Thursday, June 12, 2025
முகப்பு பதிவு பக்கம் 717

கோவை மாணவர்களின் எழுச்சி!

32

கோவை மாணவர்களின் எழுச்சி

ஜெனிவாவில் கூட இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வர இருக்கும் தீர்மானத்தை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். போராட்டத்தின் மூன்றாவது நாள் அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மாணவர்களின் போராட்டமும் கைவிடப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை துவக்கினர். அதன் ஒரு பகுதியாக கோவை சட்டக்கல்லூரி மாணவர்களும் போராட்ட களத்திற்கு வந்தனர். சட்டக்கல்லூரிக்கு உள்ளேயே போராட்டத்தை நடத்தினால் பெரிய அளவில் தாக்கம் இருக்காது என்பதால் நகரத்தின் மையத்தில் இடம் தேடினர். இடம் கிடைக்காததால் ம.தி.மு.க. அலுவலகத்தில் அனுமதி பெற்று சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர்.

மாணவர்கள் எதிர்பார்த்தபடியே ஊடகங்களின், மக்களின் கவனத்தை ஈர்த்தது. சமூக ஆர்வலர்கள் அமைப்புகள் தலைவர்கள் என பலரும் வந்து வாழ்த்தி உற்சாகமூட்டினர். இதே வேளையில் தமிழகம் முழுவதும் அரசு சட்டக்கல்லூரி கலைக்கல்லூரி மாணவர்கள் வீச்சாக போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதை தடுக்க இயலாத தமிழக அரசு அனைத்து அரசு சட்டக்கல்லூரிக்கும், கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் காலவரை இன்றி விடுமுறை விட்டது.

விடுமுறை விட்டால் போராட்டம் பிசுபிசுத்துப்போய்விடும் என்று தமிழக அரசு மனப்பால் குடித்த வேளையில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு உண்ணாவிரத பந்தலுக்கு வந்தனர். முதலில் இந்துஸ்தான் கல்லூரி மாணவர்களும் அவர்களுடன் எஸ்.என்.எஸ். கல்லூரி மாணவர்களும் வந்தனர். இரண்டு கல்லூரி மாணவர்களும் இணைந்து ஒரு பேரணி நடத்தினர் பின் இதில் திருப்தியடையாத மாணவர்கள் வீரியமான போராட்டத்தில் இறங்கும் விதமாக ரயில் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.

இதே வேளையில் சட்டக்கல்லூரி மாணவர்களில் ஒரு பிரிவு மாணவர்கள் போராட்டத்தை தீவிரபடுத்தும் விதமாக விமான நிலையத்தை முற்றுகையிட்டு அங்குவைத்தே ராஜபக்சேஷவின் உருவபொம்மையை எரித்தனர். இப்போராட்டம் எளிதில் நடந்துவிட வில்லை. விமானநிலையத்தில் இருந்த மாணவர்களை தடுக்க முயல அதை மீறி மாணவர்கள் உள்ளே நுழைய போலீசார் தாக்க துவங்கியுள்ளனர். மாணவர்கள் அதை முறியடித்து உள்ளே நுழைய வட இந்திய போலீஸ் துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவோம் என்று மிரட்டியும் பணியாமல் உள்ளே நுழைந்து அமெரிக்க அரசு, இந்திய அரசு ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிரான முழக்கமிட்டு தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர். இந்த வேளையில் அனைத்து தனியார் கல்லூரி மாணவர்களும் போராட்ட களத்திற்கு வந்துவிட்டனர்.

ஆங்காங்கே சாலைமறியல், உண்ணாவிரதம், உள்ளிருப்பு போராட்டம், வகுப்பு புறக்கணிப்பு, பாரதியார் பல்கலைகழகத்தின் தொடர் உண்ணாவிரத போராட்டம் என போராட்டம் தீவிரமடைந்ததை கண்டு பீதியுற்ற தமிழக அரசு அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை விட்டது. ஆனால் மாணவர்கள் இதற்கெல்லாம் பின்வாங்குவதும் இல்லை. உடனடியாக மாணவர்கள் தங்களுக்குள் கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.

மாணவர்கள் கூட்டமைப்பு துவக்கம்

தமிழீழ விடுதலைக்காக மாணவர்கள் கூட்டமைப்பு கோவை பகுதியை மையமாக முன்வைத்து மாணவர்களின் முன்முயற்சியில் துவக்கப்பட்டது. கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்களின் தலைமையின் கீழ் வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் பல்வேறு பகுதியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறத் துவங்கின. மாணவர்கள் ஓர் அமைப்பாக ஒருங்கிணைந்தபின் போராட்டம் முன்னிலும் பலமடங்கு வீரியத்துடன் நடைபெறத்துவங்கியது. குறிப்பாக நேரு மாணவர்கள் நடத்திய போராட்டம்.

நேரு கல்லூரி மாணவர்களின் எழுச்சி

முந்தைய நாள் இரவு திட்டமிட்டு குறைந்தது நூறில் (100) இருந்து இருநூறு(200) பேர் பங்கேற்பர் என்ற எதிர்பார்ப்புடன் மறுநாள் காலை அணிதிரட்ட ஆயிரத்து ஐநூறு பேர் கலந்து கொண்டது மாணவர்களின் உணர்வையும் வளர்ச்சியையும் காட்டுகிறது. இதில் பெருமகிழ்ச்சிக்குறிய மற்றொரு செய்தி என்னவென்றால் கலந்து கொண்டவர்களில் பாதிபேர் மலையாளிகள் மேலும் கணிசமான அளவு தெலுங்கு மற்றும் கன்னடம் பேசுபவர்கள்.

இனவெறி, மொழிவெறி, மாநில மனோபாவத்தையும் கடந்து மாணவர்கள் ஓர் வர்க்கமாய் ஒன்றிணைந்து போராட்ட களத்திற்கு வந்தனர். துவக்கத்தில் உண்ணாவிரதம் இருப்பது அல்லது அடையாள போராட்டம் நடத்துவது என்ற எண்ணத்தில் வந்தவர்கள் பின்பு போராட்டத்தை தீவிரப்படுத்த எண்ணினர். எனவே அருகில் உள்ள தனலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்களையும் இணைத்துக்கொண்டு மதுக்கரையில் உள்ள மத்திய அரசின் இராணுவ ஆயுதக்கிடங்கை முற்றுகையிடக் கிளம்பினர். கல்லூரியிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கரைக்கு பேரணியாகவே முழக்கமிட்டபடி கிளம்பினர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுச்சியுடன் கிளம்ப நான்கு இடங்களில் காவல்த்துறை தடுத்து நிறுத்த முயன்றது.

தடுப்புகளை வீசி எரிந்துவிட்டு போலீசையும் இடித்து தள்ளி விட்டு முன்னேறியது மாணவர் பட்டாளம். ஆயுதக்கிடங்கை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். சுமார் இரண்டுமணி நேரம் போராட்டம் தொடர்ந்தது. இந்திய  ராணுவம் துப்பாக்கியை காட்டி மிரட்டிப்பார்த்தனர், போலீஸ் லத்தியை காட்டி மிரட்டி பார்த்தது எதற்கும் அஞ்சாமல் மாணவர்கள் துணிந்து நின்றபோது துப்பாக்கிகளும், லத்திகளும் பணிந்தன. மாணவர்களிடம் கெஞ்சின. மாணவர்கள் எழுச்சியுற்று வீதிக்கு வந்தால் அரசின் அடக்குமுறைக் கருவிகள் அஞ்சி நடுங்குவதையும் கெஞ்சிப்பணிவதையும் நேரில் பார்க்க வேண்டுமே அந்தக் காட்சி வீரியமான போராட்டங்களின் மூலம் அதிகார வர்க்கத்தை பணிய வைக்கமுடியும் என்பதை மாணவர்கள் தங்கள் போராட்ட அனுபவத்தின் மூலம் உணர்ந்தனர்.

பின் போராட்டத்தை முடித்துக்கொண்டு கிளம்பிய மாணவர்கள் மன நிறைவு இன்றி பிரிந்து சென்று சென்று சாலைமறியல் ரயில் மறியலிலும் ஈடுபட்டனர். மாணவர்களை கைது கூட செய்ய முடியாமல் விட்டு சென்றது போலீஸ்.

என்.ஜி.பி. கல்லூரி மாணவர்களின் போர் !

மறுநாள் போராட்டச் செய்திகள் பல்வேறு இடங்களில் இருந்து வந்துகொண்டே இருந்தன. எஸ்.என்.ஆர். கல்லூரி, சி.எம்.எஸ்., பி.எஸ்.ஜி. மாணவர்களின் போராட்டம், பள்ளி மாணவர்கள் +2 தேர்வெழுதிவிட்டு தொண்டாமுத்தூர் சாலைமறியல், ஆலாந்துறை பள்ளி மாணவர்களின் போராட்டம், குனியமுத்தூர் பள்ளி மாணவர்களின் போராட்டம், கிருஷ்ணா கல்லூரி, கற்பகம் கல்லூரி கிராமப்புறங்களில் தன்னெழுச்சி போராட்டம், ஈரோடு, திருப்பூர் மாணவர்களின் போராட்டம் என பரவிக்கொண்டிருந்தது. இவ்வேளையில் என்.ஜி.பி. கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆயத்தமாகி போராட்ட கமிட்டிக்கு அழைப்பு விடுத்தனர்.

போராட்டகமிட்டி பிரதிநிதி சென்று பேசிய போது ஏதாவது பிரச்சினை வருமா? போலீஸ் அடிக்குமா? கொஞ்சம் பயமாக இருக்கிறது இயல்பாக தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர். இவ்வேளையில் நூற்றுக்கணக்கில் போலீஸ் மாணவர்களை சுற்றி வளைத்து நின்றிருந்தது. இதை உடைத்துக் கொண்டு எப்படி வெளியேறுவது. நாம் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறோம்.என்பதை உணர்ந்து அருகாமை கல்லூரி மாணவர்களை துணைக்கு அழைத்தனர். மாணவர் கூட்டமைப்பும் மாணவர்களை அழைத்து வந்தது.

கல்லூரிக்குள் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து செல்வது போல் வெளியேறி விமானநிலையத்தை நோக்கி சென்றனர். விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு மாணவர்கள் வருவார்கள் என எதிபார்த்து போலீஸ் படை காத்திருந்தது. திடீரென்று முழக்கமிட்டு உள்ளே நுழைந்த மாணவர்களை தடுப்புகளை வைத்து (பேரிகார்டு) தடுக்க முயன்றது. ஒல்லியான மாணவன் ஒருவன் எட்டி உதைக்க பேரிகார்டு எகிறியது.

தடுப்பை உடைத்துக் கொண்டு மாணவர்கள் உள்ளே செல்ல பின்னே போலீஸ் ஓட போர்க்களமானது விமானநிலையம். ஒரு வழியாக மாணவர்கள் ஒவ்வொருவரையும் பிடித்து நிறுத்தியது போலீஸ். ஒரு மாணவனை பிடிக்க மூன்று போலீஸ் நான்கு போலீஸ் என தேவைப்பட்டது. ஒரு வழியாக தடுத்து நிறுத்தி விட்டோம் என போலீஸ் நினைத்து பெருமூச்சு விட எங்கிருந்தோ வந்த மற்றொரு மாணவர் பட்டாளம் விமானநிலையத்துக்குள் பாய்ந்து முன்னேற செய்வதறியாது நிலைகுலைந்து போனது போலீஸ் படை. “போதும் நிறுத்திக் கொள்ளுங்கள் எங்களால் முடியவில்லை என்று கெஞ்சத் துவங்கி விட்டார்கள்”.

கமிஷனர் போலீசின் அதிகாரம் மாணவர்களின் காலைப் பிடித்து கெஞ்சிக்கொண்டிருந்தது. “நாங்கள் உடனே நிறுத்தமாட்டோம் பதினைந்து நிமிடம் முழக்கமிட்டபின் செல்வோம்” என்றனர் மாணவர்கள். வேறு வழியின்றி அனுமதித்தது போலீஸ். போராட்டத்திற்கு பின் கைதான மாணவர்களை மண்டபத்திற்கு அழைத்துச் சென்ற போது வழிநெடுக முழக்கமிட்ட படியே மாணவர்கள் சென்றனர்.

மாணவர்களை கைது செய்து வைத்திருந்த மண்டபத்தை சுற்றி இருந்த பொதுமக்கள் விஷயத்தை கேள்விப்பட்டு மாணவர்களை சந்திக்க வந்தனர். வரும் போது பலகாரம், உணவு, தேநீர் போன்றவற்றை கொடுத்து தங்களின் ஆதரவையும் வாழ்த்துதளையும் தெரிவித்தனர். உங்களின் போராட்டம் சிறப்பானது நீங்கள் இத்துடன் நிறுத்தக்கூடாது நாட்டையே நீங்கள் மாற்ற வேண்டும் என்று வாழ்த்தினர்.

பேரணிக்கு  திட்டமிடல்

மாணவர்கள்  போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் மாணவர்களை ஒருங்கிணைந்து  மாணவர் கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்ட நிலையில் இதற்கு தலைமை தாங்கிய கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் முனைப்புடன் ஈடுபட்டு வந்தனர்.

பேரணிக்கான ஏற்பாடுகள் நடந்தேறின குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டாலும் மார்ச் 19 அன்று  காவல் துறையின் அனுமதி மறுத்த நிலையில் தான் ஏற்பாடுகள் நடந்தேறின. தடையை மீறி நடத்துவது என்று மாணவரகள் உணர்வு பூர்வமாக தீர்மானித்திருந்தனர். மாணவர்களின் உறுதியை கண்டு அஞ்சிய காவல்துறை மார்ச் 18 அன்று இரவு அனுமதியளித்தது.

வெற்றிகரமான பேரணி:

மார்ச் 19 அன்று  காலை முன்னணியாளர்கள் பேரணி துவங்கும்  இடத்திற்கு வந்தனர். உளவுத் துறை அவர்களை கேமராவில் படமெடுத்து. அதன் மூலம் மிரட்ட முயன்றது. மாணவர்கள் அதற்கு அஞ்சாமல் படம் எடுப்பதை தடுத்து நிறுத்தினர். முந்தைய நாள் பத்திரிகையில் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் பெயர், முகவரிகள் சேகரிக்கப்படுகின்றன. பின்னாளில்  அரசு வேலைகளில் சேரும்போது அரசுக்கு எதிராக போராடியது தெரிந்தால் வேலை கிடைக்காது என்ற செய்தியை வெளியிட்டு மாணவர்களை பயமுறுத்த முயன்றது.

இவை அனைத்தையும் மீறி மாணவர்கள் பேரணி துவங்கும் இடத்தில் குவியத் துவங்கினர். சுமார் 6,000 மாணவர்கள் கலந்து கொண்ட பேரணி எழுச்சியுடன் துவங்கியது. இந்திய அரசையும் அமெரிக்க தீர்மானத்தையும் ஐக்கிய நாடுகள் சபையின் மோசடியையும் அம்பலபடுத்தியும், தேசிய கட்சிகள், ஒட்டு கட்சிகளின் துரோகத்தையும் தோலுரித்தும் முழக்கங்கள்  எழுப்பினர்.   பறை இசை முழக்கத்துடன் பேரணி துவங்கியது. சாலையின் இரு பக்கத்திலும் கூடி நின்று கவனித்தனர். “வேடிக்கை பார்க்கும் தமிழினமே வீதிக்கு வந்து போராடு என்ற முழக்கம் அவர்களையும் போராட அழைத்தது.

போலீஸ் ஏற்படுத்திய தடையை முறியடித்த மாணவர்கள்:

மாணவர்கள் போராட்டம் பிரதான சாலையில் முன்னேறிச் சென்ற போது, போலீஸ் வழிமறித்து. தடுப்புகளையும், 2 தனியார் பேருந்துகளையும் நிறுத்தி வைத்து எதிரே போலீஸ் பட்டாளத்தையும் நிறுத்தி வைத்து ஆள் அரவமற்ற மாற்று பாதையில் செல்லச் சொன்னது. மாணவர்கள் மறுத்தனர். “முன்னேறுவோம் முன்னேறுவோம் தடைகளை உடைத்து முன்னேறுவோம் என்ற தொடர் முழக்கம் மாணவர்களை எழுச்சியுறச் செய்தது. மாணவர்களிடமிருந்து கற்கள் பறந்தன. பேருந்துகளின் கண்ணாடிகள் நொறுங்கியது, உடனே பேருந்தை எடுத்து விட்டனர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு, போலீஸ் படையை விலக்கிக் கொண்டு மாணவர் படை வெற்றி முழக்கமிட்டு முன்னேறியது.

போலீஸ் படையோ எதுவும் செய்ய இயலாமல் கையை பிசைந்து கொண்டு விலகி நின்றது. காந்திபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டு பின் உண்ணாவிரதப் பந்தலுக்கு சென்று சட்டக் கல்லூரி மாணவர்களின்  உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.  உண்ணாவிரதப் போராட்டம் அரசை நிர்பந்திக்காது எனவே தீவிர போராட்டதிற்கு தயராகும் விதமாக உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் உண்ணாவிரதத்தை  கைவிட்டு தீவிர போராட்டத்திற்கு  மாணவர்களை அரை கூவி அழைத்து பேரணியை நிறைவு செய்தனர்.

சுமார் மூன்று மணிநேரம் நடந்த பேரணி மாணவர்களையும் மக்களையும் எழுச்சியுற செய்து அடுத்தகட்ட போராட்டத்திற்கு உணர்வூட்டியது.

பேரணி முடித்து சென்ற மாணவர்களில் ஒரு பிரிவினர் ரயிலை மறித்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். மறுநாளும் போராட்டங்களும் தீவிரமடைந்தன. தற்போதைய போராட்டங்கள் அனைத்தும் போர்குணமான, துணிச்சலான போராட்டங்கள் ஆகும்.  மாணவிகள் மட்டுமே பங்கேற்ற ஆர்பாட்டம், 14 மாணவிகள் மட்டும் பங்கேற்று காட்டூர் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை போராட்டம், ராணுவ பயிற்சி கல்லூரி முற்றுகைப் போராட்டம் அதை வீடியோ படம் எடுத்த மத்திய உளவுத் துறைக்கு அடி உதை அவருடைய பேண்ட் கிழிந்து போனது, சொட்டைத் தலையிலேயே அடித்துள்ளனர். இதர சீருடை போலீசார் வந்து காப்பாற்றி செல்லவேண்டி வந்தது. அதன் பின் போலீஸ் தரப்பில் யாரும் போட்டோ பிடிக்கவில்லை. தந்தி அலுவலகம் முற்றுகை, வருமானவரி அலுவலகத்தை கைப்பற்றி 1 ½    மணி நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. வங்கி பி.எஸ்.என்.எல்., முற்றுகை என மத்திய அரசின் நிர்வாக அதிகார மையங்கள் அனைத்தையும் இலக்கு வைத்து போராடினர். போலீஸ் துறையோ வெந்து நொந்து போனது.

தொடர்ச்சியான இந்த போராட்டம் மாணவர்களை  வெகுவாக பயிற்றுவித்துள்ளது.

  • ஜாதி, மதம், இனம் கடந்து மாணவர்களை ஒரு வர்க்கமாய் ஒன்றிணைத்துள்ளது.
  • அமைப்பாக இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தியது.
  • சமூக பிரச்சினையின்பால் கவனத்தையும், அக்கறையும் கொள்ள செய்தது.
  • போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருக்க கூடாது என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. தானும் இதில் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற சமூக பண்பை விதைத்துள்ளது.
  • குறிப்பாக சமூகம் சார்ந்த எந்த போரட்டத்திலேயும் பங்கேற்காத மருத்துவக் கல்லூரி மாணவர்களையும், விவசாய கல்லூரி மாணவர்களையும், பள்ளி மாணவர்களையும் வீதிக்கு வரவைத்தது.
  • பெண்களை கணிசமான அளவு ஆண்களுக்கு இணையாக போராட்ட களத்திற்கு கொண்டு வந்துள்ளது.
  • பல மாணவ தலைவர்களை, போராளிகளை, கவிஞர்களை, பேச்சாளர்களை உருவாக்கி சமூகத்துக்கு அளித்துள்ளது.
  • நீண்ட நேரம் அமர்ந்து அரசியல் சார்ந்த சொற்பொழிவுகளை கவனிக்க, விவாதிக்க வைத்துள்ளது.
    ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளை தானும் நம்பாது சமூகத்துக்கும் போதிக்க வைத்துள்ளது.
  • கல்லூரி நிர்வாகத்தை கண்டு, போலீசை கண்டு, அதிகாரிகளை கண்டு அஞ்சாமல் அடக்குமுறைகளை தன் வர்க்கத்தின் ஒற்றுமையின் மூலம் எதிர்கொள்ள பயிற்றுவித்தது.
  • கல்லூரி விட்டு தங்கள் சொந்த ஊருக்கு சென்றாலும் அங்கும் எழுச்சிகளை ஏற்படுத்த முனைவது.

எனினும் இத்தகைய எழுச்சி பெற்ற மாணவர் வர்க்கம் இனவாத கண்ணோட்டத்தில் பீடிக்கப்பட்டும், அரசியல் அறியாமையுடனும் சரியான அமைப்பை தேர்ந்தெடுக்க தெரியாமலும் குழப்பத்தில் இருப்பது ஒரு யதார்த்தம். எனினும் தனக்கான புரட்சிகர கடமையை விரைவில் உணர்ந்து தயாராகும் என நம்பலாம் ஏனெனில் தேசத்தின் எதிர்காலம் அவர்கள் கையில்.

பின்குறிப்பு: 1.  நாம் தமிழர் கட்சியின் தலையீடு காரணமாக மாணவர்களின் ஒற்றுமையில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதை விரைவில் உணர்ந்து மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும்.

2. இனி போராட்டம் நடைபெறாது என்ற தைரியத்தில் கல்லூரியை திறந்தது சி.எம்.எஸ். கல்லூரி நிர்வாகம். மீண்டும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம், ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு என போராட்டம் வளர கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

தடைகளை கடந்து தொடர்கிறது மாணவர்கள் போராட்டம்…. இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!!!

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் : கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள்

பாலாறு குண்டு வெடிப்பு வழக்கும் நீதிமன்ற பயங்கரவாதமும்!

1

ந்துத்துவ மனசாட்சியைத் திருப்திப்படுத்த அப்சல் குருவைத் தூக்கில் போட்டதை மறைத்து, சட்டத்தின் ஆட்சிப்படியே அவர் தூக்கிலிடப்பட்டுள்ளார் என்று காட்டுவதற்காகவே, இப்போது வீரப்பன் கூட்டாளிகள் எனப்படுவோரை அவரசமாகத் தூக்கில் போடத் துடிக்கிறது இந்திய அரசு.

1993-இல் மேட்டூரை அடுத்த பாலாறு பகுதியில் வீரப்பனால் நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் வனத்துறையினர், போலீசார் உள்ளிட்டு 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 124 பேர் மீது வழக்கு பதிவு செயப்பட்டு, கர்நாடக மாநிலம் மைசூர் தடா நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இதில் 117 பேர் குற்றமற்றவர்கள் என்று அப்போதே விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும், போலீசைத் திருப்திபடுத்துவதற்காகவே 7 பேர் மீது பொய்க்குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதை கர்நாடக உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. பின்னர், அப்பாவிகளான அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, அதில் மூவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.

வீரப்பன் கூட்டாளிகளாகச் சித்தரிக்கப்பட்ட எஞ்சிய நால்வருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. அவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர், 2004 ஜனவரியில் கொலைவெறி பிடித்த உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு, ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக உயர்த்தித் திமிராகத் தீர்ப்பளித்தது. பொய்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்நால்வரும் ஏழைகள், சமூகத்தின் அடித்தட்டைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே அதிகாரத் திமிரோடு நீதிபதிகள் அவர்களைத் தூக்குமேடையில் நிறுத்தினர்.

இதையடுத்து கர்நாடகத்தின் பெல்காம் சிறையிலுள்ள இந்நால்வரும் அரசுத் தலைவரிடம் கருணை மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் கடந்த 9 ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கப்படாமல் நிலுவையில் இருந்தன. இந்தக் கருணை மனுக்களை, கடந்த பிப்ரவரி 11 அன்று அரசுத் தலைவர் “தூக்குத்தூக்கி” பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார்.

தடா சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் இவர்களுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வீரப்பன் கூட்டாளிகளாகச் சித்தரிக்கப்பட்ட இந்நால்வர் மீது நான்கு வழக்குகள் பதிவாகியிருந்தன. அவற்றில் 3 வழக்குகளில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒரு வழக்கில் மட்டுமே அவர்களுக்குத் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கிலும், இந்நால்வரையும் வீரப்பனுடன் பார்த்ததாக ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று போலீசு வெறியர்களால் புகழப்படும் எஸ்.பி. கோபாலகிருஷ்ணன் கூறியதை எந்த விசாரணையுமின்றி அப்படியே ஏற்றுக் கொண்டு நீதிபதிகள் அநியாயமாகத் தீர்ப்பு எழுதியுள்ளனர். அதேசமயம், நீதிபதி சதாசிவம் கமிசன் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த அதிரடிப்படையின் அட்டூழியங்களுக்குப் பொறுப்பான போலீசு அதிகாரிகள் எவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க அந்நீதிபதிகள் முன்வரவில்லை.

பயங்கரவாத தடா சட்டத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவரே தன்னை நிராபராதி என்று நிரூபித்துக் கொள்ள வேண்டும். அங்கு போலீசு கூறுவதுதான் சாட்சியமாகும். இதுதான் தடா பயங்கரம். இக்கொடிய தடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதாலேயே அச்சட்டம் காலாவதியாக்கப்பட்டுள்ளது. தடா சட்டமே அநீதியானது எனும்போது, காலாவதியான அச்சட்டத்தின்கீழ் நடந்த விசாரணையின்படி தண்டிப்பது அதைவிடப் பெரிய அநீதி.

பாலாறு வழக்கு
நீதிமன்ற பயங்கரவாதம் : தூக்குக் கயிற்றின் நிழலில் நிறுத்தப்பட்டுள்ள பிலவேந்திரன், சைமன், மாதைய்யா, மற்றும் ஞானப்பிரகாசம்.

வீரப்பனுடன் எவ்விதத்திலும் தொடர்பில்லாத அப்பாவிகளான இவர்களை, அவர்களது வீடுகளிலிருந்தும், பொது இடத்திலிருந்தும்தான் போலீசு இழுத்துச் சென்றுள்ளது. தோமையார்பாளையம் சர்ச்சில் வேலை பார்த்து வந்தவரான ஞானப்பிரகாசத்தை மாதாகோயிலிலிருந்து அதிரடிப்படையினர் இழுத்துச் சென்றதாக பாதிரியார் வின்சென்ட் டிசோசா பகிரங்க வாக்குமூலமே கொடுத்துள்ளார். “பாலாறு வெடிகுண்டுத் தாக்குதலில் எஸ்.பி. கோபாலகிருஷ்ணனுக்குக் காலில் அடிபட்டு மயக்கமாகிவிட்டார். மயங்கிய நிலையில் இருந்த அவர் எப்படி நான்குபேரை அடையாளம் கண்டிருக்க முடியும்? மேலும், நீதிமன்றத்தில் கோபாலகிருஷ்ணனைத் தவிர வேறு எவரும் இந்நால்வரையும் பார்த்ததாகச் சொல்லவுமில்லை. ஒருவரது சாட்சியை வைத்துதான் இப்படி அநியாயமாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது” என்று பாலாறு தாக்குதலின்போது வீரப்பனுடன் காட்டில் இருந்த அவரது மனைவி முத்துலட்சுமி குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும், இவர்கள் மைசூர் உயர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும்போதே, உச்ச நீதிமன்றம் அநியாயமாகத் தூக்குத் தண்டனையை விதித்துள்ளது. இவர்களது கருணை மனுவும் 9 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நிராகரிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடந்த 19 ஆண்டுகளாகச் சிறையில் இருப்பதாலும், அதிலும் கடந்த 9 ஆண்டுகளாக கருணை மனு மீதான முடிவு தெரியாமல் அவர்கள் காத்திருந்ததால், இது அவர்களின் உரிமையை மீறுவதாக அமைந்துள்ளது என்ற அடிப்படையில் தூக்கு தண்டனையை ரத்துசெது ஆயுள்தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் வாதிட்டனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றவர்களும், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த புல்லரும் கருணை மனு மீது முடிவெடுக்க பல ஆண்டுகள் தாமதமாவதைச் சுட்டிக்காட்டி நீதி மன்றத்தை நாடியுள்ளனர். இது தொடர்பான விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்தீர்ப்பை எதிர்பார்த்து ஆறு வாரங்களுக்கு இந்த வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதி அல்தாமஸ் கபீர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

சமூகத்தின் கூட்டுத்துவ மனசாட்சி என்று கூறி அப்சல் குருவைத் தூக்கில் போட்டது போல, போலீசின் மனசாட்சியைத் திருப்திபடுத்தவே வீரப்பன் கூட்டாளிகள் என்று கூறி அப்பாவிகள் நால்வரைத் தூக்கில் போடத் துடிக்கிறது இந்திய அரசு. பாசிச ஜெயாவோ, வீரப்பன் வேட்டையில் ஈடுபட்ட போலீசாருக்கு பணமும், பரிசுகளும் பதவி உயர்வும் அளித்து போலீசின் அட்டூழியங்களை உறுதிப்படுத்துகிறார். இதுதான் சட்டத்தின் பெயரால் நடக்கும் காட்டுதர்பார் ஆட்சியின் மகிமை.

– குமார்

____________________________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2013
____________________________________________________________________________________________________

ஒரு பெண் பத்திரிகையாளரின் குமுறல்!

14

ன் டிவி: சிக்கிய ராஜாவை வைத்து சிக்காத ராஜாக்களைப் பிடிப்போம்! கட்டுரைக்கு வந்த பின்னூட்டத்தை அவசியம் கருதி இங்கே தனிப்பதிவாக வெளியிடுகிறோம். இவர் ஒரு பெண் பத்திரிகையாளர். பொறுக்கி ராஜாக்களால் ஊடகத்துறையில் வளர முடியாமல் மட்டுமல்ல, தொடர்ந்து செயல்பட முடியாமலேயே துரத்தப்பட்டவர்களில் ஒருவர். இன்றைக்கு அகிலா துணிந்து போராடி வருவதிற்கு பின்னே நியாயம் கிடைக்காத பல பெண் பத்திரிகையாளர்களின் கதை மறைந்திருக்கிறது.

