவனித்தனர்.  மேலும் நமக்கு டீ, வடை கொடுத்து தோழர்களின் களைப்பை போக்கி நம்மை மேலும் உற்சாகப்படுதினர்.
இந்த பிரச்சாரம் தமிழ் மொழியையும்,  தமிழரின் வாழ்வையும்,  பண்பாட்டையும் தாக்கி அழிக்க ஆரிய-பார்ப்பன கூட்டம் மீண்டும் படையெடுத்து வரும்போது  உழைக்கும் தமிழ் மக்கள் அதற்க்கு எதிராக போராட எழ வேண்டும் என்ற கருத்தை போர்க்குணத்தோடு வலியுறுத்துவதாக இருந்தது.

ஊர்வலம்  தொடக்கம்

சனவரி 25-ம் தேதி காலை 10.00 மணிக்கு ரயில் நிலைய வாயில் முன் 100 -க்கும் மேற்பட்ட மாணவ, இளைஞர்கள் ஊர்வலத்திற்கு ஆயத்தமானார்கள். ஊர்வலம்  ரயில்வே நிலையத்திலிருந்து  சென்று காமராசர் வீதியில் உள்ள பெரியார் சிலைக்கும், மற்றும் மொழிப்போர்த் தியாகிகளின் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து உறுதியேற்பது என திட்டம்.  எனவே அதற்கான வேலையை தொடங்கினோம். மொழிப்போர் தியாகிகளின் படங்களை கட்டுவது,  தங்களுடைய சட்டையில் பேட்ஜ், தலையில் தொப்பி அணிவது மேலும்  தட்டிகளும், பேனர்களும் பேரணிக்கு தயார் செய்யப்பட்டன. எப்பொழுதும் மக்கள் அதிகம் வரும் அப்பகுதியில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் ஊர்வலம் களை கட்ட தொடங்கியது. அந்த “வீரன் இன்னும் சாகவில்லை” என்ற பகத்சிங் பாடல் ஓங்கி ஒலித்துக்கொண்டு இருந்தது. அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்த மக்கள் நின்று கவனித்தனர்.  மேலும் நம்மிடம் இருந்த பிரசுரத்தை ஆர்வமாக வாங்கி படித்தனர்.

mozhipor-rsyf-vpm-6சரியாக 11.00மணிக்கு ஊர்வலம் ரயில் நிலையத்தில் தொடங்கியதை அடுத்து கம்பீரமாக எழுப்பபட்ட முழக்கம்  தமிழ்நாட்டு மாணவர்களின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி எதற்காக என்பதை ஊர்முழுக்க அறிவிப்பதாக இருந்தது. மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்தை இரு தோழர்கள் வழிகாட்டியாக எடுத்து செல்ல, செங்கொடிகள் மற்றும் தட்டிகளுடன் தோழர்கள் பின்தொடர குருசாமிப்பிள்ளை வீதி, நாப்பாளையம் வீதி, திருவிக வீதிகளின் வழியாக காமராசர் வீதியில் உள்ள பெரியார் சிலைக்கு ஊர்வலம் சென்றடைந்தது. மேலும் கடைகளில் இருந்தும்,  சாலையின் இருபுறம் நின்றும் வீட்டின் மாடிகளில் இருந்தவாறும் மக்கள் ஊர்வலத்தை  கவனித்தனர்.  இரு தோழர்கள் அவர்களுக்கு பிரசுரம் விநியோகித்தார்கள். ஊர்வலத்தில்  எழுப்பப்பட்ட   முழக்கத்தை கவனித்த அப்பகுதி மக்களுக்கு இந்த ஊர்வலத்தின்  நோக்கம் என்ன  என்பதை உணர்த்தும் வகையில் அமைந்தது. ஊர்வலம் முழுவதையும் தோழர்கள் ஸ்ரீராம், தம்பிதுரை இருவரும் தொண்டர்படையாக  இருந்து வழிகாட்டியதோடு   மட்டுமல்லாமல், தோழர்கள் சோர்வடையாமல் இருக்க தொடர்ந்து தண்ணீரும் வழங்கியபடியே வந்தனர்.

mozhipor-rsyf-vpm-3சரியாக 11.45 மணிக்கு பெரியார் சிலைக்கு வந்தடைந்தோம்.

அங்கு வந்த காவல் துறை ஆய்வாளர்  பு.மா.இ.மு செயலரிடம் “நீங்கள் ஊர்வலத்திற்கு  மட்டும்தான் அனுமதி வாங்கினீர்கள் ஒலிபெருக்கி  அனுமதி வாங்கவில்லையே” என்றார்.

அதற்கு நாம் “நீங்க மனுவை இன்னொரு முறை பாருங்கள் அதில்  தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்”  என்றதும்

அதன்பின் சமாளிக்கும் விதமாக “நேரம் அதிகமாகிவிட்டது” என்றார்.

அதற்கும்  “நீங்கள்தான் 11.00 மணிக்கு அனுமதி தந்தீர்கள்” என்று   கூறியவுடன்

“சரிங்க தம்பி நீங்கள் நடத்துங்கள்” என்று கூறி ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் நைசாக பின்வாங்கினர்.

அதன் பின் உறுதியேற்பு கூட்டத்தை பு.மா.இ.மு செயலர் தோழர். மோகன்ராஜ் தலைமையேற்று நடத்தினார். தோழர்கள் பெரியார் சிலைக்கும்,  மொழிப்போர் தியாகிகளின் சிலைக்கும் மாலை அணிவித்து உறுதியேற்றனர்.

இறுதியாக பேசிய தோழர். செல்வக்குமார்  மொழிப்போர் வரலாற்றையும், அதற்கான தற்போதைய தேவையையும்  விளக்கினார்.   மேலும் உலகில் வளர்ந்த பல முன்னணி நாடுகள் அனைத்து துறைகளிலும் தன்னுடைய தாய் மொழியை தான் பயன்படுத்துகின்றனர். தாய்மொழியில் படிக்கும் போதுதான் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் வளரும். அதனால் தான் அவர்களால் முன்னணி நாடாக விளங்க முடிகிறது. பி.ஜே.பி-ஆர். எஸ்.எஸ் கும்பல் கூறுவது  போல இந்தி,சமஸ்கிருதம் படித்தால் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லலாம் என்பது சுத்த பொய்.அனைத்து தேசிய இன, மொழி, பண்பாடு, கலாச்சாரம் அனைத்தையும் ஒழித்து இந்தி-இந்து-இந்தியா என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் அகண்ட பாரத கனவை நனவாக்குவது தான் இவர்களின் திட்டம்.

எனவே மீண்டும் படையெடுத்து வரும் ஆரிய-பார்ப்பன கூட்டத்தை தமிழகத்தை விட்டே விரட்ட உழைக்கும் மக்களாகிய நாம் புரட்சிகர அமைப்புகளின் பின்னால் ஓரணியில் திரள வேண்டும். இதுவே மொழிப்போர் தியாகிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான நினைவேந்தலாகும் என கூறி முடித்தார்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம்

  1. சென்னையில் நடந்த பிரச்சாரம், தெருமுனைக்கூட்டம்
  2. கோவை, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம் நிகழ்வுகள்

– தொடரும் (கரூர், பென்னாகரம், புதுச்சேரி பு.ஜ.தொ.மு, புதுவை பல்கலை பு.மா.இ.மு, சிதம்பரம் பெற்றோர் சங்கம் நிகழ்வுகள் மற்றும் அறந்தாங்கியில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டம் பற்றிய செய்திகள்)

ஐ.பி.எம் கொலைகார கில்லட்டினின் ஆட்பலி தொடர்கிறது

1

“1,12,000 பேரை ஆட்குறைப்பு செய்யப் போவதில்லை. பல ஆயிரம் ஊழியர்களைத்தான் வீட்டுக்கு அனுப்பப் போகிறோம். அதுவும், 2014-ம் ஆண்டில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை விட குறைவான ஊழியர்கள்தான் 2015-ம் ஆண்டில் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள்” என்று ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐ.பி.எம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் தனது ஊழியர்களில் 26% பேரை ஆட்குறைப்பு செய்யப் போகிறது என்ற செய்திக்கு மேற்சொன்னவாறு மறுப்பு தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

ஐ.பி.எம் ஆட்குறைப்பு
“பல ஆயிரம் ஊழியர்களைத்தான் வீட்டுக்கு அனுப்பப் போகிறோம்.”

ஐ.பி.எம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் 2012-ம் ஆண்டு இறுதியில் 4,34,246 ஆக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 2013-ம் ஆண்டு இறுதியில் 4,31,212 ஆக குறைந்திருக்கிறது. இவர்களில் 1.3 லட்சம் பேர் இந்தியாவில் பணிபுரிகின்றனர். 2014-ம் ஆண்டில் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் வேலை இழப்பு நடந்திருப்பதால் 2014-ம் ஆண்டு இறுதிக்கான புள்ளிவிபரத்தை இன்னும் வெளியிடவில்லை.

கடந்த 7 ஆண்டுகளில் ஆண்டுக்கு சுமார் $45 கோடி முதல் $150 கோடி வரை (ரூ 27,000 கோடி முதல் ரூ 90,000 கோடி வரை) ‘ஊழியர் மறுசீரமைப்புக்கு’ செலவழித்திருப்பதாக முதலீட்டாளர்களுக்கான தனது அறிக்கைகளில் தகவல் வெளியிட்டிருக்கிறது, ஐ.பி.எம். 2014-ன் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் $60 கோடி செலவில் ஆட்குறைப்பு நடத்தியிருக்கிறது. இது ஆண்டு முழுவதற்குமான $100 கோடி செலவிலான மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி. 2013-ம் ஆண்டிலும் அதே அளவிலான ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதற்கு எத்தனை ஆயிரம் கோடி செலவழிக்கிறோம் என்று முதலீட்டாளர்களுக்கு சொல்ல வேண்டிய பொறுப்பு ஐ.பி.எம்முக்கு உள்ளது. ஆனால், எத்தனை ஊழியர்கள் வேலை இழக்கப் போகிறார்கள் என்ற விபரத்தை ஊழியர்களிடமோ, அரசிடமோ, பொதுவான சமூகத்திடமோ சொல்ல வேண்டிய பொறுப்பு இல்லை.

$100 கோடி மறுசீரமைப்பு செலவு என்றால் சுமார் 13,000 ஊழியர்கள் வேலை இழக்கிறார்கள். அதாவது, கடந்த 7 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6,500 ஊழியர்களிலிருந்து 21,500 ஊழியர்கள் வரை ஐ.பி.எம்மால் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். (மொத்தம் குறைந்தது 45,500 முதல் அதிக பட்சம் 1.5 லட்சம் ஊழியர்கள்). இந்தக் கணக்கின் படி 2015-ல் 8,000 பேருக்கு சீட்டு கிழிக்கத் திட்டமிட்டுள்ளது ஐ.பி.எம். சுமார் 5,000 பேர் இந்தியாவில் வேலை இழப்பார்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு தனது தனிநபர் கணினி (personal computer) பிரிவை சீனாவின் லெனோவோவுக்கு விற்றதைத் தொடர்ந்து சென்ற ஆண்டு அதன் நிறுவன கணினி (server hardware) பிரிவையும் விற்றிருக்கிறது. வன்பொருள், மென்பொருள், பராமரிப்பு சேவை என்ற பிரிவுகளை கலைத்துப் போட்டு, புதிய துறைவாரியான பிரிவுகளாக, மேகக் கணிமை (cloud computing), பேரளவு தரவு மேலாண்மை (big data), பாதுகாப்பு (security) என மறுசீரமைத்து வருகிறது. அதற்காக, ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது.

ஐ.பி.எம் நிறுவனத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்து எழுதி வரும் ராபர்ட் கிரிஞ்சிலி என்ற இணைய பத்திரிகையாளர் (வலைப்பதிவர்) மறுசீரமைப்பு நடவடிக்கையின் அடுத்த கட்டமாக ஐ.பி.எம் தனது 4.3 லட்சம் ஊழியர்களில் 26% பேரை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்திருக்கிறது என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் இணையதளத்தில் எழுதினார். இது புராஜக்ட் குரோம் என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஐ.பி.எம் “பொதுவாக நாங்கள் வதந்திகளுக்கும், ஊகங்களுக்கும் பதில் சொல்வதில்லை. ஆனால், வதந்தி முட்டாள்தனமாக இருக்கும் போது அதை சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது” என்று ஆரம்பித்து, “நாங்கள் 1,12,00 பேரை ஆட்குறைப்பு செய்கிறோம் என்பது சுத்தப் பொய். நாங்கள் பல ஆயிரம் ஊழியர்களைத்தான் வீட்டுக்கு அனுப்புகிறோம்” என்று விளக்கம் சொல்லியிருக்கிறது.

கிரிஞ்சிலியோ “10,000 பேரை ஆட்குறைப்பு என்ற பெயரிலும் இன்னும் பல ஆயிரம் ஊழியர்களை விருப்ப ஓய்வு, தானாக கடிதம் கொடுத்து விட்டு போவது என்ற முறையிலும் வீட்டுக்கு அனுப்பவிருக்கிறது ஐ.பி.எம்” என்கிறார். திறமை போதாது என்று காரணம் காட்டி வெளியேற்றுவதற்காக பல ஆண்டு வேலை செய்து வரும், திறமையான ஊழியர்கள் பலருக்கு குறைவான மதிப்பீடு கொடுக்கும்படி மேலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

ஐ.பி.எம் ஆட்குறைப்பு
ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது, ஐ.பி.எம்

ஆனால், “4.3 லட்சம் பேரை வேலைக்கு வைத்திருக்கும் ஐ.பி.எம் தனது மொத்த ஊழியர்களில் 3% பேரைத்தான் வீட்டுக்கு அனுப்புகிறது”, “வேலை இழப்பு 1 லட்சம் பேருக்கு இல்லை, 10,000 பேருக்குத்தான்” என்பதுதான் பத்திரிகைகளில் விவாதமாகவும் எதிர் விவாதமாகவும் உள்ளது.

மேலும் உலகெங்கிலும் சென்ற ஆண்டு புதிதாக 45,000 புதிய ஊழியர்களை எடுத்ததாகவும், தற்போது 15,000 பேரை எடுப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் கூறுகிறது, ஐ.பி.எம். அதாவது, “10,000 பேர் வீட்டுக்கு அனுப்பப்படுவதை பற்றி கேள்வி கேட்கிறீர்களே, புதிதாக 15,000 பேரை எடுக்கப் போகிறோமே அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதை எதிர்க்கிறீர்களா” என்று மடக்குகிறது.

இந்தச் செய்தியை டி.சி.எஸ் ஆட்குறைப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். டி.சி.எஸ் 25,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவெடுத்து அமல்படுத்தி வருகிறது என்ற செய்தியை மறுத்த அந்நிறுவனம், “25,000 பேர் எல்லாம் இல்லை, 2,500 பேரைத்தான் நீக்கியிருக்கிறோம்” என்றும் “விலகிச் செல்லும் ஊழியர்கள் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 1-2% தான்” என்றும் விளக்கியிருந்தது.

மேலும் “அனுபவம் வாய்ந்த ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி புதிதாக நாங்கள் எடுக்கவிருக்கும் 55,000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுகிறதே, அதை எதிர்க்கிறீர்களா” என்று மடக்கியது.

“workforce restructuring” அல்லது “reorganization” என பெயர் எதுவானாலும் ஐ.பி.எம் முதல் டி.சி.எஸ் வரை ஒரே கார்ப்பரேட் தர்மம்தான் செயல்படுகிறது.

அடுத்த காலாண்டில் என்ன லாபம், அது சென்ற ஆண்டில் அதே காலாண்டை விட அதிகமா, குறைவா, முந்தைய காலாண்டை விட அதிகரித்திருக்கிறதா குறைந்திருக்கிறதா, அது தொடர்பாக முதலீட்டாளர்களுக்கு என்ன விளக்கம் சொல்வது என முதலாளிகளின் லாபத்துக்காக மட்டும்தான் கார்ப்பரேட்டுகளின் இயக்கமும் பொறுப்பும்.

வாடிக்கையாளருக்கு சிறப்பான சேவை, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பொருளாதாரத்தை வளர்த்தல் என்றெல்லாம் பளபளப்பான கார்ப்பரேட் விளம்பரங்களிலும், அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சாரங்களிலும் காட்டப்படும் பில்ட் அப் உண்மையில் பண முதலைகளுக்கு லாபம் கிடைக்கிறதா என்பதை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படுகிறது. தேவைப்பட்டால், மலிவான விலையில் அமர்த்திக் கொள்ள ஆள் வேண்டும்; அல்லது விருப்பப்படும் எண்ணிக்கையில் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து கொள்ள வேண்டும். இதை ஏற்பாடு செய்து கொடுப்பதுதான் அரசுகளின் வேலையாக இருக்க வேண்டும்.

ஹிட்லரின் நாஜி ஜெர்மனி யூதர்களுக்கு எதிராக நடத்திய கூட்டுப் படுகொலை திட்டத்துக்கு தேவையான கணக்கிடும் கருவிகளை வழங்கிய போதும் முதலீட்டாளருக்கு லாபம் தர வேண்டும் என்ற ‘புனிதமான’ நோக்கம்தான் ஐ.பி.எம்முக்கு இருந்தது. தனது லாப வேட்டையின் விளைவாக கொன்று குவிக்கப்படும் மக்கள் எத்தனை பேர், வாழ்வாதாரங்களை இழக்கும் ஊழியர்கள் எத்தனை பேர் என்று எந்த கார்ப்பரேட்டும் கணக்கு பார்ப்பதில்லை.

ஜின்னி ரோமெட்டி
சதுரங்கத்தில் காய்களை வெட்டி எறிவது போல, லாபம் ஈட்டுவதற்காக ஊழியர்களை வேலையை விட்டு நீக்குகின்றன கார்ப்பரேட்டுகள் – ஐ.பி.எம் முதன்மை செயல்பாட்டு அதிகாரி ஜின்னி ரோமெட்டி

ஏதாவது செய்து முதலீட்டாளர்களை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த ஐ.பி.எம் நிர்வாகம் சென்ற ஆண்டு $1500 கோடி (சுமார் ரூ 90,000 கோடி) செலவில் சந்தையிலிருந்து பங்குகளை வாங்கி முடக்கியிருகிறது. இதற்கான செலவு, புதிய தொழில்நுட்பங்களில் செய்த முதலீட்டை விட அதிகமானதாகும்.

சதுரங்கத்தில் காய்களை வெட்டி எறிவது போல, லாபம் ஈட்டுவதற்காக ஊழியர்களை வேலையை விட்டு நீக்குகின்றன கார்ப்பரேட்டுகள். ஆண்டு தோறும் 2% முதல் 3% வரை ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வது சகஜம்தான் என்று ஊழியர்களையும் மக்களையும் ஏற்றுக் கொள்ளச் சொல்கின்றன.

ஐ.பி.எம் இந்தியாவில் நிரந்தர ஊழியர்களை நீக்கி விட்டு அவர்களையே ஒப்பந்த ஊழியர்களாக சேர்க்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, புராஜக்ட் முடிந்தவுடன் சம்பளம் வருவது நின்று விடும். அடுத்த புராஜக்ட் கிடைத்தால் மீண்டும் சம்பளம் தொடங்கும். ஆள் நீக்கம், புதியவர்களை எடுப்பது, பயிற்சி அளிப்பது போன்ற தொல்லைகள் ஏதும் இன்றி பயன்படுத்தி தூக்கி எறிபவர்களாக (Use and Throw) ஊழியர்கள் வேண்டும் என்பது கார்ப்பரேட்டுகளின் தேவை.

நோக்கியா, ஃபாக்ஸ்கான், மாருதி, பஜாஜ் போன்ற உற்பத்தித் துறை நிறுவனங்கள் முதல் ஐ.பி.எம், டி.சி.எஸ், இன்ஃபோசிஸ் வரையிலான ஐ.டி நிறுவனங்கள் வரை மூலதனமே கடவுள், பங்குச்சந்தையே அதை ஆராதிக்கும் கோயில் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார்கள், முதலாளிகள். அதை மூடி மறைத்து, வேலை வாய்ப்பு, வளர்ச்சி, சமூகப் பொறுப்பு என்று மோசடி பிரச்சாரம் செய்கிறார்கள்.

மூலதனத்தின் பசிக்கு இரை போடும் வெப்ப இரத்த பிராணிகளாக ஊழியர்களை கருதும் இந்த முதலாளித்துவ நடைமுறையை முறியடிக்க ஊழியர்கள் தொழிற்சங்கங்களாக ஒன்று சேர்வதுதான் ஒரே தீர்வு.

இது தொடர்பான செய்திகள்

ஒபாமா அடிமை மோடி – புதுச்சேரியைக் குலுக்கிய பு.ஜ.தொ.மு

0

மோடியின் ஆட்சி! நாட்டிற்கே பேரழிவு!

ஜனவரி 26-ல் ஒபாமா வருகையைக் கண்டித்து பாண்டிச்சேரியில்  ஆர்ப்பாட்டம்.

ந்த ஆண்டு இந்தியாவின் குடியரசு தினக் கொண்டாட்டத்தில், சிறப்பு விருந்தினராக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கலந்து கொள்வது, இந்நூற்றாண்டின் சிறப்புமிக்க நிகழ்ச்சி என்று பத்திரிகைகளும், காட்சி ஊடகங்களும் பரபரப்பு செய்தி  வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

ஜனவரி 26-ல் ஒபாமா வருகையைக் கண்டித்து பாண்டிச்சேரியில்  ஆர்ப்பாட்டம்.ஒபாமாவின் இந்திய வருகையில், நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் விசயமே இல்லை, உண்மையில் ஒபாமாவின் வருகை, தனது கார்ப்பரேட் நலனுக்கு ஏற்றவாறு மோடியின் ஆட்சி நடைபெறுகிறதா என்பதை மோப்பம் பிடித்து உறுதி செய்வதற்குத் தான் என்பதை மக்களுக்கு விளக்கும் விதமாகவும், “மோடியின் ஆட்சி, கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி, இந்து மத பயங்கரவாத ஆட்சி, ஒட்டு மொத்த உழைக்கும் மக்களுக்கும் விரோதமான ஆட்சி, இந்த ஆட்சி நாட்டிற்கே பேரழிவு” என்பதை விளக்கும் விதமாகவும், குடியரசு தினம் அன்று (26.01.2015) புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநில புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு பகுதியின் தோழர்களின் அணிவகுப்பில் ஆர்ப்பாட்டப் பகுதியே சிவப்பானது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் புதுச்சேரி மாநிலத் தலைவர், தோழர். சரவணன் தலைமை தாங்கினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவர் தோழர். விளவை ராமசாமி மற்றும் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தோழர். முகுந்தன் மற்றும் புதுச்சேரி மாநில இணைச் செயலாளர் தோழர். லோகநாதன் ஆகியோர் கண்டனவுரை நிகழ்த்தினர்.

puducheri-ndlf-against-obama-modi-04

ஆர்ப்பாட்டத்தில் மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி சிந்திக்கும் விதமாக தங்களது பாடல்களின் மூலம் மோடியின் ‘அருமை – பெருமை’களையும், மோடியின் கார்ப்பரேட் மாமாத்தனத்தையும் எள்ளி நகையாடினர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர்கள்.

puducheri-ndlf-against-obama-modi-02

நமது நாட்டில் பெரும்பான்மை உழைக்கும் மக்கள், வாழ வழியில்லாமல் தவிக்கும் போது, நமது நாட்டை மோப்பம் பிடிக்க வந்த ஒபாமாவின் மனைவிக்குப் பனாரஸ் பட்டுப் புடவை பிடிக்கும் என்பதை அறிந்து, ஒரு சேலை லட்ச ரூபாய் என 100 சேலைகள் தயார் செய்து கொடுத்து தனது அடிமைத் தனத்தை நிரூபித்துள்ளார்.

யூனியன் கார்பைடு என்பது விசவாயு தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம் என தெரிந்தே அந்நிறுவனத்தை இரசாயன தொழிற்சாலை என்ற பெயரில் போபாலில் அனுமதித்தது இந்திய அரசு. 1984-ம் ஆண்டு அத்தொழிற்சாலையில் ஏற்பட்ட கிரிமினல் கவனக்குறைவால் ஒரே இரவில், 20,000 இந்திய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இன்று வரை அந்த விசவாயுவின் தாக்கத்தினால், பற்பல நோய்களுடனும், அங்கப் பிறழ்வுகளுடனும் குழந்தைகள் பிறக்கின்றனர். இதுவரை அம்மக்களுக்கு எந்த நிவாரணமும் அந்நிறுவனத்தால் வழங்கப்படவில்லை. அப்படிப்பட்ட கொலைகார நிறுவனத்தின் முதலாளி ஆண்டர்சனைக் காப்பாற்றிய அமெரிக்க அரசின் ஜனாதிபதியை இந்தியாவிற்குள் அனுமதிப்பது வெட்கக் கேடு.

puducheri-ndlf-against-obama-modi-08

இப்படிப்பட்ட சாவுகள் மீண்டும் நிகழ்ந்தால், அதற்கு நிவாரணத்தை யார் தருவது என்ற பிரச்சினையால் கடந்த 8 ஆண்டுகளாக முடிவுக்கு வராத அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற, அணு உலைகளால் ஏற்படும் ஆபத்து மற்றும் விபத்துக்களுக்கு அந்த நாட்டு அரசாங்கமே பொறுப்பு என்பதை உறுதி செய்ய நேரில் வந்தவர் தான் ஒபாமா. அதாவது தனது கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காகத் தான் ஒபாமா இந்தியா வந்துள்ளார்.

