Sunday, June 22, 2025
முகப்பு பதிவு பக்கம் 610

கடலூர் கந்தசாமி மகளிர் கல்லூரி மாணவிகள் போராட்டம்

1

ச்சையப்பன் சொத்துக்களை பார்ப்பன ஆதிக்க சாதிக் கூட்டம் தின்று கொழுத்ததை எள் முனையளவாவது தடுத்து ஒடுக்கப்பட்ட சமூகக் குழந்தைகள் கல்வி பெற உருவாக்கபட்ட பச்சையப்பன் அறக்கட்டளையிலும் அதன் கீழ் இயங்கும் 14 கல்வி நிறுவனங்களிலும் கொள்ளை கொடிகட்டி பறக்கின்றது.

cuddalore-girs-students-1கடலூரில் உள்ள கந்தசாமி மகளிர் கல்லூரியில் ( KNC) இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதில்லை. கேமராக்களை வைத்து மாணவிகளை வேவு பார்ப்பது, கட்டிட நிதி பெற்று கழிவறைகள் கூட கட்டாமல் இன்னொரு புறம் ஓட்டுக் கட்சி தலைவர்களை அழைத்து அரசியல் நிகழ்ச்சி நடத்துவது, முற்பகல் கல்லூரிக்கான மாணவர்கள் சேர்க்கையின் போது பொது பட்டியல் மட்டும் வெளியிட்டுவிட்டு, வெய்டிங் லிஸ்டு வெளியிடாமல், காசுக்கு விற்பனை செய்வது என்று முறைகேடுகள் நிரம்பி வழிகின்றன.

“மாலை நேர சுயநிதி கல்லூரியின் மூலம் மாணவிகள் சேர்க்கையை அதிகரித்து கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் KNC கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் மீது நடவடிக்கை எடு” என்று போர்க்கொடி தூக்கிய கணிதத்துறை பேராசிரியை சாந்தியை பணியிடை மாற்றம் செய்துள்ளது பச்சையப்பன் அறக்கட்டளை கும்பல்.

பேராசிரியை சாந்தியின் பணியிடை மாற்றத்தை ரத்து செய்ய வேண்டியும், ஊழலால் நாற்றமெடுத்து நாறுகின்ற பச்சையப்பன் அறக்கட்டளையை அரசுடைமையாக்கக் கோரியும் இங்கே மாணவிகள் இரண்டு மாதங்களாக பல்வேறு வகையில் போராடி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக 27.01.2015 அன்று காலை சுமார் 10 மணியளவில் 300 மாணவிகள் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு மணி நேரம் முழக்கமிட்டு ஒரு மணி நேரம் வகுப்பு புறக்கணிப்பு செய்து பிறகு வகுப்புக்கு சென்றனர்.

பின்னர் தலா பத்து ரூபாய் என்று நிதி வசூல் செய்து இந்திய மாணவர்கள் சங்கம் என்ற பெயரில் 24 மணி நேர உள்ளிருப்புப் போராட்டம் என்று நுழைவு வாயிலில் பேனர் கட்டி விட்டு மாலை 2 மணிக்கு மேல் மாணவிகள் தாங்களாகவே  உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர்.

இரவு போராட்டம் தொடங்கியதும் கடலூர் NT போலீசார் வந்து, “இரவு நேரங்களில் போராட்டம் நடத்துற உங்களையல்லாம் எவன் கல்யாணம் செஞ்சுக்குவான்? ஊர்ல எவனாவது உங்களை குடும்பப் பெண் என்று மதிப்பார்களா? ஒழுங்கா எல்லோரும் வீட்டுக்கு ஓடி விடுங்க” என வக்கிர புத்தியுடன் மிரட்டியது.

“அதெல்லாம் எங்களோட பிரச்சனை அதை நாங்க பார்துக் கொள்கிறோம். முதலில் நீங்க எங்க கல்லூரியை விட்டு வெளியே போங்க” என மாணவிகள் எச்சரித்து வெளியேற்றினார்கள்.

மாணவிகளோடு இணைந்து போராட வந்த பெற்றோர்களிடம், “எஃப்.ஐ.ஆர் போடப் போறோம். உன் பிள்ளைப் படிப்பு பாழாய் போக போகுது” என மிரட்டி விரட்டி அடித்தனர். அவர்கள் கொண்டு வந்த உணவு பொட்டலங்களை மாணவிகளுக்கு கொடுக்க விடாமல் பிடுங்கி சாக்கடையில் வீசினார்கள்.

“வீட்டில் சொல்லாமல் வந்துவிட்டேன், அதனால் வீட்டுக்கு போகிறேன்” எனக் கூறிய ஒரு மாணவியிடம் ஒரு பெண் எஸ் ஐ, “என்னடி உன்னோட பாய்பிரண்ட பார்க்க போறியா. உன்னுடைய செல்போனை கொடு, பாய்பிரண்ட் நம்பர் எடு” என்று பலபேர் முன்னிலையில் அந்த மாணவியை அசிங்கப்படுத்தினார். அந்த மாணவி அழுது கொண்டே போராடும் மாணவிகளோடு இணைந்து கொண்டார்.

பின்னர் RDO ஷர்மிளா வந்து போராடும் மாணவிகளை பார்த்து, “உங்களுக்கு எங்களால பாதுகாப்பு வழங்க முடியாது ஆதலால் எல்லோரும் கலைந்து செல்லுங்கள்” என்றார்.

இதற்கு மாணவிகள், “கல்லூரியை பாதுகாக்க போராடும் நாங்கள் எங்களையும் பாதுகாத்துக் கொள்ள மாட்டோமா? எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுத்தால் போதும்” என்று முகத்தில் அறைந்தாற்போல் பதில் அளித்தனர்.

இச்சம்பவத்தை கேள்விப்பட கடலூர் பகுதி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள், மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர் கடலூர் மாவட்ட இணை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் மாணவிகளை சந்திக்க சென்றனர்.

போராடிக் கொண்டு இருந்த மாணவிகளை வக்கிரமாக திட்டிக்கொண்டு இருந்த போலீசும், நிர்வாகத்திற்கு ஆதரவான ரவுடிகளும் தோழர்களைக் கண்டதும், “நீங்க எதற்கு இங்கு வந்திங்க” என்று தோழர்களை வெளியேற்றுவதில் கவனமாக இருந்தார்கள்.

தோழர்கள் போலீசிடம், “நாங்கள் ஒரு ஜனநாயக அமைப்பு. இப்படி போராடுகிற மாணவிகளை அச்சுறுத்தும் நோக்கத்தில் நிறைய போலீசை குவிப்பதும், உணவு கொண்டுவந்த உறவினர்களை தடுப்பதும் தவறு” என்றும் அவர்கள் கொண்டு வந்த ஆட்டோவை விடுவிக்க கோரியும் டி.எஸ்.பி-யிடம் பேசினர்.

அப்போது, பா.ஜ.கவைச் சேர்ந்த வழக்குரைஞர் முழு குடிபோதையில், “எங்க அண்ணன் பொண்ணு உள்ள இருக்கிறாள், அவள வெளிய அனுப்புங்க” என்று கூறிக்கொண்டு மாணவிகளை கேவலமாக திட்டிக்கொண்டு இருந்தார்.

இதை பார்த்த தோழர்கள், “அவர்கள் அவர்களுடைய கல்லூரிக்காகதானே போராடுகிறார்கள். போராடும் மாணவிகளை இப்படி அசிங்கமாக பேசலாமா” என்று கேட்டவுடன்,

“உங்க வீட்டு பொண்ணாயிருந்தா இப்படி விடுவீங்களா” என்று கேட்டு விட்டு, அந்த நேரத்தில் வெளியேறிக் கொண்டிருந்த சில மாணவிகளின் ஒரு மாணவியை பார்த்து “இப்பவே இப்படியெல்லாம் போராட்டம் நடத்துறது உங்களுக்கு அசிங்கமா இல்லையா” என்று கேட்டு அங்கு சலசலப்பை ஏற்படுத்தினார்.

அங்கு வந்த பத்திரிக்கை நிருபர்கள் நடக்கின்ற எந்த சம்பவத்தையும் புகைப்படமோ, வீடியோ பதிவோ செய்யாமல் போலீசோடு சேர்ந்து நின்று கொண்டு இருந்தனர். “போராடும் மாணவிகளை போலீசு கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதையும் அவர்களை தரக்குறைவாக பேசுவதையும் பதிவு செய்யாமல் நிற்கிறீர்களே” என்று தோழர்கள் கேட்டதற்கு ஒரு நிருபர் போலிசுக்கு ஆதரவாக பேசினார். மற்றவர்கள் செயலற்று நின்று கொண்டிருந்தனர்.

போலீசுகாரர்கள் ஒரு மாணவியின் தந்தையிடம் , “உங்க பெண்ணை போராட்டத்துக்கு அனுப்பியிருககீங்களே, நாளைக்கு அந்த பெண்ணை எவராவது மதிப்பார்களா” என்று கேட்டுக்கொண்டு இருக்கும் போது அந்த மாணவி போலீசிடம், “எதுவாக இருந்தாலும் எங்கிட்ட பேசுங்க. எங்க அப்பாவ மிரட்டுற வேல வேணாம். FIR போடணும்னா போட்டுக்கோங்க” என்று கூறி, “நைனா நீ தைரியமா வீட்டுக்குப் போ. நான் மாணவிகளோடுதான் இருக்க்கிறேன்” என்று சொல்ல, “அந்த மாணவி திமிரா பேசுகிறது” என ஆணாதிக்க திமிரோடு கூறினார், போலீஸ் அதிகாரி.

அதற்கு நம் தோழர்கள், “இதில் எந்த திமிர்த்தனமும் இல்லையே, அவர்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். இரவு நேரத்தில் பெண் காவலர்கள் வீட்டுக்கு போகாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்களையும் திமிர் பிடித்தவர்கள் என்று சொல்வீர்களா” என்று கேட்டவுடன் பிறகு அமைதியானார்.

பிறகு உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மாணவிகளை பு மா இ மு தோழர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, “உங்களுடைய போராட்டம் மிகச் சரியானது. காவல் துறையின் அடக்குமுறைகளைக் கண்டு பயந்து விடவேண்டாம். ‘பெண்கள் இரவு நேரங்களில் போராடினால் இவர்களை யார் திருமணம் செய்து கொள்வார்கள், இவர்களை யார் மதிப்பார்கள், இவர்களெல்லாம் வீட்டிற்கு அடங்காதவர்கள்’ என்றெல்லாம் போலீசு பேசுவதைக் கேட்டு துவண்டு விடவேண்டாம். ஆர்.டி.ஓ. ஒரு பெண், அவர் இரவு நேரத்தில் பணிபுரிகிறார், பெண்கள் இரவுக் காவலர்களாக வேலை செய்கிறார்கள், இவர்களையும் தவறானவர்கள் என்று போலீசு பேசுவார்களா ? எதைப் பேசினால் நீங்கள் போராட்டத்தைக் கைவிடுவீர்கள் என்று புரிந்து பேசுகிறார்கள்.

இந்தப் பிரச்சனை போன்று எல்லா கல்லூரியிலும் இருக்கிறது. இதற்கு முதல் காரணம் தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைதான். அரசுடைமையாக்கினால்தான் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். நீங்கள் கல்லூரியில் உறுதியாக நின்று உள்ளிருப்பு போராட்டத்தை தொடருங்கள்,வெளியில் மக்களிடம் இந்த போராட்டத்தை நாங்கள் எடுத்து செல்கிறோம்.

பச்சையப்பன் அறக்கட்டளையை அரசுடமையாக்கவும், பேராசிரியர் சாந்தியின் பணியிடை மாற்றத்தை இரத்து செய்யவும் தொடர்ந்துப் போராட பு மா இ மு உங்களோடு இணைந்து நிற்கும்” என்று மாணவிகளை உற்சாகப் படுத்திப் புரட்சிகர வாழ்த்து கூறினார்கள். இதை லவ்டு ஸ்பீக்கரில் ஒலிபரப்பி அனைத்து மாணவிகளும் ஆர்வமாகக் கேட்டனர்.

அன்று இரவு 2 மணி அளவில் பெண் போலீசு கல்லூரிக்ககுள்ளே சென்று தூங்கிய மாணவிகளை எழுப்பி உங்களுடைய தொலைபேசி எண்ணை கொடுங்க என்று கேட்டதுக்கு மாணவிகள் கொடுக்கவில்லை என்றதும் அவர்கள் புத்தகப் பையை எடுத்து அதை கீழே கொட்டி அதில் இருந்த மாணவிகளின் அடையாள அட்டையில் உள்ள விவரங்களை எடுத்துக் கொண்டனர்.

இச்சம்பவத்துக்கு பிறகு மாணவிகள் பு.மா.இ.மு ஆதரவுடன் அனைவரும் ஒன்று சேர்ந்து போலீசுக்கு எதிராக வரண்டாவில் வந்து முழக்கமிட்டனர். இதனால் போலீசு பின்வாங்கியது.

போராட்டம் நடந்து கொண்டிருந்த போது இரவே  சுவரொட்டி தயாரித்து நகர பேருந்துகளில் போலீசையும், ரவுடிகளையும் அம்பலப்படித்து பரவலாக ஒட்டப்பட்டது.

cuddalore-knc-poster 28/01/15 காலை 10 மணிக்கு சி.பி.ஐ(எம்)-ஐச் சேர்ந்த ரமேஸ் பாபு  வந்து, “நாம் அறிவித்தது போல 24 மணிநேரம் முடிந்துவிட்டது. நாம் போராட்டத்தை முடித்துக் கொள்ளலாம்” என்று மாணவிகளின் தன்னெழுச்சியான போராட்டத்தை முடித்து வைக்க முயற்சித்தார்.

மாணவிகள், “நமது போராட்டத்தின் விளைவு என்னவென்றே தெரியாமல் எப்படி போராட்டத்தை முடித்துக் கொள்வது” என்று கேட்டதற்கு “போராட்டத்தை முடித்தால் தான் என்னவென்று தெரியும்” என்று மாணவிகள் போலீசையும் கல்லூரி நிர்வாகத்தையும் எதிர்கொண்டு நடத்திய போராட்டத்தை முடித்து வைத்து நிர்வாகத்துக்கு உதவி செய்தார்.

மாணவிகள் அடுத்த கட்டமாக எனனசெய்வது என்று புரியாமல் இருந்த போது போலிசும், ஓட்டுக் கட்சி  SFI யும் இணைந்து மாணவிகளை கல்லூரியை விட்டு வெளியேற்றியது.

அப்போது கடலூர் பேருந்து நிலையத்தில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த 2 தோழர்களை காவல் துறை கைது செய்து, “பேருந்தில் போஸ்டர் ஓட்ட அனுமதி வாங்கினீர்களா” என்று கேட்டனர். அதற்குத் தோழர்கள் “மூலம், பவ்த்ரம் ஆண்மைக் குறைவு, ஆபாசப் போஸ்டர்கள் இவற்றை எல்லாம் உங்களிடம் அனுமதி வாங்கித்தான் ஓட்டுகிறார்களா” என்று கேட்டதற்கு “தேவை இல்லாமல் பேசாதே” என முறைத்தது போலீசு. பேருந்து நடத்துனர் இருவரிடம் புகார் வாங்கி தோழர்கள் மீது போலீசு வழக்கு போட்டு KNC ,பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சாதகமாக நடந்து கொண்டு பின்னர் தோழர்களை ஜாமீனில் விடுவித்தது திருப்பாப் புலியூர் போலீசு.

மீண்டும் KNC மாணவிகளை தொடர்பு கொண்டு அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் ஒன்றிணைத்து பேராசிரியர் சாந்தியின் பணிநீக்கத்திற்கு எதிராகவும், கொள்ளைக் கூடாரமாக உள்ள பச்சையப்பன் அறக்கட்டளையை அரசுடமையாக்கவும் தொடர்ந்து போராடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவண்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
கடலூர்
தொடர்புக்கு:9791776709

மொழிப்போர் 50-ம் ஆண்டு நினைவு – காவிரி டெல்டா மாவட்டங்களில்

1

மிழ்நாட்டு மாணவர்களின் இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பொன்விழா ஆண்டினை நினைவு கூர்ந்து அப்படி ஒரு மொழிப்போரினை மீண்டும் துவக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில், குடியிருப்புப் பகுதிகள் என எல்லா இடங்களிலும் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது.  சைக்கிள் பேரணி, கல்லூரிகளில் வாயில் நாடகம் என பல வடிவங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஜனவரி 25, 2015 அன்று மொழிப்போர் தியாகிகள் நாள் புரட்சிகர அமைப்புகளால் தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டது. அது தொடர்பான தகவல்கள், புகைப்படங்களின் ஐந்தாவது மற்றும் இறுதிப் பகுதி.

14. காவிரி டெல்டா மாவட்டப் பகுதிகளில்

ந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டத்தின் 50 ஆம் ஆண்டை நினைவுகூர்ந்து காவேரி டெல்டா மாவட்டங்களில் ம.க.இ.க – பு.மா.இ.மு. – வி.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகளால் வீச்சான சுவரொட்டி இயக்கம் எடுக்கப்பட்டது. ஆர்.எஸ.எஸ, பி.ஜே.பி மத வெறியர்கள் மிஸடு கால் உறுப்பினர் சேர்க்கை நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் ஆரிய பார்ப்பன எதிர்ப்புப் போரில் தளப்பிரதேசமாகத் தமிழ் நாட்டைக் கட்டியமைப்போம் என்ற முழக்கம் அடங்கிய சுவரொட்டி இயக்கம் மூலம் விவாதப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது.

kaviri-delta-posterவேதாரண்யத்தில் ஜனவரி 25 அன்று விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் வி.வி.மு நாகை மாவட்ட அமைப்பாளர் தோழர் தனியரசு தலைமையில் இளைஞர்கள் அணிதிரண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதியேற்றனர். பு.மா.இ.மு தோழர் சரவணத் தமிழன் தலைமையில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் வி.வி.மு திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் கு.ம. பொன்னுசாமி மொழிப்போர் தியாகிகளை நினைவுகூர்ந்து உரையாற்றினார்.

பட்டுக்கோட்டையில் விவசாயிகள் விடுதலை முன்னணி தஞ்சை மாவட்ட அமைப்பாளர் தோழர் மாரிமுத்து தலைமையில் தோழர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அணிவகுத்துச் சென்று பட்டுக்கோட்டை அழகிரி சிலைக்கு மாலை அணிவித்து உறுதியேற்றனர்.

27.01.2015 அன்று தஞ்சை ரயிலடியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக உறுதியேற்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமையேற்ற ம.க.இ.க தஞ்சை கிளைச் செயலாளர் தோழர் இராவணன், “இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் 50-ம் ஆண்டு என்று குறிப்பிட்டாலும் வெற்றி விழா கொண்டாடும் நிலையில் நாம் இல்லை, மொழிப் போர் முன்னிலும் கடுமையாகி உள்ளது. தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றியோ, இந்தி திணிப்பு எதிர்ப்பு வரலாறு பற்றியோ இன்றைய இளைஞர்களுக்கு கற்பிக்கப்படவில்லை. அதனைப் பற்றி புதிய தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை. எஸ.எம்.எஸ., வாட்ஸ அப் என்று அறிவியல் தொழில்நுட்ப புரட்சியினூடாக பயணிக்கும் இளைய சமூகம் தாய்மொழியை மறந்த சமூகமாகவே உள்ளது.

புரட்சிகர ஜனநாயக சக்திகளின் செயல் வேகம் பெற வேண்டும் என்பதைத்தான் புறநிலைமை வலியுறுத்துகிறது. 2000 ஆண்டு கால பழமை வாய்ந்த செம்மொழியான தமிழ்மொழியை பாதுகாக்க சமஸகிருத, இந்தி திணிப்பு, ஆங்கில மோகத்துக்கு எதிராக பண்பாட்டுத் தளத்தில் போராட மொழிப்போரின் 50 ஆம் ஆண்டில் உறுதியேற்போம்” என்று பேசினார்.

அடுத்த்தாக பேசிய பேராசிரியர் அரங்க. சுப்பையா, “மொழியைக் காப்பாற்ற எல்லா இனங்களும் போராடியுள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன் தமிழகமே கொந்தளித்தது. குறிப்பாக மாணவர்களிடம் எழுச்சி இருந்த்தது, புரட்சிகரத் தோழர்களிடம் சோர்வு இருக்காது என்றாலும் சோர்வை உருவாக்கும் கடுமையான களப்பணியில் முன்முயற்சியுடன் செயல்படும் தோழர்களை வாழ்த்துவதோடு, மக்கள் ம.க.இ.க போன்ற புரட்சிகர அமைப்புகளோடு இணைந்து செயலாற்ற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

mozhipor-tnj-demo-3அடுத்து சிறப்புரையாற்றிய ம.க.இ.க மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் உரை பின்வருமாறு:-

50 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் மூன்று கட்டப் போராட்டமாக நடைபெற்றது. 1937-ல் இராஜகோபாலாச்சாரி, சென்னை இராஜதானியின் பிரதமராக இருந்தபோது 125 தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். பெரியார், மறைமலையடிகள், உ.வே.சா போன்றவர்கள் இதை எதிர்த்தனர். அப்போது நடைபெற்ற போராட்டத்தில் கைதாகி சிறை சென்ற தாளமுத்து – நடராஜன் ஆகியோர் அங்கே நோய்வாய்ப்பட்டு இறந்தனர்.

பார்த்தாலே தீட்டு என்று கருதப்பட்ட நாடார் சமூகத்தை சேர்ந்த தாளமுத்துவும், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த நடராஜனும் சிறை அதிகாரிகளிடம் மன்னிப்புக் கோராமல் மாண்டனர். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்துதான் முதல் தியாகம் தோன்றியது.

இராஜாஜி அரசு பின்வாங்கியது. வெள்ளைக்காரர்களுக்கு சங்கடம் வரக் கூடாது என்று கருதி போராட்டம் நிறுத்திக் கொள்ளப்பட்டது. இது முதற்கட்டம். பிறகு, இரண்டாம் கட்டமாக 1948-ல் நேரு அரசாங்கம் இந்தி ஆட்சிமொழி அறிவிப்பை செய்த்து. ம.பொ.சி, திரு.வி.க போன்றவர்கள் எதிர்த்தனர். இந்தப் போராட்டத்தில் திராவிட இயக்கத்தின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது.

mozhipor-tnj-demo-1ஆங்கிலம் இணையாட்சி மொழி என்ற நேருவின் சட்டமாக்கப்படாத வெற்று வாக்குறுதியை நம்பி ஏற்று போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மூன்றாவது கட்டப் போராட்டம் தற்போது பேசப்படும் 1965 போராட்டமாகும். 1963-ல் உருவாக்கப்பட்ட ஆட்சிமொழிச் சட்டம் இந்தி ஆட்சிமொழி, ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக இருக்கும், இந்தி மொழிபெயர்ப்புத்தான் அதிகாரப்பூர்வமானது என்று கூறியது. இதனை வலியுறுத்திய 17 ஆவது அரசியல் சட்டப்பிரிவைக் கொளுத்தும் போராட்டம் கொழுந்து விட்டெரிந்த்து. தி.மு.க-வின் கட்டுப்பாட்டை மீறிப் போராட்டம் முன்னோக்கி சென்றது.

மாணவர்கள் போராட்டக் குழுக்களைக் கட்டி, போராட்டக் களத்தில் இறங்கினார்கள். முதன்முறையாக மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க இராணுவம் களமிறக்கப்பட்டது. பிரதமர் லால்பகதூர் சாஸதிரியும், அப்போதைய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தாவும் நேருவின் வாக்குறுதி காப்பாற்றப்படும் நம்புங்கள் என்று மன்றாடினர். எண்ணற்ற தியாகங்களுடன் 55 நாள் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்திய மொழிகள் எல்லாம் சமஸகிருத இந்தி ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு விட்டது. வரலாற்று வளர்ச்சிப் போக்கிலும், தொடர்ச்சியான போராட்டத்திலும் தமிழ் ஓரளவு கட்டிக் காப்பாற்றப்பட்டு சுய அடையாளத்தைக் கொண்டதாக இன்றுவரை உள்ளது.

தற்போது மோடி அரசு சமஸ்கிருத-இந்தித் திணிப்பை மிக வேகமாக செய்து வருகிறது. பகவத் கீதையை புனித நூலாக அறிவிப்பது, சரஸவதி பூஜையை குரு உத்ஸவ் ஆக்குவது என்று அடுத்தடுத்த தாக்குதல்களை மோடி அரசு தொடுத்து வருகிறது. இந்த தாக்குதல்கள் புதியது அல்ல, தொடர்ந்து நடந்து வரும் தாக்குதல்கள் தான்.

காங்கிரசை சேர்ந்த சத்தியமூர்த்தி அய்யர் “எனக்கு அதிகாரம் கிடைத்தால் வருணாஸரம தர்மத்தை அமல்படுத்துவேன், சமஸகிருதத்தை ஆட்சி மொழியாக்குவேன்” என்று பகிரங்கமாக அறிவித்தார். அவருடைய பெயரில்தான் காங்கிரசு அலுவலகம் சென்னையில் சத்தியமூர்த்தி பவன் என்று உள்ளது. இதனைத் தமிழக, தமிழ்ப் பாரம்பரியத்திற்கு ஓர் அவமானமாக கருத வேண்டும். காங்கிரசு பெயர் மாற்றம் செய்யாது, அதன் பாரம்பரியம் அப்படிப்பட்டது தான்.

காந்தியமும், ஆர்.எஸ.எஸ சித்தாந்தமும் வேறு வேறு அல்ல, காங்கிரசும் பி.ஜே.பி-ம் வேறு வேறு அல்ல. காந்தி ராமராஜ்யத்தை வலியுறுத்தினார். அதனை அப்போதே பேரறிஞர் ராகுல் சாங்கிருத்யாயன் அம்பலப்படுத்தினார். அதே ராமராஜ்ய திட்டம் தான் மோடியின் திட்டம். காங்கிரஸ தயங்கித் தயங்கி செய்த்தை மோடி அரசு வேகமாக வெளிப்படையாக செய்கிறது.

ஆளும் வர்க்கத்தின் பிராந்திய விரிவாக்க கொள்கையும், ஆர்.எஸ.எஸ-ன் அகண்ட பாரத ஜனநாயகமும் இங்கு ஒன்றிணைகிறது.

மக்களுக்கு பெயரளவில் கொடுக்கப்பட்ட உரிமைகளும், புனிதமென்று சொல்லப்படும் சட்டங்களும் நீதித்துறையால் காலில் போட்டு மிதிக்கப்படுகிறது. தில்லை வழக்கில் நீதிபதி பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார். ஆட்சிப்பணி, நீதித்துறை, காவல்துறை எல்லாமே உபயோகமற்றதாகிக் கட்டமைப்பு நெருக்கடிக்குள் சிக்கி நிற்கிறது.

இந்தக் கட்டமைப்பை தகர்த்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவது மூலம் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த உறுதியேற்போம்.

என்று கூறி முடித்தார்.

பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் பலர் உறுதி ஏற்புக் கூட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை

சி.ஐ.ஏ : பயங்கரவாதத்தின் பிதாமகன் !

