மீண்டும் பிண அரசியல்!
இனி, வீறு கொண்டு எழும் விஜய் ரசிகர் படை. நீதி, இறந்தவர்களுக்காக அல்ல, விஜயைக் காப்பாற்ற. இது, ரசிகர் படைக்கு காட்டப்படும் இலக்கு.
மாநில அந்தஸ்து கோரும் லடாக் மக்கள் போராட்டம் வெல்லட்டும்! | ம.அ.க
லடாக் மக்களின் உரிமைக்கான கோரிக்கைகள் வெற்றி அடைய மக்கள் அதிகாரக் கழகம் ஆதரவு தெரிவிப்பதுடன், லடாக் மக்களின் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய ஒன்றிய மோடி அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
மின்வாரிய ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளைப் புறக்கணிக்கும் தி.மு.க. அரசு
வாக்குறுதி 153-இல் மின்வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யப்போவதாக தி.மு.க வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், மின்வாரியத்தில் 13 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்ற 10,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை தற்போது வரை பணி நிரந்தரம் செய்யாமல் வஞ்சித்து வருகிறது.
டிரம்புக்கு இந்தியாவின் எதிர்வினை எடுத்துரைப்பது என்ன? || சிறுநூல்
வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹40 | தொடர்புக்கு: 97915 59223
நாடு முழுவதும் சிறப்பு தீவிர மறு ஆய்வு: தேர்தல் ஆணையத்தின் கரசேவை
பாசிச கும்பல் தொகுதி மறுவரையறை, தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம் போன்ற பாசிச சட்ட திட்டங்கள் மூலம் தேர்தல் கட்டமைப்பை இந்துராஷ்டிரத்திற்கு ஏற்ப மறுவார்ப்பு செய்துவருவதன் தொடர்ச்சியாகவே இந்த சிறப்பு தீவிர மறு ஆய்வை பார்க்க வேண்டியுள்ளது.
அமெரிக்க அடிமைத்தனம் கார்ப்பரேட்டுகளுக்கு அடியாள் வேலை
1990-களில் காங்கிரசும் வாஜ்பாய் அரசும் தனியார்மய - தாராளமய - உலகமயக் கொள்கைகளை ஏற்று நமது இந்திய நாட்டை மறுகாலனியாக்கத்திற்கு திறந்துவிட்டன. அதைபோல, தற்போது நாட்டை அமெரிக்காவின் காலனியாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் பாசிச மோடி அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
உத்தராகண்ட்: இஸ்லாமிய பள்ளி சிறுவன் மீதான கொடூரத் தாக்குதல்
அர்சலனன் என்கிற அச்சிறுவன் ஒரு நாள் விடுமுறை எடுத்துவிட்டு அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றுள்ளான். இதற்காக சிறுவனின் வகுப்பு ஆசிரியர் ராகேஷ் சைனி சிறுவனின் முழங்கையில் எலும்பு முறியும் அளவிற்கு ஈவிரக்கமின்றி கம்பால் அடித்துள்ளார். பள்ளியின் முதல்வர் ரவீந்திரனோ தனது ஷூவை சிறுவனின் முகத்தில் வைத்து அழுத்தியுள்ளான்.
வாக்குத் திருட்டு: இந்துராஷ்டிரத்திற்குள் நியாயமான தேர்தல் சாத்தியமில்லை
இந்துராஷ்டிரத்திற்கேற்ப மறுவார்ப்பு செய்யப்பட்டுவரும் இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் இருந்து கொண்டும், பாசிஸ்டுகள் தேர்தலில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ள வரையிலும், நியாயமான தேர்தல் என்ற கோரிக்கை பகற்கனவே ஆகும்.
ஒடிசா: பா.ஜ.க. ஆட்சியில் தொடரும் பெண்கள் மீதான பாலியல் கொடூரங்கள்!
கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஒடிசா முழுவதும் 50-க்கும் மேற்பட்ட பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் சிறுமி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் என 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
வக்ஃப் திருத்தச் சட்டம்: பாசிச கும்பலுக்கு பச்சைக்கொடி காட்டும் உச்சநீதிமன்றம்
பாசிச கும்பலின் எதிர்ப்பிற்கு ஆளாகாமல் இருப்பதற்கு சட்டத்தை இரத்து செய்யாமல், சில விதிகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனை எவ்வாறு இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவான நடவடிக்கை என்று வரவேற்க முடியும்? இது இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும்.
வக்ஃப் சட்டம்: உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவு | இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி | தோழர் ரவி
வக்ஃப் சட்டம்: உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவு
| இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி | தோழர் ரவி
https://youtu.be/4ZWTG2oFhJc
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மோடி அரசின் E20 திட்டம்: கேள்விக்குறியாகும் உணவுப் பாதுகாப்பு
தற்போது அமல்படுத்தப்படும் E20 திட்டத்திற்கு கரும்பிலிருந்து 55 சதவிகிதம் எத்தனாலும், அரிசி போன்ற தானியங்களிலிருந்து 45 சதவிகிதம் எத்தனாலும் எடுக்கப்போவதாக மோடி அரசு கூறியுள்ளது. ஏற்கெனவே, இத்திட்டதிற்காக 2024-2025ஆம் ஆண்டில் 52 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை மோடி அரசு ஒதுக்கியுள்ளது.
உத்தரப்பிரதேசம்: தலித் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் சாதிய அடக்குமுறைகள்!
பா.ஜ.க-வை சேர்ந்த யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில் தலித் மக்கள் தன்னுடைய பணத்தைத் திருப்பிக் கேட்டதற்காகவும், பொதுசாலையில் ஆடு அசுத்தம் செய்ததற்காகவும் ஆதிக்கச் சாதிவெறியர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
அமலாக்கத்துறை: பாசிச கும்பலின் அடக்குமுறைக் கருவி
அரசியல்வாதிகள் மீது அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்படும் வழக்குகளில் 98 சதவிகிதம் பொய் வழக்குகளாகவே உள்ளன என்பது அம்பலமாகி இருக்கிறது.
இஸ்ரேலிய இனவெறி பாசிஸ்டுக்கு சிவப்பு கம்பளம் விரித்த மோடி அரசு!
மேற்கத்திய நாடுகளால் தங்களது நாட்டிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இனவெறி பாசிஸ்டான இஸ்ரேல் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்-ஐ தான் செப்டம்பர் 8 ஆம் தேதியன்று பாசிச மோடி அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது.