Sunday, August 3, 2025
முகப்பு பதிவு பக்கம் 812

குடியரசு தினம் ஜாக்கிரதை !

18

துரை – சண்முகம் கவிதைகள்

  1. ’குடியரசு’ தயார்!
  2. எதிரி

1.  ’குடியரசு’ தயார்!

vote-012கூட்டத்தைக் கூட்டி வித்தையைக்காட்ட
தேசிய கீதம் தயார்…
மேளத்தை கொட்டினால் மேலே பார்ப்பவர்களுக்கு
தேசியக் கொடி தயார்…

அமெரிக்க சிங்கத்தின் வாயில் தலையை விட்டு
வீரத்தைக் காட்டிட பிரதமர் தயார்…

அன்னியக் கம்பெனிகளிடம் ஒப்பந்தம் போட்டு
இந்தியக் ’குடியரசை’ தெருவில் நிறுத்த கலைஞர் தயார்…

இந்திய இறையாண்மையின் வசூலை மறந்து
இலவசமாக நடித்துக் காட்ட ஜெயலலிதா தயார்…
குணச்சித்திர வேடத்தில் ’குடியரசை’ காப்பாற்ற
சோனியா தயார்…

அறிமுக வில்லன் ராகுல்காந்தி
அடவு கட்டி இந்திய தேசியம் ஆடத்தயார்…
பங்குச் சந்தையின் சண்டைக்காட்சியில்
ப.சிதம்பரம் கலக்கத் தயார்…

ஆடையைக் குறைத்துக்காட்ட திரைப்படம் தயார்…
ஆயுதக் கவர்ச்சிகாட்ட முப்படை தயார்…

கழனிகள் இழந்தவர் கண்டுகளிக்க
அலங்கார வண்டியில் பச்சைவயல்கள் பார்வைக்குத் தயார்…

கால்நடை இழந்தவர் மனதைத்தேற்ற
குதிரைப்படையின் அணிவகுப்பு தயார்…

எல்லை தாண்டும் ஏவுகணைகள்
எதிரியைப் பொடியாக்கும் வெடிகுண்டுகள்
பிரமிப்பூட்டும் பீரங்கிகள், துப்பாக்கிகள்
காலாட்படைகள்… கையாள்படைகள்
கண்ணாரப் பாருங்கள்.. எல்லாமே உங்களுக்காகத் தயார்..
உண்மையிலேயே உங்களுக்காகத்தான்.

நெல்லுக்கு விலை கேட்டு நீங்கள் போராடினாலோ,
நிலத்திற்கு உரிமை கேட்டு நீங்கள் நிமிர்ந்தெழுந்தாலோ
வளம் கொழிக்கும் காடுகள் மலைகளை
வளைக்கும் முதலாளிகளை நீங்கள் எதிர்த்தாலோ
தொழிலாளர் உரிமையென்று துடித்தெழுந்தாலோ

நிச்சயம் முப்படையுடன்
உங்களுக்காகவே ’குடியரசு’ தயார்!

———————————————————————–

2. எதிரி

கடற்கரையோரம்
குடியரசு தின அணிவகுப்புக்காக நின்றிருந்த
பீரங்கியைப் பார்த்துவிட்டு
பேரன் கேட்டான்;

இது எதுக்கு தாத்தா?

எதிரிங்களைச் சுட.

எதிரிங்கன்னா?

பாகிஸ்தான் மாதிரி
நம்மளோட சண்டைக்கு வந்து
நாட்டை புடிக்கப் பார்க்குறவங்கதான்.

நாட்டை புடிச்சு
என்ன பண்ணுவாங்க?

பேரனின் கேள்விகள் விரிவடைய
ஊன்றிக் கொள்ள
வார்த்தைகளைத் தேடினார் தாத்தா.

என்ன பண்ணுவாங்கன்னா…
அதாவது.. நம்ம ஊரை புடிச்சிகிட்டு
நம்பளையே அடிமையாக்கி
ஊம்… சொன்னதை செய்யுன்னு மிரட்டுவாங்க..

பயமுறுத்திய தனது பாவனைகளைப் பார்த்து
பேரனின் கேள்விகள் முடிந்துவிடும்
என எதிர்பார்த்தார் தாத்தா.

ஆராய்ச்சிப் பார்வையுடன்
அடுத்து கேட்டான் பேரன்,
அப்படீன்னா…
”எங்கிருந்தோ வந்து
நம்ம ஊரையே வளைச்சுகிட்டு
ஒழுங்கா வேலையை செய்! இல்லன்னா தூக்கிடுவேன்னு!
நோக்கியா நம்பளையே அடிமையாட்டம்
மிரட்டுறான்னு மாமா சொன்னாரே…

நோக்கியா யாரு தாத்தா…
பீரங்கி அவனையெல்லாம் சுடாதா?

பேரன் கேட்டதும்
பீரங்கியால்  சுட்டது போல்
என்ன செய்வதென்று புரியாமல்
தடுமாறிப் போனார் தாத்தா.

தடுமாறுவது தாத்தா மட்டுமா?

vote-012

தொடர்புடைய பதிவுகள்

3 Idiots படமும் – வடக்கத்தியாரின் தென்னாட்டு வெறுப்பும் !!

111

இப்போதெல்லாம் திரைப்படங்கள் பார்ப்பது வெகுவாகக் குறைந்து விட்டது. அதுவும் இந்தி திரைப்படம்? சுத்தமாகக் கிடையாது – விளங்காத மொழியென்பதால் எப்போதுமே இந்தி திரைப்படம் பார்க்க விரும்பியதில்லை. சமீப நாட்களாக அலுவலக சுற்றுப்பயணமாக வட இந்தியாவில் சுற்றிக் கொண்டிருக்கிறேன். அதிலும் கடந்த ஒரு மாதமாக தில்லியில் தங்க வேண்டியாகிவிட்டபடியால், ஒரு பேயிங் கெஸ்ட் அக்காமடேஷனில் தங்கியிருக்கிறேன். என்னையும் சேர்த்து மொத்தம் நான்கு பேர்கள் – ஒருவன் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவன் – ஒருவன் உத்திர பிரதேசம் – ஒருவன் நம்ம ஊர், கும்பகோணம்.

வந்த நாளிலிருந்தே எனக்கும் மற்ற இரு வடக்கத்தியானுகளுக்கும் ஒத்துக் கொள்ளவில்லை. அனேகமாக நான் அறைக்கு பீஃப் பிரியாணி பார்சல் வாங்கி வந்து சாப்பிட்ட இரண்டாவது நாளிலிருந்தே கொஞ்சம் முறைப்பாகத் தான் போய்க் கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று ராகுல் (ம.பி காரன்) எங்கள் எல்லோருக்குமாகச் சேர்த்து புதிதாக திரைக்கு வந்துள்ள 3 இடியட்ஸ் என்ற இந்தி படத்துக்கு டிக்கெட் வாங்கி வந்துவிட்டான். நான் ஆரம்பத்திலேயே எனக்கு இந்தி ஒரு எழவும் புரியாது என்று சொல்லிப்பார்த்தேன் – விடவில்லை.

அதிலும் நம்ம கும்பகோணத்தான் ஒரு பார்ப்பான், இந்தி கற்று விடவேண்டும் என்று கடும் முனைப்புடன் இருக்கிறவன். மற்ற இருவருமாக சேர்ந்து இவனிடம் இந்தி படம் பார்த்தால் ஓரளவு இந்தி பேசக் கற்றுக் கொண்டு விடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.. ம்ம்… சொல்ல மறந்து விட்டேன் – அவர்களும் பார்ப்பனர்கள்தான். ஒருத்தன் காயஸ்த் பார்ப்பான், இன்னொருவன் வேறு ஏதோவொரு பார்ப்பான்..  என்னதான் பார்ப்பான்களாயிருந்தாலும், இவர்களுக்குள் ஒரு க்ளியரான டிமார்கேஷன் (பிரிவு) இருக்கும் – அதாவது நம்ம கும்பகோணத்தானுக்கும் வடக்கத்தியானுகளுக்கும். இதுல எவன் எவனை ஒதுக்கறான் என்று எனக்கு இதுவரை புரியவரவில்லை.

கிடக்கட்டும். நான் வரமாட்டேன் என்று சொன்னாலும் நம்மாளு என்னைப் போட்டு நச்சியெடுத்து சம்மதிக்க வைத்துவிட்டான். படத்தைப் பற்றி நிறைய விமர்சனக் கட்டுரைகள் தமிழில் கூட வந்திருக்கின்றன.. கதை என்று பார்த்தால்…. ஹீரோ ரான்ச்சோ ஒரு புத்திசாலி  (ஆமிர்கான்) கல்லூரி மாணவன்(!). கூட்டாளிகளாக இன்னும் இரண்டு மாணவர்கள் – ஒரு மேல் நடுத்தர வர்க்க முசுலீம்(மாதவன்), ஒரு கீழ்நடுத்தரவர்க்க இந்து (பேரு தெரியலை).

இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பின்னணி கொண்டவர்கள் – ஆமிர் பொறியியலை அதன் உண்மையான அர்த்தத்தில் கற்க விரும்புபவன் – நடைமுறையில் இருக்கும் கல்வித் திட்டத்தின் மேல் விமரிசனம் கொண்டவன். மாதவன் புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்ட மாணவன் – அப்பாவின் கட்டாயத்துக்கு பொறியியல் கற்க வந்துள்ளவன். அந்த இன்னொருவன், வீட்டில் பொருளாதார நெருக்கடி – எப்படியோ படித்து ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற கட்டாயத்துக்கு பொறியியல் கற்க வந்துள்ளவன்.

இவர்கள் மூவரும் சேர்ந்து கல்லூரி நாட்களில் லூட்டியடிக்கிறார்கள். இப்படியாக வாத்தியார்களையும், கல்லூரி தாளாளரையும் கடுப்படித்து படித்து முடிக்கிறார்கள் – மாதவன் படித்து முடித்தவுடன் பொறியியல் துறையை விடுத்து தனக்கு விருப்பமான புகைப்படக்கலையை தேர்ந்தெடுக்கிறான் – ஆமிரின் ஆலோசனை. இன்னொரு மாணவனுக்கு கேம்ப்பஸ்ஸில் வேலை கிடைக்கிறது – ஆமீரின் உதவி+ஊக்கம்+etc. கதாநாயகியின் அக்காள் ஒரு பிள்ளையை பெற்றெடுக்கிறாள் – உபயம் ஆமிர் ( அதாவது பிரசவ கட்டத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தவிக்கும் ஒரு இக்கட்டான நெருக்கடியில் அப்பெண்ணுக்கு சுகப்பிரசவம் பார்க்கிறார் – ஹீரோவாச்சே, சும்மாவா?).

படம் நெடுக வரும் இன்னொரு பாத்திரம் – ராமலிங்கம் எனும் மாணவன். இந்த பாத்திரப் படைப்பைப் பற்றித்தான் எனது நெருடல் –
இவன் வரும் காட்சிகளை நான்(ங்கள்) காணவேண்டும் என்பதற்காகவே ராகுல் தனது கைக்காசைப் போட்டு டிக்கெட் வாங்கி வந்திருக்கிறான் என்பது எனது அனுமானம். இந்த ராமலிங்கம் போன்ற ஒரு பாத்திரத்தை நாமும் கூட நமது கல்லூரி வாழ்க்கையில் பார்த்திருப்போம். “ஏய் இது என்னோட டிபனாக்கும் – இது என்னோட பேனாவாக்கும் – இது என்னோட டிராப்ட்டராக்கும் – தொடாதே!” இந்த மாதிரி ஒரு அல்பை கேரக்டர்.

படித்து முடிக்கும் சமயத்தில் வரும் ஒரு ஆசிரியர் தின விழாவில், கல்லூரி தாளாளரை இம்ப்ரெஸ் செய்ய ராமலிங்கம் லைப்ரரியன் உதவியுடன் ஒரு இந்தி உரையை தயாரிக்கிறான் – அதில் வரும் ஏதோவொரு வார்த்தையை மாற்றி “பலாத்கார்” என்று வரும்படி ஆமிர் செய்து விடுகிறான். ஏன்? ஏனென்றால் இந்த கேரக்டர் ஒரு அல்பையாச்சே. அந்த விழாவில் எல்லோர் முன்னிலையிலும் உரையை படித்து கடும் அவமானத்துக்குள்ளாகும் ராமலிங்கம், இந்த மூன்று நண்பர்களிடமும் வந்து, இன்னும் பத்து ஆண்டுகளில் தான் சொந்த வாழ்க்கையில் ஒரு உயர் நிலைக்கு வந்தபின் இவர்களை வந்து சந்திப்பதாக சவால் விட்டுச் செல்கிறான். முதல் காட்சியே பத்தாண்டு கழித்து ராமலிங்கம் இவர்களை சந்திக்க வருவதிலிருந்துதான் படம் ஆரம்பிக்கிறது. இவர்களில் ரான்ச்சோ(ஆமிர்) எங்கேயிருக்கிறான் என்று எவருக்கும் தெரியவில்லை – அவனைத் தேடிப்போகும் இடைவெளியில் ஃப்ளேஷ்பேக்காகத்தான் மொத்த கதையும் விரிகிறது.

ராமலிங்கம் தன்னை கல்லூரி முதலாண்டு முதல் வகுப்பில் அறிமுகப்படுத்திக் கொள்ளும் போதும்  “I am Chattar Ramalingam born in Uganda, studied in Pondicherry” என்றே சொல்கிறான். ராமலிங்கம் எனும் கதாபாத்திரம் – தெளிவாக தமிழர்களின் உருவகமாகவே படத்தில் காட்டப்படுகிறது. அவன் தட்டுத்தடுமாறி இந்தி கற்றுக்கொள்ள முயல்கிறான் – இடையிடையே ஆங்கில வார்த்தைகள் போட்டு பேசுகிறான். MTI – அதாவது மதர் டங் இன்ப்ளுயன்ஸ் என்பார்களல்லவா, தாய்மொழி பாதிப்புடன் பிற மொழிபேசுவது போலவே, தென்னாட்டு பாதிப்புடன் (accent) இந்தி பேசுகிறான். மொத்த திரையரங்கும் கைகொட்டிச் சிரிக்கிறது – ராகுல் எனது மற்றும் கும்பகோணத்தானின் முகபாவத்தை ஓரக்கண்ணில் கவனிப்பது தெரிந்தது.

ராமலிங்கம் கதாபாத்திரத்துக்கான நடிகர் தேர்வும் கூட கச்சிதமாக தமிழர்களை நினைவுக்குக் கொண்டுவரும் படியான ஒரு தேர்வு. தில்லியில் வடகிழக்கிலிருந்து வேலைக்காகவும் படிப்புக்காகவும் இடம் பெயர்ந்து வரும் மக்களை இங்கே வடநாட்டினர் “சிங்க்கீஸ்” (சைனீஸ் என்பதன் சுருக்கம்) என்றே விளித்து கிண்டல் செய்கிறார்கள். அவர்களை இந்தியர்களாகவே வடக்கில் கருவதில்லை. அதே போல் தமிழர்களையும் அவர்கள் இந்தியர்களாக கருதுவதில்லையோ என்ற சந்தேகம் எனக்கு எப்போதுமே உண்டு. நான் வட இந்தியர்கள் என்று குறிப்பது ஊடகங்களை மட்டுமல்ல – இங்கே சாதாரணமாக என்னோடு பழகுபவர்களும் கூட இதே போன்ற அணுகுமுறையை கையாளுவதைப் பார்த்திருக்கிறேன்.
இதைப் பிரதிபலிக்கும் விதமாகவே ராமலிங்கம் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும்போது தான் உகாண்டாவில் பிறந்ததாக சொல்கிறான். வேறு சில இடத்திலும் இது அழுத்தமாக புரியும் விதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த கதாபாத்திரம்  கோமாளித்தனமாக மட்டும் காட்டப்படாமல், ஒரு தந்திரசாலி, குயுக்தியானவன்.. என்பது போலவும் காட்டப்பட்டுள்ளது…ம்ம்ம்ம்.. ஒரு விதமான காமெடி வில்லன் போல!

பரீட்சையில் தான் அதிக மார்க் வாங்க வேண்டும் என்பதற்காக பரீட்சைக்கு முந்தைய இரவு ஹாஸ்டலில் உள்ள அறைகளில் மற்ற மாணவர்கள் அறியாமல் செக்ஸ் புத்தகத்தை வைக்கிறான். ஹீரோ கல்வித் திட்டத்தைப் பற்றி வகுப்பில் ஆசிரியரிடம் விமர்சித்துப் பேசுகிறான், அதற்கு ஆசிரியர் அந்த மாணவனை(ஹீரோவை) கன்னாபின்னாவென்று திட்டுகிறார் – மற்ற மாணவர்களெல்லாம்  அமைதியாக இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ராமலிங்கம் மட்டும் சத்தம் போட்டு சிரிப்பது போலவும், எகத்தாளமாக திரும்பி பார்க்கிறான்.

பொதுவாக நான் படிக்கும் காலத்தில் என்னைப் பொறுத்தளவில், முதல் பென்ச்சில் உட்கார்ந்து கொண்டு, தலையை எண்ணை போட்டு படிய வாரிக்கொண்டு, சட்டையில் காலர்பட்டன் நெக்பட்டனெல்லாம் போட்டுக் கொண்டு, ஆசிரியர் ஏதாவது கேள்வி கேட்டு முடிக்கும் முன்பே முந்திரிக் கொட்டைத் தனமாக தான் மனப்பாடம் செய்து வைத்திருந்ததை வாந்தியெடுக்கும் மாணவனைக் கண்டாலே பிடிக்காது. எட்டி உதைக்கலாமா என்று கூட தோன்றும். இந்த ராமலிங்கம் கதாபாத்திரம் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறது.  ராமலிங்கம்  ஒரு கோழை, காரியவாதி, சுயநலவாதி, துரோகி, இங்கிதம் தெரியாவன் (ராமலிங்கம் அடிக்கடி குசுவிடுவது போல காட்சிகள் உள்ளது) என்பதை மிக முயன்று நிறுவியுள்ளனர். இங்கே ராமலிங்கம் என்பது ஒரு கதாபாத்திரமாக அல்ல – தமிழர்களின் ஒரு குறியீடாகவே இருக்கிறது.

எப்படி?

பொதுவில் இங்கே (வடக்கில்) தமிழர்கள் காரியவாதிகள் என்றும் எப்படியாவது எதைச் செய்தாவது தங்கள் காரியம் செய்துமுடித்துக் கொள்வார்கள் என்பது போலவும் ஒரு கருத்து உள்ளது. ஆபீஸுக்கு பக்கத்தில் வாடிக்கையாக டீ குடிக்கும் கடையில் சாதாரணமாக என்னிடம் அந்த கடை முதலாளி ஒரு நாள் கேட்டார் – “நீங்கள் எப்படியோ எல்லா துறைகளிலும் முதலில் வந்துவிடுகிறீர்கள்.. குறைவான சம்பளத்துக்கும் கூட வேலை செய்கிறீர்கள், ஏதேதோ செய்து முதலிடத்துக்கு வந்து விடுகிறீர்கள்” என்றார் – அந்தக் கருத்தின் உருவகமாக ராமலிங்கம் கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது.

பொதுவில் தெற்கத்தியர்கள் (குறிப்பாக தமிழர்கள்) உலகமயமாக்கலின் பின் உருவான ஐ.டி துறை, ஐ.டி சேவைத் துறை போன்றவைகளில் அதிகளவு வேலைகளைப் பிடித்துக் கொள்கிறார்கள் எனும் குமைச்சல் வடக்கில் இயல்பாகவே இருக்கிறது. அதற்குக் உண்மையான காரணம் அவர்களை விட ஒப்பீட்டு ரீதியில் ( BIMARU மாநிலங்கள் சில ஆப்ரிக்க நாடுகளை விட படு கேவலமான முறையில் உள்ளது) கல்வித்துறைக் கட்டமைப்புகள் இங்கே வலுவாக இருப்பதாகும். ஆனால், வடக்கில் சாதாரணர்களிடையே ஏதோ தமிழர்கள் தந்திரமாக (அவர்களுக்கு தென்னிந்தியா என்றாலே அது தமிழ்நாடு தான்) தமது வேலைகளைத் திருடிக் கொள்கிறார்கள் என்ற எண்ணம் இருக்கிறது.

இடைவேளைக்குப் பின் கதையில் ஒரு ட்விஸ்ட்.. அதாவது ஆமிர் உண்மையான ரான்ச்சோ அல்ல. ரான்ச்சோ என்பது ஒரு பெரிய பண்ணையாரின் பையன். ஆமிர் அந்த கிராமத்தில் நன்றாக படிக்கும் ஏழை மாணவன் என்பதால், ரான்சோவின் பேரில் பொறியியல் படித்து பட்டத்தை ரான்சோவுக்கு கொடுத்துவிட வேண்டும் எனும் ஏற்பாட்டில் தான் படிக்கவே வருகிறான் (இது இன்னொரு நெருடல்). போலவே படித்து முடித்ததும் பட்டத்தை உண்மையான ரான்ச்சோவிடம் கொடுத்துவிட்டு ஒரு ஒதுக்குப் புறமான கிராமத்தில் பள்ளி ஆசிரியராகவும் ஒரு விஞ்ஞானியாகவும் (!?) வாழ்ந்து வரும் ஆமிரின் உண்மையான பெயர் – ஃபுங்செக் வாங்க்டூ. இவரிடம் சில முக்கியமான பேட்டண்டுகள் இருக்கிறது. வாங்க்டூவிடம் ஒரு ஒப்பந்தம் போடும் வேலையாகத் தான் ராமலிங்கம் இந்தியா வருகிறான் – ஆனால் வாங்க்டூதான் ஆமிர் என்று தெரியாது. அந்த ஒப்பந்தங்கள் மிக முக்கியமானவை.

ஆமிரை கிராமத்தில் பொடியன்கள் மத்தியில் வைத்துப் பார்க்கும் ராமலிங்கம் முதலில் அவனைக் கேவலமாக பேசிவிடுகிறான்.. பிறகு அவனே தான் சந்திக்க வேண்டிய வாங்க்டூ என்று தெரியவரும் போது இதுவரை தான் பேசியதெல்லாம் சும்மா தமாஷுக்காக என்றும் ஆமிர்தான் ஜெயித்து விட்டதாகவும் சொல்லி குழைகிறான். உச்சகட்டமாக தனது பேண்ட்டை கழட்டி ஜட்டியுடன் திரும்பி நின்று “நீ தான் பெரியாளு” என்பது போன்று ஏதோ இந்தியில் சொல்கிறான். ஆமிரும் மற்ற இரு நண்பர்களும் கேலியாக சிரித்துக் கொண்டே ஓடுகிறார்கள் – ராமலிங்கம் பேண்ட்டை இழுத்து விட்டுக் கொண்டே துரத்துகிறான் – காட்சி உறைந்து படம் முடிகிறது..

இந்த இறுதிக் காட்சி “தமிழர்கள் தமது காரியம் நடக்க வேண்டுமானால் எந்தளவுக்கும் இறங்கிப் போக தயங்காத சுயநலவாதிகள்” என்று வடநாட்டான் நம்மேல் கொண்டிருக்கும் கருத்தின் உருவகம்.

“ஆப்கோ ஹிந்தி மாலும்ஹேனா?”

“Sorry I dont know hindi”

என்று எனக்கும் ராகுலுக்கும் ஆரம்பத்தில் நடந்த அந்த உரையாடலைத் தொடர்ந்தே என்னை ஏதோ செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த உயிரினத்தைப் பார்ப்பது போலவே பார்க்க ஆரம்பித்து விட்டான். ஆக, நான் ராமலிங்கத்தைப் பார்க்க வேண்டும் என்பதும், ராமலிங்கத்தின் கோமாளித்தனங்களைப் பார்த்து கூட்டம் கைகொட்டிச் சிரிப்பதை பார்க்க வேண்டும் என்பதும்தான் அவன் நோக்கம். படம் நெடுக இடையிடையே அவன் என்னை ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. நானாவது பரவாயில்லை – ஹிந்தியை முற்றிலுமாக புறக்கணித்து விட்டவன். ஹிந்தி தெரியாது என்று பெருமையாகவே சொல்லிக் கொள்பவன். ஆனால் சங்கரனின்( கும்பகோணம்) நிலையோ தர்மசங்கடமாகிவிட்டது. அவன் தட்டுத்தடுமாறி ஹிந்தி கற்றுக் கொள்ள முயன்று கொண்டிருப்பவன் – அவனுடைய பட்லர் இந்தியை தினப்படி அவர்கள் கிண்டலடிப்பது வழக்கம். இந்தப் படமோ அதில் உச்சகட்டமாகிவிட்டது.

திரையரங்கை விட்டு வெளியே வந்து நான் தனியே போய் தம்மடிக்க நின்றேன். சங்கரன் உர்ரென்று வந்து பக்கத்தில் நின்றான். “நீங்க வேணா பாருங்க பாஸு.. சீக்கிரமா நல்லா இந்தி பேசக் கத்துக்குவேன்” என்றான். “கத்துக்கிட்டு?” என்றேன்… ஒன்றும் பதில் சொல்லவில்லை.

மொழியின் மேல் எனக்கு வெறுப்பெல்லாம் கிடையாது -நான் மொழிவெறியனுமல்ல- ஆனால் அது திணிக்கப்படுவதுதான் எரிச்சலூட்டுகிறது. எனது இந்தப் பயணத்தில் தில்லியின் சில பகுதிகளுக்கு செல்ல நேர்ந்தது.. அதிலும் குறிப்பாக கால்காஜி பகுதியில் கணிசமான அளவில் தமிழர்கள் இருக்கிறார்கள். கூலி வேலைகளில் அதிகம் ஈடுபட்டுள்ள உழைக்கும் மக்களான அவர்களிடம் பழகிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்கள் சொல்வது வேறு ஒரு கோணத்தையும் காட்டுகிறது.

வடநாட்டைச் சேர்ந்த, மற்றும் பீகார், உ.பி, ம.பி போன்ற மாநிலங்களின் தொலைதூர கிராமங்களிலிருந்து இடம் பெயர்ந்து வந்திருக்கும் பிற உழைக்கும் மக்கள் தமது வர்க்கத்தவரான தமிழர்களின் மேல் மொழிக் காழ்ப்பைக் காட்டுவதில்லை. இயல்பாக இவர்களும் இந்தி கற்றுக் கொள்கிறார்கள். புதிதாக வந்து சேரும் இந்தி பேசத்தெரியாத தமிழர்களுக்கும் மற்ற உழைக்கும் வடநாட்டினர் உதவியாகவே இருக்கிறார்கள். வேலைக்கான போட்டி மட்டுமே அவர்களிடம் நிலவுகிறாதேயொழிய தமிழன் எனும் காரணத்துக்காக அவர்கள் ஒதுக்கப்படுவதில்லை -நடைபாதைகளின் ஒரே பகுதியை அவர்கள் தமக்குள் சச்சரவில்லாமல் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.

நடுத்தர, உயர்நடுத்தர, மற்றும் மேல்தர வர்க்கங்களிடையே இயல்பாகவே மதராஸிகள் மேல் வெறுப்பு இருக்கிறது. அவர்கள் வேலைகளை நாம் அபகரித்துக் கொள்கிறோம் எனும் பொறாமை இருக்கிறது. இயல்பாக இந்த குமுறல்களெல்லாம் அவர்களுக்கு சரியான கல்விக்கட்டமைப்பை உறுதி செய்து தராத அரசின் மேல் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்தக் குமுறல்களை ஊடகங்கள் வழியே தமிழர்கள் மேலான வெறுப்பாக மடைமாற்றி விட்டிருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் ஒரு சின்ன உதாரணம் தான்.

உடன் வேலை செய்யும் வேறு தென்னாட்டவர்களிடம் பேசும் போது இதே போன்ற கள்ளப்பரப்புரை தொடர்ந்து நடந்து வந்திருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்துவரும் மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகள் சமீபத்திய உலகளாவிய பொருளாதார பெருமந்தத்திற்குப் பின் மேலும் சீர்குலைவை நோக்கி சென்று வரும் நிலையில், மக்களின் கோபம் தம்மேல் திரும்பிவிடாமல் தடுத்து வைக்க இது போன்ற படங்களும் ஆளும் வர்க்கத்துக்கு கணிசமாக சேவை செய்கின்றன. பிராந்திய பகைமைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அளவுக்குள் வளருவதை ஆளும் வர்க்கம் எப்போதுமே விரும்பத்தான் செய்யும்.ஆனால், இந்த முரண்பாடுகள் முற்றி வெடிக்கும் நிலை ஒரு நாள் ஏற்படும் போது – அவர்கள் உருவாக்கிய இந்த செயற்கையான இந்தியா எனும் இந்த ஏற்பாடு சிதைந்து போகத்தான் செய்யும். கூடவே உழைக்கும் மக்களின் இயல்மான இந்தியா பிறக்கவும் கூடுமென்று கருதுகிறேன்.

கோபன்ஹேகன் தட்ப-வெப்பநிலை மாநாடு: பூவுலகின் முதன்மை எதிரிக்கு வெற்றி!

vote-012இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில், முன்னெப்போதும் கண்டிராத “இயற்கைப் பெரும் பேரழிவுகளை” உலகம் கண்டது. கொதிக்கும் கோடைக் காலங்கள், அதிபயங்கர சூறாவளிகளும் புயல்களும், மிக மோசமான வறட்சிகளும் கொட்டித் தீர்த்த பேய் மழைகளும் வெள்ளப் பெருக்குகளும், பயபீதியும் நாசமும் விளைவித்த பெருங்கடற் சீற்றங்கள் – கடல்மட்ட உயர்வுகள், இவற்றோடு பல நாடுகளின் விவசாயத்தின் தலைகுப்புற வீழ்ச்சிகள். இத்தகைய நிகழ்வுகள் உலகின் ஏதோ சில பகுதிகளில் மட்டும், எப்போதோ ஒரு சில தடவைகள், தன்னியல்பாக வரக்கூடிய இயற்கைப் பேரழிவுகள் என்று இனியும் கருதிவிட முடியாது. இத்தகைய பேரழிவுகள் மிகப் பெரும்பாலும் உலகின் தட்ப-வெப்பநிலை மாற்றங்களால் தூண்டிவிடப்பட்டவை என்று அறிவியல்பூர்வமாக இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த வான்கோள்களில் பூமி மட்டுமே வாழும் வான்கோளாக அறியப்பட்டுள்ளது. அதாவது தாவரங்களும் விலங்குகளும் உயிரினங்களாக வாழும் இயற்கைச் சூழல் வாக்கப் பெற்ற வான்கோள் பூமி மட்டுமே. வட, தென் துருவங்களில் உள்ள பனிப்படலங்கள், பூமியின் சுழற்சி, புவிஈர்ப்பு சக்தி, பூமியைச் சுற்றியுள்ள வளி மண்டலம், அதில் நிலவும் காற்றழுத்த மாறுபாடுகள் போன்ற காரணங்களால் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஓரளவு சீரான தட்ப-வெப்ப நிலை ஏற்பட்டு, உயிரினங்கள் தோன்றவும், நீடிக்கவும் ஏற்றதான இயற்கைச் சூழல் நிலவி வருகிறது.

ஆனால், கடந்த சில நூற்றாண்டுகளாகப் பெருகிவரும் எரிசக்தி இயந்திரங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள், மோட்டார் வாகனங்கள் ஆகியவை வெளியேற்றி வரும் கரிம வாயுக்களால் உலகம் மேலும் மேலும் வெப்பமடைந்து கொண்டே வந்து, இதுவரை மனித இன வரலாறு காணாதவாறு இப்பூவுலகையே பேரழிவின் விளிம்புக்குத் தள்ளும் பேராபத்தை விளைவித்திருக்கிறது.

இதனால், வட,தென் துருவங்களில் உள்ள பனிமலைகள் பிளந்து பாளங்களாகி, உருகும் பனி ஆறுகளாக மிதக்கத் தொடங்கிவிட்டன. அதனால் கடல் மட்டம் உயர்ந்து, பசிபிக் மாகடலில் பல தீவுத் திட்டுகள் மூழ்கிப் போய்விட்டன. இப்படியே போனால் நமது நாட்டுக்குத் தென்மேற்கில் உள்ள மாலத்தீவுக் கூட்டங்களும், நமது நாட்டிலேயே உள்ள சுந்தரவனக் காடுகளும் கடலில் மூழ்கிப் போகும்.

எப்போதாவது நிகழக்கூடியதாக இருந்த தீயாய் எரிக்கும் எல்-நினோ என்ற கடும் வறட்சி நிகழ்வுகள் கடந்த ஒன்பது ஆண்டுகளில் மூன்று முறையும் நீண்ட நெடியதாகவும் வந்துவிட்டது. அதேசமயம் உலகின் வேறு பல நாடுகள் வெள்ளக் காடுகளாகி, பல பத்து இலட்சம் மக்கள் வீடற்றவர்களாகவும் அகதிகளாகவும் வீசியெறியப்படுகின்றனர். நுண்ணுயிரிகள் – கிருமிகள் பலவும் (நீடித்த வெப்பநிலை பருவகாலத்தில்) பல்கிப் பெருகிப் புதுப்புது கொள்ளை நோய்களைப் பரப்பி, தம் பங்கிற்கு ஏராளமான உயிர்களைப் பலிவாங்குகின்றன.

பனிமலைகள் உருகுவது பெரும் தொடர் நிகழ்வுப் போக்குகளைத் தொடங்கி நடத்துகிறது. பனிப் படலங்களின் பரப்பு தொடர்ந்து குறைவதாலும், கடல்பரப்பு அதிகரிப்பதாலும், பூமியின் மீது விழும் சூரிய வெப்பத்தைத் திருப்பி அனுப்பும் அளவும் குறைந்து, புவி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துருவப் பகுதிகளின் நிரந்தரப் பனிப் பாளங்களில் பல கோடி டன் அளவுக்கு கரிம வாயுக்களான கரியமில வாயு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு, கந்தக-டை-ஆக்சைடு, குளோரோஃபுளோரோ கார்பன் ஆகிய பசுமைக் குடில் வாயுக்கள் புதைந்து கிடக்கின்றன.

பனிப் பாளங்கள் உருகும்போது அவற்றிலிருந்து ஏராளமான பசுமைக் குடில் வாயுக்கள் வெளிப்பட்டு, வளி மண்டலத்தில் ஏற்கெனவே உள்ள பசுமைக் குடில் வாயுக்களின் அடுக்கை மேலும் பருமனாக்கி, பசுமைக் குடில் பாதிப்பை மேலும் கூடுதலாக்கி விடும். சூரியனிலிருந்து வரும் வெப்பத்தை ஓசோன் மண்டலத்தைப் போல வடிகட்டுவது அல்லது தடுப்பதற்கு மாறாக, அதை இந்த கரிம வாயுக்கள் உள்வாங்கிக் கொண்டு வளி மண்டலத்தையும் புவியையும் மேலும் வெப்பமடையச் செய்வதைத்தான் பசுமைக் குடில் பாதிப்பு என்கிறார்கள்.

உலகளாவிய வெப்பநிலை மேலும் 3 செல்சியஸ் டிகிரி உயர்ந்தால், உலகிலுள்ள காடுகள் அழிந்து சிதைந்து கரிமவாயுக்களைக் கக்கத் தொடங்கி விடும். அத்தகைய நிலைமை ஏற்பட்டால், 100 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்ததோ, இன்று வெள்ளிக் கிரகம் எப்படி இருக்கிறதோ, அப்படி பூமி எங்கும் வெப்பமும் புகை மண்டலமும் நீராவியுமாகவே இருக்கும். மனிதர்களோடு எல்லா உயிரினங்களும் உயிர்வாழ்வதே சாத்தியமற்றதாகி விடும்.

இது வெறும் அனுமானம் அல்ல. பருவகால மாற்றம் பற்றிய நாடுகளுக்கிடையிலான குழுவின் தலைவராகிய ஆர்.கே. பச்சௌரி அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் பின்வருமாறு கூறுகிறார்: தற்போதைய அளவு மட்டத்தில் தேசங்கள் பசுமைக்குடில் கரிம வாயுக்களை வெளியிடுமானால், 2015-ஆம் ஆண்டே உலகின் சராசரி வெப்ப அளவு பொறுத்துக் கொள்ள முடியாத அதன் விளிம்பு முனையைத் தாண்டி விடும். பிறகு திரும்பவும் மாற்றமுடியாத பருவகால மாற்றங்களை ஏற்படுத்தி விடும்.

இப்பூவுலகைப் பேரழிவின் விளிம்பிற்குத் தள்ளும் அளவிற்கு புவியை வெப்பமடையச் செய்ததற்கு யார் யார் காரணமாக இருந்திருக்கிறார்கள்? பேரழிவு என்ற நிலையிலிருந்து இப்பூவுலகைக் காப்பதற்கான முயற்சியில் யார், யார் ஈடுபட்டிருக்கிறார்கள்? அதற்குத் தடையாக யார் யார் நிற்கிறார்கள்? புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கான அறிவியல்பூர்வமான – ஆக்கப்பூர்வமான வழிவகைகள் தாம் என்னென்ன? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் மட்டும் தொடக்கப்பள்ளி மாணவர் முதல் கற்றுத் தேர்ந்த அறிவுஜீவிகளில் பலருக்கும் தெரியவில்லை. உலகின் எல்லா நாடுகளும் தேசங்களும் மோட்டார் வாகனங்களும், குளிர்பதனப் பெட்டிகளும், தொழிற்சலைகளில் உற்பத்தியாகும் பொருட்களைப் பாவிக்கும் எல்லா மனிதர்களும் புவி வெப்பமடைவதற்குக் காரணமாக இருக்கிறார்கள்; வீட்டுக்கொரு மரம் வளர்ப்பது முதல் போக்குவரத்துக்கு மிதிவண்டிகளைப் பாவிப்பது வரையிலான தனிமனித முயற்சிகள் மூலம் புவி வெப்பமடைவதைத் தடுத்துவிட முடியும் என்று பாமரத்தனமான பிரச்சாரங்களில் மக்கள் மூழ்கடிக்கப்படுகின்றனர்.

நமது நாட்டிலுள்ள இந்தியா டுடே செய்தி ஊடகம்தான் முதன்மையான அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய ஆதரவு நிலை கொண்டது. உலகிலேயே மிக அதிக அளவு கரிம வாயுக்களை வெளியேற்றிப் புவிவெப்ப மடையச் செய்யும் அமெரிக்காதான், புவி வெப்பமடைவதைத் தடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக நிற்கிறது என்பதற்காக, அமெரிக்காதான் இப்பூவுலகின் முதன்மையான எதிரி என்று அடையாளங்காட்டுகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, பிரான்சு, ஜெர்மனி, இங்கிலாந்து, ருசியா, சௌதி அரேபியா, இத்தாலி, சீனா, இந்தியா ஆகிய 12 நாடுகளை, உலகின் மிக மோசமான கொடூரன்கள் என்று அது வரிசைப்படுத்தியிருக்கிறது.

உலக மக்கட் தொகையில் 4.73 சதவீதத்தைக் கொண்ட அமெரிக்க வல்லரசு, உலகளாவிய அளவில் 26 சதவீத கார்பன்-டை-ஆக்சைடையும் 20 சதவீத மீதேன் வாயுவையும் நச்சுக் கழிவாக வெளியேற்றி முதலிடம் வகிக்கிறது. பிற ஐரோப்பிய நாடுகளும் ரசியாவும் அதற்கடுத்த நிலையில் உள்ளன. உலக மக்கட் தொகையில் 24 சதவீதத்தைக் கொண்ட தொழில் வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாடுகள் ஏறத்தாழ 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட உற்பத்திப் பொருட்களைப் பாவிக்கின்றன. மொத்த எரிசக்தியில் முக்கால் பங்கை விழுங்கும் இந்நாடுகளிலிருந்துதான் 75 சதவீத கார்பன்-டை-ஆக்சைடு வெளியாகிறது. அதேசமயம், ஏழை நாடுகள் கரிம வாயுக்களை வெளியேற்றுவதில் கடைசி வரிசையில்தான் இருக்கின்றன.

கரிம வாயுக்களை வெளியேற்றுவதையும், புவி வெப்பமடைவதையும் தடுப்பதற்காக 1992 முதல் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தட்ப-வெப்ப நிலை மாற்றம் பற்றிய மாநாட்டுக் கட்டமைப்பு சார்பாக உலகின் பல்வேறு நகரங்களில் பதினைந்துக்கும் மேற்பட்ட உலக நாடுகளின் உயர்மட்ட கருத்தரங்குகளும் மாநாடுகளும் நடந்திருக்கின்றன.

பொதுவான, ஆனால் வெவ்வேறான பொறுப்புகள் – கடமைகளை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கையை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஒப்பந்தத்தை 1992-இல் தட்ப-வெப்ப நிலை பற்றிய ஐ.நா. மன்றத்தின் கட்டமைப்பு நிறைவேற்றியது. புவி தட்பவெப்ப நிலை சீர்குலைந்து போவதற்கான வரலாற்று வழிக் காரணகர்த்தாக்களாக உள்ள முன்னேறிய தொழில்மயமான நாடுகள்தாம் கரிம வாயுக்கள் வெளியேற்றுவதைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக அந்நாடுகள் தமது பொருளுற்பத்தி மற்றும் நுகர்வுமுறைகளை மிகவும் தீவிரமான வேகத்தில் மாற்றிக் கொள்ளவேண்டும். வளரும் நாடுகள் தட்ப-வெப்ப நிலைக்குச் சாதகமானதாகத் தமது வளர்ச்சிப் பாதையை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். ஏழை நாடுகள் வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியிருப்பதால், சீரான உலக தட்பவெப்ப நிலையை நிலைநாட்டுவதற்கான தமது பங்கை ஆற்றுவதற்கு வளர்ந்த நாடுகள் தேவையான தொழில்நுட்பங்களும் நிதி உதவிகளும் செய்தாக வேண்டும். இவை சர்வதேச சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும், கடந்த 18 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரவே இல்லை; வெறும் பேச்சாகத்தான் இருக்கிறது.

1997-ஆம் ஆண்டு ஜப்பானின் கியோட்டோ நகரில் நிறைவேற்றப்பட்ட கியோட்டோ உடன்படிக்கையின்படி, 1990 ஆண்டு தாம் வெளியேற்றிய கரிம வாயுக்களின் அளவைவிட 5 சதவீத அளவுக்கு வளரும் நாடுகள் 2005-2012 ஆகிய ஏழாண்டுகளில் குறைத்துக் கொள்ள வேண்டும்; தட்பவெப்ப நிலையில் பாதகம் ஏற்படுத்துவதை வளரும் நாடுகள் தவிர்ப்பதற்கு வளர்ந்த நாடுகள் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவி செய்ய வேண்டும்; இவற்றோடு ஐரோப்பிய சமூகம் மற்றும் 37 வளர்ந்த தொழில்மயமான நாடுகளும் குறைத்துக் கொள்ள வேண்டிய கரிமவாயுக்கள் வெளியேற்ற அளவையும் கியோட்டோ உடன்படிக்கை சட்டபூர்வமாக வலியுறுத்தியது. உலகின் பெரும்பாலான நாடுகள் முதற்கட்ட இலக்கை நிறைவேற்றாதது மட்டுமல்ல, கீழே தள்ளிய குதிரை குழியையும் பறித்ததைப் போல, 1992-இல் நடந்த முதல் மாநாட்டிற்குப் பிறகு, கடந்த 17 ஆண்டுகளில் கரிம வாயுக்கள் வெளியேற்றும் அளவை 30 சதவீதம் அதிகரித்திருக்கின்றன.

இப்பூவுலகின் முதன்மை எதிரியான அமெரிக்காவோ, கியோட்டோ உடன்படிக்கையை இன்னமும் ஏற்க மறுப்பதோடு, அதற்குக் குழிபறிக்கும் வேலையிலும் தானே முன் நிற்கிறது. கறுப்பினத் தலைவர் பாரக் ஒபாமா அமெரிக்க அதிபரானதை ‘உலக சமுகமே’ கொண்டாடியது. ஆப்கானில் ஆக்கிரமிப்பு பயங்கரவாதப் போரைத் தொடர்வதற்கு மேலும் படை அனுப்பும் ஒபாமா, கியோட்டோ உடன்படிக்கையை நிராகரிப்பதிலும் உறுதியாக நிற்கிறார். கியோட்டோ உடன்படிக்கையின்படி 2012-2016 ஆகிய இரண்டாவது அமலாக்கக் கட்டத்தில் உலக நாடுகளின் கரிமவாயுக்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் அளவை வரையறுப்பதற்காக நடந்த கோபன்ஹேகன் மாநாட்டில், அந்நோக்கம் நிறைவேறாமல் தடுத்ததில் முக்கிய பங்காற்றியவர் அமெரிக்காவின் பாரக் ஒபாமாதான். தன் பங்கிற்கு அமெரிக்கா, 2005-ஆம் ஆண்டு தான் வெளியேற்றிய  கரிம வாயுக்களின் கனஅளவில் 17 சதவீதத்தை  2020-இல் குறைத்துக் கொள்ளும் என்று ஒபாமா அறிவித்துள்ளார். இது 1990-இல் அமெரிக்கா வெளியேற்றிய அளவில் வெறும் 4 சதவீதம்தான். இதுவும் கூட, ஏற்கெனவே கியோட்டோ உடன்படிக்கையை 95 – 0 என்ற விகிதத்தில் நிராகரித்த அமெரிக்க செனட்டால் ஏற்றுக் கொள்ளப்படாமல், நிராகரிக்கப்பட வாய்ப்புண்டு.

இந்தியாவை விடத் தலைக்கு 18 மடங்கு அதிகமாகக் கரிம வாயுக்களை வெளியேற்றும் அமெரிக்கா இவ்வாறு நடந்து கொள்வதற்கான காரணம் நேரானது – எளிமையானது. தற்போதைய நிலை நீடித்திருப்பதற்காக ஆண்டுக்கு முன்னூறு மில்லியன் டாலர் செலவழிப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்திய ஏகபோக முதலாளிகளின் கும்பல்கள் பலவும் தயாராக உள்ளன. இவற்றில் அமெரிக்காவின் 50 மாநிலங்களில் இருபத்திரண்டை ஆட்டிப் படைக்கும் நிலக்கரி முதலாளியக் கும்பல்கள், முன்னாள் அதிபர்களான புஷ் குடும்பத்துக்கு நெருக்கமான எரிசக்தி எண்ணெ முதலாளியக் கும்பல்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் – நெடுஞ்சாலை முதலாளியக் கும்பல்கள் அடங்கும். அமெரிக்கா மட்டுமல்ல, இப்படிப்பட்ட ஏகாதிபத்திய ஏகபோக முதலாளிகள்தாம் உலகின் தட்பவெப்ப நிலையையும் தலைவிதியையும் தீர்மானிக்கக்கூடியவர்களாக உள்ளார்கள்.

கியோட்டோ உடன்படிக்கையின் 2-வது கட்ட அமலாக்கத்தை, உலக நாடுகளின் கரிமவாயு வெளியேற்ற இலக்கை தீர்மானிப்பதற்காக, 2009-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் நாள், கோபன்ஹேகன் மாநாட்டில் 192 நாடுகளின் பெருந்தலைகளும், அவர்களின் எடுபிடிகளும் கலந்து கொண்டனர். இம்மாநாடு ஒரு துன்பவியல் நகைச்சுவை நாடகமாகவே நடந்து முடிந்திருக்கிறது. அலுவல் நாட்களில் எல்லாம் கேளிக்கை, விருந்து, அரட்டை என்று போக்கிவிட்டு, இறுதிநாளில் அவசர அவசரமாக சில தீர்மானங்களை நிறைவேற்றும் நான்காம் தர சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்களின் கேலிக்கூத்துகளைப் போலவே கோபன்ஹேகன் மாநாடும் நடந்துள்ளது.

தாம் வாழும் உலகம் பேரழிவை எதிர்கொண்டிருந்தபோதும், தமது சோந்த நாட்டு ஏகாதிபத்திய ஏகபோக முதலாளியக் கும்பல்களின் கொள்ளை இலாப வெறிக்குத் துணை நிற்பது ஒன்றையே கருத்தில் வைத்து, அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஏழை நாடுகளின் கதறல்களுக்குச் சிறிதும் செவிமடுக்க மறுத்துவிட்டனர். அவர்கள் கியோட்டோ உடன்படிக்கையை கிழித்தெறிந்தார்கள். மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்கள் எல்லாம் தோல்வியில் முடிவுற்றபிறகு, ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசு நாடுகள், இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய தமது நான்கு பெரும் தரகு முதலாளிய நாடுகளோடு இரகசிய – சதி உடன்படிக்கை போட்டுக் கொண்டு, புவி வெப்பமடைவதைத் தடுக்கும் இலக்கு – உறுதி, சட்டபூர்வ உடன்படிக்கை எதனையும் நிறைவேற்றாமல், வெறுமனே அரசியல் கூட்டறிக்கையை நிறைவேற்றிவிட்டுக் கலைந்தனர்.

–   புதிய ஜனநாயகம், ஜனவரி, 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

“சந்திப்பு” தோழர் செல்வபெருமாள் மரணம் !!

34

vote-012நாங்கள் போலிக்கம்யூனிஸ்டு என்றைழைப்பவர்களில் முதன்மையானவர்கள் சி.பி.எம் கட்சியினர். கம்யூனிசத்தின் பெயரில் திரிபுவாதக் கொள்கைகளை தன்னகத்தே கொண்டிருந்த அந்தக் கட்சியிலிருந்துதான் மார்க்சிய லெனினிய கட்சி பிரிந்து வந்தது. இன்றைக்கு வலது, இடது இரண்டு கம்யூ. கட்சிகளும் ஆளும் வர்க்கத்தின் கூட்டாளிகளாக மாறிவிட்டன. எது உண்மையான கம்யூனிசம் என்பதை மக்களிடையே பிரச்சாரம் செய்வதற்கு முன் எவரெல்லாம் போலிக் கம்யூனிஸ்டுகள் என்பதை அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறது.

அவர்களோ எங்களை தீவிரவாதிகளென்றும் சி.ஐ.ஏவின் கைக்கூலிகளென்றும் தனிமைப்படுத்த முனைந்தனர். இந்தப் பின்னணியில்தான் சந்திப்பு தோழர் செல்வப்பெருமாளுக்கும், எமது தோழர்களுக்கும் இடையே இணையத்தில் தீவிரமான  கருத்துப் போராட்டம் நடந்து வந்தது.

பொதுவில் சி.பி.எம் கட்சி தமது அணிகளுக்கு புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் முதலான இதழ்களை படிக்கக்கூடாது, ம.க.இ.கவினரோடு சகவாசம் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிவிக்காத விதிமுறைகளை கட்டளையிட்டிருக்கிறது. இதை ஊக்குவித்தால் தமது அணிகள் ம.க.இ.கவினரால் வென்றெடுக்கப்படுவார்கள் என தலைமை பயந்தது.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் எமது தோழர்கள் அசுரன், ஏகலைவன், கேடயம் உள்ளிட்டு பலர் தீவிரமாக இயங்கிவந்த நேரம். இப்படி கூட்டம் கூட்டமாக ம.க.இ.கவினர் இறங்குவதைக் கண்டு கதிகலங்கிய சி.பி.எம் தலைமையின் ஆசிர்வாதத்தோடு இதை எதிர் கொள்ள களமிறங்கினார் செல்வபெருமாள். அவர் சென்னை சி.பி.எம் அலுவலகத்தின் முக்கிய ஊழியராக பணியாற்றிக்கொண்டு இணையத்திலும் பங்கேற்றார்.

அவர் எழுதிய இடுகைகளில் பெரும்பாலானவை ம.க.இ.கவை அம்பலப்படுத்துவதற்காக எழுதப்பட்டதுதான். தோழர்கள் போலிக் கம்யூனிஸ்டுகளை விமரிசித்து எழுதும் ஒவ்வொரு பதிவுக்கும் எதிர்ப் பதிவு போடுவார் செல்வபெருமாள். பின்னூட்டமிட்டு விவாதிப்பார். இது கணிசமான காலம் நடந்து வந்தது.

தொடர்ந்து தோழர்கள் எழுப்பிய மையமான கேள்விகள், விமரிசனங்களுக்கு பதில் சொல்ல இயலாமல் பதட்டமடைந்த செல்வபெருமாள் பின்னர் அவதூறு செய்வதாக தனது எதிர் விமரிசனங்களை மாற்றிக் கொண்டார். ம.க.இ.க இரகசிய கட்சியென்றும், தீவிரவாதிகளென்றும், அமெரிக்க அடிவருடிகளென்றும் அவை நீண்டன. இறுதியில் இனவாதிகளின் பார்ப்பனத் தலைமை என்ற அவதூறையும் கடன் வாங்கிக் கொண்டார். இவ்வளவுக்கும் சி.பி.எம்மில்தான் தம்மை பார்ப்பனர்கள் என்ற அறிவித்துக் கொண்ட தலைவர்கள் இருக்கிறார்கள்.

ம.க.இ.கவின் அரசியல் சார்ந்த கட்சித் திட்டத்தை வாங்கி அவர்பாட்டுக்கு விமரிசனமென்று நிறைய எழுதினார். அந்த திட்டத்தை ஏதோ பயங்கரமாக கண்டுபிடித்தது போல பறைசாற்றிக் கொண்டார். சித்தாந்த விவாதத்தில் சோர்வுற்ற அவரது சிந்தனை இப்படி எளிதான விசமப் பிரச்சாரங்களில் நிலை கொண்டது.

முக்கியமாக இங்கே குறிப்பிட விரும்பியது பொதுவில் சி.பி.எம் கட்சியினர் அவர்களை விமரிசிக்காமல் மற்ற எதனையும் எவ்வளவு தீவிரமாக விமரிசித்தாலும் நட்பு கொள்ளவே விரும்புவார்கள். கம்யூனிசத்தையும், மார்க்சிய ஆசான்களையும் தீவிரமாக திட்டிக் கொண்டே சி.பி.எம்மை மட்டும் திட்டாமல் இருந்தால் கூட அவர்களுக்கு பிரச்சினை இல்லை. எமது தோழர்கள் தொடர்ந்து சி.பி.எம்மை தீவிரமாக அம்பலப்படுத்தியதுதான் அவருக்கும் பிரச்சினையாக இருந்தது.

வினவு ஆரம்பித்த போது ஆரம்பத்தில் சட்டக்கல்லூரி மாணவர் பிரச்சினை, டாக்டர் ருத்ரன் கட்டுரை போன்றவற்றுக்கு பாராட்டி பின்னூட்டமிட்ட செல்வபெருமாள், பின்னர் சி.பி.எம்மை விமரிசித்து புதிய ஜனநாயகம் இதழில் வந்த கட்டுரைகளை வெளியிட்ட போது ஆத்திரம் கொண்டார். அடுத்து வினவை வசைமாறி பொழிந்து கட்டுரைகளை வெளியிட ஆரம்பித்தார். கூடுதலாக வினவு பெருவாரியான வாசகர்களால் அங்கீகரிக்கப்பட்டது அவருக்கு துக்கத்தை கொடுத்திருக்கும்.

செல்வபெருமாளுடன் நடந்த இந்த விவாதத்தின் அனுபவம் என்ன? நடுத்தர வயது, கட்சியின் முழுநேர ஊழியர், பொருளாதார ரீதியாக கட்சியை சார்ந்திருப்பது, தனது இருப்புக்காக கட்சியை விட்டுக்கொடுக்காமல் இருப்பது முதலிய பிரச்சினைகளால் அவரை வென்றெடுப்பது என்பது நிச்சயம் சாத்தியமில்லை. ஆனால் ஒரு சி.பி.எம் தோழர் எமது விமரிசனங்களால் என்ன வகை அணுகுமுறையை கையாள்வார் என்பதை தோழர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.

காங்கிரசின் கூஜாவாக சென்ற ஆட்சியின் போது மாறிவிட்ட போலிக்கம்யூனிஸ்டுகள் தமிழகத்தில் போயஸ் தோட்டத்திற்கும், கோபாலபுரத்திற்கும் மாறி மாறி காவடி தூக்குவது என்ற சூழ்நிலையில் அந்தக் கட்சிகளில் இருக்கும் நேர்மையான அணிகளை புரட்சிகர கட்சிகள் வென்றெடுப்பது காலத்தின் கட்டாயாம். அந்த ஒன்றுக்காகவே நாங்கள் தொடர்ந்து சி.பி.எம்மின் சந்த்தர்ப்பவாதங்களை விமரிசிக்க விரும்புகிறோம். மேலும் நேர்மறையில் உண்மையான கம்யூனிஸ்டுகள் ஒரு சமகாலப் பிரச்சினையில் எத்தகைய நிலைபாட்டை எடுப்பார்கள் என்பதை விளக்குவதற்காகவும் போலிகளின் நிலைபாட்டை விமரிசிக்க வேண்டியிருக்கிறது.

சமரசங்களும், சரணடைதலும் வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்ட சூழ்நிலையில் சி.பி.எம் கட்சியின் சந்தர்ப்பவாதம் அதன் அணிகளை ஊழல்படுத்துவதற்கு கூடுதல் பங்காற்றுகிறது. எமது தொடர்ந்த போராட்டத்தால் பல அருமையான தோழர்கள் சி.பி.எம் கட்சியிலிருந்து எம்மோடு இணைந்திருக்கின்றனர். ஒரு வேளை செல்வபெருமாள் இருந்திருந்தால் அது நடந்திருக்குமா, தெரியவில்லை.

எனினும் ம.க.இ.கவைக் கண்டால் தூரவிலகு என்பதை கடைபிடிக்கும் கட்சியில் எமது தோழர்களோடு இத்தனைகாலம் அது தவறென்றாலும் தொடர்ந்து விவாதித்த தோழர் செல்வபெருமாள் மறைவு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அவரை விடுத்து பதிவுலகில் இருக்கும் மற்ற சி.பி.எம் ஆதரவாளர்கள் எம்முடன் விவாதிப்பதை விரும்புவதில்லை. அந்த இடம் வெற்றிடமாகத்தான் இருக்குமோ என்பதும் தெரியவில்லை.

தோழர் செல்வபெருமாளை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
vote-012

தொடர்புடைய பதிவுகள்

சனிக்கிழைமை கவிதைகள்

5

……………………………………………………………………………….

என்ன செய்யப்போகிறோம்?

vote-012விரிந்து கிடந்தது வானம்
வீசியது இளங் குளிர்காற்று
உதயனின் வெக்கை தணிக்க
வெண்குடை பிடித்தன மேகங்கள்
கூடிக் களித்து கலந்து கறைந்தன
கார்கொண்ட மேகத்திரள்கள்
பொழிந்த எள்ளு கொள்ளு… பேத்திகளை
மடியில் கிடத்தித் திளைத்தனள்
பூமித்தாய்.
அப்பா, என்னே வாசம் இதுவென்றாள்
என் மகள்
மகளின் ரசனை கண்டு மகிழ்ந்தேன்.. ஆனால்,
கேட்பாரற்றுக் கிடந்த கறந்த பசு
தன் வயிற்றெரிச்சலை
ஒரு வாரத்தில் வெளிப்படுத்தியபோது
அந்த நாற்றத்தை நுகர மரத்த என் மூக்கைப்
பெரிதுபடுத்தாத நான்
மகளொடு சேர்ந்து மண்மணத்தை
நுகர்ந்து மகிழ முடியாத மூக்கை
அறுத்தெரிந்தால் என்னவென்று
ஒருகணம் எண்ணினேன்..
வாழ்க ஐ.டி.சி

விரிந்து கிடந்தது வானம்
பரந்து கிடந்தது பூமி
வீசியது இளங் குளிர்காற்று
விரித்த பெரும் பச்சைக் கம்பளத்தில்
விருந்துண்டன ஆநிரைக் கூட்டம்.

அதில் அப்போதுதான் பிறந்திருந்த
பச்சிளங் கன்றொன்று
துள்ளிக் குதித்தாடிய அழகில்
கணம் எனை மறந்தேன்.
பட்டாம் பூச்சி என் முதத்தை
மொய்த்துப் பறந்தது
அறுகிவிட்ட சிட்டுகள் இரண்டு
சீழ்க்கையிட்டுப் பறந்தன
வானில் அம்பெனப் பறந்து வந்த
கொக்குக் கூட்டம்
ஆநிரையோடு பகிர்ந்துண்ண அமர்ந்தது
துள்ளிக் குதித்தது பச்சிளங்கன்று
என்னே சுதந்திர வாழ்க்கை இதுவென
இயற்கையில் கறைந்தேன்.

உலுக்கியது என்னை ஓங்கியதொரு குரல்
சனியன் கயித்த அறுத்துகிட்டு
பயித்த மேயப் போவுது
என்ற வசவு தொடர்ந்தது.
நடுகல்லில் பூட்டிய நீண்ட கயிறு தளர
விளை நிலத்தை நெருங்கிவிட்ட பசு
அடிபட்ட வேதனையில் அரற்றியது
நிலத்தில் விலக்கி நட்ட கருங்கற்கள்
விளையவில்லையே …
போட்டிக்கு நாணலும், தட்டையும்,
தருப்பைப் புல்லுமல்லவா மண்டுகிறது
தின்ன என் சுணை நாக்கே அறுபடுதே
பச்சையெல்லாம் பச்சையல்லடா முண்டமே
நிலமெங்கே, வரப்பெங்கே,
மேச்சத் தரைதான் எங்கே ..
உனக்கும் சோறில்லை
எனக்கும் உணவில்லை.. என
ஓ..வென்றழுதது.
குற்ற உணர்ச்சி என் நெஞ்சைப் பிளந்தது
துள்ளிய என் மனம் துவண்டு படுத்தது

மாட்டுக்கு மூக்கணாங்கயிறு
நாய்க்கு சங்கிலி குதிரைக்குக் கடிவாளம்
குருவிக்குக் கூண்டு
இல்லை இல்லை
இவற்றுக்குச் சுதந்திரம் இல்லை
இயற்கையில் பிறந்து இயற்கையில் வளர்ந்து
செயற்கையால் இயற்கையை
ஆள்பவனாய்ப் பரிணமித்த
மனிதன்தான் சுதந்திரமானவனோ..
எனத் தொடர்ந்த என் எண்ண ஓட்டத்தை
மறித்தது ஒரு மனக்குரல்.
கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்
என்றது அந்த செயற்கையின் சூத்திரம்.
இல்லையா..?!

மனதில் விசாரம் குடிகொண்ட வேளையில்
என்காதில் மோகனமாய்த் தொடங்கிய இசை
மூர்க்கமாய்த் தொடர்ந்தபோது
முத்தாய்ப்பாய்ச் சொன்ன இரு சொற்கள்
என் செவிப்பறை கிழித்தன ..
துமீ வித்யா  துமீ தர்மா.
புரிந்தது.. எல்லாம் புரிந்தது.

குதிரைக்குக் கடிவாளம் குதிரை பூட்டுவதில்லையே
மனிதனே கூட
துள்ளித் திரியும் கன்றுக்கு
மூக்கணாங்கயிறு பூட்டுவதில்லையே
ஆனால்.. குழவிஒன்று கல்லில்இறங்குமுன்பே
சுடுகோலால் குறியிட்டுக் கருத்திருக்கும்
தொப்புள் கொடியாய் கழுத்தை சுற்றிய
சுறுக்குக் கயிறு கண்ணில் தோன்றி மறைந்தது
பெற்றெடுத்து .. கிருஷ்ணன் என்றும்
கண்ணன் என்றும் கருப்பன் என்றும் பெயர்சூட்டுமுன்பே
அதற்குப் பெயர் சூட்டப் பட்டுவிட்டது
இன்ன சாதி இன்ன மதமென்று.

இதை மீறிய ஆய்ந்தறிதல் இல்லை
இதை மீறிய வாழ்நெறியும் இல்லை
இட்டபடி நட என
காலித் தராசை கையில் பிடித்து
சமன் காட்டித் திரிகிறது இந்திய நீதி

அடுத்தவன் மூக்கைத் தொடாத வரைதான்
உனக்குச் சுதந்திரம் என
மெத்தப் படித்தவர்கள் விளக்கம் சொல்கிறார்கள்.
இந்த மூக்கு இந்தியாவின் குறுக்கு நெடுக்காய்
நீண்டுகிடக்கிறதே .. கட்டிய கையைப் பிரிக்கமுடியாமல்
இதை என்ன செய்ய?

–          அனாமதேயன்.

குறிப்பு: எனக்குக் கவிதை எழுதத் தெரியவில்லை.. ஆனால் இதுபற்றி எழுதவேண்டும்போல் இருந்தது.  எனவே என் சமீபத்திய மனப் பதிவுகளைத் திரட்டி, என்னை வதைத்த வந்தே மாதரம்மற்றும் லவ் ஜிகாத்விசயத்தைக் கருவாக்கி ஒரு பெரும் சித்திரம் வரைந்துவிட்டேன்.  அதில் அவுட் ஆஃப் போக்கசில் வைக்க வேண்டியதையும், ஃபோக்கஸ் பண்ணவேண்டியதையும் படிப்பவரின் பார்வைக்கு விடுகிறேன்.

——————————–

பசியோடிருப்பவனின் அழைப்பு

மலைகளைப் பகிர்ந்துண்ண
அழைத்தாய்
ஆயிரமாயிரம் வெள்ளிகளைச் சூடிய வானம்
கடல் அலைகளில் தத்தளித்துக் கொண்டிருந்தது
மீண்டும் மீண்டும் அழைத்தாய்
காற்று மர இலைகளில் ஒளித்துக்கிடந்தது
இரவு பனித்துளியாய்
புல்நுனிகளில் தேங்கி வழிந்தது
முதலில்
மலைகளை உண்ணும் நுட்பங்களைப் போதித்தாய்
பிறகு
மலைகளின் சுவை பற்றிய பாடல்களை
இசைத்துக் காட்டினாய்
மழைப் பொழிவுகளுக்குள்
மலைகள் வளரும் அதிசயங்களை
வசியச் சொற்களில் சொன்னாய்
மலைகள் தீர்ந்து போகும் ஒருநாள் வருமெனில்
அப்போது
மலைகளைத் தின்று மலைகளாகிய நாம்
நம்மையே பகிர்ந்துண்டு
பசியாறலாம் என்றாய்

-சித்தாந்தன்

——————————————————–

பெருநிலம் : உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள்

(இன்னுமின்னும் அறியாத சேதிகள்
அந்தப் பெருநிலத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன)

நேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து
எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
சகோதரியே! உன்னை உரித்து
சிதைத்தவர்களின் கைளிலிருந்து
எங்கள் காலம் நீண்டுகொண்டிருக்கிறது.

கண்டெடுக்கப்படாதவர்களின் சடலங்களுக்கு
என்ன நேர்ந்திருக்குமென்று
தலைகளை இடித்தழும் தாய்மார்களுக்கு
இரத்தத்தால் முடிவுறுத்தப்பட்ட சகோதரிகளுக்கு
உன்னை சிதைத்திருக்கிற புகைப்படம்
எண்ணிக்கையற்ற முனைகளில்
நடந்த கதைகளை சொல்லிக்கொண்டேயிருக்கிறது.

உன்னை சிதைந்து எங்கு எறிந்திருக்கிறார்கள் என்பதையும்
யார் உன்னை தின்றார்கள் என்பதையும்
உனது தொலைக்காட்சியில்
நீயே செய்தியாக வாசித்துக்கொண்டிருக்கிறாய்.
நீ நடித்த பாடல்களும் படங்களும்
ஒளிபரப்பபட்டுக்கொண்டிருக்கிற அலைவரிசையில்
உனது பாதிப்படம் ஒரு மூலையில்
பார்க்கப் பொறுக்க முடியாத கோலமாக தொங்குகிறது.

அதே படைகளினால் கவலிடப்பட்ட
நிலத்தில் எங்கோ ஒரு மூலையில் உனது
தாயைப்போலவே ஒருத்தி
தன் மகளைத் தேடி துடித்துக்கொண்டிருக்கிறாள்.
ஆண்குறிகளை வளர்த்து
இரத்தத்தை படையலிட்டிருக்கிற
படைகளின் யுத்த முனைகளில்
உன் சீருடைகளை
கழற்றி எறிந்திருக்கிறார்கள்.
உன் வீரத்தை கரைத்துவிட்டார்கள்
தொலைந்துபோன உன் துப்பாக்கி படைகளின் கையிலிருக்கிறது

முன்னர் வெற்றியடைந்த களமொன்றிலேயே
நீ சரணடைந்திருக்கிறாய்.
துப்பாக்கிகளும் ஆண்குறிகளும்
ஒரே மாதிரியாய்
வாயைப் பிளந்து உன்னை தின்று போட்டிருக்கிறது.

முற்றத்தில் தெருவில் வயல்களில்
கண்ணிவெடிகளுக்கு கீழாகவும் மண் பிரளும் இடங்களிலெல்லாம்
சீருடைகள் முதலான உடைகளும்
இரத்தமும் சைனைட் குப்பிகளும் புகைப்படங்களும்
மற்றும் சில குறிப்புகளும் கிளம்பி வந்துகொண்டிருக்கின்றன.
என்னிடம் வாங்கிச் சென்ற
கவிதையை எங்கு போட்டிருப்பாய்?
__________________________________
(இசைப்பிரியாவுக்கு) 25.12.2009

–          தீபச்செல்வன்

————————————-

வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி?

அந்தக் கடதாசியை எப்படிப் பயன்படுத்தினாலும்
எதுவுமே மாறாது என்று
அவர்கள் எல்லாருக்கும் தெரியும்.
என்றாலும்
அந்தக் கடதாசி பெறுமதி மிக்கது என்பதால்
அதை வீணாக்கக் கூடாது என்று
அவர்கள் சொல்லுகிறார்கள்.
அதை எப்படிப் பயன்படுத்துவது என்று
சொல்ல மாட்டார்கள்.
பயன்படுத்தத் தெரியவில்லை என்று
உங்கள் பாட்டில் வீட்டில் இருந்து விடாதீர்கள் என்றும்
எப்படியாவது சரியாகப் பயன்படுத்தும்படியுமே
அவர்கள் சொல்லுகிறார்கள்.
அதை விடவும்,
எவரேன் பயன்படுத்த மாட்டார;
என்று அறியும் எவரும்
அதை எடுத்துப் பயன்படுத்தவும் இயலும் என்பதால்
அந்தக் கடதாசியை எப்படிப் பயன்படுத்துவது என்று
ஆராயத் தொடங்கினேன்.

சில கேள்விகளுக்குச்
சரியான ஒரு மறுமொழி மட்டுமே உண்டு.
சில கேள்விகளுக்குச் சரியான மறுமொழி ஒன்றுமேயில்லை.
சில கேள்விகட்குச் சரியான மறுமொழிகள் பல உள்ளன.
வாக்குச் சீட்டைச் சரிவரப் பயன்படுத்துவது
எப்படி என்ற கேள்விக்குப் பல மறுமொழிகள் உள்ளன.
அந்தக் கடதாசியில் உள்ள
சதுரமான சிறிய பெட்டிகளில் ஒன்றிற்குள்
பெருக்கல் அடையாளம் இடுவதோ
இலக்கம் எதையாவது எழுதுவதோதான்
சரியான மறுமொழி என்று சொல்கிற பலர்
எந்தப் பெட்டி என்று சொல்லுவதில்லை.
சொல்லுகிறவர்கள் ஆளுக்காள்
வேறு விதமாகச் சொல்லுகிறார்கள்.
எனவே
அவற்றை விடச் சரியான
வேறு மறுமொழிகளும் உள்ளன என்று
உறுதியாக நம்புகிறேன்.
வரிசையில் நின்று
உங்கள் கைவிரலை அசிங்கப்படுத்தி வாங்குகிற
அந்த வாக்குக் கடதாசியை வீணாக்கலாமோ?
எனவே தான்
வேறு நல்ல பயன்பாடுகளைச் சொல்லுகிறேன்.
தெரிவு உங்களுடையது.

தாள் சதுரமாக இருந்தால்
அதை மடித்துக்
காகிதக் கப்பல், பறவை, தவளை, கடகம், குதிரை
என்று பலவுஞ் செய்யலாம்.
சற்று நீள் சதுரமாக இருந்தால்
ராக்கெட் செய்து வீசி விளையாடலாம்.
இன்னும் நீளம் என்றால்
நீளத் தோணி ஒன்று செய்து தண்ணீரில் விடலாம்.
தாளைக் கசக்கிப் பந்தாக்கி வீசி விளையாடலாம்.
கெட்டியான பற்களும்
வாயில் உமிழ்நீரும் இருந்தால்
வாயிற் போட்டுச் சப்பி உருண்டையாக்கி
ஒரு தேர்தல் சுவரொட்டி மீது எறியலாம்.
தெருவிற் கிடக்கும்
கோழி மலத்தையோ நாய் மலத்தையோ எடுத்து
ஓரமாகப் போடப் பாவிக்கலாம்.
ஆனால் தேர்தல் அதிகாரிகள்
அதற்கெல்லாம் அனுமதிக்க மாட்டார்கள்.
வீட்டுக்குக் கொண்டு செல்லவும் முடியாது.
கிழித்துக் குப்பைத் தொட்டியில் இடலாம்.
கிழிக்க விடமாட்டார்களென்றால் கிழிக்காமலே இடலாம்.
ஆனாற் குப்பைத் தொட்டியெதுவும் அயலில் இராது.
கோவில் உண்டியல் மாதிரி ஒரு பெட்டி.
அதிலுள்ள நீண்ட துவாரத்தின் வழியே தான் போடலாம்.
நேரமிருந்தால்
எல்லாச் சதுரங்களிலும் பெருக்கல் அடையாளமிடலாம்.
அல்லது தாளுக்குக் குறுக்காகப்
பெருக்கல், வகுத்தல், கூட்டல், கழித்தல்
அடையாளம் ஒன்றை இடலாம்.
ஒரு அரிவாளும் சம்மட்டியும் வரையலாம்.
நீளமாக ஒரு கவிதை எழுதலாம்.
வாக்குகளை எண்ணுவோர் தேநீர் பருகும்போது
படிக்கும் வாய்ப்புண்டு.

பட்டியலில் உள்ள எதுவுமே
உங்கள் விருப்பிற்குரியதல்ல என்று சொல்ல
அக் கடதாசியைப் பயன்படுத்த
எத்தனையோ வழிகள் உள்ளன.
வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்தும்
தெரிவு நிச்சயமாக உங்களுடையது.

– சி. சிவசேகரம் –

—————————————

சான்றோர் கூற்று

பெரிய நீதிவான் சொன்னார்
பிறகு பெரிய பாதிரியார் சொன்னார்,
பிறகு பேராசிரியரும் அல்லவா சொல்லுகிறார்,
“பழைய பிழையைச் செய்யாதீர்
புறக்கணித்து உங்கள் வாக்குக்களை வீணாக்காதீர்”
என்று
பழைய பிழை எது?
வஞ்சகர் என்று தெரிந்தும் வாக்களித்ததா?
தெரிந்தால் எவருக்கும் அளிக்காமல் விட்டதா?
குறுக்குக் கேள்வி கேட்காதீர்
பேராசிரியரும் பெரிய பாதிரியும் நீதவானும்
தெரியாமலா சொல்கிறார்கள். தகைமைசால்
பேரறிஞர்மாரெல்லாம் ‘பேசாப் பொருளைப்
பேசவுந் துணிவதற்கு’
நீங்கள் யார்?
படிப்புண்டா? பட்டமுண்டா?
பதவியெதுந் தானுண்டா? – இல்லை
பத்திரிகை எசமானர் ஆசிகளேன் உமக்குண்டா?
போடென்று சொல்லுகிற பெரியோர்கள் எல்லோரும்
யாருக்குப் போடென்றோ
எதை நம்பிப் போடென்றோ
ஏன் சொல்ல மாட்டார்கள்?

இருட்டு அறைகளுக்குள் இரகசியமாய் முடிவெடுத்து
அஞ்சுங் கெட்டு அறிவுந்தான் கெட்டொழிந்தோர்
ஆலோசனையெல்லாம் அம்பலத்தில் சொல்லி வைத்து
ஊர் சிரிக்கத் தங்களது
பேர் கெட்டுப் போவதற்குப்
பெரியோர் விரும்புவரோ?
பெரிய நீதவான் சொன்னார்,
பெரிய பாதிரியார் சொன்னார்,
பேராசிரியருஞ் சொன்னார். போதாதா?
எனவே,
குறுக்குக் கேள்விகளை உரக்கவே கேட்காதீர்
பதில் கிடைக்கப் போவதில்லை
உரிய பதிலை நீங்களே உணருங்கள்.

– பரதேசிப் பாவாணர்

———————————–

பிரிந்த தோழிக்கு…

கையசைத்து கணவனை
வழியனுப்பிய பிறகு
கதவுகள் தாழிட்டால்,
நீயும் நானும்
வண்ணத்துப்பூச்சிகளாய்
விளையாண்ட பொழுதுகள்
மனதுக்குள் வந்தமரும்.

குடைகள் நம்மிடம்
இருந்த போதும்
நனைந்து கொண்டே
வீட்டுக்கு சென்ற நாட்கள்,
ஜன்னல் வழியாக
மழை பார்க்கும் போதெல்லாம்,
கிழிந்த குடைக்குள்
இறங்கும் நீர்த்துளியாய்
நினைவுகளிள் வழிந்திடும்.

உன் பிறந்த நாளொன்றுக்கு
அழகிய தோடுகள் இரண்டு
அணிந்து வந்தாய்,
அதுபற்றி நான் கேட்க
அப்பா பட்ட கஷ்டம் பற்றி
அழுதே தீர்த்து விட்டாய்,
நிறைய நகையணிந்து,
மணக்கோலத்தில் ஒருநாள்
நான் நின்ற போது
நீ அழுத நிமிடங்கள்தான்
நினைவில் வந்தது.

நம் கனவு இல்லம் பற்றி
விளையாட்டாய்
நீ வரைந்த கோடுகள்தான்
நிஜத்தில் இப்பொழுது
என் வீடாய் நீண்டுகிடக்கிறது.
ஆனால்,
சமையலறை ஒன்றை தவிர
மற்ற அறைகளில்
அதிகம் எனக்கு வேலையில்லை.

உன் கண்ணில் ஒருநாள்
தூசு விழுந்த போது
உதடு குவித்து
ஊதி எடுத்த நிமிடங்கள்,
வீடு  முழுவதும்
படிந்திருக்கும் தூசியை – நான்
கூட்டிப் பெருக்கும் போது,
உடன் வந்து ஒரு
உண்மை சொல்லும்,
இவை எளிதில் அகற்ற கூடிய
தூசியல்ல என்று.

பிரிந்த
தோழியே..
பிறகு,
நீயொரு நாள்
வயதுக்கு வந்துவிட்டாய்
அதுபோலவே
நானும் ஒருநாள்.

அத்தோடு
நம் பள்ளிப் பயணங்களும்
பாதியில் நின்றன…
கழட்டி விடப்பட்ட
இரயில் பெட்டிகளாய்.

எல்லாம் இருக்கட்டும்,
நாம் இருவரும்
கைகோர்த்து நெடுந்தூரம்
நடந்த நாட்கள்
எவ்வளவு சுகமானவை
சுதந்திரம் கொண்டவை.

இப்பொழுது – நீ
எங்கே
எப்படி இருக்கிறாய் என்று
எனக்கு தெரியாது.
ஆனால்.
நானும் இருக்கிறேன்
என் குழந்தைகளுக்கு
நல்ல தாயாக…
என் மாமனார் – மாமியாருக்கு
நல்ல மருமகளாக…
என் கொளுந்தனாருக்கு
நல்ல அண்ணியாக…
என் கணவருக்கு
நல்ல மனைவியாக…
மொத்தத்தில்
என் சுயம் தொலைத்த
வாழ்க்கையொன்றில் ஒட்டியபடி.

என்ன விழிக்கிறாய்,
அதற்கான நிகழ்வுகள்
என்னிடம் நிறைய உண்டு.

இதோ
இன்று கூட,
தெலுங்கானா பிரச்சனை முதல்
ருச்சிகா வழக்கு வரை
சுடும் வார்த்தைகளால் விளக்கிய,
முகம் தெரியா
சகோதரனொருவன்,
“சமூக மாற்றத்திற்கானது
இந்த இதழ்
வாய்ப்பு இருந்தால்
வாங்கி படியுங்கள்” என்று
என்னை பார்க்க,
மௌனமாய் நின்ற நான்…
‘வீட்டில் ஆள் இல்லையென்றே’
அனுப்பி வைத்தேன்.

–          முகிலன்

குறிப்பு : சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் “புதிய ஜனநாயகம்” இதழ் விற்க சென்ற போது, ஒரு வீதியில் குறைந்தபட்சம் நான்கைந்து பெண்களிடமாவது  இயல்பாய் இப்பதில் வரும். அப்பதில்களின் விளைவே இக்கவிதை.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

8MM (1999) திரை விமர்சனம் – பாலியல் வக்கிரம்: அமெரிக்கா முதல் காஞ்சிபுரம் வரை !!

வேறு யாருக்கும் தெரியாமல், உங்கள் கைபேசியில் காஞ்சிபுரம் தேவநாதனின் வீடியோ கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அனுப்பியவன் மீது புகார் கொடுப்பீர்களா, அந்தக் கணமே அதனை அழித்து விடுவீர்களா, அல்லது ஒரே ஒரு முறை பார்த்தால்தான் என்ன என்று தடுமாறுவீர்களா? அறம், ஒழுக்கம், விழுமியங்கள் என்ற காரணங்களின் அடிப்படையில் சிந்தித்துப் பதிலளிக்கக் கூடிய நிலையில் நீங்கள் இருந்தால், பதிலளிப்பதில் சிரமமிருக்காது.

எனினும், இன்றைய சூழலில் பலரால் இதற்கு நிச்சயமான ஒரு பதிலைச் சொல்லிவிட இயலாது. கைபேசிகள் எனப்படுபவையே கையடக்கமான நீலப்படத் திரையரங்குகளாக மாறிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், மேற்படி கேள்வியே கூட கொஞ்சம் அபத்தமானதாகவும், காலத்தால் பின்தங்கியதாகவும் சிலருக்குத் தோன்றலாம்.

ஷகீலாக்களின் காலம் முடிந்து கொண்டிருக்கிறது. நாம் தேவநாதன்களின் காலத்தில் நுழைந்து விட்டோம். தொலைக்காட்சிகளில் கூட சீரியல்களின் நடிப்பு திகட்டிப்போய், அவற்றின் இடத்தை ரியாலிடி ஷோக்கள் மெல்ல ஆக்கிரமித்து வரும் காலம் இது. ஒரு மனிதன் அடுத்தவன் வீட்டுக்கதவின் சாவித்துவாரத்தில் கண் வைத்துப் பார்ப்பதை அநாகரிகமாகக் கருதும் பொது ஒழுக்க நெறியே போய்விட்டதென்று கூறிவிட முடியாது. அதேநேரத்தில் சாவித்துவாரத்தில் காமெராவை வைத்துப் படம் பிடித்து, அதை மொத்த சமூகமும் உட்கார்ந்து பார்க்கும் புதிய ரசனை வளர்ந்து வருவதையும் மறுக்க முடியாது. இந்த இரசனையைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தது, இந்தக் கலைக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர்தான்- ரியாலிட்டி ஷோ.

காதல், படுக்கையறைக் காட்சிகள், அடிதடி, கொலை ஆகியவற்றை நடிப்பில் பார்த்துப் பார்த்துத் திகட்டிப் போன ஒரு மனிதன்,  ஒரு பாலியல் உறவை, வல்லுறவை, சித்திரவதையை, கொலையை உண்மையாகவே நிகழ்த்தி, அதனை ரியாலிட்டி ஷோவாகப் படம் பிடித்துப் பார்க்க முடியாதா? என்று ஏங்குகிறான். இப்படிக்கூட ஒரு மனிதன் சிந்திக்க முடியுமா என்று நீங்கள் நினைத்தால், முடியும் என்று கூறும் திரைப்படம் ஒன்றை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. கதையின் களம் – வேறெந்த நாடு, அமெரிக்காதான்.

8 எம்.எம்: ஆங்கிலத் திரைப்பட விமரிசனம்!

1995இல் வெளிவந்த எட்டு மில்லி மீட்டர் திரைப்படச்சுருள் என்பதைக் குறிக்கும் 8 எம்.எம் ஹாலிவுட் திரைப்படத்தை ஜோயல் ஷூமேக்கர் இயக்க நிக்கோலஸ் கேஜ் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.

கதைச் சுருக்கம்: பணக்காரச் சீமாட்டியான திருமதி கிறிஸ்டியானியின் கணவர் முதுமை காரணமாக இறக்கிறார். மரணத்துக்குப் பின் அவரது இரகசிய லாக்கரை உடைத்துப் பார்த்த போது வழமையான ஒரு கோடீசுவரனுக்கே உரிய பத்திரங்கள், விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றோடு, அந்த லாக்கரில் ஒரு திரைப்படச்சுருளும் இருக்கிறது. வயது முதிர்ந்த அந்தச் சீமாட்டி, படச்சுருளைத் திரையிட்டுப் பார்க்கிறாள். அந்தப் படத்தில் உள்ளாடைகளுடன் இருக்கும் ஒரு பதின்வயது இளம் பெண்ணை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி கொடூரமான முறையில் கொலை செய்கிறான் ஒரு முகமூடி அணிந்த மனிதன். இந்தப் படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைகிறாள் அந்தச் சீமாட்டி.

அந்தப்படத்தில் வரும் கொலை உண்மையாய் இருந்துவிடக்கூடாதே என்று அவள் பதறுகிறாள். அந்தப் பெண் நலமாக இருக்கிறாளா என்பதை அறிந்து கொள்ளவும் விரும்புகிறாள். இப்படி ஒரு படத்தை தனது கணவன் எதற்காக இரகசிய லாக்கரில் வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வியும் அவளை நிம்மதி இழக்கச் செய்கிறது. இது குறித்து புலனாய்வு செய்து கண்டுபிடிக்க முடிவு செய்கிறாள். அதற்காக டாம் வெல்லஸ் எனும் தனியார் துப்பறிவாளன் நியமிக்கப்படுகிறான்.