4

ஸ்லாமியத் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செயப்பட்டு சிறையிடப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளைக் கொடூரமாக வதைக்கும் சி.ஐ.ஏ.-வின் சித்திரவதைகள் குறித்து அண்மையில் வெளிவந்துள்ள அமெரிக்க செனட் அறிக்கை, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளால் நடத்தப்பட்டுவரும் ஆக்கிரமிப்புப் போரையும், சித்திரவதைகளையும் மட்டுமின்றி, இச்சித்திரவதைகள் அமெரிக்க அரசுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் தெரிந்தேதான் நடந்துள்ளன என்ற உண்மையையும் இந்த செனட் அறிக்கை அம்பலமாக்கியிருக்கிறது.

விசாரணைக் கைதிகளை நிர்வாணப்படுத்தி வதைப்பது, பல நாட்களுக்குத்  தூங்கவிடாமல் தொடர்ந்து சித்திரவதை செவது, மலக்குழாய் வழியாக உணவை வலுக்கட்டாயமாகச் செலுத்தி வதைப்பது, வாட்டர் போர்டிங் எனப்படும் நீரில் மூழ்கடித்துச் சாவின் விளிம்புவரை கொண்டு சென்று வதைப்பது, நடுங்கவைக்கும் குளிரில் நீண்டநேரம் நிற்க வைப்பது, குறுகிய சங்கிலியின் மீது பல மணி நேரம் குனிந்தே நிற்க வைப்பது, நாய்களைக் காதருகே குரைக்கவிட்டு அச்சுறுத்துவது, சுவரில் கைதியைத் தூக்கிவீசி அறைவது, பெட்டிக்குள் கை, கால்களை மடக்கி நீண்ட நேரத்துக்கு உட்கார வைப்பது, சவப்பெட்டிக்குள் அடைத்து வைத்து மூச்சுத் திணற வைத்து வதைப்பது, பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி வதைப்பது, விசாரணைக் கைதிகளது குடும்பத்தாரையும், அண்டை வீட்டாரையும் மிரட்டி வதைப்பது-என அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. நடத்தியுள்ள கொடூரமான சித்திரவதைகள் இன்று பகிரங்கமாக வெளிவந்து உதிரத்தையே உறைய வைக்கின்றன.

அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்
“காலவரையற்ற சட்டவிரோதக் கைதுகளை ரத்து செய்! விசாரணைக் கைதிகள் மீது வழக்கைப் பதிவு செய்! அல்லது விடுதலை செய்!” என்ற முழக்கத்துடன், விசாரணைக் கைதிகளைப் போல வேடமணிந்து மனித உரிமை அமைப்பினர் அமெரிக்காவில் நடத்திய ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவில் இத்தகைய சித்திரவதைகளை நடத்தினால் அம்பலமாக நேரிடும் என்பதால், தனது விசுவாச – கைக்கூலி நாடுகளில் இரகசிய வதைக்கூடங்களை அமைத்து, சந்தேகிப்போரை இரகசியமாக கடத்திச் சென்று, இக்கொடூரங்களை கிரிமினல்தனமாக  சி.ஐ.ஏ.வும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும் நடத்தியிருக்கின்றனர். அமெரிக்காவுக்கும் அதன் விசுவாச கைக்கூலி நாடுகளுக்குமிடையே ஒரு இரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொள்ளப்பட்டு, அதன் படியே இத்தகைய வதைமுகாம்கள் அமெரிக்காவுக்கு வெளியே வைத்து இயக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த ஆஃபியா சித்திகி என்ற பெண் மருத்துவ விஞ்ஞானி கடந்த 2003-ம் ஆண்டில் அமெரிக்கா சென்றிருந்தபோது ‘காணாமல்’ போனார். அவர் ஒரு பயங்கரவாதி  என்று முத்திரை குத்தி சி.ஐ.ஏ.வால் கடத்தப்பட்டு பல ஆண்டுகளாக வெளியுலகுக்கே தெரியாமல் ஆப்கானிலுள்ள அமெரிக்க சித்திரவதைக் கூடமான பாக்ராம் விமான தளத்தில் அடைக்கப்பட்டு, மிருகத்தனமான சித்திரவதைக்கும் பாலியல் வன்முறைக்கும் ஆளான கொடூரத்தை பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஒருவர் வெளிக்கொணர்ந்தார். முஸ்லிமாகப் பிறந்ததைத் தவிர அந்தப் பெண் வேறெந்தக் குற்றத்தையும் செயவில்லை.

அபு சுபைதா என்ற இஸ்லாமியர் போலந்து நாட்டின் எல்லையில் உள்ள இரகசிய வதைமுகாமில் வைத்து வாட்டர் போர்டிங் எனும் தண்ணீரில் மூழ்கடிக்கும் சித்திரவதையால் உடலெல்லாம் விறைத்து மரக்கட்டையாகி வாயிலிருந்து நுரை தள்ளும் வரை அவரை 12 ஆண்டுகளாக வதைத்துள்ளதை அவரது வழக்குரைஞர் அண்மையில் அம்பலப்படுத்தியுள்ளார். இப்படித்தான் கியூபா அருகே குவாண்டநாமோ விரிகுடாவில் உள்ள சி.ஐ.ஏ.வின் இரகசிய கொட்டடியிலும், மிதக்கும் சிறைச்சாலை எனும் கப்பல்களிலேயே உருவாக்கப்பட்டுள்ள இரகசிய சிறைக் கொட்டடிகளிலும் பலர் வதைக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய இரகசிய ஆட்கடத்தல் – சித்திரவதைகள் நடந்துள்ளதைப் பற்றி ஏற்கெனவே சில மனித உரிமை அமைப்புகளும், தன்னார்வக் குழுக்களும், ஐரோப்பிய நாடாளுமன்றம் அமைத்த விசாரணைக் குழுவும், விக்கி லீக்சும் அம்பலப்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான குரல்கள் வலுவடைந்துள்ள நிலையில், நம் நாட்டின் விசாரணைக் கமிசன் அறிக்கை போல நீர்த்துப்போன வழியில் இப்போது இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது.

இச்சித்திரவதைகளை ஏதோ கொள்கையில் நேர்ந்த தவறு போலத்தான் செனட் குழுவின் அறிக்கை கூறுகிறது. ஆனால், வரலாற்று ரீதியாகவே சி.ஐ.ஏ. என்பது பிற நாடுகளை உளவு பார்க்கவும், பயங்கரவாதப் படுகொலை – சித்திரவதைகளுக்காகவும் உருவாக்கப்பட்ட நிறுவனம் என்பதே உண்மை. இதனால்தான் 6700 பக்கங்களைக் கொண்ட செனட் அறிக்கையில் தற்போது 500 பக்க அளவுக்கு வடிகட்டப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டு, ஏனைய பக்கங்கள் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.

சி.ஐ.ஏ சித்திரவதை
சி.ஐ.ஏ, அமெரிக்க இராணுவம், ஜார்ஜ் புஷ் “ஆஹா, இதுதான் ஜனநாயகம்! இதுதாண்டா மனித உரிமை”

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகுதான் இத்தகைய சித்திரவதைகள் நடந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், அது ஒட்டுமொத்த சித்திரவதைகளில் ஒரு சிறு கூறுதான். ஆக்கிரமிப்புப் போரும், கொடிய சித்திரவதைகளும் ஏகாதிபத்தியத்தின் பிரிக்கமுடியாத அங்கங்கள். கொலைக் குழுக்களைக் கட்டியமைத்து இதுவரை அறிந்திராத கொடூரமான சித்திரவதைகளை வியட்நாம் போரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்துவிட்டது. ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் தலைவர்களை அது படுகொலை செய்ததோடு, முன்னணியாளர்களைக் கடத்திச் சென்று காட்டுமிராண்டித்தனமாகச் சித்திரவதை செய்து கொன்றுவிட்டு, காணாமல் போனதாக அறிவித்தது.

அமெரிக்காவின் மேலாதிக்கத்துக்கு உடன்படாத அல்லது அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகள் இத்தகைய சித்திரவதைகளைச் செய்துள்ளதாக செய்திகள் கசிந்தால், அதையே முகாந்திரமாக வைத்து மனித உரிமைகளை மீறிவிட்டதாகக் கூப்பாடு போட்டு அந்நாட்டின் மீது இந்நேரம் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்திருக்கும். அல்லது பொருளாதாரத் தடைகளை விதித்து அந்நாட்டை முடமாக்கி அடிமைப்படுத்தியிருக்கும். ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியம் இத்தகைய சித்திரவதைகளைச் செய்திருப்பதால், அது பயங்கரவாதத்துக்கு எதிரான செயலாகவும் தேசிய பாதுகாப்புக்கான அவசியமான நடவடிக்கையாகவும் நியாயப்படுத்தப்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போலீசுக் கொலைகள், போர்க் குற்றங்கள், உளவுத்துறையின் கொலைகள், நிதி மோசடிகள் பற்றிய எந்த விசாரணையும் அமெரிக்காவில் நடத்தப்பட்டதில்லை. எந்தக் குற்றவாளியும் வழக்கு மன்றத்தில் நிறுத்தப்பட்டதுமில்லை. ஜனநாயக நாடகமாடும் ஒபாமா ஆட்சியில், பாகிஸ்தானின் மேற்குப் பகுதியிலும் ஆப்கானிஸ்தானிலும் ஆளில்லா போர் விமானங்களைக் கொண்டு கொத்துக்கொத்தாக அப்பாவி மக்களைக் கொன்றொழித்த போதிலும் கூட, இக்கொடூரத்துக்கு எதிராக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

ஏனெனில், அவர்கள் அமெரிக்க அரசியல் தலைவர்களால் பாதுகாக்கப்படுகின்றனர். அமெரிக்க பட்ஜெட்டில் பல நூறு கோடி டாலர்களை கொலைகார சி.ஐ.ஏ.வுக்கு ஒதுக்கி வருவதை அவர்கள் அங்கீகரித்தே வருகின்றனர். இதனால்தான் புஷ் ஆட்சிக் காலத்தில் துணை அதிபராக இருந்த டிக் செனியும், சி.ஐ.ஏ. இயக்குனரான ஜான் ப்ரென்னனும், வெள்ளை மாளிகையின் வழக்குரைஞர்களும் நாட்டின் நலன் கருதி, மனித இனத்துக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிராக இத்தகைய சித்திரவதைகள் தவிர்க்கவியலாத தேவை என்று இன்றும்கூட திமிராகக் கொக்கரிக்கின்றனர்.

வடிவங்களில் வேறுபட்டாலும் சாராம்சத்தில் ஏகாதிபத்தியம் என்பது இப்படித்தான் இருக்க முடியும். பெருமையாக பீற்றிக் கொள்ளப்படும் முதலாளித்துவ ஜனநாயகம், மனித உரிமைகளின் யோக்கியதையையும், முதலாளித்துவ ஜனநாயகம் என்பதே மோசடி ஜனநாயகம்தான் என்பதையும்  இப்போது செனட் குழுவின் அறிக்கையே அம்பலப்படுத்திக் காட்டிவிட்டது. இந்த யோக்கிய சிகாமணிகள்தான் கம்யூனிசம் என்றால் சர்வாதிகாரம், அடக்குமுறை என்றெல்லாம் இன்னமும் வெட்கமின்றிப் பிதற்றிக் கொண்டிருக்கின்றனர்.

– தனபால்
________________________________________
புதிய ஜனநாயகம், ஜனவரி 2015
________________________________________

கட்டமைப்பு நெருக்கடி – SOC, CPI (ML) பத்திரிகை செய்தி

5

பத்திரிகை செய்தி

திவாலாகிப்போன அரசியல் சமூக கட்டமைவைத் தகர்த்தெறிவோம்!
மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!

Communist_Symbolமிழகத்தின் அரசியலில் மட்டுமல்ல, நமது நாடு முழுவதுமான அரசியலிலும் பாரிய விளைவை ஏற்படுத்தக்கூடிய மிக முக்கியமான அரசியல் முடிவுகளை, ஜனநாயகபூர்வமான உட்கட்சி அரசியல் விவாதத்தைத் தொடர்ந்து, 2015, ஜனவரி 2-3 தேதிகளில் நிகழ்ந்த மாநில  சிறப்புக் கூட்டத்தில், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) -இன் மாநில அமைப்புக் கமிட்டி எடுத்திருக்கிறது. அவற்றின் சாரம் வருமாறு:

இப்போது நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கட்டமைப்பு முழுவதும் தீராத, மீளமுடியாத, நிரந்தரமான, மிகமிக அசாதாரணமான நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. அதன் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் அவற்றுக்குரியவையாக வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றாது,  திவாலாகி, தோற்றுப்போய், நிலைகுலைந்து எதிர்நிலைச் சக்திகளாக (bankrupted, failed, collapsed and turned into opposite forces) மாறிவிட்டன.

நாட்டின் அரைக்காலனி – அரைநிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு,  தரகு முதலாளிய அரசியல் அமைப்பு எதிர்கொண்ட நெருக்கடிகளுக்குத் தீர்வாக ஏகாதிபத்தியங்களால் திணிக்கப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையும், கட்டுமான மாற்றங்களும் அரசியல் – பொருளாதார – சமூகச் சிக்கல்களை மேலும் கடுமையாக்கி முற்றச் செய்துவிட்டன.

மேற்கண்ட போக்குகள் ஒரு உச்ச நிலையை எட்டி, இன்றைய சமூக கட்டமைப்பின் பொருளாதாரம், அரசியல், பண்பாடு  போன்ற அனைத்து கட்டுமானங்களும், கட்டமைப்பு முழுவதும் தீராத, தீர்வு காண இயலாத நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. இவற்றின் கையாலாகாத்தனத்தை, காலாவதியாகிப்போன நிலையை, இற்றுப் போனதை, திவாலாகிப் போனதை, தோற்றுப் போனதையே இது காட்டுகிறது. நாட்டின் நடப்புகளே இதற்குச் சான்று கூறுகின்றன.

இந்தக் கட்டமைப்பை தாங்கிப் பிடித்து, நியாயப்படுத்தி மக்களிடம் அங்கீகாரம் பெற்றுத் தந்து வந்த ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தங்களும், அரசியல் கொள்கைகளும், பண்பாட்டு நெறிமுறைகளும், நீதி நெறிமுறைகளும், அரசியல் சட்டமும், விதிமுறைகளும், ஒழுங்குமுறைகளும் கூடத் திவாலாகி, தோற்றுப்போய் விட்டன. சித்தாந்த, அரசியல், பண்பாட்டு ஆயுதங்கள், கருவிகள் எல்லாவற்றையும் பிரயோகித்துப் பார்த்தும் நெருக்கடியிலிருந்து மீளமுடியாமல் மேலும் மேலும் நெருக்கடி எனும் கருந்துளைக்குள்  போய்க் கொண்டிருக்கும் பரிதாப நிலையையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மத்தியில் பிரதமர், மாநிலத்தில் முதலமைச்சர், மற்றும் மத்திய – மாநில அமைச்சர்கள், மாநிலத் தலைமை போலீசு அதிகாரிகள், அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட உயர் அரசுப் பதவிகளை வகிப்பவர்களில் பலர் கிரிமினல் குற்றவாளிகளாக உள்ளனர். இவர்கள் கிரிமினல் குற்றவாளிகளாக இருந்தும் தண்டிக்கப்படவில்லை; மாறாக, அவர்கள் மீண்டும் மீண்டும் ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் அல்லது நியமிக்கப்படுகிறார்கள்.

குஜராத்தில் இசுலாமியரைப் பெருந்திரளாகக் கொலைசெய்த கிரிமினலான பிரதமர் மோடி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பொறுப்பைக் கீழமை நீதிமன்றங்களிடம் உச்சநீதி மன்றம் தள்ளிவிட்டது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கும்பல் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, தனது வழிகாட்டுதலைத் தானே மீறி 18 ஆண்டுகளாகத் தள்ளித் தள்ளி வைத்தது. அக்கும்பலின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டபோதும், அவசர அவசரமாக உச்சநீதி மன்றம் தலையிட்டு, விதிவிலக்கு(!) என்றே சொல்லிக்கொண்டு, தாராளமான சலுகைகளுடன் பிணையில் விடுவித்தது.

ஜெயலலிதாவைப்போல, மமதாவைப்  போல, ஜெகன்மோகன் ரெட்டியைப் போல, சரத் பவாரைப் போல,   மாயாவதி-முலாயமைப் போல, லாலுவைப்போல, சௌதாலாவைப்போல, எடியூரப்பாவைப்போல,   சந்திரபாபுநாயுடுவைப்போல ஏராளமான அரசியல்வாதிகள்  இலஞ்ச-ஊழல், அதிகாரமுறைகேடுகளில் ஈடுபட்டுப் பல இலட்சம் கோடி ரூபாய் கள்ளப்பணத்தைக் குவித்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் வரும்போது அவை அரசியல்  சதிகள் -சூழ்ச்சிகள், அரசியல் பழிவாங்குதல்கள் தாம் என்று கூறி, கூலிப் படையை வைத்துப் போராட்டங்களை ஏற்பாடு செய்கிறார்கள்.

நீதித்துறை, உளவுத்துறை, போலீசு ஆகிய மேலிருந்து கீழ்வரையிலான குற்றத் தடுப்பு – தண்டனை வழங்கும் அரசு அதிகார அமைப்புகளை இந்தக் கிரிமினல் குற்றவாளிகளே தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களிடம் உச்ச, உயர்நீதி மன்றங்களே தமது பொறுப்புகளைத் தட்டிக்கழித்துத்  தாராளமாக நடந்து கொள்கின்றன. நீதிபதிகளே இலஞ்ச ஊழல், பாலியல் குற்றவாளிகளாக, கிரிமினல் குற்றக்கும்பல்களின் டவாலிகளாக இருக்கின்றனர்;  நீதியே விற்பனை சரக்காகி – நீதித்துறையே நிர்வாணமாகி நிற்கிறது.

இந்திய அரசே ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்கின்ற, ஒரு மிகப் பெரும் கார்ப்பரேட் கொள்ளை நிறுவனமாகிவிட்டது. பிரதமரே அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், மாநில முதலமைச்சர்களே அதன் இயக்குநர்களாகவும் செயல்படுகிறார்கள். அம்பானி, அதானி, மிட்டல், பிர்லா, டாடா, ஜிண்டால் போன்ற பெரும் தரகு முதலாளிகள் அரசுப் பொதுச்சொத்துக்களைக் கொள்ளையடித்து, பல இலட்சக்கணக்கான கோடி ரூபாய் கருப்புப் பணத்தை அந்நியநாட்டு வங்கிகளில் குவித்துவைத்து ஹவாலா மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். சட்டமுறைப்படியான நடவடிக்கைகள் எடுத்தால் முதலீடுகளை முடக்கிவிடுவதாக மிரட்டுகிறார்கள். உள்நாட்டு, அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களும், அவர்களின் பழைய, புதிய தரகு முதலாளிகளும் பெருமளவிலான கிரானைட், மணற் கொள்ளையிலும், கனிமவள, உலோகத் தாதுக் கொள்ளையிலும் ஈடுபட்டுக் காடுகளையும் மலைகளையும் நீர்நிலைகளையும் அழித்து நாட்டையே பாலைவனமாக்கி வருகிறார்கள்.

அதேசமயம், அரசு நிர்வாக அமைப்புகள், குறிப்பாக அவற்றின் அடக்குமுறை நிறுவனங்கள் நாட்டின் குடிமக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் தலையிட்டு ஒடுக்குவதாகவும், எங்கும் நீக்கமற நிறைந்து, வரைமுறையற்ற அதிகாரமும் ஆதிக்கமும் செலுத்துவதாகவும் உள்ளன.  இராணுவம், துணை இராணுவம், போலீசு, உளவு அமைப்புகள், அதிகாரவர்க்க அமைப்புகள் கிரிமினல் குற்றமிழைக்கும்போது, அவர்களைத் தண்டிப்பதற்கு உச்சநீதிமன்றமே அஞ்சுகிறது. அவர்களுக்கு எதிரான வழக்குகளில் விசாரணைகள் தரும் ஆதாரங்கள் இருந்தும், சட்ட நியதிப்படி நடந்து கொள்வதற்குப் பதில் சமரசமாக முடிவுகள் எடுக்கின்றது.

குறிப்பாக, காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், குஜராத் மற்றும் மாவோயிஸ்ட் இயக்கம் பரவியுள்ள மாநிலங்களில், இராணுவம், துணை இராணுவம், போலீசு, உளவு அமைப்புகள் ஆகிய நிறுவனங்கள்  நடத்தும் போலி மோதல் கொலை வழக்குகளில் இதற்கான சான்றுகளைக் காணலாம். பயங்கரவாத, பிரிவினைவாத பீதி கிளப்பி மக்களுக்கு எதிராக கடுமையான பெருந்திரள் கண்காணிப்பு, அடக்குமுறைகள் ஏவிவிடப்படுகின்றன. கிரிமினல் குற்றக் கும்பல்கள் – ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் – போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தினர் அடங்கிய முக்கூட்டு, சிவில் சமூகத்தின் மீது ஏறிமிதித்து, முற்று முழுதான ஆதிக்கம் செலுத்துகின்றது.

நாட்டின் பொருளாதாரமோ ஏகாதிபத்திய உலகப் பொருளாதாரத்தோடு பிணைக்கப்பட்டு, கடந்த பத்தாண்டுகளாக  உற்பத்திப் பின்னடைவு, தேக்க-வீக்கம்,  அன்னிய செலாவணிப்  பற்றாக்குறை, இந்திய நாணய மதிப்பு வீழ்ச்சி என்று மீளமுடியாதவாறு கடும் நெருக்கடிக்குள்,  சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டு விட்டது. ஆலைமூடல், ஆட்குறைப்பு, கட்டணச் சுமையேற்றியும், விலைவாசியையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் விண்ணை முட்டுவதாக எகிறச்செய்தும், அரசே ஏழை-எளிய மக்களின் தலையிலேறி மிதிக்கின்றது. மக்களுக்கு  கல்வி, அடிப்படைப் பொதுச் சுகாதாரம்- மருத்துவம், குடிநீர், கழிப்பிடம், குடியிருப்பு எல்லாம் கானல்நீராகவே உள்ளன. விவசாயிகள், மீனவர்கள், பழங்குடி   மக்கள், நெசவாளிகள், கைவினைஞர்கள், சிறு வர்த்தகர்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு, கார்ப்பரேட் தரகு முதலாளிகளின் ஆதாயத்துக்காக குவிக்கப்படுகின்றன.

ஒடுக்கப்படும் சாதியினர், மதச் சிறுபான்மையினர், பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்கள், வன்கொடுமைப் படுகொலைகள் கொஞ்சமும் சகிக்கமுடியாதவையாகி, கட்டுப்படுத்த முடியாதவையாகி, அநாகரிகத்தின்  உச்ச நிலையை எட்டிவிட்டன. சாதிவெறி, மதவெறி, பாலியல்வெறித் தாக்குதல்கள் காரணமாக மக்கள் தொகையில் முக்கால் பங்குக்கும் மேலானவர்கள் வாழத் தகுதியற்றதாக நாடு மாறிவிட்டது. ஒடுக்கப்படும் சாதியினர் மீது பேரதிர்ச்சி கொள்ளும் அளவிலான தாக்குதல்கள், மதச் சிறுபான்மையினர் மீது பாசிசப் பயங்கரவாதப் படுகொலைகள், பெண்கள் மீது அநாகரிகமான பாலியல் கொடூர வக்கிரங்கள் என்று நாடே தலைகுனியும் வன்கொடுமைச் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கின்றன. அவற்றுக்கு வழமையான வழக்கு மன்றங்களில் நீதி கிடைக்காதென்பது உறுதியாகிவிட்டது.  இயற்றப்படும் புதிய சிறப்புச் சட்டங்களும் அமைக்கப்படும் சிறப்புப் புலனாய்வுக் குழுக்களும் சிறப்பு விசாரணை ஆணையங்களும் சம்பந்தப்பட்ட வழக்குகளைக் கிடப்பில் போட்டு, ஊற்றிமூடுவதற்கான குறுக்கு வழிகளாகிவிட்டன. இந்த அக்கிரமங்கள், அநியாயங்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லையே, என்றும்  எதையாவது செய்து இவை எல்லாவற்றையும் ஒழிக்க வேண்டும் என்ற கோபாவேசத்துடனும் மக்கள் குமுறுகின்றனர்.

இந்த அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகள் முற்றுவதன் வெளிப்பாடாக, மக்கள் தனித்தனிப் போராட்டங்களில் தன்னெழுச்சியாக ஈடுபடுவது பெரிதும் அதிகரித்து வருகின்றது. எனினும், அவர்கள் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும், தொடர்பையும் ஒருங்கிணைந்த முறையிலானவையாக தொகுத்துப் பார்க்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கைத் தேவைக்கான போராட்டங்களிலேயே அவர்கள் மூழ்கிக் கிடக்கிறார்கள். ஆளும் வர்க்கங்களும் ஊடகங்கள் மூலம் பல்வேறு வகைகளில் மக்களின் கவனத்தைச் சிதறடிக்கின்றன. தாது மணற்கொள்ளை, ஆற்று மணற்கொள்ளை, மீத்தேன் எரிவாயு எடுப்பு, எரிவாயுக் குழாய் அமைப்பு, காவிரி நீர்  முதலான பல்வேறு தனித்தனிப் பிரச்சினைகளுக்காகத் தன்னெழுச்சியாகப் போராட்டங்களில் ஈடுபடும் மக்களிடம், அவற்றுக்கிடையிலான பொதுத் தன்மையையும் உறவையும் தொகுத்துப் பார்க்கவேண்டிய அவசியத்தையும், தனித்தனித் தீர்வுகளை நாடும் போராட்டங்களுக்குப் பதிலாக, புரட்சிகர அரசியல் தீர்வுகளைக் கொண்ட பொது முழக்கங்களை முன்வைத்துப் போராடவேண்டியதன் முக்கியத்துவத்தையும்  புரியவைக்கவேண்டும்.

மோடி போன்றவர்கள் அன்றாடம் ஒரு சர்ச்சைக்குரிய பேச்சு அல்லது அறிவிப்பின்  மூலம்  மக்களிடையே விவாதத்திற்குரிய நிகழ்ச்சி நிரலை உருவாக்குகிறார்கள். பார்ப்பனப் பாசிசக் கும்பல் ஆத்திரமூட்டும் மதவெறி நடவடிக்கைகளின் மூலம் மறுகாலனியாக்க நடவடிக்கைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திட்டமிட்டே திருப்புகிறது. அதே நேரத்தில்  தனது பார்ப்பன பாசிச நடவடிக்கைகளுக்கு மக்களைப் பழக்கப்படுத்திப் பணியவும் வைக்கிறது.  இதனை முறியடிக்கும் விதத்தில், நாடும் மக்களும் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் அனைத்துக்கும் காரணம், கட்டமைப்பு நெருக்கடியே என்ற ஒருங்கிணைந்த, முழுமையானதொரு பார்வையை மக்களுக்குக் கற்றுத்தருவதன் மூலம், புதிய, அவசியமான, விவாதத்திற்குரிய நிகழ்ச்சி நிரலை நாம் மக்கள் முன்பு வைத்திட வேண்டும்.