வினவின் கட்டுரையை சில ஆயிரம் பேர் படித்திருக்கின்றனர். ஆனால் ஒரு சில விதிவிலக்குகளைத்  தவிர பத்திரிகையாளர்களிடமிருந்து திட்டமிட்ட மௌனத்தையே காண்கிறோம். பலர் முகநூலில் அமெரிக்கா முதல் ஈழம் வரை அனைத்தையும் விமரிசிக்கும் போராளிகளாக வலம் வருகின்றனர். வெள்ளியன்று ரிலீசாகும் படங்களுக்கு வியாழனன்றே விமரிசனங்கள் எழுதுகின்றனர். கட்சி சார்பாகவோ இல்லை கருத்து சார்ந்தோ பகிரங்கமாக விவாதிப்பவர்களாகவும் காட்டிக் கொள்கின்றனர். பத்திரிகையாளர்களே அகிலாவின் பிரச்சினைக்காக அமைதி காக்கிறார்கள்  என்றால் இவர்கள் வேலை செய்யும் தமிழ் ஊடகங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் இந்த பத்திரிகை போராளிகள் சக பத்திரிகையாளரான அகிலாவுக்கு வெளிப்படையான ஆதரவை வழங்குவதற்கோ, சன் டிவியை கண்டித்தோ பேசுவதற்கோ மறுப்பதேன்? ஈழத்திற்காக மாணவர்கள் போராடும் இந்தக் காலத்தில்அகிலாவிற்காக ஒரு ஆர்ப்பாட்டதை நடத்தாதது ஏன்? தமது பத்திரிகைகளில் செய்தி வருமாறு குரல்கொடுக்காதது ஏன்?

நேற்று சன் டிவியிலிருந்து அகிலா தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.விசாரணை இனிமேல்தான் நடக்குமாம். ஒரு பொறுக்கியை எதிர்த்துப் போராடிய பெண்ணுக்கு சன் டிவி அளித்திருக்கும் பரிசு இது.

பத்திரிகையாளர்களே, பதிவர்களே இன்னும் அமைதி காக்கதீர்கள்.

பேருந்தில் வைத்து ஒரு பெண்ணை  பலரும் வல்லுறவுக்கு ஆளாக்குவது மட்டும்தான் பாலியல் வன்முறையா?

இதோ பெயர் வெளியிட விரும்பாத இந்த பெண் பத்திரிகையாளர் கேட்கிறார். பதில் சொல்லுங்கள்!

ஊடக உலகில் நிலவும் இத்தகைய வன்முறைகளை எதிர்ப்பதில் எங்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. அகிலாவுக்கு தேவையான ஆதரவை வழங்குவோம். அவரது போராட்டத்திற்கு துணை நிற்போம்!

வினவு

________________________________

யா ரொம்ப வருஷத்துக்கு முன்னமே நீங்க செஞ்சிருக்க வேண்டிய விஷயம்… ரொம்ப லேட்டா வந்திருந்தாலும் உங்ககிட்டேயிருந்து ஆதரவு வர்றது என்னைய மாதிரி ஒடுக்கப்பட்ட, ஆதரவற்ற ஊடகப் பெண்களுக்கு அவசியம்தாங்க.

நான் இப்போ ஊடகத்துல இல்லீங்க. ஆனா நீங்க கட்டுரையில சொல்ற ‘சாரு’ங்களால பாதிக்கப்பட்டு மீடியாவை விட்டே ஓடிப்போன பல பெண்கள்ல நானும் ஒருத்தி. ‘பராசக்தி’ல கலைஞர் ஐயா எழுதின ஒரு ஃபேமஸான வசனம்தான் ஞாபகத்துக்கு வருது. ‘ஓடினாள், ஓடினாள்… வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்’னு வருமே… அந்த வசனம் எங்களைப் போல நேர்மையா, உண்மையா இருக்கணும்னு நினைக்கிற ஊடகப் பெண்களுக்கு ரொம்பவே பொருந்தும்.

சிறுபத்திரிகை, பெரும் பத்திரிகை, டிவி.ன்னு எல்லா விதமான மீடியாக்கள்லேயும் எங்களைத் தொறத்தறதுக்கு இவிங்க காத்திருக்காய்ங்க. எஸ்எம்எஸ் அனுப்பணும், நேரங்காலம் தெரியாம போன்ல கூப்ட நேரத்துக்கு பேசணும், பாத்ரூம் போறதுக்குக்கூட சாருங்ககிட்ட பர்மிஷன் வாங்கிட்டு போகணும், இந்த ஸ்டெப்ஸ்ல எல்லாம் தாண்டி வந்தா வேலை ரீதியாகவும் அடுத்த கட்டத்துக்கு போகலாம். வேற ரீதியாகவும் அடுத்த கட்டத்துக்கு போகலாம்.

எழுதத் தெரியுமா? பத்திரிகை அறம் தெரியுமா? சரிப்பா…உனக்கு ஒரு பேட்டி எடுக்கத் தெரியுமான்னு சாருங்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. சாருங்க வெச்ச டெஸ்ட் எல்லாம் பாஸ் பண்ணா நீங்க அடுத்தடுத்து போய் கிட்டே இருக்கலாம்.

ஐயா எங்க குடும்பத்துல நான்தான் முதல்ல காலேஜ் வரைக்கும் படிச்ச பொண்ணு. பெரிய சாதியோ, அதிகாரம் உள்ள சாதியோ கிடையாது. பணமா? வாழ்க்கை ஃபுல்லா  கடனாளிங்கதான். கடன் வாங்கித்தான் படிச்சேன். நல்ல எழுதறேன்னு தான் பத்திரிகைல வேலை கிடைச்சது. பத்திரிகைகாரி ஆகணும்னு எனக்கு எந்த லட்சியமும் கிடையாது. 15 வயசு வரைக்கும் பத்திரிகையே படிக்காத குடும்பத்திலிருந்த வர்றங்களுக்கு அந்த லட்சியம் எல்லாம் வராதுங்க.

ஆனா நான் செய்ற வேலை எப்படிப்பட்டதுங்கற தெளிவு எனக்கு இருந்துச்சு. நேர்மையா இருந்தேன், எனக்கு வாய்ப்பு கிடைச்ச வரைக்கும் ஒரு பொண்ணு எதையெல்லாம் எழுத முடியாதுன்னு சொல்வாங்களோ அதையெல்லாம் எழுதினேன். ஆனா சாருங்களுக்கு அதெல்லாம் தேவையில்லாத விஷயம். சாருங்களுக்கு இணங்கி நடக்கலைன்னு பல சோதனைகள், பல வேதனைகள். எல்லாமே மறைமுகமான தாக்குதல்கள்தான். மனரீதியாக ஒடுக்கி, அடக்க நினைக்கிறது சாருங்களுக்கு கைவந்த கலை.

சன் டிவி

இதுல புள்ளி ராஜா சாரு பண்ணதுதாங்க என்னைய மீடியாவைவிட்டே தொரத்தி விட்டது. என்னை ஆறு மாசம் சும்மாவே ஒக்காத்தி வெச்சு சம்பளம் கொடுத்த மவராசன் அவரு. ஏதோ போகட்டும்னு கொடுத்த வேலையிலேயும் எழுத்துப் பிழை, ஒற்றுப் பிழையெல்லாம் கண்டுபிடிச்சு கேப்பாரு பாருங்க அடுக்கடுக்கான கேள்வி… ஆத்தாடி! சாருக்கு ஒரு தப்புகூட வந்துடக்கூடாது அவ்வளவு தமிழ் பற்று. அதனாலதான் திராவிடப்பற்று உள்ள மற்ற பத்திரிகைகாரங்க அவரை காப்பாத்தி விடறாங்க போலிருக்கு. (ஈழப்பிரச்னைக்கு ஆதரவு கொடுத்த சாருங்க பத்து பொண்ணுங்க வாழ்க்கையை நாசம் பண்ணியிருந்தாலும் நாங்க தோள்கொடுத்து காப்போம்னு பல பத்திரிகை தோழர்கள் காப்பாத்துவாங்க. ஐயா தோழர் மாரே நாங்களும் தமிழச்சிங்கதான். அங்க சிங்களவன் எங்களைத் தொறத்தரான்னா, இங்க சாரு மாறு தொரத்தராங்க. அங்கேயும் நாங்க நாசமாப் போறோம், இங்கேயும் போறோம். எங்களுக்காகவும் கொஞ்சம் கருணைக் காட்டுங்க. உங்க கண்ணு, மனசு எல்லாத்தையும் கொஞ்சம் தொறந்து வையுங்க.)

ஐயா எனக்கு அடிமேல் அடிபட்டு ஒரு கட்டத்துல சாதி, பணம், அதிகாரம் எந்த பின்னணியும் இல்லாத நாம பத்திரிக்காரியா இருக்கவே முடியாதுன்னு முடிவு பண்ணிட்டு, சும்மா வேலைக்குன்னு போயிட்டு வந்துக்கிட்டிருந்தேன். சாருங்க நீ போய் மாடு மேய்ன்னு திட்டினாக்கூட சிரிச்சிக்கினேதான் நிப்பேன். சாருங்களைப் பார்த்து பல்லை இளிக்கறதுன்னு இதுக்கு அர்த்தம் எடுத்துக்காதீங்க. நீ எதுக்காக என்னை திட்டறேன்னு தெரியும்டாங்கிற திமிருதான். இந்த திமிருதாங்க என்னை பலப் பல ஊடக சாருங்கக்கிட்டேயிருந்து காப்பாத்துச்சு.

ஆனா அப்பாவி பொண்ணுங்க என்ன பாடுபட்டாங்க தெரியுமா? எல்லார் முன்னாடியும் கதறி கதறி அழுவாங்க. அவமானத்தால கூனிக்குறுகி போவாங்க. சில மாதத்துல பெரிசா கூம்பிடு போட்டுட்டு போயிடுவாங்க. அந்த வெறுப்புலதான் நானும் விலகிட்டேன்.

ஆனா இப்போ எனக்கிருக்கிற கேள்வியெல்லாம்… சுதந்திரமா ஒரு பொண்ணு மீடியாவுல வேலைப் பார்க்கவே முடியாதா? தன் சொந்த திறமையில முன்னுக்கு வரவே முடியாதா? மீடியாவுக்கு பெண்கள் வர்றது வேலைப் பார்க்கறதுக்கா, இல்லை விபச்சாரம் பண்றதுக்கா? சாருங்களுக்கு என்னதான் வேணும்? ஐயா வினவுக்காரங்களே கேட்டு சொல்றீங்களா?

ஐயா என் எழுத்தை சாருங்கள்லாம் சேர்ந்து தற்கொலை பண்ணவெச்சுட்டாங்க. அதனால கொஞ்சம் கோபமா எழுதிட்டேன். மத்தபடி ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, துரத்தப்பட்ட என்னைய மாதிரி பொண்ணுங்களால வேற எதையும் செய்ய முடியாதுங்க.

– ஒரு பெண் பத்திரிகையாளர்.

இணையப் புரட்சியின் யோக்கியதையும் கூகுள் ரீடரும்!

11

ணைய உலகில் கோலோச்சி வந்த கூகுள் இணையதளத்தின் சேவையான கூகுள் ரீடர் (கூகுள் படிப்பான்) தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது.

கூகுள் ரீடர் சன்செட்இணயத்தில் நாம் விரும்பும் வாசிக்கும் இணையதளத்தின் புதிய கட்டுரைகளையும் செய்திகளையும் ஒரே இடத்தில் தொகுத்துப் படிக்க வசதியாக கூகுள் ரீடர் இணைய பக்கம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது இலவச சேவை. ஆனால் சில நாட்களுக்கு முன் கூகுள் ரீடரில் நுழைந்த வாசகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, நுழைந்தவுடன் ஒரு சேதி “கூகுள் ரீடர் வரும் ஜூன்-30 தேதியுடன் தனது சேவையை நிறுத்திக்கொள்ளும்”.

‘கூகுள் ரீடர் பெரும் எண்ணிக்கையில் புதிய வாசகர்களை ஈர்க்கவில்லை. அதனால் அதை இழுத்து மூடுகிறோம்’ என்று தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது கூகுள் நிர்வாகம்.

கூகுள் ரீடர்க்கு பழக்கப்பட்ட வாசகர்கள் பிற படிப்பான் சேவைகளை (குறிப்பாக இலவச) தேடுவதும், இதுதான்  சாக்கு என்று பிரபல படிப்பான் சேவை தரும் இணையதளங்கள் தங்கள் சேவைகளை கட்டண சேவைகளாக்குவதும் நடந்து வருகிறது. அறிவிப்பு வெளிவந்த 48 மணி நேரத்தில் பிற இணைய படிப்பான் சேவைகளுக்கு 5 லட்சம் வாசகர்கள் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. பலர் கூகுள் ரீடரை மூடக் கூடாது என்று கூகுள் நிர்வாகத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்பி வருகிறார்கள்.

‘கூகுள் ரீடர் சேவையை நிறுத்திக்கொள்கிறது, அவ்வளவு தானே மாற்று சேவைகளுக்கு செல்லலாமே, அதில் விவாதிக்க என்ன இருக்கிறது’ என்று பலர் நினைக்கிறார்கள். விவாதிக்க நிறையவே இருக்கிறது.

இணைய சேவைகள், இணையம் என்பது 21-ம் நூற்றாண்டின் தகவல் தொடர்பு புரட்சிக்கான களம் என்று பலராலும் நம்பப்படுகிறது, அதனால் இணையத்தில் ‘போராளி’களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. ஃபேஸ்புக் புரட்சி, டிவிட்டர் புரட்சி, இணைய சுதந்திரம், கட்டற்ற சுதந்திரம் என்று பலரும் மல்லுக்கட்டி வாதாடிக் கொண்டிருக்கும் சுதந்திரங்களை பற்றித் தான் நாம் பேச வேண்டும்.

ஆனால் ‘புரட்சிக்கு வாய்ப்பையும், கட்டற்ற சுதந்திரத்தையும்’ கொடுக்கும் மெய்நிகர் உலகில் தாங்கள் விரும்பிய படிப்பானை தக்க வைத்துக் கொள்வதற்குக் கூட இணைய போராளிகளுக்கு அதிகாரம் இல்லை என்பதுதான் இதிலிருக்கும் சோகம்.

இணையத்தை இயக்கி ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும், நுழைந்தவுடனே “ஏ கருணாநிதியே..” “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என ஸ்டேட்டஸ்கள் போட்டு லைக்குகளுக்காக தவம் கிடப்போர் நாளை வருமானமில்லை என்று இந்த வசதியை ஃபேஸ்புக் மூடிவிட்டால் என்ன செய்வர்?

ஆர்குட்டில் இருந்து ஃபேஸ்புக்கிற்கு மாறியது போல், ப்ளாகில் இருந்து கூகுள் பஸ்ஸுக்கு போய், கூகுள் ப்ளஸ்ஸுக்கு மாறியது போல் பரதேசியாய் இன்னொரு இணைய சேவையை தேடி செல்ல வேண்டியதுதான்.

இணைய சேவைகள் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன, அவர்களுக்கு லாபம் வரும் வரையில் அவை தொடர்கின்றன, லாபமில்லை என்றால் ஈவு இரக்கமில்லாமல் கொன்றொழிக்கப்படுகின்றன. கட்டற்ற சுதந்திரம், பேச்சுரிமை, சுதந்திர சந்தையில் வாடிக்கையாளர்தான் ராஜா என்றெல்லாம் முழங்கும் இணைய முற்போக்குவாதிகள் இதை எப்படி எதிர்கொள்வார்கள்?

ஃபேஸ்புக்கில் போராளிகள் போடும் ஸ்டேடஸுக்கும், பகிரும் ‘சே குவாரா’ படங்களுகாகவுமா அந்த இணைய தளம் நடத்தப்படுகிறது? ஒவ்வொரு ஃபேஸ்புக் பயனருக்கும் தெரியும் விளம்பரங்களும், பயனர் பற்றிய தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு விற்கப்படுவதிலும் தான் அந்த இணைய சேவை தொடர்கிறது.

ஒரே ஒரு வலைப்பதிவு பக்கத்தை தொடங்கி அதில் 100 ஹிட்டுகள் வந்தவுடன் கூகுள் விளம்பரத்தை சந்தில் போட்டு, 2000 ஹிட்டுகளுக்கு பின் வீட்டுமனை விளம்பரத்தை சைடில் போடும் பதிவர்களுக்கு இப்படி ஒரு நப்பாசை என்றால் இந்த சேவையை வைத்து பல லட்சங்களை லாபம் ஈட்டத் திட்டமிடும் பன்னாட்டு முதலாளியின் ஆசை எவ்வளவு இருக்கும்?

கூகுளின் ஆசைக்கு ரீடர் சம்பாதிக்கவில்லை, காலி. நாளை கூகுள் மெயில் சம்பாதிக்கவில்லை என்றாலும் காலி. இவை காலி என்பதால் வருமானம் தரும் வேறு சேவைகளை ஆரம்பிப்பார்கள். இத்தகைய சேவைகளை ஏற்கனவே வேறு முறைகளில் பயன்படுத்தி இயங்குபவர்கள் எல்லாம் வேறு வழியின்றி அவர்களது நிபந்தனைக்கு உட்பட்டால்தான் இணைய சேவை வசதிகள் கிடைக்கும். இப்படி இணைய உலகமே முதலாளிகளின் லாப வேட்டையின் வெற்றி தோல்விகளில்தான் இயங்குவதாக மாற்றப்பட்டிருக்கிறது.

இணையம் என்பது அவர்கள் லாபமீட்ட உதவும் வங்கியாகவும், இணைய பயனர்களின் அந்தரங்கத்தை திருடி காசு பார்க்கும் புரோக்கராகவும் தான் இருக்கும். அது விடுவிக்கப்படும் போது தான் உண்மையாகவே மக்கள் நலன் சார்ந்த தகவல் தொடர்பு புரட்சியை அது சாதிக்கும். அந்த நிலைமையை இணையத்தின் வளர்ச்சி சாதித்துவிடாது. ஏகாதிபத்தியங்களுக்கும் அவற்றின் உலகமயத்திற்கும் எதிராக உலக மக்கள் அரசியல் களத்தில் நடத்தும் போராட்டத்தின் வெற்றியே உண்மையில் அத்தகைய தகவல் தொடர்பு புரட்சியை கொண்டு வரும். அதுவரை இணையம் என்பது அவர்களின் கையில் கிடைத்திருக்கும் அமுதசுரபி. நாமெல்லாம் அதை தலையில் சுமந்து கொண்டு திரியும் விளம்பர அடிமைகள். அவ்வளவுதான்.

– ஆதவன்

சிஐஏ சித்திரவதைக்கும் என்.ஜி.ஓக்களின் மனித உரிமைக்கும் என்ன உறவு?

2
சி.ஐ.ஏ. சித்திரவதை
அமெரிக்க இராணுவத்தால் குவான்டினாமோ பே சிறைச்சாலைக்குக் கடத்திச் செல்லப்படும் பரிதாபத்திற்குரிய ஒரு கைதி

எது கொடியது? சி.ஐ.ஏ. நடத்தும் சித்திரவதையா? என்.ஜி.ஓ.க்கள் பேசும் மனித உரிமையா?

“பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பெயரில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., உலகெங்கும் இரகசியமாக ஆட்கடத்தல்- சித்திரவதைகளை நடத்தியிருப்பதை, நியூயார்க்கைச் சேர்ந்த “ஓப்பன் சோசைட்டி பவுண்டேசன்” என்ற ஏகாதிபத்தியத் தொண்டு நிறுவனத்தின் புலனாய்வு அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. மன்மோகன் சிங்கின் மகள் அம்ரித் சிங் வெளியிட்டுள்ள “சித்திரவதையின் உலகமயமாக்கம்” என்ற இந்த அறிக்கை, உலகின் 54 அரசுகள், தமது நாட்டு சட்டங்களுக்கே விரோதமாக, தம் நாட்டுக் குடிமக்களையே கைது செய்து சி.ஐ.ஏ.விடம் ஒப்படைத்ததோடு, அவர்களைச் சித்திரவதை செய்யவும் கடத்தவும் உடந்தையாக இருந்ததை அம்பலப்படுத்தியிருக்கிறது. இப்படி சி.ஐ.ஏ. வுக்கு ஒத்துழைத்த நாடுகளின் பட்டியலில் ‘ஜனநாயகம் தழைத்தோங்கும்’ ஜெர்மனி, பிரிட்டன், டென்மார்க், கனடா போன்ற நாடுகள் முதல் அமெரிக்காவால் “தீய சக்திகளின் ஆணிவேர்” என சித்தரிக்கப்படும் சிரியா, இரான் போன்ற இஸ்லாமிய நாடுகள் வரை பலரும் அடக்கம்.

அதிர்ச்சியூட்டும் செய்தி இது மட்டுமல்ல; சி.ஐ.ஏ.வை அம்பலமாக்கும் இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பவர், அமெரிக்காவில் வசிக்கும் மன்மோகன் சிங்கின் மகள் அம்ரித் சிங். புருவத்தை உயர்த்த வேண்டாம். அது பற்றி ஆராய்வதற்கு முன், அம்ரித் சிங்கின் அறிக்கை கூறும் விவரங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

சி.ஐ.ஏ. சித்திரவதை
அமெரிக்கா பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்போடு நடத்தி வரும் இரகசிய சிறை.

இன்று அமெரிக்க மனித உரிமைத் தீர்மானத்தை எதிர்கொண்டிருக்கும் இலங்கை அரசு, சி.ஐ.ஏ.வின் ஆட்கடத்தலுக்கு உதவியுள்ளது. 2003-இல் சி.ஐ.ஏ.வின் ஆட்கடத்தலுக்காக உபயோகப்படுத்தப்படும் ரிச்மோர் ஏவியேஷன் நிறுவனத்தின் விமானம், பாங்காக்கிலிருந்து ரித்வான் இசாமுதீனைக் கடத்துவதற்கு முன் இலங்கையில் தரையிறங்கியிருக்கிறது. இவர் பின்னர் மூன்றாண்டுகள் சி.ஐ.ஏ.வின் பல்வேறு இரகசிய முகாம்களில் சித்திரவதை செய்யப்பட்டு, 2006-இல் குவாண்டினாமோ பே சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

2004-ஆம் ஆண்டு பாத்திமா பவுச்சர் என்ற சிரிய நாட்டுப் பெண் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிடிக்கப்பட்டு விமான நிலையத்திலேயே உருவாக்கப்பட்ட இரகசிய அறையில் அமெரிக்க உளவுத்துறையினால் பல நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டார். நான்கரை மாத கர்ப்பமாக இருந்த பவுச்சர், சங்கிலியால் கட்டப்பட்டு, ஐந்து நாட்களுக்குப் பட்டினி போட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

ஈரானில் பிடிக்கப்பட்ட அகமது அல்-தீமா, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உளவுத்துறையின் இருண்ட சிறையில் 77 நாட்கள்அடைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு பாக்ரம் என்ற இடத்துக்கு கடத்தப்பட்டு கூரையில் கட்டித் தொங்கவிடுவது, நாய்களால் அச்சுறுத்துவது, சித்திரவதை வீடியோக்களை பார்க்க வைப்பது, எந்திரத்தால் அறுக்கும் சத்தத்தோடு வலியால் அலறும் சத்தத்தைக் கேட்க வைப்பது என்று 40 நாட்களுக்குச் சித்திரவதை செயப்பட்டிருக்கிறார்.

-இவை சில எடுத்துக்காட்டுகள். இது போல பல விதமாக அமெரிக்கா நடத்திவரும் மனிதத்தன்மையற்ற, மிருகத்தனமான சித்திரவதைகளுக்கு 54 நாடுகள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளன.

சி.ஐ.ஏ. சித்திரவதை
அமெரிக்க இராணுவத்தால் குவான்டினாமோ பே சிறைச்சாலைக்குக் கடத்திச் செல்லப்படும் பரிதாபத்திற்குரிய ஒரு கைதி.

சி.ஐ.ஏ. செய்த இத்தகைய கொடூரங்கள் வெளியாவது இது முதல்முறையல்ல. “சி.ஐ.ஏ.வின் கருந்தளங்கள்” என அறியப்பட்ட இரகசிய சித்திரவதைக் கூடங்களைப் பற்றியும் அதற்கு ஐரோப்பிய நாடுகள் வழங்கும் ஒத்துழைப்பு பற்றியும் 2005-இல் சில அமெரிக்கப் பத்திரிகைகள் செதிகளை வெளியிட்டன. அப்போது ஐரோப்பிய சபை நடத்திய விசாரணையில் ஏறத்தாழ இருபது நாடுகள் சி.ஐ.ஏ.வுக்குத் துணைபுரிந்தது அம்பலமாகியது. 2006 ஜனவரியில் ஐரோப்பிய நாடாளுமன்றம் அமைத்த மற்றொரு விசாரணைக் குழு அளித்த அறிக்கை, 2001-2005 காலகட்டத்தில் ஐரோப்பிய விமான வழித்தடத்தின் ஊடாக மட்டுமே சி.ஐ.ஏ. 1245 தடவை விமானங்கள் வழி ஆட்கடத்தலில் ஈடுபட்டதை அம்பலப்படுத்தியது. 2012-ஆம் ஆண்டு மனித உரிமை கண்காணிப்பகம் என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சி.ஐ.ஏ. ஆப்கான் ஆக்ரமிப்பின் போது “வாட்டர் போர்டிங்” என்ற கொடூர தண்ணீர் சித்திரவதையை கைதிகள் மீது ஏவியதாகக் குற்றம் சாட்டியது. ஆனால், “இந்தச் சித்திரவதைகள் உயரதிகாரிகளின் வழிகாட்டுதல்படி, அமெரிக்க நலனுக்காகவே நடந்தது” என்பதால், அதன் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது என்றார் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர்.

தற்போது இவ்வறிக்கையை வெளியிட்டிருக்கும் அம்ரித் சிங், “சி.ஐ.ஏ. வின் இத்தகைய நடவடிக்கைகள் மீது அமெரிக்க அரசு ஒரு சுயேச்சையான விசாரணை நடத்தி, இந்தச் சித்திரவதை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சி.ஐ.ஏ. அதிகாரிகள் யார் என்பதை அம்பலமாக்க வேண்டும்; நடந்துள்ள இந்த முறைகேடுகளுக்கு அமெரிக்கா மட்டுமின்றி, மற்ற நாடுகளும் பொறுப்புதான் என்ற போதிலும், இவ்வாறு சர்வதேச சட்டங்களை மீறி நடந்து கொள்வதன் விளைவாக, உலகளவில் பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆதரவு குறைவதுடன், அமெரிக்காவின் தார்மீகத் தகுதியும் பாதிக்கப்பட்டுவிடும்” என்று குறிப்பிடுகிறார்.

அம்ரித் சிங்கின் அறிக்கை, “அமெரிக்க அரசு வேறு; அதன் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. வேறு” போலவும், சி.ஐ.ஏ. என்பது நாட்டாமைக்கு தெரியாமல் ரவுடித்தனம் செயும் தறுதலைப் பிள்ளை போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. சி.ஐ.ஏ. வுக்கு கிரிமினல் வேலைகளில் ஈடுபடுவதற்கான சுதந்திரமும் சுயேச்சைத்தன்மையும் அமெரிக்க அரசால் திட்டமிட்டேதான் வழங்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு நாடுகளில்”டேர்டிவொர்க்ஸ்” என்று வகைப்படுத்தப்பட்டுள்ள ஆட்கடத்தல், சித்திரவதை, கொலை போன்ற இரகசிய வேலைகளில் தொடங்கி, இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள் வரையில் எல்லா நடவடிக்கைகளிலும் அது ஈடுபட்டிருப்பது மட்டுமின்றி, அமெரிக்க ஏகாதிபத்தியத் தொழில் நிறுவனங்களுக்காக, மற்ற நாடுகளின் வணிக நடவடிக்கைகள், ஒப்பந்தங்களை வேவு பார்ப்பது வரையிலான முறைகேடுகளிலும் அது ஈடுபட்டிருக்கிறது.

அம்ரித் சிங்
“சித்திரவதையின் உலகமயமாக்கம்” அறிக்கையைத் தொகுத்து வெளியிட்ட அம்ரித் சிங்.

இவையெல்லாம் அம்ரித் சிங் அறியாதவையல்ல. சர்வதேச சட்டங்களை மீறி அப்பட்டமான ஆக்கிரமிப்புகளை அதிகாரபூர்வமாகவே அமெரிக்க அரசு அரங்கேற்றி வரும் சூழலில், சி.ஐ.ஏ. இரகசியமாக செய்த சட்டவிரோத சித்திரவதைகளைத் தேடிக் கண்டுபிடித்து, ‘அமெரிக்காவின் தார்மீகத் தகுதியைக் காப்பாற்றுவதற்காக’ விசாரணை கோருகிறார் அம்ரித் சிங். ஏனென்றால், அவர் “ஓபன் சொசைட்டி பவுண்டேசன்” என்ற ஏகாதிபத்திய தொண்டு நிறுவனத்தின் “தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் திட்டத்திற்கு” பொறுப்பு வகிக்கும் தலைமை சட்ட அதிகாரி.

ஓபன் சொசைட்டி பவுண்டேசன் என்பது உலகப் பெரும் கோடீசுவரனும், நிதி மூலதனச் சூதாடியுமான ஜார்ஜ் சோரோஸ் என்பவனால் நடத்தப்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனம். 1980-களில் போலந்தில் போலி கம்யூனிச ஆட்சிக்கு எதிரான மக்கள் கோபத்தை சாலிடாரிட்டி என்ற எதிர்ப்புரட்சி இயக்கத்துக்கு ஆதரவாகத் திருப்புவதில் சோரோஸின் இந்த அமைப்பு முக்கியப் பாத்திரம் ஆற்றியது. மாசிடோனியா, பெலாரஸ், குரோசியா எனப் பல கிழக்கு ஐரோப்பிய போலி சோசலிச நாடுகளில் முதலாளித்துவத்தை நிறுவியதும், ஜார்ஜியாவில் ரோஜாப் புரட்சியை பின்நின்று இயக்கியதும் சோரோஸின் தொண்டு நிறுவனங்கள்தான்.

ஜார்ஜியாவில் ஆட்சியைக் கைப்பற்றியதும் ஓபன் சோசைட்டி பவுண்டேசனின் பொறுப்பில் இருந்தவர்கள் அமைச்சர்களாயினர். அந்நாட்டின் துறைமுகம், மின்சாரம், ரயில்வே ஆகியவை சோரோஸின் கைக்கு மாறின. மிலோசோவிச்சை ஆட்சியிலிருந்து இறக்கி, யூகோஸ்லாவியாவைப் பிளந்தது மட்டுமல்ல, கொசாவோ விடுதலைப் படை என்ற இசுலாமியப் படைக்கு பணமும் ஆயுதமும் கொடுத்து, பதிலுக்கு அந்நாட்டின் தங்கம், வெள்ளி, காரீயச் சுரங்கங்களைக் கைப்பற்றிக் கொண்டார் சோரோஸ். “முன்னாள் சோவியத் சாம்ராச்சியத்தை இனி சோரோஸ் சாம்ராச்சியம் என்று அழையுங்கள் ” என்று திமிராக அறிவிக்கும் அளவுக்கு சோரோஸின் தொண்டு நிறுவனங்கள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் விளையாடின.

ஜார்ஜ் சோரஸ்
ஓப்பன் சொசைட்டி பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் அமெரிக்கப் பெருமுதலாளி ஜார்ஜ் சோரஸ்.