ஸ்னஃப் என்று அழைக்கப்படும் பாலியல் கொடூரக் கொலைகளை சித்தரிக்கும் இத்தகைய படங்களெல்லாம் வெறும் நடிப்பு என்றும், இது ஒரு நகர்ப்புறத்து மாயை என்றும் சொல்கிறான் துப்பறிவாளன் வெல்லஸ். சீமாட்டி திருப்தியடையவில்லை. எனவே, உண்மையைக் கண்டுபிடிப்பதாக வாக்கு கொடுக்கிறான்.

முதலில் படத்தில் இருக்கும் பெண் யாரென்பதை காணாமல் போனவர்களின் பட்டியலை வைத்து கண்டுபிடிக்கிறான். அவளது வீட்டிற்கு சென்று அந்தப் பெண்ணின் தாயார் -ஜானட்- என்பளைச் சந்திக்கிறான். தனது மகள் மேரி ஆனி மாத்தீவ்ஸ், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் (கடிதம் எழுதிவைத்துவிட்டு) வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகக் கூறுகிறாள் தாய். அந்தக் கடிதத்தில் தான் ஒரு ஹாலிவுட் நட்சத்திரமாக மாறப்போவதாகவும், அதற்காகத் தனது காதலுடனுன் சேர்ந்து முயற்சி செய்யப்போவதாகவும் குறிப்பிட்டிருக்கிறாள் மேரி ஆனி. வெல்லஸ் அந்தக் காதலனை கண்டுபிடிக்கிறான். அவர்கள் காதல் அப்போதே உதிர்ந்து போய்விட்டதையும், ஆனி மட்டும் தனியாக ஹாலிவுட் சென்றதையும் அறிகிறான்.

கனவுகளைச் சுமந்தவாறு வாழ்க்கையைத் தொலைப்பதற்கு ஆண்டுதோறும்  கோடம்பாக்கத்திற்கு வருபவர்களே பல்லாயிரம் பேர். ஹாலிவுட் என்பது உலகத்துக்கே கோடம்பாக்கம். எனில், அதை நோக்கிப் படையெடுப்பவர்களின் எண்ணிக்கையை மட்டுமல்ல அதன் பரிமாணத்தையும் புரிந்து கொள்ளலாம். அந்த மாய உலகத்தில் ஆனியைத் தேடுவது எங்கனம்? கன்யாஸ்தீரிகள் இல்லமொன்றில் ஆனி ஒரு மாதம் தங்கியிருந்ததைக் கண்டுபிடித்து, அங்கே இருந்த அவளது உடமைகளையும் பெற்றுக்கொள்கிறான். அவளுடைய டைரியில் இருந்த தொலைபேசி எண்களை வைத்து அவளது தடத்தை பின்தொடர்கிறான்.

அந்தப்படம் 92ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது என்பதைக் கண்டு பிடிக்கும் வெல்லஸ், அதே ஆண்டில் இறந்து போன சீமாட்டியின் கணவனது வங்கிக் கணக்கிலிருந்து ஒரு மில்லியன் டாலர் பணம் எடுக்கப்பட்டிருப்பதையும் சீமாட்டியின் உதவியுடன் கண்டுபிடிக்கிறான். இதிலிருந்து அந்தப்படம் சீமாட்டியின் கணவனுக்காகத்தான் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகிறது.

ஹாலிவுட்டில் போர்னோ கடை ஒன்றில் (ஆபாக புத்தகங்கள், சி.டிக்கள் விற்கும் கடை) வேலை செய்யும் மாக்ஸ் கலிபோர்னியா என்ற இளைஞனைப் பிடித்து, அவன் உதவியுடன் ஹாலிவுட்டிற்குள் இயங்கும் அந்த இரகசிய உலகத்தில் நுழைகின்றான் வெல்லஸ். ஆபாசப்படங்கள், புத்தகங்கள், பணத்திற்கேற்ப நம்பகத்தன்மை கூடும் கொடூர ஆபாசப்படங்கள், கடைகள், தரகர்கள், விலைமாதர்கள் என அந்த இருண்ட உலகம் விரிகிறது. இனி நீ பார்க்கவிருக்கும் காட்சிகளை உன் கண்களிலிருந்து இனி அகற்றவே முடியாது என்று கூறி வக்கிரப் பாலுறவின் உலகத்துக்குள் வெல்லஸை அழைத்துப் போகிறான் மாக்ஸ். சித்திரவதை செக்ஸ், சாட்டையடி செக்ஸ், குழந்தைகள் செக்ஸ் என்று எண்ணிப்பார்க்கவே முடியாத வக்கிரங்களின் உலகம் விரிகிறது. இயல்பான மனநிலையில் நுழையும் எவரையும் விரைவிலேயே வெறி கொண்டவர்களாக மாற்றும் இந்த உலகில்தான் ஆனி சிக்கியிருக்கிறாள் என்பது தெளிவாகிவிட்டது.

செலிபிரிட்டி பிலிம்ஸ் எனும் உப்புமா கம்பெனியின் முதலாளி எடிபோலி என்பவனே ஆனிக்கு நட்சத்திர ஆசை காட்டி ஏமாற்றியிருப்பதை பல முயற்சிகளுக்குப் பிறகு வெல்லஸ் தெரிந்து கொள்கிறான். அவனை வைத்து கொடூர ஆபாசப்படங்களை இயக்கும் வெல்வெட், அந்தப்படங்களில் முகமூடி அணிந்து கொண்டு நடிக்கும் மெஷின் ஆகியோரையும் வெல்லஸ் புலனாய்வின் மூலம் அறிகிறான். உண்மையான பாலியல் வல்லுறவையும் உண்மையான கொலையையும் சித்தரிக்கும் ஒரு ரியாலிட்டி படத்தைத் தயாரிப்பதற்கு இவர்களிடம்தான் சீமாட்டியின் கணவன் பணம் கொடுத்திருக்கிறான். இந்தக் கும்பல் ஆனியை ஏமாற்றி இந்தப் படத்தில் நடிக்க வைத்து, பின்னர் கொலை செய்திருக்கிறது என்பதை வெல்லஸ் கண்டுபிடிக்கிறான். இதற்கு ஆதாரபூர்வமாக நிறுவுவதற்கான முயற்சியில் இறங்குகிறான். இயக்குநர் வெல்வெட்டை தொடர்பு கொண்டு தனக்கு ஒரு பலான படம் ஒன்று எடுக்கவேண்டுமென கேட்கிறான்.

இதற்குள் வெல்லஸ் தங்களது கொலைப்படத்தை கண்டுபிடித்து விட்டான் என்பதை அந்த கயவர் கும்பல் புரிந்து கொள்கிறது. வெல்லஸை அழைத்து வந்த அந்த இளைஞனைச் சித்திரவதை செய்து, வெல்லஸிடம் இருக்கும் படச் சுருளையும் கைப்பற்றித் தீ வைத்து அழிக்கிறது. அந்த இளைஞனும் கொலை செய்யப்படுகிறான். கடுமையாக தாக்கப்பட்ட வெல்லஸ்,  அவர்களிடமிருந்து தப்பிக்கிறான். சீமாட்டியைத் தொடர்பு கொண்டு, அவளிடம் உண்மைகளை கூறி, அடுத்த நாளே நாம் போலீசிடம் போக வேண்டும் என்று சொல்கிறான்.

ஆனால் சீமாட்டியோ அடுத்த நாள் தற்கொலை செய்து கொள்கிறாள். தனது கணவனின் வக்கிர வெறிக்காக ஒரு இளம் பெண் கொலை செய்யப்பட்டிருப்பதை அவளால் தாங்க முடியவில்லை. ஒரு கவரில் வெல்லசுக்கான ஊதியம், இன்னொரு கவரில் கொல்லப்பட்ட பெண் மேரி ஆனியின் தாய்க்குச் சேர்ப்பதற்கான நிவாரணத்தொகை. “எங்களை மறப்பதற்கு முயற்சி செய்” என்று மட்டும் அந்தக் கவரின் மேல் எழுதியிருக்கிறாள் அந்தச் சீமாட்டி.

கைவசம் இருந்த ஆதாரமான படச்சுருள் எரிக்கப்பட்டு, அதை பார்த்த ஒரே சாட்சியான சீமாட்டியும் இறந்திருக்கும் நிலையில் வெல்லஸ் செய்வதறியாது திகைக்கிறான். அதே சமயம் இத்தகைய படுபாதகச்செயலை சாதாரண சினிமா படம் போல எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் எடுத்திருக்கும் அந்த மூவர் கும்பலை விட்டுவிடவும் அவனுக்கு மனம் ஒப்பவில்லை. அவர்களை கொல்வதென முடிவு செய்து அதற்கு ஆனியின் தாய் ஜேனட்டிடம் ஒப்புதல் பெறுகிறான்.  அந்தப் படத்தின், அதாவது அந்தக் கொலையின், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகன் ஆகிய மூவரையும் தனித்தனியே கொல்கிறான் வெல்லஸ்.

ந்த இரகசிய உலகத்துக்குள் காலடி வைத்த கணத்திலிருந்து ஒரே ஒரு கேள்விதான் வெல்லஸை துன்புறுத்துகிறது. இவ்வளவு கொடூரமாக, வக்கிரமாக, இரக்கமற்றவர்களாக சில மனிதர்கள் இருக்க முடியுமா- என்பதுதான் அந்தக் கேள்வி. நம்பமுடியாததாகவும் அதே நேரத்தில் மறுக்க முடியாததாகவும் இருக்கும் இந்த எதார்த்தம், உண்மை என்று ஒப்புக் கொள்ள முடியாமலும், பொய் என்று நிராகரிக்க முடியாமலும், முன்னும் பின்னும் அலைக்கழித்து, இரம்பம் போல இரசிகனையும் அறுக்கிறது.

படத்தின் இறுதியில், மேரி ஆனியை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி, கொல்லும் அந்தத் திரைப்படத்தின் நடிகனான மெஷினை, வெல்லெஸ் கொலை செய்யும் காட்சி இப்படி அமைந்திருக்கிறது.  கொலை செய்வதற்கு முன், அவனது முகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற வெறியில், அவனுடைய மூகமூடியைப் பிய்த்தெறிகிறான் வெல்லெஸ்.

ஒரு திரைப்படத்துக்காக யாரோ ஒரு சின்னஞ்சிறு பெண்ணுக்கு போதை ஊசி போட்டு, அவளைத் துடிக்கத் துடிக்க வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி, மெல்ல, நிதானமாகக் கொலை செய்த அந்த மெஷினிடம் “ஏன் இதைச் செய்தாய்?” என்று கேட்கிறான் வெல்லெஸ். “ஒரு காரணமும் இல்லை. எனக்குப் பிடித்திருக்கிறது, செய்தேன்” என்று பதிலளிக்கிறான் மெஷின்.

முகமூடி இல்லாத மெஷினை வெல்லெஸ்  நிதானமாக வெறித்துப் பார்க்கிறான். வழுக்கை விழுந்த, கண்ணாடி அணிந்த ஒரு சராசரி மனிதன். அவன் உண்மைப் பெயர் ஜார்ஜ். வெல்லெஸுடைய பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட மெஷின், அவனிடம் ஏளனமாகக் கேட்கிறான், எப்படி எதிர்பார்த்தாய்? ஒரு மிருகம் போல இருப்பேன் என்றா?

0000

ரு கிரிமினல் குற்றத்தைத் கண்டுபிடிக்கும் புலனாய்வாளனின் பின்னால்தான் இத்திரைக்கதையே செல்கிறது என்ற போதிலும், ஒரு துப்பறியும் படம் தோற்றுவிக்கும் திகில் உணர்ச்சியை இது நம்மிடம் தோற்றுவிக்கவில்லை. மாறாக இப்படம் சித்தரிக்கும் உலகமும் அதன் மனிதர்களும்தான் நம்மைத் திகிலில் உறைய வைக்கின்றனர்..

பாலியல் வல்லுறவு, கொலை, பிணத்தைப் புணர்தல், வயிற்றைக் கிழித்து கருவை சிதைத்தல்.. என வன்முறையின் காணச்சகியாத கோரங்களையெல்லாம் சமீப காலங்களில் நாம் கண்டிருக்கிறோம். போஸ்னியாவின் வக்கிரங்களுக்குக் காரணம் மதவெறி-நிறவெறி; இலங்கையில் இனவெறி; குஜராத்தில் மதவெறி. பல்லாயிரம் பேரைப் பலி கொண்ட இத்தகைய வன்முறைகளைக் காட்டிலும், மேரி ஆனியைச் சிறுகச் சிறுகக் கொலை செய்த அந்த வன்முறையைக் காட்டிலும், நம்முடைய இரத்ததைச் சில்லிட வைப்பது, ஏன் செய்தாய், என்ற கேள்விக்கு மெஷின் கூறும் பதில்: ஒரு காரணமும் இல்லை. எனக்குப் பிடித்திருக்கிறது. செய்தேன்.

அந்தப் பதில் திமிர்த்தனமாகக் கூறப்பட்ட பதில் அல்ல. யாரோ ஒரு அப்பாவிப் பெண்ணைப் படுகொலை செய்த தனது செயலை மனிதத்தன்மையற்ற செயலாக அவன் கருதவே இல்லை. எனவேதான்,  தன்னுடைய செயலுக்காக சக மனிதனுக்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியமோ, ஏதோ ஒரு நியாயம் கற்பிக்க வேண்டிய அவசியமோ இருப்பதாகக் கூட அவன் நினைக்கவில்லை. எனக்குப் பிடித்திருந்தது, செய்தேன். என்பதை அவன் வெகு இயல்பாகக் கூறுகிறான். அவனுடைய பதிலில் காணப்படும் இந்த இயல்புத் தன்மைதான் மனிதர்கள் என்ற முறையில் நம்மைக் குலைநடுங்கச் செய்கிறது.

செத்துப்போன அந்தக் கோடீசுவரன், இலட்சக்கணக்கில் செலவு செய்து இப்படி ஒரு கொடூரத்தைப் படமெடுக்கச் செய்திருக்கிறானே, ஏன் செய்தான்? அவனுக்குப் பிடித்திருந்தது. செய்தான். யாரோ ஒரு பெண்ணை காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றி, அவளுடன் உறவு கொண்டு, அதனைப் படமெடுத்து, பிறகு அதனைக்காட்டி மிரட்டியே அவளை மீண்டும் மீண்டும் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கும் குற்றங்கள் பற்றி அன்றாடம் படிக்கிறோமே, அந்த இளைஞர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள்? அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. செய்கிறார்கள். மற்றப்படி கசக்கி எறியப்பட்ட அந்தப் பெண்கள் மீது அவர்களுக்கு வேறு எந்த விரோதமும் கிடையாது.

ஏன் முஸ்லிம்களைக் கொன்றோம் என்று குஜராத் வன்முறையாளர்கள் பேசுவதைக் கேட்கும்போது நமக்கு ரத்தம் கொதிக்கிறது. இந்த வன்முறையாளர்களின் பதிலைக் கேட்கும்போதோ ரத்தம் சில்லிடுகிறது.

எனக்குப் பிடித்திருக்கிறது என்பதைத் தவிர தனது செயலுக்கு வேறு விளக்கம் எதுவும் சொல்லத் தேவையில்லை என்பதாக ஒரு மனிதனின் விழுமியங்கள் மாறுவதென்பது, வெறும் பாலியல் வேட்கை அல்லது வெறி தொடர்பான பிரச்சினை அல்ல. பாலியல் வேட்கை தோற்றுவிக்கும் பலவீனமான தருணங்கள் மட்டுமே இந்த மாற்றத்தை ஒரு மனிதனிடம் ஏற்படுத்தி விடுவதில்லை.

அரசியல் சமூக வாழ்வின் வெவ்வெறு தளங்களில் வெவ்வேறு விதமாக இந்த மாற்றம் துரிதகதியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முறுக்கிப்பிழிந்த பின் ஒதுக்கித் தள்ளப்படும் சக்கையாகவும், பல் குத்தியபின் விட்டெயெறியப்படும் குச்சியாகவும் தொழிலாளர்களைக் கருதுகின்ற முதலாளிகளை எடுத்துக் கொள்ளுங்களேன். அவர்களுக்கு அந்தத் தொழிலாளர்கள் மீது தனிப்பட்ட எந்தப் பகையுணர்ச்சியும் கிடையாது. அதேபோல, வீசியெறியப்பட்ட அந்தத் தொழிலாளிகளுக்கு என்ன நேரும் என்று சிந்திக்கும் இரக்கமும் அவர்களுக்குக் கிடையாது. பல்லைக் குத்தியபின் குச்சியை வீசியெறிவது என்ற ஏற்பாடு அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. அவ்வளவே.

நுகர்ந்துவிட்டுத் தூர எறியும் பண்டமாக மட்டுமே சக மனிதனையும் கருதப் பயிற்றுவிக்கும் இந்தச் சமூக அமைப்பின் முலையில் ஞானப்பால் குடித்து வளரும் மனிதன், மெஷினைப் போலப பேசுவது வியப்புக்குரியதல்ல.

யாரோ ஒரு அப்பாவிப் பெண்ணைக் கொலை செய்து விட்டு, எனக்குப் பிடித்திருந்தது செய்தேன் என்று மெஷின் கூறும் பதில் நம் ரத்தத்தை உறையவைக்கலாம். ஆனால் இதே வகையான பதில்கள், இதிலிருந்து வேறுபட்ட  பல சந்தர்ப்பங்களில்,  பல உதடுகளிலிருந்து அலட்சியமாக உதிர்வதை நாம் கேட்காமலா இருக்கிறோம்?

இது எளிமைப் படுத்தலோ, பொதுமைப்படுத்தலோ அல்ல. தனது விருப்பங்கள், தெரிவுகள், செயல்கள் ஆகியவை சக மனிதர்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்புக்கு, தான் விளக்கமளிக்கத் தேவையில்லை என்ற கருத்து, துவக்கத்தில்  ஒரு ஆணவம் போலத்தான் வெளிப்படுகிறது.  அதுவே மெல்ல மெல்ல வளர்ந்து அவனுடைய இயல்பாகவும், பண்பாடாகவுமே மாறும்போது அந்த மனிதன் மெஷின் ஆகிவிடுகிறான்.

எனினும் மெஷின் முகமூடி அணிய வேண்டியிருக்கிறது. சட்டத்தின் கரங்களிலிருந்து தப்பிக்கும் காரணத்துக்காக மட்டுமல்ல, இன்னமும் இந்தச் சமூகத்தில் மனிதர்களே பெரும்பான்மையாக இருப்பதன் காரணமாகத்தான் மெஷினுக்கு முகமூடி தேவைப்பட்டிருக்கிறது. உண்மையைக் கேள்விப்பட்டவுடனே தற்கொலை செய்து கொள்ளும் மனைவியைப் பெற்றிருக்கின்ற காரணத்தினால்தான், அவளிடமிருந்து ஒளிந்து கொள்வதற்கு, அந்தக் கோடீசுவரக் கிழவனுக்கு ஒரு லாக்கர் தேவைப்பட்டிருக்கிறது. பக்தர்களுடைய கண்களிலிருந்து மறைந்து கொள்ளும் பொருட்டுத்தான் தேவநாதனுக்கும் கருவறை தேவைப்பட்டிருக்கிறது.

சில நூறு பக்தர்களுக்குப் பிடிக்காது என்று கருதி எந்தக் காட்சியை மறைப்பதற்கு தேவநாதன் முயன்றானோ, அந்தக் காட்சி பல ஆயிரம் ரசிகர்களுக்குப் பிடித்தமான எதார்த்தக் காட்சியாக (Reality show) இருந்திருக்கிறது என்ற உண்மை, இப்போது தேவநாதனுக்குப் புரிந்திருக்கும்.

தான் முகமூடி அணிந்து நடித்த போதிலும், தன்னுடைய படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் முகமூடி அணிவதில்லை என்ற உண்மை மெஷின் என்று அழைக்கப்பட்ட ஜார்ஜுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. அதனால்தான் முகமூடி கிழிக்கப்பட்ட மறுகணமே வெல்லஸிடம் ஏளனமாக அந்தக் கேள்வியைக் கேட்கிறான் மெஷின்: என்ன எதிர்பார்த்தாய்? ஒரு கொடிய மிருகம் போல இருப்பேன் என்றா?

என்ன எதிர்பார்த்தீர்கள், ஹாலிவுட் திரைப்பபட விமரிசனத்தையா? காஞ்சிபுரம் கைபேசிகளில் ஓடிய படங்களுக்கு இந்த விமரிசனம் பொருந்தவில்லையா? காஞ்சிபுரத்துக்கும் ஹாலிவுட்டுக்கும் என்ன வேறுபாடு? காஞ்சிபுரம் அமெரிக்காவில் இல்லை என்பதைத் தவிர.

–          புதிய கலாச்சாரம், ஜனவரி – 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

புதிய கலாச்சாரம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !

புதிய கலாச்சாரம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

  1. புவனேசுவரி தலைமையில் தொண்டைமான் குருபூஜை!
  2. செம்மொழி மாநாடு: சக்கரவர்த்தியின் வெட்டி விழா!
  3. துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்!
  4. தினமலர்: வருணாசிரமத்தின் மலிவுப் பதிப்பு!
  5. 1984 சீக்கியர் படுகொலை: சர்தார்ஜி மட்டும் உயிரோடிருந்தால்…
  6. 8 எம்.எம். ஹாலிவுட் திரைப்பட விமரிசனம்: பாலியல் வக்கிரங்கள் – ஹாலிவுட் முதல் காஞ்சிபுரம் வரை!
  7. தில்லி சிதம்பரம் முதல் தில்லைச் சிதம்பரம் வரை… மூலதனத்தின் இராமயணம்!
  8. வெண்மணிச் சரிதம்
  9. சிறுகதை: மட்டப் பலகை
  10. காலனிச் சத்தங்கள் – கவிதை
  11. முகத்தை மூடிக்கொள்கின்ற குழந்தை – கவிதை

புதிய கலாச்சாரம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

vote-012

தொடர்புடைய பதிவுகள்

புவனேசுவரி: முக்குலத்தோரின் புதிய வீராங்கனை !!

vote-012வாசகர்களுக்கு புவனேசுவரியைத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. விபச்சார வழக்கில் போலீசால் கைது செய்யப்பட்ட அந்த அம்மையார் சொன்னதாக சில பிரபல நடிகைகளின் பெயர்களை தினமலர் வெளியிட்டதைத் தொடர்ந்து, பத்திரிகை உலகத்துக்கு எதிராகக் கலை உலகம் கொதித்தெழுந்தது.

தமிழ்ச் சமூகத்தை தாங்கி நிற்கும் மூன்று தூண்களில் சினிமா, பத்திரிகை ஆகிய இரண்டு தூண்கள் மோதிக் கொண்டு வீழ்ந்துவிட்டால், டாஸ்மாக் என்ற மூன்றாவது தூணின் மீது தமிழ்ச்சமூகத்தின் மொத்த வெயிட்டும் இறங்கி, அந்தத் தூணும் தள்ளாடி நிலைகுலைந்து விடக்கூடும் என்ற அபாயத்தை தொலைநோக்குடன் புரிந்து கொண்ட கலைஞர், உடனே தலையிட்டு, அவ்விரு தூண்களுக்கிடையில் போர்நிறுத்தம் செய்து வைத்தார். அப்புறம் புவனேசுவரியைப் பற்றி நாம் எல்லோருமே மறந்து விட்டோம்.

இப்படி தனியொரு பெண்ணாக நின்று தமிழகத்தையே திரும்பிப் பார்க்கவைத்த புவனேசுவரி ‘யார்’ என்பதை அறிந்து கொள்ளும் அக்கறை, மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமனுக்கு மட்டுமே இருந்திருக்கிறது. அந்த அம்மையார் யார் என்று புரிந்து கொண்ட மறுகணமே, அவரை மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணித் தலைவியாக நியமித்துவிட்டார் டாக்டர் சேதுராமன். அந்த அம்மையார் தேவர் குருபூசைக்கும் சென்று வந்துவிட்டார். தமிழகத்தையே கட்டி ஆண்ட மூவேந்தர் பரம்பரையில் வந்தவர்தான் புவனேசுவரி என்ற தெரிந்த பிறகு, இனி அவர் மீது கைவைக்கும் தைரியம் போலீசுக்கு வருமா என்று பார்ப்போம்.

ஒரு வேளை வெள்ளைக்காரன் மட்டும் நம் நாட்டைப் பிடிக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும், யோசித்துப் பாருங்கள்!

மன்னர் சேதுராம பாண்டியர், இளவரசி புவனேஸ்வரி, இளவரசர் கார்த்திக், தளபதி ஸ்ரீதர் வாண்டையார் போன்ற மாணிக்கங்களின் ஆட்சியின் கீழ் நாம் குடிமக்களாக இருந்திருப்போம். காந்தி கிடையாது, சுதந்திரம் கிடையாது, அரசியல் சட்டம் கிடையாது, அம்பேத்கரும் கிடையாது. எனவே பாப்பாபட்டி கீரிப்பட்டியும் கிடையாது. அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் அரச பரம்பரையினர் படிக்கவேண்டிய கட்டாயமோ, தேவர் குருபூஜைக்கு போஸ்டர் அடிக்க வேண்டிய தேவையோ, அப்புறம் அடிபட வேண்டிய அவசியமோ கிடையாது. என்ன செய்வது, வரலாறு என்பது வேந்தர் பரம்பரைகள் விரும்பும் வழியில் செல்வதில்லையே!

சென்னை சட்டக்கல்லூரி பிரச்சினையையே எடுத்துக் கொள்ளுங்களேன். புவனேசுவரி என்ற மாதர் குல மாணிக்கத்தை மகளிர் அணித் தலைவியாகவும், கார்த்திக் போன்ற தெளிந்த சிந்தனையாளர்களை கட்சித்தலைவர்களாகவும் கொண்டாட முடிந்த மூவேந்தர் வாரிசுகளான மாணவர்களுக்கு அம்பேத்கர் பெயரைப் போட்டு போஸ்டர் அடிப்பது கவுரக் குறைச்சலாக பட்டிருக்கிறது. எது கவுரவம் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்கக் கூடாதா என்ன?

வெள்ளையனை எதிர்த்துப் போராடித் தூக்கில் தொங்குவது மருது சகோதரர்களுக்கு கவுரவமாகப் பட்டிருக்கிறது. அந்த மருது சகோதரர்களைத் தோற்கடிப்பதற்கு வெள்ளைக்காரனுக்கு வழி சொல்லிக் கொடுத்து, படை கொடுத்து, அவன் படைகளுக்கு சோறும் ஆக்கிப் போட்ட புதுக்கோட்டை தொண்டைமானுக்கு, வெள்ளைக்காரன் கொடுத்த மெடலைக் கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்வது கவுரவமாக இருந்திருக்கிறது.  வெள்ளைக்கார துரையால் வளர்க்கப்பட்ட இந்த தொண்டைமானின் இளவல், அந்த துரையைத்தான் அப்பா என்று கூப்பிடுவானாம். அவன் மகனுக்கு அதுதான் கவுரவமாகப் பட்டிருக்கிறது. இப்படி வெள்ளைக்காரனிடம் அப்பன் பதவியையே பறிகொடுத்த தொண்டைமான், சின்ன மருதுவை நாய் என்று ஏசியிருக்கிறான். இவையெல்லாம் கவுரவப் பிரச்சினை குறித்த சில வரலாற்று விவரங்கள்.

சரி நிகழ்காலத்துக்கு வருவோம். புவனேசுவரியை மகளிரணித் தலைவியாகக் கொண்ட மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர், தேவர் குருபூசைக்கு ஒட்டுவால் மாதிரி மருதிருவர் குருபூசை என்று ஒரு கூத்தையும் கடந்த 5 ஆண்டுகளாக அரங்கேற்றத் தொடங்கியிருக்கின்றனர். பசும்பொன் முத்துராமலிங்கம் படம் பொறித்த மஞ்சள் கொடிகள், “”தேவர் வாழ்க! தேவர் படை போதுமா! இன்னும் கொஞ்சம் வேணுமா! பனமரத்துக்கே வவ்வாலா! தேவருக்கே சவாலா!” என்ற தேவர் குருபூசையின் கொள்கை முழக்கங்கள்தான் மருதிருவர் குருபூசைக்கும்!