இப்படிப்பட்ட ஒபாமா வருவதை எப்படி எதிர்க்காமல் இருக்க முடியும். இன்று ஏதோ ஒரு மூலையில், புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதால் ஒபாமா வருவதைத் தடுக்க முடியாது. ஆனால், இது போன்ற ஆர்ப்பாட்டங்களை நாடு முழுவதும் பரவச் செய்வதன் மூலம், மக்களை உணர்வு ரீதியாக மாற்றுவதன் மூலம் மீண்டும் வருவதைத் தடுக்க முடியும்.

இந்தியாவின் கடற்கரையெங்கும் 50 கி.மீ.-க்கு ஒரு அணு உலை என்ற எண்ணிக்கையில் நிறுவப்படவிருக்கும் அணு உலைக்காக, அந்த அணு உலைகள் அமைக்கப் போகும் கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்தை உறுதிப் படுத்தும் விதமாக அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தான் ஒபாமாவின் இந்திய வருகை. ஒபாமாவின் வருகையால், இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும், நாட்டிற்குமே பேரழிவு. இந்தப் பேரழிவைப் பற்றிக் கவலைப் படாமல், கார்ப்பரேட் சேவையே தனது கொள்கை என பகிரங்கமாக அறிவித்துள்ளார் கார்ப்பரேட்டுகளின் அடிமை மோடி.

puducheri-ndlf-against-obama-modi-09‘அணுசக்தி ஒப்பந்தம், பொருளாதார ஒப்பந்தங்கள், தொழிலாளர் சட்ட திருத்தம் என அரசு புதிதாக எதைச் செயல் செய்தாலும், கம்யூனிஸ்டுகளுக்கு எதிர்ப்பது தான் வேலை’ என இப்பிரச்சாரத்தின் போது சில படித்த அறிவு ஜீவிகள் அங்கலாய்த்தனர். கம்யூனிஸ்டுகள், இயங்கியல் ரீதியாகவும், அறிவியல் பூர்வமாகவும் சிந்திப்பவர்கள். அறிவியல் பூர்வமான அணுகுமுறை தூக்கிப் பிடிப்பவர்கள். மோடி சொல்லும் வளர்ச்சி யாருக்கானது என்பதை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து, பரந்துபட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்துவதாக வளர்ச்சி இருக்க வேண்டும். ஆனால், மக்களை அரைப் பட்டினியில் வைத்து விட்டு கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு நாட்டை திறந்து விடுகிறார் மோடி; இன்னும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என மக்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.

மோடியின் இந்திய வருகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக, டில்லி நகரையே அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றி ஒபாமாவின் பாதுகாப்பை உறுதி செய்தனர். ஒபாமா என்ற ஒரு மனிதரைப் பாதுகாக்க வக்கற்றவர்கள் என இந்திய பாதுகாப்பை ஏளனம் செய்துள்ளது அமெரிக்கப் பாதுகாப்புத் துறை. சாதாரண மக்கள் தங்களது வாழ்வுரிமைக்காகப் போராடும் போது, பாய்ந்து குதறும் காவல்துறை, இப்போது கைகட்டி வாய்பொத்தி நின்று, அடிமை போல சலாம் போடுகிறது.

மோடி ஆட்சிக்கு வந்த ஆறுமாதங்களில், கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்வதற்காகவே, நில அபகரிப்பு சட்ட திருத்தம், தொழிலாளர் சட்ட திருத்தம், கார்ப்பரேட் மசோதா என எல்லாவற்றையும் பெயரளவு நாடாளுமன்ற விவாதத்தைக் கூட பொறுக்க முடியாமல் அவசர சட்டங்களாக அமல் படுத்தி வருகிறார். ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற பெயரில் இந்திய நகரங்களை மேம்படுத்துவதாக சொல்லிக் கொண்டு நகரங்களில் வாழும் குடிசை மக்களை வெளியேற்றப் போகிறது மோடி அரசு. இதற்காக மக்கள் வரிப்பணத்தில் முதல் தவணையாக 7000 கோடியை அமெரிக்க முதலாளிகளுக்கு தூக்கிக் கொடுத்துள்ளது மோடி அரசு.

puducheri-ndlf-against-obama-modi-22இந்திய மக்கள் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ‘நல்ல’ நோக்கத்தில் “ஜன் தன் யோஜனா” திட்டத்தை மோடி கொண்டு வரவில்லை. இத்திட்டத்தின் மூலம், அம்மக்களின் மானியங்களை, கார்ப்பரேட்டுகள் நேரடியாக பிடுங்கிக் கொள்ளும் வகையில் தான் இத்திட்டத்தை அமல்படுத்தினார். இத்திட்டத்தின் மூலம் வங்கிக் கணக்கு துவங்கிய ஏழைகள், அந்த வங்கிக் கணக்குகளில் போட்டு வைத்த அவர்களது சேமிப்பான ரூ. 6000/- கோடி ரூபாயை, இன்னொரு கையால் அதானி என்ற தரகு முதலாளிக்கு தூக்கிக் கொடுத்துள்ளார் மோடி. அந்தப் பணத்தை வைத்து ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கங்களை வாங்கி தனது சொத்தைப் பெருக்கியுள்ளார் அதானி. இவ்வாறு பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளும், உள்நாட்டு தரகு முதலாளிகளும் மக்கள் பணத்தை நோகாமல் கொள்ளை அடிக்க வழிவகை செய்து, தான் கார்ப்பரேட்டுக்களின் அடிமை என்பதை தனது ஒவ்வொரு செயல்களின் மூலமும் நிரூபித்து வருகிறார் மோடி.

மறுபுறம், சமஸ்கிருத வாரம், தாய்மதம் திரும்புதல் (கர் வாபஸி), கோட்சேவுக்கு கோயில், ராமனை ஏற்காதவர்கள் முறைதவறிப் பிறந்தவர்கள் என்று பேசுவது இவற்றை விவாதப் பொருளாக்கி மதவெறியைத் தூண்டுவதன் மூலம் தனது கார்ப்பரேட் சேவையை தங்கு தடையின்றி நடத்தி வருகிறது மோடி தலைமையிலான இந்து மதவெறிக் கும்பல்.

puducheri-ndlf-against-obama-modi-01மோடியின் இந்த கார்ப்பரேட் பாசிசத்தையும், காவிப் பாசிசத்தையும் எதிர்க்க வக்கற்றவர்களாக அனைத்து ஓட்டுக் கட்சிகளும் மாறிவிட்டனர். ஏனெனில், எல்லாக் கட்சிகளுக்கும் இது தான் கொள்கையாக உள்ளது.

இந்தக் கார்ப்பரேட் பயங்கரவாதத்திலிருந்தும், காவி பயங்கரவாததிலிருந்தும் நாட்டை விடுவிக்க வேண்டுமெனில், புரட்சிகர அமைப்புகளில் அணிதிரண்டு புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!

என்று தங்களது கண்டனவுரையை தோழர்கள் பதிவு செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் நடந்த போது ஆங்காங்கே நின்றிருந்த மக்களின் கருத்துக்கள்:

  • எதுக்கு அவனை (ஒபாமாவை) அழைக்கணும்? அவன் நமது ராணுவ ரகசியத்த தெரிஞ்சுக்க வர்றான்.
  • மோடி நல்லவன்னு நெனச்சு ஓட்டுப் போட்டது. ஏன் இப்படி நாட்டையே விக்கிறான்? கம்யூனிஸ்டுகள் போராட்டம் நடத்துவது நல்லது தான்.
  • இங்க பேசுறது ஒபாமாவுக்கு கேக்கவா போகுது? இருந்தாலும் கம்யூனிஸ்டு நல்லாப் பண்றாங்க. நல்லாப் பேசுறாங்க.
  • கம்யூனிஸ்டு அடிக்கடி கூட்டம் போடுவாங்க. இப்போ கொஞ்சம் அதிகமாத் தான் இருக்காங்க.
  • ஒபாமா வந்தத எதிர்த்துப் பேசுறாங்க. ஒபாமா வர்றது இவங்களுக்குப் தப்பா தெரியுது. வரவைக்கிறவங்களுக்கு சரியா தெரியுது.
  • நம் நாட்டுல காரே இல்லாத மாதிரி, வெளிநாட்டுக் காரனுக்கு இவ்வளவு பாதுகாப்பு ஏன்? இவங்க நல்லாப் பேசுறாங்க. ஒபாமாவ எதிர்க்குறாங்க.
  • வெளிநாட்டுக் காரனுக்கு இவ்வளவு பாதுகாப்பு தர்றாங்க. நம்ம நாட்டு மக்கள் சாவுறாங்க. கவனிக்க மாட்றாங்க. இவனுங்கள சுடணுங்க.
  • நம்ம குடியரசு தினத்துக்கு இவன அழைச்சி நடத்தக் கூடாது. அவன் சீனாவ கிளப்பி விடுகிறான். நமக்கு எதிரியே அவன் தான்.
  • இவங்க நல்லாப் பேசுறாங்க. ஆனா, மோடி, ஒபாமாவ ஒருமையில் பேசுறது பிடிக்கல. மக்களால தேர்ந்தெடுக்கப்பட்டவங்கள இப்படிப் பேசக் கூடாது.
  • சரியாத் தான் பேசுறாங்க. மக்கள் காது கொடுத்துக் கேட்டத்தாங்க. அவங்கவங்க வேலையப் பாக்குறாங்க. இங்க பேசுறதால, அவனுக்கு (ஒபாமாவுக்கு) என்னங்க. நல்ல பாதுகாப்பாத்தான் போறான்.

தகவல்:

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.
தொடர்புக்கு: 95977 89801.

மொழிப்போர் தியாகிகள் நாள் – கோவை, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம்

1

மிழ்நாட்டு மாணவர்களின் இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பொன்விழா ஆண்டினை நினைவு கூர்ந்து அப்படி ஒரு மொழிப்போரினை மீண்டும் துவக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில், குடியிருப்புப் பகுதிகள் என எல்லா இடங்களிலும் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது.  சைக்கிள் பேரணி, கல்லூரிகளில் வாயில் நாடகம் என பல வடிவங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஜனவரி 25, 2015 அன்று மொழிப்போர் தியாகிகள் நாள் புரட்சிகர அமைப்புகளால் தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டது. அது தொடர்பான தகவல்கள், புகைப்படங்களின் இரண்டாவது பகுதி.

2. கோவையில் மொழிப்போர் தியாகிகள் தின அரங்குக் கூட்டம்

பிறந்திருக்கும் 2015 இந்தித் திணிப்பிற்கு எதிரான மாணவர் போராட்டத்தின் பொன்விழா ஆண்டு.

50 வருடங்களுக்கு முன்பு இதே தமிழகத்தில் மொழிக்காக மொழியின் தனித் தன்மையை காக்க மத்திய அரசை எதிர்த்து  ஒரு போராட்டத்தை ஒரு தேசிய இனம் நடத்தியது. அது அமைதியான உண்ணா விரத போராட்டம் அல்ல. உள் நாட்டுக்குள்ளேயே மக்களை, ஒரு தேசிய இனத்தை கட்டுப்படுத்த முடியாமல் ராணுவத்தை ஏவும் அளவுக்கு வீரியமான பிரமாண்டமான போராட்டமாக விரிந்தது. இந்த இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டத்தின் கேந்திரமான கண்ணி மாணவர்களும் இளைஞர்களுமே.

மொழி என்னும் ஒரு தொடர்பு ஊடகத்திற்காக, ஒரு போராட்டத்துக்கு இத்துணை உயிர் இழப்பு, அரச ஒடுக்கு முறை என்பதை இந்தித் திணிப்பிற்கு எதிரானது என்று மட்டும் அல்லாது, பண்பாட்டு ரீதியான பார்ப்பனிய இந்துத்துவா பண்பாட்டு படையெடுப்புக்கு எதிரான ஒரு போர் என கொள்ள வேண்டும். அப்படி பாரிய பொருளில் புரிந்து கொள்ளும் போதே இதன் முழுப் பரிமாணத்தையும் நம்மால் விளங்கிக் கொள்ள இயலும்.

ஒரு வகையில் பார்த்தால் முழு இந்தியாவிலும் இந்தி பேசாத மக்களையும் அவரவர்தம் தேசிய இனத்தையும் பாதுகாக்க தூண்டியதே தமிழக மாணவர் போராட்டம் தான். அப்போதே, பிற மாநில மாணவர் அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அதன் வாயிலாக போராட்டங்களை முன்னெடுத்து சென்றவர்கள் தமிழகத்தில் உருவாகிய தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டக் குழுவினர். தமிழகத்தில், தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக முதன் முதலாக ஒரு மாநிலக் கட்சி மாநிலத்தில் ஆட்சியில் அமர காரணமாய் இருந்ததும் இந்தப் போராட்டமே. அப்படி தமிழகம் முழுவதும் வீச்சான போராட்டத்தில் தமிழகம் கனன்று கொண்டிருந்த தருணங்கள் அவை.

தமிழ் மக்களின் மரபிலேயே மறை பொருளாக இருந்த பார்ப்பனிய எதிர்ப்புணர்வை ஊதுகுழல் கொண்டு வெளிக் கொணர்ந்த திராவிடக் கட்சிகளின் கை மீறி தமிழகமெங்கிலும் தன்னெழுச்சியாக நடை பெறத் துவங்கியது போராட்டம். பல நூறு மாணவர்கள் ராணுவத்தின் வெறியாட்டத்திற்கு பலியாயினர். சுடச்சுட மிளிரும் பொன் போல,  உயிர்பலிகள் போராட்டத்தின் அடியுரமாக மாறி ஆளும் வர்க்கத்தை கலக்கத்திற்குள்ளாக்கியது. வேறு வழியே இல்லாது இறுதியில் அரசு பணிந்தது. இந்தியுடன் ஆங்கிலமும் தொடரும் என அறிவித்தது.

பார்ப்பனியத்தை தோற்கடிக்க வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்திய தேசிய இனம் இன்று உலகமயமாக்கலின் கீழ் படிப்படியாக சிதைந்து வருகிறது. இந்த போராட்டத்தின் முழுப் பலனையும் அறுவடை செய்த திராவிடக் கட்சிகளையும் விழுங்கி செரித்திருக்கிறது இந்த உலகமயமாக்கல்.

நிலவும் பாரதிய ஜனதா ஆட்சி வந்து 7 மாதங்களுக்குள் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு அம்பலப்பட்டு வருகிறது. மக்கள் நாளுக்கு நாள் நெருக்கடிக்குள் சிக்குண்டு வருகின்றனர். இந்த அரசு எந்திரமும் அதன் கட்டமைப்பும் மீள முடியாத நெருக்கடிக்குள் சிக்கி வருகிறது. மக்களின் போராட்டங்களின் வரைமுறைகளும் எல்லைகளும் உடைந்து வருகின்றன.

எதிர் வரும் 2015-ம் ஆண்டு முழுக்க முழுக்க மக்கள் உரிமைக்கான போராட்டங்களின் ஆண்டாக திகழும் என்று அதன் துவக்க மாதத்திலேயே நினைவுபடுத்துகிறது பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து மாணவர்கள் நடத்தும் இந்த போராட்டம்.

கோவையில் சனவரி 25 அன்று ஆரிய பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபின் வீரியமான குறியீடான தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும் மொழிப்போரின் அவசியம் குறித்து முழக்கமெழுப்பியவாறு ஊர்வலமும், மொழிப் போர் தியாகிகள் நாள் நினைவேந்தல் அரங்குக் கூட்டமும் நடைபெற்றது.

கோவை பெரியார் மாலை
மொழிப்போர் நினைவு நாளில் கோவையில் காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பு.மா.இ.மு. தோழர்கள்

காலை 10:00 மணிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நாற்சந்திகளும் அதிர முழக்கமிட்டோம். அதன் பின்னர், பேருந்து நிலையத்துக்குள் சென்று பரவலாக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தோம்.

கோவை பேரணி
மொழிப்போரை நினைவு கூர்ந்து முழக்கங்கள் – கோவை வீதிகளில்

காந்திபுரத்திலிருந்து வி‌.கே‌.கே மேனன் சாலை வழியாக சித்தாபுதூர் சாலையைச் சுற்றி மீண்டும் காந்திபுரம் வரை முழக்கமிட்டபடியே ஊர்வலமாகவும் பிரசுர விநியோகமும் செய்யப்பட்டது.

போக்குவரத்து நெரிசலான கோவையின் பிரதானமான சாலைகளான அவற்றில் நம் தோழர்கள் முழக்கமிட்டபடியும் இரு மருங்கிலும் உள்ள கடைகளிலும் வீடுகளிலும் பிரசுரங்களை விநியோகித்த வாறும் இளம் மாணவர்களிடம் விளக்கி பேசியவாறும் வந்தது, மக்கள் மத்தியில் பரவலான கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது. பலரும் துண்டுப் பிரசுரங்களை கேட்டு கேட்டு வாங்கினர். போக்குவரத்து காவலர்களும் துண்டுப் பிரசுரங்களை வாங்கினர்.

ஊர்வலம் முடிந்தவுடன் டூவீலரில் அமர்ந்து இரு புறமும் கொடிகளை பிடித்தவாறே அரங்குக் கூட்டத்திற்கு சென்றோம்.

காலை 11:30 வாக்கில் கூட்டம் துவங்கியது. கூட்டத்திற்கு பு.மா.இ.மு வின் கோவை மாவட்ட அமைப்பாளர் தோழர் பாபு தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில், இந்தித் திணிப்பு போராட்டத்தை பற்றியும் அது இந்தித் திணிப்பு மட்டுமல்ல, பார்ப்பன பண்பாட்டு திணிப்பு என்பதனை பற்றி விளக்கி பேசினார்.

பு.மா.இ.மு வின் கோவை மாவட்ட அமைப்பாளர் தோழர் பாபு
பு.மா.இ.மு வின் கோவை மாவட்ட அமைப்பாளர் தோழர் பாபு

அடுத்ததாக சிறப்புரையாற்றிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கோவை மாவட்ட செயலர் மணிவண்ணன் இந்தித் திணிப்பு போராட்டத்தை பற்றியும் தனது 12-வது வயதில் தான் அதில் கலந்து கொண்டதை பற்றியும் காங்கிரஸின் துரோகத்தையும் விளக்கிப் பேசினார். அடுத்து அவர் தற்போதைய மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சிகளும் தமிழ்த்தேசிய இயக்கங்களும் இந்த நிகழ்வை ஒட்டி கடனுக்கென்று செய்வதை போல் மக்களிடம் பிரச்சாரம் செய்வதை அம்பலப்படுத்தி பேசினார். இத்துடன் சமீபத்திய விடயங்களான பெருமாள் முருகன் விவகாரம் முதலியவற்றில் இந்துத்துவ நடவடிக்கைகளை விளக்கி பேசியது இளைஞர்களுக்கு பலனுள்ளதாக இருந்தது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கோவை மாவட்ட செயலர் மணிவண்ணன்
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கோவை மாவட்ட செயலர் மணிவண்ணன்

இறுதியாக பு.மா.இ.மு வின் தோழர் திலீபனின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

தோழர் திலீபன்
பு.மா.இ.மு வின் தோழர் திலீபனின் நன்றியுரை

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை.

3. கடலூரில் பேரணி, உறுதியேற்பு, பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

23/01/15 அன்று கடலூர் பெரியார் கலை கல்லூரி மாணவர்கள் மத்தியில் துண்டு பிரசாரம் அடித்து விநியோகம் செய்து பெரியார் சிலை முன் மாணவர்கள் கூடி சமஸ்கிருத மயமாக்கலுக்கு எதிராக உறுதி மொழி ஏற்றனர்.

கடலூரில் சமஸ்கிருத மயமாக்கலுக்கு எதிராக உறுதிமொழி
கடலூரில் சமஸ்கிருத மயமாக்கலுக்கு எதிராக உறுதிமொழி

கடலூர் நகரம் முழுவதும்

  • மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி வீறுகொண்டெழுவோம்!
  • தமிழ் தேசிய இனத்தின் கடவுள் – ஆன்மீக மறுப்பு, வேத, வைதீக – பார்ப்பன, சமஸ்கிருத – இந்தி எதிர்ப்பு பாரம்பரியத்தை போர்வாளாக ஏந்துவோம்!
  • மீண்டும் படையெடுத்து வருகிற ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக, சமஸ்கிருத – இந்தி ஆதிக்க பண்பாட்டை போரிட்டுவீழ்த்துவோம்!
  • ஆரிய – பார்ப்பன எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாக தமிழ்நாட்டை மீண்டும் கட்டியமைப்போம்!

என்ற முழக்கங்களைக் கொண்ட சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டன.

கடலூரில் சமஸ்கிருத மயமாக்கலுக்கு எதிராக
பெரியார் சிலைக்கு மாலை

துண்டு பிரசுரம் அடித்து அரசு பள்ளிகளிலும்,  K.N.C பெண்கள் கலை கல்லூரிகளிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம், ஜனநாயக சிந்தனையாளர்களிடம் விநியோகிக்கபட்டது.

25/01/15 அன்று பகுதி இளைஞர் மாணவர்கள் கலந்து கொண்டார்கள். அன்று பெரியார் சிலை குப்பை கூளங்களாக இருந்ததை தோழர்கள் சுத்தம் செய்தனர்.

அப்போது அங்கு வந்த தமிழ் உணர்வாளர் ஒருவர் அந்த சிலை சுத்தம் செய்த தோழர்களிடம், “இன்று என்ன நாள் பெரியாரை சிலையை சுத்தம் செய்றீங்க” என்று கேட்டார்.

“மொழிப்போர் தியாகிகளின் பொன்விழா” என்றதும்,

“பெரியாரை வைத்து பிழைக்கிறவர்கள் ஒன்றும் செய்யாதபோது கம்யுனிஸ்டு தோழர்கள் ஆன நீங்கள் வந்து செய்றீங்க” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

காலை 10.30 மணிக்கு உழவர் சந்தையில் பேரணி  தொடங்கியது  தோழர்கள் போர்க்குணத்தோடு முழக்கமிட்டு நடந்து வந்தனர்.

தோழர் புருஷோத் வரவேற்று பேசினார். தொடர்ந்து தோழர் கருணாமூர்த்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

மீண்டும் படையெடுத்து வருகிற பார்ப்பன பயங்கரவாதிகளை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்றும் தமிழில் பயின்றவர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரவேண்டும் என்றும் பள்ளிகளில் பயிற்று மொழியாக தமிழை முன்னிறுத்த வேண்டும், வழக்காடும் மொழியாக நீதிமன்றங்களில் தமிழே பயன்படுத்த வேண்டும், அலுவலகங்களில் தமிழே அலுவல்மொழியாக பயன்படுத்த வேண்டும் என்றும் விளக்கவுரையாற்றினார்.

கடலூர் மொழிப்போர் நினைவுநாள்
பெரியாரின் சிலைக்கு தோழர் செந்தமிழ் மாலை அணிவித்தார்

பெரியாரின் சிலைக்கு தோழர் செந்தமிழ் மாலை அணிவித்தார்.  பார்ப்பனிய எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

வீர வணக்கம்! வீர வணக்கம்!
மொழிப்போர் தியாகிகளுக்கு!
வீர வணக்கம்! வீர வணக்கம்!

நெஞ்சிலேந்துவோம்! நெஞ்சிலேந்துவோம்
மொழிப்போர் தியாகிகளின்
நினைவை நெஞ்சிலேந்துவோம்!
போர்வாளாக ஏந்துவோம்!
தமிழ் தேசிய இனத்தின்
கடவுள் மறுப்பு – ஆன்மீக மறுப்பு,
வேத, வைதீக – பார்ப்பன,
சமஸ்கிருத – இந்தி எதிர்ப்பு
பாரம்………பரியத்தை
போர்வாளாக ஏந்துவோம்!

போரிட்டு வீழ்த்துவோம்!
மீண்டும் படையெடுத்து வருகிற
ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக,
சமஸ்கிருத – இந்தி
ஆதிக்க பண்பாட்டை
போரிட்டு வீழ்த்துவோம்!

கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!
ஆரிய – பார்ப்பன எதிர்ப்புப் போரின்
தளப்பிரதேசமாக தமிழ் நாட்டை
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!