சோரோஸின் “இன்டர்நேசனல் கிரைசிஸ் குரூப்” என்ற தொண்டு நிறுவனத்தில், தாலிபானையும் பின் லாடனையும் உருவாக்கிய முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு செயலர் பிரசென்ஸ்கி, நேட்டோ படைத் தளபதி வெஸ்லி கிளார்க், யுகோஸ்லேவியாவில் ஆட்சித் தகர்வை முன்னின்று நடத்திய அமெரிக்க முன்னாள் தூதர் வாரன் சிம்மெர்மென் போன்றவர்கள் கவுரவப் பதவி வகிக்கின்றனர். 1998-இலேயே இராக் மீதான தாக்குதலுக்கு அரசியல், இராணுவ வழிகாட்டுதல்களை கிளிண்டனுக்கு வழங்கியவர்கள் சோரோஸின் ஆலோசகர்கள்தான். ஆயுத பேரங்கள் வழி பெரும் இலாபமீட்டும் கார்லைல் என்ற நிதிச் சூதாட்ட நிறுவனத்தில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கும் சோரோஸுக்கு சீனியர் புஷ், முன்னாள் அமெரிக்க அரசுச் செயலர்கள், பின் லாடனின் உறவினர்கள் ஆகியோர் தொழில் கூட்டாளிகள்.

சோரோஸ் கடைப்பிடிக்கும் உத்தி எளிமையானது. எந்த நாடுகளில் சர்வாதிகாரத்துக்கு எதிரான மக்கள் அதிருப்தி நிலவுகிறதோ, அங்கே சோரோஸின் மனித உரிமை மீட்பர்கள் களமிறங்குவார்கள். அதன் பின்னர் அந்த நாடுகள் பற்றிப் பத்திரிகைகள் வெளியிடும் தலைப்புச் செய்திகளை சோரோஸின் பணம் தீர்மானிக்கும். அரசுக்கு எதிரான மக்கள் கோபத்தை சோரோஸின் அரசியல் மற்றும் அறிவுத்துறை கூலிப்படை தன்வயப்படுத்திய பின்னர், பொருத்தமான நேரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை கண் சிமிட்டும். அந்த நாட்டில் ‘புரட்சி’ அல்லது ‘ஆட்சிக்கவிழ்ப்பு’ அரங்கேறும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விரிவாக்க நடவடிக்கைகளும், சோரோஸின் தொழில் சாம்ராச்சியமும், அவரது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணக்கமான முறையில் பிணைந்திருக்கின்றன.

இதன் பொருள் பிணக்கே இல்லை என்பதல்ல. முதலாளித்துவத்தையும் அமெரிக்க மேலாதிக்கத்தையும் நாசூக்காக, நயவஞ்சகமாக மக்கள் ஆதரவோடு நிலைநாட்ட வேண்டும் என்பது சோரோஸின் அணுகுமுறை. இதை விடுத்து மூர்க்கத்தனமான முறையில் இராக் மீது படையெடுத்த காரணத்தினால் ஜூனியர் புஷ்ஷை வெளிப்படையாக எதிர்த்து பரபரப்பைக் கிளப்பினார் சோரோஸ். அப்போதே சோரோஸின் உண்மை முகத்தை ‘நியூ ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகையில் நீல்கிளார்க் என்ற பத்திரிகையாளர் தோலுரித்தார்.

சோரோஸ் வெளியிட்ட ஆக்கிரமிப்பு எதிர்ப்பு எத்தகையதோ, அத்தகையதுதான் தற்போது மன்மோகன் சிங்கின் மகள் அம்ரித் சிங் வெளியிட்டிருக்கும் சித்திரவதை எதிர்ப்பு. அப்பன் அமெரிக்க அடிவருடி என்றால், மகள் எதிர்ப்பை நிறுவனமயமாக்கிக் காயடிக்கும் தொண்டு நிறுவன நிர்வாகி. எது கொடியது? சி.ஐ.ஏ. வின் சித்திரவதையா, தொண்டு நிறுவனங்கள் பேசும் மனித உரிமையா?

– அன்பு

____________________________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2013
____________________________________________________________________________________________________

‘குடியரசு’ அல்ல; கொலை அரசு!

1

ஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்ட நினைவு மறையும் முன்பே, அப்சல் குருவையும் தூக்கிலேற்றிவிட்டது, காங்கிரசு கூட்டணி அரசு. அப்சல் குரு பிப்ரவரி 9 அன்று காலையில் இரகசியமாகத் தூக்கிலிடப்பட்டதை, “ஒரு தீவிரவாதிக்கு அளிக்கப்பட்ட நியாயமான, சட்டப்படியான தண்டனை” எனக் கூறி நியாயப்படுத்தி வருகிறது, காங்கிரசு கும்பல். ஆனால், அப்சல் குருவைக் குற்றவாளி என நம்புவோரிலும் கூட ஒரு சாரார், மிகவும் கயமைத்தனமான, வெட்கக்கேடான முறையிலும் சட்ட நடைமுறைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் விதத்திலும் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டிருப்பதைக் கண்டித்து வருகின்றனர். அப்சல் குருவைத் தூக்கிலிட்டதில் சட்டநடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது மட்டுமல்ல, இத்தூக்கே காங்கிரசு கூட்டணி அரசு நடத்தியிருக்கும் அரசியல் படுகொலையாகும்; போலீசு நடத்தும் போலி மோதல் கொலைக்கு ஒப்பானதாகும். தீவிரவாத அபாயம் குறித்து அனைத்து ஓட்டுக்கட்சிகளும் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டிருப்பதால், பா.ஜ.க., சி.பி.எம். உள்ளிட்ட மற்ற ஓட்டுக்கட்சிகளும் இப்படுகொலைக்கு வக்காலத்து வாங்கி வருகின்றன.

அப்சல்குரு
இந்து-இந்திய தேசிய வெறிக்குப் பலி கொடுக்கப்பட்ட முகமது அப்சல் குரு

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தேவேந்திர் பால் சிங் புல்லரும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரும் தமது கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க நீண்ட காலமானதால், தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். உச்ச நீதிமன்றம் புல்லரின் மனு மீது விசாரணை நடத்தியபோதே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள், கருணை மனு அளித்தவர்களின் விவரங்களைக் கேட்டுப் பெற்றிருப்பதோடு, அவ்வழக்கின் தீர்ப்பையும் ஒத்தி வைத்திருக்கிறது.

பிரணாப் முகர்ஜி இவ்வழக்கின் தீர்ப்பு வரும்வரை பொறுத்திருக்கவில்லை என்பதோடு, தன்னிடம் நிலுவையில் இருந்த 14 கருணை மனுக்களில் அஜ்மல் கசாப் மற்றும் அப்சல் குரு ஆகிய இருவரின் கருணை மனுக்களை மட்டும் தேர்வு செய்து நிராகரித்திருக்கிறார். காங்கிரசு தனது அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ளும் நோக்கில்தான் அவரை அரசுத் தலைவராக்கியது. அந்த நம்பிக்கையை முகர்ஜி பொய்ப்பித்துவிடவில்லை என்பதைத்தான் கசாப் மற்றும் அப்சல் குரு விவகாரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

“தூக்கு தண்டனைக் கைதியின் கருணை மனு நிராகரிப்பட்டால், அதற்கான காரணங்களை அக்கைதிக்குத் தெரிவிக்க வேண்டும்; கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கும், தூக்கிலிடும் தினத்திற்கும் இடையே 14 நாட்கள் கால அவகாசம் இருக்க வேண்டும். இக்கால அவகாசத்தின்பொழுது அக்கைதி தனது மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடருவதற்கு உரிமை உண்டு. தூக்கிலிடும் தினத்தைக் கைதியின் உறவினர்களுக்கு முன்னரே தெரிவித்து, அவர்கள் கடைசியாகத் தண்டனைக் கைதியைச் சந்திப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்ற சட்ட நடைமுறைகள், உரிமைகள் அனைத்தும் அப்சல் குரு விவகாரத்தில் மீறப்பட்டுள்ளன; மறுக்கப்பட்டுள்ளன. மேலும், அப்சல் குருவின் சடலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படாமல், திகார் சிறையிலேயே புதைக்கப்பட்டது. அவரது உடலைத் திருப்பித் தருமாறு கோரிய அப்சல் குருவின் மனைவியின் கோரிக்கை மனிதாபிமானமற்ற முறையில் நிராகரிக்கப்பட்டது.

இந்த அநீதி அப்சல் குரு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும், காஷ்மீரத்தைச் சேர்ந்த ஒவ்வொரு முசுலீம் மீதும் இழைக்கப்பட்டிருக்கிறது. அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் எந்தவொரு அரசியல் ஆர்ப்பாட்டமும் நடப்பதை அனுமதிக்கக் கூடாது என்பதற்காகவே, அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாள் தொடங்கி ஏறத்தாழ ஒரு வாரத்திற்கு காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு உத்தரவின் கீழ் கொண்டுவரப்பட்டது; இதையும் மீறி நடந்த ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட இராணுவ நடவடிக்கையில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயமடைந்தனர்; கைபேசி, இணைய தளம், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி சேவைகள் மட்டுமின்றி, உள்ளூர் பத்திரிகைகள் வெளிவருவதும் சட்டவிரோதமான முறையில் தடை செய்யப்பட்டன.

அப்சல் அஞ்சலி
காஷ்மீர் தலைநகர் சிறீநகரில் அப்சல்குருவுக்காக நடத்தப்பட்ட பிரார்த்தனைக் கூட்டம் (மேலே); அப்சல் குருவின் உடலை ஒப்படைக்கக் கோரி, உ.பி. அலிகார் பல்கலைக் கழகத்தில் பயிலும் காஷ்மீர் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட டெல்லிப் பல்கலைக்கழக உருது பேராசிரியரும் காஷ்மீரைச் சேர்ந்தவருமான எஸ்.ஏ.ஆர். கீலானி, அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட அன்று டெல்லி போலீசாரால் சட்டவிரோதக் காவலில் அடைத்து வைக்கப்பட்டார்.

காஷ்மீரில் இயங்கிவரும் ஹுரியத் மாநாட்டு கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சையத் அலி ஷா கீலானியின் மருமகனும் (டெல்லியிலிருந்து வெளிவரும்) டி.என்.ஏ., என்ற ஆங்கில நாளிதழின் துணை ஆசிரியருமான இஃப்திகார் ஜிலானி, அவரது மனைவி, பள்ளி செல்லும் வயதுடைய அவரது இரண்டு குழந்தைகள் அனைவரும் டெல்லி போலீசாரால் அவரது வீட்டிலேயே ஐந்து மணி நேரத்திற்கும் மேலாகச் சிறை வைக்கப்பட்டனர்.

அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் ஜந்தர்மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் மீது இந்து மதவெறிக் கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதற்கு டெல்லி போலீசும் உடந்தையாக இருந்தது.

காங்கிரசு கட்சியின் தலைமை மிதவாத இந்துத்துவா அரசியலுக்குப் பதிலாக, இந்து மதவெறி அரசியலைக் கையிலெடுத்திருப்பதைத்தான் இத்தூக்கு தண்டனைகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த நடவடிக்கைகளின் மூலம் காங்கிரசு தன்னைப் பலமான அரசாகக் காட்டிக் கொண்டு, இந்து நடுத்தர வர்க்கத்தின் ஓட்டுக்களைக் கவர்ந்துவிடவும் திட்டம் போடுகிறது. அதேசமயம், அப்சல் குரு அரசியல் நோக்கங்களுக்காகத் தூக்கில் தொடங்கவிடப்படவில்லை எனக் காட்டுவதற்காகவே, பாலாறு குண்டுவைப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நான்கு தமிழர்களின் கருணை மனுக்களையும் அவசர அவரசமாக ரத்து செய்து, அவர்களையும் தூக்கு மேடையில் கொண்டுவந்து நிறுத்தியது, காங்கிரசு கும்பல்.

அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆதரிக்கும் ஓட்டுக்கட்சிகள், பத்திரிகைகள் மட்டுமல்ல; சாதாரண பொதுமக்கள்கூட உச்ச நீதிமன்றமே அப்சலுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்திருக்கிறது என வாதிட்டு வருகின்றனர். “உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டால் அதற்கு அப்பீல் இருக்க முடியாது. ஏனென்றால் உச்ச நீதிமன்றம் என்பது புனிதமான, சட்ட நுணுக்கங்களைக் கரைத்துக் குடித்த, கறைபடியாத நீதிபதிகளைக் கொண்ட அமைப்பு” என்றவாறு பொதுமக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள பிம்பம்தான் இந்த வாதத்திற்கு அடிப்படையாக இருக்கிறது.

அப்சல் கை
இட்லரில் நாஜிக் கும்பல் ஜெர்மன் நாடாளுமன்றத்தைத் தானே எரித்து விட்டு, அந்தப் பழியை கம்யூனிஸ்டுகள் மீது போட்டது. ஆனால், அங்கு நீதிமன்ற விசாரணையின் போது உண்மை வெளியே வந்து விட்டது. இங்கோ, நாடாளுமன்றத் தாக்குதலை நடத்தியது யார்? அதன் முழுப்பின்னணி என்ன? என்ற உண்மைகள் சந்தேகத்திற்கிடமின்றி உறுதிப்படுத்தப்படும் முன்னரே, அப்சல் குரு கொல்லப்பட்டு விட்டார்.

ஆனால், உச்ச நீதிமன்றம் ஒருதலைப்பட்சமான முறையில், நியாயத்துக்குப் புறம்பாக காவிரி நதிநீர்ப் பங்கீடு, நர்மதா அணைக்கட்டு உள்ளிட்டுப் பல்வேறு வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கியிருக்கிறது. பெரியாறு அணை வழக்கில் 142 அடி உயரத்துக்கு நீரைத் தேக்கலாம் எனத் தான் வழங்கிய தீர்ப்பையே மறுத்த கோமாளித்தனத்தையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரங்கேற்றியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்திருக்கும் பல தீர்ப்புகள் வழிகாட்டியாகக் கொள்ளமுடியாதபடி சுயமுரண்பாடு உடையதாக இருப்பதையும் மறுக்கமுடியாது. பல்வேறு தூக்கு தண்டனை வழக்குகளில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சட்ட அறியாமையின் காரணமாக மனம்போனபடி தீர்ப்பளித்திருப்பதும் தற்பொழுது அம்பலமாகியிருக்கிறது. நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கிலோ உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சட்ட பாயிண்டுகளைக் கொண்டு அப்சல் குருவின் தூக்கை உறுதி செயவில்லை.

நாடாளுமன்றத் தாக்குதல் டிசம்பர் 13, 2001 அன்று, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியின்பொழுது, அக்கூட்டணி ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்குண்டுத் திணறிக் கொண்டிருந்த சமயத்தில் நடந்தது. இத்தாக்குதலை நடத்த வந்த ஐந்து பேரும் தாக்குதலின்பொழுதே பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடந்த மறுநாளே, இந்தச் சதியில் ஈடுபட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் பலரைக் கைது செய்துவிட்டதாக அறிவித்தது, டெல்லி போலீசின் சிறப்புப் பிரிவு. தாக்குதல் நடந்த 17-வது நாளே இவ்வழக்கின் புலன் விசாரணையும் முடிவுக்கு வந்துவிட்டது.

இவ்வளவு விரைவாகத் தாக்குதலின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டதற்கு டெல்லி போலீசின் திறமை காரணமா அல்லது தாக்குதல் நடத்த வந்த ‘தீவிரவாதிகளின்’ சிறுபிள்ளைத்தனம் காரணமா என்பதுதான் இன்னும் விளங்காத மர்மமாக உள்ளது. ஏனென்றால், தாக்குதல் நடத்தவந்த ஐந்து பேரும் தாம் வந்த காரின் முகப்புக் கண்ணாடி மீதே, “நாங்கள் இந்தியாவை அழிக்க விரும்புகிறோம்; முட்டாள் வாஜ்பாயியையும் அத்வானியையும் நாங்கள் கொல்வோம்” என்றவாறு பல தீவிரவாத வாசகங்கள் அடங்கிய “ஸ்டிக்கரை” ஒட்டியிருந்தனர்; தீவிரவாதிகளுள் ஒருவனெனக் கூறப்படும் முகம்மது, தாக்குதலுக்குச் சற்று முன்பாக, அப்சல் குருவைக் கைபேசி வழியாக மூன்று முறை அழைத்து, “எல்லாம் திட்டப்படி நடந்துவருவதாக”க் கூறியதை போலீசு கண்டுபிடித்திருக்கிறது. இவ்வளவு சாட்சியங்களையும் போலீசுக்குக் கொடுத்துவிட்டுத்தான் அந்த ஐந்து பேரும் மாண்டு போயுள்ளனர்.

இதனால் தாக்குதல் நடத்தியவர்கள் முட்டாள்தனமாகத் திட்டம் தீட்டினார்களா, இல்லை நாடாளுமன்றத் தாக்குதலே பா.ஜ.க. ஆட்சியில் நடத்தப்பட்ட நாடகமா என்ற சந்தேகம் இன்றுவரையிலும் தீரவில்லை. போலீசும் இராணுவமும் அப்பாவி முசுலீம்களைப் பிடித்துப் போலி மோதலில் சுட்டுக் கொன்றுவிட்டுத் தீவிரவாதிகளைக் கொன்றதாகச் செய்தி வெளியிடுகிறார்கள். அரசும் நீதிமன்றமும்கூட பலசமயங்களில் இந்தப் போலி மோதல்கொலைகளுக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றன. மாலேகான், சம்ஜௌதா விரைவுவண்டி குண்டுவெடிப்புகளை இந்து தீவிரவாதிகள் நடத்திவிட்டு, பழியை முசுலீம் தீவிரவாதிகள் மீது சுமத்தினார்கள். இந்தியா, பாகிஸ்தானுக்குள் உளவாளிகளை அனுப்புவதும், அங்கிருக்கும் அரசு எதிர்ப்பாளர்களுக்கு உதவுவதும்; பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்களுக்குப் பயிற்சி அளித்து இந்தியாவுக்குள் அனுப்புவதும் சர்வசாதாரணமாக நடந்து வருகின்றன. முசுலீம் தீவிரவாதப் பிரச்சினை இவ்வளவு சிக்கல் நிறைந்ததாக மாற்றப்பட்டிருப்பதால், நாடாளுமன்றத் தாக்குதலை இந்த இரண்டு தரப்பில் யார் வேண்டுமானாலும் நடத்தியிருக்கக்கூடும்.

ஆனால், ஒரு பாரபட்சமற்ற விசாரணை தொடங்கும் முன்பே, இத்தாக்குதலின்போது கொல்லப்பட்ட ஐந்து பேரும் வைத்திருந்த அட்டைகள், இன்ன பிற சாட்சியங்களை மட்டுமே வைத்துக்கொண்டு, அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி “அவர்கள் ஐந்து பேரும் பாகிஸ்தானியர்கள்” எனக் கொளுத்திப் போட்டார். இந்த பாகிஸ்தான் பின்னணிக்கு வலு சேர்க்கும் விதமாக, பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற முசுலீம் தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் ஆஸார், தாரிக் அகமது மற்றும் காஸி பாபா ஆகிய மூவரும் இத்தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டுள்ளனர் என டெல்லி போலீசாரால் குற்றஞ்சுமத்தப்பட்டனர். சதியிலோ, தாக்குதலிலோ பங்கேற்காத, அதேசமயம் தாக்குதலுக்கு உதவியதாகச் சொல்லப்பட்ட அப்சல் குரு, எஸ்.ஏ.ஆர். கீலானி, ஷௌஹத் ஹுசேன், ஷௌஹத்தின் மனைவி அஃப்சான் குரு ஆகிய நால்வர் மட்டுமே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

அப்சல் குருவின் இளைய சகோதரன் ஹிலாலைப் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்துக்கொண்டுதான், போலீசார் அப்சலிடம் விசாரணை நடத்தினர்; வாக்குமூலத்தைப் பெற்றனர். இது மட்டுமின்றி, டெல்லி சிறப்பு போலீசு வழக்கத்துக்கு மாறான மற்றும் சட்டவிரோதமான முறையில் அப்சல் குருவைத் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு நேரடி பேட்டி அளிக்க வைத்து, அந்நேர்காணலில் நாடாளுமன்றத் தாக்குதலில் தனக்குப் பங்கிருப்பதாகச் சாட்சியம் அளிக்கவும் வைத்தது.

அப்சல் குருவை மிரட்டி வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது என்பது பச்சையாகவே அம்பலமாகியிருந்ததால், அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. எனினும் உச்ச நீதிமன்றம், “இது போன்ற சதித் திட்டங்களிலும், தீவிரவாதத் தாக்குதல்களிலும் நேரடி சாட்சியங்களும் சதித் திட்டம் தீட்டியதை உறுதிப்படுத்தும் ஆவணங்களும் கிடைப்பது இயலாத ஒன்று” எனக் கூறிவிட்டு, கிடைத்திருக்கும் சாட்சியங்களும் சூழ்நிலைகளும் அப்சல் குருவிற்கும் நாடாளுமன்றத் தாக்குதலுக்கும் தொடர்பிருப்பதை நிரூபிக்கின்றன எனத் தீர்ப்பெழுதியது.

“நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும், கைபேசி சிம்கார்டையும் அப்சல் குருதான் தீவிரவாதிகளுக்கு வாங்கிக் கொடுத்தார்; அவரது மடிக்கணினியில் நாடாளுமன்றத்திற்குள் தீவிரவாதிகள் நுழைவதற்காகத் தயாரிக்கப்பட்ட போலியான அடையாள அட்டைகள், உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்றதாகக் காட்டும் போலி ரசீதுகள் தயாரிக்கப்பட்டதற்கான பதிவுகள் உள்ளன; தாக்குதலின்பொழுது கொல்லப்பட்டவர்களை அப்சல்தான் அடையாளம் காட்டினார்” என்பவை அப்சல் குருவுக்கு எதிராக போலீசு முன்வைத்த முக்கிய சாட்சியங்கள்.

இந்த சாட்சியங்களுக்கும் அப்சல் குருவுக்குமான தொடர்பு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை; மேலும், விசாரணையின்பொழுது அப்சல் குருவுக்கு எதிராகக் கூண்டில் நிறுத்தப்பட்ட சிம் கார்டை விற்றவர், காரை விற்றவர் போன்ற சாட்சியங்கள் போலீசால் தயாரிக்கப்பட்டவை என்பதும் பளிச்செனத் தெரிந்தது.

நாடாளுமன்றத் தாக்குதல் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர் என ஊதிப் பெருக்கப்பட்டு, பாக். மீது போர் தொடுக்கும் நடவடிக்கைகளை எடுத்தது பா.ஜ.க. கூட்டணி அரசு. ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட துருப்புகள் எல்லையோரத்தில் நிறுத்தப்பட்டனர். இந்தச் சூழ்நிலைகளுக்கு இடையே நடந்துவந்த விசாரணையிலோ, எஸ்.ஏ.ஆர். கீலானியும் அஃப்சான் குருவும் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டனர்; ஷௌகத் ஹுசேனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையைப் பத்தாண்டு தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. விசாரணை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் இப்பொழுது எஞ்சியிருப்பது அப்சல் குரு மட்டும்தான்.

அப்சல் குரு தனது ஏழ்மை நிலை காரணமாக, தடா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபொழுது திறமையான வழக்குரைஞர்களை வைத்து வாதாட முடியாமல் இருந்தார். அவருக்காக வாதாட அரசு நியமித்த நீரஜ் பன்சால் என்ற வழக்குரைஞர் அனுபவமில்லாதவர் என்பதோடு, அவர், கொல்லப்பட்ட தீவிரவாதிகளை அப்சல் அடையாளம் காட்டியதை – அப்சலுக்கு எதிராக போலீசு முன்வைத்த இந்த முக்கிய சாட்சியத்தைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டார். போலீசின் இந்த சாட்சியத்தை உடைக்காமல் ஏற்றுக் கொண்டதன் மூலம் அப்சலின் கழுத்தில் சுருக்கு விழுவதற்குப் பாதை போட்டுக் கொடுத்தார், அந்த இளம் வழக்குரைஞர். இவருக்குப் பதிலாக வேறு சில வழக்குரைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களுள் ஒருவரைத் தனக்கு நியமிக்கும்படி அப்சல் கோரினார். ஆனால், அப்சலுக்காக வாதாட முன்வந்தால், இந்து மதவெறிக் கும்பல் தங்களைத் தாக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக அவர்களுள் ஒருவர்கூட அப்சலின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. சட்ட அறிவோ, அனுபவமோ இல்லாத அப்சல், தனக்கு எதிரான சாட்சியங்களைத் தானே குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய கையறு நிலைக்குத் தள்ளப்பட்டார்.

“காஷ்மீரின் சிறப்பு அதிரடிப் படையுடன் நெருங்கிய தொடர்புடைய தாரிக் என்பவன்தான், தாக்குதலில் கொல்லப்பட்ட முகம்மதுவை என்னிடம் அறிமுகப்படுத்தினான். அப்படையைச் சேர்ந்த திராவிந்தர் சிங் என்ற அதிகாரியும் தாரிக்கும் கூறியபடிதான் முகம்மதுவை டெல்லிக்கு அழைத்துவந்து வீடு பார்த்துக் கொடுத்தேன்; கார் வாங்கிக் கொடுத்தேன்; எனது குடும்பத்தாரைப் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டியதையடுத்துதான், நான் கொல்லப்பட்டவர்களை போலீசு சொல்லிக் கொடுத்தபடி அடையாளம் காட்டினேன்” என அப்சல் கதறியதை எந்தவொரு நீதிமன்றமும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்த வழக்கில் அப்சலுக்கு எதிராக வலுவான, நேரடியான சாட்சியங்கள் இல்லை. சந்தர்ப்ப சாட்சியங்களோ அவருக்குத் தாக்குதலில் நேரடித் தொடர்பு இருப்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கவில்லை. மேலும், அச்சாட்சியங்கள் முரண்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்தன. இந்த நிலையில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை உறுதி செவதற்கு உச்ச நீதிமன்றம் சட்டத்திற்குப் பதிலாக செண்டிமென்டுக்குள் புகுந்து கொண்டது. “இந்த நிகழ்ச்சி முழு தேசத்தையும் உலுக்கியிருக்கிறது. குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டால்தான் சமூகத்தின் கூட்டு மனசாட்சி சமாதானம் அடையும்” எனத் தீர்ப்பெழுதினார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

அப்சல் மற்றவர்கள்
கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க காலதாமதமானதையடுத்து, தமது தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி வழக்குத் தொடுத்திருக்கும் (இடமிருந்து) தேவேந்தர் பால் சிங் புல்லர், முருகன், பேரறிவாளன், சாந்தன்.

இட்லரின் நாஜிக் கும்பல் ஜெர்மன் நாடாளுமன்றத்தைத் தானே எரித்துவிட்டு, அந்தப் பழியை கம்யூனிஸ்டுகள் மீது போட்டது. ஆனால், அங்கு நீதிமன்ற விசாரணையின்பொழுது உண்மை வெளியே வந்துவிட்டது. இங்கோ, நாடாளுமன்றத் தாக்குதலை நடத்தியது யார்? அதன் முழுப் பின்னணி என்ன? என்ற உண்மைகள் சந்தேகத்திற்கிடமின்றி உறுதிப்படுத்தப்படும் முன்னரே, அப்சல் குரு கொல்லப்பட்டுவிட்டார்.

1980-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நடந்த பச்சன் சிங் எதிர் பஞ்சாப் மாநில அரசு என்ற வழக்கில், “அரிதினும் அரிதான வழக்கிலும்கூட, வேறு தண்டனை வழங்க முடியாது என்பதைக் கேள்விக்கிடமற்ற முறையில் நிரூபித்த பிறகுதான், தூக்கு தண்டனை வழங்க வேண்டும்” எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. 1980-க்கு முன்பு வரை கொலைக்குக் கொலைதான் தண்டனை என்ற வகையில் கொலைக் குற்றங்களுக்கெல்லாம் தூக்குத் தண்டனையை மட்டுமே அளித்து வந்த இந்திய நீதிமன்றங்கள், அதன் பின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு பச்சன் சிங் வழக்கின் தீர்ப்பைத்தான் முன்மாதிரியாகக் கொள்வதாகக் கூறிவருகின்றன.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் விடுவிக்கப்பட்டு, ஒருவரின் தண்டனை பத்தாண்டாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அப்சல் குருவிற்கு பச்சன் சிங் வழக்கு தீர்ப்பின்படிதான் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது என்று சொல்ல முடியுமா?

ஒரு குற்றவாளிக்கு தண்டனை அளிப்பது மட்டும்தான் சட்டப்படி நடக்கிறது; ஆனால், ஒருவனைக் குற்றவாளியாகத் தீர்மானிப்பது எல்லா நேரத்திலும் சட்டப்படி நடப்பதில்லை. நீதிபதியின் மனதில் மறைந்திருக்கும் அரசியல் கருத்துக்கள், ஒருதலைப்பட்சமான அவரின் சோந்த விருப்பு-வெறுப்புகள், கேள்வி கேட்கமுடியாத அவரது சிறப்பு அதிகாரம் ஆகியவையும் குற்றவாளியைத் தீர்மானிப்பதில் பங்கு வகிக்கின்றன.

நாடாளுமன்றத் தாக்குதலில் அப்சல் குருவுக்கு நேரடித் தொடர்பு இல்லை என்பது நிரூபணமான பிறகும் அவருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது; உறுதி செயப்படுகிறது. பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கிலோ, அச்சதியில் அத்வானி, ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட இந்து மதவெறிக் கும்பலின் தலைவர்களுக்கு நேரடிப் பங்கிருப்பது உலகிற்கே தெரிந்திருந்தும், அலகாபாத் உயர் நீதிமன்றம் அவர்களைச் சதி வழக்கிலிருந்து விடுதலை செய்கிறது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கிலோ, “நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படாதவரை, பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தேசிய சதிச்செயல் எனக் கூறக் கூடாது” எனக் கூறும் அளவிற்கு நீதிபதிகளிடம் இந்து மதவெறிப் பாசம் பொங்கி வழிகிறது.

ஒரிசா மாநிலத்தில் இந்து மதவெறிக் கும்பல் ஸ்டேன்ஸ் பாதிரியாரையும் அவரது இரண்டு மகன்களையும் உயிரோடு கொளுத்திய வழக்கில், முதன்மைக் குற்றவாளியான தாரா சிங்குக்கு விசாரணை நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஒரிசா உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. உச்ச நீதிமன்றம் ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ததோடு, “ஸ்டேன்ஸ் பாதிரியார் ஒரிசாவின் மனோகர்பூர் பகுதியில் மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார்; அதற்கு ஒரு பாடம் புகட்டுவதற்காகத்தான் இக்குற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது” எனக் கூறியதோடு, மத மாற்றத்தை இந்துத்துவா நோக்கிலிருந்து கண்டித்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, குற்றத்தின் தீவிரத்தன்மையையே நீர்த்துப் போகச் செய்தது.