மருது சகோதரர்கள் அகமுடையார் சாதியில் பிறந்தவர்கள். எனினும் உடம்பில் ஐரோப்பிய ரத்தம் ஓடும் ஆங்கிலேய கைக்கூலிகளைத் தவிர மற்ற அனைவரையும் ஒரே மக்களாகக் கருதி, அணிதிரட்டியவர்கள். மேலும் வேலைக்காரர்களாக இருந்து பாளையக்காரர்களாக மாறியவர்கள் என்பதால், அவர்கள் மூவேந்தர் பரம்பரைக்குரிய தகுதி இல்லாதவர்கள். எனவே வேந்தர் பரம்பரையில் வந்த சேதுராமன், புவனேசுவரி அம்மையார் போன்றவர்கள் மருதிருவருக்கு குருபூசை நடத்துவது தங்களுடைய கவுரவத்துக்கு இழுக்கு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பக்கத்திலேயே இருக்கிறது புதுக்கோட்டை! விஜரகுநாத தொண்டைமான், முக்குலத்தில் ஒர் குலமான புதுக்கோட்டை கள்ளர் சாதியைச் சேர்ந்தவர். ஒரிஜினல் ஆண்ட பரம்பரை. மூவேந்தர் பரம்பரையின் கவுரவத்துக்கு ஏற்றவர்.

எனவே அடுத்த ஆண்டு முதல் மருதிருவர் குருபூசையைக் கைவிடுமாறும், புவனேசுவரி அம்மையார் தலைமையில் தொண்டைமான் குருபூஜையை துவக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். சிறப்பு விருந்தினர்களாக மன்மோகன் சிங்கையும் சிதம்பரத்தையும் அழைக்கலாம். தட்டாமல் வருவார்கள்.

–          புதிய கலாச்சாரம், ஜனவரி – 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

போரை நிறுத்து !!

11

 

ஈழப் போரின் முடிவு தமிழ் மக்களுக்கு பெரும் சாபமாகவும், துயர் நிறைந்ததாகவும் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் ஈழப் போரின் வெற்றியை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியா  தண்டகாரண்யாவில் (மத்திய இந்தியா) போர் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஏகாதிபத்திய, தேசம் கடந்த தொழில் நிறுவனங்களுக்காகவும், ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு மக்கள் வளங்களை தாரைவார்க்கும் நோக்குடனும்  பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்னும் பெயரில் மாபெரும் நக்சல் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறது இந்தியா. அதற்கு இந்தியா வைத்துள்ள பெயர்தான் ‘க்ரீன் ஹண்ட்.”

அமெரிக்காவின் அடியாளாக தென்கிழக்கில் உருவாகியிருக்கும் இந்தியா தனது விஸ்தரிப்புக் கனவுகளுக்கும் சுரண்டல் வர்த்தக நலன்களுக்கும் இடையூறாகவோ, தடங்கலாகவோ இருக்கும் எந்த ஒன்றையும் அழித்தொழித்து சுதந்திர வர்த்தக வலையமாக இப்பிராந்தியத்தை மாற்றுவதே இந்த அடியாளின் ஆசை.

நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் தலைமையில் மக்களாட்சி மலர்ந்தால் இப்பிராந்தியத்தில் தனது இருத்தலுக்கு அது இடையூறாக இருக்கும் எனக் கருதுகிற இந்தியா நேபாளத்தில் தனது தனது விசுவாசியான மாதவ் குமார் நேபாளை பிரதமராக்கி பொம்மையாட்சி ஒன்றை நேபாளத்தில் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்திய அடிமையான மாதவ் குமார் நேபாளோ ”இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு பயங்கரவாத நடவடிக்கையையும் நேபாளம் அனுமதிக்காது” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மாதவ் குமார் நேபாள் பயங்கரவாதம் என்று சொல்வது மாவோயிஸ்ட் போராளிகளின் மன்னராட்சிக்கு எதிரான நேபாள மக்கள் விடுதலையை.

நேபாளத்தின் மக்கள் கிளர்ச்சி இந்தியாவுக்கு எதிரான பாயங்கரவாதம். ஈழ மக்களின் தேசிய சுயநிர்ணய போராட்டமும் இந்திய இறையாண்மைக்கு எதிரானது; என்கிற நிலையில் அந்நிய ஆபத்து, எல்லை தாண்டும் பயங்கரவாதம் என்ற கதையாடல்கள் எல்லாம் மாறி இப்போது உள்நாட்டு அச்சுறுத்தல் என்று துவங்கியிருக்கிறார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். சமீபத்தில் அவர் ‘’உள்நாட்டு அச்சுறுத்தல்களை சமாளிக்க தனி அமைச்சகம் வேண்டும்”’ என்று சொல்லியிருக்கிறார். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு உருவான அச்சுறுத்தல் இப்போது உள்நாட்டிலேயே உருவாகிறதாம்.

இந்தியா உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருக்கிறது. சரி சமமாக பிளக்கப்பட்ட சமுகத்தில் நிலத்தின் மீதான உரிமையும், பொருளாதார உத்திரவாதத்தையும் இழந்த மக்கள் எதிர்ப்பியங்களில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். பல இடங்களில் அது மக்கள் வன்முறையாக வெடிப்பதனையும் புரட்சிகர சக்திகள் தங்களின் அரசியல் நோக்கங்களுக்கு பெருந்திரள் மக்கள் போராட்டங்களை பயன்படுத்திக் கொள்வதையும் நாம் காண முடிகிறது. மக்களின் எதிர்ப்புணர்வுகளையும் தோற்றுக் கொண்டிருக்கும் ஜனநாயக வழிமுறைகளையுமே சிதம்பரம் உள்நாட்டு அச்சுறுத்தல் என்கிறார். இந்தியாவின் இன்றைய விஸ்தரிப்பு நோக்கங்களுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தெளிவாக நமக்கு ஒரு உண்மையை உணர்த்துகின்றன.

ஏகாதிபத்தியங்கள், தேசம் கடந்த தொழில் நிறுவனங்கள், உள்நாட்டு தரகு பெரு முதலாளிகள் என அவர்களுக்கு நிலங்களை மக்களிடமிருந்து பிடுங்கி தாரை வார்த்தல் என்று அமெரிக்காவின் அடியாளாக தென்கிழக்கில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இந்தியா. நாம் காண்கிற, கண்டுகொண்டிருக்கின்ற மக்கள் கொலைகள், போர்கள், பயங்கரங்கள் என எல்லாமே நமக்கு உணர்த்துவது இதைத்தான். தந்திரங்கள்தான் வேறு வேறு…..

இலங்கையில் புலிகள் போராடினார்கள். அரை குறையான மரபு வழி இராணுவமும் ஒரு நிர்வாக அலகும் அவர்களிடம் இருந்த போது அவர்களை கடுமையான இராணுவத் தாக்குதலின் மூலமே எதிர்கொள்ள வேண்டிய தேவை இருந்தது. ( புலிகளின் போராட்டம் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான போராட்டமாகவோ, சுரண்டல் நலன்களுக்கு எதிரான போராட்டமாகவோ நான் பார்க்கவில்லை. ஆனால் இந்தப் பிராந்திய வல்லரசுகளின் வர்த்தக நலன்களுக்கு புலிகளின் போராட்டம் தடையாக இருந்தது) கடைசியில் அதை இராணுவ ரீதியாக அடக்கி ஒடுக்கி அழித்தார்கள்.

நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆயுதப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து விட்டு மக்கள் திரள் போராட்டங்களை நடத்துகிறார்கள். அங்கே இந்திய, நேபாள அரசுகளின் அணுகுமுறை வேறாக இருக்கிறது. மத வெறியைத் தூண்டி விட்டு மக்களை பிளவு படுத்துவது, இன முரண்களை தூண்டி விடுதல், என்பதாகவும், இன்னொரு பக்கம் மாவோயிஸ்டுகள் குழந்தைப் போராளிகளை போரில் ஈடுபடுத்துகிறார்கள். தங்களின் இராணுவத்திற்கு குழந்தைகளை கட்டாய ஆள் சேர்ப்பின் மூலம் பிடிக்கிறார்கள் என்றெல்லாம் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறது இந்தியா. இன்னொரு பக்கம் நேபாள மாவோயிஸ்டுகளின் மக்களாட்சிக்கான போராட்டத்தை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதப் போராட்டமாக சித்தரித்து மாவோயிஸ்டுகளை விழுங்க தருணம் பார்த்துக் காத்திருக்கிறது இந்தியா.

நேபாளத்தில் இந்தியா செய்யவிரும்புவதற்கான தருணம் இன்னும் வாய்க்காத நிலையில் வன்னிக் கொலைகளின் முன்னுதாரணத்தைக் கொண்டு   மத்தியபிரதேசம், ஒரிஸ்ஸா, சட்டீஸ்கர், ஆந்திரா என இம்மாநில மாநில எல்லையோரப் பகுதிகளான தண்டகாரண்யாவிலும் பெரும் போரை க்ரீன் கண்ட் என்னும் பெயரில் ஒரு இலட்சம் படை வீரர்களின் துணையோடு நடத்திக் கொண்டிருக்கிறது இந்தியா.

உள்நாட்டு அச்சுறுத்தல் என்று சிதம்பரம் சொல்வது எதை? யாருக்காக இந்தப் போர்?

பன்னாட்டு வணிக நிறுவனங்களோடு கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது இந்தியா. நமது மாநிலங்கள் எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல, சிறுவணிகம், தண்ணீர், இயற்க்கை வளங்கள், கனிம வளங்கள், கடல், மலை, என எதுவும் பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தக நோக்கங்களில் இருந்து தப்ப முடியாது. நேரடியாக பன்னாட்டு நிறுவனங்கள் மக்களிடம் இருந்து நிலங்களை அபகரிப்பதில்லை. மக்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு நிர்பந்தம் செய்து வாங்கி சட்டத்தின் அங்கீகாரத்தோடு பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதுதான் இந்த ஒப்பந்தங்கள். கனிமங்கள், தண்ணீர், தேயிலை, ரப்பர், கடல் என எதுவும் இதற்கு விதிவிலக்கில்லை.

ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்காக மக்களின் நிலங்களை அபகரிக்கும் இந்தியா தேசம் கடந்த தொழில் நிறுவனங்களோடு எத்தனை ஒப்பந்தங்கள் செய்திருக்கிறது? எந்தெந்த நிறுவனங்களுக்கு? எந்த நிலம்? என்ன விலை? என்ன வளம்? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் முடியாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் தெரிந்து கொள்ள முடியாது. காரணம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது என்பார்கள்.

இங்கே இந்தியப் பிரதமர் மன்மோகன் பற்றியும் சிதம்பரம் பற்றியும் ஒன்றைச் சொல்ல வேண்டும். பிரதமர் அலுவலக ஸ்டெனோ கிராஃபராக இருந்த மன்மோகனின் அரசியல் நுழைவு என்பது திடீரென நிகழ்ந்த ஒன்று. அவரைத் திட்டமிட்டே இந்திய அரசியலில் நுழைத்தது அமெரிக்கா. நேரடியாக தனது அடிமை விசுவாசிகளை உருவாக்கி பொம்மையாட்சியை அவர்களிடம் வழங்கி அவர்கள் மூலமாக இந்தியாவை தனது அறிவிக்கப்படாத மறு காலனியாக வைத்திருப்பதுதான் அமெரிக்காவின் நோக்கம்.

மிகக்குறைந்த விலையில் ஈரானுடன் இந்தியா செய்து கொண்ட எரிவாயு ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டு விட்டு அதை வலியுறுத்திய நட்வர்சிங் போன்றவர்களையும் வீட்டிற்கு அனுப்பி விட்டு எஜமானர்களின் தேவைகளை அறிந்து சேவை செய்யும் இருவராகவே மன்மோகன், சிதம்பரம் போன்றோரின் செயல்பாடுகள் இருக்கின்றன. இவர்களை இந்திய அரசுப் பிரதிநிதிகளாக மட்டும் பார்க்க முடியாது. பன்னாட்டு நிறுவனங்களுடனான தனிப்பட்ட விருப்பங்களும் இவர்களுக்கு உண்டு. நேரடியாகவோ தனது குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவோ பல்வேறு தொழில் தொடர்புகளை பன்னாட்டு நிறுவங்களுடன் பேணுகிறவர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவின் சிந்தனை முறை என்பது மட்டுமல்ல நிர்வாக ஆட்சியும் அமெரிக்கா பாணியில்தான் கட்டவிழ்த்து விடப்படுகிறது. புலனாய்வுக்குழு, உளவுக்குழு, அடியாட்படை, கட்டற்ற வேட்கை கொண்ட ( உண்மையில் வெறி நாய்களைப் போன்ற) படைகள் என இந்தியாவிலும் அதே பாணிதான் இப்போது பின்பற்றப்படுகிறது. போர் நடைபெறும் எந்தப் பகுதியிலும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் என்று சொல்லப்படும் கலெக்டர்கள் செல்லாக்காசுகள்தான். மாவட்ட எஸ்.பிக்களும் சிறப்பு அதிரடிப்படை தலைவர்களுக்குமே, மக்களுக்கு சிவில் உரிமைகளை வழங்கும் அதிகாரம் உள்ளிட்ட சகல அதிகாரங்களையும் வழங்கியிருக்கிறார்கள். இம்மாதிரியான சூழலில் இருந்தே இந்தியா முன்னெடுத்து சிதம்பரத்தின் நேரடி கண்காணிப்பில் நடைபெறும் ” “ஆபரேஷன் க்ரீன் ஹண்ட்“ என்னும் போரை நாம் காண முடியும்.

இந்தப் போர் துவங்கிய சென்ற வருட மத்திய மாதங்களில் ஆங்கில ஊடகங்கள் தண்டகாரண்யாவிலும், லால்கர் இயக்கத்தின் மீதும் அதிக கவனம் கொண்டிருந்தன. ஆனால் பின்னர் ஊடகங்களும் ஆளும் வர்க்க நலன்களை முன்னெடுக்க மௌனம் என்னும் ஒரே பதிலின் மூலம் இப்போரில் ஊடங்களும் பங்கெடுக்கின்றன. ஈழ மக்கள் மீதான போரின் போது இந்திய ஊடகங்கள் காட்டிய அதே வன்மத்தை இன்று மத்திய இந்தியா மக்கள் மீதும் அவை காட்டுகின்றன. காட்டிக் கொண்டே இருக்கின்றன.

தண்டகாரண்யா மக்களின் பிரச்சனை என்பது நீண்ட காலப் போராட்டமும் கோபமும் நிறைந்தது. எப்போதும் அவர்கள் தனியார் முதலாளிகளால் சுரண்டப்பட்டே வந்திருக்கிறார்கள். பொதுவாக பழங்குடிகள் என்றும் மலை சார்ந்து வாழும் மக்கள் என்றும் அறியப்பட்ட பழங்குடி மக்களிடம் நிலங்கள் இல்லை. அவர்கள் நிலத்துக்காக போராடினார்கள். தங்களின் பூர்வீகநிலங்கள் மீதான உரிமைகளுக்காக போராடினார்கள்.

இன்றைய வடகிழக்கு மற்றும்  தண்டகாரண்ய மக்களின் போராட்டம் என்பதை நாம் சுரண்டல் வர்த்தக நலன்களுக்கு எதிரானது என துல்லியமாக அடையாளப்படுத்தி விட முடியும். இதைத்தான் சிதம்பரம் உள்நாட்டு அச்சுறுத்தல் என்கிறார். மத்திய இந்தியாவின் மாநிலங்களில் இந்த தேடுதல் வேட்டை  இருந்தாலும் அதிகமான மக்கள் இந்தப் போரால் பாதிக்கப்பட்டிருப்பது சட்டீஸ்கர் மாநிலத்தில்தான். T.T.P.P, C.R.P.F, S.T.F. B.S.F, என இவர்களோடு சல்வார்ஜூடும், லோக்கல் போலீசும் களமிரக்கப்பட்டு கொடூரமான யுத்தம் ஒன்றை சட்டீஸ்கர் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் நிலங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு அகதி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ( 2008-ல் லால்கர் மீட்பின் போது மாவோயிஸ்டுகளிடம் இருந்து மீட்கப்பட்ட ஐம்பது கிராம மக்கள் இன்னும் அவர்களின் பூர்வீக கிராமங்களில் குடியமர்த்தப்படவில்லை. அந்த நிலங்களில் ஏராளமான இராணுவ முகாம்களை நிறுவியுள்ள இந்திய அரசு. பன்னாட்டு நிறுவங்களின் கைகளில் அந்த நிலங்களை ஒப்படைக்கக் காத்திருக்கிறது. ) ஆந்திராவின் கம்மம் மாவட்டத்தில் கூட இம்மாதிரியான அகதி முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது. சட்டீஸ்கரில் இருந்து இடம் பெயரும் மக்கள் ஆந்திர மாநிலத்திற்கு வருகிறார்கள். அப்படி வருகிற மக்களுக்கும் ஆந்திர பழங்குடி மக்களுக்குமிடையே மோதல்கள் உருவாகின்றன.

இந்திய உளவு நிறுவனங்கள் உருவாக்கியுள்ள உளவாளிகள் இந்த மக்களுக்கிடையிலான முரண்களை கூர்மையடைய வைத்து மோதலை உருவாக்கி விடுகிறார்கள். மொழி, பிராந்தியவாதம், இனக்குழு வேறுபாடு என பலவகையான முரண்கள் இக்குழுக்களுக்கிடையில் உருவாகின்றன.

தண்டகாரண்யாவை மாவோயிஸ்ட் போராளிகளிடமிருந்து மீட்க முதலில் நாற்பதாயிரம் வீரர்களைக் கொண்டு போரை இந்தியா துவங்கிய போது அதற்கு அவர்கள் வைத்த பெயர் green hunt.  இதை பசுமை வேட்டை என்றோ காட்டு வேட்டை என்றோ கூடச் சொல்லலாம். ஆனால் இந்தப் போரில் இந்தியா வைத்திருக்கும் பெயர் போரின் உண்மையான காரணத்தை புரிந்து கொள்ள போதுமானதாக இருக்கிறது. அவர்கள் பசுமையை வேட்டையாடுகிறார்கள். பன்னாட்டு முதலாளிகளுக்காகவும், உள்ளூர் டாட்டா, பிர்லாக்களுக்காகவும் மக்களிடம் இருக்கும் பசுமையை வேட்டையாடி முதலாளிகளுக்கு பரிசளிக்கப் போகிறார்கள்.

இந்தப் போரில் கட்டற்ற சுதந்திரம் இந்த படைகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சட்ட விரோதக் கடத்தல், காணாமல் போதல், சுட்டுக் கொல்லுதல், ரகசிய வதை முகாம்கள், பாலியல் வன்முறைகள் என பல விதமான சுதந்திரங்களும் படைகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்கள் மனித உரிமை அமைப்புகளைக் கூட தொடர்பு கொண்டு முறையிட முடியாத கொடுமை தண்டகாரண்யாவில் நிலவிக் கொண்டிருக்கிறது.

ஹிமான்சு குமார் என்பவர் ஒரு காந்தீயவாதி. மக்களின் பெருந்திரள் வன்முறைப் போராட்டங்களில் நம்பிக்கை இல்லாதவர். அவர் சட்டீஸ்கரின் தாண்டேவடா மாவட்டத்தில் ‘வனவாசி சேத்னா’ என்ற பெயரில் ஆஸ்ரமம் ஒன்றை நிறுவி ஆதிவாசி மக்களுக்கு சேவை செய்து வந்தார். சட்டவிரோத சல்வார்ஜூடும் ஆயுதப் படைகளின் கொலைகளைக் கண்டு ஒரு கட்டத்தில் வெறுத்துப் போன ஹிமான்சு குமார், சல்வார்ஜூடும்களின் கொலைகள், கடத்தல், பாலியல் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். விளைவு அவரது காந்தியாஸ்ரமம் சூறையாடப்பட்டது. அவர் செயல்பட முடியா நிலைக்கு தள்ளப்பட்டார்.

சமீபத்தில் சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ள சட்டவிரோத செயல்கள் குறித்தும், க்ரீன் ஹண்ட் போர் குற்றங்கள் குறித்தும் மக்கள் கருத்தறியும் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் ஹிமான்சு குமார். டில்லியில் இருந்து மேதாபட்கர், சந்தீப் பாண்டே, நந்தினி சுந்தர் போன்றோர் செல்வதாக ஏற்பாடு. ஆனால் மனித உரிமை ஆர்வலர்கள் சென்று விசாரிப்பதைக் கூட விரும்பாத இந்திய அரசு, கடும் அச்சுறுத்தலை ஏவி விட்டு அக்கூட்டத்தை நடத்த விடாமல் செய்து விட்டது. ஏற்கனவே மேற்குவங்க அடக்குமுறைக்கு எதிராகப் பேசிய மஹாஸ்வேதா தேவி போன்ற அறிவுஜீகள் கடுமையாக ஒடுக்கப்பட்டது நமக்கு நினைவிருக்கலாம்.

இதே சூழலில் இன்று காந்தி மறுவாசிப்பு செய்யப்படுவதையும் காந்தீயக் கொள்கையான அஹிம்சையை எதிர்ப்பியங்களுக்கு மாற்று அரசியல் சிந்தனையாக சிலர் முன்வைப்பதையும் நாம் பார்த்து வருகிறோம். ஆனால் அன்றைய காந்தி பிரிட்டிஷ் பேரரசில் கௌரவமான ஒரு இடத்திற்காகப் போராடியதும் அதற்காக இந்திய தேசிய முதலாளிகளை சிதைத்து டாடா,பிர்லாக்கள் போன்ற ஏகாதிபத்திய சேவகர்களின் பண்ணைக்குள் ஒளிந்து கொண்டு காந்தி உருவாக்கியவைதான் எளிமையும் அஹிம்சையும். இந்த எளிமையும் அஹிம்சையும் ஏகாதிபத்தியங்களை தோற்கடிக்கப் போதுமானவையா? எளிமையும் அஹிம்சையும் அரசு வன்முறையும் ஏகாதிபத்திய சுரண்டலையும் தோற்கடிக்க போதுமானவையாக இருந்திருந்தால் ஹிமான்சு குமாரால் மக்கள் கருத்தறியும் கூட்டத்தை நடத்தியிருக்க முடியுமல்லவா?

புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் முடிவை ஒட்டி முன் வைக்கப்படுகிற காந்திய சிந்தனைகள் துணைக்கண்டத்தின் விடுதலைக்காக போராடிய அன்றைய காலச் சூழலுக்கே பொருந்தாத போது, அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டு மக்கள் படுகொலைகள் சகஜமாக நிகவும் இந்தக் காலத்திற்கு காந்தியின் அஹிம்சை எப்படி எதிர்ப்பியங்களுக்கு பயன்படும்?

போர் நிறுத்தம் கேட்போம்……..

வன்னியில் இந்தியாவின் துணையோடு இலங்கை அரசு ஈழ மக்களைக் கொன்று குவித்த போது ஏனைய இனத்து மக்கள் வன்னி மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. ஆகவே யார் செத்தால் என்ன? நாம் ஏன் இவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்ற எண்ணம் தமிழகத்தின் சில மட்டங்களில் கேட்க முடிகிறது. உண்மைதான். வன்னியில் நடந்த போரின் போது ஜனநாயகவாதிகள் என்று தங்களை பீற்றிக் கொள்கிற சிலர் மௌனமாகவே இருந்தார்கள். இவர்கள் பாலஸ்தீனத்திற்காகப் பேசுவார்கள், கியுபாவிற்காகவும் பேசுவார்கள், கொசோவா என்றால் கொதிப்பார்கள். ஆனால் ஈழம் என்று வந்தால் அதை பயங்கரவாதம் என்று ஒதுக்குவார்கள். அல்லது மௌனிகளாகிவிடுவார்கள்.

பல நேரங்களில் இந்த மௌனமே பெரும் போர் வெறியர்களுக்கு சாதகமான ஒன்றாக உருவாகிவிடுகிறது. க்ரீன் ஹண்ட் போருக்கு எதிராகவும் இம்மாதிரியான மௌனம் ஒன்று நிலவுகிறது. ஆனால் நமது இந்த மௌனம் பல லட்சம் பழங்குடி மக்களின் வாழ்க்கையை சூறையாடிக் கொண்டிருப்பவர்களுக்கு துணைபோகிறது. ஜனநாயகம் தோற்றுக் கொண்டிருக்கும் ஒரு காலச் சூழலுக்குள் நாம் வாழ்கிறோம். நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் நீதியைத் தேடி அலைந்து மக்கள் சோர்ந்து விட்டார்கள்.

ஜனநாயகத்தின் இரும்புக் கதவுகள் ஏழைகளுக்காக இனி எப்போது திறக்கப் போவதில்லை என்பதை போபால் விஷவாய்வுக் கசிவு நமக்கு உணர்த்துகிறது. மக்கள் முன்னால் இப்போது இருப்பது ஒன்றே ஒன்றுதான் பெருந்திரள் மக்கள் போராட்டங்கள்… எதிர்ப்பியங்களை வலுப்படுத்துதல்…ஆம் ஈழத்தில் கொத்துக் கொத்தாக மக்கள் கொன்றொழிக்கப்பட்ட போது நாம் கைபிசைந்து நின்றோம். போராட்ட வடிவங்களை மாற்றி மக்கள் எழுச்சியை நாம் உருவாக்கத் தவறினோம். அங்கே மக்கள் கொல்லப்பட்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இப்போது மக்களிடமிருந்து நிலங்களையும் பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

வன்னிப் போரை முன்மாதியாகக் கொண்டு வடகிழக்கில் போரை நடத்திக் கொண்டிருக்கிறது இந்தியா. தண்டகாரண்யா மக்கள் வேறு இன மக்கள் அவர்கள் செத்தால் நமக்கு என்ன? என்று இருந்தால்…. இப்போது மத்திய இந்தியாவில் வீசப்படும் குண்டும்… பாலியல் வன்முறையும்….. சட்டவிரோதக் காவலும், கடத்தலும், கொலைகளும் நாளை ராமேஸ்வரத்திலும் நடக்கும்…

ஆமாம் அதிகப்படியாக நான் எதையும் சொல்லவில்லை. தண்டகாரண்யா மக்களின் நிலங்களை பிடுங்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் இந்தியா ராமேஸ்வரத்திலும் கடலை தேசம் கடந்த தொழில் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்திருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தகச் சூதாட்டத்திற்கு தடையாக இருக்கும் மீனவர்களை அங்கிருந்து துரத்த சரியான தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது.  இன்று தண்டகாரண்யாவில் மாவோயிஸ்ட் போராளிகள் பழங்குடி மக்களுக்காக போராடுவது போல மீனவ மக்களுக்கான எதிர்ப்பியக்கம் ஒன்று வலுவடைந்தால் இன்று அங்கே செய்யும் போரை ராமேஸ்வரத்தில் செய்ய இந்தியாவுக்கு எவ்வித தயக்கமும் இருக்கப் போவதில்லை. ஏனென்றால் எப்போதும் மக்கள் அமைதியாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கைதான் காரணம்.

ஆளும் வர்க்கங்களின் சந்தை நலனுக்கான இந்தப் போரின் முன் மாதிரியாக ஐம்பதாயிரம் ஈழ மக்களின் பிணங்களை நம்முன் கிடத்தியிருக்கிறார்கள் போர் வெறியர்கள். ஆகவே மக்கள் போராட்டங்களை ஆதரிப்போம். தண்டகாரண்யா மக்கள் மீதான போரை நிறுத்தக் கேட்போம். மக்களின் நிலங்களை மக்களிடமே வழங்கக் கோருவோம்.

கேள்வியே புரியாமல் பதில் சொல்லும் அறிவாளிகளும், கேள்வியைப் புரிந்து கொண்டு பதில் தேடி வரும் முட்டாள்களும்

59

குரங்கிலிருந்து பிறந்தவன் – பாகம் 3

காலம் மாறிக் கொண்டேதான் இருக்கிறது.

vote-012பல இலட்சம் ஆண்டுகள் பொழிந்த அமில மழை, அது நின்ற பின் பல ஆயிரம் ஆண்டுகள் மெதுவாக வெப்பம் அடங்கிய பூமி, படிப்படியாகக் குளிர் அதிகரித்து சில ஆயிரம் ஆண்டுகளுìÌள் நிலப் பரப்பை முழுதாக மூடிய பனி, உருகிய பனியில் தோன்றிய நீர்ப்பரப்புகள், நிலத்தடியில் அதிவெப்பத்தோடு கனன்று கொண்டிருக்கும் உருகிய திடப் பொருட்கள், நிலத்தின் மேல் சுழலும் வெதுவெதுப்பான வாயு மண்டலம், பிரபஞ்சம் உருவான நாள் முதல் அண்ட வெளியில் பரவியிருக்கும் மனிதக் கண்ணில் புலப்படாத கதிர் வீச்சுக்கள், ஒவ்வொரு திடப் பொருளும் இன்னொன்றைத் தன்னை நோக்கி இழுக்கும் ஈர்ப்பு விசை, இவ்விசையின் கோணங்களும் தாக்கங்களும் மாறுபடுவதால் ஒவ்வொரு கோளையும் நட்சத்திரத்தையும் இழுப்பதோடு சுழலவும் வைக்கும் சுழற்சி விசை … இவை எல்லாம் கால மாற்றத்தின் சாட்சிகள்.