இவன்
புரட்சிகர மாணவர்
இளைஞர் முன்னணி
கடலூர்
தொடர்புக்கு
:9791776709

4,5. சிதம்பரம், விருத்தாசலம்

சிதம்பரத்தில் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி பிரச்சாரம் செய்து மாணவர்களுக்கு சமஸ்கிருத பண்பாட்டு படையெடுப்பை எதிர்ப்பதற்கு உறுதிமொழி செய்வித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

விருத்தாசலம் பகுதியில்  தியாகி இராசேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து உறுதியேற்புப் கூட்டம் நடத்த திட்டமிட்டு மக்கள் கூடும் இடங்களிலும் கல்லூரியிலும் சுவர்விளம்பரம் எழுதப்பட்டது.  பேருந்து, தாலுக்கா அலுவலகம், மற்றும் தனிநபர்களிடமும் பிரசுரம் கொடுத்து மீண்டும் படையெடுத்து வருகிற வேத, வைதீக, சமஸ்கிருத இந்தி ஆதிக்க பண்பாட்டை போரிட்டு வீழ்த்த வேண்டிய அவசியத்தை விளக்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.

virudai-anit-hindi-imposition-protest-01கல்லூரி, பள்ளிகளுக்கு சனவரி 25 விடுமுறை நாள் என்பதால் 23-1-2015 அன்று பள்ளி கல்லூரிகளில் உறுதியேற்பு கூட்டம் நடத்தப்பட்டது. காலை 7 மணிக்கு விருத்தாசலம் நகரிலிருந்து பல்வேறு கல்லூரிகளுக்கு செல்லும் பேருந்துக்கு காத்திருந்த மாணவர்களிடம் பிரசுரம் கொடுத்து பேருந்துகளிலும் மொழிப்போர்த் தியாகிகளின் தியாகத்தையும், இன்றைய சூழ்நிலையில் மீண்டும் அப்படிபட்ட தியாகம் தேவைப்படுவதையும் விளக்கிப் பேசியவுடன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

virudai-anit-hindi-imposition-protest-02விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி நுழைவாயிலில் மாணவர்களிடம் இந்தித் திணிப்புப் எதிர்த்து போராட உறுதியேற்க கூறியபோது ஆளும்வர்க்கம் சொல்லக்கூடிய சடங்குத்தனமான உறுதிமொழி மட்டுமே பழகியிருந்த மாணவர்களிடம் கையை மேலே உயர்த்தி வர்க்க ரீதியான உணர்வைவூட்டும் உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர். அதேபோன்று அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களிடத்தில் பேசியதில் இந்தித் திணிப்பை எதிர்த்து போராட உறுதிமொழி ஏற்றனர்.

virudai-anit-hindi-imposition-protest-03விருத்தாசலம் புமாஇமு தோழர்களும், அண்ணாமாலை பல்கலைக் கழகக மாணவர்களும் பங்கேற்று மொழிப்போர் தியாகி ராசேந்திரன் சாலையில் துவங்கி ராசேந்திரன் சிலையை நோக்கி சென்ற பேரணி ஆரிய – பார்ப்பன எதிர்ப்புப் போருக்கு மக்களை அறைகூவி அழைக்கின்ற முழக்கங்களை விண்ணதிர முழக்கமிட்டு சென்றது அப்பகுதி மக்களுக்கும் மாணவர்களுக்கும் புதிய விசயமாக இருந்தது.

virudai-anit-hindi-imposition-protest-06தி.மு.க, அ.தி.மு.க தொடங்கி எல்லா ஓட்டுக்கட்சிகளும் மொழிப்போர் உணர்வை ஊட்டுவதற்கு மாறாக சவக்களையுடன் அமைதி ஊர்வலமாகவே சென்றனர்.

  • அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தை திணித்து தழிழை ஒழிக்கமுனையும், தில்லைக் கோவிலை சிந்தாமல் சிதறாமல் பார்ப்பன தீட்சிதர்க்கு அள்ளிகொடுத்த பார்ப்பன பாசிச ஜெயாவின் பாதந்தாங்கிகள் தியாகி இராசேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தது வெட்ககேடான ஒன்று.
  • தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் கருணாநிதி தமிழுக்காக தமிழ் வளர்ச்சிக்காக துரும்பைக்கூட அசைக்காதவர் அவருடைய உடன்பிறப்புகள் பிழைப்புக்காக மாலை அணிவித்தனர்.
  • தமிழ் மொழியின் விரோதியான பாஜக வின் ஐந்தாம் படைகளான தேமுதிக, பாமக, மதிமுக, ஆகியவர்களும் சம்பிரதாயத்துக்கு வந்து மாலை அணிவித்தார்கள்.
  • வாண்டையார் சாதிவெறிக் கும்பலோ  ஊளையிட்டுக்கொண்டு சென்றன.

அம்மா, தளபதி கேப்டன் வாழ்க என்று முழக்கமிட்ட இந்த ஓட்டுப் பொறுக்கிகள் இன்று நடக்கும் பார்ப்பன – சமஸ்கிருத பண்பாட்டு ஆக்கரமிப்புக்கு எதிராக மறந்தும் குரல் கூட எழுப்பவில்லை. இதற்கான தகுதியோ உணர்வோ ஆற்றலோ கிடையாது என்பதை பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்திக் கொண்டனர்.

தமிழ் தேசிய இனத்தின் கடவுள் – ஆன்மீக மறுப்பு, வேத, வைதிக – பார்ப்பன, சமஸ்கிருத – இந்தி எதிர்ப்பு போராட்ட பாரம்பரியத்தை போர்வாளாக ஏந்த அறைகூவி அழைத்த புமாஇமு பேரணி சிலையை அடைந்ததும் உணர்ச்சி ஊட்டும் வகையில் இந்தித் திணிப்பு எதிர்புப் போராட்டத்திற்கு அறைகூவி மாணவர்கள் முழக்கமிட்டனர்.

மொழிப்போர் தியாகி ராசேந்திரன் சிலைக்கு விருத்தாசலம் பு. மா. இ. மு அமைப்பாளர் தோழர் முருகானந்தம், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு, அண்ணாமலை பல்கலைகழக பு.மா.இ.மு மாணவர் அஞ்சாநெஞ்சன் ஆகியோர் மாலையிட்டு முழக்கமிட்டனர்.

virudai-anit-hindi-imposition-protest-05அதன்பின் தோழர் ராஜு சிறப்புரையாற்றினார்.

“தமிழறிஞர்களை விட தமிழ் உழைக்கும் மக்களே மொழியைக் காக்க போராடி உயிர் துறந்து பார்ப்பன பண்பாட்டு ஆக்கிரமிப்பை முறியடித்தனர். 1000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த ஆரிய பார்ப்பன பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் இன்று வரை தொடர்கிறது.

1965-ல் வீறுகொண்டெழுந்த மாணவர்கள், இளைஞர்களின் மொழியை காப்பதற்கான போராட்டம் இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து தேசிய இனங்களின் தாய்மொழிகளையும் காத்தது. உலகில் வேறெங்கும் இல்லாத அளவு மைய அரசு ராணுவத்தை ஏவி நூற்றுக்கணக்கான மாணவர்கள் இளைஞர்களை சுட்டுப் பொசுக்கி மொழியை காப்பதற்கான போராட்டத்தை ஒழித்துக்கட்ட முனைந்தது.

தோழர் ராஜூ உரை
தோழர் ராஜூ உரை

சுட்டு கொல்லக் கொல்ல போராட்டத் தீ மேலும் மேலும் பற்றி படர்ந்து இந்திய அரசை ஆட்டம் காண வைத்தது. பயந்து போன மத்திய அரசு இந்தி திணிப்பை கைவிட்டு, அனைத்து தேசிய இனங்களின் மொழிகளை அங்கிகரித்தது.

இன்றோ பார்ப்பன பாசிச பாஜக மீண்டும் ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்புப் போரை தொடுத்துள்ளது.

  • பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வை கற்பிக்கும் மனுதர்மம், பகவத்கீதை உட்பட பல பிற்போக்கு மூடத்தனத்தை கற்பிக்கும், இவற்றிற்காக கொலை, களவு, பொய், கற்பழிப்பு போன்ற கிரிமினல் குற்றங்களை செய்யத்தூண்டும் வேத நூல்களை கொண்டதே சமஸ்கிருத மொழியின் பண்பாடு.
  • ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” , “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என சமத்துவத்தை உயர்த்திப் பிடித்த “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” கொல்லாமை, கள்ளுண்ணாமை, பொய் சொல்லாமை, பிறன்மனை நோக்காகமை போன்ற உயரிய அறங்களை கற்பிக்கின்ற பண்பாடுதான் நமது பண்பாடு.

இந்த தமிழையும் தமிழ் பண்பாட்டையும் காக்க ஆரிய பார்ப்பன பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக மொழிப்போர் தியாகிகளின் வழியில் மீண்டும் வீறுகொண்டெழ உறுதியேற்போம்” என அறைகூவி அழைத்து தனது உரையை முடித்தார்.

அதன்பின் ஆரிய பார்ப்பன எதிர்ப்பு போரின் தளப்பிரதேசமாக தமிழகத்தை கட்டி அமைப்போம் என மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுகொண்டனர்.

virudai-anit-hindi-imposition-protest-12தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
அமைப்புக் குழு
விருத்தாசலம்

(சென்னையில் நடந்த பிரச்சாரம், தெருமுனைக்கூட்டம்)

– தொடரும் (திருச்சி, வேதாரண்யம், விழுப்புரம், கரூர், பெண்ணாகரம், புதுச்சேரி நிகழ்வுகள் மற்றும் அறந்தாங்கியில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டம் பற்றிய செய்திகள்)

ஜெயா பிணை மனு : உச்ச நீதிமன்றத்தின் அதீத அக்கறை – அவசரம் !

6

ஜெயலலிதா-சசிகலா கும்பலுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் போக்கும் முடிவும் எத்தகையதாக இருக்கும் என்பதை, அக்கும்பலின் பிணை கோரும் மனுவைப்  பல சட்ட விதிகளுக்கும் மரபுகளுக்கும் இயற்கை நீதிக்கும் எதிராக, மாறாகக் கையாண்டு, உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் ஆணைகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. சொத்துக் குவிப்புக்காக ஜெயலலிதா- சசிகலா கும்பல் புரிந்துள்ள  குற்றங்களுக்கு இணையான  அதிகார முறைகேடு குற்றங்களை உச்ச நீதிமன்றம் புரிந்துள்ளது. இந்தக் குற்றங்களே தனியே விசாரித்துத் தண்டிக்கத்தக்கன.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து
இயற்கை நீதிக்கு முரணாக ஜெயா-சசி கும்பலுக்குப் பிணை வழங்கியிருப்பதோடு அவ்வழக்கை விரைந்து முடிப்பதற்குமான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து

ஆனால், உச்ச நீதி, உயர் நீதி மன்ற நீதிபதிகள் அவ்வாறான  தான்தோன்றித்தனமான தீர்ப்புகள் வழங்குவதைத் தடுப்பதற்கோ, வளையும் செங்கோலை நேராக்குவதற்கோ நீதியான வழி – நேரான வழியேதும் கிடையாது. மீண்டும்  அவர்களிடமே மறு சீராய்வு மனுப்போட்டு ஒருமுறை மன்றாடலாம்! மற்றபடி, அவ்வாறான தவறு செய்யும் “நீதியரசர்களை”க் கேள்விக் குள்ளாக்குவதற்கோ, விசாரிப்பதற்கோ, தவறு செய்தார்கள் என்று நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்வதற்கோ வழியேதும் கிடையாது!

“நீதியரசர்கள்” விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வழக்குகளின் தீர்ப்புகளில் மட்டுமல்ல, தாங்களே இலஞ்ச – ஊழல், அதிகார முறைகேடுகள், பாலியல் குற்றங்களில் சிக்கினால்கூட இரகசிய விசாரணை மற்றும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவிருந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், நீதிபதிகளோ சட்டப் பாதுகாப்பு வளையத்துக்குள் ஒளிந்து கொண்டும் அவர்களுக்குள் கூட்டுச்சேர்ந்து கொண்டும் தப்பித்துக் கொள்கிறார்கள். செல்வாக்கு மிக்கவர்களின் தாக்குதல்களில் இருந்து “நீதியரசர்களை”க் காப்பதன் மூலம் நீதிவழுவாது அவர்கள் செயல்படவேண்டும்; அதனால்,  நடுநிலையான தீர்ப்புகள் வரவேண்டும்; ஒருபக்க சார்பாக தீர்ப்புகள் வந்துவிடக்கூடாது என்பதற்கான ஏற்பாடுதான் இந்த அரசியல் சட்டரீதியான பாதுகாப்பு என்று சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த தனிச் சிறப்பான, அரசியல் சட்ட ரீதியான பாதுகாப்பிருக்கும் துணிச்சலில்தான் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் ஜெயலலிதா – சசிகலா கும்பலின் பிணை கோரும் வழக்கில் பல சட்ட விதிகளுக்கும் மரபுகளுக்கும் இயற்கை நீதிக்கும் எதிராக, மாறாகக் கையாண்டு நடந்துகொண்டுள்ளார்கள். இவை கண்டு நாட்டின் சட்ட-நீதி வல்லுநர்கள் திக்பிரமை பிடித்தவர்களைப் போல் வாயடைத்துக் கிடக்கிறார்கள். உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களில் சிலர்  சொல்லியிருக்கிறார்கள்: “என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. பிணை கோரும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் மட்டுமே வாதங்களை வைத்தார்கள். எதிர்த்தரப்பின் வாதங்கள் கேட்கப்படவே இல்லை.”

எதிர்த்தரப்பு வாதங்கள் எதையுமே கேட்காமல், குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயா-சசி தரப்பு வழக்கறிஞர்களோடு வியாபார பேரக் கலந்தாலோசனையைப் போல பேசி முடித்து உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் தீர்ப்புகளை அறிவித்து விட்டார்கள்.
நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை நிராகரிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளைக் கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் பிணை கோரிய மனுவில் முன்வைத்திருந்தது, ஜெயா-சசி கும்பல். அதனாலேயே பிணை கிடைக்கவில்லை என்று அக்கும்பல் தனது தரப்பு வழக்கறிஞர்கள் மீது சீறிக்கொண்டிருந்த நிலையில், பிணை தவிர வேறு கோரிக்கைகளை முன்வைக்க அஞ்சிக்கொண்டிருந்தது. அதனாலேயே உச்ச நீதிமன்றத்திலேயே மிக அதிக கட்டணம் வசூலிக்கும் வழக்கறிஞர் ஃபாலி நாரிமனை அமர்த்திக்கொண்டது. அவரோ தன் தரப்பினர், “வீட்டுக் காவலில் (வீட்டுச் சிறையில்) இருக்கக் கூடவும்  தயார்; பிணை கிடைத்தால் போதும்” என்று  தாழ்பணிந்து மன்றாடினார்.

ஆனால், அவரே எதிர்பாராமல் “ஐயய்யோ! அதெல்லாம் வேண்டாம்” என்று பதறிய தலைமை நீதிபதி எச்.எல். தத்துவோ பிணை மனுவில் குற்றவாளிகள் தரப்பில் முன்வைக்காத கோரிக்கைகளையும் வாரிவழங்க தயாராகவிருக்கக் கண்டார். அதேசமயம், இவ்வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அமர்வு கறாராக  இருப்பதைப்போலவும், குற்றவாளிகள் தரப்பு பணிவுடன் மன்றாடுவதைப் போலவும் வழமையான நீதிமன்ற நாடகங்களில் ஒன்றை அரங்கேற்றினார்கள்.
“ஏற்கெனவே, இந்த சொத்துக் குவிப்பு வழக்கு 18 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டுவிட்டது. இனிமேலும்  சகித்துக்கொள்ள முடியாது. இனியும் தாமதிக்காமல் மேல்முறையீடு செய்துவிடவேண்டும். அதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும்” எனக் குரலில் மட்டும் “கறார்” காட்டிவிட்டு, குற்றவாளிகள் தரப்புக் கோரியதைவிட அதிகமாகவே அவகாசம் கொடுத்தார், தலைமை நீதிபதி. அதைப் பார்த்தவர்கள் ஏதோ சலுகை காட்டிவிட்டதாக எண்ணக் கூடாது என்பதற்காகவே, திடீரென்று குரலை உயர்த்தி, மேலும் “கறார்” காட்டி, “மேல்முறையீடு செய்வதில் மேலும் ஒருநாள்கூடத் தாமதம் செய்யக் கூடாது. தாமதம் செய்தால் பிணை உத்திரவை ரத்து செய்துவிடுவோம்” என்று எச்சரிப்பதுபோல நாடகமாடினார்.

வழக்குரைஞர் ஃபாலி நாரிமன்
நீதிமன்ற நடத்தை நெறிமுறைகளுக்கு எதிராக ஜெயாவின் சார்பாக உச்சநீதி மன்றத்தில் வாதாடிய வழக்குரைஞர் ஃபாலி நாரிமன்

உண்மையில், சிவாஜி கணேசன் “படவா ராஸ்கல்” என்று செல்லமாகத் திட்டிக் கொஞ்சுவதை எத்தனை சினிமாக்களில் பார்த்திருக்கிறோம்! அதைப்போலத் தான் இதுவும்! தண்டிக்கப்படுவோம் என்றஞ்சும் குற்றவாளிகள் வழக்கு விசாரணையும் தீர்ப்பும் வருவதைத் தள்ளிப்போடும், தாமதப்படுத்தும் உள்நோக்கத்தோடு வழக்கை இழுத்தடிப்பார்கள். அந்த வகையில் குற்றவாளி ஜெயா 185 வாய்தாக்கள் வாங்கி, வாய்தா ராணி என்று பெயர் வாங்கியவர். ஜெயா போன்ற கடுங்குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட பிறகு முடிந்தவரை சிறைத் தண்டணையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக மேல்முறையீட்டை விரைந்து முடித்து வெளியில் வர எத்தணிப்பார்கள். அத்தகைய எத்தணிப்பில் உள்ள ஜெயா-சசி கும்பலுக்குச் சாதகமாக நடந்து கொண்டே, கண்டிப்பு – கறார் வேசங்கட்டிக் கொண்டு உச்ச நீதிமன்றம் ஆடிய அவசர அப்பட்டமான அநீதி ஆட்டம்  கேலிக்கூத்தாகவே அமைந்தது.

ஜெயலலிதா-சசிகலா கும்பல் சிறையிலடைக்கப்பட்ட  மறுநிமிடத்திலிருந்து அக்கும்பலின் அடிமை விசுவாசிகள் போட்டிபோட்டுக் கொண்டு கட்டவிழ்த்துவிட்ட அராஜகம்; தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு ஏற்பட்டுவிட்ட “அவப்பெயரையும் களங்கத்தையும்” மூடிமறைத்து, நீதியான – சட்டப்படியான தீர்ப்பு வழங்கிய நீதிபதியை இழிவுபடுத்தும் செயலுக்கு அரசமைப்பு முழுவதையும் கேடாகப் பயன்படுத்தியது; பொதுச் சொத்துக்களைச் சூறையாடி பொதுமக்களிடையே பயபீதியையும் பாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்தியது; இவற்றுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட எல்லா பொதுநல முறையீடுகளையும் தட்டிக்கழிப்பது, ஒத்திவைப்பதன் மூலம் மேற்படிக் குற்றங்களுக்கு நீதித்துறையே உடந்தையாக மாறிப்போனது. இவற்றுக்காக தானே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உச்ச நீதிமன்றம், கண்டுகொள்ளாது கண்மூடிக்கொண்டது. மாறாக, தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளைப் பிணையில் விடுவதில்தான் அவசரமும் அக்கறையும் காட்டியது.

ஜெயா-சசி கும்பலுக்கு எதிராக  டிராஃபிக் ராமசாமி தொடுத்த பல பொதுநல வழக்குகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு மாறாக,  தட்டிக் கழிப்பது, தள்ளிப்போடுவது, தகுந்த பதிலளிக்காமல் மழுப்புவது போன்ற உத்திகளைக் கடைப்பிடித்து குற்றவாளிகளைக் காப்பதிலேயே உயர் நீதிமன்றம் குறியாகச் செயல்பட்டது. இந்த வகையில் ஜெயா-சசி கும்பலின் பிணைகோரும் வழக்கில் பெயருக்குத் தகுந்தாற் போன்று உச்சத்துக்கே போயிருக்கிறது, உச்ச நீதி மன்றம்.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணையில் இருக்கும் ஜெயலலிதா முதல்வராகவே இருக்கக்கூடாது; தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் தலைமையிலான கட்சி ஆட்சி நடத்தக் கூடாது; தன் மகன் ரோஹிண்டன் நாரிமன் நீதிபதியாக இருக்கும் நிலையில், தந்தையாகிய  ஃபாலி நாரிமன் ஜெயா-சசி கும்பலின் சார்பாக உச்சநீதி மன்றத்தில் பிணை கோரும் வழக்கில் வாதாடக்கூடாது (அலகாபாத் நீதிமன்றத்தில் உறவினர்களே நீதிபதிகளாகவும் வழக்கறிஞர்களாவும் பணியாற்றுவது தர்மம் ஆகாதென்று இதே உச்ச நீதிமன்றம் கண்டித்திருக்கிறது!) தகுந்த விளக்கமில்லாமல் ஜெயா-சசி கும்பலுக்கு பிணை வழங்கியது தவறு, அதை ரத்துசெய்யவேண்டும்; ஜெயா-சசி கும்பலுக்குப் பிணை வழங்கியதில் ஆயிரம் கோடி ஊழல் பேரம் பேசி இருநூறு கோடி ரூபாய் கைமாறி இருப்பதாகப் புகார் கூறப்படுகிறது, அதை விசாரிக்கவேண்டும்; இக்குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தலைமை நீதிபதி எச்.எல்.தத்து பிணை மனுவை விசாரிக்கக் கூடாது – என்பன போன்று எழுப்பப்பட்ட கேள்விகள் அனைத்தும் சதித்தனமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

டிராபிக் ராமசாமி
ஜெயா-சசி கும்பலுக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை எதிர்த்து உச்சநீதி மன்றம் மற்றும் அரசுத் தலைவரிடம் முறையீடு செய்துள்ள டிராபிக் ராமசாமி

நீதிபதி எச்.எல்.தத்து முகத்துக்கு நேராகவே ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை கோரியபோதும் “அந்த ஆயிரம் கோடி ரூபாய் விவகாரம் தானே, கோர்ட் அதைப் பார்த்துக்கொள்ளும்” என அலட்சியமாகவும், திமிராகவும் கூறித் தள்ளுபடி செய்துவிட்டார். ஆனால், நீதிபதி எச்.எல்.தத்து மீதான ஊழல் குற்றச்சாட்டு வெறும் ஆதாரமற்ற பழியோ, அவதூறோ, வதந்தியோ அல்ல; அடிப்படை முகாந்திரம் உள்ள உண்மைதான்  என்பதை அவரது அன்றைய நடவடிக்கைகளே காட்டிக்கொடுத்து விட்டன. ஜெயா-சசி கும்பலின் பிணைகோரும் மனு மட்டுதான் நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு வந்திருக்கிறது. பிணை வழங்கியதோடு அதன் பணி முடிந்துவிட்டது. வழக்கை கர்நாடகா உயர்நீதி மன்றத்திடம் ஒப்படைத்து விடவேண்டும். அங்கு அதன் அதிகாரத்தின்படியும் அணுகுமுறை – முன்னுரிமைப்படியும்தான் மேற்கொண்டு நடத்தப்பட வேண்டும்.  தண்டனை உறுதிசெய்யப்படுமானால், ஜெயா-சசி கும்பல் மேல்முறையீட்டுக்குத் தன்னிடம் வந்தால்மட்டும், அதன் பிறகுதான் உச்ச நீதிமன்றம் மீண்டும் தலையிட முடியும். ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் முறைப்படியும் வரிசைக் கிரமப்படியும் அவ்வழக்குகள் நடந்தால், ஜெயா-சசி கும்பலின் மேல்முறையீடு உச்ச நீதிமன்றம் வருவதற்குள் இந்த எச்.எல்.தத்து ஓய்வுபெற்றுவிடுவார்.

இதைக் கணக்கிட்டுதான் தான் ஓய்வுபெறும் அடுத்த ஆண்டுக்குள் இந்த வழக்கின் மேல்முறையீட்டை தானே முடித்துவைக்க வேண்டும் என்று எச்.எல்.தத்து துடிப்பதாகத் தெரிகிறது. அதனால், இந்த அமர்வு பிணை கோரும் வழக்கை முடிக்காமல் தன்னிடமே வைத்துக் கொண்டுள்ளது. வழக்கை நடத்த வேண்டிய கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் வசதி-வாய்ப்புகளைக் கலந்தாலோசிக்காமலேயே, தன்னிச்சையாகக் கால அட்டவணையை குற்றவாளிகளுக்கு சாதகமாகத் தானே அவசர அவசரமாக வரையறுக்கிறது. எதிர்த் தரப்புக்கு ஒரு மாதம், அரசுத் தரப்புக்கு ஒரு மாதம், நீதிபதிக்கு ஒரு மாதம் -ஆக மூன்று மாதங்கள், அதிகம் போனால் மேலும் ஒரு 15 நாட்கள் என்று மனக்கணக்குப்போட்டு, ஏப்ரல் 18-க்குள், விடுமுறை நாட்கள் தவிர நாள்தோறும் வழக்கை நடத்தி, மேல்முறையீட்டு மனுவைக் கர்நாடகா உயர் நீதிமன்றம் முடித்துவிட வேண்டும் என்று தனது வரம்பு மீறி எச்.எல்.தத்து உத்திரவு போட்டுள்ளார்.