குஜராத் முசுலீம் படுகொலைகளின்பொழுது நடந்த நரோடா பாட்டியா படுகொலை வழக்கில், அப்படுகொலையின் முதன்மைக் குற்றவாளியும் மோடிக்கு நெருக்கமானவருமான கோத்நானிக்குத் தூக்கு தண்டனை அளிக்க மறுத்தது, சிறப்பு நீதிமன்றம். “உலகெங்கும் தூக்கு தண்டனைக்கு எதிரான கருத்து மேலோங்கி வருவதால், குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை அளிக்க முடியாது” என விளக்கமளித்தார், நீதிபதி. இந்த விளக்கம் அப்சல் குருவுக்குப் பொருந்தாமல் போனதற்குக் காரணம், அவர் முசுலீம் என்பது தவிர வேறென்னவாக இருக்க முடியும்?

சந்தோஷ்குமார் பரியார் வழக்கு மற்றும் சங்கீத் வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அமர்வு மன்றங்கள், 1980-க்குப் பின் உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை தீர்ப்புகளை ஆராந்து, “அரிதினும் அரிதான வழக்கு என்பதற்கு மனம்போன போக்கில் பொருள் கொள்ளப்பட்டு மரண தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதாக” தமது தீர்ப்புகளில் கூறியுள்ளன. சந்தோஷ்குமார் பரியார் வழக்கின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ள ஏழு வழக்குகளின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, இவ்வேழு தீர்ப்புகளும் நீதிபதிகளின் சட்ட அறியாமையால் அளிக்கப்பட்ட தவறான தீர்ப்புகள் எனக் கூறியிருக்கிறது, உச்ச நீதிமன்ற அமர்வு. தவறாக அளிக்கப்பட்ட இத்தீர்ப்புகளின் அடிப்படையில் ஏற்கெனவே இரண்டு பேர் தூக்கிலிடப்பட்டுவிட்டனர்.

சட்ட அறியாமை என மெலிதாகக் கண்டிக்கப்படும் நீதிபதிகளின் இந்த மனப்பாங்கு, அவர்களின் தன்னிச்சையான அதிகாரத் திமிர் தவிர வேறல்ல. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சாபண்ணா என்பவருக்கும்; பாலாறு குண்டுவெடிப்பில் தண்டிக்கப்பட்ட சைமன், ஞானப்பிரகாசம், மாதையன், பிலவேந்திரன் ஆகிய நால்வருக்கும் கீழ்நீதிமன்றங்களில் அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் மரண தண்டனையாக உயர்த்தியதை, இந்த அதிகாரத்திமிருக்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

குறிப்பாக, பாலாறு குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிடுகிறது. அவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அமர்வால் தள்ளுபடி செயப்படுகிறது. அதேசமயம், அவ்வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் தீர்ப்பை எதிர்த்து முறையிட்ட வழக்கை, உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு தானாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு மரண தண்டனை அளிக்கிறது.

அ.தி.மு.க. குண்டர்கள் கோயமுத்தூர் விவசாயக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகளை எரித்துக் கொன்ற வழக்கிலோ உச்ச நீதிமன்றம் வேறொரு அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது. இவ்வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூன்று பேரும் இத்தண்டனையை எதிர்த்துத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செயப்பட்ட உடனேயே அக்குற்றவாளிகள் இதனை எதிர்த்தும் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செதனர். இம்மறுஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், அரிதினும் அரிதான அப்பயங்கரவாத வழக்கை விரைவாக விசாரிக்காமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறது.

கொடைக்கானல் விடுதி வழக்கில் பார்ப்பன ஜெயாவை நீதிமன்றம் தண்டித்ததைக் கண்டிப்பது என்ற பெயரில்தான் இப்படுகொலையே நடந்தது. அப்சல் குரு, அஜ்மல் கசாப் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆதரிக்கும் பா.ஜ.க., சோ ராமஸ்வாமி உள்ளிட்ட பார்ப்பன-பாசிசக் கும்பல், இந்த மூவருக்கு அளிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும் எனக் கோர முன்வருமா? இந்த மூன்று குற்றவாளிகளுக்குச் சட்ட, பண உதவிகளைச் செய்துவரும் அ.தி.மு.க. தலைமையை அம்பலப்படுத்தத் துணியுமா?

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வின் தலைவராக இருந்த நீதிபதி கே.டி. தாமஸ், தான் பணி ஓய்வுபெற்ற பிறகு செப்.2, 2011 அன்று “தி ஏசியன் ஏஜ்” என்ற நாளிதழைச் சேர்ந்த செய்தியாளரிடம், “தான் அவ்வாறு மரண தண்டனை வழங்கிய ஆயத்திற்கு தலைமை தாங்க நேர்ந்தது கெடுவாய்ப்பானது” என நொந்து கொண்டதோடு, “கொலையுண்டவர் புகழ்பெற்றவராக இருந்தால், அவ்வழக்கில் மரண தண்டனை வழங்குவது அடிக்கடி நடக்கிறது. அக்கொலையை அரிதிலும் அரிதான ஒன்றாகச் சித்தரித்துத் தங்களது முடிவை நியாயப்படுத்துவது நடக்கிறது” என்றும் கூறியிருக்கிறார்.

குற்றவாளி ஏழையாக இருந்தால், தாழ்த்தப்பட்டவராக, சமூகத்தின் அடித்தட்டைச் சேர்ந்தவராக இருந்தால், முசுலீம் தீவிரவாதி எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தால், அதிகபட்ச தண்டனை; குற்றவாளி பணக்காரனாக, ஆதிக்க சாதியைச் சேர்ந்தவனாக, இந்து தீவிரவாதியாக, அரசியல் செல்வாக்கு மிக்கவனாக இருந்தால் அவனுக்கு வேறு மாதிரியான தீர்ப்பு என ஆளுக்குத் தக்கபடியும் சட்ட அறிவு இல்லாமலும்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளிக்கிறார்கள் எனும்பொழுது; உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்தியிலும் பெட்டி வாங்கிக்கொண்டு தீர்ப்பு அளிக்கும் நீதிபதிகள் இருப்பது அம்பலமாகியிருக்கும்பொழுது இந்நீதிமன்றத்தை எப்படி உயரியதாகவும் அம்மன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு அப்பீலே கிடையாது என்றும் சொல்ல முடியும்? இந்த உண்மைகள் யாவும் சாதாரண மாஜிஸ்டிரேட் கோர்ட் நீதிபதிகளுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது என்பதை அல்லவா நிரூபிக்கின்றன.

நீதிமன்றங்களை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்ற சட்டப் பாதுகாப்பின் கீழ்தான் அவற்றின் ‘புனிதம்’ பாதுகாக்கப்படுகிறதேயொழிய, அரசின் மற்ற உறுப்புகளைப் போலவே நீதிமன்றங்களும் சீரழிந்து, தீர்ப்பளிக்கும் தார்மீக பலத்தை இழந்துதான் நிற்கின்றன.

– மு செல்வம்

____________________________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2013
____________________________________________________________________________________________________

ஈழம் : புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள்!

4

ழத் தமிழின படுகொலைக்கு நீதி கேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும், பங்காளி அய்.நா-வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்!
நூரம்பர்க்போன்ற போர்க்குற்ற விசாரணைக்கு குறைவான எதையும் ஏற்க மறுப்போம்!
தமிழகத்தில் மீண்டும் மக்கள் எழுச்சியைத் தோற்றுவிப்போம்!

என்ற மைய முழக்கத்தின் கீழ் புரட்சிகர அமைப்புகள்  நடத்திய போராட்டங்கள் பற்றிய விபரங்கள்.

1. திருச்சி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணி அண்ணாசிலை அருகில் 20.3.2013 காலை 10மணிக்கு தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தை ம.க.இ.க, பு.ஜ.தொ.மு அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தின. திருச்சி மாவட்டசெயலர் தோழர்.சீனிவாசன் தலைமை வகித்தார்.

ஈழத்தமிழர்களை கொன்றொழித்த
இலங்கை அதிபர் ராஜபக்சே,
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கையும்
தூக்கில் போடு! தூக்கில் போடு!

நம்பாதிங்க! நம்பாதிங்க!
ஜ.நா. தீர்மானத்தை நம்பாதிங்க!

என்ற எழுச்சி மிகு முழக்கத்துடன் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிங்கள இன வெறியன் ராஜபக்சே அப்பாவி ஈழத்தமிழ் மக்களை கொத்து குண்டுகளை போட்டு கொடூரமாக கொலை செய்ததை அம்பலப்படுத்தி பெண்கள் விடுதலை முன்னணித் தோழர்.பவானியும், அடுத்து இளம் பெண்களை துப்பாக்கி முனையில் பாலியல் ரீதியில் துன்புறுத்தி நிர்வாணமாக்கி கொன்ற இழி செயலை சாடி உணர்ச்சியூட்டும் விதமாக பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் தோழர்.நிர்மலாவும் பேசினர். அடுத்தபடியாக சிறுவன் என்று கூட பாராமல் பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் கொடுத்து தின்ன வைத்து துப்பாக்கி குண்டுகளால் கொன்ற கொடுஞ்செயலை அம்பலப்படுத்தி பெண்கள் விடுதலை முன்னணி தோழர்.கலா உரை நிகழ்த்தினார். ஆட்டோ ஒட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் செயலர் தோழர்.மணலிதாஸ் ஈழப் போராட்ட வரலாற்றில் இந்திய அரசின் சதி திட்டத்தை விளக்கி பேசினார். அடுத்து அனைத்து தரைக் கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர்.சேகர் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் என்பதே மோசடி பித்தலாட்டம் என்றும் ஈழத்தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படுத்தி தராது என்றும் அம்பலப்படுத்தி பேசினார்.

இறுதியாக சிறப்புரை நிகழ்த்திய மக்கள் கலை இலக்கிய கழக மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். கோவன் ஈழ மக்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் தமிழகத்தையே உலுக்கி எடுக்கிறது. எங்கு, எப்படி, எந்த நேரத்தில் மாணவர்கள் போராடுவார்கள் அதை எப்படி சமாளிப்பது என்பதே தெரியாது. காவல் துறையினர் திகைத்து நிற்கின்றனர். அது மட்டுமல்ல எதற்கும் போராட முன் வராத அன்னை தெரசா என்ற மகளிர் அமைப்பினர் கூட கொலை வெறியன் ராஜபக்சே, மன்மோகன் சிங் ஆகியோரது உருவப் பொம்மையை எரித்து போராட வேண்டிய அளவுக்கு நிலைமை உணர்ச்சி பூர்வமாக உள்ளது என்றார்.

ஆனால், ஐ.நா.சபை மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் சாரம் 2009ல் நடந்த ஈழப் போரில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதா என இலங்கை அரசே விசாரித்து நீதி வழங்க வேண்டும் என்பதேயாகும் என்றும், அதாவது, குற்றவாளியே தனது குற்றத்தை விசாரித்து தண்டனை வழங்கி கொள்ள வேண்டும் என்பதாகும். இந்த தீர்மானம் ஈழத் தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்சேவை தண்டிக்கவோ, ஈழத்தமிழர்கள் நலனை நிலைநாட்டவோ கொண்டு வரப்படவில்லை. தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் நோக்கில் இலங்கை அரசை மிரட்டிப் பணிய வைக்கும் சூழ்ச்சியே என்று தீர்மானத்தை சாடி பேசினார்.

இன்று ஈழத் தமிழர் நலனுக்காக அமைச்சர் பதவிகளைத் துறந்து கூட்டணியிலிருந்து விலகியதாக நீலிக் கண்ணீர் வடிக்கும் தி.மு.க 2014ல் வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்தே நாடகமாடுகின்றனர். உண்மையிலேயே ஈழத்தமிழர் நலனில் அக்கரையிருந்தால் 2009ல் மாநிலத்திலும், மத்தியிலும் அதிகாரத்திலிருந்த போதே போராடி இருக்கலாம். ஆனால் பதவி சுகத்தில் திளைத்தனர் போராட முன்வரவில்லை என்றார். ‘ ஆக எந்த ஒட்டுக் கட்சியும் ஈழத்தமிழர் நலனுக்காக செயல்படவில்லை என்றார்.

ஈழத் தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்சே கும்பலையும் அதற்கு துணைபோன இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரையும் தண்டிக்க 2வது உலகப் போரில் போர் குற்றவாளிகளை நூரம்பர்க் என்ற இடத்தில் விசாரித்து தண்டனை வழங்கியதை போல தண்டனை வழங்க போராட வேண்டும் என்றும், பொது ஜன வாக்கெடுப்பு நடத்தி சுய நிர்ணய உரிமை பெற போராட வேண்டும் என்றும், அதற்கு ஈழத் தமிழ் மக்கள் சிங்கள உழைக்கும் மக்களோடும, ஜனநாயக சக்திகளோடும் இணைந்து போராட முன் வர வேண்டும் என்றும் தனது உரையை நிறைவு செய்தார்.

ஆர்ப்பாட்டத்தில் சிங்கள ராணுவம் செய்த கோரக் கொலைகளை பிணக்குவியல்களை விளக்கும் படக்காட்சிகளும், இளம் பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தி கொலை செய்ததோடு நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தியதை விளக்கும் படக்காட்சிகளும் வைக்கப்பட்டிருந்தன. இவை கல் நெஞ்சக்காரர்களையும் கலங்க வைக்கும் விதமாக இருந்தன.

இவை ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு தீர்வு சொல்வதாகவும் ஈழத்தமிழர்களின் நண்பர்கள், எதிரிகள், துரோகிகளை அடையாளம் காட்டுவதாக அமைந்து இருந்தது. இவ்வார்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல் : ஒருங்கிணைப்பாளர், மக்கள் கலை இலக்கிய கழகம், திருச்சி.

2. சேத்துப்பட்டு

தகவல் : மக்கள் கலை இலக்கிய கழகம், சேத்துப்பட்டு

3. உசிலை

ஆர்ப்பாட்டம்: உசிலம்பட்டியில் 20.03.2013 புதன்கிழமை மாலை 5 மணியளவில் தாலுகா அலுவலகம் அருகில்

தமிழக உழைக்கும் மக்களே! தீரமிக்க மாணவர்களே!

ஈழத்தமிழனப் படுகொலைக்கு நீதி கேட்டு
ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும் பங்காளி
ஜ.நா.வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்!

நூரம்பர்க் (ஜெர்மன் பாசிஸ்டுகளுக்கு எதிரான)
போன்ற போர்ககுற்ற விசாரணைக்கு
குறைவான எதையும் ஏற்க மறுப்போம்!

தமிழகத்தில் மீண்டும் மக்கள் எழுச்சியைத் தோற்றுவிப்போம்!

– என்ற முழக்கத்தின் அடிப்படையில் விவசாயிகள் விடுதலை முன்னனியின் சார்பாக மக்களின் பார்வையில் படும்படியாக ராஜபக்சேவின் உருவப்படத்திற்கு செருப்புமாலை அணிவித்தும் தூக்கிலேற்றியும் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் சந்திரபோஸ் வி.வி.மு தலைமை தாங்கி உரையாற்றினார். அடுத்து தோழர் கோட்டை வி.வி.மு உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து காய்கறி சங்கத்தைச் சேர்ந்த வியாபாரி நாகராசன் காங்கிரசின் பித்தலாட்டத்தைப் பற்றி பேசினார்.

உசிலைஅடுத்து வழக்கறிஞர் ரெட் காசி அவர்கள் ஓட்டுக்கட்சி அல்லாத புரட்சிகர அமைப்பான வி.வி.மு சரியான நேரத்தில் சரியான பிரச்சனையை கையில் எடுத்து மக்களிடம் கொண்டுசெல்வதால் இதுதான் மக்களுக்கான இயக்கம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடப்பதாகவும் போர்க்குற்றவாளியான ராஜபக்சேவை தூக்கிலிடக்கூடிய சர்வதேசிய நீதிமன்ற விசாரணை வேண்டும் எனப் பேசினார்.

நிறைவு உரையாக தோழர் குருசாமி வி.வி.மு வட்ட செயலாளர் அவர்கள் சிறப்புரையாற்றினார். இறுதியாக நிறைவுசெய்கையில் மக்களுக்குத் தேவையான அரசு வேண்டும் என்றால் நாம் நமக்கான அதிகாரம் உள்ள அரசை அமைக்க வேண்டும் எனவும் அப்படி அமைக்கப்படாத அரசு நமக்கு சேவை செய்யும் என்று எதிர்பாhப்பது தவறு என்பதை அருமையாக எல்லோருக்கும் புரியும் வகையில் “நாய் நமக்கு சேவை செய்ய வேண்டுமானால் நாம்தான் நல்ல நாயை தேர்ந்தெடுத்து நாய்க்கு உணவு அளித்து வளர்க்க வேண்டும் அப்படி இல்லாமல் ஆளும் வர்க்த்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட சீமை சரக்கு நாயான இந்திய அரசு உழைக்கம் மக்களாகிய நமக்கு எப்படி சேவை செய்யும்? மாறாக அந்த நாய் அதன் எஜமானனான ஆளும் வர்க்கத்திர்க்குத்தான் சேவை செய்யும்” என்ற உதாரணம் மிகவும் பொருத்தமாக இருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்பினர்கள் சிலர் கலந்துகொண்டனர்.

தகவல் : பு.ஜ.செய்தியாளர், உசிலை.

4. மதுரை வழக்கறிஞர்களின் விமான நிலைய முற்றுகை போராட்டம்

தகவல் : மனித உரிமைகள் பாதுகாப்பு மையம்

4. பென்னாகரத்தில் பெண் தோழர்கள் போராட்டம்

ஈழத்தமிழின படுகொலைக்கு நீதிகேட்டும், ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் வி.வி.மு. பெண் தோழர்களும் – ஆதரவான பெண்களும் போலீசின் அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டம்!
பென்னாகரம் நீதிமன்ற வழக்கறிஞர்கள் வாழ்த்து!

ஈழப்பகுதியில் ஈழத்தமிழ் மக்களை படுகொலை செய்த சிங்கள இனவெறியன் ராஜபக்சே – கோத்தபயா – பொன்சேகா கும்பலை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்க உலகநாடுகள் ஐ.நா.வை நிர்ப்பந்தப்படுத்த வேண்டும் எனில் இந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டும் வி.வி.மு.வைச் சேர்ந்த பெண் தோழர்கள் கைக்குழந்தைகளுடன், பெண்கள், மாணவர்கள், மாணவிகள், சிறுவர்கள் என்ற 50க்கும் மேற்பட்டோர் 21.3.2013 அன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு போலீசின் அனுமதியின்றி பென்னாகரம் பேருந்து நிலையத்திற்குள் உண்ணாவிரதப் போராட்டம் என்று பேனரைக் கட்டி ஆர்ப்பாட்டத்தை நடத்த ஆரம்பித்தனர்.

பேருந்து நிலையத்திற்குள் பெண்கள் – சிறுவர்கள் திடீரென்று முழக்கமிட்டதும் சுற்றி நின்றிருந்த பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பெண்கள் முழக்கமிட்ட கால் மண இநேரத்தில் காவல்துறையினர் உதவி ஆய்வாளர் உட்பட 5 பேர் வந்து ‘யாரைக் கேட்டு இங்கு வந்து உட்கார்ந்து இருக்கீங்க, அனுமதி பெறாமல் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று செய்யக் கூடாது, கிளம்புங்கள்’ என்று பேசினார். அதற்கு பெண் தோழர்கள் எழுந்து வந்து, “சார் உண்ணாவிரதத்திற்கு அனுமதி வாங்கணும்னு எங்களுக்கு தெரியாது என்றும் அனுமதி வாங்கித்தான் உண்ணாவிரதம் இருக்கணும்னா அனுமதி கொடுங்கள் என்றும் பேசினர். அனுமதி கேட்காமல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளீர்கள் அதனால் உங்களை கைது செய்றோம் என்று ஒரு போலீஸ்காரர் எஸ்.ஐ. அந்த பஸ்ஸை கூப்பிடுங்க என்று கூறினார். அவ்வாறு மிரட்டிப் பார்த்தால் தோழர்கள் கலைந்து போய் விடுவார்கள் என்று பேசியும் தோழர்கள் அச்சப்பட்டு கலையாமல் போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கமிட்டக் கொண்டே இருந்தனர்.

இதனைப் பார்த்த போலீஸ் கலைந்து செல்ல மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்டு அருகில் நின்று கொண்டு இருந்த வட்டச் செயலாளர் தோழர் கோபிநாத்தை பார்த்து உங்க நல்ல பெயரை (வி.வி.மு.ன் பெயரை) நீங்களே கெடுத்துக் கொள்கிறீர்கள் என்று தலையாட்டிக் கொண்டு கோபமாக பேசினார். அதற்கு கோபிநாத் பெண்கள் செய்கிறார்கள் சார், நாங்க என்ன செய்ய முடியும், உண்ணாவிரதம்தானே செய்யட்டும் விடுங்க என்று தோழர்களுக்கு ஆதரவாக பேசினார். ஒரு புறம் எஸ்.ஐ. தனது மேலதிகாரிகளுக்கு போனில் தகவல் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார். தோழர்கள் முழக்கமிட்டுக் கொண்டு இருக்கின்றனர் மறுபுறம். போலீஸ் வந்து தோழர்களிடம் பேசியதிலிருந்து பொதுமக்கள், கடைக்காரர்கள் அனைவரும் அடுத்து என்ன நடகும் என்ற எதிர்பார்ப்போடும் பரபரப்போடும் கூட்டமாக இருந்து ஆவலாக கவனித்துக் கொண்டு இருந்தனர்.

பின்னர் தனது மேலதிகாரிகளிடன் தொலைபேசியில் உண்ணாவிரதப் போராட்டம் பற்றி தகவல் தெரிவித்து விட்டு வந்த எஸ்.ஐ. தோழர்களிடம் உண்ணாவிரதப் போராட்டம் என்று பேனரில் போட்டிருக்கிறீர்கள். உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கொடுக்கிறேன், முழக்கம் போடக் கூடாது. முழக்கம் போட்டால் அது ஆர்ப்பாட்டம் போல் உள்ளது என்று கூறி விட்டு, பொதுமக்களுக்கு தொந்தரவு என்று எங்களுக்கு கம்ப்ளைன்ட் வரக்கூடாது. யாரையும் விருப்பமின்றி அழைத்து உட்கார வைக்கக் கூடாது என்று கூறி விட்டுச் சென்றார். பின்னர் மாலை 4 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் முடித்து வைக்கும் வரை எட்டிக் கூடப் பார்க்கவில்லை.

தோழ்ரக்ள போராட்டத்தின் உறுதியைப் பார்த்த டீக்கடைக்காரர்கள் குழந்தைகளுக்கு பால் வாங்க என்ற போது காசு வாங்க மறுத்து இலவசமாக கொடுத்தனர். மாங்காய் கடைக்காரர் ஒருவர் தட்டில் உள்ள அனைத்து மாங்காயையும் கொடுத்து ஆதரித்தார். ஒரு பெட்டிக் கடைக்காரர் பெண்கள் உறுதியாக போராடி ஜெயிச்சுட்டாங்க, இப்படித்தான் இருக்கணும், பரவாயில்லீங்க என்று பெருமையாக பேசினார்.

போலீசின் அனுமதியின்றி ஆரம்பித்து நடத்திய பராட்டம் போலீசை தன் இடத்திற்கு வரவழைத்து அனுமதியை கொடுக்க வைத்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் போராட்ட உணர்வை ஊட்டுவதாக அமைந்தது. போலீஸ் தோழ்ரகளையும் வாக்குவாதத்தின் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது வி.வி.மு. ஆதரவாளர் ஒருவர் என் உயிரே போனாலும் பெண்களை போலீஸ் அப்புறப்படுத்த விட மாட்டேன் என்று கூறியது உறுதியை மேலும் அதிகரித்தது.

தகவல் : செய்தியாளர், புதிய ஜனநாயகம், பென்னாகரம் 23.03.2013.

5. பென்னாகரம் முடி திருத்தும் தொழிலாளர்கள்

பென்னாகரம் முடி திருத்தும் தொழிலாளர்கள்ஜெனிவா மாநாட்டில் இனப்படுகொலை – போர்க்குற்றம் என்று தீர்மானத்தில் குறிப்பிடாததைக் கண்டித்து பென்னாகரத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடைகளை அடைத்து கண்டன ஆர்ப்பாட்டம்.

இலங்கையின் தமிழ்ஈழப்பகுதியில் 2009-ன் இறுதிப் போரில் இலங்கை அரசு தமிழ் ஈழ மக்களை இனப்படுகொலை செய்தது. அது பற்றி சமீபத்தில் நடந்த ஜெனீவாவின் மனித உரிமை கவுன்சிலின் மாநாட்டில் இலங்கையின் போரில் இனப்படுகொலை – போர்க்குற்றம் நடந்துள்ளது என்று குறிப்பிடாததைக் கண்டித்து பென்னாகரத்தில் உள்ள முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்களின் கடைகளை அடைத்து 22.3.2013 அன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சத்தியமூர்த்தி தலைமைதாங்கி நடத்தினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை வரவேற்று – வாழ்த்தி பென்னாகரம் வழக்கறிஞர்கள் ஜானகிராமன், ரமேஷ்வர்மா, மகாலிங்கம், தேவேந்திரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

ராஜபக்சேவிற்கு எதிராகவும், ஜெனீவா மாநாட்டுத் தீர்மானத்திற்கு எதிராகவும் முழக்கங்கள் இடப்பட்டன. இறுதியில் தோழர் மணி நன்றி உரை கூறினார்.  இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் முருகன், கிருஷ்ணன், வெங்கடேசன், குமார் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

தகவல் : செய்தியாளர், புதிய ஜனநாயகம், பென்னாகரம்

6.  புதுச்சேரியில் பு.ஜ.தொ.மு சார்பாக ” ஈழ மக்களின் படுகொலைக்கு துணைப்போன இந்திய அரசைக் கண்டித்து ” தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் மற்றும் இருசக்கர வாகன பிரச்சாரம்.

பு.ஜ.தொ.மு சார்பாகவும் அதன் இணைப்பு சங்கங்கள் கோத்ரேஜ் சாராலி ஒருங்கிணைந்த தொழிலாளர் சங்கம், இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்கர்ஸ் யூனியன், ரானெ பிரேக் தொழிலாளர் சங்கம், மதர் பிளாஸ்டிக் தொழிலாளர் சங்கம்  சார்பாகவும் நான்கு இடங்களில் நகர பகுதியில் ”தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம்” மற்றும் கிராமங்களிலும் இப்பிரச்சாரத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் 16 கிராமங்களில் சைக்கிள்  பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

தொடர் முழக்க கண்டன ஆர்ப்பட்டம் நடந்த அனைத்து இடங்களிலும் இனவெறியன் ராஜபக்சே உருவ பொம்மையை தூக்கிலிட்டும், செருப்பால் அடித்தும், எரித்தும் நடத்தப்பட்டது. குறிப்பாக ஈழத்தமிழனத்தின் படுகொலைக்கு ராஜபக்சே மட்டும் குற்றவாளியல்ல  இப்போருக்கு அடிப்படை காரணமானவர்கள்  இந்திய ஆளும் வர்க்கமான டாட்டா, பிர்லா, அம்பானி, மிட்டல் போன்ற கும்பலும் அதன் கைக்கூலி இந்திய அரசும் அதன் ஆட்சியாளர்களும்தான். இந்திய ஆளும் வர்க்கங்களின் ஆரம்பகால கைக்கூலியான இந்திராகாந்தி அரசு அன்றைக்கு ஈழ போராளி குழுக்களுக்கு ஆயுத உதவி செய்தது, ஆதரித்தது. அனைத்தும் இந்திய தரகு முதலாளிகளின் மூலதனத்தை இலங்கையில் கொட்டி கொள்ளையிடுவதற்கும், அதற்கு
இலங்கை அரசை அடிபணிய வைப்பதற்கும்தான். இன்றைக்கு சிங்கள அரசுக்கு உறுதுணையாக இருந்து இனப்படுகொலைக்கு துணைசென்று ஈழ விடுதலையை எதிர்ப்பதும், இலங்கையில் உள்ள இந்திய ஆளும் வர்க்க கும்பலின் மூலதனத்தை தக்க வைத்துக்கொள்ளவும் அதை மேலும் விரிவுபடுத்திக் கொள்ளவும்தான். எனவே இந்திய அரசு எப்போதும் ஈழ விடுதலையை ஆதரித்ததில்லை, எப்போதும் எதிரிதான். இந்த எதிரி  இந்திய அரசிடமே ஈழ விடுதலைக்கு கோரிக்கை வைப்பதும் அல்லது அவர்களது ஆதரவோடு விடுதலை பெற்றுக்கொள்ளலாம் என்ற நோக்கில் போராட்டம் தொடர்ந்ததும், இதே நோக்கில் தமிழகத்தில் ஈழ ஆதரவு அமைப்புக்கள் செயல்பட்டதும்தான், 30 ஆண்டுகால ஈழ விடுதலை போராட்டம் இப்படி ஒரு கசப்பான நிலைக்கு வந்து முடிந்ததும், லட்சகணக்கான மக்கள் ஆனாதைகளாக நிற்பதற்கும் காரணம். இத்தவறான நிலைப்பாட்டுக்கு சென்றது வர்க்கப்பார்வையற்ற அரசியல் கொள்கைதான். இந்திய மேலாதிக்க அரசை எதிர்க்காமல், சுரண்டலை எதிர்க்காமல்,ஏகாதிபத்திய ஒடுக்குமுறைகளை எதிர்க்காமல் எந்த ஒரு தேசிய இனமும் விடுதலை பெற முடியாது என்கிற வகையில் இப்பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டது.

தகவல் : பு.ஜ.தொ.மு., புதுச்சேரி

7. ரெட்ஹில்ஸ்

திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் சார்பில் 21.3.2013 அன்று மாலை 4.30 மணி அளவில் செங்குன்றனம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில இணைச்செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் கண்டன உரையாற்றினார்.

இணைப்பு சங்கத் தோழர்களும் உழைக்கும் மக்களும் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம், நடைபாதை கடை வியாபாரிகளிடமும், பாதசாரிகளிடமும், ஆட்டோ, வேன் ஓட்டுனர்களிடமும் ஒரு பதிவை ஏற்படுத்துவதாக அமைந்தது.

தகவல் : பு.ஜ.தொ.மு., திருவள்ளூர் மாவட்டம்

8. திருச்சி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

திருச்சியில் பு.மா.இ.மு சார்பாக சட்டக்கல்லூரியிலும் பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியிலும் உள்ளிருப்பு போராட்டம், ரயில் மறியல், கலெக்டர் அலுவலக முற்றுகை, கொடும்பாவி எரிப்பு போன்ற போராட்டங்களை முன்னெடுத்து செய்தோம். இதில் 20.3.2013 அன்று அனைத்து கல்லூரி மாணவர்களும் போராட வேண்டும் என ஒருங்கிணைந்தனர். நம்மை தொடர்பு கொண்டு அழைத்தனர். நாம் அவர்களை பேரணியாக அழைத்து சென்று மறியல் மற்றும் காங்கிரசு அலுவலகம் முற்றுகை என போராட்டங்களில் ஈடுபட்டோம். அறிமுகமான மாணவர்களைக் கொண்டு திருச்சி மாவட்ட அனைத்து மாணவர் போராட்டக் குழு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டோம். இதனடிப்படையில் 23.3.2013 அன்று பேரணி நடத்த திட்டமிட்டதில் 15 கல்லூரி மாணவர்கள் சுமார் 120 பேர் கலந்து கொண்டனர். கல்லூரி விடுமுறை விடப்பட்டுள்ள நாட்களில் மாணவர்கள் போராட முன்வந்தது பாராட்டுக்குரியதாகும்.