கதாநாயகர்கள் நடத்தி வரும் புதையல் தேடலில் இதுவரை சிக்கியிருக்கும் சிற்சில முத்துக்களும், வைரங்களும் இவை.

பாக்டீரியாக்களும், வைரஸ்களும், தாவரங்களும், பூச்சிகளும், பறவைகளும், பாலூட்டிகளும், மனிதர்களும் இந்தக் காலமாற்றத்தின் சக விளைவுகள்.

கதாநாயகர்ளின் புதையல் தேடலில் சிக்கி உள்ள சிறு சிறு மாணிக்கங்கள், வைடூரியங்கள்.

இந்தத் முத்து மணிகளை மாலையாகக் கோற்கும் கயிறு இன்னும் கிடைக்காததால் தனித்தனியாக இத்தனை செல்வமும் சிதறிக் கிடக்கிறது.

கதாநாயகர்கள் கயிறு தேடிக் கொண்டிருக்கிறார்கள்

எல்லாம் தெரிந்த கிழவனுக்கு இந்தத் தேடுதல் பிரச்சினையே இல்லை. அவனிடம் ஏற்கனவே கயிறு இருக்கிறது.ஆத்திர அவசரத்திற்கு எப்போதோ நூற்ற ஒரு சணல் கயிறு. அதில் கோர்க்க ரத்தினக்கள் இல்லாவிட்டாலும் கைமாறிக் கைமாறிப் பல கிழவனார்கள் திரித்த ஒரு தடிமனான தாம்புக் கயிறு.

முத்தும் மணியும் சிதறிக் கிடக்கிறது என்று தெரியாதவர்கள், வேறு இடத்தில் அதி அற்புதமான நவரத்தின மாலை உருவாகிக் கொண்டிருப்பதை உணறாமல், பிரபஞ்சத்தின் புதையல் தேடலில் கலக்காமல், பெருமையுடன் அணிந்து கொண்டிருக்கும் ஒரு பயனுமில்லாத இல்லாத கயிறு.

இது அஸ்திவாரமில்லாமல் கட்டப் பட்ட ஒரு கூடாரம். காலப் போக்கில் கோட்டையாகக் கருதப் படுவது துர்பாக்கியம்.

இது என்ன கேள்வியென்றே தெரியாமல் ஒருவன் எழுதிய பதில். மீண்டும் மீண்டும் சொல்லப் பட்டதால் உண்மையாகக் கருதப் பட்டு நாள்பட பதிலுக்கேற்றாற் போல கேள்வியை உருவாக்கிக் கொண்டு உள்ள அக்கிரமம்.

கிழவனின் கயிறு சிறு சிறு நூல் பிரிகளால் ஆரம்பமானது.

மழை பெய்யும் போது பயப்படு; அழு; வானைப் பார்த்து இறைஞ்சு; மழை நிற்கும்.சூரியனுக்கும் மனிதர்களைப் போலக் கோபம் வரும். காலை வேளை தலை காட்டாது. தடுமாறிப் போவாய். எனவே அத்திசையைப் பார்த்து நன்றி சொல்லு. நெருப்புதான் உலகின் ஆதாரம். ஆதாரத்தை மதிக்க வேண்டும். இல்லையேல் அழிவு நிச்சயம்.

“மதிப்பது என்றால் எப்படி?” இன்னோரு மனிதன் ஆயுதத்தால் உன்னை வெல்லும் போது உன் ஆயுதத்தைத் தூக்கிப் போட்டு தரையில் விழுகிறாயே, அதே போல் தலை வணங்கு, கையெடுத்துக் கும்பிட்டு நீ நிராயுதபாணி என்று காட்டிக் கொள்ளு, உன் அடிமை நிலையை நிரூபிக்க எதிரின் கால் தொடுவாயே, அதேபோல் தரையில் விழு, வணங்கு. மனிதர்களுக்கு நீ மரியாதை காட்டுவது போல இயற்கைக்கும் காட்டு. அதற்குப் புரியும். இயற்கையைக் காக்காய் பிடித்து வைத்துக் கொள்.

“இயற்கைக்கு எங்கிருந்து மனிதனைப் போல காழ்ப்புணர்ச்சி வரும்? பொறாமை, சமாதானம், வன்மம், அன்பு இவையெல்லாம் இயற்கைக்கு எங்கிருந்து வரும்? ஒரு ஊரில் தலை வணங்குவது பணிவு, அடுத்த ஊரில் மூக்கால் மூக்கை உரசுவது அன்பு… இப்படி மனிதருக்குளேயே வேறுபாடுகள் இருக்கையில் உருவமில்லாத இயற்கைக்கு மனித சமிஞ்கைகள் மூலம் என் அடிபணிதல் எப்படிப் புரியும்?”

இக்கேள்விகள் கேட்கப் பட்டிருந்தால் இந்தக் கயிறு திரிக்கப் பட்டிருக்க வாய்ப்பே இல்லை! ஆனால், இவை கேட்கப் படவில்லை. கிழவனின் கயிறு கேள்வியில்லாமலே உருவான பதில். தற்காலிகமாக எழும்பிய கூடாரம். கேட்பாரில்லாததால் அது கோட்டையாக வளர ஆரம்பித்தது.

இயற்கையை வணங்க ஒரு வழி வகை இருக்கிறது. சம்பிரதாயங்கள் இருக்கின்றன. மழையின் மனித உருவம் இது. நெருப்பின் மனித உருவம் இது. காமத்தின் மனித உருவம் இது. இவற்றை வெல்ல வேறு வேறு வழிகள் இருக்கின்றன. இந்த உருவங்களை, கடவுள்களை, திருப்திப் படுத்த நான் வழி சொல்கிறேன்.

நிலவில்லாத நாளில் ஒரு வழி. முழு நிலவன்று ஒரு வழி. அறுவடைக்கு முன்…. வெள்ளம் வரும்போது…. உயிப் பலி கொடுத்து…. மலர் அணிவித்து….

பட்டினி கிடந்து ஒரு வழி. பலவகை விருந்தோடு ஒரு வழி. மேள தாளத்தோடு ஒரு வழி. மவுனமாக ஒரு வழி. வெவ்வேறு பிரச்சினகளை தீர்க்க வெவ்வேறு வழிகள், முறைகள், சம்பிரதாயங்கள்…

மறந்து விடாதே. இக்கடவுளுடன் உன்னால் பேச முடியாது. எப்படிப் பேச வேண்டுமென்று எனக்குத் தெரியும். எந்த மொழியில் பேச வேண்டுமென்றும் தெரியும். அதை உனக்கு சொல்ல மாட்டேன். காரணம் நீ கடவுளின் காலிலிருந்து வந்தவன். நான் நாக்கிலிருந்து. இவன் தோளிலிருந்து. இந்த ஊரை இவன் காவல் காக்கட்டும். நீ ஒதுங்கிப் போ. எனக்குப் பின் என் பிள்ளை வழி சொல்லுவான். இவன் பிள்ளை ஊர் காப்பான். நீ எங்களுக்கு ஏவல் செய்வாய்.

ஏனென்று கேட்காதே? நான் கடவுளின் மைந்தன். என் அம்மாவைத் தொடாமலே கர்ப்பமாக்கியது அவன் தான். அடுத்த ஊர் கிழவன் சொல்வதையெல்லாம் இனிமேல் நம்பாதே. என் அப்பன் என் காதில் மட்டும் தான் உண்மை சொன்னான். ஏழு நாளில் உலகம் படைத்தவன் அவன். ஒரு ஆணையும் அவன் விலாவிலிருந்து ஒரு பெண்ணையும் படைத்தான். வெள்ளத்தில் உலகம் முங்கியபோது ஒருவனின் படகில் எல்லா உயிரினத்தையும் ஏற வைத்தான். அவை பல்கிப் பெருகித்தான் இவ்வுலகம் உயிர்களால் நிறைந்தது. “இரண்டிரண்டு உயிர்களிலிருந்து எப்படி பல உயிர்கள் வந்தன? மூன்றாம் தலைமுறை உருவானதை நினத்தாலே கெட்ட எண்ணங்கள் வருதே?” எதிர்க் கேள்வி கேட்டால் நாக்கறுப்பேன்!!

என் இறைவன் தகப்பனை விட்டு மகனைக் கொல்வான். பாவிகளை நரகத்தில் தள்ளுவான். (“பாவம் என்றால் என்ன?” அப்புறம் சொல்கிறேன்.) காலகாலமாக எண்ணைச் சட்டியில் வறுத்து எடுப்பான். வெள்ளமும் பஞ்சமும் புயலும் நில நடுக்கமும் எரிமலையும் வீசுவான். நோயள்ளித் தெளிப்பான். ஆனால் அவன் எல்லையில்லாத அன்புள்ளவன். உன் பாவத்தை என் மேல் தள்ளி விட்டு விடு. உனக்காக அவனிடம் நான் ரத்தம் சிந்துகிறேன். நீ தப்பித்துக் கொள். போகும் வழியில் உன்னிடம் உள்ளதை அந்த உண்டியலில் போட்டு விட்டுப் போ.

“கடவுள் உன் அப்பன்தானே? பாவமே செய்யவிடாமல் தடுக்கச் சொல்லேன்.” உனக்குத் தெரியாது என் அப்பனுக்கு ஆகாதவன் இருக்கிறான் சாத்தானென்று பெயர். அவன் தான் பாவத்துக் காரணம். “அவன் உன் அப்பனை விட பெரிய ஆளாக இருப்பான் போலிருக்கிறதே! அவனைப் படைத்தது யார்?” இந்தக் கேள்விக்கு நான் ஏற்கனவே பதில் சொல்லி விட்டேன். “எப்போது?” அதெல்லாம் விளக்க முடியாது. என் வழியில் வா! இல்லையேல் நீ நரகம் தான் போவாய்.

கடவுளென்பவன் உருவமில்லாதவன். இன்றிலிருந்து மற்ற கிழவன்களை நம்பாதீர்கள். நான் மலைக் குன்றிலிருக்கும் போது என் காதில் மட்டும் ஆளனுப்பி சொன்னான். நான்தான் அவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவன். நான் சொல்வது மட்டும்தான் சரி. இறைவன் தன்னை தினமும் பல முறை வணங்கச் சொல்லியிருக்கிறான். ஏனென்று கேட்காதீர்கள்! அவனுக்கு கருவம் அதிகமாக இருக்கலாம். அதனாலென்ன? சொன்னதை செய்யுங்கள். இல்லையேல் சாவுங்கள்! ஒரு நிமிடம்… பெண்களெல்லாம் ஓரமாக வாருங்கள்… உங்களைப் பார்த்தால் ஆண்களுக்கு ஆசை வருகிறது… எல்லாவற்றையும் மூடுங்கள்…

கூடாரம் கோட்டையாகிவிட்டது. தவறான பதில்களால் பக்கங்கள் நிரம்பி விட்டன. ஆனால் கேள்வி மட்டும் இந்தக் கிழவன்களுக்குப் புரியவே இல்லை.

கதாநாயகர்களுக்கு கேள்வி என்னவென்று எப்போதோ தெரியும். கொஞ்சம் கொஞ்சமாக பதிலும் புரிய ஆரம்பித்தது. புதையல் கிடைக்கவும் ஆரம்பித்தது.

-வித்தகன்

தொடரும்…..

vote-012

தொடர்புடைய பதிவுகள்

தில்லிச் சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின் இராமயணம்!

ஆபரேசன் கிரீன் ஹன்ட்டுக்கும் சிதம்பரத்துக்கும் இடையிலான தொடர்பு என்ன என்று கேட்டால், இந்தக் கேள்வியே அபத்தம் என்று நீங்கள் கருதக்கூடும். ‘கிரீன் ஹன்ட்’ என்றழைக்கப்படும் இந்த நக்சல் வேட்டையைத் வழி நடத்துபவரே உள்துறை அமைச்சர் சிதம்பரம்தான் என்பதை நாம் அறியாமல் இல்லை. நாம் இங்கே குறிப்பிடுவது உயர்திணைச் சிதம்பரமான உள்துறை அமைச்சரை அல்ல, அஃறிணைச் சிதம்பரமான தில்லையை  அதாவது தீட்சிதர்களை!

பண்டங்களால் மனிதர்கள் ஆளப்படும் இந்தக் காலத்தில், அதிகாரத்தின் குறியீடுகளும் அஃறிணைப் பெயர்களால் அழைக்கப்படுவது ஆச்சரியத்துக்குரியதல்ல. தில்லியைப் போல தில்லையும் அதிகாரத்தின் ஒரு குறியீடு.

தில்லை நடராசர் கோயிலின் நிர்வாகத்தை அறநிலையத்துறையின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்ததன் மூலம், தங்களது மத நம்பிக்கையிலும், மத உரிமையிலும் தமிழக அரசு அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்திருக்கிறது என்பது தீட்சிதர்களின் குற்றச்சாட்டு.

கோயிலுக்குச் சொந்தமான 2500 ஏக்கர் நிலம், இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை வரை பரவியிருக்கும் கோயிலின் சொத்துகள், இடுகாட்டுச் சாம்பல் பூசித் திருவோடேந்தித் தாண்டவமாடும் பெருமானின் தலைக்கு மேலே தகதகக்கும் பொன்னோடு, அவரது உடல் மீது வேயப்படும் ஆபரணங்கள் உள்ளிட்ட கிலோக் கணக்கிலான நகைகள், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள்… இன்ன பிற சிவன் சொத்துகள் அனைத்தும் தங்கள் குலத்துக்கே சொந்தம் என்றும், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மேற்படி ‘அறங்கள்’  அத்தனைக்கும் தாங்களே ‘பரம்பரை அறங்காவலர்கள்’ என்றும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்கள் தீட்சிதர்கள்.

மேற்படி சொத்துக்களுக்குப் பாரம்பரிய உரிமை கொண்டாடும் தீட்சிதர்களிடம் அதற்கான பட்டாவோ, பத்திரமோ, பகவான் எழுதிக் கொடுத்த பவர் ஆஃப் அட்டார்னியோ கிடையாது. எனினும் இந்த லவுகீக உடைமைகள் அனைத்தும் தங்களுடையவை என்பது அவர்களுடைய ‘ஆன்மீக நம்பிக்கை’யாக இருக்கிறது.

நடராசனின் ஆக்ஞைப்படி 3000 தீட்சிதர்கள் கைலாசகிரியிலிருந்து கிளம்பி சிதம்பரம் வந்ததாகவும், ஊர் வந்து சேர்ந்தபின் தலையை எண்ணிப்பார்த்தபோது, 2999 தீட்சிதர்கள் மட்டுமே இருந்ததாகவும், “காணாமல் போன அந்த ஒரு தீட்சிதன் நானே” என்று நடராசப் பெருமானே அறிவித்ததாகவும் ஒரு கதையை தீட்சிதர்கள் சொல்கிறார்கள். இந்தக் கதைப்படி தில்லை நடராசனும் ஒரு தீட்சிதனாகி விடுகிறான். எனவே, தீட்சிதர்களால், தீட்சிதர்களுக்காகப் பராமரிக்கப்படும் தீட்சிதருடைய கோவிலே தில்லைக் கோயில் என்று ஆகிறது.

ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள லவுகீக சொத்துக்களுக்கு மத நம்பிக்கையின் பெயரால் ஒருவர் உரிமை கோர முடியுமா, சட்டம் இதை அனுமதிக்குமா  என்று நீங்கள் சிரிக்கலாம். ஒரு இந்தியக் குடிமகன் மதத்தை நம்புவதற்கும், கடைப்பிடிப்பதற்கும் உரிமை வழங்குகின்ற இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 25, 26 இன் கீழ்தான் இந்த பாரம்பரிய உரிமையை இத்தனை காலமும் தீட்சிதர்கள் நிலைநாட்டி வந்திருக்கிறார்கள். இப்போதும் அதே சட்டப்பிரிவுகளின் கீழ்தான் தமிழக அரசின் அதிகாரத்தை உச்சநீதிமன்றத்திலும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள். இது தில்லைச் சிதம்பரத்தின் கதை.

இனி தில்லி சிதம்பரத்திடம் வருவோம். சிதம்பரத்தின் காட்டு வேட்டைப் படைகள் கைப்பற்றத் துடிக்கும் முதல் இடம் ஒரிசாவிலுள்ள நியாம்கிரி மலை. இந்த நியாம்கிரி மலையின் பாரம்பரியக் காவலர்கள் டோங்கிரியா கோண்டு என்ற இனத்தைச் சார்ந்த பழங்குடி மக்கள். டோங்கர் என்ற ஒரியச் சொல்லுக்கு மலை என்று பொருள். அதுமட்டுமல்ல, இந்த வட்டாரத்திலிருந்து வெட்டியெடுக்கப்படும் கற்களும்கூட கோண்டலைட் கற்கள் என்றே அழைக்கப்படுவது இம்மக்களுடைய பாரம்பரிய உரிமைக்கான ‘கல்வெட்டு’ ஆதாரம்.

எனினும் அம்மக்கள் தம்மை ‘ஜார்னியாக்கள்’ என்றே அழைத்துக் கொள்கிறார்கள். அந்த மலைகளில்  நிறைந்திருக்கும் வற்றாத நீர்ச்சுனைகளே (ஜரனா) தங்கள் வாழ்வின் ஆதாரம் என்பதனால், தங்களை அந்த நீர்ச்சுனைகளின் புதல்வர்களாகவே அவர்கள் கருதிக் கொள்கிறார்கள். பூமித்தேவனும் (தரணி பெனு) நியாம் தேவனும் (நியாம் பெனு) தான் இம்மக்களின் வழிபாட்டுக்குரிய தெய்வங்கள்.

நியாம்கிரி மலை இம்மக்களுடைய உடலின் நீட்சி. தம் சொந்தக் கைகளுக்கும் கால்களுக்கும் யாரும் பத்திரப் பதிவு செய்து வைத்துக் கொள்வதில்லை என்பதால், தங்கள் மலைக்கும் இவர்கள் பட்டாவோ பத்திரமோ வைத்திருக்கவில்லை. அந்த மலை  அவர்களால் பேணப்படும் உடல், அந்த மலைதான் அவர்களுக்குச் சோறு போடும் பொருள், அந்த மலையேதான் அவர்களது வழிபாட்டுக்குரிய ஆவி.

தங்களது பொருளாயத உரிமைகளையும், ஆன்மீக உரிமைகளையும் பிரித்துப் பார்ப்பதற்கோ, இந்திய அரசியல் சட்டத்தின் எந்ததெந்தப் பிரிவுகள் எவற்றைப் பாதுகாக்கின்றன என்று தீட்சிதர்களைப் போல, விவரமாக தெரிந்து வைத்திருப்பதற்கோ அவர்களுக்கு அவசியம் ஏற்பட்டதில்லை. சொல்லப் போனால் அப்படிப்பட்ட ஒரு அரசியல் சட்டம்தான் தங்களைப் ‘பாதுகாத்துக் கொண்டிருக்கிறது’ என்ற உண்மையே அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை  சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் புல்டோசர்கள் நியாம்கிரி மலைக்கு விஜயம் செய்யும் வரை.

இது உலகமயமாக்கலின் காலமல்லவா? இம்மண்ணின் பூர்வகுடிகளை விடவும், வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்களுக்குத் தாய்நாட்டுப் பாசம் தலைவிரித்து ஆடும் காலமல்லவா? லண்டனில் குடியேறிய இந்தியரான அனில் அகர்வால் என்ற உலகப்பணக்காரரும் நியாம்கிரி மலையில் தனது கடவுளைத் தரிசித்து விட்டார்.

பருவமழையின் நீரைப் பருகி, கடற்பஞ்சு போல அதனைச் சேமித்து வைத்து, அச்சேமிப்பில் விளைந்த அடர்ந்த காடுகளை ஆகாயத்தில் கரங்களாய் நீட்டி, மேகத்தின் நீரை மண்ணில் இறக்கி, வற்றாத அருவிகளையும், சுனைகளையும் வழங்கிய வண்ணம் அந்த மலைக்குள் மறைந்திருக்கும் கடவுள் யாராக இருக்கும் என்ற அவரது ஆன்மீகத் தேடலுக்கு அறிவியல் அளித்த விடை  பாக்சைட்.  இந்தக் கடவுளின் அறங்காவலராக உடனே பொறுப்பேற்க விரும்புகிறார் அகர்வால்.

தங்களது கடவுளான நியாம்கிரி மலைக்கு ஆடு கோழி அறுத்து பலியிடுவது டோங்கிரியா கோண்டு இன மக்களின் வழிபாட்டு முறை. கடவுளைத் தனக்குப் பலியிட்டுக் கொள்வது அகர்வாலின் வழிபாட்டு முறை. மலையின் மேற்பரப்பில் நிரம்பியிருக்கும் பாக்சைட் தாதுவுக்காக, அந்த 40 கி.மீ. நீள மலைத் தொடரின் தலையை மட்டும் அவர் சீவ விரும்புகிறார். பழங்குடி மக்களின் கடவுளரைத் தின்று செரிக்கும் இந்த வழிபாட்டு முறைக்குப் பொருத்தமான ஒரு பெயரை, அவர் தன்னுடைய நிறுவனத்திற்கு  ஏற்கெனவே சூட்டியிருக்கிறார்  ‘வேதாந்தா மைனிங் கார்ப்பரேசன்.’ இதனைத் தற்செயல் என்பதா, இறைவன் செயல் என்பதா?

வேதங்களின் அந்தமாக ஆதிசங்கரன் கண்டறிந்த தத்துவம் ‘அகம் பிரம்மாஸ்மி’ (நானே பிரம்மமாக இருக்கிறேன்). எனினும் நாம் காணும் இந்தப் பிரம்மம், எல்லைகள் கடந்த என்.ஆர்.ஐ பிரம்மம். மூலதனம் என்ற பெயரால் அழைக்கப்படும் பிரம்மம்.

‘பிரம்மம் சத்யம், ஜெகன் மித்யா’!  “பிரம்மமே மட்டுமே உண்மையானது, உலகம் என்பது வெறும் மாயத்தோற்றம்” என்பது சங்கரனின் தத்துவ விளக்கம். இந்த விளக்கத்தை மூலதனத்தின் மொழிக்குப் பெயர்த்தோமாகில், நாம் காணும் புதிர்கள் யாவும் நொடியில் விலகுகின்றன. இல்லாத மாயைகளான வீடுகளின் மீது, எழுதிக்கொடுக்கப்பட்ட பத்திரங்களே சத்தியமாக மாறியதும், பின்னர் அந்த அசத்தியங்களைச் சத்தியமாக மாற்றும் முயற்சியில் இந்த மாய உலகம் இன்னமும் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதும் ஆதிசங்கரனின் தியரியை நிரூபிக்கவில்லையா என்ன?

நியாம்கிரியின் தலையில் நிறைந்திருக்கும் அடர்ந்த காடுகளை அழிக்க சுற்றுச்சூழல் சட்டம் தடையை ஏற்படுத்தியதால், உலகப்புகழ் பெற்ற அத்வைதிகளான ஜே.பி. மார்கன் நிறுவனத்தினரை வைத்து, நியாம்கிரியில் ‘இருக்கின்ற காட்டை இல்லை’ என்று எழுதி வாங்கினார் அகர்வால். உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை!

அடுத்த தடை, பழங்குடி மக்களின் நிலத்தை நேரடியாகப் பன்னாட்டு நிறுவனத்துக்கு எழுதிவைக்க அரசியல் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணை தோற்றுவித்த இடையூறு. அட்டவணையையே நீக்குவதற்கு அவகாசம் தேவையென்பதால், தனது  இந்திய அவதாரமான ஸ்டெரிலைட் நிறுவனத்தின் பெயரில் சுரங்கம் தோண்டுவதாக அறிவித்தார் அகர்வால். ஆமோதித்தது உச்சநீதிமன்றம்.

காடுகளை அழித்து சுரங்கம் தோண்டினால், சூழலியல் பேரழிவு நிகழும் என்று உச்சநீதிமன்றம் நியமித்த வல்லுநர் குழுவே ஆட்சேபித்தது. “காடுதானே, புதிதாக வளர்த்துக் கொள்ளலாம்” என்று அந்த ஆட்சேபத்தையும் ஒதுக்கி விட்டு, 200 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பாக்சைட் தாதுவைத் தன்னகத்தே வைத்திருக்கும் நியாம்கிரி மலையை அகர்வாலுக்கு வழங்குவதாக, ஆகஸ்டு 2008இல்  தீர்ப்பளித்து விட்டது, கே.ஜி.பாலகிருஷ்ணன், அஜித் பசாயத், கபாடியா என்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு.

வனவிலங்குகளைப் பராமரிக்க 105 கோடி, பழங்குடி மக்களை முன்னேற்றுவதற்கு 12.2 கோடி, பழங்குடி மக்களுக்கான பள்ளி, மருத்துவமனைகளை பராமரிக்க அகர்வாலின் இலாபத்தில் 5 சதவீதம்  நியாம்கிரியின் தலையைச் சீவும் பாவத்துக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ள பரிகாரம் இது. கொலைக்குற்றத்துக்குப் பரிகாரமாக கோயிலுக்கு நெய்விளக்கு! இவ்வளவு மலிவானதொரு பரிகாரத்தை ஒரு பார்ப்பனப் புரோகிதனின் வாயிலிருந்து கூட யாரும் வரவழைத்திருக்க முடியாது.

“அப்பழங்குடி மக்களால் கடவுளாக வழிபடப்படும் மலையைத் தகர்ப்பது, அவர்களது மத நம்பிக்கையையே தகர்ப்பதாகும்” என்ற வாதத்தை நீதிபதிகளின் அறிவியல் உணர்ச்சியால் அங்கீகரிக்க இயலவில்லை. வளர்ச்சித் திட்டத்துக்கும் வல்லரசாவதற்கும் தடையாக ஈசனே வந்து நிற்பினும், குற்றம் குற்றமே என்றுரைக்கும் நக்கீரன் பரம்பரையல்லவா, நம் நீதிபதிகள்!

இருப்பினும், அந்தக் கடவுள் எந்தக் கடவுள், அந்த நம்பிக்கை யாருடைய நம்பிக்கை என்பதைப் பொருத்தும் நாட்டாமையின் தீர்ப்பு வேறுபடுகிறது. மரகதமலையாக ஒளிரும் நியாம்கிரி மலையைக் காட்டிலும், யாருக்கும் உதவாத ராமேசுவரத்தின் மணல்திட்டுகளை உச்சநீதிமன்றம் புனிதமாகக் கருதியதென்றால் அதற்குக் காரணம், அந்த நம்பிக்கை ஸ்ரீராமபிரான் தொடர்பானது என்பதுதான். நியாம்கிரி தொடர்பான வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்ட பழங்குடி மக்களிடம் “உங்களுக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்மந்தம்?” என்று கேட்டார்கள் நீதிபதிகள். ஆனால் இந்தக் கேள்வியை சிதம்பரம் வழக்கில் தலையிட்ட சுப்பிரமணியசாமியிடம் நீதிபதிகள் கேட்கவில்லை.

அதுமட்டுமல்ல, புனிதமான கைலாசத்திலிருந்து புறப்பட்டு வந்ததாக தீட்சிதர்கள் சொல்லிவரும் கதையை எந்த நீதிமன்றமும் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தியதில்லை. வெள்ளைக்காரன் காலம் தொட்டு எல்லா நீதிமன்றங்களும் அந்தக் கதையைக் கேட்டுத்தான் தீட்சிதர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பெழுதி வருகின்றன. அதனால்தான் உச்சநீதிமன்றத்தின் தாழ்வாரங்களில் தில்லை தீட்சிதர்கள் நம்பிக்கையுடன் உலவுகிறார்கள். நியாம்கிரி பழங்குடிகளோ, தங்களிடம் ஒரு வார்த்தைகூடக் கேட்காமல் தங்கள் தலைவிதியைத் திருத்தி எழுதிவிட்ட, உச்சநீதிமன்றத்தின் வாயிலில் அமர்ந்து கண்ணீர் வடிக்கிறார்கள்.

வர்க்க நலனும்  சாதி உணர்வும்  மத உணர்வும்  ஒன்றுகலக்கும் இந்த திரிவேணி சங்கமத்தின் சுழலில், மதநம்பிக்கை முடியும் இடம் எது, வர்க்கநலன் துவங்குமிடம் எது, சாதி உணர்வு ஊடாடும் இடம் எது என்று கண்டறிய முடியாமல், ஒன்று பிறிதொன்றாய்த் தோற்றம் காட்டி நம்மை மயக்குகிறது.