இந்த நாட்டு சட்ட-நீதி வரலாறு இதுவரை காணாததொரு  தீர்ப்பு!  இதே வழக்கின் 100 பக்க ஆவணத்தைப் படிப்பதற்கு ஜெயா-சசி கும்பல், அது வழக்கை இழுத்தடித்தபோது மாதக் கணக்கில் அவகாசம் கேட்டுப் பெற்றது. இப்போது அக்கும்பலின் 2.5 இலட்சம் பக்கங்களைக் கொண்ட மேல்முறையீட்டு மனுவை ஒரு மாதத்திற்குள் படித்து, இருதரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்புச் சொல்ல வேண்டுமாம்! இந்த வழக்கை பெங்களூருவுக்கு மாற்றியபோது ஒரு ஆண்டுக்குள் முடிக்க வேண்டுமென்று உத்திரவு போட்டதும் இதே உச்ச நீதிமன்றம்தான்! ஆனால், அப்போதிருந்து வழக்கைப் பத்தாண்டுகள் ஜெயா-சசி தரப்பு இழுத்தடித்தது. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் இதே உச்ச நீதிமன்றம்தான்! அது மட்டுமல்ல; இவ்வாறு அக்கும்பல் கோரியதற்கு மேல் கால அவகாசம் கொடுத்து, வழக்கை இழுத்தடிப்பதற்குக் காரணமாகக் இருந்ததும் இதே உச்ச நீதிமன்றம்தான்! என்ன ஒரு நீதி!

ஜெயாவின் காலடியில் நீதித்துறை
ஜெ.சசி கும்பலுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை பெங்களூருவுக்கு மாற்றியபோது ஒரு ஆண்டுக்குள் முடிக்க வேண்டுமென்று உத்தரவு போட்டதும் இதே உச்ச நீதிமன்றம்தான்! ஆனால், அப்போதிருந்து வழக்கை பத்தாண்டுகள் ஜெயா-சசி தரப்பு இழுத்தடித்தது. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் இதே உச்ச நீதிமன்றம்தான்! அது மட்டுமல்ல; இவ்வாறு அக்கும்பல் கோரியதற்கு மேல் கால அவகாசம் கொடுத்து வழக்கை இழுத்தடிப்பதற்குக் காரணமாக இருந்ததும் இதே உச்ச நீதிமன்றம்தான்! என்ன ஒரு நீதி!

2009-ம் ஆண்டு அலைக்கற்றை ஊழல் வழக்கில் தொடங்கி கடந்த ஐந்தாண்டுகளாக அண்ணா ஹசாரே, கேஜரிவால் முதற்கொண்டு மோடி வரை நாட்டின் முதன்மையான ஊழல் எதிர்ப்புப் போராளிகளாக அவதாரம் எடுத்து ஆட்டம் போட்டார்கள். இதிலும் சந்தர்ப்பவாதமாக நடித்து அவர்கள் நாடகமாடினார்கள்தான். என்றாலும், மக்களை ஏய்ப்பதற்காகவும் சவடாலுக்காவும் நீதித்துறையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியாக அதை முன்நிறுத்தி நாடு முழுவதும் ஊழல் எதிர்ப்புச் சூழலை உருவாக்கி மக்களிடையே பிரமையை விதைத்திருக்கிறார்கள். அந்த நிலைமையிலும் உயர், உச்ச நீதிமன்றங்களும் அவற்றி லுள்ள பார்ப்பன -பிழைப்புவாத நீதிபதிகளும், ஜெயா-சசி போன்ற கிரிமினல் குற்றக் கும்பல்களும் அத்தகைய பிரமைகளைத் தகர்ப்பதையும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
நாடு முழுவதுமுள்ள நீதிமன்றங்களில் இலட்சக்கணக்கான  வழக்குகள்  தீர்க்கப்படாமல்இருக்கும்போது, ஜெயா-சசி  கும்பலின் மேல் முறையீட்டு வழக்கில் மட்டும் உச்ச நீதிமன்றம் இத்தனை வேகம் காட்டுவது ஏன்?

நீதிபதி எச்.எல்.தத்துவே இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லியிருக்கிறார். “இது விதிவிலக்கான வழக்கு; பிரத்யேகமான வழக்கு என்பதால் இந்தக் கால வரையறைக்குள் முடித்துத் தரவேண்டுமென்று” உத்திரவு போட்டிருக்கிறார். உண்மைதான்! பிரம்மஸ்ரீ  கிரிமினல் குற்றவாளி மீதான வழக்கு என்பதால்  விதிவிலக்கானது,  பிரத்யேகமானதுதான்!

– ஆர்.கே.
________________________________________
புதிய ஜனநாயகம், ஜனவரி 2015
________________________________________

தமிழக கம்யூனிசப் போராளிகள் வரலாறு – நாகை வே. சாமிநாதன்

4

பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்தை தமிழுக்கு தந்த கவிஞர் நாகை. வே. சாமிநாதன்

kavignar-ve-saminathanநாகை மாவட்டம் அந்தனப் பேட்டையில் 1905-ம் ஆண்டு பிறந்து 1981-ம் ஆண்டில் மறைந்தவர் கவிஞர் நாகை. வே. சாமிநாதன். இடதுசாரித் தோழர்கள் பலரும் அறிந்திராத பொது உடைமை கவிஞரை நினைவுகூர, நினைவாற்றல் இழந்துவரும் சிலரே தற்போது உள்ளனர். மா. வளவன்-சி. அறிவுருவோன் ஆகியோரின் முன்முயற்சியில் கவிஞரின் கவிதைகள் சில தொகுக்கப்பட்டு எண்பதுகளில் வெளிவந்தன. மறுபதிப்பு வந்த்தாக தெரியவில்லை.

அறியாப் பருவத்திலேயே தந்தையை இழந்து தாய் மற்றும் பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். பன்னிரெண்டு வயதில் மளிகைக் கடையில் சேர்ந்து உழைப்பாளியாய் வாழ்க்கையை தொடங்கி நாகையில் செயல்பட்ட ரயில்வே பணிமனையில் பணியாற்றி வந்தார். தொழிற்சங்க இயக்கத்தில் ஊக்கமான செயல்பாடு காரணமாக 1947-ல் பணிநீக்கம் செய்யப்பட்டார். இறுதிக் காலத்தில் முதியோர் ஓய்வூதிய தொகையில் சுயமரியாதையுடன் வாழ்ந்து மறைந்தார்.

சுயமரியாதை திருமணம் செய்து கொண்டு கலகக்காரராகவே வாழ்க்கையை தொடங்கினார். தமது குழந்தைகளுக்கு லெனின் என்றும், சோகன் (பஞ்சாப் கம்யூனிஸ கட்சி தலைவர்களில் ஒருவர்) பெயரிட்டுள்ளது கவிஞரது பொதுவுடைமைக் கொள்கை ஈடுபாட்டுக்கு ஒரு சான்றாக உள்ளது.

தொடக்க காலங்களில் காங்கிரசு கட்சியிலும், பின்னர் சுயமரியாதை இயக்கத்திலும் செயல்பட்டார். 1935-ல் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற ஐந்தாவது சுயமரியாதை மாநாட்டில் பொதுவுடைமை திட்டம் என்று கருதப்பட்ட ஈரோட்டு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார், பெரியார். அம்மாநாட்டில் பூவனூர் செல்வகணபதி, முத்துச்சாமி வல்லத்தார், ஜீவா, சிங்காரவேலர் ஆகியோருடன் சுயமரியாதை இயக்கத்தை விட்டு வெளியேறினார்.

பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினராக சேரவில்லை என்றாலும் இறுதிவரை பொதுவுடைமைக் கொள்கைக்கு விசுவாசமாகவே வாழ்ந்து வந்தார். மேடை நாடகங்கள் எழுதி கட்சி கூட்டங்களில் அரங்கேற்றி நடித்தும் வந்தார். பொதுவுடைமைக் கட்சி பிளவுபட்டபோது மார்க்சிஸ்டுகளை ஆதரித்து வந்தாலும் இடதுசாரி சக்திகள் என்று கருதுபவர்கள் அனைவருக்கும் உதவிகள் செய்து வந்தார்.

ஐந்தரை கட்டை சுருதியில் பாடும் அவரது குரலுக்கு ரசிகர்கள் ஏராளம். இப்போதும் அவரது குரலை நினைவு கூர்பவர்கள் சிலர் உள்ளனர். பகத்சிங் குறித்து “பகத்சிங்கை கொன்றது படுமோசம் ! படுமோசம்” என்ற பாடலை இயற்றி பாடியுள்ளார்.

பகத்சிங் தூக்கிலிடப்பட்ட போது காங்கிரசோ, சுயமரியாதை இயக்கமோ நாகையில் எதுவும் செய்யாதபோது சொந்த முயற்சியில் இரங்கல் கூட்டம் நடத்தினார். அச்சம் காரணமாக அக்கூட்டத்தில் பங்கேற்க அப்பகுதி தலைவர்கள் யாரும் முன்வரவில்லை. காங்கிரசு கட்சியில் செயல்பட்டு வந்த மணலூர் மணியம்மா முன்வந்து தலைமை தாங்க சுயமரியாதை வீரர் குஞ்சிதபாதம் மற்றும் கவிஞர் உரையாற்ற அஞ்சலி செலுத்தப்பட்டது. காங்கிரசு கட்சி மணியம்மாவை கட்சியை விட்டு நீக்கியது. மூவரும் இணைந்து அடக்குமுறைகளை எதிர்கொண்டு முறியடித்துள்ளனர். காங்கிரசு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட மணலூர் மணியம்மா பொதுவுடைமை கட்சியில் இணைந்து செயல்பட்டார்.

கவிஞர் சிறந்த லாவணி கலைஞர். சைவ – வைணவ போராட்டத்தின் குறியீடாக உள்ள மன்மதன் எரிந்த கட்சி – எரியாத கட்சி லாவணி கச்சேரியில் எரியாத கட்சியில் பாடி வந்தார். மன்மதன் எரியாத கட்சிக்கு பாடினால் பெருநோய் (குஷ்டம்) வரும் என்ற சைவர்களின் பிரச்சாரம் மக்களிடம் வலுப்பெற்றிருந்த காலம் அது. எரியாத கட்சிக்கு பாட யாரும் முன்வராத நிலை. லாவணி கலைஞர்கள் பாபுதாசர், கோபால்சாமி பிள்ளை, ஷக் தாவூது, அப்துல்காதர், நாகை சாமிநாதன் ஆகியோர் துணிந்து எரியாத கட்சிக்கு பாடினர். சித்தர் பாடல்களில் இருந்து மேற்கோள்கள் எடுத்து மக்களைக் கவரும் வகையில் வாதங்களை முன்வைத்து பாடியது இவர்களின் சிறப்பு. இதற்கு அவர்களின் சுயமரியாதை, பொதுவுடைமை இயக்க சிந்தனையே ஊக்கமளித்து உள்ளது.

கவிஞர் சுயமரியாதை இயக்கத்தில் இருந்தபோதே 1930-ல் சலவை தொழிலாளர் சங்கத்தையும், 1933-ல் முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தையும் தொடங்கி வழி நடத்தியுள்ளார். தொழிலாளர் விவசாயிகள் சங்க போராட்டங்கள் பலவற்றில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார்.

யூஜன் பார்ட்டியாரின் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்தை தமிழில் மொழிபெயர்த்தார் கவிஞர்.

இந்திய செங்கொடி இயக்க வரலாற்றில் உழைப்பால், தியாகத்தால் தடம் பதித்து கொண்டவர்கள் சாமிநாதன் போன்ற சிலர். மணலூரில் தொடங்கி வெண்மணியில் முடிவுற்ற கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்க வரலாற்றில் மணலூர் மணியம்மா, நாகை சாமிநாதன், ஆடாமங்கலம் ஒண்டாடித் தேவர், நாரணமங்கலம் தட்சிணாமூர்த்தி, பூத்தாழங்குடி பக்கிரிசாமி என்று பலர் புதைந்து இருக்கிறார்கள்.

இவர்களை புறம் தள்ளி ஓட்டுச்சீட்டு அரசியல் மூலம் தங்களை பிரபலப்படுத்திக் கொண்டவர்கள் பலர். கவிஞர் சாமிநாதன் மொழிபெயர்த்த பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதப் பாடலில்

”வேதம் ஓதி உடல் வளர்க்கும்
காதகர்க்கிங் கிடமில்லை.”

”நாம் உணர்த்தும் நீதியை
மறுப்பவர்க்கிங் கிடமில்லை”

என்ற வரிகள் சிபிஐ, சிபிஐ(எம்) கட்சி வெளியீடுகளில் நீக்கப்பட்டு திருத்தி பாடப்படுகிறது என்பதை அவர்களின் அணிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களின் பார்ப்பன அடிவருடித்தனம், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் குறித்த திருத்தல்வாதம், ஓட்டுச்சீட்டு அரசியலுக்கேற்ப ஒரு ஆவணத்தை திருத்தும் கேடுகெட்ட இந்த முயற்சி தெரிந்திருந்தாலும் கண்டித்து கேள்வி எழுப்பும் துணிவு அணிகளிடமும் இல்லை.

கீழத்தஞ்சை மண்ணைக் காக்க நடக்கும் மீத்தேன் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களின் ஊடாக அம்மண்ணில் தோன்றி தியாகம் புரிந்த பொதுவுடமை தியாகிகளின் வாழ்வை பதிவுகளாக்க முயற்சிப்போம். தியாகிகளின் வாழ்விலிருந்து கற்றுக் கொண்டு மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்திற்கு வலுச் சேர்ப்போம்.

-இராவணன்
செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சை.

மொழிப்போர் தியாகிகள் நாள் – மக்களைத் திரட்டிய பு.மா.இ.மு

1

மிழ்நாட்டு மாணவர்களின் இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பொன்விழா ஆண்டினை நினைவு கூர்ந்து அப்படி ஒரு மொழிப்போரினை மீண்டும் துவக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில், குடியிருப்புப் பகுதிகள் என எல்லா இடங்களிலும் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது.  சைக்கிள் பேரணி, கல்லூரிகளில் வாயில் நாடகம் என பல வடிவங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஜனவரி 25, 2015 அன்று மொழிப்போர் தியாகிகள் நாள் புரட்சிகர அமைப்புகளால் தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டது. அது தொடர்பான தகவல்கள், புகைப்படங்கள் தொகுப்பின் முதல் பகுதி.

1. சென்னையை சுழன்றடித்த இந்தி எதிர்ப்புப் புயல்

னவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் நாள் கூட்டம் கோடம்பாக்கத்தில் உள்ள காமராஜர் காலனி 6-வது தெருவில் உழைக்கும் மக்களின் பங்களிப்போடு நடைபெற்றது.

சென்னையை சுழன்றடித்த இந்தி எதிர்ப்புப் புயல்
கோடம்பாக்கம் காமராஜர் நகரில் தெருமுனைக் கூட்டம்

முன்னதாக, சனவரி 10-ம் தேதி முதல் 25-ம் தேதிவரை தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை என ஒட்டு மொத்த சென்னையையே புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்கள் இந்தி எதிர்ப்பு பிரச்சாரத்தில் சுழல வைத்தார்கள்.

1938, 1965 ஆகிய ஆண்டுகளில் இந்தித்திணிப்புக்கு எதிரான மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் மக்களின் சிந்தனை என்பது இயல்பானதாக இருந்தது, இயற்கையாக உருவான புயலைப்போல.

ஆனால் இன்றோ, ஒரு புறம்  ஏகாதிபத்திய சீரழிவுக் கலாச்சாரம் மாணவர்கள் இளைஞர்களை சின்னாபின்னமாக்கி அனைத்து உணர்வுகளையும் பிடுங்கி தன்மானமற்ற சூடு சொரணையற்றவர்களாக மாற்றி எந்நேரமும் பாலியல், நுகர்வு வக்கிர சிந்தனையிலேயேவைத்து இருக்கிறது.

இன்னொரு புறம், மோடிமஸ்தான் சமஸ்கிருத ஆரியப் பண்பாட்டுத்திணிப்பை கலர்கலராக சீன் காட்டி நடைமுறைப்படுத்தும் முறையில் பலர் குழம்பிப்போயிருக்கின்றனர்.

இந்த நிலையில், 50 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த மொழிப்போரினை நினைவு கூர்ந்து ஆரியப் பார்ப்பன, பண்பாட்டுத்திணிப்புக்கு எதிராக நாம் போராட வேண்டும் என்ற அறைகூவல் விடுத்து 15 நாட்கள் காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை ஒவ்வொரு நாளும் பம்பரமாக சுழன்று இந்த இயக்கத்துக்கு மக்களின் ஆதரவைப் பெற்றது என்பது உண்மையில் செயற்கையாக ஒரு புயலை உருவாக்குவது போன்றதுதான்.

இந்தப் பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு செல்லும் போது பல பிரிவினர்களைக் கண்டோம்.

  • இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் என்றாலே என்னவென்று அறியாத ஒரு தலைமுறை,
  • இந்தித்திணிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு அது சரி என்று கூறும் ஒரு பிரிவு,
  • இந்தித்திணிப்பு போராட்டமே தவறு அதனால்தான் நமக்கு வேலை கிடைக்கவில்லை, தமிழ்நாடு முன்னேறவில்லை என்று கூறும் ஒரு பிரிவு ,
  • நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் நைட் 11 மணிக்கு நீங்க என்னதான் கத்தினாலும் எவனுக்கும் சொரணை இல்லை என்று ஆதங்கப்படும் ஒரு பிரிவு,
  • இந்த இயக்கத்துக்கே மொத்தமாக எதிராக இருக்கும் பார்ப்பனிய மேட்டுக்குடிப் பிரிவு.

அத்தனை பிரிவினரையும் சமாளித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இந்த இயக்கத்தை எடுத்துச் செல்லவேண்டும், மீண்டும் ஒரு மொழிப்போருக்கான தேவையை அனைவருக்கும் உணர்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் முன் நின்ற ஒரே இலக்கு.

பிரச்சாரத்திற்கு சென்ற யாரும் சொல்வன்மையில் மிக்கவர் இல்லை, படிப்பிற் சிறந்த அறிவாளிகள் இல்லை, பார்ப்பன படையெடுப்பை எதிர்த்த பிரச்சாரத்துக்காக கல்லூரிக்கும், பள்ளிக்கும் மட்டம் போட்டிருந்த கல்லூரி, பள்ளி மாணவர்கள்தான் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றனர்.

DSC00676மக்களின் சில சந்தேகங்களுக்கும் நாங்கள் பதில் அளித்தோம். அத்தனைப் பிரிவினரின் கேள்விகளுக்கும் பதிலளித்தோம். சமாதானமாக சில இடங்களில், சண்டையாக சில இடங்களில். எங்களின் பல சந்தேகங்களுக்கு உழைக்கும் மக்கள் பதில் அளித்தார்கள். முதல் நாள் நமது பிரச்சாரத்தை கவனிக்காதவர்கள் கூட தொடர்ச்சியான பிரச்சாரத்தில் தமது கருத்துக்களை மாற்றிக் கொண்டார்கள்.

ரயிலில் வயதான ஒருவர் கூறினார் “நான் மொழிப்போராட்டத்தில் கலந்து கொண்டு கல்லூரி வாழ்க்கையை இழந்தவன், அதற்காக கவலைப்படவில்லை, பெருமைப்படுகின்றேன்”. “தாய்த்தமிழ் மொழிக்காக இவரைப்போன்ற எத்தனை ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்திருப்பார்கள்” என்ற சிந்தனை எங்களை உந்தித்தள்ளியது.

மக்களிடம் கிடைத்த அனுபவங்களை மாணவர்களிடம் கொண்டு சென்றோம். மக்களின் பதில்களைக் கொண்டு மாணவர்கள் மத்தியில் நிலவும் தடைகளை உடைக்க உளியானோம். மாணவர்கள் என்றாலே ரவுடிகள், பொறுக்கிகள், சீரழிந்தவர்கள் என்ற கருத்து இருக்கும் போது அதை உடைப்பதுதானே நமது வேலை. உலகை வியாக்கியானம் செய்வது மட்டுமல்ல; மாற்றியமைப்பதுதானே நமது வேலை.

வாரி அணைத்துக் கொண்டார்கள் மாணவர்கள். அவர்களில் பலருக்கும் இந்தித்திணிப்பு எதிர்ப்பு போராட்ட வரலாறு தெரியவில்லை என்பது உண்மைதான். ஆனால், அந்த வரலாற்றை சொன்னால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவர்கள் இன்னமும் மாறவில்லை.

கல்லூரிகளில் பற்றிய போராட்ட உணர்வு

ஒரு கல்லூரியில் பிரசுரங்களை வாங்காமல் சென்ற மாணவிகளைப் பார்த்து பெண் தோழர் ஒருவர் கூறினார்

“உங்க வாழ்க்கையே அழியப்போகுது, எல்லாம் எங்கப் போறீங்க?”.

“என்னது எங்க வாழ்க்கை அழியுதா?” என்று கேட்டவர்களிடம் இந்தித்திணிப்பையும் சமஸ்கிருத பண்பாட்டு படையெடுப்புக்கு எதிராக போராட வேண்டிய அவசியத்தை விளக்கியவுடன் “பத்து பிரசுரம் கொடுங்க நான் காலேஜில கொடுக்கிறேன் ” என்று வாங்கிச் சென்றார்கள்.

DSC00709ஓடிவந்த போலீசு “ஏம்மா நீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிரா போன மாசம் பிரச்சாரம் செஞ்ச, இப்ப என்னம்மா?” என்று கேட்டு பிரசுரத்தை வாங்கினார். “இங்கே பிரசுரம் கொடுக்கக்கூடாது” என்று உதார் விட்டு அது வேலைக்கு ஆகாமல் சென்று விட்டார்.

பின்னர் கல்லூரி முதல்வர், பேராசிரியர் படை வந்து மிரட்டியதும் வேலைக்கு ஆகவில்லை.

பின்னர் கல்லூரி மாணவிகள் பத்து பேர் “அக்கா, இங்க நோட்டீஸ் தராதீங்க, இன்னைக்கு கல்ச்சுரல் புரோகிராம், எல்லா பொண்ணுங்களும் ஸ்டேஜை கவனிக்காம உங்க நோட்டீசைத்தான் படிக்குறாங்க, பிரின்ஸிபல் எங்களை திட்டறாங்க” என்றார்கள்.

அதற்கு பதில் அளித்தார் தோழர் “அதுக்கு என்னம்மா பண்ணறது, மாணவிகளுக்கு எது தேவையோ அதைப் பண்ணறாங்க. அவங்களுக்கு இப்போ கல்ச்சுரல் பிடிக்கல, தமிழ் கலாச்சாரத்தை காக்கிற இந்தப்போராட்டம்தான் பிடிக்குது”.

பல கல்லூரிகளிலும் மாணவர்கள், “இதனை இப்படியே விடக்கூடாது. எல்லா கல்லூரி மாணவர்களையும் திரட்டி போராட்டம் செய்ய வேண்டும், நாங்கள் கண்டிப்பாக வருவோம், உங்கள் அமைப்பில் எங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்” என்றார்கள்

பச்சையப்பன் கல்லூரி, ராணி மேரிக்கல்லூரி, நந்தனம், சென்னைப்பல்கலைக்கழகம், பாரதி கலைக்கல்லூரி, தியாகராயா கல்லூரி என சென்னையில் உள்ள அனைத்துக்கல்லூரிகளிலும் இந்தித் திணிப்புக்கு எதிரான பிரச்சார மேகம் பரவியது.

DSC00746

அம்பேத்கர் கல்லூரி மாணவர்களோ இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தினை விளக்கும் “வீரம் செறிந்த மொழிப்போர்” நாடகத்தை பல முறை நடத்தச் சொன்னார்கள்.

மாநிலக்கல்லூரியில் நாடகத்தைக் கண்டு மிரண்ட போலீசு தடுத்து நிறுத்தியது. சுற்றியிருந்த மாணவர்கள் பிரசுரங்களைக் கேட்டுவாங்கினார்கள். போலீசை பொருட்டாக மதிக்காமல் நம்மிடம் விவாதித்தார்கள். தாய்த்தமிழ் உணர்வுக்கு முன் போலீசின் கூலி உணர்வு எம்மாத்திரம்?.

பச்சையப்பன் கல்லூரி விடுதி அறை எண் 80ல்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

50 ஆண்டுகளுக்கு முன் 1965-ம் ஆண்டு சனவரி 22-ம் தேதி இந்தித்திணிப்புக்கு எதிரான மாபெரும் எழுச்சியை மீண்டும் தோற்றுவிப்பதற்காக பச்சையப்பன் கல்லூரியில் விடுதி அறை எண் 80-ல் அனைத்துக்கல்லூரி மாணவர்களும் கூடினார்கள்.

DSC00760அந்த நாளை நினைவு கூரும் விதமாக, சனவரி 22 அன்று கல்லூரி மாணவர்களை அணிதிரட்டி அக்கல்லூரியின் புமாஇமு செயலர் தோழர். செல்வா தலைமையில், அந்த அறைக்குச் சென்று மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டதுடன் மொழிப்போர் தியாகிகளின் வரலாறும் இன்று மொழிப்போரின் அவசியமும் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள், “இப்படிப்பட்ட பெருமைவாய்ந்த கல்லூரியில் படிப்பதை நினைக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறினார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு தற்போது பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ஒருவர் “எங்களுக்கு தெரியாத பல அரிய தகவல்களைக்கொண்டதாக உங்கள் பிரசுரம் இருக்கிறது. உங்களால் இக்கல்லூரிக்கே பெருமை” என்றார்.