இந்த அடிப்படையில் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை நகரின் முக்கியமான சாலைகளின் வழியே பேரணியாக சென்றோம். பேரணியின் முதல் வரிசையில் ஈழத்தமிழ் மக்களை ஒபாமாää மன்மோகன்சிங், ராஜபக்சே மூவரும் கூட்டுசேர்ந்து சித்ரவதை செய்வது போல காட்சிப்படிவம் செய்யப்பட்டது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மக்கள் அதிகமாக கூடியிருந்த பகுதிகளில் மாணவர்கள் இருபுறமும் நின்று விளக்கி பேசியதை மக்கள் கைதட்டி வரவேற்றனர். பேரணி செல்லும் வழிகளில் துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டது.

பேரணி துவங்கும் முன்பே காவல் துறையினர் “இன்று எதை உடைக்க போகிறீர்கள்” என்று கேட்டனர். “சார் எங்க நோக்கம் அது இல்ல நாங்க பிரச்சாரம் தான் செய்யப்போறோம்” என்று விளக்கி பேசியதும் “இப்படியே எல்லாரும் செஞ்சா எப்படி பா எங்க பொழப்பு என்ன ஆகுறது” என்று சலித்துக்கொண்டு இறுதிவரை போக்குவரத்தை சரி செய்து கொடுத்தனர்.

போகும் வழிநெடுக தலைமை தபால் நிலையம், காங்கிரஸ் அலுவலகம் போன்ற இடங்களில் போலீஸ் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மாணவர்கள் அதை பொருட்டாக கருதாமல் விண்ணதிர முழக்கமிட்டு கம்பீரமாக நடந்து சென்றனர். இறுதியாக பேரணி முடியும் போது அனைத்து கல்லூரிகளின் மாணவர் தலைவர்கள் பொதுமக்களிடம் மாணவர் போராட்டங்களுடன் தங்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பேசி பொதுமக்களுக்கு  அழைப்பு விடுத்தனர்.

சன் டிவி: சிக்கிய ராஜாவை வைத்து சிக்காத ராஜாக்களைப் பிடிப்போம்!

15
சன் டிவி ராஜா
சன் நியூஸ் புள்ளி ராஜா. படம்: சவுக்கு
சன் டிவி ராஜா
சன் நியூஸ் புள்ளி ராஜா. படம்: சவுக்கு

சன் நியூஸ் தொலைகாட்சியின் ஆசிரியர் ராஜா வாசுதேவன், ஒரு பாலியல் குற்றச்சாட்டில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார். அந்த டி.வி.யின் செய்தி வாசிப்பாளர் அகிலா என்ற பெண் கொடுத்த புகாரில் இந்த கைது நடந்திருக்கிறது. இது பத்தோடு பதினொன்றாக வந்து செல்லும் பாலியல் குற்றச்சாட்டு அல்ல. ஊருக்கெல்லாம் உபதேசிக்கும் ஊடகங்களின் யோக்கியதையை அப்பட்டமாக வெளியே கொண்டு வந்திருக்கிறது இந்தப் புகார்.

இதில் சிக்கி அம்பலப்பட்டிருக்கும் ராஜாவை தாங்கிப் பிடிக்கவும், காப்பாற்றவும் ஏராளமானோர் முயல்கின்றனர். ஆனால் எந்தவித பின்னணியும் இல்லாமல் தன் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் அத்துமீறலுக்கு எதிராக மாபெரும் ஊடக சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து தன்னந்தனியாக போராடிக் கொண்டிருக்கிறார் அகிலா. இந்த நிலையில் இந்தப் பிரச்னையின் பன்முகப் பரிமாணங்களையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

சன் நியூஸ் தொலைகாட்சிதான் தமிழ்நாட்டின் முதல் 24 மணி நேர செய்தி சேனல். ஆரம்ப காலத்தில் இருந்து இதற்கு ஆசிரியராக செயல்பட்டு வரும் ராஜா வாசுதேவன் குறித்து தமிழ் ஊடகங்களில் இயங்கும் யாரும் அறிந்திராமல் இருக்க முடியாது. ராஜா என்ற பெயர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பிரபலம். தன்னிடம் வேலை பார்க்கும் நிருபர்களை, உதவி ஆசிரியர்களை, ஒளிப்பதிவாளர்களை எல்லோருக்கும் மத்தியில் கேவலமாக திட்டுவதிலும், அசிங்கப்படுத்துவதிலும் ராஜா கை தேர்ந்தவர். அதை தனது ஸ்டைலாகவே நிலைநாட்டிக் கொண்டவர். தன்னுடைய தகுதிக் குறைபாடுகளை மறைப்பதற்காகவே அவர் இவ்வாறு நடந்துகொள்கிறார் என்பது பலருக்கு புரிந்தாலும் அவரை எதிர்த்துப் பேச அங்கு ஆள் இல்லை. அவரது செல்வாக்கு அப்படி.

சன் டிவிக்கு முன் “பூமாலை” வீடியோ இதழ் நடத்தி வந்த காலத்தில் இருந்தே மாறன் சகோதரர்களுடன் இருக்கும் ராஜா நினைத்தால் யாரையும் வேலைக்கு வைத்திருக்க முடியும், தூக்கியெறிய முடியும். இவரது மனிதத் தன்மையற்ற செயல்களால் வேலை இழந்தவர்கள் ஏராளம். இது ராஜா என்ற தனிநபரின் குணாதிசயம் மட்டுமல்ல. சன் டிவி நிறுவனமே ஊழியர்களை கொத்தடிமைகளாக நடத்தும் “நாட்டாமை” நிறுவனம்தான்.

வெளித்தோற்றத்துக்கு பல்லடுக்கு கார்ப்பரேட் அலுவலம் போலத் தோற்றமளிக்கும் சன் டி.வி., நெட்டுக்குத்தாக நிற்கும் ஒரு  டீ எஸ்டேட். அங்கே பணியாற்றுபவர்களின் உடை நவ நாகரீகமாக இருந்தாலும்,  உத்தியோகம் கங்காணி வேலை அல்லது அடிமைப் பணிதான்.  ஆணோ பெண்ணோ நீங்கள் யாராக இருந்தாலும், தலைமையில் உள்ளவரை காக்கா பிடித்தால்தான் வேலையில் பிரச்னை இல்லாமல் தொடர முடியும். தனிநபர்களின் விருப்பங்களும், செல்வாக்குமே அந்த தொலைகாட்சியை இயக்குகின்றன. மேல் அதிகாரி, தனக்கும் கீழ் உள்ளவரை கைநீட்டி அடிப்பது எல்லாம் கூட அவ்வப்போது நடக்கும். சம்பளத்தை பொருத்தவரை மிக, மிக குறைவான ஊதியம்தான். இந்த சென்னை நகரில் 7 ஆயிரம் மாதச் சம்பளம் வாங்குபவர்கள் அங்கு உண்டு. 20 ஆயிரம் ரூபாய் என்பது சன் டி.வி.யில் மிகப்பெரிய சம்பளம்.

வெளியே கார்ப்பரேட்தனம்; உள்ளே பண்ணையார்தனம்’ என்ற இந்த சிஸ்டம் பல கோடிகளை மிச்சம் பிடித்துத் தருவதால் கலாநிதிமாறன் விரும்பியே இதை அனுமதித்திருக்கிறார். இந்த வேலையை அவருக்கு சரியாக செய்து தரும் பொருட்டு, சன் நெட்வொர்க்கின் ஒவ்வொரு சேனலுக்கும் ஒரு கங்காணி இருக்கிறார். அந்த வகையில் சன் நியூஸ் சேனலின் கங்காணிதான் இந்த ராஜா.

ராஜா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் ஒரு வதந்தி போல அவ்வப்போது வந்து செல்வதுண்டு. அவை புகாராகவோ, வழக்காகவோ இதுவரை மாறியதில்லை. செய்தி வாசிப்பாளர் அகிலா இந்த திருட்டுப் பூனைக்கு மணி கட்டியிருக்கிறார்.

கீழ் நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தை சேர்ந்த ஏழைப் பெண்ணான அகிலா, சன் நியூஸ் தொலைகாட்சியில் வேலைக்குச் சேர்ந்து ஏறக்குறைய ஓர் ஆண்டுகாலம் ஆகிறது. மணவிலக்கு வழக்கு நிலுவையில் உள்ள,  ஓர் ஆண் குழந்தையை வைத்திருக்கும் அகிலாவின் குடும்ப சூழலை நேர்முகத்தேர்வின் போதே தெளிவாக கேட்டுத் தெரிந்துகொண்ட ராஜா, அதன்பிறகு பொருத்தமான சந்தர்ப்பம் பார்த்து வக்கிரத்திற்கு நூல் விடுகிறார். எல்லோரிடமும் இஞ்சி தின்ற குரங்கு போல காரணமே இல்லாமல் சிடுசிடுக்கும் அவர், அகிலாவிடம் ஒரு விடலைப் பையனைப் போல வழிகிறார். இவை அனைத்தும் அந்தப் பெண்ணால் ஒலிப்பதிவு செய்யப்பட்டு புகாருடன் கொடுக்கப்பட்டுள்ளன. (சவுக்கு இணையதளத்தில் இதன் ஆடியோ பதிவை கேட்க முடியும்).

இந்தப் புகாரின் உண்மைத் தன்மை என்ன என்பதை போலீஸ் விசாரிக்கிறது. அது ஒரு பக்கம் நடக்கட்டும். ஆனால் ஒரு சாதாரண பாலியல் புகார் என்றாலே முந்திக்கொண்டு பரபரப்பை கிளப்பும் தமிழ்நாட்டு ஊடகங்கள் மிகப்பெரிய அதிகாரத்தில் இருக்கும் ஒரு நபர் மீதான ஆதாரப்பூர்வமான புகாரைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. குமுதம் ரிப்போர்ட்டர், தமிழக அரசியல், தினமலரின் திருச்சி பதிப்பு,           தி இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகிய அச்சிதழ்கள் மட்டுமே இந்த செய்தியை வெளியிட்டன. அவர்களும் கூட பெண்ணின் நியாயத்தில் இருந்து அல்லாமல், ‘ராஜாவை அசிங்கப்படுத்த இது ஒரு வாய்ப்பு’ என்ற தங்களது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் கோணத்தில் இருந்து மட்டுமே செய்தியை வெளியிட்டார்கள். மாறன் சகோதரர்கள் மீதுள்ள கோபமும் இதை வெளியிடுவதற்கான முக்கியக் காரணம். ஒரே ஒருமுறை ஜெயா ப்ளஸ் தொலைகாட்சியில் இந்த செய்தி வெளியானது. அத்தோடு சரி.

மற்றபடி ‘தமிழ்நாட்டின் நாடித்துடிப்பு’ என்று பஞ்ச் டயலாக் பேசும் ஜூனியர் விகடன் உள்ளிட்ட விகடன் குழும இதழ்கள் ஒரு வார்த்தை கூட இதைப்பற்றி எழுதவில்லை. விகடன் டெலிவிஸ்டாஸின் சார்பாக சன் குழுமத்தில் வந்துகொண்டிருக்கும் சீரியல்கள், ஒவ்வொரு நாளும் லட்சங்களை அள்ளிக் கொட்டும்போது அவர்கள் நாடி எப்படித் துடிக்கும்?
சரி… இவர்களுக்கு நேரடி வர்த்தக நலன் இருக்கிறது, அதனால் எழுதவில்லை.

தினந்தந்தி, தினமணி, தினமலர், தி. ஹிண்டு, டைம்ஸ் ஆஃப் இண்டியா, நக்கீரன், டெக்கான் கிரானிக்கல் என வேறு யாரும் எழுதவில்லையே ஏன்? சன் நியூஸ் தொலைகாட்சியின் நேரடிப் போட்டியாளரான புதிய தலைமுறை தொலைகாட்சிக் கூட இந்த உண்மையை உலகுக்கு உரக்கச் சொல்லவில்லையே எதனால்? சன் குழுமத்தை அசிங்கப்படுத்த இது ஒரு நல்வாய்ப்பு என்றபோதிலும் ஜெயா டி.வி. அடக்கி வாசிப்பதற்கு என்ன காரணம்?

ஏனெனில் இவர்கள் கூட்டுக்களவாணிகள். “இன்று ராஜாவை பற்றி நாம் செய்தி வெளியிட்டால், நாளை நம் மீது ஒரு குற்றச்சாட்டு வரும்போது அவர்கள் செய்தி வெளியிடுவார்கள்”  என இவர்களின் ‘கூட்டு மனசாட்சி’ நினைக்கிறது. இதை, ‘ஒரு மீடியா பத்தி இன்னொரு மீடியாவுல நியூஸ் போடக்கூடாது. இது ஒரு எத்திக்ஸ்’ என்று அறம் பேசுகிறார்கள்.

“ஒரு திருடன் சக திருடனை காட்டிக் கொடுக்கக்கூடாது’ என்ற கட்டுப்பாடுதான் இவர்கள் கூறும் அறம். இன்று ராஜா சிக்கிக்கொண்டார். ஆனால் ஒவ்வொரு ஊடகத்திலும் சிக்காத ராஜாக்கள் பலபேர் இருக்கிறார்கள். அவர்களிடம் சிக்கி, பணியிடத்தில் கடும் தொந்தரவுகளுக்கு உள்ளாகி, அடுப்பங்கரைக்கே துரத்தப்பட்ட பெண்கள் எத்தனையோ பேர்.

ஊடகங்களின் மௌனத்தை மட்டுமல்ல… ஊடக கருத்து சொல்லிகளின் மௌனத்தையும் இங்கு நாம் அம்பலப்படுத்த வேண்டும். அ முதல் ஃ வரை அனைத்து பிரச்னைகளின் மீதும் ஆவேசமாக அறவுணர்ச்சிப் பொங்க கருத்து சொல்லும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் ஒரு ஏழைப் பெண்ணுக்கு மிகப்பெரிய அதிகாரத்தினால் இழைக்கப்படும் அநீதி குறித்து எந்தக் கருத்தையும் சொல்லவில்லையே ஏன்? ‘நேர்படப்பேசு’ முதல் ‘விவாத மேடை’ வரை எல்லா இடங்களிலும் அவர் பேசும் கருத்துக்கு அவர் நேர்மையாக இருப்பாரேயானால் இந்த பாலியல் அத்துமீறல் குறித்து எழுதியிருக்க, பேசியிருக்க வேண்டும். இப்போதேனும் அதை செய்ய வேண்டும். மாணவர் போராட்டங்கள் குறித்து சன் நியூஸ் நேரலையில் பல மணி நேரம் உட்கார்ந்து கருத்து சொன்ன அ.மார்க்ஸ், அதே சன் நியூஸில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்திருக்கும் அத்துமீறல் குறித்து ஒரு வார்த்தையும் எழுதவில்லை. இவர்கள் இருவர் மட்டுமல்ல… இவர்களைப் போன்ற பல நிலைய வித்வான்களும், வித்வான் வாய்ப்புக்கு காத்திருக்கும் அறிவு சீவிகளும் வாய் திறக்கவில்லை.

டாடாவுக்கு ‘கவிதை’ எழுதிய லீனா மணிமேகலையின் ‘கருத்து சுதந்திரத்திற்காக’ டாஸ்மாக் கடைகள் முதல் எல்லோ பேஜஸ் டைரக்டரி வரையிலான சகல இடங்களிலும் படைப்பாளிகளைச் சல்லடை போட்டு சலித்து கூட்டம் சேர்த்த கருத்துரிமைக் காவலர்கள்; ஜனநாயகம், மனித உரிமை, பெண்ணுரிமை உள்ளிட்ட சகலவிதமான உரிமைகளின் ஆசான்களும் அத்தாரிட்டிகளுமாகிய பீஷ்ம பிதாமகர்கள், துரோணாச்சாரிகள் .. எங்கே? அவர்களுடைய மவுனத்திற்கு காரணம் என்ன?

அதற்கு காரணம் அவர்களுடைய சுயநலமோ அடுத்த “படத்தில்” நமக்கு சான்ஸ் கிடைக்காமல் போய், தமிழகத்தின் முதல் பத்து அறிவுஜீவிகளில் ஒருவராக இல்லாமல் தொலைந்து போய்விடுவோமோ என்ற கவலையோ அல்ல. அவர்களுடைய மவுனத்துக்கு ஆழ்ந்த பொருள் இருக்கிறது. Greater common cause! அகிலா என்ற ஒரே ஒரு பெண்ணின் நியாயத்துக்காக அவசரப்பட்டு குரல் கொடுப்பதன் மூலம், ஈழத்தின் ஆயிரக்கணக்கான பெண்களுக்காகவும், அங்கே கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்காகவும் குரல் கொடுக்கும் வாய்ப்பை இழந்துவிடுவோமே என்ற கவலையின் காரணமாகத்தான் அவர்களால் தொண்டைக்குள்ளிருந்து வார்த்தையைத் துப்ப முடியவில்லை. ஒன்று பெரிதா ஆயிரம் பெரிதா என்று தீவிரமான ஆராய்ச்சியில் கடந்த சில நாட்களாகவே மூழ்கி, கடைசியில் ஆயிரம்தான் பெரிது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

இந்த இலட்சணத்தில் அரசியல்வாதிகள் மட்டமானவர்களாம். அறிவுசீவிகள் உத்தமர்களாம். பத்திரிகைகள், தொலைக்காட்சிகளின் தயவை நம்பி, அறிக்கை விட்டும், தொலைக்காட்சியில் மூஞ்சியைக் காட்டியும் தான் உயிரோடு இருப்பதை அன்றாடம் உறுதி செய்து கொள்ளவேண்டிய நிலையில் இருக்கும் எல்லா அரசியல்வாதிகளும் “ஊடகங்களின் மீதும் பத்திரிகை சுதந்திரத்தின் மீதும் பெருமதிப்பு வைத்திருப்பது” இதற்காகத்தான். தற்போது சன் டிவி புள்ளிராஜாவின் சுதந்திரமும் பத்திரிகை சுதந்திரத்திற்குள் வந்து விட்டது போலும்! எனவேதான் அறிவுஜீவிகள், இனமானக் காவலர்கள், புரட்சிப்புயல், உலகத்தமிழர் தலைவர்கள், தமிழ் மானத்தின் மொத்த குத்தகைதாரர்கள் மற்றும் உள் குத்தகைக்காரர்கள் உள்ளிட்ட யாரும் பேசவில்லை.

அமெரிக்கா முதல் ஆண்டிப்பட்டி வரை அநீதிகளை எதிர்த்து நாகரீகமாக அறிக்கை விடும் போலிக் கம்யூனிஸ்டுகள் எங்கே போனார்கள்? சிதம்பரம், வாச்சாத்தியில் உரிமைக்கு குரல் கொடுத்த வரலாறே நாங்கள்தான் என்று பொங்குபவர்கள் என்ன செய்கிறார்கள்? சன் டிவி என்றால் அத்தனை பயமா? இல்லை செய்தி அரங்கத்தில் நம்மையும் மதித்து முகம் காட்டுகிறார்களே என்ற நன்றி விசுவாசமா? ஆமென்றால் உங்கள் ஜனநாயக மாதர் சங்கத்தையும், சம்மேளனத்தையும் கலைத்து விடுங்கள்!

பத்திரிகையாளர்கள் சங்கம் என்ன செய்கிறது என்று தெரியவில்லை. பெண் பத்திரிகையாளர்களுக்கு வேறு தனி சங்கம் இருக்கிறதாம். இவர்கள் யாரும் ஏன் பேசவில்லை. பேசினாலே தங்கள் நிறுவனத்தில் தன்னை கட்டம் கட்டி விடுவார்கள் என்ற பயமா? அகிலாவும் இப்படி பயந்து பணிந்துவிடுவார் என்பதுதான் ராஜாவின் கணக்காக இருந்திருக்கிறது. தற்போது பத்திரிகையாளர் உலகில் நிலவும் மவுனத்தைப் பார்க்கும்போது, ராஜாவின் கணக்கில் தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. அகிலாவின் விசயத்தில் மட்டும் ராஜாவின் கணக்கு பிசகிவிட்டது.

ஒருவேளை, ‘அந்தப் பெண் புகார் கொடுத்திருக்கிறார். அது உண்மையா, பொய்யா என்று தெரியாமல் எப்படி எழுதுவது?’ என கேட்கலாம். எனில், புகாரின் உண்மைத்தன்மை குறித்து யாரிடமேனும் விசாரித்தீர்களா? குறைந்தப்பட்சம் அந்தப் பெண்ணிடம் பேச முயன்றீர்களா? யாரும் எதையும் செய்யவில்லை. டெல்லியில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமைக்காக இங்கே எழுந்த குரல்களில் ஒன்றை கூட இப்போது காணவில்லை. அரசு சலுகைகள் வாங்குவதற்கு மட்டுமே இயங்கும் பத்திரிகையாளர் சங்கங்கள், அகிலாவுக்கு ஆதரவாக சிறு முயற்சியையும் எடுக்கவில்லை.

அகிலா, என்ன தைரியத்தில் இப்போது புகார் கொடுத்திருக்கிறார்? அவருக்கு என்ன பின்னணி? எதுவுமில்லை. தன்னை துன்புறுத்தியவன் தண்டனை பெற வேண்டும் என்ற நியாயமான கோபம். தன்மான உணர்ச்சி. இதே கோபம் சக பத்திரிகையாளர்களாளுக்கும் வர வேண்டும். தமிழ் ஊடக உலகில் நிலவும் இந்த மோசமான மௌனம் கலைக்கப்பட்டாக வேண்டும். இப்படிப்பட்ட அச்சம் மிகுந்த மௌனமும், உதிரிகளாக பிரிந்துகிடக்கும் அவலமும்தான் ராஜா போன்ற ஊடகப் பொறுக்கிகளின் பலம். இதுதான் பத்திரிகை முதலாளிகளின் பலமும்.

இப்போது அகிலா தனித்துவிடப்பட்டிருக்கிறார். அவரது ஒழுக்கத்தை பற்றிய அவதூறுகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. ‘நான் எந்த தவறும் செய்யவில்லை. தவறிழைத்த பொறுக்கியின் மீது புகார் கொடுத்தேன். இதற்காக நான் ஏன் வேலைக்கு வராமல் இருக்க வேண்டும்?’ என்ற நியாயமான கோபத்துடன் மறுபடியும் வேலைக்குச் செல்லத் துவங்கியிருக்கிறார் அகிலா. ஆனால் முன்பே திட்டமிடப்பட்ட செய்தி வாசிப்பு அட்டவணையில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. இப்போது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்துப் போடும் வகையில் நிபந்தனை ஜாமீன் பெற்றிருக்கும் ராஜா, இனிமேல் பழைய மாதிரி சன் நியூஸ் ஆசிரியராக செயல்படுவாரா, இல்லையா என்பது தெரியவில்லை. அது கலாநிதிமாறனின் ‘கருணயை’ப் பொருத்தது. ஒருவேளை ராஜா அலுவலகம் வந்தால் அப்போது என்னவும் நடக்கலாம். நிர்வாக ரீதியாக அகிலா வேறு ஊருக்கு பந்தாடப்படலாம் அல்லது மேலும் பல இன்னல்களுக்கு ஆளாகலாம்.

இது பொதுவாகப் பேசுவதற்கான தருணம் அல்ல. குறிப்பாக செயல்பட வேண்டிய தருணம். ராஜா என்ற நபரின் பாலியல் குற்றமாக மட்டும் இதனைப் பார்க்க கூடாது. இது தமிழகத்தின் ஊடக முதலாளித்துவ உலகம் நிலைநாட்டியிருக்கும் கொடுங்கோன்மையின் ஒரு வெளிப்பாடு. எங்கே தொழிற்சங்க உரிமைகளும், ஜனநாயக உரிமைகளும் உத்திரவாதம் செய்யப்பட்டிருக்கின்றனவோ அங்கே இத்தகைய தவறுகள் நடப்பதற்கான வாய்ப்பு வெகு வெகு குறைவு. எங்கே பத்திரிகையாளர்கள் உண்மையான பத்திரிகையாளர்களாக நடந்து கொள்கிறார்களோ அங்கே இத்தகைய இழிபிறவிகள் நடமாடுவதற்கான வாய்ப்பே அரிது.

பிழைப்புவாதம், காரியவாதம், தொழில் நேர்மையற்ற அடிமைத்தனம், அறிவையும் மனச்சான்றையும் சொந்த ஆதாயத்துக்காக எவ்வித தடுமாற்றமும் இன்றி அடகு வைக்கும் பண்பு, நிர்வாகத்தின் உத்தரவுக்கு ஏற்ப உண்மையை மாற்றி பொய் எழுதக் கூசாத கைகள், பத்திரிகை முதலாளியை வசனகர்த்தாவாகவும், பத்திரிகையாளனாகிய தன்னை வாயசைக்கும் நடிகனாகவும் கருதிக்கொள்வதற்கு சம்மதிக்கும் மனோபாவம் இவை எந்த அளவுக்கு பத்திரிகை உலகில் பண்பாட்டில் ஊடுறுவியிருக்கின்றதோ அந்த அளவுக்கு புள்ளி ராஜாக்களும் ஊடுறுவுவார்கள்.

அகிலா என்ற பெண் தொடங்கியிருக்கும் இந்தப்போராட்டத்தை தமிழகப் பத்திரிகையாளர்கள் உடனே பற்றிக் கொள்ளவேண்டும் என்று கோருகிறோம். ஒரு பெண்ணின் கவுரவப் பிரச்சினை என்ற எல்லையைத் தாண்டி பத்திரிகையாளர்கள் அனைவரின் கவுரவம், பணி சார்ந்த உரிமைகள் ஆகியவற்றை நிலைநாட்டிக் கொள்வதற்கான போராட்டமாக இதனை விரித்துச் சொல்ல முடியும்.

மற்றவர்களுக்காக காத்திருக்க வேண்டாம். பத்திரிகையாளர்களே கிளர்ந்தெழுங்கள்.

மேலும் படிக்க:

சவுக்கு கட்டுரை: குட்டி ஆடுகளும் குள்ளநரிகளும்.

 

பரதேசி: வதையின் வரலாறா, வரலாற்றின் வதையா?

34
பரதேசி

தை கேட்டு வளர்ந்த வரலாறு மனித குலம் முழுமைக்கும் பொருந்தும். ஆனாலும் அந்த கதைகள் ஒரே மாதிரியாக சொல்லப்படவுமில்லை, கேட்கப்படவுமில்லை. வர்க்கம், சாதி, இனம், மொழி, மதம், பால் என பிரிவுகள், ஒடுக்குமுறைகளுக்கேற்ப கதைகளை கேட்கும் செவிகளும் பேசும் வாய்களும் வேறுபடுகின்றன. அம்பானியின் ஆண்டிலியா மாளிகையின் உருவகம் எவ்வாறு நவீன வரம்புகளை உடைத்துக் கொண்டு உயர்ந்திருக்கிறது என ஒரு பின் நவீனத்துவ கட்டிடக் கலைஞனோ ஓவியனோ வியப்பது போல ஒரு தாராவி ஏழை ரசிக்க முடியாது.

பதினான்காம் லூயி அரண்மனையில் பாரிஸ் நகரத்து ஏழைகளை அனுப்பி விரும்பியதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அது அன்றைய இன்றைய நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தைப் போல தங்க, வைர ஆபரணங்களாகவோ இல்லை விலையுயர்ந்த பொருட்களாகவோ இருக்கப் போவதில்லை. செருப்பே பார்த்திராத காலுக்கு ஒரு கிழிந்த செருப்பு கூட அங்கே தேவைக்குரியதாக இருக்கும். அந்த மாளிகையின் பயன்பாட்டில் இல்லாமல் ஓரங்கட்டப்பட்ட தட்டுமுட்டுச் சாமான்கள் கூட அவர்களுக்கு மதிப்பு வாய்ந்தவைதான். தேவை, விருப்பம், கவர்ச்சி, அத்தியாவசியம் என்ற சொற்களின் பாகுபாட்டை வர்க்கப் பிரிவினைகளே தெளிவாக புரியவைக்கின்றன. எனில் இந்த உண்மை வரலாறுக்கும் பொருந்துமா?

இங்கே அதே அரண்மனை போன்ற உருவகத்தை வரலாறு எனக் கொள்வோம். தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் வரலாற்றில் நுழையும் பாலா எதை விரும்பி, ரசித்து எடுத்துக் கொள்கிறார்?

பரதேசிபடத்தின் கதை என்ன? பஞ்சத்தில் வாடும் தெற்கத்திய சாலூர் கிராமத்தின் மக்கள் பிழைப்பு தேடி தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்று கொத்தடிமைகளாக வாழ்ந்து மடிவது பரதேசியின் ஒரு வரிக் கதை. எனில் கம்யூனிஸ்டுகளுக்கு இந்தக் கதையில் என்ன விமரிசனம் இருக்க முடியும் என்று சிலர் கேட்கலாம். கம்யூனிசத்தையே சே குவேராவின் டீ ஷர்ட்டாக புரிந்து கொண்டிருப்போரிடம் கம்யூனிசம் என்றால் என்ன என்று விளக்குவதற்காக நாங்கள் சிரமப்படவில்லையா? இதுவும் கிட்டத்தட்ட அதே மாதிரிதான்.

தேயிலைத் தோட்ட தொழிலாளிகளிடம் அர்ப்பணிப்போடு பணியாற்றிய மருத்துவர் பி.எச். டேனியல் சென்ற நூற்றாண்டின் மத்தியில் எழுதிய நாவல் “Red tea”. அது “எரியும் பனிக்காடு” என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. டைட்டிலில் இந்த நாவலின் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம் என்று வந்தாலும் நாவலுக்கு நேர்மையாகவோ, விவரங்களின் உண்மை அடிப்படையிலோ இல்லை என்று பலர் விமரிசித்திருக்கின்றனர். நாம் இந்த நாவலை படிக்கவில்லை.

எரியும் பனிக்காடை படித்திருந்தால் தேநீருக்காக தொலைந்து போன அந்த மக்களது வாழ்க்கையை, ரத்தமும், சதையுமான உக்கிரத்தை அறிவதோடு பாலாவின் கதை அதில் எங்கே இருக்கிறது என்பதை இன்னும் கச்சிதமாக பிடிக்க முடியும். அப்படி அந்த நாவலை படிக்காமல் இந்த விமரிசனத்தை எழுதுவதற்கு வாசகர்களிடம் மன்னிப்பை கோருகிறோம். ஆனால் தேயிலைத் தோட்ட தொழிலாளிகளின் வரலாற்றையும், அந்த வரலாற்றுக் காலத்தையும் கொஞ்சம் அறிந்தவர்களுக்கு படத்தின் கரு அந்நியமானதல்ல.

மேலும் இந்தப் படம் அதன் அளவிலேயே பிரச்சினைக்குரியது. இந்த நாவலைத் தள்ளி வைத்துவிட்டு இது முற்றிலும் பாலாவின் படம் என்றே வைத்துக் கொண்டு பார்த்தாலும் விமரிசனம் மாறப் போவதில்லை.