அதாவது, நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக கட்டமைப்பு நெருக்கடிகள் முற்றி ஓர் உச்ச நிலையை எட்டிவிட்டதை, அரசு மற்றும் ஆளும் வர்க்கங்கள் ஆளும் தகுதியை இழந்துவிட்டதை மக்களிடம் கொண்டு செல்வதுடன், ஆளும் வர்க்கங்களின் அதிகாரத்தைத்  தட்டிக் கேட்கவும், அவர்களின் அதிகாரத்துக்கு சவால் விடவும் மக்களைத் திரட்டவேண்டும். அதிகாரத்தை மக்கள் தாமே கையில் எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும். ஆகவே, எல்லாச் சிக்கல்களுக்கும், கட்டமைப்பு நெருக்கடிக்குமான தீர்வின் தொடக்கமாக, மக்களின் அதிகாரத்தை மையப்படுத்துகின்ற ஒரு புதிய, அவசியமான பொது அரசியல் அரங்கத்தைக் கட்டி, முழக்கங்களை வகுத்து மைய இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதுதான் நாட்டின் இன்றைய அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளில் புரட்சிகர இயக்கத்திற்குரிய பொறுப்பும் கடமையுமாக இருக்கிறது.

ஆழமான விவாதத்திற்குப் பிறகு, உடனடிக் கடமை குறித்த இம்முடிவை ஒருமனதாக நிறைவேற்றி,  மாநிலச் சிறப்புக் கூட்டம் புரட்சிகர எழுச்சியுடன் நிறைவுற்றது.

இவண்,
செழியன்,
செய்தித் தொடர்பாளர்,
மாநில அமைப்புக் கமிட்டி,
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி  (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்),
தமிழ்நாடு.

 

ராணிப்பேட்டை நரகத்தில் வட இந்தியத் தொழிலாளிகள்

437

இராணிப்பேட்டை சிப்காட் – வட இந்தியத் தொழிலாளர்களின் நிலை

30 அடி நீளம், 50 அடி அகலத்தில் ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட ஷெட். அங்குதான் ஒவ்வொரு நாளும் கிடைக்கும் ஓய்வு நேரமான 6 மணி நேரத்தை தூங்கி, பாட்டு கேட்டுக் கொண்டு, சாப்பிட்டுக் கொண்டு செலவழிக்க வேண்டும். தூங்கி எழுந்தால் சில அடிகள் தூரத்தில் பணியிடம். அதிகாலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை “ரெகுலர் ஷிப்ட்”, அதன் பிறகு இரவு 12 மணி வரை “ஓவர் டைம்” என்பது வாடிக்கையான வேலை.

“பதினெட்டு மணி நேரம் தொடர்ந்து  வேலை செய்யும் போது ஓய்வெடுத்தாலோ அல்லது வேலையை மெதுவாக செய்தாலோ அது சிசிடிவி கேமரா மூலம் பதிவாகிவிடும். வீட்டிலிருந்தே முதலாளியால் பார்க்க முடியும். ஒன்று மறுநாள் திட்டு வாங்க நேரிடும். இல்லையேல் ஓய்வெடுத்த நேரத்திற்கு சம்பளம் வெட்டப்படும். பெரும்பாலும் எல்லாத் தொழிற்சாலைகளின் நிலையும் இதுதான்.”

அழகூட்டப்பட்ட தோல்
எப்போதும் துணையாக தோல் நெடி

தூங்கும் போதும், விழித்திருக்கும் போதும் பக்கத்து ஷெட்டில் இயங்கும் தோல் பதனிடும் உருளைகளின் சத்தம் இடைவிடாத துணையாக காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். சுவாசிப்பதற்கு ஆலைக்குள் பதனிடப்படும் ஆயிரக்கணக்கான தோல்களின் நாற்றத்தோடு நூற்றுக்கணக்கான இரசாயனங்களின் நெடி கலந்த காற்று 24 மணி நேரமும் துணையாக இருக்கும்.

உடன் தங்கியிருக்கும் 18 தொழிலாளர்களோடு சேர்ந்து வேலை ஆரம்பிப்பதற்கு முன்பு அல்லது வேலைக்கு நடுவில் ஷெட்டுக்குள்ளேயே சமைத்துக் கொள்ள வேண்டும், சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஷெட்டுக்கு எதிர் முனையில் இருக்கும் கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தோல் உருளைகள்
தூங்கும் போதும், விழித்திருக்கும் போதும் காதை நிறைக்கும் உருளைகளின் இயக்கம்

குளிப்பதற்கும், துவைப்பதற்கும் மஞ்சள் கலந்த தண்ணீர் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதையே கொஞ்சம் வடிகட்டி குடிக்கலாம்.

வாடிக்கையாளர் தேவை குறைவாக இருந்தால் ஞாயிற்றுக் கிழமைகளில் மதியத்துக்கு மேல் உருளைகளின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.  அன்று மாலைதான் வார விடுமுறை. துணி துவைக்க, கடைக்குப் போய் சமையலுக்கான பொருட்கள் வாங்கி வர, இதற்குப் பிறகு நேரம் இருந்தால் பொழுதுபோக்க வெளியில் போய் வரலாம்.

இந்த ‘பூலோக சொர்க்கத்திலிருந்து’ சொந்த ஊருக்கு தொலைபேசிக் கொள்ளலாம். சில ஆயிரம் மாதச் சம்பளத்தில் ஊருக்கு அனுப்பியது போக மிச்சம் பிடித்து ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை ஊருக்குப் போய் வரலாம்.

ranipet-leather-waste-disaster-08ஜனவரி 30, 2015 அன்று வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் தனியாரால் பராமரிக்கப்படும் தோல் இரசாயனக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் இரசாயன சகதி சேகரிப்புத் தொட்டி உடைந்து 10 வட இந்தியத் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட நிகழ்விற்குப் பிறகு தொழிலாளர்கள் சிலரை சந்தித்து பேசிய போது கிடைத்த அவர்களது வாழ்க்கை சித்திரம்தான் மேலே சொன்னது.

கொல்கத்தாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது 17-வது வயதில் ரூ 4,200 மாத ஊதியத்தில் ஒரு தோல் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்திருக்கிறார். ஏழு ஆண்டுகள் உழைப்புக்குப் பிறகு அவரது ஊதியம் இன்று ரூ 5,700 ஆக உயர்ந்திருக்கிறது.

மாலை 6 மணி முதல் இரவு 12 வரை மிகை நேரப்பணியாக கருதப்படும். மிகை நேரப்பணி என்றால் இருமடங்கு ஊதியம் என்பது விதியாக இருந்தாலும் இங்கே ஒரு மடங்கு ஊதியம்தான் எல்லா ஆலைகளிலும் தரப்படுகிறது.

தோல் தொழிற்சாலை பணி
அபாயகரமான இரசாயனங்களை கையாள்வது, வேகமாக இயங்கும் சிக்கலான எந்திரங்களை இயக்குவது என்ற வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கையுறை மூக்குக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் தரப்படுவதில்லை.

இவருக்கும் இவரோடு பணிபுரியும்  17 வயது முதல் 24 வயது வரை உள்ள திருமணமாகாத 18 இளைஞர்களும் தொழிற்சாலை முதலாளி கருணையுடன் ஒதுக்கிக் கொடுத்த ஷெட்டில் வசித்துக் கொண்டு ஆலையில் வேலை செய்கிறார்கள்.

அபாயகரமான இரசாயனங்களை கையாள்வது, வேகமாக இயங்கும் சிக்கலான எந்திரங்களை இயக்குவது என்ற வேலை செய்யும் இவர்களுக்கு பாதுகாப்பு கையுறை மூக்குக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் தரப்படுவதில்லை.

குடும்பத்தோடு வசிப்பவர்கள் மட்டுமே சிப்காட் குடியிருப்புப் பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து தங்குகின்றனர். அப்படி வசிப்பவர்களில் ஒருவர் மற்றொரு தொழிற்சாலையில் பணிபுரியும் வட இந்திய தொழிலாளி ஒருவர். தோல் தொழிற்சாலையில் 10 ஆண்டுகள் பணிக்குப் பிறகு அவரது இன்றைய மாத ஊதியம் ரூ 10,000 எனவும் கூறினார். இதில் வாடகைக்கு மட்டுமே ரூ 2,000 போய்விடுகிறது. மனைவி, இரண்டு குழந்தைகள் அவர்களுக்கான உணவு, பராமரிப்பு, மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி உள்ளிட்ட தேவைகள் அனைத்தையும் இந்தத் தொகைக்குள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவர்கள் ஊருக்குச் செல்வது அரிதாகவே சாத்தியமாகிறது. ஆண்டிற்கு ஒருமுறையோ அல்லது ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறையோதான் செல்கின்றனர். அதற்கு மேல் சென்று வர பொருளாதாரம் அனுமதிக்காது, அப்படியே அனுமதித்தாலும் முதலாளிகள் லீவு தர மாட்டார்கள்.

ராணிப்பேட்டை வட இந்தியத் தொழிலாளர்கள்
சிப்காட் வளாகத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்களின் நிலை இதுதான்

சிப்காட் வளாகத்தில் பல்வேறு தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் சுமார் 5,000 வட இந்திய தொழிலாளர்களின் நிலை இதுதான்.

இந்தியாவில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் 35.6 கோடி இளைஞர்கள் உ ள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்று கூறுகிறது. பெரும்பாலான இளைஞர்களுக்கு அவர்களது கிராமங்களில் அழிக்கப்பட்டு வரும் விவசாய பொருளாதாரத்தில் அற்பக் கூலிக்கான வேலை மட்டுமே கிடைப்பதால் இவர்கள் பெருமளவில் தமிழகம் மற்றும் பிற தொழில் மையங்கள், பெருநகரங்களை நோக்கி படை எடுக்கின்றனர். பெரும்பாலும் தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் மூலமாக ஒருவரைத் தொடர்ந்து மற்றவர்களும் வருகின்றனர்.

“மேக் இன் இந்தியா” என்ற முழக்கத்தின் கீழ் அன்னிய நிறுவனங்களை முதலீடு செய்ய  அழைத்து வந்து இத்தகைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கப் போகிறேன் என்பது மோடியிசத்தின் சவடால்களில் ஒன்று.

இந்த சவடால் மோடியால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டதல்ல, 1990-களிலிருந்தே 25 ஆண்டுகளாக “அன்னிய நேரடி முதலீடு” என்ற பெயரில் அமல்படுத்தப்பட்டு வரப்படுவதுதான். கூடவே, ‘அன்னிய முதலீட்டை ஈர்க்க தொழிலாளர் நலச்சட்டங்களை கைவிட வேண்டும், தொழிற்சாலைகள் மீதான கண்காணிப்புகளை ஒழித்துக் கட்ட வேண்டும். சுற்றுச் சூழல் சட்டங்களை செல்லாமல் செய்து விட வேண்டும்’ என நாட்டை அன்னிய நிறுவனங்களுக்கு காலனியாக்கும் கொள்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 8 மாதங்களில் அதை இன்னும் தீவிரமாக செய்து வருகிறது மோடி அரசு.

இந்த மறுகாலனியாக்கக் கொள்கைள் ஆலைத்துறையிலும், கட்டுமானத் துறையிலும், பிற சேவை நிறுவனங்களிலும் உருவாக்கியிருக்கும் வேலை வாய்ப்பின் குறுக்குவெட்டுதான் ராணிப்பேட்டையில் பணிபுரியும் வட இந்தியத் தொழிலாளர்களின் வாழ்க்கை.

north-indian-workersசிப்காட் பகுதி தொழிற்சாலைகளில் பணிபுரிவோரைப் பற்றிய பதிவேடு கிடையாது. அப்பகுதியில் வசிப்பதற்கான பதிவேடும் கிடையாது. எத்தனை வட இந்திய தொழிலாளர்கள் சிப்காட் பகுதியில் உள்ளனர் என்கிற கணக்கு அரசாங்கத்திற்கே தெரியாது. உழைப்பை மட்டுமே விற்கும் நாடோடிகளாக கொத்தடிமைகளாக மட்டுமே இவர்களது வாழ்க்கை தொடர்கிறது. இவர்கள் நவீன கால கொத்தடிமைகள்.

இவர்களுக்குள்ளே சங்கமோ அமைப்போ எதுவும் கிடையாது. இவர்கள் தனித்தனியாய் இருப்பதை சாதகமாக்கிக் கொண்டு இவர்களிடமிருந்து பணத்தையும் கைபேசிகளையும் உள்ளுர் போக்கிரிகள் சிலர் மிரட்டிப் பறிப்பது சமீப காலமாக அதிகரித்து வருவதால் இவர்கள் வெளியில் நடமாடுவதைக்கூட தவிர்த்து வருகிறார்களாம்.

இவர்களில் ஒருவர் காணாமல் போனாலோ அல்லது அடித்து கொல்லப்பட்டாலோ அல்லது பலர் கொத்துக் கொத்தாய் செத்துப் போனாலோ யாராலும் கண்டு பிடிக்கவோ அடையாளம் சொல்லவோ முடியாது. அரசாங்கம் இவர்களை நிச்சயம் கண்டு கொள்ளப் போவதில்லை. இவர்களாக அமைப்பாக ஒன்று சேர்ந்தாலொழிய இவர்களுக்கு விடிவேதுமில்லை.

ஆலைக்கு வெளியே மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தொழிலாளர்கள் தங்குவதற்கு வசிப்பிடங்களை முதலாளிகளே உடனடியாக ஏற்பாடு செய்து தரவேண்டும். தொழிலாளர்களை ஆலைக்குள்ளே தங்க வைக்கும் அனைத்து முதலாளிகளையும் கைது செய்யப்பட  வேண்டும்.

தொழிலாளர் சட்டங்கள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்துவிட்டு கொட்டமடிக்கும் முதலாளிகள், முதலாளிகளுக்கு துணைபோகும் தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் உள்ளிட்ட இந்த சமூக விரோத பயங்கரவாதக் கூட்டத்தை ஒழித்துக் கட்டாமல் தொழிலாளர்களுக்கு விடிவில்லை.

Ranipet-Murder-2தமது பணியிட மற்றும் வாழும் உரிமைகளுக்காக சங்கமாக திரண்டு ஆயிரக்கணக்கான அமெரிக்கத் தொழிலாளர்கள் 1886-ம் ஆண்டு சிகாகோ நகரில் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தைப் போன்று தொழிலாளர் வர்க்கம் மீண்டும் எழவேண்டும். உழைக்கும் மக்களையும், இந்த உலகையும் முதலாளித்துவ பேரழிவிலிருந்து காப்பாற்ற வழி காட்ட வேண்டும்.

சிகாகோ எரிமலையாய் சீறட்டும் தொழிலாளி வர்க்கம்! பொங்கி எழும் நெருப்புச் சுனாமியில் அழியட்டும் முதலாளித்துவ பயங்கரவாதம்!

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
வேலூர்

(படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. விளக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன)

மதுரை கந்து வட்டி – காவல்துறை கூட்டணிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

3

துரை செல்லூர் பந்தல்குடியில்கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்ட கந்துவட்டி கும்பல் ஆஷா, மகா, செல்வம், சதீஷ், பூஜா ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கவும், இந்த அராஜகத்திற்கு துணை நிற்கும் செல்லூர் எஸ்.ஐ. அன்பழகனை பணி நீக்கவும் வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 30.01.2015 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி அளவில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட துணைத் தலைவர் வழக்குரைஞர் பா நடராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

செல்லூர், பந்தல்குடி கந்துவட்டி அராஜகம்பந்தல்குடியில் பாதிக்கப்பட்ட மக்களும், வழக்குரைஞர்களும், மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை போன்ற அமைப்பைச் சேர்ந்த தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

செல்லூர் – பந்தல்குடி – சுயராஜ்யபுரம் பகுதி பெரும்பான்மை தலித் மக்கள் குடியிருந்து வரும் பகுதியாகும். கூலிவேலை, சிறு வியாபாரம் செய்துவரும் ஏழை உழைக்கும் மக்களே அதிகம் உள்ளனர். விலைவாசி முதல், எல்லா செலவினங்களும் அதிகரித்துவிட்ட இன்றைய சூழலில் வருவாய் பற்றாக்குறை காரணமாகவும் மருத்துவ சிகிச்சை, நல்லது கெட்டது போன்ற அவசரத் தேவைகளுக்காக கடன் வாங்குவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

செல்லூர், பந்தல்குடி கந்துவட்டி அராஜகம்இதைப் பயன்படுத்திக் கொண்டு பந்தல்குடி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆஷா, மகாலட்சுமி, செல்வம், சதீஷ், செல்வராஜ், ரமேஷ் போன்றவர்கள் கந்துட்டித் தொழிலில் தங்களது சொந்த மக்களையே கடுமையாகச் சுரண்டி வருகின்றனர். ரன் வட்டி, மீட்டர் வட்டி, நாள் வட்டி, நேர வட்டி எல்லாவற்றையும் தாண்டி அவர்கள் கேட்சிற வட்டியைத் தராவிட்டால் நடுத்தெருவில் இழுத்துப் போட்டு அடிப்பது, ஆபாச வார்த்தைகளில் திட்டுவது, வீடு புகுந்து சாமான்களை அள்ளுவது, மானபங்கப்படுத்துவது போன்ற அடாவடிகளில் ஈடுபடுவதே இவர்களது வாடிக்கை. இந்தக் கும்பலிடம் சிக்கிக் கொண்டவர்கள் ஒருபோதும் மீண்டதில்லை.

வட்டிப்பணம் மாலை 4 மணிக்குள் தர வேண்டும். 1 மணி நேரம் தாமதமானாலும் வட்டித் தொகை 2 மடங்கு ஆகிவிடும். ஏன் என்று கேட்டால் அடி உதை. செல்லூர் காவல் நிலையத்தில் இவர்கள் மீது புகார் கொடுத்தால் அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. செல்லூர் எஸ்.ஐ.அன்பழகன் இந்த கும்பலுக்கு மிக மிக நெருக்கம். அவரை மகா குடும்பத்தினர் செல்லமாக “மொட்டை மாமா” என்று அழைக்கிற அளவுக்கு நெருக்கம். எந்நேரமானாலும் மகா வகையறாக்கள் வீட்டுக்கு அவர் வந்து போவார். அன்றாடம், அவருக்கு விருந்துதான். கந்துவட்டியில் அவர் பங்காளி.

kanthu-vatti-hrpc-demo-09கடந்த 08.01.2015 அன்று கந்து வட்டி கேட்டு பாண்டிமகன் பாஸ்கரன் என்பவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி, அடித்து, கொலை மிரட்டல் விடுத்த சதீஷ், செல்வம், ஆஷா, பூஜா ஆகியோர் மீது பாஸ்கரன் புகார் அளித்த போது வழக்குப் பதிவு செய்த செல்லூர் காவல் அதிகாரிகள் கந்துவட்டி கும்பலிடம் ஒரு புகாரைப் பெற்று முதலில் புகார் கொடுத்த பாஸ்கரனின் மருமகன் அசோக் என்பவரைக் கைது செய்தது. அவர் ஜாமீனில் வந்துள்ளார். இப்படி இந்தக் கும்பல் மீது பல புகார்கள் கொடுத்தும் செல்லூர் காவல் நிலையம் செவிடன் போல உள்ளது. இந்த கும்பலின் அராஜகம் தொடர் கதையாக உள்ளது.

கந்துவட்டி கும்பலுக்கு நெருக்கமான எஸ்.ஐ.அன்பழகனிடம் அவர்களைக் கைது செய்யும்படி கேட்டபோது, “ஏன்டா நான் கூப்பிட்டா அவளுங்க வீட்டுல 5 பொம்பளைங்களும் வருவாளுங்க, உன் வீட்டில் எவளாச்சும் வருவாளா?” என்று திமிருடன் ஆபாசமாக திட்டியிருக்கிறார். ஆஷா, பூஜா, செல்வம் கும்பல் “போலீஸ் ஸ்டேசன் எங்க கண்ட்ரோல்ல இருக்குடா, நீ எத்தனை புகார் கொடுத்தாலும் உன்னால் எங்க மயிரக் கூட புடுங்க முடியாது” என்று சொல்லியுள்ளனர்.

‘காவல் நிலையங்கள் மக்களுடைய பாதுகாப்புக்கானது, காவலர்கள் உங்கள் நண்பர்கள்’ என்று அரசும் அதிகாரிகளும் சொல்கிறார்கள். ஆனால் காவலர்கள் யாருடைய நண்பர்களாக இருக்கிறார்கள். காவல் நிலையம் யாருக்காக இருக்கிறது என்றால் அது கிரிமினல்களுக்காகத்தான் என்பது இந்த கந்து வட்டி கிரிமினல் கும்பலின் பிரச்சனையில் பளிச்சென்று தெரிகிறது. கிரிமினல்களும் காவல் துறையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற இந்தக் கூட்டணி மறைமுகமானது அல்ல. வெளிப்படையானது. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தவர் ஏழையாக இருந்தால் நிச்சயம் அவர்தான் சிறைக்குப் போவார். அவர் மீது பொய் வழக்கு போடப்படும் என்பதுதான் உண்மை நிலை. சதீஷ், செல்வம், ஆஷா, பூஜா இவர்கள் மீது 08-01-2015 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.

செல்லூர், பந்தல்குடி கந்துவட்டி அராஜகம்மேலும் இதே கும்பல்,  “பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு எதிராக போராடத் துணிந்துவிட்டார்கள். காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கிறார்கள்” என்பதை அறிந்தவுடன் கடந்த 17.01.2015 அன்று அந்தப் பகுதியில் பயங்கர கலவரம் நடத்தி வினோத்குமார், சுந்தர்ராஜன் ஆகிய இரண்டு பேரை தலையில் அரிவாளால் வெட்டி அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தலையீட்டின் பேரில் கொலை முயற்சி செய்த ஆஷா, மகா, செல்வராஜ், செல்வம், சதீஷ், ரமேஷ், பூஜா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர். எஸ்.ஐ.அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அவ்ரைப் பாதுகாக்கின்றனர்.

அதன் பொருள் என்ன? கந்து வட்டி கும்பலின் செல்வாக்கு எஸ்.ஐ. அன்பழகனோடு நின்றுவிடவில்லை. அது மேல்மட்டம் வரை பரவியிருக்கிறது என்பது தான்; அதுமட்டுமல்லாமல் பகுதியில் நடக்கும் விபாச்சார தொழிலில் அன்பழகன் பங்காளிதான் என்றும் சொல்கிறார்கள். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை வீட்டுக்கு அனுப்ப காவல்துறை நெருக்கடி கொடுத்து வருகிறது. இதை அம்பலப்படுத்தி ம.உ.பா. மையம் சுவரொட்டி ஒட்டியதற்காக துணை ஆணையர் புகார் கொடுக்கச் சென்ற மக்களைக் கடிந்து கொண்டுள்ளார்.

கந்து வட்டிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்று அரசு சொல்கிறது. ஆனால் அரசின் சட்டம் ஒழுங்கு பாதுகாவலர்களான காவல் துறைதான் கந்துவட்டி கும்பலைக் காப்பாற்றுகிறது. இப்போது சிறையிலிருக்கும் கிரிமினல்களை விரைவில் மீட்டுக் கொண்டுவந்து திரும்பவும் ஆதிக்கத்தில் அமர்த்த முயற்சி செய்கிறது செல்லூர் காவல்துறை.

கந்து வட்டி பிரச்சனை இங்கு மட்டுமல்ல எல்லா இடங்களிலும் ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சி வருகிறது. எனவே இதற்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து உறுதியுடன் போராடி கந்து வட்டிக் கும்பலை அந்தப் பகுதியை விட்டே விரட்டியடிக்க வேண்டும். ஏற்கனவே இந்த கும்பல் ஒருமுறை ஊரைவிட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளது. ஆனால் செல்லூர் காவல் நிலையத்தின் ஆதரவுடன் மீண்டும் அந்த கும்பல் வந்துவிட்டது. இந்த கிரிமினல் கூட்டணியை விரட்டியடிப்பது ஒன்றே இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாகும்.

ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய ம.க.இ.க தோழர் ராமலிங்கம் “இன்று மதுரையில் பல பகுதிகளில் கந்துவட்டிக் கும்பல் ஒரு தனி அரசாங்கத்தையே நடத்திக் கொண்டிருக்கின்றன. பந்தல்குடியில் 8 பேர் கொண்ட ஒரு கும்பல், செய்கின்ற அராஜகத்திற்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. ஒரு சிறிய கும்பல், அந்தப்பகுதியிலுள்ள 1000 பேரையும் கட்டுப்படுத்தி, ரவுடித்தனம் செய்ய முடிகிறது என்றால் அதற்குக் காரணம் காவல் துறைதான். கந்துவட்டிக் கும்பலுக்கும் காவல் துறைக்கும் உள்ள கள்ள உறவு தான் இத்தனை அராஜகத்திற்கும் அடிப்படையாக இருக்கிறது” என்று பேசினார்.

kanthu-vatti-hrpc-demo-06“கந்து வட்டி வன்கொடுமைக்கு எதிராகப் பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும், காவல்துறை அதைக் கண்டு கொள்வதேயில்லை. பந்தல்குடியில் கந்துவட்டிக் கும்பல் அராஜகத்திற்குக் காரணமே செல்லூர் எஸ்.ஐ அன்பழகன் தான். அவரை தட்டிக் கேட்காத மாவட்ட காவல் துறை நிர்வாகம் போலீக்கு எதிராக ஏன் போஸ்டர் போட்டாய் என்று கேட்கிறது” என்று இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் தோழர் தென்னரசு கேள்வி எழுப்பினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

வி.வி.மு. உசிலை வட்டம் தோழர் குருசாமி பேசியதாவது

செல்லூர், பந்தல்குடி கந்துவட்டி அராஜகம்“கந்து வட்டிக்கு மதுரை சிறப்புத் தகுதி பெற்றது. தமிழ் நாட்டிற்கே மதுரை தான் வழிகாட்டி. இந்தக் கந்து வட்டியால் ஏழை மக்களின் வாழ்க்கையே நாசமாகிப் போய்விடுகிறது. சொந்த சாதிக்காரன், உறவுக்காரன் ஊர்க்காரன் என்றெல்லாம் பார்ப்பதில்லை. எல்லோரையும் உறிஞ்சிக் கொழுக்கவே அவர்கள் விரும்புகின்றனர்.

மக்கள் பிரிந்து கிடப்பதும், பலவீனமாக இருப்பதும் தான் அவர்களுக்கு பலம். புகார் கொடுத்தால் புகார் கொடுத்தவர் மீதே காவல்துறை வழக்குப் போடுகிறது. வட்டிக்கு கடன் வாங்கும் ஏழை மக்கள், ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு வாங்குவதில்லை. நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் கந்துவட்டியில் சிக்கியவுடன் அவர்களது வாழ்க்கை நிலை கீழாகப் போய் விடுகிறது. மீளவே முடியாத அளவிற்கு மேலும் மேலும் வட்டி அவர்களை அழுத்துகிறது. இதனால் வட்டி கட்ட முடியாமல் தடுமாறுகின்றனர்.

கந்து வட்டிக் கும்பலோ வீட்டிற்குள் நுழைந்து இரக்கமின்றி சூறையாடுகிறது. கேவலமாகத் திட்டுகின்றது. மானபங்கம் நடக்கிறது. இத்தனையும் காவல் துறையின் உதவியோடு நடக்கிறது என்பது தான் கொடுமை.”

கந்துவட்டிக் கும்பலால் நேரடியாக பாதிக்கப்பட்ட மூதாட்டி மகாராணி தனக்கு ஏற்பட்ட கொடுமைகளைக் கண்ணீர் மல்கப் பேசினார்.