DSC00843

காமராஜர் காலனியில் சிவலிங்கம் வைத்த நெருப்பு இன்னும் அணையவில்லை

தெருமுனைக்கூட்டம் நடக்க உள்ள கோடம்பாக்கம் காமராஜர் காலனியைச் சுற்றியுள்ள மக்களிடம் இப்பிரச்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டோம். இப்பகுதியில் கூட்டத்துக்கு அனுமதி கொடுக்க போலீசு 23-ம் தேதிவரை இழுத்தடித்து கூட்டமே நடத்த முடியாத அளவுக்கு கண்டிசன்களைப் போட்டு இருந்தது.

ஒலி, ஒளி அமைக்க பலர் முன்வரவில்லை. அவர்கள் கூறிய காரணம் இதுதான் “அந்தப் பகுதியில் எல்லாம் பொறுக்கிப் பசங்க , எந்தக்கட்சி மீட்டிங் போட்டாலும் லைட், சேர்களை உடைப்பானுங்க. நாங்க வர முடியாது, 5000 ரூபாய் டெபாசிட் கட்டுங்க” என்றார்கள்.

அந்தப் பகுதியைப் பற்றி அப்படி ஒரு கருத்து இருக்கிறது என்றால் அதை மாற்றியே ஆக வேண்டும் என்று 20 தோழர்களோடு 24-ம் தேதி காலை 9 மணிக்கு களம் புகுந்தோம் .

“இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தோட பொன் விழா ஆண்டினை ஒட்டி…………..” என்று நாம் பேசும் போதே பலர் “இங்க கூட சிவலிங்கம்னு ஒருத்தரு நெருப்பு வச்சுகிட்டாரே ” என்றார்கள்.

“ங்கோத்தா, மோடி வந்து நம்ம தமிழ அழிச்சுடுவானா, நாங்க உடமாட்டோம்பா”,

“ஏற்கனவே ஆதார் கார்டு, சிலிண்டருக்கு அக்கவுண்ட்ன்னு அலைய வுடறான், அந்த பாரம் எல்லாம் தமிழ்ல இருந்தா நாங்க பண்ணிடுவோம். இங்கிலீசுல இருக்கும் போதே நாயா அலையுறோம். எல்லாத்தையும் இந்தி ஆக்குனா நாங்க எங்க போவோம். இவனுங்களுக்கு டின்னு கட்டணும்”

ஒரு இடத்தில் வயதான அம்மாவிடம் “ என்னம்மா இப்படி எங்களை கைவிட்டுட்டியே, அன்னைக்கு நீ போராடித்தான தமிழ காப்பாத்துன, இன்னைக்கு மறுபடியும் இந்தியை திணிக்கிறானே நீ கேக்க மாட்டியா” என்று தோழரொருவர் கேட்டவுடன் “ யார் சொன்னது, தமிழுக்கு ஒரு பிரச்சினைன்னா அன்னைக்கும் வந்தேன், இன்னைக்கும் வருவேன் ” என்றார் அவர்.

மதியம் உணவு அருந்திக்கொண்டு இருந்த போது சாலை ஓரத்தில், வயதான ஒருவர் சாலையில் நின்று கொண்டு அழைத்தார். அவரிடம் சென்று பிரசுரத்தை கொடுத்து விளக்கினோம்.

“நான் திருநெல்வேலிக்காரன், செயிண்ட் சேவியர் காலேஜில் படிக்கும் போது போராட்டத்தில் கலந்து கொண்டு இன்ஸ்பெக்டர் மண்டையை உடைச்சேன், ஜெயிலுக்குப்போனேன். வெளியே வந்து இன்னொரு போராட்டத்துல இன்ஸ்பெக்டருக்கு நெருப்பே வச்சேன். அப்பவும் ஜெயிலுக்குப் போனேன். அப்புறம் இங்க வந்துட்டேன் . இந்தித் திணிப்பு போராட்டம்ங்குற வார்த்தைய பார்த்துட்டுதான் கூப்பிட்டேன், இன்னைக்கு உங்களைப்பார்க்கும் போதே பெருமையா இருக்கு”.

எங்கள் கண்களில் நீர் தளும்பியது. எவ்வளவு பெரிய வீரத்தை, இழப்பை, அர்ப்பணிப்பை ரொம்ப சாதாரணமாக சொல்லிவிட்டார். இப்படிப்பட்ட போராட்டத்தை நடத்தாமல் நம்மால் எப்படி இந்த ஆரிய பார்ப்பன – இந்திப் பண்பாட்டுத்திணிப்பை விரட்டியடிக்க முடியும்?

அப்பகுதி மக்கள் அனைவரும் தமிழை, தமிழ்ப் பண்பாட்டை உயர்த்திப்பிடித்தார்கள். மாலை 6 மணிக்கு, உடலில் சோர்வு இருந்தாலும் உள்ளத்தில் உற்சாகம் பீறிட்டு எழுந்தது.

கோடம்பாக்கத்தில் மையங் கொண்ட புயல்

25-ம் தேதி கோடம்பாக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளான எம்.எம்.டி.ஏ, எம்.ஜி.ஆர் நகர், ஜாபர்கான் பேட்டை, புலியூர், புதூர் உள்ளிட்டப் பகுதிகளில் தோழர்கள் இப்பிரச்சாரத்தைக் கொண்டு சென்றார்கள். சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் ஆதரவளித்தார்கள். தாங்களும் கூட்டத்திற்கு வருவதாகவும் பலர் இப்படிப்பட்ட அமைப்பில் எங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்கள்.

சென்னையை சுழன்றடித்த இந்தி எதிர்ப்புப் புயல்25-ம் தேதி காலை முதலே காமராஜர் காலனி களைகட்டியது. தோழர்கள் கொடிகளை கட்டிக்கொண்டும் தட்டிகளை கட்டிக்கொண்டும் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டும் இருந்தனர். சொந்த ஊரைப்போல எல்லோரின் வீடுகளிலும் சென்று உதவிகளைப் பெற்றுக்கொண்டு இருந்தனர். ஏற்கனவே 24-ம் தேதி இப்பகுதியில் நாம் பிரச்சாரம் செய்த போது சந்தித்திருந்த மக்கள் “ நீங்க தானா, சந்தோசம்பா” என்றார்கள்.

அந்தத் தெரு மிகவும் அடைசல் மிகுந்தது, அங்கே கார் மெக்கானிக் கடை ஒன்று இருந்தது. அதன் உரிமையாளர் காலையிலே தானே முன் வந்து தனது பழைய வாகனங்களை அப்புறப்படுத்தினார். அவரிடம் பிரசுரம் கொடுக்கச் சென்ற போது “நீங்க திருநெல்வேலிக்காரர் ஒருத்தரை பார்த்தீங்களா? அவர் நோட்டிசை நேத்து வந்து கொடுத்துட்டாருப்பா ”

நிகழ்ச்சி சரியாக மாலை 6.30 மணிக்கு தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் தொடங்கியது. மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி தமிழ்த்தேசிய இனத்தின் கடவுள் மறுப்பு, ஆன்மீகமறுப்பு, வேத, வைதீக – பார்ப்பன, சமஸ்கிருத – இந்தி எதிர்ப்பு பாரம்பரியத்தை போர்வாளாக ஏந்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில் 10 நிமிடங்கள் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தலைமை உரையாற்றிய மக்கள் கலை இலக்கியக்கழகத்தின் சென்னைக்கிளையின் செயற்குழு உறுப்பினரான தோழர்.வாசுதேவன், தமிழ் நாட்டு மாணவர்களின் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா ஆண்டில் நடைபெறும் இந்த மொழிப்போர் தியாகிகள் நாள் கூட்டத்தின் அவசியத்தை விளக்கியும் இந்தித்திணிப்புக்கு எதிராக தன்னையே எரித்து குடியரசு தினக் கொண்டாட்டத்தை நிறுத்திய சிவலிங்கத்தினை வீரமிக்க தியாகத்தை உயர்த்திப்பிடிக்க வேண்டிய அவசியத்தை விளக்கியும் பேசினார்.

சென்னையை சுழன்றடித்த இந்தி எதிர்ப்புப் புயல்தில்லை உனக்கு சொந்தமா” என்ற பார்ப்பனிய பண்பாட்டின் இழிவை வீழ்த்த வேண்டியதை வலியுறுத்தும் வகையில் பாடலை மக்கள் கலை இலக்கியக் கழக தோழர்கள் பாடினார்கள்.

சென்னையை சுழன்றடித்த இந்தி எதிர்ப்புப் புயல்அடுத்து மக்கள் முதல்வரின் கடந்த கால யோக்கியதையை புமாஇமு இளந்தோழர்கள் “பேயொன்று நாடாள்வதா” என்ற பாடலில் காற்றில் பறக்கவிட ஓடிவந்தது போலீசு.

சென்னையை சுழன்றடித்த இந்தி எதிர்ப்புப் புயல்

“கலைநிகழ்ச்சியெல்லாம் நடத்தக்கூடாது” என்று மிரட்டிக்கொண்டு இருந்தது.

சென்னையை சுழன்றடித்த இந்தி எதிர்ப்புப் புயல்
கலை நிகழ்ச்சியெல்லா்ம நடத்தக் கூடாது என்று மிரட்டும் போலீசு.

அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த மொழிப்போரினை கண் முன்னே கொண்டு வந்து இன்றைய மோடி அரசின் ஆரிய- பார்ப்பன பண்பாட்டுக்கு எதிராக போராட வேண்டியதன் அவசியத்தை விளக்கும் வகையில் சென்னைப்பகுதி புமாஇமு தோழர்கள் “ வீரஞ்செறிந்த மொழிப்போர்” என்ற நாடகத்தை நடத்தி மக்களின் உணர்வுகளை தட்டியெழுப்பினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

சிறப்புரையாற்றிய பு.மா.இ.முவின் மாநில ஒருங்கிணைப்பாளர், தோழர். கணேசன் 1938 மற்றும் 1965-ல் நடைபெற்ற மொழிப்போரில் பங்கு கொண்ட மாணவர்கள், இளைஞர்களின் வீரமிக்க உணர்வுகளை பதிவு செய்து, அன்றைய நாட்களில் பார்ப்பன சமஸ்கிருத பண்பாட்டை ராஜாஜி மற்றும் பக்தவச்சலம் மூலமாக நிறைவேற்ற முயன்றதையும் விளக்கி, “ஒரு மொழிக்காக 500-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள் என்றால் அது அது தாய்த்தமிழுக்காக மட்டும்தான். இதை வெறும் மொழிக்கான போராட்டமாக தியாகிகள் பார்க்கவில்லை. தமிழ்ப் பண்பாட்டிற்கானப் போராட்டமாக கண்டார்கள்” என்று பதியவைத்தார்.

சென்னையை சுழன்றடித்த இந்தி எதிர்ப்புப் புயல்
தோழர் கணேசன் உரை

“இன்றைய நாளில் அமெரிக்காவின் அடிமையும் தெற்காசிய பிராந்திய பேரரசனுமான மோடி வெளி நாடுகளுக்கு சென்று கீதையை பரிசளிப்பதும், இந்திதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும் கூறுவதும், ஆசிரியர் நாளை குரு உத்சவ் என்று மாற்றியதும் மத்தியப்பள்ளிகளில் சமஸ்கிருதத்தை கட்டாயமாக்கியதும் இந்தியை அலுவலக மொழியாக அறிவித்ததும் மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தமிழகம் தயாராக இருப்பதையே காட்டுகிறது. இந்த மொழிப்போர் தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை, தமிழே நிர்வாக மொழி, தமிழே ஆட்சி மொழி, தமிழே வழக்காடு மொழி என்பதை நோக்கி இருக்க வேண்டும் என்றால் நம்முடைய போராட்டங்களும் 1965-ல் நடைபெற்ற மாணவர்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தினை போன்றதாக இருக்க வேண்டும்” என்று எழுச்சியுரையாற்றினார்.

நிறைவாக புமாஇமுவின் சென்னை மாநகர செயற்குழு உறுப்பினர் தோழர் ராஜா, இறுதி நேரத்தில் ஒலிஒளிக்கு ஏற்பாடு செய்த ஒருவர் வராமல் போக இந்தித்திணிப்புக்கு எதிரான கூட்டம் என்று சொன்னவுடனேயே பணத்தைப்பற்றி பிறகு பேசலாம் ஒலி ஒளி அமைத்துக்கொடுத்த உரிமையாளர் மோசஸ். அவர்களுக்கும் கூட்ட செலவை ஈடுகட்ட துண்டேதி வசூல் செய்த தோழர்களுக்கு நிதியளித்த மக்களுக்கும் இந்தித்திணிப்புக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும் என்று உத்வேகத்தை அளித்த கோடம்பாக்கம் பகுதி காமராஜர் காலனி பகுதி மக்களுக்கும் நன்றியுரை கூறினார்.

students-against-hindi-imposition-chennai-34எழுச்சிமிக்க இந்தக்கூட்டத்தில் காமராஜர் காலனி மக்கள் நூற்றுக்கணக்கில் கொண்டனர். கூட்டம் முடிவதற்கு சற்று முன்பு வரை பகுதி மக்கள் வந்து கொண்டு இருந்தனர். இந்த கூட்டமும் சரி, 15 நாட்கள் இப்பிரச்சார இயக்கமாகட்டும் எங்களுக்கு கற்றுக்கொடுத்தது ஏராளம். ”இந்தி எதிர்ப்பு என்பது அன்றல்ல, என்றும் நீறு பூத்த நெருப்பே” என்பதை நேரில் உணர்ந்தோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அன்று முதல் இன்று வரை உழைக்கும் மக்களே தமிழுக்காக போராடியிருக்கிறார்கள், தன்னுயிரை மாய்த்து இருக்கிறார்கள், அவர்கள் கண்டிப்பாக தமிழை தமிழ்ப் பண்பாட்டை காத்து நிற்பார்கள் களத்தில் என்ற நம்பிக்கை புரட்சிகர அமைப்பு என்ற வகையில் எங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

சென்னையை சுழன்றடித்த இந்தி எதிர்ப்புப் புயல் விரைவில் சூறாவளியாக மாறும்; உழைக்கும் மக்களுடன் இணைந்து நாங்கள் மாற்றுவோம்.

தகவல்

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, சென்னை
தொடர்புக்கு : 9445112675

(பிற பகுதிகளைப் பற்றிய செய்திகள் தொடரும்)

டெல்லியில் ஒபாமா பெங்களூருவில் ரெட்டி பிரதர்ஸ் – பாஜக சியர்ஸ்

3

raman-footwear-rulesகுஜராத் கலவர சாதனைக்காக உலகப் ‘புகழ்’ பெற்றிருந்த மோடிக்கு விசா கொடுக்காமல் இருந்து வந்த அமெரிக்கா பின்பு ஒரு நாட்டின் பிரதமர் என்ற முறையில் யாரையும் வரக்கூடாதென்று சொல்ல மாட்டோம் என சுபம் பாடியது. ஆனந்தக் கண்ணீர் தளும்பமோடியும் அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் டீ சாப்பிட்டு, என்ஆர்ஐ-க்கள் மத்தியில் சமோசாவும் முழுங்கிவிட்டு வந்து விட்டார். மற்றவரிடமெல்லாம் சவுண்டும், சண்டமாருதமும் செய்யும் பாஜக கூட்டம் அமெரிக்கா என்றால் மட்டும் ஒரு அடிமைக்குரிய லாவகத்துடன் பேசும்.

ஏற்கனவே இந்தியாவை அமெரிக்காவிற்கு கூறு போட்டு விற்று வந்த மன்மோகன் சிங்கை மவுன சிங் என்று கேலி செய்த பாஜக இன்று மன்மோகனே வெட்கப்படும் அளவுக்கு அமெரிக்க அடிமைத்தனத்தை வெளிப்படுத்தி வருகிறது.

ஒபாமாவுடன் எப்போது வேண்டுமானாலும் பேச ஹாட் லைன், அமெரிக்க ஆயுதங்களை இறக்குமதி செய்வது, அமெரிக்க படைகளுடன் கூட்டு பயிற்சி, முத்தாய்ப்பாக அணுசக்தி ஒப்பந்தம் என்று கைப்பிள்ளையின் சாதனயை அடுக்குகிறார்கள். அமெரிக்க அதிபருடன் ஹாட்லைனில் பேசுவதில் என்ன சாதனை? “என்னய்யா வால்மார்ட் வந்து நாளாச்சு இன்னும் சில்லறை வணிகத்தில் அனுமதிக்காம என்ன பண்றீங்கன்னு” ஒபாமா சத்தம் போடுவதற்கும் மோடி “சரி ஜி உடன் செய்கிறோம்” என்று சரணம் பாடுவது போக இந்த ஹாட் லைனில் குஜராத் லட்டு செய்வது எப்படி என்றா பேசுவார்கள்?

தொழில் நுட்பம், கூட்டுத் தயாரிப்பு என்ற முறையில் அமெரிக்க பாதுகாப்பு தளவாட முதலாளிகள் இந்திய மக்கள் பணத்தை எத்தனை ஆயிரம் கோடிகளை சுருட்டுவார்கள்? மேக் இன் இந்தியா, இலாபம் பை அமெரிக்கா என்று கண்டிசன் அப்ளைதான் போடவேண்டும். பிறகு கூட்டுப் பயிற்சி. இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க இராணுவத்தை பலப்படுத்தவே இந்த பயிற்சி. சீனாவை அச்சுறுத்தும் வண்ணம் ஏற்கனவே கொரியா, ஜப்பானுடன் கூட்டு பயிற்சி செய்யும் அமெரிக்கா இப்போது கிரமமாக இந்தியாவுடனும் செய்யும்.

கடைசியில் அணுசக்தி ஒப்பந்தம். இனி அமெரிக்க முதலாளிகள் காலாவதியான மற்றும் கடும் நாசத்தை விளைவிக்க கூடிய அணு சக்தி உலைகளை இந்திய மக்களின் தலையில் கட்டுவாரகள். பல ஆயிரம் கோடி ரூபாயை இதற்கென நாம் கட்ட வேண்டியிருக்கும். விபத்து நடந்தால் அதுவும் இந்திய அரசின் பொறுப்பிலேயே இருக்கும் என்று முடித்திருப்பார்கள். இது தொடர்பாக எதிர்ப்பு வந்த போது வந்த பேச்சு எதுவும் இப்போது காணோம். இந்த டீலை இந்த விசயத்தில் எப்படி முடித்தார்கள் என்பதை எவரும் அறிவிக்கவில்லை.

இப்படி பாரத மாதாவை முழுதாக தூக்கி அமெரிக்காவிடம் கொடுத்துவிட்டு,  ஓபாமா விஜயத்தை மோடியின் மாபெரும் சாதனை என்று கூப்பாடு போடுவதை பார்த்தால் எஜமானால் கொல்லப்பட்ட அடிமையின் எழவு வீட்டில் வந்து போகும் எஜமானின் விஜயத்தை அடிமைகளின் குடும்பம் கொண்டாடுவதை போல இருக்கிறது.

இப்படி புதுதில்லியில் அடிமைத்தனத்தை சிலேகிக்கும் கூட்டம் பெங்களூருவில் ஊழலை ஆராதித்திருக்கிறது.

ஹாராஷ்டிரா, அரியானா வரிசையில் தமிழகத்தை கபளீகரம் செய்ய யோக்கியனின் செண்ட் அடித்துக் கொண்டு வருகிறது பா.ஜ.க. ஊழல் வழக்கில் வீழ்ந்து கிடக்கும் அதிமுகவையோ இல்லை ஜெயாவையோ பெயரிட்டு சொல்லக் கூட பயப்படும் இந்த வீராதி வீரர்கள் தங்களை ஊழல் எதிர்ப்பு போராளிகளாக காட்டிக் கொள்கிறார்கள். இதில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை சந்திப்பதற்கு மட்டும் ஜெயா அருள் பாலித்திருக்கிறார்.  அந்த வகையில் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வந்த வீராங்கனையை சந்தித்து ஊழலுக்கு ஜே போட்ட யோக்கியர்கள் இவர்கள் மட்டுமே.

மேனியில் புனுகையும், தகரப்பொடியையும் பூசிக் கொண்டு வந்தாலும் வாயிலிருந்து வீசும் கஞ்சா நெடியை மறைக்க முடியுமா? பா.ஜ.க. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த கர்நாடகத்தில் பா.ஜ.க.வின் யோக்கியதையை புகழ் மணக்கச் செய்து வருகிறார்கள் ரெட்டி சகோதரர்கள்.

தென்னிந்தியாவில் முதன்முறையாக 2008-ம் வருடம் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தது பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மைக்கு குறைவான இடங்களை பெற்றிருந்த பா.ஜ.க, இந்தியா கண்டிராத வெட்கக்கேடான ஒரு கர்நாடகா ஃபார்முலாவை அறிமுகப்படுத்தியது. அதற்கு ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்று பெயர். ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்பது மாற்றுக் கட்சிகளிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிகளை ராஜினாமா செய்ய வைப்பது. பிறகு மீண்டும் அவர்களை பா.ஜ.க சார்பில் போட்டியிட வைத்து வெற்றி பெறச் செய்யும் கீழ்மையான அரசியல் விளையாட்டு. பா.ஜ.க.வின் வலையில் விழுந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 25 கோடி ரூபாய் தரப்பட்டது. இதன்மூலம் சட்டசபையில் தனது அறுதி பெரும்பான்மையை நிரூபித்தது பா.ஜ.க. இந்த ‘ஆபரேஷன் லோட்டஸுக்கு’ புரவலாக செயல்பட்டவர்கள் ரெட்டி சகோதரர்கள் என்ற சுரங்க மாஃபியா கும்பல்.

ஜனார்தன் ரெட்டி சிறைமீளும் காட்சி
சிறையிலிருந்து ஜனார்தன் ரெட்டி வெளியேறும் கோலாகலம்

ரெட்டி சகோதரர்கள் மொத்தம் மூவர். கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி மற்றும் ஜனார்த்தன ரெட்டி ஆகியோர். நான்காவதாக ஸ்ரீராமலு என்பவர் இணைந்தார். ஸ்ரீராமலு இவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான கூட்டுக் கொள்ளையர். ஒரு சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளுக்கு மகன்களாக பிறந்த ரெட்டி சகோதரர்கள் முதலில் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கினர். 1999-ம் வருடம் பெல்லாரியில் சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிட்ட சுஸ்மா ஸ்வராஜை ஆதரித்தனர். கைமாறாக பெல்லாரி மாவட்ட பா.ஜ.க தலைவரானார், கருணாகர ரெட்டி.

திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ரெட்டி சகோதரர்கள். அரசியலுடன் தொழிலையும் கைகோர்த்து வளர்த்தார்கள். ஆந்திராவின் ஒபுலப்புரம் சுரங்கங்கள் 2000-ம் வருடம் இவர்கள் கைக்கு வந்தன. ஓபுலப்புரம் சுரங்கங்கள் ஓபுலப்புரத்தை சேர்ந்த ராகவ ரெட்டி என்பவருக்கு சொந்தமானது. அவருடைய சுரங்கங்களை முதலில் குத்தகைக்கு எடுத்தனர், ரெட்டி சகோதரர்கள். இரும்புத் தாது சுரங்கங்களிலிருந்து பெரிய லாபம் கிடைக்காத போது அவற்றை வேறோரு நபருக்கு சிலகாலம் உள்குத்தகை விட்டனர்.ஒரு மெட்ரிக் டன் இரும்புத் தாதின் விலை 200 ரூபாயிலிருந்து 2700 ரூபாயாக உயர்ந்த போது மறுபடியும் மீட்டனர். அதன் பிறகு பெருத்த லாபத்தை சம்பாதிக்கத் தொடங்கினர், ரெட்டி சகோதரர்கள். அனுமதிக்கப்பட்ட இடங்களை கடந்து பெல்லாரி வரையிலும் சுரங்க நிறுவனங்களை விரிவாக்கினர். சுரங்க நிறுவனங்களிலிருந்து ஒரு நாளின் வருமானம் 6 கோடியாக வரத் தொடங்கியது. ஆந்திராவின் முதலமைச்சராக அப்போதிருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியுடன் கள்ளக் கூட்டு வைத்து தமது தொழில் சாம்ராஜ்யத்தை விரிவாக்கினர்.

‘கிளாஷ் ஆஃப் க்ளேன்ஸ்’ இணைய விளையாட்டில் மற்றவரின் செல்வங்களை கவர்ந்து வருவது போல, அடுத்தவர்களின் சுரங்கங்களுக்கு தமது அடியாள் படையை அனுப்பி அவர்களின் இரும்புத் தாதுகளை கொள்ளையிட்டு வருவதையும் வாடிக்கையாக கொண்டனர். மேலும், சில சுரங்க நிறுவனங்களின் உரிமையாளர்களை மிரட்டி தம்முடன் இணைத்தும் அடாவடி செய்தனர். கர்நாடகா மற்றும் ஆந்திரா என இரண்டு மாநில அரசுகளை கைக்குள் போட்டுக் கொண்டு பந்தய ஆட்டம் போட்டனர்.

பட்டாபிராம ராவ்
சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி பட்டாபிராம ராவ்

ஆந்திரா மற்றும் கர்நாடகா எல்லை வழியில் எங்கெங்கு இரும்புத் தாதுகள் கிடைக்கின்றனவோ அங்கிருந்து அவற்றை வெட்டி எடுத்து ஓபுலப்புரம் சுரங்கத்தில் பதுக்கி வைத்ததை செயற்கைக்கோள் படங்கள் வெளிக்கொணர்ந்தன. ‘இந்தியாவில் வேறெந்த துறையிலும் நடைபெற்ற ஊழலை விடவும் இது அதிகமானது’ என்கிறார், லோக் ஆயுக்தா நீதிபதியாக செயல்பட்ட சந்தோஷ் ஹெக்டே.