நியாம்கிரி வழக்கில் ஸ்டெரிலைட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பெழுதிய மூன்று நீதிபதிகளில் ஒருவரான கபாடியா, “நான் ஸ்டெரிலைட்டின் பங்குதாரர்” என்று வெளிப்படையாகவே அறிவித்துக் கொண்டார். இந்திராவோ தீட்சிதர்களின் சொத்துரிமையைக் காக்க எம்ஜியாரிடம் இரகசியமாகத் தலையிட்டார். தமிழ்பாடும் வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவான இடைக்காலத் தடையாணையை இரகசியமாக வழங்கிய உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷா, தீட்சிதர்களுக்கும் தனக்குமிடையிலான உறவை சிதம்பர இரகசியமாகவே பேணினார். தீர்ப்புகள் கிடக்கட்டும், வாய்தாக்களின் பின்னாலும் வர்க்கநலன் உண்டு என்பதை சிதம்பரம் வழக்கின் 20 ஆண்டு உறக்கம், தனது குறட்டைச் சத்தத்தின் மூலம் நமக்குத் தெளிவுபடுத்தியது.

2004ஆம் ஆண்டு வரை வேதாந்தா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ப.சிதம்பரம், பின்னர் நிதி அமைச்சராக அவதரித்து அனில் அகர்வாலுக்கு வேண்டியதைச் செய்து கொடுத்தார். 2009இல் அவரே உள்துறை அமைச்சராக உடுப்பணிந்து வந்து, இதோ கலிங்கத்தின் மீது படை நடத்திக் கொண்டிருக்கிறார்.

தீட்சிதர்களின் கைலாசக்கதை என்ற மத நம்பிக்கையை, தனி உடைமை என்ற ஆயிரம் கால் மண்டபம் தாங்கி நிற்கிறது.  சிவன் சொத்தில் குலம் வளர்த்த செட்டியார்கள், பிள்ளைவாள்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் கட்டளைதாரர்கள், ஆதீனங்கள், ஆடல்வல்லானின் சந்நிதியில் மகளுக்கு அரங்கேற்றம் நடத்த வரும் அதிகாரிகள், அமைச்சர்கள் .. அனைவரும் இந்த நம்பிக்கையின் கால்கள். அதனால்தான் கைலாசக் கதையைக் கேட்டுக் கைகொட்டிச் சிரிக்காமல், “ஹரஹர மகாதேவா” என்று கன்னத்தில் போட்டுக் கொள்கின்றனர்.

ஆனால் டோங்கிரியா கோண்டு மக்களின் நம்பிக்கையையும் அவர்களது கடவுளையும் தாங்கி நிற்க அவர்களிடம் தனிஉடைமை இல்லை. அம்மக்கள் நியாம்கிரி மலையின் உண்மையான அறங்காவலர்களாக இருந்தார்கள். எனவேதான் ஒரு வெகுளிச் சிறுமியைத் தரையில் வீழ்த்தி, வல்லுறவு கொள்ளும் கயவனைப்போல, அந்தப் பழங்குடிப் பொதுவுடைமைச் சமூகத்தின் மீது, தனியுடைமையின் புல்டோசர்கள் வெறியுடன் படர்ந்து எறி இறங்குகின்றன. அவர்களுடைய கடவுளான நியாம்தேவனுக்கோ தூக்குதண்டனை விதித்து தீர்ப்பெழுதி விட்டது உச்ச நீதிமன்றம். தங்களுடைய கடவுளின் தலை சீவப்படுவதைக் காணமாட்டாமல் துடிக்கிறது மனித குலம் பெற்றெடுத்த அந்த மழலைச் சமுதாயம்!

···

‘ஆபரேசன் கிரீன் ஹன்ட்’   காட்டு வேட்டை என்று இதனைத் தமிழில் மொழிபெயர்க்கலாம். காடுகளை வேட்டையாடுவது, அவற்றுக்குக் காவலிருக்கும் பழங்குடிகளை வேட்டையாடுவது, அதற்குத் தடையாக இருக்கும் நக்சல்பாரிகளை வேட்டையாடுவது என்ற மூன்று நோக்கங்களையும் உள்ளடக்கிய இந்தச் சொற்றொடர், பாரதப் பாரம்பரியத்தில் ஊறி உப்பிய மூளையிலிருந்து மட்டுமே பிறந்திருக்க முடியும்.

தண்டகாரண்ய காடுகள் இந்த வேட்டையின் களமாகியிருப்பதும் வரலாற்றின் விதியே போலும்! போர்க்களம் தண்டகாரண்யத்தின் காடுகளெங்கும் விரிய, விரிய, இராமாயணக்கதைகள் நம் நினைவில் நிழலாடுகின்றன. கிறிஸ்துவுக்குப் பின், 20 நூற்றாண்டுகள் முன்னோக்கி நடந்து, இதோ, இராமாயண காலத்தை எட்டிவிட்டோம்.

அங்க, வங்க, கலிங்க, கோசல, விதேக, மகத மன்னர்களின் இரதங்கள் உருண்ட பாட்டைகளின் மீது டாடா, எஸ்ஸார், மிட்டல், அகர்வால், பிர்லா, அம்பானிகளின் புஷ்பக விமானங்கள் தரையிறங்குகின்றன. வசிட்டனும் விசுவாமித்திரனும் கௌதமனும் துர்வாசனும் யாக்ஞவல்கியனும் வனாந்திரங்களில் அமைத்திருந்த பர்ணசாலைகள் ‘விருந்தினர் மாளிகை’ என்ற பெயர் தாங்கி மினுக்குகின்றன. வாயிலில் காக்கிச் சீருடையும் கதாயுதமும் தரித்த அனுமன்கள் காவல் நிற்கின்றன.

“இலங்கைத் தீர்வுதான் நமக்கு வழிகாட்டி” என்று கூறி பக்திப் பரவசத்துடன் தெற்கு நோக்கி நமஸ்கரிக்கிறார் சட்டிஸ்கார் டி.ஜி.பி விசுவ பந்து தாஸ். இராம சைன்யம் என்ற பழைய பெயர் அரக்கர்களின் மனதில் அச்சத்தைத் தோற்றுவிப்பதில்லை என்பதால்,  பாம்புப்படை, கீரிப்படை, கருந்தேள்படை என்று குலமரபுச் சின்னங்கள் தாங்கிய படைகள் அணி வகுத்து நிற்கின்றன. சுக்ரீவனின் சேனைகூட, ‘சல்வா ஜுடும்’ என்று ராட்சஸ மொழியில் பெயர் மாற்றம் பெற்றுவிட்டது.

இராவண வதம் முடியும் வரை முடிசூட்டு விழாவுக்குக் காத்திருக்க முடியாதென முனகும் வீடணர்களுக்காக, விதவிதமான திரிசங்கு சொர்க்கங்களும் இந்திரப் பதவிகளும் ஆர்டரின் பேரில் தயாராகின்றன. போரில் அரக்கர் குலப் பெண்களையும், முதியவர்களையும், குழந்தைகளையும் கூட வேட்டையாட வேண்டியிருக்கும் என்பதால், அதற்கேற்ப தர்ம சாத்திரங்களைத் திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறார்கள், சிதம்பரம், மன்மோகன், அலுவாலியா, புத்ததேவ், பட்நாயக் முதலான முனிபுங்கவர்கள்.

போர் முழக்கத்தையும் கீழ்க்கண்டவாறு திருத்தி அமைத்திருக்கிறார் திருவாளர் சிதம்பரம். இது தேவர் குலத்தைக் காக்க அசுரர்கள் மீது நடத்தப்படும் போர் அல்ல; அசுரர் குலத்தை முன்னேற்றும் நோக்கத்துக்காகவே அசுரர்கள் மீது தொடுக்கப்படும் போர். அவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்காகப் பூமியைப் பறிக்கும் போர்; வேலையை வழங்குவதற்காகத் தொழிலைப் பறிக்கும் போர்; சோறு போடுவதற்காக வயல்களை அழிக்கும் போர்; பிரம்ம ஞானத்தை அறிமுகப்படுத்துவதற்காக அவர்களுடைய தெய்வங்களைச் சம்காரம் செய்யும் போர்.

இதோ, நியாம்கிரியின் புதையலின் மீது, அதன் மதிப்பே தெரியாத ஒரு கோண்டு இனப்பெண்,  சுள்ளிக் கட்டைச் சுமந்து நடக்கிறாள். அவளுடைய கருமைநிறக் கழுத்தில் கிடக்கும் பித்தனை வளையங்களில் வியர்வைத்துளி வழிந்து மின்னுகிறது. கைகளின் அசைவில் அவளது வளையல்கள் எழுப்பும் இரும்பின் ஒலி இசையாய் எழும்புகிறது. அந்தக் கானகத்தின் வண்ணங்கள் அனைத்தையும் வரித்துக் கொண்ட வண்ணத்துப் பூச்சியாய் அவள் ஆடை அசைகிறது.

“ராமா, அதோ.. அவள்தான். எடு வில்லை, பூட்டு பாணத்தை’’! என்று ஆணையிடுகிறான் விசுவாமித்திரன். “ஒரு பெண்ணைக் கொல்வதற்கா நான் வித்தை பயின்றேன்?” என்று தயங்கித் தடுமாறுகின்றன சிப்பாயின் விரல்கள். “இவள் பெண்ணல்ல, தாடகை! நம் தர்மத்தை அழிக்க வந்திருக்கும் அரக்கி! சுடு….!”  என்று உறுமுகிறார் சிதம்பரம்.

சுள்ளிக்கட்டு சரிந்து சிதறுகிறது. மிரட்சியும் கோபமும் உறைந்த அவளது கருவிழிகள் நிலைகுத்தி நிற்கின்றன. வேதாந்தத்தின் வெடிமருந்துக் குச்சிகள் நியாம்தேவனின் மார்பைப் பிளந்து எறிகின்றன.

இந்தப் போர்க்களத்திலிருந்து வெகு தூரத்தில் அயோத்தி நகரின் அமைதிச் சூழலில் தவமிருந்து கொண்டிருக்கிறான் சம்பூகன் என்றொரு ‘சூத்திரன்’. அவன் கேட்க விழையும் வரம் என்னவாக இருக்கக் கூடும்? ஒரு துண்டு நிலம் அல்லது ஒரு வேலை அல்லது மூன்று வேளைச் சோறு அல்லது ஒரு வீடு?

சிதம்பரத்தின் காட்டு வேட்டையை சம்பூகன் அறியமாட்டான். ஆயுதம் ஏந்திப் போரிடும் அரக்கர்களின் மார்பை மட்டுமே அண்ணல் இராமபிரானின் பாணங்கள் குறிவைக்கும் என்ற அரண்மனைப் பொய்யைத் தவிர, இந்தப் போரைப்பற்றி வேறு எதையும் அவன் அறியமாட்டான். தாடகை வதம் அவனுக்குத் தெரியாது. வாலி வதமும் தெரியாது. தன் முன்னே தோன்றக்கூடிய இறைவனிடம், தான் கேட்க விழையும் வரங்களைத் தவிர, வேறு எதன் மீதும் கவனம் செலுத்த அவனது தவம் இடம் கொடுக்கவில்லை. “தவமிருத்தல் மட்டுமல்ல, வரம் கேட்பதும் குற்றமே” என்று தரும சாத்திரத்தின் ஷரத்துகள் திருத்தப்பட்டு விட்டதையும் அவன் அறியமாட்டான்.

நியாம்கிரியின் தலையைக் கொய்த வேதாந்தத்தின் கொடுவாள், உன் கழுத்தையும் குறிவைக்கும் என்பதைச் சம்பூகனுக்குப் புரிய வைத்தால் தவம் கலைத்து அவனும் வாளேந்தக்கூடும்.

ஏந்துவானாயின், இந்த முறை ஆரண்ய காண்டத்துடன் இராமாயணம் முடியவும் கூடும்.

மீனவர்களை சுனாமியாக அழிக்கவரும் மேலாண்மைச் சட்டம் !!

30

இங்கே கடல், நிலம், மலை….மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படும் !! –பாகம் – 2

vote-012“ஒவ்வொரு பேரழிவுமே ஒரு வரப்பிரசாதம்.” ஐம்பதாயிரம் மக்களைப் படுகொலை செய்து வன்னிப் போர் முடிவுக்கு வந்த பின்னர் இந்திய விவசாயிகளை தற்கொலை விளிம்புக்குத் தள்ளிய மோசடி விஞ்ஞானி எம்.எஸ்.ஸ்வாமிநாதன் ஈழத்தில் தனது தொழில் முதலீடுகளுக்காக சென்ற போது சொன்ன வரிகள்தான் இவை. ஆனால் ஸ்வாமிநாதனின் இந்த வரிகள் அவரது கடந்த கால அனுபவங்களில் இருந்து விளைந்தது. உலக முதலாளித்துவத்தின் கொடுங்கரங்கள் அழிவை ஆதாயமாக மாற்றவல்ல யுத்தியை கற்றுக் கொடுத்தது  சுனாமியில்தான்.

வன்னிப் படுகொலைகளுக்கு முன்னர் நாம் சந்தித்த மிகப் பெரிய மனிதப் பேரவலம் சுனாமிதானே. இந்தியா காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தொண்ணூறுகளில்  மெல்ல தன்னார்வக் குழுக்கள் இந்தியாவுக்கு ஊடுறுவி வந்தன.ஆனாலும் துல்லியமாக மக்களை நேரடியாக அணுகக் கிடைத்த வாய்ப்புதான் சுனாமி. சுமார் ஏழாயிரம் கோடிகள், 600 தன்னார்வக்குழுக்கள் என்று தென் கிழக்கு கரையோர நாடுகளை குறிவைத்து இறங்கின  இந்த கொள்ளை நிறுவனங்கள்.

இந்த நிறுவனங்கள் செய்த முதல் வேலை மீனவ மக்களின் எதிர்ப்புணர்வை மழுங்கடித்ததுதான். கடல், நீர், நிலம், மலை என எல்லாமே தனியாருக்குத்தான் என்கிறார்கள் இல்லையா? இந்த நிலங்கள் சார்ந்து என்ன பேரழிவு நடந்தாலும் அங்கே தன்னார்வக்குழுக்கள் உடனே களமிறக்கப்படுவார்கள். காரணம் அந்த மக்களிடம் இருக்கும் அரசியல் ரீதியாக, சிவில் உரிமைகள் தொடர்பாக இருக்கும் கோபங்கள் அரசுக்கு எதிராக திருப்பி விடாமல் பார்த்துக் கொள்வதுதான் இவர்கள் வேலை.

எண்பதுகளில் நான் சிறுவனாக இருந்த போது கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு தென் தமிழக கடலோரங்களில் தீவிரமாக இருந்தது. கிறிஸ்தவ பாதிரிகள் இப்போராட்டங்களில் அக்கறை காட்டினார்கள். கடைசியில் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ஏராளமான மீனவ கிராம மக்களின் வாழ்க்கைக்கு மாற்று ஏற்பாடுகள் எதுவும் இன்றி வந்தமர்ந்திருக்கிறது கூடங்குளம் அணு மின் நிலையம். அப்படியானால் எண்பதுகளில் நடந்த போராட்டம்? அதுதான் தன்னார்வக் குழுக்களின் வேலைத் திட்டம். எதிர்ப்பில்லா எதிர்ப்புகளை உருவாக்கி ஏகாதிபத்திய நிறுவனங்கள் செய்ய நினைப்பதை தடையின்றி கொண்டு வந்து விட்டு சென்று விடுவார்கள். ஆபத்து வந்து நிற்கிறதே என்று போராடிய தன்னார்வக் குழுக்களைத் தேடினால் அவர்களை இப்போது காண முடியவில்லை. நிதி (ஃபண்ட்) இல்லை அதனால் போராட்டமும் இல்லை என்று போய் விடுவார்கள்.

மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ள இந்திய தீபகற்பத்தைச் சுற்றி மூன்று பக்கமும் 8.118 கி.மீ நீளத்துக்கு கடல் உள்ளது. 3,300 கிராமங்களில் 3.5 மில்லியன் மக்கள் குஜராத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை பாரம்பரிய மீனவர்களாக வாழ்கிறார்கள்.ஆண்டொன்றுக்கு 30,000 கோடி ரூபாய் கடற்தொழிலில் இருந்து வருமானம் வருகிறது. பெருமளவு அந்நியச் செலவாணியை ஈட்டித்தருவதும் மீன்பிடித்தொழில்தான். பழவேற்காட்டில் தொடங்கி குமரி மாவட்ட கேரள எல்லையான நீரோடி வரைக்கும் சுமார் 1026 கிலோ மீட்டர் நீளமுடையது நமது தமிழக கடற்கரை. இந்த கடற்கரையை தனியார்கள் சூறையாடத் தடையாக இருந்தது மீனவ குடியிருப்புகள். சுனாமி வருவதற்கு முன்பே மீனவ மக்களை எப்படியாவது கடலோரங்களை விட்டு அப்புறப்படுத்தி விட வேண்டும் என்ற முயற்ச்சி மத்திய மாநில அரசுகளிடம் இருந்தது.

சென்னையில் சாந்தோம், பட்டினப்பாக்கம், பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவ மக்களை அப்புறப்படுத்தி விட்டார்கள். இப்போது அதே கடற்கரையில் பட்டினப்பாக்கத்தைப் போய் பார்த்தால் ஏதோ சிங்கப்பூருக்கு வந்த மாதிரி இருக்கிறது. பிரமாண்டமான அதி நவீன ஷாப்பிங் மால்களும், பிரமாண்டக் கட்டிடங்களுமாக உயர்ந்து நிற்கிறது.  கேட்டால் செட்டிநாட்டரசரர் எம்.ஏ. எம் மிற்குச் சொந்தமானது என்கிறார்கள். அலைவாய்க்கரையில் இருந்து ஐநூறு மீட்டர்களுக்கு அப்பால் மீனவர்களை துரத்தி விடுகிற அரசு. செட்டிநாட்டரசருக்கு மட்டும் இந்த இடத்தை ஏன் கொடுத்தது? அல்லது அவரும் இந்த அலைவாய்கரையிலேயே பிறந்த மீனவர்தானோ….?

பட்டினப்பாக்கத்தில் கண்ணுக்குத் தெரிகிற செட்டிநாட்டரசரின் கோட்டை இந்தியக் கடலோரங்கள் முழுக்க கண்ணுக்குத் தெரியாத பன்னாட்டு கோட்டைகளாகத்தான் மாறிக் கொண்டிருக்கிறது. சுனாமிக்கு முன்னரே திட்டமிட்டு சுனாமியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கொண்டு வரப்பட்டதுதான், கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம். ஒருங்கிணைந்த கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் என்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து ஒட்டு மொத்த கடலோரத்தையும் தொழில் சார் மண்டலங்களாக மாற்றுகிறது இந்த திட்டம். ஒட்டு மொத்த மீனவ மக்களையும் அப்புறப்படுத்தத்தான் இந்த கடற்கரை மேலாண்மை திட்டம் என்றும் கதறுகிறார்கள் மீனவ மக்கள்.

மீனவர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று பாரம்பரிய மீனவர்கள்.இன்னொன்று தொழிலுக்காக மட்டுமே கடலோரங்களில் வாழ்வோர். பாரம்பரிய மீனவர்களுக்கு கடல் கடற்கரை இதைத் தவிர வேறு போக்கிடம் கிடையாது. கடலின் கரையோரத்தில் இருக்கும் தனது குடிசைக்கு முன்னால் வைத்திருக்கும் கட்டுமரத்தை எடுத்துக் கொண்டு போய் தொழில் செய்து விட்டு மீண்டும் கரைக்கு வந்து குடிசையில் ஒண்டிக் கொள்கிற மீனவர்கள்தான் இவர்கள். தங்களின் குடிசைக்கு முன்னால் பரந்து கிடக்கிற கடல் அந்த கிராம மீனவர்களின் பொதுச் சொத்தாக இருக்கிறது. எப்போதும் அவர்கள் கடலுக்கு தீங்கு செய்யவோ மாசு படுத்தவோ மாட்டார்கள்.

ஆனால் கடற்கரையை ஒழுங்கு படுத்துகிறோம் என்று சொல்லி எம்.எஸ் சுவாமிநாதானின் குழு மத்திய அரசுக்கு கண்டு பிடித்துக் கொடுத்திருக்கும் இந்த கடற்கரை மண்டல் மேலாண்மை அறிவிப்பாணை கடலை தனியாருக்கு தாரை வார்க்கிறது. வசிப்பிடம் சார்ந்து கடற்தொழில் செய்யும் மக்களை துறைமுகம் சார்ந்து மீன் பிடிக்க நிர்பந்தித்து அவர்களை துறைமுக நகரங்கள் நோக்கி துரத்தி விட்டு விட்டு பின்னர் அவர்களின் வசிப்பிடங்களை தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதுதான் இந்த மேலாண்மைத்திட்டம். 1991-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை  மீனவ மக்களின் குறைந்த பட்ச உரிமையையாவது பாதுகாத்தது. ஆனால் அதை பல முறை திருத்திய மத்திய அரசு கடைசியாக இந்த எம்.எஸ் சுவாமிநாதன் குழுவின் கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

1991- ல் கொண்டு வரப்பட்ட கடலோர ஒழுங்காற்றுச் சட்டம் எதை எல்லாம் தவறு, கடற்கரையில் செய்யக் கூடாது என்று சொன்னதோ அதை எல்லாம் சட்ட பூர்வமாக செய்ய அனுமதிப்பதுதான் இந்த கடற்கரை மேலாண்மைத் திட்டம்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மீனவ மக்களிடம் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து  இந்த திட்டத்திற்கு மக்கள் கருத்தறியும் கூட்டங்களை நடத்த மத்திய அரசு முடிவு செய்து குமரி மாவட்டத்திலும் தூத்துக்குடி மாவட்டத்திலும் நடத்தினார்கள். அதிலும் மீனவ மக்கள் தங்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் காட்டினார்கள். ஆனாலும் இந்த எதிர்ப்பையும் மீறி உலக வங்கியின் நிர்பந்தத்திற்க்குப் பணிந்து இந்திய அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதில் தீவீரமாக இருக்கிறது. தமிழ் நாடு அரசும் இந்த திட்டத்துக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கடல், காலம் காலமாக வாழ்ந்த மீனவர்களிடம் இருந்து பிடுங்கப்பட்டு தனியார் முதலாளிகள் கையில் சென்று கொண்டிருக்கிறது.

இந்த கடற்கரை மேலாண்மைத் திட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? கடலில் மீன் வளம் குறைகிறது, கடல் மாசுபடுகிறது, என்பதெல்லாம் இந்த மேதாவிகள் கண்டு பிடித்த உண்மை. ஆனால் மீன் வளம் குறைவதற்கும், கடல் மாசுபடுவதற்கும் காரணமானவர்கள் யார் என்று ஆராய்ச்சி செய்து இந்த படித்த சிகப்புத்தோல் ஸ்வாமிநாதன் கண்டிபிடித்தார். கடைசியில் சொன்னார் இதற்கெல்லாம் காரணம் மீனவர்கள். அதாவது மீனவர்களுக்கு மீன் பிடிக்கத் தெரியவில்லை. அவர்கள் கடலோரங்களை மாசு படுத்துகிறார்கள். கடலில் மீன் வளம் குறைகிறதே என்ன செய்யலாம் என்று கேட்டால் மீன் பிடிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள் மீன் வளம் பெருகும் என்று ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்துச் சொல்கிறார்கள் இந்த கடல் விஞ்ஞானிகள்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் மீனவன் மீன் பிடிக்கிறான். அப்போதெல்லாம் அழியாத மீனினம் ஏன் இப்போது அழிகிறது என்றால் பன்னாட்டு கப்பல்கள் கடலை கபளீகரம் செய்வதும் ரசாயனக் கழிவுகளைக் கொண்டு போய் கடலில் கொட்டுவதும்தான் மீன் வளம் குறையக் காரணம். இந்நிலையில் இந்த மேலாண்மைத் திட்டத்தையும் கொண்டு வந்தால் மொத்தமாக கடலும் மீனவனும் வாழ்விழந்து போவான். இந்த திட்டத்தை மத்திய அரசுக்கு வகுத்துக் கொடுத்திருக்கும் எம்.எஸ் சுவாமிநாதன் யார் என்ற கேள்வியும் எழுகிறது. கடலுக்கும் மீனவ மக்களுக்கும் இந்த வெள்ளைத் தோல் மனிதருக்கும் என்ன சம்பந்தம்? மீனவ மக்களின் வாழ்க்கையைத் தீர்ப்பிடுகிற உரிமையையும் அவர்களின் வசிப்பிடங்களை விட்டு துரத்துகிற உரிமையையும் யார் இவருக்குக் கொடுத்தது?

படிப்பறிவில்லாத மீனவ மக்களின் வாழ்க்கைச் சூழலை பயன் படுத்திக் கொண்டு இவர்கள், கடலோரங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களைக் கொண்டு வர திட்டமிடுகிறார்கள். இது மீனவ மக்களின் வாழ்வுரிமையை மட்டுமல்ல மாநில அரசுகளின் கடலுரிமையையும் இந்த திட்டம் பறித்து  மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சென்று விடும் ஆபத்தும் உண்டு உள்நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்காக புதிய அமைச்சகம் தேவை என்கிறார் சிதம்பரம். அதாவது மக்களிடம் நிலவும் வறுமையும், வேலையிழப்பும் பிராந்திய உணர்வாக வெடிப்பதைக் கூட அனுமதிக்காத சிதம்பரம் போன்றவர்கள் இருக்கும் மத்திய அரசு கடல் பற்றிய ஆராய்ச்சிக்கான பொறுப்பாக நியமிப்பது வனத்துறையை. இது எவ்வளவு பெரிய மோசடி?

காலம் தோறும் புதிய வடிவங்களை எடுக்கும் இச்சட்டம்  பேரழிவுகளை வாய்ப்பாகப் பயன்படுத்தி ,மேலும் மேலும் மீனவ மக்களின் மூச்சை இறுக்குகிறது. இந்த மேலாண்மை சட்டத்தை மேலும் கொடிய சட்டமாக மாற்றியமைத்திருக்கிறது மத்திய அரசு. அதாவது கச்சத்தீவில் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் பேரினவாத இலங்கை அரசுக்கு எதிராக மீனவர்கள் கிளர்ந்தால் அங்கும் இச்சட்டத்தைக் கொண்டு வருகிறது மத்திய அரசு. எல்லை தாண்டும் மீனவர்களுக்கு விசாரணையே இல்லாமல் ஆறாண்டுகாலம் சிறைத்தண்டனை, ஒன்பது லட்ச ரூபாய் வரை அபராதம். சுட்டுக் கொல்கிறவனிடம் இருந்து எங்களைக் காப்பாற்று என்று அரசிடம் கோரினால் அரசோ  ””நீ ஏன் எல்லை தாண்டுகிறாய், உன்னைத்தான் கடற்கரையில் இருந்து போகச் சொல்கிறோமே, நீ ஏன் இங்கு வந்து மீன் பிடிக்கிறாய்? “ என்கிறது மத்திய அரசு.

ஆனால் எல்லை தாண்டுவதோ, சிறையோ எதுவும் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்களுக்குக் கிடையாது. அவர்கள் கட்டற்று வேட்டையாடுகிறார்கள். அவர்கள் பிடித்தது போக மிச்சம் மீதி இருக்கிற குஞ்சு குருமாக்களைக் கூட இந்த உள்ளூர் மீனவர் பிடிக்க முடியாதபடி சட்டம் போட்டு மீனவனை அழிக்கிறது அரசு. ஐநூறு மீட்டருக்கு அப்பால் என்பது இந்த பண முதலைகளுக்கு கிடையாதா? காலம் காலமாக கடலோரங்களில் வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறும் சுவாமிநாதன் குழுவுக்கு இந்த கோடீஸ்வர ஆகரமிப்பாளர்களை கண்ணுக்குத் தெரியவில்லையா?கடற்கரையில் சில தன்னார்வக் குழுக்கள் மீனவர்களுக்கு மீன் பிடிக்கச் சொல்லிக் கொடுக்கிறார்கள். சுறா வேட்டையில் ஆவேசமாக ஈடுபடும் மீனவனுக்கு மீன்பிடிக்க தன்னார்வக் குழுக்கள் கற்றுக் கொடுப்பது மாதிரி வேடிக்கை வேறு ஏதாவது உண்டா?