செல்லூர், பந்தல்குடி கந்துவட்டி அராஜகம்“பேங்க் புத்தகத்தை அடமானம் வைத்து ரூ 4,000 கடன் வாங்கினேன். தின வட்டி 100-க்கு 10 ரூபாய். இது வரை ரூ 75,000 கட்டிவிட்டேன், இன்னமும் கடன் தீரவில்லை. எனக்கு வரும் 6,000ரூபாய் பென்சனில் 2,500 ரூ வங்கியில் வாங்கிய கடனுக்காக எடுத்துக் கொள்வார்கள். மீதப் பணத்தை இந்த கந்து வட்டிக்காரங்க எடுத்துக்கிறாங்க. எனக்கு கஞ்சி குடிப்பதற்குக் கூட வழியில்லை. மேலும் பணம் கேட்டு, என் வீட்டிற்குள் புகுந்து பாத்திரங்களையும் சூறையாடியுள்ளனர். இதே நிலை தான் பலருக்கும் ஏற்பட்டிருக்கு” என்று கண்ணீர் மல்கக் கூறினார் அந்த மூதாட்டி.

ம.உ.பா. மையம் லயனல் அந்தோணிராஜ், மதுரை மாவட்டச் செயலர்

“கந்து வட்டிக் கொடுமை நாடுமுழுவதும் இருக்கிறது. பந்தல் குடியிலும் நடக்கிறது. எல்லை மீறும் பொழுதுதான் போராட்டமாக வெடிக்கிறது. பொறுத்துப் பொறுத்து பார்த்த பந்தல்குடி பகுதி மக்கள், இனிமேல் பொறுக்க முடியாது என்ற நிலையில் தான் வீதிக்குப் போராட வருகிறார்கள்.

kanthu-vatti-hrpc-demo-11பந்தல்குடியில் சுரண்டுபவர்களும், சுரண்டப்படும் மக்களும் ஒரே சாதியைச் சார்ந்தவர்கள். பணம் கட்டினாலும் கடன் மட்டும் தீருவதேயில்லை. அசல் அப்படியே நிற்கிறது. செல்லூர் எஸ்.ஐ அன்பழகனை இந்தக் கந்துவட்டிக் கும்பல் “மொட்டை மாமா” என்று செல்லமாக அழைத்துக் கொஞ்சுகிறது என்றால் அவர்களுக்கிடையிலான உறவைப் புரிந்து கொள்ளுங்கள். மேல் மட்டம் வரை மாமூல் பிரித்துக் கொடுக்கப்படுவதால் உயர் அதிகாரிகள் எஸ்.ஐ அன்பழகனைத் தட்டிக் கேட்பதேயில்லை.

இன்றைய உலகமய சூழலில் 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விதர்பா, கர்நாடகம், ஆந்திரா, பஞ்சாபில் இது நடந்தது. காரணம் கந்து வட்டிதான். வறட்சியினாலும் விவசாயிகள் செத்தனர். அதிகமாக விளைந்தும் விலை இல்லாமலும் செத்தனர். அங்கேயும் கந்துவட்டி பலரை பலி வாங்கியது.

இங்கேயும், கீரைத் தோப்பு, வாழைத்தோப்பு, அண்ணா தோப்பு, ஜெய்ஹிந்துபுரம், அவனியாபுரம், செல்லூரிலும் பலி கேட்கிறது. இந்த கந்து வட்டிக் கும்பலுக்கு எதிராக இங்கே உள்ள அரசியல் கட்சிகள் போராட மாட்டார்கள். ஏனெனில் இவர்களும் அந்தக் கும்பலுக்குப் பின்புலமாக இருக்கிறார்கள். எனவே அரசியல் கட்சிகளை நம்பிப் பயன் இல்லை.

விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரே சக்தியாக திரண்டு, எழுந்து ம.உ.பா.மையம் மற்றும் மக்களுக்காக சமரசமின்றி போராடும் புரட்சிகர இயக்கங்களின் பின் நின்றால் இந்தக் கும்பலை ஓட ஓட விரட்டி அடிக்க முடியும்.

kanthu-vatti-hrpc-demo-10தமிழக அரசே ! காவல்துறையே !

  • செல்லூர் – பந்தல்குடி கந்துவட்டி கும்பலை உடனே குண்டர் சட்டத்தில் சிறையிலடை !
  • எஸ்.ஐ.அன்பழகனைப் பணி நீக்கம் செய் !
  • தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கு !
  • கந்து வட்டிக் கொடுமையை ஒழிக்க விரைந்து நடவடிக்கை எடு !

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
மதுரை மாவட்டக்கிளை

இராணிப்பேட்டை : 10 தொழிலாளிகள் மரணம் – நேரடி ரிப்போர்ட் !

4

இராணிப்பேட்டை :

விடியலைத் தேடி வந்தவர்கள் விடிவதற்குள் மாண்டு போனார்கள்.

ரவு 12.10 மணி. தூங்கிக் கொண்டிருந்த அவர்களை, சேறும் சகதியுமான இரசாயனக் கழிவு திடீரென சுனாமியாய் தாக்குகிறது; என்ன நடக்கிறது என தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே அவர்களை புதைத்து மூடிய கழிவுச் சகதி நெஞ்சில் பேயாய் அழுத்துகிறது; மூச்சுக் குழாய்க்குள் சேறு புகுந்து திணறடிக்கிறது; சகதியில் இருந்த இரசாயனக் கழிவுகள் உடலை அரிக்கின்றன; அருகில் இருந்த தொழிற்சாலை பேனல் போர்டு உள்ளிட்ட மின்சாதனங்கள் சகதியில் மூழ்கி பரவிய மின்கசிவு தப்பிக்க சிறிதளவு வாய்ப்பிருந்திருந்தால் அதையும் காலி செய்கின்றன; அனைவரும் கொடூரமாக கொல்லப்படுகின்றனர்.

இரசாயன சகதி சுனாமி
இரசாயன சகதி சுனாமியில் கொல்லப்பட்டவர்கள் (படம் : நன்றி தினத்தந்தி)

அவர்கள் மேற்கு வங்க மாநிலம் மிதினாப்பூரிலிருந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள இராணிப்பேட்டைக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்பதைவிட கான்பூரைச் சேர்ந்த ஒரு முதலாளியால் இராணிப்பேட்டையில் இயங்கும் ஆர்.கே.லெதர்ஸ் என்கிற தனது தோல் தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்டவர்கள் என்பதுதான் உண்மை.

தொழிற்சாலைகளுக்கு புதிதாய் வேலைக்கு வருபவர்களுக்கு உடனடியாக வீடு கிடைக்காது என்பதால் அவர்களை தொழிற்சாலையிலேயே தங்க வைப்பது வழக்கமாம். 2015 சனவரி மாதம் 30-ம் தேதி அன்று  வந்து சேர்ந்த அவர்களும் இரவு ஆலையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 1500 கிமீ தூர நெடுந்தொலைவு தொடர்வண்டிப் பயணக் களைப்பில் இருந்த அவர்கள் அனைவரும் ஆர்.கே லெதர் ஆலையில் தோலுக்கு சாயம் ஏற்றும் உருளைகளுக்கருகில் படுத்துறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆர்.கே லெதர் ஆலைக்கு அருகில் இருக்கும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கழிவு சகதியை சேகரிக்கும் தொட்டியின் பக்கவாட்டுச் சுவர் உடைந்து சுமார் 4 டன் வரையிலான  நிறை கொண்ட சகதி சுனாமி போல வெளியாகியிருக்கிறது.

விடியலைத் தேடி வந்தவர்கள் விடிவதற்குள் மாண்டு போனார்கள்.

மிதினாபூர் மாவட்டத்தின் வித்யாபூர் சல்பதவானி கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான அபீப் கான், அவரது மகன்கள் 25 வயதான அலி அக்பர் மற்றும் 23 வயதான அலி அங்கர், பல்ராம்பூரைச் சேர்ந்த 27 வயதான ஷாஜகான் மற்றும் அவரது சகோதரர் 18 வயதான குதூப் கான் மற்றும் அக்ரம், அசியான், ப்யார், ஹபீப் ஆகிய அவர்கள் ஒன்பது பேருடன், தொழிற்சாலை இரவுக் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த தமிழ்நாடு ஆரணி தாலுகா கண்ணமங்கலத்தைச் சேர்ந்த சம்பத் (45) என்பவரையும் சேர்த்து பத்து பேரை பலிவாங்கியுள்ளது இந்தச் சகதி சுனாமி.

சம்பவ இடத்தில் இருந்த 21 வயதான அமீனுல் அலிகான் மற்றும் 50 வயதான ரவி என்ற சூப்பர்வைசர் இருவர் பிழைத்துக் கொண்டனர். வெளியில் ஓடிச்சென்ற தொழிலாளிகள் தகவல் தெரிவித்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர்;

தீயணைப்புப் படை வீரர்கள்
போராடி 2 உயிர்களை காப்பாற்றிய தீயணைப்புப் படை வீரர்கள் (படம் : நன்றி thehindu.com)

தொட்டியிலிருந்து வெளியான கழிவுச் சகதி 60 அடி அகல சாலையில் 300 அடி வரை 3 அடி உயரத்துக்கு தேங்கியிருக்கிறது. தீயணைப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு கவசங்களுடனும், பொக்லைன் எந்திரத்தை வரவழைத்தும் அதன் உதவியுடன் நள்ளிரவு முதல் காலை 9 மணி வரை மீட்புப் பணியில் ஈடுபட்டனர்; உயிர் பிழைப்பதற்காக தொழிற்சாலையின் உயரமான சுவரின் மீது ஏறியிருந்த ரவியை மீட்டனர்.

ranipet-leather-waste-disaster-14தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கழிவுநீரில் மூழ்கியதாலும், தொடர்ந்து துர்நாற்றம் வீசியதாலும் அவர்களின் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு 10 பேரின் உடல்களையும் ஒவ்வொன்றாக மீட்டனர். உடல்கள் அனைத்தும் சகதியில் சிக்கியதால் தோல்கழிவுகள் ஒட்டியபடி கருப்பு நிறத்தில் காணப்பட்டன.

ranipet-leather-waste-disaster-10 இந்த கழிவுச் சுனாமி எங்கிருந்து வந்தது?

பச்சைத் தோலை பதப்படுத்தப்பட்ட தோலாக (வெட்புளூ -wet blue) மாற்றும் தோல் தொழிற்சாலைகள்  இராணிப்பேட்டை – முத்துக்கடைக்கு கிழக்கில் பெருமளவில் இயங்குகின்றன. பதப்படுத்தப்பட்ட தோலை அழகுபடுத்தப்பட்ட தோலாக (finished leather – ஃபினிஷ்ட் லெதராக) மாற்றும் தொழிற்சாலைகள் இராணிப்பேட்டை சிப்காட் தொழில் வளாகத்தில் பெருமளவில் உள்ளன. அழகுபடுத்தப்பட்ட தோலை பொருட்களாக (காலணி, செருப்பு உள்ளிட்ட) மாற்றும் சில தொழிற்சாலைகளும் ராணிப்பேட்டையில் இயங்குகின்றன.

இவற்றில் முதல் இரண்டு வகை ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை. பதப்படுத்தும் தொழிற்சாலைகளிலிருந்து அதிக அளவு உப்பு (சோடியம் குளோரைடு), சுண்ணாம்பு, அமிலம் மற்றும் குரோமியம் உள்ளிட்ட இரசாயனங்கள் கலந்த கழிவுநீர் வெளியாகிறது. அழகுபடுத்தும் தொழிற்சாலைகளிலிருந்து பலவகையான உப்புகள், சாயங்கள், நிறமித் துகள்கள், கொழுப்பு இரசாயனங்கள் கலந்த கழிவுநீர் வெளியாகிறது.

1980-களிலும், 1990-களிலும் இந்த கழிவுநீரை பெயரளவுக்குக் கூடச் சுத்திகரிக்காமல் வெளியேற்றி நிலத்தையும், நீரையும் நஞ்சாக்கின இந்தத் தொழிற்சாலைகள். விவசாயம் பாழ்படுவது, கால்நடைகள் உயிரிழப்பு என அழிவுகளைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுக்கவே மத்திய-மாநில அரசுகளின் நிதி உதவி மற்றும் தோல் தொழிற்சாலை முதலாளிகளின் நிதியைக் கொண்டு ராணிப்பேட்டே சிட்கோ தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனம் (RANIPET SIDCO FINISHED LEATHER EFFULENT TREATMENT COMPANY LTD) டிசம்பர் 6, 1990-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் சுத்திகரிப்பு ஆலை தனியாரின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.

கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையின் முகப்பு
கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையின் முகப்பு

சுற்று வட்டாரத்தில் செயல்படும் பயனியர் லெதர், ஆன்ட்லர் லெதர்ஸ், வசந்த் லெதர்ஸ், ஆர்.கே.லெதர்ஸ், ஐ.வி.லெதர்ஸ், அலெக்கியா லெதர்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தோல் அழகுபடுத்தும் ஆலைகளின் இரசாயனக் கழிவ நீர் இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் பல நிலைகளில் சுத்திகரிக்கப்படுகிறது; கழிவுகளிலிருந்து நீர் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு, சேறும் சகதியுமான இரசாயனக்கழிவுகள் ஓரிடத்தில் கொட்டப்படுகின்றன; நாளடைவில் காய்ந்த பிறகு அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றன.

கூழ் போன்ற இந்தச் சகதி பல வகையான நச்சு இரசாயனங்கள் கலந்தது. இதை நிலத்தில் புதைத்தால் அவை நிலத்துக்கடியில் பரவி பல கிலோமீட்டர் தூரம் வரை நஞ்சாக்கி விடும். ராணிப்பேட்டை சுத்திகரிப்பு நிலையத்தில் சகதி மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்க 100 அடி நீளம், 100 அடி அகலம் கொண்ட தொட்டிக்கு 15 அடி உயரத்தில் முக்கால் அடி தடிமனில் சுற்றுச்சுவரை எழுப்பியுள்ளார்கள். இதைத்தான் கழிவு நீர்த்தொட்டி என்கிறார்கள்.

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை படுகொலை
சுத்திகரிக்கப்படும் கழிவுகளை சேகரிக்கும் இடம்.

ஏற்கனவே காய்ந்து போன மலை போல குவிந்துள்ள கழிவுகள் அகற்றப்படாததால் இடமின்மை காரணமாக புதிய கழிவுகளைக் கொட்ட ஆறு மாதங்களுக்கு முன்புதான் தென்பகுதியில் ஒரு சுவர் எழுப்பி உள்ளார்கள். அந்தச் சுவர்தான் தற்போது உடைந்து உள்ளிருந்த கழிவுகள் ஒரே நேரத்தில் வெளியேறி சுனாமியைப் போல சீறிப்பாய்ந்து பத்து உயிர்களை பலிவாங்கி உள்ளது.

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை படுகொலை
சேகரிக்கப்படும் கழிவுகள் கொட்டப்படும் இடம்

விபத்தா? கொலையா?

அதிக அளவில் கழிவுகள் தேக்கி வைக்கப்பட்டதால் சுவற்றில் ஏற்கனவே ஆங்காங்கே கசிவுகள் ஏற்பட்டுள்ளதையும் காண முடிந்தது. கழிவுகள் கசியாமல் இருக்க சுவற்றின் உட்புறமாக கருப்பு நிற பாலிதின் ஷீட்டுகள் போடப்பட்டுள்ளன. இந்தக் கசிவுகளைப் பார்த்தாவது எச்சரிக்கை அடைந்திருந்தால் இத்தகைய விபத்தை தடுத்திருக்க முடியும்.

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை படுகொலை
தேக்கி வைக்கப்பட்டிருக்கும் இரசாயனக் கழிவு சேற்றில் ஒரு பகுதி.

சுத்திகரிப்பு ஆலையில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவு நீர்த் தொட்டியின் சுற்றுச் சுவர் மற்றும் அங்கே அப்புறப்படுத்தப்படாமல் குவிந்து கிடக்கும் காய்ந்து போன கழிவுகள் இவற்றை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. எந்தவித பாதுகாப்பும் இன்றி ஒரு நிலையம் எப்படி இயங்குகிறது? தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்ன செய்கிறது.

தொழிற்சாலைக்குள் தேங்கியிருக்கும் இரசாயன கழிவு சகதி
தொழிலாளர்களை ஆலைக்குள்ளேயே தங்க வைத்த ஆர்.கே.லெதர்ஸ் முதலாளி காரணமா?

நடந்தது விபத்தல்ல. தெரிந்தே நடத்தப்பட்ட பச்சைப் படுகொலை. இதற்குக் காரணமானவர்களை கைது செய்வதோடு மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க வேண்டுமானால் குற்றவாளிகள் அனைவரையும் கொலை வழக்கில் கைது தண்டிக்க வேண்டும்.

இங்கே நடந்த உயிர்ப்பலிக்கு யார் காரணம்?

தொழிலாளர்களை ஆலைக்குள்ளேயே தங்க வைத்த ஆர்.கே.லெதர்ஸ் முதலாளி காரணமா?

சுத்திகரிப்பு நிலையத்தை பாதுகாப்பற்ற முறையில் இயக்கி வரும் அதன் மேலாண்மை இயக்குநர் ஆர் அமிர்தகடேசன், இயக்குநர்கள் இரகுநாதன், ஜெயச்சந்திரன், சொக்கலிங்கம் பிள்ளை, சரவண குமார் மற்றும் இரகுபதி ஆகியோர் காரணமா?

சுத்திகரிப்பு நிலையம்
சுத்திகரிப்பு நிலையத்தை பாதுகாப்பற்ற முறையில் இயக்கி வரும் அதன் மேலாண்மை இயக்குநர் ஆர் அமிர்தகடேசன், இயக்குநர்கள் இரகுநாதன், ஜெயச்சந்திரன், சொக்கலிங்கம் பிள்ளை, சரவண குமார் மற்றும் இரகுபதி ஆகியோர் காரணமா?

மிகமோசமாக இயக்கப்படும் சுத்திகரிப்பு நிலையத்தை நடத்துவதற்கு அனுமதி அளித்து வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் காரணமா?

ஆட்சி பொறுப்பில் உள்ள ஊராட்சி, நகராட்சி, ஆர்.டி.ஓ, வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் இவர்களை எல்லாம் வழிநடத்தும் தமிழக அரசும் காரணமா?

இரசாயன கழிவு சகதி
ஆட்சி பொறுப்பில் உள்ள ஊராட்சி, நகராட்சி, ஆர்.டி.ஓ, வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் இவர்களை எல்லாம் வழிநடத்தும் தமிழக அரசும் காரணமா?

அரசு அதிகாரிகளும் அரசு நிர்வாகமும், சுத்திகரிப்பு நிலையத்தை நடத்தும் தனியார் நிர்வாகமுமே முதல் நிலைக் குற்றவாளிகள். தொழிலாளர்கள் தங்குவதற்கு வசிப்பிடத்தை ஏற்படுத்தி தராமல் ஆலைக்குள்ளேயே அவர்களை தங்கவைத்த ஆர்.கே.லெதர்ஸ் முதலாளி இரண்டாம் நிலைக் குற்றவாளி.

ராணிப்பேட்டை துயரம்
கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை கண்காணித்து முறைப்படுத்த வேண்டிய கடமையை வேண்டுமென்றே கடந்த 30 ஆண்டுகளாக புறக்கணித்து வரும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் இப்போது மக்கள் கோபத்துக்கு பயந்து அவசர அவசமாக இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கின்றன.

பலி வாங்கும் மறுகாலனியாக்கம்

ஆலைகள் தொடங்கினால் வேலை வாய்ப்பு பெருகும்; மக்களிடம் காசு புழங்கும்; அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும்; அதுவும் தோல் பொருட்களை செய்து ஐரோப்பியர்களுக்கு ஏற்றுமதி செய்தால் அன்னியச் செலாவணி கிடைக்கும் என்று நம்மை ஆளும் அரசுகளும், மேற்கத்திய உலகுக்கு சேவை செய்யும் தரகு முதலாளிகளும் கூக்குரலிடுகிறார்கள். இப்படிச் சொல்லித்தான் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலைகளையும் இரசாயனத் தொழிற்சாலைகளையும் தொடங்கினார்கள்.

இந்திய பன்னாட்டு தோல் கண்காட்சி
இந்திய வர்த்தக வளர்ச்சி நிறுவனம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் தோல் கண்காட்சி (படம் : நன்றி http://www.indiatradefair.com )

தோல் பதனிடுதல், அழகுபடுத்தல் இவற்றுக்கான ஆலைகள் வெளிப்படுத்தும் இரசாயனக் கழிவுகளுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளில் போராட்டங்கள் வலுக்க, அவற்றை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தன பன்னாட்டு நிறுவனங்கள். பளபளப்பான தோல் பொருட்களை செய்வித்து மேற்கு நாடுகளுக்கு இறக்குமதி செய்து ஆண்டுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வியாபாரம் செய்கின்றன அந்நிறுவனங்கள்.

அவர்களுக்காக நமது மண்ணையும், நீரையும், மக்களின் உயிரையும் பணயம் வைத்து உள்நாட்டில் தொழில் செய்யும் முதலாளிகள் தமது பங்காக கணிசமான லாபத்தை குவித்துக் கொள்கின்றனர். சந்தைப் போட்டியைத் தூண்டி விலைக்குறைப்பு என ஒரு புறமும், உயர்ந்த விலையிலான இரசாயனங்கள், எந்திரங்களை விற்பது என்று மறுபுறமும் அன்னிய நிறுவனங்கள் நமது நாட்டையும் சிறுமுதலாளிகளையும் ஒட்டச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன.

தோல் கண்காட்சி
மேற்கத்திய வசதிக்காக பளபளக்கும் தோல் கண்காட்சி (படம் : நன்றி http://www.indiatradefair.com)

10 தொழிலாளர்களை கொடூரமாக கொன்று குவித்த விபத்து நடந்த இடத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சென்னையில், உயிர்ப்பலி நடந்து 24 மணி நேரத்துக்குள், ஜனவரி 31-ம் தேதி மாலை 6 மணிக்கு 30-வது இந்திய பன்னாட்டு தோல் கண்காட்சியின் தொடக்க விழா நடைபெற்றிருக்கிறது. அதில் ஏற்றுமதி சாதனைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதாவது 30 ஆண்டுகளாக இந்திய மண்ணும், நீரும், மக்களும் சிறுகச் சிறுக கொல்லப்பட்டு வரும் சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது.

 ராணிப்பேட்டையில் வெளியாகும் தொழிற்சாலை கழிவு
ராணிப்பேட்டையில் வெளியாகும் தொழிற்சாலை கழிவு (படம் : நன்றி http://www.livescience.com/4226-world-10-polluted-places.html )

இந்தியாவின் தோல் துறையின் முக்கியமான உற்பத்தி மையமாக வேலூர் மாவட்டம் உள்ளது. தோல் தொழிற்சாலைகள் கக்கும் கழிவுகளால் வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் சுற்று வட்டாரப் பகுதிகளில் நீரும் நிலமும் கெட்டுப் போனதால் வேளாண்மை அற்றுப் போனது. நிலத்தடி நீரைக் குடிக்கும் மக்கள் மட்டுமல்ல ஆடு மாடுகள்கூட நோயினால் அவதியுறுகின்றன. காற்றும் நஞ்சாகிப் போனதால் நுரையீரல்களெல்லாம் நடுங்குகின்றன.

நூற்றுக்கணக்கான ஆலைகள் குவிந்து இயங்கும் இராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதி ஏரிகளின் நீர் நிலைகளில் முற்கால மன்னர்களின் மனைவிமார்கள் நீராடியது அந்தக் காலம். உலகின் ஆக மோசமான மாசடைந்த நகரங்களில் 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது இந்தக் காலம்.

இரசாயனக் கழிவுகளை வெளியேற்றும் ஆலைகள் குவிந்துள்ள ராணிப்பேட்டையின் பகுதிகளில் காற்றையே வடிகட்டித்தான் சுவாசிக்க வேண்டும். வடிகட்டிய காற்றுகூட நுரையீரலைத் துளைத்துவிடும் என்பதால் எதிர்காலத்தில் இப்போது குடிநீருக்கு கொடுப்பது போல காற்றைக்கூட காசு கொடுத்துதான் வாங்க வேண்டி வரும். “காற்று வேண்டுமா காசை எடு; இல்லையேல் ஊரைவிட்டே ஓடு!” என்பதுதான் எதிர்காலமாக இருக்கும். எங்கே ஓடுவது?

இது போன்று விவசாயம் அழிக்கப்பட்டு வாழ்க்கை பறிக்கப்பட்ட மேற்கு வங்கம் மற்றும் பிற வடமாநில கிராமங்களிலிருந்து சோற்றுக்காக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சாலைகள் இயங்கும் நகரங்களை நோக்கி பஞ்சம் பிழைக்க ஓடுகின்றனர். எந்தவித பணிப்பாதுகாப்பும் இன்றி, கொலைக்களங்களாக இயங்கும் தொழில் மையங்களில் தொழிலாளர்கள் பலி கொடுக்கப்படும் சம்பவங்களின் தொடர்ச்சிதான் ராணிப்பேட்டையில் இப்போது நடந்திருக்கும் கொடூர சம்பவம்.

நெஞ்சை உருக்கும் இத்துயரச் சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும், தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் 30.01.2015 சனிக்கிழமை ராணிப்பேட்டை சிப்காட் பேருந்து நிலையத்தில் சாலைமறியல் செய்தனர். சுமார் 150 பேர் கைதாகி பிறகு மாலையில் விடுவிக்கப்பட்டனர். மாண்டு போனவர்கள் வடஇந்தியர்கள்,  இஸ்லாமியர்கள் என்பதால் பிற கட்சிகள் இந்த உயிர்க்கொலைகளை அலட்சியப்படுத்துகின்றனரா?

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை மூட உத்தரவிட்டிருக்கிறது. அதில் இணைக்கப்பட்டிருந்த 79 உறுப்பினர் ஆலைகளையும் மூடியிருக்கிறது. கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை கண்காணித்து முறைப்படுத்த வேண்டிய கடமையை வேண்டுமென்றே கடந்த 30 ஆண்டுகளாக புறக்கணித்து வரும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் இப்போது மக்கள் கோபத்துக்கு பயந்து அவசர அவசமாக இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கின்றன.

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை படுகொலை
சுனாமியை நினைவுபடுத்தும் வெளியேறிய கழிவின் ஒரு பகுதி.

தமது கடமையை புறக்கணித்து, மக்களின் வாழ்வாதாரங்கள் பறிபோவதற்கு துணை நிற்கும் தமிழக, மேற்கு வங்க மாநில அரசுகள் இறந்து போன தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சில லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளன. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்கும் நிறுவனங்களின் சங்கமும் சில லட்சங்களை அறிவித்துள்ளன. அரசும், முதலாளிகளும் தோல் கண்காட்சிக்கு மட்டும் செலவிடும் தொகையில் ஒரு துளிதான் இந்த நிவாரணத் தொகை.

மக்கள் நலனை பாதுகாக்காத, கார்ப்பரேட் கொள்ளைக்கு ஆதரவாக செயல்படும் இந்த அரசு உறுப்புகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள், எதிர்த்து வாதிட பல லட்சம் ரூபாய் ஊதியத்தில் முதலாளிகளின் வழக்கறிஞர்கள், ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை சில தீர்ப்புகள், அவற்றை அமல்படுத்துவதற்காக பல நூறு கோடி ரூபாய் அரசு மானியம், வெளிநாட்டு சுத்திகரிப்பு நுட்ப நிறுவனங்களின் சுரண்டல், சுத்திகரிப்பு முறையாக நடைபெறுகிறதா என்று கட்டுப்படுத்த வேண்டிய அரசு உறுப்புகளின் ஊழல் என்று அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், நீதிமன்றங்கள், முதலாளிகள் என்று இந்த ஒட்டுமொத்த கட்டமைப்புமே தொடரும் இந்த படுநாசத்தை இணைந்து நடத்துகின்றனர்.