எதிர்ப்புக் குரல்களை அடக்கியும், நசுக்கியும் வந்த ரெட்டிகளின் கழுத்தில் மணியை கட்டியவர் அவர்களிடம் பணிபுரிந்த ஆஞ்சனேயா என்பவர். பெல்லாரியை சேர்ந்த ஆஞ்சனேயா, ஓபுலப்புரம் சுரங்க நிறுவனத்தின் முன்னாள் ஊழியர். ரெட்டி சகோதரர்களின் கிரிமினல் நடவடிக்கைகள் மீது தான் திரட்டிய தகவல்கள் அனைத்தையும் மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் வழங்கினார். அதன் பிறகு ஒன்றன்பின் ஒன்றாக ரெட்டி சகோதரர்களின் பல்வேறு முறைகேடுகள் வெளியுலகிற்கு தெரிய ஆரம்பித்தன.

2011- வருடம் வெளிவந்த லோக் ஆயுக்தா அறிக்கையின் படி 2.98 கோடி மெட்ரிக் டன் இரும்புத் தாது முறைகேடான முறையில் வெட்டப்பட்து. இதன் மூலம் அரசுக்கு ரூ 16,500 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரும்புத் தாதுவை வெட்டிக் கடத்தியதில் ரெட்டி சகோதரர்கள் 30,000 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர்.

தமது கொள்ளையை சுமூகமாக கொண்டு செல்ல ‘இடரில்லா ஒழுங்கு முறையை’ ( zero risk system ) ஏற்படுத்தி இருந்தனர். இதனை எந்த அளவுக்கு கச்சிதமாக செயல்படுத்தியுள்ளனர் என்பதற்கு உதாரணமாக 2011-ம் வருடம் மத்தியப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட ஜனார்த்தன ரெட்டி 2012-ம் வருடம் பிணையில் விடுதலையாக சி.பி.ஐ நீதிபதிக்கு 10 கோடி ரூபாய் வழங்கிய சம்பவம் எடுத்துரைக்கிறது, ஆந்திர உயர்நீதிமன்றம். லஞ்சம் பெற்ற சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி பட்டாபி ராமராவை கைது செய்ய உத்தரவிட்டது. ஜனார்த்தன ரெட்டி பிணையையும் ரத்து செய்தது. அன்று தாமதப்பட்ட விடுதலை இந்த 23-ந் தேதி ஜனார்த்தன ரெட்டிக்கு கைகூடியுள்ளது. ரெட்டிகளின் பணத்தில் தற்போது குளிப்பாட்டப்பட்டவர்கள் யார்யார் என்று தெரியவில்லை.

ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு போயஸ் தோட்டத்தில் முடங்கிக் கிடக்கும் ஜெயலலிதாவால் அதிகபட்சமாக அரசு வழக்கறிஞரை தான் கைக்குள் போட்டு அவருக்கு அபராதம் பெற்றுத் தரத் தான் முடிந்தது. பா.ஜ.க.வில் சுஷ்மா ஸ்வராஜின் ஆசீர்வாதம் பெற்று வளர்ந்த ரெட்டிகள் நீதிபதியையே வளைத்த திறமையாளர்கள். அந்த வகையில் மாறன் சகோதரர்களும், ஜெயலலிதாவும் பா.ஜ.க.விடமிருந்து கற்க வேண்டிய நிலையிலே தான் இருக்கிறார்கள்.

ஊழல் ராணி ஜெயாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் பாஜக நிறுத்தியிருக்கும் வேட்பாளரே ஐந்தாறு சுயநிதிக் கல்லூரிகள் முதலாளி என்பதிலிருந்து இவர்களின் யோக்கியதை சந்தி சிரிக்கிறது. கர்நாடகாவிலிருந்து ஊழல் முடைநாற்றம் வீசும் காவி கும்பலை தமிழகத்தில் நாம் அனுமதிக்க போகிறோமா?

–  சம்புகன்

இது தொடர்பான செய்திகள்

சி.ஐ.டி.யு துரோகம் : பு.ஜ.தொ.மு வில் இணைந்த தொழிலாளிகள் !

0

துரோகத்திற்கெதிராக கலகம் : சி.ஐ.டி.யு -விலிருந்து வெளியேறி  பு.ஜ.தொ.மு வில் இணைந்த தொழிலாளர்கள்!

திருச்சி இரயில்வே குட்செட்டில் 23.1.2015 அன்று காலை அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையை கண்டித்தும் சி.ஐ.டி.யு விலிருந்து வெளியேறி பு.ஜ.தொ.மு வில் இணைந்த தொழிலாளர்களை வரவேற்றும் வாயிற் கூட்டம் நடைபெற்றது.

சுமைத் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலர் சுந்தர்ராசு தலைமை உரையாற்றி சி.ஐ.டி.யுவிலிருந்து விலகி பு.ஜ.தொ.மு வில் இணைந்த சுகுமார் செட் தொழிலாளர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்டத்தலைவர் தோழர் காவிரிநாடன் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் சதித்தனத்தையும் அமெரிக்க அதிபர் ஒபாமா வருகை இந்திய பொதுத்துறை நிறுவனங்களை சூறையாடவே ! என்பதை விளக்கியும் பேசினார்.

சுமைத் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்
தோழர் காவிரிநாடன்

பு.ஜ.தொ.மு வில் இணைந்த சுகுமார் செட் நிர்வாகி தோழர் தனக்கொடி பேசும்போது…

“நாங்கள் பு.ஜ.தொ.மு- வில் இணைந்ததாக சொல்றீங்க. அப்படியல்ல நாங்கள் CITU-வின் வஞ்சகத்தால… எங்க வேலை உரிமையைப் பறிக்க முயற்சித்த அந்த சங்கத்துக்கிட்டேயிருந்து பாதுகாப்பு தேடி பு.ஜ.தொ.மு-வுல தஞ்சமடைஞ்சிருக்கோம்-ங்கறதுதான் சரி.

சுமைத் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்
தோழர் தனக்கொடி

எல்லாத் தொழிலாளிகளுக்காகவும் உண்மையிலேயே அக்கறையோட போராடுவது சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்தான். இந்த சங்கத்தோட ‘உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்ற வாசகம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

ரெண்டு வருசத்துக்கு முந்தியே இந்த சங்கத்துல இணைய நாங்க விருப்பப்பட்டோம். அப்ப எங்க செட் பொறுப்பாளரா இருந்த திரு. மூசா, சி.ஐ.டி.யு-வ உருவாக்கி அதுக்கு தலைவரா நான் இருக்கும் போதே வேற சங்கத்துக்கு நீங்க போறது சங்கடமா இருக்குன்னாரு. அதனால நாங்க வரல.

ஆனா அவர் இறந்தவுடன் ‘அண்ணன் எப்ப சாவான்; திண்ண எப்ப காலியாகும்னு’ காத்திருந்த சில மேஸ்திரிங்க “ஒருத்தர் செய்யும் வேலையை மற்றவர் பறிக்க கூடாது”-ங்கற ஒப்பந்தத்தை மீறி சுயநலனுக்காக எங்கவேலையை பறிக்க நினைச்சாங்க! CITU சங்கமும் இந்த அடாவடித்தனத்துக்கு ஒத்துப் போகுது.

என் வேல…என் வேல-ன்றியே சங்கம் பேசிவிடலனா வேலைவந்திருக்குமா? சங்கத்த மீறி எப்படி வேலை செய்வன்னு பார்க்கறேன்னு சங்கத்தின் மாவட்ட தலைவரான நீங்களே (சி.ஜ.டி.யு தலைவர் ராஜாவே) மிரட்டிறீங்க! … கேக்க நாதியில்லன்னு இழிவுசெய்து எங்க வேலையப் பறிக்க நினைச்சீங்க…. அதனாலதான் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில தஞ்சமடைந்திருக்கோம்.

நா கேட்குறேன்….நியாயமான கூலி கேட்டுப் போராடிய வெண்மணி தியாகிகள் நினைவாக கட்டப்பட்ட ‘வெண்மணி இல்லத்திலேயே’ (சி.ஜ.டி.யு திருச்சி மாவட்ட அலுவலகம்) ரவுடிகள வச்சி மிரட்றீங்க. சங்கத்துக்கு எங்க தொழிலாளர்கள் சந்தா கொடுக்கலையா? கட்டிடநிதி, கட்சி நிதியின்னு நீங்க கேட்டபோதெல்லாம் காசு கொடுக்கலையா? கூப்பிட்ட போதெல்லாம் போராட நாங்க வரலையா? சங்கம் பேசி விட்டதாலேயே இன்னைக்கு சங்கத்துக்கிட்ட வேலய ஒப்படைன்னு கேட்டா இது அடாவடி இல்லையா? குட்செட்டுல வேல செய்யிற எல்லா மேஸ்திரிகளையும் கூட்டி கூட்டத்தப் போடுங்க! நியாயத்தை அவர்கள் சொல்லட்டும்” என்று கூறி முடித்தார்.

அடுத்து பேசிய சு.ப.தொ.சங்கத்தின் சிறப்புத்தலைவர் ராஜா, “சி.ஐ.டி.யு-வின் பாரபட்சமான நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு இமாம் மேஸ்திரி மற்றும் தொழிலாளர்கள் மக்கள் கலை இலக்கியக் கழகத்தை அணுகிய போதுதான் 2006 – ல் சுமைப்பணித் தொழிலாளர்கள் பாதுகாப்புச் சங்கத்தை துவங்கினோம். சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமில்லாமல் குட்செட்டின் அனைத்து தொழிலாளர்களின் நலனில் காட்டிய அக்கறையைப் பார்த்து சின்னையன் செட் தொழிலாளர்கள் இணைந்தனர். இன்று தொழிலாளர்களின் குடும்பத்தை பாதுகாக்க ஈ.எஸ்.ஐ – பி.எஃப் துவங்கி பாரபட்சமின்றி பலருக்கும் உதவியது. இறந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் அரசு சலுகைகளை பெறுவதற்கும் ஏற்பாடு செய்துள்ளது. வேலையிடத்தில் குடிநீர், மின்விளக்கு போன்ற அடிப்படைவசதிகளுக்காகவும் அடையாள அட்டை, பணி நிரந்தரம் போன்ற உரிமைகளுக்காகவும் போராடிவருகிறது.

சுமைத் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்
தோழர் ராஜா

எல்லா தொழிலாளர்களின் நலன் என்ற போர்வையில் சுகுமார் செட் வேலையைப் பறிக்க முயற்சிக்கிறீர்களே, வேலையில்லாத தொழிலாளர்களுக்காக உண்மையிலேயே அக்கறையிருந்தா, சி.ஐ.டி.யு கிளை செயலாளர் சிவா தினசரி வேலைக்கு போறாரே, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக ஒருநாள் தன்வேலையை பிரித்து தரவேண்டியதுதானே? எங்க சங்கத்தின் செயலர் இரத்தினம் எத்தனை முறை உங்கள் சங்க தொழிலாளர்களுக்கு வேலைகளை விட்டுக் கொடுத்துள்ளார். நன்றி உணர்ச்சி இருந்தால் சிந்தித்துபார்!” என முகத்தில் அறைந்தார்போல் இடித்துரைத்தார்.

மேலும், “2014 – 2016 க்கான கூலி பேச்சுவார்த்தையை முதலாளிகளும், சி.ஐ.டி.யு-வுமே விரும்பாத சூழ்நிலையில் சுமைப்பணித் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் தானே முறையாக கடிதத்தை கொடுத்து கூலி உயர்வு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தோம். அப்போதும் கூட சி.ஐ.டி.யு தலைவர் ராஜா “ எங்க ஆளுக வேல வந்தா போதும் கூலி உயர்வுன்னு பேசி வேல வராம செய்திடாதீங்கன்னு சொல்றாங்க” என்று சொல்லி தொழிலாளர்கள் மற்றும் மேஸ்திரிகளின் கோரிக்கைப்படிதான் நடந்து கொள்கிறேன் என்பதாக நியாயம் பேசி தனது முதலாளி வர்க்க சேவையை மூடி மறைக்க முயன்றார் இதே CITU தலைவர் ராஜா.

சி.பி.எம் வேட்பாளர் ஸ்ரீதருக்கான நாடாளுமன்றத் தேர்தல் செலவுக்காக முதலாளிகளிடம் தேர்தல் நிதி பெற்றதற்கு நன்றிக் கடனாக தொழிலாளர்களின் கூலி உயர்வைக் கோராமல் துரோகமிழைக்க துடித்த போது உறுதியாக நின்று தொழிலாளர்களை பாதுகாக்க 30% கூலி உயர்வை பெற்றுத் தந்தது எமது சங்கம்.

நேற்றுவரை உங்கள் சங்கத்தில் இணைந்து உங்களோடு உழைத்த சுகுமார் செட் தொழிலாளர்களின் வேலையை அடாவடியாக பறிக்கச்சொல்லி பாரபட்சமாக ஆணையிடுகிறீரே இதுதான் சங்கத் தலைவருக்கு அழகா? இரயில்வே போலீசும், C&F (Clearing and Forwarding) கான்ட்ராக்டர்களும் “நீங்கள் செய்வது முறையல்ல. இது சுகுமார்செட் வேலை” என்று கூறியபோதும், உங்கள் சங்கத்தில் இப்போதும் இருக்கும் தொழிலாளர்கள் பலரும் கூட இது நியாயமில்லை. அடாவடியானது என்று பேசுகின்றனர். அதைக்கூட உணர முடியாமல் சங்க தலைவரே ரவுடித்தனத்தில் இறங்கி தொழில் சூழலைக் கெடுக்கிறீரே இது சரியா?

1967 நக்சல்பாரி கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, தான் சொன்ன கொள்கைக்கு மாறாக சென்ற போது உழுபவனுக்கே நிலம் சொந்தம், உழைப்பவருக்கே அதிகாரம் என்ற கொள்கையை சரியாக நடைமுறைபடுத்துவதற்காக துவங்கப்பட்டதுதான் எமது நக்சல்பாரி அமைப்பு. அன்றைக்கு போலீசு மந்திரியா இருந்த ஜோதிபாசு கட்சியின் ஊழியர்களையே போலீசை வைத்து கொன்றொழித்தார். அந்த துரோகம் இன்று வரை தொடர்கிறது.

எங்கெல்லாம் போலி கம்யூனிஸ்டுகளும் சி.ஐ.டி.யு-வும் துரோகம் செய்கிறதோ அங்கெல்லாம் தொழிலாளரைக் காப்பதற்காக எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பிறக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன் இந்த குட்செட்டில் எமது சங்கத்தை துவங்கும் போது, கொடி மரம் ஊன்றுவதற்காக வெட்டப்பட்ட குழி எவனப் புதைக்கிறதுக்குன்னு கேள்வியெழுப்பி மிரட்டிப்பார்த்தீர்கள். ஆனால், உங்கள் கொடி மரம், பெயர்ப்பலகையை உங்கள் தொழிலாளர்களே தூக்கியெறியும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது” என்று கூறி முடித்தார்.

இடையிடையே ம.க.இ.க-வின் மையக் கலைக்குழு தோழர்கள் தொழிலாளி வர்க்க உணர்வூட்டும் எழுச்சியான பாடல்களைப் பாடி சிறப்பித்தனர். கிளை செயலர் இரத்தினம் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார்.

சுமைத் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்
தோழர் ரத்தினம்

முன்னதாக, 7.1.2015 அன்று சி.ஐ.டி.யு–விலிருந்து தாங்கள் விலகுவதை கடிதமாகவும் சுவரொட்டி போட்டு ஒட்டியும் தொழிலாளர்களுக்கு தெரிவித்தனர்.

சுமைத் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்

பொது அறிவிப்பு

சுகுமார் செட் (SWC) தொழிலாளிகளாகிய நாங்கள் அனைவரும் மேஸ்திரி திரு. மூசா இருந்தவரை சி.ஐ.டி.யு சங்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்தோம்.

தற்போது, நாங்கள் செய்து வந்த எஸ்.டபிள்யூ.சி அரிசி வேலையை அபகரிக்கும் நோக்கத்துடம் சி.ஐ.டி.யு சங்கமும் அதன் மாவட்டச் செயலாளர் ஆர். ராஜாவும் பாரபட்சமாக நடந்து கொண்டதால் அதிலிருந்து 07.01.2015 முதல் விலகி விட்டோம்.

நாங்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான சுமைப்பணித் தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தில் இணைந்துள்ளோம் என இதன்மூலம் அறிவிக்கிறோம்.

எனவே, எமது செட் தொடர்பான எந்த விவரங்கள், பேச்சு வார்த்தை பற்றியும் இனி சி.ஐ.டி.யு சங்கத்தை தொடர்புகொள்ள வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்
சுகுமார் செட் (CWC) தொழிலாளர்கள்,
ரெயில்வே குட்செட், திருச்சி

சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் (TPGY)
இணைப்பு : புதிய  ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தொடர்புக்கு : 9698930113

இதைப் பார்த்து அரண்டு போன சி.ஐ.டி.யு ராஜாவின் கையாட்கள் சுவரொட்டிகளை கிழிக்கவேண்டும், ஒட்டியவர்களை ஒப்படைக்க வேண்டும். பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என லாரிகளை இயக்க விடாமல் அகராதி செய்ததுடன் வேலை செய்வதையும் தடுத்தனர்.

சுமைத் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்
கலைக்குழு பாடல்

சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்புத்தலைவர் ராஜா, “இது தொழிற் சங்க நடைமுறையில் புதியதல்ல. சி.ஐ.டி.யு சங்கத்தில் செயல்பட்ட தாங்கள் சங்கத் தலைமையின் சர்வாதிகார போக்கை கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைந்து விட்டோம் என செட்டின் பெயர், முகவரியோடு அறிவித்துள்ளனர். சி.ஐ.டி.யு தலைவர் ராஜா பெயரைப் போட்டுத்தானே அடிக்க முடியும்? தவறு செய்யும் பிரதமரையும் முதலமைச்சரையும் நீதிபதிகள் பெயரை சுவரொட்டியில் போட்டு ஒட்டுவதுதான் எங்கள் நடைமுறை . அதைத்தான் இப்போதும் செய்கிறோம். எப்போதும் செய்வோம். மறுப்பிருந்தால் நீங்களும் சுவரொட்டி போட்டு ஒட்டுங்கள்” என எச்சரித்தார்.

ரெயில்வே போலீசார் மற்றும் சி&எஃப் காண்ட்ராக்டர்கள் மத்தியில் இதை அம்பலப்படுத்தியதுடன், “வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். மீறித் தடுத்தால் இவர்களைக் கைது செய்யுங்கள்” என எச்சரிக்கவே சி.ஐ.டி.யு-வினர் வாலாட்ட முடியாமல் திரும்பிச் சென்றனர். சி.ஐ.டி.யு-வின் அடாவடித்தனம் முறியடிக்கப்பட்டு வேலை அமைதியாக நடந்தது.

சுமைத் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்
கலைக்குழு

பு.ஜ.தொ.மு-வில் இணைந்த தொழிலாளர்கள் தங்கள் வேலை உரிமையை நிலைநாட்டியதுடன் இந்த சங்கத்தில் ஒவ்வொரு விசயத்திலும் கருத்து கேட்டு விவாதிக்கும் உரிமையும் கிடைத்த (இந்த சாதாரண உரிமை கூட இல்லாமல் இருந்த போலிகளின் சங்க நடைமுறையை என்னவென்பது?) இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் உற்சாகமாக வேலை செய்கின்றனர்.

தகவல்
சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்,
இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி

ஊழல் கிரிக்கெட்டுக்கு புனித விளக்கேற்றும் உச்ச நீதிமன்றம்

2
சீனிவாசன் அதிகாரம்
சீனிவாசன் வாரியத் தலைவர் அதிகாரத்தை பயன்படுத்தி இந்தியா சிமென்ட்சுக்கும் தனது குடும்பத்துக்கும் ஆதாயம் ஈட்டியதற்கான சான்றுகளும் உள்ளன. ஆனால் தண்டனை இல்லை.

ந்திய கிரிக்கெட் வாரியத் தலைவரும், இன்றைய உலகக் கிரிக்கெட்டின் ‘ஜாம்பவானுமான’ இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனின் மருமகன் குருநாதன் மெய்யப்பன ஐ.பி.எல் போட்டிகள் தொடர்பாக சூதாடியது குறித்த வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.

1. குருநாதன் மெய்யப்பனும் ராஜ் குந்த்ராவும் சூதாடினார்கள். தங்களுக்கு உள் விவகாரங்கள் தெரிந்த சென்னை அணி, ராஜஸ்தான் அணி ஆடும் ஐ.பி.எல் போட்டிகள் தொடர்பாகவும் பந்தயம் வைத்து சூதாடினார்கள்.

2. குருநாத் மெய்யப்பனின் மாமனார் சீனிவாசனுக்கு இந்தியா சிமென்ட்சில் 0.14% தான் பங்குகள் உள்ளன என்பதால் அவருக்கும் இந்தியா சிமென்ட்சுக்கு சொந்தமான சென்னை அணிக்கும் தொடர்பில்லை என்று சொல்ல முடியாது. அந்நிறுவனத்தில் அவரது குடும்பத்தினரின் மொத்த பங்கு சதவீதம் 29.23%. சீனிவாசனின் மனைவியும், மகளும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களாக உள்ளனர்.

3. சீனிவாசன் ஐ.பி.எல் போட்டிகளை கட்டுப்படுத்தும், ஐ.பி.எல் அணிகளை ஒழுங்குபடுத்தும் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தனக்கு இருந்த முடிவெடுக்கும் அதிகாரத்தை, சென்னை ஐ.பி.எல் அணிக்கு சாதகமாக பயன்படுத்தும் வாய்ப்புகள் இருந்தன.

4. அவர் அந்த அதிகாரத்தை அப்படி பயன்படுத்தி இந்தியா சிமென்ட்சுக்கும் தனது குடும்பத்துக்கும் ஆதாயம் ஈட்டியதற்கான சான்றுகளும் உள்ளன.

முதலாவதாக, 2008-ம் ஆண்டு சேம்பியன்ஸ் கோப்பை போட்டி ரத்தானதை அடுத்து சென்னை ஐ.பி.எல் அணியின் உரிமையாளர் இந்தியா சிமென்ட்சுக்கு ரூ 10.4 கோடி ஈட்டுத் தொகை வழங்க முடிவெடுத்தது சீனிவாசன் தலைமையிலான கிரிக்கெட் வாரியம். தனது சொந்த ஆதாயம் தொடர்பாக முடிவெடுக்கும் அந்தக் கூட்டத்திலிருந்து பெயரளவுக்குக் கூட விலகி இருக்கவில்லை, சீனிவாசன்.

இரண்டாவதாக, 2009-ம் ஆண்டு அவ்வணிக்கு ரூ 13.1 கோடி ரூபாய் ஈட்டுத் தொகை வழங்குகிறது கிரிக்கெட் வாரியம். “சீனிவாசன் தனக்குத் தானே பணத்தை வழங்கிக் கொள்கிறார், அதனால் அவரை வாரியத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்” என்று கூக்குரல் எழுந்ததும், இந்தியா சிமெண்ட்ஸ் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறது.

கிரிக்கெட் வாரிய விதி திருத்தம்
கிரிக்கெட் வாரியப் பொறுப்பில் இருப்பவர்கள் ஐ.பி.எல் அணியை சொந்தமாக்கிக் கொண்டு வணிக லாபம் ஈட்டுவதை அனுமதிக்கும் வகையில் 2008-ம் ஆண்டில் வாரியத்தின் விதி 6.2.4 திருத்தப்பட்டது செல்லாது. வாரியமே வணிக இலாபம் ஈட்டலாமா?

மூன்றாவதாக, குருநாத் மெய்யப்பன் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் வெளியானதும், பொது வெளியில் எழுந்த கோபத்தையும், ஏமாற்றத்தையும் சமாளிக்க சீனிவாசன் தலைமையிலான கிரிக்கெட் வாரியம் அவசர அவசரமாக சென்னை உயர் நீதிமன்றத்தின் 2 முன்னாள் நீதிபதிகள் உட்பட 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அறிவிக்கிறது. இடையிலேயே குழுவின் ஒரு உறுப்பினர் அதிலிருந்து விலகி விடுகிறார்.

மீதியிருந்த இரண்டு பேரைக் கொண்ட அந்தக் குழு “பத்திரிகைகளில் வெளியாகும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தான் விசாரணை எதுவும் செய்ய முடியாது” என்று அறிக்கை அளித்து விடுகிறது. அதைப் பயன்படுத்தி விஷயத்தை இழுத்து மூட முயற்சித்தது கிரிக்கெட் வாரியம்.

(இந்த விசாரணைக் குழு தொடர்பாக பம்பாய் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில்தான் இப்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.)

5. கிரிக்கெட் வாரியப் பொறுப்பில் இருப்பவர்கள் ஐ.பி.எல் அணியை சொந்தமாக்கிக் கொண்டு வணிக லாபம் ஈட்டுவதை அனுமதிக்கும் வகையில் 2008-ம் ஆண்டில் வாரியத்தின் விதி 6.2.4 திருத்தப்பட்டது செல்லாது. ஒரு விஷயத்தை முடிவு செய்யும் இடத்தில் இருப்பவரே அந்த முடிவால் ஆதாயம் அடைபவராகவும் இருப்பது இயற்கை நீதிக்கு முரணானது.