ஆக நான் என்ன சொல்கிறேன் என்றால் மீனவ மக்கள் பற்றிய உண்மையான அக்கறை இந்த மேலாண்மைத் திட்டத்துக்கும் கிடையாது இதை கொண்டு வந்தவர்களுக்கும் கிடையாது. தன்னார்வக் குழுக்கள் என்று சொல்லப்படும் பன்னாட்டு நிறுவனங்களிடமும் முதலாளிகளிடமும் நிதி பெற்று இயங்கும் குழுக்கள் ஒவ்வொரு முறையும் மத்திய மாநில பன்னாட்டு நிறுவனங்கள் கொண்டு வர நினைக்கிற சட்டத்திற்கு எதிராகப் பேசுவார்கள். மக்கள் விழிப்படைவதற்கு முன்னரே என்.ஜி.ஓக்கள் மக்களுக்காக போராடுவது மாதிரி போராடுவார்கள். ஆனால் எவ்வித இடைஞ்சலும் இன்றி மக்கள் வாழ்வை அழிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் வந்தமர்ந்து விடும். இவர்கள் அவர்களிடமே நிதி வாங்கி போராடி விட்டு அவர்களையும் அழகாக கொண்டு வந்து இறக்கி விட்டுச் சென்று விடுவார்கள். எவ்வித எதிர்ப்புகளும் இன்றி பன்னாட்டு நிறுவனங்கள் கடை விரிக்க அவர்கள் வருவதற்கு முன்னர் முதன் முதலாக வந்து மக்களை அரசியல் நீக்கம் செய்து தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்களை வரவேற்க மக்களை தயார் படுத்துவதுதான் இந்த தன்னார்வக்குழுக்களின் நோக்கம்…

தொடரும்…..

அடுத்த பாகத்தில் “கிறிஸ்தவமும் மீனவ மக்களும்”

vote-012

தொடர்புடைய பதிவுகள்

தமிழ்மணம் விருதுகள்: வாக்களித்தவர்களுக்கு நன்றி! வென்றவர்களுக்கு வாழ்த்து!!

34

vote-0122009 தமிழ்மணம் போட்டிகளின் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. வெற்றி பெற்ற பதிவர்களுக்கும், பங்கேற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்! இந்த போட்டியை திறம்பட நடத்தி பதிவர்களை ஊக்குவிக்கும் தமிழ்மணத்திற்கும், வாக்களிப்பில் ஈடுபட்ட வாசகர்களுக்கும் நன்றிகள்!

சென்ற ஆண்டு தமிழ்மணம் போட்டி குறித்த அறிவிப்பு வந்தபோது அதைக் கொண்டாடும் நிலையில் பலரும் இல்லை. காரணம் ஈழத்தில் தொடர்ந்த முடிவேயில்லாத் துயரம். போட்டியும்கூட அறிவித்தபடி முழுமையாக நடக்காமல் பதிவர்கள் அளித்த வாக்குகளோடு நிறைவுற்றது. எனினும் பதிவர்களுக்காக தமிழ்மணம் நடத்திய முதல் போட்டி என்ற வகையில் அதற்க்கேயுரிய முக்கியத்துவம் இருக்கத்தான் செய்தது.

பதிவுலகம் பிரம்மாண்டமாக வளர்ந்து வருகிறது. அன்றாடம் புதிய பதிவர்கள் தமிழ்மணத்தில் சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அல் பெருனியைப் போலவோ, யுவான் சுவாங்கைப்  போலவோ அலைந்து திரியாமல், உட்கார்ந்த இடத்திலேயே அம்மையப்பன் வடிவில் உலகைத் தரிசிக்கும் வாய்ப்பு பெற்ற விநாயகர்களாக நாம் இருந்தபோதிலும், எல்லோரும் எல்லோரையும் படித்து விடுவதில்லை, படிக்க முடிவதும் இல்லை. ஆற்றலின் வரம்பு காரணமாக ஏற்படுவது மட்டுமல்ல, இந்த இயலாமை. நமது விருப்பு வெறுப்புகளும், பல சந்தர்ப்பங்களில் இந்த இயலாமையை நம் மீது திணிக்கின்றன. “பிடித்ததை மட்டுமே படிப்பது” என்ற பழக்கத்திலிருந்து ஒருவர் மீள வேண்டுமானால், நமக்குப் பிடிக்கின்ற விசயங்கள், என்ன காரணத்தினால் நமக்குப் பிடிக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவ்வாறு புரிந்து கொள்ளும் போதுதான் பிடித்தவற்றின் ‘அன்புப்பிடி’யிலிருந்து நாம் விடுபடத் தொடங்குகிறோம். வினவு என்பது இதற்கான முயற்சி. எங்கள் பெயரிலேயே இருக்கிறது இதற்கான விளக்கம்.

எங்களது இந்த முயற்சிக்குக் கிடைக்கும் அங்கீகாரம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவே போட்டியில் பங்கேற்கிறோம்.

சென்ற ஆண்டு பங்கேற்ற மூன்று பிரிவுகளில் இரண்டில் முதலிடமும், ஒன்றில் ஐந்தாம் இடமும் தந்து எங்களைப் பதிவர்கள் அங்கீகரித்தனர். “ஒரு பதிவர் இரு பிரிவுகளில் மட்டுமே பங்கேற்கலாம்” என்று திருத்தியமைக்கப்பட்ட விதியின்படி, இந்த முறை இரண்டு பிரிவுகளில் பங்கேற்றோம். தமிழ் மணத்தின் பதிவர்களும் வாசகர்களும் இரண்டிலும் எமக்கு முதலிடத்தை வழங்கியிருக்கிறார்கள்.

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பங்கேற்பவர்களும் அதிகம், வாக்களித்தவர்களும் அதிகம் என்று அறிகிறோம். முக்கியமாக இந்த ஆண்டு வாசகர்களும் வாக்களித்திருக்கிறார்கள் என்பதால் எமக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பரிசின் ‘மதிப்பு’ பன்மடங்கு கூடிவிட்டதாக உணர்கிறோம்.

போட்டி… முதலிடம்… முதலானவற்றை விட்டு வெளியே வந்து, வினவு தளத்திற்குள் நுழைந்து அதன் பின்னூட்டங்களைக் கொஞ்சம் சுற்றிப்பார்த்தால், இவ்வளவு எதிர்ப்புகளா என்று வியப்பு தோன்றுகிறது. இந்துத்துவவாதிகள், இசுலாமியக் கடுங்கோட்பாட்டுவாதிகள், போலிக் கம்யூனிஸ்டுகள், பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழினவாதிகள், சாதிவெறியர்கள், மொக்கைகள், இலக்கியவாதிகள் எனப் பலரையும் நாங்கள் ‘பகைத்துக்’ கொண்டிருப்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள இயலும். இவ்வளவு எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கும் நாங்கள் முதலிடத்தை வென்றிருப்பது எங்களுக்கே கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கிறது. இந்த விவாதங்களில் பங்கேற்கவில்லையென்றாலும், அவற்றைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் மவுனப்பெரும்பான்மை எத்தனை வலிமையானது என்பது இப்போது தெளிவாக விளங்குகிறது.

மெய் உலகில் புறக்கணித்தக்க சிறியதொரு குழுவாகவும், காலாவதியாகிப்போன கம்யூனிச அரசியல், புரட்சி ஆகியவற்றை இன்னமும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களாகவும், ஊடகங்களின் அங்கீகாரத்தைப் பெறாதவர்களாகவும் கருதப்படும் எமக்கு, மெய்நிகர் உலகில் அல்லது கருத்தியல் தளத்தில் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் உற்சாகத்தைத் தருகிறது. நம்பிக்கையைக் கூட்டுகிறது.

சிலருக்கு நேபாளத் தேர்தலில் மாவோயிஸ்டுகள் பெற்ற வெற்றி அதிர்ச்சியூட்டியதைப் போல இதுவும் அதிர்ச்சியூட்டவும் கூடும். அது எங்களுக்கு புரிகிறது. நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் புரிந்துதான் இருக்கிறது. அதன் விளைவுதான் ஆபரேசன் கிரீன் ஹன்ட். அப்படியொரு கிரீன் ஹன்ட் மெய்நிகர் உலகில் தொடங்கும் வரை இந்தக் களத்தில் எங்கள் ஆட்டம் தொடரும். அல்லது மெய்நிகர் உலகின் பதிவர்களும் வாசகர்களும் அத்தகையதொரு வேட்டையே நடத்தமுடியாமல் சிதம்பரங்களை முறியடிக்கவும் கூடும். அப்படியொரு வெற்றியை மெய்நிகர் உலகில் நாம் அடைவோமாகில், அது உண்மையான ஜனநாயகம் மெய் உலகில் பெறக்கூடிய வெற்றிக்கு ஒரு படிக்கட்டாக அமையும்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

கர்நாடகா அரசை ஆட்டுவிக்கும் திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகள்

vote-012கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பாவிற்கும், அவரது ஆட்சியின் அஸ்திவாரமாக இருந்துவரும் சுரங்க முதலாளிகளான ரெட்டி சகோதரர்களுக்கும் இடையே இரண்டு வார காலமாக நடந்து வந்த அதிகாரச் சண்டை, “கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவிற்கு நெருக்கமானவரும் அம்மாநிலத்தின் கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சருமான ஷோபா கரந்த்லாஜேயைப் பதவியில் இருந்து அகற்றுவது; பெல்லாரி மாவட்டத்தில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட அதிகாரிகளை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்துவது; எடியூரப்பா, ஆட்சி தொடர்பாக எடுக்கும் எந்தவொரு முடிவையும் ரெட்டி சகோதரர்களைக் கலந்து ஆலோசித்து எடுப்பது” என்ற பேரத்தின் அடிப்படையில் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது.

“எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்ற ரெட்டி சகோதரர்களின் கோரிக்கையை, பா.ஜ.க. தலைமை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.  எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து தூக்கியடித்தால், கர்நாடகா மாநிலத்தில் மிகுந்த அரசியல் செல்வாக்கும், வாக்கு எண்ணிக்கையும் கொண்ட லிங்காயத்து சாதியினரைப் பகைத்துக் கொள்ள நேரிடும் என்ற சாதி அரசியல்தான் இதற்குக் காரணமேயொழிய, வேறெந்தக் கொள்கையும் இதன் பின்னணியில் கிடையாது.

ஆர்.எஸ்.எஸ்.க்கு நெருக்கமாக இருந்தவரும், பா.ஜ.க.வில் நீண்ட காலம் பணியாற்றியவருமான ஜஸ்வந்த் சிங்கை ஒரே நொடியில் தூக்கியெறிந்த பா.ஜ.க. தலைமை, ரெட்டி சகோதரர்களைக் கட்சியிலிருந்தும், அரசாங்கத்தில் இருந்தும் தூக்கியெறியத் துணியவில்லை.  இதற்குக் காரணம், அச்சகோதரர்களின் பணபலம்!

பா.ஜ.க. கடந்த பத்தே ஆண்டுகளுக்குள் கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு “வளர்ந்துள்ளதற்கு’ ரெட்டி சகோதரர்களின் பண பலமும் ஒரு காரணம் என்பதை மூத்த பா.ஜ.க. தலைவர்களால்கூட மறுக்க முடியவில்லை. குறிப்பாக, கடந்த 2008- ஆம் ஆண்டு நடந்த அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை பலம் கிட்டவில்லை.  எனவே, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தை, “தாமரை நடவடிக்கை’ என்ற பெயரில் நடத்தியது, பா.ஜ.க.  இந்தக் குதிரை பேரத்திற்குத் தலைமேயேற்றதோடு, அதற்காகப் பல கோடி ரூபாய்களை வாரியிறைத்தார்கள், ரெட்டி சகோதரர்கள்.  இதற்கு நன்றிக் கடனாக

கருணாகர ரெட்டிக்கு வருவாய்த் துறையும், ஜனார்த்தன ரெட்டிக்கு சுற்றுலாத் துறையும், ரெட்டி சகோதரர்களின் நம்பிக்கைக்குரிய அரசியல் தரகனான சிறீராமுலுவிற்கு சுகாதாரத் துறையும் சன்மானமாக அளிக்கப்பட்டன.

எடியூரப்பாவிற்கும் ரெட்டி சகோதரர்களுக்கும் இடையே அதிகாரச் சண்டை முற்றியபொழுது, பா.ஜ.க.வைச் சேர்ந்த 50-60 சட்டமன்ற உறுப்பினர்கள் ரெட்டி சகோதரர்களோடு ஒட்டிக் கொண்டனர்.  ரெட்டி சகோதரர்களை இழந்தால், ஆட்சியையே இழக்க நேரிடும் என்பதால்தான், பா.ஜ.க. தலைமையால் ரெட்டி சகோதரர்களை ஜஸ்வந்த் சிங்கைப் போலக் கழட்டிவிட முடியவில்லை.

கர்நாடகா மாநில மக்கள் குழந்தை குட்டிகளோடு, பசி-பட்டினியோடு வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தபொழுது, பா.ஜ.க.வைச் சேர்ந்த இந்த 50-60 சட்டமன்ற உறுப்பினர்கள், கோவாவிலும், ஹைதராபாத்திலும் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளில் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர்.  முதல்வர் எடியூரப்பாவோ தனது பதவியைக் காத்துக் கொள்ள தில்லிக்குக் காவடி தூக்கிக் கொண்டிருந்தார்.  பா.ஜ.க. தலைமையோ மாநிலத்தின் வெள்ளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, கட்சிக்குள் நடந்து வந்த அதிகாரச் சண்டையைத் தீர்த்து வைப்பதில்தான் மும்மரமாக இருந்தது.  இதிலிருந்து பா.ஜ.க. எப்படிப்பட்ட கட்சி என்பதை “இந்துக்கள்’புரிந்து கொள்ளலாம்.

ரெட்டி சகோதரர்கள், எடியூரப்பா முதல்வராவதை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தனர்.  தனது அதிகாரத்திற்கு இடையூறாக இருந்து வரும் ரெட்டி சகோதரர்களைப் போட்டுப் பார்த்துவிடக் காத்திருந்த எடியூரப்பா, வெள்ளச் சேதத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயன்றார்.  வெள்ளச் சேதத்தை ஈடுகட்டுவது என்ற முகாந்திரத்தில், இரும்புத் தாதுவினை ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு லாரியின் மீதும் கூடுதலாக 1,000 ரூபாய் வரி விதிக்கப்பட்டது; மேலும், ரெட்டி சகோதரர்களுக்கு நெருக்கமாக இருந்த அதிகாரிகள் அனைவரும் பெல்லாரி மாவட்டத்தில் இருந்து ஒரே நேரத்தில் பணி மாற்றம் செய்யப்பட்டனர்.  தனது அடிமடியிலேயே கைவைக்கத் துணிந்த எடியூரப்பாவிற்கு எதிராக ரெட்டி சகோதரர்கள் ஆரம்பித்த கலகத்திற்கு இரும்புச் சுரங்க முதலாளிகள் அனைவரும் ஒருமனதாக ஆதரவு அளித்தனர்.

இரண்டு கோஷ்டிகளும் வெள்ளச் சேதத்தைத் தமது அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முயன்றன.  எடியூரப்பா இரும்புத் தாது மீது கூடுதலாக வரி விதித்தார் என்றால், ரெட்டி சகோதரர்களோ வெள்ளம் பாதித்த பகுதிகளில் 500 கோடி ரூபாய் செலவில் வீடு கட்டித் தரும் திட்டத்தைத் தன்னிச்சையாக அறிவித்தனர். இதன்மூலம், தம்மை மாநில அரசுக்கு மேலானவர்களாகவும், பெல்லாரி மாவட்டம் தமது சொந்த நிலப்பகுதி போலவும் காட்டிட முயன்றனர்.

இத்துணைக்கும் கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் ரெட்டி சகோதரர்களுக்கு இரும்புத் தாதுவை வெட்டியெடுக்கும் உரிமம் எதுவும் வழங்கப்படவில்லை. அவர்களது சுரங்கங்கள் பெல்லாரியையொட்டியுள்ள ஆந்திர மாநிலப் பகுதியில்தான் அமைந்துள்ளன. ஆனால், அவர்களோ ஆந்திர மற்றும் கர்நாடகா மாநில அரசுகளில் தங்களுக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, பெல்லாரியில் இருந்து இரும்புத் தாதுவைக் கடத்துவதை “அங்கீகரிக்கப்பட்ட’ தொழில் போலவே நடத்தி வருகின்றனர். தற்பொழுது, பெல்லாரி மாவட்டத்தில் ரெட்டி சகோதரர்களின் ஒப்புதல் இன்றி அதிகாரிகளை இடம் மாற்றவோ, புதிதாக நியமிக்கவோ எடியூரப்பா முயலக் கூடாது என பேரம் பேசப்பட்டிருப்பதால், ரெட்டி சகோதரர்களை பெல்லாரி மாவட்டத்தின் குறுநில மன்னர்களாகவே அங்கீகரித்துவிட்டது, பா.ஜ.க.

எடியூரப்பா-ரெட்டி சகோதரர்களிடேயே நடந்துவரும் இந்த அதிகாரச் சண்டை ஒருபுறம் பா.ஜ.க.வின் உட்கட்சிப் பிரச்சினையாக இருந்தாலும், இன்னொருபுறம், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதாகக் கூறப்படும் அரசாங்கங்களின் மூக்கணாங்கயிறு யார் கையில் இருக்கிறது என்பதை மிகவும் தெள்ளத்தெளிவாக அம்பலப்படுத்திக் காட்டியிருக்கிறது.

முதலாளிகளுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் (அதாவது அரசிற்கும்) முதலாளிகளுக்கும் ஓட்டுக்கட்சிகளுக்கும் இடையே இருந்துவரும் நெருக்கமும் ஒத்துழைப்பும் புதிய விசயம் கிடையாது. டாடா-பிர்லாக்களின் கட்சி என அறியப்பட்ட கட்சிதான் காங்கிரசுக் கட்சி.  முன்னாள் மன்னர்கள், லேவாதேவிக்காரர்கள், வியாபாரிகளின் கட்சியாக உருவானதுதான் பா.ஜ.க.  முதலாளிகள்-ஓட்டுக்கட்சிகள்-அரசு ஆகியவற்றுக்கு இடையே இருந்துவரும் நெருக்கமான பிணைப்பு, நாடாளுமன்றம், அனைவருக்கும் ஓட்டுரிமை ஆகியவற்றின் மூலம் மூடிமறைக்கப்படுகிறது என்பதை கம்யூனிஸ்டுகள் நீண்டநாட்களுக்கு முன்பிருந்தே அம்பலப்படுத்தி வருகின்றனர். தனியார்மயமும், தாராளமயமும் இந்த மூடுதிரைகூடத் தேவையில்லை என அம்மணமாக முதலாளிகளின் ஆட்சியை நம் முன்னே நிறுத்திவிட்டன என்பதுதான் புதிய விசயம்.

கர்நாடக மாநில ஆட்சியை முன்பு சாராய அதிபர்கள் தீர்மானித்தார்கள் என்றால், இப்பொழுது சுரங்க முதலாளிகள் தீர்மானிக்கிறார்கள். ஆந்திராவில், பாசனக் கால்வாய்களைக் கட்டும் உரிமங்களைப் பெறும் ஒப்பந்தக்காரர்களும்; அரியானாவில் ரியல்-எஸ்டேட் அதிபர்களும்; ஜார்கண்டில் சுரங்க முதலாளிகளும்; மகாராஷ்டிராவில் கரும்பாலை அதிபர்களும்தான் உண்மையில் அரசாங்கத்தை நடத்துகிறார்கள். தமிழகத்தில், தி.மு.க. தலைமையே பெரும் தொழில் குடும்பமாக பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டது.  மேற்கு வங்க இடதுசாரிக் கூட்டணி ஆட்சியைக்கூட, அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிரூபன் சக்கரவர்த்தி ஒப்பந்தக்காரர்களின் ஆட்சி என்று அம்பலப்படுத்தி இருக்கிறார்.

கோடீசுவரர்கள்தான் எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தல்களில் போட்டியிட முடியும் என்பதை கடந்த சில தேர்தல்கள் நமக்கு உணர்த்திவிட்டன. நாடாளுமன்றத்தின் மேலவை என்பது தரகு முதலாளிகளும், அவர்களது நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் நுழையும் புறவாசலாகிவிட்டது.  அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் வகுக்கும் நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் தரகு முதலாளிகள், பங்குச் சந்தை சூதாடிகள், வியாபாரிகள் ஆகியோரின் கூடாரமாகிவிட்டதாக “இந்தியா டுடே’ இதழே அம்பலப்படுத்திப் புலம்பும் அளவிற்கு முதலாளிகளின், புதுப் பணக்காரக் கும்பலின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது மக்களால், மக்களுக்காக நடைபெறும் ஆட்சி எனப் பசப்பிவந்த காலம் மலையேறிவிட்டது. இது, முதலாளிகளுக்காக, முதலாளிகளால் நடத்தப்படும் ஆட்சி என்பதைத் தனியார்மயம் போட்டு உடைத்துவிட்டது.  மாறி மாறி எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டாலும், இந்த நிலை மாறிவிடாது.  எனவே, உழைக்கும் மக்கள் தங்களுக்கான அரசை எப்படி அமைப்பது என்பதைக் கண்டுணர்ந்து, செயல்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது.

-புதிய ஜனநாயகம்’ டிசம்பர், 2009

ரெட்டி சகோதரர்களின் கிரிமினல் ஜாதகம்

“தேசிய’அரசியலை ஆட்டிப் படைப்பதில்  அம்பானி சகோதரர்கள் கில்லாடிகள் என்றால், கர்நாடகா அரசியலுக்கு ரெட்டி சகோதரர்கள் அல்லது பெல்லாரி சகோதரர்கள் என்றழைக்கப்படும் கருணாகர ரெட்டி, ஜனார்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி ஆகிய மூவரைக் குறிப்பிடலாம். இவர்களின் பணபலத்தையும், அதிரடி அரசியலையும் தமிழக மக்களுக்குப் புரியும்படி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், இச்சகோதரர்களை, “பெல்லாரியின் அழகிரி’ எனக் குறிப்பிடலாம்.  “அண்ணன்’அழகிரி கடந்த தேர்தல்களில் 500 ரூபாய் நோட்டுக்களை வீசியெறிந்து ஓட்டுக்களை வாங்கினார் என்றால், ரெட்டி சகோதரர்களோ கர்நாடகா மாநிலச் சட்டமன்றத் தேர்தலின்பொழுது 1,000 ரூபாய் நோட்டுக்களைப் புழக்கத்தில்விட்டு, ஓட்டுக்களை விலை பேசுவதில் “தேசிய’சாதனையே படைத்தனர்.

இத்துணைக்கும் ரெட்டி சகோதரர்கள் பரம்பரை பணக்காரர்களோ, மிட்டா மிராசுகளோ அல்லர்.  ஆந்திராவைச் சேர்ந்த சாதாரண போலீசுக்காரனின் வாரிசுகள்.  இவர்களின் திடீர் வளர்ச்சிக்குத் தனியார்மயமும், தாராளமயமும் எந்தளவிற்கு உதவின என்பது குறித்துத் தனிப் புத்தகமே போடலாம்.

ஆந்திர மாநிலத்தின் எல்லையையொட்டி அமைந்துள்ள கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்திற்குப் பிழைப்பு தேடி வந்த ரெட்டி சகோதரர்கள், “”என்னோபிள் சேவிங்க்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்”என்ற பெயரில் ஒரு “பிளேடு’கம்பெனியை (கவுரவமாகச் சொல்ல வேண்டுமென்றால் சீட்டுக் கம்பெனியை)த் தொடங்கினர்.  அதன் மூலம் மக்களுக்கு நாமம் போட்டு அவர்கள் அடித்த பகற்கொள்ளை மட்டும் 200 கோடி ரூபாய்க்கு மேல் தேறும் எனக் கூறப்படுகிறது.  ரெட்டி சகோதரர்கள் இந்த மோசடிக்காக ஒருநாள்கூட கம்பி எண்ணவில்லை.  அதே சமயம், வழக்குகளில் இருந்து தப்பிக்க பா.ஜ.க.வில் புகலிடம் தேடிக் கொண்டனர்.

1999-ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுஷ்மா சுவராஜ் பெல்லாரி நாடாளுமன்றத் தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டபொழுது, அவரது தேர்தல் வேலைகள், “தேவைகள்’அனைத்தையும் ரெட்டி சகோதரர்கள்தான் கவனித்துக் கொண்டனர்.  அன்று தொடங்கி அரசியலில் மட்டுமின்றி, பொருளாதாரத்திலும் அவர்கள் இந்தியாவின் “ஜி.டி.பி.’க்கு இணையாக வளரத் தொடங்கினர்.  தனி ஹெலிகாப்டர்கள், விமானங்கள், ஆடம்பரக் கார்கள் என இவர்களின் பகட்டு வாழ்க்கையைப் பார்த்து விக்கித்துப் போன மக்கள், “இவர்களின் சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய் இருக்கலாம்’ என இரகசியமாகப் பேசிக் கொண்டபொழுது, “எங்களின் சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் தேறும்” எனச் சட்டமன்றத்திலேயே பகிரங்கமாக அறிவித்துத் தங்களின் பணத் திமிரை வெளிக்காட்டிக் கொண்டனர்.

200 ரூபாய்க்கு விற்று வந்த ஒரு டன் இரும்பு, 2,000 ரூபாயாக அதிகரித்ததற்கு ஏற்ப இவர்களின் கல்லாப்பெட்டியும் நிரம்பி வழிந்தது.  பா.ஜ.க. மட்டுமின்றி, காங்கிரசின் எஸ்.எம்.கிருஷ்ணா, ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆகியோரும் ரெட்டி சகோதரர்களின் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருந்துள்ளனர்.  இரும்புத் தாதுவை வெட்டியெடுக்க அரசு கொடுத்துள்ள வரிச் சலுகைகள் ஒருபுறமிருக்க, இரும்புத் தாதுவைச் சட்டவிரோதமாக வெட்டியெடுத்துக் கடத்துவதன் மூலம்தான் இவர்கள் பெரும் கோடீசுவரர்கள் ஆனார்கள்.  இந்த வியாபாரத்தின் மூலம் ரெட்டி சகோதரர்களுக்கு ஆண்டொன்றுக்கு 4,000 கோடி ரூபாய் இலாபம் கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சந்தன மரத்தை வெட்டிக் கடத்திய வீரப்பனைச் சுட்டுக் கொன்ற அரசு, இந்த இரும்புக் கடத்தலுக்காக இச்சகோதரர்கள் மீது ஒப்புக்காக வழக்கொன்றை உச்சநீதி மன்றத்தில் நடத்தி வருகிறது.  இந்த வழக்கில் இவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால், 6 மாத சிறைத் தண்டனையும், 1,000 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படுமாம்.  மாநில அரசினையை கவிழ்க்கும் அளவிற்குப் பண பலமும், குண்டர் பலமும், அரசியல் செல்வாக்கும் கொண்ட இத்திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு, உச்சநீதி மன்றம் எம்மாத்திரம்?

vote-012

தொடர்புடைய பதிவுகள்

புதிய ஜனநாயகம் கட்டுரைகள்

புதிய ஜனநாயகம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !

புதிய ஜனநாயகம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

  1. தோழர் ஸ்டாலின் 130-வது பிறந்த நாள்: “தோழர் ஸ்டாலின் வழி நடப்போம்! முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!” தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் சூளுரை!
  2. நாட்டு மக்கள் மீதான போர்தான் இந்த நக்சல் ஒழிப்புப் போர்!
  3. அட்டைப்படக் கட்டுரை: தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும்: புதைந்துள்ள உண்மைகள்!
  4. நேபாளம்: கிளர்ந்தெழும் மக்கள்திரள் போராட்டங்கள்
    கந்தலாகி வரும் இந்திய அரசின் சதிகள்!
  5. கோபன்ஹேகன் தட்ப-வெப்பநிலை மாநாடு: பூவுலகின் முதன்மை எதிரிக்கு வெற்றி!
  6. விலைவாசி உயர்வை ரசிக்கும் கோமாளிகளின் வக்கிர ஆட்சி!
  7. தலித் முரசின் “வர்க்காஸ்ரம” வெறி!
  8. “நீங்கள் என்னை நக்சல்பாரி ஆக்கினீர்கள்!”
  9. எது பயங்கரவாதம்?
  10. அணுசக்தி கடப்பாடு மசோதா: மலிவானதா மக்களின் உயிர்?
  11. துபாய் நெருக்கடி: ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது!
  12. ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்: புதைமணலில் சிக்கியது அமெரிக்கா!
  13. சினிமா கழிசடை தமன்னா விளம்பரத்துக்குப் பல கோடி!
    உரிமைகளைக் கேட்கும் தொழிலாளருக்குத் தடியடி!
    பவர் அண்டு அபிராமி சோப்ஸ் தொழிலாளர்களின் போராட்டம்
  14. ருச்சிகா மானபங்க வழக்கு: தீர்ப்பா? கேலிக்கூத்தா?

புதிய ஜனநாயகம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

vote-012

தொடர்புடைய பதிவுகள்