தோல் துறை முதலாளிகளும், அவர்கள் சேவை செய்யும் மேற்கத்திய எஜமானர்களும், குளிரூட்டப்பட்ட வர்த்தக மையத்தில் வணிக பேரங்களை நடத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அவர்களது லாபத்துக்காக கொடூரமாக கொல்லப்பட்ட தொழிலாளர்களின் உடல்கள், தகப்பனையும் இரண்டு மகன்களையும் ஒரே நேரத்தில் இழந்த குடும்பத்தை சென்றடையும்; இரண்டு சகோதரர்களையும் இழந்த குடும்பத்தை சென்றடையும். கொல்லப்பட்டவர்களுக்கு வாய்க்கரிசியாக முதலாளிகளும் அரசும் போட்ட சில லட்சம் ரூபாய்களும் விரைவில் அந்தக் குடும்பங்களை போய்ச் சேர்ந்து விடலாம்.

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை படுகொலை
கழிவால் மூழ்கடிக்கப்பட்ட ஆர்.கே லெதர்ஸ் ஆலையும் சாலையும்

ஆனால், நம் நாட்டையும், மக்களையும் மேற்கத்திய நிறுவனங்களுக்கு அடகு வைத்து தரகு வேலை பார்க்கும் இந்த அரசமைப்புக்கு எதிராக மக்கள் பெருமளவில் வீதியில் இறங்கிப் போராடாத வரை, உயிரின் விலை என்னவென்று குற்றவாளிகளுக்கு உணர்த்தாத வரை, பேரழிவுகளை தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரத்தை மக்கள் தாமே கையில் எடுக்காத வரை இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்வதைத் தடுக்க முடியாது.

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை படுகொலை
சாலைகளை மூழ்கடித்து நிற்கும் கழிவுகள்

பேஸ்புக்கில் புகைப்படத்தொகுப்பு

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
வேலூர்

Ranipet-Murder-2இது தொடர்பான செய்திகள்

 

மணல் கொள்ளை : ஆற்றில் இறங்கு ! அதிகாரத்தைக் கையிலெடு !!

6

ணற்கொள்ளை தோற்றுவிக்கும் பேரழிவு என்ன என்று தெரிந்த போதிலும், குடிநீரின்றி விவசாயமின்றி நாடே பாலைவனமாகிவிடும் என்ற அபாய எச்சரிக்கை  கண் முன்னே உண்மையாகி வந்தபோதிலும், எதைப்பற்றியும் அக்கறையோ கவலையோ இல்லாமல், இந்தக் கொள்ளை தொடர்கிறதே ஏன்?

கொள்ளையடிப்பதற்காகவே பதவிக்கு வருகின்ற அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட ஓட்டுக்கட்சி தலைவர்கள், ஆறுமுகசாமி, படிக்காசு, கே.சி.பி., பி.ஆர்.பி., வைகுந்தராசன் போன்ற கிரிமினல்கள், காசுக்காக எதையும் விற்கத் தயாராக இருக்கும் ஐ.ஏ.எஸ். முதல் வி.ஏ.ஓ. வரையிலான அதிகாரிகள், மணல் கொள்ளையர்களுக்கு அடியாள் வேலை பார்க்கும் போலீசு, பெட்டி வாங்கிக்கொண்டு தீர்ப்பு எழுதும் நீதிபதிகள்  போன்ற நேர்மையற்ற பலரின் நடவடிக்கைகள்தான் மணற்கொள்ளை தொடர்வதற்குக் காரணம் என்று பலர் எண்ணுகிறார்கள்.

இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், தண்ணீரை விற்பதும், மணலை விற்பதும், மலைகளை விற்பதும் கண்ணில் பட்ட இயற்கை வளங்களையெல்லாம் வெட்டி விற்பதும் முன்னெந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் நடப்பது ஏன்? ஏனென்றால், இந்தக் கொள்ளையைத்தான் வளர்ச்சிக்கான கொள்கை என்று மத்திய, மாநில அரசுகள் அமல் படுத்துகின்றன. எந்த விதமான ஆக்கபூர்வமான உற்பத்தி நடவடிக்கையும் இல்லாமல், இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து விற்பதே ஒரு தொழிலாகவும், அதுவே முன்னேற்றத்துக்கு வழியாகவும் அரசால் சித்தரிக்கப்படுகிறது.

மணல் கொள்ளையை எதிர்த்து கொல்லப்பட்டவர்கள்
மணற்கொள்ளையை எதிர்த்துப் போராடியதற்காக வெட்டிக் கொல்லப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் – மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கார்த்திக் மற்றும் ராஜேஷ். நம்பியாற்றில் நடந்து வரும் மணற்கொள்ளையை அம்பலப்படுத்திப் போராடியதால் கொல்லப்பட்ட திசையன்விளையைச் சேர்ந்த சதீஷ்குமார் (கோப்புப் படங்கள்)

தண்ணீரைப் பாட்டிலில் அடைத்து விற்றால் அது தொழில் வளர்ச்சி, ஏரி குளங்களை அழித்துப் பல மாடி கட்டிடங்கள் கட்டினால் அது ரியல் எஸ்டேட் வளர்ச்சி, இரும்பையும் பாக்சைட்டையும் ஏற்றுமதி செய்தால் அது அந்நியச் செலாவணி ஈட்டும் நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களை விற்றால் அது பொருளாதார முன்னேற்றம் – இப்படிப் பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் டாடா, அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகளுக்கு காடுகளையும் மலைகளையும் சொந்தமாக்கி விட்டு, அவற்றை வெட்டும் “வேலைவாய்ப்பு” மக்களுக்குக் கிடைப்பதைக் காட்டி இதுதான் நாட்டின் வளர்ச்சி என்கின்றன மத்திய, மாநில அரசுகள்.

இந்த அநீதியை விவசாயிகளும் மீனவர்களும் பழங்குடி மக்களும் நாடு முழுவதும் எதிர்ப்பதால், மக்களைக் கட்டாயமாக அவர்களுடைய நிலங்களிலிருந்து வெளியேற்றுவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது மோடி அரசு. எனவே, நாட்டின் முன்னேற்றத்துக்காக என்ற பெயரில் ஆளும் வர்க்கம் வகுத்திருக்கின்ற இந்தக் கொள்கைதான் கொள்ளையர்களை உருவாக்குகிறது. வளர்ச்சி என்ற பெயரில் அரசு முன்தள்ளும் இந்தக் கொள்கையைத் தடுத்து நிறுத்தாதவரை இத்தகைய கொள்ளையர்கள் உருவாவதைத் தடுக்கவியலாது என்பதைப் புரிந்து கொள்ள வேண் டும்.

மணற்கொள்ளையார்கள் கொன்ற கனகராஜ்
மணல் கடத்தப்படுவதைத் தடுக்க முயன்றபொழுது, மணற் கொள்ளையர்களால் டிராக்டரை ஏற்றிக் கொல்லப்பட்ட வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த போலீசு கான்ஸ்டபிள் கனகராஜ் (கோப்புப் படம்)

இயற்கை வளக்கொள்ளை என்பது அரசே நடத்தும் கொள்ளை. நிலக்கரி, இரும்பு, பாக்சைட் சுரங்கங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எழுதிக் கொடுத்து விட்டு, மத்திய-மாநில அமைச்சர்கள் இலஞ்சம் வாங்கிக் கொள்கின்றனர். தமிழகத்தின் மணற்கொள்ளையோ நேரடியாக அரசாங்கத்தாலும், அதிகார வர்க்கத்தாலும் நடத்தப்படுகிறது.
மாநில முதல்வர் தான் இந்த மணல் மாஃபியாவின் தலைவர். அதற்கு கீழே உள்ளவர்கள் ஏஜென்டுகள். அமைச்சர், எம்.எல்.ஏ., எதிர்க்கட்சிகள், கனிமவளத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசு, ஊடகங்கள், சாதிக்கட்சித் தலைவர்கள், உள்ளூர் கையாட்படையினர் என இந்தக் கொள்ளைப் பணம் எல்லா மட்டங்களிலும் பாந்து பரவுகிறது. பணம் வாங்க மறுப்பவர்கள், மணற்கொள்ளையை எதிர்ப்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள்.

ஓட்டுக்கட்சிகளைப் பொருத்தவரை, எதைச் சொல்லியாவது ஓட்டு வாங்கி பதவியில் அமர்ந்து விட்டால், 5 ஆண்டுகளுக்கு இந்த நாடே தங்களுக்குச் சொந்தம் என்றும், எந்த பொதுச்சொத்தையும் தமது விருப்பப்படி விற்க உரிமை உண்டென்றும் அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சட்டவிரோதமாக இதைச் செய்கிறார்கள். அல்லது இதற்குத் தோதான சட்டத்திருத்தங்களை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் செய்து கொடுக்கிறார்கள்

அவர்கள் தாங்களே இயற்றிய சட்டங்களை மீறுகிறார்கள். 35 அடி தோண்டி மணலை அள்ளிவிட்டு, 3 அடிதான் தோண்டியிருக்கிறோம் என்று சாதிக்கிறார்கள். இதனைக் கேள்விக்குள்ளாக்கினால், இது மூன்றடியா முப்பதடியா என்று முடிவு செய்யும் அதிகாரம் மக்களுக்கு இல்லை, அதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள்தான் முடிவு செய்ய முடியும் என்று கூறி போலீசை வைத்து மிரட்டுகிறார்கள். சம்மந்தப்பட்ட அதிகாரிகளோ, எந்த தவறும் நடக்கவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்கிறார்கள்.

பொதுச்சொத்தை திருடுவது மட்டுமல்ல, அதைத் தட்டிக் கேட்கும் மக்களிடம் “அப்படித்தான் செய்வோம், உன்னால் என்ன செய்ய முடியும்?” என்று இவர்கள் சவால் விடுகிறார்கள். கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் அனைத்து விவகாரங்களிலும் நடப்பது இதுதான். இவர்களிடமே மனுக்கொடுத்து மணற்கொள்ளையைத் தடுக்கவியலுமா? ஒருக்காலும் முடியாது.

“பொதுச்சொத்துக்கு நீ உரிமையாளன் அல்ல, மக்களின் சொத்தை விற்கும் அதிகாரம் உனக்கு கிடையாது. இது மக்கள் சொத்து. சட்டம் சோல்கின்றபடியே கூட அரசும் அரசாங்கமும் இதன் காப்பாளர்களேயன்றி உரிமையாளர்கள் அல்ல. உரிமையாளர்கள் மக்கள்தான்” என்று அரசாங்கம் மற்றும் அதிகார வர்க்கத்தின் அதிகாரத்தை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

நமது நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்துச் சென்ற பிரிட்டிஷ்காரனிடம் கொள்ளையை நிறுத்துமாறு நாம் மனு கொடுக்கவில்லை. அவனை வெளியேற்றவேண்டும் என்று விடுதலைப் போராட்டம் நடத்தினோம். இப்போது சுதந்திர நாடு என்கிறார்கள். ஜனநாயகம் என்கிறார்கள். அரசு ஊழியர்கள், அதிகாரிகள் எனப்படுவோர் மக்கள் ஊழியர்கள் என்கிறார்கள். நடப்பது என்ன? மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் கொடுத்து வைக்கப்பட்டுள்ள வேலைக்காரர்களான இவர்கள், மக்களை ஏறி மிதிக்கிறார்கள். அதிகாரம் செய்கிறார்கள். மக்கள் சொத்தைக் கொள்ளையடிக்கிறார்கள்.

வேலூர் பாலாறு மணல் கொள்ளை எதிர்ப்பு
களத்தூர் கிராமப் பகுதியில் ஓடும் பாலாற்றில் நடந்து வரும் மணற்கொள்ளையைத் தடுக்கக் கோரி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஆட்சியரின் காரை முற்றுகையிட்டு முழக்கமிடும் பொதுமக்கள் (கோப்புப் படம்)

பொதுச்சொத்துகளையும் பாதுகாப்பவர்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் அமைச்சர்களும் அதிகாரிகளும்தான் அவற்றை விற்பதில் முன் நிற்கிறார்கள். கட்டிய மனைவியையே விபச்சாரத்தில் ஈடுபடச் சொல்லி கட்டாயப்படுத்தும் கணவனின் அதிகாரத்துக்கு மனைவி கட்டுப்பட்டு நடக்க முடியுமா? நாட்டின் வளங்களைக் கூட்டிக்கொடுக்கும் இவர்களின் ஆணைக்கு மக்கள் அடிபணிய முடியுமா?

மணற்கொள்ளைக்கு எதிராகப் போராடும் மக்கள் இவர்களிடம் மன்றாடுவதை தவிர வேறு வழியில்லை என்று எண்ணுகிறார்கள். எல்லோரும் திருடர்கள் என்பது உண்மைதான் என்றாலும், தப்பித்தவறி யாராவது ஒரு நேர்மையான அதிகாரி இருந்து மணல் கொள்ளையைத் தடுத்துவிட மாட்டாரா என்று ஏங்குகிறார்கள்.

அப்படி அரிதினும் அரிதாக மிச்சமிருக்கும் ஒரு சிலர்தான் லாரி ஏற்றிக் கொல்லப்படுகிறார்கள். தாசில்தார் முதல் போலீசு ஏட்டு வரை பலர் மணற்கொள்ளையர்களால் கொல்லப்படவில்லையா? நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்ற சகாயம் கிரானைட் கொள்ளையை விசாரிக்கிறார். அவருடைய அறையிலேயே உளவுக்கருவியைப் பொருத்தி வேவு பார்க்கிறது அரசு. சகாயத்துக்கு அருகிலேயே நிற்கும் உளவுத்துறை அதிகாரிகளும், கனிமவளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் சகாயத்திடம் புகார் கொடுப்பவர்கள் பெயரைக் குறித்துக் கொண்டு பி.ஆர்.பி.க்கும் அமைச்சர்களுக்கும் உளவு சோல்கிறார்கள்.

மலைக்குன்றுகளைக் காணவில்லை, கண்மாய்கள், குளங்கள், விளைநிலங்களைக் காணவில்லை. இவற்றை காணாமல் போகச் செய்ததில் கலெக்டர் முதல் தலையாரி வரை, முதல்வர் முதல் ஊராட்சி தலைவர் வரை அனைவருக்கும் பங்கு உண்டு. சகாயத்தின் அறிக்கை இவர்களை என்ன செய்து விடும்? தாதுமணல் கொள்ளை குறித்த ககன்தீப் சிங் பேடி அறிக்கை என்ன ஆனது? மொத்த அரசுமே ஒரு கிரிமினல் கொள்ளைக் கூட்டமாக இருக்கும்போது சகாயத்தின் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்போவது யார்? நீதிமன்றமா?

முதலில் கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் கொள்ளை அனைத்தையும் விசாரிக்குமாறு கூறிய சென்னை உயர் நீதிமன்றம், கிரானைட் விவகாரத்தை மட்டும் விசாரித்தால் போதும் என்று மற்றவற்றை மர்மமான முறையில் கைவிட்டு விட்டது. அரசாங்கமோ சகாயத்துக்கு அலுவலகம் ஒதுக்கவே மறுக்கிறது. நீதிமன்றத்தின் அதிகாரத்தை எள்ளி நகையாடுகிறது. பெரும் சவடால் அடித்த நீதிமன்றமோ அரசின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில் பின்வாங்குகிறது.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தலைமையில் கார்மாங்குடி மணல் குவாரிக்கு எதிராகப் போராடிய மக்களிடம், “போராட்டத்தைக் கைவிடுங்கள், நீதிமன்றத்துக்கு செல்லுங்கள்” என்று போலீசு – வருவாய்த்துறை அதிகாரிகள் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்கள். நீதிமன்றத்தின் மீது மணல் கொள்ளையர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. பொக்லைன் வைத்து மணல் அள்ளுவதை அனுமதிக்கும் தீர்ப்புகளை உயர்நீதி மன்றமும், உச்ச நீதிமன்றமும் வழங்கியுள்ளன. தடையில்லாமல் இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் நோக்கத்துக்காகவே பசுமைத் தீர்ப்பாயம் என்ற சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்துக்குப் போனால் என்ன நடக்கும் என்பது ம.உ.பா.மைய வழக்குரைஞர்களுக்கு தெரியுமாதலால், அதிகாரிகள் பின்னிய சதிவலையில் அவர்கள் சிக்கவில்லை.

விவசாயி ராஜா
கிரானைட் குவாரிக்கு நிலத்தைத் தர மறுத்ததால், கிரானைட் கொள்ளையர்களால் தனது கை வெட்டப்பட்டதை ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திடம் சாட்சியமாக அளிக்கும் இ.மலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜா.

நீதித்துறை, கட்சிகள், அதிகாரிகள் உள்ளிட்ட இந்த மொத்த அரசமைப்பும் ஆட்சி செய்யும் அருகதையை இழந்து விட்டது. இந்த அரசமைப்பு தோற்றுவிட்டது. இது ஜனநாயகம் என்பது பொய். இது ஊடகங்களும் அறிவுத்துறையினரும் திட்டமிட்டே உருவாக்கும் ஒரு மாயை. இந்த நாட்டின் விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இந்த அரசமைப்பு எதையும் வழங்கவில்லை என்பது மட்டுமல்ல, காடுகள் மீதும் கடலின் மீதும் நீர்நிலைகளின் மீதும் மேய்ச்சல் நிலங்களின் மீதும் அவர்களுக்கு இருந்த பாரம்பரிய உரிமையையும் சூறையாடுகிறது, திருடுகிறது. எதிர்த்துக் கேட்பவர்களைக் கொன்று போடுகிறது. இதுதான் மன்மோகன் சிங்கும், மோடியும், ஜெயலலிதாவும் முன்வைக்கின்ற வளர்ச்சிப்பாதை. மக்கள் சொத்தைக் கொள்ளையிடுவதென்பது இதன் வழிமுறை.

இப்படிப்பட்ட ஒரு அரசமைப்பை ஜனநாயகம் என்று அழைப்பது அயோக்கியத்தனமில்லையா? இந்த அமைப்பின் அதிகாரத்தின் கீழ் மக்கள் தமக்கான நீதியைப் பெற முடியும் என்று நம்புவது மடமையில்லையா?

மக்கள் தமது வாழ்வாதாரத்தையும், இயற்கை வளங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றாலே, தங்களது சொந்த அதிகாரத்தை நிறுவிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆற்று மணலாகட்டும் தாது மணலாகட்டும் அவை மக்களின் உடைமைகள். ஆறுகள், மலைகள், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளே மேற்கொள்வது ஒன்றுதான் இந்தப் பேரழிவைப் தடுப்பதற்கான ஒரே வழி. அந்தந்த வட்டாரத்து விவசாயிகள் தமக்கான பேராயம் ஒன்றை நிறுவிக்கொண்டு தமது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும்.

மணல் எடுக்கலாம் என்று பொதுப்பணித்துறை ஒரு உத்தரவு பிறப்பித்தால், அதனை ரத்து செய்யுமாறு மணற்கொள்ளையர்களின் கூட்டாளிகளான அதிகாரிகளிடம் மன்றாடுவது தவறு. மனுக்கொடுப்பதும், உண்ணாவிரதம் இருப்பதும் பயனற்ற நடவடிக்கைகள். அவர்களுடைய அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

மணல் குவாரிக்குத் தடை விதித்து விவசாயிகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தங்களது உத்தரவை அமல்படுத்தவும், மணல் மாஃபியாவுக்கு அவர்களுடைய மொழியிலேயே பதிலடி கொடுக்கவும் பாதுகாப்புக் குழுக்களை கிராமம் தோறும் கட்டவேண்டும். தமிழகம் முழுவதும் மணற்கொள்ளைக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் தமக்குள் ஓர் ஒருங்கிணைவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது நடக்க முடியாத கனவல்ல. மக்கள் போராட்டத்தின் வலிமையால் சுமார் ஒரு மாத காலமாக கார்மாங்குடி மணல் குவாரி மூடப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் ஒவ்வொரு மணல் குவாரியையும் நாம் மூட முடியும். இந்தப் போராட்ட முறை எந்த அளவுக்கு எல்லா இடங்களுக்கும் பரவுகிறதோ அந்த அளவுக்கு வெற்றிகளையும் ஈட்ட முடியும்.

– சூரியன்
__________________________________
புதிய ஜனநாயகம், ஜனவரி 2015
__________________________________

ஆப்பு-ரெய்சல் !

3

”மச்சி அப்ரெய்சல் ரேட்டிங் (appraisal rating) பலம்ம்மா விழுந்திருக்கும் போல இருக்கே?”

”டேய்.. வெந்த புண்ல வெரலைப் பாய்ச்சாதடா. சாவடிச்சிட்டானுக”

“சும்மா பீலா விடாதடா.. நீ உன்னோட ப்ராஜக்ட் மேனேஜருக்கு செமயா சொம்படிப்பியே.. போன வருசம் அவுட்ஸ்டேண்டிங் (outstanding) தானே?”

பெர்பார்மன்ஸ் அப்ரைசல்
“ஆல் த பெஸ்ட்” “எனக்கு 40% ஹைக் கிடைக்கும்னு நினைக்கிறேன்” “ஒனக்கு நாங்க கொடுக்கணும்னு நெனைச்ச 1% கூட்டித் தர இந்த வருசம் பணம் இல்ல. ஆனாலும், நல்லா வேல செய்றவங்கள ஊக்குவிக்கணும் என்கிற நிறுவன கொள்கைப்படி, ஒரு நாளைக்கு உனக்கு ஒரு நாளைக்கு இன்னும் ரெண்டு இலவச பெப்சி தர சண்ட போட்டு அனுமதி வாங்கியிருக்கேன் ” “அதுக்கப்பறம், அவரு ஒரு போர்ஷ் (கார்) தர்றதா சொன்னாரு, ஆனா அதோட நிறம் எனக்கு பிடிக்கல. வேண்டாம்னுட்டேன்”

”எவன்டா சொன்னான்? வருசா வருசம் அப்ரெய்சல் மீட்டிங் போகும் போதும் எப்டியாவது இம்ப்ரெஸ் (impress) பண்ணிடலாம்னு பார்ப்பேன்.. ஒவ்வொரு வருசமும் ‘ஆப்பு’ரெய்சல் பண்ணி அனுப்பிடறானுங்க.. பேசாம ஊர்லயே இருந்து அப்பாவோட சேர்ந்து பெயிண்டிங் காண்ட்ராக்ட் எடுத்து செய்திருக்கலாம்..”

“என்னாச்சி மச்சி.. இந்த வருசம் ரெண்டு பெஸ்ட் பெர்பார்மர் அவார்டு (best performer award) கூட வாங்கியிருந்தியேடா?”

”ஆமாமா.. ரெண்டையும் நீள நீளமா வெட்டி நாக்கு வழிக்க வச்சிக்கலாம்.. வேணா சொல்லு உனக்கும் தர்றேன்”

“சரி மீட்டிங் எப்டி போச்சின்னு சொல்லு.. எங்களுக்காவது பயன்படும். அடுத்து எங்களைத் தான் கூப்டுவானுங்க.. ஆமா அவனுங்க அப்ரெய்சல் பன்றதுக்கு முன்னாடி நாமளே செல்ப் அப்ரெய்சல் (Self Appraisal – தனது பணித்திறன் குறித்து ஒவ்வொரு ஊழியரும் சுயமதிப்பீடு செய்து நிர்வாகத்திற்கு அனுப்புவது) செய்யணுமே.. அதில் நீயே உனக்கு கொடுத்த ரேட்டிங் எவ்வளவு?”

பெர்பார்மன்ஸ் அப்ரைசல்
பெர்பார்மன்ஸ் அப்ரைசல் – நோக்கமும் விளைவும்

”மச்சி.. எல்லாத்துக்கும் என்னோட செல்ப் அப்ரெய்சல் ரேட்டிங்கா நான் அவுட்ஸ்டாண்டிங் தான் போட்டிருந்தேன்.. ங்கொய்யால எல்லாத்தையும் நீட் இம்ப்ரூவ்மெண்டா (need improvement) மாத்திட்டானுங்கடா”

”எப்டி மச்சி?”

”டிரெய்னிங் அண்ட் சர்டிபிகேசன் காலம்லே (training and certification column) 5 ஸ்டார் போட்டுருந்தேன். நான் தான் RHCE சர்டிபிகேசன் பண்ணிருந்தேன்ல?”

”ஆமா?”

“அவனுங்க ப்ளேட்டை அப்டியே தலைகீழா போட்டுட்டானுங்க. நீ சர்டிபிகேசன் பண்ணிருக்கே… ஆனா, அதை வச்சி டீம்ல இருக்கிற மத்தவங்களுக்கு ட்ரெய்னிங் குடுத்து அவங்களை டெவலப் (develop) பண்ணலையேன்னு கேட்டு மடக்கிட்டானுங்க”

“ம்..ம்ம்”

”அதே மாதிரி டாகுமெண்டேசன் காலம்ல (Documentation column – பணி விவரங்களை ஆவணப்படுத்துதல்) 5 ஸ்டார் போட்ருந்தேன்.. அவன், ஹார்ட் காப்பி டாக்குமெண்டேசன் (hard copy documentation) மட்டும் போதாது.. உன்னோட மெயில் பாக்ஸ் பேக்கப் (mail box backup) எடுக்கலை. அதுக்காக 3 ஸ்டார் தான் தருவேன்னு சொல்லிட்டான்”

“ம்..ம்ம்”

“என்னோட கம்யூனிகேசன் பத்தி எல்லாருக்கும் தெரியும்ல? இவன் என்னடான்னா நான் அனுப்பற ஈமெயில் ரெண்டுல எஸ்.எம்.எஸ் லேங்குவேஜ் (s.m.s language) இருந்ததுன்னு சொல்லி அதையும் குறைச்சிட்டான்.. ங்கொய்யால… இவனுக்கு இங்கிலீசே தெரியாது மச்சி.. நான் தான் இவன் க்ளையண்டுக்கு அனுப்பற மெயில் எல்லாத்தையும் அடிச்சிக் குடுத்தேன்.. எனக்கே ஆப்பு வச்சிட்டான்டா”

“அப்புறம்?”

”வேற என்ன.. இதே மாதிரி எல்லாத்தையும் ப்யூஸ் புடுங்கி விட்டுட்டானுங்கடா..”

”டேய்.. நீ அந்தாளுக்கு ஹட்ச் டாக் (Hutch Dog) மாதிரி ஆச்சேடா.. அந்தாளு டீ குடிக்கப் போனா நீ தான் க்ளாஸ் தூக்கப் போவே.. அந்தாளு தம்மடிக்கப் போனா நீ தான் பத்த வச்சி குடுப்பே.. அந்தாளு கக்கூஸ்ல என்னைக்கு எத்தினி பாம் போடுவான்ங்கற வரைக்கும் உனக்கு அத்துப்படியாச்சேடா.. உனக்கே அல்வா குடுத்துட்டானாடா?”