6. ஐ.பி.எல் போட்டிகளின் முதன்மை செயல்பாட்டு அலுவலர் சுந்தரராமன் (சீனிவாசனின் ஆள்) முறைகேடுகளில் ஈடுபட்டாரா என்பதை மேலும் விசாரித்து அது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் இருக்கும் சந்தேகங்களை களைய வேண்டும்.

தாவூத் இப்ராகிம்
கிரிக்கெட் வாரியத்தை தமது குடும்ப வியாபார நிறுவனமாக நடத்தி வரும் இந்தியத் தரகு முதலாளிகளின் செயல்பாடுகளில் அவர்கள் விரும்பாத தலையீடுகள் எதுவும் முளைக்காமல் உறுதி செய்திருகிறது. (படம் : கிரிக்கெட் சூதாடிகளில் ஒருவரான தாவூத் இப்ராகிம்)

இந்தத் தீர்ப்பின் தொடக்கமே உச்ச நீதிமன்றத்தின் சுய சந்தேகத்திலிருந்து ஆரம்பிக்கிறது. கிரிக்கெட் வாரியம் தொடர்பான விவகாரங்களில் விசாரணை செய்ய உயர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பி அதற்கு பதில் சொல்கிறது நீதிமன்றம். கிரிக்கெட் வாரியத்தை அரசு நிறுவனம் என்று சொல்ல முடியுமா, மற்றும் அரசியல் சட்டப் பிரிவு 226-ன் கீழ் அதன் விவகாரங்களில் தான் தலையிட முடியுமா என்று முதலில் விளக்குகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நாடு முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதை கட்டுப்படுத்துவதாலும், கிரிக்கெட் போட்டிகள் பல கோடி ரசிகர்களின் ஆர்வத்திற்குரியவையாக இருப்பதாலும், அதன் செயல்பாடுகள் பொது நலனை பாதிப்பதால் அதில் நீதிமன்றங்கள் தலையிடலாம் என்று எச்சரிக்கையாக சொல்கிறது.

அதற்கு முன்னதாக, கிரிக்கெட் வாரியத்தை ஒரு அரசு நிறுவனம் என்று கூற முடியாது என்று தெளிவுபடுத்தி விடுகிறது. அதன் மூலம் கிரிக்கெட் வாரியத்தை வியாபார நிறுவனமாக நடத்தி வரும் இந்தியத் தரகு முதலாளிகளின் செயல்பாடுகளில் அவர்கள் விரும்பாத தலையீடுகள் எதுவும் முளைக்காமல் உறுதி செய்திருகிறது.

இவ்வாறு, கிரிக்கெட் வாரிய நடைமுறைகளை விசாரிப்பதாக கூறிக் கொண்டு, அவற்றை கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளின் கீழாகவே விசாரிக்கப் போவதாக விலகி நிற்கிறது. கிரிக்கெட் உலகில் சீனிவாசன் முதலானவர்கள் நடத்தி வரும் குற்றச் செயல்களை, தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரித்து தண்டனை வழங்கும் அதிகாரத்தை தனக்குத் தானே மறுத்துக் கொள்கிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
“ஒரு சிலர் தமது வணிக நோக்கத்துக்காக கிரிக்கெட்டை முறைகேடாக பயன்படுத்துகின்றனர் என்று  மக்கள் உணர ஆரம்பித்தால் கிரிக்கெட் வாரியம் தனது லாபத்துக்காகவும், கிரிக்கெட் வீரர்களின் லாபத்துக்காகவும் உருவாக்கியிருக்கும் வருமான வாய்ப்புகள் அனைத்தும் பாழாகி விடும்” – உச்ச நீதிமன்றம்

கிரிக்கெட் ஊழல் குறித்த விசாரணையை வெறும் சென்டிமெண்டாக மட்டுமே உச்சநீதிமன்றம் பார்க்கிறது.

“கிரிக்கெட் விளையாட்டை கண்டு களிக்கும் மக்கள் அது நேர்மையாக விளையாடப்படுகிறது என்றும், அதன் கோட்பாடுகளுக்கும் புனிதமான மீறப்படக்கூடாத நோக்கங்களுக்கும் மாறாக எந்த விதமான ஊழல்களும் நடக்கவில்லை என்று நம்புகின்றனர். அதனால்தான், கிரிக்கெட் இன்னும் பரவலாக பார்க்கப்படுகிறது.”

“மாறாக, ஒரு சிலர் தமது வணிக நோக்கத்துக்காக கிரிக்கெட்டை முறைகேடாக பயன்படுத்துகின்றனர் என்று அவர்கள் உணர ஆரம்பித்தால், போட்டிகளிலும், அதன் நிர்வாகத்திலும் நடக்கும் மோசடிகள் கிரிக்கெட்டின் உண்மை வடிவத்தை சிதைத்து விட்டன என்று அதன் மீது ஆர்வம் இழக்க ஆரம்பித்தால், கிரிக்கெட் வாரியம் தனது லாபத்துக்காகவும், கிரிக்கெட் வீரர்களின் லாபத்துக்காகவும் உருவாக்கியிருக்கும் வருமான வாய்ப்புகள் அனைத்தும் பாழாகி விடும்“ என்று தீர்ப்பில் விளக்கமளித்திருக்கிறார்கள் நீதிபதிகள்.

இதைத் தவிர்க்க வேண்டும். அதாவது கிரிக்கெட் வாரியத்திலோ, ஐ.பி.எல் போட்டிகளிலோ ஊழலோ, மோசடியோ இருப்பதாக பொதுமக்கள் உணராத வகையில் உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் உச்சநீதி மன்றத்தின் நோக்கம். ஊழலையும், மோசடிகளையும் தடுப்பதையோ அவற்றுக்குக் காரணமானவர்களை தண்டிப்பதையோ அது செய்யப் போவதில்லை என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்துகிறது.

குற்றக் கும்பல் தலைவர் சீனிவாசன்
பல தரப்பினருக்கும் வாயடைப்பு நிதியாக பல கோடி ரூபாய் வாரி வழங்கி குற்றக் கும்பல் தரகர்களிலேயே தலை சிறந்தவராக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் சீனிவாசன்.

ஊழல்கள், பந்தயம் வைத்து சூதாடுவது, அணி நிர்வாகிகளே சூதாட்டத்துக்காக போட்டியின் போக்கை மாற்றியதாக கூறப்படும் குற்றசாட்டுகள், பெருமளவு பணம் கைமாறுவது என்று சகிக்க முடியாத முடைநாற்றம் இந்திய கிரிக்கெட் உலகை சூழ்ந்திருக்கும் போது அதை மறைப்பதற்கு ஊதுவத்தி ஏற்றி வைக்கும் வேலையை மட்டும் செய்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

அதற்காக, கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்வதற்காக, ‘கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகளிலிருந்து (ஐ.பி.எல்) அதன் நிர்வாகிகளே ஆதாயம் பெறலாம் என்ற வகையில் விதி திருத்தப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்.’ என்று உத்தரவிட்டிருக்கிறது. அதன் மூலம், சீனிவாசன் கிரிக்கெட் வாரிய பதவி அல்லது சென்னை ஐ.பி.எல் அணி இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கண்டிப்பு காட்டியிருப்பதாக ஊடகங்கள் பில்ட்-அப் கொடுக்கின்றன.

ஆனால், பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் புரளும் இந்திய கிரிக்கெட் எனும் மாபெரும் மோசடி தொடர்பாக ஒரு துரும்பைக் கூட சரிசெய்ய முன்வரவில்லை உச்ச நீதிமன்றம்.

முதலாவதாக, இந்தியாவின் பிரம்மஸ்ரீ கிரிமினல்கள் வரிசையில் வரும் சீனிவாசன், கிரிக்கெட் வாரியத் தலைவர் என்ற முறையில், இயற்கை நீதிக்கு விரோதமாக சென்னை அணிக்கு ஆதாயம் தேடும் வகையில் நடந்து கொண்டார் என்பதற்கான சான்றுகளை குறிப்பிட்டாலும், அவர் குருநாதன் விவகாரத்தை மூடி மறைக்க முயற்சித்ததற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அவரை விடுவித்திருக்கின்றது.

இரண்டாவதாக, 2008-ம் ஆண்டு அவ்வாறு “இயற்கை நீதி”க்கு விரோதமாக வாரிய விதியைத் திருத்திய இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், மகாராஷ்டிரா தரகர் சரத்பவார், சசாங்க் மனோகர், ஐ.எஸ் பிந்த்ரா, லலித் மோடி ஆகியோருக்கு தண்டனை என்று முணுமுணுக்கக் கூடத் துணியவில்லை நீதிபதிகள்.

மூன்றாவதாக, “இந்தியா சிமென்ட்ஸ் தனது அணியில் பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதால்” அப்படி ‘இயற்கை நீதி’க்கு மாறாக சீனிவாசன் பெற்றுக் கொண்ட ஐ.பி.எல் அணி உரிமையில் தான் இப்போது தலையிட முடியாது என்கிறது தீர்ப்பு. அதாவது, பண மூட்டைகளின் நலன்களை பாதுகாப்பது ஒன்றுதான் உச்சநீதி மன்றத்தின் ஒரே நோக்கம்.

நான்காவதாக, குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும், அவர் சென்னை அணியின் நிர்வாகியாகவே செயல்பட்டாலும், அவரது நடவடிக்கைகளுக்கும் சீனிவாசனுக்கும் தொடர்பில்லை என்று முடிவு செய்கின்றனர் நீதிபதிகள். குருநாத் மெய்யப்பன் சென்னை அணி நிர்வாகத்தில் தலையிட்டதும், பிரதிநிதியாக அமர்த்தப்பட்டதும் சீனிவாசனின் மருமகன் என்ற ஹோதாவில்தான் என்ற ஊரறிந்த உண்மை கிரிக்கெட்டின் புனிதத்தை காப்பாற்றுவதில் ஈடுபட்டிருக்கும் நீதிபதிகளுக்கு தெரிந்திருக்கவில்லை.

சீனிவாசன் - தோனி
“அணி நிர்வாகத்தில் குருநாத் மெய்யப்பனுக்கு எந்த பங்கும் இல்லை, அவர் ஒரு சாதாரண கிரிக்கெட் ரசிகர்தான்” என்று சென்னை அணியின் தலைவராக இருந்த மகேந்திர சிங் தோனியும், அவ்வணியின் முதலாளி சீனிவாசனும் முட்கல் கமிட்டியிடம் கொடுத்த வாக்குமூலம் பொய் .

ஐந்தாவதாக, இந்நிலையில் “அணி நிர்வாகத்தில் குருநாத் மெய்யப்பனுக்கு எந்த பங்கும் இல்லை, அவர் ஒரு சாதாரண கிரிக்கெட் ரசிகர்தான்” என்று சென்னை அணியின் தலைவராக இருந்த மகேந்திர சிங் தோனியும், அவ்வணியின் முதலாளி சீனிவாசனும் முட்கல் கமிட்டியிடம் கொடுத்த வாக்குமூலம் பொய் என்பதையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. பொய் வாக்குமூலம் கொடுத்தவர்களுக்கு ஒரு பெயரளவு அபராதம் விதிக்கக் கூட துணியவில்லை இந்த ‘உச்ச்ச்சா’ நீதிமன்றம்.

ஆறாவதாக, தனது தீர்ப்பு கிரிக்கெட் வாரியத்துக்கு பிடிக்காமல் போய் விடுமோ என்ற அவநம்பிக்கையோ என்னவோ, அந்த வாரிய முதலைகளின் நல் இயல்புகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறது தீர்ப்பு.

“ஊழலுக்கு எதிரான உங்கள் விதிகள் கூட, விளையாட்டின் தூய்மையின் மீது பொதுமக்களின் நம்பிக்கை குறைந்து விட்டால், கிரிக்கெட்டின் சாராம்சமே ஆட்டம் கண்டு விடும் என்று அழுத்தம் திருத்தமாக கூறுகின்றன. கிரிக்கெட் ஆட்டத்தின் புனிதத்தை பாதுகாக்கவும், அதன் நேர்மையை கேள்விக்குள்ளாக்கும் முயற்சிகளை தடுக்கவும் நீங்களே உறுதி பூண்டிருக்கிறீர்கள்.

வேறு எந்த விளையாட்டிலும் இல்லாத அளவுக்கு ஆர்வத்துடனும் உணர்ச்சியுடனும் கிரிக்கெட் மைதானத்திலும், தொலைக்காட்சியிலும் கிரிக்கெட் போட்டிகளை பார்த்து மகிழும் அப்பாவி பார்வையாளர்களை ஏமாற்றுவதற்கான மோசடிதான் இந்த அமைப்பு என்ற கருத்து அவர்களிடையே பரவினால் அதை கிரிக்கெட் வாரியம் சகித்துக் கொள்ள முடியுமா” என்று அவர்களிடம் மன்றாடுகிறது உச்ச நீதிமன்றம்.

சீனிவாசன் வாரியத் தலைவர்
வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே சீனிவாசன் எந்த எதிர்ப்பும் இன்றி, ஒரு மனதாக வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஏழாவதாக, சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பனுக்கும், ராஜ் குந்த்ராவுக்கும் என்ன தண்டனை, சுந்தர ராமன் தவறு செய்தாரா, கிரிக்கெட் வாரிய விதிகளை எப்படி திருத்த வேண்டும் இவற்றை முடிவு செய்வதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம் லோதா தலைமையில் நீதிபதி அசோக் பான், நீதிபதி ஆர்.வி ரவீந்திரன் என்ற இரண்டு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகளை உறுப்பினராக கொண்டு ஒரு கமிட்டியை அமைத்திருக்கிறது உச்சநீதி மன்றம்.

இந்த கமிட்டி 6 மாதங்களுக்குள் மேற்சொன்ன விவகாரங்களில் தனது தீர்ப்பைச் சொல்ல வேண்டும். கமிட்டி உறுப்பினர்களுக்கான ஊதியம், அதன் அலுவலகம், போக்குவரத்து, தங்குமிடம், பிற செலவுகள் என்னவென்று கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என்று மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு குறிப்பிடுகிறது. அதாவது, ஓய்வுபெற்ற நீதிபதிகளும் தமது பங்குக்கு அதிகாரத்தையும் அது கொண்டு வரும் வசதிகளையும் அனுபவித்துக் கொள்ள வழி வகுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, இந்த முறைகேடுகள் தொடர்பாக கிரிக்கெட் வாரியமே விசாரித்து தீர்ப்பளிக்கும் என்று சொன்னால், அதற்கு எந்த நம்பகத்தன்மையும் இருக்காது என்பதை உணர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூலம் அந்த விசாரணைக்கு ஒரு புனிதத்தை கொடுக்கிறது இந்தத் தீர்ப்பு.

இது தொடர்பாக எழுதியிருக்கும் கிரிக் இன்ஃபோ தளத்தின் கிரிக்கெட் ஆசிரியர் சம்பித் பால், “கிரிக்கெட் வாரியத்தில் நிலவும் ஊழல்களில் ஐ.பி.எல் சூதாட்டம் என்பது ஒரே ஊழலோ அல்லது முதலாவதோ இல்லை. பல ஆண்டுகளாக பணக்காரர்களின் ஒரு மேட்டுக்குடி கிளப்பாக செயல்படும் கிரிக்கெட் வாரியத்தின் மேலும் வசதியான மேட்டுக் குடி கிளப்தான் ஐ.பி.எல்” என்று எழுதுகிறார்.

இந்திய கிரிக்கெட்டை முழுக்க முழுக்க ஊழல் மயமாக்கி, முன்னாள் இன்னாள் வீரர்கள், மாநில சங்கங்களின் நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் என்று பல தரப்பினருக்கும் வாயடைப்பு நிதியாக பல கோடி ரூபாய் வாரி வழங்கி குற்றக் கும்பல் தரகர்களிலேயே தலை சிறந்தவராக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் சீனிவாசன். அவரிடம் பொறுக்கித் தின்ற தோனி, கவாஸ்கர், ரவி சாஸ்திரி முதலான இந்த ஒட்டு மொத்த அமைப்புமே புழுத்து நாறிக் கொண்டிருக்கிறது.

இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே சீனிவாசன் எந்த எதிர்ப்பும் இன்றி, ஒரு மனதாக வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதிலிருந்து இந்திய கிரிக்கெட் குடும்பத்தின் ஊழலை புரிந்து கொள்ளலாம்.

புரோக்கர் சரத்பவார்
மகாராஷ்டிராவைச் சேர்ந்த புரோக்கர் சரத் பவாரின் முயற்சிக்கு ஆதரவு கிடைக்குமா என்று ஊடகங்கள் பரபரப்பூட்டிக் கொண்டிருக்கின்றன.

கிரிக்கெட் என்ற விளையாட்டில் கோடிக்கணக்கான மக்களின் கவனத்தை ஈடுபடுத்தி, அவர்களை மையமாக வைத்து முதலாளிகள் பல ஆயிரம் கோடி ரூபாய் சட்ட ரீதியாகவும், சட்ட விரோதமாகவும் கல்லா கட்டுவதை அங்கீகரித்து அதைப் பாதுகாக்க கடுமையாக உழைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

சின்னவீடு வைத்திருக்கும் பண்ணையார்கள் அந்த பெண்களின் வளர்ப்பு மகள்களையும் சொந்தமாக்கிக் கொள்ள முயற்சிப்பது போல கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை வைத்துக் கொண்டே ஐ.பி.எல் அணியையும் சொந்தமாக வைத்திருந்தார் சீனிவாசன்.

“ஒன்று இதை வைத்துக் கொள், இல்லை அதை வைத்துக் கொள், இரண்டையும் நீயே வைத்துக் கொண்டால் ஊரில் பேர் கெட்டு விடும். அப்புறம் ஒரு பய கிரிக்கெட் பார்க்க வர மாட்டான்” என்று மட்டும் செல்லமாக கண்டித்து சீனிவாசனும் மற்ற முதலாளிகளும் தமது திருவிளையாடல்களை தொடர ஏற்பாடு செய்திருக்கிறது நாட்டாமை உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அடுத்த 6 வாரங்களுக்குள் நடக்கவிருக்கும் கிரிக்கெட் வாரிய தேர்தல்களில் என்ன நடக்கும் என்ற பரபரப்பு செய்திகளை எழுத ஆரம்பித்திருக்கின்றன ஊடகங்கள். சென்னை அணியை சட்ட ரீதியாக (கண்துடைப்புக்கு) கைமாற்றிக் கொடுத்து விட்டு தலைவர் போட்டிக்கு சீனிவாசன் போட்டியிடுவாரா, மேற்கு வங்கத்தின் டால்மியா அவரை எதிர்ப்பாரா, மகாராஷ்டிராவின் புரோக்கர் சரத் பவாரின் முயற்சிக்கு ஆதரவு கிடைக்குமா என்று பரபரப்பூட்டிக் கொண்டிருக்கின்றன.

சீனிவாசன் நாட் அவுட்
வெற்றி பெறப் போவது சீனிவாசன் + பா.ஜ.க கூட்டணியா, சரத்பவார் + பா.ஜ.க கூட்டணியா, அல்லது சீனிவாசன் + சரத்பவார் கூட்டணியா?

இதில் தீர்மானிக்கும் காரணியாக இருக்கப் போவது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் ஆதரவுதான் என்கிறது தி ஹிந்து நாளிதழ். அதாவது சீனிவாசனுக்கும், சரத்பவாருக்கும் தலா 8 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறதாம். மோடி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் 8 உறுப்பினர்கள் யார் தலைவராவார்கள் என்பதை தீர்மானிக்கும் காரணியாக இருப்பார்களாம்.

வெற்றி பெறப் போவது சீனிவாசன் + பா.ஜ.க கூட்டணியா, சரத்பவார் + பா.ஜ.க கூட்டணியா, அல்லது சீனிவாசன் + சரத்பவார் கூட்டணியா? இவற்றில் எந்த கும்பல் கிரிக்கெட் விளையாட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மக்களுக்கு மொட்டையடிக்கப் போகிறது என்பதுதான் இப்போதைய விவாதப் பொருள்.

ஊழல், மோசடி, கருப்புப் பணம், ஏமாற்றுதல்  நிறைந்த இந்த விளையாட்டை மாலை நேர பொழுதுபோக்காக பார்க்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் அதன் மீதான தமது தீர்ப்பை எழுதும் நேரம் வந்து விட்டது. இல்லையென்றால் ஆட்டத்தில் அடிக்கப்படும் சிக்சர் மட்டுமல்ல, ஆட்டத்தை நடத்தும் வாரியமும் தொடர்ந்து “மேட்ச் பிக்சிங்கில்” ஈடுபடும். அதை கொஞ்சம் நேர்த்தியாக செய்யுமாறு கோருகிறது உச்சநீதிமன்றம். இந்தச் சதிக்கு பலியாகப் போகிறீர்களா?

– செழியன்

பெருமாள் முருகனுக்கு தடை போட்ட கவுண்டர் ஆர்.எஸ்.எஸ் கூட்டணி

76

கவுண்டர் பெண்களை களங்கப்படுத்தியது பெருமாள் முருகனா ? பாகம் 1

பெருமாள் முருகன் : பிரச்சினை சாதியா – பாலுறவா ? பாகம் 2

பாகம் 3

கொங்கு வேளாளக் கவுண்டர்கள்தான் மேற்கு தமிழகத்தின் முதன்மையான ஆதிக்க சாதி. பிற்படுத்தப்பட்ட பட்டியிலில் வரும் வன்னியர், முக்குலத்தோர் போன்ற ஏனைய ஆதிக்க சாதிகளை விடவும் இவர்கள் சமூக ரீதியில் மேல் தட்டில் இருக்கிறார்கள். தற்போது திருப்பூர் தொழிலதிபர்கள், நாமக்கல் வட்டார பிராயலர் பள்ளிகள், வட்டார கோழிப்பண்ணைகள், லாரி நிறுவனங்கள் அனைத்திலும் இவர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். கணிசமானோர் விவசாயிகளாகவும் நீடிக்கிறார்கள்.

காருண்யா கல்லூரி வழியில் இருக்கும் நாதே கவுண்டன் புதூரில், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு “ஆதித்தமிழர் பேரவை” எனும் அருந்ததியருக்கான இயக்கத்தின் கொடி, பெயர்ப்பலகை நட்ட போது கவுண்டர்கள் பொருளாதாரத் தடை விதித்தனர்.

பொருளாதார வாழ்க்கையில் கவுண்டர்களையே சார்ந்து இருக்கும் அம்மக்கள் தடையை மீறி தாக்குப்பிடிக்க முடியுமா? இறுதியில் பெயர்ப்பலகையும், கொடி மரமும் காணாமல் போனது. பிறகு இத்தகைய போராட்டங்களுக்கு பிறகு அருந்ததியருக்கான அமைப்புகள் கோவைப் பகுதியில் செயல்பட்டாலும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு சாதிக்க முடியவில்லை.

கோவை சூலூர்அருகே உள்ள தேநீர் கடையின் புறவாசல் - தலித்துக்கள் மட்டும் டீ சாப்பிடும் இடம். (நன்றி: டெக்கான் குரோனிக்கிள்)
கோவை சூலூர்அருகே உள்ள தேநீர் கடையின் புறவாசல் – தலித்துக்கள் மட்டும் டீ சாப்பிடும் இடம். (நன்றி: டெக்கான் குரோனிக்கிள் 09.04.2014)

தமிழகத்திலேயே இரட்டைக் குவளை தேநீர்க் கடைகள் அதிகமிருப்பது இங்குதான்.தலித் மக்களை பெயர் சொல்லி அழைத்தால் அது கொஞ்சம் கௌரவம். மாதாரி என்று அழைத்தால் மீடியம். சக்கிலி என்று அழைத்தால் கவுண்டர் கோபமாக இருக்கிறார் என்று பொருள். இது போக வயதானவர்களைக் கூட நீ போ, தே, நா என்று அழைப்பதெல்லாம் சகஜம். கொங்கு தமிழின் அழகை கோவை சரளாவிடம் ரசித்தவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கும்.

தேவர்-பள்ளர், வன்னியர்-பறையர் திருமணங்களெல்லாம் நடக்க முடிந்த தமிழகத்தில் கவுண்டர்-அருந்ததி திருமணம் மட்டும் இன்னும் பாலைவனக் கனவு. கவுண்டர்கள் என்னமோ “சின்னக் கவுண்டர்”களாகவே உலா வருகின்றனர்.

கடந்த இருபது ஆண்டுகளில் கொங்கு தமிழ், பொள்ளாச்சி கிராமங்கள், துண்டு, பித்தளை சொம்பு, சொம்பிலிருக்கும் வெற்றிலை எச்சில் உள்ளிட்டு விதவிதமாக பில்டப் கொடுத்து கவண்டர்களை தமிழ் சினிமா டபுள் கவுண்டர்களாக்கியதன் விளைவை பெருமாள் முருகன் அனுபவிக்கிறார் என்றும் சொல்லலாம்.