பஞ்சம் பிழைப்பதற்க்காக வெளியேறும் கிராம வாழ்க்கை அதற்கு முன் எப்படியிருக்கிறது என்பதுதான் படத்தின் முதல் பாதிக்குரிய களம். ஆனால் அப்படிக் காட்ட முடியவில்லை என்பது பாலாவின் படைப்புக் கண்ணோட்டம் விதித்திருக்கும் வரம்பு.

மேற்கு தொடர்ச்சி மலைகள் மட்டுமல்ல, இலங்கை, மலேசியா, ஆப்பிரிக்கா, பிஜித் தீவுகள் என்று ஆங்கிலேயர்களின் காலனிய ஆட்சியில் தோட்ட வேலைக்காக ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த மக்களில் கணிசமானவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள். சாதியம் மற்றும் நிலவுடமைச் சமூகத்தின் பிடியில் துன்புறும் அந்த வாழ்க்கைதான் பஞ்சம் பிழைப்பதற்கு ஊர் பெயர் அறியாத அந்த புதிய வாழ்க்கையை எதிர் கொள்ள வைக்கிறது. அத்தகைய கொடுங்கோன்மை பழைய வாழ்க்கையின் ஒரு கீற்றைக் கூட பாலாவின் படம் காட்டவில்லை.

கதையின் நாயகனான ராசா எனும் ஒட்டுப் பொறுக்கியை மையமாக வைத்து வரும் முதல் பாதி கிராம வாழ்க்கையில் மக்கள் அனைவரும் நாயகி அங்கம்மா உட்பட அவனை கேலி செய்து பொழுது போக்குகிறார்கள். அந்த அப்பாவியை கிண்டல் செய்யும் சாலூர் கிராம மக்கள் நமக்கு வில்லன் போல உணர்த்தப்படுகிறார்கள். உண்மையில் சாதியமும் பண்ணையடிமைத்தனமும் கோலேச்சும் அன்றைய சமூக கட்டுமானம்தான் அந்த கிராம மக்களுக்கு வில்லன். அதைப் பற்றி நீர்த்துப் போன குறியீடாகக் கூட எந்தக் காட்சியுமில்லை.

ஒட்டுப்பொறுக்கி ஊருக்கு தமுக்கடித்து சேதி சொல்லிவிட்டு வீடுவீடாக ‘பிச்சை’ எடுப்பது, அவனை ஊரார் கேலி செய்வது என்ற சித்தரிப்பே தவறானது. தலித்துகள் மட்டுமல்ல, நாவிதர், வண்ணார், போன்ற சேவைச் சாதியினரும் ஆதிக்க சாதியினருக்கு வாழ்க்கை முழுவதும் நேர்ந்து விடப்பட்டவர்கள். அவர்களது வேலைக்கு கூலியாக பழைய உணவும், தானியங்களும், பழைய துணிமணிகளும் வீடு வீடாக சேகரிக்க வேண்டும். தலித்துக்களைப்  பொறுத்த வரை ஒரு ஆதிக்க சாதி குடும்பத்தினருக்கு இத்தனை தலித் குடும்பத்தினர் என்று வாழ்க்கை முழுவதும் கொத்தடிமைகளாக வாழவேண்டும். ஆதிக்க சாதி குடும்பத்தின் நல்லது, கெட்டது, விவசாயம் அனைத்தும் இவர்களது உழைப்பை நம்பி நடக்கும்.

இன்றைக்கும் இதை தமிழக கிராமங்களில் பார்க்கலாம். கதை நடக்கும் காலத்தில் தலித்துக்கள் அனைவரும் குடியானவர்களிடம் ‘பிச்சை’ எடுத்தே வாழவேண்டும். மக்களே அவ்வாறு வாழும் போது அவர்களுள் ஒருவன் ’ஒட்டுப் பொறுக்குவதை’ கேலி செய்வதாக காட்சிப்படுத்துவது அந்த மக்களையே கேலி செய்வதாகும். இதனால் சமூக வன்முறை குறித்த ஒரு உண்மை அந்த வன்முறையின் அடிப்படையை மறுத்துவிட்டு வெறும் காமடியாக ரசிக்கப்படுவது விகாரம். குடியானவர்களது சுரண்டலில் சிக்கியிருக்கும் சாலூரை நீங்கள் படம் முழுக்கத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது.

முதல் பாதியில் நாஞ்சில் நாடனின் பாலியல் ரீதியிலான வசனங்களைக் கேட்டு நமக்கு குமட்டிக் கொண்டு வந்தாலும் திரையரங்கில் கைதட்டல்கள் அதிகம். கிராமங்களில் பாலியல் சார்ந்த கிண்டல்களின் பின்னே ஆணாதிக்கம், சாதிய உறவு முறை, குடும்ப உறவு முறை என்று ஏராளமான விதிமுறைகளும் சட்ட திட்டங்களும் உண்டு. படத்திலோ அத்தகைய எச்சரிக்கையுணர்வோ, சமூக அடிப்படையோ ஏதுமின்றி வெறுமனே மலிவான நகைச்சுவையாக மட்டும் அந்த கிண்டல்கள் வருகின்றது. இத்தகை வழக்கு மொழி சார்ந்த அரட்டை உரையாடல், வசவு, கிண்டல்களை சி.பி.எம்மின், த.மு.எ.க. சங்க வீதி நாடகங்களில் பார்க்கலாம். இருப்பினும் தோழர்களுக்கும் வசனம் எழுதும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை என்பது பரிதாபத்திற்குரியது.

கிராம மக்கள் ஆபாசமாக ஏசிக் கொள்ள மாட்டார்களா? ஏசிக் கொள்வார்கள்; ஆனால் அதெல்லாம் அவர்களது வாழ்க்கையோடு இயல்பாக சேர்ந்து வரும். “சூரியன் சூத்துல குத்துற வரையில் தூங்குறா பாரு” என்ற தஞ்சை மாவட்ட வழக்கில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அதிகாலையில் எழ வேண்டும் என்ற உழைப்பு சார்ந்த கிராம வாழ்க்கை தெரிகிறது. இதை “சூத்துக் கொழுத்த சிறுக்கி” என்று மாற்றினால் பாலியல் மற்றும் உடல் தோற்றத்தை கேலி செய்வதாகி விடும். அதாவது ஒரு பெண்ணை பிடிக்கவில்லை என்றால் அவளை வேசி என்று அழைப்பதற்கு ஒப்பானது இந்த வசைச் சொல். ஆகவே வசவு, கிண்டல் போன்ற எளிய கிராம வாழ்க்கைக்குப் பின்னே கூட சாதி, ஆணாதிக்க, பண்ணையடிமைத்தன சமூக அமைப்பு தோற்றுவிக்கும் வாழ்க்கை இருக்கிறது.

இது பரதேசியைப் படைத்த படைப்பாளிகளுக்கு தெரியவில்லை. வாழ்க்கை பற்றிய கூரிய நோக்கின்றி ரசிகர்களை சிரிக்க வைப்பதை மட்டும் நோக்கமாக கொண்டு ஆங்காங்கே பாலியல் வசைச் சொற்களைத் தூவி விட்டிருப்பதை எப்படி புரிந்து கொள்ளலாம்? பாலாவுக்குப் புரியும், நாஞ்சில் நாடனின் மொழியிலேயே சொல்வதாக இருந்தால் இது படைப்பாளிகளின் ‘குண்டிக் கொழுப்பு’. உண்மையில் இதுதான் சிரிப்பதற்கு உகந்தது.

வெங்காயம் திரைப்படத்தில் சேலம் வட்டார வழக்குடன் கிராம மக்கள் பேசிக்கொள்ளும் காட்சிகளை இங்கே இணைத்துப் பார்க்கலாம். அதிலும் கேலி, கிண்டல்கள், பழமொழிகள் ஏராளமுண்டு. ஆனால் நாஞ்சில் நாடனின் செயற்கையான உரையாடல் வெங்காயத்தில் இல்லை. உண்மையில் மண்மணம் மாறாத நாட்டுப்புற மொழியின் அழகு வெங்காயத்தில் இருக்கிறது.

சாலூர் கிராமம் பற்றி பாலாவும் நாஞ்சிலும் நம்மிடம் உருவாக்க முனையும் சித்திரம் எப்படிப்பட்டது? ஒட்டுப்பொறுக்கி எனும் கோமாளியை கிண்டல் செய்து மகிழ்வதையே அந்த கிராமவாசிகள் முழு நேரத் தொழிலாக கொண்டிருக்கிறார்கள். பொய்க் கிராமங்களுக்கு புகழ்பெற்ற பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே சப்பாணி தான் முப்பாதண்டுகள் கழித்து பாலாவின் பரதேசியாக அவதரித்திருக்கிறான். அதனாலேயே சரிந்தும் போகிறான்.

பஞ்சம் பிழைப்பதற்காக ஊரை விட்டு வெளியேறும் ஒரு தலித் கிராமத்தினை காட்சிப்படுத்துவது என்றால் அது ஆவணப்படமாகத்தானே எடுக்க முடியும் என்று சிலர் நினைக்கலாம். இல்லை, ஒரு குறிப்பிட்ட பாத்திரம், காட்சிகள், கதையூனூடாகக் கூட அதைச் சொல்ல முடியும். அப்படி சொல்வதற்கு அந்த வரலாற்றுப் பின்புலம் தத்துவநோக்கிலும், கலை உணர்விலும் நம்மிடம் இறங்கியிருக்க வேண்டும். அது பாலாவிடம் இல்லை. பூலான் தேவியின் வாழ்க்கையினைச் சித்தரித்த பண்டிட் குயின் திரைப்படத்தில் வரும் கிராமம் அத்தகைய உணர்வை, சரியாகச் சொன்னால் கசப்புணர்வை ஏற்படுத்திகிறது.

அதாவது “நல்ல வேளை பண்டிட் குயின் கிராமத்தில் நாம் பிறக்கவில்லை” எனும் அளவுக்கு அந்த கிராமம் நமக்கு யதார்த்தமாகவும், அதிர்ச்சியூட்டும் விதமாகவும் காட்டப்படுகிறது. பாலாவின் கிராமத்திலோ “பரவாயில்லேயே நாமும் இங்கு பிறந்திருக்கலாமே” என்று கிளர்ச்சியூட்டப்படுகிறோம். நிஜ வடிவேலு, அங்கங்கமாள் போன்ற கிராமத்து ஐஸ்வர்யாக்கள், குடிக்க கள்ளு, கடிக்க அப்பம், உரையாடலில் காமடி எல்லாம் கிடைக்கும். பேஸ்புக், டிவிட்டரைத் தவிர அனைத்தும் அந்த கிராமத்தில் இருக்கும் போது யார்தான் அங்கே வாழ விரும்பமாட்டார்கள்?

பரதேசி படப்படிப்பில் பாலா
பரதேசி படப்படிப்பில் பாலா: கொத்தடிமைகள் வரலாற்றை இயக்குபவருக்கு குடையும் தேவைப்படுகிறது!

பாலாவைப் பொறுத்த வரை சில குறியீடுகள், மேக்கப்புகள், காமடிகள், வதைகள் போன்ற இரண்டாம்பட்ச முக்கியத்துவம் கொண்ட விசயங்களில்தான் ஈடுபாடு இருக்கிறது. இவை மட்டுமே ஒரு பிரம்மாண்டமான சமூக இயக்கத்தினை புரிந்து கொள்ள போதாது. ஆதலால் அவர் கதையை பார்க்கிறார் என்பதை விட ஒரு குறியீட்டினை ஊதிப்பெருக்கி செயற்கையான கதையை செய்கிறார் அல்லது சிருஷ்டித்துக் கொல்கிறார். சேதுவின் இறுதிக் காட்சியில் காலில் சங்கிலி, வளையம், மொட்டை, இன்னபிற வஸ்துக்களுடன் தோன்றும் விக்ரம்தான், பிதாமகனில் மயானத் தொழிலாளியாகி, நான் கடவுளாகி இங்கே “நியாயமா” என்று கத்தும் ஒட்டுப்பொறுக்கியாக அவதரித்திருக்கிறான்.

சினிமா என்பது ஒரு விஷூவல் மீடியம் என்பதால் இயக்குநர்கள் எதையும் காட்சி அல்லது பிம்ப ரீதியாகத்தான் புரிந்து கொள்வார்கள் என்று சிலர் நியாயப்படுத்தலாம். அது அப்படித்தான் தொழிற்படுகிறதா என்ன? குறிப்பிட்ட வாழ்க்கையை நீங்கள் ஆழமாகவும், கலையில் வெளிப்படுத்தும் ஆற்றலோடும் புரிந்து கொள்ளும் சக்திக்கேற்பத்தான் சினிமா எனும் காட்சிக் கலையில் அது புத்தாக்கத்தோடு பிறக்கும். ஒருவர் சினிமா மீடியத்தில் நிபுணர், வாழ்க்கைக் கண்ணோட்டத்தில் அசடு என்றால் அவர் பொதுவில் ஒரு படைப்பாளியாக மட்டுமல்ல சினிமா படைப்பாளியாகவும் இருக்க முடியாது.

அதனால்தான் நிறைய அப்பாவிகள் பாலாவின் பரதேசி படத்தில் சில விமரிசனங்கள் இருந்தாலும் மேக்கிங் சூப்பர் என்று வழிகிறார்கள். ஒரு ஏழைப் பெண்ணை பிடித்துச் சென்று அடித்து உதைத்து அலங்காரம் செய்து விபச்சார வாடிக்கையாளர்களுக்கு காட்டுகிறான் ஒரு மாமா. அந்த பெண்ணின் கதை சோகமானது என்றாலும் அவளது அழகு ரசிக்கத்தக்கது என்று யாராவது சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?

1930களில் காட்டப்படும் சாலூர் கிராம வாழ்க்கையில் கலகலப்பு, காமடி, விறுவிறுப்பு இவையெல்லாம் இருக்கக் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் இவை அனைத்தும் அந்த கால கட்டத்தின் வரம்புகளோடும் உண்மைகளோடும் கலந்திருக்கும் விதத்தில் நாம் கண்டுபிடிக்க வேண்டும். ஏன், 21-ம் நூற்றாண்டின் உணர்ச்சி, உடல் மொழி கூட 19-ம் நூற்றாண்டினை புரிந்து கொள்வதற்காக திட்டமிட்டு கடத்திக் கொண்டு செல்லலாம். இங்கேதான் இவற்றோடுதான் ஒரு படைப்பாளியின் கலை உணர்வுக்கு வேலை இருக்கிறது. அத்தகைய ஆற்றல் பரதேசியை படைத்தவர்களிடம் வறண்டு போயிருக்கிறது.

ஒட்டுப்பொறுக்கியை காதலிக்கும் அங்கம்மாள், பத்மா சுப்ரமணியம் போல திருத்தமான அபிநயங்களுடன் திருமணம் செய்வது போல நடிக்கிறாள். பாரதிராஜா நாயகி போல காதல் பார்வை பார்க்கிறாள், மணிரத்தினம் நாயகி போல ஓடிப்போலாமா என்கிறாள். மேற்கு மாம்பலத்தின் ஆரியக் கவுடா சாலையில் இருக்கும் ஐயராத்துப் பெண் செமஸ்டர் தேர்வு விடுமுறைக்கு சாலூருக்கு வந்து விட்டாளோ என்று குழம்புகிறோம்.

பரதேசி படத்தில் கருப்புச் சாயம் பூசிக் கொண்டு ‘சாமுத்ரிகா’ இலட்சண முக அமைப்புடன் தேர்வு செய்யப்பட்ட இந்த இரு நடிகைகளின் நடிப்பெல்லாம் லைலாவும், சங்கீதாவும் பாலாவின் முந்தைய படங்களில் செய்ததன் நகல் என்று சிலர் விமரிசித்திருப்பதை பாலா வீட்டு பல்லி கூட மறுக்காது. இவையெல்லாம் சில்லறை விசயங்கள்தானே என்று தாண்டிப் போகலாம்தான். ஆனால் ஒரு கலை முயற்சி எத்தனை எளிய அபத்தங்களோடு சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு இந்த சில்லறைகள் சேர்ந்து எழுப்பும் அபஸ்வரமே சாட்சி.

கலகலப்பான கிராமத்திலிருந்து கங்காணியின் ஆசை வார்த்தைகளை நம்பி பஞ்சத்திலிருந்து தப்பிக்க நினைக்கும் மக்கள் கிளம்புவதற்காக ஒட்டுப்பொறுக்கி ஒரு பெட்டிக்காரரிடம் அடிபடுகிறான். அதாவது அவன் அடிபடுவதனால் மக்கள் கிளம்பவில்லை, மக்கள் கிளம்புவதற்காக அடிபடுகிறான் என்று புரிந்து கொள்ள வேண்டும். போகட்டும். கால்நடையாக மக்கள் மூட்டை முடிச்சுக்களுடன் கிளம்புகிறார்கள். மக்களின் அவலத்தை உணர்த்த ஓடும் தண்ணியில் வாய் வைத்து குடிப்பதாகவெல்லாம் காட்ட வேண்டிய அவசியம் என்ன? கருப்பு வெள்ளைப் படங்களின் அழுகை சீன்களுக்கு ஒரு நிரந்தரமான சோக வயலின் இழுப்பை போட்டுக் கொல்வார்கள். இத்தனை ஆண்டுகள் கழித்தும் அதே ராகம்தானா?

இடையில் பயணச் சோர்வினால் சுருண்டு விழுந்து சாகக் கிடக்கும் ஒருவனை  மனைவியோடு தவிக்க விட்டு கிளம்புமாறு கங்காணி கூற மக்களும் கிளம்புகிறார்கள். அந்த அளவுக்கு கங்காணி கொடூரமானவன் என்பதை காட்ட நினைத்த இயக்குநர் உண்மையில் மக்களைத்தான் கொடூரமானவர்களாக காட்டியிருக்கிறார். பாதுகாப்பான வாழ்க்கை வாழ்பவர்களிடம் இருக்கும் மரணம் குறித்த கவலையான பரிமாறல்கள் பாதுகாப்பற்ற வாழ்வோடு போராடும் சாதரண மக்களிடம் இருக்காதுதான். அதாவது வாழ்வே நடைப்பிணம் போல ஆன பிறகு சாவு மட்டும் இங்கு விசேடமாக கவனிக்கப்படாது. எனினும் அதன் பொருள் சாவு சடங்கை முடித்து விட்டு உடன் அவர்கள் அடுத்த வேலையைப் பார்க்க போக வேண்டும் என்ற நிர்ப்ந்தம்தானே ஒழிய உடன் இருப்போரிடம் அக்கறை அற்று இருப்பார்கள் என்பதல்ல. அந்த வகையில் இங்கே சாலூர் மக்களின் அவலத்தை காட்ட நினைத்த இயக்குநர் தனது நோக்கத்திற்கு எதிரான உணர்ச்சியையே பார்வையாளனுக்கு ஏற்படுத்துகிறார்.

இடைவெளிக்குப் பிறகு சாலூர் மக்கள் தேயிலைத் தோட்டங்களுக்கு சென்று வதைபடும் களத்திற்கு படம் செல்கிறது. லைன் குடியிருப்புகள் என்ற பெரிய ஷெட்டில் சிறிய தடுப்புகள் மூலம் ஆடு, மாடுகள் போல அடைபட்டுத்தான் நெடுங்காலம் தொழிலாளிகள் குடும்பத்தோடு வாழ்ந்தனர். அந்த தடுப்பு வீடாவதற்கே பல பத்து ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இந்த முக்கியமான குறியீடு படத்தில் இல்லை. இங்கே தனித்தனிக்குடிசைகளாக பழங்குடி மக்களின் மலைக்கிராமத்தில் இருப்பது போல வருகின்றது.

கதை நடக்கும் காலத்தில் அதிகமும் மலைக்காடுகளை அழித்துத்தான் புதிய புதிய தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த உழைப்பும் அபாயமும், மரணங்களும் நமது கற்பனைக்கு அப்பாற்பட்டது. படத்தில் திருத்தமான தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளிகள் வேலை செய்வது மட்டும் வருகிறது. கங்காணிகள் கொடுமை, வருட கணக்கு முடிப்பு என்ற பெயரில் ஏமாற்றி தொழிலாளிகளின் கொத்தடிமைக் காலத்தை நீட்டுவது, தப்பி ஓடினால் கால்நரம்பை அறுப்பது எல்லாம் அந்த எளிய மக்களின் கொடுந் துன்பத்தை புரியவைக்க முயல்கின்றன. முக்கியமாக தோட்ட முதலாளியான ஆங்கிலேயன் தனக்கு பிடித்த தொழிலாளிப் பெண்களை கங்காணி மூலம் வன்புணர்ச்சி செய்வது, எதிர்ப்பு தெரிவிக்க இயலாமல் மக்கள் அவதிப்படுவது தனிச்சிறப்பாக காட்டப்படுகிறது.

இதிலும் ஒரு பிரச்சினை உண்டு. எம்.ஜி.ஆர் படங்களில் வரும் தேயிலைத் தோட்டங்களிலும் இதே காட்சிகளை நிறைய பார்க்கலாம். காலனிய ஆட்சியின் கொடுமையினை இப்படி மட்டும் எளிமைப்படுத்தி புரிந்து கொள்வது சரியாக இருக்காது. மலைகளைக் கைப்பற்றி, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், காடுகளிலிருந்து பழங்குடிகள், மண்ணின் மைந்தர்களை விரட்டி, தொலை தூரத்திலிருந்து மக்களை கொத்தடிமைகளாக கூட்டி வந்து தோட்டம் அமைத்து சுரண்டும் காலனிய ஆட்சியாளர்களை, ஆங்கிலேயே முதலாளிகளின் ஒடுக்குமுறையை, வெறும் காமவெறி என்று மட்டும் சுருக்குவது அதன் முழுப்பரிமாணத்தை ஒன்றுமில்லை என்றாக்கிவிடும். காமவெறி இல்லாமல் பெண்கள் மீது அத்தகைய பாலியல் அடக்குமுறைகள் இன்றி ஏனைய கொத்தடிமைத்தனத்தோடு ஒரு தோட்டம் இருக்கிறது என்றால் அது நல்லது, மேம்பட்டது என்போமா?

இடையில் தோட்டத்தில் கொள்ளை நோய் பரவி ஏராளம் மக்கள் மடிகின்றனர். அதற்கென ஒரு மருத்துவர் அதாவது கிறித்தவ மதத்திற்கு மாறிய இந்தியர், ஒரு வெள்ளைக்கார பெண்ணை மனைவியாக அழைத்துக் கொண்டு வருகிறார். அவரது காட்சிகள் எதிலும் மருந்து கொடுத்ததாகவோ, நோய் குறித்து சிகிச்சை அளிப்பதோ எதுவுமில்லை. மாறாக அவரும், அவரது மனைவியும் கிறித்தவத்தின் மேன்மைகளை பரப்புகிறார்கள், மதம் மாற்றுகிறார்கள். உச்சகட்டமாக ஒரு குத்தாட்ட சுவிசேச பாடலும் உண்டு.

மக்களின் துன்பங்கள் குறித்து நமது உணர்ச்சிகள் செறிவடையும் நேரத்தில் அதை குலைக்கும் வண்ணம் மிக மட்டரகமான காமடியாக இந்தக் காட்சிகள் வருகின்றன. இதை பாலாவின் கிறித்தவ வெறுப்பு என்பதாக பலர் விமரிசித்திருக்கின்றனர். தொழிலாளிகளுக்கு சங்கம் அமைக்கவும், சங்கத்தின் மூலம் உரிமைகள் பெறவும் பங்களிப்பு செய்தவரும் ரெட் டீ நாவல் எழுதிய மருத்துவருமான டேனியலை கொச்சைப்படுத்துவதாகவும் கூறியிருக்கின்றனர். இருக்கலாம்தான். ஆனால் இங்கே கிறித்தவமோ இல்லை டானியலையோ விட எஸ்டேட்டில் வாழும் மக்கள்தான் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றனர். கங்காணிகள் கொடுமையிலும், கொத்தடிமைத்தனத்திலும், கொள்ளை நோயிலும் வதைபடும் மக்கள் இங்கே ஒரு பன்னுக்காக அலைவதும், ஒரு வெள்ளைக்காரியின் பின்னே நாக்கைத் தொங்கப்போட்டு அலைவதுமாக காட்டப்படுவது மிக மிக விகாரமான ஒன்று.

மிஷனரிகளின் பின்னே காலனிய ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கம் இருந்தது உண்மைதான். அதே போன்று பார்ப்பனியம் தனது கொடுங்கோன்மையை தக்கவைக்க உழைக்கும் மக்களை ஒடுக்கியதும் உண்மையில்லையா? இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் தங்களை விலங்குகளாக நடத்திய பார்ப்பனிய சமூகக் கட்டமைப்பிலிருந்து தப்பி ஓடி மனிதர்களாக மதித்து நடத்திய கிறித்தவ மிஷனரிகள் மூலம் மதம் மாறிய வரலாற்றை இந்த தரங்கெட்ட காமடி மூலம் மறுக்கிறார் பாலா.

ஒரு வகையில் இதுவும் கூட பார்ப்பனிய ஆதிக்க சாதி மனோபாவம்தான். பால் பவுடர், ரொட்டி கொடுத்து மதம் மாற்றுகிறார்கள் என்று மிஷனரிகளை தாக்குபவர்கள் உண்மையில் அந்த நிலையில் இருக்கும் ஏழ்மையைத்தான் கிண்டல் செய்கிறார்கள். நம்மைப்பொறுத்த வரை எந்த பொருள், பணத்திற்காகவும் மதம் மாறுவது தவறு இல்லை. பரலோகத்தில் சொர்க்க வாழ்வு இருப்பதாக அதாவது எதிர்கால லஞ்சமாக உறுதி செய்து ஒரு மதத்தில் இருத்தி வைப்பது குற்றமில்லை என்றால் அதே சொர்க்க இன்பங்களுக்காக இகலோகத்தில் வேறு ஒரு மதத்திற்கு மாறுவதும் குற்றமில்லை.

”சமயங்களுக்கு இடையே உள்ள தராதரங்களை எவ்வாறு ஒரு பசுவால் உணர்ந்து கொள்ள முடியாதோ அவ்வாறே அவர்களாலும் (ஹரிஜனங்களாலும்) உணர்ந்து கொள்ள முடியாது… கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்பதைப் பாகுபடுத்திப் புரிந்து கொள்ளும் மனமோ, புத்திக் கூர்மையோ, திறமையோ ஹரிஜனங்களுக்குக் கிடையாது.”

இது காந்தி 1936-37-ம் ஆண்டுகளில் ஹரிஜன் பத்திரிகையில் எழுதியது. இதே திமிரை இதே காலகட்டத்தில் நடக்கும் கதையாக கூறும் பாலாவிடமும் பார்க்கிறோம். நமது மக்கள் பாமரர்களாகவோ, பரதேசிகளாகவோ இருப்பது கூட பிரச்சினை இல்லை. இவர்களுக்காக முதலைக்கண்ணீர் விடும் கனவான்கள்தான் பெரிய பிரச்சினை!

இந்தக் கிறித்தவ துவேசத்தைத் தாண்டி இதை ஒரு காமடியாக அதுவும் சோகங்கள் உச்சகட்டத்தை அடைய வேண்டிய காட்சித் திருப்பத்தில் வைக்கிறோமே என்ற அளவுக்கு கூட இயக்குநருக்கு அறிவில்லை. சித்திரவதை செய்யும் போலீசு தொடர்ந்து அடிப்பதற்காக தெளிய வைத்து அடிப்பது போல பாலா பெருஞ்சோகத்தை கொண்டு வர சிரிக்க வைத்து அழவைக்க முயன்றிருப்பாரோ? எதுவாக இருந்தாலும் இது அருவெறுப்பான உணர்வையே தருகிறது.

நடிகர்களை அடிப்பது போன்ற காட்சிகளைக் கொண்ட பரதேசியின் டிரெயிலரைப் பார்த்து விட்டு பலரும் பாலவை கொடூரமான மனம் கொண்டவராக விமரிசித்திருந்தனர். உண்மை அதுவல்ல. இந்த படத்தை தான் எவ்வளவு தத்ரூபமாக எடுத்தேன் என்பதை பணிவாக முன்வைக்கிறார் பாலா. ஆனாலும் கொத்தடிமைகளாக மறைந்துபோன தேயிலைத் தோட்ட தொழிலாளிரின் வாழ்வைச் சித்தரிக்கும் ஒரு படத்தின் முன்னோட்டம் எதுவென பாலா தெரிவு செய்ததுதான் முக்கியமானது. கதை மாந்தர்களின் காட்சிகளை விட நடிகர்களை இயக்க ஒரு இயக்குநர் பட்டபாடுதான் அவரை உந்தித் தள்ளுகின்ற கலை உணர்ச்சி. ஒரு வரலாற்றை ஒரு வாழ்வை ஒரு அவலத்தை என் கதை என்று சொல்வதற்கு ‘பெரிய’ மனம் வேண்டும். “நான் கடவுள்” அதற்கு பொருத்தமானவர்தான்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த படத்தை எடுப்பதற்கு பாலாவைத் தூண்டிய விசயம் எதுவாக இருக்கும்? விடை வேண்டுவோர் 60வது தேசிய திரைப்பட விருதிற்காக பரதேசி படம் என்ன துறையில் விருது வாங்கியது என்று பார்க்கலாம். அதுதான் பாலா, அதனால்தான் பரதேசி!

மாணவர் முன்னணி – போராட்ட வீடீயோக்கள்!

1

ழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி, அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தலைமையில், 18.3.2013, திங்கள் கிழமையன்று நடத்திய மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம்.

ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி, ஏ.எம்.ஜெயின் கல்லூரி மாணவர்களை அணிதிரட்டி 20.03.2013 காலை 11 மணியளவில் பரங்கிமலை இராணுவ பயிற்சி முகாமை முற்றுகையிட்டும், ஜி.எஸ்.டி. சாலையை மறித்தும் போராட்டத்தை நடத்தியது.

பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் நடத்திய சாலை மறியல் பற்றிய ஸ்லைட்ஷோ.

ஸ்ரீரங்கம்: பார்ப்பனியத் தீண்டாமைக்கு இடைக்காலத் தடை!

84

மிழக அரசு சட்டமான ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும்’ என்பதற்கான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணையில் உள்ள நிலையில், தமிழக அரசு இந்து அறநிலையத்துறை திருவரங்கம் கோவிலில் 4 விதமான பணி நியமனத்திற்கு இந்து பிராமணர் அய்யங்கார் மட்டும் விண்ணப்பிக்கவும் எனவும் 15-3-2013 அன்று விண்ணப்பிக்க இறுதி நாள் என பொறுப்பாகவும் விளம்பரம் கொடுத்திருந்தது.

படம் : பி.பி.சி.
படம் : பி.பி.சி.