”மச்சி ப்ரெண்டுனு கூட பாக்காம அசிங்கசிங்கமா திட்டிறப் போறேன். நான் வேணும்னா கூட போனேன்.. அவந்தாண்டா எங்க போனாலும் கூட்டிட்டே சுத்துனான்.. இவனுங்களுக்கு நாம வேலையும் செய்யணும்.. எடுப்பு மாதிரி இவனுங்க போற வர்ற எடத்துக்கும் போகணும்.. கஸ்டமர்கிட்டே இவனுக்கு டெக்னிக்கலா பேச தெரியாதுன்றது எனக்கு மட்டுந்தான் தெரியும் மச்சி”

”அப்ப போன வருசமெல்லாம் அப்ரெய்சல் ரேட்டிங்கை லாரில வாங்கி எறக்குன மாதிரி கெத்தா சுத்திட்டு இருந்தே?”

கூட்டு பேரம்
நிறுவனத்தோடு சமமாக பேசுவதற்கு கூட்டு பேரம்தான் ஒரே வழி

”எல்லா வருசமும் ஒக்கார்ற எடத்துக்கு ஆப்பு தான்டா.. நானும் இந்த வருசம் ஒழுங்கா நடக்கும் அடுத்த வருசம் ஒழுங்கா நடக்கும்னு பாத்துப் பாத்து ஓஞ்சி போய்ட்டன்டா. மொதோ வருசம் என்னா சொன்னானுங்க.. கம்பெனி நஷடத்துல போகுதுன்னானுங்க. அடுத்த வருசம் லாபம் தான், ஆனா புதுசா ஒரு கம்பெனியை வாங்கி இன்வெஸ்ட் பண்ணிருக்கோம், அதனால இந்த வருசம் சம்பளத்தை கூட்ட முடியாதுன்னு சொன்னானுங்க. அதுக்கடுத்த வருசம் புதுசா வாங்கின கம்பெனியால நஷடம்னு சொன்னானுங்க. போன வருசம் நஷடத்தை சரி பண்ணிட்டோம், புதுசா இன்வெஸ்ட் பண்ணப் போறோம்னு சொன்னானுங்க. இந்த வருசம் புது இன்வெஸ்ட்மெண்ட் வொர்க் அவுட் ஆவலைன்னு பழைய கதையையே திரும்பவும் சொல்றானுங்க..”

”அப்ப எங்களுக்கும் ஆப்பு தானாடா?”

”அதுல மட்டும் பாரபட்சமே பாக்க மாட்டானுங்க மச்சி. எல்லாருக்கும் ஒர்ரே மாதிரி ஆப்பு தான்”

”எல்லா கம்பேனியும் இதே போங்காட்டம் தாண்டா ஆடறானுங்க. எங்க போன கம்பெனில எனக்கும் இதான் நடந்திச்சி. அப்ரெய்சல்ல நான் எனக்கு போட்ருந்த எந்த ரேட்டிங்கையும் அவனால குறைக்க முடியலை.. கடைசில உனக்கு ஆட்டிட்யூட் ப்ராப்ளம் (attitude problem), அதனால நீட் இம்ப்ரூவ்மெண்ட் போடறேன்னு சொருவிட்டான்”

“உனக்காச்சிம் பரவால்ல.. நம்ம விவேக் இருக்கான்ல அவன் கம்பேனில அப்ரெய்சல்ல ஒரு பாயிண்டா “எபக்டிவ் ப்ரசண்டேசன் – (effective presentation)” அப்படின்னு ஒண்ணு வச்சிருக்கானுங்க.. அதுல இவனுக்கு பாடி லேங்குவேஜ் (body language) சரியில்லேன்னு பாயிண்டைக் குறைச்சிருக்கான் அவனோட மேனேஜர். என்னடான்னு கேட்டதுக்கு உன்னோட பாடி லேங்குவேஜ் டீமுக்கு உள்ளே பாசிட்டிவ் ரேடியேசன (positive radiation) கொண்டார மாட்டேங்குதுன்னு சொல்லியிருக்கான்…. பி.ஈ படிச்சதுக்கு சாமியார் கோர்ஸ் படிச்சிருந்தா நித்யானந்தா மாதிரி வைப்ரேசன் மோட்லயே இருந்திருக்கலாம்னு நொந்து போயிட்டான்டா விவேக்கு”

”அப்புறம் என்னாத்துக்குடா இவனுங்க வருசத்துக்கு ஒரு வாட்டி அப்ரெய்சல்னு ஒன்னை வச்சி நம்மளை நம்ப வச்சி ஏமாத்தறானுங்க?”

”கேரட்டைக் காட்டினாத் தானே கழுதை முன்னே போகும்? ஏற்கனவே எந்த டீமுக்கு எவ்வளோ குடுக்கணும்.. எவனுக்கு ஆப்பு வைக்கணும்னு பேசிட்டு தான்டா அப்ரெய்சல் மீட்டிங்கே வைக்கிறானுங்க.. இதெல்லாம் சும்மா கண் துடைப்பு தான்டா… இப்ப பாரேன் நான் கோடிங் எழுதறேன்; அதனால என்னோட டார்கெட் படி குறைவா தப்பு வர்ற மாதிரி கோடிங் எழுதணும். நீ அதே டீம்ல டெஸ்டிங்ல இருக்கிறே நான் எழுதற கோடிங்லே எவ்ளோ அதிகமா தப்பு கண்டுபிடிக்க முடியுமோ அந்தளவுக்கு உனக்கு ரேட்டிங்”

”அப்ப டெக்னிக்கலா பார்த்தா… எனக்கு நீ எதிரி, உனக்கு நான் எதிரி”

”அது மட்டும் இல்லே.. நம்ம ஜெய் இருக்கான்லே அவன் மார்கெட்டிங்ல இருக்கான்… என்னதான் நான் எழுதற கோடிங் கரெக்டா இருந்தாலும் அடிக்கடி ஒரு புது லாஞ்ச் காட்டணும் (மென்பொருட்களுக்கு சந்தையில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அதன் இடைமுகத்தை (UI / UX) அடிக்கடி மாற்றுவது).. அவன் புது லாஞ்ச் கொண்டு வர மொக்கையா எதாவது காரணத்தை உருவாக்கலேன்னா அவனுக்கு ஆப்பு, உருவாக்கினா எனக்கும் உனக்கும் ஆப்பு”

“ஆக மொத்தத்துல நாம எல்லாரும் பாரபட்சமே இல்லாம ஒருத்தனுக்கு ஒருத்தன் விரோதிங்க தான்; இல்லே? இந்த மாதிரி போங்காட்டம் ஆடறதுக்கு பேசாமே இதான் கம்பேனியோட வருச லாபம்.. அதுல இந்த இந்த டிபார்ட்மெண்ட் இந்தளவுக்கு லாபம் சம்பாதிச்சிருக்கு.. அதுல மேனேஜ்மெண்டுக்கு இவ்ளோ எம்ப்ளாயிக்கு இவ்ளோனு இருக்கிற ஒவ்வொருத்தனுக்கும் சம்பளத்துல சமமா இவ்வளவு கூட்டறோம்னு வெளிப்படையா சொல்லிடலாம்ல?”

“செய்ய மாட்டானுங்க. அப்டி செஞ்சா டீம்ல இருக்கிற எல்லாரும் ஒன்னா சேர்ந்துக்குவாங்க இல்ல? இப்ப இருக்கிற மெத்தட்ல அவனவன் அவனவனோட பெர்பார்மென்சை மட்டும் பாத்துட்டு அமைதியாயிடறான். அதே மாதிரி ஒவ்வொரு வருசமும் கம்பேனிக்கு டார்கெட் செட் பண்றதும் பிரச்சினை தான்.. அவனோட பிசினஸ் டார்கெட்டை நாம எப்படி அடைய முடியும்? முடியுமா முடியாதான்னு நம்ம கிட்ட கேட்டா டார்கெட் செட் பண்றான்? அடையவே முடியாத டார்கெட்டை நம்ம கிட்ட கேக்காமலேயே செட் பண்ணிட்டு.. அதை அடைய முடியலைங்கறதுக்கு பழியையும் நம்ம தலைலயே கட்றானுங்க”

”கரெக்டு மச்சி.. ஒவ்வொரு வருசமும் டாப் மேனேஜ்மெண்ட்ல இருக்கறவன் எல்லாம் வீங்கிட்டே போறானுங்க நாம ராத்திரி பகலா கண்ணு முழிச்சி கோடிங் எழுதிக் கொடுத்துட்டு நாய் மாதிரி எப்படா பொறை வீசுவான்னு தேவுடு காக்க வேண்டியிருக்குடா”

”நீ வேணா பாரேன்… பிசினஸ் எடுக்கறது அவன் வேலை.. ரெவின்யூ கொண்டாறது அவன் வேலை.. அதுக்கு டார்கெட் செட் பண்றதும் அவன் வேலை.. ஆனா, லாபத்துல கொஞ்சம் குறைஞ்சிடுச்சின்னா நமக்கு அப்ரெய்சல்ல ஆப்பு. நம்மளுக்கு குறைச்சி குடுத்துட்டு மிஞ்சின அமௌண்டை பல்க்கா அவனுங்க எடுத்துக்கறானுங்க”

“இல்ல மச்சி.. நீ தப்பா சொல்றே.. அவனுங்களுக்கு தேவையானதையெல்லாம் முதல்லயே எடுத்துட்டு மிஞ்சின கொசுறை நமக்கு போடுறானுங்கடா..”

”டேய் உன் போன் அடிக்குது பாரு”

”எனக்கும் அழைப்பு வந்துடுச்சு மச்சி.. போய் இருக்கறதுலேயே நல்ல ஆப்பா பாத்து வாங்கிட்டு வர்றேன்.. நான் வர்றதுக்குள்ளே போய்டாத வெய்ட் பண்றா..”

”ஓக்கே மச்சி.. பை”

– தமிழரசன்

நீதியின் பலிபீடங்களாக நீதிமன்றங்கள்!

0

நீதி – நியாயத்தை மக்கள் பெறுவதற்கான கடைசி புகலிடமாகச் சித்தரிக்கப்படும் நீதித்துறையானது, வழக்குகளைக் கையாளும் முறையே குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில்தான் உள்ளது என்பதை ஜெயலலிதா – சசிகலா கும்பலுக்குப் பிணை வழங்கிய தீர்ப்பு அம்பலப்படுத்தியிருக்கிறது. இது ஏதோ விதிவிலக்கான விவகாரமாகக் கருத முடியாது. இப்படித்தான் ஏறத்தாழ எல்லா வழக்குகளையும் நீதித்துறை கையாள்கிறது . சாலைப் பணியாளர்கள் வேலை பறிக்கப்பட்ட வழக்கே இதற்குச் சான்று கூறப் போதுமானது.

சகாயம் குழு
இதர மாவட்டங்களில் கனிம வளச் சூறையாடலில் ஈடுபட்டு வரும் கொள்ளையர்கள் தப்பிக்கவும், முறைகேடுகளை மூடிமறைக்கவும் கால அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுத்து, தற்போதைக்கு மதுரை மாவட்டத்தில் மட்டும் விசாரித்தால் போதுமென்ற மொன்னையான நீதிமன்ற உத்தரவுப்படி, கிரானைட் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்யும் முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம்

தி.மு.க. ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை ஆட்சிக்கு வந்ததும் ஜெ. கும்பல் பணி நீக்கம் செய்து வீதியில் வீசியெறிந்ததை எதிர்த்து அப்பணியாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுகுணா, பணிநீக்கத்துக்கு இடைக்காலத் தடை விதித்தார். இத்தீர்ப்புக்கு எதிராக ஜெ. அரசு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், சிவஞானம் ஆகியோர், நீதிபதி சுகுணா பிறப்பித்த உத்தரவை நீக்க முடியாது என்றும், மக்கள் நலப் பணியாளர்களை டிஸ்மிஸ் செய்யக் கூடாது என்றும் தீர்ப்பளித்தனர். பின்னர் இதை எதிர்த்து ஜெ அரசு உயர் நீதிமன்றத்தில் சீராய்வு முறையீடு செய்தது. இதை விசாரித்த நீதிபதி அனில்தவே, தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கத் தேவையில்லை என்று ஜெ. அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறி உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.

இதை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, கடந்த ஆகஸ்ட் 19 அன்று இந்த வழக்கை விசாரித்த பால்வசந்தகுமார், சத்திய நாராயணன் ஆகிய நீதிபதிகள், மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டுமென்றும், பணி ரத்து செயப்பட்டதால் அவர்களில் 26 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு அரசுப்பள்ளிகள், மதுஒழிப்புப் பிரச்சாரம் போன்ற வேறு பணிகளையாவது வழங்க வேண்டுமென்றும், இவற்றை 31.10.2014க்குள் நிறைவேற்ற வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜெ. அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு செப்.23 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் தவே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்து விசாரணையை ஜனவரி முதல் வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளி  வைத்துள்ளனர்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக மக்கள் நலப் பணியாளர்களை உச்ச நீதிமன்றம் வரை இழுத்தடித்து படாதபாடு படுத்தியிருக்கிறது ஜெ. அரசும் நீதித்துறையும். அவர்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட மிகவும் பிற்பட்ட சமூகப் பின்னணியைச் சேர்ந்தவர்கள். கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றியுள்ள அவர்கள் இத்தனை வருடங்களுக்குப் பிறகு வயதையும் தொலைத்துவிட்டு வேலையுமிழந்து பரிதவிக்கிறார்கள். ஆனாலும் ஜெ. அரசுக்குச் சாதகமாக இந்த வழக்கை இன்னமும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது மனித உணர்ச்சியே இல்லாத நீதித்துறை. நீதித்துறை வழக்கைக் கையாளும் முறையைப் புரிந்துகொள்ள இதுவொரு உதாரணம்தான்.

சாலைப் பணியாளர்கள்
ஜெ. அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சாலைப் பணியாளர்கள், தங்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி விழுப்புரம் அருகே தூக்குக் கயிறுடன் நடத்திய சாலை மறியல் போராட்டம். (கோப்புப் படம்)

தனியார் பள்ளிப் பேருந்துகளை முறைப்படுத்தக் கோரும் வழக்கு, குடியிருப்புப் பகுதிகளிலிருந்து டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரும் வழக்கு, பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளைத் தடுக்கக் கோரும் வழக்கு, பேருந்து நிழற்குடைகளை அமைப்பதில் நடந்துள்ள ஊழல் குறித்த வழக்கு, விதிமுறைகளை மீறி அடுக்குமாடிக் குடியிருப்புகள் – வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளதை எதிர்த்த வழக்கு, ஆக்கிரமிப்பாளர்களால் புழல் ஏரிப் பகுதியில் 18 கிணறுகளைக் காணவில்லை என்ற வழக்கு – என இப்படி எல்லா பொதுநல வழக்குகளையும் கண்டுகொள்ளாது தட்டிக்கழிப்பது, ஒத்திவைப்பது, அரசிடம் விளக்கம் கேட்டு வழக்கை இழுத்தடிப்பது, தானே போட்ட உத்தரவுகளைச் செயல்படுத்த எந்த நடவடிக்கையும் இன்றிச் செயலற்றுக் கிடப்பது – என்பனவற்றின் மூலம் மேற்படிக் குற்றங்களுக்கு  நீதித்துறையே உடந்தையாக மாறிப்போவிட்டது.

அண்மையில் டிராபிக் ராமசாமி தொடுத்த பொதுநல வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கனிமவள முறைகேடுகள் பற்றி விசாரிக்க மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் தலைமையில் குழு அமைக்க உத்தரவிட்டதோடு, இரண்டு மாதங்களுக்குள் தனது அறிக்கையை அளிக்க வேண்டுமெனவும் கூறியது. இதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செத மனுக்கள் உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் சகாயம் தலைமையில் குழுவை அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசு வேறுவழியின்றி உத்தரவிட்டுள்ள அதேசமயம், அதனைச் சீர்குலைக்கும் வேலையையும் செய்து வருகிறது.

இதையடுத்து கனிமவள முறைகேடு குறித்து மதுரை மாவட்டத்தில் மட்டும் விசாரிக்க வேண்டுமா, அல்லது தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் விசாரணை நடத்த வேண்டுமா என்பதைத் தெளிவுபடுத்தக் கோரி சகாயம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கவுல் அடங்கிய அமர்வு, மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள கனிம வள முறைகேடுகள் பற்றி முதற்கட்டமாக விசாரித்தால் போதுமானது, இது பெரிய விவகாரம் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக விசாரணையை விரிவுபடுத்திக் கொள்ளலாம் என்று மொன்னையாக தீர்ப்பளித்துள்ளது.

சிறிய பேருந்து
சிறிய பேருந்துகளில் வரையப்பட்டிருப்பது இரட்டை இலை ஓவியம் அல்ல, மாசு இல்லாத பேருந்தைக் குறிக்கும் பசுமை இலை ஓவியம் என்ற ஜெ. தரப்பின் வாதத்தை ஒருபுறம் ஏற்றுக் கொண்டு, மறுபுறம் ஏற்காடு தேர்தல் முடியும்வரை தற்காலிகத் தடை விதித்து ஜெ. மனங்கோணாதபடி பவ்யமாகத் தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதி மன்றம்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுப்பணித்துறையின் துணையுடன் தனியார் நிறுவனங்கள் சட்டவிரோதமாக கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டு வருவது யாவரும் அறிந்த உண்மை. ஆற்று மணல், செம்மண், கல் குவாரிகள், தாதுமணல், கிரானைட் உள்ளிட்ட அனைத்து வகையான கனிம வளக் கொள்ளையையும் சகாயம் குழு விசாரிக்க வேண்டுமென கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில், தற்போதைக்கு மதுரை மாவட்டத்தில் மட்டும் விசாரித்தால் போதுமென நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதன் மூலம் இதர மாவட்டங்களில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டுவரும் கொள்ளையர்கள் தப்பிக்கவும், முறைகேடுகளை மூடிமறைக்கவும் கால அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது, நீதித்துறை.

இதுவொருபுறமிருக்க, அரசு கணக்கின்படியே 16,000 கோடி ரூபாய் அளவுக்கு கிரானைட் ஊழலில் ஈடுபட்ட பி.ஆர்.பி. நிறுவனம், மதுரை தவிர இதர மாவட்டங்களில் குவாரி தொழிலில் ஈடுபடலாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ராஜா அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளார். உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த ஒரு வழக்கில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கையாண்டு வரும் வழக்கில் குறுக்கே புகுந்து தனியாக இப்படியொரு அயோக்கியத்ததனமான உத்தரவைப் பிறப்பித்து பி.ஆர்.பி. கும்பலின் பகற்கொள்ளை தொடர மதுரைக் கிளை நீதிபதியான ‘வசூல்’ ராஜா பச்சைக் கொடி காட்டியுள்ளார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் வழக்குரைஞர் வாஞ்சிநாதன் இதில் தலையிட்டு மனு தாக்கல் செய்த போதிலும், அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே தீர்ப்பளித்திருக்கிறார் ராஜா.

இப்படித்தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையை மூடச்சோல்லி சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு அளித்த தீர்ப்பை முற்றாக ரத்து செய்து 2.4.2013-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழக அரசு மன்னார் வளைகுடாவைத் தேசிய கடல் பூங்காவாக அறிவித்திருப்பதை மைய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இன்னும் அங்கீகரிக்கவில்லை என்று மொன்னையான காரணத்தை முன்வைத்து, ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க தாராள அனுமதி அளித்தது. அதேசமயம் தனது அநீதியான தீர்ப்பு அம்பலமாகாமலிருக்க, ஸ்டெர்லைட் ஆலை கடந்த 15 ஆண்டுகளில் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தன்னை யோக்கியவானாகக் காட்டிக் கொண்டது. குற்றவாளிகளுக்கு அபராதம் விதித்து அவர்களைத் தண்டனையின்றித் தப்பிக்கவைக்கும் கட்டப்பஞ்சாயத்து நாட்டாமைகளின் தீர்ப்புக்கும் இதற்கும் வேறுபாடு ஏதும் இருக்கிறதா?

மவுலிவாக்கம் கட்டிட இடிவு
கடந்த ஜூன் இறுதியில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 61 பேரைப் பலிகொண்டு, 27 பேரைப் படுகாயப்படுத்திய சென்னை-மவுலிவாக்கம் பயங்கம் : இப்பகுதியை சீல் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், விசாரணை முழுமையாக நிறைவடையாத நிலையில் அவசரமாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யக் கூடாது என்று கூறி குற்றவாளிகளைக் காப்பாற்ற இன்னமும் இந்த வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

இப்படி கட்டப்பஞ்சாயத்து நடத்தும் நீதிபதிகள், பொதுநல வழக்கு தொடுப்பவர்கள் மீதே குற்றம் சாட்டித் தண்டிக்கவும் தவறுவதில்லை. பத்திரிகையாளர் அன்பழகன், வழக்கத்துக்கு மாறாக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2015-ஆம் ஆண்டில் தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. “உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், வடமாநிலக் கலாச்சாரத்தை இங்கு திணிக்க முயற்சிக்கும் வகையில் கூடுதலாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி” அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய முதன்மை அமர்வு விசாரித்தபோது, தீபாவளி பண்டிகைக்குக் கூடுதல் விடுமுறை அவசியமா, இல்லையா என்பதையோ, இது வடமாநிலக் கலாச்சாரத்தைத் திணிக்கும் செயல்தானா என்பதையோ பரிசீலிக்காமல், மனுதாரர் மீது பாய்ந்தனர். மனுதாரர் பிரிவினைவாதத்துடன், நாட்டைப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் என்று அபாண்டமாகக் குற்றம் சாட்டினர். இவர் விளம்பரத்துக்காக மனு தாக்கல் செய்து மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறார் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து, எதிர்காலத்தில் இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செயப்படுவதைத் தடுக்கும் நோக்கில் வழக்கு செலவுக்காக மனுதாரருக்கு ரூ 20,000 அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இப்படி கடுமை காட்டும் நீதிபதிகளின் அணுகுமுறையும் தீர்ப்பும் ஆளும் ஜெ. தரப்பின் வழக்கு என்றால் வேறு மாதிரியாக மாறிவிடுகிறது. ஏற்காடு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகரில் இயக்கப்படும் சிறிய பேருந்துகளில் ஆளும் கட்சியின் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டிருந்ததை எதிர்த்து, அதை நீக்கக் கோரி மு.க. ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை இழுத்தடித்த சென்னை உயர்நீதி மன்றம், பின்னர் இது இலை ஓவியம் அல்ல, மாசு இல்லாத பேருந்தைக் குறிக்கும் பசுமை இலை ஓவியம் என்ற ஜெ. தரப்பு வாதங்களைக் கேட்டுவிட்டு, இலை ஓவியத்தை உள்நோக்கம் எதுவும் இல்லாமல் தமிழக அரசு வரைந்துள்ளதாகக் கூறுவதை ஏற்பதாகவும், இருப்பினும், இது வாக்காளர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் கருதுவதால், அதன் முடிவை ஏற்று வழக்கைத் தள்ளுபடி செவதாகவும் ஜெ. மனங்கோணாதபடி பவ்யமாகத் தீர்ப்பளித்தது. ஜெ. கும்பல் திமிர்த்தனத்தைக் கண்டிக்கவோ, நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக அபராதம் விதிக்கவோ அது முன்வரவில்லை.

குற்றவாளிகளைத் தப்புவிக்க வழக்கை ஆண்டுக் கணக்கில் இழுத்தடிப்பது, எதிர்த் தரப்பு வாதங்கள் எதையுமே கேட்காமல் தீர்ப்பு கூறுவது, வழவழா கொழகொழாவென தீர்ப்புகளை எழுதுவது, குற்றவாளிகளை எச்சரிப்பதுபோல நாடகமாடி சலுகை காட்டுவது, நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத மத்திய-மாநில அரசுகளுக்குக் கண்டனம் தெரிவிப்பது, அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பது, பிறகு மன்னிப்பு வாங்கிக் கொண்டு வழக்கைத் தள்ளுபடி செவது என்பன போன்ற நடைமுறைகளெல்லாம் நீதித்துறையின் வாடிக்கையாகிவிட்டன. இந்த மானக்கேடான நிலைமை பற்றி மாட்சிமை தங்கிய நீதிபதிகள் கடுகளவும் வெட்கப்படுவதில்லை.

– மனோகரன்
________________________________________
புதிய ஜனநாயகம், ஜனவரி 2015
________________________________________

மோடியின் ‘தேசபக்த’ கோட் – கார்ட்டூன்

1

modi-special-coat-cartoonபடம் : ஓவியர் முகிலன்

போலீசு அடக்குமுறையுடன் மொழிப்போர் நினைவுநாள்

0

மிழ்நாட்டு மாணவர்களின் இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பொன்விழா ஆண்டினை நினைவு கூர்ந்து அப்படி ஒரு மொழிப்போரினை மீண்டும் துவக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில், குடியிருப்புப் பகுதிகள் என எல்லா இடங்களிலும் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது.  சைக்கிள் பேரணி, கல்லூரிகளில் வாயில் நாடகம் என பல வடிவங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஜனவரி 25, 2015 அன்று மொழிப்போர் தியாகிகள் நாள் புரட்சிகர அமைப்புகளால் தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டது. அது தொடர்பான தகவல்கள், புகைப்படங்களின் நான்காவது பகுதி.

9. தருமபுரி மாவட்டம்

ருமபுரி மாவட்டத்தில் ஜனவரி 25 தமிழக மாணவர்களின் வீரம் செறிந்த போராட்டத்தை நினைவு கூரும் வகையில் பேருந்துகளிலும், பள்ளி கல்லூரிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டி, பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. தெருமுனைக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது.

anti-hindi-imposition-dharmapuri-2பென்னாகரம், தருமபுரி, சேலம் பகுதிகளில் பேருந்து பிரச்சாரம் செய்யப்பட்டது. பென்னாகரத்தில் சுவரொட்டி ஒட்டி, தியாகிகள் புகைப்படத்தை பிடித்துக் கொண்டு பேருந்து நிலையம் நடுவில் செஞ்சட்டையும், செங்கொடியும் பிடித்துக் கொண்டு வீரம் செறிந்த முழக்கமிட்டனர். கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்ட கூட்டத்தை தருமபுரி மாவட்ட அமைப்பாளர் தலைமை தாங்கி நடத்தினார். மாணவர்கள், பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசுரத்தை கேட்டு வாங்கி போனார்கள். கூட்டம் முடிந்து தியாகிகள் புகைப்பட பேனரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

anti-hindi-imposition-dharmapuri-1திட்டமிட்டபடி மாணவர்கள் செங்கொடியைக் கட்டிக் கொண்டு சைக்கிள் பேரணியாக 40 கிலோமீட்டர் பிரச்சார பயணம் மேற்கொண்டனர். மாணவர்களின் பிரச்சார பயணம் வழிநெடுகிலும், பாதசாரிகளையும், இரு சக்கர ஓட்டுனர்களையும், பேருந்து பயணிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தது; வண்டியை நிறுத்தி பிரசுரங்களை கேட்டு வாங்கிக் கொண்டு ஆதரவு தெரிவித்து சென்றனர். ஒரு இளைஞர் பிரசுரத்தை வாங்கிக் கொண்டு தானும் உறுப்பினர் என்று அடையாள அட்டையைக் காட்டிக் கொண்டு சென்றார்.

anti-hindi-imposition-dharmapuri-3செல்லும் வழியில் இருந்த முக்கிய பேருந்து நிலையங்களிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தெருமுனைக் கூட்டம், வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது. ஆசிரியர்கள் நிதியளித்தனர். மாணவர்கள் பிரசுரம் கேட்டுப் பெற்றனர். “இப்படி எல்லாம் செய்தால்தான் நாட்டைக் காப்பாற்ற முடியும்” என்று ஒருவர் கூறினார். ஒரு அம்மா, “எங்க பிள்ளையும் இந்த மாதிரி விஷயத்துக்கு அனுப்பணும். நம்ம தாய்மொழியை அழிக்க விடக் கூடாது” என்றார். கல்லூரி வாயிற் கூட்டத்தில் மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

சனவரி 25 காலை மாணவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டு உரை நிகழ்த்தினர்.  செங்கொடியை உயரப் பிடித்து டவுன் பஸ் ஸ்டாண்டிற்கு சென்றனர். வழியில் பிரசுரம் வினியோகித்தனர். முழக்கமிட்ட போது போலீஸ் வந்து இன்னொரு முறை செய்தால் கைது செய்வோம் என்றனர்.

anti-hindi-imposition-dharmapuri-4ராஜகோபால் பூங்கா அருகில் கூட்டம் தொடங்கப்பட்டது. போலீஸ் வந்து கைது செய்யப் போவதாக கூறியது.