உடுமலை, காங்கேயம், பொள்ளாச்சி போன்ற நகரங்களில் கூட இன்றைக்கும் ஒரு பொது திருமண மண்டபத்தை ஏதேனும் ஒரு தலித் அமைப்பு வாடகைக்கு கூட எடுத்து விட முடியாது. இது போக நகரங்களின் கடைகள், சிறு தொழில்களிலும் தலித் மக்களுக்கு இடமில்லை. தென் மாவட்டங்களில் இருக்கும் கல்லூரிகளில் தேவர், பள்ளர் மாணவர் மோதலோ பிரிவோ இருக்கும். இங்கே அப்படி எதுவும் கிடையாது. காரணம் இங்கே கவுண்டர்களை எதிர்த்து தலித் மாணவர்கள் எதுவும் செய்ய முடியாது. அனைத்து கல்வி நிறுவனங்களும் கவுண்டர்களின் கையில்.

இது ஒரு உண்மைக் கதை. இவ்வட்டார அரசு அலுவலகம் ஒன்றில் அருந்ததி சாதியைச் சேர்ந்த ஒருவர் அதிகாரியாக வருகிறார். அலுவலக உதவியாளர் (பியூன்) தொடங்கி மற்ற ஊழியர்களில் கவுண்டர்களே பிரதானம். கவுண்டன் கோட்டையில் சக்கிலி ஆபிசரா என்று ஆரம்பித்தது பிரச்சினை. எண்ணிறந்த முறைகளில் அந்த அதிகாரிக்கு சித்ரவதைகள். வருகைப் பதிவேட்டில் அவர் இட்ட கையெழுத்து மாயமாகும். அவர் ஒப்புதல் தெரிவித்த அலுவலக கோப்புகள் எரிந்து போகும். துறை விசாரணையில் அரசு நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்தது.

இந்த கவுண்டர் நீதியின்படிதான் பெருமாள் முருகனும் எழுத்துப் பணியிலிருந்து தூக்கி எறியப்பட்டிருக்கிறார்.

இளவரசன் திவ்யா பிரச்சினையை ஒட்டி ஆதிக்க சாதி கூட்டணியை ராமதாஸ் கட்டிய போது கொங்கு வேளாளர் சங்கங்களே முன்னணி வகித்தன. கவுண்டர் சாதி வெறியை இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும்.

எல்லா ஆதிக்க சாதிகளிலும் அதன் வர்க்கரீதியான கீழ் நிலையில் இருக்கும் மக்கள்தான் தமது சொந்த சாதிகளின் போலித்தனத்தை கிழித்து தொங்க விடுவார்கள். அப்படி மாதோரு பாகன் நாவலில் நாயகன் காளியின் சித்தப்பா ஒருவர் வருகிறார். குடுமியை வெட்டி கிராப் வைத்தவரை ஆலமரத்தடி பஞ்சாயத்தில் விசாரிக்கிறார்கள். இதனால் மழை பெய்யாது அது இது என்று நீதிமான்கள் துளைக்க, தலை முடியை மட்டுமல்ல, குஞ்சு மயிரையும் சேர்த்தே எடுத்திருக்கிறேன் அதற்கு என்ன நடக்கும் என்று பஞ்சாயத்தாரின் வாயை அடக்குகிறார் அந்த சித்தப்பா.

அவர் மீது வந்த கேலிக்கு இப்படி பதிலளிக்கிறார்:

“சக்கிலிப்பையன் ஆக்குன சோத்தத் தின்னுக்கிட்டு நானும் கவண்டன்னு நடக்கறானே நல்லான்’ என்று யாராவது பேசியது தெரிந்தால் ‘சக்கிலிச்சி மணப்பா. சக்கிலிப் பையன் மட்டும் நாறுவானா?’என்று கேட்டுவிடுவார்.”

ஆதிக்க சாதிகளிடம் சிக்குண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு இந்தக் கொடுமைகள் இன்றும் தொடரும் யதார்த்தம். இதை பல எழுத்தாளர்கள் தமது நாவலிலோ இல்லை கட்டுரைகளிலோ எழுதியிருக்கிறார்கள். எங்களது பத்திரிகைகள், துண்டுப்பிரசுரங்கள், மேடைப் பேச்சுக்களிலும் இந்த அநீதியை எதிர்த்து எழுதுவதோடு பேசியுமிருக்கிறோம். சூத்திரன் தீட்டு, அவன் தரும் காசு புனிதமா என்று பார்ப்பனியத்தை எதிர்த்து  எழும்பும்  கேள்வியின் உட்கிடையும் இதுதான்.பொருளியல் காரணத்தால் அடிமைப்பட்ட மக்கள், தமது வாழ்வியல் ‘கடன்’களை தீர்ப்பதற்கு இந்த வன்புணர்வு கொடூரங்களை சகித்துக் கொண்டு வாழ வேண்டியிருக்கிறது. இது பெண்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆண்களின் மனதிலும், பொருமிக் கொண்டிருக்கும் ஒரு உளவியல் வதை. கீழத்தஞ்சையில் மணமான கூலித் தொழிலாளிகளின் மனைவிமார்களை, ஆண்டை நினைத்தால் பெண்டாள முடியும் என்ற கொடுமை, பொதுவுடமை இயக்கம் வந்த பிறகே ஒழிக்கப்பட்டது.

தூமை (மாதவிலக்கு) நாட்களில் பெண்கள் வேலைக்கு போவதுதான் பாரத தேசத்தின் மாபெரும் சுற்றுச் சூழல் கேடு, அனைத்து சீரழிவுகளுக்கும் காரணம் என்று சங்கராச்சாரி சொன்னார். மற்றொரு பக்கம் மடத்தில் நடந்த கொடுமைகளை அனுராதா ரமணன் தைரியமாக எடுத்து வைத்தார்.

ஆதிக்க சாதி ஆண்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளின் பெண்களை நுகர்வது சாதி கௌரவம். அங்கே தொடுவது தீட்டல்ல – ஆண்மை. மறுபுறம் ஆதிக்க சாதி பெண்களை ஒடுக்கப்பட்ட சாதி ஆண்கள் தொட்டால் அது இழிவு, பொறுக்க முடியாத அவமானம். ஆகவே அவர்கள் பெண்கள் கற்புடனும் மற்ற பெண்கள் தேவதாசியாகவும் இருக்க வேண்டும். இரண்டையும் மறுக்கவோ மாற்றவோ  முடியாது.

நாவலில் குழந்தையின்றி தவிக்கும் தனது மகன் திருவிழா ஒன்று கூடலுக்கு மனைவியை அனுப்ப சம்மதிக்க வேண்டுமென்று காளியிடமே நேரடியாக பேசுகிறாள் அவனது தாய்.

“ஒலகத்துல ஆருக்குக் கொற இல்ல? எல்லாருத்துக்கும் எதாச்சும் ஒரு கொறைய இந்தச் சாமி வெச்சிருக்குது. அதப் போக்கிக்கிறதுக்கு வழியையும் அதே சாமி வெச்சுத்தான் இருக்குது. உங்கிட்டக் கொறையோ அவகிட்டக் கொறையோ தெரியாது. கொறைன்னு வந்தாச்சு. அதுக்கு ஒருவழி இருக்குது. அதையுந் தான் பாப்பமே. உம் மனசு ஏத்துக்கிட்டா எல்லாஞ் செரியாப் போவும். எத்தனையோ பொம்பளைங்க அப்பிடி இப்பிடி இருக்கறாங்க. ஆருக்குத் தெரியுது? தெரிஞ்சாலும் பாத்தும் பாக்காம போறாங்க. எதையும் மறப்பா செஞ்சாத் தப்பில்லையிங்கறாங்க. இதுவும் அப்பிடி மறப்புத்தான். ஆனா உனக்குத்தெரிஞ்சு, நீ ஒத்துக்கிட்டுத்தான் செய்யோணும். வெச்சுப் பொழைக்கறவன் நீ.”

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரன் கோவில் நுழைவாயில் - அந்தக் கால மக்கள் சந்திக்கும் பொது இடம்!
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரன் கோவில் நுழைவாயில் – அந்தக் கால மக்கள் சந்திக்கும் பொது இடம்!

இந்த உரையாடலில் தமது குடும்பத்து பெண்களை அவமானப்படுத்திவிட்டார் என்று கவுண்டர்கள் பொங்கி எழுந்தாலும் கிராமங்களில் இந்த உறவு மீறல்களுக்காக பொங்கி எழ முடியாது. எழுந்தால் சாதிய கட்டுமானமும் அது தரும் சலுகைகளும் கேள்விக்குள்ளாக்கப்படும்.

“ நீ ஊர்ல கல்யாணம் பண்ணத பாத்தி நாலு பேரு நாலு விதமாத்தான் சொல்லுவாங்க! என்னப் பொறுத்தவரை நீ செஞ்சதுதான் சரி! புருசன் இல்லேன்னா நம்ம விட்ருவாய்ங்களா ஆம்பளைங்க. உத்தமியா இருந்தாலும் பத்து தடவை கல்லத் தூக்கி அடிச்சா நமக்கே தெரிஞ்சிரும் இத விட்ட வேற வழியில்லேன்னு. பத்து நாய் கடிய சகிச்சிக்கிறதுக்கு ஒருத்தனோட மரியாதையா வாழ்ந்துட்டு போயிறலாம்”

– இது மாதொருபாகன் நாவலில் வரும் வார்த்தையல்ல. விதவை திருமணத்தை கொடுங்குற்றமாக வைத்திருக்கும் ஒரு கிராமத்தில், துணிந்து மறுமணம் செய்து கொண்ட ஒரு கிராமத்து பெண்ணுக்கு பைத்தியம் என்று பட்டம் கட்டப்பட்ட இன்னொரு பெண் வழங்கிய ஆறுதல்.

வழக்காக சொன்னால் மறுமணம் செய்வதை அறுத்துக் கட்டிய சாதி என்று மட்டமாக பேசுவார்கள். எதாவது கருத்து வேறுபாடு, விவாதம் வந்தால் ஒருத்தனுக்கு முந்தானை விரிச்சிருந்தான்னா அவளுக்கு தெரியும் என்று தொட்டதுக்கெல்லாம் முந்தானையை இழுப்பார்கள்.

ஆக காதலும், விவாகரத்தும், மறுமணமும் ஒரு பெண்ணுக்கு உரிமையாக வந்தால் ஆதிக்க சாதி தர்மம் அதை தேவடியாத்தனம் என்றே தூற்றும். மறுபுறம் ஆதிக்க சாதி பெண்கள் விதவைக் கோலத்தை ஏற்றுக் கொண்டு முடங்கி கிடந்தால் அவர்களை தங்களுக்கு சொந்தமான “தேவடியாக்களாக” மாற்றும். இத்தகைய ஆதிக்க சாதி நீதிதான் தங்கள் குலப் பெண்களை பெருமாள் முருகன் இழிவுபடுத்திவிட்டதாக பொங்குகிறது.

திருச்செங்கோட்டில் விநியோகிக்கப்பட்ட மாதொரு பாகன் நாவலின் பக்கங்களில் கவுண்டர்கள் பூதகரமாக கிளப்பிய வாசகம் இதுதான்….

இக்காட்சி கோவில் திருவிழாவின் பிள்ளைப் பேறு ஒன்று கூடல் இரவை வருணிக்கிறது.

“வீதிகளில் சாயங்காலம் முதலே அலையத் தொடங்கி விட்டான். இறக்கத்துக் கோயிலுக்கு எதிரே இருந்த தேவடியாள் தெருவில் அன்றைக்குக் கூட்டமேயில்லை. அந்தப் பெண்கள் நன்றாகச் சிங்காரித்துக்கொண்டு மண்டபங்களில் ஆடப் போனார்கள். ‘இன்னக்கி நம்மள எவன் பாக்கறான். எல்லாப் பொம்பளைங்களும் இன்னக்கித் தேவடியாதான்’ என்று அவர்கள் பேசிச் சிரித்துப் போனார்கள்.”

நேர் பொருளில் இழிவுபடுத்துவதாக தோன்றும் இந்த பேச்சு உண்மையில் எதிர்மறையால் உருவாக்கப்பட்டவர்கள் தம்மை எதிர்மறையாக உருவாக்கிய சமூகம் குறித்து எதிர்மறை வடிவில் ஆனால் உட்பொருளில நேர்மறை விமரசினமாக வெளிப்படுத்துவதை உணர்த்துகிறது.

“கற்பின்” போலித்தனத்தை ஒரு தேவதாசிதான் மற்ற எவரையும் விட விளக்க முடியும். காரணம் கற்பை பாதுகாக்கும் கடமையை ஏற்றிருக்கும் கனவான்களை அவள்தான் அன்றாடம் தரிசிக்கிறாள்.

வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வினவு தோழர்கள் எடுத்த கருத்துக் கணிப்பின் படி தாழ்த்தப்பட்டவர்களை மணம் செய்த வன்னியப் பெண்களின் வாயிலிருந்து சாதி ஆதிக்கத்தை சுட்டுப் பொசுக்கும் வார்த்தைகளை கவித்துமாக கேட்டிருக்கிறோம். அதையே பெருமாள் முருகன் தனது நாவலில் கோடிட்டுக் காட்டுகிறார்.

எங்கே கற்பின் மேன்மையும் அதைப் பாதுகாக்கும் கடமையும் ஓங்கி உரைக்கப்படுகிறதோ அங்கேதான் பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள். “மாதொரு பாகம்” நாவலை எதிர்த்து இணையத்தில் எழுதும் கொங்கு ‘சிங்கங்கள்’ இதை உறுதி செய்கின்றன. மற்ற சாதிகளை விட விதவைகளுக்கு வெள்ளுடை தரித்து மறுமணம் செய்யாமல் சாகும் வரை கற்புக்கரசியாக காத்த மண் என்கிறார்கள். கணவன் இறந்த பின்பு உடன்கட்டை ஏறி கற்பாத்தாக்களாக பல ஆத்தக்கள் வழிபடப்படும் பகுதி என்கிறார்கள். இதை பெருமையாக பீற்றுபவர்கள் பெருமாள் முருகனின் எழுத்தை எரிக்கத்தான் செய்வார்கள்.

கொங்கு மண்ணின் கற்பு சென்டிமென்டை அறுவடை செய்ய பாரதக் கற்பை குத்தகைக்கு எடுத்திருக்கும் இந்துமதவெறியர்கள் ஓடோடி வருகிறார்கள். இந்த நாவல் ஆங்கிலத்தில் வெளியானதும் புது தில்லியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் குழுமம் அதை படித்து தடை செய்ய வேண்டிய பட்டியலில் இணைத்து அதற்கான முயற்சிகளை செய்தாகவும் பலர் கூறியிருக்கின்றனர்.

ஆதிக்க சாதி உணர்ச்சியும் இந்து உணர்ச்சியும் வேறு வேறல்ல. முன்னதில் தலித்துக்களும் பின்னதில் சிறுபான்மையினரும் வில்லன்கள் என்பதால் இவர்கள் இயல்பிலேயே பங்காளிகள். திருச்செங்கோட்டின் மக்கள் நாவலை எரித்ததில் நாங்கள் பங்கேற்கவில்லை என்றது ஆர்.எஸ்.எஸ் தரப்பு. பிறகு உணர்ச்சிவசப்பட்ட லோக்கல் ஆட்கள் இருந்தார்கள் என்றார்கள். பிடித்துக் கேட்டால் ஃபிரின்ஞ்ச் குரூப் செய்திருக்கும் என மாற்றினார்கள்.

வட இந்திய விதவைகள் - இந்து மதம் பெண்களை போற்றும் இலட்சணம்!
வட இந்திய விதவைகள் – இந்து மதம் பெண்களை போற்றும் இலட்சணம்!

இறுதியில் இந்து முன்னணி இராம கோபாலனே களத்திற்கு வருகிறார். இவர்தான் அந்த ஃபிரின்ஞ்ச் குரூப்பின் தலைவர் போலும்.

“மாதொரு பாகன்’ என்பது உயர்ந்த தத்துவம். திருச்செங்கோட்டிற்கு புகழ் சேர்க்கும் சிவபெருமானின் இந்தத் திருவிளையாடலை கொச்சைப்படுத்தி எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய நாவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோட்டில் வாழும் பெண்களை கீழ்த்தரமாக சித்தரிப்பதை ஏற்க முடியாது.”

“மாதொரு பாகன்’ நாவலில் பெருமாள் முருகன் என்ன எழுதியுள்ளார் என்பதை நீதிபதிகள் படிக்க வேண்டும். அப்போது தான் திருச்செங்கோட்டு மக்களின் உணர்வுகளையும், அவர்களின் எதிர்ப்புக்கான காரணங்களையும் புரிந்துகொள்ள முடியும். இந்த வழக்கில் மக்களின் கருத்தை அறியவும், இந்து முன்னணி சார்பாக வழக்காடவும் நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும்.”- என்று அறிக்கை விட்டிருக்கிறார் இராம கோபாலன்.

மாதொரு பாகம் என்று அறிவித்தது சிவன்தானே? அறிவிக்கும் அதிகாரம் மாதாவுக்கு இல்லாத போது பாகத்தின் மதிப்பென்ன? இந்த திருவிளையாடல் தத்துவம் வேருன்றியிருக்கும் வட இந்தியா, பெண் சிசுக் கொலையில் சாதனை படைத்து வருவது ஏன்? பா.ஜ.க ஆளும் ஹரியானா மாநிலம் அதில் முதலிடத்தில் இருப்பது தற்செயலானதா?

பெருமாள் முருகன் பெண்களின் சுதந்திரத்தை சித்தரித்தார். இந்துமதவெறியர்களோ பெண் குழந்தைகளை கழுத்தறுக்கின்றனர். இந்த உரிமை பறிபோய்விடக்கூடாது என்றே இந்துமதவெறியர்கள் ஆதிக்க சாதியினருக்கு கொடியும் தடியும் பிடிக்கின்றனர்.

நாவலின் காலத்தில் மக்கள் ஒன்று கூடும் இடம் கோவிலும், திருவிழாவாகவும்தான் இருக்கும். இன்று போல மல்டிபிளக்ஸோ, சூப்பர் மார்கெட்டோ இல்லை ஃபேஸ்புக்கோ கிடையாது. “விருந்தாளிக்கு பிறந்தவன், சந்தையில் தரிச்சவன்” என்று வசை மொழிகள் கூறும்  பொருள் என்ன? மூச்சு விட முடியாத சாதிய சமூகத்தின் பிடியிலிருந்து சுய விருப்பமும், காதலும் தரிக்கும் இடமாக அந்தக்கால கோவில் திருவிழாக்கள், சந்தைகள் இருந்திருக்கின்றன.

தமிழ் சினிமாக்களில் இன்றும் கூட கோவில் காட்சிகளில்தான் நாயகனும், நாயகியும் காதலைத் தொடங்குகின்றனர். இதை இந்து முன்னணி எதிர்த்து பார்க்கட்டுமே? பிறகு ஒரு பயலும் கோவிலை ஏறெடுத்து பார்க்க மாட்டான். தற்போதே அந்த சங்கமத்தின் வாய்ப்பை செல்பேசியும் இணையமும் ஏற்படுத்தி வருகின்றன.

கோவில் எனும் மத ஆன்மீக விசயத்தோடு கொளுத்திப் போட்டால் மக்களை உடன் வெறுக்கச் செய்ய முடியும் என்று இந்துமதவெறியர்கள் கச்சிதமாக போட்ட திட்டமே திருச்செங்கோட்டு பக்தர்கள் பெயரில் காட்டிய எதிர்ப்பு. இன்று ஊடகங்களில் இந்துமதவெறியர்கள் பேசும் போது கோவிலை விபச்சார மடமாகவும், பெண்களை விபச்சாரியாகவும் இழிவுபடுத்தியதாக தொடர்ந்து பொய்யுரைக்கின்றனர்.

சென்ற பாராளுமன்றத் தேர்தலின் போது எமது தோழர்கள் மோடியை எதிர்த்து உடுமலைப் பேட்டையில் பிரச்சாரம் செய்தனர். கொலைகார மோடி எனும் அந்த துண்டுப்பிரசுரத்தை பார்த்த ஈஸ்வரன் கட்சிக்காரர்கள் உடன் ஆள் திரட்டி தோழர்களை தாக்க வந்தனர். பின்னர் எஸ்.பி வரை பேசி பிரச்சாரம் செய்யும் உரிமையை தோழர்கள் நிலைநாட்டினர். இப்படி மோடிக்கு ஒன்று என்றால் கவுண்டர் சங்கம் ஓடி வருவதும், கவுண்டர் மானத்திற்கு பங்கம் என்று ஆர்.எஸ்.எஸ் ஓடி வருவதும் அங்கே சகஜம்.

கோவை நாயுடு தொழிலதிபர்கள், மார்வாடி வணிகர்கள், கொங்கு வேளாளர்கள் என்ற மூவர் கூட்டணியை வைத்தே பா.ஜ.க அங்கே செல்வாக்கை வளர்த்து வருகிறது. அதே நேரம் முசுலீம்களை எதிர்த்த கலவரத்திற்கு தலித்துக்களை அடியாட்களாக பயன்படுத்தியும் வந்திருக்கிறது. கீழே முசுலீம் எதிர்ப்பு, மேலே தலித் எதிர்ப்பு என்ற கொள்கைக் கூட்டணியில் சாதி மற்றும் மத சேர்க்கை அங்கே உருவாகி விட்டது.

17.01,2015 தினமணியில் வந்த செய்தி….

“எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலுக்கான எதிர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, பெருமாள் முருகனின் பின்னணி ஆய்வுக்குரியது. இதுபோன்ற பண்பாட்டுச் சீரழிவுக்குக் காரணமாக உள்ளவர்கள் பொதுவுடமைக் கட்சியினர்தான். இதைக் கண்டிப்பது பாஜக மட்டுமே. இதுகுறித்து தினமணி ஆசிரியர் எழுதிய தலையங்கத்தை வரவேற்கிறேன். பெருமாள் முருகன் எழுதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” – பா.ஜ.க தலைவர் இல. கணேசன்.

விசாரணையெல்லாம் கிடையாது. நிறுத்து, இல்லையேல் நடப்பது வேறு என்கிறார் இல. கணேசன். பண்பாட்டு சீரழிவு, கம்யூனிஸ்ட் கட்சி, தடை…… முடிந்தது விசயம்.

பெரியாரின் ஆதரவோடு முத்துலெட்சுமி “தேவதாசி ஒழிப்புச் சட்டம்” நிறைவேறப் போராடிய போது இல.கணேசனின் தாத்தா சத்யமூர்த்தி அய்யர்தான் கடுமையாக எதிர்த்தார். இன்று ஆதிக்க சாதி பெண்களை இழிவு படுத்தும் சாதிய அமைப்பை பெருமாள் முருகன் கேள்விக் கேட்பதை இவர்கள் நிறுத்துகிறார்கள்.

உமைக்கு பாதி பாகம் கொடுத்த சிவன் பெண் சிசுக்களை தொடர்ந்து கொல்வது ஏன்?
உமைக்கு பாதி பாகம் கொடுத்த சிவன், பெண் சிசுக்களை தொடர்ந்து கொல்வது ஏன்?

இன்று கொங்கு வேளாள சாதியிலேயே வெள்ளை சேலை கட்டுவது மாறி வருவதும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் விதவை மறுமணம் நடந்து வருவதும் யாரால்? பெரியார் இயக்கமும், கம்யூனிச இயக்கங்களும் இல்லை என்றால் தமிழ்நாடு தொடர்ந்து இருண்ட காலத்திலேயே இருந்திருக்கும்.

சாதியும், மதமும் மட்டுமல்ல இவற்றை பாதுக்காக்கும் அரசும் அதே குரலில் பேசுகிறது.

“அரசு தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, “எழுத்தாளர் பெருமாள் முருகனே சமரச பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்துகொண்டு கடிதம் கொடுத்துள்ளார். அது முடிந்துபோன பிரச்சினை. ‘மாதொருபாகன்’ நாவலில் குறிப்பிட்டுள்ள கருத்துகள், திருச்செங் கோட்டை சேர்ந்த ஒட்டுமொத்த மக்களுக்கும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. கருத்துச் சுதந்திரம் உள்ளது என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதிவிட முடியாது’’ என வாதிட்டார்.” – 20.01.2015 தி இந்து செய்தி.

இதையே கருத்துச் சுதந்தரம் பாதி, எதை எழுதுவது என்ற கட்டுப்பாடு மீதி என்று மாதொரு பாகனுக்கு புதிய விளக்கம் கொடுக்கிறார் துக்ளக் சோ. கருத்து சுதந்திரம் கேட்கும் பெருமாள் முருகன் கேரளாவிற்கு சென்று அங்கிருந்து எழுதலாமே என்று ஆலோசனை கூறுகிறது தினமலர்.

ஆக எது கருத்து, எது சுதந்திரம் என்பதை இவர்கள் தீர்மானிப்பார்கள். நாம் தீர்மானித்தால் அது தடைசெய்யப்படும். அதை ஒத்துக் கொண்டால் சுதந்திரம். மீறினால் தண்டனை. மனு தர்மம் எங்கே இருக்கிறது என்று சமாளிப்பவர்களுக்கு இதை விட சுரணையூட்டும் சான்று வேறு வேண்டுமா?

உண்மையில் பெருமாள் முருகனுக்கு ஏற்பட்டது கருத்துச் சுதந்திரம் குறித்த பிரச்சினையா? இல்லை ஒடுக்கப்பட்ட பெண்கள், மக்களின் வாழும் உரிமை குறித்த பிரச்சினையா?

–    தொடரும்