அர்ச்சகர் உட்பட கோவில் பணியாளர் அனைவரையும் நியமிக்கும் அதிகாரம் அரசு அதிகாரத்திற்கு உட்பட்டது; முறைகேட்டில் ஈடுபடும் அர்ச்சகர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என பிற அரசு ஊழியர்களுக்கு உள்ள விதிமுறைகள் இவர்களுக்கும் உள்ளது; அரசு வேலைவாய்ப்பில் பிறப்பை வைத்து சாதிபாகுபாடு பார்க்கக் கூடாது; தீண்டாமை எந்த வடிவத்தில் அமுல்படுத்தினாலும் தண்டனைக்கு உரிய குற்றம் எனவும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனவும் அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது; வாரிசுரிமைப்படி அர்ச்சகர் நியமனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இவை எல்லாம் ஏட்டளவில்தான் உள்ளன. சட்டப்படியே தீண்டாமை கடைப்பிடிக்கப் படுவதற்கு மீண்டும் ஒரு சாட்சிதான் திருவரங்கம் கோவில் விளம்பரம்.

பிப்ரவரி – 13 ஆம் தேதியிட்டு, சிறீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வேலை வாய்ப்பு அறிவிப்பு என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கு இந்து மதத்தைச் சேர்ந்த, தகுதியான வர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்து இந்து சமய அறநிலைய சட்ட விதிகளுக்கு உட்பட்டு 15.03.2013 மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு கீழே காலி பணியிடங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தன, அதாவது

1. பதவி பெயர் – இளநிலை உதவியாளர்
ஊதிய விகிதம் – ரூ. 5,200 – 15,900+ தர ஊதியம் – ரூ. 2,400
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 3
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு மற்றும் கணினி – தட்டச்சுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண் – பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.

2. பதவி பெயர் – பிரதான ஆலயக் காவலர்
ஊதிய விகிதம் – ரூ. 4,000 – 10,000+ தர ஊதியம் – ரூ. 1,400,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 10
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

3. பதவி பெயர் – பிரதான ஆலய சிறீபாதம்
(சிலையைத் தூக்குகிறவர்)
ஊதிய விகிதம் – ரூ. 4,100 – 10,000+ தர ஊதியம் – ரூ. 1,400,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 4
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர் மட்டும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பதவி பெயர் – உபகோயில் சிறீபாதம்
(சுற்றுப் பிரகார சிலையை தூக்குகிறவர்)
ஊதிய விகிதம் – ரூ. 2,800 – 8,400+ தர ஊதியம் – ரூ. 1,200,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 2
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர் மட்டும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. பதவி பெயர் – உபகோயில் காவலர்
(சுற்றுப் பிரகார கோயில் காவலர்)
ஊதிய விகிதம் – ரூ. 2,800 – 8,400+ தர ஊதியம் – ரூ. 1,200,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 7
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டும் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

6. பதவி பெயர் – சன்னதி வாசல்
(சுற்றுப் பிரகார கோயிலின் அர்ச்சகர்)
ஊதிய விகிதம் – ரூ. 4,100 – 10,000+ தர ஊதியம் – ரூ. 1,400,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 2
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

7. பதவி பெயர் – உபகோயில் பரிசாரகர்
(உதவி வேலைகள்)
ஊதிய விகிதம் – ரூ. 2,800 – 8,400+ தர ஊதியம் – ரூ. 1,200
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 1
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட ஏழு வகையான பணியிடங்களுக்கும் இணை ஆணையரிடம் – செயல் அலுவலர் எஸ்.கல்யாணி அவர்களின் பெயரிலும், இரா.சேஷாயி (தலைவர்) எஸ்.பி.ரங்காச்சாரி, கே.என்.சீனிவாசன், ஏ.டி.கஸ்தூரி, பராசர.ஆர். சிறீவெங்கட பட்டர் (சுழல் முறை அறங்காவலர்) ஆகிய அறங்காவல் குழுவினர் பெயரிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறநிலையத்துறை வெளியிட்ட விளம்பரங்களும் விண்ணப்ப படிவமும் (படங்களை பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்)

இப்படி அதிமுக்கியமான அணுஆயுத பணிக்குதான் இந்து பிராமண அய்யங்கார் மட்டும் விண்ணப்பிக்கவும் என அறமே இல்லாத அறநிலையத்துறை விளம்பரம் கொடுத்திருந்தது. பிற அரசுப் பணிகள் போல் கோவில் பணி நியமணங்களிலும் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதுதான் சட்டப்படியானது.கேள்விக்கு இடமில்லாமல் புனித போர்வையில் ஆலயத்தில் நடக்கும் அநீதிகள் அரசின் அரவணைப்பில் இது வரை அரங்கேற்றபட்டு வந்தன. இனி ஆதினங்களானாலும் ஆலயமானாலும் அதன் வரவு செலவுகள், ஊழியர்களின் பணி நியமணம் அனைத்திலும் பொது மக்கள் தலையிட வேண்டும். அவையும் நமது சொத்துக்கள்தான் என்பதை மக்கள் உணரவேண்டும்.

ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தின் விளம்பரத்திற்கு எதிராக அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் அரங்கநாதன் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் தடை கோரி வழக்கு தாக்கல் செய்யபட்டது.

அவரது மனுவில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு, மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆனால், இந்து கோயில்களின் கருவறைக்குள் பிராமணர்கள் தவிர மற்ற ஜாதியினர் நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று கூறி, தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிராக சிவாச்சாரியார்களுக்கான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கிவிட்டார்கள்”, என்று தெரிவித்திருந்தார்.

“ஆனால் தற்போது ஸ்ரீரங்கம் கோயிலில் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு வகையான பணியிடங்கள் எவையும் கோவிலின் கருவறைக்குள் செல்லும் பணிகள் அல்ல. கருவறைக்கு வெளியே செய்கிற பணிகளுக்குக்கூட பிராமண ஐயங்கார் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அரசின் விளம்பரத்தில் கூறப்பட்டிருப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. பொதுப் பணித்துறை, வருவாய்த் துறைபோல இந்து அறநிலையத் துறையும் தமிழக அரசின் மற்றும் ஒரு துறைதான். இந்த வேலைகளுக்கு இந்துக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லலாமே தவிர, இந்து ஐயங்கார்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுவது தவறு. எனவே கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும்’’ என்று ரெங்கநாதனின் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஹரிபரந்தாமன், ஸ்ரீரங்கம் கோயில் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.

தகவல் : மனித உரிமை பாதுகாப்பு மையம்.
பி.பி.சி. செய்தி

கோவில்பட்டி சிலை உடைப்பு: தேவர் சாதிவெறி ரவுடித்தனம்!

438

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் சங்கரலிங்கபுரம் பகுதியில் 23/03/2013 அன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத சிலரால் தேவர் சிலை உடைக்கப்பட்டிருக்கிறது. சுற்றிலும் இரும்பு கிராதி வைத்து பாதுகாக்கப்பட்டிருக்கும் அந்தச் சிலையை அவ்வளவு எளிதாக யாரும் உடைத்துவிட முடியாது. அதனால் இரும்பு கிராதியின் இடைவெளி வழியே கடப்பாரையை உள்ளே செலுத்தி சிலையின் மூக்கையும் கையையும் சேதப்படுத்தியிருக்கிறார்கள். இது காலை 6.30 மணிக்கு அந்தப் பகுதி வழியே சென்றவர்களால் கவனிக்கப்பட்டு காட்டுத்தீ போல் செய்தி பரவுகிறது. 8.30 மணிக்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்தப்பகுதியில் ஒன்று திரள்கின்றனர். மூக்கிலும் கையிலும் லேசாக சேதப்படுத்தப்பட்டிருப்பது போதாது என எண்ணினார்களோ என்னவோ இரும்பு கிராதிக் கூண்டு தூக்கி வீசப்படுகிறது. செங்கல் சிமெண்டால் செய்யப்பட்ட அந்தச் சிலை முற்றிலும் தகர்க்கப்படுகிறது. எட்டரை மணிக்கு முன்பு மூக்கும் கையும் மட்டுமே சேதப்படுத்தப்பட்டிருப்பதை நேரில் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். மட்டுமல்லாது சேதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட கடப்பாறையும் இரும்புக்கூண்டுக்கு உள்ளேயே கிடந்திருக்கிறது. பிறகு அந்தக் கடப்பாறை குறித்து தகவல் இல்லை. யார் உடைத்தார்கள் என்பதற்கு முக்கியமான தடயமாக இருந்திருக்கக் கூடிய அந்தக் கடப்பாறை குறித்து காவல்துறையும் அக்கரை கொள்ளவில்லை.

கோவில்பட்டி
படம் : மாலைமலர்

ஓர் ஓடையால் கிழக்கு மேற்காக பிரிக்கப்பட்டிருக்கும் சங்கரலிங்கபுரம் பகுதியில் மேற்குப் பகுதியில் தேவர் சாதியினரும் கிழக்குப் பகுதியில் தாழ்த்தப்பட்ட (பள்ளர்) சாதியினரும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களிடையே அவ்வப்போது சிறு சிறு உரசல்களும் தொடர்ச்சியாக இருந்து வந்திருக்கின்றன. ஜான் பாண்டியனின் கொடிக்கம்பை வெட்டிச் சரித்தது, திருவிழாக்களின் போது ஒலிபெருக்கியை சப்தமாக வைக்கக் கூடாது என்று தகராறு செய்வது, போவோர் வருவோரை இழிவாக பேசுவது, தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பொதுப்பாதையை அடைத்து நிகழ்ச்சிகள் நடத்துவது, கபாடிக் குழுவில் எதிரெதிர் குழுவினர் வென்றுவிடக் கூடாது என்பதற்காக குறுக்கு வழிகளைக் கையாள்வது என எப்போதும் தேவர் சாதியினரின் கைதான் இங்கு ஓங்கியிருக்கும். இந்த நிலையில் தான் சிலை சேதப்படுத்தப்பட்ட நிகழ்வு நடந்திருக்கிறது.

எட்டரை மணிக்கு திரண்ட கூட்டத்தினர் சிலை உடைக்கப்பட்டதற்கு எதிராக மூன்று கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியல் செய்கிறார்கள்.

1. உடைக்கப்பட்ட சிலைக்கு மாற்றாக உடனே மாற்றுச் சிலை நிறுவப்பட வேண்டும்.
2. இடித்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
3. சங்கரலிஙகபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பொது ரேஷன் கடையையும், சுடுகாட்டையும் தனித்தனியாக மாற்றவேண்டும்.

காவல்துறை உயரதிகாரிகள் அங்கே வந்து கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம், இன்றே வேறொரு சிலையை தருவித்துத் தருகிறோம் என்று உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்படுகிறது.

ஆனால் இதன் பிறகு அங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் புது ரவுடிகளும், மறுகாலனியாக்கத்தால் பயனடைந்த புதுப்பணக்காரர்களும் பிரச்சனையை முடித்துவிட விரும்பாமல் கோவில்பட்டி நகரெங்கும் வாகனங்களில் வலம் வந்து கடையை அடைக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். கடையை அடைக்க மறுத்த 15 கடைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. இப்படி அடித்து நொறுக்கப்பட்ட கடைகளில் தேவர்சாதியினர் நடத்தும் கடைகளும் அடக்கம். 4 பஸ்களும் சேதப்படுத்தப்படுகின்றன. ஒரு காவலர் மட்டும் கடையடைப்பை எதிர்க்க அவர் தாக்கப்படுகிறார். நகரெங்கும் இவர்கள் சுதந்திரமாக சுற்றி வந்து ரவுடித்தனம் செய்தும், கவல்துறையினரையே அடித்துப் போட்ட பின்பும் இந்த ரவுடிகளைக் கட்டுப்படுத்த காவல்துறை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மட்டுமல்லாமல் கடையை அடைக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் என்று புகார் செய்தபோது, “சொல்கிறார்கள் அல்லவா கடையை அடைத்துவிட்டுப் போக வேண்டியது தானே” என்று ஒத்தூதியிருக்கிறார்கள். இதனிடையே சிலை உடைப்புக்கு காரணமானவர்கள் என்று கூறி 25 வயதிற்குட்பட்டவர்கள் 11 பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை. எந்த அடிப்படையில் அவர்களைக் கைது செய்தார்கள் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. யாரையாவது கைது செய்து காட்டவில்லை என்றால் பிரச்சனையாகும் எனும் எண்ணத்திலேயே வழக்கம் போல் கைது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். கிழக்கு பகுதி மக்களோ என்ன நடக்குமோ எனும் பதட்டத்தில் இதை எதிர்ப்பதற்கும் இயலாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இது மட்டுமல்லாது, திரைப்படங்களில் காமடியனாக வந்து போணியாகாமல் சாதி வெறியனாக வலம் வந்து கொண்டிருக்கும் கருணாஸ் இரவில் கோவில்பட்டி வந்து, அனைத்து மக்களும் நலமாக வாழ வேண்டும் என்றெண்ணி தன் வாழ்நாளை அர்ப்பணித்த தேவர் சிலையை இடித்தார்களே காந்தி சிலையை இடிப்பார்களா என்று உசுப்பேற்றி விட்டு கருணாநிதி பாணியில் இந்த நேரத்தில் தான் நாம் அமைதியாக இருக்க வேண்டும் என்று பேசிச் சென்றிருக்கிறார்.

பின்னர் கன்யாகுமரி மாவட்டம் மயிலாடியிலிருந்து போலீசின் ஏற்பாட்டில் கற்சிலை ஒன்று மதியம் 3.30 மணிக்கு கொண்டுவரப்பட்டு மேளதாளத்துடன் ஏற்கனவே சிலை இருந்த இடத்திற்கருகில் வைக்கப்பட்டிருக்கிறது.

மறுநாள் முற்பகல் 11 மணிவரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. 11 மணிக்கு மேல் மேற்குப் பகுதியின் பெண்கள் கையில் கம்பு துடைப்பம் போன்ற பொருட்களை எடுத்துக் கொண்டு கிழக்குப் பகுதிக்கு சென்று தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். காவலுக்கு நின்ற போலீசார் அவர்களை தடுக்கவோ, திருப்பியனுப்பவோ செய்யவில்லை. மாறாக அவர்களுக்கு துணை நின்றுள்ளனர். ஏனென்றால் அங்கு காவல் பணிக்காக கோவில்பட்டி பகுதியிலுள்ள தேவர்சாதி காவலர்களை மட்டும் பொருக்கியெடுத்து போட்டிருக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து அந்தக் கும்பலுடன் ஆண்களும் இணைந்து கொண்டார்கள். இதில் மேற்குப் பகுதியை ஒட்டியிருக்கும் பால்கார அம்மாவின் வீட்டையும், மாடுகள் கட்டுவதற்கான கொட்டகையையும் முழுவதும் இடித்து தகர்த்திருக்கிறார்கள். குறிப்பாக மேற்குப்பகுதியுடன் இணைந்திருக்கும் பத்து வீடுகளை மட்டும் குறி வைத்து அடித்திருக்கிறார்கள். அதிலும் தர்மபுரி தாக்குதல் போலவே, நேரடியாக ஆட்களைத் தாக்காமல் பொருட்களை சேதப்படுத்துவதிலேயே கண்ணாக இருந்திருக்கிறார்கள்.

போதிய கால அவகாசம் அளித்த பின்னர் தடுக்க முயன்ற காவல் துறை மீதும் மேற்குப் பகுதியினர் கல்வீசி தாக்கியிருக்கின்றனர். இதனால் தடியடி நடத்தி ஆதிக்க வெறியர்களை அடித்து விரட்டியிருக்கின்றனர். அதேநேரம் அந்தப் பகுதியில் இருக்கும் சில வழக்குறைஞர்களும் மக்களும் ஒன்றிணைந்து தாக்குதலை தடுக்கவும், சிலையை உடைத்ததாக பொய்யாகக் கூறி கைது செய்யப்பட்ட 11 இளைஞர்களை விடுதலை செய்யவும் கோரி அம்பேத்கார் சிலை முன்பு சாலை மறியல் செய்திருக்கின்றனர். ஆதிக்க சாதியினர் சாலை மறியல் செய்தபோது கோரிக்கைகளை ஏற்று ஆவன செய்வதாக வாக்குறுதி அளித்து அதன்படி சிலையையும் வரவழைத்துக் கொடுத்த காவல்துறை ஒடுக்கப்பட்டவர்கள் சாலை மறியல் செய்த போது அவர்களிடம் என்னவென்று கேட்காமல் தடியடி நடத்தி கலைத்திருக்கின்றனர். தற்போது 144 தடை உத்தரவு போடப்பட்டு பதட்டம் தடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழகமெங்கும் ஈழ மக்களுக்காக எழுச்சியும் போராட்டங்களும் நடந்துவரும் இவ்வேளையில் மக்கள் கவனத்தை அதிலிருந்து திசை திருப்பும் வண்ணம் இராமேஸ்வரம், கோவில்பட்டி என திட்டமிட்டு கலவரச் சூழல் ஏற்படுத்தப்பட்டு வருவதாக எண்ணத் தோன்றுகிறது. தமிழுணர்வை விட தேவர் சாதி  உள்ளிட்ட ஆதிக்க சாதி உணர்வு அதிகம் என்பதால் அப்படித் தோன்றுகிறது. அதிலும் ஆதிக்க சாதியினருக்கு ஒரு மாதிரியும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு வேறொரு மாதிரியும் நடந்து கொண்டு கிளப்பப்படும் சிறு பொறிகளை ஊதி நெருப்பாக மாற்ற காவல்துறை முயல்வதாகவும் தெரிகிறது. அந்தப் பகுதியில் இருக்கும் பாலன் எனும் இரகசிய காவலரின் குடும்பத்தினரும் உறவினர்களும் நடந்த சாலை மறியலிலும் கலவரத்திலும் முன்னணியில் நின்றிருக்கின்றனர். என்றாலும் மக்களிடம் போதிய ஆதரவு இல்லாததால் பெரிய அளவில் எதுவும் நடக்காமல் முடிவுக்கு வந்திருக்கிறது. இதை அனைத்து பகுதி மக்களும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு உணர்ச்சியை தூண்டிவிடும் வண்ணம் நடைபெறும் அரசின் சதிகளுக்கு பலியாகாமல் முறியடித்து சமூகப் பிரச்சனைகளுக்கான நம்முடைய போராட்டங்களை தொடர வேண்டும் என்பதே நம்முடைய நலனுக்கு உகந்ததாக இருக்கும்.

– வினவு செய்தியாளர்

மாலி ஆக்கிரமிப்பு: நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு!

0

டந்த ஈராண்டுகளில் ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள லிபியா, ஐவரி கோஸ்ட் – என அடுத்தடுத்து இரு நாடுகளின் மீது போர் தொடுத்து தமது முன்னாள் காலனிகளை மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளன. தனது ஆதிக்க வளையத்தை விரிவாக்கி, அடுத்த கட்டமாக இப்போது மாலியின் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்துள்ளன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பிரெஞ்சு காலனியாதிக்கத்திலிருந்து பெயரளவிலான சுதந்திரமடைந்த வட ஆப்பிரிக்காவிலுள்ள மாலியை பிரெஞ்சுப் படைகளும், பீரங்கிகளும், போர் விமானங்களும் சூறையாடிக் கொண்டிருக்கின்றன. ஐவரி கோஸ்ட், நைஜீரியா, டோகோ, பெனின், சாட் முதலான நாடுகளிலிருந்தும் இந்த காலனியாதிக்கப் போருக்காகப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இக்கொடிய போரினால் இதுவரை 4இலட்சம் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாகக் குவிந்துள்ளனர். பிரான்சின் ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் ஜெர்மனி, மேற்கு ஆப்பிரிக்க பொருளாதாரக் கூட்டமைப்புக்கு (ஈகோவாஸ்) ஆயுத உதவிகளோடு 7000 படைகளையும் அளித்துள்ளது. அமெரிக்காவோ, குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தும் ஆளில்லா விமானங்களை நைஜர் நாட்டில் தயாராக நிறுத்தி வைத்துள்ளது.

04-1-africa-mapவடக்கே அல்ஜீரியாவும், கிழக்கே நைஜரும், தெற்கே பர்கினா பாசோ மற்றும் ஐவரி கோஸ்ட் ஆகிய நாடுகளும், மேற்கே மோரிடானா, செனகல் ஆகிய நாடுகளும் சூழ்ந்த மாலி, பருத்தி பெருமளவில் விளையும் நாடு. தங்கமும் யுரேனியமும் பாஸ்பேட்டும் கனிம வளங்களும் நிறைந்த நாடு. ஆனால், நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்களோ வறுமையில் தவிக்கின்றனர்.

ஒரு தேசிய இனமாக வளரும் போக்கு நிறைவுறாத போதிலும், மாலியின் வடபகுதியிலுள்ள அசாவத் பிராந்தியத்தின் நாடோடிகளான துவாரக் இனக்குழுவினர் மாலி அரசிடமிருந்து விடுதலை கோரி “அசாவத் தேசிய விடுதலை இயக்க’’த்தின் (எம்.என்.எல்.ஏ.) தலைமையில் 1990-களிலிருந்து போராடி வருகின்றனர். மாலி அரசின் பயங்கரவாத அடக்குமுறையால் அசாவத் இயக்கப் போராளிகள் அண்டை நாடான லிபியாவில் தஞ்சமடைந்து, அன்றைய கடாஃபியின் இராணுவத்தில் முறைசாரா சிப்பாய்களாகச் செயல்பட்டனர். கடாஃபி ஆட்சி வீழ்ந்ததும், ஆயுதங்களைக் கைப்பற்றிக் கொண்டு மாலிக்குத் திரும்பிய அவர்கள், மாலியின் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான போரைத் தொடர்ந்தனர். அல்கய்தாவுடன் தொடர்புடைய இப்பகுதியிலுள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகள் இவர்களோடு இணைந்து கொண்டு போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். மாலியின் வடபகுதியில் முன்னேறிய இப்போராட்டங்களை ஒடுக்க முடியாமல் மாலியின் இராணுவம் திணறிய நிலையில், கடந்த ஆண்டில் அசாவத் தேசிய விடுதலை இயக்கத்தினர் அசாவத் பிராந்தியத்தைத் தனிநாடாக அறிவித்தனர்.

1960-இல் பெயரளவில் சுதந்திரமடைந்து, பொதுத் தேர்தலும் அதிபராட்சியும் மாலியில் நிறுவப்பட்ட போதிலும், 1968-இலும், 1991-இலும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள் நடந்து, இராணுவக் கும்பலின் தலைமையிலான ‘சட்டவாத’ ஆட்சியே நீண்டகாலமாக நிலவியது. இந்நிலையில், கடந்த 2012 மார்ச்சில், வடபகுதி துவாரக் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்காவினால் பயிற்றுவிக்கப்பட்ட இராணுவத் தளபதியான சனோகோ தலைமையிலான ஒரு பிரிவு இராணுவக் கும்பல் ஆட்சியைக் கைப்பற்றி, இச்சட்டவாத ஆட்சியையும் ரத்து செய்து அப்பட்டமான இராணுவ சர்வாதிகார ஆட்சியை நிறுவியுள்ளது. இருப்பினும், இந்த ஆட்சிக் கவிழ்ப்பை இராணுவத்தின் ஒரு பிரிவு எதிர்ப்பதாலும், ஆளும் கும்பல்களுக்கிடையே பிளவும் அதிருப்தியும் நீடிப்பதாலும், தற்போது ஆட்சிக்கு வந்துள்ள இராணுவக் கும்பலாலும் வடபகுதி மக்களின் போராட்டத்தை ஒடுக்க முடியவில்லை.

இதற்கிடையில், 2012 ஜூன் மாதத்தில் அசாவத் தேசிய விடுதலை இயக்கத்துக்கும் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களுக்குமிடையே முரண்பாடு முற்றி ஆயுத மோதல்களாக மாறியது. இஸ்லாமியத் தீவிரவாதிகள் அசாவத் இயக்கப் போராளிகளை விரட்டியடித்துவிட்டு, தமது கட்டுப்பாட்டில் அசாவத் பிராந்தியத்தைப் பிடித்துக் கொண்டு, இஸ்லாமிய ஷாரியத் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இஸ்லாமிய மெஹ்ரப் அல்கதா குழு (ஏ.கியூ.ஐ.எம்.) , அன்சார் அல் டின் என்ற துவாரக் இனக்குழுவைச் சேர்ந்த இஸ்லாமியத் தீவிரவாதக் குழு, மேற்கு ஆப்பிரிக்காவின் ஜிகாத் குழு முதலான இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் இப்பகுதியில் செயல்படுகின்றன. மாலி அரசு மற்றும் இராணுவத்தின் பலவீனத்தையும் பிளவையும் சாதகமாக்கிக் கொண்டு, அடுத்தடுத்து பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய இத்தீவிரவாதக் குழுக்கள் தெற்கு நோக்கி முன்னேறியதும், பிரான்ஸ் நேரடியாக இராணுவத் தாக்குதலைத் தொடங்கியது. இஸ்லாமியத் தீவிரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டு பிரான்சுக்குத் தப்பியோடிய அசாவத் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர்களோ, இப்போரில் பிரான்சை ஆதரிப்பதன் மூலம் இஸ்லாமியத் தீவிரவாதிகளை விரட்டிவிட்டு தமது கட்டுப்பாட்டில் அசாவத் பிராந்தியத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

மாலி மக்கள்
பிரான்சின் ஆக்கிரமிப்பு போரினால் அகதிகளாக்கப்பட்டு அவலத்தில் உழலும் மாலி நாட்டு மக்கள்

சுஃபி மார்க்கத்தைப் பின்பற்றும் துவாரக் இனக்குழுவினர் நிறைந்துள்ள வடபகுதியில், வஹாபி மார்க்கத்தைத் திணித்து தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இஸ்லாமிய தீவிரவாதிகள், சுஃபி மரபிலான பண்பாட்டுச் சின்னங்களையும், டிம்புக்டு பிராந்தியத்திலுள்ள யுனெஸ்கோவின் பாரம்பரிய வரலாற்று சின்னமாகவுள்ள மசூதியையும், சுஃபி ஞானியின் நினைவுச் சின்னத்தையும் சிதைத்து நாசமாக்கி எரித்துள்ளனர். மாலி நாட்டு இசை ஆப்பிரிக்க நாடுகளில் பிரபலமானது. ஆனால், இஸ்லாமியத் தீவிரவாதிகளோ யாரும் வாயைத் திறந்து பாடவோ, பாடல்களைக் கேட்கவோ கூடாது என்று காட்டுமிராண்டித்தனமாகத் தடை விதித்துள்ளனர்.

மாலியின் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான போரை நடத்துவதாக ஒரு தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் இந்த இஸ்லாமியத் தீவிரவாதிகள், அமெரிக்கக் கைக்கூலியான சவூதி அரேபியாவின் பணத்தில் வளர்ந்தவர்கள். லிபியாவில் கடாஃபியை வீழ்த்த நேற்றுவரை அமெரிக்காவின் கொலைகார உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வினாலும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வளர்த்துவிடப்பட்ட கூலிப்படையினர்தான் இவர்கள். பிரான்சின் மறைமுக ஆதரவோடு இயங்கும் சிரியா மற்றும் அல்ஜீரிய இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் பங்காளிகள்தான் இவர்கள்.

ஆப்பிரிக்கக் கண்டத்தின் மூலவளங்களைக் கைப்பற்றிக் கொள்ளையிடுவதும், வர்த்தக – பொருளாதாரக் கூட்டுகள் மூலம் செல்வாக்கு செலுத்திவரும் சீனாவை ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேற்றி தமது இரும்புப் பிடியை உறுதிப்படுத்துவதும்தான் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் ஆப்பிரிக்கப் போர்த்தந்திரத் திட்டம். அதன்படியே, லிபியா தொடங்கி அடுத்தடுத்து பல நாடுகளில் ஏகாதிபத்தியவாதிகள் தமது காலனியாதிக்கப் பிடியை இறுக்கி வருகின்றனர். எனவேதான், மாலியின் ஆக்கிரமிப்புப் போர் மாலியைப் பற்றியது மட்டுமல்ல. அது ஆப்பிரிக்கா முழுவதையும் ஆக்கிரமிக்கும் திட்டத்துடன் ஏகாதிபத்தியங்கள் நடத்தும் காலனியாதிக்கப் போராகும்.

நேற்றுவரை இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஆப்பிரிக்கக் கண்டத்தில் வளர்த்துவிட்டுப் பகடைக்காயாகப் பயன்படுத்திக் கொண்டதும் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள்தான். இப்போது இஸ்லாமியத் தீவிரவாதத்தை முறியடிப்பது என்ற பெயரில் மாலியின் கனிம வளங்களைச் சூறையாடப் போர் தொடுப்பதும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள்தான். ஏகாதிபத்தியங்கள் உள்ளவரை காலனியாதிக்கமும் ஆக்கிரமிப்புப் போர்களும் ஓயாது; உலகெங்குமுள்ள புரட்சிகர-ஜனநாயக சக்திகள் அணிதிரண்டு காலனியாதிக்க ஓநாய்களை விரட்டியடிக்காதவரை எந்த நாடும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாது என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திவிட்டு நொறுங்கி விழுந்து கொண்டிருக்கிறது மாலி.

– தனபால்.

____________________________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2013
____________________________________________________________________________________________________

பகத்சிங் பாதை உன்னைத் தேடுது!

8

நாடு மீண்டும் அடிமையாகுது பகத்சிங் பாதை உன்னைத் தேடுது!

பகச்சிங்
பிறப்பின் நோக்கம் – பலரும்
பெரிதும் அறிந்திலர்
பகத்சிங் தோழர்கள்
இறப்பின் நோக்கமும்
எடுப்பாய்க் காட்டினர் !

எங்கள் வாழ்வும்
எங்கள் சாவும்
எங்கள் கையில் தான் ! –என
வாழ்வின் மதிப்பும்
சாவின் மதிப்பும்
வழங்கிச் செல்ல யாரால் இயலும் ?

சாவால் பறிக்கவியலா
வாழ்வின் இலட்சியங்கள்
எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை,
பகத்சிங் , ராஜகுரு , சுகதேவ்
அதன் தொடர்ச்சிகள் …

கொடூரமாக வழங்கப்படும்
வாழ்க்கையிலிருந்து
மென்மையான சமூகத்தை
உருவாக்க விழையும் உணர்ச்சி
கம்யூனிஸ்டுகளுக்கே சாத்தியம் !
தோழர்கள் அதன் துவக்கங்கள் …

மூச்சுள்ளவர்களால்
முடியாததை
செத்தும் செய்தார்கள்.
அகிம்சையின் இம்சையால்
அழிக்கப்பட்ட
தேசத்தின் ஆன்மாவை ,
தங்கள் கழுத்திறுக்கிய
தூக்குக் கயிற்றால்
பிழைக்க வைத்தார்கள் .

வரலாற்றின் தொடர்ச்சியாய் வந்த
விடுதலை மூச்சை
மரணம் இசைத்தது ,
“இன்குலாப் ஜிந்தாபாத் ”
ஏகாதிபத்திய
தடித்தோல் உரித்தது .
மகாத்மாக்களால்
மரத்துப்போன தேசம்
மறுபடி உயிர்த்தது !

தூக்குமேடைக்கு
கம்பீரமாய் நடந்து சென்ற
தன் மரணத்தின் மதிப்புணர்ந்த
கட்டபொம்மனின் தீர்க்கம்
பகத்சிங்கின் பார்வையில் தெறித்தது .