“வண்டியில் ஏற முடியாது. பேசுவது எங்கள் உரிமை” என்று மாணவர்கள் கூற வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மாணவர்களை குண்டுக் கட்டாக தூக்கி வண்டியில் போடப்பட்டனர். நெற்றியில் அடிபட்டது, கால் நகம் பிய்ந்தது, சட்டை கிழிந்தது என்று தோழர்கள் காயமடையும் அளவுக்கு முரட்டுத்தனமாக வண்டியில் தூக்கிப் போடப்பட்டனர்.

“போலீஸ் அராஜகம் ஒழிக” என்று மாணவர்கள் முழக்கமிட்டனர். போலீஸ் வண்டியிலும் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.  காவல் நிலையத்திலும் மரியாதைக் குறைவாக பேசிய போலீசை அடக்கி உணவு, காயமடைந்தவர்களுக்கு மருத்துவம் என தமது உரிமைகளை பெற்றனர் தோழர்கள். போராட்டத்தின் மூலம்தான் எதையும் சாதிக்க முடியும் என்பதை நடைமுறையில் உணர்ந்தனர்.

மாலையில் விடுவித்த போது கொடியை கேட்ட போது, “வெப்பன்ஸ் எல்லாம் கொடுக்க முடியாது” என்றார்.

“கத்தியா, துப்பாக்கியா, வெப்பன்ஸ் என்று சொல்றீங்க. கொடிய கொடுக்காட்டா இந்த இடத்தை விட்டுப் போக முடியாது” என்று கூறியதும்,

“குடுக்க முடியாது, உங்க மேல எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கு, கிளம்புங்க” என்றார்.

இந்த “வெப்பன்”ஸை கண்டு போலீஸ் பயப்படுகிறது. எனவே செங்கொடி என்ற ஆயுதத்தை எடுத்து பார்ப்பன ஆரிய சாம்ராஜ்ய கனவை ஒரே போடாக ஒழிப்போம்.

கைது செய்யப்பட்ட மாணவர்களின் அனுபவத்தைக் கேட்ட பிற மாணவர்கள் தாமும் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்று ஆர்வம் தெரிவித்தனர்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தருமபுரி மாவட்டம். செல் : 8148055539

10. புதுச்சேரி

புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில், நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கும், மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்தல், ஆரிய – பார்ப்பன ஆதிக்கத்திற்கு, இந்து மதவெறி பாசிசத்திற்கும் முடிவு கட்ட உறுதிமொழி ஏற்றல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

புதுச்சேரி புஜதொமு தலைவர் தோழர். சரவணன் தலைமை ஏற்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். புஜதொமு செயற்குழு உறுப்பினர் தோழர். கருப்பையா மொழிப்போர் தியாகிகளின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்தார்.

புதுச்சேரி புஜதொமு பொதுச் செயலாளர் தோழர். பழனிசாமி மொழிப்போர் தியாகிகளின் போராட்டத்தை நினைவு கூரும் விதமாகவும், இன்றைய போராட்டத்தின் அவசியத்தைப் பற்றியும் விளக்கினார்.  அவர் உறுதிமொழியை வாசிக்க தோழர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இணைப்பு சங்கத் தோழர்கள், பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.
தொடர்புக்கு : 95977 89801.

11. புதுவை பல்கலைக் கழகம்

மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தல் மற்றும் பார்ப்பனிய எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு கடந்த 23 சனவரி-2015 வெள்ளி அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது நுழைவாயில் முன்பாக நடைபெற்றது.

puduvai-uni-gate-meeting-11நிகழ்கலைத்துறை மாணவர்களாகிய நமது தோழர்களின் பறையிசை முழக்கத்தோடு தொடங்கிய இந்தஎழுச்சிமிகு நிகழ்வினை பல்கலைக்கழக மாணவர்களும், ஊழியர்களும், அருகாமைப் பகுதிமக்களும் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

puduvai-uni-gate-meeting-05பறையிசை தொடங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் மாணவர்களைக் காக்கவோ, பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர் விரோதச் செயல்களைத் தடுக்கவோ வராத காவல்துறை நம்மிடம் வந்து “அனுமதிக் கடிதம் கொடுங்கள்” என்று கேட்டது.

“ஒலிபெருக்கி வைக்காத நிகழ்விற்கு போலீஸ் அனுமதி எதற்கு?” என்று நமது தோழர்கள் திருப்பிக் கேட்க,

“நாளைக்கு எதாச்சும்னா எங்ககிட்ட வரமாட்டிங்களா?” என்று நைச்சியமாகப் பேசியது காவல்துறை.

அதற்கு நாடகத்துறை ஆய்வாளர் தோழர் ஆனந்தன் “உங்ககிட்ட வர மாட்டோம் போங்க! வந்துமட்டும் எங்களுக்கு என்ன பாதுகாப்பு கொடுத்துட்டீங்க? ஒரு அப்பாவி ஏழை மாணவன பல்கலைக்கழக அதிகாரிகள் 4 பேர் சேந்து அடிச்சிருக்காங்க, அப்போ நீங்க எங்களுக்கா பாதுகாப்புக் கொடுத்தீங்க? இப்போ நீங்க பேசுற மொழி வாழணுமின்னு 50 வருஷத்துக்கு முன்னாடி இவ்வளவு பேரு செத்திருக்காங்கன்னு அவுங்களுக்கு விழா எடுக்கறோம், நீங்க இதுல கலந்துக்காம அனுமதி கடிதம் கேக்குறிங்க?” என்று சீற்றத்துடன் பதிலளிக்க பம்மியது போலீசு.

puduvai-uni-gate-meeting-02“சரி சரி, சீக்கிரம் முடிங்கப்பா” என்று சொல்லிவிட்டு நிகழ்வைப் பார்த்துக்கொண்டு நின்றனர் காவலர்கள்.

பறை முழக்கத்தைத் தொடர்ந்து மொழிப்போர் தியாகிகளின் நினைவைப் போற்றி வீரவணக்கம் செலுத்தியும் பார்ப்பனப் பகைமுடிக்கச் சூளுரைத்தும் விண்ணதிர முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

puduvai-uni-gate-meeting-07தோழர்கள் எழுப்பிய பறைமுழக்கம் நிகழ்வின் மையமாக அமைந்து அனைவரையும் ஈர்த்தது.

  • We are not against Hindi, but we are against imposition of any language!
  • Salute to martyrs of anti Hindi imposition struggle! let us carry forward their anti-Hindutva struggle!
  • Make all 22 languages as official languages of India!
  • Not only Tamil people but people of Maharashtra, Punjab, West Bengal, Karnataka and Andhra Pradesh also protested against Hindi Imposition
  • மொழிப்போர் தியாகிகளின் பொன்விழா நினைவாண்டில் பார்ப்பனியப் பகைமுடிக்கச் சூளுரைப்போம்!

ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளைக் கையிலேந்தி நின்றது நமது நினைவேந்தல் நிகழ்வின் நோக்கத்தை மக்களுக்கு அறிவிப்பதாக அமைந்திருந்தது.

இது பல்வேறு மொழிபேசுவோர், குறிப்பாக இந்திமொழி பேசுவோர் அதிகம் படிக்கும் பல்கலைக்கழகம் என்பதால், நாம் இந்தி மொழியை எதிர்க்கவில்லை என்பதும், இந்தி மொழி மற்றும் இந்து/காவி/பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்பையே எதிர்க்கிறோம் என்பதும் விளக்கப்பட்டது. பலரும் அதனை ஏற்றதோடு இந்திமொழி பேசும் மாணவர்கள் சிலர் நிகழ்விலும் பங்கேற்றனர்.

puduvai-uni-gate-meeting-06குறிப்பிடத்தக்க நிகழ்வாக, இந்திமொழித்துறையின் பேராசிரியர் ஒருவர் நமது இந்திமொழி எதிர்ப்புப் போராட்டத்தின் நியாயத்தை தொடர்ந்து ஆதரித்து வந்திருப்பதோடு, இந்த நிகழ்விற்கும் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்தார்.

தமிழ்த்துறை ஆய்வாளர் தோழர் சிவராஜ் பார்ப்பன எதிர்ப்பு உறுதிமொழியை வாசிக்க எல்லோரும் பார்ப்பன இந்துவெறிப் பாசிச எதிர்ப்புக் கோட்டையாக தமிழ் மண்ணை கட்டியமைக்க உறுதிபூண்டனர்.

puduvai-uni-gate-meeting-08பார்ப்பனிய எதிர்ப்பு உறுதிமொழி:

தமிழ்நாட்டு மாணவர்களின் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா ஆண்டு

  • மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி வீறுகொண்டெழுவோம்!
  • தமிழ் தேசிய இனத்தின் கடவுள் – ஆன்மீக மறுப்பு, வேத, வைதீக – பார்ப்பன, சமஸ்கிருத – இந்தி எதிர்ப்பு பாரம்பரியத்தை போர்வாளாக ஏந்துவோம்!
  • மீண்டும் படையெடுத்து வருகிற ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக, சமஸ்கிருத – இந்தி ஆதிக்க பண்பாட்டை போரிட்டுவீழ்த்துவோம்!
  • ஆரிய – பார்ப்பன எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாக தமிழ்நாட்டை மீண்டும் கட்டியமைப்போம்! என்று மொழிப்போர் தியாகிகளின் பொன்விழா ஆண்டில் உறுதியேற்போம்!
  • பெரியாரின் சுயமரியாதை தமிழ் மண்ணிலிருந்து பார்ப்பனியத்தையும், சாதி ஆதிக்கத்தையும், மொழி, இன, பண்பாட்டு ஒடுக்குமுறைகளையும் அடியோடு அறுத்தெறிந்து, பார்ப்பனப் பாசிச எதிர்ப்பின் கோட்டையாக தமிழகத்தை மீண்டும் மாற்றவும் இந்த மொழிப்போர் தியாகிகளின் பொன்விழா நினைவாண்டில் சூளுரைப்போம்!

ஆங்கிலத்துறை ஆய்வாளர் தோழர் முருகானந்தன் மொழிப்போர் தியாகிகளை நினைவுகூரவேண்டியதன் அவசியத்தையும் இன்று நாடு எதிர்நோக்கியுள்ள பார்ப்பன இந்துவெறி அபாயத்தினை ஒன்றுசேர்ந்து எதிர்த்துப் போராடி வீழ்த்தவேண்டியதன் அவசரத் தேவையையும் விளக்கிப் பேசினார். மேலும் நாம் எந்த ஒரு மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல, ஆனால் எந்தவொரு மொழியும், பண்பாடும், ஒடுக்குமுறையும் பிறர்மீது திணிக்கப்படுவதற்கு எதிரானவர்கள் என்றும், இந்தியின் மூலம் இந்திய ஆளும் வர்க்கம் திணிக்க முயல்வது ஒரே அகண்ட பாரதம் என்ற தமது காவிக் கனவினைத்தான் என்றும் விளக்கினார்.

puduvai-uni-gate-meeting-04இறுதியாக தோழர் ஆனந்தன் வந்திருந்தோருக்கு நன்றியும் வாழ்த்தும் கூறி இதுபோன்றே எல்லா மாணவர், சமூக, அரசியல் போராட்டங்களிலும் அனைவரும் பங்கேற்று தங்களின் கடமையை ஆற்றவேண்டுமென்று கேட்டுக்கொண்டு நிகழ்வினை நிறைவுசெய்து வைத்தார்.

puduvai-uni-gate-meeting-02தமிழ்த்துறை, நாடகத்துறை, பொருளாதாரத்துறை பேராசிரியர்கள் பலரும் இந்த மொழிப்போர் வரலாற்றை இன்றைய மாணவர்களிடம் எடுத்துச்செல்லும் நமது பணியை வாழ்த்தியதோடு ஆதரவும் நிதியும் நல்கினர்.

“தமிழ் படிக்கும் மாணவர்களுக்கே மொழிப்போராட்ட வரலாறு தெரியவில்லை, இந்த மாணவர்களுக்கு நன்றாக விளக்கிச் சொல்லுங்கள்” என்று தமிழ்த்துறை பேராசிரியர்கள் கூறினர்.

பெண்கள்/மாணவிகள் அதிக எண்ணிக்கையில் நிகழ்வில் பங்கேற்றது நமது பார்ப்பன எதிர்ப்புப் போராட்டத்திற்கு உற்சாகம் ஊட்டுவதாக இருந்தது.

puduvai-uni-gate-meeting-01முழக்கங்கள்

வீர வணக்கம் வீர வணக்கம்!
தியாகிகளுக்கு வீர வணக்கம்!
உழைக்கும் மக்களின் உரிமைக்காக,
உயிர்நீத்த தியாகச் சுடர்கள்,
எல்லோருக்கும் வீரவணக்கம்!

வர்க்கப் போரில் தன்னுயிர் ஈந்த,
தியாகிகளுக்கு வீரவணக்கம்!
சாதி தீண்டாமை இழிவுகள் போக்கி,
பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை நீக்கி,
மானமும் அறிவும் புகட்ட உழைத்த
தியாகிகளுக்கு வீரவணக்கம்!

பார்ப்பனிய எதிர்ப்புப் போராளிகள் தந்தை பெரியாருக்கும்,
அண்ணல் அம்பேத்காருக்கும் வீரவணக்கம்!
வீர வணக்கம் வீர வணக்கம்!
மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்!

தமிழ் மக்களின் மொழி உரிமை காக்க,
தமிழினத்தின் தன்மானம் காக்க,
தன்னுயிரீந்த தியாகிகளுக்கு,
வீரவணக்கம் வீரவணக்கம்!

puduvai-uni-gate-meeting-10சாதி இழிவை தீண்டாமையை,
நியாயப்படுத்தும் பார்ப்பனியத்தின்,
கொலைக்கருவியான சமஸ்கிருதத்தையும்,
அதன் குழந்தையான இந்தியையும்,
தமிழ் மண்ணில் நுழையவிடாமல்,
தன்னுயிர் இழந்தும் பார்ப்பனியம் எதிர்த்த,
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்!

சாதி மத எல்லைகள் கடந்து,
தமிழ் மக்களின் மொழியையும் பண்பாட்டையும்,
காக்கப் போராடிய தியாகிகளுக்கு,
வீரவணக்கம் வீரவணக்கம்!

தந்தை பெரியார் தொடங்கிவைத்த,
பார்ப்பன ராஜாஜியின் இந்தித்திணிப்புக்கு
எதிரான போராட்டத்தில்,
சிறையில் மாண்ட நடராசனுக்கும்,
தாளமுத்துவுக்கும் வீரவணக்கம்!

பெரியாரின் தளபதியாக,
இந்தி எதிர்ப்பு பார்ப்பனிய எதிர்ப்பு,
படைநடத்திய பட்டுக்கோட்டையார்,
அழகிரிக்கு வீரவணக்கம்!

தமிழைக் காக்க இந்தித் திணிப்பை எதிர்க்க,
தீயிலேரிந்து தன்னுயிரீந்த,
சிங்கத் தமிழன் சின்னசாமிக்கு,
வீரவணக்கம் வீரவணக்கம்!

காவல்துறையின் துப்பாக்கிக்கு,
பலியாகி தன்னுயிரீந்த,
ராஜேந்திரனுக்கு வீரவணக்கம்!

கோடம்பாக்கம் சிவலிங்கத்திற்கும்
விருகம்பாக்கம் அரங்கநாதனுக்கும்,
வீரவணக்கம் வீரவணக்கம்!

puduvai-uni-gate-meeting-09தமிழ் இனத்தின் தமிழ் மொழியின்,
உரிமை காக்கவும் இழிவுபோக்கவும்,
தன்ன்னுயிரீந்த உழைக்கும் மக்கள்,
யாவருக்கும் வீரவணக்கம்!

நெஞ்சில் ஏந்துவோம், நெஞ்சில் ஏந்துவோம்!
மொழிப்போர் தியாகிகளின் வீரத்தை,
தியாகத்தை நெஞ்சிலேந்துவோம்!

தமிழினத்தின் தமிழ் மொழியின்,
பார்ப்பனிய எதிர்ப்புப் பண்பாட்டை,
பகுத்தறிவு பாரம்பரியத்தை நெஞ்சில் ஏந்துவோம்!

போர்வாளாய்க் கைய்யிலேந்துவோம், போர்வாளாய்க் கைய்யிலேந்துவோம்!
தமிழ் மண்ணின் சாதி மறுப்பு,
பார்ப்பனிய எதிர்ப்புப் பண்பாட்டை, போர்வாளாய்க் கைய்யிலேந்துவோம்!

முறியடிப்போம், முறியடிப்போம்!
தந்தை பெரியாருக்கும் அண்ணல் அம்பேத்காருக்கும்,
பூலேவுக்கும் அடங்கி ஒடுங்கி,
வாலைச் சுருட்டிய பார்ப்பனியத்தின்,
மறுபடைஎடுப்பை முறியடிப்போம்!

வெட்டி வீழ்த்துவோம், வெட்டி வீழ்த்துவோம்!
சாதி மத ஒடுக்குமுறைகளால்,
சனாதனத்தின் கொடுங்கரங்களால்,
தாழ்த்தப்பட்ட சாதி மக்களை,
சிறுபான்மை மதத்தவரை,
பல்தேசிய இனங்களை மொழிகளை,
உழைக்கும் மக்களை ஒடுக்க நினைக்கும்
காவிவெறி இந்துவெறி மதவெறி,
ஆதிக்கத்தை வெட்டி வீழ்த்துவோம்!

பார்ப்பனியப் பாசிசத்தை,
வேரோடு வெட்டி வீழ்த்துவோம்!
22 மொழிகள் பட்டியலில்,
சமஸ்கிருதம் இந்திக்கு உயரிடமா?

ஒரே நாடு ஒரே மொழி,
ஒரே மதமென்னும் காவிகளின்
அகண்ட பாரதக் கனவினையும்,
அடியோடு வெட்டி வீழ்த்துவோம்!

சாதி மத இனத் தடை கடந்து,
மாணவராய் உழைக்கும் மக்களாய்,
ஒன்றிணைவோம் ஒன்றிணைவோம்!

பார்ப்பனியப் பாசிச சாதி எதிர்ப்பின்,
பாசறையாக தமிழ் மண்ணை மாற்றுவோம்!
மொழிப்போர் தியாகிகளின் வரலாற்றை,
நினைவுகளை நெஞ்சில் ஏந்தி,
இந்தி சமஸ்கிருதத் திணிப்பையும்,
இன அடையாள அழிப்பையும்,
சாதி மத ஒடுக்குமுறை இழிவையும்,
வேரோடும் வேரடி மண்ணோடும்,
வேரோடும் வேரடி மண்ணோடும்,
வெட்டி வீழ்த்தச் சூளுரைப்போம்!
வெட்டி வீழ்த்தச் சூளுரைப்போம்!

மொழிப்போர் தியாகிகளின் பொன்விழா நினைவாண்டில்,
பார்ப்பனியப் பகைமுடிக்கச் சூளுரைப்போம்!

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வாழ்க!
புதுவைப் பல்கலைக்கழக மாணவர் வாழ்க!
மாணவர் ஒற்றுமை ஓங்குக!

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதுச்சேரி.
தொடர்புக்கு: அலைபேசி 9486391209
மின்னஞ்சல்: rsyfront.pu@gmail.com

12. கரூர்

ரூர் லைட்ஹவுஸ் கார்னரில் உள்ள பார்ப்பன சித்தாந்ததிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பெரியாரின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி உறுதியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கரூர் மாவட்ட செயலாளர் தோழர் இரா பாக்கியராஜ் தலைமை ஏற்றார். மனித உரிமை பாதுகாப்பு மையம் தோழர் இராமசாமி முன்னிலை வகித்தார்.

karur-rsyf-anti-hindi-imposition

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர்

13. விருத்தாசலம்

னித உரிமை பாதுகாப்பு மையமும், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும் இணைந்து சனவரி 25, 2015 மாலை 6 மணிக்கு விருத்தாசலம் பெரியார் நகர் பேருந்து நிறுத்தத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கமும், உறுதியேற்பு நிகழ்ச்சியும் நடத்தினர்.

virudai-parents-association-1இந்நிகழ்ச்ச்சிக்கு திருச்சி மாவட்டம் மொழிப்போர்த்தியாகி கீழப்பழவூர் சின்னசாமியின் துணைவியாரும், மகள் திராவிடச்செல்வி இருவரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பொன்னாடை போற்றிச் சிறப்பிக்கப்பட்டனர்.

virudai-parents-association-2

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத் தலைவர் வை.வெங்கடேசன் தலைமை ஏற்க, எழுத்தாளர் இமையம், மனித உரிமை பாதுகாப்பு மைய செயலர் புஷ்பதேவன், திராவிடர் கழகத்தைச் சார்ந்த செழியன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியரான சிவராமசேது முதலியோர் தியாகிகளை நினைவு கூர்ந்து பேசினர்.

தியாகி சின்னசாமியின் மகள் திராவிடச்செல்வி உணர்ச்சிபூர்வமாக பேசினார்.

பேசிய பிற பேச்சாளர்கள்

  • மக்கள் மொழியில் கோயிலில் கூட தமிழ் அர்ச்சனை மறுக்கப்பட்டு மொழி இழிவுபடுத்துவதற்கு எதிராக போராடி தமிழை நிலை நாட்டவேண்டிய கடமைகளை பேசி தெளிவுபடுத்தினர்.
  • பெயர் வைப்பதில் கூடதமிழை தவிர்த்து வரும் கொடுரத்தை தமிழர்கள் நாம் அனுமதிக்ககூடாது என புரியவைத்தனர்.
  • பள்ளிகளில் தமிழை படிக்காமல் பட்டம் பெறும் அவலத்தை தோலுரித்தனர்.

இறுதியில் ஆரிய பார்ப்பன எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாக கட்டியமைப்போம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டு, கூட்டம் நிறைவடைந்தது.

தகவல்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கம்,
விருத்தாசலம்

அறந்தாங்கியில் பொதுக்கூட்டம்

pala-rsyf-poster-mozhipor-2முந்தைய பகுதிகள்

  1. மொழிப்போர் தியாகிகள் நாள் – மக்களைத் திரட்டிய பு.மா.இ.மு
  2. மொழிப்போர் தியாகிகள் நாள் – கோவை, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம்
  3. திருச்சி, வேதாரண்யம், விழுப்புரம் – மீண்டும் துவங்கியது மொழிப்போர்

இறுதிப் பகுதி – தஞ்சை நிகழ்வு மற்றும் அறந்தாங்கி பொதுக்கூட்டம் தொடரும்

கஜினியை சந்தித்த ரஜினி – தி இந்து சுட்ட கதை

28
anton-chekhov
ஆன்டன் செகாவ்

“ஃபில்டர் காஃபியும், தி இந்துவும் இல்லாத காலைப் பொழுதை கற்பனை செய்ய முடியாது” – இது தன்னைப் பற்றி நடுத்தர வர்க்கம் கொண்டிருக்கும் பெருமை என மவுண்ட்ரோடு மஹாவிஷ்ணு கருதுகிறது.

ஆங்கில இந்துப் பத்திரிகையின் எடையில் மூன்றாம் பக்க மாநகர அக்கப்போர் தீனிகளே ஆக்ரமித்திருக்கும் நிலையில் தமிழ் இந்துவின் நிலை எப்படி இருக்கும்? ஏற்கனவே விகடன், குமுதம் வகையறாக்கள் நொறுக்குத் தீனி வாசிப்பையும், வீக் எண்ட் சமூக உணர்வையும் உருவாக்கி விட்ட நிலையில் இப்பேற்பட்ட பத்திரிகைகளில் பயிற்சி எடுத்து “தி இந்து”-வில் பணியில் சேர்ந்திருக்கும் அறிஞர் பெருமக்கள் என்ன சாதனையை ஏற்படுத்த முடியும்?

தி இந்துவின் 29.01.2015 இதழைப் பிரித்து இரண்டாம் பக்கத்திற்கு செல்லுங்கள். “கில்லாடி கேவான்” படக்கதையின் கீழே வலதுபுறம் முதல் பெட்டி செய்தியை படியுங்கள்!

“ஆண்டன் பாவ்லோவிச் செக்கோவ்” எனும் தலைப்பில் ராஜலட்சுமி சிவலிங்கம் என்பவர் எழுதியிருக்கிறார். புகழ் பெற்ற எழுத்தாளரான செகாவின் பிறந்த தினைத்தை முன்னிட்டு அவரைப் பற்றிய பத்து துணுக்கு செய்திகளை தொகுத்திருக்கிறார்கள்.

இலக்கிய வட்டத்திலும், இடதுசாரி கட்சிகளிலும் பிரபலமான செகாவைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்த போது………….

“‘இலக்கிய உத்தியிலும், வடிவமைப்பிலும் செகோவை மிஞ்சக் கூடியவர்கள் யாருமே இல்லை,” என்று ஷேக்ஸ்பியர் இவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.” –

இந்த வரிகள் தூக்கி வாரிப் போட்டன. (தற்போது “தி இந்து” இணையத்தில் இந்த கட்டுரையின் மேற்கண்ட வரிகளை சத்தம் போடாமல் தூக்கிவிட்டார்கள். அச்சு இந்துவில் மட்டும் இருக்கிறது)

பதினாறாம் நூற்றாண்டின் சேக்ஸ்பியர் (26.04.1564 – 23.04.1616) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த செக்காவை (29.01.1860 – 15.07.1904) எப்படி சந்தித்தார்?

இந்த அநீதியை புரிய வைக்கவே தலைப்பில் 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கஜினி முகமது, 21-ம் நூற்றாண்டில் வாழும் நடிகர் ரஜினியை சந்தித்தார் என்று வைத்திருக்கிறோம். தமிழ் கூறும் நல்லுலகம் மன்னிக்க!

பிறகு “தி இந்து” செய்தியை கூர்ந்து படித்த போதே இது சொந்த புரிதலில் எழுதாத ஒரு சுட்ட எழுத்து என்பது தெரிந்தது. சரி, எங்கே சுட்டிருப்பார்கள்? ஆங்கில விக்கிபீடியாவில் பார்த்த போது அதில் சுடுமளவு “தி இந்து” அறிஞர்களுக்கு அறிவில்லை என்பது உடன் தெரிய வந்தது. பிறகு தமிழ் விக்கிபீடியாவில் பார்த்தோம்.

ஆங்கில விக்கிபீடியாவில் ஒரு உண்மை குறித்து ஆராய்ந்தால் ஒன்றுக்கு பதில் பல பத்து ‘உண்மைகள்’ இருக்கும். எது உண்மை என்று குழப்பம் வந்துவிடும். தமிழ் விக்கி பீடியாவில் அந்தக் குழப்பம் இல்லை. முழுப் பொய்யையே அறுதி உண்மை போல அடித்து விடுவார்கள். இந்த அடித்து விடுதலை செய்பவர்கள் இந்துமதவெறியர்கள். உண்மை தெரிந்த தமிழ் விக்கி பீடியா நண்பர்கள் செய்வது அறியாது திகைத்து நிற்பார்கள் என்று ஊகிக்கிறோம். இது குறித்து தனியே எழுத வேண்டும்.

சரி இரண்டிலும் இல்லை என்று ஆன பிறகு பத்து நிமிட ஆராய்ச்சியில் “தி இந்து” சுட்ட செக்கோவ்  கதையை கண்டுபிடித்து விட்டோம். தோழர் மாதவராஜின் “தீராத பக்க”ங்களில் அந்தக் கட்டுரை இருக்கிறது. “செகாவுக்கு வயது 150” எனும் அந்தக் கட்டுரை மாதவராஜின் நண்பரும் விமரிசகருமான எஸ்.ஏ.பெருமாள் எழுதியிருக்கிறார்.

இந்த கட்டுரையை “தி இந்து” அறிஞர்கள் நிச்சயம் படிக்கவில்லை. பார்த்திருப்பார்கள். பிறகு அதில் ரேண்டமாக சில பத்திகளை எடுத்து அதை சுருக்கி போட்டிருக்கிறார்கள். வழக்கமாக “மண்டபத்தில் எழுதப்படும்” கவிதைகளுக்கு கூட இடையில் மானே, தேனே என்று போட்டு ஒரிஜினாலிட்டி காட்டுவார்கள். இந்தக் கருமத்தில் அதுவும் இல்லை. சரி மூலத்தையாவது சரியாக காட்ட வேண்டாமா?

இனி சில சாம்பிள்கள்……

இது பெருமாள் சொன்னது:

“அன்டன் செகாவின் கதைகள் மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க் பத்திரிகைகளில் வெளிவந்தன. ஐந்தாண்டு காலத்தில் தங்குதடையின்றி நானூறு சிறுகதைகளுக்கு மேல் எழுதிவிட்டார். 1884ம் ஆண்டு செகாவுக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது. அதன்பின் அவர் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் சென்றார். அங்கு செகாவின் எழுத்துக்கள் பிரபலமடைந்து புகழ்பெற்றிருந்தார்.”

இது தி இந்து சுட்டது:

“1879-ல் நிதியுதவி கிடைத்ததால், மருத்துவம் பயின்றார். மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டே சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். இவரது கதைகள் மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க் பத்திரிகைகளில் வெளிவந்தன. ஐந்தே ஆண்டுகளுக்குள் 400-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார்.”

இது பெருமாள் சொன்னது:

“44 ஆண்டு வாழ்க்கையில் செகாவ் 24 ஆண்டுகள் எழுதியிருக்கிறார்….

செகாவ் வாழ்ந்த காலத்தில் எழுத்தாளர்களுக்கும் நாடகம் எழுதும் ஆசை தீவிரமாக இருந்தது. அவரும் நாடகங்கள் எழுதினார். “இவானோவ்” என்ற அவரது நாடகம் 1887ம் ஆண்டு மாஸ்கோவில் அரங்கேற்றப்பட்டது. நாடக ரசிகர்களுக்கு அந்த நாடகம் புரியவில்லை………

பீட்டர்ஸ்பர்க்கில் அரங்கேற்றியபோது “கடல்நாரை” நாடகம் படுதோல்வியடைந்தது. பின்பு புகழ்பெற்ற இயக்குனர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி தனது மாஸ்கோ ஆர்ட் தியேட்டர் மூலம் கடல் நாரை நாடகத்தை மாஸ்கோவில் மீண்டும் மேடையேற்றினார். நாடகம் பெரும் வெற்றி பெற்றது. ஸ்டானிஸ்லாவ்ஸ்கியுடன் நட்பு ஏற்பட்ட பின்பு செகாவ் மேலும் மூன்று நாடகங்கள் எழுதினார்.மூன்றும் பெரும் வெற்றி பெற்றன….”

இது தி இந்து சுட்டது:

ஒரு கட்டத்தில் மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு, முழு நேர எழுத்தாளராகிவிட்டார். 44 ஆண்டுகால வாழ்க் கையில் 24 ஆண்டுகள் எழுதிக்கொண்டே இருந்தார். இவரது படைப்புகள் தமிழிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. நாடகங்களும் எழுதியுள்ளார். இவரது முதல் நாடகம் தி சீகல் படுதோல்வி அடைந்தது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புகழ்பெற்ற நாடக இயக்குநர் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி தனது மாஸ்கோ ஆர்ட் தியேட்டர் மூலம் இவரது நாடகம் மீண்டும் மேடையில் அரங்கேறி வெற்றி பெற்றது. அவருடன் நட்பு ஏற்பட்ட பிறகு, செகோவ் மேலும் மூன்று நாடகங்களை எழுதினார். அனைத்தும் வெற்றி பெற்றன.”

(ஆங்கில மொழியில் கல்வி பயின்றிருக்கும் “தி இந்து” அறிஞர்களுக்கு கடல் நாரை என்ற பெயர் தெரிந்திருக்காது. அதனால் அதை சீகல் என்று போட்டிருக்கிறார்கள்.)

இது பெருமாள் சொன்னது:

“புகழும் பணமும் மரியாதையும் செகாவுக்கு குவிந்த நேரத்தில் அவரது உடல்நலம் வேகமாகக் கெட ஆரம்பித்தது. காசநோயும் ரத்த வாந்தியும் அதிகரித்தது. அவரது கடைசி நாடகமான “செர்ரிப் பழத்தோட்டம்” 1904ல் அரங்கேறியபோது பல தடவை ரத்தமாக வாந்தி எடுத்தார். ஒரே நாளில் பல கதைகளை எழுத முடிந்த அவருக்கு ஒரு நாளில் நான்கு வரிகள் கூட எழுத முடியாமல் போய் விட்டது. ஆனால் அவரது நோயும் துன்ப துயரமும் அவரது இலக்கியப் படைப்புகளில் வெளிப் பட்டதேயில்லை. வாழ்க்கையை அதன் இயல் போடு ஒட்டியதாக நுட்பமான தகவல்களை மிக எளிமையாக எழுதினார். சுருக்கமாகவும், நகைச் சுவையோடும் மிகுந்த பரிவோடும் எழுதியிருப்பதை இன்றும் நாம் வாசித்து உணரலாம்.”..

இது தி இந்து சுட்டது:

“பணமும் புகழும் குவிந்த நேரத்தில் காசநோய் தாக்கியது. ஆனாலும் தங்கு தடையின்றி எழுதி வந்தார். வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்களை எதிர்கொண்டாலும் அவை எதையும் தன் எழுத்துக்களில் அவர் கொண்டு வந்ததேயில்லை. லியோ டால்ஸ்டாய், மக்ஸிம் கார்கி ஆகியோர் இவரது நண்பர்கள்.”

இது பெருமாள் சொன்னது:

“ஊழல் குடும்பம், ஊழல் அரசு,ஊழல் சமூகம் இவற்றைச் சகித்துக் கொள்ள முடியாத வராக செகாவ் திகழ்ந்தார். மனிதகுலம் இவற்றைச் சகித்துக் கொள்வதை அவர் ஒரு போதும் ஏற்கவில்லை. அதே சமயம் அவர் தன்னை ஒரு சீர்திருத்த வாதியாகவோ, தர்மோபதேசியாகவோ எண்ணிக் கொண்டதில்லை. வாழ்க்கையில் திறமையோடு வாழ வேண்டும். எதிலும் ஒரு அளவும், அழகும் வேண்டும். அனைவரும் நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது. வாழ்க்கை எவ்வளவு மோசமானதாக, சாரமற்றதாக இருக்கிறது என்பதை உறைக்கச் செய்வதே தனது நாடகங்களின் குறிக்கோள் என்றும் கூறினார். அதற்காக நான் நீதிகளைப் புகுத்தவில்லை என்று கூறினார்.”

தி இந்து கொடூரமான எடிட்டிங்கில் சுட்டது:

“தன் எழுத்துகளில் சீர்திருத்தக் கருத்துகளையோ தர்ம நெறிகளையோ உபதேசம் செய்ததில்லை. திறமையோடு, எதிலும் ஓர் அளவோடும் அழகோடும் செயல்பட வேண்டும். நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்பதே இவரது வாழ்க்கைத் தத்துவம்.”

(அடப்பாவிகளா சுடுவதைக் கூட ஒழுங்காக செய்ய தெரியவில்லையே. இந்த பத்தியில் செகாவ் சமூக நேயமுள்ள மனிதராகவே பெருமாளால் காட்டப்படுகிறார். அதை எந்த பொருளுமின்றி ஏனா தானோவென்று எழுதி அந்த எழுத்தாளரையே கொலை செய்திருக்கிறார்கள்.

இது பெருமாள் சொன்னது:

“வாழ்க்கையில் போலித்தனத்தையும், போலித்தனமான மனிதர்களையும் செகாவ் வெறுத்தார். நாடக மேடையில் நடிகர்கள் நடிப் பதைப் பார்த்து “இந்த நடிகர்கள் இன்னும் கொஞ்சம் குறைவாக நடித்தால் நன்றாக இருக்கும்.” என்பார். மாக்சிம் கார்க்கியைக் கூட செகாவ் கண்டித்துள்ளார். “உங்கள் எழுத்தில் அடக்கம் குறைவு. இயற்கையை வர்ணிக்கும் போது உரையாடலில் குறுக்கிடுகிறீர்கள். உங்கள் வர்ணனைகளைப் படிக்கும் போது அவை இரண்டு மூன்று வரிகளில் சுருக்கமாக நறுக்குத் தெறித்தாற் போல இருக்கலாம் என்று தோன்றுகிறது” என்று கார்க்கியிடம் கூறியுள்ளார். ஆனால் கார்க்கியை அவர் ஒரு போதும் புறக்கணித்ததில்லை. கார்க்கிக்கு எழுதிய கடிதமொன்றில் “நீங்கள் ஒரு அற்புதக் கலைஞர், அறிஞர், வாழ்வின் விசயங்களை அற்புதமாக உணர்ந்து எழுதுகிறீர்கள்” என்று செகாவ் குறிப்பிட்டுள்ளார்.”

“செகாவின் கதைகள், நாடகங்களில் சொற்கள் சிக்கனமாய் கையாளப்பட்டுள்ளதைக் காணலாம். அவரது நாடகங்களில் “மௌனம்” என்ற குறிப்பு இருக்கும். செர்ரிப் பழத்தோட்டத்தில் மட்டும் 35 மௌனங்கள் உள்ளன. முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சமூகத்தின் ஊழல்களையும், அராஜகங் களையும் அம்பலப்படுத்தியதால் லெனினும், ஸ்டாலினும் செகாவைப் பிற்காலத்தில் கொண்டாடினர். செகாவின் ‘ஆறாவது வார்டு’ தோழர் லெனினுக்கு மிகவும் பிடித்தமான கதையாகும்.”

இது தி இந்து சுட்டது:

போலித்தனத்தை வெறுத்தவர். வாழ்க்கையின் மிக நுட்பமான விஷயங்களை மிக எளிமையாக எழுதியவர். இவரது படைப்புகள் அதிக வார்த்தைகளில் இல்லாமல் மிகவும் சுருக்கமாகவும் நகைச்சுவையோடும் இருக்கும்.”

(போலித்தனத்தை வெறுத்தவர் என்ற வார்த்தைகளுக்கு பொருள் தெரிந்திருந்தால் இப்படி சுட முடியுமா? இல்லை ஒரு விசயத்தை புரிந்து கொண்டு சுருக்கமாக எழுத தெரிந்திருந்தால் இப்படி செகாவை குற்றுயிரும் கொலையுயிருமாய் சிதைத்திருக்கமுடியுமா?)

இது பெருமாள் சொன்னது:

சேக்ஸ்பியர்
சேக்ஸ்பியர்

“டால்ஸ்டாய், செகாவைப் பற்றி “எனக்கு ஷேக்ஸ்பியரின் நாடகங்களை உனது நாடகங்கள் தூக்கியடித்து விடுகின்றன. ஷேக்ஸ்பியர் வாசகனை எங்கேயோ அழைத்துச் செல்வது போல் உணர முடிகிறது. ஆனால் உனது படைப்புகளோடு எங்கே போவது? இங்கேதான் இருக்க வேண்டும்” என்று செகாவிடம் கூறினார். அதே டால்ஸ்டாய் “இலக்கிய உத்தியிலும் உருவ அமைப்பிலும் செகாவை மிஞ்சக்கூடியவர்கள் எவருமில்லை அவர் ஈடு இணையற்றவர்” என்றும் கூறினார். டால்ஸ்டாய் மணிக்கணக்காகப் பேசுவதை செகாவ் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பார். இந்தச் செகாவ் ஒரு நாத்திகன் என்று கூறிவிட்டுப் போவார்.”

இது தி இந்து கொலை செய்து கொடூரமாக சுட்டது:

“‘இலக்கிய உத்தியிலும், வடிவமைப்பிலும் செகோவை மிஞ்சக்கூடியவர்கள் யாருமே இல்லை,” என்று ஷேக்ஸ்பியர் இவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். வார்ட் நம்பர் 6, தி லேடி வித் தி டாக் உள்ளிட்ட மொத்தம் 568 சிறுகதைகளும் நாடகங்களும் எழுதியுள்ளார்.”

____________

நண்பர்களே,

ராயல் விக்டோரியன் மொழியில் படித்து தென்னிந்தியாவிலேயே தாங்கள்தான் அறிவுள்ளவர்கள் என்று “தி இந்து”வில் எழுதுபவர்களும், படிப்பவர்களும் கருதிக் கொள்கிறார்களே, அதன் யோக்கியதை எப்படி இருக்கிறது பாருங்கள்!

ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கும் வாசகரை தமிழ் “தி இந்து” பத்திரிகை மதிக்கும் இலட்சணம் இதுதான். இது ஏதோ இந்த துணுக்கை எழுதிய ராஜலட்சுமி சிவலிங்கத்தின் தவறாக நாம் பார்க்கவில்லை. “தி இந்து” இதழின் ஆசிரியருக்கே கூட மாஸ்கோ எங்கு இருக்கிறது, சேக்ஸ்பியர் எந்த மொழியில் எழுதினார், செகாவ் எந்த காலத்தில் வாழ்ந்தார் போன்ற பொது அறிவு விவரங்கள் தெரியுமா என்பது சந்தேகமே.

பொது அறிவே இருக்காது என்றால் இவர்கள் வரலாறு, அறிவியல், அரசியல் போன்ற துறைகளின் அரிச்சுவடி கூட அறிந்திருக்கமாட்டார்கள். செகாவை விடுங்கள், இதே தேதியிட்ட “தி இந்து”வில் 11-ம் பக்கத்தில் வந்த செய்தியைப் பாருங்கள்.

“மேடைகளில் ஆங்கிலத்தில் சரளமாக பேச மோடிக்கு உதவும் அதிநவீன ‘டெலிபிராம்டர்’ “ எனும் செய்தியை படியுங்கள். ஆங்கிலம் சரளமாக பேச தெரியாத மோடி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களைப் போல கண்ணுக்கு முன்னே ஓடும் பெரிய எழுத்துக்களை படித்து உரையாற்றுகிறாராம். அவர் படிக்கும் கருவியை நாம் பார்க்க முடியாது என்பதால் அவர் நம்மை பார்க்கிறார் என்று நாம் நினைக்கிறோம். இது செய்தி.

இந்த செய்தியை கண்ணோட்டமின்றி இந்த அளவில் போட்டால் கூட தொலையட்டும் சனியன் என்று விட்டுவிடலாம். மாறாக இத்தகைய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் மோடி முன்னணியில் இருக்கிறார் என்று அடித்து விடுகிறார்கள். இது செய்தியல்ல, கண்ணோட்டம். அதாவது மோடிக்கு ஜால்ரா அடிக்கும் வெட்கம் கெட்ட தனம்.

ஆங்கிலம் தெரியாது என்று காட்டினால் அது ஒன்றும் பிழையில்லை. மாறாக அப்படி ஒரு பிரமையைக் காட்டி ஷோ பண்ணும் மோசடியான மனிதராக மோடி திகழ்கிறார். கோட்டு சூட்டிலேயே தனது பெயரை போட்டு ரசிக்கும் அந்த நார்சிச மனிதனைக் கண்டிக்காமல் அல்லது அற்பத்தனமாக நடக்கிறார் என்று கூட பேசாமல் ஏதோ சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டு டெக்னாலஜியில் பட்டையைக் கிளப்புகிறார் என்று ஏன் எழுத வேண்டும்?

ஆகவே விளம்பரம் தரும் முதலாளிகள், அரசு, ஆளும் கட்சிகளின் தயவில் பிழைக்கும் இந்த கனவான்களுக்கு சொந்த அறிவு என்பது எப்படி இருக்க முடியும்?

கோயம்பேட்டில் கருவாடு விற்பதற்காக இவர்கள் நடத்திய அழுகுணி ஆட்டத்தை ஏற்கனவே எழுதியிருக்கிறோம். அதில் பெரும்பான்மை மக்களின் கருவாட்டை விட சில பத்து மூக்குகளின் பிரச்சினையே இவர்களை அழச் செய்கிறது.

நம்மைப் போன்றவர்களுக்கு செகாவை படிக்கவும் பிடிக்கவும் தேவை இருக்கிறது. இவர்களுக்கு? “அஜித் படத்துக்கு வந்த மிரட்டல் கடிதம்” என்று அரைப்பக்கத்தில் செய்தி போட்டு தமிழுக்கு சேவை புரியும் “தி இந்து” கனவான்களுக்கு செகாவுக்கும் செக்குமாட்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியும்?

சரி, போகட்டும் விடுங்கள்!

உலகம் போற்றும் ஒரு எழுத்தாளரின் பிறந்த நாளில் அவரை எழுத்தில் கொலை செய்த “தி இந்து” அதற்கு பிராயச் சித்தம் செய்ய வேண்டும்.

கீழ்க்கண்ட மூன்றில் ஒன்றை தெரிவு செய்யலாம்.

1.   இளம் வாசகருக்கு செகாவைப் பற்றி அழகாக அறிமுகம் செய்த தோழர் பெருமாள் மற்றும் மாதவராஜுக்கு தலா ஒரு இலட்சம் அபராதத் தொகை கட்ட வேண்டும். இந்த தொகை “தி இந்து” சேர்மேன், ஆசிரியர், இலவச இதழ் ஆசிரியர், நடுப்பக்க ஆசிரியர் போன்ற இதர ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து அளிக்க வேண்டும்.

2.   அபராதம் அதிகம் என்று கருதினால் வினவு அலுவலகத்திற்கு ஏதேனும் ஒரு  அதிகாலையில் வந்து அனைத்து ஆசிரியர்களும் 100 தோப்புக் கரணம் போடவேண்டும்.

3.   இதுவும் சரியில்லை என்றால் மூன்று நாட்களுக்கு “தி இந்து” பத்திரிகையை நிறுத்த வேண்டும்.

இப்படியெல்லாம் நடக்காமல் செகாவை செதுக்கி எழுதிய அந்த நபரை திட்டிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கவும் அவர்கள் போகலாம். நம்மைப் பொறுத்த வரை எழுதியவரை விட எடிட்டரையே குற்றம் சாட்டுகிறோம்.

“தி இந்து” தமிழ் இதழ் வெளியான போது உலக அரசியலை “குலோப் ஜாமூன்” என்று பா.ராகவன் எழுதிய தொடரை பார்த்த போதே குமட்டிக் கொண்டு வந்தது. டவுண்லோடு பதிப்பகத்திலிருந்து பல்வேறு டவுண்லோடு அதுவும் அமெரிக்க பிரச்சாரக் குப்பைகளை டன் டன்னாக தரவிறக்கி வரலாறு என்று உளறும் ஒரு நபரை போய் உலக அரசியலை எழுத வைக்கிறார்களே என்று அதிர்ச்சியடைந்தோம்.

பத்திரிகை, பத்திரிகையாளர்கள் என்ன தரத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. உண்மையில் இளைஞர்களுக்கும், மக்களுக்கும் சேவையாற்ற கூடிய அறிஞர்கள், செய்தியாளர்கள் அனைவரும் வெளியே வேறு வேறு வேலையில் இருக்கிறார்கள். விளம்பரக் கம்பெனியில் பிழைப்பவர்கள் பத்திரிகைகளை நடத்துகிறார்கள்.

எனினும் செகாவுக்கு இழைக்கப்பட்ட மகாவிஷ்ணுவின் அநீதியை அம்பலப்படுத்தியிருக்கிறோம் என்பதுடன் முடித்துக் கொள்கிறோம்.

வினவில் வெளிவந்த செகாவ் சிறுகதை: சிறுகதை: எழுத்தரின் மரணம்! – ஆன்டன் செகாவ்

பதிவர் தீபா மொழிபெயர்த்த செகாவ் சிறுகதைகள்:

அண்ணலும் நோக்கினான் அம்பானியும் நோக்கினான் !

2

ராமாயண குடியரசு

மோடி, ஒபாமா, வீடணன்
வீடணன் என்றால் என்ன மோடி என்றால் என்ன தேசத்துரோகம் ஒன்றுதான்!

ராமா என்றால் என்ன
ஒபாமா என்றால் என்ன
ராமாயணம் ஒன்றுதான்!

வீடணன் என்றால் என்ன
மோடி என்றால் என்ன
தேசத்துரோகம் ஒன்றுதான்!

அசுரநிலத்தை ஆக்கிரமிக்கும்
ஆரண்ய காண்டத்து காட்சிகளை
குடியரசு தின அணிவகுப்பில்
கண்டு மகிழ்கிறான்
அந்நிய ராமன்…

நிதி மூலதனத்தின் ராமாயணத்தில்
தசரதனுக்கு மட்டுமல்ல
தரகு முதலாளி, கார்ப்பரேட்டுகளுக்கும்
அறுபதினாயிரம் ‘கம்பெனிகள்’

அண்ணலும் நோக்கினான்
அம்பானியும் நோக்கினான்….
ஒத்த ரூபாய் தேசியக்கொடியை
உனக்கும் எனக்கும்
குத்திவிட்டு
ஒட்டுமொத்த தேசத்தையும்
பத்தி விட்டது
பலராமன் கீர்த்தி!

ஒபாமா, டாடா, அம்பானி
அண்ணலும் நோக்கினான் அம்பானியும் நோக்கினான்…. ஒத்த ரூபாய் தேசியக்கொடியை உனக்கும் எனக்கும் குத்திவிட்டு ஒட்டுமொத்த தேசத்தையும் பத்தி விட்டது பலராமன் கீர்த்தி!

வெள்ளை மாளிகையின்
விரல் அசைவிலேயே
ஒடிந்துவிட்டது சிவ தனுசு!

கொள்ளை கொள்ளும்
பராக்கின் பார்வையிலேயே
முடிந்து விட்டது
மோடியின் மனசு!

நாட்டின் நலன்களை அறுத்து
நரமாமிசம் படைக்கும்
குஜராத் குகனைப் பார்த்து
‘மோடியுடன் அய்வரானோம்’
என முதுகில் தட்டிய காட்சியில்
அயோத்தி ராமனையே அசத்திவிட்டான்

அமெரிக்க ராமன்!?
திடுக்கிடும் காட்சிகளுக்கு
பஞ்சமில்லை….

அன்னிய மூலதனத்தால்
தேசமே நிர்வாணம்,
பண்ணிய கைகளுக்கு
பரிசாக
பனாரஸ் பட்டுபுடவை நூறு!

 ஒபாமாவுக்கு குடை
மோடியால் ஒபாமா மேல் விழுந்த ஒரு சொட்டு மழைத்துளியை தாங்க முடியவில்லை!

தாயின் வயிறு கிழித்து
சிசுவைக் கொன்ற
மதவெறியையே
தாங்கிக் கொள்ள முடிந்த மோடியால்,
ஒபாமா மேல் விழுந்த
ஒரு சொட்டு
மழைத்துளியை தாங்க முடியவில்லை!

குடியரசு தின விழாவில்
குடைபிடிக்க நேர்ந்த சங்கடத்திற்காக
டுவிட்டரில் இதயம் கனக்கிறது,

இயற்கை அறியா
இந்த அடிமைத்தனத்தில்
விழுந்த மழைத்துளி துடிக்கிறது!

அனுமானுக்காவது
நெஞ்சை திறந்து காட்ட வேண்டிய
நிர்ப்பந்தம் இருந்தது
மோடிக்கு முகமே பிம்பம்!

இனி
ஒபாமா இருக்கும் இடம்தான்
மோடிக்கு அயோத்தி.

அனுமானுக்கு கணையாழி…
ஆர்.எஸ்.எஸ். சுக்கு அணு உலை…

அத்வானிக்கு பத்ம விபூஷண்
பரதனுக்கு செருப்பு அத்வானிக்கு பத்மவிபூஷன்

உள்ள சுயசார்பனைத்தும்
உருவப்பட்ட பிறகும் கூட
“கண்டேன் சீதையை” என
களிப்புடன் கத்தும்
‘சுதேசி’ குருமூர்த்தி!

உருக்கமான காட்சிகளும்
உண்டு…
பரதனுக்கு செருப்பு
அத்வானிக்கு பத்மவிபூஷன்
ஒபாமாவிடம் முறையிட
கைகேயியைக் காணோம்…

“நான் சாதாரண
சமையல்காரர் பேரன்”
-இது ஒபாமா!

“நான் சாதாரண
தேநீர் விற்றவன்”
-இது மோடி

இடி அமீன் கூட
ஒரு சமையல்காரர்,
ஓ.பி.கூட
ஒரு டீக்கடைக்காரர்!
அதுக்காக?

இந்தத் தகுதிக்கு
நீங்கள் ஓட்டல் வைக்கலாம்,
நாட்டை விற்கலாமா?

வெற்றிலைப் பொட்டலத்தில்
பழைய அய்ந்து ரூபாய் தாளை
பார்த்து பார்த்து
பத்திரப்படுத்தும்
ஒரு உழைப்பாளிக்கு தெரியாது

அமெரிக்காவக்கு அடிபணியும் மோடி
இப்படியெல்லாம் பேசி வங்கியை விற்க…ரயில்வேயை விற்க… ராணுவத்தை அமெரிக்காவிற்கு விற்க… வரும் அன்னியனுக்கு நாட்டையே காட்டிக் கொடுக்க..

இப்படியெல்லாம் பேசி
வங்கியை விற்க…
ரயில்வேயை விற்க…
ராணுவத்தை அமெரிக்காவிற்கு விற்க…
வரும் அன்னியனுக்கு
நாட்டையே காட்டிக் கொடுக்க..
ஒரு உழைப்பாளிக்கு தெரியாது!

புரிந்து கொண்டோம்,
ராம ராஜ்யத்தின்
குறியீட்டு எண்
தேசத்துக்கே நாமம்!

எல்லா இழவையும்
எடுத்துவிட்டு
கங்கைக் கரையில்
கம்பீரமாக ஒலிக்கிறது…
திவச மந்திரம்…

ஆதிக்க ஆவியில் கலக்கிறது காவி
ஒபாமா பிதா….
அமெரிக்க கோத்திரம்…
ஆர்ய பிதுர் யஹா..!

– துரை. சண்முகம்