தூக்கில் தொங்கிய நிலையிலும்
விடுதலைப் போரை
விட்டுச்செல்லும் வருத்தத்தில் ,
தாய்மண் தேடி தவித்த
சின்ன மருதுவின்
கால்களின் தேடல் ,
பகத்சிங் தோழர்களின்
பாதங்களில் ஒலித்தது .

சரியாகத்தான் வாழ்ந்திருக்கிறோம் !
என்று சாகும் வரையிலும்
தனது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை
சரிபார்த்துக் கொண்ட ,
திப்புவின் பொறுப்புணர்வை
பகத்சிங் விழிகளில் பார்க்க முடிந்தது
எப்பேற்பட்ட காலமது! –

சசீந்தர சன்யால் ,அஷப்பகுல்லாகான்
ரஜேந்திர லகரி … ராம் பிகாரி போஸ் ..
எண்ணிறந்த இளைஞர்களின் ரத்தத்தால்
இந்தியா
வரையப்பட்ட காலமது .

பிரிட்டிஷ் தரகர்களின்
அல்லக்கையாய் உள் நுழைந்து ,
தியாகிகள் நெசவை
வெள்ளைக் கறையால் சீரழித்து
காந்தி ராட்டை சுற்றிய தருணமது !

பிரிட்டிஷ் கோட்டை ,
காந்தி சிலந்தி
இரண்டையும் தகர்க்கும்
“காலத் தேவையின் விளைவுகளாய் ”
பகத்சிங் தன்னை
பொருத்திக் கொண்ட அழகு …
புரட்சியின் பொறுப்புணர்ந்த நகர்வு …
நாம் உணர வேண்டிய காலம் இது !

முணுக்கென்றால்
உண்ணாவிரதம் உட்கார்ந்து
ஒரு முறை கூட உயிரை விடாத
மோகன்தாஸ் கரம்சந்தின்
மோசடிகள் புரிய வேண்டுமெனில் ,
அறுபத்து மூன்று நாள்
உண்ணா நிலையிருந்து ,
கட்டாயமாக குளுக்கோஸ் ஊசி
குத்தவந்த நேரத்திலும்
‘’ நோ … நோ … என மறுத்து
கத்திக் கொண்டே உயிர்நீத்த
யதீன் தாசின்
அரசியல் அறிய வேண்டும் .

காந்தியின் பேரங்களில்
அவமானப்பட்ட அகிம்சை
புரட்சியாளர் மரணங்களில்
மானம் காத்தது !

மாற்றுக் கருத்தாயினும்
லாலா லஜபதிராய் மரணம்
தேசத்தின் கவுரவத்தின் மேல்
விழுந்த அடி ! _என
சாண்டர்சை தண்டித்த
பகத்சிங் பார்வை அழகானது !

சொந்த நாட்டு விடுதலைக்கு அர்ப்ப்பணித்த
பகத்சிங் தோழர்களை
முடிந்தால் ,
முன்னமேயே “முடிக்கச்சொல்லி”
வைசிராய்க்கு குறிப்புக் காட்டிய
காந்தியின் புன்னகை பயங்கரமானது !

தங்கள் சிந்தனைக்குக் குறைவாக
இயங்காத இளைஞர்கள்
பகத்சிங்கின் தோழர்கள் ….
சொந்த வாழ்வில்
அமைப்பு குறுக்கிடின்
இடம் தந்த வீரர்கள்!

பதினைந்தே வயதில்
தாயை விட்டுப் பிரிந்து ,
தாய் நாட்டின் விடுதலை தவிர
வேறெதுவும் மறந்து,
அமைப்பு வேலைக்காய் அலைந்து …. திரிந்து …
தெருவில் பிச்சைக்காரர்களுடன்
படுத்து எழுந்து …
பிரிட்டிசிடம் பிச்சை கேட்பதா
சுதந்திரம் !
போராடி பெறவேண்டிய உரிமையெ கிளர்ந்து!
போலிஸ் அடித்து பெயரைக் கேட்கும் போதெல்லாம்
தன் பெயர்
விடுதலை … விடுதலை {ஆசாத்} என
மிளிர்ந்து …
தாய்மடியின் நினைவு வரும்
வேளையெல்லாம்
தாய் மண்ணில் தலை சாய்ப்பேன்
அம்மா என உருகி உருகி
தேச விடுதலையைக் காதலித்து
தாய் விடுதலையைக் காதலித்து,
இறுதியில் ,
அலகாபாத் ஆல்பிரட் பூங்காவில்
சுட்டுப் பொசுக்கப்பட்டானே
ஆசாத் ,
அவனது ஆவி
இன்னும் அடங்கிவிட்டதா என்ன ?

இந்திய மண்ணை ஆக்கிரமிக்கும்
கார்ப்பரேட் பயங்கரத்திற்க்கெதிராய்
பழங்குடிகளின் போர்க்குணத்தில்
தோழன் ஆசாத் மீண்டும் மீண்டும் துடித்தெழுகிறான் …

கை விரல்கள் சிதறி
கடைசி குருதியும் வழிந்தோட
முகத்தின் ரத்தத்தை
ஒத்தியெடுக்கும் தோழனிடம் ,
முடிவாக _
“நம் லட்சியத்தை காப்பாற்றுங்கள்
புரட்சி வாழ்க “_ என
ராவி ஆறு உணர்ச்சி ஊற
ரத்தமாய் கலந்திட்ட
பகவதி சரணின் உறுதியை
சுட்டுக் கொல்லப்படும்
நக்சல்பாரிகளின் முகத்தைப் பார்த்து
இன்னுமா இவர்கள் ?
என உறைந்து போகுது அதிகார வர்க்கம்!

சமரசமில்லாமல்
முதலாளித்துவத்தை எதிர்க்கும் இடங்களில் …
செத்துப் போனதாய் நினைத்த
பகத்சிங்
இன்னுமிருப்பதைப் பார்த்து
அதிர்ந்து போகிறது ஆளும் வர்க்கம் !

போராளிகள் ரத்தத்தால்
கஞ்சிபோட்டு சலவை செய்த
காங்கிரஸ் பொய்கள் …
இன்னும் ‘ அரசை ’ நம்ப வைத்து
கழுத்தறுக்கும் பல வண்ண காந்திகள் …
இத்தனைக்கும் மத்தியில் ,
ஈழத்திற்காக
உறுதியுடன் போராடும் மாணவர்களிடம்
பகத்சிங்கின் பிடிவாதம்
இலக்கு தேடி நீள்கிறது ….
பகத்சிங் நினைவுகள்
பழசாவதில்லை …..
புரட்சியின் சுவையறிந்தவரிடம்
புதிய உணர்ச்சிகளாய்
பிறக்கின்றன களத்தில் .

அன்னிய மூலதனத்தால்,
பிளக்கப்படும்
நம் மலைகளின் முகத்தைப் பார்த்து
கதறி அழும்
மலை வேம்பின் இலை நாவில்
துடிக்கிறது பகத்சிங் உணர்ச்சி !

வறண்டு போன
விவசாயிகளின் கால் வெடிப்பிற்கும்
விளைநிலத்தின் மேல் வெடிப்பிற்கும்
வேறுபாடு காணவியலாமல்
அரண்டு போன வயல் நண்டுகளின்
இறுதிப் பய மூச்சில்
இருக்கிறது பகத்சிங்கின் கேள்விகள் ..

தாலாட்டுப் பாடினாலும்
தறியோசைக் கேட்காமல்
தூங்கமறுத்து
காலுதைக்கும் பிள்ளையின்
பிடிவாதத்தில்
பகத்சிங் பிறக்கிறான் மீண்டும், மீண்டும் !
பகத்சிங்கின் தோழர்கள் முடிந்தவரில்லை …
வேறு யார் ?
வேடிக்கைப் பார்க்காமல்
களத்தில் இறங்கும்
நீங்கள் தான் !

துரை.சண்முகம்

காதல், தியாகம், மரணம்: பகத்சிங்கின் பார்வை

8
பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ்

இன்று மார்ச் 23 – தியாகிகள் நினைவு தினம். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ மூவரும் தூக்கிலிடப்பட்ட தினம்.  ஈழத்தின் மக்களுக்காக மாணவர் போராட்டம் எழுந்துள்ள நிலையில் மாணவர்கள் அனைவருடைய முன்னோடியாக இருக்கும் தகுதியினை வேறு எவரையும் விட பகத்சிங் தோழர்களே கொண்டிருக்கிறார்கள். சுற்றி இருக்கும் வாழ்வு நம்மை பின்னுக்கிழுக்கும்போது அதை உடைத்தெறிந்து முன்னேறிச் செல்ல பகத்சிங் வாழ்வினை உரமாகக் கொள்வோம்.

-வினவு

காதல், தியாகம், தற்கொலை, மரணம் ஆகியவை குறித்து பகத்சிங் கொண்டிருந்த கருத்துக்களைஅவர் சுக்தேவுக்கும், படுகேஸ்வர் தத்துக்கும் எழுதிய கடிதங்கள் வெளிப்படுத்துகின்றன. புரட்சியாளர்கள் எனப்படுவோர் ‘உணர்ச்சியற்ற எந்திரங்கள்’ என்ற அவதூறையும், ‘உணர்ச்சி வேகத்தில் அறிவிழந்த இளைஞர்கள்’ என்ற பிதற்றலையும் ஒருங்கே முறியடிக்கின்றன இக்கடிதங்கள்.

பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ்சுக்தேவும், பகத்சிங்கும் மிகவும் நெருங்கிய தோழர்கள். வெடிகுண்டு வீசுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பற்றி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. இவற்றைத் தீர்த்து வைக்கும் நோக்கத்துடன் பகத்சிங், சுக்தேவிற்குக் கடிதம் எழுதினார். ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதியன்று, சுக்தேவ் கைது செய்யப்பட்ட சமயத்தில், இக்கடிதம் அவரிடமிருந்து மீட்கப்பட்டது. அதன்பின் அது வழக்கு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகி விட்டது. அக்கடிதத்திலிருந்து சில பகுதிகள்:

அன்புள்ளசகோதரருக்கு,

இந்தக் கடிதம் கைக்குக் கிடைப்பதற்குள் நான் எனது இலட்சியம் நோக்கிய திசையிலே வெகுதூரம் சென்றிருப்பேன். என்னை நம்பு; இப்பொழுதெல்லாம், நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இறுதிப் பயணத்திற்குத் தயாராகி விட்டேன்…. நானும் வாழ்க்கையின் ஆசைகளும், அபிலாஷைகளும் நிறைந்தவன்தான் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்; இருந்தாலும் வேண்டிவந்தால் எல்லாவற்றையும் தியாகம் செய்யவும் சித்தமாக இருக்கிறேன். மெய்யாகவே தியாகம் செய்வேன். மனிதன் உண்மையான மனிதனாக இருக்கும் பட்சத்தில், இவை இடையூறாக இருக்கவே முடியாது. இதற்கான சான்று உனக்கு விரைவிலேயே கிடைக்கும்.

ஒரு மனிதனின் குணாதிசயங்களைப் பற்றி ஆராயும்போது கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விசயம் காதல் ஒரு மனிதனுக்கு, எங்காவது உதவியாக இருந்திருக்கிறதா என்பதுதான். இதற்கான எனது பதில் – ஆம், இருந்திருக்கிறது என்பதுதான். ஆம், அவர்தான் மாஜினி. தமது முதல் புரட்சியின் தோல்வியையும், தமது கடுமையான தோல்வியின் வேதனையையும், இறந்து விட்ட தமது சகாக்களின் நெஞ்சைப் பிழிய வைக்கும் நினைவுகளையும், அவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் இருந்தன என்று படித்திருப்பாய். ஆனால் அவருடைய அன்புக் காதலியிடமிருந்தான ஒரு கடிதம் மட்டும் வராமல் இருந்தால், அவருக்குப் பைத்தியமே பிடித்திருக்கலாம்; அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். இந்தக் கடிதம்தான், அவரை மற்றவர்களைப் போலவே வலிமையுள்ளவராக ஆக்கியது. சொல்லப்போனால் மற்றவர்களை விட மிக வலிமையானவராகச் செய்தது.

காதலின் தார்மீக ரீதியான நிலையைப் பொறுத்தமட்டில், காதல் என்பது மனக்கிளர்ச்சி. அதாவது உணர்ச்சி வேகத்தைத் தவிர வேறெதுவுமில்லை என்றுதான் நான் கூறுவேன். அது ஒரு மிருக இயல்புணர்ச்சி அல்ல; ஆனால், இனியதோர் மனிதாபிமான மனக்கிளர்ச்சி. காதல், காதலாகவே இருக்கும் பட்சத்தில், மனித குணாதிசயங்களை, அது எப்போதுமே மேலான நிலைக்கு உயர்த்துகிறது; கீழே சரிவதற்கு ஒரு போதுமே அனுமதிப்பதில்லை. இந்தப் பெண்களைப் பைத்தியம் என்று ஒருபோதுமே கூற முடியாது. நாம் திரைப்படங்களில் பார்க்கிறோமே – அங்கே அவர்கள் எப்போதுமே, மிருக இயல்புணர்ச்சியின் கரங்களில்தான் விளையாடுகிறார்கள்.

மெய்யான காதலை ஒருபோதுமே உருவாக்கிட முடியாது; அது தானாகவே வளருகிறது. எப்போது என்று யாருமே சொல்ல முடியாது.

இளம் ஆண்களும் பெண்களும், ஒருவரையொருவர் காதலிக்கலாம். காதலின் துணையோடு அவர்கள் தங்கள் காம வெறிகளுக்கும் உயரே உன்னதமான ஒரு நிலையை எட்டலாம்; தங்கள் நேர்மையையும் தூய்மையையும், மாசு படாமல் வைத்திருக்கலாம் என்று நான் கூறுவேன்….

கடமையுணர்வின் அடிப்படையில் ஒரு மனிதன் முடிவெடுக்கும் போது காதலையும், வெறுப்பையும், வேறு எல்லா மன உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த முடிந்தால் அதுவே மிக உயரிய, இலட்சியப்பூர்வமான ஒரு  மனநிலையாக அமையும்.

ஒரு தனிநபருக்கு, இன்னொரு தனிநபரின் பால் ஏற்படும் காதலை, அதுவும்கூட, இலட்சியப்பூர்வமான செயல்பாடுகளைக் கோருகின்ற நிலைமைகள் இருக்கும் சூழ்நிலையில் ஏற்படுகின்ற காதலைத்தான் நான் கண்டனம் செய்துள்ளேன்.  ஒரு மனிதன், ஆழ்ந்த காதல் உணர்வு கொண்டிருக்க வேண்டும்; அது, ஒரு தனிமனிதரிடம் மட்டுமே காட்டப்படாமல்,  உலகனைத்துக்குமே உரியதாய் அமைந்திட வேண்டும்.

அன்புள்ள சகோதரா,

உன் கடிதத்தை, நான் மிகுந்த கவனத்துடன் திரும்பத் திரும்பப் படித்தேன். மாறியுள்ள சூழ்நிலைகள் நம்மை வெவ்வேறான விதத்தில் ஈர்த்திருக்கின்றன என்றே நான் கருதுகிறேன். நீ சிறைக்கு வெளியே இருந்த காலத்தில் வெறுத்து ஒதுக்கிய விசயங்கள் இப்பொழுது உனக்கு இன்றியமையாதவை ஆகியுள்ளன.

அதுபோல், நான் சிறைக்கு வெளியே இருந்தபோது ஆதரித்து வந்த விசயங்கள் இப்பொழுது எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் தெரியவில்லை. உதாரணமாக, இதற்கு முன்னர், தனிமனிதரின் காதலுக்கு நான் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வந்தேன்; ஆனால் இப்போதோ அந்தக் காதலுக்கு, என் இதயத்திலும் மனதிலும் குறிப்பிட்ட இடம் எதுவுமே இல்லை.

வெளியில், நீ அதை வன்மையாக எதிர்த்தாய், ஆனால் இப்போதோ, இதுபற்றிய உன் கருத்துக்கள் பெரிதும் மாறுபட்டுள்ளன; மானுட வாழ்க்கையில், காதல் இன்றியமையாத பகுதி என்றும் இப்போது நீ கருதுகிறாய். இந்த அனுபவம் உனக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

தற்கொலையைப் பற்றி நான் ஒருநாள் உன்னிடம் பேசியது, உனக்கு நினைவிருக்கலாம். குறிப்பிட்ட ஒரு சில சந்தர்ப்பச் சூழ்நிலைகளில், அது சரியாகவே இருந்திருக்கலாம் என்று நான் அப்போது கூறினேன். ஆனால், நீ எனது கருத்துக்களை எதிர்த்தாய்….

இத்தகைய கோழைத்தனமான செயலை, நியாயமானது என்று கருதவே முடியாது என்று நீ பரிகாசமாகக் கூறினாய். ஆனால், இந்த விஷயத்தைப் பற்றியதான உன் கருத்துக்களும் கூட, இப்பொழுது முழுக்க முழுக்க மாறிவிட்டன என்பதை நான் உணருகிறேன். இப்போது, குறிப்பிட்ட ஒரு சில சந்தர்ப்பச் சூழ்நிலைகளின் கீழ், அது நியாயமானது மட்டுமல்ல இன்றியமையாதது என்றும் நீ கருதுகிறாய்.

ஆனால், தற்கொலை என்பது முற்றிலும் கோழைத்தனமான, வெறுக்கத்தக்க குற்றம் என்று நீ முன்னர் கூறிய அதே கருத்துக்களை ஒத்தவையாகவே எனது கருத்துக்களும் இன்று அமைத்துள்ளன. எந்த ஒரு மனிதனுமே, அதனை நியாயமானதாகக் கருத முடியாது. அப்படியிருக்க, புரட்சியாளர் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?…

இதுதவிர, தங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படும் என்றே நம்மில் சிலர் நம்புகிறார்கள். அவர்கள் விசயத்தில், மரண தண்டனைக்கான தீர்ப்பு வழங்கப்பட்டு, அதன் பின்னர், மரண தண்டனையும் நிறைவேற்றப்படும் வரை, நாம் மிகுந்த பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அது, ஒரு அழகான இனிய சாவாகவும் இருக்கும்.

ஆனால், தற்கொலை செய்து கொள்வது என்பது, குறிப்பிட்ட சில இன்னல்களையும் துன்பங்களையும் விட்டுத் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக உயிரை விடும் கோழைத்தனம். இன்னல்கள், ஒரு மனிதனை முழுமையாக்குகிறது என்பதை நான் உனக்குக் கூற விரும்புகிறேன். நானோ – நீயோ – நம்மில் யாருமே இன்னும் இன்னல்களை அனுபவிக்கவில்லை; நமது வாழ்க்கைகளின் இந்தப் பகுதி இப்பொழுதுதான் தொடங்குகிறது….

“புரட்சியாளர்களாக” இருந்து வருவதில், பெருமை கொள்ளும் நம் போன்ற மக்கள், தாங்களாகவே தொடங்கியுள்ள போராட்டங்கள் வாயிலாக வரவழைத்துக் கொண்டிருக்கும், இன்னல்களையும் இடர்ப்பாடுகளையும், வேதனையையும், துன்பங்களையும் பொறுத்துக்கொள்வதற்குத் தயாராகவே இருக்க வேண்டும்….

சிறைச்சாலையில், 14 ஆண்டுகள் வரை துன்பங்களை அனுபவித்த ஒரு மனிதர், அவர் சிறைக்குச் செல்வதற்கு முன்னர் கொண்டிருந்த அதே கருத்துக்களையே தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை என்று நீ எழுதுகிறாய். சிறைச்சாலைச் சூழ்நிலைகள், அவரது சிந்தனைகள் அனைத்தையும் நொறுக்கிப் பொடியாக்கி விடும் என்றும் காரணம் காட்டுகிறாய்.

சிறைக்கு வெளியே நிலவும் சூழ்நிலை, நமது கருத்துக்களுக்கு இசைவானதாக இருக்கிறதா என்று நான் கேட்கட்டுமா? தோல்விகளின் காரணமாக, நாம் அவற்றைக் கைவிட்டிருக்க முடிந்திருக்குமா?

இந்தத் துறையில் நாம் புகாமல் இருந்திருந்தால் புரட்சி நடவடிக்கை எதுவுமே ஆரம்பித்திராது என்று நீ கூறுகிறாயா? அப்படியென்றால நீ நினைப்பது தவறு; சுற்றுச் சூழ்நிலையை மாற்றுவதில் பெருமளவிற்கு நாம் துணைபுரிந்துள்ளோம் என்பது உண்மையானாலும் கூட நாம் நமது காலத்தினுடைய தேவையின் விளைவுதான்!

கம்யூனிசத்தின் படைப்பாளியான கார்ல் மார்க்ஸ், இந்தச் சிந்தனையை உருவாக்கிடவில்லை என்றும் நான் கூறுவேன். குறிப்பிட்ட சில சிந்தனையாளர்களை உருவாக்கியதே ஐரோப்பாவில் தோன்றிய தொழில்துறைப் புரட்சிதான்! அவர்களில் கார்ல் மார்க்ஸும் ஒருவராக இருந்தார். காலச்சக்கரத்துக்கு, ஓரளவிற்கு, குறிப்பிட்ட ஒரு உந்துதலை அளிப்பதில் கார்ல் மார்க்ஸ் தம் சொந்த முறையிலே மிகவும் உதவியாக இருந்தார் என்பதில் சந்தேகமேயில்லை.

இந்த நாட்டில், கம்யூனிசம் மற்றும் பொதுவுடைமைச் சிந்தனைகளுக்கு, நான் (ஏன் நீயும் கூட) உயிர் கொடுக்கவில்லை. மாறாக, நமது காலங்கள் மற்றும் சந்தர்ப்பச் சூழ்நிலைகள், நம்மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் விளைவுதான் அது. இந்தக் கருத்துக்களை எங்கும் பரப்பிடச் செய்வதில் நாமும் எளிமையான அளவில் முயற்சி செய்திருக்கிறோம் என்பதில் ஐயமில்லை. ஆகவே, இந்தப் பொறுப்பான பணியின் சுமையை நாம் நம்மீது சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதால், அப்பணியைத் தொடர்ந்து நடத்தி நிறைவேற்ற வேண்டும் என்று நான் கூறுகிறேன். கஷ்டங்களைத் தவிர்ப்பதற்காக தற்கொலை செய்து கொள்வது என்பது மக்களுக்கு நல்வழி காட்டாது; மாறாக, அது ஒரு பிற்போக்குச் செயலாகவே அமையும்….

வாழ்வு, மரணம் போன்ற விசயங்களிலும் நாம் முற்றிலும் உலகாயத முறையிலேயே சிந்திக்க வேண்டும். ஒருமுறை, நான் தில்லியிலிருந்து இங்கு அழைத்து வரப்பட்டபோது, உளவு இலாகாவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர், இந்த விசயத்தைப் பற்றி என்னிடம் பேசினார்கள்.

எந்த ஒரு ரகசியத்தையும் வெளியிட நான் தயாராக இல்லாததாலும், என் உயிரைக் காப்பதில் நாட்டம் காட்டாததாலும், நான் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விட்டேன் என்பதை அது நிரூபித்து விட்டதாக அவர்கள் கூறினார்கள். என் மரணம் ஒரு தற்கொலைக்கு ஒப்பாகவே இருக்கும் என்பது அவர்களின் தர்க்கம்.

அதற்கு நான் சொன்ன பதில்: “என் போன்று திடமான நம்பிக்கையும் எண்ணங்களும் கொண்ட ஒருவன், வீணாக இறந்து போவதை ஒரு போதும் பொறுத்துக்கொள்ள மாட்டான். வாழ்க்கையை அதிக அளவு பயன்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம். முடிந்த வரை மானுட நலன்களுக்குத் தொண்டு செய்வதே எங்கள் நோக்கம். குறிப்பாக, துயரமோ கவலையோ இன்றி வாழும் மனிதன், தற்கொலையைப் பற்றி சிந்திப்பதே முறையற்றது என்றுதான் கருதுவான். அப்படியிருக்க, அச்செயலில் எப்படி இறங்குவான்?” அவர்களுக்குச் சொன்ன அதே பதிலைத்தான் உனக்கும் சொல்ல விரும்புகிறேன்.

உன்னைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று கேட்கிறாயா? எனக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை; இது விசயத்தில், தண்டனைக் குறைப்போ அல்லது முழு அளவிற்கான மன்னிப்போ அளிக்கப்படும் என்பதில் எனக்குச் சற்றும் நம்பிக்கை இல்லை. அப்படியே பூரண மன்னிப்பு அளிக்கப்பட்டாலும் கூட, அது அனைவருக்கும் அளிக்கப்பட மாட்டாது. அதிலும் எனக்கு மன்னிப்பு கிடைக்காது; இருந்தும் கூட  நமக்கு விடுதலையளிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

மக்கள் கிளர்ச்சியாக நமது இயக்கம் மலர்ந்து உச்சகட்டத்தை அடையும் சமயத்தில் நான் தூக்கிலிடப்பட வேண்டும் என்பது எனது விருப்பம்.

படுகேஸ்வர்தத்திற்கு எழுதிய கடிதம்.

அன்புள்ள சகோதரருக்கு,

எனக்கு தண்டனை விதிக்கப்பட்டு விட்டது – தூக்குத் தண்டனை. என்னைத் தவிர, தூக்குத் தண்டனைக்காகக் காத்திருக்கும் பல குற்றவாளிகள் உள்ளனர். தூக்கு மேடையிலிருந்து எப்படியாவது தப்புவதற்காக அவர்கள் இறைவனிடம் வேண்டுகிறார்கள். ஆனால் அவர்களிடையே நான் ஒருவன்தான் தன்னுடைய லட்சியங்களுக்காகத் தூக்குமரத்தில் தொங்கும் பாக்கியத்துக்காக, அந்த நாளை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ஒரு புரட்சியாளர், தன் உயிரைத் தியாகம் செய்ய முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தூக்கு மேடையேறுவதன் மூலம் நான் உலகிற்கு எடுத்துக்காட்டுவேன்.

எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது; ஆனால் உனக்கோ ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. புரட்சியாளர்கள், தங்களின் இலட்சியங்களுக்காகச் சாவது மட்டுமல்ல; அவர்கள் உயிருடன் இருக்கும்போது பல கஷ்டங்களையும் எதிர்த்திட முடியும் என்பதை, நீ உயிருடன் இருந்து உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டும்.

மரணம் என்பது உலகப் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு வழியாக  ஆகி விடக் கூடாது; மாறாக தற்செயலாகத் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிய புரட்சியாளர்கள் தூக்கு மேடை ஏறவும் அஞ்சாமல் இருப்பது மட்டுமின்றி, சிறைச்சாலையின் குறுகிய இருண்ட அறைகளில் அடைக்கப்பட்ட நிலையிலும், படு கேவலமான அநியாயங்களையும் அட்டூழியங்களையும் பொறுத்துக் கொள்ள முடியும் என்பதையும், உன் சொந்த வாழ்க்கை மூலமாகவே உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டும்.

உன்.

பகத்சிங்.

தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாள்,  சிறையின் இன்னொரு வார்டில் இருந்த புரட்சியாளர்களிடமிருந்து, அவருக்குக் குறிப்பு ஒன்று வந்து சேர்ந்தது. கடைசித் தருணத்தில் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்யும் யோசனை அதில் இருந்தது. இந்தக் குறிப்புக்கு பகத்சிங் பதில் அனுப்பினார். தமது இன்னுயிரைத் தியாகம் செய்ததற்கு முதல் நாளன்று, தமது தோழர்களுக்கு எழுதிய கடைசிக் கடிதம் பின்வருமாறு.

தோழர்களே!

உயிருடன் இருக்கும் ஆசை என்னுள்ளிலும் இருப்பது இயல்பானதே. நான் அதனை மூடிமறைக்க விரும்பவில்லை. ஆனால், என் விசயத்தில், உயிருடன் இருப்பது என்பது நிபந்தனைக்கு உட்பட்டது. நான் ஒரு கைதியாகவோ அல்லது கட்டுதிட்டங்களுக்கு உட்பட்டோ, உயிருடன் இருப்பதை விரும்பவில்லை.

என்னுடைய பெயர், இந்தியப் புரட்சிக் கட்சி (ஹிந்துஸ்தானி இன்குலாப் பார்ட்டி) யின் ஒரு சின்னமாகி விட்டது. புரட்சிக் கட்சியின் இலட்சியங்களும் தியாகங்களும் என்னை மிகவும் உயர்த்தியுள்ளன. நான் உயிருடன் இருந்தால் கூட ஒருக்கால் இந்த உயரத்தை எட்டியிருக்க மாட்டேன்.

இன்று என்னுடைய பலவீனங்கள் மக்களின் முன்னிலையில் இல்லை. தூக்கிலேற்றப் படுவதினின்றும் ஒருக்கால் நான் தப்பித்தால், அந்தப் பலவீனங்கள் வெளிப்படலாம். புரட்சிச் சின்னம் ஒளியிழக்கலாம், ஏன்? அது அறவே அழிந்தும் போகலாம். ஆனால் நான் துணிவுடனும், புன்னகையுடனும் தூக்குமேடை நோக்கிச் சென்றால் இந்தியத் தாய்மார்கள் தம் புதல்வர்கள் பகத்சிங் போல் விளங்கிட வேண்டும் என்று விரும்புவார்கள்; நாட்டின் விடுதலைக்காகத் தியாகம் செய்வோர்களின் எண்ணிக்கை, ஏகாதிபத்தியத்தின் அரக்கத்தனமான சக்தியினாலும் கூட புரட்சியைத் தடுத்து நிறுத்தச்செய்ய முடியாத அளவிற்குப் பெருகி விடும்.

ஆனால் ஒரு விசயம் இன்றும் எனக்கு வேதனை தந்து கொண்டிருக்கிறது. இந்த நாட்டிக்காகவும், மனித குலத்துக்காகவும் என் இதயத்தில் சில ஆசைகளும் அபிலாஷைகளும் இருந்தன; ஆனால் அவற்றில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. நான் உயிருடன் இருந்திருந்தால், இந்த நோக்கங்களை எட்டும் வாய்ப்பு கிடைத்திருக்கும்; என் ஆசைகளை நிறைவு செய்யவும் முடிந்திருகும்.

இதைத் தவிர, தூக்குமேடையிலிருந்து தப்புவதற்கான ஆசை என் இதயத்தில் இருந்ததில்லை. ஆகவே என்னை விடவும் பாக்கியசாலி யார்தான் இருக்க முடியும்? இப்பொழுதெல்லாம் நான் என்னைப் பற்றி பெருமையடைகிறேன். இறுதித் தேர்வுக்காக நான் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்; அந்தத் தேர்வு விரைவிலேயே நெருங்கி வந்திட வேண்டுமென்று விரும்புகிறேன்.

உங்கள் தோழன்,

பகத்சிங்.

(“எப்போதாவது எண்ணிப் பாருங்கள்” – பப்ளிகேஷன்ஸ் டிவிசன் நூலிலிருந்து)
__________________________________________
புதிய கலாச்சாரம், பிப்ரவரி 2002
__________________________________________